காரணத்தில் காரியம்! காரியத்தில் காரணம்! நிறைந்திருக்கும் பூரணம்!



காரண காரியத்தில் நிறைந்திருக்கும் பூரணத்தைத் தெரிந்து கொள்வது எப்போதாம்? 

Our mind is a house haunted by the slain past,
Ideas soon mummified, ghosts of old truths,
God's spontaneties tied with formal strings
And packed into drawers of reason's trim bureau,

Sri Aurobindo

Savitri Bk. II, Canto. XIII, P. 285


மனம் என்பது இரு விதமான முரண்பாடுகளுக்கிடையில் எப்போதும் சலித்துக் கொண்டே இருக்கிற கருவி, ஏன், எப்படி, எதனால் என்று தர்க்கித்துக் கொண்டே போகும். இப்படிப் பட்ட கருவி ஒரு போதும் உண்மையை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள முடியாது. இந்தத் தருணத்தில்மிகவும் புரட்சிகரமாகத் தோன்றுகிற ஒரு கருத்து அல்லது வடிவம், சீக்கிரமாகவே நீர்த்துப் போவதை நம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்!


மத நம்பிக்கைகள் மனிதன் தன் அன்றாட வாழ்வில் சந்தித்துக் கொண்டிருக்கிற முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பவையாக இருந்ததுண்டு. தீர்வு காண்கிறேன் பேர்வழி என்று நிறைய இடைச் செருகல்களாகப் புகுந்து கொள்ள, காலப் போக்கில் இந்த தீர்வுகளே புதிய பிரச்சினைகளாகமாறிப் போனதையும் வரலாற்றில் நாம் பார்த்திருக்கிறோம்.


உடனேயே "மதம் என்பது மக்களுக்கு வழங்கப்படும் அபின்" அல்லது "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்று ஆரம்பித்து, எல்லாப் பிரச்சினைக்கும் இவர் அல்லது அவர் தான் காரணம் என்று பழியை ஏதோ ஒன்றின் மேல் சுமத்தி விட்டால் பிரச்சினை தீர்ந்தது! 


உண்மையான  பிரச்சினை என்ன என்பதையே மறந்து விட்டு ஏதோ ஒரு ஈயம் பூசிவிட்டால் அது தான் தீர்வு என்று மயங்கிக் கிடக்கிறோம். மார்க்சீயம், பார்ப்பனீயம் இன்னும் வகை வகையான ஈயங்கள்! ஈயங்களுக்கா இங்கே  பஞ்சம்!

ஒரு மதம் என்பது, ஒரு குறிப்பிட்ட தனிநபர் தான் கண்டடைந்த அனுபவத்தின் மீது சொல்லப் படுவதில் எழுப்பப் படுவது. அதைப் பின் பற்றுகிறவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது. திக்கு திசை தெரியாமல் தேங்கி  இருப்பதை விட, ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு முன்னேற ஒரு வழி அவ்வளவு தான்!  இப்படி தனிநபர்களால், அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும், குழு, அல்லது கூட்டம் ஒரு நம்பிக்கையாக, ஒரு மதமாக உருவாகிறது. ஆக ஆரம்பித்து வைத்தவரின் அனுபவத்தின் அளவுக்கு மட்டுமே அந்த மதத்தின் எல்லை என்பதாகி விடுகிறது.


ஸ்ரீ அரவிந்த அன்னை மதங்களின் தேவை முடிந்து விட்டதாக அறிவிக்கிறார்! மதங்களின் தேவை முடிவது எப்போது?

குறுகிய வட்டத்தில் இருந்து ஆன்மீகச் சிந்தனைக்கு உயருகிற போது, மதம் என்பது அவசியம் இல்லாது போகும்.


ஆன்மீகச் சிந்தனை என்பது ஒரு பரந்த பார்வை, தனக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்த நிலை! எல்லாவற்றையும் நேசிக்கக் கற்றுக் கொண்ட நிலை. ஆன்மீகம் என்கிற போதே, எல்லாவற்றையும் துறந்த நிலை என்பதாக தப்பான ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டு, அடிப்படை உண்மைகளையே நிராகரிக்கிற தப்பான அணுகுமுறைக்குப் போய் விடுகிறோம்.


உண்மையில், ஆன்மீகம் என்பது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிற ஒரு பக்குவமான நிலை. ஸ்ரீ அரவிந்த அன்னை இதை எளிதாகப் புரிகிற மாதிரி விளக்குவதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!




Why does man have faith in reason?

Because reason has a legitimate function to fulfill, for which it is perfectly adapted; and this is to justify and illumine for man his various experiences and to give him faith and conviction in holding on to the enlarging of his consciousness.

This truth is hidden from the rationalist because he is supported by two constant articles of faith, first that his own reason is right and the reason of others who differ from him is wrong, and secondly that whatever may be the present deficiencies of the human intellect, the collective human reason will eventually arrive at purity and be able to found human thoughts and life securely on a clear rational basis entirely satisfying to the intelligence.


His first article of faith is no doubt the common expression of our egoism and arrogant fallibility, but it is something more; it expresses this truth that it is the legitimate function of the reason to justify to man his action and his hope and the faith that is in him and to give him that idea and knowledge, however restricted, and that dynamic conviction, however narrow and intolerant, which he needs in order that he may live, act and grow in the highest light available to him.

The reason cannot grasp all truth in its embrace because truth is too infinite for it; but still it does grasp the something of it which we immediately need, and its insufficiency does not detract from the value of its work, but is rather the measure of its value.


For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self-enlargement. 


The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings. It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the whole of its value. 

It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business.


For so man moves towards the infinity of Truth by the experience of its variety; so his reason helps him to build, change, destroy what he has built and prepare a new construction, in a word, to progress, grow, enlarge himself in his self-knowledge and world-knowledge and their works.

But reason cannot arrive at any final truth because it can neither get to the root of things nor embrace their totality.
It deals with the finite, the separate and has no measure for the all and the infinite.


தான் யோசிக்கிற விதம் தான் சரி, கருத்து மாறுபடுகிற மற்றவர்கள் சொல்வது தவறு என்ற வரட்டுப் பிடிவாதம் பிடிப்பதில் தான் பகுத்தறிவுவாதியாக, நாத்திகனாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொள்கிற ஒருவர் உண்மையைக் காணத் தவறுகிறார்.  


தர்க்க ரீதியாகக் காரணத்தால் அறிய முற்படுவதால் உண்மையை ஒருபோதும் முழுமையாகக் காண முடியாது. 

ஏனெனில் உண்மை என்பது மகத்தானது, மிகப் பெரியது. ஆனாலும் குருடர்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் எதோ ஒரு பகுதியைத் தடவிப் பார்த்து, இது தான் யானை என்று சொல்ல முற்படுவதுபோல காரணத்தால், காரியம், காரியத்தால் காரணம் என்று தொடர்ந்து கொண்டே போகும்போது, அங்கே நிறைந்திருக்கும் பூரணத்தைக் காணத் தவறி விடுகிறோம்! 

ஒரு இனிப்புக் கடைக்குப் போகிறோம்! பலவிதமான இனிப்பு வகைகள்! பல வண்ணங்கள்! பலவிதமான ருசிகள்! அடிப்படையாக இனிப்பு என்ற ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்பது பார்க்கும்போது புரிவதில்லை! 



மனிதன் உண்மையை  எடுத்த எடுப்பிலேயே முழுமையாக விளங்கிக் கொள்ளும் வகையில் படைக்கப் படவில்லை என்பதை முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்! 

படிப்படியான அனுபவங்கள், சறுக்கல்கள், மீண்டு வருதல் இப்படி பலகட்டங்களைத் தாண்டித் தான், மனிதனுடைய விழிப்பின் எல்லை விரிவடைந்தாக வேண்டியிருக்கிறது. இங்கே வெறும் காரண காரியங்களை தர்க்கித்து அறிந்து கொள்ளும் அறிவைக் குறிப்பிடவில்லை. அறிவிற்கும் அறிவாக இருக்கும் விழிப்பு, இதைத் தான் ஞானம் என்று சொல்கிறோம்!


விழிப்பின் எல்லை விரிவடைவதற்கு தனக்குள்ளே மாற்றம் கண்டாக வேண்டும். எல்லை கட்டி பார்ப்பதில் இருந்து விடுபட்டுப்  பரந்த பார்வை பெறும்போது மட்டுமே, வெளியே காண்பதன் வளர்ச்சி மாற்றங்களோடு ஒத்திசைந்து போக முடியும்.
 


Without an inner change man can no longer cope with the gigantic development of the outer life.



“Our human knowledge is a candle burnt
  On a dim altar to a sun-vast Truth”

என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்திரி மகாகாவியத்தில் சொல்கிறார்.

திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த ரெகார்ட் மாதிரியே, நாத்திகம், பரிணாம, பரிணாம மறுப்பு பற்றிப் பேசும் சீசன் அவ்வப்போது ஆரம்பித்துவிடும்! பரிணாமம் பற்றி பேச வந்த இடத்தில்  பார்ப்பனீயம், சொம்புதூக்குவது  இன்ன பிற தமிழ்ப் பதிவுகளுக்கு என்றே உண்டான அடையாள அடைமொழிகளோடு குறுகிப்போய் நின்றுவிடுவதை அடிக்கடி பார்த்துச் சலித்துக் கடைசியில், கொஞ்சம் தெளிவு படுத்திக் கொள்வதற்காக ஏற்கெனெவே எழுதியதன் மறுவாசிப்பு! மீள்பதிவு! கொஞ்சம் மாறுதல்களுடன்!

 



சண்டேன்னாமூணு! கொஞ்சம் படம்! கொஞ்சம் செய்தி! கொஞ்சம் கேள்வி!




இங்கே நித்தியானந்தா விவகாரத்தில் முன்னேற்பாட்டுடன் வீடியோவெல்லாம், அதை மூன்று நான்கு நாட்கள் சலித்துப் போகிற வரை ஒளி பரப்பினமாதிரி, ஜனங்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்த்த மாதிரி அங்கே எல்லாம் இல்லை போல! 

அல்லது இதெல்லாம் சகஜமப்பா கேசு தானோ?!

 பாதிரிமார் சில்மிஷமெல்லாம் வீடியோவில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை! கிரேக்கத் தீவு ஒன்றில் நீலக் கடலின் பின்னணிக்குத் தோதாக, கிறித்தவ தேவாலயத்தின் கோபுரமும் நீல வண்ணத்தில்! 


நீலப் படம் அல்ல! அல்ல!
 
போப் பெனடிக்ட் எங்கே போனாலும், வில்லங்கம் அங்கே முன்னால் போய் ஆஜராகி விடுகிறது!

ஊனமுற்ற சிறுவர்களிடம், அனாதைகளுக்கு ஆதரவு என்ற பெயரில் அங்கே அடைக்கலம் தேடி வருகிறவர்களிடம் பாதிரிமார் சில்மிஷம், பாலியல் வன்முறை செய்துவருவதும் குறையவில்லை! தினசரி
ஏதோ ஒன்று அம்பலமாகிக் கொண்டிருப்பதும்,  உலகெங்கும் கண்டனங்கள் பெருகி வருவதும் நீண்ட தொடர்கதையாகி வருகின்றன. 

பாதிரிமார் சில்மிஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் வழக்குத் தொடருவதும் நஷ்ட ஈடாக பல நூறு கோடி டாலர்களை சர்ச்சுகள் தண்டம் அழுது வருவதுமே கூட மெகா சீரியலாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன! இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம் வழக்குகள், செய்திகள் கிளம்புமோ தெரியவில்லை!

இங்கிலாந்துக்கு இருபத்தெட்டு வருடம் கழித்து, வருகிற செப்டம்பர் மாதம்  ஒரு போப் விஜயம் செய்ய இருக்கும் தருணத்தில், கொஞ்சம் நக்கலும் நையாண்டியும் கலந்தமாதிரியான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க யோசனை செய்த விவரம், அது வெளியே தெரிய வந்ததும், பிரிட்டிஷ் அரசு வாடிகனிடம் வருத்தம் தெரிவித்ததும் முழு விவரங்களுக்கு 
மேலே லின்கைச் சொடுக்கிப் பாருங்கள்!

அப்படி என்ன வில்லங்கமான நிகழ்ச்சி நிரல், யோசனை என்று கேட்கிறீர்களா?

கருச் சிதைவு, ஓரினத் திருமணம் இவற்றை கத்தோலிக்க சர்ச் கடுமையாக எதிர்த்து வருகிறது! 


போப் வரும்போது, ஓரினத் திருமணம் (ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும்) ஒன்றை ஆசீர்வதித்து நடத்துவது, 

போப்  பிராண்டுடன் கருத்தடைக்கான காண்டம்களை வெளியிடுவது, 

ஒரு மருத்துவ மனையில் கருத்தடைக்கான வார்டைத்  திறந்து வைப்பது 

உள்ளிட்ட யோசனைகளை ப்ரெயின் ஸ்டார்மிங் என்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதில், ஒரு அரசு ஊழியர் யோசனைகளாக சமர்ப்பித்த விவரம்  வெளியே கசிந்து, பிரிட்டிஷ் அரசுக்குத் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது! சண்டே டெலிகிராப் பத்திரிகையில் நேற்றைக்கு இந்த செய்தி வெளியானதும், வாடிகனில் உள்ள பிரிட்டிஷ் தூதர் போய் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தாராம்!

போப்பின் வருத்தம் தீர்ந்ததா? அல்லது பாதிரி சில்மிஷப் பிரச்சினை தீர்ந்ததா?

oooOooo 


பரிணாமம் படும் பாடு!
இப்போதெல்லாம் வேலைக்கு ஆகாத, பொழுதுபோக்குக்கு மட்டும்  நாத்திகம் பேசுகிற மாதிரியே பரிணாமத்தைப் பற்றிப் பேசுவதுமே ஒரு ட்ரெண்டாக வளர்ந்து கொண்டிருக்கிறது! பரிணாவியலைப் புரிந்து கொண்டுதான் பேசுகிறார்களா, எழுதுகிறார்களா என்று தேடிப்பார்த்தால் விடை பூஜ்யம் தான்!


வாலுடன் பரிணாமம் பேசினால் இப்படித்தான் இருக்குமோ!

இந்தப் படத்தைப் பாருங்கள்! உங்களுக்காவது நாத்திகம், பரிணாமம், பரிணாமவியல் ஏதாவது புரிகிறதா?

oooOooo

கல்லறைக்குப் போனால் மட்டும்  சும்மா விடுவேனா ?!


 
காதலிக்காகத் தாஜ் மஹால் கட்டினான், தற்கொலை செய்து கொண்டான் என்று இங்கே எல்லாத் தியாகத்தையும் ஆண்கள் தான் செய்து கொண்டிருப்பதாக சில வெட்டி மன்றப் பேச்சாளர்கள் சொல்வதுண்டு! இது வரை எந்தப் பெண்ணுமே அந்த மாதிரி செய்தததாகக்   கேள்விப்பட்டதும் இல்லையென்பதால் நான் கூட அதை அதை நம்பினதுண்டு! ஒருவலைத் தளத்தில்  பார்த்த படம், செய்தி, கொஞ்சம் அந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!




ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மாகாணத்தில் மாசிடோன் என்ற கல்லறைத் தோட்டத்தில், ஒரு பெண்மணி தன்னுடைய மாளாத காதலைச் சொல்கிற மாதிரி இறந்த காதலனுடைய கல்லறை மேல் சிற்பமொன்றை வடிவமைத்திருக்கிறாராம்!

மாளாத காதலைச் சொல்வது கிடக்கட்டும்! கல்லறைக்குள் போனாலும் உன்னை விட மாட்டேன் என்று சொல்கிற மாதிரியும் இருக்கிறதே என்று புள்ளிராசா வங்கி தந்த புள்ளி விவரச் சிங்கம் அண்ணாச்சி கருத்துத் தெரிவிக்கிறார்!

உங்கள் கருத்தென்னவோ?!

oooOooo

காங்கிரஸ் காமெடி! இன்றைய கேள்வி !

வருகிற மே மாதம் முதல் தேதி, குஜராத் மாநிலம் அமைந்து ஐம்பதாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, நரேந்திர மோதி அரசு பொன் விழாக் கொண்டாட்டங்களை விரிவாக ஏற்பாடு செய்திருக்கிறது. ஜனாதிபதியை அழைத்திருந்தார்கள்! வர இயலாது என்று ஏதோ சால்ஜாப்பைச் சொல்லி நிராகரித்ததன் பின்னணியில், காங்கிரஸ் கட்சி இருப்பது பெரிய ரகசியமுமல்ல!

ஜனாதிபதிப் பதவி என்பது  வெறும்  ரப்பர் ஸ்டாம்ப் மாதிரிப் பயன்படுத்துவது, அல்லது ஜெயில் சிங் ஜனாதிபதியாக இருந்தபோது பெருமையாகச் சொல்லிக் கொண்டபடி, மேடம் உத்தரவிட்டால் காலணியைக் கூடத் துடைக்கத் தயாராக இருப்பதாக- அந்த மாதிரி  வேலைக்குத் தான் என்பது இந்திரா காந்தி காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது! மோதி குஜராத் மாநில அரசியலில்  வலுவாகக் காலை ஊன்றிக் கொண்டிருப்பதும், அடுத்த பிரதமர் பதவி வேட்பாளராகக் கூட அறிவிக்கப் படலாம் என்ற அளவுக்குத் தேசீய அளவில் வளர்ந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் கண்ணை ரொம்ப நாளாகவே உறுத்திக் கொண்டிருக்கிறது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு நரேந்திர மோதியை விசாரித்ததும், அரசியல் பின்னணியே தவிர, உண்மையில் அந்தப் பெட்டி எரிக்கப் பட்டதில் உயிரிழந்தவர்களுக்கு நியாயம் வழங்க அல்ல என்பதும் எல்லோருக்கும் தெரிந்த சிதம்பர ரகசியம் தான்! 


இன்றைக்கும், அப்புறம் வரலாற்றில் என்றைக்கும் காமெடிப் பீஸ் காங்கிரஸ் கட்சிதான் என்று பெயர் வாங்குவதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்! 

காங்கிரஸ்காரர்கள், காமேடிப்பீசாகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்கு முன்னெப்போதும் இவ்வளவு கடுமையாக உழைத்தது இல்லை! கோமாளிப் பட்டமெல்லாம் இதற்கு முன்னால்தானே வந்து சேர்ந்தது தான்!

கொஞ்ச நாளைக்கு முன்னாள், மும்பை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று ராஜீவ் காந்தியின் நண்பராக இருந்து, இன்றைக்கு ஆகாமல் போனவரான அமிதாப் பச்சனை அழைத்து விட்டு, போட்டோவுக்கெல்லாம் போஸ் கொடுத்த பின்னால், ஐயா காங்கிரஸ் மேலிடத்துக்கு வேண்டாதவர் என்று உறைத்ததும், அழைப்பு அனுப்பவே இல்லை என்றுமகாராஷ்டிரா மாநில முதல்வர்  பல்டி அடித்து, அப்புறம் ஒரு அமைச்சர் நான் தான் அழைத்தேன், இது முதலமைச்சருக்குக்கும் தெரியும், அவர் ஒப்புதலோடு தான் அழைப்பே அனுப்பப் பட்டது என்று போட்டு உடைத்த கூத்து நினைவுக்கு வருகிறதா?

பி கே ஹரி பிரசாத் என்று ஒரு காங்கிரஸ்காரர்! காங்கிரஸ் பொது செயலாளர்களுள் ஒருவர்! குஜராத் மாநிலத்துக்குப் பொறுப்பானவரும் கூட!

அமிதாப் பச்சனை குஜராத் மாநில அரசு தன்னுடைய பிராண்ட் அம்பாசடராக  வைத்திருப்பது ஏன் என்று கேள்வியை எழுப்பி
ருக்கிறார்! குஜராத் மாநிலத்தின் தலை சிறந்த தொழில் அதிபரான அம்பானிகளை விட்டு விட்டு, அமிதாப் பச்சனை நல்லெண்ணத் தூதுவராக நியமிப்பானேன் என்பது அவருடைய கேள்வி!

ரொம்பவே நியாயமானது தான்!
செய்தி இங்கே!

கேள்வியைக் கேட்பதற்கு முன்னால், அது ஏன் காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி தான் தலைவராக இருக்க வேண்டும்? வேறு உள்ளூர்க் காரர்கள், இந்தியர்கள் எவருமே இல்லையா? நேரு குடும்பத்து வாரிசுகளைத் தவிர, காங்கிரசுக்கு வேறு நாதியே இல்லையா?  

இந்தக் கேள்விக்கு விடையைக் கண்டு பிடித்து விட்டு, அப்புறம் நரேந்திர மோதி, ஆகாமல் போன அமிதாப் பச்சனைக் கேள்வி கேட்கட்டுமே!

காங்கிரஸ் காமெடிப் பீஸ்களிடம்,
அடிப்படை நேர்மை,குறைந்த பட்ச அறிவைக் கூட எதிர்பார்க்க முடியாது என்பதால்............

உங்களைத் தான் கேட்கிறேன்! 

இன்னும் எத்தனை நாள், இந்த முதுகெலும்பே இல்லாத,  காங்கிரஸ் கட்சியை சகித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?



இன்றைக்கு, நாள் நல்ல நாள்! தரிசன நாள்!

ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தின் இன்றைய தரிசன நாள் செய்தி!

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னையை வணங்கும் அடியவர்களுக்குச் சில நாட்கள் ஒவ்வொரு வருடமும் மிக விசேஷம்! 

திருவிழா மாதிரித் தான், ஆனால் கொஞ்சம் கூட ஆரவாரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், தரிசன நாட்கள் என்று கொண்டாடப் படும் இந்த நாட்களில், ஆன்மீக அனுபவத்தை மிகச் சிறப்பாக அனுபவிக்கும் தினங்களாக இருக்கிறது.

ஒவ்வொரு புத்தாண்டு தினமும், அதை அடுத்து பெப்ருவரியில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் அவதார தினமும் (February 21), லீப் வருடமாக இருந்தால், பெப்ருவரி இருபத்தொன்பதாம் தேதி, அதிமானசப் பேரொளியின் வருகை தினமாகவும், (Golden Day-the manifestation of the Supramental Light upon earth) கொண்டாடப் படுகிறது.

அதை அடுத்து, ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாக தங்கிய நாள், ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் தரிசன நாளாகவும், அன்பர்கள் அன்னையின் அருளில் திளைக்கும் நாளாகவும் வருகிறது.

இந்த வருட ஏப்ரலுக்கு இரண்டு விதமான கூடுதல் சிறப்பு இருக்கின்றன! இந்த வருடம் ஏப்ரல் நான்காம் தேதி, ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்த நூற்றாண்டு நிறைவாக இருந்தது. சென்ற வருடம், ஒரு அற்புதமான தருணம் தொடங்கும் நூற்றாண்டின் தொடக்கமாக இதைப் பற்றி சில படங்களுடன் பதிவு ஒன்று இந்தப்பக்கங்களில் இருக்கிறது. 

அதே மாதிரி, அன்னை என்னும் அற்புதப் பேரொளியாக அடியவர்கள் கொண்டாடும் ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாளுடைய தொண்ணூறு ஆண்டுகள் நிறைவான தருணமாகவும், இன்றைய தினம் இருக்கிறது. ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் இன்றைக்கு தரிசன நாள். அன்னையைத் தேடி வரும் அவளுடைய குழந்தைகள் ஒன்று கூடி அவளை வணங்கிப் பிரார்த்தனை செய்யும் சிறப்பான தருணமாகவும் இருக்கிறது

ஸ்ரீ அரவிந்த அன்னையைத் தேடி இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு, சுருக்கமாக இந்த நாளின் விசேஷம் என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போமா?

ஸ்ரீ அரவிந்தர், இறைவனது கட்டளையை ஏற்று, பாண்டிச்சேரிக்கு வந்த நூறாவது ஆண்டு, இந்த ஏப்ரல் 4 அன்று நிறைவடைந்தது  

ஸ்ரீ அரவிந்தர் பாண்டிச்சேரிக்கு வந்தவுடனேயே, அவரை அரசியல் தலைவராகவும், சுதந்திரப் போராட்டத்தின் தளபதியாகவும் அறிந்திருந்தவர்கள் தேடி வர ஆரம்பித்தார்கள். "இந்தியாவின் அரசியல் விடுதலை என்பது ஏற்கெனெவே நிச்சயமான ஒன்று, நீ உனக்கிடப் பட்ட பணியை மேற்கொள்வாய்" என இறைவன் விதித்தபடியே, அரசியலை விட்டு விட்டு, ஆன்மீக சாதனையைத் தொடங்கின நேரம், அங்கேயிருந்து ஆரம்பித்தது.

"He who chooses the Infinite has been chosen by the Infinite" என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரி மகா காவியத்தில் சொல்கிறார். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி எனச் சிவ புராணத்தில் மணிவாசகப் பெருமான் சொல்வது போல, ஸ்ரீ அரவிந்தரோடு, ஸ்ரீ அரவிந்தரது பூரண யோகத்தில் பங்கு பெற விதிக்கப் பட்டவர்கள், ஒவ்வொருவராகப் பாண்டிச்சேரிக்கு வர ஆரம்பித்ததும் தொடங்கியது.

"Without Him I exist not;without me he is unmanifest" என்று ஸ்ரீ அரவிந்த அன்னை தானும் ஸ்ரீ அரவிந்தரும் ஒருவரே என்றும், ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என்பதாக ஓரிடத்தில் சொல்கிறார்.

1878 இல் பாரிஸ் நகரத்தில் பிறந்து, சிறிய வயதிலேயே தான் மிகப் பெரிய ஒன்றைச் சாதிக்க வந்தவர் என்கிற விழிப்பு நிலையுடன் இருந்து, வெவ்வேறு ஆன்மீகப் பரிசோதனைகளை மேற்கொண்டு வரும் போது, ஒரு இந்தியர், மிக மோசமாக பிரெஞ்சில் மொழி பெயர்க்கப் பட்ட பகவத் கீதையின் பிரதி ஒன்றை அன்னைக்கு அளிக்கிறார். 

இந்த கால கட்டத்தில், கனவு நிலையில் தன்னை ஒருவர் வழிநடத்துவதை ஸ்ரீ அன்னை உணர்கிறார்-அவரை கிருஷ்ணா என்ற பெயரிலேயே ஸ்ரீ அன்னை குறிப்பிடுகிறார்.

மிரா ரிச்சர்ட் என்று அறியப்பட்ட அந்த காலத்தில், அவருடைய கணவர் பால் ரிச்சர்ட், 1910 ஆம் ஆண்டு வாக்கில் பாண்டிச்சேரிக்கு வந்த போது ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிக் கேள்விப் பட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை மிராவிடம் சொல்ல, அவரை சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுவடைகிறது. அரசியல் கனவுகளோடு இருந்த பால் ரிச்சர்ட், 1914 ஆம் ஆண்டு பாண்டிச்சேரிக்கு வந்து ஆதரவு திரட்ட முடிவு செய்து, மிராவுடன், காக மோரு என்கிற ஜப்பானியக் கப்பலில், காரைக்காலுக்கு வந்து சேர்கிறார்.

1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி மதியம், மிரா, ஸ்ரீ அரவிந்தரை முதன் முதலாக சந்திக்கிறார். கிருஷ்ணா என்ற பெயரில் அறிந்ததும், தன்னைக் கனவில் வழிநடத்தி வந்தவரும் ஒருவரே என்பதை அறிந்து கொண்டு அவரை வணங்குகிறார்.

"உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரிபூரணமான சரணாகதி இருக்கமுடியும் என்பதை அப்போது தான் நேரடியாகக் கண்டு கொண்டதாக" இதைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 

பால் ரிச்சர்டும், மீராவும் பாண்டிச்சேரியிலேயே தங்கி இருந்தது சில காலம். பால் ரிச்சர்ட், ஸ்ரீ அரவிந்தர் நடத்திய "ஆர்யா" பத்திரிகையின் பொறுப்பேற்றுக் கொண்டு செயல் படுகிறார்.

1915 ஆம் ஆண்டு மிரா பாரிசுக்குத் திரும்புகிறார், அங்கிருந்தே 1916 ஆம் ஆண்டு ஜப்பானுக்குப் பயணப் படுகிறார். நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் உலகப் போரின் தாக்கங்கள் குறையத் தொடங்கிய பிறகு, 1920 ஆம் ஆண்டு மிரா, பாண்டிச்சேரிக்கு மறுபடி திரும்பிய நாள் ஏப்ரல் 24.

ஸ்ரீ அரவிந்தருடைய யோக சாதனையில் பங்கு பெறுவதற்காக, மிரா ரிச்சர்ட் என்று அன்று அறியப்பட்ட ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்கிய நாளாக ஏப்ரல் 24 இருப்பதனால், இது ஆசிரமத்தின் தரிசன நாட்களில் ஒன்றாக ஆனது. 

மிரா ரிச்சர்ட் என்றறியப்பட்ட இந்த பிரெஞ்சு மாது, தங்களைப் போலவே ஸ்ரீ அரவிந்தரின் மற்றொரு சீடர் என்றே ஸ்ரீ அரவிந்தரோடு அன்றைக்கு அணுக்கமாகவே இருந்த சாதகர்கள் கூட, நினைத்துக் கொண்டிருந்தபோது, "மானுட வடிவம் தாங்கி வந்திருக்கிறாளே என்று மயங்கி விடாதே, தெய்வீக அன்னையே இவள்" என்று ஸ்ரீ அரவிந்தரால், ஸ்ரீ அன்னை என்று அழைக்கப் படுகிற காலமும் விரைவிலேயே வந்தது.1926 இல் ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்ற அமைப்பு ஸ்ரீ அன்னையினாலேயே சாத்தியமானது.

அன்னையும் தங்களைப் போல சாதகர் தானோ  என்ற சந்தேகம் டி வி  கபாலி சாஸ்திரியாருக்கும் வர, ஸ்ரீ அரவிந்தர் "அன்னையின் நான்கு சக்திகள்" என்ற விளக்கமான கட்டுரையை அவர் படிக்கக் கொடுக்கிறார். ஸ்ரீ அரவிந்த அன்னையைப் பராசக்தியின் வடிவமாகவே, தேவி உபாசகரான கபாலி சாஸ்திரியார் உணர்ந்து கொண்டதையும், தன்னுடைய குரு காவ்ய கண்ட கணபதி முனியையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்து, அன்னையை அறிந்து கொண்டதையும் சின்ன நாயனா என்றே அழைக்கப் பட்ட கபாலி சாஸ்திரியாரை பற்றி முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்! நாயனா, சின்ன நாயனா, ரமணர் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்து, இந்தப் பதிவுகளில் தேட, மேற்சொன்ன பதிவுகள் படிக்கக் கிடைக்கும்.
ஸ்ரீ அரவிந்த அன்னையை எப்படி தியானிப்பது, எப்படி அவரது அருளைப் பெறுவது என்பதை ஸ்ரீ அரவிந்தருடைய வார்த்தைகளிலேயே பார்க்கலாம்!

The sadhana of inner concentration consist in:
 
1. Fixing the consciousness in the heart and concentrating there on the idea, image or name of the Divine Mother, whichever comes easiest to you.

2. A gradual and progressive quieting of the mind by this concentration

3. An aspiration for the Mother's presence in the heart and the control by her of mind, life and action. But to quiet the mind and get the spiritual experience it is necessary first to purify and prepare the nature.

Sri Aurobindo

இந்த நல்ல நாளில் ஸ்ரீ அரவிந்த அன்னையே, நீ எங்கள் இதயத்திலும் நிலையாகத் தங்கியிருப்பதை உணர்ந்து, உனது பிரியத்துக்கு உகந்த குழந்தைகளாகும் தகுதியை வரமாக அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி பரமே!

இது சென்ற வருடம் எழுதியதன் மீள்பதிவு தான்! தேவைப்படுகிற இடங்களில் சிறு மாற்றங்களுடன்!




காண்டு இல்லாத சின்னப் பொண்ணு ஜோக்ஸ்...!

ஒரு சிறு பெண் தன் தாயிடம் கேட்டது!

"அம்மா! மனித இனம் எப்படித் தோன்றியது?"

அம்மா சொன்னாள்,"கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. அப்படியே மனித இனம்  தோன்றியது."

இரண்டு நாள் கழித்து, அந்தச் சின்னப் பெண், தன் தந்தையிடம் அதே கேள்வியைக் கேட்டாள். தந்தை பரிணாமத்தைச் சுருக்கமாக விவரிக்கிறேன் பேர்வழி என்ற முனைப்பில்  "நீண்ட காலத்துக்கு முன்னால் குரங்குகள் இருந்தன. அவைகளில் இருந்து மனித இனம் தோன்றியது." என்று சொன்னாராம்.

சின்னப் பெண்ணுக்குக் கொஞ்சம் குழப்பம்! மறுபடி அம்மாவிடம் போய்க் கேட்டாளாம்: " நீயோ மனித இனத்தைக் கடவுள் படைத்ததாகச் சொல்கிறாய்! அப்பாவோ குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்கிறார்! அது எப்படி அம்மா?"

அம்மாக்காரி சொன்னாள்  : "அது ரொம்ப சரிதான் குழந்தை! நான் என்வழிக் குடும்பத்தைப் பற்றிச் சொன்னேன்! அப்பா அவர் வம்சாவளியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்!"


oooOooo


அந்தச் சின்னப் பெண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்!

பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிய சின்னப் பெண்ணிடம் அம்மா கேட்டாள்: "பள்ளிக் கூடத்தில் இன்றைக்கு என்ன சொல்லிக் கொடுத்தார்கள்?"

சின்னப் பெண் பெருமிதத்தோடு  சொன்னாள்: " எப்படி எழுதுவது என்று சொல்லிக் கொடுத்தார்கள்!"

அம்மாக்காரி கேட்டாள், "நீ என்ன எழுதினாய்?"

சின்னப் பெண் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சொன்னது, "தெரியலையே! எனக்கு இன்னமும் எப்படி எழுதினதைப் படிப்பதுன்னு சொல்லிக் கொடுக்கலையே!"

oooOooo


அந்தச் சின்னஞ்சிறு பெண்ணிடம், டீச்சரம்மா கேள்வி கேட்டார்!

"பூமி உருண்டைதான் என்பதற்கு மூன்று ஆதாரங்களைச் சொல்லு பார்ப்போம்!"

சின்னப்பெண் சீரியசாகச் சொன்னாளாம்: "பூமி உருண்டைதான்னு எங்கம்மா சொன்னாங்க, அப்பா சொன்னாங்க, நீங்களும் சொன்னீங்களே டீச்சர்!"

oooOooo

சின்னப் பெண்ணுக்கு அம்மா தட்டில் சோறு, காய்கறி, கீரையை எடுத்து வைத்தாள். "பச்சைக் காய்கறி, கீரையை நிறைய சாப்பிடு! உன்னுடைய சருமத்துக்கு நல்லது!"

சின்னப் பெண் சீரியசாகச் சொன்னாளாம், "பச்சைக் காய்கறி சாப்பிட்டால் சருமம் பச்சையாகிவிடும்! எனக்குப் பச்சைத் தோல் பிடிக்காது!"
ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு சீசன் இருக்கிற மாதிரி, வலைப்பதிவுகளிலும்  ஒவ்வொரு சீசனுக்கும், யாரையாவது காய்ந்து கொண்டே இருக்க வேண்டும், மைனஸ் ஓட்டுப் போட வேண்டும், வெறுப்பில் எரியும் மனங்களாகத் தீய்ந்து பின்னூட்டங்களில் கும்மி  அடித்துக் கொண்டிருக்க வேண்டும்,  அவன் என்னை இப்படிச் சொல்லி விட்டானே என்று புலம்பிக் கொண்டே இன்னும் அசிங்கமாக தரம் தாழ்ந்து எல்லோருடைய பதிவுகளிலும் போய் பின்னூட்டமிட வேண்டும்! ஒருவரை ஆதரிப்பது என்பது, மற்றவர்களை கரித்துக் கொட்டுவதற்காகவே! மற்றப்படி ஆதரிப்பது என்பதெல்லாம் சும்மா உளா உளாக்காட்டிக்குத் தான்!

நல்ல மன நிலை! நல்ல பண்பாடு!

இங்கே சில பதிவுகளில் யாரோ சின்னப் பொண்ணு என்று வம்புக்கிழுக்கும் சவடால் பின்னூட்டங்களைப் பார்க்க நேர்ந்தது!

யாரென்று தெரியவில்லை! Jokesforall தளத்தில் இருந்து ஒரு சுட்டிப் பெண்ணின் ஜோக்ஸ் கொஞ்சம் இங்கே! என்னுடைய இரண்டு தம்பிடியாக!



ஆடின காலும், டிவிட்டிய கையும் சும்மா இருக்குமா என்ன..?!

Special: Five reasons why Tharoor had to resign

                           

மன்மோகன் சிங் பார்த்துத் தேர்வுசெய்து அரசியலுக்குத் தெரிவு செய்யப் பட்டவர் சசி தரூர்!

இவ்வளவு கூத்து நடந்து முடிந்தபிறகும் மனிதர் இந்திய அரசியலின் பால பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது! சசிதரூருக்கு ஆதரவு தெரிவிக்கும்  வலைத் தளம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது! இந்தப் பதிவை எழுதும் இந்தத் தருணம் வரை 13693 பேர் சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்து இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறார்கள்.


சசி தரூரை ஆதரிக்கும் இந்த வலைத்தளம், வருகிறவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கிளிப் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவது மாதிரி, இப்படி ஒரு முகவுரையைத்  தலைப்பாக்க, ஒரே அஜெண்டாவாக  வைத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்! ஓவர்டைம் வேலை செய்கிறார்கள் போல இருக்கிறது! ஒரே இரவில் ஆதரித்துச் சேர்ந்து எழுதியவர்கள் எண்ணிக்கை பதினையாயிரத்து நூற்று நாற்பதைத் தாண்டி  விட்டது!

We are here to say, "we support you Shashi Tharoor. Don't let them pull you down for you will take our hopes and dreams for a better and brighter India with you. You bring to India everything we had ever hoped would change, and we stand by you".


சசிதரூர் ! மத்திய அமைச்சரவையில், வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர்! மிக மிக சுவாரசியமான, விவரம் தெரிந்த மனிதர்! எதைச் சொன்னாலும் அவரது கட்சிக்காரர்களே விவகாரமாக்கி விடுவார்கள்! டிவிட்டரில் சசி தரூர் என்ன சொன்னாலும் அதை ஊதிப் பெரிதாக்குவது சில காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு! முழுநேரத் தொழிலும் கூட !

சமீபத்தில் டிவிட்டரில் காந்தியைப் பற்றி ஜார்ஜ் ஆர்வெல் சொன்ன ஒரு அரிதான லிங்கை டிவிட்டியிருக்கிறார்! ஒரிஜினல் காந்தியை பற்றி நினைக்கக் கூட, ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே கொஞ்சம் ஆச்சரியம் தான்!அகில்ரானா என்பவருக்கு ரீட்வீட் செய்த ஒரு குறுஞ்செய்தியில் அரசியல்வாதிகள் மக்களுடைய நண்பர்களாக இருக்க முடியாது என்று  சொல்கிற அளவுக்கு மனிதர் தொடர்ந்து ஆச்சரியப் படுத்திக் கொண்டு இருக்கும் அதே நேரம் காங்கிரசின் காலை வாரும் கலாசாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு, மனிதர் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்வதாக இன்னொரு டிவிட்டிய செய்தி இருந்தது!

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருந்த செய்தியில் சசி தரூர்  சொன்னதாக இப்படி இருந்தது. "இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றவே விரும்பினேன். ஆனால் என்னைக் கீழே தள்ளி விட்டார்கள்!"

ஒன்று, ஏற்கெனெவே கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதர் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்  அதே நேரம் "நான் அப்படிச் சொல்லவே இல்லை, பத்திரிகைகள்தான் திரித்துப் போட்டு விட்டன" என்கிற மாதிரி அரசியல்வாதிகள் அடிக்கடி அடிக்கிற பல்டி மாதிரியும் இல்லாமல், எவ்வளவு நாசூக்காக நழுவியிருக்கிறார் பாருங்கள்! டிவிட்டரில் பார்த்தது, ரசித்தது!

Times of India falsely claims I said I tried to change Ind's pol culture.Am not that foolish!
 
Despite TOI's misleading lead,I am not grandiose enough to claim I can change India's political culture. Just trying to be myself&do my work

மனிகண்ட்ரோல்டாட்காமில், சசி தரூர் கொடுத்த பேட்டியை  வைத்துத் தான் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திய வெளியிட்டது. அதை மூன்று பகுதிகளாக இங்கே பார்க்கலாம்!  


இப்படி எழுதிப் பதினெட்டு நாட்கள் தான் ஆகிறது! மனிதர் தன் தலையைத் தானே வெட்டி, அரசியல் காளிக்குப் பலி கொடுக்காமல் ஓய மாட்டார் போல இருக்கிறது!

இங்கே அரசியல், நேரு, தலைமைப் பண்பு, விமரிசனம் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்துப் பழைய பதிவுகளைப் படித்துப் பார்த்தால், காங்கிரஸ் பதவி வெறி பிடித்தவர்களின் கும்பலாக மாறி விட்டதையும், எல்லா ஜனநாயகஅமைப்புக்களையும், பண்பையும் சீரழித்து தனது குறுகிய அரசியல் லாபத்துக்காக மட்டும் பயன்படுத்துகிற போக்கு ஒன்றினாலேயே
ஒரு அரக்கத் தன்மை கொண்ட கட்சியாக மாறியிருப்பதைச் சொல்லி இருப்பது புரியும்.

தரூருக்குப் போதாத காலம் இன்னும் நிறைய இருக்கிறது போல! 


ஆதரவாளர்கள், இவரை மையமாக வைத்து, இந்திய அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை இவர்தான் கொண்டு வருகிறமாதிரி ஒரு தம்பட்டம்! 

இந்திய அரசியல்  டிவிட்டரில் பின்தொடர்பவர்கள்,  ரீட்வீட் செய்பவர்கள், பேஸ் புக்கில் ஆதரவாளர்களாக அறிவித்துக் கொள்பவர்களால் தீர்மானிக்கப் படுவதில்லை. ஒபாமா பாணியில், இணையத்தில் ஆதரவைத் திரட்டுவது கேரள வாக்காளர்கள், குறைந்தபட்சம் அவரது தொகுதி வாக்காளர்களுடைய மனதில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை!

டிவிட்டரில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள்! நிறையப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்! ஒரு புத்தக ஆசிரியராக ஜெயித்திருக்கிறார். ஐ நா சபையில் பணியாற்றிய தருணங்களில் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அண்ணனுடைய நம்பிக்கை உரியவராக இருந்திருக்கிறார்!கோஃபி அண்ணனுடைய பதவிக் காலம் முடிகிற நேரம், அண்ணனுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாமல் போயிற்று! பொதுச் செயலாளர் வேட்பாளராகக் களமிறக்கப் பட்டவர் சசி தரூர். களத்தில் இறங்கினால் மட்டும் ஆதரவு கிடைத்து விடுமா
என்ன 
அமெரிக்கா, தனக்கு ஒத்து ஊதுகிறவராக, ஆளைத் தேடிக் கொண்டிருந்தது. ஒத்து ஊதினாலும் இந்தியா வேண்டாம் என்ற நிலையை அமெரிக்க அரசு நிறையத் தருணங்களில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக, சசி தரூர், தோற்றதில் பெரிய ஆச்சரியம் எதுவுமில்லை!

சர்வதேச அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மன்மோகன் சிங் தான் சசிதரூரைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார். மன்மோகன் சிங்கின் கதியே, இன்னொருவருக்கு முகமூடி, டம்மிப் பீஸ் தான் என்ற நிலையில், சசி தரூர் மாதிரி, உள்ளூர் அரசியலில் காலூன்ற முடியாதவர்களால் என்ன செய்து விட முடியும்? போதாக்குறைக்கு, ஐநா சபையில் ஒரு அதிகார வளையத்தில் சுற்றி வந்த அதே பழைய நினைப்பில் இங்கே இந்தியாவிலும் நடந்து கொண்டபோது, ட்விட்டர் மாதிரி அரட்டை அரங்கத்தில் வேடிக்கை பார்க்கிற கூட்டம் பின்தொடர்பவர்களாக நிறையக் குவிந்தது. 


கொஞ்சம் மனம் விட்டுப் பேசுகிற மாதிரி ட்விட்டர் செய்திகள் இருந்தாலும், ஆளை எப்போது காலை வாரலாம் என்று காத்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கலாசாரம், சசி தரூருக்கு உடனடியாகப் பிடிபடவில்லை! போன வருடம், அரசியல் ஸ்டான்ட் என்று சொன்னாலும் சரி, நிஜமாகவே சிக்கனத்தைக் கடைப் பிடிக்கத் தான் அன்னை சோனியா சொன்னார் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக, இங்கே சில பொடிசுகள் வாலாட்டிக்  கொண்டிருந்த மாதிரியானாலும் சரி, அமைச்சர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும், விமானத்தில் எக்கானமி வகுப்பில் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சோனியாவின் அறிவிப்பைக் கிண்டல் செய்கிற மாதிரி காட்டில் கிளாஸ், புனிதப் பசுக்களோடு ஒற்றுமை என்ற மாதிரி டிவிட்டியது பெரிய கூச்சலை கிளப்பியது! 

(காங்கிரஸ் காரர்களால் அது மட்டும் தான் முடியும்!)

கட்சித் தலைமை, எரிச்சல் இருந்தாலும், கண்டுகொள்ளாமல் விட்டது. அடுத்து விசா வழங்குவதில் உள்ள முரண்பாட்டைத் தொட்டு பேசினது, நேருவின் வெளியுறவுக் கொள்கையை விமரிசிக்கிற மாதிரிக் கொஞ்சம், உழைப்பே தெய்வம் என்று சொன்ன காந்தி பிறந்த நாளை விடுமுறையாக அறிவிப்பது சரிதானா என்று இப்படி மனிதர் வாயைத் திறந்து ட்விட்டினாலே வம்பும் கூடச் சேர்ந்து வருவது வாடிக்கையும் ஆகிப் போனது!

டிவிட்டி டிவிட்டியே  பிரபலமான சசிதரூருக்கு ஆப்பும் டிவிட்டரில் தான் வந்தது!

சுனந்தாவைப் பற்றி ரொம்பவும் கிண்டிக் கிளறி விவரம் எதுவும் கேட்கவேண்டாம் என்று அமைச்சர் சொன்னதாக லலித் மோடி அவர் தனது ட்விட்டர் செய்தியில் எதிர்ப்பாட்டு ஆரம்பிக்க, அப்புறம் நடந்தது, நாறிப்போனது எல்லாம் பழங்கதையாக ஆகிவிடாமல், மனிதர் மறுபடியும் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாரோ  என்ற சந்தேகம்வருகிறது!

சசி தரூர் இப்போது ஒரு தனி மனிதர்! ஆப்பை அசைத்து, தனக்கே ஆப்படித்துக் கொள்வது அவருடைய சுதந்திரம்!

ஊழல் பெருச்சாளிகள் ஒன்றை ஒன்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றன! வருமான வரித் துறை, திடீரென்று, காங்கிரஸ் கட்சி மாதிரியே சுறு சுறுப்பாகியிருக்கிறது!




தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை, உளவுத்துறை நிறுவனங்கள், இந்திய அரசுக்குப் பயன்படுத்தப் படுவதை விட கட்சிக்கு யார் யார் தலைவலியாக இருப்பார்கள் என்பதை உளவறிய மட்டுமே பயன்படுத்தப் பட்டது இப்படி எல்லா வகையிலும்  இந்திய அரசியல் அமைப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் பலவீனப்  படுத்திக் கொண்டே வருகிறது, தானும் பலவீனப் பட்டுக் கொண்டே வருகிறது.


நாலாவது தூண் கதையை இந்தப் பக்கங்களில் பேசி
ருக்கிறோம், நினைவிருக்கிறதா?

ஜனங்களுடைய முட்டாள்தனம், மறதி, என்ன செய்ய முடியும் என்ற கோழைத்தனத்தின் மீது எவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நம்முடைய அரசியல்வியாதிகளுக்கு நிறையவே நம்பிக்கை இருக்கிறது!




 

வெறுங் காத்து மட்டுந்தாங்க வருது....! காமெடி டைம்!

போன புதன் கிழமை, ஐஸ்லாந்து நாட்டில் ஒரு எரிமலை குமுறியதில், இருபதாயிரம் அடி உயரத்துக்குப் புகையும் தூசியும் கிளம்பி இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல  ஐரோப்பிய நாடுகளில் எரிமலைச் சாம்பல் கொட்ட ஆரம்பித்ததாம்! சென்ற வெள்ளிக்கிழமை மட்டும் பதினேழாயிரம்  விமானங்கள் பயணத்தை ரத்து செய்தன. பனிமலை நிறைந்த ஐஸ்லாந்து நாட்டில் பன்னிரண்டு எரிமலைகள் ரொம்ப ஆக்டிவாக இருக்கின்றனவாம்!


இந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் எழுந்த சாம்பல், கரியமில வாயுவின் எடை வெறும் பதினையாயிரம் டன்கள் தான்! ஆனால், விமானங்கள் பறப்பதில் எழும் கரியமில வாயு அதைப் போல இருபத்துமூன்று மடங்கு அதிகம்! 344109 டன்கள்! சுற்றுச் சூழலில் கரியமில வாயுவின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே போவது தான், புவி வெப்பமயமாவதற்குக் காரணம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள்!

அறுபது சதவீத விமானங்களின் பயணம் ரத்து செய்யப் பட்டதில், சுற்றுச் சூழலில் இன்னும் 206465 தன் கரியமில வாயு சேராமல், குறைந்ததாம்!



எரிமலைச் சீற்றத்தில் கார்பன் டை ஆக்சைட் அளவைக் கணக்கிட்ட விதத்தைத் தெரிந்து கொள்ள இங்கே 



சு'ரூர்! சு' சுனந்தா! ரூர், , சசி தரூர்!

சமாளிக்க முடியாமல், தனக்குக் கிடைத்த 'சொந்த சாமர்த்தியத்தில் கிடைத்த' பங்கை விட்டுக் கொடுத்தது வெறும் எழுபத்தைந்து கோடி தான்! 


மன்மோகன் சிங் தேர்ந்தெடுத்துச் சேர்த்துக் கொண்ட அமைச்சர், சசி தரூர், பதவியும் பறிபோனது! இது, நிஜமாகவே சிறியது தான்! காதலுக்காக மணிமகுடத்தைத் துறந்த எட்வர்ட் மன்னன் கதை போல, இதுவும் ஒரு கதைதானோ


மலை விழுங்கி மகாதேவர்கள், நமட்டுச் சிரிப்புடன் இன்னமும் தெம்போடு இருக்கத் தான் செய்கின்றார்!

தமிழகத்திலும் கூட்டாளி,  தாவூதும் சேக்காளி! வருமானவரி சோதனை நடத்தியதால்  மட்டும், கிரிக்கெட் சூதாட்டம் நின்றுவிடுமா?

காங்கிரஸ் எப்போதும் காமெடிப் பீஸ் மட்டும் தான்!  


 

தலைமைப் பண்பு....தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் !


Sunanda was in core team that brought in money for IPL bid
நீங்கள் இதைப் படிக்கிற நேரம், அனேகமாக காங்கிரஸ் சசிதரூரைக் கழற்றி விட்டு, தங்கள் கை கறை படியாத பரிசுத்தவான்கள் கை என்ற மாதிரி ஒரு நாடகம் அரங்கேற்றமாக ஆரம்பித்திருக்கும்! கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலேயே முடிவு என்பதைப் போல டிவிட்டுக் குருவியின் துணையோடு பிரபலமான சசிதரூர், இன்னொருத்தரும்   (லலித்  மோடி) டிவிட்டியதாலேயே முடிவைச்  சந்திக்கிற பரிதாபமும், குடித்த பாலைக் கக்க வைப்பது போல, காங்கிரஸ் கட்சியினர்  தங்களைப் பரிசுத்தவான்களாகக் காட்டிக் கொள்ள, சுனந்தா புஷ்கர், தன்னுடைய  "சொந்த சாமர்த்தியத்தாலேயே" ரெண்டேவூ ஸ்போர்ட்ஸ் ஒர்ல்டின் பங்குகளைச் சம்பாதித்ததை, திரும்ப விட்டுக் கொடுத்ததுமான பரிதாபமான காமெடி ஏற்கெனெவே நடந்து முடிந்து விட்டது!

Sunanda was in core team that brought in money for IPL bid

சசி தரூர்  விவகாரம், உண்மையிலேயே மிகவும் சிறியது தான்! வெளியே  தெரிய வந்ததனால் மட்டும் பெரிதாக, பூதாகாரமாகக் காட்டப் பட்டது என்பது தான் உண்மை! இப்போது சசி தரூர் மீது எடுக்கப் படும் முடிவு கூட, நியாய தர்மங்களின் அடிப்படையில் அல்ல!  வெளியே தெரியாத, அமுங்கிக் கிடக்கும் பனி மலை போல, கிரிக்கெட் சூதாட்டத்தில் சரத் பவாரின் மிகப் பெரிய பங்கைத் தட்டிக் கேட்கிற தைரியமோ, நேர்மையோ காங்கிரசில் உள்ள எவருக்குமே கிடையாது! கூட்டணிக் கட்சிகளில் ஆ! ராசா என்று வாய் பிளக்க வைத்த ஊழலைக்  காங்கிரஸ் எப்படிக் கையாண்டது என்பது எல்லோருக்குமே தெரியும்.

இது தலைமைப் பண்பு என்றால் என்னவென்றே அறியாத ஒரு கட்சியின் கந்தலான கதை! எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும் என்று சமரசம் செய்துகொல்கிறவர்களிடம் எந்தவிதமான தலைமைப் பண்பையும் காண முடியாது!


தலைமைப் பண்பு, தலைவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்ற தலைப்பில், ஸ்ட்ராடெஜி அண்ட் பிசினெஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில், இன்னும் பத்தாண்டுகளுக்காவது நீடித்து  நிற்கக் கூடியதான மிகச் சிறந்த கருத்துக்கள் என்று ஒரு பத்துக் கருத்துக்களின் பட்டியலில், இந்த முதல் ஐந்தை முந்தைய பதிவில் பார்த்திருக்கிறோம்!

1. Execution

2. The Learning Organization
3. Corporate Values
4. Customer Relationship Management.
5. Disruptive Technology


இந்த ஐந்தாவதான டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி --- Disruptive Innovation! இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் வலைத்தளத்துக்கு லிங்க் இருந்ததைப் பார்த்து, அவர் சொன்னதைப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலாண்மை இயலின் குரு என்று  அழைக்கப்படும்  C K பிரஹலாத்  மறைவை ஒட்டி அஞ்சலிப்பதிவில், இங்கே கடலூரில் வெல்வெட் ஷாம்பூ அனுபவம், அதையே மேலாண்மை இயலில், பிரமிடின் அடித்தளத்தில் குவிந்து கிடக்கும் வளங்கள் என்று பிரஹலாத் சொன்னதைக் குறிப்பிட்டிருந்ததை, நினைவு படுத்திக் கொள்ள முடியுமானால், பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் சொல்வதைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்காது.

வெல்வெட் ஷாம்பூ அனுபவம் என்ன?


சாஷேக்களில் ஒரு ரூபாய் விலைக்கு, அது வரை அப்பர் மிடில் கிளாஸ், அல்லது உயர் ரக வருமானமுள்ளவர்கள் மட்டுமே தெரிந்து உபயோகித்துக் கொண்டிருந்த தலைக்குத் தேய்த்துக் குளிக்கும் ஷாம்பூ, நூறு எம்எல் அளவு பாட்டிலில் தான் வரும் என்பதை மாற்றி, பாமர மக்கள் அல்லது அடித்தள மக்களும் பயன் படுத்துகிற மாதிரி சந்தைக்குக் கொண்டு வந்த போது, நல்ல வரவேற்பு, விற்பனை இருந்தது! ஒரு எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் உருவாக்கிய இந்த முறை, முழுக்க முழுக்க, பாண்டிச்சேரியில் சிறு தொழில்களுக்கான வரிவிலக்குச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்ட  ஐடியா!


பிராண்ட் ஒன்று தான், ஆனால் அதை உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள், நூற்றுக் கணக்கில் பாண்டிச்சேரியில் முளைத்தன.


ஒரு குறிப்பிட்ட டர்ன் ஓவர் வந்த உடன் அந்த நிறுவனம் தூங்கப் போய் விடும்! அடுத்தது ஆரம்பிக்க, அதுவும் குறிப்பிட்ட டர்ன் ஓவர் வந்தவுடன், தூங்கப்போக என்று வரிச் சலுகைகளை சாமர்த்தியமாகப்  பயன் படுத்திய விதம்! அடுத்து, அதை சந்தைப் படுத்திய விதம்! பெரிய கம்பனிகளின் தயாரிப்புக்கள் குறைந்தது நூறு எம் எல் பாட்டில்களில், நூறு ரூபாய் என்ற விலையில்  பெரிய கடைகளில் மட்டுமே ஷோ கேசில் அலங்காரமாக வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப் பட்டு, வசதி உள்ளவர்கள் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த நிலைக்கு மாறாக, ஒரு முறை, அல்லது இரு முறை உபயோகிக்கக் கூடிய சிறிய சாஷேக்களாக, சாதாரணமாகப் பெட்டி கடைகளிலும், டீக்கடைகளிலும் கிடைக்கிற மாதிரிப் பரவலான விநியோக முறை, சந்தையில் ஒரு புரட்சியையே தோற்றுவித்தது.


இதைத்தான் பேராசிரியர் க்றிஸ்டென்சென் டிஸ்ரப்டிவ் இன்னவேஷன் என்கிறார்! புரட்டிப் போட்டுவிடும் புதுமை! ஒரு சின்ன யோசனை தான்! மாற்றி யோசித்ததன் விளைவு தான்! சிறு தீப்பொறியாக வெளிப்படும் இந்தப் புது முறை, சந்தையை அப்படியே ஒரு உலுக்கு உலுக்கி விடுகிற வேகத்தில், ஏற்கெனெவே அசைக்க முடியாதவர்களாக எண்ணிக் கொண்டு சந்தையைப் பிடித்து வைத்திருந்த போட்டியாளர்களை காணாமல் போக வைத்து விடும் என்கிறார்.


வாஷிங் பௌடர் நிர்மா....! நிர்மா...!


இப்போதெல்லாம் இந்த விளம்பரத்தை டீவீக்களில் அதிகமாகப் பார்க்க முடிவதில்லை என்றாலும் கூட, நாற்பது வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயர் டிடர்ஜன்ட் பௌடர் வணிகத்தில் ஏகபோகமாக, கொள்ளை விலைக்கு விற்றுக் கொண்டிருந்த ஹிந்துஸ்தான் லீவரைப் பாடாய்ப் படுத்தியதென்னவோ உண்மை! 1969 ஆம் ஆண்டு, அகமதாபாத் நகரில், கர்சன்பாய் படேல் என்ற தனிமனிதன், வெறும் நூறே சதுர அடிப் பரப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு மஞ்சள் நிறத்தில் எளிய மக்கள் உபயோகிக்கிற விலையில் ஒரு சோப் பௌடர், கிலோ வெறும் மூன்றரை ரூபாய் தான்! விற்றுக் கொண்டிருந்ததை, சோப், டிடர்ஜென்ட் மார்கெட்டில் வலுவாகக் காலை ஊன்றியிருந்த ஹிந்துஸ்தான் லீவர் சட்டை செய்யவே இல்லை! ஹிந்துஸ்தான் லீவரின் தயாரிப்பு ஐந்து மடங்கு விலை! சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப் என்று அந்த அந்த நேரத்துப்  பிரபலமான நடிகைகளின் படத்தைப் போட்டு  வியாபாரம் செய்கிற உளுத்துப் போன வியாபார  உத்தியை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்! தயாரிப்பின் தரம், பெறுமதியை விட விளம்பரத்தில் மூளைச் சலவை செய்தே விற்பனையை பெருக்குகிற சாதாரணமான வியாபார உத்தி! இதைத் தான், புதிதாக வரும் ஒரு எளிமையான முயற்சி, ஏற்கெனெவே காலூன்றியிருப்பவர்களை அப்படியே புரட்டிப் போட்டுவிடுவதாக ஆகி விடும் என்கிறார் க்றிஸ்டென்சென்! அவர் சொல்லும் தியரி, அவர் அதை எழுதுவதற்கு வெகு காலத்துக்கு முன்னாலேயே இந்தியாவில் நடந்து முடிந்ததை அறிந்திருப்பாரா என்பது எனக்குத் தெரியவில்லை!

சிறிய அளவில் ஆரம்பித்த முயற்சிதான்! ஆனால், அது ஏற்படுத்திய தாக்கம் பெரிது! ஜனங்களிடம் வரவேற்பு பெருகிக் கொண்டிருந்ததை, ஹிந்துஸ்தான் லீவர்  புரிந்து கொள்ளவே நீண்ட காலமாயிற்று! விரைவிலேயே, நிர்மா ஒரு வலிமையான பிராண்டாக உருவானது. 2000 ஆம் ஆண்டுக் கணக்குகளின் படி சோப் இனத்தில் பதினைந்து சதவீதம், டிடர்ஜன்ட் பௌடர் இனத்தில் முப்பது சதவீதச் சந்தையை நிர்மா பிடித்திருந்தது என்ற ஒன்றே க்றிஸ்டென்சென் என்ன சொல்ல வருகிறார் என்பதை மிக  எளிமையாக விளக்கி விடும்! சந்தை வெகு வேகமாக கைவிட்டுப் போனதைக் கூட வெகு காலம் கழித்தே அறிந்து கொண்ட ஹிந்துஸ்தான் லீவர் போட்டியைச் சமாளிக்க விலை குறைப்பைச் செய்ய வேண்டி வந்ததும், விளம்பரங்களில் அள்ளியிறைக்க வேண்டி வந்ததும், இந்தியச் சந்தைப் பொருளாதாரத்தில் அரங்கேறிய சுவாரசியமான வரலாறு படைத்த  நிகழ்வுகள்!

நிர்மா இப்போது எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா? வெறும் சோப், டிடர்ஜென்ட் என்று மட்டுமே இருந்த நிர்மா, இன்றைக்குப் பல துறைகளிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. தெற்கே, அவ்வளவாக, சந்தையில் காண முடிவதில்லை! ஆனாலும் அதன் வீச்சு வட இந்தியாவில் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது! உலகத்துக்கே நாங்கள் தான் மேலாண்மை முதல் மூக்குச் சிந்துவது வரை எல்லாவற்றையும் கற்றுக்  கொடுப்பவர்கள் என்ற மமதையோடு செயல்படும் மல்டிநேஷனல் நிறுவனங்களுக்குச்  சரியான பாடத்தைக் கற்றுக் கொடுத்த இந்திய அனுபவமுமாக ஆகிப் போனது! அடித்தட்டு மக்களிடம் கூட  சந்தையை விரிவு படுத்த முடியும் என்பதை வெல்வெட் ஷாம்பூ அனுபவம் காட்டிக் கொடுத்தது. இன்றைக்கு, அந்த மார்கெடிங் உரிமையை காட்ரெஜ் நிறுவனம் விலைக்கு வாங்கி நடத்திக் கொண்டிருக்கிறது. ஹிந்துஸ்தான் லீவர் போலப் பெரிய  நிறுவனங்களும், மண்டியிட்டுக் கீழே இறங்கி வந்தாக வேண்டிய நிலையை உருவாக்கியது என்று கூடச் சொல்ல முடியும்!

ஒரு நல்ல கருத்து! நோக்கம், அல்லது செயல் திட்டம்!தலைமைப் பண்பு அதில் இருந்து தான் உருவாகிறது! எப்படி செயல் படுத்தப் படுகிறது, செயல் படுத்துபவர்களை ஒரு குழுவாக எப்படி ஒருங்கிணைக்கிறது என்பதில் தான்  நல்ல தலைவர்கள் உருவாவதும், வெற்றி பெறுவதும் ஒரு சேர நிகழ்கிறது!

இந்த விஷயங்களை மறுபடி படித்துவிட்டுக் கொஞ்சம் யோசியுங்கள்!  உங்களுக்கு என்ன தோன்றுகிறது, என்ன சந்தேகம் என்பதைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! அப்புறம் அடுத்த ஐந்தை பார்த்து விடலாம்!








C K பிரஹலாத் அவர்களுக்கு அஞ்சலி!


தலைமைப் பண்பு என்றால் என்னவென்று கற்றுக் கொடுத்த மேலாண்மைச் சிந்தனையாளர், குரு (கோயம்புத்தூர் கிருஷ்ணா ராவ்) C K  பிரஹலாத் அவர்களுக்கு அஞ்சலி! நேரடியாகக் கற்றுக் கொண்ட மாணவன் இல்லை,ஆனாலும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததை நானும் கொஞ்சம் கேட்டிருக்கிறேன், நிறைய யோசித்திருக்கிறேன்! 

சுயமாக யோசிக்கச் செய்து, செயல்பட ஊக்கம் தருபவனல்லவா நல்ல தலைவன்! கற்றுக் கொடுக்கும் குரு!




C K பிரஹலாத்! 1941--2010!

ஒரு மேலாண்மைப் பள்ளியில், தன்னுடைய கோட்பாட்டை பிரஹலாத் விளக்கும் வீடியோவில் முதலாவது!  சுமார் பத்து நிமிடம்! இது ஆறு பகுதிகளைக் கொண்டது. மீதமுள்ள ஐந்துக்கும் இதிலேயே கீழே லிங்க் கிடைக்கும்.

இங்கே நாம் பார்க்கும் பிரமிட் அடுக்கில் மிகப் பெரும்பாலானோரைக் கீழே தள்ளி, அவர்கள் மீது அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஒரு சிலர் என்பதான அமைப்பில், பிரமிடின் அடித்தளத்தில் கூடக் குவிந்து கிடக்கும் வாய்ப்புக்களை ஒரு புதிய சிந்தனையாகத் தந்தவர்!

அடித்தளத்தில் இருக்கும் மக்களை பொருளாதார ரீதியாகத் தீண்டத் தகாதவர்களாக, பெரிய நிறுவனங்கள் விலக்கி வைத்திருந்த நிலையை, மறு பரிசீலனை செய்ய வைத்த வணிக உத்தியாக, பாடமாக அவர் எழுதி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த The Fortune at the Bottom of the Pyramid: Eradicating Poverty through Profits இருந்தது.

இது இங்கே கடலூரில் ஒரு மருத்துவர் வெல்வெட் ஷாம்பூ என்று சிறு அளவில் பாண்டிச்சேரியில் சிறுதொழில்களுக்கு அளித்து வந்த வரிச்சலுகையை பயன்படுத்தி, எளிய மக்கள் கூட சிறு அளவில் சாஷேக்களாக ஒரு ரூபாய்க்கு ஷாம்பூ வாங்கி உபயோகிக்க வைத்த உத்தி தான்! இது ஒரு சிறு எல்லைக்குட்பட்டதாக மட்டுமே இருந்ததை, ஒரு சக்சஸ் ஃபார்முலாவாக, ஆக்கிக் காட்டியவர் பிரஹலாத்! 

அதுவரை, அப்பர் மிடில் கிளாஸ், அதற்கு மேற்பட்ட நிலையில் இருந்தவர்களுக்கே எட்டும்படியாக பொருட்களை உற்பத்தி செய்து விநியோகித்த பெரிய நிறுவனங்கள் கூட, அடித்தட்டு மக்களும் கூட தரமான பொருட்களை உபயோகிக்கும் நுகர்வோர்களாக இருப்பதைக் கண்டுகொள்ள பிரஹலாத் எழுதிய இந்தக் கோட்பாடு இன்னும் அதிகமாக உதவியது என்றும் வைத்துக் கொள்ளலாம்!

இரண்டு
ரூபாய், மூன்று ரூபாய் சாஷேக்களில், ஷாம்பூ மட்டுமல்ல, ப்ரூ காப்பி, டீ, இப்படி  இன்னும் பலபொருட்களை அடித்தள மக்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பும், சந்தையும், ஆதாயமும் இருப்பதைப் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பெரும் நிறுவனங்கள் கண்டுகொண்டன, நுகர்வோர் சந்தை மென்மேலும் விரிந்து பெருகவும், தரமான பொருட்களுக்கு எந்த நிலையிலும் வரவேற்பு இருப்பதைக் காட்டியதாகவும், பிரஹலாத் சொன்னது இருந்தது!

இன்றைக்கு நீங்கள் பார்க்கிற மூன்று ரூபாய்க்கு ஐந்து கோப்பை ப்ரூ காப்பி விளம்பரம் உட்படப் பல நிலைகளிலும் அதன் உண்மையைப் பார்க்கலாம்!

மேல்விவரங்களுடன் செய்தி இங்கே.

வித்தியாசமாகச் சிந்திப்பதே வெற்றியாக, முன்னேற்றத்தின் படிக்கட்டுக்களாக இருப்பதை  பார்க்க முடிகிறதா?!