Showing posts with label மோடி மீது பயம். Show all posts
Showing posts with label மோடி மீது பயம். Show all posts

ட்ராக்டர் பேரணி என்ன நினைப்பில் என்ன சாதித்தது?

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்று மகாகவி பாரதி சொன்னது வெறும் வார்த்தைகளல்ல. இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணை நேசிக்கிற ஒவ்வொருவர் உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கிற அனுபவ சத்தியம். 


விவசாயிகள் போராட்டம் என இரண்டுமாதங்களாக நடந்து கொண்டிருந்த கூத்து, குடியரசு தினத்தன்று டில்லியில் ட்ராக்டர் பேரணி நடத்தியே தீருவோமென முனைந்து வன்முறை, அராஜகம், குழப்பத்தில் முடிந்ததில், சிங்கு எல்லைப் பகுதியில் இருக்கும் போராளிகளை இடத்தைக் காலிசெய்யுமாறு உள்ளூர் கிராம பஞ்சாயத்தார்கள் கெடுவிதித்திருப்பதாகத் தற்போது செய்திகள் சொல்கின்றன.


டெல்லி டிராக்டர் ராலி வன்முறையில்..ஒருவர் டிராக்டர்-ஐ வேகமாக ஓட்டி சென்று தடுப்பின் மீது மோதி வித்தை காட்ட முயன்றதில்...கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி...
விவசாயியை டெல்லி போலீஸ் நெற்றிப் பொட்டில் சுட்டதில் உயிரிழந்தார் என்று மாற்றி கூறியதுமில்லாமல்....விவசாயின் இத் தியாகம் வீணாகாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிற விவசாயிகள் கூறியதாக வேறு தூண்டிவிட்டு ட்விட்டரில் பதிவிட்டார் ..இந்தியா டுடே -ன் ராஜ்தீப் சர்தேசாய்.
அதோடு நிற்காமல்...இந்தியா டுடே தொலைக்காட்சியிலும்....இதே பொய் செய்தியை கூறினார்.
இதற்கு முன்னர்...ஜனாதிபதி திறந்துவைத்த நேதாஜி யின் புகைப்படம் குறித்த பொய் செய்தியை பரப்பிய கோஷ்டியிலும் வழக்கம் போல சர் தேசாயும் உண்டு.
இதனையடுத்து ... மக்கள் வெகுண்டெழுந்து சுட்டிக்காட்டிய பின்.. ஒரு மாதம் சம்பளம் கிடையாது & இரண்டு வாரங்களுக்கு தொலைக்காட்சியில் செய்திகளை வாசிக்கவும், விவாதிக்கவும் தடை விதித்தது இந்தியா டுடே நிர்வாகம். [ இதனால் இந்தியா டுடே நிர்வாகம் நியாயமானது என்று எண்ணினால் அதை போன்ற அபத்தம் வேறில்லை ! இது...மக்களின் கோபம் காரணமாகவும், தொலைக்காட்சியை இழுத்து மூடிவிடக்கூடாது என்கிற நடவடிக்கை அச்சத்தினாலும் எடுக்கிற மேம்போக்கான நடவடிக்கை மட்டுமே. மற்றபடி...சர்தேசாய் கோஷ்டிகளுக்கு பொய்யும் புதிதில்லை. அவர்களை பணியிலமர்த்தி சோறு போடும் மீடியா நிறுவனங்களுக்கும் பொய் பரப்புதல் புதிதில்லை!
இப்போது...ராஜ் தீப் சர்தேசாய் ...இந்தியா டுடே -ல் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

அனைத்துமே...மக்களின் கோபத்தினை தவிர்க்க ... அரங்கேற்றப்படுகிற நாடகம் !

மோடி அரசு அமைந்த பின் ....கடந்த சில வருடங்களாக ...இந்தியாவில் எதிர் கட்சிகளின் கூட்டணி ...மோடி அரசின் ஒவ்வொரு நகர்வையும் எதிர்த்து ஒவ்வொரு பெயரில் போராட்டம் என்று முன்னெடுக்கிறார்கள்.
இவற்றில் ....அந்நிய சக்திகள், பிரிவினை சக்திகளின் கோஷங்கள் கேட்கின்றன. பதாகைகள் தென்படுகின்றன. வன்முறைகள் நடக்கின்றன. காவல்துறையினர் தாக்கப்படுகிறார்கள். பெரும் குழப்பங்களும், பாதுகாப்பின்மையும் உருவாக்கப்படுகிறது.
தாங்கள் ஆதரிக்கும்/ முன்னெடுக்கும் போராட்டங்களில் ... ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் இத்தனை நடந்தும்...நாட்டை பிளவு படுத்தும் பிரிவினைவாத சக்திகள் குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன ? என்கிற கேள்விக்கு பதிலும் இல்லை. மறுப்பும் இல்லை. பொறுப்பும் இல்லை.
நேற்றைய டிராக்டர் ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து .... போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர் அரசியல் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாதது போல நழுவுகின்றன. இத்தனை நாள் நடந்த இக் குறிப்பிட்ட போராட்டத்தின் களத்திலேயே கூட ...காலிஸ்தான் பிரிவினைவாத பதாகைகள் தென்படுகின்றன.. அந்நிய சக்திகளின் குரல்கள் கேட்கின்றன என்று தொடர்ந்து எச்சரிக்கை குரல்களும், கவலை குரல்களும் கேட்ட போதெல்லாம்...அவற்றை முற்றிலுமாக மறுதலித்து...விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக....எதிர் கட்சிகளின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் பதிலளித்தது இத் தருணத்தில் கவனிக்க தக்கது.
அரசியலில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்...
எதிர்கட்சிகளின் கூட்டணி கட்சிகளில் ஒன்றில் கூட ...
வலிமையான தலைமை இல்லை. போராட்டங்களை முன்னெடுக்கும்போதும்,ஆதரவளிக்கும்போதும், அவற்றை வழிநடத்தும் அளவிற்கு பொறுப்பேற்கும் வலிமையான தலைமைகள் இல்லை.
மக்கள் ஆதரவு பெற்ற mass leader வகை தலைமை இல்லை.
மிக முக்கியமானதாக ....சொந்த நாட்டினை எந்த வகையிலும் அந்நிய சக்திகளுக்கு காவு கொடுத்துவிடாமல் 'எதிர் அரசியல்' செய்யத்தெரிந்த சாமர்த்தியமான அரசியல் தலைமை என்று ஒரு தலைமை கூட இல்லை !
ஒரு ஜனநாயக நாட்டில்... குறிப்பாக எதிர் நிலை அரசியல் தளத்தில்... அதாவது, எதிர்க்கட்சிகளில்... வலிமையற்ற தலைமைகள் , உள்கட்சி அதிகார போட்டிகள், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைமை கூட இக் கட்சிகளில் இல்லாமல் இருப்பது, குடும்ப அரசியல் and ஊழல் போன்ற ஆகப்பெரும் பலவீனங்கள் ... போன்ற அம்சங்கள் அனைத்தும்.....உலகளாவிய வலைப்பின்னலுடன் இயங்கும் அந்நிய சக்திகளுக்கு பெரும் வரப்பிரசாதம் ! எளிதில் ஊடுருவுவதற்கும் ,ஆக்கிரமிப்பதற்கும், தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் விரும்பியபடி உட்புகுந்து இந்திய அரசியலை ஆட்டுவிப்பதற்கும் மிக மிக எளிது.பங இந்த நிலையைத் தான் ...டிராக்டர் ஊர்வல வன்முறைகள்...மீண்டுமொருமுறை வெளிச்சமிடுகிறது. 

இப்படி இரண்டே பகிர்வுகளில் பானு கோம்ஸ் சொல்லியிருப்பதுடன் உடன்படுவதைத் தவிர வேறு சாய்ஸ் இருக்கிறதா?  

கொஞ்சம் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம்.  

இட்லி வடை பொங்கல்! #56 மோடி எதிர்ப்பு! இனிமேலும் கூட போணி ஆகுமா?

தமிழக அரசியல்கள நிலவரம், கூட்டணிகள் பற்றி இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை போல! அதனால் தமிழக மக்களின் நாடித்துடிப்பான, அல்லது பிரதான பொழுதுபோக்கான  மோடி எதிர்ப்பு எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது, 2019 தேர்தல்களில் போணியான மாதிரியே இனிமேலும் கூடப் போணியாகுமா  என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாமா?


சவுத் சீனா மார்னிங் போஸ்ட்! இது சீனாவின் அலிபாபா குழுமம் நடத்தும்  ஆங்கில நாளிதழ். இன்றைக்கு இப்படி ஒரு படம்போட்டு மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போராட்டங்கள் இந்தியா சீனா அல்ல என்று காட்டுகின்றன  என்ற தலைப்பிட்டு ஒரு செய்திப்புரட்டை வெளியிட்டிருக்கிறது. எழுதியது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு வங்காளி தேபசிஷ்  ராய் சவுத்ரி! கொஞ்சம் வேடிக்கையான செய்திக்கட்டுரை.


1975 இல் வெளியான தீவார் (சுவர் The Wall) படத்தில் அமிதாப் பச்சன், சசிகபூர் பேசும் இந்தப்பகுதி, வசனத்தோடு இந்திய அரசியலை ஒப்பிட்டு ஆரம்பிக்கிற விதம் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. காரணம் இந்தப்படக்காட்சியில் மேஃபியா டான் ஆன அண்ணன் அமிதாப், போலீஸ் அதிகாரியான தம்பி சசியிடம் பேசுகிற வசனத்தின் இறுதிப்பகுதி. அண்ணன் தம்பியிடம் போலீஸ் வேளையில் என்ன இருக்கிறது 500 ரூபாய் சம்பளம் ஒரு குவார்ட்டர்ஸ், ஒரு ஜீப் இவ்வளவுதானே! என்னிடம் பங்களாக்கள் கார்கள் பேங்க் பாலன்ஸ் எல்லாம் இருக்கின்றன என்று சொல்வதற்கு பதிலாக, தம்பி என்னோடு அம்மா இருக்கிறாள் என்று சொல்கிற கட்டம். அம்மா என்கிற இடத்தில்  ஜனநாயகம் என்று வைத்துக் கொள்ள வேண்டுமாம்! அப்படியானால் சீனாவை மேஃபியா கூட்டமாகச் சொல்கிற மாதிரி அல்லவா ஆகிறது? (இப்படி யார் கேட்கப்போகிறார்கள் என்ற தெனாவட்டுடன் கட்டுரை தொடர்கிறது)  குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக அங்கங்கே கிளப்பி விடப்படும் போராட்டங்களை வைத்தே மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொள்ளலாம், ஆனால் உண்மை அப்படியல்ல என்று பலவிஷயங்களைத் தொட்டு தலையைச் சுற்றி சுற்றி மூக்கைத் தொடாமலே முடிகிற சுற்றல் கட்டுரை. Deputy Editor  Debasish is a Jefferson Fellow and winner of multiple Hong Kong News and SOPA awards. He has worked and lived in Calcutta, São Paulo, Hua Hin, Bangkok, Beijing, and Hong Kong. என்ற அறிமுகத்தோடு தற்சமயம் சிட்னி பல்கலைக்கழகத்தின் Sydney Democracy Network இல்    Sr. Research Fellow ஆக இருக்கிறார் என்பதே வேறு பல விஷயங்களையும் சொல்லிவிடுகிறது.  


வீடியோ 10 நிமிடம் 

அன்னிய மண்ணில் ஒரு படுகொலையைச் செய்து விட்டு, தெனாவட்டாகவும் பேசுவது அமெரிக்க அதிபர்களில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டுமே கைவந்த கலை. இதற்கு முன்னால்  பில் கிளிண்டன் தகுதி நீக்கம் (impeachment)  செய்யப்படுகிற நிலையில் இருந்த போது இதேமாதிரி ஒரு ராணுவத் தாக்குதலை நடத்தினார் என்பது ட்ரம்புக்கும் கூட  ஒரு முன்னோடி இருந்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வதே ஒரு வரலாற்று சோகம். இந்தப்படுகொலையைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் படிக்க இங்கே பார்க்கவும்      

அமெரிக்க ஊடகங்கள் மிகவும் விசித்திரமானவை. தங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு வேறொரு நியாயம் என்று வெட்கமே இல்லாமல் இரட்டை நிலை எடுப்பது வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் முதலான ஊடகங்களின் பொதுவான குணம். இவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான செய்திகளை பிரசுரிப்பதில் ஒருவித உள்நோக்கத்துடனேயே செயல்படுவதை எத்தனைபேர் இங்கே அறிந்திருக்கிறீர்கள்? வெட்கமே இல்லாமல், இந்தச் செய்திகளை மிகப்பெரிய விஷயமாக இங்கே பரப்புகிறவர்களை என்னவென்று சொல்வது?

      விவாதம் 48 நிமிடம் 

TimesNow TV NewsHour  விவாதங்களைப் பார்ப்பதே சமீப நாட்களில் வெகுவாகக் குறைந்து விட்டது என்பதை இங்கே ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன். காரணம் நேரப்பற்றாக்குறை என்பது மட்டுமே அல்ல. ஆனாலும் நாவிகா குமார் நடத்திய நேற்றைய NewsHour விவாதத்தைப் பார்த்தபோது, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அப்பட்டமாகத் திரித்து, அதென்னவோ இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டே எதிர்க்கிறமாதிரி ஒரு இல்லாதபூச்சாண்டி, அச்சத்தைக் கிளப்பிவிட்டு, கலகம், வன்முறை, போராட்டங்கள் என்று ஆரம்பித்தது நெல்லை கண்ணன்கள் மாதிரிப் பிள்ளைப்பூச்சிகளுக்குக் கூடக் கொடுக்கு முளைத்துக் கொட்டுகிற மாதிரி ஆகிவிட்டதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்? கோலம்போட்டுப் போராடின காயத்ரியின் முகநூல்பக்கத்தில் பாகிஸ்தான் சார்புள்ள அமைப்பின் தொடர்பு இருந்ததைப் போலீஸ் கமிஷனர் ஆதாரங்களுடன் வெளியிட்டதையும் தானே பார்த்தோம்! இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கே இருக்கிற திராவிட கழகம் இன்னபிற உதிரி அமைப்புக்களின் போர்வையில் திமுகழகம் மோடி எதிர்ப்பு ஒன்றை மட்டுமே விதைத்து, தேர்தல் அறுவடையை செய்துவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம்?

      
இந்த உள்ளூர்க் கேள்விக்கு நெல்லை கண்ணனை ஏன் திமுக கைவிட்டது என்ற விவாதத்தை  மதன் ரவிச்சந்திரன் நடத்தி விடைதேட முயற்சித்திருக்கிறார். விவாதம் 59 நிமிடம். நாடாளுமன்றத் தேர்தல்களில் வீரியத்தோடு எழுப்பிய நரேந்திர மோடி எதிர்ப்பு உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் கோலம் போடுகிற போராட்டமாகக் குறுகிவிட்டது. இன்னும் இந்தவொரு விஷயத்தை மட்டுமே வைத்து திமுக தொடர்ந்து அரசியல் செய்யமுடியும் என்றா நினைக்கிறீர்கள்?

விடை திமுகவிடமோ காசுக்குக் கூவுகிற ஊடகங்களிடமோ இல்லை! அது   உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. அதுவாவது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.           
       

இட்லி வடை பொங்கல்! #45 இரு பிரதமர்கள்! ஐநாவில் சாதித்ததென்ன?

பிரதமர் நரேந்திர மோடி தனது ஒருவாரகால அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பியிருக்கிறார். Howdy Modi நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டது முதல் சுமார் 40 நிகழ்ச்சிகளில் பிரதமரும், இருமடங்கு நிகழ்வுகளில் முன் எப்போதும் இல்லாதவகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் ஐநா பொதுசபை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளோடு பேசி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கியிருக்கிறார்கள்.ஐநா பொதுசபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்ப்புலவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசியது இந்தப் பயணத்தின் உச்சம்!

 

பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கானும் கூட அமெரிக்காவுக்கு வந்திருந்தார். டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட இந்திய எதிர்ப்பு நிலையில் உள்ள ஊடகங்களிடம் பேசினார். இந்தியப் பிரதமருக்கு அடுத்தபடியாக இம்ரான் கானும் UNGA ஐநா பொது சபையில் காஷ்மீர் விவகாரம் தொடங்கி  இங்கே ராகுல் காண்டி பேசுகிற மாதிரியே சுத்தப் பேத்தலாக RSS பற்றியும்  பேசியது இங்கே திமுக மாதிரி மோடி மீதுள்ள பயத்தை மோடி வெறுப்பாகவும் மோடி எதிர்ப்பாகவும் காட்டியது பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது!  

  
காங்கிரசுக்காக கூவுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் The Print தளத்தின் சேகர் குப்தா கூட, காஷ்மீரில் நடப்பது, ஆர்டிகிள் 370 abrogation எல்லாம் இந்திய உள்விவகாரம் என்கிற நிலையை பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கன்வின்ஸ் செய்து விட்டார் என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் காஷ்மீரில் நடப்பதை உலகநாடுகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன என யாரைத் திருப்தி செய்வதற்காகச் சொல்கிறார்? 7 நிமி.


இம்ரான் கான் வெறுப்பு, வன்மத்தைக் கொட்டி ஐநா பொது சபையில் பேசியதற்கு, அங்கேயே இந்தியாவின் சார்பில்  பதில் சொல்கிறார் வெளியுறவுத்துறையில் செயலாளர் விதிஷா மைத்ரா! point by point பதில் சொன்னதிலேயே இம்ரான் கானுக்கு சில விஷயங்கள் புரிந்திருக்க வேண்டும். நான் சொல்ல வருவது என்னவென்று உங்களுக்குப் புரிந்தால் சரி! ஐம்பது நிமிடத்துக்கு மேலேயே அணு ஆயுதப் பூச்சாண்டி காட்டி UNGA வில் பேசினாரே இம்ரான் கான்! அதை யாருமே பொருட்படுத்தவில்லையா?


அல்ஜசீரா சேனல் இருக்கவே இருக்கிறதே! இம்ரான் கானுடைய பேச்சை 6 நிமிடத்திலேயே இங்கே சுருக்கிச் சொல்கிறார்கள்! 


News X சேனலின் ரிஷப் குலாடி இம்ரான் கான் புலம்பலுக்கு 8 நிமிட பதிலடியாகச் சொன்னது கூட சுவாரசியமாகத் தான் இருக்கிறது! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்ன மாதிரி இம்ரான் கான் வரவர கார்டூனிஸ்டுகளுக்குப் பிரியமான காமெடிப் பீசாகி வருகிறார் என்பதுதான் விஷயம்!



காஷ்மீர் முஸ்லிம்களை பற்றிக் கவலைப்படுகிறீர்களே இம்ரான்! சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் நிலையைப் பற்றி எப்போது பேசுவீர்கள் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பி இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.    
       

சண்டேன்னா மூணு! நூறாவது நாள்! 1965! மம்தா பானெர்ஜி!

ரேந்திர மோடி வெர்ஷன் 2.0 வெற்றிகரமாகத் தனது 100வது நாளை, சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளோடு கடந்து, மேலும் தன்னுடைய செயல்திறனைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்து கொண்டே வருவதைக் குறித்த ஒரு விவாதம்! இங்கே புதிய தலைமுறை சேனல் கொஞ்சம் விசித்திரமாக மோடி எதிர்ப்பு ஊடகமாகத் தன்னைக் காட்டிக் கொண்டாலும், அதற்கு முன் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேள்வியெழுப்பி, இருப்பதில் இதுவே கொஞ்சம் நல்ல கொள்ளியாக, சேதம் குறைவு என்று தெரிகிற  ஒரே ஒரு அடிப்படையில் மட்டும்!  



திர்க்கட்சிகளின் குரலாக ஒலிப்பதில்,பத்திரிகையாளர் S P லட்சுமணன் போன்றவர்களுடைய பங்கு அசாத்தியமானது. கட்சிப்  பேச்சாளர்களைப் போல அல்லாமல், கொஞ்சம் செய்திகளின் மீதான விமரிசனங்கள் வாயிலாகவே எதிர்ப்பைச் சொல்வது, கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என்பதுதான் ஒரே காரணமா? கொஞ்சம் யோசித்துத்தான்  பதில் சொல்லுங்களேன்! வீடியோ 22 நிமிடம்.


ந்தியா பாகிஸ்தான் இருநாடுகளுக்கிடையில் பல்வேறு கால கட்டங்களில் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ போர் நடந்ததுண்டு. காங்கிரஸ்காரனைக் கேட்டால் 1971 போரைப் பற்றி மட்டுமே பேசுவான்! 1965 இந்தியா பாகிஸ்தான் போரைப் பற்றி இங்கே நினைப்பதற்கு ஆளே இல்லையா என்ற குறையை, சேகர் குப்தா இந்த 33 நிமிட வீடியோவில் கொஞ்சம் தீர்த்து வைத்திருக்கிறார். ஆனால் அதுவும் கூட பாகிஸ்தானியர்கள் பார்வையில் இருந்து என்பது நெருடத் தான் செய்கிறது. இருந்தாலும்  கொஞ்சம் பார்க்கலாமே!

கஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறது. குறைந்த நேரத்திற்குள்ளாகவே, இந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராக, திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது.

நேருவின் மறைவுக்குப் பின்னால், லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான். இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்தது. புதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார். லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோது, மேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாக, அமெரிக்க டைம் பத்திரிக்கை, அக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்டவுடன் அட்டையைத் துப்புவது போல, இந்தியா என்று சொன்னவுடனேயே, மகாராஜாக்கள், பாம்பாட்டிகள், எக்கச் சக்கமாகக் குழந்தைகள், ஏகப்பட்ட பசுமாடுகள், தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகப்போகிறது என்பது எல்லோருக்குமே தெரிகிறது. காந்தியைப் பற்றி, அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூட, இந்தியா என்றால் பாம்பாட்டிகள், சாமியார்கள், மகாராஜாக்கள், பிச்சைக்காரர்கள், கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம், நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்பு, அப்புறம், 1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள் (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது. அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும், இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ் ஜார்னல் கட்டுரை ஒன்று! இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை! கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றியகண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.இது நேருவை மட்டுமே முழுக்க முழுக்கக் குறை சொல்வதற்காக எழுதிய வரிகள் இல்லை. இப்படி ஒரு இந்தியக் கனவு! இந்தியப்பெருமிதமும் கூட! என்று இந்தப் பக்கங்களில் எழுதிப் பத்தாண்டுகள் நிறையப்போகிறது.


சந்திராயன் 2 பற்றி மம்தா பானெர்ஜி திருவாய் மலர்ந்து சில விஷயங்களை உளறியிருக்கிறார். அதுவும் போக இதை எதிர்த்து வருகிற 12 அன்று கண்டன   முதல்  வீடியோவில் SP லட்சுமணன் ஆகட்டும். மேலே மம்தா பானெர்ஜி உளறுவதாகட்டும், அவர்களுடைய அரசியல் இன்ன ரகம் என்று அடையாளம் காட்டுகிறது. பொதுஜனங்களுடைய எண்ணவோட்டத்துக்கு எதிராக இருப்பதை அவர்கள் அறிந்து கொண்டுதான் பேசுகிறார்களா? நரேந்திர மோடி மீதிருக்கிற பயம், இப்படிக்கு காழ்ப்புணர்வுடன் அவர்களை இப்படிப் பேச வைக்கிறதா  West Bengal BJP president Dilip Ghosh on Saturday criticised Chief Minister Mamata Banerjee for attacking the saffron party over Chandrayaan-2 programme, saying she is fond of finding fault with everything the country is proud of.     

கொஞ்சம் யோசித்துப்பார்த்து, ஒரு பதில் சொன்னால்தான் என்ன?

மீண்டும் சந்திப்போம்.  
        

#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!

இரண்டாவது முறையாக நரேந்திர மோடியின் தலைமையில் மத்தியில் அமைச்சரவை நேற்று  பதவியேற்றிருக்கிறது. சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள், பலருக்கு ஏமாற்றங்கள் என இந்தப் பதவியேற்பு விழா நடந்து முடிந்திருக்கிறது. தமிழக மக்கள் பிஜேபிக்கு வாக்களிக்காவிட்டாலும், இரண்டு தமிழர்கள், திருமதி நிர்மலா சீதாராமன், திரு D ஜெய்சங்கர் கேபினெட் அமைச்சர்களாகப் பதவியற்றிருக்கிறார்கள்  என்பதை இங்கே எவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இருவருக்குமே திருச்சிதான் பூர்வீகம். விகடன் தளம் கூட  `போச்சே.. போச்சே.. !' - ஓ.பி.ரவீந்திரநாத் ஒதுக்கப்பட்ட கதை என்று விஷமத்துடன் செய்தி வெளியிடுகிறதே தவிர கண்முன் தெரிகிற ஒன்றை, நிதர்சனத்தை மறைத்துத்தான் எழுதுகிறார்கள்.  






பிரதமர் உள்ளிட்டு 25 கேபினெட் அமைச்சர்கள், 24 ராஜாங்க அமைச்சர்கள்  மற்றும் 9 தனிப்பொறுப்புடன் ராஜாங்க அமைச்சர்கள் என்று 58 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றிருக்கிறது என்பதில் முக்கியமாக  இந்திரா குடும்ப வாரிசு, சஞ்சய் காண்டியின் மனைவி மனேகா காண்டி பெயர் இடம்பெறவில்லை என்பதை நிறையப் பேர் கவனிக்கத் தவறியிருப்பார்கள். காண்டி வாரிசுகளுடைய தேவை காங்கிரசுக்கு இருக்கிறதோ இல்லையோ, பிஜேபிக்கு இனி தேவையில்லை என்றாகி இருப்பது என்பது  மிகவும் நல்ல விஷயம். 


இந்த விவாதம் கூட  புளித்துப்போன ராகுல் காண்டி ராஜினாமா பற்றித்தான் என்றாலும், இதுவரை விவாதங்களில் பங்கேற்பாளராக மட்டுமே பார்த்து வந்த பானு கோம்ஸ் இதில் விவாதக்களத்தை முன்னெடுக்கும் நெறியாளராகவும்! எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 
  

உபிக்கள் தம்பட்டமடித்தபடி ஜூன் 3 அன்று முதல்வர் பதவியில் இசுடாலின் என்பது பொய்யாகிப்போனது என்பதில் ரொம்பவுமே அப்செட் ஆகியிருக்கிறவருக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமா? 

#GoBackModi பலூன்கள் சாதித்தது என்ன? யோசித்துச் சொல்லுங்கள்!   

மீண்டும் சந்திப்போம்.

மீண்டும் நரேந்திர மோடி! மோடி பயத்தில் பிதற்றித் திரிந்தவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

மீண்டும் நரேந்திர மோடி! பலவகைகளிலும் இந்த வெற்றி முன்னோடியாக! சென்ற 2014 இல் தனிப்பெரும்பான்மை பெற்ற மாதிரியே இந்த முறையும்! மோடி அலையில்  காங்கிரசும் மூன்றாவது அணியும்  காணாமலேயே போய்விட்டதோ?




தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணிநேரத்தில் உறுதியாகத் தெரிய வந்தபின் மீண்டும் சந்திப்போம்.


காந்தியா காண்டியா? மோடி வெர்சஸ் WHO?

இங்கே ஊடகங்கள் தினசரி கிளப்புகிற அக்கப்போரில் யாரேனும் தவறிப்போய்  உண்மையைச் சொன்னால் கூட சர்ச்சையாகி விடுவதைக் கவனிக்க முடிகிறதா? கர்நாடகாவிலிருந்து மத்திய அமைச்சரவையில் MoS ஆக இருக்கும் அனந்தகுமார் ஹெக்டே இரண்டு நாள் முன்பு பேசியதை, சர்ச்சையாக்கியிருக்கிறார்கள்.

இந்திரா புருசன் Feroz Jehangir Ghandy 

: Union Minister Ananth Hegde says on Rahul Gandhi, "They want proof of surgical strikes even when whole world acknowledged it. This Muslim who calls himself a 'janeudhari Hindu', son of a Muslim father & a Christian mother, does he have proof that he is a Hindu"? (10.3.19)
0:51
109K views
4:46 PM - 11 Mar 2019

தன்னை காஷ்மீரி கவுல் பிராமணன் என்று ராவுல் பாபா சொல்லிக் கொள்வதற்கு யாராவது ஆதாரம் கேட்டார்களா? பாட்டி இந்திரா இஸ்லாத்துக்கு மாறி பெரோஸ் ஜஹாங்கீர் காண்டி (ghandy)  என்ற பார்சி முஸ்லிமைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதில் பிறந்த ராஜீவ் காண்டி, பிறப்பால் ஒரு முஸ்லீம், அவர் திருமணம் செய்துகொண்டதோ ஒரு இத்தாலிய கிறித்தவப் பெண்ணை என்கிறபோது, ராவுல் பாபா மட்டும் எப்படி ஓர் காஷ்மீரி கவுல் பிராமணனாக இருக்க முடியும்? காண்டி என்பதை காந்தி என்று வைத்துக் கொண்டதில் இவர்கள் டுபாக்கூர் காந்திகளே தவிர ஒரிஜினல் மகாத்மா காந்திக்கு எந்தவகையிலும், சம்பந்தம் இல்லாதவர்கள்  என்பதைச் சொன்னால் அது தவறா? சர்ச்சையா?

 

பேசாப்பொருள் பேசு! இது காவேரி நியூஸ் சேனலில் நேற்றைய விவாதம்! அனாவசியக் கூச்சல்களோ, நெறியாளர் விவாதத்தின் நடுவே அடிக்கடி புகுந்து மறிப்பதோ இல்லாத நிகழ்ச்சி! அதிசயம்தான்!ஒரு உருப்படியான விஷயத்தை விவாதிக்கிறார்கள். என்றாலும்     நாடாளுமன்றத் தேர்தல்களை ஒவ்வொரு மாநில மக்களும் அணுகும் விதமே வேறு! நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் தானென்றாலும் 29 விதமான முடிவுகளைச் சொல்வதாகவே இருக்கும் என எங்கோ படித்த ஒரு கமெண்ட் நினைவுக்கு வருகிறது.


தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்களுக்கு மாரிதாஸ் எந்த அடிப்படையில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு சரியான முறையில் வழிகாட்டுகிறார். புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே அல்லாமல், ஏற்கெனெவே வாக்களித்து ஏமாந்தவர்களுக்குமே பயன்படக்கூடிய காணொளி. 


முகநூலில் நண்பர் சரவணகுமார் அவர்களின் பதிவு என்று ராஜசங்கர் பகிரந்திருக்கிறார் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு..
நண்பர்களே ...நேற்று இந்த பொள்ளாச்சி சம்பவம் குறித்து நக்கீரன் வலைத்தளத்தில் நிலையான வீடியோக்களை அடுத்து சமூகவலைதளங்களில் எழுந்த கடுமையான எதிர்வினைகளை எல்லோரும் எதிரொலித்துக் கொண்டிருந்த போது என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டும், நக்கீரனை நாங்கள் நம்ப தயாராக இல்லை ...இந்த விஷயம் அரசியலாக்கப் படுகிறது என்று எழுதி வந்தோம் ...
இதற்கு காரணம், இந்தப் பிரச்சனை உங்களுக்கு புதிதாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகமாகி விட்ட பிரச்சினை... சொல்லப்போனால் பொள்ளாச்சிக்காரர்கள் இப்போது இதைப் பற்றி பேசுவதேயில்லை...
காரணம் இந்த பிரச்சனை மூன்று வாரங்களுக்கு முன்பாகவே பரபரப்பாக பேசப்பட்டு , சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யப்பட்டு , அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன...இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் பிரச்சனை எழுகிறது என்றால் காரணம் திமுக தான் ...
இந்த பிரச்சனையில் எப்படியாவது அதிமுகவை உள்ளே இழுத்து விட்டு கொங்கு மண்டலத்தில் தற்போது அதிமுகவுக்கு இருக்கும் இமேஜை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டோடு இந்த வேலைகள் செய்யப்படுகின்றன ....இதை முன்னின்று நடத்துபவன் ஊடக வேசி நக்கீரன் கோபால் ....இந்த மாதிரி மொள்ளமாரி வேலைகளை செய்வதில் அவனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது ....அவனுடைய யோக்கியதை உலகம் அறிந்தது ....
சுதந்திர பாரதத்தில் இதுவரை எத்தனையோ அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.. ஆனால் மேம்பால ஊழல் வழக்கில் அதிமுக ஆட்சி காலத்தின் போது கருணாநிதி கைது செய்யப்பட்ட போது அதை திமுக தன்னுடைய ஊடக பலத்தின் மூலம் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான்....
நித்தியானந்தா விவகாரத்தில் இதே நக்கீரன்கோபால் எப்படி நடந்து கொண்டான் என்பது உலகத்துக்கே தெரியும் ...அப்படி இருக்க அவன் ஒரு வீடியோ வெளியிடுகிறான் என்றால் , அதன் உண்மைத்தன்மையை கொஞ்சம்கூட சந்தேகிக்காமல் அதை அப்படியே நம்பி எதிரொலிப்பது எந்த வகையில் நியாயம் நண்பர்களே?
250 பெண்கள் என்கிறார்கள் 1100 வீடியோ என்கிறார்கள் இதெல்லாம் சாத்தியமா என்று கூட யோசிக்க வேண்டாமா ? பொள்ளாச்சி ஒரு சிறு நகரம் ...சொல்லப்போனால் அது ஒரு வளர்ந்த கிராமம் அவ்வளவுதான்... அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் அந்த சிறு நகரத்தில் இப்படி 1200 வீடியோவை எடுத்துக்கொண்டு 250 பெண்களை காதலித்து ஏமாற்றுவதெல்லாம் சாத்தியமே இல்லை ....
சரி அப்படியே இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தானாக முன் வந்து புகார் கொடுக்காமல் அரசு என்ன செய்ய முடியும் ? இதோ ஒரு பெண் புகார் கொடுத்திருக்கிறார் ...அதன் அடிப்படையில் போலீஸ் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது ...வழக்கு நடக்க இருக்கிறது...
இப்போது போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் யாரை எதிர்த்து போராட்டம்? அந்த பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் இருக்கிறார்களா? இல்லை யாராவது தப்பி விட்டார்களா? அப்படி இருக்க எதை நோக்கி இந்த போராட்டம் ?
இதைத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணும் , அவருடைய அண்ணன் கேட்கிறார்கள்... இதோ இப்போது அந்தப் பெண்ணுடைய வழக்கறிஞரும், அந்தப் பெண்ணுக்கு முதன்முதலாக உதவி செய்த மலுமிச்சம்பட்டி பழனிச்சாமியும் கேட்கிறார்கள் ...இது இப்போது ஊடகங்கள் மூலமாக உறுதியாகிவிட்டது இதைத்தான் நான் நேற்று எழுதினேன் எந்த ஒரு விஷயம் வந்தாலும் அதை சொல்பவர்கள் யார் என்பதை பாருங்கள்... அதன் பிறகு உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள்... அவசரப்படாதீர்கள்....
தேர்தல் தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுகிறது .திங்கட்கிழமை நக்கீரன் இந்த வீடியோவை வெளியிடுகிறது .உடனே ஸ்டாலின் கண்டன அறிக்கை விடுகிறார் ..இதோ இன்று கனிமொழி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ...இதற்குள் ஏதோ ஒரு சதி இருப்பது உங்களுக்கு புரியவில்லையா நண்பர்களே?
இது முழுக்க முழுக்க திமுகவால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகம்... கைது செய்யப்பட்ட அந்த நால்வரும் குற்றவாளிகள் ...அவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை உடனடியாக தூக்கில் தொங்க விட்டாலும் சரி .. அல்லது கோவையில் நடந்தது போல என்கவுண்டர் செய்யப்பட்டாலும் நான் அதை முழுமனதாக வரவேற்பேன்...
ஆனால் , இதையே காரணமாக வைத்து திமுக அரசியல் ஆதாயம் தேட முற்படுவதை ஏற்கவே முடியாது ..காரணம் திமுக கொங்கு மண்டலத்தின் மீது அந்த அளவு வெறுப்பில் இருக்கிறது .ஏதாவது செய்து மீண்டும் எங்கு காலூன்றி விட முடியாதா என்று துடிக்கிறது
திமுகவை சேர்ந்த, 200 ரூபாய்க்கு பதிவிடும் யுவகிருஷ்ணா டான் அசோக் போன்ற அல்லக்கைகள் கடந்த சில வருடங்களாகவே கொங்கு மண்டலத்தை குறித்து விஷத்தைக் கக்கி வருவதை கவனித்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும் ..அவர்களைப் பொறுத்தவரை ஒன்று இந்த விஷயத்தை ஒரு கருவியாக வைத்து அரசியல் ஆதாயம் பெற வேண்டும் அதாவது வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் . அல்லது குறைந்தபட்சம் கொங்குமண்டல மக்களை அசிங்கப்படுத்த வேண்டும் இதுதான் அவர்களுடைய திட்டம் ....
250 பெண்கள் அதுவும் கல்லூரிப் பெண்கள் என்கிறார்களே இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? பொள்ளாச்சி போன்ற ஒரு சிறு நகரத்தில் படிக்கும் கல்லூரி பெண்களை பற்றி இப்படி அவதூறு பரப்பினால் நாளை அந்த பகுதியில் பெண் எடுக்க யாரும் யோசிப்பார்களா மாட்டார்களா? இது அவர்களுக்கு தெரியாதா ? 250 பெண்கள் , 1100 வீடியோக்கள் என்றெல்லாம் சொல்கிறார்களே இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?
அப்படி அவர்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் அதை காவல் துறையிடம் கொடுக்கலாம் .அல்லது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு திரும்பத்திரும்ப மேற்படி குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கிறது நடவடிக்கை எடுக்க மாட்டேன் மாட்டேன் என்கிறது என்று மீடியாவில் பிரச்சாரம் செய்வது எந்த வகையில் நியாயம்?
திமுகவின் நோக்கம் இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் அடைவது தான்.. அதைப் புரிந்து கொள்ளுங்கள்.தங்களின் ஊடக பலத்தைக் கொண்டு அவர்கள் செய்யும் பொய் பிரச்சாரத்திற்கு பலியாகி விடாதீர்கள்....
    

ஊடகப்பொய்களில் ஏமாந்து திசைமாறிவிடாமல் இருக்கப் பழகுவோம்! மெய்ப்பொருள் காண்பதறிவு!  

           

இனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா?

இங்கே மதுரை வட்டார மொழியில் சொல்வதானால் இத்துப்போன திராவிட முகநூல் போராளிகள், தமிழேண்டா திருகல் டேனியல்கள் முழங்குவதை எல்லாம் அப்படியே புறந்தள்ளிவிட்டுப் போய்விடலாம்!

Make no mistake - as the Indian Air Force jets returned after destroying the biggest terror training camp of terror group Jaish-e-Mohammed (JeM) in Balakot inside Pakistan, a new strategic security doctrine has been unveiled by the Modi government. India and its security establishment have redrawn our red lines and thrown away so-called strategic restraint. The new assertion is this: Pakistan has been stripped of the sham of "non-state actors". இப்படி சுவாதி சதுர்வேதி எழுதியிருப்பது அச்சு அசலாக காங்கிரசுக்கு விலைபோய்விட்ட NDTV தளத்தில்! 

bt5mjjc8  Indian Air Force fighter jets struck the biggest camp of the Jaish-e-Mohammed, killing over 300 terrorists including Jaish chief Masood Azhar's brother-in-law
இப்படிப் படத்தின்கீழ் குறிப்போடு வெளியாகியிருக்கிற செய்திக்குத் தலைப்பு இது! 

Modi Administration Changes India Handling Of Pak Decisively!

சுவாதி சதுர்வேதி, வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே பேசியதை (இதன் வீடியோ, முழு டெக்ஸ்ட்டுக்கான சுட்டி முந்தைய பதிவில் இருக்கிறது) After using the air strike to escalate and deliver the message, Foreign Secretary Vijay Gokhale's statement was a master class in crisp and clear speak while also portraying India as a mature and responsible country determined to protect its own. Gokhale cogently said that India was careful in ensuring no civilian and military casualties. Hence the "non-military strike".என்று சிலாகித்திருப்பதில், காங்கிரசோ அல்லது இதர உதிரி கட்சிகளோ இனி  மோடி வெறுப்பு மோடிஎதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இனி அரசியல் செய்வது மெத்தக்கடினம் என்பது புலப்படுகிறதோ? வேறு வழியே இல்லாமல், ராவுல் பாபா, அரவிந்த் கேசரிவாலு, மம்தா பானெர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு எல்லாம் விமானப்படையின் இன்றைய சாகசத்தை வரவேற்றுப் பேசவேண்டியதாகி விட்டது.

     
தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இன்று முற்பகல் பாதுகாப்புக்கான காபினெட் கமிட்டிக்கு (மந்திரிசபைக்குழு) இன்று நடத்தப்பட்ட ஆபரேஷனில் ஜெய்ஷ் ஏ மொகமது தீவீரவாதக்குழுவின் 25 தளபதிகள் கதை முடிக்கப்பட்டதாகத் தகவல் சொல்லியிருக்கிறார்.  

பாகிஸ்தான் ராணுவத்தின் சவடால் இதை போட்ட சிறிது நேரத்திலேயே சாயம் வெளுத்துப்போனது ஒரு பரிதாபம் என்றால், சிலகாலமாக மோடியைக் கிண்டல் செய்தே கார்டூன் வரைந்துகொண்டிருந்த சதீஷ் ஆசார்யா கூடத் தன் கோட்டோவியங்களில் இப்படி!
   
payback என்றவுடன் இன்னொரு கார்டூன்!
அணுகுண்டுப் பூச்சாண்டி! பாகிஸ்தான் 1965 போரிலேயே மிகநவீன சாபர் ஜெட்டுகளை வைத்துக் கொண்டு வயல்வெளிகளில் குண்டு வீசிவிட்டுப்போனதும், பேட்டன் டாங்குகளை சகதியில் சிக்கவைத்து இந்திய ராணுவம் தண்ணிகாட்டியதும் இந்தப் பக்கங்களில் லால் பகதூர் சாஸ்திரி என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து வாசிக்கலாம்! பழைய கதைதான்! என்றாலும் பாகிஸ்தான் போட்ட தப்புக்கணக்குகள் என்னென்னவென்று பார்க்கலாமே! அபுதாபியில் சுகமாக வசிக்கும் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான பர்வேஸ் முஷாரஃப், நியூக்ளியர் ஆப்ஷனெல்லாம் கதைக்கு ஆகாதென்று பகிரங்கமாகப் போட்டுடைத்திருக்கிறார்! 
சுவனத்தில் 72 கன்னிகைகள் எல்லாம் கிடைப்பார்களா? சதீஷ் ஆசார்யாவின் இன்னொரு கார்டூன் நக்கலடிக்கிறது! தத்கல் புக்கிங்காம்!

Heavy firing by Pakistan along LoC, Army strongly retaliates

என்கிறது தற்போதைய நிலவரச் செய்தி!