Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?

இன்றைய News 18 தளத்தில் அகிலேஷ் மிஷ்ரா எழுதி வெளியாகியிருக்கிற OPINION | How PM Modi Defied Petty Oppn Politics to Turn Around India's Vaccine Policy என்கிற கருத்துரை பிரதமர் நரேந்திர மோடி எப்படி சில்லறை புத்தியுடன் அரசியல் செய்து வரும் எதிர்க் கட்சிகளையும் மீறி இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக் கொள்கையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டுவந்து இருக்கிறார் என்பதை மிகத்தெளிவான சான்றுகளுடன் விவரித்திருக்கிறார். நீலநிறத்தில் தெரியும் சுட்டியில் முழுக்கட்டுரையையும் முடிந்தால் படித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். 

 

விவஸ்தைகெட்ட நம்மூர் பானாசீனா அவசரக் குடுக்கை போல எந்த மாநிலம் அப்படிக்கேட்டது என்று ட்வீட் செய்து வாங்கிக்கட்டிக்கொண்ட பிறகு I stand corrected என்று மழுப்பலாகத் தப்பித்துக் கொண்டிருக்கிறார்.


Mamata Banerjee, twice elected (at that point of time) Chief Minister of West Bengal writes a letter to you on February 24, 2021, where among other things she says, “Government of West Bengal has decided to procure adequate number of vaccines for the members of public at large. We would request you to kindly take up the matter with appropriate authority so that State Government is able to purchase the vaccines.” Mamata Banerjee was so convinced of the righteousness of her stand that she reminds you of her request not once but several times. For example, on April 18, 2021, she again writes, “You may recall that I had written to you on February 24, 2021 to allow the state to purchase vaccination doses directly with state funds and launch a massive free vaccination campaign in the state covering the entire population.”

Meanwhile, the much-loved Delhi’s Chief Minister among the Khan Market gang, Arvind Kejriwal, addresses the press on March 18, 2021, and among other fantastical claims, says that “I want to appeal to the central government to decentralize the system, have less control over it, and allow the state governments to administer the vaccine on a war-footing”.

Not to be left behind, Rahul Gandhi, former President of Indian National Congress, and the son of the current president of the party and thus, by design, the most important leader of the party, writes a letter to you on April 8, 2021. In this letter, among other things, Rahul Gandhi says “our states have been bypassed right from vaccine procurement to registration.” He then goes on to demand from you that “give state governments a greater say in vaccine procurement and distribution.” இப்படியாக மம்தா பானெர்ஜி, அரவிந்த் கேசரிவாலு, ராகுல் காண்டி இவர்களைத் தொடர்ந்து வேறு சில மாநில முதல்வர்களும் பேசியதை  நேற்றைய தினம் பிரதமர் அறிவிப்புக்குப் பிறகு, பிளேட்டை அப்படியே மாற்றிப்போட ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் சொன்னதைக் கேட்க பிரதமருக்கு நான்குமாதங்கள் ஆகியிருக்கிறது என்கிறார் மம்தா. 

தாங்கள் ஒன்றுக்குமே ஆகாதவர்கள் என்று  உணர்ந்து கொண்ட மாநில முதல்வர்கள் என்ன செய்தார்களாம்? கருணாநிதி பாணியில் பிரதமருக்குக் கடிதம் எழுதித் தங்களுடைய ஏலாமையை வெளிப்படுத்தினார்கள் என்று தேதியாரியாகப் பட்டியலிடுகிறார் அகிலேஷ் மிஷ்ரா Overall, by the end of May, chief ministers of Punjab (May 15), Kerala (May 24), Sikkim (May 30), Mizoram (May 31), Meghalaya (May 31), Andhra Pradesh (June 1), Arunachal Pradesh (June 1), Odisha (June 2), Tripura (June 2) and Maharashtra (June 2) specifically wrote to the Prime Minister requesting centralised procurement of vaccines. அவர்கள் ஒரு பேரழிவுக்காலத்தில் பொறுப்பில்லாமல் அரசியல் செய்த மாதிரியே பிரதமரும் செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் ஒரு பொறுப்பான பிரதமராக நரேந்திர மோடி உயர்ந்து நின்றார். கொரோனா தடுப்பூசிக்காக  மாநிலங்கள் ஒரு பைசா கூடச் செலவு செய்ய வேண்டாம், மத்திய அரசே 75% தடுப்பூசிச் செலவை ஏற்றுக்கொள்ளும். மீதம் 25%  தடுப்பூசிகளைத் தனியார் மருத்துவ மனைகளே வாங்கி அடக்கவிலைக்கு மேல் சர்வீஸ் சார்ஜாக அதிகபட்சம் ரூ.150/ இற்கு மிகாமல் பயனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர்.  

இதன் பின்னணியில் என்னென்ன இருக்கிறது என்பதையும் சேர்த்துப்பார்த்துவிடலாமா?

பஞ்சாப் காங்கிரஸ் அரசுசெய்தது போல மத்திய அரசு இலவசமாகக் கொடுத்த தடுப்பூசிகளைத் தனியாருக்கு லாபம் வைத்து விற்கமுடியாது. ஆனாலும் இங்கே  கரைவேட்டிகள் நடத்தும் அதிநவீன மருத்துவ மனைகள்  ஆதாயம் பார்ப்பது மட்டுப்படுமா? கள்ளச்சந்தை, திமுகவே டோக்கன் கொடுப்பது நிற்குமா என்ற கேள்விகளுக்குத் தெளிவான விடைகள் தெரியவில்லை.  

Pfizer உள்ளிட்ட அமெரிக்க மருந்துக்கம்பெனிகள் இங்கே உடனடியாக நுழைந்து கொள்ளை லாபம் பார்ப்பதும் கூட மறைமுகமாகத் தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது.
 
கோவாக்சின் தவிர இன்னும் இரு தடுப்பூசிகள் முற்றிலும் இந்தியத் தயாரிப்பாக இறுதிக்கட்டப் பரிசோதனையில் இருக்கின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

இப்போது சொல்லுங்கள்!  நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? நொள்ளை சொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் எதிர்க்கட்சிகளை என்ன செய்வீர்கள்?

மீண்டும் சந்திப்போம்.

அக்கப்போர்களில் கவனம்! கொஞ்சம் உலகப் பார்வையும் வேண்டாமோ?

ந்தப்பக்கங்களில் A Wednesday  என்று தேடிப்பார்த்தால் உள்ளூர் அக்கப்போர்களே பெரும்பாலான பதிவுகளில் இடம் பிடித்திருப்பதைப் பார்க்க முடியும்! A Wednesday ஹிந்திப்படத்தை கமல்ஹாஸன் ரீமேக் செய்து உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்தபோது இங்கே தமிழ் வலைப்பதிவர்கள் ரொம்பவுமே பொங்கித் தீர்த்தார்கள்! கொஞ்ச காலத்துக்குப் பின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் சொல்லிவைத்தாற் போல தங்களுடைய பொங்கல், பதிவுகளை நீக்கிக் கொண்டார்கள்! 127 பதிவர்கள் இப்படிப் பொங்கித் தீர்த்ததாக நண்பர் உண்மைத்தமிழன் தொகுத்து வைத்திருப்பது இங்கே   அங்கே போய்ப் பார்த்தால் பொங்கல் வைத்து அப்புறம் நீக்கிக் கொண்டவர்கள் யார் என்பது தெரியும்! என்று எழுதிய இந்தப்பதிவும் கூட அதில் அடக்கம் தான்!  எத்தனை நாட்களுக்குத் தான் கிணற்றுத் தவளைகளாக இதுபோல உள்ளூர் அக்கப்போர்களிலேயே நம்முடைய கவனத்தை வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 


த்தியகிழக்கு நாடுகளின் அரசியல், எதிர்காலத்  தலையெழுத்தை நிர்ணயிக்கக்  கூடிய ஒரு தேர்தலாகவே கூட நேற்றைக்கு நடந்து முடிந்திருக்கும் இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இருக்கலாம் என்பதால் முந்தைய பதிவில் இஸ்ரேல் தேர்தல்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீதான தாக்குதல் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியை பாதியாகக் குறைத்திருப்பதில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று பேசத் தெரிகிறது. ஆனால் மத்தியகிழக்கில் அமைதியைப் பாதிக்கக் கூடிய ஒரு தேர்தலைப் பற்றியும் பேசுகிறோமா? என்னதான் இங்கே அரசியல் உள்ளூர் அக்கப் போர்களால் ஆனது என்றாலும், அதைவிட அதிகமாகப் பாதிக்கிற விஷயங்களிலும் கொஞ்சம் அக்கறை வேண்டாமோ என்பது என்னுடைய நீண்டநாள் ஆதங்கம்! சரி, இஸ்ரேல் தேர்தல்களில் மே மாதம் நடந்த பொதுத்தேர்தல் மாதிரியே பிரதான கட்சிகள் இரண்டுமே மெஜாரிட்டியைத் தொடமுடியாது, மீண்டும் உதிரிகளோடு கூட்டணி வைத்தால் தான் ஆட்சி அமைக்கமுடியும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்  கணிப்புக்கள் சொல்வதாகத் தற்போதைய செய்தி. நீண்ட காலமாக (13 ஆண்டுகள்) ஆட்சியில் இருந்த பிரதமர் நேத்தன்யாஹூவுக்கு  பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள்.


ள்ளூர் அக்கப்போர்கள் அவ்வளவு சகித்துக் கொள்கிற மாதிரியாகவா இருக்கின்றன? இந்த 23 நிமிட விவாதத்தையே கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்! அமித் ஷா என்ன பேசினாலும் அதை நெகடிவாக, சர்ச்சையாக்க வேண்டுமென்றே கங்கணம் கட்டிக் கொண்டு ஊடகங்களும் எதிர்த்தரப்பும் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு செயல் படுகிறமாதிரித் தான் இருக்கிறது! இல்லையென்று மறுக்கும் நண்பர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் காரணங்களோடு சொல்லுங்களேன்! 

மித் ஷா என்ன context இல் எப்படிச் சொன்னார் என்பதைப் பேசுவதற்கு முன்னால், இங்கே இந்திய ஜனநாயகத்தில் இருக்கிற மாதிரி  உதிரிக்கட்சிகளுடைய ஆட்டம் உலகத்தில் வேறெந்த ஜனநாயகத்திலாவது இருக்கிறதா? அரை, முக்கால் சதவீத வாக்குகளைக் கூடப் பெறமுடியாத உதிரிக்கட்சிகள் சாதித்ததென்ன  என்று கொஞ்சம் யோசித்திருக்கிறோமா? உதிரிக் கட்சிகளோடு ஒட்டிக் கொண்டுதான் இங்கே திமுக மாதிரி பெரிய கட்சியே இருக்க முடியுமென்றால் அர்த்தம் இருக்கிறதா? 1977 இல் ஜனதாக் கட்சி எக்ஸ்பெரிமென்ட் முதற் கொண்டு ஏகப்பட்ட பரிசோதனைகள் இந்திய அரசியலில் நடந்து முடிந்திருக்கின்றன. அவைகளிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்? எப்போதாவது இவைகளைப் பற்றிச் சிந்தித்திருக்கிறோமா?

ங்கே பிஜேபி அதிபர் ஆட்சிமுறையை மறைமுகமாக வலியுறுத்துவதாகத் தான் பலகட்சி ஆட்சிமுறை தோற்று விட்டதாக அமித் ஷா பேசுவதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விசிகவின் வன்னியரசு மேம்போக்காகப் பேசிவிட்டுப் போவதை விடுங்கள்! Bihar Movement என்று  இந்தச் சுட்டியிலும் இதே வார்த்தையைக் கொண்டு இணையத்திலும் தேடிப் பாருங்கள்! 1971 நாடாளுமன்றத்தத் தேர்தல்களில் இந்திரா காண்டி அமோக(?) வெற்றியடைந்த பிறகு, அவ்ரதுபோக்கில் நிறைய மாறுதல்கள், எல்லா அதிகாரங்களும் ஒரே நபரின் கீழ் என்கிற அமெரிக்க அதிபர் முறை மாதிரி ஒரு தேர்தல் முறைக்குத் தயாராகிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்த காலத்தில் பிஹார் இயக்கம் என்று ஊழலுக்கெதிரான மாணவர் போராட்டம் வலுவான தருணத்தில், ஜெயப்ரகாஷ் நாராயணனைத் தமைமைதாங்க அழைத்த தருணம்! தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன், பிஹார் இயக்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து 47 நாட்கள் தினமணி நாளிதழில், ஜெயப்ரகாஷ் நாராயணன்  இந்திரா காண்டியின் போக்குக்கு எதிராக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியதும் இதர விவரங்களுமாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது, பின்பு தினமணி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. கூகிள் தேடலில் பிஹார் இயக்கம் என்று தேடினால் பிபிசி தளத்தில் வெளியான இந்த ஒரு செய்தி தான் கிடைக்கிறது!  பிஹார் இயக்கம் தினமணி வெளியீடாக வந்த புத்தகம் தற்சமயம் நானறிந்தவரை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது. 

விசிக மாதிரியான உதிரிக் கட்சிகளுக்கு வரலாறும் தெரியாது, போகும் திசை பற்றிய தெளிவும் கிடையாது. ஆனால் இன்னும் எத்தனைநாட்களுக்கு இவர்களைப் போன்ற உதிரிகள் நாட்டாமை செய்வதை சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம், சொல்லுங்கள்! இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எத்தனை. அவை எத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றன, எவ்வளவு வாக்கு (சதவீதத்தில்) வாங்கியிருக்கின்றன என்பதெல்லாமே பொதுவெளியில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இருப்பதுதான்!

திவுகளின் இங்கே  பகிர்வதெல்லாம்  உங்களைக் கொஞ்சம் யோசிக்க வைப்பதற்காக மட்டுமே! ஏன் எங்களுக்கு சுயமாக யோசிக்கத் தெரியாதா என்று சண்டைக்கு வருவதற்கு முன்னால், என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.       
              

சண்டேன்னா மூணு! மாரிதாஸ்! ஹம்சா பின் லேடன்! எண்ணெய்க்கொழுப்பு!

மாரிதாஸ் அவர்பாட்டுக்கு என்னமோ எழுதிக்கொண்டு வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டு அரசியலைக் கொஞ்சம் விமரிசனம் செய்துகொண்டிருந்தார். அதை இங்கே எத்தனை பேர் வவனித்தார்களோ, தெரியாது! ஆனால் 200 ரூபாய் இணைய உபிக்கள் உபயத்தில், அவதூறுகளும் புகார்களுமாக எல்லாமாகச் சேர்ந்து  மாரிதாஸ்  பெயரும்,  சொன்ன விஷயங்களும் அவரே எதிர்பார்க்காத அளவுக்குப் பிரபலமாக ஆக்கப் பட்டிருப்பது ஒரு விசித்திரம்!


சிலமாதங்களுக்கு முன்னால் அரக்கோணம்  திமுக எம்பியும் மதுபான ஆலைகள் உரிமையாளருமான ஜெகத்ரட்சகன், ஒரு சிங்கப்பூர் நிறுவனம் வழியாக இலங்கையில் 3.85 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்த தகவல்கள் கசிந்தன. அன்றைய தின  பரபரப்புச் செய்தியானதைத் தாண்டி, அதைப்பற்றி  யாருமே அலட்டிக் கொள்ளவில்லை என்பதில் இங்கே ஊழல் என்பது  ஒரு டீக்கடை அரட்டை அல்லது மேடைக்கூச்சல், ஊடகங்களில் ஏதோ ஒரு ஓரத்தில் செய்தியாக மிகச்சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுவதாக ஆனதால் தானோ? வீடியோ 21  நிமிடம்.



Zero Dark Thirty! செப்டெம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் தேடுதல் வேட்டைக்கு ஆளான சவூதி அரேபிய கோடீஸ்வரர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட தருணங்களை வைத்து எடுக்கப்பட்ட படம்.  வேறு சில படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம், அமெரிக்கா மீதான தாக்குதல்களின் பின்னணியில் இருந்த ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த போதே அமெரிக்கப்படையினரால் கொல்லப்பட்டதை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டபடம் என்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்!      ஒசாமா   பின் லேடனுடைய அல் கொய்தா இயக்கத்தின் தலைமையைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வந்தாலும் நேற்று சனிக்கிழமை டொனால்ட் ட்ரம்ப், ஒசாமாவின் மகனும் அல்கொய்தா இயக்கத்தின் முக்கியத்தலைவருமான ஹம்சா பின் லேடன் அமெரிக்க பயங்கரவாத எதிரப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்திருப்பது இன்றைய முக்கியச் செய்தியாகி இருக்கிறது. ஒசாமா         போலவே அவரது மகன் ஹம்சாவும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் (AFPAK)  ஏரியாவில்  வைத்தே கொல்லப்பட்டிருப்பதாக சொல்லியிருப்பது  முக்கியமானது.


சவூதி அரேபியாவில் உலகின் மிகப்பெரிய  ஆராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டிரோன்களை வைத்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதல் இன்னொரு முக்கியமான செய்தி. கிட்டத்தட்ட எழுபதுலட்சம் பாரல்கள் தீயில் நாசமாகி இருக்கலாம்  என்று சொல்கிறார்கள்.


அமெரிக்கா வழக்கம்போல ஈரான் மீது பழியைப் போட்டு அறிக்கை விட்டிருக்கிறது.  ஏமனில் சவூதி அரேபியா நடத்தி வரும் போர், ஹௌதிகள், ஈரான் இதில் எப்படிக் கைவரிசை காட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் அரபுநாடுகளின் அரசியலை முதலில் தெரிந்து கொண்டாக வேண்டும். சவூதிகளுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்கிற அமீரகத்துக்கும் இடையிலான அரசியலும் இதில் சேர்ந்து கொள்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் எண்ணெய்க்கொழுப்பு அரசியல், நீயாநானா ஆதிக்கப் போட்டி தான்!  இந்த எண்ணெய்க்கொழுப்பு அரசியல், வஹாபியிசம், சன்னி ஷியா இஸ்லாமிய அரசியல் இவைகளை வருகிற நாட்களில் கொஞ்சம் தொடர்ந்து பார்க்கலாமா? என்ன சொல்கிறீர்கள்?

மீண்டும் சந்திப்போம்.
          

#செய்திகள் செய்திகளின் அரசியல் புரிகிறதா?

நரேந்திர மோடி அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு நிறைய நல்ல விஷயங்கள் நடந்து வருகின்றன. எடுத்துக் காட்டாக நிதியமைச்சராக  திருமதி நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றபிறகு நிதியமைச்சகத்தில் கொஞ்சம் ஊழல், பொறுப்பைச் சரிவர செய்யாதது என்று பல அதிகாரிகள் களையெடுக்கப்பட்டனர் என்பது ஒருநாள் கூத்து என்றாகிவிடாமல் தொடர்ந்து நடக்கிறது என்றுதானே நினைத்திருந்தோம். ஆனால் முந்தைய ஐந்தாண்டுகளிலேயே 312  நபர்கள் கழித்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது இதைப் பார்த்தபிறகுதானே தெரிகிறது! 



வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை செய்ய மாட்டோம், சம்பளம் இங்கே அரசிடம் வாங்கி கொள்வோம் ஆனால் விசுவாசமெல்லாம் வேறிடத்தில் என்றிருப்போம்! இப்படிப் பட்டவர்களை வைத்துக் கொண்டு என்னதான் செய்வது? IAS IPS லாபிதான் அதிகாரம் மிகுந்தது . இப்போது கழித்துக் கட்டப்பட்டவர்கள் IRS  தானே! IAS IPS ஆசாமிகள் மீது கைவைத்தால் அப்போதுதெரியும் சேதி என்று விமரிசனம் செய்வது காங்கி ஆதரவு The Print  தளத்தில் தான்!  

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் இலங்கை தமிழர் ஒருவர் அவரை  விரட்டியடித்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. என்று செய்தியைத் தந்திருக்கிறது கதிர் நியூஸ்.



வெளிநாட்டு பணம் நின்று போனதால் இலங்கைவாழ் தமிழர்களிடம் பிச்சை எடுக்க இன்னோர் டப்பா குலுக்கி வருகிறது உஷார்.
மறைந்தவர்கள் அதைச்சொன்னர்கள் இதைச்சொன்னார் என சொல்லி காலத்தை ஓட்டிய கட்டுமரம் இருக்கும்போது அதை காப்பியடிக்க யாரும் துணியவில்லை. ஆனால் விடுதலைபுலிகள் அழிக்கப்பட்டபின்பு இந்த ஆமைக்கறியான் அதை சொல்லி இலங்கைத்தமிழர்களிடம் காசு சேர்த்தது.
ஆமைக்கறி யாவாரம் அருமையாக போகவும் இப்போது கூட கட்சிகள் மிரட்டுவதாலும் வெளிநாட்டு ஹவாலா பணம் தட்டுப்பாடாக இருப்பதாலும் அதிலே இன்னோர் ஆளும் சேர்ந்திருக்கிறது.
பிரபாகரன் தான் அந்த கூட்டணியிலே போய் சேர சொன்னார் எனவே சேர்ந்தோம் என ஒரே போடாக போட்டிருக்கிறது.
அதாவது விடுதலைப்புலிகளுடன் எப்போதும் தொடர்பிலே இருந்ததாக அதுவும் பிரபாகரனுடன் தொலைபேசியிலே அதுவும் போர் உச்சகட்டத்திலே இருக்கும் போது பேசுமளவுக்கு செல்வாக்கு உடைய ஆள் என காட்டிக்கொள்ளுதாம்.
போர் தொடங்கும் முன்னரே வெளியுலக தொடர்புகளிலே பாதியை புலிகளே அழித்துவிட்டனர். மிச்சமிருந்ததை இலங்கை ராணுவம் அழித்துவிட்டது. ஒரு துளி தகவல் கூட வெளியே வரவில்லை. எந்த ஒரு பத்திரிக்கையாளரும் உள்ளே போகவில்லை.
அதனால் தான் போர்குற்ற விசாரணைக்கு தடயங்களே இல்லை. இருக்கும் வீடியோக்கள் எல்லாம் இலங்கை ராணுவத்தினர் அவர்களின் சொந்த போன்களிலே எடுத்தது தான்.
இறுதியாக அழிக்கப்படும்போது உலக அளவிலான பிரச்சினையாக கொண்டு போகலாம் என தூண்டிவிட்டு அவர்களை அழித்ததே இந்த டமில்நாட் கட்சிகள் தான். அதையும் நம்பி இறங்கியவர்கள் முற்றாக அழிக்கப்பட்டனர். பல ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் உட்பட.
இந்த அழகிலே தொலைபேசியிலே பேசினார்களா? எப்படி பேசினார்கள்? எந்த எண்ணுக்குபேசினார்கள்?
தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பிலே இருந்தது மட்டுமல்லாது அந்த தீவிரவாத இயக்கம் சொன்னபடி நடந்து அரசியலிலே கூட்டணி வைத்தோம் என சொல்கிறதுகளே
இதுகள் இப்படித்தானே இப்போதும் பாக்கிச்தானுடன் தொடர்பிலே இருந்து நாட்டுக்குள்ளே சதிகாரவேலையிலே ஈடுபடும்கள்?
இதை விட இதை இப்போது சொல்லவேண்டிய அவசியம் என்ன?
இலங்கை வாழ் தமிழர்களும் அகதியாய் நாடற்று அலைபவர்களும் இப்போது தான் கொஞ்சம் வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்களிடம் மிரட்டி பணம் பிடுங்குவதற்கா?
ஏன் இந்த நாடகம்?
மக்களே இலங்கை வாழ் நண்பர்களே, வெளிநாடு வாழ் நண்பர்களே இதைச்சொல்லி இந்த கும்பல் டப்பாவை குலுக்கிகொண்டு வரும்
நம்பாதீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி தூக்கம் கெட்டு உறவுகளை பிரிந்து பாடுபட்ட சம்பாதித்த பணத்தை இந்த துரோகிகளின் கையிலே தராதீர்கள்.
உஷார் உஷார்          

அம்பேத்கர் பெரியார் பெயரைச் சொன்னால் மட்டும் ....! காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்று அந்த நாட்களிலேயே முத்தமிழ் வித்தவர் கோடுபோட்டுக் காட்டி இருக்கிறாரே! இவர்கள் ரோடு போட வேண்டாமா? 

ஏம்பா திருமா?
லண்டன்ல என்னய்யா நடந்துது? திருமா இன்னுமா உயிரோடு இருக்காருன்னு லண்டன்காரங்க எல்லாம் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க..
ஏதேதோ செய்தி வருகிறது
ஏம்பா ஆளூர் ஷாநவாஸ்...
எதுக்கெடுத்தாலும் டிரம்ப் போலவே டிவிட் செய்வீரே, இந்த லண்டன்ல திருமாவுக்கு என்ன நடந்ததுன்னு சொல்ல கூடாதா?
ஆ ஊன்னு எதுக்கெடுத்தாலும் கத்துவியே, திருமாவுக்கு லண்டன்ல என்ன நடந்துன்னு சொல்லு
படுவா பயலே, ஒழுங்கா நீயா சொல்லிரு, இல்ல எங்க நியூஸ் சோர்ஸ் சீக்கிரம் சொல்லிரும், அதுக்கப்புறம் "அடங்க மறு அத்து மீறு" எல்லாம் இல்ல
"கயிற எடு உடனே தொங்கு.." அளவுக்கு வந்துரும் , விஷயம் அவ்வளவு கேவலமா நடந்திருக்கு....

இது திமுக காமெடி என்றால் .....

டிவி விவாதங்களில் பிஜேபியினர் கலந்துகொள்ளாததால் TRP பார்வையாளர்கள் குறைந்துவிட்டதாக யாராவது டாக்டர் யக்கோவிடம் சொன்னீர்களா என்ன?


இனி காமெடிக்குப் பஞ்சமிருக்காதோ? சேனல்களை வாழவைத்த எங்கள் தமிழ்த்தாயே! தமிழிசையே!  என்று வாழ்த்துப் போஸ்டர்களை பாத்தீங்களா? எனக்கு இப்பவே கண்ணைக்கட்டுது!    

மீண்டும் சந்திப்போம்.  

கொஞ்சம் போலப் படம்! செய்தி! விமரிசனம்!

பாகிஸ்தானும் சோனியாG  காங்கிரசும் நம்பிய மாதிரி  ஆர்டிகிள் 370 தூக்கப்பட்டதில் காஷ்மீர் ஒன்றும் கொந்தளித்துப் பொங்கவில்லை என்பதில் காம்ரேடுகள் சிலருக்கு ரொம்பவே வருத்தம் போல! அதெப்படி ஒரு கல்லெறி ஒரு துப்பாக்கிச்சூடு இல்லாமல் இருக்கலாம் என நினைத்தோ என்னவோ இடது சீதாராம் யெச்சூரியும் வலது D ராஜாவும் ஸ்ரீநகருக்குப் போனார்களாம்! 

சாயம்போன இடதும் வலதுமாக 

"Both of us had written to the J&K governor requesting him that there should be no hurdles for our visit. Despite that we have been detained. I wanted to meet my ailing colleague and our comrades who are here," Yechury said. கவர்னருக்கு கடுதாசி எழுதினாங்களாம்! வாங்க அப்படீன்னு அவர் சொன்னாராமா? ஸ்ரீநகரிலேய தடுத்து நிறுத்தப்பட்டு டில்லிக்கே திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.  இடதும் வலதுமாக உடைந்து கிடப்பவர்கள், கடிதம் எழுதுவதில் மட்டும் ஒன்று சேர்ந்தார்களா? அதிசயம் தான்!  


ஐக்கிய நாடுகள் சபை ஏதோ முதல் உலகப்போருக்குப் பின் தோன்றிக் காலாவதியான League of Nations மாதிரி ஆகிவிடாமல் தருமத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் காஷ்மீர் பஞ்சாயத்து என்று கேட்டுக்கேட்டு காதுபுளித்த்துப் போய்க்கிடக்கிறவர்கள் என்னசெய்வார்களாம்? மீண்டும் பஞ்சாயத்தைக்கூட்டு என்று பாகிஸ்தான் காஷ்மீர் விஷயம் எடுத்துக்கொண்டுபோனதில் நிராகரித்து விட்டார்களாம்!


நாங்கள் சொன்னால் தாலிபான்கள் கேட்பார்கள் என்று பாகிஸ்தான் ISI யும் ராணுவமும் அமெரிக்காவிடம் கித்தாப்பு காட்டிக்கொண்டிருக்கும்  நேரம் பார்த்து, தாலிபான்கள் வேறு மாதிரி பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.காஷமீர் விவகாரத்தோடு ஆப்கானிஸ்தான் பிரச்சினையை முடிச்சுப் போடவேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம்!


தயாநிதி மாறன்! ஒருமாதிரி  கையைநீட்டி அல்லது   ஆட்டிப் பேசுவதைப் பார்ப்பதே செம காமெடி! கவனியுங்கள், பேச்சைக் கேட்பதில் அல்ல! நவரசம்! 5 நிமிட nonstop comedy! 

போனவெள்ளிக்கிழமைதான் Jallianwala Bagh National Memorial (Amendment) Bill, 2019 குரல் வாக்கெடுப்பிலேயே நிறைவேற்றப் படுவதற்குமுன் மூன்றுமணிநேர காரசார விவாதத்தின் போதுதான் இந்தக் கெஞ்சல், சரித்திரம் படித்ததாகச் சொல்லிக் கொண்ட தயாநிதியிடமிருந்து! இந்தச் சட்டத்திருத்தம் எதற்காக? Jallianwala Bagh National Memorial Act, 1951 இன் படி ஒரு தேசிய நினைவுச் சின்னம் அமைப்பதற்கான ஒரு ட்ரஸ்ட் அமைக்கப்படும்.  இந்த ட்ரஸ்டின் தலைவராக பிரதம மந்திரியும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர், கலாசாரத்துறை மந்திரி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், பஞ்சாப் ஆளுநர் பஞ்சாப் முதலமைச்சர், அப்புறம் மத்திய அரசால் நியமனம் செய்யப் படுகிற மூன்று உறுப்பினர்கள் ஆகியோர் இருப்பார்கள் என்றிருந்ததில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித்தலைவரை  பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வழி செய்கிற திருத்தம் தான் சென்ற ஜூலையில் சபையில் அறிமுகம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 2 அன்று நிறைவேறியது.

அய்யய்யோ!ட்ரஸ்டிகள் பட்டியலில் இருந்து  காங்கிரசை நீக்கலாமா? வரலாற்றைத் திருத்தலாமா? என்று கூக்குரல்கள்! 1951 இல் இருந்த அந்த காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1984 இல் இந்திரா இறந்தபோது சீக்கியர்களைத் தேடித்தேடி படுகொலை செய்ததில் இறந்தவர்களை விட ஜாலியன் வாலாபாகில் இறந்தவர் எண்ணிக்கை மிகவும் கம்மிதான்! இன்றைக்கிருப்பது இந்திய தேசிய காங்கிரசல்ல! இது வெறும் சோனியாG காங்கிரஸ் தானே!

மீண்டும் சந்திப்போம்.
                
         

மண்டேன்னா ஒண்ணு! #செய்திகள்பலவிதம்

நரேந்திர மோடியை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளுடைய போதாமை, செக்குமாடுகள் ஒரே இடத்தைச் சுற்றிச்சுற்றி   வருகிற மாதிரியே இருப்பதில் ஊர்போய்ச் சேர முடியுமா? அதேபோலத்தான் சிலபல  பிரபலங்களும்,முந்தைய 5 ஆண்டுகளில் ஆகிவந்த பழைய பல்லவிகளையே மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம் போல!   


Intolerence சகிப்புத்தன்மையத்துப்போச்சு கூக்குரலை நடிகை ஷபனா ஆஸ்மி மறுபடியும் ஆரம்பித்து வைத்திருப்பது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. இது நரேந்திர மோடிக்கு எதிரானது இல்லை, RSSக்குச் சொன்னதாகவும் கூடச் சொல்கிறார்கள்.மாறுபட்ட கருத்தைச் சொன்னால் தேச விரோதிகள் என்று சொல்கிறார்களாம்!   


முயல் ஆமை இரண்டுக்கும் ஓட்டப்பந்தயம், அதில் நிதானமாக இடைவிடாமல் நடந்தே ஆமை ஜெயித்ததாகச் சின்னவயதில் கதை ஓன்றை எல்லோருமே படித்திருப்போம். இங்கே சதீஷ் அதே கதையைக் காங்கிரசோடு பொருத்திப் பார்த்து முயலாமை, இயலாமை ஆகிவிட்ட பரிதாபத்தை கார்டூனில் சொல்கிறார். காங்கிரசுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள்,மிலிந்த் தியோரா, ஜோதிராதித்ய சிந்தியா குதலானவர்களும் தோல்விக்குப் பொறுப்பேற்று ராஜினாமா,   கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசு கலகலத்துக் கொண்டிருக்கிறது,மும்பையில் கடும் மழை ஜனங்களுடைய சிரமங்கள் எதையுமே பொருட்படுத்தாமல், ஆட்களைத் திரட்டி வந்து அதிருப்தி காங்கிரஸ் ஜேடிஎஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிற Sofitel ஹோட்டலுக்கு முன் ஆர்ப்பாட்டம் என்று பலவிதமான கூத்துகளும்  நடந்துகொண்டிருந்த நேரத்தில் ராகுல் காண்டி எங்கே என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தது மிகப்பெரிய வேடிக்கை, தமாஷா! 


தேர்தலுக்குத் தேர்தல் ஓட்டுக்கு கேட்கிற தருணங்களில் மட்டுமே தொகுதிக்கு வந்துபோகிற ராகுல் காண்டி ஜூலை 10 அன்று அதிசயமாக அமேதி தொகுதிக்கு விஜயம் செய்கிறார் என்று சொல்கிறார்கள். ஏன் தோற்றோம் என்று ஆராய்ச்சி செய்யப் போகிறாராம்! 


வேலை, மூளை இரண்டுமே இல்லாத காங்கிரஸ்காரன்  என்ன செய்வான் என்பதற்கு சரியான உதாரணமாக: சத்தீஸ்கரில் ராகுல் காண்டி கோக்கைய்ன் பயன்படுத்துகிறார் என்று சுப்ரமணியன் சுவாமி சொன்னதாக, அதனால் காங்கிரஸ் தலைவருடைய புகழுக்கு களங்கமும் கட்சிக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்துகிற மாதிரி இருக்கிறது என்று FIR பதிவு செய்திருக்கிறார்கள். சுவாமி வெளுத்துக் கட்டி இருக்கிறார். அதிகபட்சம் மானநட்ட வழக்குப் போடவேண்டிய ஒரு விஷயம், காங்கிரஸ் புத்தி சாலிகளால் இன்னமும் அசிங்கத்தை அவர்கள் தலீவர் மீது வரி வீசுவது போல இருப்பது காங்கிரஸ் கட்சியைப் பீடித்திருக்கிற சாபக்கேடு! 


புதைகுழிக்குள் போனதைத் தோண்டியெடுத்து ஒப்பாரி வைப்பது கழகங்களுக்கு கைவந்த கலை. நீட் விவகாரத்தில் மக்களவையில் இன்று வெளிநடப்புச் செய்ததாம் திமுக. வெளிநடப்புச் செய்வதற்காகவே சபைக்குப் போகிற கட்சி திமுக என்பது மாநிலம்தாண்டி அகில இந்திய அளவில் புகழ் சேர்க்கிற விஷயம்! இதற்குமேல் வேறென்ன சொல்வது?

மீண்டும் சந்திப்போம்.
                   

ஒரு புதன்கிழமை! வெட்டி அலப்பறைகள்! அரசியல்!

37 எம்பிக்கள் ஜெயித்து என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்ததற்கு நேற்றைக்கு நாடாளு மன்றத்தில் தமிழ் வாழ்க பெரியார் வா..... அம்பேத்கர் வா...என்று முழக்கமிட்டு வெட்டி அலப்பறைகள் மட்டுமே செய்யத் தெரிந்தவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். கோஷம் போட்டவுடன் அப்படியே நகர்ந்தவர்களைத் திரும்ப அழைத்து. நாடாளுமன்ற ரிஜிஸ்தரில் கையெழுத்து வாங்க வேண்டிவந்த கூத்தும் நடந்தது.   


வெட்டி அலப்பறைகள் செய்தவர்களிடம் ஒரே ஒரு  கேள்வியை மட்டும் கேட்டுப்பாருங்களேன்! அவர்களில் எத்தனைபேர் தமிழில் கையெழுத்துப் போடுகிறார்களாம்? ல ள ழகரங்களைச் சரியாக உச்சரிக்கத்தெரிந்தவர்கள் எத்தனை பேர்? 

T.r. Radhakrishnan
இதுவே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பப்பு தலைமையில் அரசு அமைந்திருந்தால் (நல்ல வேளை, அந்த துன்பியல் நிகழ்வு நடக்கலை) டீம்கா உறுப்பினர்கள் தமில் வால்க என சொல்லி தங்கள் பதவிகளை ஏற்றிருப்பார்களா ?
நாம் தமிழர் கட்சி கேள்வி !!
சரியான கேள்வியாகதான் தோன்றுகிறது..
ஏனெனில், அழகிரி மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தமிழில் பதில் அளிக்க (அவருக்கும் ஆங்கிலம், இந்தி வராது) அப்போதைய காங்கிரஸ் சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளிக்கவில்லை...
வழக்கம்போல டீம்கா நவ த்வாரத்தையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்தது..
ஆனால், சென்ற ஆட்சியில் அதிமுக உறுப்பினர் ஒருவர் தமிழில் கேட்ட கேள்விக்கு தமிழில் பதில் அளிக்க அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடனடியாக அனுமதி அளித்தார்..
ஊப்பீஸ், ரொம்ப ஆடாதீங்க !! 

பெரியார் வாழ்க என்று சொல்லும் போது ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிவிட்டார்கள் வட நாட்டு பிஜேபி MPகள். ஆரம்பித்துவிட்டார்கள் நமது செய்தியாளர்கள்.
ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை தமிழர்களுக்கு எதிரானதாகத் திரிக்கும் வேலையை அழகாகச் செய்கிறது சில ஓநாய்கள் கூடாரமான திமுக பத்திரிக்கைகள்.
உண்மையில் நேற்று நடந்த MPகள் பதவி ஏற்பு முழுவதும் பெரும்பாலான நேரங்களில் ஜெய் ஸ்ரீராம் என்றா கோசம் எழுப்பப்பட்டது. அது ஒரு வாழ்த்தாக மட்டுமே எடுத்துக்கொள்வர். பலரையும் நீங்கள் நன்கு கவனித்தால் தங்கள் கார் ஓட்டும் போது கூட ஜெய் ஸ்ரீராம் என்று சொல்பவர்களும் உண்டு , ஜெய் காளி என்று சொல்லிவிட்டு வண்டியை ஓட்டுபவர்களும் உண்டு. அனைத்துமே இந்த நாட்டில் இருக்கும் ஒரு வெகு சாதாரண நம்பிக்கை. இது தென்னிந்திய மக்களிடமும் உண்டு பலரும் முருகா , ஐயப்பா , ராமா , சிவசிவ என்று சொல்வது உண்டு.
இதை ஒரு மிக சாதாரண நடவடிக்கையாகக் கருதாமல் இதை அப்பட்டமாகத் தமிழர்களுக்கு எதிரானதாகக் கச்சிதமாகத் திரிக்கும் வேலையை இங்கே இருக்கும் திமுக அடிமை ஊடகங்களும் மதம் மாற்றும் இயக்கங்களின் அடிமைகளின் கூடாரங்களும் சேர்ந்து திரிக்க பார்க்கிறார்கள். இது அப்பட்டமான உளவியல் தாக்கல்.
ஒன்றும் மட்டும் உறுதியாகக் கூறமுடியும்
இந்து மதம் சார்ந்த அனைத்து குட்டி குட்டி அழகான நம்பிக்கைகள் கூட கேலியாக்கும் நோக்கம் இங்கே வேகமாக வளர்க்கபடுகிறது.
இங்கே காவி நிறம் கேலியாக்க முற்படுவது , தியானம் செய்தால் , இமய மலை சென்றால் அதைக் கேலி செய்வது என்று ஒரு கூட்டம் இந்த நாட்டின் மிகச் சாதாரண நம்பிக்கையில் வாழும் ஒரு ஆன்மீக நோக்கத்தை அனைத்தையும் கிண்டல் செய்வதற்கு முயல்கிறார்கள்.
"எவன் ஒருவன் தமிழன் இந்து இல்லை என்று சொல்லிவிட்டு - தமிழன் கிறிஸ்தவன் இல்லை முஸ்லிம் இல்லை என்று சொல்ல மறுக்கிறனோ அவன் தான் இங்கே மிகப் பெரிய அயோக்கியன். அவன் பெரும்பாலும் குறிப்பிட்ட மத பின்னணியில் இருப்பான் இல்லை திமுக திக போன்ற கட்சிகள் பின்னணியில் இயங்குவான்".
இந்த நாட்டில் தோன்றி ஆன்மீக நம்பிக்கைகள் அழிக்கும் எவரையும் அழித்தொழிக்க தயக்கம் காட்ட கூடாது என்பது என் வேண்டுகோள். இதை கேலி செய்யவும் கிண்டல் செய்யவும் எந்த தகுதியும் காசாவிலும் , ஜெருசலமிலும் தோன்றிய ஆன்மீக நம்பிக்கைகளுக்கு இல்லை. எனவே அனைவரும் சொல்லுவோம்
ஜெய் ஸ்ரீராம்.... ஜெய் காளி....
-மாரிதாஸ் 


சின்ன விஷயம்தான்! வரலாறு எப்படி திராவிடம், தமிழ் என்ற போர்வையில், யாரால் திரிக்கப்படுகிறது  என்பதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு தகவலே போதும்! என்ன  செய்யப் போகிறோம்?  இதுதான் முக்கியமான கேள்வி.


ராஜஸ்தான் மாநிலம் கோடா தொகுதியில் இருந்து இரண்டாம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. ஓம் பிர்லா நாடாளுமன்றத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். முதன்முறை எம்பியான  ரவீந்திரநாத் ப்ரொபோஸ் செய்வதையும், திமுக எம்பி TR பாலு தடுமாறுவதையும் வீடியோவில் பாருங்கள்!   

சபாநாயகர் தேர்விலும் கூட  பிஜேபி அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டிருப்பதை பார்க்க முடியும். 57 வயதாகும் ஓம் பிர்லா நான்கு  முறை ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் இப்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சபாநாயகராகவும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்  


பிரதமர் நரேந்திரமோடி புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசுகிற  காணொளியொடு பதிவை நிறைவு செய்யலாம்.

மீண்டும் சந்திப்போம்.
    
   

Taming of the shrew நாடகமும்! வெற்றுக்கோஷங்களும்!

Taming of the shrew ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம். அறிவுடன் சரிக்குச்சமமாகத் திமிரும் பிடித்த கதாநாயகியை அவள் வழியிலேயே அடக்குகிற கதாநாயகன் என்று சுபமாக முடிகிற ஒரு நாடகம். கதைச் சுருக்கமாகப்பார்க்கக் கொஞ்சம் இங்கே


எங்கேயோ கேட்ட கதை மாதிரி இருக்கிறதா?  எட்டுத் திக்குகளிலும் சென்று கதையைச் சுட்டுப் படம் எடுக்கிற கலைஞர்கள் நிறைந்த நாடல்லவா இது! நீங்கள் எட்டுத்திக்கும் போய் அலையவேண்டாமென்று சுட்டு எடுத்தபடம் தமிழில் அறிவாளி! 1963 இல்  சிவாஜி பானுமதி நடித்து வந்தவேகத்திலேயே பெட்டிக்குள் போய்ப் படுத்துக்கொண்ட படம். தங்கவேலு முத்துலட்சுமி காமெடி டிராக் ஒன்றுதான் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்தியது என்றால் மிகையில்லை.

இப்போது இதே கதையைக் கொஞ்சம் உல்டாவாக அரசியல் களத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? மேற்கு வங்க அரசியல் களத்தில் அடங்கமாட்டேன் என்று திமிறிக்கொண்டிருந்த மம்தா பானெர்ஜியை ஒருவார கால மருத்துவர் வேலை நிறுத்தம் தொழுவத்தில் கட்டிப்போட்டுவிட்டது.

 TOI infographic  நன்றியுடன் 

ப்பூ! இத்தனை சிம்பிளாக முடிந்திருக்க வேண்டிய,  இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டம்? வேலைநிறுத்தம்? என்றால் மம்தா பானெர்ஜி மாதிரி மமதை மிகுந்த அரசியல்வாதியை நீங்கள் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளத்  தவறுகிறீர்கள், அவ்வளவுதான்! சுமந்த் ராமன் தன்னுடைய செய்தியைக் குறித்து வைத்துக் கொள்ளச் சொல்லி கேலிப்பொருளாகி இருக்கிறார்.  


மம்தா பானெர்ஜியை உருவாக்கி ஆதிப்பாவம் செய்த  காங்கிரஸ் கட்சி இன்று என்ன நிலைமையில் இருக்கிறதாம்?


கரண் தாப்பர் அபிஷேக் மனு சிங்வியுடன் உரையாடுகிறார். கேள்வி கேட்பவர் பதில் சொன்னவர் இருவருமே என்ன கேட்பது என்ன சொல்வது என்று தடுமாற்றத்திலேயே இந்த 26 நிமிடப் பேட்டி நகர்கிறது. 

    கோஷம் போடுகிற மும்முரத்தில் கையெழுத்துப் 
போடவும் மறந்தவர்!  


தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமுழக்கத்தோடு தான் பதவிப் பிரமாணம் செய்தார்கள். ஆரம்பமே களை கட்டுகிறதே என்று நினைக்க வேண்டாம். வேடிக்கை நிறையக்  காத்திருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்! 
   

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அஞ்சறைப்பெட்டி #7

பொதுவாக தமிழ் சேனல் விவாதங்களை உடனுக்குடன் பார்க்க எனக்கு நேரம் வாய்ப்பதில்லை. ஆங்கில சேனல் செய்திகளில் நடப்புநிலவரங்களைப்  பார்த்துக் கொண்டு, அவ்வப்போது யூட்யூப்   தளத்தில் தமிழ் சேனல்களில் கொஞ்சம் தேறுகிற மாதிரி செய்திகள், விவாதங்கள் இருக்கிறதா என்று பார்ப்பது தான்  காரணம். எந்த ஒரு செய்தியையும்  புறக்கணிப்பதில்லை. அப்படிப் பார்த்ததில் இன்று கண்ணில் பட்ட ஒரு நல்ல விவாதம் இது.



பழைய பழ. கருப்பையாவாக, இந்த வியூகம் நிகழ்ச்சியில், அவர் பேசுவதைக் கேட்பதில் வியப்பு மட்டுமல்ல, அவருடைய அரசியலைக் கூர்ந்து கவனிக்கிற விதம் வெளிப்பட்ட பேட்டி இது. குறிப்பாக மனிதர் கரூர் செந்தில்பாலாஜியை கணித்து அதை வெளிப்படையாகச் சொல்வதும் மிகவும் வித்தியாசமான எவரும் எதிர்பார்த்திருக்கமுடியாத பேட்டி இது. கவனத்தில் கொள்ள வேண்டிய  நேர்காணல்  இது. 

பழ. கருப்பையா சொல்வதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், வலுவான எதிர்க்கட்சி என்பது வெறும் எண்ணிக்கையில் இல்லை, ஒருவரோ பலரோ, விஷயஞானத்துடன் நாடாளுமன்ற நடைமுறைகளில் பங்கு எடுத்துக் கொள்ளக்கூடியவர்களைப் பொறுத்தே இருக்கிறது என்பது முந்தைய காலங்களில் கம்யூனிஸ்டுகளும், சுதந்திரா கட்சியினரும், சோஷலிஸ்டுகளும் நிரூபித்திருக்கிறார்கள் ஆனால் இப்போதுள்ளவர்களுக்கு  அப்படி ஜனநாயகக் கடமை ஆற்றுகிற எண்ணமோ தகுதியோ இல்லை. ஸ்ட்ரைட்டாக ஆட்சி அதிகாரம், மந்திரிபதவி சம்பாத்தியங்கள் என்று மட்டுமே இருக்கையில், இவ்வளவு செலவழித்து  37 எம்பி ஜெயித்தும் ஏமாற்றம்தான் என்றால் ....?


லண்டனுக்கோ இத்தாலிக்கோ போய்விட்டதாகச் சொல்லப் பட்ட ராகுல் காண்டி இந்தியாவுக்குத் திரும்பி விட்டாராம்! வந்தவுடன் கர்நாடகா உள்ளிட்டு காங்கிரஸ் ஆளுகிற மாநிலங்களின் முதல்வர்களை சந்திக்கவிருக்கிறார் என்று செய்தி சொல்வதில் அர்த்தம் ஏதாவது விளங்குகிறதா?

பலத்த கரகோஷத்துடன் ஸ்ம்ருதி ஈரானி பதவியேற்பு
காரணம் புரியாதா என்ன? 

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவராக அனேகமாக மனீஷ் திவாரியே தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற ஊகங்கள் பலமாக  எழுந்துகொண்டிருக்கின்றன. கேரளாவிலிருந்து சசிதரூர், சுரேஷ் இவருடைய பெயர்களும் முதலில் அடிபட்டாலும், ஹிந்தியில் சரளமாகப் பேசத்  தெரியாது என்ற குறையில் தள்ளுபடி செய்யப்படலாம் என்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் எம்பிக்கள் எவருக்குமே அந்தமாதிரி அபிலாஷைகள் தகுதிகள்  இல்லை போல இருக்கிறது.


நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ராகுல் காண்டிக்கு கையெழுத்திட மறந்துபோய்விட்டதாம்! 2 நிமிட வீடியோதான்! கவனித்துப்பாருங்கள்!   

        
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அஜெண்டா என்னவாக இருக்குமென்பது பிரதமர் நரேந்திர மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ஒருவாறாகப் புலப்பட்டிருக்கிறது. ஒரு ஆக்கபூர்வமான விவாதம், ஒத்துழைப்பு என்றில்லாமல் அவைநடவடிக்கைகளை முடிவே இல்லாத சர்ச்சைகளில் முடக்க நினைக்கும் போக்கே தெரிகிறது. பட்டும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது?     

அஞ்சறைப்பெட்டி நிரம்பி விட்டதோ?

மீண்டும் சந்திப்போம்.
  

    

சண்டேன்னா மூணு! அரசியல்! அனுபவம்! காமெடி டைம்!

இந்தத் தேர்தலின் மொத்த விசேஷமே ராகுல் காண்டியை குடும்பத்தோடு கதற விட்டுக் கொண்டிருப்பதுதான் என்றால் என்ன சொல்வீர்கள்? என்ன சொல்ல இருக்கிறது?

ராகுல் கரண்டியின் வெளிநாட்டுக் குடியுரிமை பற்றி ஹிந்து நாளிதழ் உச்சநீதிமன்றம் 2015 இல் சொன்னதைக் கொஞ்சம் திரித்துப் போட்டது காலத்தின் கோலம். இதே ஹிந்து என் ராம் நாங்கள்தான் bofors ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம் ராஜீவ் காண்டியின் கறைபடிந்த கைகளை அம்பலப் படுத்தினோம் என்று அந்த நாட்களில் காலரை நிமிர்த்தி விட்டுக் கொண்டது,பாவம் அவருக்கே மறந்து போயிருக்கும்!

மிஸ்டர் க்ளீன் என்ற  இமேஜ் இத்தாலியக்காதல் மனைவியால் பறிபோன கதையை நேற்று பிரதமர் நரேந்திரமோடி ஞாபகப் படுத்தியதும் ராகுல்காண்டிக்கு அழுகாச்சி வந்துவிட்டது போல! ட்வீட்டரில் அழுகிறார்! இப்போது ஹிந்து என் ராமும் கூடச் சேர்ந்து அழுவாரா என்ன?  


  • Modi Ji, The battle is over. Your Karma awaits you. Projecting your inner beliefs about yourself onto my father won’t protect you. All my love and a huge hug.  
    Rahul
    11:15 AM · May 5, 2019 · Twitter for iPhone

    சோனியா வாரிசுகள் இப்போது ஒவ்வொரு விவகாரமாக கோர்ட் வாசற்படியேறி ஜாமீனில் வெளியே இருக்கிற போதே இந்த அளவுக்கு இருக்கிறதென்றால்........!!


    நாங்களும் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினோமாக்கும்!என்று காங்கிரசுக்கு திடீர் ஞாபகம் வந்து சொன்ன பொய்யை இங்கே தமிழ்நாட்டு ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவில்லை! போதாக்குறைக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒரு மனு, காங்கிரசின் பொய்யை துகிலுரித்துக் காட்டிவிட்டது. காங்கிரஸைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அலுப்பு வந்துவிடும் என்பதால், கொஞ்சம் தமிழ்நாட்டு சமாசாரங்களையும் பேசுவோமா?

    புதிய தலைமுறை சேனல் நெறியாளர் கார்த்திகேயனுக்கு என்ன பிரச்சினை என்று யாருக்காவது புரிகிறதா? பிஜேபியை எப்படியாவது கார்னர் செய்யவேண்டுமென்பது சேனலுடைய, அவருடைய அஜெண்டாவாக இருக்கலாம். அதற்காக ஒருவர் பேசுவதைத் தொடர்ந்து இடைமறிப்பதென்பது என்ன உத்தி? என்ன நாகரிகம்?

    மீண்டும் சந்திப்போம்.