ஏப்ரல் 24 :: தரிசன நாள் செய்தி!.

ஏப்ரல் 24! ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாள்! 1920 ஏப்ரல் 24 அன்று பாண்டிச்சேரிக்குத் திரும்பிய அன்னை, ஸ்ரீ அரவிந்தருடைய  சேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் தொடக்கமாக, ஒவ்வொரு வருடமும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் தரிசனநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. தரிசன நாளன்று அன்னையின் செய்தியும் மலர்ப்பிரசாதமும் அடியவர்களுக்குக் கிடைக்கும் என்பது இந்தப்பக்கங்களுக்கு வருகிறவர்கள் அறிந்த செய்திதானே!


 

 


ஸ்ரீ அரவிந்த அன்னையின் செய்தியைச் சிந்தித்து இருப்பதே இன்றைய தியானமாகவும்!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே 
  

இட்லி வடை பொங்கல்! #80 #ராயல்அக்கப்போர் #தடுப்பூசிஅக்கப்போர் #மீசைஅக்கப்போர்

கொஞ்சம் உள்ளூர் அக்கப்போர்களிலிருந்து விடுபட்டு வேறு செய்திகளைப்பார்க்கப்போகலாம் என்று பார்த்தால் பிரிட்டிஷ்.அரசகுடும்பத்து அக்கப்போர்கள் முன்னே வந்து நிற்கின்றன  இன்று இங்கே சென்னையில் மறைந்த நடிகர் விவேக் அவர்களுடைய இறுதிச்சடங்கு மாலை 5 மணிவாக்கில் மாநில அரசு மரியாதையோடு நடக்கவிருக்கும் அதே வேளையில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளும் செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நம்மூர் நேரப்படி இரவு 8.30 மணிக்குத் துவங்கவிருக்கிறது. பேரன் ஹாரி மனவருத்தப்படக்கூடாது என்பதற்காக இறுதிச் சடங்கில் பங்கேற்கிற அரசகுடும்பத்தவர் எவரும் ராணுவ உடையணிந்து வரவேண்டாம் என 95 வயதாகும் ராணி  கருணையோடு சொல்லி இருக்கிறாராம்.

 

ராயல் அக்கப்போர்கள் அத்தனை சீக்கிரமாக முடிந்து விடுவதில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை என்ற சாக்கில் கூடுமானவரை சர்ச்சைகளைத் தவிர்க்க முயற்சித்தாலும், ராணியின் வாரிசுகளான இளவரசர் வில்லியம் இளவரசர் ஹாரி இருவருக்குமிடையிலான துவந்தம் இன்னும் முடியவில்லை. ராணியின் 4 மக்களும் சவப்பெட்டியைத் தொடர்ந்துவரும்போது பேரன்கள் இருவரும் தோளோடு தோள் உரசப் பின்தொடர மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராணியின் மகள் இளவரசி ஆனியின் மகன் பீட்டர் பிலிப் சகோதர்களுக்கிடையில் சேர்ந்துவருவாராம்! இந்த ராயல் தமாஷாவை ஒரு திருவிழா மாதிரி ஆங்கிலேயர்கள் கொண்டாடுவது விசித்திரம்தான் இல்லையா?


மேலே படத்தில் செயின்ட் ஜார்ஜ் சேபலில் தரைக்கு 16 அடி கீழே இருக்கிற 200 வருடப் பழமையான அரச குடும்பத்தினருக்கான சவப்பெட்டகத்தில் ராணி எலிசபெத்  இறக்கும் வரையில்  இளவரசர் பிலிப்பின் உடல் வைக்கப் படுகிறது. ராணி இறந்த பிறகு இருவரது உடல்களும் விண்ட்ஸர் மாளிகையில் இருக்கும் இன்னொரு  இடத்தில் சேர்த்தே புதைக்கப்படும் என்கிறது செய்தி The Prince Consort passed away earlier this month at the age of 99 and his funeral is set to take place this afternoon.His remains will be placed behind a set of iron gates around 16ft underground and will stay there until his wife Queen Elizabeth II dies.They will both then be placed in the King George VI Memorial Chapel, Windsor, alongside George VI and Queen Elizabeth.


இந்த வீடியோ செய்தியின் நம்பகத்தன்மை என்ன? ப்ரம்ம செலானி கொஞ்சம் தரவுகளோடு கேள்வி எழுப்பியிருக்கிறார்.


கொரோனாவின் புதிய வடிவம் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவது கவலையளிப்பதுதான் என்றாலும் அதை விட ஜனங்களுடைய பொறுப்பின்மையும், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளுடைய விஷமத்தனமான பிரசாரங்களும், ஏற்கெனெவே தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்குகிற ஜனங்களை இன்னமும் தேவையே இல்லாத குழப்பம் அச்சத்தில் தள்ளுகிற மாதிரித் தான் இருக்கிறது. உள்ளூர் திருமா முதல் நேருபரம்பரையின் தத்தி வாரிசு ராகுல் காண்டிவரை கைகோர்த்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இங்கே பார்க்கலாம்.  


பந்தயம் கட்டுவதும் தீனா மூனா கானா ஆசாமிதான்!

மீண்டும் சந்திப்போம்.  


இட்லி வடை பொங்கல்! #79 பிரசாந்த் கிஷோர்! ஒரு கார்டூன்! ஒரு மரணம்!

IPAC நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோருக்குத் தனியாக ஒரு அறிமுகம் தேவையில்லை இன்று இணையத்தில் அவர் பஹத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒரு உரையாடல் பெரும் கவனத்தையும் சர்ச்சையையும்  ஒருசேர ஈர்த்திருக்கிறது.



வீடியோ 16 நிமிடம்.  கிளப் ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று விஷயங்களை ஒப்புதல் வாக்குமூலம் மாதிரிச் சொல்லி இருக்கிறார். பிஜேபியின்  அமித் மாளவியா  !.Modi is hugely popular in Bengal and there is no doubt about it. There is a cult around him across the country.  2.There is anti-incumbency against TMC, polarisation is a reality,3. SC votes is a factor plus BJP’s election machinery, says Mamata Banerjee’s strategist in an open chat. என்று கீச்சியிருப்பது ட்வீட்டரில் பரபரப்பாக இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. லிங்கில் பிரசாந்த் கிஷோர் பேசியதன் ஆடியோ இருப்பதைக் கொஞ்சம் கேளுங்கள் 


"Suvendu is not a factor. Hindus, schedule caste, Dalit and Hindi speaking population are the key factors. Around 50-55 per cent of Hindus are voting for BJP. There are around one crore Hindi speaking population in West Bengal. Matuas will predominantly vote for the BJP. When we made a survey and asked people whose government will be formed in Bengal. The outcomes predominantly come in favour of the BJP. In-ground there are workers of BJP," என்று பிரசாந்த் கிஷோர் பேசியிருப்பது ஆடியோவில் இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் ஆடியோவை மறுக்க ம்முடியாமல் முழு ஆடியோ உரையாடலையும் வெளியிடுமாறு பிஜேபிக்கு சவால் விடுத்திருக்கிறார் . மடியில் கனமில்லை என்றால் முழு ஆடியோவையும் அவரே வெளியிட வேண்டியது தானே! மேற்கு வங்கத்திலேயே அப்படி என்றால் இங்கே தமிழ் நாட்டில் பிரசாந்த் கிஷோருடைய உத்திகள் என்ன மாதிரித் திரும்பப்போகிறதோ? இப்படி யோசனை ஓடுவது இயல்புதான் இல்லையா!  


சிச்சோறு வீரமணி என்று மு க அழகிரி மகனால் நாம கரணம் செய்யப்பட்டவரும் சரி, காசுக்குச் சோரம் போன தமிழக ஊடாகங்களும் சரி . இப்படித்தான் திமுகவில் கட்டுண்டு கிடக்கிறார்களோ? முகநூலில் இருந்து கார்டூனிஸ்ட் அமரன் வரைந்த படம்.   

*******

ளவரசர் பிலிப் என்றழைப்பதா எடின்பர்க் கோமகன் என்றழைப்பதா என்று நேற்றிலிருந்து ஒரே குழப்பம்! ஏனென்றால் பிரிட்டிஷ் அரச குடும்பத்தவர்களுக்கு அளிக்கப்படும் பட்டங்களெல்லாம் நம்மூர் கலீஞர் டாக்டர் கலீஞர் ஆனமாதிரி அர்த்தமற்றவை என்பது தான்  வரலாறு. மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் நேற்று மதியம் காலமானார் என்பது வெறும் செய்தி மட்டுமல்ல. இல்லாத ராஜாங்கம், இல்லாத பிரபுத்துவம், இல்லாத பழம்பெருமை இப்படி ஏகப்பட்ட இல்லாத விஷயங்களை இன்னமும் இருக்கிற மாதிரியே காட்டிக் கொள்வது தான் பிரிட்டிஷ் வரலாறு என்பதைப் புரிந்து கொள்ள முடியுமானால் போலித்தனமே பிரிட்டிஷ் காரர்களுடைய தொட்டுத் தொடரும் ஒரே பாரம்பரியம் என்பதைத் தனியாக சொல்ல வேண்டியதே இல்லை,  


வீடியோ 16 நிமிடம். அசந்தர்ப்பமான உளறல்களுக்குப் பெயர்போன இந்தப்பிரபலத்துக்கு வயது 99 இன்னும் இரு மாதங்கள் இருந்திருந்தால் 100 ஐத் தொட்டிருப்பார் பிரிட்டனில் 100 வயதைத் தொடும் குடிமக்களுக்கு ராணியிடமிருந்து வாழ்த்துச் சொல்லி ஒரு தந்தி வருமாம்! இறந்துபோன பிலிப் மட்டும் நூறைத் தொட்டிருந்தால் ராணி அவருக்கு எப்படி வாழ்த்துச் சொல்லியிருப்பார்?  By custom, every British citizen who attains the age of a hundred receives a congratulatory telegram from the Queen. But what happens if the Queen happens to be your wife? Would she have handed the telegram to Philip at breakfast, reaching shyly over the marmalade? Or, as a stickler for tradition, would he have had to stand by the front door and wait for the arrival of the mail, like everyone else? Alas, we shall never know. என்று உருகுகிற இந்தச் செய்தி இன்னும் சில விவரங்களையும் சேர்த்தே சொல்கிறது. 

நம்மூர் ஹிந்து ஆங்கில நாளிதழ் இளவரசர் பிலிப் சென்னைக்கு  இரண்டுமுறை வந்திருக்கிறாராக்கும் என்று பீற்றிக்கொள்கிறது.

மீண்டும் சந்திப்போம்  

சண்டேன்னா மூணு! #அரசியல் #திமுகஅரசியல் #மாற்றுஅரசியல்

இன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது  இத்தனை நாள் ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு திமுகவினர் அடுத்துவந்த தம்பட்டம் எல்லாம் கிழிந்து தொங்குகிறதாம்! போதாக்குறைக்கு ஒரு மாஜி திமுக பெண் அமைச்சருடைய தாயாரே நில அபகரிப்பு  சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார். என்னவென்று?  


பெற்ற தாயுடைய சொத்துக்களையே மோசடியாகத் தனது புருஷன் பெயருக்கு மாற்றிக்கொண்ட அந்த திமுக பெண் பிரமுகர் பூங்கோதை ஆலடி அருணா தான்! இந்த ஒரு சோற்றுப் பதம் போதாதென்றால் உங்கள் ஊரில் உள்ள திமுக பெரும்புள்ளிகளுடைய முன்கதை & பின்கதை சுருக்கத்தைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!


திமுக ஊதி ஊதிப் பெரிதாக்கி வந்த நாங்க தான் ஆச்சியப் புடிக்கப்போறோம் பலூனை இப்படி ஒரே நாளில் உடைத்துவிட்டார்களே! திமுக சொம்புகளுக்கு துக்கம் நெஞ்சை அடைக்காதா?  நெஞ்சே வெடிக்கும்படி ஒருத்தர் பொதுவெளியில் வாந்தி எடுத்திருக்கிறார்.


யாரிந்த விவேக் என்று விசாரித்தால், மின்னம்பலம் இணைய இதழில் இருப்பவர் என்று சொல்கிறார்கள். கடைசி மூன்று வரிகளில் சொல்லியிருப்பதைத்தானே இவர்களும் திமுகவுக்கு ஆதரவாக இத்தனைநாள் செய்து வந்தார்கள் என்று நான் கேட்கப்போவதில்லை!

தட்டிக்கேட்க ஆளில்லாமலிருந்ததால் இத்தனை நாள் திராவிட கழகம், தி மு கழகம் , சுபவீ செட்டியார், திருமா உள்ளிட்டபலரும் இது பெரியார் மண் அது இதென்று முண்டா தட்டிக் கொண்டிருந்தார்கள் யாராவது சிறிது சந்தேகத்தோடு கேள்வி கேட்டால் அவரை சங்கி என்று பழித்தார்கள்! ஆகாதவர்கள் எவரைப்பார்த்தாலும்  பிஜேபியின் B டீம் என்றார்கள்  அதையும் மீறிக் கேள்வி கேட்டால், கேட்காதே! பிஜேபி உள்ளே வந்துவிடும் என்றார்கள்! கடைசிவரை தாங்கள் யார், தங்களுடைய கொள்கை என்ன, சாதித்ததென்ன இவை எதையும் சொல்லாமலேயே அடுத்தவர்களை அவதூறாகப் பேசுவதொன்றையே!  முழுநேரத் தொழிலாக வைத்து இருந்தார்கள்  கடைசியில் என்ன ஆனது? சோணமுத்தா எல்லாம் போச்சா?.       


பெங்களூரு பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தேஜஸ்வி சூர்யா கூட, இந்த 10 நிமிட வீடியோ நேர்காணலில் ஊழலில் காங்கிரசும்  திமு கழகமும் ஊறித்திளைப்பவை என்பதனால் நேச்சுரல் கூட்டாளிகள் என்று சொல்கிறார். அண்ணாமலை IPS ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவார் என்பதையும் மிகுந்த நம்பிக்கையோடு சொல்கிறார் இதையும் திமுகவினர் செய்து வரும் வெறுப்பு அரசியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!  ஒப்பிட்டுப்பார்க்க இன்னொரு 7 நிமிட வீடியோ 



வெறும் 20 சீட்டுகளில் மட்டுமே போட்டியிடும் பிஜேபி மாற்று அரசியல் சக்தியா? மாற்றத்துக்கான சக்தியாக மிகுந்த வீரியத்துடன் பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பது சத்தியம்! 

தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை இதுநாள் வரை ஒட்டவிடாமல் வைத்திருந்த திமுகவை நிராகரிப்போம்! திமுகவுடன் சேர்ந்து கொட்டம் அடிக்கும் உதிரிகளான விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில்லறைகளையும்  முற்றிலும் நிராகரிப்போம்! தமிழகம் தனித்தீவல்ல! பாரதத்தின் ஒரு அங்கமே எனத் தலைநிமிர்ந்து சொல்லுவோம்!

மீண்டும் சந்திப்போம்

IT ரெயிடுகளும் பின்னே வரும் திமுக சவடால்களும்!

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வருகிறது ஆபாசராசா, கெக்கேபிக்குணி தயாநிதி மாறன், லியோனி மாதிரிப் பொறுப்பற்ற பேச்சாளர்கள் ஒருபுறம் என்றால், திமுகவின் கடந்தகால சாதனைகள்  இப்போது அவர்களுக்கே சோதனையாகத்  திரும்புகிறது என்றால் நம்புவீர்களா?   



இசுடாலின் மகள் செந்தாமரை வீடு, மற்றும் மாப்பிள்ளை சபரீசனுடைய நண்பர்கள் /கூட்டாளிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதில், அதிர்ந்து போயிருந்தாலும் திமுகவினரின் வாய்ச்சவடால் கொஞ்சமும் குறையவில்லை. நான் கலைஞரின் மகன்?, மிசாவையே பார்த்தவன், பனங்காட்டுநரி, சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்று இசுடாலின் வீரவசனம் பேசி மனதைத்தேற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காண்டி ஓடோடி வந்து கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்கிறபோது திமுகவிடமிருந்து வாங்கித்தின்று வயிறு வளர்க்கும் விசிக, கம்யூனிஸ்டுகளும் கோரஸ் பாடாமல் இருப்பார்களா?


திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரை முருகன் இந்த விவகாரத்தைக் குறித்து நிருபர்களுக்குப் பேட்டி கொடுப்பதன் 9 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்! துரை முருகன் சீரியசாகப் பேசுவது போலவே காமெடி செய்கிறவர். இந்த ரெயிடுக்காகக் கண்டனம் தெரிவிக்கிறாரா அல்லது  உள்ளூர சந்தோஷமும் உதட்டில் ஆதரவு வார்த்தைகளுமாகப் பேசுகிறாரா என்பதைக் கண்டுகொள்ள முடிந்தால் நீங்களும் தலை சிறந்த அரசியல் விஞ்ஞானியே! உதயநிதி வழக்கம் போல இந்தா பிடி என்னோட அட்ரசு முடிஞ்சா வந்து ரெயிடு நடத்து என்று சவால் விட்டிருக்கிறார்.

மதிப்பீட்டாளர்
 2ம. 
“பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி ரெய்டுகளை ஏவி விடுகிறது”! - திமுக தலைமை அறிவிப்பு. சரி ஐயா பாஜக தோல்வி பயத்தில் வருமான வரிச் சோதனையை ஏவி விடுகிறது என்றே ஒரு கணம் வைத்துக் கொள்வோம்!
நீங்கள்தான் ‘தோல்வி பயம்’ சற்றும் இல்லாத ‘வெற்றி வீரர்கள்’ ஆயிற்றே? தைரியமாக எதிர் கொள்ள வேண்டியதுதானே வருமான வரி சோதனையை?
“வந்து பார்த்துங்கடா - வீட்டை மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்துங்கடா - வேண்டுமானால் வீட்டு வாசல் கேட்டையே பூட்ட வேண்டாம் - வெளியில் ‘ஜெயன்ட் சைஸ்’ பெரிய ஸ்க்ரீன் வைங்க - உள்ளே என்ன சோதனை நடக்கிறது என்று ‘லைவ்’வா போட்டுக் காட்டுங்க - பொது மக்கள் பார்க்கட்டும்- எங்களுக்கு மடியில் கனமில்லை!”- என்று தைரியமாக அறிக்கை விட்டால் நீங்கள் அசல் நேர்மையாளர்கள்! அதை விட்டு விட்டு - “தேர்தலுக்கு நான்கு நாள் இருக்கும் போது ரெய்டு ஏன் நடத்துகிறார்கள்?”- என்ன ஐயா கேள்வி இது?
தேர்தல் நெருங்கி வரும் நாள் என்றால் எந்த ஒரு சட்ட பூர்வமான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப் பட வேண்டும் - இத்தனை நாளுக்கு முன்பாக நடத்தக் கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன? சில மாதங்கள் முன்பு உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனே பேசினாரே:
“தேர்தல் முடியும் வரை கழக உடன் பிறப்புகள் ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்... வருமான வரித் துறைக்குப் புகார் அளித்து ஒருவர் மற்றவரைப் போட்டுக் கொடுக்க கூடாது!” - நா தழுதழுக்க வேண்டிக் கொண்டாரே துரைமுருகன்!
அவர் என்ன பாஜக ஆட்களுக்கா அந்த வேண்டு கோளை வைத்தார்? அல்லது அதிமுகவுக்கு வைத்தாரா? உங்கள் கட்சி ஆட்களுக்குத்தானே அந்த வேண்டுகோளை வைத்தார்?
“யார் யார் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்களோ - விருப்ப மனு கொடுங்கள் - கட்டணம் செலுத்துங்கள் -நேர்காணலுக்கு வாருங்கள்”- என்று கூப்பிட வேண்டியது! கண்துடைப்புக்கு ஓரு “நேர்காணல்”!
ஸ்டாலின் தொகுதி - கொளத்தூர் - வரும் போது அவர் ஒருவர் மட்டுமே மனு கொடுத்திருந்தாலும் அவர் எதிரே வந்து மனுதாரர் நாற்காலியில் உட்கார்ந்து கொள்வாராம்!
அவரை எதிரில் உட்கார வைத்து துரைமுருகன் ‘நேர்காணல்’ நடத்துவாராம்! சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பெயர் வரும்போது உதயநிதி மட்டும் - அல்லது அவர் சார்பில் பலர் - அந்தத் தொகுதிக்கு ஒரே பெயரில் மனு கொடுப்பாங்களாம்!
அவரும் வந்து பவ்யமாக நின்றபடியே ‘நேர்காணலில்’ பங்கேற்பாராம்! பெற்ற தகப்பனே மகனுக்கு அவர் கட்சியில் சேர்ந்த விவரங்கள், கலந்து கொண்ட கூட்டங்கள், கட்சியில் ஆற்றிய பணிகள் இவை பற்றி எல்லாம் மகனிடமே தகப்பன் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வாராம்! அப்படி ஒரு ஜனநாயகமாம் கட்சியில்! என்னமா சீன் காட்டினீர்கள்!!
கடைசியில் வேட்பாளர்கள் பலர் யார்?
காட்பாடி என்றால் 80 வயதுக்கு மேலானாலும் துரை முருகன்தான்! ஆத்தூரில் (திண்டுக்கல் மாவட்டம்) ஐ.பெரியசாமி -பழனியில் அவர் மகன் பெ.செந்தில் குமார்! ஒட்டன் சத்திரத்தில் 6 ஆவது முறையாக (1996 -2001 - 2006- 2011- 2016- 2021) சக்ர பாணிதான்!
தூத்துக்குடி என்றால் கீதா ஜீவன்தான் (தூத்துக்குடி பெரியசாமி மகள்) ஆலங்குளம் என்றால் ஆலடி அருணா மகள் டாக்டர் பூங்கோதைதான்! மதுரை மத்திய தொகுதி என்றால் PT பழனிவேல் ராஜன் மகன் பழனிவேல் தியாகராஜன்தான்!
திருவெறும்பூர் என்றால் அன்பில் பொய்யாமொழி மகன் மகேஷ் பொய்யாமொழிதான் வேட்பாளர். திருச்சி மேற்கு என்றால் நேருதான்!
வீரபாண்டி என்றால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் உறவினர் தருண்தான்! திருச்சுழி என்றால் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசுதான்!
திருநெல்வேலி என்றால் முன்னாள் MLA A.L. சுப்ரமணியம் மகன் ALS லட்சுமணன்தான்! வில்லிவாக்கம் என்றால் க. அன்பழகன் பேரன் வெற்றி அழகன் என்கிறார்கள்!
தி. நகரில் ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி.
இப்படிப் பல தொகுதிகளை வாரிசுகளுக்கும், மேலும் பல தொகுதிகளை அந்தந்த மாவட்டக் ‘குறுநில மன்னர்களுக்கும்’ - ‘முரட்டு பக்தர்களுக்கும்’- வேண்டப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்துவிட்டு அப்புறம் கண்துடைப்புக்கு ஒரு பிரமாதமான “நேர்காணல்”
பணம் கட்டிவிட்டு சீ்ட்டு கிடைக்காமல் ஏமாந்து போனவன் எத்தனை பேர்? அவன் என்ன கொள்கைக் கோமானா? அறவழியில் நின்று பொதுச்சேவை செய்யத் துடிப்பவனா? எனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் கட்சி நிறுத்திய வேட்பாளருக்குப் பாடுபடுவேன் - கட்சி கட்டளையிடும் பணியைச் செய்வேன் - என்று லட்சிய பூர்வமாக சித்தாந்தத்தால் பிணைக்கப் பட்டவனா?
அரசியல் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் மேஜையை விட்டு வெளியேறியவன் - அவ்வளவுதானே?!! பிரியாணிப் போட்டியில் "தொடை எலும்பு" சுவைக்கக் கிடைக்காமல், குஸ்காவை சுவைக்கும் நிலைக்கு ஆளான "கொள்கைத் திருமகன்" தானே அந்த உடன்பிறப்பு?!!
ஸ்டாலின் மகள் வீட்டிலும், மருமகனிடமுமே வருமான வரித் துறை ரெய்டு வருகிறது என்றால் - துரை முருகன் சொன்னது போல - எவனோ உங்களில் ஒருவன் ஸ்ட்ராங்காகப் போட்டுக் கொடுத்து உள்ளான் என்று பொருள்!
எனவே பாஜகவை நோவதை விட, அந்தக் “கறுப்பு ஆடு” எது?- என்று உங்களிடையே தேடுங்கள்! கடைசியாக ஒன்று! நினைவிருக்கிறதா 1971 தேர்தல்?
பெருந்தலைவர் காமராஜர் - “ஆந்திரா பேங்கில் ஒரு கோடி ரூபாய் வைத்து இருக்கிறார்!”- என்று பிரசாரம் செய்தீர்கள்! அவர் உங்களைப் போலப் பதறவில்லை!
“செக் தருகிறேன் - இருந்தால் போய் எடுத்துக் கொள்!”- என்றார்! இறக்கும் போது நாலே நாலு வேட்டி சட்டையும், பையில் 130 ரூபாய் பணமும் வைத்திருந்த அந்தத் தலைவனை அப்படிப் பேசினீர்கள்!
சரித்திரம் திரும்புகிறது உடன் பிறப்பே! செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா! காமராஜ் உங்களைப் பார்த்துச் சொன்னது போல், வருமான வரி அதிகாரிகளைப் பார்த்து தைரியமாகச் சொல்ல வேண்டியதுதானே? “இருந்தால் எடுத்துகிட்டுப் போடா!”
அதை விட்டுவிட்டு ஏன் பாஜக தோல்வி பயத்தில் மிரட்டுகிறது என்ற அலறல்??


சாதாரண ஜனங்களும் மிடில் கிளாஸ் மாதவன்களும் தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமானால்
 திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை முற்றிலும் நிராகரிப்பது ஒன்றே வழி! புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.