Showing posts with label சாஸ்திரி. Show all posts
Showing posts with label சாஸ்திரி. Show all posts

ஒரு புதன் கிழமை! செய்திகளி(ல்)ன் அரசியல்!

உலகின் பலமூலை முடுக்குகளில் நடக்கிற பல சம்பவங்கள் நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கவலை, அக்கறை  கொஞ்சமும் இல்லாமல் உள்ளூர் கலாட்டாக்களில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று என்ன அநியாயம் நடந்தது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது தமிழருக்கே உண்டான தனிக் குணமோ? 



இப்படியெல்லாம் ஆகும் என்று ஊகம் செய்ய முடிந்திருந்தால் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இப்படி ஒரு பாடலை எழுதியே இருக்கமாட்டாரோ என்ற சந்தேகம் நீண்டநாட்களாக எனக்குண்டு! அடுத்தவன் கதைக்கு வசனம் எழுதியே ஆட்சியைப் பிடிக்கிற வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைக்க வேண்டும் என்று எழுதிவைத்துவிட்டாளோ அந்த பராசக்தி என அவளையே கூட  கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கவேண்டும் என்று இந்த புதன்கிழமை நவராத்ரி மூன்றாவது நாளில் தோன்றுகிறது!


கருணாநிதியின்  அதிர்ஷ்டம் அவருடைய ஏறுமுகமாக இருந்த ஆரம்ப   நாட்களில் சமுக ஊடகங்கள் இந்த அளவுக்குப் பரவலாக இல்லை. அப்படி இருந்திருந்தால், இன்றைக்கு  94 வயதாகும் மலேசியப் பிரதமர் மஹாதிர் முகமதுக்கு ட்வீட்டரில் எதிர்வசனம் சொல்லிக் கிழிக்கிற மாதிரியே ஆகியிருக்கும் இல்லையா! நம்மூர்  திராவிடங்கள் மாதிரியே  #ஊருக்குத்தான்உபதேசம் என்று மலேசியப் பிரதமர் வரம்புமீறி இந்தியாவுக்கு உபதேசம் செய்ய முயன்றால் இப்படிக்கு கேலிப் பொருளாகி நிற்க வேண்டியது தான்! ட்வீட்டரில் இந்தவிஷயத்தில் எதிரும் புதிருமான விவாதங்கள் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது!  சமுக வலைத்தளங்களுடைய வலிமையே இந்த மாதிரிப்  பொய்யான பேர்வழிகளை உடனுக்குடன் அம்பலப் படுத்துவதில் தான் இருக்கிறது! பொய்ச்செய்தி பரப்புவதில் அல்ல என்பதை இந்த நேரத்தில் அழுத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 


எத்தனையோ முக்கியமான விஷயங்கள் விவாதத்துக்கும் தெளிவு படுத்திக்கொள்வதற்கும் இருக்கும் போது நம்மூர் சேனல்களுக்கு திமுகவிடமிருந்து உதிரிக் கட்சிகள் எவ்வளவு பணம் வாங்கின என்ற கேள்வியில் செலெக்டிவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலது கட்சியும் மட்டுமே கண்ணுக்குத் தெரிவதில், வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கோடி ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டது, ஒரே சீட்டில் நின்ற கொங்கு நாடு ஈஸ்வரன் கட்சிக்கு 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதன் பின்னணி லாஜிக் பற்றி யாருமே பேசமாட்டேன் என்கிறார்களே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தோழர் சிந்தன் கவலைப்படுகிற மாதிரித் தான் விவாதத்தின் ஆரம்பம் இருந்தது. எதற்கெடுத்தாலும் வலது கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே ஒப்பிட்டு தாங்கள் எவ்வளவு பலசாலி என்று உறுப்பினர்களிடம் பீற்றிக்கொள்கிற வழக்கம் உள்ள மார்க்சிஸ்டுகள், இந்த விஷயத்தில் வலதுகளைவிடத் தங்களைத் திமுக மட்டம் தட்டிவிட்ட மாதிரியான தோற்றம் வருவதை விரும்பவில்லை என்பது கூட சிந்தன் பொருமுவதற்கு காரணமாக இருக்கலாமோ? ஒரு கேள்விக்கு நேரடியான பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, எதிர்க் கேள்விகளால் பிரச்சினையைத் திசைதிருப்பும் முயற்சிகள் எல்லாநேரங்களிலும் பலனளிப்பதில்லை! 

இன்று படித்ததில் பிடித்தது

அக்டோபர் 2 ஆதலால், பலர் காந்தியைப் பற்றியும், சிலர் லால்பகதூர் சாஸ்திரியைப் பற்றியும் வரிந்து வரிந்து எழுதிக்கொண்டிருக்கையில், இங்கே ஒரு புராதன இந்திப்படம் குறித்து எழுதுவது வியப்பாக இருக்கலாம். ஆனால், இந்தப் படத்துக்கும் லால்பகதூர் சாஸ்திரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
1967-ம் ஆண்டு மனோஜ்குமார் நடித்து, இயக்கிய ‘உப்கார்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் கதைக்கான ஒன்-லைனரைச் சொன்னவர் –சாட்சாத் லால்பகதூர் சாஸ்திரி ஆவார்! மனோஜ்குமாரிடம் அவர் சொன்னது; ‘எனக்கு மிகவும் பிடித்தமான ‘ஜெய் ஜவான்; ஜெய் கிஸான்’ என்ற கோஷத்தின் அடிப்படையில் ஒரு படம் எடுங்களேன்!’. அப்படி உருவானதுதான் ‘உப்கார்’; அப்புறம் உருவானவர்தான் ‘மிஸ்டர் பாரத்’ என்று இன்றளவிலும் நினைவுகூரப்படுகிற, விமர்சகர்களால் ‘Pop-Patriotism’ என்று கலாய்க்கப்படுகிற, தேசபக்திப் படங்களின் முன்னோடி இயக்குனர் மனோஜ்குமார்.
’உப்கார்’ படத்தைத் தொடர்ந்து, ‘பூரப் அவுர் பஸ்சிம்’, ரோட்டி கபடா அவுர் மக்கான்’ என்று வீறுநடைபோட்டு, ‘கலியுக் கி ராமாயண்’ என்று ஒரு படம் எடுக்கப்போய், சிவசேனாவிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் வரைக்கும் மிஸ்டர் பாரத் ஒரு trend-setter என்பதை அவரது மிக மோசமான விரோதிகூட மறுப்பதற்கில்லை.
’உப்கார்’ படத்துக்கு முன்னால் அவர் ஒன்றும் உப்புகாரமில்லாத நடிகராக இருக்கவில்லை. ஹரியாலி அவுர் ராஸ்தா, வோ கௌன் தீ, அனிதா, கும்நாம் என்ற தொடர் சூப்பர்-ஹிட் படங்களில் மனோஜ்குமார்தான் கதாநாயகன். திரைக்கதையில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த மனோஜ்குமாரின் சில படங்களில் அவரது மறைமுக பங்களிப்பு இருந்தே வந்திருக்கிறது. அப்படி அவரது கைவண்ணம் பட்டு மெருகேறிய படங்களில் ஒன்றுதான் ’ஷகீத்’! அந்தப் படத்தில் பகத்சிங் வேடத்தை ஏற்றதோடல்லாமல், திரைக்கதையில் உதவியதோடல்லாமல், கணிசமான பகுதியை அவர்தான் இயக்கியிருந்தார் என்ற குட்டு பின்னாளில் வெளிப்பட்டது.
’ஷகீத்’ வெற்றிப்படமாக அமைந்ததோடு, சில விருதுகளையும் பெறவே, அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அதன் விளைவுதான் ‘உப்கார்’ என்ற சூப்பர்-ஹிட் திரைப்படம்!
கதையென்று பார்த்தால், விவசாயியான அண்ணன், போர் மூண்டதும் ராணுவத்தில் சேர்கிறான்; கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தம்பியோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தேசத்துக்கு துரோகம் செய்கிறான். இதில் தம்பியாக நடிப்பதற்கு முதலில் ஒப்பந்தமானவர், பின்னாளில் இந்தியத் திரையுலகையே உலுக்கிய ராஜேஷ் கன்னா என்பது ஒரு சுவாரசியமான குட்டித்தகவல்! ஹீரோ வாய்ப்பு வரவே, ராஜேஷ் கன்னா விலக, அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த பிரேம் சோப்ரா தம்பியானார். அப்புறம், ஆஷா பாரீக் டாக்டராக வந்து குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்தார். மொத்தத்தில், பிரதமருக்குப் பிடித்தமான கொள்கையோடு, அப்போது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக இருந்த குடும்பக் கட்டுப்பாட்டையும் தொட்டாகி விட்டது.
புத்திசாலி இயக்குனர் மனோஜ்குமார்! இனிமையான பாடல்கள், தேவையான அளவுக்கு தேசபக்தி, அவ்வப்போது கரவொலி கிளப்புகிற வசனங்கள் என்று கச்சிதமாய்க் கலந்து, சற்றே கவர்ச்சியைத் தாளித்துப் பரிமாறுவதில் படுசமர்த்தர்!
இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் மூண்டபோது, லால்பகதூர் சாஸ்திரியின் அறைகூவலை ஏற்று, ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் சேர்ந்த அந்த உணர்ச்சிகரமான வரலாற்று நிகழ்வை மையமாக்கி, விவசாயத்தின் மேன்மையை ‘மேரே தேஷ் கி தர்தி’ என்று மகேந்திரகபூரின் கொம்புத்தேன் குரலில் பாடவைத்து, அன்றைய தலைமுறையினர் கொண்டாடுகிற படமாக்கினார் மனோஜ்குமார்.
கல்யாண்ஜி – ஆன்ந்த்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் தித்தித்தன. குறிப்பிட்டுச் சொல்வதானால்…
1. தீவானோன் ஸே யே மத் பூச்சோ
2. கஸ்மே வாதே பியார் வஃபா
3. மேரே தேஷ் கீ தர்தி
பொதுவாக யார் டியூனையும் எடுத்துக்கொள்ளாத இசைஞானி இளையராஜாவே கூட, ‘கஸ்மே வாதே பியார் வஃபா’ மெட்டை, தனது ‘ நீங்கள் கேட்டவை’ படத்தில் ‘கனவு காணும் வாழ்க்கை யாவும்’ என்று எடுத்தாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூரதர்ஷன் யுகத்தில், ஆகஸ்ட் 15, ஜனவரி 26 என்றால் மனோஜ்குமார் படமோ, பாடல்களோ பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு கட்டாயமே இருந்தது.
ஏதோ மனோஜ்குமார் ஒருவர்தான் சமகாலப் பிரச்சினைகள் குறித்து சினிமா எடுத்த்தாக எண்ண வேண்டாம். பாஸு பட்டாச்சார்ஜி, பிமல் ராய், குரு தத், ராஜ்கபூர் போன்றோரும் கொழுந்து விட்டெரிகிற பிரச்சினைகளின் அடிப்படையில் திரைப்படம் எடுத்தவர்கள்தான். குரு தத் படங்கள் கவிதைகள் போல; எழுதினால் புத்தகம் போடுமளவுக்கு எழுதலாம். ராஜ்கபூர் சற்றே சார்லீ சாப்ளின் தாக்கத்தால் முதல்பாதியில் கொஞ்சம் ஜாலியாக இருந்துவிட்டு சாவகாசமாகப் பிரச்சினைகளை எடுத்துப்போடுவார். மனோஜ்குமார் கிட்டத்தட்ட ஒரு மினி-மீல்ஸ் மாதிரி!
மையப்பிரச்சினை ‘உணவு-உடை-வீடு(ரோட்டி-கபடா அவுர் மக்கான்) என்று எடுத்துக் கொண்டாலும், ஒரேயடியாக பார்வையாளர்களை இறுக்கத்துக்குள் கொண்டு போகாமல், ஜீனத் அமனுக்கு வெங்காயத்தோல் புடவை கட்டி மழையில் நனைய விடுவார்; ஒரு மளிகைக்கடையின் குடோனில் குவித்து வைத்த கோதுமை மாவின் மீது மௌஷ்மி சாட்டர்ஜியை மூன்று பேர் கூட்டு வன்புணர்ச்சி செய்வதுபோலக் காட்சி வைப்பார். ‘அடடா,’ என்று அங்கலாய்ப்பதற்குள் செருப்படி வசனங்களை வைத்து, ‘அந்த சீன் எல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு…இதுதான் நிஜப்படம்,’ என்று பார்வையாளர்களைக் கரகரவென்று இழுத்து வந்து கதைக்குள் அமரவைப்பார். கில்லாடி டைரக்டர்!
அவரது பாணியை பின்னாளில் பலர் பின்பற்றினார்கள். ஆனால், மிஸ்டர் பாரத் என்ற பட்டம் மட்டும் அவரிடமே இன்றுவரை இருக்கிறது.
பின்னாளில் மிருணாள் சென், ஷியாம் பெனகல், புத்த்தேப் தாஸ்குப்தா, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோர் சுவற்றில் முட்டி முட்டி சொல்ல முடியாமல் போன விஷயங்களை, ஒரு பக்கா மசாலாப் படத்தில் அலட்சியமாகச் சொல்லி வெற்றி கண்டவர் என்றால் அது மனோஜ்குமார் மட்டும்தான்!
(இந்திப்படம் பற்றி எழுதியதற்காக யாரும் கொடிபிடிக்க வேண்டாம். நானே ஒரு காலத்தில் ‘இந்தி ஒழிக! இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கோஷம் போட்டவனாக்கும்!)


ஏஞ்சாமி! இங்கே ஜிவாஜி ஜிவாஜின்னு ஒருத்தர் ஏதோ தேசபக்தி ஊட்டுகிற பலபடங்களில் நடித்தாராமே அதெல்லாம் எப்படியாம்?  ஞாபகத்துக்கு வரலையான்னு  சேட்டைக்காரனிடமே சேட்டை செய்ய முடியாதே!

இன்று லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாளும் கூட! இது ஒரு சாம்பிள் மட்டுமே! சாஸ்திரி என்று இந்தப்பக்கங்களில் தேடிப் பாருங்கள், இன்னும் பல பதிவுகள் கிடைக்கும்!

மீண்டும் சந்திப்போம்.   
       

சண்டேன்னா மூணு! நூறாவது நாள்! 1965! மம்தா பானெர்ஜி!

ரேந்திர மோடி வெர்ஷன் 2.0 வெற்றிகரமாகத் தனது 100வது நாளை, சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளோடு கடந்து, மேலும் தன்னுடைய செயல்திறனைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்து கொண்டே வருவதைக் குறித்த ஒரு விவாதம்! இங்கே புதிய தலைமுறை சேனல் கொஞ்சம் விசித்திரமாக மோடி எதிர்ப்பு ஊடகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அதற்கு முன் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேள்வியெழுப்பி, இருப்பதில் இதுவே கொஞ்சம் நல்ல கொள்ளியாக, சேதம் குறைவு என்று தெரிகிற  ஒரே ஒரு அடிப்படையில் மட்டும்!  



திர்க்கட்சிகளின் குரலாக ஒலிப்பதில்,பத்திரிகையாளர் S P லட்சுமணன் போன்றவர்களுடைய பங்கு அசாத்தியமானது. கட்சிப்  பேச்சாளர்களைப் போல அல்லாமல், கொஞ்சம் செய்திகளின் மீதான விமரிசனங்கள் வாயிலாகவே எதிர்ப்பைச் சொல்வது, கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என்பதுதான் ஒரே காரணமா? கொஞ்சம் யோசித்துத்தான்  பதில் சொல்லுங்களேன்! வீடியோ 22 நிமிடம்.


ந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கிடையில் பல்வேறு கால கட்டங்களில் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ போர் நடந்ததுண்டு. காங்கிரஸ்காரனைக் கேட்டால் 1971 போரைப் பற்றி மட்டுமே பேசுவான்! 1965 இந்தியா பாகிஸ்தான் போரைப் பற்றி இங்கே நினைப்பதற்கு ஆளே இல்லையா என்ற குறையை, சேகர் குப்தா இந்த 33 நிமிட வீடியோவில் கொஞ்சம் தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால் அதுவும் கூட பாகிஸ்தானியர்கள் பார்வையில் இருந்து என்பது நெருடத் தான் செய்கிறது. இருந்தாலும்  கொஞ்சம் பார்க்கலாமே!

கஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறது. குறைந்த நேரத்திற்குள்ளாகவே, இந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராக, திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது.

நேருவின் மறைவுக்குப் பின்னால், லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான். இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது. புதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார். லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோது, மேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாக, அமெரிக்க டைம் பத்திரிக்கை, அக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்டவுடன் அட்டையைத் துப்புவது போல, இந்தியா என்று சொன்னவுடனேயே, மகாராஜாக்கள், பாம்பாட்டிகள், எக்கச் சக்கமாகக் குழந்தைகள், ஏகப்பட்ட பசுமாடுகள், தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகப்போகிறது என்பது எல்லோருக்குமே தெரிகிறது. காந்தியைப் பற்றி, அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூட, இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், மகாராஜாக்கள், பிச்சைக்காரர்கள், கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம், நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்பு, அப்புறம், 1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள் (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ் ஜார்னல் கட்டுரை ஒன்று! இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை! கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றியகண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.இது நேருவை மட்டுமே முழுக்க முழுக்கக் குறை சொல்வதற்காக எழுதிய வரிகள் இல்லை. இப்படி ஒரு இந்தியக் கனவு! இந்தியப்பெருமிதமும் கூட! என்று இந்தப் பக்கங்களில் எழுதிப் பத்தாண்டுகள் நிறையப்போகிறது.


சந்திராயன் 2 பற்றி மம்தா பானெர்ஜி திருவாய் மலர்ந்து சில விஷயங்களை உளறியிருக்கிறார். அதுவும் போக இதை எதிர்த்து வருகிற 12 அன்று கண்டன   முதல்  வீடியோவில் SP லட்சுமணன் ஆகட்டும். மேலே மம்தா பானெர்ஜி உளறுவதாகட்டும், அவர்களுடைய அரசியல் இன்ன ரகம் என்று அடையாளம் காட்டுகிறது. பொதுஜனங்களுடைய எண்ணவோட்டத்துக்கு எதிராக இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டுதான் பேசுகிறார்களா? நரேந்திர மோடி மீதிருக்கிற பயம், இப்படிக்கு காழ்ப்புணர்வுடன் அவர்களை இப்படிப் பேச வைக்கிறதா  West Bengal BJP president Dilip Ghosh on Saturday criticised Chief Minister Mamata Banerjee for attacking the saffron party over Chandrayaan-2 programme, saying she is fond of finding fault with everything the country is proud of.     

கொஞ்சம் யோசித்துப்பார்த்து, ஒரு பதில் சொன்னால்தான் என்ன?

மீண்டும் சந்திப்போம்.  
        

கருவாடே மீன் ஆனாலும்! கறந்தபால் மடிபுகுந்தாலும்!

தி.மு.கழகத் தலீவர் என்று ஆனபின்னாலும் ஸ்டாலின் செயல்பாடுகளில் வேகமுமில்லை, விவேகமுமில்லை என்பதுதான் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறதோ?


ஏற்கெனெவே கமல்ஹாசன் நடத்தி முடித்துவிட்ட கிராமசபை கூட்டங்களை, இப்போது நகலெடுத்து நடத்திக் கொண்டிருப்பது, என்ன சாதித்திருக்கிறது?


தலையால தண்ணி குடிச்சாலும்..
தட்டானுக்கு சட்டை போட்டாலும்..
அத்தைக்கு மீசை மொளச்சாலும்..
அயிரை மீன் சைவமானாலும்...
வாழைமரம் பிள்ளை பெற்றாலும்..
கள்ளிப்பால் அமிர்தமானாலும்..
கருவாடே மீன் ஆனாலும்...
காக்கை தேசியப் பறவை ஆனாலும்...
கறந்த பால் மார் புகுந்தாலும்..
தேரிழுக்காம திருவிழா முடிந்தாலும்...
செயலு என்றைக்கும் முதலு ஆக முடியாது..   
என்று பாட்டே எழுதிவிட்டார்! அதற்கேற்ற மாதிரியே 


என்று இசுடாலின் தினகரனைச் சீண்டிவிட தினகரன் பதிலுக்கு நக்கலும் நையாண்டியுமாக பதில் சொல்லி இருக்கிறார்.




29/05/2011 தேதியிட்ட ஜூனியர் விகடனில் இருந்து....கழுகார் பதில்கள்! கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது.  ஜூவிக்கு நன்றியுடன்

இனிதி.மு.க-வில் ஸ்டாலின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா

முதலில்தி.மு.க-வின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா என்று பாருங்கள். அதன் பிறகுதான் ஸ்டாலின்!

இப்போதும் அப்பாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து​கொள்ளும் சங்கோஜப் பிள்ளையாகவே ஸ்டாலின் இருந்தால்... அவர் எப்போது தான் தளபதி ஆவதுஎந்தப் பிரச்னையிலும் தன் சொந்தக் கருத்தை ஸ்டாலின் சொல்லியது இல்லை. அறிமுகம் இருப்பவர் களை பார்த்துக்கூட சிரிக்கத் தயங்குகிறார். இயக்கப் பொறுப்பாளர்களை உட்காரவைத்து இது வரை எந்த யோசனையும் கேட்டதும் இல்லை. மாஜி மந்திரிகளுக்குமாவட்டச் செயலாளர்களுக்குயார் எல்லாம் எதிர் கோஷ்டியோ... அவர்களைத் தன்னுடைய எதிர் கோஷ்டியாக நினைக்கிறார்.

இத்தனை மனோபாவங்களையும் மாற்றிக்கொண்டால்​தான்ஸ்டாலின் கை ஓங்கும். இல்லாவிட்டால்...  

இப்படிச் சொல்லியிருந்தது இன்றைக்கும் மாறவில்லை என்பது கழகத்தின் சோகம்! 

*******
கழகங்களைப் பற்றிப்பேசி வீண்பொழுதுபோக்கவோ வலையெழுத்தில் வந்தது? காக்கைப்பொன்னையே மினுமினுப்பாகக் காட்டியே அசல் பொன்னை மறைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம், கொதிப்பு அன்றி வேறு இல்லை.

இன்று லால்பகதூர் சாஸ்திரி நினைவுதினம். 


காங்கிரஸ் கட்சியின் வரலாறேஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், காந்தி சிறையில் இருக்கும்போதே இவர் தன்போக்கிற்குப் பதவியைத் தேடி ஓடியதும் இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரேசுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.





நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட ஒரு தலைவன் தேவை!



இன்று காந்தி ஜெயந்தி! மகாத்மா காந்தியின்  141 ஆவது பிறந்த நாள்! அரசு விடுமுறை, பேரளவுக்கு தில்லியிலும் வேறு சில இடங்களிலும் தலைவர்கள் காந்தி படத்துக்கு மாலை சூட்டுவார்கள். தூர் தர்ஷனில் சில வயதான பெரியவர்கள் ராட்டையில் நூல் நூற்பதைக் காட்டுவார்கள்,தேசத்தந்தை என்றழைக்கப்படுகிறவருக்கு அஞ்சலி செய்கிற கடமை முடிந்தது!

இந்த நாள் காந்தி பிறந்த நாள் மட்டுமில்லை, அவருக்கு முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின் பிறகு பிறந்த இன்னொரு மகத்தான மனிதரின் பிறந்த நாளும் கூட!

இந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப் பட்டிருப்பதைக் காண முடியும்

பாகிஸ்தான்
வங்காள தேசம்பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர்ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப் படும் பர்மாஇலங்கை,நேபாளம்இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப் போன அரசு அமைப்புக்கள்அல்லது ரவுடிஅரசுகளாக  (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும். ரவுடிகள் சுற்றியிருந்தால் நிம்மதி ஏது? முன்னேற்றம் தானேது?

இயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில்
திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளைபாகிஸ்தானும்,சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பதைசெய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்லிவிட முடியும். இந்த விரோதத்திற்கு வெளிப்படையான காரணங்களை விட இந்தியா வளர்வதும் வலிமையாக இருப்பதும் தங்களுக்கு ஆபத்து என்ற ஒரே காரணம் தான் முக்கியமானது.

ஆனால், ஒரு சிறுவனுக்குத் தெரிகிற அளவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இவை புரிவதில்லை. அவர்களுக்குத் தங்கள் சொந்தக் கல்லாவைப் பெருக்கிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.
வெளியில் இருந்து வருகிற இந்த விரோதிகளை விட, உள்ளிருந்தே அரிக்கும் வியாதிகளாக இங்கே உள்ள அரசியல் முறை, ஊழல் நிர்வாகம் இருக்கிறது. நேரு காலத்தில் முந்த்ரா ஊழல் என்று தொடங்கி இன்றைக்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் எழுபதாயிரம் கோடி செலவு செய்வதில் பெரும் ஊழல் என்ற அளவுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.



அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்குக் காசுபார்த்துக் கொடுக்கும் சாக்கில், தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்ளவே நேரம் போதவில்லை. இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும்! தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடிமகன் இருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது.

அற்பப்புழு மீதுள்ள ஆசையால் தூண்டிலில் சிக்கிக் கொள்கிற மீன் மாதிரி, இலவசங்களைக் காட்டி ஏமாற்றுகிற தலைவர்களை
இந்தியக் குடிமகன்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அந்த மோசடிக் காரர்களை யாரோ ஒரு ஹீரோ அல்லது வேறொரு தலைவர் வந்து தான் தட்டிக் கேட்கவேண்டும், தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரி, பொழுது தவறாமல் மானாட, மயிலாட, சினிமாக் காரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு மிச்சமிருப்பதையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அறுபது வருடங்களுக்கு முன்னால்
விடுதலை பெற்ற இந்த நாடுகள்பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப் போயின என்பதையும்ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான்எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும்

பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோதுஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டு
இருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித் தனமாக வெளியேறியது என்பதையும்

இரண்டு உலகப் போர்கள்
,அதன் பின்னால்ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில்புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்த கதையையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால்நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.

எதிரிகள் என்று சொல்லும் போது
வெளியே இருக்கும் எதிரிகள்நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்

இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல்பங்கு,பயிற்சிபண உதவி இப்படி நிறைய இருக்கிறது
 

ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம்
பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற முகமாகத் தான்சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினேன்.

மகாத்மா காந்தியைஇங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரிஆதரித்தாலும் சரி, காந்திஜி தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்

காந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேருஅடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும்ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும்அவருடைய சில பலவீனங்கள்தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.இன்னமும் சேதங்கள் தொடர்கின்றன.

இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை

நேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமை
பிறரது எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்,ஆட்சியிலும் ஏற்படுத்தியதுகாந்திஜியின் மீது இருந்த அபிமானத்தால் நேருவோடு முரண் பட்டவர்கள், காந்திஜி மனம் புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப் போன தருணங்கள்சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன. 

நல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்சம்சா அடித்தேஆளுபவரைஅதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மி டிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள் இன்றைக்குக் காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறவர்களில் பெரும்பகுதி அல்லது அத்தனை பேருமே நேரு பரம்பரைக்கு மட்டுமே மொத்த விசுவாசிகளாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, அப்படிக் காட்டிக் கொள்வதால் பதவி ஏதாவது கிடைக்குமா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தான். இவர்களுக்கு தேசீயம், நாட்டுப் பற்று என்பதும்,மதச் சார்பின்மை, ஜன நாயக சோஷலிசம் (இப்படி ஒன்றைக் காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருந்தது இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவே தெரியாது!) இவையெல்லாம் வெற்றுக் கோஷங்கள் மட்டுமே.

இன்றைய காங்கிரஸ் தான் இந்த தேசத்தின் முதல் எதிரி, உள்ளிருந்தே கெடுக்கும் எதிரி என்பதை எமெர்ஜென்சி காலம் தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நிருபித்துக் கொண்டே வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் வரலாறேஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், காந்தி சிறையில் இருக்கும்போதே இவர் தன்போக்கிற்குப் பதவியைத் தேடி ஓடியதும் இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரேசுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.

நேருவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்துஇன்று வரை தீர்வு காணப் படாமல்பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறிக் கொண்டு வரும் பிரச்சினைகள்இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவுஅலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்ற அக்டோபரில் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.


காந்தி பிறந்த அதே நாளில் தான்முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம்  அக்டோபர் இரண்டாம் தேதிலால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார்நேருவின் மறைவுக்குப் பின்னால்அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூடநேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்துஇந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடுவருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்

ஜெய் ஜவான்ஜெய் கிசான்! என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது

நல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே!

நேருவைப்போல மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லைஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரிஅரசியலில் கூடநேருவுக்குக் கிட்டத்தட்டமுடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோலசாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் ஆக இருந்ததில்லைஆனாலும்நேர்மையான செயல்பாடுகள்திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால்விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப் பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

இன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர,லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பைஅவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய் விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.






ஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறதுகுறைந்த நேரத்திற்குள்ளாகவேஇந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராகதிட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது

நேருவின் மறைவுக்குப் பின்னால்லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான்இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்ததுபுதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார்லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோதுமேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாகஅமெரிக்க டைம் பத்திரிக்கைஅக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட டன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன டனேயேமகா ராஜாக்கள்பாம்பாட்டிகள்எக்கச் சக்கமாகக் குழந்தைகள்ஏகப்பட்ட பசு மாடுகள்தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.

காந்தியைப் பற்றி
அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூடஇந்தியா என்றால் பாம்பாட்டிகள்சாமியார்கள்மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள்கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம்நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.

போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்புஅதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள்  (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம். 

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும்இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ்  ஜார்னல் கட்டுரை ஒன்று!



கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.


உள்ளது உள்ளபடிஅறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமேசாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும்! இன்றைக்கு சோனியாகிப் போன அல்லது சோனியா குடும்பக் கட்சி என்றாகிப் போன காங்கிரசில் இப்படிப்பட்ட மகத்தான மனிதர்களும் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டாமா!

தொடர்ந்து பேசுவோம்!

**சென்ற வருடம் அக்டோபரில் எழுதியதன் மீள்பதிவு இது.  மிகச் சமீப காலத்திய வரலாற்றையே எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எதுவுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதற்காக, கொஞ்சம் தேவையான திருத்தங்களுடன்!