Showing posts with label முற்றுப்புள்ளி. Show all posts
Showing posts with label முற்றுப்புள்ளி. Show all posts

புதன்கிழமை! அதென்ன ரயில் மறியல்? முழு அடைப்பு?

பொதுவேலைநிறுத்தம் என்றாலே ரயில் மறியல். முழு அடைப்பு, கலவரங்கள், வன்முறை எல்லாமே சேர்ந்து கொள்கிறதே! ஏன்? எதற்கு? என்று கேள்விகள் கேட்காமலேயே ஊமைச் சனங்களாக மட்டுமே நாம் குறுகிக் கிடப்பதாலா?




போராட்டங்கள் என்ற பெயரில் சென்றவருடம் தான்தோன்றித்தனமாக அராஜகத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமன் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கிற ஒரு தீர்ப்பு ஒரு முன்னோட்டம் தான்! இந்தப் போராட்டத்தை சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டு இயக்குநர் கவுதமன் தரப்பில் வாதிடப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்திய அரசியல் சாசனம் போராட அனுமதி வழங்கியுள்ள போதும் அதற்கும் நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும், முறையான அனுமதியைப் பெறாமல், சட்டவிரோதமாக போராட்டம் நடத்தி மக்களுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை எனவும் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்கிறது இந்தச் செய்தி 

நீதிமன்றங்களோ அரசோ பார்த்துச் செய்தால்தான் உண்டு என்று எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பார்க்கிற ஊமைச் சனங்கள் தாமா நாம்? முந்தையபதிவுகளில் நிலுவையில் இருக்கும் கேள்விகளோடு இதையும் சேர்த்துவிடாமல் ஒரு பதில் சொல்லுங்களேன்!  
*******
#போனதபா ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது #முடியட்டும் ன்னு பெருசா ,,,,,அபசகுனமா எழுதினாங்க திமுக உளுத்தம்பருப்புகள். இந்த முறை ஸ்டாலினை முன்னாடி உட்கார வெச்சு #முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் ,,,,,,ன்னு கொட்டை எழுத்திலே எழுதறாங்களே,,,,,,

உளுத்தம்பருப்புகளே ஸ்டாலினை பார்த்தா பாவமா இல்லையா,,,,,?

இப்படி அனுதாபப்படுகிற அளவுக்கு என்ன நடந்துவிட்டதாம்? டிடிவி தினகரன் இப்படிக் கமென்ட் அடித்தாரே, இதுவாக இருக்குமோ?

அதெல்லாமில்லை! நமக்கு நாமே என்று இசுடாலின் தானாகவே தேடிக் கொண்டதுதானாம்!


திருவாரூர் கிராமசபை கூட்டத்தில் பொய் சொல்லி கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ஸ்டாலின் ட்விட்டரில் அடுத்த ட்ரெண்ட் #FRAUDSTALIN என்கிறார்களே!

*******

அர்னாப் கோசுவாமியா? ஆரு பாப்பாங்க? அதுவும் நிர்மலா சீதாராமனுடன் பேட்டியா? என்று கேட்கிறவர்கள் இருக்கிற இதே இணையத்தில் தேடிப் பிடித்துப் பார்க்கிறவர்களும் இங்கே இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

இது புதுசு!