லோகோ பின்ன ருசி! அப்படியென்றால்....?


லோகோ பின்ன ருசி என்றால், ஒவ்வொருவருக்கும்  சுவை, ரசனை வித்தியாசமாகத் தான் இருக்கும்! வேற்றுமையிலும் ஒற்றுமை காணத் தெரிந்து கொள்வதே வாழ்க்கை!

ந்தப் பக்கங்களில் சேத் கோடினுடைய பல பதிவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பயன்படும் ஒரு சிந்தனை, இங்கே படிக்க வருபவர்களுக்கும் பயன்படட்டுமே! சேத் கோடின் சமீபத்தில் எழுதிய இந்தப் பதிவு, என்னுடைய யோசனைகளை விசாலமான ஒரு பார்வைக்கு இட்டுச் சென்றதாகவே உணருகிறேன்!
 

ரு மூன்றே  வயதான குழந்தை!

தைப் போய், இந்தக் குழந்தைக்கு ஒன்று இரண்டு சரியாக எண்ணத் தெரியவில்லை, எழுத்தைக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை, நான்கு வரி சேர்ந்தாற்போல ஒரு பத்தி பிரித்து எழுதத் தெரியவில்லை! அதனால் இது ஒன்றுக்குமே ஆகாத முட்டாளாகத் தான் இருக்கும் என்று யாராவது சொல்வோமா? அப்படி யாரேனும் சொன்னால், சொல்பவர் தான் முட்டாளாக இருக்க முடியும்!

னென்றால், அந்தக் குழந்தைக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விட முடியும், குழந்தையும் கற்றுக் கொண்டு விடும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

தே போல, ஒரு இளைஞன் அல்லது ஒரு யுவதியைக் குறித்து, இந்த நபர் ஒருபோதும் தலைமைப் பண்பு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவே முடியாது, பொறுப்பை உணர்ந்து செயல் பட முடியாது, எதையும் ஒழுங்காக நிர்வகிக்க முடியாது, எந்த ஒரு உயிரையும் காப்பாற்ற முடியாது, எவருக்கும் ஆதர்சமாக ஊக்கமூட்டுகிறவராக இருக்க முடியாது, எதையுமே படைக்க முடியாது என்று தீர்மானமாகச் சொல்லி விட முடியுமா?  கற்றுக் கொள்வதும், செயல்படுத்துவதும் எவருக்குமே, எந்த நிலையிலும்  சாத்தியம் என்ற உண்மை உறைக்குமானால், மனிதர்களை அவ்வளவு சட்டென்று இப்படித் தான் என்று தீர்மானமாகச் சொல்லவே மாட்டீர்கள்!

ளந்தாரிகளை விடுங்கள்! இதே  மாதிரி ஐம்பது ப்ளஸ் ஆசாமிகள் இருக்கிறார்களே, அவர்களைத் தான் எதையுமே சாதிக்க முடியாதவர்கள், எதையும் புதிதாகப் படைக்கத் திறனற்றவர்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒன்றுக்குமே ஆகாததென்று தள்ளி விட முடியுமா?கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

னிதர்களை, அவர்கள் எப்படியிருக்கிறார்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதான உங்களுடைய முன்கூட்டிய தீர்மானங்களை மறந்து விட்டு, அவர்கள் எப்படிப் பட்டவர்களாக ஆக முடியும், என்னென்ன சாதிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்! முடிந்தால், அதற்கு நீங்கள் எந்த விதத்தில் உதவியாக இருக்க முடியும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! குறைந்த பட்சமாக, ஒரு முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமலாவது இருக்க முடியுமா என்று பாருங்கள்! 

ப்படி உங்களால் யோசிக்க முடிந்தால், உங்களால் நல்லதொரு  மாற்றத்தை நிகழ்த்த முடியும்! நிறைய சாதிக்க முடியும்! உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு ஆதர்சமாக, நல்ல ஒரு துணையாக, சேர்ந்து செயல்படுகிற ஒரு குழுவிற்குத் தலைவனாக முடியும்! உங்களோடு, உங்களைச் சேர்ந்த்வர்களையும், உயரத்திற்கு இட்டுச் செல்ல முடியும்! 

தை விட்டு, நேற்று வரை ஆளே இல்லாத நிலையில் என்னைத் தானே தலை என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள், இன்றைக்கு வேறு எவரோ அந்த இடத்துக்கு வந்துவிடுவார்களோ என்ற அச்சம், அடுத்தவர்கள் ஏதோ புதிதாக முயற்சித்தால் என்னுடைய இடத்தைப் பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்ற பயம் வந்தால்.......?

கோளாறு உங்களிடம் தான் இருக்கிறது!



ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"மீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று
தான் விரும்புகிறேன்."

விஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள்.
நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும்! 



ப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதை இன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

 

Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

ன்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  

Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

விஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! 
 
தோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.

ற்கெனெவே இந்தக் கவிதையை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பேசியிருக்கிறோம்!

தைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது
.
அதுதான் முக்கியம்!

இதைப் பற்றி  இன்னும் கொஞ்சம் வாசிக்க, கேட்க.

நேரெதிரான மன நிலைகள், வேறுபாடுகள் இருப்பது இயற்கைதான்! முரண்பாடுகளின் மோதல், இயக்கத்தில் தான் இங்கே பழையன கழிந்து புதியன உருவாகின்றன. பழையதே போதும் என்று அதை விடாப்பிடியாகக் கட்டிக் கொண்டு அழுபவர்கள் மீது, கதறக் கதற, மாற்றம் நிகழ்த்தப் படுகிறது. 
 
 
சரி! சரி! லோகோ நன்றாக இருக்கிறது என்பதற்காக மட்டும் தான் இந்தப் படத்தை இங்கே போட்டு, இந்தப் பதிவையும் எழுதினேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்! உங்களுடைய விமரிசனங்கள் எப்போதும் போல வரவேற்கப் படுகின்றன!
 


 

1 comment:

  1. கடைசியா ஒரு ரெண்டு வரி எழுதியிருக்கீங்க பாருங்க, சரி நான் நம்பிட்டேன். நல்ல கவிதை ஒன்றின் அலசல் அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!