Showing posts with label மாற்று அரசியல். Show all posts
Showing posts with label மாற்று அரசியல். Show all posts

சண்டேன்னா மூணு! #அரசியல் #திமுகஅரசியல் #மாற்றுஅரசியல்

இன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது  இத்தனை நாள் ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு திமுகவினர் அடுத்துவந்த தம்பட்டம் எல்லாம் கிழிந்து தொங்குகிறதாம்! போதாக்குறைக்கு ஒரு மாஜி திமுக பெண் அமைச்சருடைய தாயாரே நில அபகரிப்பு  சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார். என்னவென்று?  


பெற்ற தாயுடைய சொத்துக்களையே மோசடியாகத் தனது புருஷன் பெயருக்கு மாற்றிக்கொண்ட அந்த திமுக பெண் பிரமுகர் பூங்கோதை ஆலடி அருணா தான்! இந்த ஒரு சோற்றுப் பதம் போதாதென்றால் உங்கள் ஊரில் உள்ள திமுக பெரும்புள்ளிகளுடைய முன்கதை & பின்கதை சுருக்கத்தைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!


திமுக ஊதி ஊதிப் பெரிதாக்கி வந்த நாங்க தான் ஆச்சியப் புடிக்கப்போறோம் பலூனை இப்படி ஒரே நாளில் உடைத்துவிட்டார்களே! திமுக சொம்புகளுக்கு துக்கம் நெஞ்சை அடைக்காதா?  நெஞ்சே வெடிக்கும்படி ஒருத்தர் பொதுவெளியில் வாந்தி எடுத்திருக்கிறார்.


யாரிந்த விவேக் என்று விசாரித்தால், மின்னம்பலம் இணைய இதழில் இருப்பவர் என்று சொல்கிறார்கள். கடைசி மூன்று வரிகளில் சொல்லியிருப்பதைத்தானே இவர்களும் திமுகவுக்கு ஆதரவாக இத்தனைநாள் செய்து வந்தார்கள் என்று நான் கேட்கப்போவதில்லை!

தட்டிக்கேட்க ஆளில்லாமலிருந்ததால் இத்தனை நாள் திராவிட கழகம், தி மு கழகம் , சுபவீ செட்டியார், திருமா உள்ளிட்டபலரும் இது பெரியார் மண் அது இதென்று முண்டா தட்டிக் கொண்டிருந்தார்கள் யாராவது சிறிது சந்தேகத்தோடு கேள்வி கேட்டால் அவரை சங்கி என்று பழித்தார்கள்! ஆகாதவர்கள் எவரைப்பார்த்தாலும்  பிஜேபியின் B டீம் என்றார்கள்  அதையும் மீறிக் கேள்வி கேட்டால், கேட்காதே! பிஜேபி உள்ளே வந்துவிடும் என்றார்கள்! கடைசிவரை தாங்கள் யார், தங்களுடைய கொள்கை என்ன, சாதித்ததென்ன இவை எதையும் சொல்லாமலேயே அடுத்தவர்களை அவதூறாகப் பேசுவதொன்றையே!  முழுநேரத் தொழிலாக வைத்து இருந்தார்கள்  கடைசியில் என்ன ஆனது? சோணமுத்தா எல்லாம் போச்சா?.       


பெங்களூரு பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தேஜஸ்வி சூர்யா கூட, இந்த 10 நிமிட வீடியோ நேர்காணலில் ஊழலில் காங்கிரசும்  திமு கழகமும் ஊறித்திளைப்பவை என்பதனால் நேச்சுரல் கூட்டாளிகள் என்று சொல்கிறார். அண்ணாமலை IPS ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவார் என்பதையும் மிகுந்த நம்பிக்கையோடு சொல்கிறார் இதையும் திமுகவினர் செய்து வரும் வெறுப்பு அரசியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!  ஒப்பிட்டுப்பார்க்க இன்னொரு 7 நிமிட வீடியோ 



வெறும் 20 சீட்டுகளில் மட்டுமே போட்டியிடும் பிஜேபி மாற்று அரசியல் சக்தியா? மாற்றத்துக்கான சக்தியாக மிகுந்த வீரியத்துடன் பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பது சத்தியம்! 

தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை இதுநாள் வரை ஒட்டவிடாமல் வைத்திருந்த திமுகவை நிராகரிப்போம்! திமுகவுடன் சேர்ந்து கொட்டம் அடிக்கும் உதிரிகளான விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில்லறைகளையும்  முற்றிலும் நிராகரிப்போம்! தமிழகம் தனித்தீவல்ல! பாரதத்தின் ஒரு அங்கமே எனத் தலைநிமிர்ந்து சொல்லுவோம்!

மீண்டும் சந்திப்போம்

கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! மாறும் தேர்தல்களம்!

ரஜனிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பிக்க ஜனவரியில் நாள் குறித்து விட்டதாக நேற்றைக்கு அறிவித்ததில் தமிழக ஊடகங்கள் கலவரம் அடைந்திருக்கிற அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகள் எதுவும் கிளம்பக் காணோம்! 


ரஜனிகாந்த் இந்த 12 நிமிட வீடியோவில் என்னதான் சொன்னார் என்பதை விட இந்தப் பேட்டியைக் கவரேஜ் செய்ய வந்திருந்த ஊடகக்காரர்கள் எத்தனை கலவரம் அடைந்திருந்தார்கள் என்பதை பின்னால் கேட்கும் கூச்சல் குழப்பங்கள் காட்டியது மிக சுவாரசியமாக இருந்தது என்பது என்னுடைய கருத்து. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்பதெல்லாம் சுத்தமான ரஜனிகாந்த் அபத்தம்!


பன்னீர்செல்வத்துக்கு இது வேண்டாத வேலை! இதனால் எப்படி கார்த்தி சிதம்பரம் தப்புத் தப்பாக அரசியல் கணிப்பு செய்கிறார் பாருங்கள்! 

இது எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் மகன் கீச்சியது. அறிவுக்கொழுந்துகளுடைய கீச்சுக்கெல்லாம் எதிர் வினை அவசியமில்லை என்பதால் விட்டுவிடலாம். ஆனால் இன்னொரு எல்லாம்தெரிந்த ஏகாம்பரம் சுமந்த் சி ராமன் எதிர்க்கீச்சு போடாமல் இருப்பாரா?

 


  

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜனிகாந்த் மீது அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருப்பவர். அதிகமாக முட்டுக் கொடுப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை! ஆனால் எப்போதுமே வாக்களிக்க வராத 30% to  40%  வாக்காளர்களை வாக்களிக்க வைத்தால் ஒழிய, ரஜனி ஒரு அரசியல் மாற்றத்துக்கான சக்தியாக  உருவாக வாய்ப்பே இல்லை என்பது என்னுடைய கருத்து.

#மாற்றுஅரசியல் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து இந்தப் பக்கங்களில் தேடினால் புரிந்து கொள்ளவும் யோசிக்க உதவியாகவும் பல பதிவுகள் கிடைக்கும். மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜனியால் ஒருபோதும் முடியாது.     

ரஜனி கட்சியின் மேஸ்திரியாக (சூபர்வைசர்)  நியமனம் செய்யப் பட்டிருக்கும் தமிழருவி மணியனுக்கு என்ன மனத்தாங்கலோ தெரியவில்லை! முதல்வர் வேட்பாளராக  மாட்டேன் என்பதில் ரஜனி உறுதியாக இருக்கிறார். ஆனால் மக்கள் அவர்தான் முதல்வர் வேட்பாளராக வரவேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் ரஜனியிடமிருந்து  என்னைப்பிரிக்க சதி நடக்கிறது என்றும் சொல்லியிருப்பது உச்சபட்ச தமாஷ்!  காந்திய மக்கள் இயக்கம் நடத்தியவர் அல்லவா!   



ஹைதராபாத் பெருநகரக் குழுமத்துக்கான தேர்தலை தெலங்கானாவை ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி முன்கூட்டியே நடத்தியிருப்பதில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டே இருப்பதில் முழுமையான முடிவுகள் வெளியாகவில்லை. இரவு ஏழுமணிக்கு மேலும் ஆகலாம் என்று சொன்னதால், அதை முதலில் அடுத்த வீடு பகுதிக்காக எழுதலாம் என்று நிநினைத்திருந்தபடி முடியவில்லை. மேலே படத்தில் காணும் எண்ணிக்கை மாறலாம் என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.


குஷ்புவை ஒரு சீரியசான அரசியல்வாதியாக நான் எப்போதும் நினைத்ததில்லை. அதேநேரம் அவர் ஒரு sharp wit என்பதில் சந்தேகமிருந்ததுமில்லை! அவரிடம் வாயைக்கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட நபரை வலைப்பதிவுகளில் நண்பர்கள் சந்தித்திருக்கலாம்! நினைவிருக்கிறதா? 

மீண்டும் சந்திப்போம். 

சண்டேன்னா மூணு! TN காங்கிரஸ்! (ஈவெ)ராமசாமி! விவாதங்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கிறதே, அது எதிலும் சேர்த்தியில்லாத ஒரு வினோதமான ரகம்! சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று வைதாலும் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் அடுத்தகட்சியின் தோளேறி சவாரி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்ற பரந்த சுயநலம் கொண்டவர்கள்! இந்தக் கிறுக்கு மாய்க்கான்களை நம்பி தமிழ்நாட்டில் வாக்களிக்கவும் ஒரு சிறுபகுதி மக்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய வினோதம்!அப்படி வாக்களிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்பதுதான் திமுகவின் துரைமுருகன் ஆரம்பித்து வைத்திருக்கிற விவாதம். விவாதத்தைத் தொடர விடாமல் கஃங்கிரசின் கே எஸ் அழகிரி, திமுக தலைவர் இசுடாலினை சந்தித்து, பிரச்சினையை முடித்து வைக்க முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பின்னணியில் தந்திடிவியின் நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கே எஸ் அழகிரி ஹரிஹரனோடு உரையாடியது எப்படி இருந்ததாம்?


இதை ஒரேவார்த்தையில் விமரிசிக்க  வேண்டுமானால், சமாளிக்க முயன்றும், சொதப்பல் என்று முடித்து விடலாம்! ஆனால் தமிழக அரசியல் களம் இதுமாதிரி அடிக்கடி நிகழும் உரசல்கள், சொதப்பல்கள், நீயாநானா  விவாதங்களைத் தாண்டியும், மெகா சீரியல் மாதிரிப் போய்க்கொண்டே இருப்பது என்பது புரிந்தவர்கள் மகான் வடிவேலு படக் காமெடியில் பொருத்தமான ஒன்றை நினைவுபடுத்திக் கொண்டு, சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள். திமுக மாதிரி ஒரு கட்சியின் துணை இல்லாமல் தனித்தே தேர்தலை எதிர்கொள்கிற தைரியம் கட்சித் தலைவர்கள், பிரமுகர்களுக்கு இல்லை. இது தொடர்பான கேள்வியைக் கூட, ஒரு மழுப்பலான பதில் சொல்லி முடித்துவிடுகிறார். திமுகவின் நிலையும் கூட கூட்டணி இல்லாமல் தேர்தலை இதுவரை சந்தித்ததே இல்லை என்பதுதான்! ஆனால் திமுகவின் பலமே, துரை முருகன் மாதிரி உதார் விடத்தெரிந்தவர்கள் தான் என்பது புரிகிறதா?  இந்த 40 நிமிட விவாதத்தில் என்ன கேள்வி? என்ன பதில்?  விடை தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்! இதைவிடக் கொஞ்சம் காரசாரமான விவாதம் இங்கே 55mts 


இங்கே தமிழக அரசியல் களம் திராவிட கட்சிகளை மையமாக வைத்தே இருப்பதான பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதில், மிகவும் வேடிக்கையான விஷயம் ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? அந்தக் கழகம் அல்லது இந்தக் கழகத்தோடு கூட்டணி வைத்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கும் தேசியக் கட்சிகள் என்று அறியப்படும் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜேபி இப்படி எல்லாவற்றிலும் இந்தக்கழகத்தோடு கூட்டு வைத்திருக்கும்போது, கட்சிக்குள்ளேயே அந்தக் கழகத்துக்கு ஆதரவாக இருப்பது, பேசுவது, குழப்புவது என்றிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அப்படிக் கவனித்திருந்தால், மதன் ரவிச்சந்திரன் இந்த வினோதத்தை அறியாமல்  எதற்காக 31 நிமிடம் ராமசுப்ரமணியத்தோடு விவாதிக்கிறார் என்று சிரித்தே கடந்து போய்விடுவீர்கள்! 

ஆனால், இந்த விவாதம் தாண்டி எனக்கு மிக வினோதமாகத் தெரிவது, இங்கே மார்க்சீயத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லிக்கொள்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் \ இருப்பவர்களே கூட மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் இவர்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஈவெ.ராமசாமியைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்குப் போவிட்டதுதான்! திமுக உள்ளிட்ட கழகங்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டதில் ஈவெ ராமசாமி பெரியாராகக் கட்டமைக்கப்பட்டார். ஈவெராமசாமி எந்த ஒருவிஷயத்திலும் ஒரு தெளிவான தீர்வைக் கண்டு சொன்னதில்லை. குழப்பங்களின் மொத்த உருவமாகவே தெரிகிற  ஈவெ.ராமசாமி அப்படியென்ன சமூகப்புரட்சி செய்துவிட்டார்? சாதிகள் ஒழிந்து விட்டதா? என்ன பெரிய தத்துவம், சாதனை செய்துவிட்டார்   என்பதற்காக இடதுகள் இப்படித் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்? இடதுசாரிகள் சீரழிந்ததற்கு, இந்தமாதிரி கலப்படம் நிகழாமல் தத்துவார்த்தப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வழிகாட்டிவந்த EMS நம்பூதிரிபாட் மாதிரி இன்னொருவர்  கம்யூனிஸ்ட் கட்சியில் உருவாகாமல் போனதுதான் காரணமோ  என்ற கேள்வி எனக்குள் உரக்க எழுகிறது. 

இந்த இரு விவாதங்களைத் தொடர்ந்து  எழுகிற சில முக்கியமான கேள்விகள்:

1. காங்கிரசின் ஆயுள் முடிந்து விட்டது. ஒரு சரியான மாற்று அரசியலை முன்னெடுக்க முடியாமல் ஒரு குடும்பத்தை முன்வைத்தே அரசியல் செய்கிறவர்களைக் குறித்து ராமச்சந்திர குகா வெள்ளிக்கிழமை கோழிக்கோட்டில் நாக்கைத் பிடுங்கிக்கொள்கிறமாதிரிக் கேட்டுவிட்டார்! யாரை? ராகுல் காண்டியைத் தேர்ந்தெடுத்த கேரள மக்களுக்கு மட்டுமல்ல, காங்கிரசை இன்னமும் ஆதரிக்கும் மனோநிலை கொண்டவர்கள் எல்லோருக்கும்தான்! காங்கிரசுக்கு பதிலாக தேசிய அளவில் யாரை மக்கள் முடிவு செய்யவேண்டும்? 

(அப்படி ஒரு தெளிவில்லாததால் தான் இன்னமும் மாநிலக் கட்சிகள் உயிர்ப்போடு இருக்கின்றன என்பது சேர்த்துப்பார்க்கவேண்டிய விஷயம்)

2. வலதுசாரி பிஜேபிக்கு எதிராக ஒரு வலுவான இடது சாரி இயக்கம் வேண்டும் என்று முந்தைய நாட்களில் குரல் கொடுத்த ராமச்சந்திர குகாவே, கேரளாவில் நேற்று முன்தினம் இடதுசாரிகளைக் குறித்து கடும் விமரிசனத்தை முன்வைத்திருக்கிறார். இடதுசாரிகள் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கத் தவறிவிட்டார்களா? 

(வலதுசாரிகளுக்கு எதிராக இன்னொரு வலதுசாரி அமைப்பு உருவாகக்  கூடாதா? குறிப்பாக இங்கே இடதுசாரிகள் தங்கள் சுயத்தை இழந்து, குறுகிப் போய்க் கிடக்கையில் இடதுசாரிகளால் ஒரு மாற்று அரசியல் முன்னெடுக்க முடியாது என்ற பின்னணியில் சேர்த்துப் பார்க்க வேண்டிய விஷயம்)     

மீண்டும் சந்திப்போம்.                    

மாற்று அவசியம்தான்! எதை நம்பி மாற்றுவது?

மம்தா பானெர்ஜி நடத்திய வீதி நாடகத்துக்கு, உச்சநீதி மன்றம் இன்று முற்றுப்பள்ளி வைத்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. மத்திய அரசின் வழக்கறிஞர் நளின் கோஹ்லி, உச்சநீதிமன்றம், மம்தா வெர்சஸ் மோடி என்றாக்கப்பட்ட சாரதா நிதிநிறுவன மோசடி விவகாரத்தின் மீது பேசுகிற ஒரு சிறு காணொளி.
 
உச்சநீதிமன்றம், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார், சிபிஐ முன் ஆஜராகவேண்டுமென்றும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென்றும் தெரிவித்திருப்பதை, மம்தா பானெர்ஜி தனக்குக் கிடைத்த வெற்றியாகப் பறைசாற்றிக் கொண்டிருப்பது இந்திய அரசியல்களம் எவ்வளவு கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறதென்பதற்கு சிறந்த உதாரணம்.

சாரதா குழுமம் லட்சக்கணக்கானவர்களை மோசடி செய்ததில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது மறைக்க முடியாமல் போன தருணங்களில், மம்தா பானெர்ஜி இதே ராஜீவ்குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது ஒருபுறமென்றால், 40000 கோடி ரூபாய் அளவு மோசடி நடந்திருக்கலாம் என்ற சூழலில் வெறும் 500 கோடிரூபாய் மட்டும் மீட்கப்பட்டதாக, எல்லோருக்கும் பணம்  திருப்பிக் கொடுக்கப்பட்டதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றியதும் இதே மம்தா தான்!

இந்தக் குழாயடிச் சண்டைக்கு யார் யாரெல்லாம் ஆதரவு எதற்காக ஆதரவு என்பது ஜனங்களுக்குத் தெரிந்தே இருக்கிறது! ANI செய்தி ட்வீட்டுக்கு வந்த பின்னூட்டங்களே, ஒரு சோறு பதமாக! மோடிக்கு எதிரான மெகாகூட்டணி என்பது பிரதேசங்களால் பிரிக்கப் பட்டிருந்தாலும் ஊழலால் ஒன்று சேர்ந்து கூடியிருப்பது என்று மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொன்னதில் பொய்யில்லை!    

7:07 AM - 4 Feb 2019  

The CBI’s contribution to this opposition unity is huge as India heads to the 17th general election. These parties have buried mutual animosities for another day; for, if Mr. Modi retains power, they may not survive to fight another battle.
Mr. Modi’s ‘take-no-prisoners’ politics has united all his opponents. And Ms. Banerjee is using the same strategy as Mr. Modi when he was Gujarat Chief Minister for 12 years இது ஹிந்து நாளிதழின் கண்டுபிடிப்பு 
தன்னுடைய கட்சிக்காரர்கள் கைது செய்யப்பட்ட போது கூடப் பொங்காத, தெருவில் இறங்கிக் குழாயடிச்சண்டைபோடாத மம்தா பானெர்ஜி.ராஜீவ் குமார்  சிபிஐ விசாரணைக்கு அழைக்கப் பட்டபோதுமட்டும் பொங்குவானேன்? மம்தா பானெர்ஜி அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் வைத்திருப்பதாக இந்தச் செய்தி சொல்கிறது!  
திருடன் முந்திக்கொண்டு திருடன்! திருடன்!என்று கூட்டத்தில் கூவிக்கொண்டே தப்பிக்கிற மாதிரி, இங்கே ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு கூட்டம் மெகா கூட்டணி அமைத்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறதே!
கவனிக்கிறோமா? 
இன்னுமொருமுறை இவர்களிடம் ஏமாறமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கப்போகிறோமா? 
மாற்று அவசியம் தான்! ஆனால் எப்படிப்பட்ட மாற்று என்பது தான் இங்கே மிக முக்கியமான கேள்வி!            

காலம் செய்த கோமாளித்தனத்தில்! இந்திய அரசியல்

நண்பர் அசோக்குமார் தினசரி காலண்டர் படம் ஒன்றைத் தனது கூகிள் ப்ளஸ் பகிர்வில் போடுவார். இன்றைக்கு இப்படி சேதிசொல்வதாக!


இதைப்பார்த்தவுடன்  படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் வரும் இந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது.

   
அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால் அறிஞனும் கோமாளி ! படித்ததை எல்லாம் பயன் படுத்ததாவன் முதல்தர கோமாளி ! ரொம்ப படித்தவன் போல் நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி

இன்றைக்கு விவசாயிகள் தினம்! சரண்சிங் பிறந்த தினம்! என்றவரிகளை மிகச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடிகிறதா என்ன? விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டது 1990 இல்! அதுவும் சவுத்ரி சரண்சிங் பிறந்த தினத்தைத்தான் விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் யார் அந்த சரண்சிங் என்பதைக்கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா?

இந்த நாட்டின் ஐந்தாவது பிரதமர்! காங்கிரஸ் அல்லாத இரண்டாவது பிரதமர்! இந்திராகாந்தியின் அரசியல் சூதுகளில் ஆறே மாதத்தில் பதவி இழந்தவர் என்று மட்டும் சவுத்ரி சரண்சிங்கின் சரித்திரத்தைக் குறுக்கிவிட முடியாது.

ஆரிய சமாஜத்திலும், பிறகு ஒரிஜினல் காந்தி காலத்து காங்கிரசில் சுதந்திரப்போராட்ட வீரராகவும் நேரு காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் முக்கியமான மூன்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் சவுத்ரி சரண்சிங்! 1959 இல் காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் கற்பனாவாத சோஷலிசத்தை எதிர்த்துக் குரல் கொடுத்ததில் இந்தியா முழுக்க அறியப்பட்டவராகவும் ஆனார்! ரஷ்யபாணி பொருளாதாரக் கொள்கை எல்லாம் இந்தியாவில் எடுபடாது என்று சரண்சிங் எதிர்த்தார். உள்ளூர் விவசாயிகளின் குரலாக அவருடைய குரல் ஒலித்தது. எதிர்க்கருத்துக்களை நேரு புறக்கணித்ததன் விளைவாக அங்கங்கே மாநிலக் கட்சிகள் உருவாகி வலிமைபெறத் தொடங்கிய காலம் அது. காங்கிரசில் இருந்து வெளியேறி 1967 இல் பாரதீய கிரந்தி தளம் என்ற கட்சியைத் தொடங்கிய சூட்டிலேயே ராஜ்நாராயண், ராம் மனோகர் லோஹியா ஆதரவோடு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரசல்லாத முதல் முதலமைச்சராகவும் ஆனவர்! அப்போது ஒரு வருடம் மட்டுமே நீடிக்க முடிந்ததென்றாலும் மறுபடி 1970 இல் முதல்வரானவர்! 1975 இல் இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திராவின் எமெர்ஜென்சி காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஜனதா தளம் என்று ஒரே அமைப்பாக ஒருங்கிணைத்தது. சரண்சிங்கின் கட்சியும் அதிலிருந்தது. 1977 தேர்தலில் இந்திராகாங்கிரஸ் மண்ணைக்கவ்வியது. ஜனதா தளத்தின் பிரதமராக மொரார்ஜி தேசாய் தான் இருக்க வேண்டும் என்று ஜெயப்ரகாஷ் நாராயண் விரும்பினார். பிரதமராகவேண்டுமென்கிற ஆசையில் இருந்த சரண்சிங் அதிருப்தியுடனேயே அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தார், உள்துறை, நிதி இரண்டு துறைகளைக் கையாள்கிறவராகவும்!

மிக அற்பமான காரணங்களால் ஜனதாதளம் என்கிற அற்புதமான மாற்று அரசியல் முயற்சி 1979 இல் கவிழ்க்கப்பட்டது. ஜனதா தளத்தில் இணைந்திருந்த ஜனசங்கம் வெளியேறியது. ஜனதா தளம் (செகுலர்) என்ற புதுப் பெயருடனான மீதமிருந்த கட்சிகளுடைய ஆதரவுபோக இந்திரா காங்கிரசின் ஆதரவையும் சேர்த்துக் கொண்டு சவுத்ரி சரண்சிங் இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக 1979 ஜூலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒருமுகமாகத் திரண்டஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை இந்திராகாந்தி பெரும் சூதினால் உடைத்து ஆறேமாதத்தில் சரண்சிங் ஆட்சியைக் கவிழ்த்தார். மறுபடியும் ஆட்சியைப் பிடித்தார் என்பது காலம் செய்த கோமாளித்தனமா? வாக்காளர்களுடைய ஏமாளித்தனமா?

சவுத்ரி சரண்சிங் மிக வெள்ளந்தியான மனிதர். நேரு, வாரிசுகளுடைய சூதுவாதெல்லாம் அறியாத அரசியல் அவருடையது. விவசாயிகளுடைய குரலாக முதன் முதலில் ஒலித்ததும் சரண்சிங்குடைய குரல்தான்!

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பழங்கதை இது! இங்கே இணையத்தில் அவரது நினைவகளாக

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! கமல் ஹாசன் அரசியல்! தேறுவாரா? ஒரு விவாதம்

நேற்று கமல்ஹாசன் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானியுடன் ரிபப்ளிக் டிவியில் பங்குகொண்ட ஒரு விவாதத்தின் மீது  கூகிள் ப்ளஸ் நண்பர்களுடன் ஒரு சிறு விவாதம் அல்லது உரையாடலாக நடந்தது





இது பொன்மாலைப்பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் பகிர்ந்திருக்கிற நையாண்டி கமென்ட்.

B R மகாதேவன் தினசரி தளத்தில்  ஒன்றரை மணிநேர டிவி விவாதத்தைப் பொறுமையாகப் பார்த்து விட்டு முக்கியமான விஷயங்களைத் தமிழில் தந்திருக்கிறார்.

இங்கே அந்த தொலைகாட்சி விவாத வீடியோவைப்  பார்த்துவிட்டு கமல் ஹாசன் முன்னெடுக்கிற அரசியல் எப்படிப் பட்டது? அரசியலில் கமல்ஹாசன் தேறுவாரா? தசாவதார நடிகர் அடுத்த அ(வ)ரிதாரம் பூசியிருப்பது மட்டுமே தான் அவருடைய அரசியலா? 2019 நாடாளு மன்றத் தேர்தல்கள் எப்படியிருக்கும் என்று சொல்கிறார்கள்?

இவையெல்லாம் இந்தவார வெள்ளிக்கிழமைக் கேள்விகளாக! பதில் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் !
   


#கமல்ஹாசன்#ஸ்மிருதி இரானி #ரிபப்ளிக் டிவி பேட்டி! தமிழில் சாத்தியமா? என்ன சொன்னார்கள் அவர்கள்!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது… நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார். ஸ்மிருதி இரானிக்கும்…
கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி பேட்டி! கனவு காண்பவர் Vs செயல்வீரர்கள்!





செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள்! டில்லித்தேர்தல் முடிவுகள்! ஏமாறப்போவது யாரோ?

டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகளை முற்றிலும் எதிர்பாராதது என்று சொல்லி விட முடியாது. ஆனாலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகரித்திருக்கிற வாக்குசதவீதம் கொஞ்சம் ஆச்சரியப் படுத்தத்தான் செய்கிறது.  


வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறையில்  கட்சிகள் வாங்குகிற  வாக்கு சதவீதத்துக்கும்  கெலிக்கிற சீட்டுகளுக்கும் சம்பந்தமே இருக்காது என்பதைப் புரிந்து கொண்டால் கிடைத்திருக்கிற சீட்டுக்கள் மயக்கத்தைத் தராது. தவிர இதற்கு முன்னால் ராஜீவ் காந்தி காலத்தில் இப்படிக் கிடைத்த அதிக சீட்டுக்கள் காங்கிரசுக்கு ஜன்னியை உண்டுபண்ணியதும்   கட்சித்தாவல் தடை சட்டம் கொண்டு வந்த கூத்தும்   நினைவுக்கு வருகிறதா? 


The AAP landslide is driven by the same junoon that propelled Modi into power. That exaggerated hope leads inevitably to exaggerated disillusionment. The BJP rout will undoubtedly hearten Modi critics but it should offer little comfort to Kejriwal who is likely to feel the brunt of all that impatience very soon.

ஊடகங்கள் கணிப்பதில் ஐந்து தவறுகளைச் செய்ததாகச் சொல்கிற இந்த செய்திக் கட்டுரை தான் இப்படி முத்தாய்ப்பாகவும் சொல்கிறது. இதே தளத்தில் டில்லியின் அர்பன் வாக்காளர்கள் பொறுமையற்றவர்கள்  என்றும் சொல்லி  ஒரு ஆறு விஷயங்களை டில்லித் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும்  சொல்லியிருப்பது அதிகபட்ச ஊடக அபத்தக் காமெடி.  


பிஜேபி இந்தத் தோல்வியை எப்படி எடுத்துக்கொள்கிறது? இந்த முடிவுகளை எல்லோரையும்போல எதிர்பாராதது, இமாலயத்தவறு நடந்துவிட்டது என்று சொல்லப் போகிறார்கள் என நினைத்தால் அது தவறு. டில்லியில்  ஜனங்களுடைய மனநிலைமை  எதிராக இருப்பதை, டில்லி யூனியன் பிரதேசத்தில் பிஜேபியின் கட்சி அமைப்பு பலவீனமாக இருப்பதை, ஒரு நல்ல உள்ளூர்முகத்தைக் காட்டமுடியாமல், உட்கட்சிப் பூசல்களுடன் இருந்ததை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள் என்றே விஷயம் தெரிந்த அரசியல்பார்வையாளர்கள் சொல்கிறார்கள். யதார்த்தா பென்னேஸ்வரன்   போன்ற டில்லிவாசிகளின் கணக்குக் கூடக் கொஞ்சம் பொய்த்துப்போன அதிசயம், நடந்தது  உண்மையிலேயே அதிசயம்தானா என்ற கேள்விதான் இப்போது முன்னுக்கு வந்து நிற்கிறது.
 

இது எழுத்தாளர் மாலனுடைய முகநூல் பகிர்வு. இதில் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி உண்மை. நாடாளுமன்றத் தேர்தல்களில் கருத்துக் கணிப்பு, எதிர்பார்ப்புக்கள் எல்லாம் காங்கிரஸ், பிஜேபி அல்லாத மூன்றாவது அணி தான்  முன்னிலை வகிக்கும், அதிலும் மம்தா பானெர்ஜி, மாயாவதி, ஜெலலிதா ஆகிய மூவர்தான் அடுத்த அரசியல் திருப்பத்துக்கு முன்னிலை வகிப்பார்கள் என்று தேர்தகள் பண்டிதர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன படியே  மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும்  தேர்தல் முடிவுகள் இருந்தன. தேர்தல் பண்டிதர்கள்  கணக்கைப் பொய்யாக்கி பிஜேபி  தனித்தே 283 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த வேகத்திலேயே கடந்த  எட்டு மாதங்களில்  காஷ்மீர்  கொல்கத்தா என்று வரிசையாக அடித்து  ஆடிக் கொண்டிருந்ததில் நிறைய சலசலப்புகள், எதிர்ப்புக்களை மோடிக்கு எதிராகத் திரட்டுவதில் அத்தனை கட்சிகளும் ஒன்று பட்டு நிற்கிற மாதிரி ஒரு சித்திரம் உருவானது. ஆனால் முற்றுப் பெறாத  சித்திரமாக, சரியான தலை(மை)யில்லாமல் இன்னமும் இருப்பதிலிருந்தே மாலன் சொல்ல விட்டுப்  போனதாக, மாநிலக்கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிற விஷயம் இருக்கிறது.  அதே நேரம், காங்கிரஸ் விட்டுப்போன வெற்றிடத்தை இந்தியா முழுமைக்குமாக பிஜேபியால் நிரப்ப முடியவில்லை, அதற்கு இன்னும் கொஞ்ச காலம் பிடிக்கும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தில்லி தேர்தல் முடிவு திருப்பு முனையானது. ஜனநாயகத்தில் அரசியல் பழிவாங்கும் போக்குக்கு இடமில்லை என்பதை காட்டியுள்ளது. இந்த மாற்றம் இப்போதைக்கு அவசியமான ஒன்று என மம்தா பானெர்ஜி  கூறியுள்ளார். ஆனால் என்ன புலம்பினாலும் சாரதா சிட் ஃ பண்ட் ஊழல் விவகாரம் மம்தா பானர்ஜியின் அரசியல் சகாப்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிற அபாயம் நீடிக்கவே செய்கிறது.

இந்தப் பேட்டியில் சுதிப்தோ சென் கூறியிருப்பது என்னவெனில், ""சாரதா நிதி நிறுவனம் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப் பிரிவு உடனடியாக இந்த வழக்கில் இணைக்காவிட்டால், "கொள்ளைக்கார கட்சி' எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டுவிடும்'' என்று கூறியுள்ளார். கட்சியின் பெயரை அவர் குறிப்பிடாவிட்டாலும், அது மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் என்று பேசப்படுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், அமைச்சர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனியும் மத்திய அரசு பழிவாங்குவதாக மம்தா பானர்ஜி சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.என்கிறது தினமணி தலையங்கம்   

இந்த எட்டு  மாதங்களில் மத்தியில் பிஜேபி ஆட்சி மிகப்பெரிய சாதனைகளைச் செய்து முடிக்காவிட்டாலும் . ஜீபூம்பா கூட, கெட்ட பெயரைச் சம்பாதிக்கவில்லை என்ற சூழ்நிலையில் டில்ல்லி வாக்காளர்கள் இப்படி ஒரு தேர்தல் முடிவைத் தர வேண்டிய காரணம் என்ன? 

முக்கியமாக பெருநகரங்களில் குறிப்பாக டில்லியில் வாக்காளர்களுடைய எதிர்பார்ப்பு, பொறுமையின்மை இரண்டுமே  அதிகரித்துக் கொண்டே வந்த விதம். ஏன்  எப்படி என்ற சால்ஜாப்புக்கெல்லாம் காது கொடுத்துக் டில்லி ஜனங்கள் கேட்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தார்கள்  ஜீபூம்பா என்பாயோ திறந்திடு செசேம் என்பாயோ எங்களுக்கு வேண்டியது எல்லாம் குறைந்த விலையில் மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து இப்படி அடிப்படை வசதிகள், அவ்வளவுதான்! ஜனங்களைக் கிளர்ந்தெழச்செய்வது மிக எளிது. ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதானது அல்ல. இப்படி ஒரு இடியாப்பச்சிக்கலில் தலையைக் கொடுத்துவிட்டு, பதில் சொல்ல முடியாமல்  49 நாட்களிலேயே ராஜினாமா செய்துவிட்டு ஓடிய ஒருவரை மறுபடி மொத்த சீட்டுக்களையும் கொடுத்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் மஞ்சள் தண்ணீர் தெளித்து ஆட்டை ரெடி செய்து விட்டார்கள் என்பது மட்டும் தெளிவு. இப்படி ஒரு நிலைமை தங்களுக்கும்  வரலாம், அதைவிட டில்லி கைவிட்டுப் போனாலும் பரவாயில்லை என்ற தெளிவோடுதான்  பிஜேபியினர் இருந்தார்கள் என்று தான் படுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால் அனுபவமில்லாத ஒரு அவசரக்குடுக்கை . குருட்டுப் பூனை எங்கே எப்படித் தாவும்  என்றெல்லாம் இப்போதே சொல்ல முடியாது.

அர்பன் வாக்காளர்கள் ஓர் புதிய போக்கைக் காட்டியிருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஏமாறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய ஜனநாயகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அது.

..

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்! குறட்டை விட்டோரெல்லாம்....?



இன்றைய ஜூனியர் விகடனில், வைகோவை ஒரு மாற்று அரசியல் சக்தியாக அடையாளம்காட்டி, தமிழருவி மணியன் நடத்திய ஒரு கூட்டத்தைப் பற்றிய செய்திக்கட்டுரை வெளியாகி இருக்கிறது.மாற்று அரசியல் தீர்வாக வைகோ தமிழக முதல்வராவது ஒன்று தான் வழி என்று தமிழருவி மணியன் முழங்கியிருக்கிறார். கூட்டத்தில், மதிமுக தவிர இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும்  கலந்து கொண்டிருக்கிறார்கள்

ஜெயலலிதாவிடம் கெஞ்சிப் பார்த்து கேட்ட சீட் கிடைக்கவில்லை என்றதும் விசயகாந்திடம் ஓடிப்போய்  மூன்றாவது அணி அமைக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பி  தமிழருவி மணியன் எந்த தைரியத்தில் இந்தக் கூட்டத்தை நடத்தினார், கம்யூனிஸ்ட் கட்சிகள் இதற்கு ஒப்புக் கொண்டனவா என்பது கூட கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. ஏற்கெனெவே மதிமுகவிடம் கூட்டணி வைத்திருந்த கட்சி மார்க்சிஸ்ட் கட்சி என்பதும் மார்க்சிஸ்டுகளின் அரசியல் கணக்கே வேறு என்பதும் கட்டுரையாளருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை. போகட்டும்!

வைகோ மீது ஒரு தனிமனிதராக, ஒருதிறமையான நாடாளுமன்றவாதியாக, எனக்கு மட்டுமல்ல, இங்கே நிறையப்பேருக்கு  மரியாதையும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால், ஒரு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்துவதில் வைகோவுக்கு சாமர்த்தியமில்லை! குறிப்பாக தனக்கு அடுத்த படியாக ஒரு நம்பிக்கையான ஆதரவாளர்களை இரண்டாவது மட்டத் தலைவர்களாக உருவாக்குவதில் கூட வெற்றி பெற முடியாதவர் அவர்.. அதுவும் கருணாநிதி விரிக்கும் வலைக்குள் சிக்குகிறவர்களாகவே அவரைச் சுற்றி ள்ளவர்கள் இருப்பது வைகோவின் தலைமை எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு அடையாளம்.

ஆளை மாற்றினால் அரசியல் சூழலும் மாறிவிடுமா? தனி ஒரு நபரால் இத்தனை சீரழிவையும் மாற்றி விட முடியுமா?தமிழருவி மணியன் சொல்கிற தீர்வு உண்மையிலேயே, சரியான தீர்வு தானா? நடைமுறை சாத்தியம் தானா? முதலில் அந்த செய்திக் கட்டுரையைப் படித்து விடுவோம்.

''கருணாநிதி, ஜெயலலிதாவை விட்டால் வழியே இல்லையா?

தகதகக்கும் தமிழருவி மணியன்


மிழக அரசியல் வெளியில் தமிழருவி மணியனால் புதிய காற்றழுத்தம் ஒன்று உருவாகி இருக்கிறது. 'மாற்று அரசியல்’ எனும் மேடையில் வேறு பட்ட அரசியல் தலைவர்கள் சிலரை ஒருசேர நிறுத்தி நெடிய அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறார்!

தமிழருவி மணியனின் 'காந்திய மக்கள் இயக்கம்’ கடந்த 7-ம் தேதியன்று தனது இரண்டாவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம். மேடையில்... ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து வந்து மணியன் அமர்த்த, மக்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் ப்ளஸ் ஆச்சரியங்கள். '

'இது காந்தியச் சிந்தனைகளை விளக்குவதற்கான மேடை மட்டும் அல்ல. இது ஒரு போராட்டக் களம். நம்மை ஆள வேண்டியோரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் அல்ல ஜனநாயகம். அவர்கள் தவறிழைக்கும் போது அதை எதிர்த்துப் போராடுவதும்தான் ஜனநாயகம்...'' என்று ஒரு பொறியைப் பற்றவைத்து விட்டு அமர்ந்தார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், இந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளருமான பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி.

'இன உணர்வாளர்’ என்ற முறையில் இந்தக் கூட்டத்துக்கு  அழைக்கப்பட்டு இருந்தார் இயக்கு நர் தங்கர்பச்சான். ''தயவுசெஞ்சு என்னோட பேச்சுக்கு யாரும் கை தட்டாதீங்க. கை தட்டி, விசிலடிச்சே நாசமாப் போயிட்டிருக்கோம் நாம...'' என்று ஆவேசப்பட்டவர், ''இந்த மேடையில் அச்சப்படாமல் பேசலாம். காரணம், இங்கு அமர்ந்திருப்பவர்கள் நேர்மையானவர்களே தவிர, அரசியல் பிழைப்புவாதிகள் அல்ல. சுதந்திரத்துக்கு பின் 50 ஆண்டு காலமாக ஒரே குடும்பம் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறது. இதை ஜனநாயகம் என்கிறோம். மக்களாட்சி என்கிறோம். கேடு கெட்ட விஷயம் இதுதான். ஓட்டுப் போடுற மக்கள் பிச்சைக்கார மனநிலையில் இருப்பதுதான் அரசியலைப் பிழைப்புக்குப் பயன்படுத்தும் பேர் வழிகளுக்கு வசதி யாகிவிட்டது. கொடுக்கின்ற இலவசத்தை வாங்கி இனி அவன் மூஞ்சியிலே விட்டெறியுங்கள். அதன் பிறகு கதை வேறு விதத்தில் பயணிக்கும்'' என்றார் குரல் உயர்த்தி.

மைக்கைப் பற்றிய தமிழருவி மணியன் ரௌத் திரமும், ஆதங்கமும் ஒரு சேர வீசிய பேச்சு தமிழக அரசியல் மேடைகளுக்கு விதிவிலக்கு.

''இந்த நிகழ்ச்சியை 'மூன்றாவது அணி’ அமைப்புக்கான வேலை என்று சிலர் மிகத்தவறாகப் புரிந்துகொண்டு விட்டார்கள். இல்லை... இது, 'மாற்று அரசியல்’ அமைவுக்கான தளம். மேடையில் இருக்கும் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள்தான் கருணாநிதிக்குப் பின்னும், ஜெயலலிதாவுக்குப்  பின்னும் மறைந்தே அரசியலை நடத்துவது? தேர்தல் முடியும் வரை உங்களைப் பயன் படுத்திவிட்டு, பிறகு தூக்கி எறியப்படும் நிலை எத்தனை நாளைக்கு வேண்டும்? எங்களுக்குத் தேவை ஊழலின் நிழல் படாத அரசியல். 

நேர்மையான அரசியலைத் தேடி நான் அறிவாலயமா செல்ல முடியும்?
போயஸ் தோட்டம்தான் செல்ல முடியுமா? 

ஊழலைப் பொதுப்புத்தி ஆக்கிவிட்டார் கருணாநிதி. அரசு அதிகாரிகளை சசிகலா கூட்டம் ஆட்டுவித்தபோது ஆத்திரப்படாத ஜெயலலிதா, பொதுப் பணத்தை அந்த மன்னார்குடி குடும்பம் வாரிச் சுருட்டியபோது ஆத்திரப் படாத ஜெயலலிதா, எப்போது ஆத்திரப்பட்டார்? பெங்களூருவில் இருந்தபடி தனக்கு எதிராக அவர்கள் சதியாலோசனை நடத்துகிறார்கள் என்று தெரிந்ததும்தானே? இந்த ஜெயலலிதாவிடம் எப்படிப் பொது நலனை எதிர்பார்க்க முடியும்? 

காங்கிரஸும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை. அதனால் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு பொது நலனுக்காக உருகும் நீங்கள் கைகோக்க வேண்டும். நீங்கள் மாற்று அரசியலைக் காண்பித்தால், மக்கள் உங்களை விரும்புவார்கள். அதில் எனக்குத் தெரிந்த மாற்று வழி, வைகோ முதல்வர் ஆவதுதான். அதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மாற்றத்தை உருவாக்க நாங்கள் தயார். மற்றபடி உங்கள் விருப்பம்'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

எதிர்பார்ப்புகளுக்கிடையில் தன் உரையைத் துவங்கிய வைகோ, ''தமிழகம் கட்டுக்கடங்காத பிரச்னைகளை சந்தித்துக்கொண்டு இருக்கும் வேளை யில் இப்படி ஒரு தளத்தில் கூடியிருக்கிறோம். தமிழருவி... நீங்கள் உங்கள் விருப்பத்தை வெளியிட் டிருக்கிறீர்கள். தியாக இயக்கமாம் ம.தி.மு.க. தேர்தல் அரசியலில் இயங்குவதுதான். நாங்கள் சில கால கட்டங்களில் சிலரோடு கூட்டணி வைத்திருந் தோம் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் என்றுமே தமிழர்நலன் என்ற கொள்கையை விட்டுக்கொடுத்ததும் இல்லை, சுயமரியாதைக்குப் பங்கம் வரும்போது பொறுத்துக்கொண்டதும் இல்லை. அதனால் பதவி, அதிகாரம் இதை எல்லாம் நாங்கள் என்றுமே எதிர்பார்த்ததும் இல்லை. நாங்கள் அண்ணாவின் வார்ப்புகள். விஷச் சூழலில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எரிமலை, அறிவித்துவிட்டு வெடிப்பது இல்லை, புயல் சொல்லிக்கொண்டு அடிப்பது இல்லை. அது போல் மக்கள் புரட்சி வரும்... கூடவே மாற்றமும் வரும்'' என்று ஒரு புள்ளி வைத்தார்.


விடை தெரியாத கேள்வியோடு கூட்டம் விடை பெற்றது!

(கட்டுரையாளர் ஒரே ஒரு உண்மையைத் தன்னையறியாமலேயே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை தான்!) 
 (அதிமுக நாடாளுமன்றத் தேர்தல்களில் மதிமுகவை அரவணைத்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே இப்போதைய செய்திகள் சொல்கின்றன).


-------------------------------------------------------------------------------------------------------------

இங்கே அரசியல், நிர்வாகம் நீதித்துறை, ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று சொல்லப்படும் ஊடகங்கள் என்று எல்லாமே சீரழிக்கப்பட்டு விட்ட நிலையில் மாற்றம் என்பது ஒரு கட்சியை அகற்றி விட்டு இன்னொரு கட்சியைக் கொண்டுவருவதாலோ வராது.

ஒரு நபரைக் குற்றம் சொல்லி அகற்றி விட்டு, வேறொரு நபரை மாற்றுவதால் மட்டுமே இங்கே கோளாறுகளுக்குத் தீர்வாகி விடாது.

மூன்றாவது அணி, மாற்று அணி என்பதெல்லாம் இன்றைய நிலையில் வெறும் கற்பனை தான். தானே உச்சாணிக் கொம்பில்  தலைமை ஏற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் மட்டுமே நிறைந்த சூழலில் இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

அப்படியானால் தீர்வே இல்லையா? வேறு வழியே இல்லையா?

நிச்சயமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமை வேண்டும். விழிப்புடன், ஒருங்கிணைந்து செயல்படும் சக்தியாக மக்களுடைய குரலை எதிரொலிக்கும் இயக்கமாக உருமாற்றம் காண்பதற்கு---

முதலில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தவேண்டும்! இப்போதிருக்கும் வெஸ்ட்மினிஸ்டர்  முறையிலான ஜெயித்தவனே எல்லாற்றையும் சுருட்டிக் கொண்டு போக அனுமதிக்கும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்கும் வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் என்று தேர்தல் முறை மாற்றப்படவேண்டும்.

ஆபீஸ் பையன் உத்தியோகத்துக்குக் கூட குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசம் அரசியல் வாதிக்குத் தகுதி கேட்கக் கூடாதா? அரசியலில் இறங்குவதற்குக் குறைந்தபட்ச வயது இருக்கிற மாதிரியே, குறைந்தபட்சக் கல்வித் தகுதி தீர்மானிக்கப்பட வேண்டும். சட்டங்கள்  இயற்றுகிற அதிகாரம் படைத்த சட்ட மன்றம், நாடாளுமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களுக்கு, நம்முடைய அரசியல் சாசன, சட்டம் இயற்றும் முறைகளைப் பற்றிய அடிப்படை ஞானம் இருக்க வேண்டும். அதில் ஒரு பட்டயப்படிப்பாவது பெற்றிருக்க வேண்டும்!

குறைந்த பட்ச வயது இருப்பது போலவே போட்டியிட அதிகபட்ச வயது வரம்பும் வேண்டும். அறுபது வயது என்று வைத்துக் கொள்ளலாம். சரியான உடல் நலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அறுபத்தைந்து வயது வரை வேண்டுமானால் தளர்த்திக் கொள்ளலாம்.

கேபினெட் அமைச்சர், முதல்வர், பிரதமர்  ஜனாதிபதி பதவிகளுக்கு,ஒரே நபர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கத் தடை வேண்டும்.

மாநில அரசுகளைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது போலவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைப்பதற்குப் பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.அரசியல் சாசனத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பை, மக்களுடைய பிரதிநிதிகள்  பொறுப்பேற்கத் தயாராகவும் தகுதியுள்ளவர்களாகவும் ஆகிற வரை உச்சநீதி மன்றமே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னும் கொம்ஞ்சம் விரிவாகவே பேசலாம்! இதெல்லாம் நடைமுறைக்கு வருகிற சாத்தியம் உண்டா என்று சந்தேகம் எழுகிறதா? தூக்கத்தில் கனவு காண்பது மட்டுமே பிழைப்பு என்றிருப்பவர்களுக்கு எதுவுமே சாத்தியமில்லை.

மாற்றங்களை வேண்டு
ம் மக்கள் குரல் உரத்து ஒலிக்கும் நாளில், எல்லாம் நிறைவேறும்.