Showing posts with label ஒளி பொருந்திய பாதை. Show all posts
Showing posts with label ஒளி பொருந்திய பாதை. Show all posts

ஸ்ரீ அரவிந்தரின் ஒளி பொருந்திய பாதையும் காரடையான் நோன்பும்!

இன்று காரடையான் நோன்பு. மாசியும் பங்குனியும் சந்திக்கிற வேளையில் திருமணமான பெண்கள், தங்களுடைய மாங்கல்ய பலத்துக்காக உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன் ஒருக்காலும் என் கணவர் என்னைவிட்டுப் பிரியாதிருக்க வரம் தா என்று பிரார்த்தனை செய்து கொள்கிற நாள்.  இதற்கு மகாபாரதத்தில் வரும் நூற்றுக்கணக்கான கதைகளில் ஒன்றான சத்யவான் சாவித்ரி கதை அடிப்படையாக இருக்கிறது. சாவித்ரி என்றால், எமனோடு போராடி கணவன் உயிரை மீட்ட பெண் என்ற அளவிற்காவது கதை தெரிந்திருக்கும். தெரியவில்லையா, இங்கேயே கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்து விடலாம், தவறில்லை!



மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதிஅவனது ஒரே மகள் சாவித்திரிதிருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தைமகளும்தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில்அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள்அவன்சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும்சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.

சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன், உறவினர்களுடைய சதியால் அரசிழந்து, பார்வையும் இழந்து, தன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன், கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.

தந்தையிடம் திரும்பும் சாவித்திரி, சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள். விசாரிக்கும் போது, சத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறது. சாவித்ரியின் தாய் கலங்குகிறாள், மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால், சாவித்திரி, சத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.

சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும், சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறது. கணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள். அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறது. ஆம், ஒரு வருடம் நிறைகிறது. கணவனும் மனைவியுமாக, கானகத்தில் கனி, கிழங்குகளை சேகரிக்கப் போகையில், கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.

சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள். உனது நாள் இன்னமும் இருக்கிறது, திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும், பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன், தொடர்ந்தே வருவேன் என்கிறாள்.இடையில், பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடு, நீ வேண்டிய வரங்களைத் தருகிறேன், திரும்பப் போய் விடு என்கிறான். என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரி! எதுவானாலும் கேள், தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.

வரமோ, வாக்கோ எதுவானாலும், தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும், மனிதர்களும், ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது. என்ன சாபத்தினாலோ, வாக்குறுதி என்பது மீறப் படுவதற்காகவே, ஏமாற்றுவதற்காகவே என்று செயல்படும் அரசியல் தலைகளையும், அதிகார வர்க்கத்தையும் கொண்டதாகச் சிறுமைப் பட்டுப் போயிருக்கிறது இன்று.

'தந்தேன்' என்றான் எமன். பாசக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது. சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம், மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறது, இழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது என்று இந்தக் கதை முடிகிறது.

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார்.


சவித்ரு என்பது சூரியனின் பன்னிரு திருநாமங்களுள் ஒன்று. சாவித்திரி, சூரியனின் மகளாகவே கருதப் படுகிறாள். பன்னிரண்டே மாதங்களில், கணவனது ஆயுள் முடிந்து போகும் என்பது தெரிந்திருந்தும், மனம் கலங்காது உறுதியுடன் மரணத்தை எதிர்த்து வெற்றி கொள்கிறாள். அன்பே அவளது பலமாக இருப்பதைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் காண முடியும்.

ஸ்ரீ அரவிந்தர், 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும், யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது, தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

"நான் சாவித்ரியை மனதளவில் துவங்கினேன்ஒவ்வொரு முறையும் நான் மேல் நிலையை அடையும்போது அந்த நிலையிலிருந்து மறுபடியும் எழுதினேன்உண்மையில் நான் சாவித்ரியை ஒரு செய்யுள் என்ற உணர்வில் எழுதி முடிக்க விரும்பவில்லைஆனால்ஒரு செய்யுளை ஒருவரின் யோகநிலையிலிருந்து எப்படியெழுதி அதை ஒரு சிறந்த சிருஷ்டியாக்க முடியும் என்ற மனதுடன் செயல்பட்டேன்."  என்று ஸ்ரீ அரவிந்தர் சாவித்ரியை எழுத ஆரம்பித்த அனுவவத்தை விவரிக்கிறார்.  ஏறத்தாழ நாற்பது ஆண்டு கால யோக சாதனையின் வெளியீடாக, "சாவித்திரிஎன்னும் பெரும் காவியம் இருக்கிறதுஇது வெறும் காவியம் என்றோஎழுதியவரின் அனுபவக் குறிப்பு என்கிற அளவோடோகுறுகி நின்று விடாமல்அதை படிக்கிற நமக்கும் ஒரு உன்னதமான ஆன்மீக அனுபவத்தை அளிக்கிற மந்திர சித்தியையும் கொண்டிருக்கிறது.


On Savitri

“If you are depressed, if you feel miserable, if you do not succeed in what you do or else if what happens is always the contrary of what you expect, however you try - if it has come to such a pass that you lose your temper, life becomes disgusting and you are unhappy, then immediately take Savitri and, after a moment's concentration, open it at any page and read. You will see that all your misery disappears like smoke. And you will have the strength to overcome the worst sorrows; you will no longer feel that which was tormenting you. Instead you will feel a strange happiness, a reversal of consciousness along with the energy and force to conquer everything, as though there were nothing impossible. And you will feel this inexhaustible joy that purifies all. 
 
Read just a few lines and that is enough to establish the contact with your inmost being. Such is the extraordinary power of Savitri.

Or else, after having read some lines, if you concentrate deeply, then too you will find the solution to what was tormenting you. You have only to open Savitri just at random without thinking and you will have the answer to your problems. Do this with faith and simplicity, the result is certain.”

The Mother  
5-11-1967  

சாவித்திரி காவியத்தைப் படிப்பதே ஒரு உன்னதமான அனுபவம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை! ஸ்ரீ அரவிந்தர் அரும்பாடு பட்டு இயற்றிய தவம், யோக சாதனைகளின் அனுபவம் சாவித்திரி காவியத்தின் ஒவ்வொரு வரியிலும் முழுமையாக நிறைந்திருக்கிறது. படிக்க ஆரம்பிக்கும்போது, நம்மிடம் மூடிக் கிடக்கும் கதவுகள் திறப்பதையும், அதுவரை விடைதெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கேள்விகளுக்கு விடை வரிசையாகக் கிடைப்பதையும், மனச்சோர்வும் சலிப்பும் நிறைந்து நிராதரவாக நிற்கிற தருணங்களில், உற்ற துணையாகவும் பேராதரவாகவும் இருந்து வழி நடத்துவதையும், அனுபவத்தில் தான் கண்டுகொள்ள முடியும். அப்படி ஸ்ரீ அரவிந்தரது யோகத்தைத் துணைகொண்டு நடக்கும் பாதையை ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

காரடையான் நோன்பு என்பது, வெறும் சடங்கு அல்ல! மரணமில்லாப் பெருவாழ்வு என்று திருவருட்ப்ரகாச வள்ளலார் பெருமான் சொல்கிறாரே, அந்த மரணமில்லாப் பெருவாழ்வின் திறவுகோலும் கூட! வெறும் சடங்கு என்ற அளவோடு குறுகி நின்றுவிடாமல், அதன் உள்ளே பொதிந்துகிடக்கும் நுட்பத்தை அறிந்து கொள்ளத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒளிபொருந்திய பாதையாக முன்னே இருக்கிறது.

பயணம் செல்லத் தயார் தானே!


**இது ஒரு மீள்பதிவு. கொஞ்சம் மாற்றி எழுதப்பட்டது.
 

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !


Contemplation for The Day

But many-visaged is the cosmic Soul;
A touch can alter the fixed front of Fate.
A sudden turn can come, a road appear.
A greater Mind may see a greater Truth

Savitri B. II, C. X, P. 256



May I be nothing else any more than a flame of love!

“O THOU, sole Reality, Light of our light and Life of our life,

Love supreme, Saviour of the world, grant that more and more I may be perfectly awakened to the awareness of Thy constant presence.

Let all my acts conform to Thy law; let there be no difference between my will and Thine. Extricate me from the illusory consciousness of my mind, from its world of fantasies; let me identify my consciousness with the Absolute Consciousness, for that art Thou.

Give me constancy in the will to attain the end, give me firmness and energy and the courage which shakes off all torpor and lassitude.

Give me the peace of perfect disinterestedness, the peace that makes Thy presence felt and Thy intervention effective, the peace that is ever victorious over all bad will and every obscurity.

Grant, I implore Thee, that all in my being may be identified with Thee. May I be nothing else any more than a flame of love utterly awakened to a supreme realisation of Thee.”

The Mother

Prayers and Meditations  February 15, 1914

ஸ்ரீ அரவிந்தர் தன்னுடைய யோகம் பூர்த்தியாவதற்கு தன்னுடைய உடலையே த்யாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.

அருட்பெருஞ்சோதி என்று ராமலிங்க வள்ளலார் பெருமானாலும்,அதிமானச ஒளி என்று ஸ்ரீ அரவிந்தராலும் அழைக்கப்பட்ட அருட்பேரொளி ஸ்ரீ அரவிந்தர் உடலில் ஐந்து நாட்கள் பொன்னொளியாக இறங்கிய நாள் இன்று.

மரணம் என்பது பொய்மையின் தற்காலிக வெற்றி தானே அன்றி நிரந்தரமானது அல்ல. மரணம் என்பது வெற்றி கொள்ளக் கூடியதே. தென் தமிழ்க் கோடியில் சித்தர்களாலும், ஞானிகளாலும் மிக ரகசியமாக வளர்க்கப் பட்ட வித்யை இது. ராமலிங்க அடிகள் என்று அழைக்கப்பட்ட வள்ளல் பெருமானும், ஸ்ரீ அரவிந்தரும் சற்றேறத்தாழ சம காலத்தில் அறிவித்த உண்மை இது.

இருபத்து நான்காயிரம் வரிகளில் சாவித்திரி என்கிற தன்னுடைய பெருங்கவிதையில் ஸ்ரீ அரவிந்தர் இந்த பூரண யோகத்தின் அனைத்து அம்சங்களையும் மிக நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். "கண்டவர் விண்டிலர்;விண்டவர் கண்டிலர்" என்று வழக்கில் இருந்தாலும் உரை, மனம் கடந்த ஒரு சத்தியப் பெருக்கை, தன்னுடைய யோக சாதனையில் கண்டதை சாவித்திரி எனும் மகா காவியமாக ஸ்ரீ அரவிந்தர் படைத்திருக்கிறார். 'உரை மனம் கடந்த ஒரு பெருவளி அதன் மேல் அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்சோதி' என்று வள்ளல் பெருமான் கூறாமல் கூறியதை சாவித்திரி ஒரு பெரும் மந்திரமாக தன்னைப் படிப்பவர்களுக்கு பேரானந்த நிலையை அருளும் தாயின் தயவாக, நமக்கெல்லாம் வழங்கியிருக்கிறார்.

இந்தப் பெருங்கருணைக்கு எப்படி கைம்மாறு செய்ய முடியும்? எப்படி நன்றி செலுத்த முடியும்?


Om Sri Aurobindo Mirra!

Open my mind, my heart, my life

to

your Light, your Love, your Power.

In all things may I see the Divine!

கை கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதை அன்றிக்கு வேறென்ன செய்ய முடியும்?

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவருடைய திருவடிகளிலும் எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய !

சண்டேன்னா மூணு! ஸ்ரீ அரவிந்தர்! அன்னை! மோகனத் தமிழ்!

டிசம்பர் மாதம் முதல்நாள் இன்று! புதுச்சேரி ஸ்ரீ அரவிந்த ஆசிரமத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும், அங்கேயே தங்கியிருந்து  ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தைப் பயிலும் சாதகர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுடைய மாதாந்தரத் தேவைகளை வழங்குகிற  நாளாக Prosperity Day என்று அழைக்கப்பட்டது. 1926 இல்  ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டது என்பதை நவம்பர் 24 தரிசனநாள் செய்தியிலேயே இப்படிப் பார்த்திருக்கிறோம்.

தங்களுடைய சகலத்தையும் ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ஒப்படைத்துவிட்டு அவருடனேயே தங்கியிருந்து அவரது யோகத்தைப் பயில முன்வந்தவர்களே சாதகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுடைய மாதாந்திரத் தேவைகள், சோப்பு, எண்ணெய், முதலான நடைமுறைத் தேவைகளை ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்களுக்கு வழங்குகிற நாளாக மாதத்தின் முதல் நாள் இருந்தது.       



அது தவிர ஸ்ரீ அரவிந்தர் தனது தபசு, யோகத்தில் கண்டுணர்ந்த  பொன்னொளி (Supramental Light)  இந்தப் பூமியில் தங்குவதற்காக தன்னுடலையே அர்ப்பணித்து மகா சமாதிக்கு ஏகிய நாளும் டிசம்பர் மாதத்தில் தான் (டிசம்பர் 5) வருகிறது. 24000 வரிகளில் ஸ்ரீ அரவிந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய சாவித்ரி மஹா காவியம், அவருடைய தவத்தில் கண்டுணர்ந்த அனுபவங்களை அதிமானச ஒளி / அருட்பெருஞ்சோதியாக மண்ணில் இறங்கி வரக் காத்திருப்பதை விவரிக்கிறது. 

மஹாபாரதத்தில், போகிற போக்கில் சொல்லப் படும் நூற்றுக் கணக்கான கதைகளுள் ஒன்றான இந்த சத்தியவான்-சாவித்திரி கதையினுள் ஒரு மிகப் பெரிய ஆன்மீக ரகசியம் பொதிந்து கிடப்பதைக் கண்டார் ஸ்ரீ அரவிந்தர். இந்தக் கதை, வேதங்களின் திரண்ட உட்பொருளை, சிருஷ்டியின் ரகசியத்தை ஒரு சங்கேதமாகக் குறிப்பிடுவதாகவே ஸ்ரீ அரவிந்தர் கண்டார். அதன் விளைவாக, சாவித்திரி மகாகாவியம் சற்றேறக் குறைய 24000 வரிகளில்  உருவானது. ஸ்ரீ அரவிந்தர் , 1901 வாக்கில் பரோடாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே இந்தக் கதையை மையமாக வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பின்னாளில் சாவித்ரியே அவரது தவமாகவும்,யோக சாதனையாகவும் ஆனது. ஏறத்தாழ முப்பத்தைந்து கால ஞான வேள்வியாக, "சாவித்ரி" ஸ்ரீ அரவிந்தரின் பெரும் காவியமாக உருவெடுத்தது. 1930 களில் "சாவித்திரி- ஒரு கதையும் அதன் தரிசனமும் " என்று வெளியானது,தொடர்ந்து மெருகேறி, SAVITRI - A Legend and Symbol என ஏறத்தாழ 24000 வரிகளில் உருவானது.

சாவித்ரியை படிப்பதே பலவிதமான அனுபவங்களைத் தர வல்லது என்பதை முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே எழுதியிருந்ததை வாசிக்கலாம்.

ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீ அரவிந்த அன்னையையும் வணங்குகிறேன்! திருவடிகளை சரண் அடைகிறேன் .
  ******

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுத மாட்டேனென்கிற தன்னுடைய பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து மறுபடியும் முகநூலில் மோகனத்தமிழைப் பொழிய ஆரம்பித்திருக்கிறார் .


நமது குருநாதர்
"ஐயய்ய....என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்...அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்" என்றார் நரேன் என்ற இளைஞர்.
"காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்." என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.
காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது.
ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.
ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்து முனிபுங்கவன் பேசினான்.
"குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்' என்று கூறிய வினோதமான குருநாதன் பேசினான்.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த பரமஹம்ஸரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.
ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி;
ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி;
பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி --
ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.
சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே. விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன். நான் விவேகாநந்தரை வெறுமனே வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! -- இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.
இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் -- இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.
ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.
ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார்.
ஜூலை 4, 1907ல் நான்கு தொகுதிகளாக விவேகாநந்தரின் நூல்கள் அன்று கிடைத்தவை வரையில் வந்த போது, அதற்கு முன்னுரை எழுதியவர் சகோதரி நிவேதிதா அவர்கள். அதில் அவர்கள் கூறுவது :
In the ... volumes of the works of the Swami Vivekananda which are to compose the present edition, we have what is not only a gospel to the world at large, but also to its own children, the Charter of the Hindu Faith.
What Hinduism needed, amidst the general disintegration of the modern era, was a rock where she could lie at anchor, an authoritative utterance in which she might recognise her self. And this was given to her, in these words and writings of the Swami Vivekananda. For the first time in history, as has been said elsewhere, Hinduism itself forms here the subject of generalisation of a Hindu mind of the highest order. For ages to come the Hindu man who would verify, the Hindu mother who would teach her children, what was the faith of their ancestors will turn to the pages of these books for assurance and light. Long after the English language has disappeared from India, the gift that has here been made, through that language, to the world, will remain and bear its fruit in East and West alike.
What Hinduism had needed, was the organising and consolidating of its own idea. What the world had needed was a faith that had no fear of truth. Both these are found here.
சுவாமி விவேகாநந்தரின் முழுநூல் தொகுதியும் தமக்கு சௌகரியமான எந்த மொழியிலோ, ஒவ்வொரு ஹிந்துவின், ஆணோ, பெண்ணோ, இளம்வயதோ, முதியவரோ, ஒவ்வொருவரின் படிப்பிலும், ஆழ்ந்த சிந்தனையிலும் திகழும் காலத்தைக் காலமே அருள்வாயாக!

ஸ்ரீ அரவிந்த அன்னையே! ஸ்ரீரங்கம் மோகனரங்கனின் மோகனத்தமிழ் தங்கு தடையின்றிப் பெருகிவர அருள் செய்வாய்! 

ஸ்ரீ அரவிந்தரும் ஒளி பொருந்திய பாதையும்!

இன்று நவம்பர் 24. ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வெற்றித் திருநாள் (Sidhdhi Day) என்று அழைக்கப்படுகிற தரிசன நாள். 1926 இல் ஸ்ரீ அரவிந்தருக்குள்  ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்து நிறைந்த தினம். கிருஷ்ணனுடைய ஒளி ஒரு மானுட உடலில் புகுந்து நிறைந்ததான அந்த அனுபவமே ஸ்ரீ அரவிந்தர் அடுத்த 24 ஆண்டுகள் மேற்கொண்ட தவமாக விரிந்து அதிமானச ஒளி Supramental Light ஸ்ரீ அரவிந்தருடைய ஸ்தூல உடலில் தங்கிய அற்புதமாகவும் ஆகியது.
இன்று புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வழங்கப் பட்ட தரிசன நாள் செய்தியின் முகப்பு. உள்ளே   இந்த நாளுடைய அருமையை, ஸ்ரீ அரவித்தருடைய பூரண யோகத்தை, ஆசிரமம் தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட விதத்தை   சுருங்கச் சொல்வதாகவும்  இருக்கிறது. ஒளி பொருந்திய பாதை (Sunlit Path) என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்ன ஸ்ரீ அரவிந்தருடைய பூரண யோகம் உருவாக ஒரு துவக்கமாகவும் இருந்த நாள் இது என்றுகூடச் சொல்லலாம்.  


இந்த நாளுடைய அருமை என்ன என்பதைப் பிந்தைய நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இப்படி 

    From the beginning of November 1926 the pressure of the Higher Power began to be unbearable. Then at last the great day, the day for which the Mother had been waiting for so many long years, arrived on 24 November. The sun had almost set, and everyone was occupied with his own activity – some had gone out to the seaside for a walk – when the Mother sent round word to all the disciples to assemble as soon as possible in the verandah where the usual meditation was held. It did not take long for the message to go round to all. By six o'clock most of the disciples had gathered. It was becoming dark. In the verandah
on the wall near Sri Aurobindo's door, just behind his chair, a; black silk curtain with gold lace work representing three Chinese dragons was hung. The three dragons were so represented that the tail of one reached up to the mouth of the other and the three of them covered the curtain from end to end. We came to know afterwards that there is a prophecy in China that the Truth will manifest itself on earth when the three dragons (the dragons of the earth, of the mind region and of the sky) meet. Today on 24 November the Truth was descending and the hanging of the curtain was significant.
There was a deep silence in the atmosphere after the disciples had gathered there. Many saw an oceanic flood of Light rushing down from above. Everyone present felt a kind of pressure above his head. The whole atmosphere was surcharged with some electrical energy. In that silence, in that atmosphere full of concentrated expectation and aspiration, in the electrically charged atmosphere, the usual, yet on this day quite unusual, tick was heard behind the door of the entrance. Expectation rose in a flood. Sri Aurobindo and the Mother could be seen through the half-opened door. The Mother with a gesture of her eyes requested Sri Aurobindo to step out first. Sri Aurobindo with a similar gesture suggested to her to do the same. With a slow dignified step the Mother came out first, followed by Sri Aurobindo with his majestic gait. The small table that used to be in front of Sri Aurobindo's chair was removed this day. The Mother sat on a small stool to his right.

Silence absolute, living silence – not merely living but overflowing with divinity. The meditation lasted about forty-five minutes. After that one by one the disciples bowed to the Mother.
She and Sri Aurobindo gave blessings to them. Whenever a disciple bowed to the Mother, Sri Aurobindo's right hand came forward behind the Mother's as if blessing him through the Mother. After the blessings, in the same silence there was a short meditation.
In the interval of silent meditation and blessings many had distinct experiences. When all was over they felt as if they had awakened from a divine dream. Then they felt the grandeur, the poetry and the absolute beauty of the occasion. It was not as if a handful of disciples were receiving blessings from their Supreme Master and the Mother in one little comer of the earth; the significance of the occasion was far greater than that.
It was certain that a Higher Consciousness had descended on earth. In that deep silence had burgeoned forth, like the sprout of a banyan tree, the beginning of a mighty spiritual work. This momentous occasion carried its significance to all in the divine dynamism of the silence, in its unearthly dignity and grandeur and in the utter beauty of its every little act. The deep impress of divinity which everyone got was for him a priceless treasure.
Sri Aurobindo and the Mother went inside. Immediately Datta was inspired. In that silence she spoke: "The Lord has descended into the physical today."
That 24 November should be given an importance equal to that of the birthdays of Sri Aurobindo and the Mother is quite proper because on that day the descent of the Higher Power symbolic of the victory of their mission took place. The Delight consciousness in the Overmind which Sri Krishna incarnated – as Avatar – descended on this day into the physical rendering possible the descent of the Supermind in Matter.
Of this descent Sri Aurobindo wrote on several occasions afterwards. In October 1935 he wrote as follows:
"It [the 24th November 1926] was the descent of Krishna into the physical. "Krishna is not the supramental Light. The descent of Krishna would mean the descent of the Overmind Godhead preparing, though not itself actually bringing, the descent of Supermind and Ananda. Krishna is the Anandamaya; he supports the evolution through the Overmind leading it towards his {{0}}Ananda."[[Cf. Sri Aurobindo, On Himself, p. 136.]]
The names of those disciples who were present on 24 November 1926:
(1) Bijoy Kumar Nag, (2) Nolini Kanta Gupta, (3) K. Amrita, (4) Moni (Suresh Chakravarty), (5) Pavitra (Phillippe Barbier Saint-Hilaire), (6) Barindra Kumar Ghose, (7) Datta (Miss Hodgson), (8) K. Rajangam, (9) Satyen, (10) Purani, (11) Lilavati (Purani's wife), (12) Punamchand, (13) Champa Ben (Punamchand's wife), (14) Rajani Kanta Palit, (15) Dr. Upendra Nath Banerjee, (16) Champaklal, (17) Kanailal Gangulee, (18) Khitish Chandra Dutt, (19) V. Chandra Sekharam, (20) Pujalal, (21) Purushottam Patel, (22) Rati Palit, (23) Rambhai Patel, (24) Nani Bala.
THE LIFE OF SRI AUROBINDO BY A B PURANI  



இந்த நாளைப்பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்னது இது:

To follow Sri Aurobindo in the great adventure of his integral Yoga, one needed always to be a warrior, now that he has left us physically, one needs to be a hero.
*

-The Mother

(A message given by the Mother for 24 November 1952 on occasion of siddhi day)
Words of The Mother vol.15, pg.197. 

ஸ்ரீ அரவிந்த சரணம் மம  மா மிரா சரணம் மம 

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரண் அடைகிறேன். ஸ்ரீ அரவிந்தருடைய திருவடிகளைச் சரண் அடைகிறேன்.   

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் பிறந்தேன்?  எதற்காகப் பிறந்தேன்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்விகள் அவ்வப்போது ஒவ்வொரு மனிதனுக்கும் வந்துபோகும். மரணபயம் அல்லது மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அடிப்படையாக இருப்பதையும்   கொஞ்சம் கூர்ந்து கவனித்துப்  பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய சிந்தனையோட்டம் மனிதகுலத்தின் ஆரம்பநாட்களில் இருந்தே  இருந்துவருவதையும் இந்தப்பக்கங்களில் அவ்வப்போது பேசி வந்திருக்கிறோம். முந்தைய பதிவில் சத்தியவான் -சாவித்திரி கதையை வைத்து ஸ்ரீ அரவிந்தர்  சாவித்ரி என்ற மகாகாவியத்தை எழுதியதையும் பார்த்திருக்கிறோம். 


மேலே மதுரை மீனாக்ஷி கோவில் தெற்கு கோபுரம் எதிரே இருக்கும் சொக்கப்ப நாயக்கன் கோவில் தெருவில் இருந்த உறவினர் வீட்டில்தான் பால ரமணனுக்கு மரண அனுபவமும் அதைத் தொடர்ந்து நான் யார்  என்ற கேள்வியும்  அதைத் தொடர்ந்த தேடலில் திருவண்ணாமலைக்குப் புறப்படுகிற நிகழ்வுமாக ......


வீட்டை விட்டு வெளியேறிய  தருணத்தில் ஸ்ரீ ரமணர் எழுதி  வைத்து விட்டுப்போன கடிதம் இன்றைக்கு ஸ்ரீ ரமண மந்திரமாக இருக்கும் அந்த வீட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது  நான் என்று ஆரம்பித்துச் சொல்லப்படுவது  இந்தக் கடிதத்தின் முடிவில் இது என்று ஆகிப்போன முதிர்ச்சி,பக்குவத்தை பகவான் ஸ்ரீ ரமணரின் சரிதத்தில் பார்க்க முடியும்.
மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்தப்பக்கங்கள் உதவியாக இருக்கும் 

ரமணருடைய பாதையை, 'மலைப் பாதைஎன்றே வைத்துக் கொள்ளலாம்.  ஆனால்இந்த மலைப்பாதை,எல்லோருக்கும் எளிதில் வாய்க்குமோ?  இப்படி ஒரு பாதை இருப்பது தெரிந்தாலும்எல்லோருக்கும் அதில் ஈடுபடும் மனமும்வாய்ப்பும் வாய்த்து விடாது என்பதே

"ஒரு தரம் கபாலி சாஸ்திரியாரிடம் கேட்டேன், "உங்களை வணங்கும் போது, உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கிற அதே மாதிரி வாசிஷ்ட கணபதி முனி, ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீ அரவிந்தர் மூவருடைய ஆசியும் ஒருங்கே கிடைக்கும் அல்லவா?!"

"ஆமாம்உனக்குக் கிடைக்கும்என்று தனக்கே உரித்தான பாணியில் சாஸ்திரியார் பதிலிறுத்தார்.

இந்தப் பகுதியில் படித்த 'சின்ன நாயனா'வின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப என்னைச்சுற்றி வந்து கொண்டே இருந்ததுஇந்தப் புண்ணிய புருஷர்கள்ஸ்தூல சரீரத்தில் இருந்த காலத்தில்நான் பிறக்கவில்லைநேரடி தரிசனம் பெறுகிற வாய்ப்பும் எனக்கு இருந்ததில்லைஎழுதியவர் எத்தனைபாக்கியம் செய்திருமுடக்கி க்க வேணும் என்கிற நினைப்பிலேயே, எழுத உத்தேசித்திருந்தது தள்ளிப் போனது.கபாலி சாஸ்திரியாரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று மறுபடி அமரும் போதுசங்கரநாராயணன் வார்த்தைகளில் பொதிந்திருந்த திரிவேணி சங்கமத்தைக் கண்டேன். இப்படி மனம் கசிந்து எழுதியது இங்கே 

இப்போது இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா?

கடந்த இரண்டு வருடங்களாகவே உடல் உபாதைகள்  என்னை முடக்கி வைத்திருப்பதோடு மரணத்தை வலிந்து வரவேற்கிற மனநிலையைத்தூண்டி விட்டுக் கொண்டே இருப்பதை என்னதான் அசட்டை செய்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாலும் முற்றிலும் தவிர்க்க முடியவில்லை.

अप्ना तो कोई नहीं, हम काहे को नांहि ।
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥


தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது 


மாற்று :

என்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை
பரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே


வாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.

“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே” என்று கபீரன்பன் இந்தப் பக்கங்களில்அழுத்தம்திருத்தமாகச்சொல்கிறார்.

பொதுவாக என்னுடைய பிறந்தநாளை நினைவில் வைத்துக் கொள்வதோ கொண்டாடுவதோ வழக்கமே இல்லை என்றாலும் இன்றுடன் 61 வயது நிறைந்து நாளை பிறந்தநாள் (20 மார்ச்) என்று நினைவு  வரும்போது நான் ஏன் பிறந்தேன், எதற்காகப் பிறந்தேன், இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி எதற்கும் விடை காணமுடியாமல், கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் தவற  விட்டுவிட்டேனோ என்ற  தவிப்பு மட்டும் உருக்கிக் கொண்டிருக்கிறது.


அண்டினபேரை நழுவவிடாதவன் அச்சுதன் என்னை மட்டும் விடுவானோ?

அவன் கைவிடமாட்டான் என்கிற நம்பிக்கையோடு ......

நாளை புதிதாய்ப் பிறக்கிறேன்!

The Sunlit Path! பூமிக்கு வந்த பொன் ஒளி!

...

ரணத்தை வெல்லவேண்டும்!இதுவே மனித குலத்தின் நீண்டநாள் கனவாகவும், தவிப்பாகவும், தவமாகவும் இருக்கிறது. ஆனால், மரணம் என்றால் என்ன, ஜனனம் என்றால் என்ன என்பதை ஒரு தெளிவான விசாரணையாகவும், உள்ளார்ந்த தேடலாகவும் இந்தப்  புண்ணிய பூமியிலன்றி உலகில் வேறெங்கும் நிகழ்ந்ததில்லை. மரணத்தை வெல்ல முடியும் என்பது ஒட்டு மொத்த மனித குலத்தின் கனவாகவும், லட்சியமாகவும் இருந்தபோதிலும், அதை வென்று காட்டியவர்கள் வெகு சிலரே.

காபாரதத்தில் சத்தியவான்-சாவித்ரி கதை கொஞ்சம் சுருக்கமாக, இந்த விஷயத்தைத் தொட்டுச் செல்கிறது.அதே மாதிரி கடோபஷநித்தில் நசிகேதஸ் என்ற சிறுவன், தர்மதேவதையிடம் இதைத் தெரிந்து கொள்வது விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.



பகவான் ஸ்ரீ அரவிந்தர்,உரை,மனம் கடந்து அரைசு செய்தோங்கும் அருட்பெரும் ஜோதியை இந்த மண்ணில் கொண்டு வருவதற்காகத் தன்னுடைய உடலைத் தியாகம் செய்த நாள் இன்று. டிசம்பர் 5.
 
ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 

தத் சவிதுர் வரம் ரூபம் ஜ்யோதிர் பரஸ்ய தீமஹி
யன்ன சத்யேன தீபயேத் 

 
 

Remember and Offer! எப்படிப் பட்ட பிரச்சினையானாலும், உள்ளது உள்ளபடி ஸ்ரீ அன்னையிடம், ஸ்ரீ அரவிந்தரிடம் ஆத்ம சமர்ப்பணமாகச் செய்ய முற்படும்போது, எனக்குள் ஏதோ ஒன்று பழக்கத்தின் அடிமையாகவோ அல்லது, சமர்ப்பணம் முழுமையடைய விடாமலோ தடுத்துக் கொண்டிருப்பதை கடந்த சில மாதங்களாகவே கவனித்துக் கொண்டிருக்கிறேன். 
 
வம்பு, வழக்குகள் -அதனால் எழும் குழப்பங்களையும், சோர்வையும் ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னிடம் சமர்ப்பிப்பதைத் தவிர வேறென்ன  செய்ய முடியும்? இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது ஸ்ரீ அரவிந்தரின் இந்த அமுத மொழி, நம்பிக்கையளிப்பதாக இருப்பதையும், திருவருள் துணை ருப்பதையும் மீண்டும் மீண்டும் கண்டுகொள்ள ஒரு வாய்ப்பாக இருப்பதையும் பார்த்தேன். 

"Imperfect capacity and effect in the work that is meant for thee is better than an artificial competency and a borrowed perfection."
Sri Aurobindo 
 
Thoughts and Aphorisms

அருட்பெரும் ஜோதியாக இறைவனது கருணை இந்த மண்ணில் இறங்கி  வரும் தருணத்தை விரைவுபடுத்தும் பொருட்டு, ஸ்ரீ அரவிந்தர் தனது உடலையே தியாகம் செய்த நாள் டிசம்பர் 5. தொடர்ந்து ஐந்து நாட்கள் அந்தப் பொன்னொளி ஸ்ரீ அரவிந்தரின் உடலில் தங்கி இருந்ததைக் கண்டுகொள்ளும் அற்புத வரம் பலருக்கும் அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குமுன்னால் கிடைத்தது.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய
என்று இருகரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வணங்குவதைத் தவிர வேறென்ன செய்து  விட முடியும்?

கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!



கவியரசர் கண்ணதாசனின் இந்தத் திரைப்படப் பாடல் வரிகள் நினைவில் இழையோட, இது தொடர்பாக முந்தி எழுதிய பதிவொன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

கேள்வி என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்,

"இங்கேயே, இப்போதே கூட விடை கிடைத்து விடலாம்! அது நாம் எவ்வளவு நம்பிக்கையோடும், ஆர்வத்தோடும் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமே."

இறைவனது அருள், நாம் அறியாமலேயே, நம்மை ஒரு பேரருள் திட்டத்தின் படி நடத்திக் கொண்டே இருக்கிறது. நம்முடைய சம்மதம், அல்லது மறுப்பு எதுவானாலும் சரி, சூத்திரதாரியாக இருந்து நம்மை வழிநடத்திச் செல்லும் நாயகன் ஒருவன், நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து நடத்திக் கொண்டே இருக்கிறான்.

"
எங்கேயடா இருக்கிறான் உன் ஹரி?" என்று உறுமுகிறான் இரணியன்.

"
எங்கே இல்லை ஹரி? அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான், இல்லை, இல்லை என்று நீங்கள் மறுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே, அந்தச் சொல்லிலும் இருப்பான்" என்கிறது குழந்தை பிரகலாதன்.

கதை சொல்லிகள், சுவாரசியத்திற்காக இப்படிச் சொல்கிறார்கள். பிரகலாதன், தூணில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டானே, எந்தத் தூண் என்று கூடச் சொல்லத் தெரியவில்லையே, அதனால் அங்கிருந்த எல்லாத் தூண்களிலும் எம்பெருமான் நிறைந்திருந்தானாம். அதில் ஒரு தூணை இரணியன் எட்டி உதைக்க, தூண் பிளந்து அங்கே சிங்கப் பிரானாய் எழுந்து அவனை முடித்தான். அங்கே எம்பிரான் எல்லாத் தூண்களிலும் எழுந்தருளினான் என்றது, கதை கேட்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. எல்லாத் தூண்களிலும், துரும்பிலும், அவனை இல்லை, இல்லை, என்று மறுத்துச் சொன்ன நாத்திக வார்த்தைகளிலும் அவன் அப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருக்கிறான்.

கதை சொல்லி, அதற்குள் ஒரு கருத்தையும் வைத்துச் சிந்திக்க வைக்கலாம் என்று தான் நம்முடைய முன்னவர்கள், நிறையச் சொல்லிப் போய் ருக்கிறார்கள். கதையை உல்டா அடிக்கக் கற்றுக் கொண்ட அளவுக்கு, உள்ளேருக்கும் கருத்தைத்தெரிந்து கொள்ள சோம்பல் கொள்ளும் ஒரு தலைமுறை பின்னால் உருவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!!

கேள்வி பிறந்தது அன்று! நல்ல பதிலும் கிடைத்தது இன்று!

நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில், இருக்கிறீர்கள்; சில சம்பவங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலும் நீங்கள் ஆசைப்பட்டதற்கு நேர்மாறாக, அல்லது இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதற்கு மாறாகத் தான் நடக்கும்.அப்படி நடக்கும்போது நினைத்தபடி நடக்கவில்லையே என்று ரொம்ப ஃபீல் பண்ணி, "இது மட்டும் இப்படி நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும், இது மட்டும் அல்லது அது மட்டும் இப்படி இருந்திருந்தால்......." என்று வருத்தப் படுவோமா, இல்லையா?

நாட்கள்,வருடங்கள் ஓடும். நிகழ்வுகளில் மறைத்து வைத்திருந்தது, மலர்ந்து வெளிப்பட ஆரம்பிக்கும். அனுபவம் உங்களைக் கொஞ்சம் முன்னேறச் செய்திருக்கும்இன்னும் அதிகமான விழிப்புணர்வுடன் இருப்பீர்கள், புரிந்து கொள்வதென்பது எளிதாக இருக்கும். திரும்பிப் பார்க்கிற போது, கவனித்துப் பார்த்தீர்களேயானால், முதலில் ஆச்சரியமாக இருக்கும், அப்புறம் சிரிப்புக் கூட வரும்! ஆரம்பத்தில்,எவையெல்லாம் மிக மோசமான அனுவவம் என்றும், சாதகமற்றதாகவும் தோன்றியதோ, அவைகளே பின்னால் திரும்பிப் பார்க்கையில், உண்மையில் நீங்கள் முன்னேறுவதற்குத் தேவைப் பட்டதாகவும், சிறந்ததாகவும் தெரிய வரும்போது சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

"உண்மையிலேயே, இறைவனது கருணை எல்லையற்றது" என்பதையறிந்து நன்றிசொல்லவும் தயங்க மாட்டீர்கள்!

கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
அறிந்ததென நினைப்பதையும் நம்பாதே, அதுவும் ஏமாற்றும்!

இப்படி வாழ்க்கையில் பல முறை நடந்து அதைத் திரும்பிப்பார்க்கவும் செய்கிற தருணங்களில் தான், மனிதன் கண்மூடித்தனமாகவே இருந்த போதிலும்அறிவோடு செய்வது கூடக் கண்ணைக் கட்டுகிற மாதிரி இருக்கும் போதிலும் கூட, இறைவனது கருணை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

"ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியிருக்கிறது"

எது எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அது உலகத்தில் அந்தந்தச் சூழலுக்கேற்றபடி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதைத் தான், "ஒவ்வொரு உண்மையும், அது வெளிப்படுவதற்கான தருணத்தை எதிர்நோக்கி ருக்கிறது" என்று சொல்கிறோம். உண்மை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது, அதை நாம்கண்டு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைத் தான் உண்மை வெளிப்படுவதற்கான நேரம் என்று சொல்கிறோம்.

ஏனென்றால், நம்முடைய பார்வை மிகக் குறுகியதாய் இருந்தது. நம்முடைய ஆசைகள், விருப்பு-வெறுப்புக்கள் பார்வையை மறைத்து விடும் போது, உண்மையை, உள்ளது உள்ளபடிக்கே பகுத்து அறிய முடியாது.

ஆப்பிள் பழுத்துக் காலங்காலமாகக் கீழே உதிர்ந்து கொண்டு தான் இருந்தன. ஏன் அப்படி கீழேயே விழ வேண்டும், இந்தப் பக்கமாகவோ, அந்தப் பக்கமாகவோ, இல்லை மேல்நோக்கியோ போகவில்லை என்பதில் எவரும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை, ஐசக் நியூடன் வந்து அதைக் கவனித்துச் சொல்கிற வரை!  

ஆப்பிள் கீழே விழுவதற்கு புவியீர்ப்பு விசை தான் காரணம் என்கிற உண்மை வெளிப்படவும், ஒரு கால நேரம் வரவேண்டியிருந்தது.

ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம் !

இப்படிக் கவனிக்கத் தொடங்கும்போதே, விவரிக்க ஒண்ணாத ஒரு அதிசய நிலைக்குள் நுழைகிறோம். வெளியே தெரிகிற தோற்றங்களுக்குப் பின்னால், இறைவனது கருணையை அறிந்துகொள்ளத் தலைப்படும்போது, முடிவு இல்லாததாய், எல்லா வல்லமையும் படைத்ததாய், எல்லாம் அறிந்ததாய், அனைத்தையும் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தி, நம்மை வழி நடத்துவதாய் உணர்கிறோம்!

நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, நமக்குத் தெரிந்து இருந்தாலும், இல்லையென்றாலும், ஒரு உன்னதமான லட்சியத்தை நோக்கி, இறைவனது கருணை நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது. இறை அருள் திறத்தையும், இறைவனோடு சேர்வதையும் அறியும் திறமே அது! இறைவனை அடைவதென்பதே அது!

அதற்கடுத்த நிலையில், ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் இறைவனது கருணையை உணர்வதாய், அற்புதமான வலிமையுடன், அதே நேரம் முழுமையானதும், அமைதியானதுமான எதனாலும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூடிய ஒரு ஆனந்த மயமான வாழ்க்கையைத் தொடருகிறோம்.

எந்த அளவுக்கு முழுமையான ஏற்புத் திறனுடன், முழுமையான ஈடுபாட்டுடன் ஒருவர் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு தெய்வீகச் செயலுக்கு எதிரான பூமியின் எதிர்ப்புத் தன்மை மறைந்து விடுகிறது. இதுவே தெய்வ சித்தத்தோடு நாம் ஏற்படுத்திக் கொள்ள முடிகிற கூட்டு.

அப்படிப்பட்ட நிலையில், இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான் என்பதை அறிய முடியும்! அப்படிப்பட்ட விழிப்புணர்வில், அவனது சித்தத்தோடு இசைந்து செயல்படவும் முடியும்!

-ஸ்ரீ அரவிந்த அன்னையின் அமுத மொழிகள், அன்னை நூற்றாண்டு விழாத் திரட்டு, தொகுதி 8 பக்கம் 257-258 இலிருந்து -அடிப்படையாகக் கொண்டு எழுதியது. ஆங்கில மூலத்தைப் படிக்க இங்கே




The Divine does not want a partial and passing victory. His victory must be total and everlasting - that is why we have to endure and wait for the proper time to come. However, with faith and confidence, even the endurance becomes easy.”

The Mother 
  • White Roses, 6th Edition, 1999, page 141
ஸ்ரீ அரவிந்த அன்னையின் மகாசமாதி  தினத்தை ஒட்டி, இது ஒரு மீள்பதிவு