துப்புவது எச்சில் அல்ல....விஷம்..!


....த்தூ! த்தூத்தூத்து!

ஒரு தொலைக் காட்சி விளம்பரத்தில் ஒரு பொடியனுக்கு அம்மாக்காரி சாதம் ஊட்டிக் கொண்டே வருவாள். பொடியன் அம்மாக்காரி ஊட்டியதை
....த்தூ! த்தூத்தூத்து! என்று துப்பியபடியே வீடு முழுக்க ஓடி அம்மாக்காரியை ட்ரில் எடுத்துக் கொண்டிருப்பான். ஆஹா, பொடியன் என்னமாக ஓடுகிறான் என்று  அந்தக் காட்சியை என்னை மாதிரியே நீங்களும் ரசித்திருப்பீர்கள்!

தமிழ் வலைப் பதிவுலகில் மூன்று நாட்களாக இப்படித் துப்பி எழுதும் போக்கு, சாதி, முற்போக்கு முத்திரையுடன் ஆரம்பமாகி இருப்பது தமிழ் வலைப் பதிவுலகம் நல்ல நிலையில் இல்லை என்பதையே சொல்லாமல் சொல்கிறது.

காரணம், அதற்கும் முந்தைய காரணம், காரியம் என்று எல்லாவற்றையும் பார்த்த பிறகு ஒரே ஒரு வரி தான் சொல்லத் தோன்றுகிறது.

நீங்கள் துப்புவது வெறும் எச்சில் மட்டும் அல்ல! கொடும் விஷம்! இந்த விஷயம் எங்கே கொண்டுபோய்விடும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இங்கே.


முழுச் செய்தியையும் படிக்க, இங்கே.

இன்னொரு செய்தி இங்கே

அதில் இருந்து கொஞ்சம் ......

"முனைவர் நா. கண்ணன், இன்னும் சொல்கிறார்:

"Chuimsae geneன்றெல்லாம் பேசுகிறார்கள். நம்மவர்களோ நாட்சிகள் போல் இனவாதம் பேசி, மொழிவாதம் பேசி நம்மைப் பிரித்து சீரழிக்கும் எண்ணங்களைக் கூசாமல் பரப்பிய வண்ணம் உள்ளனர். Chuimsae gene என்றால் என்ன? நல்லதை எண்ணும் மரபணு. நல்லது எனும் போது கூடும் மனோநிலை. ஒருமைப்படும் மனது. நல்லதே எண்ணும் உள்ளம்.

இது எவ்வளவு தேவை மின்தமிழ் உலகிற்கு தற்போது!

நம் மொழியில் இல்லாத சொல்லா? பக்தி இயக்கம் என்பதே இந்த Chuimsae gene  ஐ ஒளிபடச்செய்வதுதான்.செய்வோம்."

நல்லது நடக்க வேண்டும் என்ற வாழ்த்துக்களோடு, நல்ல எண்ணங்களைப் பரிமாறத் துவங்க  ஆரம்பிப்போம்!
"

oooOooo


திங்கள் கிழமை சிந்தனைகள்!படமாக!


சண்டேன்னா மூணு! படங்கள் மூணு...! கவிதை ஒண்ணு!


சீரியஸா என்னத்தையோ யோசிக்கற மாதிரி எல்லாம் இல்லீங்க! ...ச்சும்மா ஒரு ஷோ காட்டத் தான்! செம்மொழி மாநாடு வேற வருது இல்லே?


எதுக்கு தலையை முட்டிட்டு நிக்கறோம்னு கேக்கறீங்களா? முட்டையில் இருந்து கோழியா, கோழியில் இருந்து முட்டையான்ற மாதிரி எங்க கிட்ட வந்து பரிணாமம் எனது புரிதல், படைப்புவாதம் இப்படீன்னெல்லாம் எழுதப்போறேன்னு பயமுறுத்தினாக்க நாங்க  வேற என்ன செய்யறதாம்...?


எங்களுக்கும் ஸ்டன்ட் அடிக்கத் தெரியும்! ஆனா இன்னாத்துக்கு ஸ்டன்ட்  அடிக்கறதுன்னு தெரியாமத் தான் ஒரே குழப்பமா இருந்தது. அதனால ஒரு ஸ்டன்ட் அடிச்சுப் பாப்போமேன்னு தான்......!

இந்தப் படம் எதுக்கு, அதுக்கு கமெண்டுன்னு கீழே கொஞ்சம் எழுதினது எதுக்குன்னு புரியலையா?

வால் பையனை விட்டே  இந்தத் தரம் உரை எழுதச் சொல்லிட்டாப் போச்சு!

அதுவரைக்கும், ரசிப்பதற்காக ரூமியின் கவிதை ஒன்று ! 

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"

முகமதுஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில் இருந்து அவ்வப்போது ஒரு சில கவிதைகளைப் பார்த்திருக்கிறோம்! அந்த வரிசையில் இன்னுமொன்று!


ரூமி  காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்மநேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதைவரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்! இங்கே இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?


Lover whispers to my ear,
"Better to be a prey than a hunter.
Make yourself My fool.
Stop trying to be the sun and become a speck!
Dwell at My door and be homeless.
Don't pretend to be a candle, be a moth,
so you may taste the savor of Life
and know the power hidden in serving."




 

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

.
பிரிட்டிஷ்காரர்களுக்கும் சரி, அதன் கூட்டு நாடுகளான ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கும் சரி, இந்தியா என்றால் கொஞ்சம் இளப்பம் தான்!
 


ந்திய அரசின் இன்டலிஜென்ஸ் பீரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி. கனாடாவில் வாழும் தன்னுடைய மகனுடன் சேர்ந்து இருப்பதற்காகத்  தற்காலிகக் குடியேற்றத்திற்கான விசாவிற்கு விண்ணப்பித்தார். கனடிய தூதரகம் ஒருமுறை அல்ல, இரண்டு முறை அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தது. சொன்ன காரணம். "அவர் பணிபுரிந்த நிறுவனம், வன்முறையில் ஈடுபடுகிற ஒன்றாம்! கனடிய மக்களுடைய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதாம்."

து ஏதோ ஒரு முறை நடந்த தற்செயலான தவறு மாதிரித் தெரியவில்லை. 


மூன்று ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கும் விசா மறுக்கப் பட்டிருக்கிறது.  ஏ எஸ் பாஹியா என்பவருக்கும் அவரது மனைவிக்கும் விசா மறுக்கப் பட்டதற்குச் சொன்ன காரணம், அவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியவராம்! இவருக்கும் இன்னும் இரண்டு பஞ்சாபி அதிகாரிகளுக்கு விசா மறுக்கப் பட்டதற்கு  சொல்லப் பட்ட காரணம், வேலையில் இருந்த தருணங்களில் மனித உரிமைகளை  மீறிச் செயல்பட்டிருப்பார்களாம்!

தைவிட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை குறித்தான விமரிசனம்: 'ரொம்பவும் பேர்போன வன்முறை ஸ்தாபனமாம்!'  


செய்தியை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இங்கே!  

னடிய ஹைகமிஷனுக்குக் கடும் கண்டனங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். கனடாவின் இந்தப் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற சொல்லிவிட்டு, பத்திரிகைகளில் இந்த விவகாரத்தைப் பெரிதாக ஊதிவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அமைச்சர் இப்படி ஊடகங்களை வேண்டிக் கொள்வது இது முதல் முறை அல்ல.

னடிய அரசோ, இந்தியாவில் கிளம்பியிருக்கும் இந்தப் பிரச்சினையை பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.


ந்திய அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகள் விடுவார்கள், பத்திரிகைகளில் ஓரிரு  நாள் செய்தி வரும்!அப்புறம் இப்படி ஒரு விஷயம் நடந்தது என்பதையே மறந்து போய் விடுவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அல்லது இவர்களால் இதற்கு மேல் என்ன செய்து விட முடியும் என்ற திமிரோ எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், கனடிய அரசு கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது, இந்திய அரசை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை என்பதைத் தெளிவாகவே சொல்கிறது!

ள்ளூரில் ரொம்பவே  சவடால் பேசும் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு சர்வதேச அரங்கில் எவ்வளவு பலவீனமானதாகப் பார்க்கப் படுகிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
 

இந்த விஷயம் அம்பலமானதில் இருந்தே மக்களுடைய கோபம் அதிகரித்து வருவதைப் பார்த்த பிறகுதான், உள்துறை, வெளித்துறை எல்லாம் சேர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று உள்துறை செயலர் ஜி கே பிள்ளை வீரமாகப் பேசியிருக்கிறார். பானா சீனாவுக்குத் தோதான செயலாளர் தான்!

முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை ஒன்றை நம்மால் விடுதலை அடைந்து அறுபத்து மூன்று ஆண்டுகளாகியும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது  காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிற சாபக் கேடு.

ந்திய அரசு கொஞ்சம் ரியாக்ட் செய்திருக்கிறது. ஆனால், தேசத்தின் தன்மானத்தைக் காப்பாற்றும் விதத்தில் இவை போதாது. 

ந்தியாவுடனான ராஜரீக உறவுகளில், எவ்வளவு அடாவடியாக மேற்கத்திய நாடுகள் நடந்துகொள்ளும் என்பது ஒரு புறம். வெளியுறவுத் துறை அமைச்சர், அல்லது அமைச்சகம் கையாலாகாத் தனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதையே இது மாதிரி, இந்தியா தொடர்ந்து அவமானப் படுத்தப் படுகிற நிகழ்வுகள் எடுத்துச் சொல்கிறது. 


துவே சீனாவாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! சீனப் பூச்சாண்டி ஒருபக்கம் இருந்தாலும், சீனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதையும் இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!

சுதந்திரம் பெற்ற பிறகும் வெள்ளைத்துரைமாரிடம்  கை கட்டிப் பவ்யமாக நிற்கிற அசிங்கம், இந்தியாவின் முதல் பிரதமரிடமிருந்தே ஆரம்பித்தது.


ல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்களின் மீது ஏறியே நரகத்துக்கும் போகலாம் என்று தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் சொல்கிற ஒரு ஆங்கில மேற்கோளை இந்தப் பதிவுகளின் பலபக்கங்களில் பார்த்திருக்கிறோம். 

ல்லது என்று நினைத்துக் கொண்டு நேரு ஆரம்பித்து வைத்த நிறைய விஷயங்கள், குறிப்பாக வெளியுறவுக் கொள்கை, இந்த நாட்டைத் தொடர்ந்து நரகத்துக்கே கொண்டுபோனதை, காங்கிரஸ் வாரிசு அரசியல் அந்தத் திருப்பணியை இன்னமும் அதிதீவீரமாகச் செய்து கொண்டிருப்பதை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!



  இந்த மிதப்புத் தானே ஆளைக் கவிழ்த்தது! 
இந்த நாட்டையும் கெடுத்தது!

நேருவின் நல்ல எண்ணங்களின் மீதோ, அவர் இந்த நாட்டை நேசித்ததிலோ எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இருந்ததில்லை. அப்படி ஒரு குற்றச்சாட்டு, விமரிசனத்தை வைத்து இந்தப் பதிவு எழுதப் படவில்லை.

னால் மனிதன் செய்த எதுவுமே இந்த நாட்டுக்கு உபயோகமாக இருந்ததில்லை என்பது ஒருபுறம். இந்தத் தனிமனிதரின் பலவீனம், புகழின் மீதான ஆசை, இந்த நாடு இன்றைக்குச் சந்தித்துக் கொண்டிருக்கும் உபத்திரவங்கள் அத்தனைக்கும் காரணமாக இருந்ததை மறந்துவிட முடியுமா?



"இந்தியா தான் இந்திரா! இந்திரா தான் இந்தியா!

ப்படிக் கூவியே அப்புறம் காணாமல் போன ஒரு கிறுக்கு மாய்க்கானைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதா?

ன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

பாரதியின் ஆதங்கம் இப்படிக் கவிதை வரிகளில்  வெடித்தது நினைவு வருகிறதா?


பதிவை வலையேற்றம் செய்தபிறகு தான் நினைவு வந்தது. இன்று நேரு மறைந்த நாற்பத்தாறாவது ஆண்டு!

இந்த விஷயம் தொடர்பாக திரு டோண்டு ராகவனும் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அங்கே பின்னூட்டங்களில், இந்தியா அசிங்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டு  சிலர் எழுதியிருந்ததையும் பார்த்தேன்.

தமிழன் என்றொரு இனமுண்டு - தனியே
அவர்க்கொரு குணமுண்டு

என்ற நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளை வேறு விதமாக நிரூபணம் செய்கிற போக்கை என்னவென்று சொல்வது?





பீர்பால் கதைகள் -7 ஒரு புதன்கிழமைக் கலாய்த்தல்கள்!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது! புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

னவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாதபடிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

னவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

னேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

ப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

வராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தனிவிக்கிரார்களா என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

ன்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனைஎல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

ந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும்போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம்போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! இப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

ரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது! இப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

ற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா, யோசித்து மாற்றுவதா ன்று பாதுஷாவுக்கு டுத்த ந்தேகம்  ழக்கம் போயாராகி விட்டது!

oooOooo

வால் பையன்கள் காட்டும் பரிணாமம்!


எழுத வேறெதுவும் செமை மொக்கையாகக் கிடைக்காத தருணங்களில் எல்லாம், பரிணாமத்தைப் பிராண்டுவது என்ற நல்ல வழக்கத்தை நம்ம வால்ஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்! சேக்காளி ராஜன் வந்து அடக்கினால் தான் உண்டு போல!

பரிணாமத்துக்கு முதலில் கொஞ்சம் முன்னுரை, அப்புறம்
அந்த
முன்னுரைக்கே விளக்கவுரை, அப்புறம் கொஞ்சம் படங்களோடு என்று பரிணாமப் பிராண்டல்கள் ஆரம்பித்துவிட்ட பிறகு நான் மட்டும் சும்மா இருந்துவிட முடியுமா என்ன?


அதனால் ஒரே ஒரு படம் மட்டும்! இந்தப் படத்துக்கும் கோனார் நோட்ஸ் போட வேண்டும் என்று கேட்காமல் இருக்கும் வரை சந்தோஷம்!

oooOooo 


வங்கிகள், நிதித்துறை,பொருளாதாரம் பற்றிப் பதிவில் எழுதி நாட்களாகி விட்டதே என்று செய்திகளைக் கொஞ்சம் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்.  

அப்படிப் படித்துக் கொண்டிருந்தபோது சென்ற வருடம், அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்தபோது, 'உலகப் பொருளாதார நெருக்கடியை நாம் நிறுத்த முடியும்-அதைப் பற்றிப் பேசாமல் இருந்தால்!"  என்ற வாசகத்தைப் பார்த்தேன்!  சென்ற வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான பக்கம் இது! இந்த விவகாரமான படத்தை ஒரு டி ஷர்ட்டில் போட்டு இந்த வலைத் தளத்தில் சொல்லப்பட்ட காரணம்  இது!

"
GFCSUCKS.COM aims to stop incessant talking about the Global Financial Crisis and believes it is only making matters worse."

சரிதானா என்று கொஞ்சம் யோசித்துவிட்டுச் சொல்லுங்கள்!


 

திங்கட்கிழமை! தொடரும் காமெடி!

நவ ரசத்தில் எது எதுவோ குறையுதுன்னு சொன்னாங்க! எது எது எவ்வளவு குறையுதோ அதுக்கு மட்டும் மார்க்கைக் குறைச்சு எப்படியாச்சும் பாஸ் மார்க் போட்டுடுங்க ப்ளீஸ்! எனக்கு இதுக்கு மேலும் டம்மியா இருக்கத் தெரியாதுன்னு சொல்றாரோ?

ஒரு வழியாகப் பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களுடன் எழுபத்தைந்து நிமிடம் உரையாடி விட்டார்!  சாதனை நம்பர் ஒன்! இது போதாதா என்ன!?

blow by blow என்று ஐபிஎன் செய்தித் தலைப்பைத் தமிழில், ஜனங்களுக்கு அடிமேல் அடி என்று மொழி பெயர்த்துச் சொன்னால் அதில் தவறேதும் இருக்காது!

உரையாடியதில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி சில விஷயங்கள் இருந்தது மிகப் பெரிய நகை முரண்!


தனக்கும்  சோனியாவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை! அவநம்பிக்கை
யும் இல்லையாம்!

குதிருக்குள் எதுவுமில்லை! மன்மோகன் சிங் சொல்கிறார்! நம்புவதும் நம்பாததும் உங்கள் சாய்ஸ்!



 கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமாம்!
ஆ! ராசா என்று வாயைப் பிளக்க வைக்கிற அளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளம்பிய பின்னாலும் கூட, ராசா மீது  நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லையாம்! ராசாவை விசாரித்தபோது, அதற்கு முந்தைய பிஜேபி ஆட்சியில் நடைமுறையில் இருந்த  கொள்கையைத் தான் பின்பற்றியதாகச் சொன்னாராம்! அப்படிச் சொன்ன அமைச்சர் பிஜேபி அமைச்சரா அல்லது ஐமு கூட்டணிக் குழப்பத்தின் அமைச்சரா? அதையாவது சொன்னாராமா?

"Our government has been very clear right from the beginning that corruption is a problem. If I come to know that there is any involvement at any level, we will take action"
 

மன்மோகன் சிங் சொன்னதிலேயே  மிகப் பெரிய காமெடி இதுதான்!

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது வேறு விதமாக ஆகிவிட்ட அவலத்தைப் பரிதாபத்தோடு பார்க்க வேண்டியிருக்கிறது.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேடும் பிரதமர், தன்னுடைய மந்திரிகள்  மீது முடிவெடுக்கச் சிறிதும் அதிகாரமில்லாத டம்மிப் பீஸ் தான் என்று ஏற்கெனெவே நாடு முழுவதும் தெரிந்த ஒரு விஷயத்தைப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தித் தான் சொல்ல வேண்டுமா என்ன?

எல்லாவற்றையும் விட ஹிந்து நாளிதழில் காங்கிரஸ் கட்சிக்குள் குறைந்தபட்சம் மூன்று விதமான அரசியல்-தத்துவார்த்தப் போக்குகளாகப்   பிரிந்து செயல்படுவதாக சித்தார்த் வரதராஜன் எழுதிய செய்திக் கட்டுரை  இன்றைக்கு
இன்னொரு மிகப் பெரிய காமெடி! அந்தக் கட்டுரையில், ஒரே ஒருவிஷயத்தை மட்டும் சரியாகச் சொல்லியிருக்கிறார். ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின் மிகப் பெரிய பலவீனமே, திருமதி சோனியா முன்னால் நின்று கட்சியையோ, கூட்டணியையோ நடத்திச் செல்ல முடியாத பலவீனம் தான்! வெர்ஷன் ஒன்றில், பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை முன்னிறுத்தியதும்,, தான் ஒதுங்கிக் கொண்டு பெரிய தியாக சிகரமாகக் காட்டிக் கொண்டதும்  கொஞ்ச நாளிலேயே சாயம் வெளுத்துப் போனது.

அம்மா என்னவென்றால் திமுகவாக இருந்தாலும் சரி, மம்தாவாக இருந்தாலும் சரி எல்லோருடனும் அனுசரித்துப் போய் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறார்! தனயன் ராகுலோ, கட்சியை அடிமட்டத்தில் இருந்து உயிர்ப்பிக்க முயன்று கொண்டிருக்கிறார்! எதிரும்புதிருமான இந்த ஒரு விஷயமே காங்கிரஸ் எப்படிப் பட்ட குழப்பமான, பலவீனமான  தலைமையின் கீழ் இருக்கிறதென்பதைச் சொல்லும்!

காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி, பதவியில் இல்லையென்றால் பைத்தியம் பிடிக்கும்! 

ஆட்சியைப் பிடித்தாலோ காங்கிரஸ் கட்சிக்கு  கூட்டணிக் குழப்பங்களால் பைத்தியம் பிடிக்கும்!

வெட்டுத் தீர்மானத்தில் இருந்து தப்பிக்க மாயாவதியைக் குஷிப்படுத்தி, ஆதரவைப் பெற்ற தெம்பில் மன்மோகன் சிங் அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே தீருவது என்று, ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்! அதே நேரம், மாயாவதியுடனோ, முலாயம் சிங் யாதவுடனோ எந்தவிதமான பேரமும் இல்லையாம்! அப்படி எவராவது நினைத்தால் அந்த நினைப்பைத் தூக்கி எறியுங்கள் என்று வேறு திருவாய் மலர்ந்திருக்கிறார்!

தூக்கி எறியப்படவேண்டியது காங்கிரஸ் தான் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்! 

நம்பிக்கை ஒன்று தானே வாழ்வின் ஆதாரம்!?



 

சண்டேன்னா மூணு..! கூட்டணி..குழப்பம்..விருந்து..!

ந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா...? இன்னும் எத்தனை நாளம்மா..??
 
னிக்கிழமையன்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு -2 (குழப்பங்களின் மொத்த வடிவம்) பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்ததை ஒட்டி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதம மந்திரியின் இல்லத்தில் ஒரு விருந்து கொடுப்பதாக ஏற்பாடாகியிருந்தது. கூட்டணிக் குழப்பத்தின் "சாதனைகளை" எடுத்துச் சொல்லும் விதமாக இந்த விருந்து ஏற்பாடு செய்யப் பட்டது. மங்களூரில் நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, சோனியாவின் ஒப்புதலோடு இந்த விருந்து ஏற்பாடு ஒத்தி வைக்கப் பட்டிருக்கிறதாம்!

ந்த ஓராண்டில், ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு அப்படி என்னதான் பெரிதாக சாதித்து விட்டது? கொஞ்சம் பார்க்கலாமா?

விவசாயத் துறையை முதலில் எடுத்துக் கொள்ளலாம்.

நான்கு சதவீத வருட வளர்ச்சி வீதம் என்று இலக்கு இருக்கிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக, விவசாயத் துறை வளர்ச்சி  இரண்டு சத வீதத்தைக் கூட எட்டிப் பிடிக்க முடியவில்லை! விவசாயத் துறை அமைச்சர் பவார் என்ன செய்கிறார்? என்ன சொல்கிறார்? 

ரத் பவார், கிரிக்கெட் விளையாட்டில் புகுந்து "விளையாடுவதைத் தவிர" வேறு ஒன்றும் பெரிதாக சாதித்து விட்டதாக சொல்ல முடியாது! அவருடைய சொந்த மாநிலம், மகாராஷ்ட்ராவில், விதர்பா பகுதியில் விவசாயிகளுடைய தற்கொலை வருடாவருடம் அதிகரித்து வருகிறது. ஜனாதிபதிக்கும், பிரதம மந்திரிக்கும் நோட்டரி பப்ளிக் முன்னால் ஸ்டாம்ப் பேப்பரில், தாள முடியாத கடன் சுமையினால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழி தங்களுக்கு இல்லை என்பதை எழுதி வைத்து விட்டு  இந்தத் தற்கொலைகள் நடக்கின்றன என்பது அமைச்சருக்கும் சரி, அரசுக்கும் சரி தகவல் தெரியுமா, கவலைப் படுகிறார்களா என்பது பெரிய கேள்விக் குறிதான்!

ப்போது இந்த செய்திகள்?

வனாவது வேலை வெட்டி இல்லாத பத்திரிகைக்காரன் படம் ஆதாரத்துடன் செய்தி போட்டு விட்டால் மட்டும் போதுமா? செய்திகளையும், செய்தியாளர்களையும் எப்படி விலைக்கு வாங்குவது என்ற கலை அரசியல் வியாதிகளுக்குத் தெரியாதா என்ன! 


சென்ற தேர்தலில், ஆந்திராவிலும், மஹாராஷ்ட்ராவிலும் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டிய விஷயம் செய்தியாளர்களுக்கு, படிப்பவர்களுக்கு  வேண்டுமானால் ஒரே ஒரு நாள் செய்தியாக இருந்து விட்டுப் போய்விடலாம்! நாலாவது தூண் கதையில் எண்டமூரி வீரேந்திரநாத் இதைப் புட்டு வைத்திருப்பதை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்! அரசியல் வியாதிகள் தழைப்பதும் பிழைப்பதும்  இந்த மாதிரித் தில்லாலங்கடி வேலையில் தானே!

மல்நாத் என்று ஒரு அமைச்சர்! ஒவ்வொரு நாளும் இருபது கிலோமீட்டர் புதிய நெடுஞ்சாலையை அமைப்பது  என்பது இவர் அடித்துக் கொண்ட ஜம்பம்! தம்பட்டம்! எவ்வளவு புதிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டது என்பதை  அமைச்சரிடமே கேட்டால், தன்னுடைய தம்பட்டத்தில் ஒரு சிறுபகுதியைக் கூட நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்வார்.

சுசில் குமார் ஷிண்டே என்று இன்னொரு அமைச்சர்! மின்சார பற்றாக்குறை ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட மிக மோசம்! பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-2012) மின்சார உற்பத்தி, நிச்சயிக்கப் பட்ட இலக்கில் பாதி  கூட இருக்காது என்று தெரிகிறது! இதற்குப் பேர், திட்டமிடுதல்! ஐந்தாண்டுத் திட்டமாம்! திட்டமிடுகிறபடி எதுவுமே இங்கு எப்போதுமே நடக்காது என்பது தெரிந்துமே, குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க முடியாது என்று தெரிந்துமே இந்தக் கூத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது! 

ஊழல்! ஊழல்!! ஊழல்!!!

மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில் லொள்ளு யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, நம்மூர் பசுநேசன் மாதிரிக் காமெடிக்குப் பஞ்சமில்லை! வெர்ஷன் இரண்டில், சீன் மாறி, ரிவால்வர் ரீட்டா மாதிரி ஜோல்னாப் பையுடன் மம்தா பானெர்ஜி ரயில்வே அமைச்சராகப் பதவியேற்ற பிறகுதான்  ரயில்வேத் துறை சீரழிய ஆரம்பித்தது என்று சொல்வது கொஞ்சம் ஓவர்! அதற்கு முன்னாலும் அப்படித் தான் இருந்தது! என்ன, அம்மையார், அடிக்கடி ஜோல்னாப் பையுடன் மார்க்சிஸ்ட் கட்சியுடன் மல்லுக் கட்ட மேற்கு வங்கத்திலேயே டேரா போட்டு விடுவதில், லோகல் பாலிடிக்ஸில் மட்டுமே கவனம் செலுத்துகிற ஆப்சென்டீ அமைச்சர் என்ற பெயரை வாங்கியிருக்கிறார்!

மேற்கு வங்கத்து  பானெர்ஜிக்கு மட்டும் தான் ஆப்செண்டீயாக  இருக்கத் தெரியுமா? வாலொடு தோன்றிய மூத்த குடியின் கீர்த்தி என்னாவது? இங்கே ரசாயன, உரத்துறை அமைச்சரும் அப்படித்தான் இருக்கிறார்!  AWOL  Absent without Leave என்று சுருக்கமாகச் சொல்வார்கள்! மதுரைக்கார அமைச்சரும் அப்படி  AWOL தான் என்று நாடாளுமன்றத்திலேயே, சபாநாயகர் முறைப்படி அறிவித்துவிட்டு, அனுமதியுடன் வெளிநாடு போகவில்லை என்று அறிவிக்கிற அளவுக்குப் பிரசித்தம்!

தனால் என்ன! விவசாயிகளுக்கு உரம் கிடைக்கிறதோ இல்லையோ, உதிரிக் கூட்டணிக் கட்சிகளுக்கு நல்ல சத்துள்ள உரம் என்றைக்கும் இங்கே உத்தரவாதம்!

மீபத்தில் மாயாவதிக்கு அடித்த லக்கி ப்ரைஸ் மாதிரி, வெட்டுத் தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க, மாயாவதி மீது சி பி ஐ தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு வாபஸ் பெறப் பட்டதும், திரும்பின இடமெல்லாம் மாயாவதி சிலை தான் என்ற கேணத் தனமான ஊழலைத் தட்டிக் கேட்ட நிலையை மாற்றிக் கொண்டு தட்டிக் கொடுத்ததுமே நல்ல உதாரணங்கள்! வெர்ஷன் ஒன்றில், இப்படித்தான், சமாஜ் வாதி பார்டி அமர் சிங் மீதிருந்த வழக்கை எல்லாம் வாபஸ் வாங்கிக் கொண்டு,  இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தைக் கமுக்கமாக நிறைவேற்றிக் கொண்ட கூத்து நடந்தது!

3G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு நல்ல தொகை கிடைத்திருக்கிறது! சந்தோஷப் பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை! 2G ஏலத்தில் ஆ!ராசா என்று வாயைப் பிளக்க வைக்கிற விதத்தில் நடத்திய ஊழலைத் தட்டிக் கேட்கிற தைரியம் காங்கிரஸ் கட்சிக்கோ, டம்மிப் பீஸ் பிரதம மந்திரிக்கோ இருந்ததே இல்லை!
ஸ் எம் கிருஷ்ணா! கர்நாடகா மாநில முதலராக இருந்து, காங்கிரசின் கோஷ்டிக் கலாசாரத்தில் ஊறிப் போன புள்ளி! ஒரு கட்டத்தில் ரிடைர் ஆனா ஆசாமிகளுக்கு என்றே ஒதுக்கப் படும் கவர்னர் பதவியை கொடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் உட்கார்த்தி வைத்தார்கள்! என்ன போதாத காலமோ, இந்த மனிதர் இன்றைக்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்! ஐ மு கூட்டணிக் குழப்பத்தின் உச்ச பட்சமான காமெடியாக இதைச் சொல்லலாம் என்றால், சசி தரூர் டிவிட்டரில் டிவிட்டியே சண்டைக்கு வருவார்!

மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்றில் கொஞ்சம் நல்ல பேரை எடுத்திருந்த பிரபுல் படேல், இப்போது ஐ பி எல் விவகாரத்தில் சிக்கியதும் சமாளிக்கப் போராடிக் கொண்டிருப்பதும்  வெர்ஷன் டூவின் சாதனை என்று சொல்லலாமா?

னேகமாக, ஒரு சிலரைத் தவிர்த்துச் செயல்படுகிற அமைச்சர்களே ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 இல் இல்லை! செயல்படுகிற மாதிரித் தோற்றமளிக்கிற  சிலபேருடைய செயல்பாடுகள் எப்படியிருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போமா?

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்!

பில் சிபல்! மனிதவளத் துறையில் கொஞ்சம் அக்கறையோடு செயல் படுகிற மாதிரி ஒரு தோற்றம் இருக்கிறது. ஐ ஐ டி கள், ஐ ஐ எம் கள் , வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் என்று மனிதவளம், கல்வித் துறையில் அதிகக் கவனத்தோடு செயல்படுகிறார். எட்டு வருடங்களுக்கு முன்பே  பதினான்கு வயது வரை அடிப்படைக் கல்வியைப் பெறுவது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சட்டவரைவு இருந்த போதிலுமே கூட, இந்த வருடம் ஏப்ரல் முதல் தேதியன்று தான் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. 

னியார் கல்வி நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஒத்துழைக்கப் போகின்றன என்பதைப் பொறுத்துத் தான் இந்த அடிப்படை உரிமை அமலுக்கு வருமா, அல்லது ஏப்ரல் முதல் தேதி முட்டாள்கள் தினமாக இருப்பது போல ஜனங்களை முட்டாளடிக்கிற இன்னொரு அறிவிப்பாகவே நின்றுவிடுமா என்பது தெரிய வரும். 

ஜெயராம் ரமேஷ்! சுற்றுச் சூழல் விவகாரத்தில் இந்திய நிலையைத் தெளிவாக அறிவித்த, சொதப்பாமல் செயல் பட்ட அமைச்சர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரி விவகாரம் கொஞ்சம் சறுக்கல்! சீனாவைக் குறித்து  உள்துறை அமைச்சகம் அளவுக்கு அதிகமான சந்தேகக் கண்ணோடு செயல்படுவதாக, சில காலத்துக்கு முன்னால், சீனாவில் பேசி, பானா சீனா கண்ணைக் கசக்கிக் கொண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதும் அளவுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்தியது கொஞ்சம் பெரும் சறுக்கல்! 

ப்புறம்  அபிமானத்துக்குரிய சால்வை அழகரைப் பற்றிச் சொல்லாவிட்டால் எப்படி!

ஞ்சள் துண்டு தலைவர் ,நேற்றைய நாட்களில் பானா சீனாவை   "சிவகங்கைச் சின்னப் பையன்!" என்று அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாதவர் என்பதை நக்கலாகச்  சொன்னது சரியாகத் தான் இருக்கிறது!சால்வை அல்லது துண்டு எல்லாம் போர்த்திக் கொண்டதால் மட்டுமே  மஞ்சள் துண்டு போர்த்திக் கொண்டிருப்பவர்  போல சாமர்த்தியம் வந்து விடுமா என்ன?

ப்படி இந்தப் பதிவில் எழுதியிருந்ததை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்தே தீருவது என்று சால்வை அழகர் பானா சீனா கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது மாதிரித் தான் தெரிகிறது! 

தெலங்கானா தனிமாநிலக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படுவதாக நள்ளிரவில் அறிவித்தது... பிரச்சினை பெரிதாகி கொதிநிலைக்குப் போனவுடன் அதுவரை ஆட்டம் காண்பித்துக் கொண்டிருந்த பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணனையே ஆட்டம் காண வைத்து மேற்கு வாங்க கவர்னராகப் போக வைத்தது.... மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்யாவிடம்  ...the buck stops here  என்று இளைய தளபதி படத்துக்குப் படம் விரலை நீட்டி பன்ச் டயலாக் விடுகிற மாதிரி மாவோயிஸ்டுகள் பிரச்சினைக்கு மாநில அரசு தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், அல்லது பொறுப்பானவர் யார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டும் என்று பேசியது.... 

மாவோயிஸ்டுகளை ஓராண்டிற்குள் ஒடுக்குவேன் என்று சபதம் போட்ட அடுத்த மூன்றாவது நாளில் தண்டவதே என்ற இடத்தில் மாவோயிஸ்டுகள் 76 CRPF வீரர்களைப் படுகொலை செய்தவுடன், முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு  ராஜினாமா நாடகம் நடத்தியது.....  இப்படி ஒவ்வொரு செய்தியிலும் கலக்கிக் கொண்டிருப்பவரைப் பற்றி இங்கே சொன்னது நினைவு வருகிறதா?



க, குழப்பக் கூட்டணியின் ஓராண்டு நிறைவில் இந்திய ஜனங்கள் பெருமைப் பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை!



தேடியுனைச் சரணடைந்தேன்-தேச முத்துமாரி!
கேடதனை நீக்கிடுவாய்! கேட்ட வரம் தருவாய்!
 

ன்று ஆண்டவனைப் பிரார்த்திக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கிறதா?
 

தெரிந்தால் பின்னூட்டத்தில் வந்து சொல்லுங்களேன்!

பதிவின் தற்போதைய நிலவரம்: அப்டேட்!
 

ஐ மு கூட்டணிக் குழப்பன் வெர்ஷன் ஒன்று மற்றும் வெர்ஷன் இரண்டில் பிரதமர் பதவியை வகிக்கும் மன்மோகன் சிங் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு முறை கூடப் பத்திரிகையாளர்களைச் சந்தித்ததுமில்லை, அவர்களுடைய கேள்விகளை எதிர்கொண்டதுமில்லை என்பது சாதனையா, சோதனையா?

இன்றைக்கு இருபத்துநான்காம் தேதி முதல்முறையாக மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களைச் சந்தித்து  ஐ மு கூட்டணிக் குழப்பம வெர்ஷன் இரண்டின் சாதனை/சோதனை  ரிபோர்ட் கார்டைத் தரப்போகிறாராம்!


இந்திய அரசியலில், எல்லாமே இங்கே தமாஷாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது!

இங்கே இருக்கும் படங்கள் அனைத்தும் இணையத்தில் பெறப்பட்டவை! உரிமைகள் அனைத்தும் அதை உருவாக்கியவர்களுக்கே!




ஊமைச் சனங்களும்...சுரமும்....!

பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான்! மாவு ராகவன்களை வால் பையன்கள் மிரட்டின மாதிரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

நீண்ட நாட்களுக்கு
முன்னால் நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்து கொடுத்த புத்தகம், மருந்துக் கம்பனிகளின் தில்லுமுல்லு வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியே கொடுத்த புத்தகம் தி ஃபீவர்!  (The Fever by Dr.Robin Cook)

ப்போது படிக்கிற மாதிரிக் கற்பனை செய்தாலே கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், போரிஸ் பாஸ்டர்நாக் இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை, படிக்கப் படிக்க வெறுப்பேற்றிய புத்தகம் அது

ழுதியவர் ஒரு மருத்துவர்! நிறைய தொழில்நுட்ப விவரங்களை, சாதாரணமாகப் படிக்க வருகிறவர்களுக்குக் கொஞ்சமும் புரியாத வகையில் அடுக்கிக் கொண்டே போனது தான் கோளாறு! தவிர, விவரங்களைச் சொல்லிவிட்டு நாசூக்காகத் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்வதற்குப் பதிலாக நேரடியாகவே ஒரு பிரச்சாரம் மாதிரி இருந்ததும் ஆரம்பநிலை வாசகருக்குப் புரிவதும், பிடிப்பதும் மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

பொதுவாகவே துறை சார்ந்த கதைகளை எழுதுவதில் ஆங்கில எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். மிகக் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சி, அடிப்படை விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, புறம் அதில் இருந்து ஒரு கதைக் களம், கதாபாத்திரங்கள் உருவாக்குவது என்பது மேற்கே கதை எழுத முனையும் அத்தனை எழுத்தாளர்களுக்குமே உரித்தான ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது.  

ர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதும்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள், இயங்கும் விதம், நடைமுறைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அப்புறம் கதைக் களத்தை உருவாக்கிய விதத்தைச் சொல்லியிருக்கிறேன். புத்தகத்தைப் படிக்கும்போதே, ஒரு கதையைப் படிப்பதோடு, வங்கித் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிற மாதிரி இன்றைக்கும் பொருத்தமாக அந்தப் புதினம் இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் சொல்ல முடிகிறது!

முதலாவதாக, கதாசிரியர் வெறும் கதைதானே என்று அலட்சியமாக நம்மூர் பாலகுமாரன்கள் மாதிரி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகாமல், எழுத  எடுத்துக் கொண்ட துறையைப் பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, கதையோட்டத்தில் பொருத்தமான இடங்களில் அந்தத் தகவல்களை வாசகர்களும் தெரிந்து கொள்கிற மாதிரிக் கொடுத்திருந்தது!

ரண்டாவதாக, அவர் அந்தப் புதினத்தில் எடுத்துக் கொண்ட வங்கித் துறையின் பேராசை, நிர்வாகக் குளறுபடிகள், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும்  சாதாரண மக்கள் என்பது இன்றைக்கும் மாறாமல் அச்சு அசலாக அப்படியே திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பது!

க, அறிவியல் அல்லது ஏதாவது ஒரு துறை சார்ந்த புதினத்தை எழுதும் கதாசிரியருக்கு வெறும் கற்பனை மட்டுமே இருந்தால் போதாது! அவருக்கு அந்தத் துறையை பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்! தெரிந்து கொண்ட அத்தனை விஷயத்தையும் கதையில் அப்படியே கோர்த்து விட முடியாது,  துறை சார்ந்த விஷயங்களை மைஒயமாக வைத்து ஒரு சுவாரசியமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிற கதாபாத்திரங்களை உருவாக்கவேண்டும், உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமோ, அதேமாதிரி, துறை சார்ந்த தகவல்களைக் கதையின் ஓட்டமாகவும் அவசியமாகக் கலந்து படைக்க வேண்டும். அதில் வெற்றி காணும் போது, துறைசார்ந்த ஒரு புதினம் வெற்றிகரமாக, வாசகர்களால் கொண்டாடப் படுகிற விதத்தில் உருவாகிறது.

வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதையே மறந்து விட்டு எழுதிய மாதிரியிருக்கும் இந்தப் புதினத்தில், இந்த அடிப்படைக் கோளாறை மறந்து விட்டு வாசித்தால், உண்மையிலேயே மிடவும் அருமையான புத்தகம் தான்! சொல்லப் பட்ட விதம், உபயோகிக்கப் பட்ட தொழில்நுட்பச் சொற்கள், ரசாயனப் பெயர்கள் அதிகமாக இருப்பது, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது.

The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

சாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

ன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.



"This is without question one of the scariest books I’ve read in recent times. Ethan Watters, a San Francisco-based journalist and author who explores social trends for publications such as Wired and The New York Times Magazine, has written a chilling book on how multinational pharmaceutical companies export ideas about mental illnesses common in the US to make a killing from marketing the drugs for such conditions in countries which had no concept of such things as depression.

Mental illnesses popular in the US, such as post-traumatic stress disorder (PTSD), anorexia and depression, in particular, are now spreading across the world with the speed of contagious diseases, says Watters, who went about investigating why this was happening although different cultures view mental illnesses through a complex prism of religious, scientific and social attitudes. In short, the West, primarily the US, has been homogenising the way the world goes mad."

Even if you’ve read The Truth About the Drug Companies, The $800-Million Pill or Selling Sickness, Watters’ book comes as an eye-opener. Among the more disturbing disclosures is his detailing of GSK’s dishonesty on Paxil. In-house assessments of the drug that have come to light through lawsuits and government inquiry reports show the drug has not been effective. He quotes a company memo that reported that results of Paxil were “insufficiently robust” and urged GSK to “effectively manage the dissemination of these data in order to minimise any potential commercial impact”.

பிசினெஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் மூன்று நாட்களுக்கு முன்னால், வியாதிகளை  ஏற்றுமதி செய்து கொழுத்த லாபம் சம்பாதிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களைப் பற்றி எழுதப் பட்ட இன்னொரு புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் இது.


முழுதாய்ப் படிக்க இங்கே.

ந்தப் பக்கங்களில்  போலி மருந்து, கலப்படம் செய்யப்பட மருந்துகளை அரசு மருத்துவ மனைகளிலேயே வழங்கப்பட்டதை மத்தியப் புலனாய்வுத் துறை திடீர் சோதனை நடத்தியதில் கண்டுபிடித்த விவரத்தைப் பற்றிய  பதிவாக எழுதிய பிறகு, சேகரத்தில் இருந்த ராபின் குக் எழுதிய  The Fever  புதினத்தை தேடியெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

யிர் காக்கும் மருந்துகள் என்று நம்பித்தான், மருத்துவர்கள், மருந்துக் கடைக் காரர்கள் சொல்வதை நம்பித்தான், என்னவென்றே தெரியாத ரசாயனக் கலவைகளை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். கலப்படம் செய்யப் படாத சுயம்பிரகாசமாக இருக்கும் நிலையிலேயே, இந்த ரசாயனக் கலவைகள், ஒரு
வலியைக் குணப் படுத்தி வேறு பல திருகுவலியைக் கொண்டு வந்து சேர்ப்பதாகத் தான் இருக்கின்றன.

தாரணமாக, இதய நோய்க்குப் பரிந்துரை செய்யப் படும் மருந்துகளில் பெரும்பாலானவை, காலப் போக்கில் சிறுநீரகத்தைக் காலி செய்து விடுவதாகத் தான் இருக்கின்றன. மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காகக் கொடுக்கப் படும் ஆஸ்பிரின், வயிற்றில் ஓட்டை போட்டு விடுவது  சர்வ சாதாரணமான பக்க விளைவு. 

ப்படி அலோபதி மருத்துவத்தில், ரசாயன மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி எந்த மருந்துக் கம்பனியும், பரிந்துரை செய்யும் மருத்துவரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் எச்சரிக்கை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, தடுப்பு வழிகளைச் சொல்வதே பெரும் பாலான தருணங்களில் இல்லை. மாறாக  கொசு அடிக்க பீரங்கி மாதிரி, ஓவர் டோஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதே நிறைய இடங்களில் நடக்கிறது.

ந்த லட்சணத்தில், இந்தத் திருநாட்டில், அரசின் அலட்சியத்தால், காலாவதியான மருந்துகளை மறுபடி தேதி பேக்கிங் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்புவதும், மருந்துகளிலுமே கூடக் கலப்படமும், போலி லேபிள்களும் நிறையவே புழக்கத்தில் இருப்பதை ஏதோ அந்த நேரத்துத் தலைப்புச் செய்தியாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடாமல் எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறோமா?

மைச் சனங்களாகவே இருந்துவிடுவது தான் சௌகரியமாக இருக்கிறது என்று  இலவச டீவீக்களில், காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி, மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்ப்பதிலேயே பிறவிப் பயனை அடைந்து விட்ட திருப்தியில் இருந்துவிடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்? ங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 



 

வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! என்றைக்கு விடிவு வரும்?


உயிர் காக்க மருந்தா? அல்லது உயிரைப் பறிக்கும் எமனா?

போலி மருந்துகள் விவகாரத்தில்  அரசு,சுகாதாரத் துறை காட்டும் அலட்சியத்தைப் பற்றிய தினமணி தலையங்கத்தைத் தொட்டு சில நாட்களுக்கு முன்னால், ஒரு பதிவு இந்தப் பக்கங்களில் வெளியாகியிருந்தது. உபயோகிக்க வேண்டிய தேதி காலாவதியான மருந்துகளை மறுபடி, லேபில்கள், பாகிங், தேதி மாற்றுதல் முதலான மோசடிகளைச் செய்து புழக்கத்தில் விட்ட ஒரு கும்பலைக் கைது செய்த விவரம் அன்றைய தேதிக்குப் பரபரப்பாகப் பேசப் பட்ட போதிலும் கூட, ஜனங்களின் மறதி, கையாலாகாத் தனம் இவைகளின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களால் நன்றாகவே தொடர்ந்து பயன்படுத்தப் பட்டு வருகிற விவரத்தை மத்திய அரசுப் புலனாய்வுத் துறை இந்த மாதம் பன்னிரண்டாம் தேதி முதல் பத்தொன்பதாம் தேதிவரை ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களுர் நகரங்களில் நடத்திய சோதனைகளில் கண்டு பிடித்திருக்கிறதாம்!

பரிசோதனைக்கு அனுப்பப் பட்டதில், சாதாரணமாகக் காய்ச்சல், தலைவலி, ஃப்ளூ,  சளி,  வயிற்றெரிச்சல் (அசிடிடி) இவைகளுக்காகக் கொடுக்கப் படும் மருந்துகளில் கலப்படம் செய்து போலியாகத் தயாரிக்கப் பட்டதாகத் தெரிய வந்துள்ளதாக சிபிஐ மேற்குப் பிராந்திய இணை இயக்குனர் ரிஷி ராஜ் தெரிவித்திருக்கிறார். இன்றைய ஹிந்து நாளிதழில், சென்னையிலும்  இது மாதிரி சோதனை நடத்தப் பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.



போலிகள்! போலி லேபில் தயாரித்து நூறு எம் எல் மருந்து பத்தொன்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை!  லிங்கில் முழுச் செய்தியும் இருக்கிறது!

உள்ளூர்க் கலப்படக் கும்பல்கள் போதாதென்று இதிலும் சீனப் பூச்சாண்டி திரும்பின பக்கமெல்லாம் தெரிகிறது! இணையத்தில் விவரங்களைத் தேடியபோது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் மருந்துகளின் தரம், நம்பகத் தன்மை எதுவும் தெரியாமலேயே இறக்குமதி செய்யப் பட்ட விதம் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட விவரமும் தெரிய வந்தது!

இரண்டு மாதங்களுக்கு முந்தையதுதான் என்றாலும் தினமணி நாளிதழின் தலையங்கத்தின் இந்தப் பகுதிகள் இப்போதும் கூட பொருத்தமாக இருக்கின்றன. மாநில அரசின் அக்கறையின்மை அல்லது அலட்சியம்,தமிழகத்தின் சுகாதாரத் துறையைத் தொட்டு அந்தத் தலையங்கம் இருந்தாலும், இப்போது தெரிய வந்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது. மெட்குரு தளத்தில் வெளியாகி இருக்கும் செய்தி கொஞ்சம் விரிவாகவே, இப்படிக் காலாவதியான மருந்துகள்;, கலப்படம் செய்யப் பட்டுப் போலியாகத் தாரிக்கப் பட்ட மருந்துகள் மத்திய அரசின் சுகாதாரத் துறை நடத்தும் இருபது மருத்துவ மனைகள், மற்றும் அரசு மருத்துவ மனைகளில் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதைச் சொல்கிறது.

இன்னொரு செய்தி சொல்வது இப்படி!


The arrests were made following searches conducted by the CBI at various pharmaceutical companies and hospitals in Mumbai, Delhi, Chennai, Nagpur, Pune and Bhopal from where samples of drugs were taken and sent for analysis. The CBI has also registered four cases in Delhi and Chennai against suppliers of spurious medicines.

CBI sleuths nabbed Gurbachan Singh and Navin Gadekar, proprietors of JP Herbal Pharmacy and Nalini Ayurvedic Company, respectively. “When we tested the drugs, it was found that the medicines were adulterated and spurious,” said Rishiraj Singh, CBI joint director (western region). “The medicines collected are ones prescribed for common flu, cold, fever, headache and acidity,” he added. 

Samples of 23 different types of medicines from 14 manufacturing companies have been collected and sent to the laboratory for further chemical analysis. Searches were also conducted at the office of the Central Government Health Scheme (CGHS) at Sion. CGHS is the central distribution point for all 28 central government dispensaries across the city.

CBI sleuths have smelt the presence of a large-scale syndicate in the business of producing sub-standard drugs. “This needs to be probed by multiple agencies as we have raided only central government hospitals and chemists. We suspect this is a larger racket,” said Singh. 

இப்போதுதான் மோப்பம் பிடித்திருக்கிறார்களாம்!


இப்போது தினமணி நாளிதழில் இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே  எழுதிய இந்தத்  தலையங்கம் சொல்வதைக் கொஞ்சம் கவனமாகப் படியுங்கள்! தமிழக அரசு, சுகாதாரத்துறை என்று வரும் இடங்களில்தமிழகம் மட்டுமே அல்லாமல், மத்திய, மாநில அரசுகள், கூட்டணிகள், அரசு இயந்திரத்தின் பொறுப்பற்றதன்மை, கையாலாகாத் தனம் அல்லது சாதாரண மக்களின் மீது காட்டும் அலட்சியம் என்று மாற்றிப் படித்துப் பாருங்கள்! அப்படியே கச்சிதமாகப் பொருந்துகிறதா?
 

மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக்  கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும்  மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.

மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்?

நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன?  

பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?

ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?

எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின் பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.

மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப் படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத் துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்?  


42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே?  அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?"
 .............
இங்கே நடக்கும் பெரும்பாலான கோளாறுகளின், ஊழலின் ஊற்றுக் கண்ணாக எது இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பெரும்பான்மை ஜனங்கள் ஊமைச் சனங்களாகவே குறுகி நின்று விடுவதில் தான் எல்லாமே ஆரம்பிக்கிறது என்பது புரிய வரும்! 

 

ஒரு தவறு நடக்கும்போது அதைக் கண்டிக்காமல் வாய் மூடி ஊமைகளாக நின்றுவிடுகிறவர்களுக்கு நியாயம் எப்படிக் கிடைக்கும்? பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதெல்லாம் சரி! அந்தப் பேயை விரட்டியடிக்க வேண்டாமா?

சுதந்திரம் என்பது யாரோ ஒரு காந்தித் தாத்தாவும், மாமா நேருவும்
ஏதோ பெட்டி கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்த பஞ்சு அல்லது சவ்வு மிட்டாய் அல்ல! முற்போக்குவாதிகள் வகுத்த பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்களில் அப்படித்தானே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

சுதந்திரம், உரிமைகள் என்பன அவற்றின் அருமையை உணர்ந்து பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே நிலைக்கக் கூடியது.




அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டவருக்குச் சுதந்திரம் என்றுமில்லை!


ஊமைச் சனங்களாகவே இருந்துவிடப் போகிறோமா அல்லது விழித்துக் கொள்ளப் போகிறோமா?

கொஞ்சம் சொல்லுங்களேன்!