#தலைமைப்பண்பு ஊடகங்களில் வாசகர் கடிதம்! P V நரசிம்மராவ்!

பள்ளி மாணவனாக செய்தித்தாட்களை வாசிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே செய்திகளோடு  தலையங்கம், ஆசிரியருக்கு வாசகர் கடிதம் பகுதிகளை ஒரு எழுத்து விடாமல் படிக்கிற பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. இன்றும் செய்திகளுக்கு வாசகர்கள் எழுதும் பின்னூட்டம் ஒன்று விடாமல் வாசிப்பதுண்டு தான்! இவையில்லாமல் செய்தியை முழுதாய் வாசித்த திருப்தி கிடைப்பதில்லை என்பது என்னுடைய அனுபவம்.


தினமலர் நாளிதழுக்கு ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு' கட்டினாலும், அதில் தி.மு.க.,வினரின் தீராத பிரிவினை மோகம் அப்பட்டமாய் தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான், சுதந்திரத்திற்கு துாண்டு கோலாய் இருந்த 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சி. சட்டசபையிலேயே, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரை அப்படி பேச செய்து, முதல்வர் ஸ்டாலின் ரசித்துள்ளார்.

கடந்த நுாற்றாண்டில் நடந்த போர், பிரிவினை ஆகியவற்றால், உலகம் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், நம் கண் எதிரே உள்ளன. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. வங்கதேசத்தில் பழமைவாதிகளின் சேட்டைகளை ஒடுக்க முடியவில்லை. சீனாவின் பிடியில் சிக்கி, ஜனநாயகத்தை தொலைத்து விட்டது, நேபாளம். இலங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.

பிரிவினை தேடும் எந்த நாடும் முன்னேறியதில்லை. அங்கு சர்வாதிகாரமும், பயங்கரவாதமும் தான் இருக்கும். நம் மாநிலங்களிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை தீர்ப்பதற்கே, மத்திய அரசுக்கு நேரம் போதவில்லை. இதனிடையே, ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை அமைத்தல், 'நீட்' என, அனைத்து விஷயத்திலும் தமிழகம், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மாநில சுயாட்சி, மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதே, தமிழகத்திற்கு நல்லது.என முடித்திருக்கிறார் 


முன்னாள் பிரதமர் P V நரசிம்மராவ் பிறந்த நூற்றாண்டு இது. இந்தியப்பிரதமர்களில் தகுதிக்கும் மீறி மிகவும் வியந்தோதப்பட்டவர் நேரு என்றால் தகுதிகள் நிறைய இருந்தும் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவர் நரசிம்ம ராவ் என்பது சுதந்திர இந்தியாவின் சீரழிந்த அரசியலின் சாபக்கேடுதான் இல்லையா?

தொங்கு நாடாளுமன்றம், ராஜீவ் காந்தி படுகொலை, பாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் போன்ற சிக்கல்களுக்கிடையில் பிரதமரானவர் பி.வி.நரசிம்ம ராவ். ஆயினும் அவர் பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்தரும் வகையில் முறையே 73-வது, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்ததாகும். நரசிம்ம ராவ் பிரதமரானபோது கிராம வளர்ச்சித் துறையின் கேபினட் அமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் பிரதமர் ஒருவர் கிராம வளர்ச்சித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்ததில்லை.

விடுதலை பெற்ற இந்தியாவினுடைய அரசமைப்பின் அடித்தளமாக, தன்னாட்சி பெற்ற வலுவான கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என காந்தி வலியுறுத்திவந்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இது குறித்த ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முடியாததால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய இடம் இல்லாமலே போயிற்று. ராஜீவ் காந்தி கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். மக்களவையில் நிறைவேறிய மசோதாவானது மாநிலங்களவையில் தோல்வியுற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானவுடன் கிராம வளர்ச்சித் துறையின் அதிகாரிகளை அழைத்து, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசமைப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரிக்கும்படி பணித்தார். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மேலும், மாநிலச் சட்டமன்றங்களில் பெரும்பான்மையான சட்டமன்றங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும். நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசால் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்றே இதைச் செய்து முடிக்கும் ஒரே வழி என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார் என்று ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரையை இந்து தமிழ்திசை தளத்தில் முழுமையாக வாசித்துப் பாருங்களேன்! தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக - அதிமுக பிரதிநிதிகள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் தருவதைத் தாங்கள் வரவேற்றபோதும் வலுவான மாவட்டப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதாகக் கூறினார்கள் என்பது போகிறபோக்கில் சொல்லப் பட்டது தானா?   

தலைமைப்பண்புக்கு உதாரணமாக நரசிம்ம ராவ் என்கிற ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிற விதமாக  இந்தக் கட்டுரையை எழுதிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.ரகுபதி அவர்களுக்கு நன்றியுடன்! பிரசுரம் செய்த இந்து குழுமத்துக்கும் நன்றி.   

மீண்டும் சந்திப்போம். 

நீட் தேர்வு ரத்து என்கிற அரசியல்! உயர் நீதிமன்றம் வைத்த கொட்டு!

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதில் நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனவும் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019-ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல .நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது என்றும் மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்துக்கு முரணாக மாநில அரசு செயல்பட முடியாது எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், தேசிய நலனின் அடிப்படையிலும், நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மாநில அரசு, இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது எனவும், ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க ஏதுவாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜூன் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, நீட் தேர்வு நடைமுறையைப் புறந்தள்ளும் வகையில், தமிழக அரசு குழு அமைத்திருப்பதாகக் குற்றம் சாட்டினார்.தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கொள்கை முடிவு எடுக்கப்பட்டு குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால், நீதிபதிகள் குறுக்கிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர் என்பது இன்றைய செய்தி. விடியல் அரசுக்கு நீதிமன்றம் வைத்திருக்கிற முதல் குட்டும் கூட.  

 

சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ‘ஏழு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்ட போதும் ஓய்வு  பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார். 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழு கூறுகிறது. ஒரே கணிணியில் இருந்தும் 1000-த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள். உண்மையில் இது தி.மு.க குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், ‘தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிபிட்ட கரு.நாகராஜன் இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவக் கனவில் விளையாடக் கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் மாசு இதற்கு  பதிலளித்து  பேசிய வீடியோ  17 நிமிடம் 


இந்தமாதிரி கமிஷன்கள் நியமிக்கப்படுவது ஏன், எதற்கு என்பதெல்லாம் அரசியல் LKG க்களுக்குமே தெரிந்த விஷயம். நண்பர் ஜெயகுமார் ஸ்ரீனிவாசன் கமிஷனின் அடிமடியிலேயே கைவைக்கச் சொல்வது முழுதாக ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கிறது. 


நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #84 #பிரிவினைஅரசியல் #ஊழல்அரசியல் #பரஸ்பரசொறிதல்

கடந்த வியாழக்கிழமை டில்லியில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் செய்து வரும் கட்சித்தலைவர்களைச் சந்தித்துப் பேசியதில், உள்ளே நடந்த மூன்று மணிநேர விவாதத்தில் என்ன நடந்தது? ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி இவர்களெல்லாம் மாநில முதல்வர்களாக இருந்தவர்கள். உண்மையைச் சொல்லப் போனால் காஷ்மீர் பிரச்சினை என மிகைப்படுத்தப் பட்ட  ஒன்றை ஊதிப்பெரிதாக்கியவர்கள் இவர்கள்தான்! மக்களுக்காகப் பேசாமல், சுயநலங்களுக்காக ஆட்சியும் அதிகாரமும் வேறு எவர் கைக்கும் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்பதை வெளியே வந்து ஊடகங்களிடம் வீராவேசமாகப் பேட்டி அளித்து வெளிப்படுத்தியவர்கள்.  

வீடியோ 12 நிமிடம் 

ஃபரூக் அப்துல்லா ஊர் போய்ச்சேர்ந்ததும் பொது வாக்கெடுப்பு, நேரு முதல் நரசிம்மராவ் வரை பிரதமராக இருந்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று கிளிப்பிள்ளை மோடுக்குப் போய்விட்டார். மகன் ஒமர் அப்துல்லாவோ  “It took the BJP 70 years to fulfill its political agenda for (Article) 370. Our struggle has just started. We don’t want to fool people by telling them we will get 370 back in these talks. It will be foolish to expect 370 will be back — there has been no indication it will be restored by the current government.” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி கொடுக்கிறார் என்றால் எங்களிஷ்டத்துக்கு விடாவிட்டால் பிரிவினை பேசவும், துணைபோகவும்  தயங்கமாட்டோம் என்கிற தொனி அப்பா மகன் இருவருடைய பேச்சிலும் இருக்கிறது. இங்கே தமிழகத்தில் கூட 1920 நீதிக்கட்சி அரசாண்ட கதையின் நீட்சியாக அறிவித்துக் கொண்டது, ஒன்றிய சர்ச்சை முதல் ஜெய்ஹிந்த் இடம் பெறாததற்கு பாராட்டுரை என்று J & K அரசியல் வாதிகளுடைய சாயல் நிறையவே தெரிகிறதோ?


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியின் கேள்வியில் நியாயமான சந்தேகம் எழுகிறது. ஆளுநருக்கு இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். 


சோனியா காந்தி வகையறா ஊழலின் மொத்த உருவம் என்பதை 2004-2014 வரை ஐமுகூட்டணி மன்மோகன் சிங் அரசு நிரூபித்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று சோனியா ஆரம்பித்தற்கு  மன்மோகன் சிங் அரசு 100 கோடி நிதி கொடுத்தது. அரசுநிதி பெறுகிற நிறுவனங்கள் எதுவானாலும் சில நிபந்தனைகளும், அரசின் தணிக்கையும் (audit) உண்டு. ஆனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அரசின் நிபந்தனைகள் தணிக்கை எதற்கும் உடன்படவில்லை. அதுவும்போக வருகிறவன் போகிறவனிடமெல்லாம் நிதி நன்கொடையாக வாங்கி குவித்ததில் சீனர்களின் சார்பு நிறுவனமும் உண்டு. ஜாகிர் நாயக் மாதிரி மலேசியா ஓடிப்போன இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவுப்  பிரசாரகரும் உண்டு. ஜாகிர் நாயக் எதற்காக இந்த அறக்கட்டளைக்கு 50 லட்சம் நன்கொடை? அதுவும் சும்மாக் கொடுத்தாராமா? 


தகவல் ஒளிபரப்புத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த மனீஷ் திவாரிக்கு, சிறுபான்மையினர் விவகார அமைச்சர் 2013 இல் எழுதிய சிபாரிசுக்கடிதத்தின் இரு பாராக்களும் விஷயம் இன்னதென்று பல்லிளித்துச் சொல்கிறதே! 


நம்மூரில் அப்படி கடிதம் மூலம் எதுவும் சொல்லக் கூட வேண்டியதே இல்லை! நம்புங்கள்! இது திமுக ஆட்சி!  


இது 2009 இல் நக்கீரன் இதழில் வெளியான கொங்கு ஈ
ஸ்வரன் வாழ்க்கை வரலாறு. பெருமாள் முருகன் நாவலை விட அந்தநாட்களிலேயே பரபரப்பான செய்தியாகத் தான் இருந்திருக்கும் போல! நக்கீரனே 2பக்கச் செய்தி போட்டிருக்கிறதென்றால்! படத்தைப் பெரிதாக்கிப் படித்துப் பாருங்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடி, மார்க்சிஸ்டுகளுக்கு ரூ. 10 கோடி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ரூ. 15 கோடி நன்கொடை அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட்ட கதை நினைவிருக்கிறதா? பரஸ்பர சொறிதல்கள், முன்களப் பணியாளர்களுக்கு  நீண்டகாலமாகவே கிடைத்து வருகிறது என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல?

மீண்டும் சந்திப்போம்.                       

இந்திராவின் 1975 நெருக்கடி நிலை! ஆர்.எஸ்.எஸ். நடத்திய போராட்டங்கள்!

திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுக்கப்பட்ட பகுதிகள்

சுதந்திர இந்திய வரலாற்று நிகழ்வுகளில் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட அவசர கால நெருக்கடி  சட்டம் அரசியலில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எடுத்துக் கொண்ட உண்மையான இலட்சியப்பணிகள் எது என்பதை உலகுக்கு வரையறுத்துக் காட்டிய நிகழ்வு இது. காங்கிரசுக்கு எதிரான கட்சிகளையும், சிறையில் அடைக்கப்பட்ட வேறுபட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ளவும் அவர்கள் ஒரே அரசியல் மேடைக்கு வரவும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது இந்த சந்தர்ப்பந்தான்.

இதன் விளைவு அவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளை மறந்து ஜனநாயக மாண்பை காக்கும் விதத்தில் ஜனதா என்கிற கட்சி பிறந்தது. ஆர்.எஸ்.எஸ் இந்திய வரலாற்றில் தன்னை மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள இந்த நெருக்கடிகால சம்பவங்கள் உதவின என்றும் கூறலாம். ஜனநாயகத்தின் மதிப்புகளை, மாண்பை மீட்டெடுத்து அதன் மூலம் இந்த சமுதாயத்துக்கு அரிய சேவை செய்வதற்கான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பங்களிப்பை இந்த நாடும், உலகமும் கண்டது இப்போது தான்.1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா ரயில் பெட்டிகள் எரிப்பு கலவரம், அதே காலகட்டத்தில் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் ஆகியவை குறித்து இப்போதைய இளம் தலைமுறைக்கு தெரியாது. இந்த நிலையில் மேற்கண்ட சம்பவங்களுக்கு முந்தைய இந்திரா அறிவித்த நெருக்கடிகால அடக்குமுறைகள் குறித்து  இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இவை எல்லாம் வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களாக உள்ள நிலையில், உண்மையில் நவீன இந்திய வரலாற்றில் இவை மிக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகும். நம் தேசம், தேசத்தை காத்த ஆர்.எஸ்.எஸ் சந்தித்த இந்த முக்கியமான கால கட்டத்திலிருந்து இந்த கட்டுரையை தொடங்குவது உகந்ததாக இருக்கும்.

அன்றைய காலக்கட்டத்தில் பொது வாழ்க்கையில் தூய்மையை வலியுறுத்திய ஜே.பி என அனைவராலும் அறியப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் சம்பூர்ண கிரந்தி எனப்படும் இயக்கம் அரசியல் நடைமுறைகளில் இருந்த அழுக்குகளை அகற்றி ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வர வலியுறுத்தியது. அந்த இயக்கத்தின் கொள்கைகள் அன்றைய இளைஞர்களிடையே அரசியல் மீது ஒரு தீவிரத்தை ஏற்படுத்தியது. ஏராளமான இளைஞர்கள் ஜே.பி-யின் சிந்தனைகளால் கவரப்பட்டு, ஜனநாயகத்தை மீட்க போராடி பல தியாகங்களை செய்திருந்தாலும், அந்த போராட்டங்களின் விளைவு லாலு பிரசாத் யாதவ் போன்ற அரசியல்வாதிகள் ஜாதீய அரசியல் செய்து சுய நலன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்து விட்டது. இதன் மூலம் ஜே.பி-யின் கொள்கைகள் மற்றும் இலட்சியங்கள் சிதைவுக்குள்ளாகின.

தேவர்கள் இணைந்து திருப்பாற்கடலை கடைந்து அமுதம் திரட்ட முற்பட்டபோது விஷத்தையும் கண்டு அதை தூக்கி எறிந்து போட்ட கதை இந்து புராணங்களில் கூறப்படுகிறது. அந்த கதை இங்கு எந்த அளவுக்கு உண்மையாகி விட்டது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.

இப்போது எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய கால கட்டமான 1971-ஆம் ஆண்டுக்கு செல்லலாம். அப்போது நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியா வென்றதுடன் பங்களாதேஷ் என்கிற நாட்டையும் உருவாக்கியதன் பேரில் இந்திராவும் அவரது ஆதரவாளர்களும் வெற்றிப் புளகாங்கிதத்தில் மிதந்து கொண்டிருந்த கால கட்டம் அது. நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அராஜக மனோபாவத்தை அவர்களுக்குத் தந்தது. இந்திராவின் நிழலில் இருந்தபடி எல்லை தாண்டிய அதிகாரத்தை அவரது ஆதரவாளர்கள் ருசி பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.

அப்போதைய காங்கிரஸ் தலைவர் கந்த பரூவா இந்தியா என்றால் இந்திரா,  இந்திரா என்றால் இந்தியா என்ற கோஷத்தை முன்வைத்தார். இந்தியா முழுவதும் இது ஒரு மந்திரம் போல காங்கிரசாராலும், அரசு இயந்திரங்களாலும் கூட  நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கப்பட்டது. இந்த அராஜகம் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை அடக்க முற்பட்டது, அதிகார வர்க்கத்தினரிடம் அதிக அதிகாரங்கள் குவிந்ததால் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாயின.

இதை எதிர்த்து படிப்படியாக நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு எதிராக போராட்டங்கள் துளிர் விட ஆரம்பித்தன. முதலில் குஜராத்தில் நவநிர்மாண் அந்தோலன் என்கிற இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் அந்த மாநிலத்தில் ஊழல் ஆட்சி செய்து கொண்டிருந்த சிமன்பாய் படேலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி துணை நின்றதுடன், ஜன சங்கமும், மற்ற எதிர் கட்சியினரும் ஆதரித்தனர். மாணவர்களின் இந்த தொடர் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவி மக்களின் செல்வாக்கைப் பெற்றதுடன் அந்த அரசை ஆட்சியிலிருந்து அகற்றியது. பாபுபாய் படேல் தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தது.  மாணவர்களின் எழுச்சி மிக்க இந்த போராட்டம் பீகார் மாநிலத்திலும் பரவியது. ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிந்தனைகள் அவருடைய பேச்சுக்கள் மாணவர்களையும், சிந்தனையாளர்களையும் கிளர்ந்தெழச் செய்தன. லோக்ஜன் கார்ஷ் சமிதி எனப்படும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு, நானாஜி தேஷ்முக் அதன் பொதுச் செயலாளராக இருந்து வழிகாட்டினார். அரசியல் மற்றும் அரசியல் அல்லாத சேவை அமைப்புகள், மாணவர்கள் என ஏராளமானோர் இந்த அமைப்பில் சேர்ந்தனர். அப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் ஜன சங்கத்துடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. இரு தரப்பும் போராட்டக்களத்தில் இணைந்து தீயாக வேலை செய்தனர். இவர்களின் போராட்டத்தால் மக்கள் நாடெங்கும் ஈர்க்கப்பட்டதால் காங்கிரசாரும், இந்திராவும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அலகாபாத் கோர்ட் நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா இடைத்தேர்தலில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு இந்திய அரசியலில் மாபெரும் அரசியல் விளைவுகள் ஏற்பட வழி வழிவகுத்தது.

இந்த நிலையில், அரசியல் சூழ்நிலைகள் தனக்கு பாதுகாப்பாக இல்லை என உணர்ந்த இந்திரா காந்தி எதிர்கட்சிகளை அடக்கவும், அவர்களின் நடவடிக்கைகளை நசுக்கவும் முற்பட்டார். உள் நாட்டு பாதுகாப்பை மேற்கொள்வதாகக் கூறி 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நள்ளிரவு நெருக்கடி நிலையை அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பை சுட்டிக் காட்டி நெருக்கடி நிலையை அறிவித்தது இந்தியாவில் அதுதான் முதன் முறை. கடுமையான இந்த சட்டம் மிசா என்ற பெயரில் எதிர்கட்சிகளையும், எதிர்ப்போரையும் எந்தவித விசாரணையும் இல்லாமல் 2 ஆண்டுகளுக்கு சிறையில் தள்ள வழிவகுத்தது. நாட்டின் முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில் அடைக்கப்பட்டார்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இரண்டாம் முறையாக தடை செய்யப்பட்டது. ஆனந்த் மார்க் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற இயக்கங்களும் எந்த வித காரணங்களும் கூறப்படாமல் தடை செய்யப்பட்டன. 

ஜனநாயகத்தை மீட்பதற்கான மாபெரும் யுத்தத்தில் அன்று ஆர்.எஸ்.எஸ் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேரில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆவர். கொடுமையான மிசா சட்டத்தில் நாடு முழுவதும் 30,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மிகவும் கொடுமையான மகாராஷ்டிரா பயங்கரவாத கட்டுப்பாட்டு சட்டத்தின்( IMCOCAI) கீழ் மட்டும் கிட்டத்தட்ட 25,௦௦௦ ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சிறையில் வைக்கப்பட்டு கொடுமையான முறையில் நடத்தப்பட்டனர். பல்வேறு சோஷியலிச கட்சி தலைவர்களும் தொண்டர்களைக் காட்டிலும் அதிக அளவில் சிறையில் அடைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 18 மாதங்கள் வரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட 6 மாதங்கள் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நேரத்தில் நாக்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி லலித் அளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு குறிப்பிடத்தக்கது. அடிப்படை உரிமைகளுக்காக போராட்டம் நடத்தியவர்களை மிசா சட்டத்தால் கைது செய்யக் கூடாது என அளித்த அவரது தீர்ப்பால் பலர் ஒரு மாத சிறை வாசத்துடன் வெளியே வந்தனர். இந்த தைரியமான தீர்ப்பை வழங்கிய நீதிபதி லலித் அவர்களின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதுடன், அவருக்கு பதவி உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திராவுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட வகையில் அவருக்கு ஆதரவாக ஒரு நீதிபதிகள் குழுவும் செயல்பட்டது. இந்த விஷயத்தில் இந்திராவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதவிகரமாக இருந்தது.

இதே கம்யூனிஸ்டுகள்தான் 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போதும் இரு வேடங்கள் போட்டு நடித்தனர். இந்தியாவை 16 இறையாண்மை உள்ள தேசங்களாக பிரிக்க வேண்டும் எனவும் கேபினட் கமிஷனிடம் மனு அளித்தனர். 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் மீது நடைபெற்ற சீன தாக்குதல் சரியானது தான் எனவும் வாதிட்டனர். கம்யூனிஸ்டுகளில் இருக்கும் சீன ஆதரவு பிரிவினர் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போக்குவரத்து போராட்டத்தையும் உருவாக்கி மறைமுகமாக அப்போராட்டத்துக்கு ஆதரவு தந்தனர். அப்போது மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் ஜோதி பாசு கூட சில காலம் சிறையில் வைக்கப்பட்டார். சீனாவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து இந்தியாவின் நலனுக்கு எதிராக நடந்துக் கொண்ட இந்த பிரிவினர்தான் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தனர்.

இந்திய உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் இந்திரா காந்தியும் காங்கிரஸ்காரர்களும் அவிழ்த்து விட்ட வன்முறைகள், எதிர்கட்சிகள் மீது அடக்குமுறை ஆகியவற்றைப் பற்றி மக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் தொடர்புடைய இயக்கங்கள் மற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், இயக்கங்களுடன் சேர்ந்து ஜனநாயகத்தை மீட்க மேற்கண்ட போராட்டங்களை நடத்தியது. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் போராட்டங்களில் பங்கேற்றதும் இல்லாமல் பின்னணியில் இருந்து கொண்டு நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தியது. மிக உயர்ந்த பாதுகாப்புக்கிடையிலும் பொது நிகழ்ச்சிகளில் கூட இந்த சத்தியாகிரக போராட்டங்கள் நடைபெற்றன. இந்த எதிர்ப்பு போராட்டங்களை பன்னாட்டு ஊடகங்கள் அப்போது வெளியிட்டன.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கற்றவர்கள், செல்வந்தர்கள் ஆகியோர் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தாங்கள் பாதிக்கப்பட்டதை பல வகையில் எழுதிக் கொடுத்து வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர். இந்திய நவீன வரலாற்று ஜாம்பவான்களான ராமச்சந்திர குஹா இந்த வகையில்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்களிப்பு குறித்து பல தகவல்களை சேகரித்து வெளியிட்டார்.

மற்றபடி குற்றப் புலனாய்வு துறையினர் யாரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மீது எந்த குறைகளையும் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட போராட்டத்தை தவிர வேறு எந்த தப்பையும் செய்ததாக அவர்களின் ஆவணங்களில் எந்த குறிப்புகளும் கிடையாது.

மும்பையை பொறுத்தவரை போலீஸ் அதிகாரிகள் இந்த அவசர நிலையில் சற்று நாகரீகமாகவே நடந்து கொண்டுள்ளனர். அதே சமயம், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்த பஞ்சாப், கர்நாடகா, மத்திய பிரதேஷ் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் போலீசார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்களுக்கு சிறையில் தொந்தரவு கொடுத்தனர். அந்த டார்ச்சர் அமெரிக்க ராணுவத்தால் குவான்டன்மோ முகாமில் வைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டது போல அப்போது வர்ணிக்கப்பட்டது. ஒரு ஆட்சியாளர்களிடம் எல்லை மீறிய அதிகாரங்கள் இருந்தால் அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதற்கு பெண் போராட்டக்காரர்களையும் சேர்த்து அவர்களுக்கு அரசு கொடுத்த டார்ச்சர்களில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். பல இடங்களில் போராட்டக்காரர்கள் மோசமான குற்றவாளிகள் இல்லை என்பது தெரிந்தும் அவர்களை குழுவினராக நிற்க வைத்து நிர்வாணமாக்குவது, அவர்களை அந்த நிலையிலேயே நீண்ட நாள் வைத்திருத்தல், சிகரட்டால் சுடுவது, பலர் முன்னிலையில் போலீசார் இயற்கைக்கு மாறாக ஓரினசேர்க்கை உறவு கொள்ள வைப்பது, கைதிகள் ஒருவர் வாயில் ஒருவர் சிறுநீர் கழிக்க செய்வது, கூர்மையான ராடுகளால் அழுத்துவது, தண்ணீர் கொடுக்காமல் பல நாட்களுக்கு தவிக்க விடுவது, பின்பக்கம் கைகளை கட்டி வைத்து சில மணி நேரங்களுக்கு ஏரோப்ளேன் தண்டனை என்ற பெயரில் தொங்க விடுவது, நகங்களை பிடுங்குவது போன்ற மிக கொடூரமான டார்ச்சர்கள் மிசா சட்டத்தை எதிர்த்து சிறைக்கு சென்ற போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல பேர் இதை பதிவு செய்து வைத்திருந்து ஜனதா கட்சி ஆட்சியின் போது இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஷா கமிஷனிடம் இவற்றை தெரிவித்தனர்.

ஆனால் இதனிடையே 1980-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஷா கமிஷனின் அறிக்கைகளை அழித்து விட்டது. ஆனால் இந்த அறிக்கையின் நகல் காப்பி அமேசான் வலைதளம் மூலம் கிடைத்தது. இதை அப்போதைய திராவிட முன்னேற்ற கழக தலைவர்களில் ஒருவராக இருந்து, பின் நாளில் ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றிய இரா.செழியன் எடிட் செய்திருந்தார். ஆனால் இப்போது அது தீர்ந்து விட்டது , கிடைக்கவில்லை. கமிஷனால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சஞ்சய் காந்தி நிறைய இடையூறுகளை கொடுத்தார். தற்போதைய மாணவர்கள், இளைஞர்கள் அவற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வன்முறைக்காரர்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள்  சொல்லும் பொய்யை உடைக்க முடியும்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் துயரங்களை பற்றி குறிப்பிடாமல் இது முழுமை அடையாது. தேசத்துக்கு எதிராக அவரும் அவரது சகோதரர் லாரன்சும் வெடிகுண்டுகள் வைத்து பயங்கரவாதம் செய்ததாக “பரோடா சதி வழக்கு” என்ற வழக்கு போடப்பட்டு அவர்களை சிறையில் வைத்து கொடுமைப் படுத்தினார்கள். இந்த வழக்கு அப்போது பிரபலமாக பேசப்பட்டது. சிறையில் லாரன்சுக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல துன்பங்கள், கொடுமைகள் செய்யப்பட்டன. ஜெயிலில் இருந்து ஒரு நோயாளியாக வெளியே வந்த அவர் கடைசி வரை நோயாளியாகவே வாழ்ந்து, 2005-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். ஆனால் இடையில் 1977-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு இருவர் மீதும் போடப்பட்டிருந்த வழக்குகளை வாபஸ் பெற்றது. இந்த வழக்கில் தொழில் அதிபர் வீரேன் ஷாவின் பெயரும் சேர்க்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்தார். 

இந்திரா அமல்படுத்திய அந்த நெருக்கடி காலக்கட்டத்தில் பத்திரிகைகள் அரசுக்கு அடி பணிந்து சென்ற போதிலும், கோயங்கா, வர்கீஸ் போன்ற துணிச்சல்மிக்க பத்திரிக்கையாளர்கள் அரசை எதிர்த்து தைரியமாக எழுதினார்கள். அப்போது பத்திரிகைகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்டப் பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டன. சென்சார் கமிட்டியால் அனுமதிக்கப்பட்ட பிறகே செய்தித்தாள்களில் செய்திகள் அச்சிட அனுமதிக்கப்பட்டன. அச்சிடுவதற்கான காகிதங்களுக்கு அரசிடம் கெஞ்சி பிச்சை வாங்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. அந்த மிக மோசமான சூழ்நிலையை பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிடுகையில் “வளைந்து கொடு என கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் பத்திரிகைகள் கீழே விழுந்து ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது” என்றார். அப்போது கோயங்கா தனது பத்திரிக்கையில் தலையங்கப் பகுதியில் எதையும் எழுதாமல் வெற்றிடமாக விட்டு விடுவார். இது தெரிந்த அரசு தலையங்கப்பகுதியை வெற்றிடமாக விடக்கூடாது என அச்சுறுத்தி ஆணை பிறப்பித்தது. ஆனால் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து அரசுக்கு பணியாமலே அவசரகாலம் முழுவதும் செயல்பட்டது. அரசு ஏற்படுத்திய அத்தனை தடைகளையும் சமாளித்து நின்றதால் கோயங்காவின் மீது பல வழக்குகளை தொடுத்து பல தொல்லைகளை அளித்தனர். அப்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஜனநாயக படுகொலைகள் என்கிற தலைப்பில் வெளி வந்த செய்தி மிகவும் பிரபலமாக இருந்தது. இதை அடுத்து, செய்திகள் மிகவும் கண்காணிக்கப்பட்டதால் செய்திகள் ரகசிய கூட்டங்கள், வதந்திகள், தொலைபேசிகள் மூலம் மட்டுமே வெளியே சென்றன. இந்த நிலையில் தொலைபேசிகள் வேவு பார்க்கப்பட்டன, ஒட்டுக்கேட்கப்பட்டன.  அப்போது, போராட்டக்காரர்கள் சிறிய துண்டுச்சீட்டுக்களில் செய்திகளை அச்சடித்து அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்களிடம் ரகசியமாக விநியோகித்தனர். அந்த சமயங்களில் அரசுக்கு ஜால்ரா அடித்த பத்திரிகைகள் சிலவும் உண்டு. அதில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய கட்டுரைகள். அந்த கட்டுரைகள் இந்திராவின், அவர் மகன் சஞ்சய் காந்தியின் நடவடிக்கைகளை பாராட்டியது. மேலும் எமர்ஜென்சியால் நாட்டில் பல வளர்ச்சிக்கான மாற்றங்கள் ஏற்பட்டதாக புகழ்ந்து தள்ளினார்.

சஞ்சய் காந்தியை மிகச்சிறந்த நவீன முன்னோடியாக புகழ்ந்து தள்ளினார். அவர் வைத்திருந்த டின் பாக்ஸ் காரை வைத்து அவர் ஒரு சிறந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் எனவும் புகழ்ந்து தள்ளினார். இவ்வாறு அவர் இந்திரா குடும்பத்துக்கும், எமர்ஜென்சி நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக இருந்ததால் அவருக்கு அதிக பரிசுகள், விருதுகள் கிடைத்தன. பதவிகள் தரப்பட்டன. அந்த கால கட்டத்தில் காங்கிரசுக்கு அனுகூலமாக இருந்த பத்திரிகைகள் நல்ல சன்மானங்களை பெற்றன.

அந்த காலக்கட்டத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட பல பத்திரிக்கைகள்  குறிப்பாக பிரபல பெண் எழுத்தாளர் போரிபந்தர் ஆகியோர் அவசர சட்டத்தால் வேலை செய்யும் கலாச்சாரம் அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றத்துடன் மாறியதாகவும், நாட்டு மக்கள் இடையே இது சிறந்த ஒழுக்கமான தலைமுறையை உருவாக்குகிறது என புகழ்வதாகவும் மக்கள் இந்திரா சர்வ வல்லமை உள்ள பெண்மணி என புகழ்வதாகவும் கூறி சரமாரியாக புகழ் கட்டுரைகளை எழுதி தள்ளினார். இந்தப் பிரச்சாரங்கள் இரஷ்யாவில் சர்வாதிகார அரசுகளுக்கு ஆதரவாக  செய்யப்படுவது போல இருந்தன. அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் இந்தப் பத்திரிகைகள் அதைப் புகழ்ந்து போராட்டக்கரர்களுக்கு எதிரான பதிலடியை தந்தன. ஆனால் இந்திரா கொண்டு வந்த அனைத்து சட்டங்களும் மக்களின் உரிமையை நசுக்குவதற்காகவே கொண்டு வரப்பட்டன

ஒரு வழியாக 1977-ஆம் ஆண்டு எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசியல் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறைக் கூடங்கள் நிரம்பி வழிந்தன. நாடு முழுவதும் நடைபெற்ற சத்யாகிரகப் போராட்டங்கள் மக்களை உசுப்பி விட்டன.  இதனால் இந்திராவுக்கு அழுத்தங்கள் அதிகரித்தன. FISI இயக்கத்தினர் இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தியதன் மூலம் பல நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தத்தை தந்தன. இந்த நிலையில் தேர்தல் நெருங்கியது. தேர்தலை சந்திக்க வேண்டி இந்திரா தனது கெடுபிடிகளை குறைத்தார். அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம் என்கிற போதையை ஏற்றி இந்திராவை உசுப்பேற்றினர். அப்போது கூட இந்திரா என்றால் இந்தியா… இந்திய என்றால் இந்திரா என்ற கோஷத்தை அவர்கள் விடவில்லை. ஆனால் அவர்கள் படிக்காத பாடத்தை இந்திய மக்கள் தேர்தலில் வாக்களித்து அவர்களை தோற்கடித்து படிக்க வைத்தனர். தங்கள் வலிமையையும், ஜனநாயகத்தின் வலிமையையும் தங்கள் வாக்குரிமை மூலம் நிரூபித்துக் காட்டினர். 

ஆரம்பத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த சூழ்நிலையில் மக்கள் ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்து வெளிப்படையாக ஆதரிக்க பயந்தனர். என்றாலும், தேர்தல் வாக்குச்சாவடி பணிகள் திட்டமிடப்பட்டன. மூத்த தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படாத நிலையில் ஒரு சாதாரண அரசியல் அறிவைக் கொண்டு தேர்தல் பணிகளில் களம் இறங்கினர்.

காங்கிரசை தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சி அமைத்து அந்த ஆட்சி நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த போது ஜனதா கட்சிக்குள் இருந்த சோஷலிச குழுவினர் மிகவும் மோசமான அரசியலை முன்னெடுத்தனர். வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஜனதா கட்சிக்குள் ஏற்கனவே இணைந்திருந்த முன்னாள் ஜன சங்க தலைவர்கள் இரட்டை உறுப்பினர் கொள்கையை  கடைபிடிப்பதாகக் கூறி கட்சியை உடைக்கும் விதத்தில் தகராறு செய்தனர். ஆனால் இந்த விசுவாசம் அவர்களுக்கு ஜனதா கட்சியை தோற்றுவிக்கும் போதே இருந்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவர்கள் ஜனநாயகத்தை மீட்க ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்களின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து போற்றிப் புகழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் குறித்து கடந்த பல ஆண்டுகளாக கொண்டிருந்த தவறான புரிதல் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்ததற்கும் சான்றுகள் உள்ளன. அவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்க தலைவர்களுடன் நெருங்கிப் பழகுகிய போதுதான் தங்கள் கண்கள் திறக்கப்பட்டதாக அவர்களே ஒப்புக்கொண்டிருப்பதற்கும் சான்றுகளும் உள்ளன. இதில் ஒரு உண்மை என்னவென்றால் ஜன சங்கமும், கம்யூனிஸ்டு கட்சி மட்டுமே அமைப்பு ரீதியான கட்சிகளாக இருந்தன. மற்ற கட்சிகள் அவ்வாறு இல்லாததால் ஜனதா கட்சியின் அதிகாரத்தை அவர்கள் தங்கள் இஷ்டம்போல வளைக்க ஆரம்பித்தனர். இடைத்தேர்தல் வந்தால் அப்போது நம்முடைய தனிப்பட்ட செல்வாக்கை அதிகாரத்தில் இருக்கும் போதே வெளிக் காட்ட வேண்டும். அதன்பிறகு கட்சியை தாங்களே கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கமும் அவர்களுக்கு இருந்தது. இதற்காக ஜன சங்கத்துக்கு முந்தைய உறுப்பினர்களாக இருந்த குறிப்பிட்ட அளவிலான எம்.பி-க்கள் சிலரையும் அவர்கள் குறிப்பெடுத்து வைத்திருந்தனர். இது போன்ற முதுகில் குத்தும் வேலைகளை திரை மறைவில் இருந்து செய்து கொண்டிருந்த அவர்கள் கடைசியில் ஜனதா கட்சியை உடைத்தே விட்டார்கள். இதனால் ஆட்சி கவிழ்ந்தது, இந்திரா காந்தியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி திரும்பி பிரதமராக வரும் நிலை ஏற்பட்டது.

இந்த கசப்பான அரசியல் சம்பவங்களை அடுத்து, ஆர்.எஸ்.எஸ் நாட்டின் அரசியலில் ஒழுக்க பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்த புதியதோர் சகாப்தத்தை உருவாக்கும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்பட்டது. அதன் விளைவாக தனது அமைப்பின் செயல்பாடுகளை விஸ்தரிக்கும் வகையில் அகில பாரதிய வித்யாதி பரிஷத், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய மஸ்தூர் சங் உட்பட பல துணை அமைப்புகளை ஏற்படுத்தியது. மேலும் பல புதிய இடங்களில் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கி சங்கப் பணிகளை விரிவு படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்கள் மூடப்பட்ட அந்த காலக் கட்டத்தில் தொண்டர்கள் சமூகப் பணிகள் புரிவதற்காக பல திட்டங்களை தீட்டுவதற்கான அழுத்தங்களை தந்ததும் அந்த சூழ்நிலைதான். மேலும் ஜனநாயக கட்டமைப்புகள் உயிருடன் செயல்பட விரும்புவோருக்கு ஆர்.எஸ்.எஸ் தான் யார் என்பதை மெய்ப்பித்துக் காட்டியது. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்களும், அதன் தொடர்புடைய அமைப்பின் சேவகர்களும் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளான இந்த காலக் கட்டத்தில் சங்கத்தின் சகிப்புத்தன்மை புதிய அளவுகளை எட்டியது. அதன்பிறகு பரவலான, வேகமான ஒரு வளர்ச்சியை அடைந்தது.

புதிய சேவகர்களுக்கு இது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1948-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட போது அமைப்பின் முன்னோடிகள் கண்ட அனுபவங்களை எமெர்ஜென்சி இரண்டாம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்தது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களை அடுத்து இரகசிய பணிகள் செய்தல், சிறை வைக்கப்பட்ட இடத்தில் ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து சத்யாகிரக போராட்ட முறையில் எதிர்ப்பு தெரிவித்தல் ஆகியவை சங்கத்தின் இளைய தலைமுறையினருக்கு பயிற்சிக் களங்களாக அமைந்தன. அவற்றை ஒருவருக்கொருவர் கற்றுக் கொண்ட அதே சமயம் சங்கத்தின் குடையாய் வெளியே விரிந்து நின்ற பலரிடம் இருந்தும் பலவித அனுபவங்களை கற்றுக் கொண்டனர். அரசியல் சிந்தனைகள் மற்றும் தேர்தல் அரசியலில் நல்ல விழிப்புணர்வை பெற மற்றவர்களின் கருத்துக்களையும், குறிப்பாக மற்ற அரசியல் கட்சிகளின் மதிப்புடைய கருத்துக்களைப் பெறவும் அப்போது நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. முன்னதாக நம் எதிர்ப்பாளர்கள் நம்மை வேடிக்கையாக பார்த்தனர், ஆனால் எமர்ஜென்சிக்குப் பிறகு அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அரசியல் சமூக விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் மரியாதைக்குரிய இயக்கமாக பார்க்கப்பட்டது. இது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பல திருப்புமுனைகளை ஏற்படுத்தித் தந்தது.

ஜனநாயகத்தை மீட்டதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் போராட்டங்கள் குறித்து தெரியப்படுத்தும் ஆவணமாக தமிழில் பல நூல்கள் இல்லை.

அரசியல் என்பது கறை படிந்த, பழி வாங்கும் போக்கு கொண்டதாக மாறி இருந்த அந்த நாட்களில் அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ பாலாசாகேப் தியோராஸ் 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியினரை சரியான முறையில் வழிகாட்டி உற்சாகப்படுத்தினார் என்பது இன்றளவும் நம் நினைவில் நிற்கிறது. இந்திரா காந்தி உள்ளிட்ட அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுவான குணமாகும். ஏனெனில் இது நாட்டின் அனைத்துச் சுற்று வளர்ச்சியிலும், யாருக்கு எதிராகவும் எந்த  விரோதமும் இன்றி அனைவர் நல்வாழ்க்கைக்கும் பயனளிக்கும் வழிகாட்டியாக உள்ளது.

பின்குறிப்பு – இந்த கட்டுரை திரு.ரத்தன் ஷாரதாவின் “ஆர்.எஸ்.எஸ் 360” என்கிற நூலில் இருந்து தொகுப்பட்ட பகுதிகள். 

S G சூர்யாவின் தளத்தில் இருந்து நன்றியுடன் எடுக்கப்பட்டது  எமெர்ஜென்சி காலத்தைப்பற்றி இந்தப் பக்கங்களில் சில பதிவுகள் உண்டு. ஆனால் RSS இந்த  இரண்டாவது விடுதலைப்போரில் எப்படிப்பட்ட பங்கு வகித்தது என்பதை எமெர்ஜென்சி  நாட்களில் மெல்ல  மெல்ல இடதுசாரியாக மாறிக்கொண்டிருந்த எனக்கு  முழுமையாக  அறிந்து கொள்ள வாய்ப்பிருந்ததில்லை. 

ஒருநாள் கூத்துக்கு மீசை ::: சரத் பவார்! (ஃபரூக்) அப்துல்லாக்கள்!

மேற்கு வங்கம், தமிழ்நாடு இரு மாநில சட்டசபைத் தேர்தல்களில் வாடிக்கையாளரை ஜெயிக்க வைத்த மிதப்போ என்னவோ, பிரசாந்த் கிஷோர் அகில இந்திய அளவில் தன்புகழைப் பரப்ப முனைந்திருக்கிறார் என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப்போய்விடலாம் தான்!ஆனால் அவருடைய திட்டத்தில் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு சரத்பவாரை வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் ஏற்பாடு நடந்திருக்கிறது.  காங்கிரசை விட்டுவிட்டு கலந்துகொள்ள விரும்பாமல் திமுக மற்றும் ஒன்றிரண்டு கட்சிகள் தவிர்த்துவிட்டன என்பதிலேயே பிரசாந்த் கிஷோர் முயற்சி தொடங்கும்  முன்னமே தோற்றுவிட்டது.

இந்திய அரசியலில் முன்றாவது, 4வது அணி என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என ஆரம்பிக்கிற சேகர் குப்தா மெதுவாக 20% ஓட்டை வைத்திருக்கும் காங்கிரசை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணியை நினைத்துக் கூடப்பார்க்க முடியாது என்று தன்னுடைய காங்கிரஸ் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்ட மாதிரியே இந்த 23 நிமிட வீடியோ இருக்கிறது. செவ்வாய்க் கிழமையன்று டில்லியில் உள்ள சரத் பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் பவார் வந்ததே தெரியாத அளவுக்குக் கொஞ்ச நேரம் இருந்தமாதிரி போட்டோ செஷனில் தலை காட்டிவிட்டு தன்னுடைய கட்சியின் தேசிய நிர்வாகிகள் குழுக்கூட்டத்தில்  ஆலோசனை செய்யப் போய்விட்டார் என்கிறது செய்தி. TOI நையாண்டி இங்கே.


ஜூன் 11,21,23 என்று இரண்டுவாரங்களுக்குள் சரத் பவாரைத் தேடிவந்து பிரசாந்த் கிஷோர் மூன்றுமுறை சந்தித்தார் என்பதில் என்ன உள்குத்து இருக்கும் என்று ஊடகங்கள் தலையைப்பிய்த்துக் கொண்டிருக்கின்றன. அதற்காகவே சந்தித்தார்களோ என்னவோ?

சரத் பவாருக்கு 80 வயதாகிவிட்டது. மகாராஷ்டிராவில் ஒரு சில ஏரியாக்களில் மட்டுமே செல்வாக்குள்ளவர் என்றாலும் கட்சிபேதமில்லாமால் சர்வ கட்சிகளுடனும்  சுமுகமான உறவை மெயின்டைன் பண்ணுகிறார் என்பதாலேயே பவாரை பிரதமர் முகமாக 2024 இல் காட்ட முடியுமா? அல்லது பவார் கைகாட்டுகிற ஒருவர், மம்தா பானெர்ஜி என்றேகூட வைத்துக் கொள்வோம், பிரதமராகி விட முடியுமா? சரத் பவாருக்குத் தன்மகள் சுப்ரியா சுலேவை மகாராஷ்டிர முதல்வராக்கிப் பார்க்கிற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கும் இது சரியான தருணமல்ல. அப்புறம் எதற்காக பவாரை  முன்னிறுத்தி இப்படி ஒரு களேபரம்? !!   


இருவருடங்களுக்கு  முன் ஆர்டிகிள் 370 நீக்கப் பட்ட பிறகு  ஜம்மு காஷ்மீர் அரசியல்கட்சித்  தலைவர்கள் பிரதமருடைய அழைப்பையேற்று டில்லியில் இன்று சந்தித்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் முதல்வர்களாக இருந்த நான்குபேர் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, (NC) மெஹபூபா முஃப்தி (PDP), குலாம் நபி ஆசாத் (Cong) உடன் ஜம்முகாஷ்மீரிலுள்ள உதிரிக்கட்சித்தலைகள் சிலரும் கலந்துகொண்ட கூட்டத்தில் என்ன பேசப் பட்டதாம்? NDTV செய்திகளின் படி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை உரியநேரத்தில் தர உறுதியளித்தார் பிரதமர் என்று சொன்ன கையோடு இந்த சந்திப்பின் முக்கிய அஜெண்டாவாக தொகுதி மறுவரையறை செய்வதற்காக ஒத்துழைப்பைக் கோரியதுதான் இருந்தது என்றும் சொல்கிறார்கள். தேர்தல்கள் நடத்தும் முன் தொகுதிகளின் எல்லை, எண்ணிக்கையை  மறுவரையறை செய்ய அரசின் உத்தேசத்தை விவாதிக்கத்தான் இந்தக்கூட்டமே. பெரும்பாலானோர் ஆதரவு இருந்ததாகச் சொன்ன கையோடு,ஒமர் அப்துல்லா அநேகமாக எல்லாத்தலைவர்களுமே இந்த மறுவரையறை விஷயத்தில் அதிருப்தியோடு இருந்ததாக சொன்னாரென்று ஒரு பிட்டையும் சேர்த்துப் போடுவது NDTV இஷ்டைல். 

Omar Abdullah told reporters that "almost all leaders" were unhappy with delimitation only in Jammu and Kashmir. "In other states, delimitation will be taken up in 2026, why has been Jammu and Kashmir been singled out? We told the PM delimitation is not needed," he said, adding that "trust has broken between the Centre and Kashmir".  என்பதன் பின்னால் இருக்கிற அப்துல்லாக்களின் வஞ்சகம்  என்ன என்று நினைவுபடுத்திக்கொள்ள முடிகிறதா? நினைவு படுத்திக் கொள்ளவில்லை என்றால் அப்துல்லாக்கள் கேட்பது நியாயமாகத்தானே இருக்கிறது என்றுதான் தோன்றும். 

1980களின் மத்தியில் ஃபரூக் அப்துல்லா முதல்வராக இருந்த சமயத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தங்களின் படி ஜம்மு காஷ்மீரில் வாக்களிக்கும் உரிமை அங்கே நீண்ட காலமாக வசித்துவந்த பஞ்சாபிகளுக்கும், லடாக் பகுதி மக்களுக்கும் மறுக்கப்பட்ட வஞ்சகம் delimitation இப்போது கொண்டுவரப்பட்டால் வெட்டவெளிச்சமாகி விடும் என்பதில் அப்துல்லாக்கள்  கவலை, அச்சம், புரிந்து கொள்ளக்கூடியதே! காஷ்மீரின் ஆதிக்குடிகளான பண்டிட்டுகளை அச்சுறுத்தி மாநிலத்தைவிட்டே ஒழித்த கதை என்று இன்னமும் பலவிஷயங்கள் இருக்கின்றன  

அப்துல்லாக்கள்.  முஃப்திக்கள் சூறையாடுகிற இடமாக பாகிஸ்தானிகளுக்கு இடம்கொடுக்கிற மாநிலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு இதுநாள்வரை இருந்தது போதாதா?  

மீண்டும் சந்திப்போம்.    

#தமிழகஅரசியல் இடைவெளி இல்லாத நான்-ஸ்டாப் காமெடி!

அது எந்தக்கழகமாக இருந்தாலும் சரி கழக ஆட்சியில் காமெடிக்குப் பஞ்சமிருந்ததே இல்லை! அரசியல் தெரியாத ஆசாமிகள்தான் இதுபோலக்காமெடிகளைக் கொடுமை என்றும் கிறுக்குத்தனங்கள் என்றும் பேத்துவார்கள்! இன்றைய காமெடிகளைக் கொஞ்சம் போலப் பார்த்துவிடலாமா?  மொத்தமாகப் பார்த்தால் நெஞ்சு தாங்காது என்பது வேறுவிஷயம்! 


ஹரன் பிரசன்னா போட்டிருந்த விளக்கப்படம் கீழே 


அடேய் ஒரு பயலையும் நம்பாத..
இங்க காக்கா, குருவி, அணிலுன்னு உன்ன பார்க்க வச்சிட்டு அந்த பக்கம் வண்டி வண்டியா எத கடத்துறானுகளோ யார் கண்டா?
அணில பார்த்துட்டு கடல் மாட்டு வண்டிய விட்டுராதீங்கடா....

இப்படி உஷாரையா உஷாரு என்று எச்சரிக்கை செய்து இருப்பதை எத்தனைபேர் கவனித்தார்களோ தெரியாது!


அடுத்த வல்லுநர் குழுவுக்கு ஆலோசனை ரெடி! 


 

அட! அப்பிராணி மன்மோகன்சிங்கை நினைக்கக்கூட இங்கே  ஆளிருக்கிறதா ? எனக்கு மயக்கமே வந்துவிட்டது! 


இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் ஆளுநர் நமது வாழ்த்துக்குரியவரே! union government என்பதைத் தமிழில் ஒன்றிய அரசு என்று போட்டிருப்பது அவருக்குத்தெரியுமோ தெரியாதோ?


பானாசீனா, ரகுராம் ராஜன் செய்த வேலை! 1.30 லட்சம் கோடிரூபாய் மதிப்புக்கு எண்ணெய்க் கடன் பத்திரங்களை  2021. 2023. 2024, 2025,2026  நிதியாண்டில் திருப்பிச்செலுத்த வேண்டியிருப்பதும் பெட்ரோல் டீசல் விலையில் சுமையாக இருக்கிறது.  


கரோனா மூன்றாவது அலையின் தாக்குதலை எப்படி தடுப்பது? மற்றும் சமாளிப்பது என்பது குறித்தும், அதற்குண்டான பல ஆயத்த பணிகளை மாநில அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நேரமிது. எனவே இரண்டாவது அலைக்கான ஊரடங்கே இன்னும் முழுமையாகத் தளர்வு செய்யப்படாத நிலையில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. உடனடியாக தமிழக அரசு மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.என்று ஒரு அறிக்கையில் சொல்லி இருக்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. முழு அறிக்கையையும் இங்கே வாசிக்கலாம்.

என்னதான் காமெடி என்று ஆரம்பித்தாலும் சீரியசாகத்தான் பதிவை முடிக்க வேண்டியிருப்பது தமிழக அரசியல் களத்தின் ட்ராஜெடி.

மீண்டும் சந்திப்போம்.

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் TN ஆளுநர் உரையும் அதன் எதிரொலிகளும்!

உலக அரசியல் வரலாற்றிலேயே முதன்முதலாக என்று ஆரம்பித்தால் அபஸ்வரமாகி விடுமென்று பயந்தோ  என்னவோ இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு புரட்சிகரமான அறிவிப்பை தி.மு. கழக அரசு இன்று ஆளுநர் உரையில் செய்துள்ளது.“வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதல்வருக்கு ஆலோசன கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்”  என்று 1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் 4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.என இந்து தமிழ்திசை செய்தி சொல்கிறது.


இவர்கள் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். இந்த முயற்சி அரசியல் வரலாற்றில் முதல் முயற்சி என்பதாகப் பார்க்கப்படுகிறதோ இல்லையோ, சட்டசபையின் முதல்கூட்டத்தை ஆளுநர் உரையுடன் தொடங்குவது என்கிற மரபையும் சன் டிவி விளம்பரக்கூவல் ரேஞ்சுக்குக்  கொண்டுவந்துவிட்டார்கள். Union Government (ஒன்றிய  அரசு) என்று ஆளுநரைத் தனது உரையில் சொல்லவைத்து அற்பத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் இதற்கு எதிர்வினைகள் நிறையவே எதிரொலித்து வருவது சிறப்பு மகிழ்ச்சி.

ஒரு விஷயத்தை பற்றி யாரும் பேசுவதில்லை.ஆம், ரகுராஜன் உள்ளிட்ட அந்த ஆறு முகங்கள் சாதாரணம் அல்ல, அவற்றின் ஒரு நிமிட வருமானமே பல்லாயிரம் டாலர்களை தாண்டும். சும்மா வந்து அவர்கள் ஆலோசனை சொல்வார்கள் என்பது பிரையன் லாரா கொட்டாம்பட்டிக்கு தெருவோர கிரிக்கெட் ஆட வருவார் என்பதற்கு சமம். ஆம், மிகபெரிய சம்பளம் அவர்களுக்கு செல்லும் இந்த 6 பேரின் சம்பளம் என்பது தமிழக அரசின் மிகபெரிய செலவு

அவர்களுக்கு சம்பள விவரம் என்ன? செலவு என்ன என ஆளும் கட்சியும் சொல்லவில்லை எதிர்கட்சியும் கேட்கவில்லை. சரி, இவர்கள் 6 பேருக்கு அவசியம் என்றால் எதற்கு தமிழக நிதியமைச்சர்? எதற்கு அவருக்கு பொறுப்பு வெட்டி சம்பளம்? அவர் என்ன திறமை இல்லாதவரா? திறமை வாய்ந்தவர் எனில் ஏன் 6 பேர் கொண்ட முட்டு, அதுவும் பிரமாண்டமான முட்டு?

நிதி அமைச்சர் தன்மானம் உள்ளவர் எனில் ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இது அவரின் சுயமரியாதைக்கான பெரும் சவால். மானமிருந்தால் அவர் ராஜினாமா செய்யட்டும் இல்லை ஹிஹிஹ்ஹி என பல்லிளித்தால் நீடிக்கட்டும்.

சரி பொருளாதாரத்தில் ஆளில்லை என பன்னாட்டு பெருமூளைகளை அழைக்கும் அரசு, நாளை தமிழக உளவுதுறையினை பலபடுத்த ரிட்டையர்டு இஸ்ரேல் மொசாட் ஆசாமிகளை அழைக்குமா? காவல் துறையினை வலுபடுத்த சர்வதேச போலீஸ் நிபுணர்களை அழைப்பார்களா? ஒவ்வொரு துறைக்கும்  ஆங்கிலேயனும் அந்நியனும் எனில் இவர்களுக்கு என்னதான் வேலை? ஏன் வெட்டியாக பதவி?

எதிர்கட்சி அதிமுக கோமாவில் சிக்கிவிட்டது இனி அது 5 வருடம் கழித்துத்தான் எழும். தேசிய கட்சியான பாஜக இதை கேட்கலாம், 6 பேர் நியமன சம்பளம், அந்நிய நாட்டவருக்கு ஏன் தமிழக வேலை வாய்ப்பு என கேட்கலாம்.கேட்பார்கள் என எதிர்பார்ப்போம். ஆக என்ன தெரிகின்றது?  

தமிழகத்தில் குறிப்பாக திமுகவில் ஒருவரும் திறமையானவர் இல்லை என்பதால் அமெரிக்காவிலும் லண்டனிலும் இருந்து மூளைகளை வாங்கியுள்ளார்கள் திமுக சுல்தான்கள்.இதற்கு தமிழக மக்களின் வரிபணம் வெட்டியாக செலவழிக்கபட வேண்டும்.இதற்கு ஏன் ஸ்டாலின் முதலமைச்சர், தியாகராஜன் நிதியமைச்சர்? நேரடியாக ரகுராம் ராஜனிடமே மாநிலத்தை ஒப்படைத்து விடலாம் என்று முகநூலில் சரமாரியாக கேள்வி எழுப்புகிறார் ஸ்டேன்லி ராஜன். அத்துடன் விட்டாரா?


சகோதரர்கள் பேசிக்கொள்வதாக இங்கே ஒரு பகடி 

"அங்க பாத்தியாண்ணே, ஒரு காலத்துல திமுகவுல பொருளாதாரம்னா நம்ம அப்பாவத்தான் கூப்பிடுவாக, டெல்லில அப்பா அமைச்சரால்லாம் இருந்தாக‌. அப்பாவுக்கு அப்புறம் நம்மளத்தானண்ணே சேர்த்திருக்கணும், என்ன விடுண்ணே வெறும் கேசட்டு கடைய இப்போ அம்பானி அளவுக்கு ஆக்கின உன் மூளைய விட இங்க யாருண்ணே வேணும், வேற எதுக்குண்ணே உனையெல்லாம் விலக்கி வச்சி இப்படி பண்றாங்க"

"தம்பி, அமெரிக்க மூளை எல்லா இடத்திலும் ஜெயிக்குமா? ஆப்கன் ஆப்ரிக்கான்னு அவனுக தலைய பிச்சிட்டு போறமாதிரி இங்கயும் ஓடபோறானுக பாரு... விமான பெட்ரோலை எவனாவது மண்ணெண்ணெய் ஜெனரெட்டர்க்கு பாவிப்பானா? முடியுமா? அவுக அதத்தான் பண்ணிட்டு இருக்காக‌ "


பொருளாதாரப்புளி ஜெயரஞ்சனுக்கு இதிலே என்ன வேலையாம்? 

ஆளுநர் உரை, பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்! திமுக தேர்தல் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவோம் என்று தேதி போட்டுச் சொன்னார்களா என்று நிதியமைச்சர் கேட்டார் அல்லவா!  அதற்கு ஸ்டேன்லி ராஜன் பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்! 

 


கார்டூனிஸ்ட் அமரன் இதே விஷயத்தை இன்னமும் தெளிவாகப் படம் போட்டே சொல்லியிருக்கிறார்.


திமுக ஆட்சிக்குவந்த நாட்களிலிருந்தே கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றியதே இல்லை என்பதை இதைவிடத்தெளிவாக சொல்லிவிட முடியுமா?   

அமைச்சர் தியாகராஜன் கொஞ்சம் திமிருடனேயே கொடுத்த பேட்டியின் வீடியோ நேற்றைய பதிவில் இருந்ததே, எத்தனை பேர் முழுதாகப்பார்த்தீர்கள்? ஸ்ரீராம்! உங்களுக்கும் தான் இந்தக்கேள்வி! இன்றைய தினமலரில்  நிஜத்தைப் பேசாமல் காற்றில் வாள் வீசும் தியாகராஜன்! என்று நிதியமைச்சருடைய முழக்கத்தில் இருந்த தவறான விஷயங்களை பட்டியலிட்டு பதிலும் சொல்லி இருக்கிறார்கள். 



மாநில அரசு விதிக்கும் VAT ரூ. 34.03 இலிருந்து ஒரு ஐந்து ரூபாய் குறைத்துக்கொள்ள முடியாதா? இதற்கு நேரடி பதில் சொல்ல முடியாத அமைச்சர் பிரதமர் என்னவோ வரிப்பணத்தில் தனக்காக சொந்தவீடு கட்டுகிற மாதிரி மழுப்பினார். இப்படி அவதூறாகப் பேசி தடைகோரிய  ஒருவருக்கு நீதிமன்றம் மனுவைத்தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சரூபாய் அபராதம் விதித்ததே! அந்த விஷயத்தை அமைச்சருக்கு நினைவு படுத்தாமல், அதன்மீது தமிழக பிஜேபி வழக்குத் தொடருமா என்ற கேள்வியை எழுப்பும் அப்பாவி இணையவாசி மீது பரிதாபப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்துவிடமுடியும்?


ஆட்சிக்கு வந்தே வெறும் 46 நாட்கள் தானே ஆகிறது! அதற்குள் மார்க் போடுவதா என்று கேட்கிறீர்களா? வந்தது போனதையெல்லாம் சிக்சர்களாக சாதனைப் பட்டியலில் திமுகவினர் சேர்த்துக்கொண்டே போவதில் கார்டூனிஸ்ட் அமரன் கொடுத்திருக்கிற பூஜ்யம் மார்க் சரிதான் என்று படுகிறது.

மீண்டும் சந்திப்போம்.         


சண்டேன்னா மூணு! #அரசியல் சற்றே வாயை மூடிப் பேசவும்! #தோல்வியின்பிம்பம்

முதல்வர் ஸ்டாலின் டில்லிக்குப்போய்த் திரும்பிய இரண்டு நாட்கள் மட்டும் வாயை மூடி அமைதிகாத்த அமைச்சர் PTR தியாகராஜன் இன்றைக்கு மீண்டும் வரிசைகட்டி  அடுக்க ஆரம்பித்துவிட்டார்! புரியாமல் பேசினாரா அல்லது திமுக பாரம்பரியப்படி பொய்மேல் பொய்யாக அடுக்கினாரா என்கிற குழப்பம் இந்த 43 நிமிட வீடியோ பார்க்கிற எவருக்கும் வரும்.


இந்தப்  பேட்டி வேறுபல சேனல்களிலும் வந்திருக்கலாம் ரெட்பிக்ஸைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அது பக்கா மோடி எதிர்ப்பு ஆசாமிகளை நம்பிப் பிழைக்கிற சேனல் என்பது மட்டுமே அல்ல. வேறெந்த சேனலிலும் இது முழுமையாக கிடைக்கவில்லை. அமைச்சரின் ட்வீட்டரில்/ சொந்த யூட்யூப் சேனலில் தான் முழுதாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். 

குழலி புருஷோத்தமன் முகநூலில் நச்சென்று கேள்வி எழுப்பியிருக்கிறார் 

இந்த கம்பி கட்டுற கதையெல்லாம் வேண்டாம் அமைச்சரே. தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல பெட்ரோல் விலையை 5 ரூபாயும், டீசல் விலையை 4 ரூபாயும் குறைக்கவும். 

நீங்கள் சொல்லும் சிக்கல்கள் அதிமுக ஆட்சியில் இருந்த போதும் இருந்தது, ஆனால் அதை சொல்லி தான் அவர்கள் அடிமை அவர்களால் முடியாததை நாங்கள் செய்கிறோம் என சொல்லி வாக்கு வாங்கி வென்று இப்போது மத்திய அரசின் மீது பழி போடும் கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லக்கூடாது. 

நீட் தேர்வு நீக்க முடியாது, டீசல், பெட்ரோல் விலையை குறைக்க முடியாது எனில் தெரிந்தே பொய் சொல்லி உள்ளீர்கள், பொய் சொல்லி ஆட்சியை பிடித்தது ஏன்? கிஷோர் கே சாமியை கைது செய்யவா பொய் சொல்லி ஆட்சியை பிடித்தீர்கள்?!

தேர்தல் வாக்குறுதிகள் சும்மா லுலுலாயிக்குச் சொல்லப் படுவது, நிறைவேற்றுவதற்காக இல்லை என்பது பாமக  ஆதரவாளரான புருஷோத்தமனுக்கும்  தெரியும். ஓட்டுப் போட்ட பாமர ஜனங்களுக்குத் தெரியுமா? இந்தப்பேட்டியில் தேதி போட்டாங்களா என்று அமைச்சர் சூடாகிக் கேட்ட வசனம் ட்வீட்டரில். செம காமெடியாகிப்போனதைத் தவிர வேறொன்றும் சாதித்தமாதிரித் தெரியவில்லை. அமைச்சர்கள் காமெடி சென்ஸ்  உள்ளவர்களாக இருக்கலாம் தவறில்லை! முழுக் காமெடியனாகவே மாறிவிடக்கூடாது இல்லையா! நாடு தாங்குமா?  . 


இந்து தமிழ்திசையை விட்டு வெளியேறிய எழுத்தாளர் சமஸ், ஊடகர் ஆகிவிட்டாராம்! சின்ன  ஊடகர் பெரிய ஊடகரைப்பற்றி நாளை பேசுகிறா!ராம் . இனி சென்னை அண்ணா நகர்  கேகே நகர் அசோக் நகரில் எல்லாம்......!! 

 


ஜெகமே தந்திரம் திரைப்படத்தில்  ஈழத்தமிழர் இயக்கத் தலைவராக வரும் சிவதாஸ் கதாபாத்திரம் கார்ல் மார்க்ஸ் புத்தகம் ஒன்றைப்படிக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கிறது. நம்மூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் புரட்சியாளர்களுக்கு திடீரென ரோஷம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதாம்! Abhinav Surya என்பவர் முகநூலில் இப்படிப்பொங்கி இருக்கிறார்.

#ஜகமேதந்திரம் உங்க "போராளி" businessக்கு "மார்க்ஸ்" முதலீடா?

போர் நடக்கும் இடங்களுக்கு ஆயுதங்களை விற்று, அதிலிருந்து வரும் காசைக் கொண்டு, போரால் பாதிக்கப்பட்டவர்களை அகதிகளாக அங்கீகரிக்க "போர்" ஒன்றை நடத்துகிறார்களா? இவர்கள் தான் "இயக்கம்" ஆ? என்ன லாஜிக் இது? இது தான் "புரட்சி"யா?

ஏகாதிபத்தியம், சுரண்டல், போர்கள், அகதிகள்,  நெருக்கடி, இனவாதம்.. இவற்றுக்கிடையேயான இணைப்பு வரை மட்டும் "புரட்சிகர" வசனங்கள் எழுத கற்றுக்கொண்ட  கார்த்திக் சுப்புராஜ், இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் "ஆயுத உற்பத்தி & விற்பனை" பொருளாதாரத்திற்கும் இடையே உள்ள இணைப்பைப் பற்றி கற்றுக்கொள்ள மறந்து விட்டாரா?

"ஆயுத உற்பத்தி" நிறுவனங்கள் போர்கள் நீடிப்பதன் மூலம் லாபம் அடைவதை மறந்து விட்டாரா? அப்படி என்றால் இந்த so-called "இயக்கம்" கூட இந்த ஏகாதிபத்திய அயுத விற்பனை சுழற்சியில் ஒரு இணைப்பு தானே? புரட்சியின் பாதையிலே நமக்கு ஆயுதங்கள் தேவையாக இருக்கலாம். ஆனால் அதை இந்த "gang"கள் "விற்பனை" செய்து தான் நாம் பெற வேண்டுமா?

கொஞ்ச நாள் முன்னாடி தான் "புலிகளின் போதை பொருள் கடத்தவில்லை" என சமூக ஊடகங்கள் அனைத்திலும் வாதிட்டு விட்டு, இன்று "புலிகள் ஆயுதம் கடத்தினார்கள்" என்று "பெருமையுடன்" காட்டும் திரைப்படத்தை பாராட்டிக் கொண்டு இருப்பது என்ன லாஜிக்? "ஆயுதம் கடத்தி விற்று அந்த காசை வைத்து இனவெறிக்கு எதிராக போராடுங்கள்" என்பது தான் மார்க்சியம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடமா?

அதிலும் அந்தக்கடைசி வரி என்னை அப்படியே பிடித்து உலுக்கிவிட்டது. மார்க்சீயத்தையும் மறந்து சகாவு EMS எழுதிக்குவித்த தத்துவ விளக்கங்களையும் துறந்து, மக்கள் ஜனநாயகப்புரட்சிக்கான செயல்திட்டத்தையும் மறந்து  அங்கே சோனியா காங்கிரசுக்கும் இங்கே திமுகவுக்கும் பக்கவாத்தியம் வாசிப்பதையே வாழ்நாள் பயனாகக்கருதிச் செயல்படுகிறவர்களுக்கு இங்கே வந்திருப்பது ரோஷமா என்பது புரியாமல் திகைத்துத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். 😰😖  


ராகுல் காண்டிக்கு நேற்று 51வது பிறந்தநாளாம்! பதிவர் சேட்டைக்காரன்  முகநூலில் இதுகுறித்து வெளியான இரு ஆங்கிலக்கட்டுரைகளைத் துவைத்தெடுத்து இருக்கிறார். சுட்டி கொடுப்பது வாசிப்பதற்காகவே என்று தனியாகச் சொல்லவும் வேண்டுமா? TheWire தளத்தில் நளின் வர்மா  எழுதியிருப்பது கொஞ்சம் வித்தியாசமாக! அதாவது காங்கிரஸ் கெட்டுக்குட்டிச் சுவரானதுக்கு ராகுலைக் குறை சொல்லக்கூடாதாம்! ஏனென்றால் காங்கிரஸ் 1980 களிலும் 1990 களிலும் சீரழியத் தொடங்கிவிட்டது. அதற்கு ராகுல் காண்டியைக் குற்றம் சொல்வது எப்படிச் சரியாக இருக்கும் என்பது அவருடைய வாதம். சிலநாட்களுக்கு முன்னால் NDTV தளத்தில் அசுதோஷ் குப்தா எழுதிய கட்டுரைக்கு லிங்க் கொடுத்து ஜூன் 14 அன்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் அசுதோஷ் கொஞ்சம் கூடததயக்கமே இல்லாமல் ராகுல் காண்டி ஒன்று தலைமைப்பொறுப்பை ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் நந்திமாதிரிக் குறுக்கே நிற்காமல் வழிவிட்டு விலக வேண்டும் என்பதைத் தலைப்பிலேயே தெளிவாகச் சொல்லி ஆரம்பித்ததுதான் சரியான பார்வையாக இருக்கமுடியும் என்று எனக்குப் படுகிறது.

The problem with Rahul Gandhi is that he thinks he is giving Modi a spirited fight on each and every issue, and that the Congress, sooner rather than later, will be the default choice. He forgets that India has changed, the default setting has been replaced by a new political algorithm. Capturing the mind space of the voter is not a weekend game but is 24x7 live streaming. Dynasts like Jitin Prasada and Scindia are happier in their cozy comfort. The surround sound of their hangers-on satisfies their false egos. Ideological commitment for them is more like candy floss, the flavour of which can be changed with the changing times and winning elections is like earning a blue tick from Twitter. இப்படி சிவப்புநிறத்தில் வேறு இரண்டு வாரிசுகள் பெயர் இருந்தாலும் சொல்வது நூற்றுக்குநூறு பொருந்துவது ராகுலுக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் ராகுல் காண்டி எனும் தோல்வியின் பிம்பத்தையும் சரியாக மதிப்பிட முடியும் என்றுதான் எனக்குப் படுகிறது. இதுபற்றி உங்களுடைய கருத்தென்ன என்பதை பின்னூட்டங்களில் பகி.ரலாமே 

மீண்டும் சந்திப்போம்   

ஜெகமே தந்திரம்! குப்பைகளோடு கைகோர்க்கும் திரைப்பட அரசியல்!

எல்லா (யெஸ், 100%) விமர்சனங்களும் படம் மரண மொக்கை என்று உறுதிபடக்கூறியிருப்பதால், அப்படி என்னதான் மொக்கை என்ற எண்ணத்துடனே ஜகமே தந்திரம் படத்தைப் பார்க்கப் போகிறேன் இப்படிப் பெனாத்தல் சுரேஷ் நேற்றைக்கு ட்வீட் செய்ததைப் பார்த்த பிறகுதான் ஜெகமே தந்திரம் படத்தைப் பார்க்கும் எண்ணம் எனக்கும் வந்தது.


விடலைத்தனமான பொறுக்கி வேடத்துக்கு தனுஷை விடப் பொருத்தமான நடிகனைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதும் படத்துக்குத் தேவைக்கு மேலேயே தனுஷ் இட்டுநிரப்பிவிடுவார் என டைரக்டர் நினைப்பும் சேர்ந்த விநோதக் கலவையாக உருவாகியிருக்கிற படம் ஜெகமே தந்திரம்.


இது நம்ம சேட்டைக்காரன் பதிவர்!

பூசணிக்காய் சைசில் இருப்பவரை பொரி உருண்டை எனக் குறைத்து மதிப்பிட்ட ஒன்றைத்தவிர கருத்தில் முழுக்க உடன்பட வேண்டியதாகி இருக்கிறது. பேட்டரி வாங்கினதுக்காக இங்கே ஒருத்தர் ரொம்ப நாளாக ஜெயில்ல இருக்கார் என்று ஒருவசனம்! பேரறிவாளனை ஆதரிக்கிறார்களாம்! உள்ளூர்ல விலைபோகுமா?    


ஈழத்தமிழர் மீது நம்மூர் திரைத்துறைப் புள்ளிகளுக்குத் திடீர்ப்பாசம் அக்கறை பிறப்பது புதிதல்லதான்! ஆனால் கார்த்திக் சுப்பாராஜுக்கு வந்திருப்பது அக்கறைதானா? படத்தில் சொதப்பியிருப்பது வேறுவிதமாக நினைக்க வைக்கிறது. ஈழத்தமிழருக்கு இந்தியத்தமிழர்கள் செய்தது துரோகம் இ.தமிழர் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் இன்னொரு துரோகத்தை ரிவர்சில் செய்வது என்று காதில் பூ சுற்றியிருக்கிறார் கா. சுபபராஜ்.

புரியவில்லையா? பிபிசி தமிழ் விமரிசனத்தைப் பார்த்து விடுங்கள்! இலங்கைத்தமிழரோ இந்தியத் தமிழரோ, தமிழர் என்றாலே கேணைகள்தானே என்ற நினைப்பில் ஈழத்து அரசியலும் பிரச்சினையும் தெரியாமல் ரீல் ரீலாகச் சுற்றியிருக்கிறார் கார்த்திக் சுபபராஜ்.

கா. சுபபராஜ் மாதிரியானவர்கள் படமெடுப்பது காசு பார்ப்பதற்காகத்தானே தவிர சமூக அக்கறையில் அல்ல என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான்! இவர்போன்ற ஆசாமிகள் சிறிது காலத்துக்கு முன்புவரை பள்ளிக் கூடங்கள், விவசாயிகள் என்று கலர்கலராக லேபிள் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது ஈழத்தமிழருக்கு ஆதரவு என்கிற லேபிளில் வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.  தமிழன் என்றவுடனேயே உச்சி மிகக் குளிர்ந்து ஏமாறத்தயாராகிவிடும் இனமல்லவா!

கொள்ளைக்காசு கொடுத்து Netflix இந்தப்படத்தை வாங்கி இருப்பதில் தயாரிப்பாளர்களோடு கதை பண்ணியவருக்கும் ஏகப்பட்ட ஆதாயம். விமரிசனங்கள் மிகவும் நெகடிவாக வந்துகொண்டிருப்பதால் தனுஷ் அவற்றைத் தவிர்ப்பதாக தினமலர் செய்தி சொல்கிறது.


     

முந்தைய பதிவை இதுவரை பார்க்காமல் இருந்தால் இப்போதாவது வாசிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்.