"கடவுளின் சாபமும்" திரு.டோண்டு ராகவனின் 'யோம் கிப்பூர்' பதிவுகளும்!


"இஸ்ரேலே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அவசரமாக தனது வீட்டில் கூட்டப் படும் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் கோல்டா மெயர் அமைதியாக அதே நேரத்தில் குமுறும் கொந்தளிப்புடனும் கோபத்துடனும் மிகத் தெளிவாக, தீர்மானமாக அவர் பேசும் வசனங்கள்தான். அந்த இடத்தை பல முறை ரீ வைண் செய்து பார்த்திருப்பேன்.

சுய மரியாதையும், தேச நலனில் அக்கறையின்மையும், ஓட்டுப் பொறுக்கி அரசியலும், ஊழலும், கையாலாகத்தனமும், பேடித்தனமும், போலித்தனமும், போலி மதச்சார்பின்மையும், ஒழுங்கீனமும், பேராசையும், லஞ்ச லாவண்யமும், ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளைத் தலைவர்களாக, பிரதமராக, ஜனாதிபதிகளாக, முதலமைச்சர்களாக, அதிகாரிகளாக, அமைச்சர்களாக, பெறப்பற்ற ஒரு சபிக்கப் பட்ட தேசத்தின் குடிமகன் என்ற முறையில் , எனக்கு கோல்டா மெயர் பேசுவதாக வரும் அந்தக் காட்சிகள் கடுமையான பொறாமை உணர்வையும்., கழிவிரக்கத்தையும், சுய வெறுப்பையும், ஆத்திரத்தையும், கோபத்தையும், ஆற்றாமையும், விரக்தியையும் ஒருங்கே ஏற்படுத்தின.

நாம் என்ன பாவம் செய்தோம் கீழ்த்தரமான பிறவிகளை நம் தலைவர்களாகப் பெற ? இந்தியாவுக்கு ஏன் இந்த சாபம் ?
சதிகாரர்களையும், தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களையும், வெளிநாட்டினரையும் நம் தலைவர்களாகப் பெற்றிருப்பது யார் போட்ட சாபம் ? “

26/11 மும்பை நகரின் மீது பாகிஸ்தானி தீவீரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப் பற்றி இணையத்தில் செய்திகளை, வலைப் பதிவர்களின் கோபத்துடன் வெளிப்பட்ட குமுறல்களைப் படித்து வந்த போது தான் வஜ்ரா என்கிற புனைபெயரில் எழுதி வரும் வலைப்பதிவரின் இந்த பதிவு February 4, 2007இல் வெளியான ஒரு திரைப்பட விமரிசனத்தைப் படிக்க நேர்ந்தது.

கடவுளின் கோபம்

தீவீரவாதிகள் ஏற்படுத்திய சேதத்தை விட முதுகெலும்பில்லாத இந்திய அரசியல் வியாதிகளும். அவர்களுக்கு சலாம் போட்டே தங்கள் கல்லாவை நிரப்பிக் கொள்ளும் அதிகார வர்கமும் ஏற்படுத்தியிருக்கிற சேதம் மிக அதிகம்.

மிகுந்த வருத்தத்தோடும், ஆற்றாமையோடும் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், தமிழில் வலைப்பதிவர்கள் சிலர் மும்பை சம்பவங்களுக்கு இந்து தீவீர வாதிகள் தான் காரணம் என்று கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்-தேசத்தின் தலைவிதியை நொந்து கொண்டே செய்திகளை, வலைப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது தான், மேலே சொன்ன வலைப்பதிவு கண்ணில் பட்டது.

இந்த வலைப்பதிவர் யூதர்களின் சில சமய சடங்குகளைப் பற்றியும் சில பதிவுகள் இட்டிருப்பதை திரு டோண்டு ராகவன் அவர்களின் யோம் கிப்பூர் என்ற தலைப்பிலான பதிவுகளில் தெரிந்து கொண்டு அவற்றையும் படித்ததில், எழுந்த எண்ணங்கள் இவை.

யோம் கிப்பூர்- யூதர்களின் சடங்கு பற்றி வஜ்ரா வின் வலைப்பதிவு இங்கே

"....In the seventh month, on the tenth day of the month, you shall afflict your souls, and you shall not do any work ... For on that day he shall provide atonement for you to cleanse you from all your sins before the LORD.
-Leviticus 16:29-30

யோம் கிப்பூர் என்பது மன்னிப்புக் கேட்கும் நாள் (day of attonement) என்று ஹீப்ரூவில் அர்த்தம். அது ஒவ்வொறு ஆண்டும் செப்டம்பர் அக்டோபர் மாத காலத்தில் (ஹீப்ரூ நாட்காட்டியில் டிஷிரி 10 ம் நாள்) வரும்.
இது யூதர்களின் மிக முக்கிய மத விடுமுறை நாளாகும்"

குற்ற உணர்வு, தவறுகளுக்குப் பரிகாரம் தேடுதல், இவையெல்லாம் குரங்கிலிருந்து மனிதன் ஆன பின்பு ஏற்படுகிற பரிணாம மாற்றங்கள். பொத்தாம்பொதுவாக மனம் என்றும், கொஞ்சம் வேதங்கள் உபநிஷத்கள் துணையோடு பார்த்தோமேயானால் வெறுமனே மனம் என்று சொல்வது பல படித்தரங்களுடையதாக இருப்பதை அறிய முடியும்.

யோம் கிப்பூர் மாதிரியே, வெவ்வேறு மத நம்பிக்கைகளில், இப்படி தன்னுடைய குற்றங்களை உணர்ந்து, தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சிகள், சடங்குகளாக இருப்பதைப் பார்க்க முடியும். இந்தியாவில், அந்தணர்கள் ஆவணி அவிட்டம் என்று பூணூல் அணிகிற சடங்கில் ஒரு பகுதியாக காமோகார்ஷீத் மந்திர ஜபம் இருக்கும்.
.
வேதம் விதித்த சடங்குகளைச் செய்வதற்குத் தகுதியுள்ளவனாக பூணூல் அணியும் சடங்கு இருக்கிறது. அதற்கும் பூர்வாங்கமாக, தன்னுடைய தவறுகளை உணர்ந்து, காமம் என்னை இந்த தவறைச் செய்யத் தூண்டியது, குரோதம் இந்த தவறைச் செய்யத் தூண்டியது என்ற பொருளில் வரும் இந்த மந்திர ஜபம், வெறும் சடங்காக மட்டும் செய்யாமல் பொருளுணர்ந்து செய்தால், உள்ளார்ந்த அனுபவத்தைப் பெறுவதற்குத் துணையாக இருக்கும். இல்லையென்றால், வஜ்ரா அவர்கள் தன் வலைப் பதிவில் சொல்லுகிற மாதிரி வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். இங்கே தமிழ் நாட்டில், ஏதாவது ஒரு பண்டிகை, விடுமுறை என்று வந்து விட்டால், தொலைக்காட்சியின் முன் அமர்ந்து, "நாள் முழுவதும் எங்கள் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்....பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்" என்று கூவிக் கூவி முட்டாளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களே அது போல ஆகி விடும்.

முந்தைய பதிவில் கிழக்கு பதிப்பகம் திரு பத்ரியின் வலைப் பதிவைத் தொட்டு எழுதியதன் தொடர்ச்சியாகப் பார்த்தோமானால், உயிர் தோன்றியது ஒரு தற்செயலான விபத்து அல்ல.மனம் என்பதும் குற்ற உணர்வும் மிருக நிலையில் இல்லை. தன்னைக் காத்துக் கொள்வதற்காகவும், இன விருத்திக்காகவும் சில அடிப்படை உணர்வுகள் மட்டுமே மனிதனுக்குக் கீழ் நிலையிலுள்ள உயிரினங்களுக்கு இருக்கின்றன. மனிதனாகப் பரிணமித்த பிறகும் கூட, மிருகங்களிலிருந்து சுவீகரித்துக் கொண்ட மிருகவுணர்வுகளில் இருந்து விடுபடுவதில்லை. அங்கே தான் மனம் என்பது, அகங்காரமாக, மிருகங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிற கருவியாக, தன்னை ஒரு அடையாளத்தோடு காட்ட ஆரம்பிக்கிறது.

இப்படி மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற "நான்" என்கிற தன்முனைப்பு ஒரு கால கட்டம் வரையில் அவசியமாகத்தான் இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், அதுவே வளர்ச்சிக்குத் தடையாகி விடுகிறது. இதை நாத்திகத் தன்மையோடு கூடிய அறிவியல் சிந்தனை புரிந்து கொள்வதே இல்லை.

"மனிதன் தன் வாழ்வில் சந்திக்கிற ஒவ்வொரு முரண்பாடும், ஒவ்வொரு துயரமும் ஒரு பெரிய ஒருமைக்கான முன்னேற்பாடாகவே அமைவது இறைவனது சித்தம். சடமாக இருந்த நிலையிலிருந்து உயிர் தோன்றியது. உயிரிலிருந்து மனம் தோன்றியது. சடமாக இருந்த நிலையில் உயிர்மை மறைக்கப்பட்டதாக இருந்தது போலவே உயிர்மை என்பது மனத்தின் மறைக்கப்பட்ட வடிவமாக இருக்கிறது. மனத்தையும் மிஞ்சிய பெருநிலையை அடைவதற்கே கேள்விகள் எழுந்தன.

தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்வதில் மனிதனுக்கு இயல்பாகவே எழுந்த ஆர்வம் அல்லது விழைவு, அதை ஒட்டி எழுகிற தடைகள், அதையும் மீறி அடுத்து என்ன, அடுத்தது என்ன என்கிற தேடல் மனித குலம் தோன்றிய நாளில் இருந்தே தொடங்கி விட்டது.”

Evolution என்கிற தலைப்பின் கீழ் ஏற்கெனெவே ஸ்ரீ அரவிந்தர் அருளிய நூலின் சுருக்கமாக
இந்தப் பதிவுகளில் evolution என்கிற தலைப்பில், முந்தைய சில பதிவுகளில் பார்த்திருக்கிறோம்.

யோம் கிப்பூர் - இந்தப் பதிவின் தலைப்புக்குப் பொருத்தமாக --
தன் தவறுகளை உணர்தல், மன்னிப்புக் கோருதல், பரிகாரம் செய்ய முனைதல், திரும்ப அதே தவறைச் செய்யாதிருத்தல் இப்படிப் படிப்படியாக உள்ளொளியைக் காண முயலும் ஒரு பிரார்த்தனையை நீண்ட நாட்களுக்கு முன் யாஹூ! 360 பதிவுகளில் குறிப்பிட்டதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

My whole life has been spent practicing this and practicing that
With nothing in my hands to show for it,
No attainment.
From now on, avoiding the miserable path of knowing much,
And missing the one thing I need
Why not go on the path of knowing the one thing that frees all?


மிகுந்த நன்றியோடு இங்கே

முழுமையடைகிற வரை, ஒவ்வொரு நாளுமே யோம் கிப்பூர் தான்! அதன் உண்மையான பொருளில்!

செயற்கை உயிர்! என்ன கொடுமை பத்ரி சார் இது!



“All problems of existence are essentially problems of harmony”

-Sri Aurobindo


திரு டோண்டு ராகவன் அவர்களது வலைப் பதிவு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த போது, திரு பத்ரி சேஷாத்ரி எழுதிய இந்தப் பதிவு குறுக்கே புகுந்து சிந்தனையோட்டத்தில் ஒரு புது வரவாக இருந்தது.


இங்கே அதைப் படிக்கலாம்


இவனுடைய மூத்த சகோதரர்களில் இரண்டாமவர், பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். இரவு தூங்கப் போவதற்கு முன்னால், அண்ணன் தம்பிகள் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுத் தான் தூங்கப் போவோம். ஒரு அண்ணன் என்று மட்டும் இல்லாமல், ஒரு ஆசானாகவும் இவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்த நாட்கள் அவை. அப்படி ஒரு நாளில், ஒரு பிரெஞ்சு உயிரியல் பேராசிரியர் எழுதிய ஒரு ஆய்வுப் புத்தகம் ஒன்றைப் பற்றிப் பேச்சு வந்தது phénomène of man என்பது புத்தகத்தின் பெயர் என்பது நினைவுக்கு வருகிறது. இந்த நூலில், எப்படி உயிர் தோன்றியது என்பதை மிக ஆழமாகச் சொல்லியிருப்பார். ஒரு செல் என்பதாகத் தொடங்கி அது தன்னைத் தானே இரண்டாகப் பகுத்துக் கொள்வதில் இருந்து பரிணாம வளர்ச்சி எப்படி விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதை ஒரு விஞ்ஞானப் பார்வையில் சொல்லியிருந்தாலும், புத்தகத்தைப் படிக்கும் போது ஒரு ஆன்மீகச் சிந்தனையோட்டமே வெளிப்படுவதாக இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது.

ஒரு விஞ்ஞானப் பார்வையில், உயிர் என்பது உருவானதே ஒரு விபத்து தான், எப்படி, நத்தைச்சிப்பிக்குள், ஏதோ ஒரு தூசு புகுந்துகொள்ள அதைச் சுற்றி அந்த நத்தை உருவாக்குவதே முத்து என்பது போல, இந்த பூமியில், ஏதோ ஒரு விபத்தாக அல்லது திட்டமிடாத, காரணமில்லாத, தற்செயலான ஒன்றாக உருவானதுதான் உயிர். இதைப் படைத்தவன் என்று ஒருவனும் இல்லை, இதற்கு மேல் ஒன்றுமில்லை என்று ஒரு வெற்றிடத்தைமுன்வைக்கிறது.

சிந்திக்கத் தொடங்கிய நாளிலிருந்தே மனிதன் இந்த கேள்விகளைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறான். எத்தனையோ விடைகளைப் பார்த்தாயிற்று, ஆனாலும் இந்தக் கேள்விக்கு உண்மையான விடை இன்னமும் கிடைக்கவில்லை. கேள்விகள் கேள்விகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த உலகமும், உயிரும் படைக்கப் பட்டது ஒரு தற்செயலான விபத்து இல்லை. இவைகளைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். இந்தப் படைப்புகளுக்குள்ளும், வெளியிலுமாக பரந்து விரிந்திருக்கிறான். படைக்கப் பட்ட அனைத்திலும் அவனிருக்கிறான்; அது போலவே படைக்கப் பட்ட எல்லாமும் அவனது சரீரமாகவும் இருக்கின்றன. இதை உள்ளே உணர்ந்து ஆன்மீக நெறியாக, கால காலமாக மனிதனுக்கு உணர்த்தப் பட்டிருக்கிறது.

அறிவியல் ஒரு எல்லைக்குட்பட்ட அளவீடுகளை பயன் படுத்துகிறது,வெளிப்படையாக தெரிபவை மட்டுமே உண்மை என்று சொல்கிறது, நேற்று சரியாக இருந்த அளவீடுகள் இன்று ஏற்புடையதாக இல்லாமல் போய், மறுபடி வேறு ஒரு அளவீடுகளைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு புதிய முடிவைச் சொல்கிறது.
இந்த நேரத்தில் ஸ்ரீ அரவிந்த அன்னை, அனுபவங்களைப் பெறுவது தொடர்பாகச் சொன்ன ஒன்று இந்த விஷயத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும்.
"So it is a vast programme. The first steps are these: to collect oneself, try to be very quiet and see what is happening within, the relations between things, and what is happening inside, not just live only on the surface.

There. That's all?"

-The Mother, Collected Works of the Mother, Vol. 7, pp.77-80.

உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

வேதம் தமிழ் செய்த மாறன் அருளிச் செய்த இந்த பாசுரங்களைப் பாருங்களேன்.


இந்த வலைத்தளத்தில் திருநா.கண்ணன் இந்த பிரபஞ்சம் படைக்கப் பட்டது எப்படி, பரிணாம வளர்ச்சி இவற்றைப் பற்றி, ஆழ்வார்களுடைய அருளிசெயல்களில் இருந்து மிக அழ்காக விவரித்திருக்கிறார்.

ஆத்திகனோ, நாத்திகனோ, இரு தரப்புமே ரொம்பவும் அலட்டிக் கொள்வதில்லை. எதையும் ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் கூடத் தங்களுடைய முயற்சி கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.

யாராவது எதையாவது சொல்லி விட்டுப் போனதை, அப்படியே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தான் மிக சுலபமான வழியாக இருதரப்பினருக்குமே இருப்பது தான் விந்தையிலும் பெரிய விந்தை.

திரு M.P பண்டிட்அவர்கள் ஒரு இடத்தில், சிலர் பக்தி என்கிற பெயரில் சோம்பேறிகளாக இருப்பதைப் பற்றியும், ஸ்ரீ அரவிந்த அன்னை வேலை எதுவானாலும், அதுவே இந்த சரீரம் இறைவனுக்குச் செய்கிற மிகப் பெரிய வழிபாடு என்று சொல்லியிருப்பதையும் இன்றைய தியானத்திற்கு எடுத்துக்கொள்வோமா?
“As both Sri Aurobindo and Mother point out, repeatedly, most of us are an idle lot. Under the cover of devotional surrender, we want God to do everything for us. But God would appreciate at least a minimum enabling effort on our part. In the measure in which we apply ourselves in this direction, the real meaning of life becomes evident."

-Shri M.P.Pandit

“Let us work as we pray, for indeed work is the body's best prayer to the Divine”

-The Mother

டோண்டு ராகவனின் சில பழைய பதிவுகள்


சில வலைப் பதிவுகள் மேலோட்டமாகப் பார்க்கையில் சாதாரணமாகத் தோன்றினாலும், படிப்பவர் மனதில் ஒரு புதிய சிந்தனையோட்டத்தை ஏற்படுத்திவிடும். மாற்றத்திற்கான முதல் படியாக இந்த சிந்தனையோட்டமே இருக்கும். அந்த வகையில் திரு.டோண்டு ராகவனின் வலைப்பதிவில் சில பழைய பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, யோம் கிப்பூர் என்ற தலைப்பில், தவிர்க்க வேண்டிய நபர்களைப் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு, அவருடைய சொந்த அனுபவம், யோம் கிப்பூர் என்ற தலைப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமல், அவருக்கும் ஒரு போலிப் பதிவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில், ஒழிந்து போ என்கிற ரீதியில் 'பெருந்தன்மையாக' இவர் விட்டு விடுவதை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தாலும், என்றாலும் கூட இந்தப் பதிவின் தாக்கத்தில் எனக்குச் சில வெளிச்சக் கீற்றுக்கள் புலப்பட்டன.

இங்கே படிக்கலாம்

பழக்கங்களின் அடிமையாகவே இருக்கும் போது, மாற்றம் என்கிற சொல் காதில் விழுந்தாலே நமக்கு அடிவயிற்றைப் பிசைய ஆரம்பித்து விடுகிறது.

ஆனால் பிரபஞ்ச சக்தி நம்மைச் சும்மா விடுவதில்லை. கன்றுக்குட்டி வரமாட்டேனென்று நான்கு கால்களையும் விறைத்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் போது, உடையவன் ஒரு குச்சியினால் கொஞ்சம் அடி, கொஞ்சம் கொஞ்சல் இப்படி தாஜாபண்ணுகிறார் போலேயும், செம அடி கிடைக்கும் என்று பயம் காட்டுகிறார் போலேயும், கூட்டிச் செல்வது போல, நம்முடைய பகுத்தறிவு, விதண்டாவாதங்கள். கோழைத்தனங்கள், வீர தீர சாகசங்கள் இப்படி எல்லாவற்றையும் தாண்டி, மாற்றம் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஒரு செல் என்கிற நிலையிலிருந்து, இன்றைக்கு ஆறறிவு படைத்த, பகுத்தறியும் தன்மை உடையதாய் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ,

மாற்றம் என்பது ஏன் பல பேருக்குக் கசக்கிறது என்று யோசிக்கையில் தான், நிறைய விஷயங்கள் புலனாகின்றன.

முதலில் பயம்- ஏற்படப்போகும் மாற்றம் எப்படியிருக்குமோ, நம்மை என்ன செய்யுமோ என்கிற பயம்.

அடுத்து பழக்கங்களின் பிடியில் சிக்கி ஒரு மாதிரி அடிமைத்தனத்திற்குப் பழக்கப் பட்டு விட்ட நிலையில், நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேனே என்கிற மாதிரி சோம்பேறித்தனம்- நான் ஏன் மாற வேண்டும் நான் மாறவே மாட்டேன் என்கிற பிடிவாதமாக மாறுகிற நிலை.

அதற்கும் அடுத்து, மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல், அதை எதிர்த்தே தீருவேன் என்கிற பிடிவாதத்தின் உச்சகட்டம்.இடையில் எத்தனை எத்தனையோ படி நிலைகள்.அத்தனைக்குள்ளிருந்தும், பிரபஞ்ச சக்தி நம்மை ஒரு உறுதியான திருவுரு மாற்றத்திற்குத் தயார் செய்து கொண்டே இருக்கிறது.

முப்பது வருடங்கள் ஒரு பொதுத்துறை வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஏகப்பட்ட முரண்பாடுகளை, மாற்றத்தைச் சகித்துக் கொள்ள முடியாத மன நிலைகளை, நிர்வாகத்தின் தலை முதல் கால் வரையில் பார்த்து சலித்து, ஒரு கட்டத்தில் இங்கே வேலை செய்வதை விட மாடு மேய்க்கிற வேலை கிடைத்தாலும் அதுவே சொர்க்கம் என்று முடிவெடுத்து வெளியே வந்தாயிற்று.

வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கையில் தான், மாற்றம் என்பது இருமுனையிலும் கூர்மையான கத்தி, எவரெவரோ,எது எதுவோ மாறவில்லை என்று போராடிக் கொண்டிருந்த போது,தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞையை இழந்து நிராயுதபாணியாய் நின்றது புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது போல, வெற்றிகளை விட தோல்விகளே மாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும்.

அன்னையைத் தேடி என்கிற தலைப்பில் [In Search of the Mother] யாஹூ மடலாடற்குழு மிக அருமையான ஆன்மீகப் பணி ஆற்றி வருகிறது.
வேலை என்று ஏதோ இன்னதென்று தெரியாமலே நாம் செய்து வருவது எப்படிப் பட்டதாக இருந்தால் நலம் பயக்கும் என்பதற்கான வழிமுறையை ஸ்ரீ அரவிந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் இருவரது உரையாடல்களிலி இருந்து மேற்கோள் காட்டி இன்று வந்திருந்த மடல்களில் இருந்து இன்றைய சிந்தனைக்கு:

WORK AS A TEST

Yes, obviously, that is one great utility of work that it tests the nature and puts the sadhak in front of the defects of his outer being which might otherwise escape him

- Sri Aurobindo

"There is no bad work - there are only bad workers. All work is good when you know how to do it in the right way. Everything. And it is a kind of communion. If you are fortunate enough to be conscious of an inner light, you will see that in your manual work, it is as if you called the Divine down into things; then the communion becomes very concrete, there is a whole world to be discovered, it is marvellous."

- The Mother

மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே இருக்கிறது.
நானே நானோ? மெல்ல மெல்ல மாறினேனோ?
எத்தகைய சூழ்நிலை, வேலை என்பதல்ல-அதை எப்படிப் பட்ட மனோபாவத்துடன் நாம் செய்கிறோம் என்பதே வேலையின் உண்மையான பயனை தீர்மானிக்கிறது. குப்பை அள்ளுவதானாலும், அரசாட்சி செய்வதானாலும் மாற்றத்தின் அடிப்படை விதி இது தான்.
இந்த ஞானம் வந்த பிறகு வேறென்ன வேண்டும்?

கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!


கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா!

கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா!

புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? இப்படி ஒரு அருமையான வரிகளுடன் ஒரு பழைய திரைப்படப் பாடலை நீங்கள் கேட்டிருக்கக் கூடும்.

Oneness என்கிற ஆன்மீக ஒருமைப்பாடும், சாந்தமும் அவ்வப்போது மனிதனைக் கொஞ்சம் எட்டிப் பார்த்து விட்டுப் போகின்றனவே தவிர, நிரந்தரமாகத் தங்குவதில்லை என்பதை நம்மைச் சுற்றி நடக்கிற நடப்புகளே சொல்கின்றன.

சமாதானத்தைப் போதிக்க வந்த மதங்களே, சமாதானத்தைக் கெடுக்கும் கருவிகளாக இருப்பதையும் பார்க்கிறோம். ஸ்தாபனப் படுத்தப் படுகிற எந்த ஒரு கோட்பாடும் நீர்த்துபோய் நேர் எதிர் மறையாகச் செயல்படுவதையும் காலத்தின் கோலமாக நாம் அறிந்தே இருக்கிறோம்.

புத்தன், ஏசு, காந்தி இன்னும் ஏராளமான எத்தனையோ நல்லவர்கள் இந்த பூமிக்கு வந்து போன பின்னாலும், இந்த பூமியில் ஒரு தொடர்ச்சியான அமைதியைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் தொடங்கி வைத்த பல அமைப்புக்களும், அவர்களுடைய நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

ஒரு இடதுசாரிச் சிந்தனையாளனாக, தொழிற்சங்கவாதியாக, மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று கொந்தளித்து கொந்தளித்து வாழ்க்கையின் நிதர்சன உண்மையைப் புரிந்து கொள்ள நீண்ட காலமாயிற்று.

மாற்றம் என்பது வெளியே இருந்து வருவதில்லை. மாற்றம் என்பது, ஆயுதம் ஏந்தியோ, ரத்தம் சிந்தியோ ஏற்படுவதில்லை. மாற்றம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்தாக வேண்டிய ஒன்று.

மாற்றத்தின் விதை ஒவ்வொரு அணுவிலும் ஏற்கெனவேயே விதைக்கப் பட்டுவிட்டது என்பதும், அது வெளிப்பட உரிய நேரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் புரிய போகாத ஊருக்கெல்லாம் போய், கால் சலித்து, மனம் சோர்ந்து, எங்கே போகிறோம் என்னவாகப் போகிறோம் என்ற கேள்விகளெல்லாம் எங்கும் எதிரொலித்து, விடை காணாமல் சலித்து விழுந்த போது தான் "இனி என் செயலாவது ஒன்றுமில்லை! இறைவா! உனது சித்தத்தின் படியே நடந்தேறட்டும்' என்று இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிய பிறகு தான்

"மா சுச:" "கவலை வேண்டாம்.”

கண்ணனின் ஆரமுதாக, அபயம் தந்து உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட்டு விடு. என்னையே பற்றிக்கொள். சகல பந்தங்களில் இருந்தும் உன்னை விடுவிக்கிறேன் என்ற வார்த்தைகளின் பொருள் அப்போது தான் புரிந்தது.

சத்ப்ரேம் என்கிற அடியவருடன் ஸ்ரீ அரவிந்த அன்னை தினமும் உரையாடியதன் தொகுப்பாக ஏறத்தாழ 6000 பக்கங்களுடன் 13 தொகுதிகளில் "The Agenda" வெளியாகி இருக்கிறது.

அதில் இருந்து ஒரு நாள் உரையாடலை இன்றைய தியானத்திற்கு எடுத்துக் கொள்வோமா?

(Mother reads a passage from "Essays on the Gita," which she wants to publish in the next Bulletin:)

No real peace can be till the heart of man deserves peace; the law of Vishnu cannot prevail till the debt to Rudra is paid.

To turn aside then and preach to a still unevolved mankind the law of love and oneness? Teachers of the law of love and oneness there must be, for by that way must come the ultimate salvation. But not till the Time-Spirit in man is ready, can the inner and ultimate prevail over the outer and immediate reality.

Christ and Buddha have come and gone, but it is Rudra who still holds the world in the hollow of his hand.

And meanwhile the fierce forward labour of mankind tormented and oppressed by the powers that are profiteers of egoistic force and their servants cries for the sword of the Hero of the struggle and the word of its prophet."

(Essays on the Gita, XIII.372)

It is the exact portrait of the situation.

Last time I said how close the thing was, and then ... (gesture like a ground swell) immediately the exact opposite rises: everyone goes awry, some are sick, others are nasty, yet others are furious ... oh! And everything grates and cries and ... Every time that something draws near, "Ah, here it is, we have caught the thing," immediately, vrrrm!

Very well.

We haven't paid our debt yet, as Sri Aurobindo says.

What can we do?

... Go on. Be more enduring than the opposition. More enduring.

Sri Aurobindo said, "Victory belongs to the most enduring." That's obvious.

We only have to last. "

-The Mother ”Agenda” August 25, 1965

நிந்தை பிறரைப் பேசாமல் நினைவிலும் கெடுதல் செய்யாமல்..!


பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

தைத் திங்கள் முதல் நாள்.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் மிக உற்சாகமாகக் கொண்டாடப் படும் திருநாள்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாள்.

"இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்"
என்று பாவை நோன்பிருந்து கண்ணனையே பெரும் பேறாகக் கொள்ளும் வைணவம் தான் வளர்த்த தமிழில் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலையின் முப்பதாவதும் முடிவானதுமான பாசுரம் ஓதும் நாள்.
இன்றைய சிந்தனையாக, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இயற்றிய "சூரியன் வருவது யாராலே" என்ற தலைப்பிலான கவிதையோடு தொடங்குவோமா?


சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்
தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று
மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்! எத்தனைமீன்!
எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும் தர ஒரு கர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.


அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம் நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

"முட்டாள்களோடு பயணம் செய்வது எனக்குப் புதிய அனுபவம் ஒன்றுமில்லை!"


சுவாமி விவேகானந்தர் வெளிநாட்டில் சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்த நேரம். ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். உடன் பயணம் செய்த வெள்ளைத்தோல் மாந்தருக்கு, கூடப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருஇந்துத் துறவியைப் பார்த்து இளப்பம்- மிக ஏளனமாகத் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். காவித்துணி அணிந்தவருக்கு எங்கே ஆங்கிலம் புரியப் போகிறது என்ற அலட்சியம் வேறு.

சிறிது நேரம் கழித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் சுவாமியின் தோற்றத்தின் வசீகரத்தினால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் உரையாடி விட்டு சென்றார். உடன் பயணம் செய்து, சுவாமியை ஏளனம் செய்தவர்களுக்கோ திகைப்பு-ஒரு பக்கிரி இவ்வளவு கண்ணியமான ஆங்கிலத்தில் உரையாடுகிறாரே என்று.

"சுவாமி, உங்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமே, அப்புறம் ஏன் நாங்கள் உங்களை ஏளனமாகப் பேசிய போது, அமைதியாக இருந்தீர்கள்?" என்று வினவினார்கள்.

சுவாமி புன்முறுவலோடு விடையளித்தார்:

"முட்டாள்களோடு பயணம் செய்வது எனக்குப் புதிய அனுபவம் ஒன்றுமில்லை!"

இன்று சுவாமி விவேகானந்தர் அவதரித்த நாள்.

இந்திய அரசு வங்காள மக்களைத் திருப்தி செய்ய, சுவாமி விவேகானந்தருடைய பிறந்த நாளை, தேசீய இளைஞர் நாளாக அறிவித்ததோடு சரி. வங்காளத்தில் பிறந்த இந்த ஞான சிம்மம், இந்த தேசத்திற்கு என்ன செய்தியைத் தாங்கி வந்தார் என்பதைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

ஏதாவது செய்யப் போய் , மதச் சார்பின்மை அலங்காரம் கலைந்து விடாதா?

ஜாதி வோட்டு வேண்டுமென்றால், ஒரு தபால் தலை வெளியிடுவது, ஜாதித்தலைவர் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிப்பது, செத்தவர் சிலையை முச்சந்திக்கு முச்சந்தி வைத்து அவர் பிறந்த நாள், இறந்த நாள் இப்படி ஏதாவது ஒரு நாளில் ஊர்வலமாகப் போய், மாலை போட்டு, மறக்காமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்து, செய்திகளில் விளம்பரம் தேடிக் கொள்கிற அரசியல் வியாதிகளை விட்டுத் தள்ளுங்கள்!

விவேகானந்தருடைய நேரடி வாரிசாகத் தங்களை அடையாளம் காட்டிக் கொள்கிற சில நபர்கள் செய்வதாவது, சுவாமிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
ஞான சிம்மமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர் சொன்னதில் ஒன்றிரண்டு மேற்கோள்களைப் பார்ப்போமா?

“It is our own mental attitude which makes the world what it is for us. Our thought make things beautiful, our thoughts make things ugly. The whole world is in our own minds. Learn to see things in the proper light. First, believe in this world, that”

"“The moment I have realized God sitting in the temple of every human body, the moment I stand in reverence before every human being and see God in him - that moment I am free from bondage, everything that binds vanishes, and I am free.”

அடுத்தவர் என்ன செய்கிறார் என்பது நமக்குத் தேவையில்லாத ஒன்று. நாம், ஞான சிம்மமாக ஆன்மீக ரகசியங்கள் அனைத்தையும், மிக வெளிப்படையாகவும், தெளிவாகவும் உரைத்த சுவாமி விவேகானந்தருக்கு செய்கிற மிகப் பெரிய அஞ்சலி, அவர் உபதேசங்களை, உள்வாங்கிக் கொள்வது தான். மாற்றம் நம்மிடத்தில் இருந்து தான் தொடங்கியாக வேண்டும்.

“YOU know, I may have to be born again, you see, I have fallen in love with mankind.”

இவ்வளவு கருணையுடன் நமக்குச் சொன்னவர் வேறு யார் உளர்?

சின்ன விஷயங்களெல்லாம் கூட பெரிய அற்புதங்களாக மாறக் கூடும்


Golden Drops of Light

" All is her play with the Supreme; all is her manifestation of the mysteries of the Eternal, the miracles of the Infinite.
All is she, for all are parcel and portion of the divine Conscious-Force."

Sri Aurobindo
“The Mother”


நமக்கு வெளியே எந்த அளவுக்குப் பிரச்சினைகளும், நெருக்கடியும், துயரமும் இருக்கிறதோ அதே அளவுக்கு நமக்கு உள்ளேயே அதற்கான காரணங்களும் இருக்கும் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை. நம்முடைய தற்போதைய சூழ்நிலைகளை நாமே தான் உருவாக்கிக் கொள்கிறோம் என்பது அதன் உட்கருத்து.

நமக்கு இருக்கும் மிகப் பெரிய பலவீனமே, இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற அற்புதமான வரங்களை அறியாமல் இருப்பது தான். சில சோதனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்த பிறகு தான், நாம் கவனிக்கத் தவறுகிற நிறைய விஷயங்களுக்கு நாம் நன்றி செலுத்த மறந்திருக்கிறோம் என்பதே கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பிக்கிறது. உண்மையில் இறைவன் நமக்கு வேண்டியது அனைத்தையும் கொடுத்திருக்கிறான். நாம் தான், அவற்றின் அருமை தெரியாமல் உதாசீனப் படுத்தி வந்திருக்கிறோம் அல்லது கிடைத்ததன் அருமையை உணராமல், பறப்பதை வேண்டி ஏங்கித் தவித்து, கிடைத்ததையும் நழுவ விட்டிருக்கிறோம்.

இன்று ஒரு ஆங்கில வலைப்பதிவைப் படித்துக் கொண்டிருந்தபோது, நன்றியுணர்வின் மகத்தான சக்தியை பற்றிச் சிந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.

காலையில், சூரிய உதயத்தின் அழகை ஒரு ஈடுபாட்டோடு ரசித்திருக்கிறோமா? காலை எழுந்தவுடன் காபி வேண்டும் என்கிற நினைப்புத்தான் முதலில் வருகிறதே தவிர, இன்றைய காலைப் பொழுது, நல்லபடியாக விடிந்தது என்று எப்போதாவது இறைவனுக்கு நன்றி சொல்ல முயற்சித்திருக்கிறோமா?

கை, கால், அவயவங்கள் எல்லாம் ஒரு வலி, விபத்து இல்லாமல் இந்த நாட்போது நிறைவு பெற்றதே என்று என்றைக்காவது, ஆண்டவனே உனக்கு நன்றி என்று நினைத்தாவது பார்த்திருக்கிறோமா?

மிகச் சாதாரணமாக நினைத்து அலட்சியப் படுத்தும் சின்ன சின்ன விஷயங்கள் கூட, ஒரு தருணத்தில் எவ்வளவு பெரிய அருட்கொடையாக இருந்திருக்கிறது, எந்த அளவுக்கு நாம் நன்றி மறந்தவர்களாக இருக்கிறோம் என்பதெல்லாம், எப்படி சின்ன விஷயங்களெல்லாம் கூட பெரிய அற்புதங்களாக மாறக் கூடும் என்பதை உணர்த்துகிற தருணமாக இவனது வாழ்வில் நடந்து கொண்டே இருக்கிறது. நோவு தீர்ந்த பின்னும், அசதி கொஞ்சம் இருப்பது போல சில அனுபவங்கள் நடந்து முடிந்த பின்னாலும், அதன் கசப்பு மிச்சமிருக்கத்தான் செய்கிறது.

பழைய பழக்கங்களிலிருந்து முழுமையாக விடுபடும் போது தான் கசப்பும் நீங்கும். முந்தைய பதிவான "கேட்டதும் கொடுப்பவனே" யின் தொடர்ச்சியாக, இது பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைக் கொஞ்சம் பார்ப்போம்:

To sit down in inert passivity and say, "If I am to have faith I shall have it, the Divine will give it to me", is an attitude of laziness, of unconsciousness and almost of bad-will.

For the inner flame to burn, one must feed it; one must watch over the fire, throw into it the fuel of all the errors one wants to get rid of, all that delays the progress, all that darkens the path.

If one doesn't feed the fire, it smoulders under the ashes of one's unconsciousness and inertia, and then, not years but lives, centuries will pass before one reaches the goal.

One must watch over one's faith as one watches over the birth of something infinitely precious, and protect it very carefully from everything that can impair it.

In the ignorance and darkness of the beginning, faith is the most direct expression of the Divine Power which comes to fight and conquer.

The Mother

Col.Works Vol.9 pp352

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே!


நம்மில் பெரும்பாலோருக்கு, வாழ்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கிற வரங்களை கவனிப்பதை விட, குறைகளையே பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு பொதுவான குணம் இருக்கும். குறைகளையே பார்த்துக்கொண்டிருக்கிற பொழுதில், கைக்கு வர வேண்டிய எவ்வளவு அருமையான தருணங்களை, வாய்ப்புக்களைத் தவற விட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது, ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்படும் போது, காலம் கடந்திருக்கும்.

This courage, this heroism which the Divine wants of us, why not use it to fight against one's own difficulties, one's own imperfections, one's own obscurities? Why not heroically face the furnace of inner purification so that it does not become necessary to pass once more through one of those terrible, gigantic destructions which plunge an entire civilisation into darkness?

இந்த வாக்கியங்களை மறுபடியும் படிக்கும் போது, ஸ்ரீ அரவிந்த அன்னை, "இனி என்ன நடக்கும்? இனி என்ன நடக்கும்?" என்று எல்லாத்திக்குகளிலும் இருந்து வரும் கேள்விகளுக்கு எவ்வளவு சுருக்கமான தீர்வைச் சொல்லியிருக்கிறார் என்பது புரிகிறது.

நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாக் குழப்பங்களுக்கும் ஒரே தீர்வு, புடமிட்ட தங்கம் போல, நம்மிடமிருக்கும் அழுக்கு, உலகியலிலான பலவீனங்களில் இருந்து விடுபட்டு, உன்னதமான ஆன்மீக அனுபவத்திற்குத் தயாராவது மட்டும் தான் என்கிறார் ஸ்ரீ அன்னை.

இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன?

சூழ்நிலைகள், பழக்கங்களின் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபட வேண்டுமானால், மாற்றத்திற்கான போராட்டம் தனக்குள்ளேயே நிகழ்ந்தாக வேண்டும். நமக்குள் இருக்கும் பலவீனங்களை எதிர்த்துப் போராடுவதில் முனைப்பு வேண்டும். தங்கம் தீயிலிடப்படும் போது அதிலிருக்கும் தூசு நீங்கித் தூய்மையாவது போல, நமக்குள்ளேயே அந்த ஞான நெருப்பு வெளிப்பட வேண்டும். இத்தகைய வீரத்தைத்தான், திருவுருமாற்றத்திற்கு ஆயத்தமாவதைத்தான், இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான். அழுகுணி ஆட்டத்தை விட்டு விட்டு, இறைவனது விளையாட்டில் ஆர்வத்தோடு பங்கேற்கிறவர்களாக ஆக வேண்டும்.

ஆனால், நமக்கு இது புரிவதே இல்லை. அல்லது, மாற்றத்தை மறுப்பது, முரண்டுபிடிப்பது நமக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. எதற்காகப் பிரயத்தனப்பட வேண்டும், இப்படியே இருந்து விட்டுப் போகலாமே என்றிருப்பது பழக்கங்களின், மிருகவுணர்வின் அடிமைகளாகவே நாம் இன்னமும் இருப்பதைத் தான் காட்டுகிறது.

இந்த மாற்றம், எல்லோருக்கும் சாத்தியப் படுவதில்லை. அதற்காகத் தான், இறைவன் சில முன்னோடிகளை, ஆசான்களை நமக்குத் தந்திருக்கிறான்.

பரந்த ஹிந்து சாம்ராஜ்யத்தில் துலுக்கர்களின் ஆக்கிரமிப்பு ஒரு துறவியின் மனதைச் சுட்டது.அதே நேரம்,தங்கள் தேசத்தில் அத்துமீறி நுழைந்த அந்நியர்கள், கோவில்களை இடித்தும் கொள்ளையடித்தும் செய்த அக்கிரமங்களை, ஒரு தாய் மனக் குமுறல்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த இருவரின் எண்ண அலைகள், துலுக்கரை நடுங்கச் செய்த ஒரு மகா வீரனைத் தந்தது. சத்ரபதி சிவாஜி உருவாக்கிய குதிரைப்படையின் வேகம், அதைப்பற்றி நினைக்கும் போதே,மொகலாயர்களின் அடிவயிற்றைக் கலக்கியது. மொகலாய சாம்ராஜ்யம் சிதறுண்டு, பாளையக்காரனும் , ஜாகிர்தாரனுமாகக் குறுகிப் போய், இவர்களுக்கிடையே நடந்த ஆதிக்கப் போட்டியில், குள்ள நரி போல உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை முன்னூறு வருடங்கள் அடிமைத்தளையில் வைத்திருந்தார்கள்.

சுதந்திர வேட்கை கொண்ட சில பேர் வீறு கொண்டேழுந்தார்கள். பலரோ, அடிமையாகவே இருப்பதில் மெத்தச் சுகம் கண்டு அதை எதிர்த்தார்கள். ஆனாலும், சுதந்திர வேட்கை கொண்ட மிகச்சிலரிடத்தில் தார்மீக நெறியும், ஒழுக்கமும் இருந்ததனால், ஜனங்கள் அவர்களையே பின்பற்றினார்கள். அடிமைப் படுத்தியவன், தானாகவே வெளியேறுகிற சூழலையும் உருவானது.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தைநம்பும்யாரும் சேருவீர் (கத்)

ஒண்டி அண்டிக் குண்டுவிட்டு உயிர்பறித்த லின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டை யொன்று புதுமையே (கத்)

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை ஏற்றும் ஆசையில்லதாய் (கத்)

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கை யொன்றும் பண்ணுமாசை யின்றியே (கத்)...

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களின் கவிதை சொல்லும் உண்மையையும் இன்றைய த்யானத்திற்கு எடுத்துக் கொள்வோமா?

ஸ்ரீ அரவிந்த அன்னை இதைத் தான்

..so that it does not become necessary to pass once more through one of those terrible, gigantic destructions which plunge an entire civilisation into darkness? “

என்று குறிப்பிடுகிறார்.

India is the country where the psychic law can and
must rule and the time has come for that here. Besides, it is the only possible salvation for this country whose consciousness has unfortunately been warped by the influence and domination of a foreign nation, but which, in spite of everything, possesses a unique spiritual heritage.”
The Mother

2.8.1970

"இனி என்ன நடக்கும்?"


In Search of The Mother என்ற தலைப்போடு சில அன்பர்கள் கூடி யாகூ குழுமத்தில் ஒரு ஆன்மீகக் கலந்துரையாடல்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக, இந்த மடலாடற்குழுவில், மிக அருமையான பதிவுகள், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை குறித்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. Huta Hindocha என்கிற ஒரு அடியவர், தன் இளம் பிராயத்திலேயே ஸ்ரீ அன்னையிடம் ஈர்க்கப் பட்டு, அன்னையின் அருட் குழந்தையாக ஆனவர். அவருடைய ஓவியங்களையும், எழுத்துக்களையும், சித்திர வடிவில் Salutations series என்ற தலைப்பில் இந்த மடலாடற்குழுவில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது வரை 10 பதிவுகள் இந்த வகையில் வெளியாகி இருக்கிறது.

எந்த ஒரு விஷயத்தையும், அதன் தன்மை, தரத்திற்கேற்ப உத்தமம், மத்திமம், அதமம் என்று மூன்றாகப் பிரித்துச் சொல்வது அனேகமாக நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.தன்னலமில்லாத, தன்முனைப்பில்லாத செயல்கள் எல்லாவற்றையும் உத்தமமாக, ஆன்மீக நெறி நமக்குச் சொல்கிறது.
கொஞ்சம் சுயநலம், தன் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக என்று, அதனால் பிறருக்கு ஒரு தீமையும் இடையூறுமில்லாத செயல்களை மத்திமம் என்றும், தன்முனைப்போடு, பிறருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு செய்யப் படுகிற செயல்களை அதமம் என்றும் அறநெறி நமக்குப் பலப்பல வழிகளில் உணர்த்துகிறது.
பஸ்மாசுரன் என்றொருவன், எவரும் மேற்கொள்ளமுடியாத கடுமையான நியமத்தோடு நீண்ட காலம் தவம் செய்தான். இறைவனும் அவனுக்கு வரம் கொடுக்க முன் வந்தான். தன் கையை எவர் தலை மீது வைத்தாலும், அவர்கள் பிடி சாம்பலாகிப் போய் விட வேண்டும் என்பது அவன் வேண்டிய ஒரே வரம். அவனது கடுமையான முயற்சிக்குப் பலனை அளித்தாகவும் வேண்டும், அதே நேரம் அவனது கெட்ட எண்ணம் அவனுக்கே ஒரு பாடத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் திருவுள்ளம் கொண்டான்.
வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்து, பெற்ற வரத்தைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தைஅவனுக்குள் தோற்றுவித்தான். கடைசியில், தான் பெற்ற வரமே அவனை பிடி சாம்பலாக்கியது.
"வரமே சாபமாகிற நிலை" என்பது இது தான்.
You are
what your deep, driving desire is.
As
your desire is, so is your will.
As
your will is, so is your deed.
As
your deed is, so is your destiny. “
(Brihadaranyaka Upanishad, 4.4.5)

ஒருவனை, அவனது ஆழ்ந்த உள்ளுணர்வுகளே உருவாக்குகிறது.அப்படிஎழும் ஆசையின் தூண்டுதலில் இருந்து எண்ணம் உருவாகி, எண்ணம் எப்படியோ அதன்படியே செயல்களுமாகி, அந்தச் செயல் வழியே விதியாக உருவாகிறது. என்று பிரகதாரண்ய உபநிஷத் மிகத் தெளிவாகச் சொல்கிறது.
"எண்ணம் போல் வாழ்வு" என்று சித்தர் மரபில் குறிப்பிடுவது இதைத்தான்.
கடவுள் பாதி, மிருகம் பாதி சேர்ந்து செய்த கலவை அல்ல மனிதன்.
இப்போது நம்மைச் சுற்றிக் கொழுந்து விட்டெரியும் பிரச்சினைகளைப் பாருங்கள்.
தன்னுடைய மத நம்பிக்கைகளை ஏற்க மறுப்பவர்களை அழிப்பதே புனித யுத்தம் [ஜிகாத்] என்று ஒரு புறம்,
தங்கள் மேல் ராக்கெட் வீசித் தாக்குவதை நிறுத்த வேண்டும் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதன் மூலமே அதை சாத்தியமாக்க முடியும் என்று காசா பகுதியில் கொலைவெறித் தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கிற யூதர்கள் ஒரு புறம். [பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் தேர்தலை ஒட்டியே, இஸ்ரேல் அரசு, இந்த வீர சாகசங்களை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.]
தங்களுடைய உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், இந்தியா மீது வெறுப்பையும், பயங்கரவாதத்தையும் தூண்டுவதன் மூலமே பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிற பாகிஸ்தான், வங்காள தேசம், மியான்மார், நேபால், போன்ற தோற்றுப்போன அரசியல் குழப்பங்களும் [இவற்றை ஒரு அரசு என்ற கட்டமைப்பாகச் சொல்ல முடியாது]
எதிரி யார், எங்கே பலவீனம் இருக்கிறது என்பது தெரிந்தும் கூட, தங்களுடைய சுய லாபங்களுக்காக, ஓட்டுப் பொருக்குவதற்காகவும் கூட, கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கிற இந்திய அரசை நடத்திக் கொண்டிருக்கிற கட்சிகளும்,
பேராசையினாலேயே மிகப் பெரிய பொருளாதாரச் சரிவுகளை ஏற்படுத்திய அமெரிக்க வங்கிகளும், திவாலாகிப் போக வேண்டிய நிறுவனங்களை மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்துக் காப்பாற்றமுயலுகிற அமெரிக்கப் பொருளாதாரச் சரிவும், உலகெங்கும்அதன் தாக்கமும்
இப்படிப் பலதிசைகளிலும் இப்போது மிக அதிகமாக எழும் ஒரே கேள்வி:
"இனி என்ன நடக்கும்?"
http://blog.360.yahoo.com/blog-mW9mlZY6aa8IAGvA4oby77T8vlT5gobS?p=713
செப்டம்பர் 13, 2006 இல் yahoo.360 இல் அன்னையின் உரை ஒன்றைப் பதிவு செய்ததை இப்போது மீண்டும் பார்க்கலாமா?

The Decisive Turning Point

At the moment we are at a decisive turning point in the history of the earth, once again. From every side I am asked, "What is going to happen ?" Everywhere there is anguish, expectation, fear.
"What is going to happen?"
There is only one reply: "If only man could consent to be spiritual­ised."
And perhaps it would be enough if some individuals became pure gold, for this would be enough to change the course of events..it We are faced with this necessity in a very urgent way.
T'his courage, this heroism which the Divine wants of us, why not use it to fight against one's own difficulties, one's own imperfections, one's own obscurities? Why not heroically face the furnace of inner purification so that it does not become necessary to pass once more through one of those terrible, gigantic destructions which plunge an entire civilisation into darkness?

This is the problem before us. It is for each one to solve it in his own way.

The Mother, CWM Vol.9. pp.74
உண்மையான வீரம், தனக்குள்ளே இருக்கிற பலவீனங்களை, அழுக்கை எதிர்த்துப் போராடுவதில் தான் இருக்கிறது. தன்னை மாற்றிக் கொள்ள முடியாத கோழைகள் தான், உலகை மாற்றம் செய்யப் போகிறேன் என்கிற பெயரில் யுத்தங்கள், மதத்தின் பெயரால் நிகழ்த்தும் வன்முறைகள் இப்படிப் பட்ட செயல்களில் ஈடுபடுவார்கள்.

Golden Drops of Light


“There are two powers that alone can effect in their conjunction the great and difficult thing which is the aim of our endeavor,- a fixed and unfailing aspiration that calls from below and - a supreme Grace from above that answers”

Sri Aurobindo
”The Mother”

"கேட்டதும் கொடுப்பவனே! கிருஷ்ணா! கிருஷ்ணா! கீதையின் நாயகனே!"


TMS இன் கணீரென்ற குரலில் இந்தப் பழைய பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கேட்டேன். யோசித்துப் பார்க்கையில் கொஞ்சம் சிரிப்புத் தான் வந்தது.

கேட்டவுடன் கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் கடவுள், கடவுளாக இருக்க முடியாது. கொஞ்சம் விவகாரமான கவிஞரிடம் மாட்டிக் கொண்டால், அவர் இப்படி சாபம் கொடுத்து விடக் கூடும்:

"கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்

காதலித்து வேதனையில் வாட வேண்டும்"

ஒரு துறுதுறுப்பான சிறுவன். அரவிந்த் என்று பெயர். ஒரு நாள் அவனிடம் கொஞ்சம் கடுமையாக அதட்ட வேண்டியிருந்தது. பொடியனுக்கு வேகம் அதிகம். "பார், பார், எங்க அப்பா கிட்ட சொல்லி உன்னை என்ன பண்றேன் பார்" என்று சவால் வேறு. உண்மையில் "அவங்க அப்பா புகாரை கேட்டு அப்புறம் என்ன செய்வார்" என்றெல்லாம் யோசிப்பதில்லை.கைக்குழந்தையாக இருக்கும் போது, தாயாரின் புடவை பக்கத்தில் இருந்தாலே, தாயார் பக்கத்தில் இருப்பதாக சமாதானம் கொள்ளும். பொடிசாக இருந்தால், "எங்க அம்மா கிட்டே அல்லது எங்க அப்பா கிட்டே சொல்லி...."இப்படி டயலாக் விட்டே ஆறுதல் கொள்ளும்.

ஆனால், வளர்ந்த பிறகும் கூட நம்மில் பலர் இப்படிப் பொடியனின் மனப் பக்குவத்தில் தான் இருக்கிறோம். கடவுளிடத்தில் நாம் வைக்கும் வேண்டுகோள் பலவும், ஒரு பிரார்த்தனையாக இல்லாமல், பேரம் பேசும் சடங்காகவே மாறிப்போவதை நாம் உணர்வதே இல்லை.

வீட்டுப் பிள்ளைக்குத் தேர்வு நெருங்குகிற நேரம். பிள்ளைக்குப் படபடக்கிறதோ இல்லையோ, பெற்றவர்களுக்கு வந்து விடும். கோயிலென்றால், குறிப்பிட்ட சாமிகளுக்கு மவுசு வந்து விடும். தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் போய், கொண்டைக் கடலை மாலை, அர்ச்சனை இப்படி உபசாரங்களோடு வேண்டுகோள் வைக்கப் படும். இயேசு அழைக்கிறார், இயேசு என்னோடு வாக்கிங் வருகிறார், இயேசு என்னோடு பேசுகிறார் என்கிற மாதிரியான கூட்டங்களில் பிள்ளைகள் பரீட்சையில் கவனமாக இருக்க விசேஷ ஜெபங்கள் செய்யப் படும். இதில் எந்த விதமான முதலீடும் இன்றி ஆதாயம் பெறுவது தேங்காய் பழம் விற்பவரும், அர்ச்சகரும், ஜெபக்கூட்டங்களை "ஊழியமாகவே" நடத்துபவர்களும் தான் என்பது கூட உரைக்காத அளவுக்குத் தான் நம் விழிப்பு இருக்கிறது.

அப்படியானால், ஒரு பலனை உத்தேசித்துச் செய்யப் படும் வேண்டுகோள்கள், பிரார்த்தனைகள் வேண்டுமா,வேண்டாமா? அவை பலன் தருமா, தராதா?

ஆரம்ப நிலையில், ஒரு காரியத்தை அல்லது பலனை எதிர்பார்த்துச் செய்யப் படும் வேண்டுகோள்கள் சரிதான். ஆனால், ஒரு கட்டத்தில், தன்னுடைய விருப்பத்திற்காக என்பது போய் தெய்வ சித்தத்தின் படியே என்று உயர வேண்டும்.

ஸ்ரீ அரவிந்த அன்னையிடம் எதை எதையோ வேண்டி வரும் அன்பர்களுடைய அபிலாஷைகள் வெகு சீக்கிரமாகவே நடந்தேறிவிடும் என்பது அனுபவம்.

ஒரு அடியவர் ஸ்ரீ அன்னையிடம் இப்படி குறைப் பட்டுக் கொண்டாராம்:

"அன்னையே! நீங்கள் வருகிறவர்களுக்கெல்லாம் அவர்கள் கேட்டதை உடனேயே கொடுத்து விடுகிறீர்கள்."

ஸ்ரீ அரவிந்த அன்னை அந்த அன்பருக்குச் சொன்னாராம்:

"அப்படியாவது நான் அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிற தெய்வீக அருளை நாடி வர மாட்டார்களா என்று தான்அவர்களுடைய அபிலாஷைகளை உடனே நிறைவேற்றுகிறேன் ."

Golden Drops of Light

Question: Does the intervention of the Grace come through a call?

The Mother: When one calls?

I think so. Anyway, not exclusively and solely. But certainly, yes, if one has faith in the Grace and an aspiration and if one does what a little child would when it runs to its mother and says: "Mamma, give me this", if one calls with that simplicity, if one turns to the Grace and says "Give me this", I believe it listens. Unless one asks for something that is not good for one, then it does not listen. If one asks from it something that does harm or is not favourable, it does not listen.

(CWM - Vol. 5, pp. 367-68)


Courtesy and thanks to www.searchforlight.org


ஸ்ரீ அரவிந்த அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் இது குறித்துச் சொல்வதை இன்றைய த்யானத்திற்கு எடுத்துக்கொள்வோமா!


If behind your devotion and surrender you make a cover for your desires, egoistic demands and vital insistences, if you put these things in the place of true aspiration or mix them with it and try to impose it on the Divine Shakti, then it is idle to invoke the divine Grace to transform you.

If you open yourself on one side or in one part to the Truth and on another side are constantly opening the gates to hostile forces, it is in vain to expect that the divine Grace will abide with you.
You must keep the temple clean if you wish to install there a living Presence.”


-Sri Aurobindo, in the first letter on “The Mother”

[Two powers: Aspiration and Grace)

"ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்"


ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்

நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்

நிர் மோகத்வே நிஸ் சல தத்வம்

நிஸ் சல தத்வே ஜீவன் முக்தி:


ஆனந்த விகடனில் திரு பரணீதரன் அவர்கள் அருணாசல மகிமை தொடரை எழுதி வந்த நேரம். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் சரித்திரத்தை எழுதி வந்த பகுதியில், ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய இந்த ஸ்லோகத்தை முதன் முதலாகப் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.

ஒன்றை விடுவதற்கோ, அல்லது ஒன்றைப் பிடித்துக் கொள்வதற்கோ மனிதனுக்கு ஒரு இடைப்பட்ட சாதனம் தேவையாக இருக்கிறது.

நேரடியாகவே முழு உண்மையை, சத்தியத்தை அறிந்து கொள்கிற வகையில் மனிதகுலம் சிருஷ்டிக்கப்படவில்லை.

For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self -enlargement.

The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings.

It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the wohle secret of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business. “

The Future Evolution of Man என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் சில பகுதிகளை, முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இந்த விஷயத்தை, முழு மொழிபெயர்ப்பாகவோ, விமரிசனமாகவோ இங்கு எழுத முற்படவில்லை. இதைப் படிக்கிற போது எனக்குள் எழுகிற சிந்தனையின் தாக்கமே இந்தப் பதிவு. என்னோடு, இதை படிக்க முன்வரும் நண்பர்களுக்கும் ஒரு சிறிய அறிமுகம், அவ்வளவு தான்.

ஒரு சிறு குழந்தையைப் போல, தட்டுத் தடுமாறி, குளறி, தடுக்கி விழுந்து, இப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாக, அதன் படிப்பினையாக, பிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலே, மனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்.

உண்மையைத் தேடுகிறேன் என்று எல்லோரும் தான் சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்களே என்று தோற்றும்.குருடர்கள் கூடி, யானையைத் தடவி, யானை இப்படித் தான் இருக்கும் என்று தனக்கு அனுபவமாகப் பட்டது மட்டுமே உண்மை என்கிற கதை தான். ஒவ்வொருவருவர் சொல்வதிலும் ஒரு பகுதிமட்டுமே உண்மை; ஆனாலும் முழுமையான உண்மை அல்ல. அதனால், சொல்லப் பட்ட பகுதி உண்மையில் கூட சந்தேகம் எழத்தான் செய்யும்.

எதை எதையோ தெரிந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், "நான் யார்" என்று கேட்டால் தடுமாறுகிறோம். "நான்" என்று எண்ணிக் கொண்டிருப்பது எல்லாம் உண்மையான "நான்" அல்ல என்பதை, கொஞ்சம் தடுமாற்றத்திற்குப் பிறகு நமக்கே புரிய வரும்.

இந்த வலைப் பதிவின் முக்கியமான நோக்கமே "நான் யார், இங்கு என்ன செய்கிறேன், என்னுடைய உண்மையான கடமை எது" என்ற தேடல் தான்.

எதிலும் முழுமையான ஈடுபாடோ முயற்சியோ இல்லாத இவனுக்கும் அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தன. கற்றது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத மண்டுவாக இருந்த போதிலும், அனுபவங்கள் இவனை ஒரு திசையிலேயே இழுத்து வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால், இறைவன் எவ்வளவு கருணையோடு இவனது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான் என்பது நெகிழ்ந்து உருக்குகிறது

தாயிற் சிறந்த தயாவான சத்துவன், அவனது தொண்டர்கள் வழியாகவே இறங்கி வந்து இவனையும் ஒரு பொருளாக நயந்து ஏற்றுக் கொண்ட அற்புதம் நிகழ்ந்தது 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே. பரணீதரன் எழுதிய தொடரைப் படித்து விட்டு, ஏதோ ஒரு உந்துதலில்.சத்குரு சாது பார்த்தசாரதி பின்னாளில் சுவாமி அண்வானந்தா என்று அறியப்பட்ட வைஷ்ணவியின் அருட் குழந்தைக்குத் தன்னுடைய கவலைகளை வெளியிட்டுக் கடிதம் எழுதினான்.

அது தான் இவன் எடுத்து வைத்த முதல் அடி.

அடுத்து, வைஷ்ணவிதேவியின் அணுக்கத்தொண்டர் குழாத்தில் முதல்வரான சத்குரு சாது ராம் சுவாமிகளை மதுரையில் நேரடியாகச் சந்தித்து வணங்கும் பெரும்பேறு கிடைத்தது. இவ்விருவரே இவனுக்கும் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,ஸ்ரீ ரமண மஹரிஷி, [வள்ளிமலை] திருப்புகழ் ஸ்வாமிகள் இவர்களுடனான சம்பந்தத்தை அருளியவர்கள்.

தந்தையின் மரணம், இவனை வேறு ஒரு திசைக்கு இட்டுச் சென்றது.

இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகம், எதையும் எதிர்மறையாகவே பார்க்கிற ஒரு வரட்டுப் பிடிவாதம் இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள், லெனினுடைய வார்த்தைகளில் சொல்வதானால் "ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்" என்று சாண் ஏறி முழம் வழுக்குகிற கதையும் அரங்கேறியது.

ஆனாலும், இந்த சாபமும் ஒரு வரமே என்பது இப்போது திரும்பிப் பார்க்கையில் புரிகிறது. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றாலும், பரிணாமச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முடியாது. குரங்குச் சேட்டைகள் கொஞ்சம் மீதமிருந்தாலும், மனிதன் குரங்கின் நிலைக்கு ஒருபோதும் இறங்கி விட முடியாது.

Forward, for ever forward!

At the end of the tunnel is the light…

At the end of the fight is the victory!

1948 ஆம் ஆண்டுத் தொடக்கத்தின் வாழ்த்துச் செய்தியாக ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகள்

"முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு

பயணத்தின் முடிவில் வெளிச்சம்

போராட்டங்களின் முடிவில் வெற்றி!"

சாண் ஏறி முழம் சறுக்குகிறது , ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதெல்லாம் ஆக்க மாட்டாதவன், தன்னுடைய இயலாமையை மூடி மறைக்கும் வார்த்தைகள் மட்டுமே.

நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும், நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவை. இன்றைய வலி, துயரம்,தோல்வி என்பதெல்லாம், உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

எனது அறியாமையில் எழுகிற ஆசைகளின் படியல்ல, தெய்வ சங்கல்பப் படியே எல்லாம் நடந்தேறட்டும். தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றுகிற ஒரு கருவியாக, இவனையும் திருத்திப் பணி கொள்வாய் என்பதே ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில், இன்றைக்கு வேண்டிக்கொள்ளும் வரம்.