Showing posts with label கவிதை நேரம். Show all posts
Showing posts with label கவிதை நேரம். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! கொஞ்சம் கவிதை நிறைய யோசனை!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை 


கண்ணதாசன் மாதிரி ஊக்கமாய்ச்சொல்ல வார்த்தைகள் இல்லைதான்! ஆனாலும் உணர்வுகள் பீறிட்டெழும்போது அழுகையும் வரும், கொஞ்சம்  கவிதையும் வரும். அப்படி வந்த ஒரு தருணத்தையும் இங்கே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லைஒரு பதில் தரவில்லை!


சவலையழுததுதிவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயேநீ இல்லைநீ வெறும் பொய் தான்அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!


இப்படியெல்லாம் வார்த்தைகளில் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்ததனால் மட்டுமே விடை கிடைத்து விடுமா? பதில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தது.ஆனால், அதைப் புரிந்துகொள்கிற பக்குவமும் நேரமும் தான் வாய்க்கவில்லை. 

ராஜாங்கம் தான் அப்படிக் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுக்  கேட்டது என்று நினைக்கிறேன்!

"நீங்க ரெண்டு பெரும் உண்மையிலேயே பகையாளிங்களா, இல்லே பங்காளிங்களா? இப்படி அடிச்சுக்கறீங்க, ஆனா உங்களைப் பத்தி யாராவது தப்பாப் பேசினா அவரு அவங்களோட மல்லுக் கட்ட ஆரம்பிச்சிடறாரு!"

எனக்கே அந்த சந்தேகம் அவ்வப்போது வரும்! நாங்கள் இருவரும் நண்பர்களா? அல்லது சண்டைக்காரர்களா? அவனிடமே ஒருதரம் கேட்டபோது சிலிர்த்துக் கொண்டே சொன்னான், "நாயே! இன்னும் இது கூடத் தெரியலை! நீ சண்டைக்கரானாக இருக்கவும் லாயக்கில்லை! சிநேகிதக்காரனாகவும் இருக்க லாயக்கில்லை!" 

உடனே அங்கே வார்த்தைகளில் அக்கப்போர் ஆரம்பித்து விடும்! 

இன்றைக்கு அவன் பிறந்தநாள். ஆனால் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல முடியாது பதிமூன்று வருடங்களுக்கு முன்னமே அவன் இறந்துவிட்டான். சாகிற வயது இல்லைதான்! ஆனால் தானே தேடிக்கொள்ளும் ஆசைகள், கோபதாபங்கள், ஏமாற்றங்கள் அதிலெழும் குரோதங்கள் என்று ஏதோ ஒரு வடிவத்தில் நாமே இடம் கொடுத்துவிடும் மரணத்தை யார்தான் தடுத்துவிட முடியும்?    


நான் யார்? இந்தக் கேள்விக்கு ஷ்ரத்தாலு ரானடே  மிக அழகாக பதில் சொல்கிறார். ரமண மகரிஷியின் நான் யார் விசாரம் மிகக் கடினமானது. ஆனால் அந்தக் கேள்விக்கு விடைதேடுவதில் தான் வாழ்க்கையின் சாரமே .அடங்கியிருக்கிறது.

 

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"மீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று தான் விரும்புகிறேன்."

விஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள். நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும்! 



ப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதைஇன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

 
Something there is that doesn't love a wall, 
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

ன்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  


Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

விஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! 
 
தோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.
ற்கெனெவே இந்தக் கவிதையை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பேசியிருக்கிறோம்!

அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.
 அதுதான் முக்கியம்!

   

திருத்தாளச் சதி! இது கவிதை நேரம்!




ராபர்ட் ஃபிராஸ்டின் ஒரு கவிதையை இங்கே அனுபவித்தது நினைவுக்கு வருகிறதா?
Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டை வீட்டுக் காரனை உருவாக்கும்!

மேற்கத்தியக் கவிஞன் இந்தக் கவிதையில் எழுப்புகிற கேள்விக்குத் தெளிவான பதில் கவிதையிலும் இல்லை, அதை விமரிசனம் செய்தவர்களுடைய  விமரிசனங்களிலும் கிடைப்பதில்லை என்பதை ஏற்கெனெவே இந்தப்பதிவில் பார்த்திருக்கிறோம். ஆனால், கீழைய மரபுகளில் ஊறியவர்களுக்கு இந்தக் கேள்விக்கு  பதில் காண்பதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. கேள்வியைத் தெளிவாகக் கேட்டுக் கொண்டு, அதற்கு மிகவும் தெளிவான விடையைக் காட்டுகிற லாவகத்தை, ஸ்ரீரங்கம் வி மோகன ரங்கனுடைய கவிதை ஒன்றை தமிழ் வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் மீள்வாசிப்பு செய்து கொண்டிருந்த தருணத்தில் சுகமாக அனுபவித்தேன் என்று தான் சொல்லவேண்டும்!  

இங்கே அந்தக் கவிதை ஜாலம்....!


ஒரு காலும் தாண்டிவிட முடியாத
சுவர்களின் பின்னே நின்றபடிதான்
ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம்
கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள்
அல்லது கண்களைத் தடை செய்யாது
வெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர்.

மிகமிக நேரிடையான சுருக்கு வழியும்
சுற்றிவளைத்த சுழல்வழி என
சார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்
இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும்
இணையும் கைகளுக்கு நடுவிலும்
அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர்.
சுவர் சமயத்தில் பல உடுப்புகளும்
வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு.
 
ஆண் பெண் கிழவர் குழந்தை
அந்நியள், நம்மவள், எவனோ, இவளோ
இவரோ, அதுவோ,
அவர்களோ, இவர்களோ, உவர்களோ
எனப்பல எனப்பல எனப்பல
நினைப்பினில், நடப்பினில்,
நனவினில் நடைமுறை நிஜத்தினில்
கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில்
தடைச்சுவர் கண் மறைக்காமல்
எண் மறைக்காமல்
எங்கோ எப்படியோ எவ்விதமோ
தட்டுப்படும் தடைச்சுவர்
தோன்றாமல் தோன்றி.
நீயும் நானும் வேறிலாது நிற்க
 
நயந்தாலும் நளினமான விலகல்
பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவு
அயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம்
கடக்க முனைந்த கால்
தூரப்பட்டுப் பின்னடையும் மாயம்
இத்தனைக்கும் நீயும் நானும்
பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம்.
 
இன்னும் சொல்லப் போனால்
என்னுள் நீயும் உன்னுள் நானும்
உயிர்த்த கணங்களும் உண்டுதானே!
ஆயினும் தொலைவு இடையிட்ட
பாடுடைப் போலிகளோ நாம்?
போயினும் வருவோம்
என்ற நம்பிக்கையில்
விலகிச் சேயிடைப்படா நிற்கும்
ஓருயிரின் பல பிம்பங்களாய்
ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த்
தனித்தனி உயிர்களின்
பிம்பங்களே மெய்மைகளாய்
அம்புவியில் வளைய வரும்
நெருக்க விழைவின் முறிவுகளாய்
உருவு சுமந்த அந்நியங்களாய்
உருக்கரந்த அந்நியோந்நியமாய்
வெருவரத் திரிதரும்
உயிர்க்குலக் கரவறப்
பயிலொளி அன்பென நின்றதும்
எதுவென அறியா முனைப்பினில்
கதுவிடும் மோனம் முகிழ்த்திடும்
சதுரது சத்தியம் என்றிடும்
குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும்
யதுகுல முரளியின் பண்களோ?

ஆயினும் ……….

உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன்
என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன்
நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன்
நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன்
நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்று
மற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன்
சுற்றமாய்க் கலந்து கலக்க
உற்றதும் உறுவதுமாய்
நிலவிடும் ஒரு பெரும் விழைவு
அகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம்
அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்?


அத்வைத நிலையிலும் தீருமோ
இந்த அணுகலால் விலகும் மாயமும்
விலகிட அணுகிடும் விழைவும்?

******

கவிதையின் வீச்சு அங்கேயே நின்றுவிடுவதில்லை! ஒரு கவிஞனுக்கு எல்லைகளே இல்லை என்பதை மெய்ப்பித்துக் கொண்டு அது இது என்று எங்கெங்கோ தொட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது!

திருஞான சம்பந்தர் திருத்தாளச்  சதி என்ற சந்தத்தில் ஒரு பதிகம் பாடியிருக்கிறார், அவருக்குப் பின் வேறெவரும் அந்த சந்தத்தில் பாடியதில்லை என்ற தகவலைக் கேட்டதும் தானே திருவரங்கர் திருத்தாளச்சதி என்று ஒரு பதிகம் பாடியிருப்பதை இங்கே  பகிர்ந்து கொண்டிருக்கிறார்

பெருகி வரும் மோகனத்தமிழுக்கு வந்தனம் செய்வோம்!

அரங்கன் இந்த வலைப்பக்கங்களில் எழுதிவரும் "ஹிந்துமதம்: ஒரு அறிமுகத்தெளிவு" தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் தானே! 








>
பதிவு பிடித்திருந்தால் பக்கத்தில் தெரியும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!