Showing posts with label தொடரும் விவாதங்கள். Show all posts
Showing posts with label தொடரும் விவாதங்கள். Show all posts

சண்டேன்னா மூணு! TN காங்கிரஸ்! (ஈவெ)ராமசாமி! விவாதங்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கிறதே, அது எதிலும் சேர்த்தியில்லாத ஒரு வினோதமான ரகம்! சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று வைதாலும் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் அடுத்தகட்சியின் தோளேறி சவாரி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்ற பரந்த சுயநலம் கொண்டவர்கள்! இந்தக் கிறுக்கு மாய்க்கான்களை நம்பி தமிழ்நாட்டில் வாக்களிக்கவும் ஒரு சிறுபகுதி மக்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய வினோதம்!அப்படி வாக்களிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்பதுதான் திமுகவின் துரைமுருகன் ஆரம்பித்து வைத்திருக்கிற விவாதம். விவாதத்தைத் தொடர விடாமல் கஃங்கிரசின் கே எஸ் அழகிரி, திமுக தலைவர் இசுடாலினை சந்தித்து, பிரச்சினையை முடித்து வைக்க முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பின்னணியில் தந்திடிவியின் நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கே எஸ் அழகிரி ஹரிஹரனோடு உரையாடியது எப்படி இருந்ததாம்?


இதை ஒரேவார்த்தையில் விமரிசிக்க  வேண்டுமானால், சமாளிக்க முயன்றும், சொதப்பல் என்று முடித்து விடலாம்! ஆனால் தமிழக அரசியல் களம் இதுமாதிரி அடிக்கடி நிகழும் உரசல்கள், சொதப்பல்கள், நீயாநானா  விவாதங்களைத் தாண்டியும், மெகா சீரியல் மாதிரிப் போய்க்கொண்டே இருப்பது என்பது புரிந்தவர்கள் மகான் வடிவேலு படக் காமெடியில் பொருத்தமான ஒன்றை நினைவுபடுத்திக் கொண்டு, சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள். திமுக மாதிரி ஒரு கட்சியின் துணை இல்லாமல் தனித்தே தேர்தலை எதிர்கொள்கிற தைரியம் கட்சித் தலைவர்கள், பிரமுகர்களுக்கு இல்லை. இது தொடர்பான கேள்வியைக் கூட, ஒரு மழுப்பலான பதில் சொல்லி முடித்துவிடுகிறார். திமுகவின் நிலையும் கூட கூட்டணி இல்லாமல் தேர்தலை இதுவரை சந்தித்ததே இல்லை என்பதுதான்! ஆனால் திமுகவின் பலமே, துரை முருகன் மாதிரி உதார் விடத்தெரிந்தவர்கள் தான் என்பது புரிகிறதா?  இந்த 40 நிமிட விவாதத்தில் என்ன கேள்வி? என்ன பதில்?  விடை தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்! இதைவிடக் கொஞ்சம் காரசாரமான விவாதம் இங்கே 55mts 


இங்கே தமிழக அரசியல் களம் திராவிட கட்சிகளை மையமாக வைத்தே இருப்பதான பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதில், மிகவும் வேடிக்கையான விஷயம் ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? அந்தக் கழகம் அல்லது இந்தக் கழகத்தோடு கூட்டணி வைத்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கும் தேசியக் கட்சிகள் என்று அறியப்படும் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜேபி இப்படி எல்லாவற்றிலும் இந்தக்கழகத்தோடு கூட்டு வைத்திருக்கும்போது, கட்சிக்குள்ளேயே அந்தக் கழகத்துக்கு ஆதரவாக இருப்பது, பேசுவது, குழப்புவது என்றிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அப்படிக் கவனித்திருந்தால், மதன் ரவிச்சந்திரன் இந்த வினோதத்தை அறியாமல்  எதற்காக 31 நிமிடம் ராமசுப்ரமணியத்தோடு விவாதிக்கிறார் என்று சிரித்தே கடந்து போய்விடுவீர்கள்! 

ஆனால், இந்த விவாதம் தாண்டி எனக்கு மிக வினோதமாகத் தெரிவது, இங்கே மார்க்சீயத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லிக்கொள்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் \ இருப்பவர்களே கூட மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் இவர்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஈவெ.ராமசாமியைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்குப் போவிட்டதுதான்! திமுக உள்ளிட்ட கழகங்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டதில் ஈவெ ராமசாமி பெரியாராகக் கட்டமைக்கப்பட்டார். ஈவெராமசாமி எந்த ஒருவிஷயத்திலும் ஒரு தெளிவான தீர்வைக் கண்டு சொன்னதில்லை. குழப்பங்களின் மொத்த உருவமாகவே தெரிகிற  ஈவெ.ராமசாமி அப்படியென்ன சமூகப்புரட்சி செய்துவிட்டார்? சாதிகள் ஒழிந்து விட்டதா? என்ன பெரிய தத்துவம், சாதனை செய்துவிட்டார்   என்பதற்காக இடதுகள் இப்படித் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்? இடதுசாரிகள் சீரழிந்ததற்கு, இந்தமாதிரி கலப்படம் நிகழாமல் தத்துவார்த்தப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வழிகாட்டிவந்த EMS நம்பூதிரிபாட் மாதிரி இன்னொருவர்  கம்யூனிஸ்ட் கட்சியில் உருவாகாமல் போனதுதான் காரணமோ  என்ற கேள்வி எனக்குள் உரக்க எழுகிறது. 

இந்த இரு விவாதங்களைத் தொடர்ந்து  எழுகிற சில முக்கியமான கேள்விகள்:

1. காங்கிரசின் ஆயுள் முடிந்து விட்டது. ஒரு சரியான மாற்று அரசியலை முன்னெடுக்க முடியாமல் ஒரு குடும்பத்தை முன்வைத்தே அரசியல் செய்கிறவர்களைக் குறித்து ராமச்சந்திர குகா வெள்ளிக்கிழமை கோழிக்கோட்டில் நாக்கைத் பிடுங்கிக்கொள்கிறமாதிரிக் கேட்டுவிட்டார்! யாரை? ராகுல் காண்டியைத் தேர்ந்தெடுத்த கேரள மக்களுக்கு மட்டுமல்ல, காங்கிரசை இன்னமும் ஆதரிக்கும் மனோநிலை கொண்டவர்கள் எல்லோருக்கும்தான்! காங்கிரசுக்கு பதிலாக தேசிய அளவில் யாரை மக்கள் முடிவு செய்யவேண்டும்? 

(அப்படி ஒரு தெளிவில்லாததால் தான் இன்னமும் மாநிலக் கட்சிகள் உயிர்ப்போடு இருக்கின்றன என்பது சேர்த்துப்பார்க்கவேண்டிய விஷயம்)

2. வலதுசாரி பிஜேபிக்கு எதிராக ஒரு வலுவான இடது சாரி இயக்கம் வேண்டும் என்று முந்தைய நாட்களில் குரல் கொடுத்த ராமச்சந்திர குகாவே, கேரளாவில் நேற்று முன்தினம் இடதுசாரிகளைக் குறித்து கடும் விமரிசனத்தை முன்வைத்திருக்கிறார். இடதுசாரிகள் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கத் தவறிவிட்டார்களா? 

(வலதுசாரிகளுக்கு எதிராக இன்னொரு வலதுசாரி அமைப்பு உருவாகக்  கூடாதா? குறிப்பாக இங்கே இடதுசாரிகள் தங்கள் சுயத்தை இழந்து, குறுகிப் போய்க் கிடக்கையில் இடதுசாரிகளால் ஒரு மாற்று அரசியல் முன்னெடுக்க முடியாது என்ற பின்னணியில் சேர்த்துப் பார்க்க வேண்டிய விஷயம்)     

மீண்டும் சந்திப்போம்.                    

தடுமாறும் காங்கிரஸ்-திமுக! முகம் மாறும் காஷ்மீர்!

காஷ்மீர் விஷயத்தில் நரேந்திர மோடி அரசு எடுத்திருக்கிற அதிரடி முடிவினால் பிஜேபிக்கு நாடெங்கிலும் ஆதரவு கூடி வருவதைக் காங்கிரஸ்காரர்களே நொந்துபோய் ஒப்புக் கொள்கிற மாதிரியான சூழல்! ஆர்டிகிள் 370 மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கிற J&K Reorganisation Bill 2019 மசோதாவை எதிர்ப்பது தற்கொலைக்குச் சமம் என்று  காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருபகுதியினர் நினைத்ததையும் நேற்றைக்கு ராஜ்யசபாவில் நடந்த வாக்கெடுப்பிலேயே பார்க்க முடிந்தது. கூச்சல்  கோஷங்கள் பெயரளவுக்கான எதிர்ப்பு என்றே வாக்கெடுப்பு நடந்ததில் மசோதா அவையில் 2/3 பங்குக்கும் கூடுதலாகவே ஆதரவைப் பெற்று நிறைவேறியதையும் பார்த்தோம்!


வரலாறே தெரியாத, பாடம் எதையும் கற்றுக் கொள்ளத்  தயாராக இல்லாத கூமுட்டைகளால் நிரப்பப் பட்டதுதான் சோனியாG தலைமையில் இருக்கிற இன்றைய காங்கிரஸ் என்பதற்கு  மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி இன்று சபையில் பேசியதே ஒரு நல்ல உதாரணம்! இந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள்! அருகிலேயே இன்றைய காங்கிரஸ் கட்சியின் முதலாளியம்மா  உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன விஷயம் என்பதோ எதனால் சௌதுரி பேசியதற்கு அவையில் கடும் எதிர்ப்பு எழுந்தது என்பதோ அந்த தற்குறி முதலாளிக்குத் தெரியாது! தெரிந்ததெல்லாம் யாரோடு கூட்டுச் சேர்ந்தால் யாரைக் கவிழ்க்கலாம், யாரோடு கூட்டணி தர்மம் உடன்பாடு  வைத்தால் எத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கலாம் என்று மட்டுமே தெரிந்த ஒரு விசித்திரப்பிறவி! வாரிசோ அதற்கும் மேலே! எங்கேயோ பின்வரிசையில்  உட்கார்ந்து ஒரு ட்வீட் போட்டுவிட்டால் வயநாடு தொகுதி MP ஆனதற்குச் சரியாகப்போச்சு!  எம்பியாக்கினது சபைக்கு வந்தும்  பேசாமல்  ட்வீட்டரில் இப்படிப் புலம்புவதற்குத்தானா?  

National integration isn’t furthered by unilaterally tearing apart J&K, imprisoning elected representatives and violating our Constitution. This nation is made by its people, not plots of land. This abuse of executive power has grave implications for our national security.
12:37 PM · Aug 6, 2019Twitter for iPhone



இந்த வீடியோ திமுகவின்  TR பாலு முதுகெலும்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டவிதத்தைச் சொல்கிறது.  இன்றைய அரசியல் காமெடியாக இதைத்தான் சொல்லுவேன்!எதிர்க்க வேண்டும் என்பதற்காக எத்தையாவது வாய்க்கு வந்ததை உளறிவிட்டுப் போக வேண்டியது!  என்ன இருந்தாலும் #தமிழேண்டா இல்லையா? 

  
இந்த 51 நிமிட விவாதத்தில் பானு கோம்ஸ் கொஞ்சம் விஷயம் புரிந்து சில விஷயங்களை சொல்கிறார். புதிய தலைமுறை சேனலுக்கு விஷயம் வேண்டியதில்லை. நாய் எலும்புகடிக்கிற மாதிரி எந்த ஒரு செய்தியையும் கடித்துக் குதறி அரைகுறை விவாதமாக, அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருக்க வேண்டுமென்கிற சேனல் தர்மம் தெரிந்துதான் இவர்கள் நடத்தும் விவாதங்களுக்கு எவரும் பேச வருகிறார்களா?  

காங்கிரஸ் மிக வேகமாக தன்னை தானே குழி தோண்டி புதைத்துக் கொள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
காஷ்மீரை சரியாக கையாளத் தெரியாமல் விவகாரமாக்கி..அதை மேலும் மேலும் பயங்கரவாத களமாக மாற்றிய கட்சி காங்கிரஸ்.
உண்மை இவ்வாறிருக்க..
இன்று..பாராளுமன்றத்தில் ...சிம்லா ஒப்பந்தம், லாகூர் பயணம் என்றெல்லாம் சுட்டிக் காட்டி.. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உரிமை இல்லையா ? என்பதாக கேள்வி எழுப்பி..மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது.
முழுமையான அரசியல் தற்கொலை.


70 வருடங்களுக்கு முன்னாடியே ஆனந்தவிகடனில் காஷ்மீர் பற்றி சரியாகக்  கணித்துக் கருத்துப்படம் வரைந்து விட்டார்களாம்! விகடன் தளம் பீற்றிக் கொள்கிறது! அந்த 100 கோடி, அப்புறம் ஒரு 10 கோடி நட்டஈடு கேட்டு திமுக ஓனர் குடும்பத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்களாமே! ஆனந்தவிகடனில் எப்படிச் சமாளித்தார்களாம்? அதைப்பற்றி ஒருவார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!  

லோக்சபாவில் உள்துறை அமைச்சர் J&K Reorganisation Bill 2019 மசோதா மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்! லோக்சபாவிலும் இந்த   மசோதா மூன்றில் இரண்டுபங்கு மெஜாரிடியுடன் நிறைவேறிவிடும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்!    
   
மீண்டும் சந்திப்போம். 

ஒரு புதன்கிழமை! காங்கிரஸ் காமெடி தொடர்கிறது!

பந்தியில் உட்காராதே எழுந்து வெளியே போ என்று ஒருவனை விரட்டினார்களாம்! அவனோ நிதானமாக இலை கிழிசலாக இருக்கிறது, நீ விருந்தே படைத்தாலும் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனானாம்! அந்தக் கதையாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா வானமே இடிந்து தலைமீது விழுந்தாலும் அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளமாட்டோம் என்று அதிருப்தி MLAக்களை பார்த்துச் சொன்ன விஷயம் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! அந்த நேரு குல்லா மாதிரியே!  
    

கர்நாடக அரசு கவிழ்ந்துவிடும் என்பது எல்லோருக்குமே தெரிந்த ரகசியமாக இருந்ததாலோ என்னவோ இங்கே வரும் நண்பர்கள் அதில் இருந்த, இன்னும் தொடர்கிற சூப்பர் காமெடிகளைத் தவற விட்டுவிட்டார்களோ என்கிற சந்தேகம் எனக்கு நிறையவே இருக்கிறது. அதுவும் குமாரசாமிக்கு எதிராக தன்னுடைய ஆதரவு MLA க்களைத் தூண்டிவிட்டு ராஜினாமா நாடகம் நடத்தக் காரணமாக இருந்தவரென்று சொல்லப் படும் சித்தராமையா, ஆரம்பித்து வைத்த ஓட்டை பெரிதாகி, நிலைமை  கையை மீறிப்போன பிறகு பேசிய வசனங்கள் இருக்கிறதே! கொஞ்சம் பார்க்கலாமா?




You said Modi will never become PM again & BSY will never become CM again, any comments now ?

இந்த ஒரு ட்வீட்டுக்கு வந்திருக்கிற எதிர்க்கீச்சுக்கள் வஜனம்  காங்கிரஸ் மாதிரியே கிழித்துத் தொங்கவிடப் பட்டிருப்பதை, ஒரு சின்ன சாம்பிளாக!  அதைவிவிட, தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிற திராணி இல்லாமல், ஜனநாயகம் தோற்றது நாணயம்  தோற்றது கர்நாடக ஜனங்கள் தோற்றார்கள்  என்று அலங்காரமாக சப்பைக்கட்டுக் கட்டிய ராகுல் காண்டிக்கு ஒருத்தர் பதில் சொல்லியிருப்பதையும் பார்க்கலாமா?



From its first day, the Cong-JDS alliance in Karnataka was a target for vested interests, both within & outside, who saw the alliance as a threat & an obstacle in their path to power. Their greed won today. Democracy, honesty & the people of Karnataka lost.
5.3K
6.1K
28K

  • Replying to
    You joined hands with Akhilesh Yadav.. he lost BADLY Chandrababu Naidu came closer to you..he is now finished. Siddhu was your PIDI..he's gone HD Kumaraswamy was your sychophant...he's doomed Under your leadership, your party is decimated.. Did you notice this coincidence..
    😂
    🤣
    11:03 AM · Jul 24, 2019 from Bengaluru South, India ·   

    ராகுல் காண்டியின் ஜனநாயக அறிவு, அயலுறவு பற்றிய அறிவு எவ்வளவு என்பதைப்பற்றிய சிறு அறிமுகத்தோடு அர்னாப் கோஸ்வாமி, கர்நாடக அரசு கவிழ்ந்தது பற்றி ஒரு விவாதத்தை முன்னெடுக்கிறார்.



    விவாதம் 52 நிமிடங்கள் தான்! காங்கிரசை இன்னமும் ஒரிஜினல் காந்தி  காலத்துக் காங்கிரசாக இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் எவரும் பார்க்க வேண்டாம்!

    மீண்டும் சந்திப்போம்.