இட்லி வடை பொங்கல்! #85 தினமலர் செய்தியும் தொடரும் அதிர்வுகளும்!

இன்றைய தினமலர் நாளிதழ் முகப்புச் செய்தியாக வந்த ஒரு விஷயம் தமிழக அரசியல்களத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிற அளவுக்கு வீரியமாகக் கிளம்பி இருக்கிறது.


தமிழ்நாட்டை நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் ஜெய் ஹிந்த் சர்ச்சைப்புகழ் ஈஸ்வரன் கூட மாநிலத்தை மூன்றாகப் பிரிப்பது நல்லதுதான் என்று முன்பு பேசிய வீடியோ உலா வந்துகொண்டிருக்கிறது. 2015 ஆகஸ்ட் 17 தேதியிட்ட தினமலர் நாளிதழில் ஈஸ்வரன் அப்படிப் பேசிய  செய்தி வெளியாகி இருக்கிறது. 


இந்த 21 நிமிட வீடியோவில் கோலாகல ஸ்ரீனிவாஸ் இந்த விஷயத்தை விரிவாக விளக்கியிருக்கிறார். என்னமோ ஸ்டாலின் அரசுக்கு விளையாட்டு காட்டத்தான் மத்திய அரசு தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்குகிறது என்பதெல்லாம் அதீத அலட்டல்.


ஊப்பீஸ் எதற்காகக் கதறுகிறார்கள் என்பது எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அரசியல் விமரிசகர் ஸ்ரீராம் சேஷாத்ரி  முகநூலில் இப்படி எழுதுகிறார்:

திரு. முருகன் பதவி ஏற்கும்போது, அவர் biodata வில் கொங்குநாடு என்று இருந்தது. இன்று தினமலர் நாளிதழில் கொங்குநாடு பற்றிய headline வந்துள்ளது. பலர் என்னிடம் உங்கள் அபிப்ராயம் என்ன, இது நடக்குமா, அப்படி நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்று கேட்டனர். என் புரிதலை பகிர்கிறேன்.

முதலில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது என்பது பல காலமாக எழும் கோரிக்கை, அதுவும் பாட்டாளி மக்கள் கட்சி வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை வெறும் அரசியல் கோரிக்கை மட்டுமே. எப்படியாவது ஒரு மாநிலம் தங்கள் ஆட்சியின் கீழ் வராதா என்ற எண்ணம் மட்டுமே.

தென் தமிழ்நாடு, பொருளாதார ரீதியில் கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு வளரவில்லை, முக்கியமாக தொழில்சாலைகள், உள்கட்டுக்குமானம் போன்றவை கொங்கு மண்டலம், வட தமிழ்நாடு அளவுக்கு தென் தமிழ்நாட்டில் இல்லை. திருச்சிக்கு தெற்கே கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களில் இருந்த பட்டாசு மற்றும் பிரிண்டிங் தொழில் நசிந்து பல வருடங்கள் ஆகிறது, அதனை விரிவாக்க முயற்சி எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை. தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டத்தில் இருந்து தொழில்சாலைகளும் ஒன்று மூடப்பட்டன (sterlite ஒரு உதாரணம்) அல்லது புது தொழில்சாலை அல்லது சரக்கு துறைமுகம் வருவதை கிறிஸ்துவ மிஷனரிகள் தடுத்து வருகின்றன. 

இப்படி இருக்கையில், திமுக இந்திய இறையாண்மையை கேள்விக்குள்ளாகும் முயற்சியில் ஒன்றிய அரசு, ஜெய் ஹிந்து போன்ற சட்டசபை நிகழ்வுகளில், பிரிவினையை தூண்டும் வகையில் பேசி வருகின்றன.

பாஜக அவர்களுக்கு வலுவான கொங்கு மண்டலத்தை மேலும்  ஸ்திரப்படுத்திக்கொள்ளும் முயற்சியாக, முருகன் அவர்களை மத்திய மந்திரியாகி, அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு பாஜகவின் தலைவராக்கி, மேலும் வானதி ஸ்ரீனிவாசன் அவர்களை முக்கியப்படுத்தி வருகிறது.இப்போது கொங்குநாடு என்ற முழக்கம் அரசியலாக இருந்தாலும், இந்த விதையை விதைப்பது கண்டிப்பாக பல விளைவுகளை ஏற்படுத்தும்

1. தமிழ்நாட்டில் நிர்வாகம் தொடர்பாக பல மாற்றங்கள் ஏற்படும், இப்படி ஒரு பகுதி அதுவும் 40% மேல் வருவாய் கொடுக்கும் பகுதி பிரிந்தால், தமிழ்நாடு, முன்னேற தென் தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்து முனையவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

2. அரசியல் ரீதியாக கொங்கு மண்டலத்தில் திமுக வலுவாக இல்லாததனால், அங்கு அதிமுக பாஜக நேரடியாக அரசியல் செல்வாக்கு உள்ள கட்சியாக மாறும்

3. பிற மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டில், திமுக அதிமுக மட்டுமே வலுவான நிலை ஏற்படும்.

4. நிர்வாக ரீதியாக, சிறிய மாநிலங்கள் என்ற அடிப்படையில் சுலபமாக இருக்கும்

இந்த பிரிவு அரசியல் சட்டம் சார்ந்து, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால் உடனே நிகழுமா என்றால் மத்திய அரசாங்கம் முனைதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும்.

இப்போது நமக்கு தெரியவேண்டிய ஒன்று, பாஜக இதனை திமுகவின் ஒன்றிய அரசின் கோஷத்துக்கு எதிர்வினையாக எடுத்துள்ளதா அல்லது நிஜமாகவே முயல்கிறதா என்பதுதான்.ஆனால் திமுக மத்திய அரசை சிறுமை படுத்துவதாக எண்ணி, ஒன்றிய அரசு என்று கிளப்பிவிட்டு, இந்த மாநில சீரமைப்புக்கு வழி வகுத்து விட்டதா என்றும் யோசிக்கவைத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே திமுகவினர் ஒன்றிய அரசு என்பதை சொல்ல முயலவில்லை கவனிக்கத்தக்கது 

ஒரு தெளிவான புரிதல் என்றே எனக்குப்படுகிறது. எது எப்படியானாலும், திமுகவின் வாய்ச்சவடாலில் கூட ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதில் மகிழ்ச்சி.

மீண்டும் சந்திப்போம்.

அண்ணாமலை! இளைய பாரதத்தினாய் வா வா வா!

1960களிலிருந்தே தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து விலக ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடமுடியுமா என்ன? அதன் விளைவு, காங்கிரஸ் கட்சியே கூட தேசிய அந்தஸ்தையும் தேசியப்பார்வையும் இழந்து சில மாநிலக்கட்சிகளின் தயவில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. பார்த்தீனியம் களைச்செடி மாதிரி வளர்ந்திருக்கிற திராவிட இயக்கங்களுக்கு ஒரு நல்ல மாற்றாக வளரவேண்டிய பொறுப்பும், வாய்ப்பும்  பாரதீய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது. இதுநாள் வரை ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் இணக்கமாகப் போகிற ஒன்றை மட்டுமே செய்துவந்த பிஜேபியின் மாநில நிர்வாகிகள் திராவிடப்புரட்டை எதிர்த்து அரசியல் செய்வதில் எந்த விதமான அக்கறையையும் காட்டவில்லை என்பது ஊரறிந்த ரகசியம். இந்த நிலையில் பிஜேபியின் தமிழ் மாநிலத்தலைவராக K அண்ணாமலை ex IPS  நேற்று கட்சித்தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


வீடியோ 39 வினாடிகள். அண்ணாமலை ஒரு துடிப்பான இளைஞர். தேசியப் பார்வை கொண்ட ஆளுமை. ஆனால் இங்கே தமிழக பிஜேபியைத் தட்டி எழுப்புவது, திராவிடப் பாசம் மிகுந்தவர்களைக் களையெடுப்பது  கடினமான சவாலாக இருக்கும். அண்ணாமலையை சமாளிப்பது இப்போது ஆளும் திமுகவுக்குமே பெரும் சவாலாக இருப்பார், எப்படி?  கரூர் பேருந்து நிலையம் அருகே பிஜேபியினர் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்ததில் கடுப்பான மாவட்ட ஆட்சியர் அனைவரையும் கைது செய்யும்படி உத்தரவு போட்டுப்போய்விட் டார். செந்தில் பாலாஜிக்கு ஒருநியாயம் பிஜேபிக்கு ஒரு நியாயமா என்று பிஜேபியினர் கேள்விக்குப்பதில் சொல்லவும் முடியாமல் கைது செய்யவும் முடியாமல் போலீசார் தடுமாறியதில்  வெளிப்பட்டது. அண்ணாமலை தலைவரான முதல் நாளே கலெக்டர், போலீசை பகைத்துக் கொண்ட பாஜகவினர்! என்ற செய்தியின் பின்னால் அண்ணாமலையின் தலைமைமீது மிகவும் அதீத நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் மற்றும் கட்சிக் காரர்கள் இருக்கிறார்கள் என்பதும் இருக்கிறது. (கரூரில் பிஜேபியினர் கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.) 


வீடியோ 41 நிமிடம். கோலாகல ஸ்ரீனிவாஸ் கொஞ்சம் விரிவாக அண்ணாமலை பிஜேபியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி, விடையைத் தேடவும் முயற்சித்து இருக்கிறார். திமுக சிலவருடங்களாகவே  பிஜேபியை எதிர்த்து அரசியல் என்பதில் தெளிவாகச் செயல்பட்டு வருகிறது. அதேமாதிரி பிஜேபியும் தனது அரசியல் எதிரி திமுகதான் என்று ஒரு உறுதியான நிலை எடுக்குமா?

அண்ணாமலைக்கு முன்னால் இருக்கும் ஆகப்பெரிய சவால் இது தான்! சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ள இறைவன் துணையிருப்பானாக. அண்ணாமலைக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளுடன்! 

மீண்டும் சந்திப்போம்.

சும்மா இருத்தலே சுகம்! சீனக்கம்யூனிஸ்டுகளை பயமுறுத்தும் Lying Flat இளைய தலைமுறை!

இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் அமித் சதுர்வேதி எழுதியிருக்கிற செய்தித்துணுக்கு ஒருமாதப் பழசுதான் என்றாலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாட்டத் தம்பட்டம், பெருமிதத்தை ப்பூவென்று ஊதித்தள்ளுகிற மாதிரியே இருப்பதால் இங்கே சுருக்கமாக. இந்த 8 நிமிட வீடியோவைப் பார்த்து விடுங்கள். 


கடந்த ஏப்ரலில் ஒரு தொழிற்சாலையில் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு சும்மா இருத்தலே சுகம் என்று  blog எழுதி ஆரம்பித்து வைத்தது 31 வயதே ஆன லுவா ஹுவாஜோங் என்கிற இளைஞன். விரைவிலேயே  சீன அரசின் மீது, தங்களுடைய எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்களை அணிதிரளச் செய்கிற வாசகமாக tangping Lying Flat ஆகிப்போனது. சீன அரசு உஷாராகி இந்த வார்த்தைகளுடன் கூடிய பகிர்வுகளை, ஆதரவுக்குழுக்களை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டது.

ஆனாலும் புதிய அடிமைகள் கிடைப்பது வருகிற காலங்களில் குதிரைக்கொம்பாகலாம் என்கிற அச்சம் சீன அரசுக்குப் புதிய தலைவலியாக உருவெடுத்து வருகிறதோ?

மீண்டும் சந்திப்போம்.           

மண்டேன்னா ஒண்ணு! விவஸ்தையே இல்லாத இடம் #அரசியல்

பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மனசாட்சியோ விவஸ்தையோ இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். சற்றுமுன் பேசியதைக்கூட அப்படியே மாற்றிப்பேசுவதும் கூடத் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு ரொம்பவுமே  கைவந்த கலைதான்! அதற்காக இப்படியா? பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிசும் சிவசேனாவின் சஞ்சய் ரவத்தும் சந்தித்துக் கொண்ட போது கண்கள் பனித்தன வசனம் மறுபடி உயிர் பெற்றதாம்! இதயம் இனித்ததா என்பது இன்னமும் தெரியாத நிலையில் சிவசேனா எங்கள் எதிரி அல்ல; நண்பர்கள்தான் என்று தேவேந்திர ஃபட்னவிஸ் சொல்லி இருப்பதை வைத்து கூட்டணிக்கணக்குகள் மாறுகிறதா என்று இந்து தமிழ்திசை கூட செய்தி கதைக்கிறது.


அன்புமணி ராமதாசுடைய இந்தக்கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இந்தப்படத்தைப் போட்டு பிபிசி தளம் கேள்வி கேட்டிருக்கிறது.லாபம் இல்லாத எந்தவொரு அசைவு , முடிவும் எடுக்காதவர்கள் அவர்கள் என்று தெரிந்ததனால் பாமகவை, அதன் தலைவர்களை அறிந்த எவருமே இதுபோல சிறுபிள்ளைத் தனமான கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். 


ஸ்டேன்லி ராஜன் எதிர்பார்ப்பதை எல்லாம் எங்கூரு நிதியமைச்சர் செய்துவிடுவாரா என்ன? நிதிநிலை அறிக்கை தயாரிப்பதைவிட அவரை விமரிசித்த நபர்களைக் காவல்துறையினரை விட்டுக் கைது செய்வதில் தான் அதிகம் முனைப்பு காட்டுகிறார் என்று செய்திகள் வருகின்றன. தரமற்ற விமரிசனம் என்றால் அதற்குத்தீர்வு காண சட்டபூர்வமாக நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் பழைய ஜமீன்தார்கள் மாதிரியே செயல்பட மந்திரி விரும்புகிற மாதிரி இருக்கிறது என்பது பெரும் சோகம். மதுரைக்கு வந்த சோதனையும் கூட!

 

பதிவின் தலைப்பில் சொன்னமாதிரி எல்லா அரசியல் வாதிகளும் விவஸ்தை இல்லாதவர்கள் இல்லை. ஒரு சில அரசியல்வாதிகள் மிகத்தெளிவான பார்வையுடன் தங்கள் கருத்துக்களை முன்னுக்குப்பின் முரண் இன்றி வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம் ::திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !

திரைப்படப் படைப்பாளிகளே ! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை !! சாதி, மத பேதத்தை உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் வெளிவர 2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்  உந்துதலாக இருக்கும்!!

நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவரப்படவுள்ள 1952-ம் ஆண்டு திரைப்படத்துறைத் திருத்தச்சட்டத்திற்கு சிலர் தேவையில்லாமல் தங்களுடைய எதிர்க் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவே கருதுகிறேன். 'கலை கலைக்காக' என்பதும், கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதும் பலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால்,அரசு கட்டுப்பாடுகள் இருக்காது அல்லது இருக்கக்கூடாது என்பது எதார்த்தமாகுமா?

ஒரு தெளிவான அரசியல் சாசன கட்டமைப்பு உள்ள  எந்த ஒரு தேசத்திலும் சட்டங்களும், விதிகளும் இல்லாமல் அரசு செயல்பட இயலுமா? ஒரு தேசத்தின் எல்லைக்குள் வாழும் அறிவுஜீவிகள் அவர்களின் அடிப்படை உரிமைகள் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பதைத் தெரிந்திருக்க வேண்டாமா? 

உரிமை பற்றி மட்டும் பேசுகிறவர்கள், கடமை மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேச மறுப்பது ஏன்?

ஒவ்வொரு தனி மனிதனும் அல்லது சமூக குழுக்களும் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் தாங்களாகவே உணர்ந்து  செயலாற்றக் கூடிய ஒரு காலகட்டம் உருவாகும் பட்சத்தில் திருட்டு இருக்காது; திருட்டைப் பிடிக்க போலீசும் தேவைப்படாது. கொலை; கொள்ளை இருக்காது, சாதிய; மத வன்மங்கள் இருக்காது. சுரண்டுவோர்; சுரண்டப்படுவோர் என்ற பேதமைகள் இருக்காது.  அப்போது சட்டங்களும் தேவைப்படாது; சட்டங்களை அமலாக்கக் கோடிக் கணக்கில் செலவழித்து அரசின் நிர்வாகத் துறையையும் உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது. அக்கால கட்டங்களில் "அரசு என்ற நிறுவனம் உதிர்ந்துபோகும்" என்று பொதுவுடைமை தளகர்த்தர்களான காரல் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தங்களது கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதுவே "இராம ராஜ்ஜியம்"  என்று கூறுகிறோம். இப்போது என்ன அப்படிப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார பேதமற்ற சமூகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?  

கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களும்; தொழிற்நுட்ப பிரிவினரும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அல்லும் பகலும் அயராது உழைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, சிலர் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, ஒரு சில மணித்துளிகளில் நவீன விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த திரைப்படத்தையும்  பதிவுசெய்து அத்திரைப்படங்கள் திரையில் திரையிடப்படுவதற்கு முன்பாகவே இணையத்திலும், திருட்டு 'வி சி டி'க்களாகவும் வெளியிட்டு அத்திரைப்படக் குழுவினரின் அனைத்து முயற்சிகளையும், உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்களே, இதைத்தடுக்க ஒரு வலுவான திரைத்துறை திருத்தச் சட்டம் கொண்டு வருகின்ற போது, அதை ஏன் திரைப்படத்துறையினர் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.?

இன்றைய நவ நாகரீக கால கட்டங்களில் திரைப் படங்களால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக எந்தெந்த திரைப்படங்களை எந்தெந்த வயதினர் பார்க்க வேண்டும் என வரையறை செய்யப்படுவதைக் கண்டு ஏன் திரைப்படத்துறையினர் அஞ்ச வேண்டும்? 'பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது' என்ற பொறுப்புணர்வு திரைப்படத் துறையினருக்கு ஏன் வர மறுக்கிறது?

இப்போது, தணிக்கை சான்றிதழை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரே ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே போதுமானது என திருத்தம் கொண்டு வருவதில் இவர்களுக்கு என்ன சங்கடம்? மத்திய திரைப்பட சான்றிதழ் ஆணையத்தால் (Central Board Of Film Certification) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பு, ஒரு திரைப்படத்திற்கு பல்வேறு முகாம்களிலிருந்து ஆட்சேபனை எழும் பட்சத்தில், மறு தணிக்கைக்கு உத்தரவிட  மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 2021 திரைப்படத்துறை திருத்தச் சரத்தை  எதிர்த்து "கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடுவது படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்தைச் சிதைத்துவிடும்" என்று எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். 1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான  திரைப்படங்கள் அச்சட்டத்தின்படியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளன.

தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா படங்களுக்கும் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் கடந்த காலங்களில் தான் Censor Board மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அண்மை காலத்தில் Censor Board என்பதை Central Board Of Film Certification என்று பல படிகள் குறைத்து சான்றிதழ் வழங்கும் ஆணையமாக மாற்றப் பட்ட பின்னரே, பொறுப்பற்ற முறையில் புற்றீசல் போல பல திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஒரு திரைப்படத்திற்கு Censor Board அல்லது Central Board Of Film Certification அனுமதி அளித்த பிறகு அரசால் கூட தலையிட முடியாத சூழல் இருக்கின்ற காரணத்தினால் தான் ஆட்சேபனைக்குரிய திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்னால் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தேறுகின்றன.  தவறான திரைப்படங்களால் பாதிக்கப்படுவோருக்கு இன்று வரையிலும் நீதிமன்றம் செல்வது மட்டுமே தீர்வாக இருக்கிறது. 

'சண்டியர்' படப்பெயர் மாற்றத்திற்கு நாம் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது; 'கொம்பன்'  பட வன்முறை காட்சிகளை நீக்க நீதிமன்ற போராட்டம் நடத்தினோம். அண்மைக்காலமாக திரைப்படங்களால் இந்தியா முழுமைக்கும் சமூகத்தில் பல்வேறு சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே,அதை எதிர் கொள்ளவே இப்பொழுது மறு தணிக்கைக்கு உத்தரவிடும் அதிகாரத்தைச் சட்டமாக்கத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.இது போன்ற ஒரு மறுதணிக்கை செய்ய சட்டத்தில் இடமிருக்க வேண்டும் என்பதைத்தான் 'புதிய தமிழகம் கட்சி' தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாம் மட்டுமல்ல; திரைப்படப் பெயர், கதை, வசனங்கள், காட்சிகளால் பாதிக்கப்பட்டு நீதிமன்றமே தீர்வு என்று இருந்த பலரும் இந்த மறுதணிக்கை சட்டம் திரைப்படத் துறையினரை திருத்துவதற்கான ஒரு திருத்தச் சட்டமாகவே நிச்சயம் வரவேற்பார்கள்.

கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்போம்; அதைத் தணிக்கைக்கு உட்படுத்த மாட்டோம் என்று கூற முடியுமா?  Censor Board-க்கு கட்டுப்பட்டுத் தானே திரைத்துறை தனது 75 ஆண்டுகால பயணத்தைக் கடந்து வந்துள்ளது. திரைப்படத் துறையினர் கூறுவதைப்போல கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த திருத்தச்  சட்டமும் இப்போது கொண்டு வரப்படவில்லை. மத்திய திரைப்பட தணிக்கை துறை ஒரு திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்கிய பின்னர் இந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமை, பொது அமைதி ஆகியன கருதி மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்பது இப்போது புதிதாகச் சேர்க்கப்பட உள்ள சட்டத்திருத்தம். இதைக் கண்டு ஏன் திரைத்துறையினர் பயப்பட வேண்டும்.? 

"மடியில் கனம் இருந்தால்தானே, வழியில் பயப்பட வேண்டும்"  என்பதற்கிணங்க நேர்மை, தூய்மை அடிப்படையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் இச்சட்டம் குறித்து அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே?

'பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை' இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாக இருப்பினும் - ‘With Reasonable Restrictions’ அதாவது தேவையான கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே.  அதேபோல, 'There Is No Such thing as Absolute Freedom for Cinema and OTT Platform'.

1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்ட விதிகளின்படி இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவும், நமது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவு,  பொது அமைதி மற்றும் தனிப்பட்ட அல்லது சமூக அல்லது நாட்டின் மதிப்பிற்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாகவும், குற்றச் செயல்களைத் தூண்டக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடத் தகுதியற்றவை என நிராகரிக்கச் சட்டம் ஏற்கனவே 70 ஆண்டுகளாக அமலில் தான் இருக்கிறது என்பதை படைப்பாளிகள் என்பவர்கள் ஏன்  படித்து புரிந்து கொள்ளவில்லை? என்பதே கேள்வி. 

ஆங்கிலேயர் காலத்திலேயே தெருக்கூத்து நடத்துவதற்கும், கிராமங்களில் நாடகங்கள் நடத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே நடைமுறையும், சட்டமும் ஆகும். தெருக்கூத்து நாடகமாகி, ஊமை படங்களாகி, பின்பு கருப்பு-வெள்ளை பேசும் படங்களாகி, தற்போது பலவண்ண டிஜிட்டல் திரைப்படங்களாகவும் நவீன வடிவம் பெற்று விட்டன.திரைப்படங்கள் மகிழ்ச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் எடுக்கப்பட்ட வரையில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.ஆனால், அந்தத் துறை தன்னுடைய சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகளிலிருந்து வெகு தூரம் விலகி, மக்களிடத்தில் ஒற்றுமையை உண்டாக்குவதற்குப் பதிலாக சாதி, மத, இன, மொழி ரீதியான வேற்றுமைகளையும்; அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அருவாள், வன்முறைக் கலாச்சாரத்தையும்; நாட்டின் பண்பாடு, கலாச்சார உணர்வுகளைப் பேணி காப்பதற்குப் பதிலாக பாலிய உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையிலும் முழுக்க முழுக்க எப்பொழுது திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டதோ, அதன் பின்புதான் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகி நாடெங்கும் திரைப்படங்களுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு போராடும் சூழல்கள் ஏற்பட்டன.

ஒரே மண்ணில் வாழும் மக்களிடத்தில் ஒரு பகுதியினரை உயர்ந்தவராகவும்;  மற்றொருவரை தாழ்ந்தவராகவும், ஒரு குழுவைப் பெருமை உடையவராகவும், இன்னொரு குழுவை பெருமை குறைவானவராகவும், ஒரு குழுவை வீரம் செறிந்தவராகவும், ஆளத் தகுதியானவராகவும், 'ஆண்ட பரம்பரை' என்றும் திரைப்படங்கள் கொடுத்த முத்திரை பல்வேறு சமூகங்களுக்கிடையே பிணக்குகளை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தது. இதனால் ஏறக்குறைய 30 ஆண்டுக்காலத்திற்கு மேலாகத் தமிழகம் கலவர பூமியாகவே இருந்ததை எவரும் மறந்து விட முடியாது.

திரைப்படங்கள் மூலம் ஜனநாயகம்; சமத்துவம்; சகோதரத்துவ உணர்வுகள், தேசப்பற்றுகள் வளர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அதற்கு நேர்மாறாக இந்தியத் தேசத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகளைப் போற்றி வளர்க்கக் கூடியதாகவும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றிற்குப் புத்தம் புதிய உத்திகளை கற்றுக் கொடுப்பதற்கான தளங்களாகவும் அண்மைக்கால திரைப்படங்கள் மாறிவிட்டன. தனி மனித பிம்பங்களைக் கட்டியமைத்து அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது, குறுகிய காலத்தில் கோடிகளைக் குவிப்பது, குறிப்பிட்ட சில சாதி, மதங்களைப் போற்றுவது என்பது மட்டுமே திரைத்துறையில் பெரும்பாலானோரின் குறுகிய சிந்தனைகளாக மாறி உள்ளன.மேலும்,தமிழகத்தில் நிலவக்கூடிய பல்வேறு விதமான அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களுக்கும் திரைப்படங்களே முதற்காரணமாக விளங்குகின்றன.

.ஜனவரி 26, 1950  அன்று  இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த போதே இந்தியாவில் சட்டரீதியாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், 'அரிச்சந்திரா'  என்ற திரைப்படத்தில் ”நான் ஆதியிலும் ……….. அல்ல, சாதியிலும் ……….. அல்ல, நீதியிலும் ……….. அல்லவே – நானே பாதியில் …………. ஆனேனே” என்று ஒரு சாதியைக் குறிப்பிட்டு டைட்டில் சாங் போடப்பட்டது.'அலிபாபாவும் 40 திருடர்களும்' என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்படங்களில் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட போது சமூகங்கள் விழிப்பு பெறவில்லை.

 திரைக்கதைகளின் நீரோட்டத்தாலும், அதில் நடித்த பெரும் திரை ஆளுமைகளாலும் அவைகள் பெரிதாகவும் வெளியே தெரியவில்லை. அந்த திரைப்படங்கள் எல்லாம் வெளிவந்த காலகட்டத்தில் நாம் பிறக்கவே இல்லை. ஆனால், அக்காலகட்டங்களில் தான் தமிழகத்தின் மேடைகளில் பெரிய அளவிற்கு 'சாதி ஒழிப்பு' பிரச்சாரங்கள் நடைபெற்ற போதும், திரைப்படங்கள் மூலமாக அதிக அளவில் சாதி தீ வளர்க்கப்பட்டதை சாதி மறுப்பாளர்கள் ஏன் எதிர்க்கவில்லை என தெரியவில்லை.

ஆனால்,1990களுக்குப் பிறகு, திரைப்படங்களின் பெயர்களிலும், பாடல்களிலும், வசனங்களிலும், காட்சிகளிலும் சாதிய அம்சங்கள் வலிந்து புகுத்தப்பட்டன. "போற்றி பாடடி பெண்ணே, …………. காலடி மண்ணே" - "எசமான் காலடி மண்ணெடுத்து"– " திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா" போன்ற பாடல்கள் தமிழகமெங்கும் தமிழ் சாதிகளுக்குள் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று ஒருவருக்கொருவர் முட்டி மோதி இரத்தம் சிந்தும் நிலைக்குத் தள்ளியது.'மதயானை கூட்டம்' என்ற திரைப்படம் சாதி மாறி திருமணம் செய்த எண்ணற்ற இளைஞர்களையும், பெண்களையும் கௌரவக் கொலை செய்யக் காரணமாக அமைந்தது.'பாய்ஸ்' என்ற ஒரு திரைப்படத்தில் இளைஞர்கள் இடையே அபரிவிதமான பாலியல் உணர்வுகளைத் துண்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.நமது எதிர்ப்பிற்கு பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது. 


'சண்டியர்' என்று பெயரிடப்பட்ட படம் அரிவாள் கலாச்சாரத்திற்கும், கலவரங்களுக்கும் வித்திடும் என்பதால் நாம் கொடுத்த எதிர்ப்பின் காரணமாக அத்திரைப்பட பெயர் மாற்றப்பட்டது.நாம் நீதிமன்றம் வரை சென்றதால் 'கொம்பன்'  திரைப்படத்தில் 72 வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டன. 'பாகுபலி' என்ற திரைப்படத்திலிருந்து நீதிமன்றம் மூலம் ஒரு சாதிய வார்த்தை நீக்கப்பட்டது.  'மண்டேலா' திரைப்படத்தில் ஒரு காட்சியை நீக்க ஒரு குறிப்பிட்ட பிரிவினர் போராடி வருகிறார்கள். 'தசாவதாரம்' படம் ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் எதிர்ப்பை சந்தித்தது. 'மருதநாயகம்' இன்னும் வெளியே வரவில்லை. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வரலாற்றுத் திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க அனுமதிக்கப் படவில்லை. இந்திய அளவில் 'பத்மாவதி' என்ற திரைப்படம் பல எதிர்ப்புகளுக்குப் பிறகு 'பத்மாவத்' என்று பெயர் மாற்றி வெளியிடப்பட்டது. 

நடிகை சர்மிளா தாகூர் விளிம்பு நிலை மக்களைத் தவறாகச் சித்தரித்ததால் இந்தியப் பட்டியலின துறையால் அழைத்து விசாரிக்கப்பட்டார். புகழேந்தி தங்கராஜின் 'காற்றுக்கென்ன வேலி' படம் நீதிமன்றம் சென்ற பிறகே வெளியானது. 'பரியேறும் பெருமாள் – அசுரன்' போன்ற திரைப்படங்களில் 'ஆண்ட பரம்பரை' என்ற சொல் சிலரின் எதிர்ப்புக்குப் பின் நீக்கப்பட்டது. 'தெய்வத்திரு மகன்' என்ற திரைப்படம் 'தெய்வத்திரு மகள்' ஆனது.'ஃபேமிலி மேன் 2' என்ற இணையத்தொடர் ஈழப்போராளிகளை இழிவு படுத்துவதாகவும்; கொச்சைப்படுத்துவதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது போன்று மக்கள் சென்சார்களை சந்தித்த படங்கள் இன்னும் எவ்வளவோ உண்டு.

சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சிறிதும் கணக்கிலே கொள்ளாமல் நாங்கள் பெரிய முதலீடு போட்டு விட்டோம் அதைப் பன்மடங்கு ஆக்குவதற்கு நாங்கள் எப்படிப்பட்ட திரைப்படத்தை வேண்டுமானாலும் எடுப்போம் என படைப்பாளிகள் மனம் போன போக்கில் செயல்படக்கூடாது  என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஒரு சில நிகழ்வுகளே சாட்சிகள்.  ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல எனவே,அந்த திரைப்படம் தயாரிக்கும் போதே அது ஏற்படுத்தும் தீய விளைவுகளைப் பற்றி கவனத்தில் கொண்டு கதைகள், காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இடம் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின்  எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே,சாதி, மத, பாலியல்; வன்முறைகள், தேசிய நீரோட்டத்திற்கு எதிரான சிந்தனைகளைத் தூண்டும் திரைப்படங்களை மறு தணிக்கை என்ற சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒரு படம் திரைக்கு வந்த பிறகு அதைத் தடுப்பது கடினம்.இப்போது உள்ள சட்டத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால்,ஒரு திரைப்படத்தை மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கூடிய இந்த அதிகார சட்டத் திருத்தம் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாகும்.

.தரமான திரைப்படங்களை எடுக்கவும், அது குழந்தைகளைப் பாதிக்காத; ஆபாசம் இல்லாத; அருவருப்பில்லாத; கலாச்சார சீரழிவையும், சாதி, மத பேதத்தையும் உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வெளிவர இந்த 2021 திரைத்துறை திருத்தச் சட்டம் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்,திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !

திரைப்படப் படைப்பாளிகளே! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை! 

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர்,புதிய தமிழகம் கட்சி.05.07.2021

மீண்டும் சந்திப்போம். 

சண்டேன்னா மூணு! #அரசியல் #தேர்தல்வானிலை #என்னமோநடக்குது

அரசியல் ஏன் எனக்கு எப்போதுமே பிடித்தமானதாக இருக்கிறதென்றால், எதிர்பாராதது எதுவோ அதையே எதிர்பார்ப்பது அரசியலில் மட்டுமே சாத்தியம்! இதனால் தானோ என்னவோ நம்மூர் அரசியலில் சின்னச்சின்ன மாற்றங்கள் தெரிந்தால் கூட குய்யோமுய்யோவென சோனியா காங்கிரஸ் கூவுவதும், என்னமோ நடக்கப் போகிறதென்று மற்றவர்கள் திகிலுடன் காத்திருப்பதும் தொடர் கதையாகிக் கொண்டு வருகிறது. வெள்ளியன்று அன்றுஉத்தராகண்ட் மாநிலமுதல்வர் தீரத் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜியைக் குறிவைக்கத் தான் என சோனியா காங்கிரஸ் அலற ஆரம்பித்துவிட்டது. கொரோனா காலம் என்பதால் இடைத்தேர்தல் சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்வதற்கு முன்பாகவே தீரத் ராவத் காரணம் சொல்லி ராஜினாமா செய்திருப்பதுதான்! தீரத் ராவத் கடந்த மார்ச்சில்தான் உத்தராகண்ட் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்ட சபை உறுப்பினராக இல்லாத அவர் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடந்து அதில் ஜெயித்தாக வேண்டும். தற்சமயம் MLA வாக இல்லாத மம்தா பானெர்ஜியும் கூட அதே மாதிரி  6 மாதங்களுக்குள் தேர்தல் நடந்து வெற்றி பெற்றாகவேண்டும் என்கிற ஒப்பீடு சரிதான்! காங்கிரஸ் கட்சி இதில் அலறுவதுதான் வேடிக்கை! விநோதமும் கூட!

   


சோனியா காங்கிரஸ் அதிகம் கவலைப்படவேண்டிய பஞ்சாப் மாநில கட்சி விவகாரத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை என்பது இன்னொரு அரசியல் வினோதம். சோனியா & கோ தயவில்லாமல் 2017 இல் பஞ்சாப் தேர்தலில் ஜெயித்துக் காட்டியவர் அமரீந்தர் சிங் என்பது ராகுல் காண்டி வகையறாவுக்கு உறுத்தலாக இருப்பதில், உட்கட்சிப்பூசல் காரணமாக வருகிற 2022 தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை என்று சோனியாவும் மக்களும் நினைக்கிற மாதிரித் தெரிகிறது, இந்த லட்சணத்தில் 44 ஆண்டுகளாகக் கைவிட்டுப் போன மேற்குவங்கம் குறித்து கூக்குரல் எழுப்புவது, காங்கிரசால் மட்டுமே நடத்திக்காட்ட முடிகிற அரசியல் தமாஷா!


இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் கூமி கபூர் எழுதி வரும் அரசியல் கிசுகிசு பத்தியில் ஷரத் பவார் பற்றி ஒரு சுவாரசியமான ஊகத்தைச் சொல்கிறார். பிரசாந்த் கிஷோருடன் பவார் தனியாகச் சந்தித்தது 2022 இல் சட்டசபைத்தேர்தல்களை அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக ஷரத் பவார் நிற்பது பற்றித்தான் என்கிறார். 80வயதான ஷரத் பவாருக்கு அதில் ஆசை இருந்தாலும் நடக்குமா என்பது உத்தரப்பிரதேசத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது என்று சொல்வதே, பகல்கனவு என்பதையும் சேர்த்துச் சொல்வதாக இருக்கிறதோ? (சமீபத்தைய உள்ளாட்சித் தேர்தல்களில் பிஜேபி மொத்தமுள்ள 75 இடங்களில் பிஜேபி 67 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது)  கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகத்தில் ஷரத் பவாருக்கு இதுவரை இருந்த ஆதிக்கம், சமீபத்தில் நடந்த தேர்தலில் பிஜேபியால்  உடைக்கப்பட்டிருப்பதும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறவெல்லாம் வேண்டாம், சில திருத்தங்கள் செய்தால் போதும் என்று பவார் பல்டி அடித்திருப்பதும் தேசிய அளவில் மாற்றம் வருகிறதோ இல்லையோ, மகாராஷ்டிரா அரசியலில் ஏதோ மாற்றம் வருவதற்கான அறிகுறி என்றுதான் தோன்றுகிறது.


இளவரசருக்குத் துதிபாடுவது திமுகவினருக்கு சரியாகத் தோன்றலாம்! ஆனால் இப்படி அதீதமான ஆர்வக் கோளாறுகள் பெரும் சேதத்தைத்தான் ஏற்படுத்தும் என்பது அனுபவம். என்னுடைய வருத்தமெல்லாம் இப்படி மதுரையின் பெயரைக் கெடுக்கிறமாதிரியே புற்றீசல் மாதிரிக் கிளம்பி வருகிறார்களே என்பது மட்டும்தான்! போஸ்டர் அடித்தே போஸ்டைப்பிடிப்பது ஒச்சுபாலு காலத்திலிருந்தே மதுரை திமுகவைப்பிடித்திருக்கும் பெருவியாதி.


   கவனித்துப்பார்த்த ஒரு விவாதம்

மீண்டும் சந்திப்போம்.        

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்! கொஞ்சம் விமரிசனம்!

ஆரூடம் சொல்வதற்கும் அரசியல் விமரிசனத்திற்கும் என்னசம்பந்தம்? இரண்டுமே புருடா தான் என்பதைத் தாண்டி வேறென்ன இருக்க முடியுமாம், சொல்லுங்கள்! டெல்லி R ராஜகோபாலன் என்றொரு பத்திரிகையாளர், தன்னுடைய ஊகங்கள் கற்பனைகளையே பரபரப்புச் செய்தியாக்கி வருகிறமாதிரி இருப்பதில் என் மனதில் எழுந்த கேள்வியும் நானே பதிலும் நானே! என்பதாக இன்றைய அரசியலைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?


பிபிசி தமிழுக்கு ரொம்பக் கவலை! இந்தக் கழிசடை ஊடகத்துக்கு என்ன பதில் சொல்லலாம்? சொல்லுங்கள்!   


தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அந்த நாட்களில் டாக்டர் தமிழிசை முழங்கிக் கொண்டிருந்தது மகஇக மாதிரியான நக்சலைட் குறுங்குழுப் பாடகர் கூட கேலி செய்கிற மாதிரி இருந்தது, அப்புறம் என்ன ஆயிற்று? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாய் திறக்குமுன் இதைக்  கொஞ்சம் பார்த்துவிடுங்கள்.


இப்படி அடித்துச் சொல்லத் தெரிந்தவருக்கு சட்ட சபையில் கொங்கு Iceவரன் ஜெய் ஹிந்த் சர்ச்சையைக் கிளப்பிய போது எதுவுமே சொல்லத் தோன்றவில்லை என்பது என்னவகையிலான பரிதாபம்? சொல்லுங்கள்!


ஊராட்சி ஒன்றிய அரசின் கணக்கப்புள்ள பேசுவதை இன்று மாலை சிறிதுநேரம் கேட்க நேரிட்டதில் மேலே ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன் சொல்கிற காலகட்டம் எல்லாம் போய் #கஷ்டம் #காலம் ஆகிவிட்டதாகவே தோன்றுவது எனக்குமட்டும் தானா? சொல்லுங்கள்!


மவுன்ட்ரோடு மாவோ நாளிதழில் சுரேந்திரா வரைந்த இன்றைய கார்டூன். ரொம்ப சாமர்த்தியம்தான்! இவர் போன்றவர்களுக்காகவே After the Galwan clash last year, India has turned the Indo-Tibetan border into a fortress with 200,000 troops and warships to flank them என்று இந்தப்பக்கத்தில் விரிவாகவே செய்தி சொல்கிறார்கள். சுரேந்திரா திருந்த  என்ன செய்யலாம்? சொல்லுங்கள்!  


2006 மே மாதம் இருமுறை அடுத்தடுத்து மாரடைப்பு வந்து பைபாஸ் சர்ஜரி செய்துகொள்ள வேண்டிய சூழல். எங்கே சிகிட்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதில் நிறையக்  குழப்பமும் தயக்கமும் இருந்தது. அன்றைக்கு  மதுரை அப்போல்லோ மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருந்த Dr.. செல்வகுமார் மிகப்பொறுமையாக என்னுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். அறுவை சிகிச்சையை Dr. ஸ்ரீதர் சிறப்பாகச் செய்தார். 2006 ஜூலையில்தான் பைபாஸ் சர்ஜரி நடந்தது. 2007 ஜூலையில் தான் நான் முதன்முதலாக மருத்துவர் தின வாழ்த்துக்களை மின்னஞ்சலில் அனுப்பினேன் என்பது கொசுறுக் செய்திதான். மருத்துவர், செவிலியர்களுடைய அருமை மிகவும் நெருக்கடியான நேரங்களில்தான் நமக்கே உறைக்கிறது. மருத்துவர் தினத்தில் எனக்கு சிகிட்சை அளித்த மருத்துவர், செவிலியர் என்றில்லாமல் ஒட்டுமொத்த மருத்துவர், செவிலியர், இதர பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.          

   

#தலைமைப்பண்பு ஊடகங்களில் வாசகர் கடிதம்! P V நரசிம்மராவ்!

பள்ளி மாணவனாக செய்தித்தாட்களை வாசிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே செய்திகளோடு  தலையங்கம், ஆசிரியருக்கு வாசகர் கடிதம் பகுதிகளை ஒரு எழுத்து விடாமல் படிக்கிற பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. இன்றும் செய்திகளுக்கு வாசகர்கள் எழுதும் பின்னூட்டம் ஒன்று விடாமல் வாசிப்பதுண்டு தான்! இவையில்லாமல் செய்தியை முழுதாய் வாசித்த திருப்தி கிடைப்பதில்லை என்பது என்னுடைய அனுபவம்.


தினமலர் நாளிதழுக்கு ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு' கட்டினாலும், அதில் தி.மு.க.,வினரின் தீராத பிரிவினை மோகம் அப்பட்டமாய் தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான், சுதந்திரத்திற்கு துாண்டு கோலாய் இருந்த 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சி. சட்டசபையிலேயே, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரை அப்படி பேச செய்து, முதல்வர் ஸ்டாலின் ரசித்துள்ளார்.

கடந்த நுாற்றாண்டில் நடந்த போர், பிரிவினை ஆகியவற்றால், உலகம் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், நம் கண் எதிரே உள்ளன. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. வங்கதேசத்தில் பழமைவாதிகளின் சேட்டைகளை ஒடுக்க முடியவில்லை. சீனாவின் பிடியில் சிக்கி, ஜனநாயகத்தை தொலைத்து விட்டது, நேபாளம். இலங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.

பிரிவினை தேடும் எந்த நாடும் முன்னேறியதில்லை. அங்கு சர்வாதிகாரமும், பயங்கரவாதமும் தான் இருக்கும். நம் மாநிலங்களிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை தீர்ப்பதற்கே, மத்திய அரசுக்கு நேரம் போதவில்லை. இதனிடையே, ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை அமைத்தல், 'நீட்' என, அனைத்து விஷயத்திலும் தமிழகம், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மாநில சுயாட்சி, மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதே, தமிழகத்திற்கு நல்லது.என முடித்திருக்கிறார் 


முன்னாள் பிரதமர் P V நரசிம்மராவ் பிறந்த நூற்றாண்டு இது. இந்தியப்பிரதமர்களில் தகுதிக்கும் மீறி மிகவும் வியந்தோதப்பட்டவர் நேரு என்றால் தகுதிகள் நிறைய இருந்தும் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவர் நரசிம்ம ராவ் என்பது சுதந்திர இந்தியாவின் சீரழிந்த அரசியலின் சாபக்கேடுதான் இல்லையா?

தொங்கு நாடாளுமன்றம், ராஜீவ் காந்தி படுகொலை, பாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் போன்ற சிக்கல்களுக்கிடையில் பிரதமரானவர் பி.வி.நரசிம்ம ராவ். ஆயினும் அவர் பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்தரும் வகையில் முறையே 73-வது, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்ததாகும். நரசிம்ம ராவ் பிரதமரானபோது கிராம வளர்ச்சித் துறையின் கேபினட் அமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் பிரதமர் ஒருவர் கிராம வளர்ச்சித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்ததில்லை.

விடுதலை பெற்ற இந்தியாவினுடைய அரசமைப்பின் அடித்தளமாக, தன்னாட்சி பெற்ற வலுவான கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என காந்தி வலியுறுத்திவந்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இது குறித்த ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முடியாததால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய இடம் இல்லாமலே போயிற்று. ராஜீவ் காந்தி கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். மக்களவையில் நிறைவேறிய மசோதாவானது மாநிலங்களவையில் தோல்வியுற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானவுடன் கிராம வளர்ச்சித் துறையின் அதிகாரிகளை அழைத்து, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசமைப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரிக்கும்படி பணித்தார். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மேலும், மாநிலச் சட்டமன்றங்களில் பெரும்பான்மையான சட்டமன்றங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும். நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசால் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்றே இதைச் செய்து முடிக்கும் ஒரே வழி என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார் என்று ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரையை இந்து தமிழ்திசை தளத்தில் முழுமையாக வாசித்துப் பாருங்களேன்! தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக - அதிமுக பிரதிநிதிகள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் தருவதைத் தாங்கள் வரவேற்றபோதும் வலுவான மாவட்டப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதாகக் கூறினார்கள் என்பது போகிறபோக்கில் சொல்லப் பட்டது தானா?   

தலைமைப்பண்புக்கு உதாரணமாக நரசிம்ம ராவ் என்கிற ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிற விதமாக  இந்தக் கட்டுரையை எழுதிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.ரகுபதி அவர்களுக்கு நன்றியுடன்! பிரசுரம் செய்த இந்து குழுமத்துக்கும் நன்றி.   

மீண்டும் சந்திப்போம். 

நீட் தேர்வு ரத்து என்கிற அரசியல்! உயர் நீதிமன்றம் வைத்த கொட்டு!

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதில் நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனவும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல .நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர் என்பது இன்றைய செய்தி. விடியல் அரசுக்கு நீதிமன்றம் வைத்திருக்கிற முதல் குட்டும் கூட.  

 

சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ‘ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்ட போதும் ஓய்வு  பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார். 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழு கூறுகிறது. ஒரே கணிணியில் இருந்தும் 1000-த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். உண்மையில் இது தி.மு.க குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ‘தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிபிட்ட கரு.நாகராஜன் இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவக் கனவில் விளையாடக் கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் மாசு இதற்கு  பதிலளித்து  பேசிய வீடியோ  17 நிமிடம் 


இந்தமாதிரி கமிஷன்கள் நியமிக்கப்படுவது ஏன், எதற்கு என்பதெல்லாம் அரசியல் LKG க்களுக்குமே தெரிந்த விஷயம். நண்பர் ஜெயகுமார் ஸ்ரீனிவாசன் கமிஷனின் அடிமடியிலேயே கைவைக்கச் சொல்வது முழுதாக ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கிறது. 


நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #84 #பிரிவினைஅரசியல் #ஊழல்அரசியல் #பரஸ்பரசொறிதல்

கடந்த வியாழக்கிழமை டில்லியில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் செய்து வரும் கட்சித்தலைவர்களைச் சந்தித்துப் பேசியதில், உள்ளே நடந்த மூன்று மணிநேர விவாதத்தில் என்ன நடந்தது? ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி இவர்களெல்லாம் மாநில முதல்வர்களாக இருந்தவர்கள். உண்மையைச் சொல்லப் போனால் காஷ்மீர் பிரச்சினை என மிகைப்படுத்தப் பட்ட  ஒன்றை ஊதிப்பெரிதாக்கியவர்கள் இவர்கள்தான்! மக்களுக்காகப் பேசாமல், சுயநலங்களுக்காக ஆட்சியும் அதிகாரமும் வேறு எவர் கைக்கும் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்பதை வெளியே வந்து ஊடகங்களிடம் வீராவேசமாகப் பேட்டி அளித்து வெளிப்படுத்தியவர்கள்.  

வீடியோ 12 நிமிடம் 

ஃபரூக் அப்துல்லா ஊர் போய்ச்சேர்ந்ததும் பொது வாக்கெடுப்பு, நேரு முதல் நரசிம்மராவ் வரை பிரதமராக இருந்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று கிளிப்பிள்ளை மோடுக்குப் போய்விட்டார். மகன் ஒமர் அப்துல்லாவோ  “It took the BJP 70 years to fulfill its political agenda for (Article) 370. Our struggle has just started. We don’t want to fool people by telling them we will get 370 back in these talks. It will be foolish to expect 370 will be back — there has been no indication it will be restored by the current government.” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி கொடுக்கிறார் என்றால் எங்களிஷ்டத்துக்கு விடாவிட்டால் பிரிவினை பேசவும், துணைபோகவும்  தயங்கமாட்டோம் என்கிற தொனி அப்பா மகன் இருவருடைய பேச்சிலும் இருக்கிறது. இங்கே தமிழகத்தில் கூட 1920 நீதிக்கட்சி அரசாண்ட கதையின் நீட்சியாக அறிவித்துக் கொண்டது, ஒன்றிய சர்ச்சை முதல் ஜெய்ஹிந்த் இடம் பெறாததற்கு பாராட்டுரை என்று J & K அரசியல் வாதிகளுடைய சாயல் நிறையவே தெரிகிறதோ?


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியின் கேள்வியில் நியாயமான சந்தேகம் எழுகிறது. ஆளுநருக்கு இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். 


சோனியா காந்தி வகையறா ஊழலின் மொத்த உருவம் என்பதை 2004-2014 வரை ஐமுகூட்டணி மன்மோகன் சிங் அரசு நிரூபித்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று சோனியா ஆரம்பித்தற்கு  மன்மோகன் சிங் அரசு 100 கோடி நிதி கொடுத்தது. அரசுநிதி பெறுகிற நிறுவனங்கள் எதுவானாலும் சில நிபந்தனைகளும், அரசின் தணிக்கையும் (audit) உண்டு. ஆனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அரசின் நிபந்தனைகள் தணிக்கை எதற்கும் உடன்படவில்லை. அதுவும்போக வருகிறவன் போகிறவனிடமெல்லாம் நிதி நன்கொடையாக வாங்கி குவித்ததில் சீனர்களின் சார்பு நிறுவனமும் உண்டு. ஜாகிர் நாயக் மாதிரி மலேசியா ஓடிப்போன இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவுப்  பிரசாரகரும் உண்டு. ஜாகிர் நாயக் எதற்காக இந்த அறக்கட்டளைக்கு 50 லட்சம் நன்கொடை? அதுவும் சும்மாக் கொடுத்தாராமா? 


தகவல் ஒளிபரப்புத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த மனீஷ் திவாரிக்கு, சிறுபான்மையினர் விவகார அமைச்சர் 2013 இல் எழுதிய சிபாரிசுக்கடிதத்தின் இரு பாராக்களும் விஷயம் இன்னதென்று பல்லிளித்துச் சொல்கிறதே! 


நம்மூரில் அப்படி கடிதம் மூலம் எதுவும் சொல்லக் கூட வேண்டியதே இல்லை! நம்புங்கள்! இது திமுக ஆட்சி!  


இது 2009 இல் நக்கீரன் இதழில் வெளியான கொங்கு ஈ
ஸ்வரன் வாழ்க்கை வரலாறு. பெருமாள் முருகன் நாவலை விட அந்தநாட்களிலேயே பரபரப்பான செய்தியாகத் தான் இருந்திருக்கும் போல! நக்கீரனே 2பக்கச் செய்தி போட்டிருக்கிறதென்றால்! படத்தைப் பெரிதாக்கிப் படித்துப் பாருங்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடி, மார்க்சிஸ்டுகளுக்கு ரூ. 10 கோடி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ரூ. 15 கோடி நன்கொடை அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட்ட கதை நினைவிருக்கிறதா? பரஸ்பர சொறிதல்கள், முன்களப் பணியாளர்களுக்கு  நீண்டகாலமாகவே கிடைத்து வருகிறது என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல?

மீண்டும் சந்திப்போம்.                       

இந்திராவின் 1975 நெருக்கடி நிலை! ஆர்.எஸ்.எஸ். நடத்திய போராட்டங்கள்!

திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுக்கப்பட்ட பகுதிகள்

சுதந்திர இந்திய வரலாற்று நிகழ்வுகளில் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட அவசர கால நெருக்கடி  சட்டம் அரசியலில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்துக் கொண்ட உண்மையான இலட்சியப்பணிகள் எது என்பதை உலகுக்கு வரையறுத்துக் காட்டிய நிகழ்வு இது. காங்கிரசுக்கு எதிரான கட்சிகளையும், சிறையில் அடைக்கப்பட்ட வேறுபட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும் அவர்கள் ஒரே அரசியல் மேடைக்கு வரவும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது இந்த சந்தர்ப்பந்தான்.

இதன் விளைவு அவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளை மறந்து ஜனநாயக மாண்பை காக்கும் விதத்தில் ஜனதா என்கிற கட்சி பிறந்தது. ஆர்.எஸ்.எஸ் இந்திய வரலாற்றில் தன்னை மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள இந்த நெருக்கடிகால சம்பவங்கள் உதவின என்றும் கூறலாம். ஜனநாயகத்தின் மதிப்புகளை, மாண்பை மீட்டெடுத்து அதன் மூலம் இந்த சமுதாயத்துக்கு அரிய சேவை செய்வதற்கான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பங்களிப்பை இந்த நாடும், உலகமும் கண்டது இப்போது தான்.1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் பெட்டிகள் எரிப்பு கலவரம், அதே காலகட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் ஆகியவை குறித்து இப்போதைய இளம் தலைமுறைக்கு தெரியாது. இந்த நிலையில் மேற்கண்ட சம்பவங்களுக்கு முந்தைய இந்திரா அறிவித்த நெருக்கடிகால அடக்குமுறைகள் குறித்து  இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவை எல்லாம் வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களாக உள்ள நிலையில், உண்மையில் நவீன இந்திய வரலாற்றில் இவை மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகும். நம் தேசம், தேசத்தை காத்த ஆர்.எஸ்.எஸ் சந்தித்த இந்த முக்கியமான கால கட்டத்திலிருந்து இந்த கட்டுரையை தொடங்குவது உகந்ததாக இருக்கும்.

அன்றைய காலக்கட்டத்தில் பொது வாழ்க்கையில் தூய்மையை வலியுறுத்திய ஜே.பி என அனைவராலும் அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் சம்பூர்ண கிரந்தி எனப்படும் இயக்கம் அரசியல் நடைமுறைகளில் இருந்த அழுக்குகளை அகற்றி ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வர வலியுறுத்தியது. அந்த இயக்கத்தின் கொள்கைகள் அன்றைய இளைஞர்களிடையே அரசியல் மீது ஒரு தீவிரத்தை ஏற்படுத்தியது. ஏராளமான இளைஞர்கள் ஜே.பி-யின் சிந்தனைகளால் கவரப்பட்டு, ஜனநாயகத்தை மீட்க போராடி பல தியாகங்களை செய்திருந்தாலும், அந்த போராட்டங்களின் விளைவு லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகள் ஜாதீய அரசியல் செய்து சுய நலன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்து விட்டது. இதன் மூலம் ஜே.பி-யின் கொள்கைகள் மற்றும் இலட்சியங்கள் சிதைவுக்குள்ளாகின.

தேவர்கள் இணைந்து திருப்பாற்கடலை கடைந்து அமுதம் திரட்ட முற்பட்டபோது விஷத்தையும் கண்டு அதை தூக்கி எறிந்து போட்ட கதை இந்து புராணங்களில் கூறப்படுகிறது. அந்த கதை இங்கு எந்த அளவுக்கு உண்மையாகி விட்டது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.

இப்போது எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய கால கட்டமான 1971-ஆம் ஆண்டுக்கு செல்லலாம். அப்போது நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியா வென்றதுடன் பங்களாதேஷ் என்கிற நாட்டையும் உருவாக்கியதன் பேரில் இந்திராவும் அவரது ஆதரவாளர்களும் வெற்றிப் புளகாங்கிதத்தில் மிதந்து கொண்டிருந்த கால கட்டம் அது. நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அராஜக மனோபாவத்தை அவர்களுக்குத் தந்தது. இந்திராவின் நிழலில் இருந்தபடி எல்லை தாண்டிய அதிகாரத்தை அவரது ஆதரவாளர்கள் ருசி பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.

அப்போதைய காங்கிரஸ் தலைவர் கந்த பரூவா இந்தியா என்றால் இந்திரா,  இந்திரா என்றால் இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்தார். இந்தியா முழுவதும் இது ஒரு மந்திரம் போல காங்கிரசாராலும், அரசு இயந்திரங்களாலும் கூட  நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்பட்டது. இந்த அராஜகம் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை அடக்க முற்பட்டது, அதிகார வர்க்கத்தினரிடம் அதிக அதிகாரங்கள் குவிந்ததால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாயின.

இதை எதிர்த்து படிப்படியாக நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு எதிராக போராட்டங்கள் துளிர் விட ஆரம்பித்தன. முதலில் குஜராத்தில் நவநிர்மாண் அந்தோலன் என்கிற இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் அந்த மாநிலத்தில் ஊழல் ஆட்சி செய்து கொண்டிருந்த சிமன்பாய் படேலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி துணை நின்றதுடன், ஜன சங்கமும், மற்ற எதிர் கட்சியினரும் ஆதரித்தனர். மாணவர்களின் இந்த தொடர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி மக்களின் செல்வாக்கைப் பெற்றதுடன் அந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. பாபுபாய் படேல் தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தது.  மாணவர்களின் எழுச்சி மிக்க இந்த போராட்டம் பீகார் மாநிலத்திலும் பரவியது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிந்தனைகள் அவருடைய பேச்சுக்கள் மாணவர்களையும், சிந்தனையாளர்களையும் கிளர்ந்தெழச் செய்தன. லோக்ஜன் கார்ஷ் சமிதி எனப்படும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, நானாஜி தேஷ்முக் அதன் பொதுச் செயலாளராக இருந்து வழிகாட்டினார். அரசியல் மற்றும் அரசியல் அல்லாத சேவை அமைப்புகள், மாணவர்கள் என ஏராளமானோர் இந்த அமைப்பில் சேர்ந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் ஜன சங்கத்துடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இரு தரப்பும் போராட்டக்களத்தில் இணைந்து தீயாக வேலை செய்தனர். இவர்களின் போராட்டத்தால் மக்கள் நாடெங்கும் ஈர்க்கப்பட்டதால் காங்கிரசாரும், இந்திராவும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அலகாபாத் கோர்ட் நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா இடைத்தேர்தலில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் விளைவுகள் ஏற்பட வழி வழிவகுத்தது.

இந்த நிலையில், அரசியல் சூழ்நிலைகள் தனக்கு பாதுகாப்பாக இல்லை என உணர்ந்த இந்திரா காந்தி எதிர்கட்சிகளை அடக்கவும், அவர்களின் நடவடிக்கைகளை நசுக்கவும் முற்பட்டார். உள் நாட்டு பாதுகாப்பை மேற்கொள்வதாகக் கூறி 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவு நெருக்கடி நிலையை அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பை சுட்டிக் காட்டி நெருக்கடி நிலையை அறிவித்தது இந்தியாவில் அதுதான் முதன் முறை. கடுமையான இந்த சட்டம் மிசா என்ற பெயரில் எதிர்கட்சிகளையும், எதிர்ப்போரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் 2 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள வழிவகுத்தது. நாட்டின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இரண்டாம் முறையாக தடை செய்யப்பட்டது. ஆனந்த் மார்க் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இயக்கங்களும் எந்த வித காரணங்களும் கூறப்படாமல் தடை செய்யப்பட்டன. 

ஜனநாயகத்தை மீட்பதற்கான மாபெரும் யுத்தத்தில் அன்று ஆர்.எஸ்.எஸ் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேரில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆவர். கொடுமையான மிசா சட்டத்தில் நாடு முழுவதும் 30,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மிகவும் கொடுமையான மகாராஷ்டிரா பயங்கரவாத கட்டுப்பாட்டு சட்டத்தின்( IMCOCAI) கீழ் மட்டும் கிட்டத்தட்ட 25,௦௦௦ ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சிறையில் வைக்கப்பட்டு கொடுமையான முறையில் நடத்தப்பட்டனர். பல்வேறு சோஷியலிச கட்சி தலைவர்களும் தொண்டர்களைக் காட்டிலும் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 18 மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட 6 மாதங்கள் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நேரத்தில் நாக்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி லலித் அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. அடிப்படை உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களை மிசா சட்டத்தால் கைது செய்யக் கூடாது என அளித்த அவரது தீர்ப்பால் பலர் ஒரு மாத சிறை வாசத்துடன் வெளியே வந்தனர். இந்த தைரியமான தீர்ப்பை வழங்கிய நீதிபதி லலித் அவர்களின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதுடன், அவருக்கு பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திராவுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் அவருக்கு ஆதரவாக ஒரு நீதிபதிகள் குழுவும் செயல்பட்டது. இந்த விஷயத்தில் இந்திராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவிகரமாக இருந்தது.

இதே கம்யூனிஸ்டுகள்தான் 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதும் இரு வேடங்கள் போட்டு நடித்தனர். இந்தியாவை 16 இறையாண்மை உள்ள தேசங்களாக பிரிக்க வேண்டும் எனவும் கேபினட் கமிஷனிடம் மனு அளித்தனர். 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது நடைபெற்ற சீன தாக்குதல் சரியானது தான் எனவும் வாதிட்டனர். கம்யூனிஸ்டுகளில் இருக்கும் சீன ஆதரவு பிரிவினர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போக்குவரத்து போராட்டத்தையும் உருவாக்கி மறைமுகமாக அப்போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். அப்போது மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் ஜோதி பாசு கூட சில காலம் சிறையில் வைக்கப்பட்டார். சீனாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து இந்தியாவின் நலனுக்கு எதிராக நடந்துக் கொண்ட இந்த பிரிவினர்தான் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர்.

இந்திய உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் இந்திரா காந்தியும் காங்கிரஸ்காரர்களும் அவிழ்த்து விட்ட வன்முறைகள், எதிர்கட்சிகள் மீது அடக்குமுறை ஆகியவற்றைப் பற்றி மக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் தொடர்புடைய இயக்கங்கள் மற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், இயக்கங்களுடன் சேர்ந்து ஜனநாயகத்தை மீட்க மேற்கண்ட போராட்டங்களை நடத்தியது. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் போராட்டங்களில் பங்கேற்றதும் இல்லாமல் பின்னணியில் இருந்து கொண்டு நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தியது. மிக உயர்ந்த பாதுகாப்புக்கிடையிலும் பொது நிகழ்ச்சிகளில் கூட இந்த சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்பு போராட்டங்களை பன்னாட்டு ஊடகங்கள் அப்போது வெளியிட்டன.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கற்றவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தாங்கள் பாதிக்கப்பட்டதை பல வகையில் எழுதிக் கொடுத்து வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர். இந்திய நவீன வரலாற்று ஜாம்பவான்களான ராமச்சந்திர குஹா இந்த வகையில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்களிப்பு குறித்து பல தகவல்களை சேகரித்து வெளியிட்டார்.

மற்றபடி குற்றப் புலனாய்வு துறையினர் யாரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மீது எந்த குறைகளையும் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட போராட்டத்தை தவிர வேறு எந்த தப்பையும் செய்ததாக அவர்களின் ஆவணங்களில் எந்த குறிப்புகளும் கிடையாது.

மும்பையை பொறுத்தவரை போலீஸ் அதிகாரிகள் இந்த அவசர நிலையில் சற்று நாகரீகமாகவே நடந்து கொண்டுள்ளனர். அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்த பஞ்சாப், கர்நாடகா, மத்திய பிரதேஷ் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் போலீசார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு சிறையில் தொந்தரவு கொடுத்தனர். அந்த டார்ச்சர் அமெரிக்க ராணுவத்தால் குவான்டன்மோ முகாமில் வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது போல அப்போது வர்ணிக்கப்பட்டது. ஒரு ஆட்சியாளர்களிடம் எல்லை மீறிய அதிகாரங்கள் இருந்தால் அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதற்கு பெண் போராட்டக்காரர்களையும் சேர்த்து அவர்களுக்கு அரசு கொடுத்த டார்ச்சர்களில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். பல இடங்களில் போராட்டக்காரர்கள் மோசமான குற்றவாளிகள் இல்லை என்பது தெரிந்தும் அவர்களை குழுவினராக நிற்க வைத்து நிர்வாணமாக்குவது, அவர்களை அந்த நிலையிலேயே நீண்ட நாள் வைத்திருத்தல், சிகரட்டால் சுடுவது, பலர் முன்னிலையில் போலீசார் இயற்கைக்கு மாறாக ஓரினசேர்க்கை உறவு கொள்ள வைப்பது, கைதிகள் ஒருவர் வாயில் ஒருவர் சிறுநீர் கழிக்க செய்வது, கூர்மையான ராடுகளால் அழுத்துவது, தண்ணீர் கொடுக்காமல் பல நாட்களுக்கு தவிக்க விடுவது, பின்பக்கம் கைகளை கட்டி வைத்து சில மணி நேரங்களுக்கு ஏரோப்ளேன் தண்டனை என்ற பெயரில் தொங்க விடுவது, நகங்களை பிடுங்குவது போன்ற மிக கொடூரமான டார்ச்சர்கள் மிசா சட்டத்தை எதிர்த்து சிறைக்கு சென்ற போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல பேர் இதை பதிவு செய்து வைத்திருந்து ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஷா கமிஷனிடம் இவற்றை தெரிவித்தனர்.

ஆனால் இதனிடையே 1980-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஷா கமிஷனின் அறிக்கைகளை அழித்து விட்டது. ஆனால் இந்த அறிக்கையின் நகல் காப்பி அமேசான் வலைதளம் மூலம் கிடைத்தது. இதை அப்போதைய திராவிட முன்னேற்ற கழக தலைவர்களில் ஒருவராக இருந்து, பின் நாளில் ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றிய இரா.செழியன் எடிட் செய்திருந்தார். ஆனால் இப்போது அது தீர்ந்து விட்டது , கிடைக்கவில்லை. கமிஷனால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் காந்தி நிறைய இடையூறுகளை கொடுத்தார். தற்போதைய மாணவர்கள், இளைஞர்கள் அவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வன்முறைக்காரர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள்  சொல்லும் பொய்யை உடைக்க முடியும்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் துயரங்களை பற்றி குறிப்பிடாமல் இது முழுமை அடையாது. தேசத்துக்கு எதிராக அவரும் அவரது சகோதரர் லாரன்சும் வெடிகுண்டுகள் வைத்து பயங்கரவாதம் செய்ததாக “பரோடா சதி வழக்கு” என்ற வழக்கு போடப்பட்டு அவர்களை சிறையில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள். இந்த வழக்கு அப்போது பிரபலமாக பேசப்பட்டது. சிறையில் லாரன்சுக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல துன்பங்கள், கொடுமைகள் செய்யப்பட்டன. ஜெயிலில் இருந்து ஒரு நோயாளியாக வெளியே வந்த அவர் கடைசி வரை நோயாளியாகவே வாழ்ந்து, 2005-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். ஆனால் இடையில் 1977-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு இருவர் மீதும் போடப்பட்டிருந்த வழக்குகளை வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் தொழில் அதிபர் வீரேன் ஷாவின் பெயரும் சேர்க்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்தார். 

இந்திரா அமல்படுத்திய அந்த நெருக்கடி காலக்கட்டத்தில் பத்திரிகைகள் அரசுக்கு அடி பணிந்து சென்ற போதிலும், கோயங்கா, வர்கீஸ் போன்ற துணிச்சல்மிக்க பத்திரிக்கையாளர்கள் அரசை எதிர்த்து தைரியமாக எழுதினார்கள். அப்போது பத்திரிகைகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்டப் பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டன. சென்சார் கமிட்டியால் அனுமதிக்கப்பட்ட பிறகே செய்தித்தாள்களில் செய்திகள் அச்சிட அனுமதிக்கப்பட்டன. அச்சிடுவதற்கான காகிதங்களுக்கு அரசிடம் கெஞ்சி பிச்சை வாங்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. அந்த மிக மோசமான சூழ்நிலையை பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிடுகையில் “வளைந்து கொடு என கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் பத்திரிகைகள் கீழே விழுந்து ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது” என்றார். அப்போது கோயங்கா தனது பத்திரிக்கையில் தலையங்கப் பகுதியில் எதையும் எழுதாமல் வெற்றிடமாக விட்டு விடுவார். இது தெரிந்த அரசு தலையங்கப்பகுதியை வெற்றிடமாக விடக்கூடாது என அச்சுறுத்தி ஆணை பிறப்பித்தது. ஆனால் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து அரசுக்கு பணியாமலே அவசரகாலம் முழுவதும் செயல்பட்டது. அரசு ஏற்படுத்திய அத்தனை தடைகளையும் சமாளித்து நின்றதால் கோயங்காவின் மீது பல வழக்குகளை தொடுத்து பல தொல்லைகளை அளித்தனர். அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜனநாயக படுகொலைகள் என்கிற தலைப்பில் வெளி வந்த செய்தி மிகவும் பிரபலமாக இருந்தது. இதை அடுத்து, செய்திகள் மிகவும் கண்காணிக்கப்பட்டதால் செய்திகள் ரகசிய கூட்டங்கள், வதந்திகள், தொலைபேசிகள் மூலம் மட்டுமே வெளியே சென்றன. இந்த நிலையில் தொலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டன, ஒட்டுக்கேட்கப்பட்டன.  அப்போது, போராட்டக்காரர்கள் சிறிய துண்டுச்சீட்டுக்களில் செய்திகளை அச்சடித்து அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் ரகசியமாக விநியோகித்தனர். அந்த சமயங்களில் அரசுக்கு ஜால்ரா அடித்த பத்திரிகைகள் சிலவும் உண்டு. அதில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய கட்டுரைகள். அந்த கட்டுரைகள் இந்திராவின், அவர் மகன் சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகளை பாராட்டியது. மேலும் எமர்ஜென்சியால் நாட்டில் பல வளர்ச்சிக்கான மாற்றங்கள் ஏற்பட்டதாக புகழ்ந்து தள்ளினார்.

சஞ்சய் காந்தியை மிகச்சிறந்த நவீன முன்னோடியாக புகழ்ந்து தள்ளினார். அவர் வைத்திருந்த டின் பாக்ஸ் காரை வைத்து அவர் ஒரு சிறந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் எனவும் புகழ்ந்து தள்ளினார். இவ்வாறு அவர் இந்திரா குடும்பத்துக்கும், எமர்ஜென்சி நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருந்ததால் அவருக்கு அதிக பரிசுகள், விருதுகள் கிடைத்தன. பதவிகள் தரப்பட்டன. அந்த கால கட்டத்தில் காங்கிரசுக்கு அனுகூலமாக இருந்த பத்திரிகைகள் நல்ல சன்மானங்களை பெற்றன.

அந்த காலக்கட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட பல பத்திரிக்கைகள்  குறிப்பாக பிரபல பெண் எழுத்தாளர் போரிபந்தர் ஆகியோர் அவசர சட்டத்தால் வேலை செய்யும் கலாச்சாரம் அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றத்துடன் மாறியதாகவும், நாட்டு மக்கள் இடையே இது சிறந்த ஒழுக்கமான தலைமுறையை உருவாக்குகிறது என புகழ்வதாகவும் மக்கள் இந்திரா சர்வ வல்லமை உள்ள பெண்மணி என புகழ்வதாகவும் கூறி சரமாரியாக புகழ் கட்டுரைகளை எழுதி தள்ளினார். இந்தப் பிரச்சாரங்கள் இரஷ்யாவில் சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவாக  செய்யப்படுவது போல இருந்தன. அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் இந்தப் பத்திரிகைகள் அதைப் புகழ்ந்து போராட்டக்கரர்களுக்கு எதிரான பதிலடியை தந்தன. ஆனால் இந்திரா கொண்டு வந்த அனைத்து சட்டங்களும் மக்களின் உரிமையை நசுக்குவதற்காகவே கொண்டு வரப்பட்டன

ஒரு வழியாக 1977-ஆம் ஆண்டு எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசியல் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. நாடு முழுவதும் நடைபெற்ற சத்யாகிரகப் போராட்டங்கள் மக்களை உசுப்பி விட்டன.  இதனால் இந்திராவுக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. FISI இயக்கத்தினர் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் பல நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தத்தை தந்தன. இந்த நிலையில் தேர்தல் நெருங்கியது. தேர்தலை சந்திக்க வேண்டி இந்திரா தனது கெடுபிடிகளை குறைத்தார். அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம் என்கிற போதையை ஏற்றி இந்திராவை உசுப்பேற்றினர். அப்போது கூட இந்திரா என்றால் இந்தியா… இந்திய என்றால் இந்திரா என்ற கோஷத்தை அவர்கள் விடவில்லை. ஆனால் அவர்கள் படிக்காத பாடத்தை இந்திய மக்கள் தேர்தலில் வாக்களித்து அவர்களை தோற்கடித்து படிக்க வைத்தனர். தங்கள் வலிமையையும், ஜனநாயகத்தின் வலிமையையும் தங்கள் வாக்குரிமை மூலம் நிரூபித்துக் காட்டினர். 

ஆரம்பத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த சூழ்நிலையில் மக்கள் ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து வெளிப்படையாக ஆதரிக்க பயந்தனர். என்றாலும், தேர்தல் வாக்குச்சாவடி பணிகள் திட்டமிடப்பட்டன. மூத்த தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில் ஒரு சாதாரண அரசியல் அறிவைக் கொண்டு தேர்தல் பணிகளில் களம் இறங்கினர்.

காங்கிரசை தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சி அமைத்து அந்த ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த போது ஜனதா கட்சிக்குள் இருந்த சோஷலிச குழுவினர் மிகவும் மோசமான அரசியலை முன்னெடுத்தனர். வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஜனதா கட்சிக்குள் ஏற்கனவே இணைந்திருந்த முன்னாள் ஜன சங்க தலைவர்கள் இரட்டை உறுப்பினர் கொள்கையை  கடைபிடிப்பதாகக் கூறி கட்சியை உடைக்கும் விதத்தில் தகராறு செய்தனர். ஆனால் இந்த விசுவாசம் அவர்களுக்கு ஜனதா கட்சியை தோற்றுவிக்கும் போதே இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர்கள் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து போற்றிப் புகழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்து கடந்த பல ஆண்டுகளாக கொண்டிருந்த தவறான புரிதல் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்ததற்கும் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்க தலைவர்களுடன் நெருங்கிப் பழகுகிய போதுதான் தங்கள் கண்கள் திறக்கப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொண்டிருப்பதற்கும் சான்றுகளும் உள்ளன. இதில் ஒரு உண்மை என்னவென்றால் ஜன சங்கமும், கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே அமைப்பு ரீதியான கட்சிகளாக இருந்தன. மற்ற கட்சிகள் அவ்வாறு இல்லாததால் ஜனதா கட்சியின் அதிகாரத்தை அவர்கள் தங்கள் இஷ்டம்போல வளைக்க ஆரம்பித்தனர். இடைத்தேர்தல் வந்தால் அப்போது நம்முடைய தனிப்பட்ட செல்வாக்கை அதிகாரத்தில் இருக்கும் போதே வெளிக் காட்ட வேண்டும். அதன்பிறகு கட்சியை தாங்களே கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கமும் அவர்களுக்கு இருந்தது. இதற்காக ஜன சங்கத்துக்கு முந்தைய உறுப்பினர்களாக இருந்த குறிப்பிட்ட அளவிலான எம்.பி-க்கள் சிலரையும் அவர்கள் குறிப்பெடுத்து வைத்திருந்தனர். இது போன்ற முதுகில் குத்தும் வேலைகளை திரை மறைவில் இருந்து செய்து கொண்டிருந்த அவர்கள் கடைசியில் ஜனதா கட்சியை உடைத்தே விட்டார்கள். இதனால் ஆட்சி கவிழ்ந்தது, இந்திரா காந்தியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி திரும்பி பிரதமராக வரும் நிலை ஏற்பட்டது.

இந்த கசப்பான அரசியல் சம்பவங்களை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அரசியலில் ஒழுக்க பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த புதியதோர் சகாப்தத்தை உருவாக்கும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்பட்டது. அதன் விளைவாக தனது அமைப்பின் செயல்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் அகில பாரதிய வித்யாதி பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய மஸ்தூர் சங் உட்பட பல துணை அமைப்புகளை ஏற்படுத்தியது. மேலும் பல புதிய இடங்களில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி சங்கப் பணிகளை விரிவு படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் மூடப்பட்ட அந்த காலக் கட்டத்தில் தொண்டர்கள் சமூகப் பணிகள் புரிவதற்காக பல திட்டங்களை தீட்டுவதற்கான அழுத்தங்களை தந்ததும் அந்த சூழ்நிலைதான். மேலும் ஜனநாயக கட்டமைப்புகள் உயிருடன் செயல்பட விரும்புவோருக்கு ஆர்.எஸ்.எஸ் தான் யார் என்பதை மெய்ப்பித்துக் காட்டியது. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்களும், அதன் தொடர்புடைய அமைப்பின் சேவகர்களும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான இந்த காலக் கட்டத்தில் சங்கத்தின் சகிப்புத்தன்மை புதிய அளவுகளை எட்டியது. அதன்பிறகு பரவலான, வேகமான ஒரு வளர்ச்சியை அடைந்தது.

புதிய சேவகர்களுக்கு இது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட போது அமைப்பின் முன்னோடிகள் கண்ட அனுபவங்களை எமெர்ஜென்சி இரண்டாம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்தது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களை அடுத்து இரகசிய பணிகள் செய்தல், சிறை வைக்கப்பட்ட இடத்தில் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து சத்யாகிரக போராட்ட முறையில் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவை சங்கத்தின் இளைய தலைமுறையினருக்கு பயிற்சிக் களங்களாக அமைந்தன. அவற்றை ஒருவருக்கொருவர் கற்றுக் கொண்ட அதே சமயம் சங்கத்தின் குடையாய் வெளியே விரிந்து நின்ற பலரிடம் இருந்தும் பலவித அனுபவங்களை கற்றுக் கொண்டனர். அரசியல் சிந்தனைகள் மற்றும் தேர்தல் அரசியலில் நல்ல விழிப்புணர்வை பெற மற்றவர்களின் கருத்துக்களையும், குறிப்பாக மற்ற அரசியல் கட்சிகளின் மதிப்புடைய கருத்துக்களைப் பெறவும் அப்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. முன்னதாக நம் எதிர்ப்பாளர்கள் நம்மை வேடிக்கையாக பார்த்தனர், ஆனால் எமர்ஜென்சிக்குப் பிறகு அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அரசியல் சமூக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் மரியாதைக்குரிய இயக்கமாக பார்க்கப்பட்டது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தித் தந்தது.

ஜனநாயகத்தை மீட்டதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் போராட்டங்கள் குறித்து தெரியப்படுத்தும் ஆவணமாக தமிழில் பல நூல்கள் இல்லை.

அரசியல் என்பது கறை படிந்த, பழி வாங்கும் போக்கு கொண்டதாக மாறி இருந்த அந்த நாட்களில் அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ பாலாசாகேப் தியோராஸ் 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியினரை சரியான முறையில் வழிகாட்டி உற்சாகப்படுத்தினார் என்பது இன்றளவும் நம் நினைவில் நிற்கிறது. இந்திரா காந்தி உள்ளிட்ட அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுவான குணமாகும். ஏனெனில் இது நாட்டின் அனைத்துச் சுற்று வளர்ச்சியிலும், யாருக்கு எதிராகவும் எந்த  விரோதமும் இன்றி அனைவர் நல்வாழ்க்கைக்கும் பயனளிக்கும் வழிகாட்டியாக உள்ளது.

பின்குறிப்பு – இந்த கட்டுரை திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுப்பட்ட பகுதிகள். 

S G சூர்யாவின் தளத்தில் இருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது  எமெர்ஜென்சி காலத்தைப்பற்றி இந்தப் பக்கங்களில் சில பதிவுகள் உண்டு. ஆனால் RSS இந்த  இரண்டாவது விடுதலைப்போரில் எப்படிப்பட்ட பங்கு வகித்தது என்பதை எமெர்ஜென்சி  நாட்களில் மெல்ல  மெல்ல இடதுசாரியாக மாறிக்கொண்டிருந்த எனக்கு  முழுமையாக  அறிந்து கொள்ள வாய்ப்பிருந்ததில்லை. 

ஒருநாள் கூத்துக்கு மீசை ::: சரத் பவார்! (ஃபரூக்) அப்துல்லாக்கள்!

மேற்கு வங்கம், தமிழ்நாடு இரு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாடிக்கையாளரை ஜெயிக்க வைத்த மிதப்போ என்னவோ, பிரசாந்த் கிஷோர் அகில இந்திய அளவில் தன்புகழைப் பரப்ப முனைந்திருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப்போய்விடலாம் தான்!ஆனால் அவருடைய திட்டத்தில் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு சரத்பவாரை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் ஏற்பாடு நடந்திருக்கிறது.  காங்கிரசை விட்டுவிட்டு கலந்துகொள்ள விரும்பாமல் திமுக மற்றும் ஒன்றிரண்டு கட்சிகள் தவிர்த்துவிட்டன என்பதிலேயே பிரசாந்த் கிஷோர் முயற்சி தொடங்கும்  முன்னமே தோற்றுவிட்டது.

இந்திய அரசியலில் முன்றாவது, 4வது அணி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என ஆரம்பிக்கிற சேகர் குப்தா மெதுவாக 20% ஓட்டை வைத்திருக்கும் காங்கிரசை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணியை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்று தன்னுடைய காங்கிரஸ் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்ட மாதிரியே இந்த 23 நிமிட வீடியோ இருக்கிறது. செவ்வாய்க் கிழமையன்று டில்லியில் உள்ள சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் பவார் வந்ததே தெரியாத அளவுக்குக் கொஞ்ச நேரம் இருந்தமாதிரி போட்டோ செஷனில் தலை காட்டிவிட்டு தன்னுடைய கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுக்கூட்டத்தில்  ஆலோசனை செய்யப் போய்விட்டார் என்கிறது செய்தி. TOI நையாண்டி இங்கே.


ஜூன் 11,21,23 என்று இரண்டுவாரங்களுக்குள் சரத் பவாரைத் தேடிவந்து பிரசாந்த் கிஷோர் மூன்றுமுறை சந்தித்தார் என்பதில் என்ன உள்குத்து இருக்கும் என்று ஊடகங்கள் தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கின்றன. அதற்காகவே சந்தித்தார்களோ என்னவோ?

சரத் பவாருக்கு 80 வயதாகிவிட்டது. மகாராஷ்டிராவில் ஒரு சில ஏரியாக்களில் மட்டுமே செல்வாக்குள்ளவர் என்றாலும் கட்சிபேதமில்லாமால் சர்வ கட்சிகளுடனும்  சுமுகமான உறவை மெயின்டைன் பண்ணுகிறார் என்பதாலேயே பவாரை பிரதமர் முகமாக 2024 இல் காட்ட முடியுமா? அல்லது பவார் கைகாட்டுகிற ஒருவர், மம்தா பானெர்ஜி என்றேகூட வைத்துக் கொள்வோம், பிரதமராகி விட முடியுமா? சரத் பவாருக்குத் தன்மகள் சுப்ரியா சுலேவை மகாராஷ்டிர முதல்வராக்கிப் பார்க்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கும் இது சரியான தருணமல்ல. அப்புறம் எதற்காக பவாரை  முன்னிறுத்தி இப்படி ஒரு களேபரம்? !!   


இருவருடங்களுக்கு  முன் ஆர்டிகிள் 370 நீக்கப் பட்ட பிறகு  ஜம்மு காஷ்மீர் அரசியல்கட்சித்  தலைவர்கள் பிரதமருடைய அழைப்பையேற்று டில்லியில் இன்று சந்தித்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் முதல்வர்களாக இருந்த நான்குபேர் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, (NC) மெஹபூபா முஃப்தி (PDP), குலாம் நபி ஆசாத் (Cong) உடன் ஜம்முகாஷ்மீரிலுள்ள உதிரிக்கட்சித்தலைகள் சிலரும் கலந்துகொண்ட கூட்டத்தில் என்ன பேசப் பட்டதாம்? NDTV செய்திகளின் படி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை உரியநேரத்தில் தர உறுதியளித்தார் பிரதமர் என்று சொன்ன கையோடு இந்த சந்திப்பின் முக்கிய அஜெண்டாவாக தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஒத்துழைப்பைக் கோரியதுதான் இருந்தது என்றும் சொல்கிறார்கள். தேர்தல்கள் நடத்தும் முன் தொகுதிகளின் எல்லை, எண்ணிக்கையை  மறுவரையறை செய்ய அரசின் உத்தேசத்தை விவாதிக்கத்தான் இந்தக்கூட்டமே. பெரும்பாலானோர் ஆதரவு இருந்ததாகச் சொன்ன கையோடு,ஒமர் அப்துல்லா அநேகமாக எல்லாத்தலைவர்களுமே இந்த மறுவரையறை விஷயத்தில் அதிருப்தியோடு இருந்ததாக சொன்னாரென்று ஒரு பிட்டையும் சேர்த்துப் போடுவது NDTV இஷ்டைல். 

Omar Abdullah told reporters that "almost all leaders" were unhappy with delimitation only in Jammu and Kashmir. "In other states, delimitation will be taken up in 2026, why has been Jammu and Kashmir been singled out? We told the PM delimitation is not needed," he said, adding that "trust has broken between the Centre and Kashmir".  என்பதன் பின்னால் இருக்கிற அப்துல்லாக்களின் வஞ்சகம்  என்ன என்று நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா? நினைவு படுத்திக் கொள்ளவில்லை என்றால் அப்துல்லாக்கள் கேட்பது நியாயமாகத்தானே இருக்கிறது என்றுதான் தோன்றும். 

1980களின் மத்தியில் ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்த சமயத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தங்களின் படி ஜம்மு காஷ்மீரில் வாக்களிக்கும் உரிமை அங்கே நீண்ட காலமாக வசித்துவந்த பஞ்சாபிகளுக்கும், லடாக் பகுதி மக்களுக்கும் மறுக்கப்பட்ட வஞ்சகம் delimitation இப்போது கொண்டுவரப்பட்டால் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதில் அப்துல்லாக்கள்  கவலை, அச்சம், புரிந்து கொள்ளக்கூடியதே! காஷ்மீரின் ஆதிக்குடிகளான பண்டிட்டுகளை அச்சுறுத்தி மாநிலத்தைவிட்டே ஒழித்த கதை என்று இன்னமும் பலவிஷயங்கள் இருக்கின்றன  

அப்துல்லாக்கள்.  முஃப்திக்கள் சூறையாடுகிற இடமாக பாகிஸ்தானிகளுக்கு இடம்கொடுக்கிற மாநிலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இதுநாள்வரை இருந்தது போதாதா?  

மீண்டும் சந்திப்போம்.    

#தமிழகஅரசியல் இடைவெளி இல்லாத நான்-ஸ்டாப் காமெடி!

அது எந்தக்கழகமாக இருந்தாலும் சரி கழக ஆட்சியில் காமெடிக்குப் பஞ்சமிருந்ததே இல்லை! அரசியல் தெரியாத ஆசாமிகள்தான் இதுபோலக்காமெடிகளைக் கொடுமை என்றும் கிறுக்குத்தனங்கள் என்றும் பேத்துவார்கள்! இன்றைய காமெடிகளைக் கொஞ்சம் போலப் பார்த்துவிடலாமா?  மொத்தமாகப் பார்த்தால் நெஞ்சு தாங்காது என்பது வேறுவிஷயம்! 


ஹரன் பிரசன்னா போட்டிருந்த விளக்கப்படம் கீழே 


அடேய் ஒரு பயலையும் நம்பாத..
இங்க காக்கா, குருவி, அணிலுன்னு உன்ன பார்க்க வச்சிட்டு அந்த பக்கம் வண்டி வண்டியா எத கடத்துறானுகளோ யார் கண்டா?
அணில பார்த்துட்டு கடல் மாட்டு வண்டிய விட்டுராதீங்கடா....

இப்படி உஷாரையா உஷாரு என்று எச்சரிக்கை செய்து இருப்பதை எத்தனைபேர் கவனித்தார்களோ தெரியாது!


அடுத்த வல்லுநர் குழுவுக்கு ஆலோசனை ரெடி! 


 

அட! அப்பிராணி மன்மோகன்சிங்கை நினைக்கக்கூட இங்கே  ஆளிருக்கிறதா ? எனக்கு மயக்கமே வந்துவிட்டது! 


இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் ஆளுநர் நமது வாழ்த்துக்குரியவரே! union government என்பதைத் தமிழில் ஒன்றிய அரசு என்று போட்டிருப்பது அவருக்குத்தெரியுமோ தெரியாதோ?


பானாசீனா, ரகுராம் ராஜன் செய்த வேலை! 1.30 லட்சம் கோடிரூபாய் மதிப்புக்கு எண்ணெய்க் கடன் பத்திரங்களை  2021. 2023. 2024, 2025,2026  நிதியாண்டில் திருப்பிச்செலுத்த வேண்டியிருப்பதும் பெட்ரோல் டீசல் விலையில் சுமையாக இருக்கிறது.  


கரோனா மூன்றாவது அலையின் தாக்குதலை எப்படி தடுப்பது? மற்றும் சமாளிப்பது என்பது குறித்தும், அதற்குண்டான பல ஆயத்த பணிகளை மாநில அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நேரமிது. எனவே இரண்டாவது அலைக்கான ஊரடங்கே இன்னும் முழுமையாகத் தளர்வு செய்யப்படாத நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.என்று ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. முழு அறிக்கையையும் இங்கே வாசிக்கலாம்.

என்னதான் காமெடி என்று ஆரம்பித்தாலும் சீரியசாகத்தான் பதிவை முடிக்க வேண்டியிருப்பது தமிழக அரசியல் களத்தின் ட்ராஜெடி.

மீண்டும் சந்திப்போம்.