Showing posts with label தரிசன நாள் செய்தி. Show all posts
Showing posts with label தரிசன நாள் செய்தி. Show all posts

ஜனவரி 1 பாண்டிச்சேரி ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாள்!

நம்மூரில் ஜனவரி முதல்நாளை ஆங்கிலப்புத்தாண்டாகக் கொண்டாடுவது ஒரு சாங்கியம், fashion, கூட்டத்தோடு கூட்டமாகச் சேர்ந்துகொள்கிற மந்தைத்தனம் இப்படி என்ன வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும்! என்னைப் பொறுத்தவரை இந்தநாள் ஸ்ரீஅரவிந்தாசிரமத்தின் தரிசன நாளாகவும், ஸ்ரீ அரவிந்த அன்னையின் தரிசனநாள் செய்தியைப் பெறுகிற ஒரு திருநாளாகவும் தான் இருக்கிறது அன்னையின் ஆசி, செய்தி இவைதான் தரிசன நாளின் சிறப்பாக இருப்பது அடியவர்களுடடைய அனுபவம்!


         

ஆன்மீக உணர்வின் அடிப்படைக் காரணமாக இருப்பது உள்ளே இருக்கும் இறைவனைக் கண்டு கொள்வதற்கே!

நேற்றும் இன்றும் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருக்கும் ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி கட்டடத்தில், ஸ்ரீஅரவிந்தரின் சாவித்ரி மஹாகாவியத்தை அகண்ட பாராயணமாக, ஸ்ரீஅரவிந்தயக்ஞமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்துபோன வருடம்  உலகத்துக்கே பெரும் சோதனையாக, கொரோனா தாக்கம், பொருளாதார முடக்கம், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னமும் அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பது என்றிருந்தாலும் எல்லா சோதனைகளைத் தாண்டி மனித இனம் மீண்டு வரவேண்டுமென்றால், தெய்வத்தின் துணையைத் தேடுவதைத்தவிர, வேறு வழியேது?

ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅரவிந்த அன்னை இருவரது திருவடிகளையும் சிந்தையில் வைத்துச் சரண் அடைகிறேன்/ அடைகிறோம்!  

மா மிரா சரணம் மம  ஸ்ரீஅரவிந்த சரணம் மம 

நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப்புத்தாண்டு தின வாழ்த்துகள்!                   

இன்றைக்கு, நாள் நல்ல நாள்! தரிசன நாள்!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது. இந்த வருட ஏப்ரலுக்கு இரண்டு விதமான கூடுதல் சிறப்பு இருக்கின்றன! இந்த வருடம் ஏப்ரல் நான்காம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த 110 ஆண்டுகள் நிறைவாக இருந்தது. 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய நூறு ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

இன்றைய தரிசன நாள் செய்தி 


ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்து  110ஆண்டுகள்  இந்த ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும். ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

19 வருடங்களுக்கு முன் இதே நாளுக்காக எழுதியதன் மீள்பதிவு. தேவையான இடங்களில் கொஞ்சம் திருத்தங்களுடன்   

பிப்ரவரி 29 Golden Day நம்பிக்கையோடு சிலவிஷயங்கள்!

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், மிகப் பெரிய அழிவை ஜப்பான் சந்தித்தது. அணுகுண்டு வீசப்பட்டது மட்டுமல்ல, அவர்களுடைய தேசியப் பெருமிதமே பெரும் சரிவைச் சந்தித்தது. தன்னை விடப் பெரிய வஸ்தாத் எவனுமில்லை என்று இறுமாப்போடு அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஒருவன், அவனுடைய  ஆணவத்தின் மீது, பெருமிதத்தின் மீது விழுகிற அடி மாதிரிக் கொடுமையான அனுபவம், பிரச்சினை வேறு ஒன்று இருக்க முடியுமா?

ஜப்பானிய மக்கள் துவண்டு விடவில்லை. தங்களுக்கு விழுந்த அடியை, வலியை ஏற்றுக் கொண்டார்கள். அழிவில் இருந்து மீண்டு வருவதற்கு நம்பிக்கையோடு உறுதி கொண்டார்கள்.

அடித்துத் துவம்சம் செய்து விட்டு அப்புறம் தடவிக் கொடுப்பது போலப் பொருளாதார உதவிகளை, அமெரிக்கா செய்தது. உற்பத்தி செய்யப் படும் பொருட்களை வாங்கிக் கொள்ளக் கதவைத் திறந்தது.

ஆனால், ஆரம்ப காலங்களில் மேற்கத்திய மக்களுடைய விருப்பங்கள், தேவைகள் என்ன என்பது, அவர்களுடைய ஆங்கில மொழி போலவே, ஜப்பானியர்களுக்குப் புரியவில்லை. தயாரித்து விற்பனை செய்த பொருட்கள் எல்லாம், தரக் குறைவாக, கேலிக்குரியவைகளாக இருந்தன.

ஜப்பானிய மக்கள், அந்த ஏளனத்தையும் சகித்துக் கொண்டார்கள். சகித்துக் கொண்ட விதம், வேறு வழியில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாக இல்லை! தம்முடைய குறைகள் என்ன என்பதை, பதறாமல் சிந்தித்தார்கள். தயாரிப்பதில் ஏற்டும் குறைகள் என்ன என்பதை, தயாரிக்கப் படும் கட்டத்திலேயே கண்டுபிடித்து அங்கேயே சரி செய்தது மட்டுமல்ல, முன்னை விட இன்னும் அதிகம் பயனுள்ளதாக, ஒரு வளர் நிலை மாற்றத்தை, இயல்பான பண்பாடாகவே வளர்த்துக் கொண்டார்கள். ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே தரம் மிகுந்தது என்ற உத்தரவாதத்தை, மிகக் குறைந்த காலத்திலேயே சாதித்துக் காட்டினார்கள்.

இங்கே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் நம்மைத் திகைக்க வைக்கிற, முடக்கிப் போட்டுவிடுகிற சூழ்நிலைகள் அவ்வப்போது வந்துகொண்டே தான் இருக்கும்! 2012  இல் உலகம் அழிந்து விடப் போகிறது  என்று ஒரு கற்பனை உலவிக் கொண்டிருந்தது அல்லவா, அதே மாதிரி! கொஞ்சம் நிதானித்துப் பார்த்தீர்களேயானால், இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரி அச்சம், பீதி ஏதோ வடிவத்தில் கிளப்பி விடப்பட்டுக் கடைசியில்  ஒன்றுமே இல்லாமல் போயிருப்பதைப் பார்க்க முடியும்!

இத்தனைக்கும் ஆதார சுருதியாக இருப்பது நம்பிக்கை! நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கை! கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்றோ எவனோ வேலையில்லாமல் எழுதி வைத்துப் போனதல்ல, கூடி வாழும்போது மட்டுமே மனிதர்களால் உன்னதமான தருணங்களை எட்டிப் பிடிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவது தான்!

நானும் நீங்களும் வேறுபட்டுத் தனித்தனியாக நிற்பதற்கு தனித்தனியாக ஆயிரம் ஆயிரம் காரணங்களைச் சொல்ல முடிகிற போது, நாம் எப்படி ஒன்றாக இருக்க முடியும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தையாவது கண்டுபிடிக்க முடியாதா என்ன! வேறுபாடுகளை வளர்த்துக் கொண்டு, பகைமையை, வெறுப்பை வளர்த்துக் கொண்டு போவது மிருகங்களுக்கு வேண்டுமானால்  இயல்பானதாக இருக்கலாம்.

மனிதர்களுக்கு......!


"In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer. "



அறியாமையும், இருளும் கூடிய தொடக்கத்தில், நம்பிக்கைஒன்றே மனிதனுக்குத் துணையாக வழங்கப்பட்ட சாதனமாக இருக்கிறது, என்று ஒரு உரையாடலில்  ஸ்ரீ அரவிந்த அன்னை தெளிவுபடச்சொல்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் விரிவாக,

“Faith is the movement of the soul whose knowledge is spontaneous and direct.

Even if the whole world denies and brings forward a thousand proofs to the contrary, still it knows by an inner knowledge, a direct perception that can stand against everything, a perception by identity.

The knowledge of the psychic is something which is concrete and tangible, a solid mass. You can also bring it into your mental, your vital and your physical; and then you have an integral faith - a faith which can really move mountains.”


 -ஸ்ரீ அன்னை 

இன்று பிப்ரவரி 29. 1956 ஆம் ஆண்டு இதேநாளில் ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் தவத்தின் பலனான பொன்னொளியின் (Supramental Light) இருப்பை உறுதியாகக் கண்டறிந்து, அறிவித்த நாள். பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசன நாளாகவும்! இன்றைய தரிசனநாள் செய்தியாக!

   

இந்தநாளில் தேசத்தைப் பீடித்திருக்கிற பிடிவாதங்கள், முரண்பாடுகள், பிரச்சினைகள் முற்றிலுமாக நீங்கவேண்டும் என ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் பிரார்த்தனை செய்துகொள்வோம்.

1971 இந்தியாவைப்  போர்மேகங்கள் சூழ்ந்தபோது. ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய ஒரு பிரார்த்தனை இந்த நேரத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.

Supreme Lord! Eternal Truth!
Let me obey Thee alone and live according to Truth

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே        

ஸ்ரீ அரவிந்த அன்னையின் தரிசன நாள் செய்தி!

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு எனக்கு எந்தவிதமான தேவையோ காரணங்களோ இருந்ததே இல்லை. ஆனாலும் சமூகத்திலும் பணிச் சூழலிலும் சம்பந்தமே இல்லாத ஒன்றை, வாயளவில் வாழ்த்தைப் பரிமாறிக் கொள்கிற அர்த்தமற்ற சாங்கியத்தைக் கூட, ஒரு ஆன்மீக அனுபவமாக, உள்ளார்ந்து அனுபவிக்கிற ஒன்றாக ஸ்ரீ அரவிந்த அன்னை ஏற்படுத்தித் தந்திருக்கிறாள். புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசனநாளாக ஜனவரி 1 இருக்கிறது.

  இன்றைய தரிசனநாள் செய்தியின் முகப்பு 

ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் முழுப்பொறுப்பையும் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனிமையில் மோனத் தவம் செய்ய ஆரம்பித்தது, 1950 டிசம்பரில்  அவர் தன்னுடைய உடலை அதிமானச ஒளி இந்தப்பூமியில் நிலையாகத் தங்குவதன்பொருட்டு தியாகம் செய்தது வரை தொடர்ந்தது. ஆசிரமத்தில் சாதகர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கேயே தங்கியிருந்தவர்களாக ஆனாலும், நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் ஸ்ரீ அரவிந்தரை சேவிக்க வந்த அன்பர்களானாலும், குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்க முடிந்தது. ஆரம்பத்தில் மூன்று நாட்களாக இருந்த தரிசன நாட்கள் (Feb 21 ஸ்ரீ அன்னையின் பிறந்த தினம், Aug 15 ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம், Nov 24 சித்தி தினம்)     பின்னால் நான்கு நாட்களாக, ஸ்ரீ அரவிந்த அன்னை பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளும் சேர்க்கப்பட்டது. இந்தப்பட்டியலில் ஜனவரி 1 காணோமே என்று தேடவேண்டாம். ஜனவரி 1 ஆசிரமத்தின் தரிசன நாளாகவும் ஆனது பிற்பாடு.
    

இது இன்றைய தரிசன நாள் செய்தி. ஆரம்ப நாட்களில்  ஸ்ரீ அரவிந்தர் அன்னையைத் தேடி வருகிற சாதகர்கள் ஒவ்வொருவருக்கும், அவரவர் பக்குவத்துக்கு ஏற்றபடி  சாதனையில் முன்னேறுவதற்கு உதவியாக சில வாக்கியங்களை ஸ்ரீ அரவிந்த அன்னை தன் கைப்பட எழுதிய கார்டுடன், மலர்களையும் பிரசாதமாக அளித்து வந்தார். பின்னால் அது அச்சிடப்பட்ட செய்தியாக எல்லோருக்கும் மலர் ப்ரசாதங்களோடு வழங்கப்பட்டது. இன்றும், முன்னாட்களில்  அப்படி சாதகர்களுக்கு வழங்கப்பட்ட செய்தியே தரிசன நாள் செய்தியாக random ஆகத்தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.



OM Sri Aurobindo Mira

Open my mind, my heart, my life

to your Light, your Love, your Power. In all

things may I see the Divine.

1938 இல் தியானிப்பதற்கு ஒரு மந்திரம் வேண்டும் என்று வேண்டிய அன்பர் ஒருவருக்கு ஸ்ரீ அரவிந்தர் தன் கைப்பட எழுதி அருளிய மந்திரம் இது!

மா மிரா சரணம் மம   ஸ்ரீ அரவிந்த சரணம் மம 

இவையே இன்றைய நாள் முழுதும் பிரார்த்தனைக்கான மந்திரங்கள்! வாழி நலம் சூழ!   

எனக்கொரு தாய் இருக்கின்றாள்! என்றும் என்னைக் காக்கின்றாள்!

Consent to be ......nothing! என்று பதிவுக்கு கொஞ்சம் விசித்திரமான தலைப்பு எதற்காக என்று எப்போதாவது கேட்கத் தோன்றி இருக்கிறதா? இங்கே பதிவின் வலது பக்கத்திலேயே படிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்! ஆனால்.......! ஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து .... Consent to be nothing and none, dissolve Time's work, Cast off thy mind, step back from form and name. Annul thyself that only God may be." Savitri Book 7 Canto 6 இப்படி எடுத்துப் போட்டிருப்பதை எப்போதாவது கவனித்ததுண்டா?
1973 நவம்பர் 17 ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த  நாள்! இன்றும் கூட அவளருளை வேண்டுகிற எவருக்கும் தன்னுடைய ஒளியையும் அருளையும் தடையில்லாமல் தருவதற்கு அன்னை தராத தயங்கியதே இல்லை என்பது அடியவர்கள் ஒவ்வொருவருடைய அனுபவமாகவும் இருக்கிறது.
                                                    

நவம்பர்  17,  ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த நாள். ஆசிரமத்தின் தரிசன நாளாக அனுசரிக்கப்படும் நாள் இது., அன்னையை வணங்கச் செல்பவர்களுக்கு, அவரவர் பக்குவத்திற்குத் தகுந்தபடி அன்னை ஒரு செய்தியை அளிப்பது உண்டு! கூடவே அதற்குத் துணை செய்யும் மலர்களும்!

இன்றைக்கும் அந்த நடை முறை அனுசரிக்கப்படுகிறது. இங்கே காண்பது ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்திற்கு, இன்று  ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசிக்கச் செல்பவர்களுக்கு அளிக்கப்படவிருக்கும் செய்தி. நேரில் செல்பவர்களுக்கும், கடிதம் மூலமாக வேண்டுபவர்களுக்கும் மலர்களும் (சமாதி மேல் அர்ப்பணிப்புடன் விக்கப்பட்ட மலர்களைக் காய வைத்து அன்னை அல்லது ஸ்ரீ அரவிந்தர் படம் ஒட்டிய சிறு பாக்கெட்டுக்குள் வைத்து) பிரசாதமாகக் கிடைக்கும்.

உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன் என்ற அன்னையின் வார்த்தைகளை, அனுபவத்தில் மட்டுமே கண்டு உணர முடியும் 

அதிலும் தெளிவு பிறக்கவில்லையே என்று கொஞ்சம் பிரார்த்தனை செய்தால் மிகத்தெளிவான வழிகாட்டுதல் கிடைக்கும் என்பதையும் அனுபவத்தில் அறிந்துகொண்டதுண்டு. பதிவின் வலதுபக்கத்தில் 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்  என ஸ்ரீ அன்னையின் படம் ஒன்று இருப்பதன் மீது எப்போதாவது க்ளிக் செய்து பார்த்தது உண்டா? 

திடீரென்று சூழ்ந்த வெறுமைக்கு உங்கள் பதிவு ஒரு வெளிச்சத்தை காட்டுவது போல இருக்கிறது. "நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும், நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவை. இன்றைய வலி, துயரம்,தோல்வி என்பதெல்லாம், உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை." - மிகப்பெரிய தெளிவை தர வல்ல அருளாசி! பகிர்ந்ததற்கு நன்றி.
ReplyDelete
Replies
  1. வாருங்கள் பந்து!

    யாஹூ!360 இலும் அது மூடப்பட்டபிறகும் ஸ்ரீ அரவிந்தர், அன்னை இருவருடைய அருளமுதைப் பகிர்ந்து கொள்கிற பிரார்த்தனைப் பதிவுகளாகத்தான் இணையத்தில் எழுத ஆரம்பித்ததே! ஒரு சாதாரண மனிதனுடைய குழந்தைத்தனமான பகிரவுகளுக்குக் கூட ஒரு ஆன்மீகப்பதிவர் ரேஞ்சுக்கு சிலரிடமிருந்து வந்த ரெஸ்பான்சில், மிகவும் சங்கடப்பட்டுத்தான் இதரவிஷயங்களையும் தொட்டு எழுத ஆரம்பித்தேன். அதுவே அரசியல் விஷயங்களையும் தொட்டுப் பேசுகிற பதிவாக அப்படியே மாறிப்போய்விட்டது.

    ஆனாலும் இந்தப் பதிவுக்கு வைத்திருக்கிற தலைப்பே என்னைத் திசைமாறிப்போய்விட அனுமதிக்காமல் ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில் திரும்பவும் என்னைக் கொண்டு சேர்த்துவிடுகிறது.
நண்பர் பந்துவுக்கு நான் சொன்ன பதிலில் கொஞ்சமும் பொய்யில்லை. எங்கெங்கோ ஆயிரம் கவனச் சிதறல்கள் இருந்தாலும் ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில்  திரும்பவும் கொண்டுவந்து சேர்த்துவிடுகிற திருவருளை,  கருணையை, ஒருமுறை இருமுறை அல்ல, ஒவ்வொரு முறையும் அனுபவித்து வருகிறவன்.  முந்தைய பதிவுக்கு சாண் ஏறி முழம் சறுக்கிய கதை என்று தலைப்பு வைத்திருந்தேன் இல்லையா? அது தவறு என்று திரு. பந்துவுக்கு பதில் எழுதுவதற்கு முன் ஸ்ரீ அரவிந்த அன்னை எனக்கு உணர்த்தியிருக்கிறார்!


எனக்கொரு தாய் இருக்கின்றாள்! என்றும் என்னைக் காக்கின்றாள்! என்பதை நான் அறிந்துகொண்ட தருணம் ஒன்றா இரண்டா?

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!         

ஒவ்வொரு தடைக்கல்லும் தாண்டிச் செல்வதற்காகவே!



சில நேரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள்நம்மை உன்மத்தம் பிடித்தவர்கள் மாதிரி ஆக்கிஒன்றுமே செய்ய இயலாதவர்களாகக் கட்டிப் போட்டு விடுகிற மாதிரித் தான் தோன்றும்.சந்தர்ப்பச் சூழ்நிலைகள்  நாம் என்னசொன்னாலும்எது செய்தாலும் நமக்கெதிராகவே திரும்பி,ஒருவிதமான மனச்சோர்வையும்சலிப்பையும் உண்டு பண்ணுவதாகவே இருக்கும். 

ஆனால் இது உண்மையானதுதானாமீள்வதற்கு வழியே இல்லையாஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?ஜோசியனிடம் போய்ப் பரிகாரம் கேட்டு மஞ்சள்துண்டு அல்லது வெள்ளைகருப்புத்துண்டு,வேட்டிவிரதம்ராசிக்கல் மோதிரம்,வசதி இருந்தால் கோவில் கோவிலாகப் படியேறி யாகங்கள் தானங்கள் என்று செய்தால் சரியாகிவிடுமா?அல்லது  இதுதான் விதிஇதிலிருந்து மீளவே முடியாது என்று முடங்கிக் கிடந்து விடவேண்டுமாஇல்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.நாம் சந்திக்கும் ஒவ்வொரு தடையும்,பிரச்சினையும்நம்மைப் பக்குவப் படுத்துவதற்காகவேநாம்எதை சாதிப்பதற்காக இங்கே பிறந்திருக்கிறோமோஅதை செய்து முடிப்பதற்கு உதவியாகவே  நமக்கு அளிக்கப்படுவதாக ஸ்ரீ அன்னை சொல்கிறார். 

உள்முகமாகப் பார்க்கப்பழகினால்நமக்குள்ளேயே இருளும்,ஒளியும் சமமாக இருப்பதைப் பார்க்க முடியும். இருட்டை மட்டுமே பார்க்கும் போது,அதன்பின்னால் பெரும் ஒளி இருப்பதைப் பார்க்க முடிவதில்லை. ஒரு பெரிய பலவீனமாக,பெரிய தடைக்கல்லாகசோதனையாக ஒன்றைப் பார்க்கும்போது கவலைப்படவேண்டாம்விரக்தியடையவும் வேண்டாம் அப்படி மேலோட்டமாகத் தெரிவதே மிகப்பெரிய தெய்வீக அருளாகவும் இருக்கக் கூடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.



இது இன்றைய தரிசன நாள் செய்தி!
ஸ்ரீஅரவிந்த அன்னை அவதார தினம் இன்று!

அன்னையிடத்தில் ஒருவர் திருவுருமாற்றம் [Transformation] பற்றி அறிய விரும்பினார். ஸ்ரீ அரவிந்த அன்னை அவருக்குச் சொன்னார்: "அது மிகவும் சுலபம். நீ இப்போது அப்படி இருக்கிறாயோ அதற்கு நேர் எதிராக ஆவது தான்."
அன்னையின் பதில் கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களாகொஞ்சம் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைக் கவனமாகக் யோசித்துப்பாருங்கள். அரைகுறையாக மொழி பெயர்ப்பதற்குப் பதிலாகஸ்ரீ அன்னை சொல்வதென்ன என்பதை  நேரடியாகவே கொஞ்சம் பார்த்து விடலாமே! 

"If you look at yourself carefully, you will see that one always carries in oneself the opposite of the virtue one has to realise (I use "virtue" in its widest and highest sense). You have a special aim, a special mission, a special realisation which is your very own, each one individually, and you carry in yourself all the obstacles necessary to make your realisation perfect. Always you will see that within you the shadow and the light are equal: you have an ability, you have also the negation of this ability. But if you discover a very black hole, a thick shadow, be sure there is somewhere in you a great light. It is up to you to know how to use the one to realise the other.

This is a fact very little spoken about, but one of capital importance. And if you observe carefully you will see that it is always thus with everyone. This leads us to statements which are paradoxical but absolutely true; for instance, that the greatest thief can be the most honest man (this is not to encourage you to steal, of course!) and the greatest liar can be the most truthful person. So, do not despair if you find in yourself the greatest weakness, for perhaps it is the sign of the greatest divine strength.

Do not say, "I am like that, I can't be otherwise." It is not true. You are "like that" because, precisely, you ought to be the opposite. And all your difficulties are there just so that you may learn to transform them into the truth they are hiding.

Once you have understood this, many worries come to an end and you are very happy, very happy. If one finds one has very black holes, one says, "This shows I can rise very high", if the abyss is very deep, "I can climb very high."


- The Mother 
Col. Works Vol. 4: pp 117

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.
உன்னுடைய பெயர்சொல்லிக் காத்திருப்பதைத் தவிர வேறு புகல் இல்லாத இவனையும் நயந்து உனது பிரியத்துக்குகந்த குழந்தை என்றாகிற தகுதியை அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!

     
  

ஸ்ரீ அரவிந்த சரணம் மம!

Sri Aurobindo

gayatri mantra

Tat savitur varam rupam jyotih parasya dhimahi
Yannah satyena dipayet
Let us meditate on the most auspicious (best) form of Savitri,
on the Light of the Supreme which shall illumine us with the Truth.

- Sri Aurobindo 




புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஒரு பிரார்த்தனையுடன்..!

Bonne Année 2011






புது வருடம் பிறக்கப் போவதற்கு முன்னாலேயே, வேண்டுதல்களும், அபிலாஷைகளும்  இறக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பித்து விடுகின்றன! கடவுளிடம், இந்தப் புத்தாண்டில் என்னென்ன வேண்டலாம், கேட்கலாம் என்ற பட்டியல் தயாராக ஆரம்பித்து விடுகிறது.





எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியே  ! எங்கும் நிறைந்தருளும் கடவுளே!





இந்தப் புத்தாண்டில் எல்லாக் காரியங்களும் வெற்றி பெற  வேண்டும், எண்ணியபடி எல்லாம் நடந்தேற வேண்டும்! எல்லா வளங்களும் பெருக வேண்டும்! 





உடல் நலம் நன்றாக இருக்க அருள் புரிய வேண்டும்!  சுவற்றை வைத்துச் சித்திரம் என்பது போல, உடல் நலம் நன்றாக இருந்தால் தானே, மற்ற வேலைகளைச் செய்ய முடியும்!





ஆர்வத்தோடு விழையும் அனைத்தும் மெய்ப்பட வேண்டும்! எங்களது இல்லத்திலும், வாழ்க்கையிலும், உலகத்திலும் அமைதி நிலவ வேண்டும்!



இதையே உன்னிடம் வேண்டுகிறோம்!





கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால், பட்டியலில் இன்னும் எது எதையோ சேர்த்துக் கொள்ள மறந்து விட்டோமே என்று, இன்னும் கொஞ்சம் வேண்டுதல்கள் சேர்ந்து கொண்டே போகும்! பட்டியல்கள் அவ்வளவு சீக்கிரமாக முடிந்து விடுவதுமில்லை!





ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒன்று இருக்கிறது. ஆறறிவு இல்லாத தாவரங்கள் கூட ஒளியை நோக்கி உயர்கிற தன்மையோடு இருக்கின்றனவே! ஆறறிவு படைத்த நாமும் அப்படி தெய்வீக ஒளியை வேண்டி உயர வேண்டாமா? 





ஒளியை நோக்கி உயரும் தன்மையைக் கொஞ்சம் மறந்துவிடுகிறபோது, இது வரை சாதித்தவை எல்லாமே ஒன்றுமில்லாமல் போய்விடுகிறதே! இதற்கு நம்மைத் தவிர வேறு எவரைக் குற்றம் சொல்ல முடியும்?





மற்ற எல்லா வேண்டுதல்களையும்  விட, மிக முக்கியமான ஒன்று, ஒரு பிரார்த்தனையாக --
ஸ்ரீ அரவிந்த அன்னையே!உன்னைச் சரண் அடைகிறேன்.
அறியாமை, முயலாமை, இல்லாமை, இப்படி எல்லா ஆமைகளையும் என் தோள்களில் இருந்து இறக்கி வைக்க தயவு செய்வாய்.

இந்த ஆமைகளோடே இனியும் கூடியிராமல், ஒரு புதிய அனுபவத்திற்கு என்னைத் தயார் செய்வாய். தகுதியும், தைரியமும் அருள்வாய்! ஒவ்வொரு அசைவிலும் செயலிலும், உனது திருவுள்ளப் படியே நடந்துகொள்கிற பக்குவ நிலையை அருள்வாய்.

பிறக்கும் புத்தாண்டு, உணமையிலேயே புத்துணர்வை அளிக்கும் ஆண்டாக வரம் அருள்வாய். வீணாய்க் கழிந்த பொழுதையும் ஈடு கட்டும் முயற்சியை, மன வலிமையை, எல்லா நேரங்களிலும் நீ என்னோடு  கூடவே  இருக்கிறாய், துணை செய்கிறாய், என்னுள் நிறைந்து எல்லாவற்றையும் நீயே நடத்துகிறாய் என்கிற உறுதியான நம்பிக்கையை, அனுபவித்து உணர்கிற வரமாக அருள்வாய்.

பாரத  தேசம் புண்ணிய பூமி! உலகுக்கு, அமைதியையும், ஆன்மீக வெளிச்சத்தையும் தரவேண்டிய கடமை இருக்கிறது!  தன்னுடைய கடமையை சரிவரச் செய்வதற்குத் தடையாக இருக்கும், உட்பகை வெளிப்பகை அனைத்தையும் அகற்றி, நல்லதொரு தலைமையை  இந்த தேசத்திற்கு அருள வேண்டும்!

சுற்றி நில்லாதே பகையே! துள்ளி வருகுது வேல்!

ஓம் ஆனந்தமயி, சைதன்ய மயி, சத்ய மயி, பரமே!


ஜனவரி முதல் தேதி!  புத்தாண்டின் முதல் நாள் மட்டுமில்லை. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில், ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் அடியவர்களுக்கு தரிசனம் தரும் நாளாகவும் தொடர்கிறது. தரிசன நாள் செய்தியாக, புத்தாண்டுப் பிறப்பன்று ஆசிரமம் செல்லும் அன்பர்களுக்கு, தரிசன நாள் செய்தி கிடைக்கும். மேலே இருப்பது தான் அது! நேரில் செல்பவர்களுக்கு, கடிதம் எழுதி வேண்டிக் கொள்பவர்களுக்கு  சமாதி மேல் வைக்கப் பட்ட மலர்களும் அருளாசியோடு கிடைக்கும்.  புத்தாண்டு, ஸ்ரீ அன்னையின் அருளாசியோடுதுவங்கட்டும்!


சென்ற வருடம் டிசம்பர் 31 அன்று எழுதிய அதே பிரார்த்தனைதான்! கடந்துபோன வருடத்தை, இப்போது திரும்பிப்பார்க்கிறபோது, இந்தப் பிரார்த்தனையின் அவசியம் இப்போதும் இருப்பதை உணர முடிகிறது.

"வேண்டத்தக்கது அறிவோய் நீ! வேண்டுவ முழுதுந்தருவோய் நீ! " அருணகிரிநாதரின் இந்த வார்த்தைகள் எவ்வளவு சத்தியம் என்பதை அனுபவங்கள் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தப்பக்கங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாசகர்களுக்கு, என்னுடைய மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவனது பெரும் கருணை, உங்களோடு என்றைக்கும் இருப்பதாக! எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறி வாழ்வில் உன்னதம் கைகூடத் திருவருள் கைகூட்டுக!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!