Showing posts with label pavitra. Show all posts
Showing posts with label pavitra. Show all posts

Courage outside, peace inside and a quiet unshakable trust in the Divine's Grace!


"Two things you must never forget: Sri Aurobindo's compassion and the Mother's love, and it is with these two things that you will go on fighting steadily, patiently, until the enemies are definitively routed and the Victory is won for ever.

Courage outside, peace inside and a quiet unshakable trust in the Divine's Grace."

The Mother
Vol 15 ,19 May 1933




A conflict is born of the opposition of the two instinctive tendencies which govern human action: the individualist and the gregarious.

The Evolution of Future Man என்கிற நூலில் ஸ்ரீ அரவிந்தர், மனிதனுடைய பரிணாம வளர்ச்சி எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை விவரித்திருக்கிறார். முதல் மூன்று அத்தியாயங்களின் சாராம்சத்தை, முந்தைய பதிவுகளில் சுருக்கமாகப் பார்த்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக , அந்த நூலின் நான்காவது அத்தியாயத்தின் சுருக்கமாக, பவித்ரா என்று அன்புடன் அழைக்கப் பட்ட பிரெஞ்சு அடியவர் இப்படிச் சொல்லுகிறார்:

“Standards of Conduct and Spiritual Freedom

“Since perfection is progressive, good and evil are shifting quantities and change from time to time their meaning and value. Four main principles successively govern human conduct. The first two are personal need and the good of the collectivity. A conflict is born of the opposition of the two instinctive tendencies which govern human action: the individualist and the gregarious. In order to settle this conflict, a new principle comes in, other and higher than the two conflicting instincts, and aiming both to override and to reconcile them. This third principle is the ethical ideal.

But conflicts do not subside; they seem rather to multiply. Moral laws are arbitrary and rigid; when applied to life, they are obliged to come to terms with it and end in compromises which deprive them of all power.

Behind the ethical law, which is a false image, a greater truth of a vast consciousness without fetters unveils itself, the supreme law of our divine nature. It determines perfectly our relations with each being and with the totality of the universe, and it also reveals the exact rhythm of the direct expression of the Divine in us. It is the fourth and supreme principle of action, which is at the same time imperative law and absolute freedom.”

முழுமை அல்லது பூர்த்தி என்று நாம் கருதுவதில், நல்லது, நல்லது அல்லது என்பன அளவிலும், பண்பிலும் மாறிக் கொண்டே இருக்கும். மனிதனிடத்தில், இரண்டு விதமான முரண்பாடுகள், எப்போதும் மோதிக்கொண்டே இருக்கும். முதலாவது, தனித்துவமானது, தன்முனைப்பாக வெளிப்படும்; இன்னொன்று குழு மனப்பான்மை. இந்த இரண்டு முரண்பாடுகளின் மோதலைத் தீர்ப்பதற்கு, இந்த இரண்டையும் விட உயர்ந்ததான மூன்றாவதுகுறிக்கோள் உருவாகும். இது, முந்தைய இரண்டையும் சமன் பெறச் செய்து அல்லது அவைகளை மீறி ஒரு தீர்வாக அமையும்.

ஆனாலும், முரண்பாடுகளும், மோதல்களும் ஓய்ந்து விடுவதில்லை. மாறாக, மென்மேலும் வளர்ந்து கொண்டிருப்பதாகத் தான் தோற்றும். பழைய சம்ப்ரதாயங்கள், நடைமுறைக்கு உதவாமல் போகும். இவை மேலோட்டமான பொய்த்தோற்றமே!

இதன் பின்னால் எல்லையற்ற மெய்யுணர்வு தடைகளைத் தகர்த்து வெளிப்படும். இந்த எல்லையற்ற மெய்யுணர்வு தான், நம்முடைய உன்னதமான தெய்வீக நிலை. இது தான், நமக்கும் , இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத உறவை வெளிப்படுத்தும்.

"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது; பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது"

என்பது அனுபவ சாத்தியமாகும். இதுவே தெய்வீகம் நம்க்குள் நேரடியாக வெளிப்படுகிற நிலை.

Golden Drops of Light



If you want peace upon earth,
first establish peace in your heart.
If you want union in the world,
first unify the different parts of your own being.

The Mother
Vol 15 ,February 1965

Thanks and courtesy: Golden Drops of Light by www.searchforlight

“Without an inner change man can no longer cope with the gigantic development of the outer life. “

அப்படிப் பட்ட திருவுரு மாற்றத்தை இவனுக்கும் தந்தருள்வாய் தாயே!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்!

மாற மறுக்கிற, பழைய பழக்கங்களின் அடிமையாகவே இருக்கத் தூண்டுகிற எல்லாத் தடைகளையும் நீ அறியச் சமர்ப்பிக்கிறேன். தடைகளை வென்று, திருவுரு மாற்றம் இவனுக்குள் நிகழட்டும். இவனது வாழ்வும், வளமும் உன்னுடைய அருட்கொடையாக என்றைக்கும் தழைத்தோங்கட்டும்.

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி, சத்யமயி, பரமே!

A change of consciousness is the major fact of the next evolutionary transformation


“A change of consciousness is the major fact of the next evolutionary transformation, and the consciousness itself, by its own mutation, will impose and effect any necessary mutation of the body.“

-Sri Aurobindo

“The Future Evolution of Man” Chapter 2

மனிதனுடைய பரிணாம வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீ அரவிந்தர் சொன்னதன் சாராம்சமாக, பவித்ரா என்றழைக்கப்பட்ட அடியவர் இரண்டாவது அத்தியாயத்தின் சுருக்கத்தை இப்படிச் சொல்கிறார்:

The Place of Man in Evolution

“An evolution of consciousness is the central motive of terrestrial existence. The evolutionary working of Nature has a double process: an evolution of forms, an evolution of the soul.

Man occupies the crest of the evolutionary wave. With him occurs the passage from an unconscious to a conscious evolution. At each step one receives an intimation of what the following step will be. The nature of the next step is indicated by the deep aspirations awakening in the human race.

A change of consciousness is the major fact of the next evolutionary transformation, and the consciousness itself, by its own mutation, will impose and effect any necessary mutation of the body. There is no reason to suppose that this transformation is impossible on earth. In fact, it would give the truest meaning to earthly existence.

Man's urge towards spirituality is an undeniable indication of the inner drive of the Spirit within towards emergence, its insistence towards the next step of its manifestation.”

பரிணாம வளர்ச்சியில் இரண்டு விதமான அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று வடிவங்களிலான பரிணாம மாற்றம், இன்னொன்று ஆத்மா அல்லது சைத்ய புருஷனுடைய பரிணாம மாற்றம்.

முதலாவது அம்சத்தில்,

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்"

என்று திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் உரைத்தது
போல, பரிணாமம் பல படிகளைக் கொண்டதாயிருக்கிறது. இரண்டாவதாக ,புல்லாய்க் கிடந்த போதும், புழுவாய்க் கிடந்த போதும், பலப்பல மிருகமாய்ப் பிறந்த போதும், உள்ளே இருக்கிற ஆத்மா ஒன்றே என்று சொல்லப் பட்டாலும், விழிப்பு நிலையில் ஏகப் பட்ட படித்தரங்கள் இருக்கின்றன.

ரமண மகரிஷி, தன்னுடைய சிறு வயதில் மரணத்தைப் பற்றிய ஒரு விழிப்பு ஏற்பட்டதும் "என் தந்தையிடம் போகிறேன்" என்று எழுதி வைத்து விட்டுத் திருவண்ணாமலைக்கு வந்தார். பன்னிரண்டு வயதிலேயே, ஆத்ம ஞானம் கிடைத்து விட்டது என்பது வரை எல்லோருக்கும் தெரியும், ஆனால், அதற்கு முன் எத்தனை எத்தனை முயற்சிகள், எத்தனை எத்தனை பிறவிகளில் அவர் செய்திருப்பார் என்பது மட்டும் தெரியாது. ஒவ்வொரு மனிதனிடத்திலும், இத்தகு முயற்சிகளை, பரிணாமச் சக்கரம் எல்லா நேரங்களிலும் செய்து கொண்டே வந்திருக்கிறது, இனியும் மேற்கொள்ளும்.

ஸ்ரீ அரவிந்தர் மேலும் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்:

“If a spiritual unfolding on earth is the hidden truth of our birth into Matter, if it is fundamentally an evolution of consciousness that has been taking place in Nature, then man as he is cannot be the last term of that evolution: he is too imperfect an expression of the spirit, mind itself a too limited form and instrumentation; mind is only a middle term of consciousness, the mental being can only be a transitional being.

If, then, man is incapable of exceeding mentality, he must be surpassed and supermind and superman must manifest and take the lead of the creation. But if his mind is capable of opening to what exceeds it, then there is no reason why man himself should not arrive at supermind and supermanhood or at least lend his mentality, life and body to an evolution of that greater term of the Spirit manifesting in Nature.”

“For all problems of existence are essentially problems of harmony."


At each step one recieves an intimation of what the following step will be.

“For all problems of existence are essentially problems of harmony.They arise from the perception of an unsolved discord and the instinct of an undiscovered agreement or unity. ”
-Sri Aurobindo,
The Future Evolution of Man, Ch.1 'The Human Aspiration

“Everyone has in him something divine, something his own, a chance of perfection and strength in however small a sphere which God offers him to take or refuse. The task is to find it, develop it and use it. The chief aim of education should be to help the growing soul to draw out that in itself which is best and make it perfect for a noble use.”
-Sri Aurobindo

ஸ்ரீ அரவிந்தர் எவ்வாறு மனித குலம், பரிணாமத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்பதை " The Future Evolution of man" என்கிற நூலில் அழகாக விளக்கியிருக்கிறார்.ஒவ்வொரு அடி எடுத்து வைக்கிறபோதும், அடுத்த அடி எப்படி எடுத்து வைக்க வேண்டும் என்பதை அறிகிற புத்தியையும் ஆண்டவன் நமக்கு அருளுகிறான் என்பதையும் ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார். அதன் முதல் அத்தியாயத்தின் சாராம்சமாக பவித்ரா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அடியவர் இப்படிச் சொல்லுகிறார்:

The Human Aspiration

“ Man's highest aspiration - his seeking for perfection, his longing for freedom and mastery, his search after pure truth and unmixed delight - is in flagrant contradiction with his present existence and normal experience.

Such contradiction is part of Nature's general method; it is a sign that she is working towards a greater harmony. The reconciliation is achieved by an evolutionary progress.

Life evolves out of Matter, Mind out of Life, because they are already involved there: Matter is a form of veiled Life, Life a form of veiled Mind. May not Mind be a form and veil of a higher power, the Spirit, which would be supramental in its nature? Man's highest aspiration would then only indicate the gradual unveiling of the Spirit within, the preparation of a higher life upon earth.”

மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதில் மனிதனுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வம் அல்லது விழைவு, அதை ஒட்டி எழுகிற தடைகள், அதையும் மீறி அடுத்து என்ன, அடுத்தது என்ன என்கிற தேடல் மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே தொடங்கி விட்டது.

அந்த வகையில், இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு முரண்பாடும், எதிர்மறையான சிந்தனையும், சூழலும், இவனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திச் செல்லுகிற கருவியாகவே இறைவன் அருளியிருக்கிறான். வீணே கழிந்தன நாட்கள் என்று வேதனைப் படவோ பதட்டப் படவோ அவசியமில்லை என்று சொல்லாமல் சொல்லுகிறான். வெளியே ஆர்ப்பரிக்கிற ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஈடாக உள்ளேயே இருக்கிற அழுக்கை, இருளைக் கண்டு கொள்கிற பயிற்சியாகவே படிப்பித்துக் கொண்டிருக்கிறான்.
"மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா"
பழுதையைப் பாம்பாகக் காண்பிக்கிற மனத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொண்டால் அதுவே இன்றைக்குக் கிடைக்கிற பெரிய வரம்!
ஸ்ரீ அரவிந்த அன்னையே!
உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன்.
எனது மனம், கரணங்கள், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.
உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக வரம் அருள்வாய்.
உனது சித்தத்தின் படியே இயங்குகிற வாழ்க்கையை அருள்வாய்.
அகந்தை, அறியாமை எனும் இருளில் மறைந்து கிடக்கிற, உனது சித்தத்திற்கு பணிய மறுக்கிற பகுதிகளில் உனது கருணையாகிற ஓளி படட்டும், உனது ஒளியினால் இவனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தும் நிறைவு செய்யப் படட்டும்.