ஒருநாள் கூத்துக்கு மீசை ::: சரத் பவார்! (ஃபரூக்) அப்துல்லாக்கள்!

மேற்கு வங்கம், தமிழ்நாடு இரு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாடிக்கையாளரை ஜெயிக்க வைத்த மிதப்போ என்னவோ, பிரசாந்த் கிஷோர் அகில இந்திய அளவில் தன்புகழைப் பரப்ப முனைந்திருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப்போய்விடலாம் தான்!ஆனால் அவருடைய திட்டத்தில் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு சரத்பவாரை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் ஏற்பாடு நடந்திருக்கிறது.  காங்கிரசை விட்டுவிட்டு கலந்துகொள்ள விரும்பாமல் திமுக மற்றும் ஒன்றிரண்டு கட்சிகள் தவிர்த்துவிட்டன என்பதிலேயே பிரசாந்த் கிஷோர் முயற்சி தொடங்கும்  முன்னமே தோற்றுவிட்டது.

இந்திய அரசியலில் முன்றாவது, 4வது அணி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என ஆரம்பிக்கிற சேகர் குப்தா மெதுவாக 20% ஓட்டை வைத்திருக்கும் காங்கிரசை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணியை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்று தன்னுடைய காங்கிரஸ் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்ட மாதிரியே இந்த 23 நிமிட வீடியோ இருக்கிறது. செவ்வாய்க் கிழமையன்று டில்லியில் உள்ள சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் பவார் வந்ததே தெரியாத அளவுக்குக் கொஞ்ச நேரம் இருந்தமாதிரி போட்டோ செஷனில் தலை காட்டிவிட்டு தன்னுடைய கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுக்கூட்டத்தில்  ஆலோசனை செய்யப் போய்விட்டார் என்கிறது செய்தி. TOI நையாண்டி இங்கே.


ஜூன் 11,21,23 என்று இரண்டுவாரங்களுக்குள் சரத் பவாரைத் தேடிவந்து பிரசாந்த் கிஷோர் மூன்றுமுறை சந்தித்தார் என்பதில் என்ன உள்குத்து இருக்கும் என்று ஊடகங்கள் தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கின்றன. அதற்காகவே சந்தித்தார்களோ என்னவோ?

சரத் பவாருக்கு 80 வயதாகிவிட்டது. மகாராஷ்டிராவில் ஒரு சில ஏரியாக்களில் மட்டுமே செல்வாக்குள்ளவர் என்றாலும் கட்சிபேதமில்லாமால் சர்வ கட்சிகளுடனும்  சுமுகமான உறவை மெயின்டைன் பண்ணுகிறார் என்பதாலேயே பவாரை பிரதமர் முகமாக 2024 இல் காட்ட முடியுமா? அல்லது பவார் கைகாட்டுகிற ஒருவர், மம்தா பானெர்ஜி என்றேகூட வைத்துக் கொள்வோம், பிரதமராகி விட முடியுமா? சரத் பவாருக்குத் தன்மகள் சுப்ரியா சுலேவை மகாராஷ்டிர முதல்வராக்கிப் பார்க்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கும் இது சரியான தருணமல்ல. அப்புறம் எதற்காக பவாரை  முன்னிறுத்தி இப்படி ஒரு களேபரம்? !!   


இருவருடங்களுக்கு  முன் ஆர்டிகிள் 370 நீக்கப் பட்ட பிறகு  ஜம்மு காஷ்மீர் அரசியல்கட்சித்  தலைவர்கள் பிரதமருடைய அழைப்பையேற்று டில்லியில் இன்று சந்தித்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் முதல்வர்களாக இருந்த நான்குபேர் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, (NC) மெஹபூபா முஃப்தி (PDP), குலாம் நபி ஆசாத் (Cong) உடன் ஜம்முகாஷ்மீரிலுள்ள உதிரிக்கட்சித்தலைகள் சிலரும் கலந்துகொண்ட கூட்டத்தில் என்ன பேசப் பட்டதாம்? NDTV செய்திகளின் படி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை உரியநேரத்தில் தர உறுதியளித்தார் பிரதமர் என்று சொன்ன கையோடு இந்த சந்திப்பின் முக்கிய அஜெண்டாவாக தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஒத்துழைப்பைக் கோரியதுதான் இருந்தது என்றும் சொல்கிறார்கள். தேர்தல்கள் நடத்தும் முன் தொகுதிகளின் எல்லை, எண்ணிக்கையை  மறுவரையறை செய்ய அரசின் உத்தேசத்தை விவாதிக்கத்தான் இந்தக்கூட்டமே. பெரும்பாலானோர் ஆதரவு இருந்ததாகச் சொன்ன கையோடு,ஒமர் அப்துல்லா அநேகமாக எல்லாத்தலைவர்களுமே இந்த மறுவரையறை விஷயத்தில் அதிருப்தியோடு இருந்ததாக சொன்னாரென்று ஒரு பிட்டையும் சேர்த்துப் போடுவது NDTV இஷ்டைல். 

Omar Abdullah told reporters that "almost all leaders" were unhappy with delimitation only in Jammu and Kashmir. "In other states, delimitation will be taken up in 2026, why has been Jammu and Kashmir been singled out? We told the PM delimitation is not needed," he said, adding that "trust has broken between the Centre and Kashmir".  என்பதன் பின்னால் இருக்கிற அப்துல்லாக்களின் வஞ்சகம்  என்ன என்று நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா? நினைவு படுத்திக் கொள்ளவில்லை என்றால் அப்துல்லாக்கள் கேட்பது நியாயமாகத்தானே இருக்கிறது என்றுதான் தோன்றும். 

1980களின் மத்தியில் ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்த சமயத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தங்களின் படி ஜம்மு காஷ்மீரில் வாக்களிக்கும் உரிமை அங்கே நீண்ட காலமாக வசித்துவந்த பஞ்சாபிகளுக்கும், லடாக் பகுதி மக்களுக்கும் மறுக்கப்பட்ட வஞ்சகம் delimitation இப்போது கொண்டுவரப்பட்டால் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதில் அப்துல்லாக்கள்  கவலை, அச்சம், புரிந்து கொள்ளக்கூடியதே! காஷ்மீரின் ஆதிக்குடிகளான பண்டிட்டுகளை அச்சுறுத்தி மாநிலத்தைவிட்டே ஒழித்த கதை என்று இன்னமும் பலவிஷயங்கள் இருக்கின்றன  

அப்துல்லாக்கள்.  முஃப்திக்கள் சூறையாடுகிற இடமாக பாகிஸ்தானிகளுக்கு இடம்கொடுக்கிற மாநிலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இதுநாள்வரை இருந்தது போதாதா?  

மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!