Showing posts sorted by relevance for query A Wednesday. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query A Wednesday. Sort by date Show all posts

1956 பிப்ரவரி 29! ஸ்ரீ அரவிந்த அன்னையின் அனுபவம்!



Meditation on Wednesday, the 29th February 1956. She gave us a passage from her own diary of experiences and realisations:
"This evening the Divine Presence, concrete and material, was there present amongst you. I had a form of living gold, bigger than the universe and I was facing a huge and massive golden door which separated the world from the Divine. As I looked at the door, I knew and willed, in a single movement of consciousness, that "the time has come", and lifting with both hands a mighty golden hammer I struck one blow, one single blow on the door and the door was shattered to pieces.
"Then the supramental Light and Force and Consciousness rushed down upon earth in an uninterrupted flow."
This reminds us of the 15th mantra of the Isha Upanishad as translated by Sri Aurobindo:
"The Face of Truth is covered with a brilliant golden lid; that do thou remove, O Fosterer, for the law of the Truth, for sight."
Sri Aurobindo goes on to explain the significance of the word "Fosterer": "In the inner sense of the Veda Surya, the Sun-God, represents the divine Illumination of the Kavi which exceeds mind and forms the pure self-luminous Truth of things.....
"He is the Fosterer or Increaser, for he enlarges and opens man's dark and limited being into a luminous and infinite Consciousness....His rays are the thoughts that proceed luminously from the Truth, the Vast, but become deflected and disordered in the reflecting and dividing principle, Mind. They form there the golden lid which covers the face of the Truth..."
In his New Gayatri mantra, Sri Aurobindo enthrones the Mother as the Devata of the mantra, whereas the original Gayatri mantra had placed the Lord or the Fosterer in the form of the Sun.


29 FEBRUARY THE DAY OF THE LORD
Amal Kiran Remembers...
Now again in 1956 I had to go to Bombay at the end of February. As 1956 was a leap year, it was actually on February 29 that I left Pondicherry. I was to catch the morning train to Madras. So I met the Mother pretty early in the day. She said: "I don't want you to stay away long. Can you come back by the 29th of March?" Evidently she was expecting "great things" once more - the Supramental Manifestation, though she did not specify anything - and she was expecting it within a month's time, perhaps on the 29th of March itself, the date on which, 42 years earlier, she had first come to Pondicherry. I replied, "Mother, I shall surely be back by then." Then I left.
That very day, in the evening, the stupendous thing happened! If I had known, I would never have gone. But I had a strange experience the same night. I need not recount it in detail, for I have told it elsewhere. At Madras I had caught the night-train to Bombay. I was alone in my compartment and I soon fell asleep. Almost at once I had a dream. I saw a huge crowd in an open place - something like the Ashram Playground - and I was on the fringe of the crowd. The Mother was sitting somewhere inside the open place and everybody was going in to do Pranam to her. I also wanted to do it, but somehow I couldn't get the slipper off my left foot - the lame one as you know. I was shaking the foot and trying to fling away the blessed slipper. In the final jerk of that action I woke up. when my eyes opened, I saw the Mother standing in front of me in the compartment. I am a very sceptical fellow as a rule; so I thought I was imagining things. I shut my eyes; I opened them again, and there she still was. I shut my eyes once more and opened them. She was yet standing. This was too much. So I shut my eyes now for a long time. When I opened them, she was gone. Perhaps I should have kept looking and not allowed the sceptic in me to have play. I might have had a deeper experience. But the benefit now was that the sceptic got completely routed. And indelible wonder filled me. And the memory of that strange calm translucent figure has stayed for ever with me.
I wrote of the experience to the Mother, but received no reply.. Only on my return to the Ashram she explained what had occurred. It sounds too self-glorifying to talk of it, but it was a very glorious thing to hear from her. She said: "There were only five people who knew about the Supramental Manifestation - two in the Ashram and three outside." I blurted out: "Then what's the idea of staying in the Ashram?" (laugher) She said: "I don't mean that anybody actually knew the Supermind had manifested, but something extraordinary happened to some people. Among those three who were outside, I count you." Puzzled, I asked: "How's that?" She answered: "Didn't you write to me that on February 29 at night you had seen me in the railway compartment?" I said: "Yes, but what did happen?" She replied: "Do you remember I promised in 1938 to inform you ? I came now to fulfil my promise." I was absolutely overwhelmed. My God! what Grace the Divine could give to a poor fool! I fell at the Mother's feet in deepest gratitude.
Light and Laughter Pg. 89
Amalkiran

ISTM முகநூல் குழுவிலிருந்து நன்றியுடன் இங்கேயும் பகிர்ந்து கொள்ளப்பட்டது 

வரலாறும் முக்கியமே! MM பிறந்தநாள்! The Magician!

ராதாரவி என்ன பேசினாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் கற்பித்துச் சர்ச்சையாக்கிவிடுவது இங்கே ஊடகங்களுக்குப் பிடித்தமான வேடிக்கை! அவர் சொல்வதன் பின்னணியில் வரலாற்றுப் பூர்வமான தேவை, ஆதாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ராதாரவி பேசியிருந்தாலும்  அகிலன் கல்கியில் தொடர்கதையாக எழுதிய வெற்றித் திருநகர் புதினத்தை, ஒருமுறை வாசித்துப் பார்த்திருந்தீர்களானால்,  கொஞ்சம் புரிந்து கொள்ள முடியுமே! அகிலன் எழுதிய கதைகளிலேயே கொஞ்சம் தரவுகளோடு எழுதப்பட்ட கதை அது ஒன்றுதான்! (வேங்கையின் மைந்தன் சுத்தக் குப்பை!) என்று இங்கே எழுதி  இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை1 நாம் தமிழர் கட்சி ஆசாமிகள் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்கள்!
  
  
இங்கே இன்றைக்கிருக்கிற  மதுரை பழைய பாண்டியர்களுடைய காலத்து மதுரை அல்ல, நாயக்கர்கள் காலத்து மதுரையின் எச்சம் என்பது கூடத் தெரியாமல் பேசுகிறார் சாட்டை துரைமுருகன்!வரலாற்றைத் திரித்துப் பேசுவது தமிழ் தேசியம் என்பது தெரிந்ததுதானே! உதியஞ்சேரல் பரத காலத்தவனா என்றொரு சிறுநூலைப் பள்ளி நாட்களில் படித்துச் சிரித்ததுண்டு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுநூலாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த சப்ஜெக்ட் மீனாட்சி புத்தக  நிலைய வெளியீடாக வந்ததாக நினைவு. காசுக்காகக் கூவுகிற தமிழ்ப்புலவர்களில்   யாரோ ஒருத்தர் சேரமன்னன் ஒருவன் மகாபாரத யுத்தத்தில் இருபக்கத்துச் சேனைகளுக்கும் சோறு கொடுத்தான் என்று ஒரு பாடலை எழுதிவிட்டுப்போக அதை வைத்து ஒரு வெட்டி ஆராய்ச்சி செய்து தீசிஸ் சமர்ப்பித்து டாக்டர் பட்டமும் வாங்கிவிட்டார் நூலாசிரியர்  என்பது  கொசுறு செய்தி.  பாடல் எழுதியவரின்  சமகாலத்துப் புலவர்களாக அறியப் பட்டவர்களை வைத்து, அந்த சேரமன்னன் பெயரை வைத்து ஒப்பிட்டுப் பார்த்து பாரதப்போர் நடந்த காலத்துக்கும் அந்த மன்னனுக்கும் தொடர்பு கிடையாது, வேண்டுமானால் பாரதப் போரில் உயிர்நீத்த இருபக்கத்துக்கும் திதி வேண்டுமானால் கொடுத்து சோற்றுப்பிண்டம் வைத்திருக்கலாம் என்று முடிகிற இந்த ஆராய்ச்சி (?) நூலைப் பற்றிய நினைவு வருகிறது. , 


கூடவே,          தமிழர்களுக்கு வரலாற்றுப் பிரக்ஞையே கிடையாது என்று வேறொரு context இல் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் நிறுவி நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொன்னதும்  சேர்ந்து நினைவுக்கு வருகிறது!  
                                                            

அட! நம்ம மண்ணு மோகனருக்கு இன்னைக்குப் பொறந்த நாளாமே!  

Good News For People Who Love Bad News In a Twist, Netanyahu Wins a Chance to Keep His Job
மறுபடியும் மொதல்ல இருந்தா?  சமீபத்தைய இஸ்ரேல் தேர்தல்களில் பிரதமர் நேத்தன்யாஹூ எதிர்பார்த்தபடி அவருடைய லிகுட் கட்சிக்குப் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் இஸ்ரேலிய அதிபர் ரிவ்லின் மீண்டும் ஆட்சியமைக்க நேத்தன்யாஹூவுக்கே அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது தற்போதைய செய்தி! But by Wednesday, in a surprise twist, Mr. Netanyahu — long called “the magician” for his political survival skills — was back on center stage. President Reuven Rivlin chose him to try to cobble together a coalition, opening the door to a continued shift to the right for Israel and offering a potential political lifeline to Mr. Netanyahu, who faces a looming indictment for corruption என்கிறது நியூயார்க் டைம்ஸ். லிகுட் கட்சியும் ஆதரவுக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமுள்ள 120 இடங்களில் 55 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. ஒரு working majority என்பதற்கு இன்னமும் 6 இடங்கள் வேண்டிய நிலையில் நேத்தன்யாஹூ தாக்குப் பிடிப்பாரா? கஷ்டம் தான் ஆனால் அவரால் முடியாதது இல்லை! இதற்கு முன்னாலும் கூட இதே மாதிரியான சூழ்நிலைகளை சமாளித்திருக்கிற மந்திரவாதி அவர் என்று ஒரு அரசியல் விஞ்ஞானி சொல்கிறாராம்!
 
Mr. Netanyahu’s chances of success are “not good but not impossible,” said Gadi Wolfsfeld, a political scientist at the Interdisciplinary Center Herzliya. “He’s pulled rabbits out of the hat before.”  
                                                                              
இன்றைக்கு செய்திகளின் ரவுண்டப் போதுமா?

மீண்டும் சந்திப்போம். 

 

அக்கப்போர்களில் கவனம்! கொஞ்சம் உலகப் பார்வையும் வேண்டாமோ?

ந்தப்பக்கங்களில் A Wednesday  என்று தேடிப்பார்த்தால் உள்ளூர் அக்கப்போர்களே பெரும்பாலான பதிவுகளில் இடம் பிடித்திருப்பதைப் பார்க்க முடியும்! A Wednesday ஹிந்திப்படத்தை கமல்ஹாஸன் ரீமேக் செய்து உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்தபோது இங்கே தமிழ் வலைப்பதிவர்கள் ரொம்பவுமே பொங்கித் தீர்த்தார்கள்! கொஞ்ச காலத்துக்குப் பின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் சொல்லிவைத்தாற் போல தங்களுடைய பொங்கல், பதிவுகளை நீக்கிக் கொண்டார்கள்! 127 பதிவர்கள் இப்படிப் பொங்கித் தீர்த்ததாக நண்பர் உண்மைத்தமிழன் தொகுத்து வைத்திருப்பது இங்கே   அங்கே போய்ப் பார்த்தால் பொங்கல் வைத்து அப்புறம் நீக்கிக் கொண்டவர்கள் யார் என்பது தெரியும்! என்று எழுதிய இந்தப்பதிவும் கூட அதில் அடக்கம் தான்!  எத்தனை நாட்களுக்குத் தான் கிணற்றுத் தவளைகளாக இதுபோல உள்ளூர் அக்கப்போர்களிலேயே நம்முடைய கவனத்தை வீணடித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? 


த்தியகிழக்கு நாடுகளின் அரசியல், எதிர்காலத்  தலையெழுத்தை நிர்ணயிக்கக்  கூடிய ஒரு தேர்தலாகவே கூட நேற்றைக்கு நடந்து முடிந்திருக்கும் இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இருக்கலாம் என்பதால் முந்தைய பதிவில் இஸ்ரேல் தேர்தல்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீதான தாக்குதல் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியை பாதியாகக் குறைத்திருப்பதில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று பேசத் தெரிகிறது. ஆனால் மத்தியகிழக்கில் அமைதியைப் பாதிக்கக் கூடிய ஒரு தேர்தலைப் பற்றியும் பேசுகிறோமா? என்னதான் இங்கே அரசியல் உள்ளூர் அக்கப் போர்களால் ஆனது என்றாலும், அதைவிட அதிகமாகப் பாதிக்கிற விஷயங்களிலும் கொஞ்சம் அக்கறை வேண்டாமோ என்பது என்னுடைய நீண்டநாள் ஆதங்கம்! சரி, இஸ்ரேல் தேர்தல்களில் மே மாதம் நடந்த பொதுத்தேர்தல் மாதிரியே பிரதான கட்சிகள் இரண்டுமே மெஜாரிட்டியைத் தொடமுடியாது, மீண்டும் உதிரிகளோடு கூட்டணி வைத்தால் தான் ஆட்சி அமைக்கமுடியும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்  கணிப்புக்கள் சொல்வதாகத் தற்போதைய செய்தி. நீண்ட காலமாக (13 ஆண்டுகள்) ஆட்சியில் இருந்த பிரதமர் நேத்தன்யாஹூவுக்கு  பெரும் பின்னடைவு என்று சொல்கிறார்கள்.


ள்ளூர் அக்கப்போர்கள் அவ்வளவு சகித்துக் கொள்கிற மாதிரியாகவா இருக்கின்றன? இந்த 23 நிமிட விவாதத்தையே கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள்! அமித் ஷா என்ன பேசினாலும் அதை நெகடிவாக, சர்ச்சையாக்க வேண்டுமென்றே கங்கணம் கட்டிக் கொண்டு ஊடகங்களும் எதிர்த்தரப்பும் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு செயல் படுகிறமாதிரித் தான் இருக்கிறது! இல்லையென்று மறுக்கும் நண்பர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் காரணங்களோடு சொல்லுங்களேன்! 

மித் ஷா என்ன context இல் எப்படிச் சொன்னார் என்பதைப் பேசுவதற்கு முன்னால், இங்கே இந்திய ஜனநாயகத்தில் இருக்கிற மாதிரி  உதிரிக்கட்சிகளுடைய ஆட்டம் உலகத்தில் வேறெந்த ஜனநாயகத்திலாவது இருக்கிறதா? அரை, முக்கால் சதவீத வாக்குகளைக் கூடப் பெறமுடியாத உதிரிக்கட்சிகள் சாதித்ததென்ன  என்று கொஞ்சம் யோசித்திருக்கிறோமா? உதிரிக் கட்சிகளோடு ஒட்டிக் கொண்டுதான் இங்கே திமுக மாதிரி பெரிய கட்சியே இருக்க முடியுமென்றால் அர்த்தம் இருக்கிறதா? 1977 இல் ஜனதாக் கட்சி எக்ஸ்பெரிமென்ட் முதற் கொண்டு ஏகப்பட்ட பரிசோதனைகள் இந்திய அரசியலில் நடந்து முடிந்திருக்கின்றன. அவைகளிலிருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம்? எப்போதாவது இவைகளைப் பற்றிச் சிந்தித்திருக்கிறோமா?

ங்கே பிஜேபி அதிபர் ஆட்சிமுறையை மறைமுகமாக வலியுறுத்துவதாகத் தான் பலகட்சி ஆட்சிமுறை தோற்று விட்டதாக அமித் ஷா பேசுவதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விசிகவின் வன்னியரசு மேம்போக்காகப் பேசிவிட்டுப் போவதை விடுங்கள்! Bihar Movement என்று  இந்தச் சுட்டியிலும் இதே வார்த்தையைக் கொண்டு இணையத்திலும் தேடிப் பாருங்கள்! 1971 நாடாளுமன்றத்தத் தேர்தல்களில் இந்திரா காண்டி அமோக(?) வெற்றியடைந்த பிறகு, அவ்ரதுபோக்கில் நிறைய மாறுதல்கள், எல்லா அதிகாரங்களும் ஒரே நபரின் கீழ் என்கிற அமெரிக்க அதிபர் முறை மாதிரி ஒரு தேர்தல் முறைக்குத் தயாராகிறாரோ என்ற சந்தேகம் வலுவாக எழுந்த காலத்தில் பிஹார் இயக்கம் என்று ஊழலுக்கெதிரான மாணவர் போராட்டம் வலுவான தருணத்தில், ஜெயப்ரகாஷ் நாராயணனைத் தமைமைதாங்க அழைத்த தருணம்! தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன், பிஹார் இயக்கம் என்ற தலைப்பில் தொடர்ந்து 47 நாட்கள் தினமணி நாளிதழில், ஜெயப்ரகாஷ் நாராயணன்  இந்திரா காண்டியின் போக்குக்கு எதிராக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியதும் இதர விவரங்களுமாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டது, பின்பு தினமணி வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. கூகிள் தேடலில் பிஹார் இயக்கம் என்று தேடினால் பிபிசி தளத்தில் வெளியான இந்த ஒரு செய்தி தான் கிடைக்கிறது!  பிஹார் இயக்கம் தினமணி வெளியீடாக வந்த புத்தகம் தற்சமயம் நானறிந்தவரை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில் மட்டும் கிடைக்கிறது. 

விசிக மாதிரியான உதிரிக் கட்சிகளுக்கு வரலாறும் தெரியாது, போகும் திசை பற்றிய தெளிவும் கிடையாது. ஆனால் இன்னும் எத்தனைநாட்களுக்கு இவர்களைப் போன்ற உதிரிகள் நாட்டாமை செய்வதை சகித்துக் கொண்டிருக்கப் போகிறோம், சொல்லுங்கள்! இந்தியா முழுவதும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எத்தனை. அவை எத்தனை தேர்தல்களைச் சந்தித்திருக்கின்றன, எவ்வளவு வாக்கு (சதவீதத்தில்) வாங்கியிருக்கின்றன என்பதெல்லாமே பொதுவெளியில் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் இருப்பதுதான்!

திவுகளின் இங்கே  பகிர்வதெல்லாம்  உங்களைக் கொஞ்சம் யோசிக்க வைப்பதற்காக மட்டுமே! ஏன் எங்களுக்கு சுயமாக யோசிக்கத் தெரியாதா என்று சண்டைக்கு வருவதற்கு முன்னால், என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.       
              

டீலா? No டீலா? சீனாதானாவும் DK சிவகுமாரும்!

இன்றைய முக்கியச் செய்தியாக பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில், பிரதமர் போரிஸ் ஜான்சனை ஆளும் கட்சி உறுப்பினர்களே கைகழுவிவிட்டதில், மெஜாரிட்டியை இழந்து வரும் அக்டோபர் 14 வாக்கில் பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. #nodealbrexit என்று அக்டோபர் 31 கெடுவுக்குள் எந்தவிதமான இடைக்கால ஏற்பாடுகளும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதான போரிஸ் ஜான்சனுடைய பிடிவாதத்துக்கு கடிவாளம் போடப்பட்டிருப்பதன் அடையாளமாக இது இருக்கிறது என்று சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். 



#brexit ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்று பிரிட்டன் பொதுக்கருத்து வாக்கெடுப்பில் 51:49 என thin difference  இல் முடிவெடுத்த நாளில் இருந்தே, குழப்பங்களும் ஆரம்பித்து விட்டன. அடுத்த கட்டத்துக்கு நகர்வதில் ஏற்பட்ட பல்வேறுவிதமான கருத்து மோதல்களில் தெரெசா மே பிரதமர் பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது. போரிஸ் ஜான்சன் பிரதமரானார். #nodealbrexit என்றால் என்ன, ஏன் இப்படிக் குழம்புகிறார்கள் என்பதைக் கொஞ்சம் புரிந்துகொள்ள  

இனி கஸ்டடி வேண்டாம் என்று கூறியபிறகும்... நீதிபதி பானுமதி அமர்வு....சிபிஐ தான் 5 ஆம் தேதி வரை வைத்துக் கொள்ளவேண்டும் என்று மீண்டும் அனுப்புவதும்...
அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காத்துக் கிடப்பதும்...
இவ் வழக்கில் முக்கிய நடவடிக்கை எடுத்த அமலாக்கத் துறையின் முன்னாள் அதிகாரி கர்னால் சிங் மீது விசாரணை முடுக்கி விடப் பட்டிருப்பதும்..
முரண்களும் , இருட்டறையாக இருக்கும் சட்டம் நிகழ்த்தும் சுவாரஸ்யங்களுமாக...பெரும் பொருளாதார குற்ற திரில்லர் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கவனித்தால்...பொது மக்களுக்கு தான் மனஉளைச்சல். அவர்கள் thumbs up காட்டி சிரித்தபடியே போகிறார்கள். வந்தும் விடுகிறார்கள்.


In an unprecedented way, the bench headed by Justice Banumati ordered that “status quo” be maintained on Chidambaram’s custody despite the CBI insisting that it does not require his further custodial interrogation in the case.In an affidavit filed by CBI S P Rajpal Meena, the probe agency said: “I state and submit that entertaining of a petition under Article 136 of the Constitution directly against an order of remand passed by the competent court in exercise of discretionary jurisdiction under section 167 of the CrPC would set a very bad precedent.”
It said there is a remedy available against the orders before the higher forum and it is settled legal position that this court would not invoke its constitutional discretionary jurisdiction under Article 136, directly against an order of the Special Judge remanding an accused to a few days of police custody. என்கிறது PGurus தளச் செய்தி. கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்ற கேள்வி இங்கே தெக்கத்திச் சீமையில் நீண்ட நாட்களாகவே இருந்துவருவது தெரியுமில்லையா?  

கர்நாடகக்  காங்கிரசுக்கு மட்டுமல்ல, பொதுவாகக்  CONgress கட்சி, ஆட்சிக்குச் சிக்கல் வரும்போதெல்லாம் ரட்சகனாகவும் பணம் செலவழிப்பவராகவும் இருந்த D K  சிவகுமார் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை விசாரணையில் போக்குக் காட்டி வந்தநிலையில் நேற்றைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியில் உச்சுக் கொட்டுவதற்குமேல் ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. ஆனால் அட்சய் சந்தர் கார்டூன் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. 
Bengaluru: Buses were torched and schools and colleges shut as a precautionary measure as the Karnataka Congress called for a state-wide bandh on Wednesday to protest against the arrest of its troubleshooter DK Shivakumar by the Enforcement Directorate under the Prevention of Money Laundering Act (PMLA) after a long session of interrogation.
Soon after the Kanakapura MLA’s arrest, protests erupted across Karnataka, which turned violent in Bengaluru Rural and Ramanagaram districts, which are Shivakumar’s strongholds. இது இன்றைய நி(க)லவரம். எடியூரப்பா பிஜேபி கட்சிக்காரர்கள் யாரும் சிவகுமார் கைதைப்பற்றி எதுவும் சொல்லவேண்டாமென்று வாய்ப்பூட்டு போட்டிருப்பதில் என்னவென்று புரிந்து கொள்வது? 
சிவகுமார் கைது என்றவுடன் கர்நாடக காங்கிரஸ்காரர்கள் கொந்தளித்த விதமும்  சிவகங்கைச் சின்னப்பையனுக்கு இங்கே தமிழக காங்கிரஸ் பெயரளவுக்கு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டமும் வேற லெவலில் செய்தி சொல்கிறதோ? 

மீண்டும் சந்திப்போம்.


A Wednesday! ஏன் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்?

இந்தப்பக்கங்களில் 2009 முதலே காங்கிரசைக் குறித்த விமரிசனங்களோடு , காங்கிரசைத் தோற்கடியுங்கள், Defeat Congress என்று மிக வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறேன். ஐயோ, 134 வருடப் பாரம்பரியம் உள்ள கட்சியாயிற்றே, காந்தி நேரு போன்ற தலைவர்கள் இருந்த கட்சியாயிற்றே, அப்படிச் சொல்லி விடலாமா என்று சிலருக்கு சந்தேகம் எழலாம். அப்படி சந்தேகப்படுகிறவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கதை, வரலாறு தெரியாது என்று கொஞ்சம் சொல்லிக் கொடுக்கிற பதிவுகள் இங்கே நிறைய இருக்கின்றன. காங்கிரசின் கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பலகால கட்டங்களைக் கொண்டது. அல்லது காங்கிரஸ் என்ற பெயரில் வெவ்வேறுநபர்களின் ஆளுமையின் கீழ் இருந்த வெவ்வேறு குழப்பங்களைக்  குறிப்பிடுகிற ஒரு பெயர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்! 

இப்படிக் கொள்கைகள் எல்லாம் காங்கிரசுக்கு இருந்ததா? இருக்கிறதா? என்பதில் ஆரம்பிக்கிற  குழப்பம், என்றைக்கும் தீருவதாயில்லை! 1885 இல் மாட்சிமைதாங்கிய ராணியின் சர்க்கார் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசா இன்றைக்கு இருப்பது? ஸ்ரீ அரவிந்தர், திலகர், கோகலே காலத்தைய காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1920 க்குப் பிறகு,மகாத்மா காந்தி வந்தபிறகு 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் நடத்திய காங்கிரசா இன்றைக்கு இருப்பது?

நேரு காலத்தில் இருந்த காங்கிரசா இது? கட்சியை உடைத்து இண்டிகேட் ஆக்கிய இந்திரா காலத்து காங்கிரசா இன்றைக்கிருப்பது?

இன்றைக்கிருக்கிற காங்கிரசின் சரித்திரம் சீதாராம் கேசரியை ஓரம் கட்டிவிட்டு, அன்டோனியோ மைனோ என்கிற சோனியா கட்சித்தலைவர் ஆனதிலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டீர்களானால், மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது எளிது!  ஏன் இவர்களை நிராகரிக்கவேண்டும் என்பதையும் சேர்த்துத்தான்!  

காங்கிரஸுக்கு இந்தியா ஒரு நாடு கிடையாது, ஒரு இராணுவ தளவாடங்கள் விற்கும் சந்தை! என்று முகநூலில் இதைப் பகிர்ந்திருக்கிறார் செல்வம் நாயகம் 
"இராணுவ தளவாடங்கள் விற்க ப்ளாக் ஆப்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனத்தை ராகுல் காந்தி நிறுவியுள்ளார். அவர் இங்கிலாந்து பிரஜா உரிமையை (இந்தியாவுக்கு தெரியாமல் சட்ட விரோதமாக) பெற்றுள்ளார்" போன்ற விவரங்கள் கசிந்ததை அடுத்து, ராகுலிடம் அது பற்றி பேட்டி எடுக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் நிருபர் விவேக்.
"உன்னையும், உனக்கு என் தொலைபேசி எண்ணை தந்தவனையும் முடித்து விடுவேன்" என்று ராகுல் மிரட்ட, அந்த நிருபர் பேட்டி டில்லியில் இருக்கும் ப்ளாக் ஆப்ஸ் நிறுவனத்தை நாடியிருக்கிறார். அங்கிருந்தும் துரத்தி விடப்பட்டிருக்கிறார் அவர். அதன் பின், பேட்டி எடுக்கும் முயற்சியை கை விட்டிருக்கிறார்.
இதை 2017இல் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நிருபர் விவேக்.
"ராகுல் மூளை சரியில்லாதவர் / ஆளுமை பிரச்சினை உள்ளவர் (personality problems)" என்ற ரீதியில் பத்திரிக்கையாளர் (காங்கிரஸ் ஆதரவாளர்) சயீது நாக்வி அமெரிக்கர் போலஃபிடம் (Poloff) 2005இல் தெரிவித்ததை விக்கி லீக்ஸ் வெளியிட்டிருந்தது. கொலை செய்யும் அளவுக்கு மூளை சரியில்லாதவர் போல....
(சயீது நாக்வி மகள் சபா நாக்வி தொலைக்காட்சி விவாதங்களில் வருபவர்)
அதே விக்கிலீக்ஸ், "ராஜீவ் காந்தி தான் ஸ்வீடனின் இராணுவ தளவாட நிறுவனம் சாப்-ஸ்கானியாவுக்கு (Saab-Scania) ஏஜண்ட். சாப்-ஸ்கானியா தளவாடங்களை இந்தியாவில் விற்க அவர் முயற்சித்தார்" என்ற 1975 விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதல் ஊழல், இராணுவங்களுக்கு ஜீப் வாங்கியது. அதை செய்தவர் நேரு. அந்த பாரம்பரியத்தை இந்திராவும் தொடர்ந்தார். இப்போது இந்தியாவில் விசாரணை கைதியாக இருக்கும் அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட், யூரோஃபைட்டர் இராணுவ தளவாட ஏஜண்ட் கிறிஸ்ட்டியன் மிஷலின் தந்தை உல்ஃப்கங் மிஷல் ஒரு இராணுவ தளவாட ஏஜண்ட் இந்திராவின் நெருங்கிய நண்பர்.
நேரு, இந்திராவை அடுத்து ராஜீவ். போஃபர்ஸில் சிக்காமல் தப்பித்தார்.
பின் சோனியா, ராகூல், ராபர்ட் வாத்ரா, பிரியங்கா வாத்ரா...
காங்கிரஸுக்கு இந்தியா ஒரு நாடு கிடையாது, ஒரு இராணுவ தளவாடங்கள் விற்கும் சந்தை. இந்திய வளங்களை வெளிநாட்டுக்கு விற்று பணம் கொழிக்கும் பூமி. 1947இலிருந்து பாரதத்தை சூறையாடி வருகிறது இந்த குடும்பம். இந்த குடும்பத்தை சார்ந்தவர்களும் வாரிசு அரசியலை ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.
11:12 PM - 10 Oct 2017 - Shri Rahul Gandhi's first words when I made a cold call to him apropos backops was 'I'll finish you and the person who gave my number off'
11:17 PM - 10 Oct 2017 - Let's be equally fair or unfair. I went to Backops registered office in deen dayal upadhay marg. I was kicked out literally for asking why
Apr 8, 2013 - Rajiv Gandhi 'worked as middleman' in aircraft deal: WikiLeaks
1975 October 21 - SWEDISH EMBOFF HAS INFORMED US THAT MAIN INDIAN NEGOTIATOR WITH SWEDES ON VIGGEN AT NEW DELHI END HAS BEEN MRS. GANDHI'S OLER SON, RAJIV GANDHI
2005 March 3 - Naqvi claimed that it is increasingly
common knowledge that Rahul suffers from "personality
problems" of an emotional or psychological nature that are
severe enough to prevent him from functioning as PM.


காங்கிரசை ஏன் முழுதாய் நிராகரிக்கவேண்டும் என்பதற்கு நிறையக்காரணங்கள் இருக்கின்றன.  

மாறாக, ஏன் இவர்களை இனியும் கூட ஆதரித்தே ஆக வேண்டுமென்பதற்கு வலுவான காரணம் இருக்கிறதா?

மாற்றுக கருத்துக்கள் நாகரீகமான உரையாடலாக வரவேற்கப்படுகின்றன. விருந்தினர் பதிவாக எழுத விரும்பினால்  அதையும் வரவேற்கிறேன்!

                       

ஆரம்பமும் முடிவும்! மம்தா பானெர்ஜி! ,

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபசானதோடு மம்தா பானெர்ஜிக்கு இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடவில்லை என்றுதான் இன்றைக்கு வரும் செய்திகளைப் பார்க்கும் போது தெரியவருகிறது. இந்த முறை மம்தா பானெர்ஜி வரிந்துகட்டி தன்னை எந்த  முஸ்லிம் மக்களின் ஏகோபித்த பாதுகாவலராகக் காட்டிக்  கொண்டிருக்கிறாரோ, அதே முஸ்லிம் மக்களிடமிருந்து வேண்டுகோளாக வந்திருக்கிறது!  


“Last night absolutely shook me. This is not the Kolkata, I came back to; not the Kolkata I left my flourishing career outside to come back and live. I represented Kolkata and won the title of Miss India. I represent this city. I represent this county. I stand up for every girl, every citizen who is scared to live in this situation,” என்கிறார் 2010 இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உஷோஷி சென் குப்தா. இது நடந்தது திங்கட்கிழமை அதிகாலைப் பொழுது.   கொல்கத்தா போலீசாருடைய அலட்சியம், செயலற்ற தன்மை இரண்டுமே உஷோஷியின் முகநூல் பகிர்வுக்குக் கிடைத்த வெகுஜன ஆதரவிலும், குற்றவாளிகள் முஸ்லிம்கள் என்பதால் விட்டுவிடவேண்டாம் என்று முஸ்லிம் மக்களே மம்தா பானெர்ஜியை வேண்டிக்கொண்டிருக்கிற கடிதத்திலும்  நடந்திருக்கிறது    

In what can be seen as a rejection of West Bengal Chief Minister Mamata Banerjee’s minority appeasement policies, prominent Muslim citizens of Kolkata have written to the chief minister, asking her not to spare the accused – who happen to be Muslims – in the case of a doctor getting assaulted in NRS Hospital and a model getting attacked in Kolkata on Monday night.  
இங்கே தமிழகத்திலும் திமுக திக  விசிக மாதிரியான போலி செகுலர்களின் சுயநலத்தோடு கூடிய  அரவணைப்பிலிருந்து முஸ்லிம் நண்பர்கள் விடுபட்டு அவர்களிடமிருந்து விலகிநிற்கிற காலம் வருமென்று நான் உறுதியாக நம்புகிறேன். கொல்கத்தாவில் அது நடக்குமென்றால் இங்கே சென்னையில், தமிழகத்திலும் நிச்சயம் நடக்கும்!   


ஏற்கெனெவே ராமசந்திர குகா சொன்னதுதான்! ராகுல் காண்டிக்கு அரசியல் சரிப்பட்டு வரவில்லையென்றால் அவர் வேறு வேலை பார்க்கப்போக வேண்டியதுதானே! மொபைல் போனை நோண்டிக்கொண்டிருப்பதற்குத்தான் வயநாடு தொகுதி மக்கள் வாக்களித்து எம்பியாக்கினார்களா?


ஆந்திர அரசியலில் இது சந்திரபாபு நாயுடு  ஏற்கெனெவே விதைத்த வினைதான்! இவ்வளவு சீக்கிரமாக அறுவடை செய்ய வேண்டிவரும் என்பதை அவரோ வேறு யாருமோ எதிர் பார்த்திருக்க முடியாதுதான்! மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தெலுகு தேசக்கட்சிக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய கட்சிக்காரர்களே சந்திரபாபு நாயுடுவைக் கைகழுவிக் கொண்டிருக்கிறார்கள்! இதை  வெறும் கட்சித்தாவல் என்று மட்டும் பார்க்க முடியவில்லை, வரவேற்கவும் முடியவில்லை. ஏற்கெனெவே மோடி மீதிருக்கிற பயத்தினால் மோடி எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்று வரிந்துகட்டிக்   கொண்டிருக்கிற எதிர்க்கட்சிகளை இப்படியா இன்னும் பயமுறுத்துவது? !!

 
இந்தப்படம் அப்படியென்ன பேசுகிறதாம்? உங்களுக்காவது ஏதேனும் புரிகிறதா?  

மம்தாவிடமிருந்து ஆரம்பித்த பதிவை மம்தா பானெர்ஜியை வைத்தே முடித்தாலென்ன? மம்தா தீதியிடம் செய்திகள், பரபரப்பு, கலாட்டா இவைகளுக்குப் பஞ்சமுண்டா என்ன?
   
A day after TMC supremo Mamata Banerjee directed party leaders to give back the money if they had taken any bribe from beneficiaries of government schemes, elected representatives faced public ire in various parts of the state Wednesday with the people demanding return of the "cut money"

அட! ஒரு பேச்சுக்காக, திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் யாராவது நலத்திட்ட உதவிகளைப்பெறுவதற்காக ஜனங்களிடம் இருந்து அன்பளிப்பு வாங்கியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று மம்தா பானெர்ஜி சொன்னது தான்! ஜனங்கள் அதையும் சீரியசாக எடுத்துக் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்களிடம் எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடு என்று சுற்றி வளைக்கிறார்களாம்! 

Angry people gheraoed TMC leaders and elected representatives of panchayats and municipalities in the districts of Birbhum, Malda, Purulia and Bankura.They demanded that the Trinamool Congress leaders return the money allegedly taken from them to provide them benefits from various schemes of the government.   .

மீண்டும் சந்திப்போம்.
         

ஒரு புதன் கிழமை! அரசியல் அக்கப்போர்கள்!

நேற்றைய கவனம் முழுதும் காஷ்மீர் பற்றி ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்திகள், விவாதங்கள் மீதே இருந்தது. இன்றைக்கு உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிற செய்திக் குறிப்பு அந்த ஆவல் தீயில் தண்ணீரைக் கொட்டியிருக்கிறது.

The Ministry of Home Affairs on Wednesday clarified that there was no proposal under its consideration for a delimitation exercise in Jammu and Kashmir. The clarification comes a day after reports claimed that Home Minister Amit Shah has set up a commission to take forward the delimitation of assembly seats in Jammu region. The ministry has clarified that there is no such proposal on the table and no discussions on the matter have taken place at the level of the government என்கிறது Financial Express தளச்செய்தி   இந்த வீடியோவில் தடைகள் எதுவும் கிடையாது என்பதையும் தெளிவாகச் சொல்வதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். 


As per the rule, the delimitation exercise should be carried out after every 10 years, meaning after every Census. But in Jammu and Kashmir, which has a separate Constitution, the delimitation exercise couldn’t be carried out in the last two decades due to opposition by PDP and NC. The last time when delimitation exercise was carried out in the state was in 1995. The next such exercise was due in 2005 but then CM and NC leader Farooq Abdullah changed the state’s Constitution and froze it until 2026 என்று காஷ்மீர் தொகுதி சீரமைப்பில் பாரூக் அப்துல்லா எப்படி முட்டுக்கட்டை போட்டார் என்பதையும் சேர்த்தே சொல்கிற Financial Express தளச் செய்தி ஒரு தவறை சரிசெய்வது இந்திய அரசியலில் எத்தனை கடினம் என்பதையும் ஆரம்பத்திலேயே சொல்லாமல் சொல்லி விடுகிறது.


நாங்கள் மட்டுமே ஆளப்பிறந்தவர்கள் என்று கொக்கரிக்கும் காஷ்மீரின் இரு முன்னாள் முதல்வர்கள் நேற்று ட்வீட்டியது. 


துக்ளக் அட்டைப்பட நையாண்டியில். தமிழ் வலைப் பதிவுலகில் நிலவும் அக்கப்போர்கள் கூட ஒரு நாள் முடிவுக்கு வந்துவிடலாம்! சோனியாG காங். கட்சிக்குள் நடக்கும் அக்கப்போர்கள் ஒருநாளும் குறையாது, முடியாது என்கிறார்கள்,  உண்மைதானே!  

 
கடந்த ஐந்தாண்டுகளில்  நக்சல் குறுங்குழுக்கள், திமுகாந்தி, வேல்முருகன் போன்ற இன்ஸ்டன்ட் போராளிகள் இவர்களை வைத்து மாநில மத்திய அரசுகளுக்கெதிரான போராட்டங்களை நடத்தி, அதையே மோடி எதிர்ப்பு மோடி வெறுப்பாக மாற்றிக் காட்டிய மாய்மாலம் இப்போது ஹிந்தி எதிர்ப்பு என்பதாக வெளிப்படுத்தப்படுகிறது. #அக்கப்போர் முடிவதில்லையோ? ஒரு மாறுதலுக்காக இடதுசாரித் தொழிற் சங்கமான CITUவின் கிளைச்சங்கம்  முன்கையெடுத்திருக்கிறது.
  
 
தி மு கழகத்தின் அக்கப்போர் அரசியலை நீர்த்துப் போகச் செய்கிற அளவுக்குத் தோழர்கள் ஈடுகொடுப்பார்களா?

எல்லாவற்றையும் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் சந்திப்போம்.
  
          

நெஞ்சில் உரமும்! நேர்மைத் திறமும்!



வெட்கம் கெட்டவர்கள்! சூடு, சுரணை, பொறுப்பு எதுவுமில்லாதவர்கள்!

முதலில்.......... 

மும்பை நகரில் சென்ற வருடம் நடந்த தாக்குதல்களில் மட்டுமேயில்லை, எதிலுமே கூட நம்முடைய அரசியல் வாதிகள் பாடம் கற்றுக் கொள்வதுமில்லை, இவர்களை நம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஒவ்வொரு செயலிலுமே நிரூபித்துக் கொண்டிருந்தும் கூட....

இந்த ஊழல்மயமான, பொறுப்பில்லாத அரசியல் வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டிருக்கும் வாக்காளப் பெருமக்கள் என்றுதேர்தல் நேரங்களில் மட்டுமே அழைக்கப் படுகிற இளிச்சவாயர்கள்!

மும்பை நகரில்  குடிநீர் விநியோகம் 15 சதவீதம் குறைக்கப்பட்ட அறிவிப்பைக் கண்டு மும்பைகர்கள் பொங்கி எழுந்தார்களாம்!  அதுவும் நிதிஷ் ரானே என்ற காங்கிரஸ் காரர் தலைமையில்! காங்கிரஸ் என்னவோ மற்ற எல்லா இடங்களிலுமே தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட்டமாதிரி! போலீஸ் தடியடி! ஒருவர் உயிரிழந்திருக்கிறார்!


விடுதலை அடைந்து அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட, நாட்டின் எந்த ஒரு பகுதியிலுமே கூட, பாதுகாக்கப் பட்ட குடிநீரை வழங்குவதற்கு துப்பில்லை! தடியடி நடத்த மட்டும் தெரிகிறது! 

மாநிலங்களுக்கு இடையில் நீராதாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்! சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவோ, நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றவோ மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தவறிக் கொண்டிருப்பதோடு,  கலவரம்,  பிரச்சினைகள் நீடிப்பதிலேயே கொண்டிருப்பதிலேயே அரசியல்வாதிகள் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் போக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற வருடம் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர்கள் உயிரிழந்தார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கலவரம் நடந்தபோது கையாலாகத்தனத்தை வெளிப் படுத்திய R R படேல் தான் மீண்டும் அதே உள்துறையில்! ஏ ஆர் அந்துலே மாதிரி ஊழல் பெருச்சாளிகள், பிரச்சினையைத் திசைதிருப்புகிற மாதிரிப் பேசினபோதும், நடவடிக்கை எடுக்கத் தயங்கின, காங்கிரஸ்கட்சித்தலைமை!

ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தைப் பிரமாதமாக நடத்தி, அணிவகுப்பு மரியாதை, கலர்பலூன்களைப் பறக்கவிடுவது இந்த மாதிரி, ஜிகினா வேலைகளை மட்டும் தான் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியும் என்று தெரிந்த பின்னாலும் கூட, காங்கிரசை நம்புகிறவர்கள்..இவர்களை என்னவென்று சொல்வது!

நிவாரணம், இழப்பீடு தலா மூன்று லட்சம் என்று அறிவித்துமே கூட, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது வெறும் ஐந்து கோடி! காயமடைந்தவர்களுக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டும் இதையும் சேர்த்தால் எவ்வளவு வந்து விடும்?  ஜனங்களை முட்டாளடித்து மறுபடி வென்றார்கள். ஆனால், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில்   துப்பாக்கியோடு நிறையப் பேரைச் சுட்டுக் கொன்ற தீவீரவாதி கசாபைப் பாதுகாக்க மட்டும் அரசு இதுவரை முப்பத்தோரு  கோடி ரூபாய் செலவழித்திருக்கிறதாம்!

A Wednesday, உன்னைப்போல் ஒருவன் திரைப்படங்கள் கேட்ட கேள்வி இந்த நகை முரணைப் பற்றித்தான்!

அடேங்கப்பா! உன்னைப்போல் ஒருவன் படம் வந்தபோது தமிழ் வலைப்பதிவுலகம் என்னமாகக் கொதித்தது! கொந்தளித்தது!

******
இந்தியாவில்,ஒவ்வொரு மூன்று  நிமிடங்களுக்கும்  காச நோயால்  பாதிக்கப்  பட்ட  இருவர் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள்.. தினசரி ஐயாயிரம் பேர்களுக்குக் காச நோய்த் தொற்று உண்டாவதாகவும், நாடு முழுவதும் முப்பதெட்டு லட்சம் பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், உலகத்திலேயே இங்கு தான் மிக அதிகமான நோய்த் தொற்று விகிதமாகவும் இருப்பதாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக  இருக்கிறது.


இப்போதெல்லாம் ஜனங்களை ஏமாளியாக்கும் வேலைகள், காப்பீட்டுத் திட்டங்கள் என்ற பெயரிலும் கிடைக்கிறது.

எதை எடுத்தாலும் அதில் சம்பாத்தியம் பண்ணத் தெரிந்த புற்றுநோய்க் கிருமிகள் மாதிரி, பெருகிக் கொண்டிருக்கும் அரசியல்வியாதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளக் காப்பீட்டுத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

******
வில்லங்கம், விவகாரங்களைக் கிளப்புவதில், இடதுசாரிகளுக்கு இணையாக வேறு எவரையும் சொல்லிவிட முடியாது என்பதைத் தோழர் பிருந்தா காரத் மறுபடி பாராளுமன்றத்தில் நிரூபித்திருக்கிறார்! பிரச்சினையை கிளப்பினால் மட்டும் போதும், அதற்குத்  தீர்வு சொல்ல வேண்டும் அல்லது ஒத்துழைப்பையாவது தரவேண்டும் என்ற முனைப்பும் அவசியமில்லை, தேவையுமில்லை என்றே இத்தனை நாள் இருந்ததால் தான், மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு மாட்டிக் கொண்டு முழிக்கிறது. இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்ட அந்தக் கொடுமையான தருணங்களுக்குப் பழி தீர்க்கிற மாதிரி, மன்மோகன் சிங்குமே கூடக் கொஞ்சம் தைரியமாக, முந்திய ஆட்சிக் காலத்தில் இடது சாரிகள் எவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அமெரிக்காவில் சமீபத்தில் கொட்டித் தீர்த்தார்.

ஆனாலும், வில்லங்கம் வீராசாமிகளாகவே  இருந்துவிடுவது என்ற பழக்கத்தில் இருந்து அவ்வளவு சுலபமாக நடந்துவிடுகிற அரசியல் அதிசயமா என்ன! இந்தத் தடவை இடதுசாரிகளிடம்   மாட்டிக் கொண்டது கூகிள்! கூகிள் விளம்பரங்கள் சிலவற்றைக் காட்டி, ஏன் கூகிள்   இந்தியா நிர்வாகியைக் கைது செய்யவில்லை என்று கேட்டிருக்கிறார்! நிறுத்தி நிதானமாக பள்ளிக் கூட வாத்தியார் மாதிரித் துண்டைப் போர்த்திக் கொண்டு கிளாஸ் எடுக்கிற மாதிரிப் பதில் சொல்கிற பானா சீனா கூட அம்மணி எழுப்பிய கேள்விக்குப் பொறுமை இழந்து கோபப்பட்டதும் இதற்கு முந்தையசெய்தி!

******
எதற்கெடுத்தாலும் வெள்ளிவிழா, பொன் விழா என்று காங்கிரஸ் மாதிரி சொரணை, பொறுப்பு எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுப்  பேச முடியாத விஷயங்கள்! ஒன்றல்ல, மூன்று துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து இருபத்தைந்தாண்டுகள் ஓடி முடிந்து விட்டன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது  முதலாவது!

அடுத்து,  இந்திரா காந்தி படுகொலைக்குப் பழிதீர்க்க, சீக்கியர்களை விரட்டி விரட்டிப் படுகொலை செய்த சம்பவமும் தொடர்ந்தது. சற்றேறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் டெல்லி வீதிகளில் வேட்டையாடப்பட்டார்கள். முன்னின்று நடத்திய டைட்லர், சஜ்ஜன் குமார் இருவருக்கும் மந்திரிப் பதவிகள் தொடர்ந்தன. அடுத்துப் பதவியேற்ற ராஜீவ் காந்தி, "ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்" என்று இந்தப் படுகொலைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசியதை, சீக்கிய சமூகம், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் சீக்கியக் குழுக்கள் இன்னமும் மறக்கவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். வெள்ளைக்காரனின் கொடுமையாகச் சித்தரிக்கப்படும் ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சில நூறுகள் தான்!

இதே டிசம்பர் மூன்றாம் தேதி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தும், இன்னும் பல துயரங்களுக்கு ஆளான துயரமும் நடந்து முடிந்த இருபத்தைந்து ஆண்டு நிறைவாகி இருக்கிறது. ஆண்டுகள் தான் ஓடி நிறைந்தனவே தவிர, இவற்றில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பது பெரும் குறையாகவேஇருக்கிறது.

நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் கூட, முறையான நிவாரணம், உறுதியான சட்ட நடவடிக்கைகள், எதுவுமில்லாமல், போபால் விஷவாயு சம்பவத்தால் மூவாயிரம் பேர்கள் மரணமடைந்தார்கள். இருபதாயிரம் பேருக்குமேல், மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார்கள். பாதரச நஞ்சு கலந்த தொழிற்சாலைப் பகுதி இன்னமும் சுத்தப் படுத்தப் படாமல், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கவில்லை. மன்மோகன் சிங் என்னவோ இந்த வருடம், பாதிக்கப் பட்ட மக்களுக்காக கொஞ்சம் அனுதாபமாகப் பேசியிருக்கிறார்.

பேச்சோடு நின்று விடுமா, இல்லை அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு உருப்படியான உதவிகள் கிடைக்குமா?