Showing posts with label பழங்கணக்கு. Show all posts
Showing posts with label பழங்கணக்கு. Show all posts

இட்லி வடை பொங்கல்! #8

ஸ்டாலின் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராசி ரொம்ப நல்ல ராசி தான் போல ! ஹிந்து தமிழ் நாளிதழ் இப்படிப் படம்போட்டுக் கலாய்க்கிறது!

அங்கே அப்படியென்றால் #துக்ளக் இந்த வார அட்டைப் பட நையாண்டிஇப்படி!



செய்தாலும் செய்வார்கள் என்கிறீர்களா? #கழகங்கள் எந்தக் காலத்தில் எதையும் நேர்வழியில் நேரடியாகச் செய்திருக்கிறார்கள்? இப்படி வேண்டிக் கொள்ளவும் ப்ராக்சிகள் இல்லாமலிருக்குமா?

ராகுல் காந்தி தன்னைக் காஷ்மீரி கௌல் பிராம்மணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்! யாராவது எப்படி என்று கேட்டிருப்பார்களோ? அப்பா வழிப் பாட்டன் ஃபெரோஸ் கான்= பெரோஸ் காந்தியாக பின்னாட்களில் அறியப்பட்டவரை, பாட்டி இந்திரா முஸ்லிமாக மதம் மாறித் திருமணம் செய்து கொண்ட கதை தெரியும் இல்லையா? அப்புறமும் எப்படி கௌல்?
சரி, அதுதான் போய்த்தொலைகிறது, அம்மாவழியில் பார்த்தாலுமே கூட இத்தாலியக் கிறித்தவர்தானே?!

அப்பன்வழி, அம்மா வழி இரண்டிலுமே வேறுவேறு மதங்கள் தான்! ஆனாலும் ராகுல் காந்தி தன்னை எந்த அடிப்படையில் தன்னைக் காஷ்மீரி கௌல் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறாராம்? உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா? கான் gandhe ஆகி டூப்ளிகேட் காந்தியாகவும் ஆன கதை மாதிரிக் கூட இல்லாமல் இது என்ன புதுக்கதை?

நேற்று காங்கிரஸ் கட்சியின் 134-வது நிறுவன நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கேக் வெட்டி கொண்டாடினர். படம்: பிடிஐ என்று செய்தி வெளியாகி இருக்கிறதே! யார் கண்ணிலாவது பட்டதோ? 

1885 இல் ஒரு பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரி ஆரம்பித்த காங்கிரஸ் அல்ல இன்றிருப்பது! இந்தியர்கள் தலைமை ஏற்றபிறகும் கூட பிரிட்டிஷ் அரசிடம்  சலுகைகளை மட்டும் கோரிய அமைப்பாக இருந்த அந்தக் காங்கிரசும் இல்லை. 

Many Muslim community leaders, like the prominent educationalist Syed Ahmed Khan, viewed the Congress negatively, owing to its membership being dominated by Hindus. Orthodox Hindu community and religious leaders were also averse, seeing the Congress as supportive of Western cultural invasion.
The ordinary people of India were not informed of or concerned about its existence on the whole, for the Congress never attempted to address the issues of poverty, lack of health care, social oppression, and the prejudiced negligence of the people's concerns by British authorities. The perception of bodies like the Congress was that of an elitist, then educated and wealthy people's institution. இதுதான் காங்கிரசின் ஆரம்பகால நிலைமை! பால கங்காதர திலகர் வந்த பிறகுதான் காங்கிரசுக்கு தேசிய உணர்வே வந்தது. திலகரும் பிபின் சந்திரபாலும், ஸ்ரீஅரவிந்தரும் வ உ சியும் ஊட்டி  வளர்த்த தேசிய உணர்வுடன் இருந்த காங்கிரசல்ல இன்றிருப்பது!

1915 இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி  என்கிற ஒரிஜினல் காந்தி வந்த பிறகு காங்கிரஸ்  என்பது தியாகம் செய்யத் தயாராக இருந்த தொண்டர்களோடு, மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு இயக்கமாகவும் இருந்ததே, அந்தக் காங்கிரசல்ல இன்றிருப்பது!

நேரு கைகளில் ஆட்சி வந்ததுமே நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. தனக்குப் பிடிக்காத ஒருவர், புருஷோத்தம்தாஸ் டாண்டன் 1950 இல் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக நாடகம் நடத்தியதும் 1959 இல் தன் மகளையே காங்கிரஸ் தலைவராக்கி, மக்கள் சிபாரிசின் பேரில் உலகில் முதல் முறையாக கேரளாவில் ஜனங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி அரசை 356 வது பிரிவின் கீழ் கலைத்ததும் ஆன அந்தக் காங்கிரசும் அல்ல இன்றிருப்பது. இந்திரா தன்னுடைய சுயநலத்துக்காகக் காங்கிரசை இரண்டாக உடைத்ததும் எண்பதுகளின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது தன்னுடைய பிரிவுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் என்று பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிற மாதிரி செய்து கொண்டது பழைய கணக்கு, வரலாறு! அதுகூட அல்ல இன்றிருப்பது!   

இந்திரா, ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து சோனியா தன்னுடைய வாரிசுகளுக்காகத் தயார் செய்து வைத்திருக்கிற சுயநலக்கும்பலால் மட்டுமே ஆன ஒரு உருவகம் இப்போது காங்கிரஸ் கட்சி என்ற பெயரில்!  அவ்வளவுதான்!    

Jaya produces proof on Gandhi’s intent to dissolve Congress

PTI  Updated on April 02, 2013
Tamil Nadu Chief Minister J. Jayalalithaa






Tamil Nadu Chief Minister Jayalalithaa today presented documentary evidence to Congress members in the state Assembly to validate her minister’s argument that Mahatma Gandhi wanted to dissolve the century-old political party after Independence.

    
         

புதன்கிழமை! கொஞ்சம் கொறிக்க! நிறையச் சிரிக்க!

இன்றைய நாளிதழ்களில் தேவே கௌடா, தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் கூட  பேசுபொருளாகி இருக்கிறார். இப்படி ஒருவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார் என்பதே இங்கே எத்தனைபேருக்குத் தெரியுமோ தெரியாதோ என்பதே ??குறிதான்!

symbolises a well-connected India. I thank Atal Bihari Vajpayee avaru, Dr. Manmohan Singh avaru and avaru for their immense contribution in completing a dream project of our Government.


We have had stand by PMs , Temporary PMs… but Deve Gowda was the sleeping PM… Metaphorically as well as literally

  

தேவே கௌடா பிரதமரானதே 1996 இல் நடந்த ஒரு அரசியல் விபத்துதான்! பிரதமராக இருந்ததும் கூட பதினோரு மாதங்களுக்கு சில நாட்கள் குறைவு தான்! அதிலேயே தூங்குமூஞ்சிப் பிரதமர் என்று கேலியாக அழைக்கப்பட்டவர். அவர்தான் நேற்று பிரம்மபுத்ரா நதி மேல் கட்டப்பட்ட போகிபீல் பாலத்திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாதது குறித்துப் பேசி, பேசுபொருளாகி  இருக்கிறார்.        

நேற்றுமுன்தினம் இவர் மகன், கர்நாடக முதல்வராக இருக்கும் குமாரசாமியின் முறை! இரக்கமே இல்லாமல் கொல்லுங்கள்! என்று அலைபேசியில் உத்தரவிடுகிறார்! எப்போதுமே இப்படித்தானா? காங்கிரஸ் கூட்டணிக்குப் பிறகா?


தேவே கௌடா புலம்பல், குமாரசாமி  உத்தரவு இதற்குப் பின்னால் இருக்கிற அரசியல் இவைகளை புரிந்து கொள்ள வேண்டுமா? எதனால் தேவே கௌடா பிரதமரானதே ஒரு அரசியல்விபத்து என்றானார்? புரிந்துகொள்ள கொஞ்சம் 1996 தேர்தலில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

1996 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொங்குசபை என்று தான் மக்களுடைய தீர்ப்பாக இருந்தது. பிஜேபி 161 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக, அடுத்து காங்கிரஸ் 140. சரண்சிங்குக்குப் பின் பலப்பல பிரிவுகளாக சிதறிய ஜனதாதளம் (செகுலர்) 46, இடது முன்னணி 44, இதர மாநிலக்கட்சிகள் எல்லாம் சேர்த்து 100 என்று ஒரு குழப்பமான காம்பினேஷனில் ரிசல்ட்.

தனிப்பெரும் கட்சியாக இருந்த பிஜேபியை ஆட்சி அமைக்க வாஜ்பாய் அவர்களை ஜனாதிபதி அழைத்தார். அவரால் முடியவில்லை என்றானபோது அடுத்த வாய்ப்பு காங்கிரசுக்குப் போனது. கடந்தகால அனுபவங்களில் காங்கிரஸ்  இதர கட்சிகளின் தோள் மீதேறி சவாரி செய்யவே விரும்பியதில் முதல் தேர்வாக விபி சிங்கும், அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசுவும்  இருந்தனர். ஜோதிபாசுவுக்கு  விருப்பமிருந்தாலும், கட்சிக்கட்டுப்பாடு என்கிற கட்டாயத்தில் ஒதுங்கி கொண்டார். மூன்றாவதாக கருப்பையா மூப்பனார் பெயர் அடிபட்டதும் கருணாநிதி அதைக் கழித்ததும் #பழங்கணக்கு அடுத்து நாலாவதாக காம்ப்ரமைஸ் கேண்டிடேட்டாக தேவே கௌடா பிரதமரானது, ஒரு விபத்தா இல்லையா?

காங்கிரஸ்கட்சியால் பிரதமர்பதவி ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்டதில் முதலாவது சரண்சிங்! இரண்டாவது சந்திரசேகர்! அடுத்தது தேவே கவுடா! ஆரம்பத்தில் PV நரசிம்மராவ் ஆதரவாளராக இருந்த கௌடாவை காரியமானதும்,  காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரியை வைத்துக் கவிழ்த்தார்கள்! ஆம், பதவியில் இருந்தது   June 1, 1996, முதல் April 21, 1997 வரைதான்!  பிறகு சீதாராம் கேசரியைத் தள்ளி விட்டு  சோனியா காந்தி கட்சித் தலைமையைக் கைப்பற்றிக்  கொண்டதும் இருபது வருடங்களுக்குப் பிறகு மகன் ராகுல்காந்தியை  அந்த இடத்தில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதும்  நேற்றைய துரோகங்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன்றைய வரலாறு!         

    
அப்படியானால் சஞ்சய் பாரூ எழுதிய இந்தப்புத்தகம் மன்மோகன்சிங்கை #TheAccidentalPrimeMinister என்று சொல்லி இருப்பது தவறா? இல்லை! வேறொரு விதத்தில் அதுவும்  சரிதான் என்பதைக் கூட இந்தப்பக்கங்களில் முன்னமே பார்த்திருக்கிறோம்!

******* 
கொறிப்பதற்குகொஞ்சமல்ல நிறையவே நேற்றைய துரோகங்கள் இன்றைய வரலாறு  என்று பார்த்து விட்டோம், இல்லையா? சிரிப்பதற்கென்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? காங்கிரசின் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறதே!



2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் புத்துயிர் பெறுமா? எனும் கேள்வி ஒரு புறம் இருக்க, கட்சி தேர்தலுக்கான தயாரிப்பை துவக்கி விட்டது.










இதில் சிரிப்பதற்கென்ன இருக்கிறது? கொஞ்சம் யோசித்துத்தான் சொல்லுங்களேன்!