Showing posts with label அரசியல் பாடம். Show all posts
Showing posts with label அரசியல் பாடம். Show all posts

சண்டேன்னா மூணு! உபியும் பீஹாரும்! மருத்துவமும் அரசியலும்!

மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் அங்கே மருத்துவ வசதிகளின்  போதாமை,  நோயாளிகளுடைய பரிதாபமான நிலைமை இவைகளெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்! மேற்கு வங்கம் மட்டுமல்ல, உபி பீஹார் போன்ற வட இந்திய மாநிலங்களில் இந்த அவலம் இன்னமும் நீடிப்பதைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? 2017 இல் கோரக்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயில் 500+ குழந்தைகள் இறந்ததை இங்குள்ள ஊடகங்கள் யோகி ஆதித்ய நாத் அரசுக்கு எதிரான பிரசாரமாக மட்டுமே முன்னெடுத்தன. குழந்தைகள் சாவு என்பது 2014 இல் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு பலவருடங்கள் முன்னாலும் தொடர்கதையாகத் தான் இருந்தது என்பது மறைக்கப்பட்டு ஊடகத்தம்பட்டங்கள் பிஜேபிக்கு எதிரான கூவலாக மட்டுமே இருந்தது என்பது இந்திய அரசியலில், ஊடகத்துறையில்  புரையோடிப்போன ஒரு சாபக்கேடு.

 

இந்த வருடம் பீகாரில் இந்த மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 167  குழந்தைகள், அதிலும் 127 குழந்தைகள் முசாபர்பூர் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே என்பது செய்தியாக வாசிக்கும் நமக்கு வேண்டுமானால் அதிர்ச்சி தருவதாக இருக்கலாம், ஆனால் மாநிலத்தில் ஆளுவோருக்கு இல்லை என்பதுதான் உண்மையில் அதிர்ச்சியளிக்க வேண்டிய செய்தி. இந்தப்பிரச்சினை குறித்து விவாதிக்கக் கூட்டப்பட்ட கூட்டத்திலேயே பீஹார் மாநில அமைச்சர் ஒருவர் எத்தனை விக்கெட் விழுந்தது என்று கிரிக்கெட் ஸ்கோரில் கவனமாக இருந்ததும் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கப்பட்டதும் மேலே வீடியோவிலேயே இருக்கிறது.  
                                                         
  
இப்போது ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்ட, அவதூறு பரப்பும் செய்திகளுக்காளான  யோகி ஆதித்ய நாத் அரசு,    உத்தர பிரதேசத்தில் இந்தப்பிரச்சினையை எப்படி சமாளித்தது என்பதையும் கொஞ்சம் பார்க்கவேண்டும்.குற்றம் சொல்லுவது எளிது, தீர்வு காண்பது ஒரு தொடர் முயற்சியால் மட்டுமே சாத்தியப்படுவது என்பதை யோகி ஆதித்யநாத்  அரசு சாதித்துக் காட்டியிருக்கிறது.
In a big achievement for the Yogi Adityanath dispensation, UNICEF India has lauded his government for successfully immunising all children of the state against Japanese Encephalitis and Acute Encephalitis Syndrome. ''DASTAK'' campaign is part of a comprehensive social and behaviour change communication strategy embraced by the state government to contain encephalitis.
As part of the campaign, the entire state machinery with help of UNICEF went door to door in 38 districts affected by JE and AES. என்கிறது NDTV,  இதன் பலனாக 2017 ஆகஸ்டில் 511 ஐத் தொட்ட உயிரிழப்புக்கள் 2018 இல் 166ஆகக்  குறைந்து, 2019 இல் 20 என்று மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் தான் இந்த நோய் தாக்கும் காலம் என்றாலும் UNICEF உதவியுடன் பெரும்பாலான குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது, இன்னும் தொடர்ந்து கொடுக்கப் படுகிறது. மிகச்சமீபத்தைய நிகழ்வுதான்! ஆனால் நிதீஷ் குமார்  உபி அரசிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதோடு, அங்கேயுள்ள மருத்துவர்களுமே கூட முயற்சிக்கவில்லை என்பது கூடுதல் பரிதாபம்.  


சோனியா மற்றும் வாரிசுகளுடைய செயல்திறனற்ற, சுயநல அரசியலைப்பற்றி நிறையவே பேசியாகிவிட்டது. அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்வதற்காக வேண்டுமானால் கொஞ்சம் பேசலாம்! இப்போது ஒரு மாறுதல், பாசிட்டிவான செய்தியைப் பார்க்கலாம்!  


மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி! 2014 இல் அமேதியில் ராகுல் காண்டியை எதிர்த்துப் போட்டியிட்டது தோற்றாலும், அமேதி மக்களை மறந்துவிடவில்லை. இத்தனை ஆண்டுகளில் தொகுதி மக்கள் பார்த்திராத அபிவிருத்தித் திட்டங்கள், தொழிற்சாலைகள் என்று பலவிதமாகவும் உதவியதோடு தொகுதி மக்களை அடிக்கடி சந்தித்ததன் விளைவாகத்தான் இந்திரா குடும்பச்  சொத்தாகப் பார்க்கப்பட்ட அமேதி தொகுதியிலேயே ராகுலைத் தோற்கடிக்க முடிந்தது. 

ஜெயித்ததோடு தொகுதியை மறந்து விடுகிற சராசரி இந்திய அரசியல்வாதியைப் போல அல்லாமல், ஸ்ம்ருதி ஈரானி இன்னும் ஒரு படி மேலே போய், அமேதி தொகுதியிலேயே வசிப்பதற்காக ஒரு வீட்டையும் கட்டிக்க கொள்ள உத்தேசித்து இருப்பதாக செய்திகள் சொல்கின்றன. அமேதி ரா பரேலி தொகுதிகளில்  ஜெயித்த சோனியாவோ ராகுல் காண்டியோ செய்யாதது இது. ஆளப்பிறந்தவர்கள் என்ற மிதப்பில் தேர்தலில் நிற்கிற சமயம் மட்டும் தொகுதிக்குள் வருவது, அப்புறம் மறந்துவிடுவது அவர்களுடைய வழக்கம்.   

Smriti Irani Does What Rahul Did Not for 15 Years, Decides to Build Her House in Amethi என்று தலைப்பிட்டே சொல்கிறது News18  

At her first visit after an emphatic victory in Amethi, Union Minister for Women and Child Development Smriti Irani announced on Saturday that she will construct her own house in her constituency. She has already identified a plot in Gauriganj.The announcement was made in the presence of UP deputy CM and PWD minister Keshav Prasad Maurya at the inauguration of a Rs 30-crore road project. At the end of the programme, keys of houses under Pradhan Mantri Awas Yojan were distributed among residents of Amethi.   

சும்மாத்தான் சொன்னாரோ, சீரியசாகச் சொன்னாரோ தெரியாது, சென்ற செவ்வாய்க்கிழமை மம்தா பானெர்ஜி தன் கட்சிக்காரர்களுக்கு, அரசுத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஜனங்களிடம் காசு வாங்கியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சொன்னதும்....... 

அங்கங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளூர்த்தலைகளை ஜனங்கள் கெரோ செய்வதும் எங்கள் காசைத்திருப்பிக்கொடு என்று கேட்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறதாம்! நசிகேதா என்கிற பாடகர் இந்த cut money  பற்றிப்பாடிய பாடல் இப்போது வைரலாகப் பரவிக் கொண்டிருப்பது இன்றைய சிறப்பு! 
மீண்டும் சந்திப்போம்.
            
    

காலம் செய்த கோமாளித்தனத்தில்! இந்திய அரசியல்

நண்பர் அசோக்குமார் தினசரி காலண்டர் படம் ஒன்றைத் தனது கூகிள் ப்ளஸ் பகிர்வில் போடுவார். இன்றைக்கு இப்படி சேதிசொல்வதாக!


இதைப்பார்த்தவுடன்  படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் வரும் இந்தப்பாடல் தான் நினைவுக்கு வந்தது.

   
அறிவற்ற கூட்டம் அருகில் இருந்தால் அறிஞனும் கோமாளி ! படித்ததை எல்லாம் பயன் படுத்ததாவன் முதல்தர கோமாளி ! ரொம்ப படித்தவன் போல் நடிப்பவன் உலகில் எந்நாளும் கோமாளி

இன்றைக்கு விவசாயிகள் தினம்! சரண்சிங் பிறந்த தினம்! என்றவரிகளை மிகச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடிகிறதா என்ன? விவசாயிகள் தினமாக அறிவிக்கப்பட்டது 1990 இல்! அதுவும் சவுத்ரி சரண்சிங் பிறந்த தினத்தைத்தான் விவசாயிகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள் என்றால் யார் அந்த சரண்சிங் என்பதைக்கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா?

இந்த நாட்டின் ஐந்தாவது பிரதமர்! காங்கிரஸ் அல்லாத இரண்டாவது பிரதமர்! இந்திராகாந்தியின் அரசியல் சூதுகளில் ஆறே மாதத்தில் பதவி இழந்தவர் என்று மட்டும் சவுத்ரி சரண்சிங்கின் சரித்திரத்தைக் குறுக்கிவிட முடியாது.

ஆரிய சமாஜத்திலும், பிறகு ஒரிஜினல் காந்தி காலத்து காங்கிரசில் சுதந்திரப்போராட்ட வீரராகவும் நேரு காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் முக்கியமான மூன்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் சவுத்ரி சரண்சிங்! 1959 இல் காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் கற்பனாவாத சோஷலிசத்தை எதிர்த்துக் குரல் கொடுத்ததில் இந்தியா முழுக்க அறியப்பட்டவராகவும் ஆனார்! ரஷ்யபாணி பொருளாதாரக் கொள்கை எல்லாம் இந்தியாவில் எடுபடாது என்று சரண்சிங் எதிர்த்தார். உள்ளூர் விவசாயிகளின் குரலாக அவருடைய குரல் ஒலித்தது. எதிர்க்கருத்துக்களை நேரு புறக்கணித்ததன் விளைவாக அங்கங்கே மாநிலக் கட்சிகள் உருவாகி வலிமைபெறத் தொடங்கிய காலம் அது. காங்கிரசில் இருந்து வெளியேறி 1967 இல் பாரதீய கிரந்தி தளம் என்ற கட்சியைத் தொடங்கிய சூட்டிலேயே ராஜ்நாராயண், ராம் மனோகர் லோஹியா ஆதரவோடு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரசல்லாத முதல் முதலமைச்சராகவும் ஆனவர்! அப்போது ஒரு வருடம் மட்டுமே நீடிக்க முடிந்ததென்றாலும் மறுபடி 1970 இல் முதல்வரானவர்! 1975 இல் இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திராவின் எமெர்ஜென்சி காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஜனதா தளம் என்று ஒரே அமைப்பாக ஒருங்கிணைத்தது. சரண்சிங்கின் கட்சியும் அதிலிருந்தது. 1977 தேர்தலில் இந்திராகாங்கிரஸ் மண்ணைக்கவ்வியது. ஜனதா தளத்தின் பிரதமராக மொரார்ஜி தேசாய் தான் இருக்க வேண்டும் என்று ஜெயப்ரகாஷ் நாராயண் விரும்பினார். பிரதமராகவேண்டுமென்கிற ஆசையில் இருந்த சரண்சிங் அதிருப்தியுடனேயே அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்தார், உள்துறை, நிதி இரண்டு துறைகளைக் கையாள்கிறவராகவும்!

மிக அற்பமான காரணங்களால் ஜனதாதளம் என்கிற அற்புதமான மாற்று அரசியல் முயற்சி 1979 இல் கவிழ்க்கப்பட்டது. ஜனதா தளத்தில் இணைந்திருந்த ஜனசங்கம் வெளியேறியது. ஜனதா தளம் (செகுலர்) என்ற புதுப் பெயருடனான மீதமிருந்த கட்சிகளுடைய ஆதரவுபோக இந்திரா காங்கிரசின் ஆதரவையும் சேர்த்துக் கொண்டு சவுத்ரி சரண்சிங் இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக 1979 ஜூலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒருமுகமாகத் திரண்டஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை இந்திராகாந்தி பெரும் சூதினால் உடைத்து ஆறேமாதத்தில் சரண்சிங் ஆட்சியைக் கவிழ்த்தார். மறுபடியும் ஆட்சியைப் பிடித்தார் என்பது காலம் செய்த கோமாளித்தனமா? வாக்காளர்களுடைய ஏமாளித்தனமா?

சவுத்ரி சரண்சிங் மிக வெள்ளந்தியான மனிதர். நேரு, வாரிசுகளுடைய சூதுவாதெல்லாம் அறியாத அரசியல் அவருடையது. விவசாயிகளுடைய குரலாக முதன் முதலில் ஒலித்ததும் சரண்சிங்குடைய குரல்தான்!

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய பழங்கதை இது! இங்கே இணையத்தில் அவரது நினைவகளாக

ஆடாத ஆட்டமெல்லாம்.....? தேர்தல் வினோதங்கள் 2011!





ந்தர்ப்பக் கூட்டணி லட்சியக் கூட்டணியாக மலர்ந்ததில் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இருந்து சில முக்கியமான அம்சங்களைக் குமுதம் ரிப்போர்டரில் வெளிவருகிறதென்று நினைக்கிறேன், (குமுதம் வகையறாக்களைப் படிப்பதில்லை), பதிவர் நண்பர் உண்மைத் தமிழன்,  தன்னுடைய பதிவில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருகிறார். தாத்தாவிடம் கோபம் நிறையக் கொப்பளித்தாலும், ஆத்தாவுக்கு அப்படியே சப்போர்ட் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு, கொஞ்சம் அலுப்புடனே தான் எழுதுகிறார். மதிமுக வெளியேறிய போது, கெட்டது குடி என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்த சென்னைப் பதிவர்களில் இவர் முதன்மையானவர்.

நீளமாக, பத்தி பத்தியாக எழுதுவதை விட, சில வலைப்பதிவர்கள் மிக நுணுக்கமாக இந்தத்தேர்தல் கூத்துக்களை, குரும்படங்கலாகத் தயாரித்து வெளியிட்டிருப்பதை இணையத்தில் பார்க்க முடிகிறது. ரியல்டுபுக்கு என்ற பெயரில் வலைப்பதிவர்நல்ல மெசேஜ் ஒன்றைத் தயாரித்து யூட்யூபில்  வலையேற்றம் செய்திருக்கிறார். பாருங்கள்!


"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே
போன கதை உனக்குத்தெரியுமா?"

இந்தத் திரைப்படப்பாடல் வரிகளையே 2011 தேர்தல் கூத்தின் தத்துவமாக யுவசெந்தில்குமார் என்ற நண்பர் எடுத்து வைக்கிறார்!

எல்லாவற்றையும் விட குஜால்காரன் என்ற நண்பர் பழைய கவுண்டமணி ட்ராக் ஒன்றைத்தேடிஎடுத்து, ஓட்டு என்றால் என்ன என்று ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, "தேர்தலே வேண்டாம் பழையபடி மன்னராட்சி கொண்டு வந்து விடுவோம், நீ ராசா! நான் மந்திரி" என்று சொல்வதை வைத்து ஒரு போடு போட்டிருக்கிறார் பாருங்கள்!


கரடியாய்க் கத்துகிறேன், யாராவது காதில் வாங்கிக் கொள்கிறார்களா பாருங்கள் என்று சொல்வார்கள் இல்லையா? ஒரு கரடி கத்தினால் தானே கேட்கமாட்டார்கள், இரண்டாயிரம் கரடிகள் சேர்ந்து கத்தினால் கேட்காமல் போய்விடுமா என்று நினைத்தாரோ தெரியாது, கரடி 2000 என்ற பெயரில் ஒரு  நண்பர் தமிழருவி மணியனுடைய பேட்டியில் இருந்து ஒரு பகுதியை எடுத்துப் போட்டிருக்கிறார். இதில் நான் உடன் படுகிற ஒரு விஷயம், தேர்தல்களில் ஓட்டுப் போடுகிறவர்கள், இன்னார் வரவேண்டும் என்று ஓட்டுப் போடுவதை விட, இன்னார் வந்துவிடக் கூடாது என்று வாக்களிக்கிற ஒரு விசித்திரம்! தேர்தலை ஒரு வினோதமான கூத்தாகவும், இத்தனை கோளாறுகளுக்கு ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது இந்த நெகடிவ் மனப் பான்மைதான்!


நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு, இப்போதிருக்கும் தேர்தல் முறைகளில் இல்லை! தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதுதான் இந்தப்பக்கங்களில் மிக அவசியத்தேவையாகப் பல முறை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. சீர்திருத்தங்களை செய்ய வேண்டியவர்கள், செய்ய மாட்டார்கள் என்பதனால், "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ், ஊழலுக்கு மிகப்பெரிய பரிமாணத்தைக் கண்டு பிடித்தவர்களைப் பதவியில் இருந்து இறக்குவது  முதல் வேலை!

சரியான மாற்று என்று எவருமே களத்தில் இல்லாத நிலையில் சற்றுக் குறைவான கெடுதல் என்ற அளவில்  இரண்டாவது சாய்ஸ் இருக்கிறது அல்லவா, அவர்களைப் பதவியில் அமர்த்துவது அடுத்தது!இப்படிப்பதவிக்கு வருகிறவர்கள் தவறு செய்ய விடாமல் விழிப்போடு கண்காணிப்பதில் தான் ஜனங்களுடைய உண்மையான ஜனநாயகக் கடமை ஆரம்பிக்கிறது.

ஓட்டுப்போடுவதோடு நம் கடமை முடிந்துவிட்டது என்றிருக்காமல், சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப்பெறுகிற உரிமைக்காகக் குரல் கொடுப்பது, தேர்தலில் போட்டியிட அரசியல் சாசனம், சட்டங்களில் குறைந்த பட்ச ஞானம் இருப்பதை அடிப்படைத் தகுதியாக்குவது, பெரிய பதவிகளில் ஒரு நபரே  இரண்டுமுறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப் படுவதைத் தடை செய்வது, மற்றத் துறைகளில் ஓய்வு பெறும் வயது இருப்பதுபோல, அரசியல் வாதிகளுக்கும்  அறுபத்தைந்து வயதுக்குமேல் கட்டாய ஓய்வு கொடுப்பது என்று சீர்திருத்தங்களுக்கான இயக்கம் வலிமை பெற வேண்டும்!

என்ன சொல்கிறீர்கள்? என்ன செய்யப் போகிறீர்கள்? கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!