Showing posts with label White Roses. Show all posts
Showing posts with label White Roses. Show all posts

நானே நானோ? மெல்ல மெல்ல மாறினேனோ?!





இந்த வாழ்க்கை என்பது இருக்கிறதே, இது வழங்கும் பாடங்கள் தான் எத்தனை, எத்தனை?!

சிறுபிள்ளைகள் மணல்வீடுகள் கட்டிப் பெருமிதப் படுவது போல எதை எதையோ சாதித்து விட்டதாக சந்தோஷப்படும் போதும் சரி, அல்லது கட்டிய மணல் வீடு சரிந்து விடும்போது, எல்லாவற்றையுமே இழந்துவிட்டதாகப் பொருமும் போதும் சரி, வாழ்க்கையை நாம், சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

ஒரு குறுகிய எல்லைக்குள் நின்று, இடது சாரிச் சிந்தனையாளனாக, தொழிற் சங்க வாதியாக கடந்து வந்த பாதைகளில், அன்றைய தேதியில் சாதனையாக நினைத்ததெல்லாம், உண்மையில் ஒன்றுமே இல்லை என்றாகிப் போனது புரிய வந்தது. தொடர்ந்து சந்தித்த தோல்விகளும், அவமானங்களும் கூட இப்போது திரும்பிப் பார்க்கையில், ஒரு பதப் படுத்தும் சாதனமாகவே இருந்ததே தவிர, இழந்தது ஒன்றுமில்லை, தலைபோய் விடவில்லை, தனித்து விடப்பட்டதாக உணர்ந்த நேரங்கள் கூட ஒரு விதமான தயாரிப்பு நிலைதான் என்பதும் புரிந்தது.

தனித்துவிடப்பட்ட அந்தத் தருணங்களே, என்னைப் புதிய வார்ப்பாக மாற்றிக் கொண்டிருந்த தருணங்கள். நானே நானோ...மெல்ல மெல்ல மாறினேனோ என்று பின்னணியில் பாட்டு எதுவும் இல்லாமல், அமைதியாக என்னை மாற்றிக் கொண்டிருந்த தருணங்கள்.

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"From the point of view of spiritual realisation, time has no concrete reality; all depends on the sincerity and intensity of the aspiration, on the steadiness of the effort. Some can do in a few weeks and even days what takes years for others. Moreover, as the mind and the vital, the chief factors of progress, are not submitted to the same rules of decay as the material body, the age factor loses all its importance when we speak of spiritual and intellectual growth; there is no time limit nor age limit for the mental progress which can go on steadily for hundreds of years.

Secondly, failure is not the sign of incapacity - far from that. Repeated failures come always to those who have something exceptional to do; it is only those who are satisfied with a commonplace and ordinary realisation who succeed easily in what they attempt to do. The natures of a special value have always to face many ordeals.

And thirdly, when I say to take refuge in the Divine's Love, I do not mean that it is all-sufficient in itself. Not so; personal effort and favourable circumstances are also necessary for the promptness of the advance. But those who can take refuge in the Divine's Love find there a support, a protection and a joy that give them strength to face all the ordeals and surmount all the difficulties.”


- The Mother
Thankfully quoted from White Roses, sixth edition 1999, pp.44-45

ஒவ்வொரு அனுபவமும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே கொடுக்கப் பட்டிருக்கிறது. சுகமானதாக இருந்தாலும் சரி, சோகமானதாக இருந்தாலும் சரி, ஜீவனைப் பக்குவப் படுத்தும், திருவுரு மாற்றம் செய்யும் சாதனமாகவே அவை நேரிடுகின்றன. இங்கே காலம் என்பது ஒரு பிரதானமான விஷயமே அல்ல. ஒருவருக்கு இருபதே நொடிகள் தேவைப்படுகிற அனுபவம், இன்னொருவருக்கு இருபது பிறவிகள் கூடத் தேவைப் படலாம்! ஏற்கெனெவே ஒரு பதிவில் எழுதியிருந்த வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ ரமணர் தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே, வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு சிறு குறிப்பு மட்டும் எழுதி வைத்து விட்டுப் போகிறார்: 'நான் என் தந்தையைத் தேடிப் போகிறேன். இதைத் தேட வேண்டாம்'

நான் என்று ஆரம்பித்த நாலாவது வார்த்தையைக் கடந்ததுமே இதுவாகிப் போனதை கவனித்தாலே சூக்குமம் புரியும். வீட்டைவிட்டு ஓடுகிற அனைவருமே ரமணராகி விட முடியாது. நாலு வார்த்தைகளைக் கடந்ததுமே நான் என்கிற எண்ணம் நீங்கப் பெறுகிற நிலை கிடைத்துவிடாது. ரமணருக்குமே இந்த நிலை கைகூட எத்தனை பிறவிகளில், எத்தனை முயற்சி, தவம், தேவைப்பட்டிருக்குமோ நமக்குத் தெரியாது. ஆனால், ரமணருக்கு நடந்த அதே சித்து தான், நமக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது. அதே மாதிரித் தான், அதே மாதிரி அனுபவங்களில் தான், அதே அளவு காலத்தில் தான் என்று மட்டும் இல்லை. மண்ணில் விழுகிற விதைகள் எல்லாம் ஒரே காலத்தில் ஒரே மாதிரி முளைத்துவிடுவதில்லை என்பதைப் போலத்தான் இதுவும். நாம் இங்கே விதைக்கப் பட்டிருக்கிறோம், முளைப்பது, வளர்வது என்பதெல்லாம், வேறு வேறு சூழ்நிலைகளைப் பொறுத்தது.

ஸ்ரீ அரவிந்த அன்னை வேறொரு சந்தர்ப்பத்தில் சொன்னது இது. "இன்றைக்கு சாத்தியப்படாதது, நாளை அல்லது அதற்கு மறுநாள் கைகூடும்" உண்மைதான். தோல்விகள், சரிவுகள், அவமானங்கள், என்ற எதுவுமே இயலாமையின் வெளிப்பாடல்ல. தோல்வி என்பது நிரந்தரமானதும் அல்ல. இதை ஆன்மீகத் தேடலில் அல்ல, நடைமுறை வாழ்க்கையிலேயே கண்டுகொண்ட ஒருவரை நமக்கு மிக நன்றாகத் தெரியும். தாமஸ் ஆல்வா எடிசன், எலெக்ட்ரிக் பல்பைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து தோல்விகள். அதை அவர் ஏற்றுக் கொண்ட விதம் எப்படி என்பதைப் பாருங்கள்:

"எப்படிச் செய்யக் கூடாதென்பதை 10000 முயற்சிகளில் கற்றுக் கொண்டேன்!"

இப்படித் தான், எண்ணற்ற வாய்ப்புக்கள் நமக்கு வழங்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வாய்ப்பும், இன்னொன்றின் திறவுகோலாக, இப்படித் தொடர்ந்து வரும் அனுபவங்களின் திரட்டாகக் கிடைக்கும் ஞானமே, நம்மை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், திருவுரு மாற்றம் பெறவும் உதவும் சாதனங்களாக, கண்ணுக்குப் புலப்படாத ஏணிப்படிகளாக இருக்கின்றன.


சிறுகூடல்பட்டியில் விளைந்த நன்முத்து கவிஞர் கண்ணதாசன் இந்த உண்மையை எப்படி அழகாகச் சொல்கிறார் பாருங்கள்! படைக்கப் பட்டதே அனுபவங்களைப் பெறுவதற்காகத் தான் என்கிறபோது அனுபவங்களை மறுக்கிற அல்லது வெறுக்கிற தன்மை கோழைத்தனம் இல்லையோ!

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
- கண்ணதாசன்

ஒரு நாடகம், அல்லது சினிமா, அல்லது ஏதாவது ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல்வேறு பாத்திரங்கள் அதில் இடம் பெற்றிருக்கும். பல பாத்திரங்கள், கதையின் ஏதோ ஒரு பகுதியில் மட்டுமே வரும்படி அமைக்கப் பட்டிருக்கும் அல்லது எந்த ஒரு பாத்திரமும் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இடம்பெறுவதில்லை. ஆனாலும், கதை ஓட்டத்திற்கு இந்தப் பாத்திரங்கள், அதனதன் தன்மையில் உறுதுணையாக இருப்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரிந்து கொள்ள முடியும்.


நாமும் கூடப் படைக்கப் பட்டிருப்பது அப்படித்தான்!


பாதைகள் ஒன்றல்ல-அனுபவமும் ஒன்றல்ல!


"Upon earth, each human being has his own way of seeing and feeling things, and as no two of these ways are the same, each one is different from all the others, so everybody disagrees with the others in one way or another and no real harmony can be established.

This is why the world is such a painful chaos.

The Lord alone with His total vision can create a harmony, by putting each being and each thing in its right place if the world surrenders to Him unreservedly. For it is only by uniting with Him that we can realise a harmony in our existence and get thus protected from the surrounding disharmony.

This is the only remedy."

- The Mother
[p-76, White Roses, Sixth Edition, 1999]

சமீப நாட்களில், சில விவாதக் களங்களிலேயே நேரம் முழுக்க முழுக்க வீணாகிப் போனது என்று சொல்ல முடியாது, ஆனாலும், ஸ்ரீ அரவிந்த அன்னை சொன்ன வார்த்தைகள், அனுபவ சத்தியமாக ஆனதைக் கண்டேன்.

'கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்' என்று ஒரு வழக்குச் சொல் உண்டு.

ஆன்மீக அனுபவம் எதுவானாலும், அனுபவித்து தன்னுள் உணர வேண்டுமே அன்றி, அதை வேறு விதமாகப் பெற முடியாது. மேலோட்டமாகப் பார்க்கையில், பொதுவாகத் தெரிந்தாலும், ஒரே மாதிரி அனுபவம் எவருக்குமே வருவதில்லை. தன் முனைப்பாக ஒவ்வொரு உயிருக்குள் இருந்தும் செயல்படும் ஒன்று, மற்றவர் சொல்வதை பிடிவாதமாக ஏற்க மறுக்கும், ஆக எவரும் மற்றவரோடு எந்த ஒரு விஷயத்திலுமே,, ஒரே மாதிரியான பார்வை, அணுகுமுறையை பெறுவதில்லை.

அப்படி இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை.

இதே மாதிரி வலைக் குழுமங்களில், பதிவுகளில் ஏற்படுகிற சில அனுபவங்களை இந்தப் பதிவில் சொல்லியிருந்தேன்.

இந்தியத் தத்துவ மரபு அளித்திருக்கிற ஆன்மீகப் பெரும் கொடைகளில், 'வேற்றுமையில் கூட ஒற்றுமையைக் காண்பது' என்பது மிக முக்கியமானது. என்னுடைய கருத்தோட்டம் சரி என்பதனால், பிற கண்ணோட்டங்கள் தவறாகி விடுவதில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்ன தத்துவ மரபில் வந்தவர்கள், அதை மறந்து விட்டுப் பேசுவது கொஞ்சம் வினோதமாகத் தான் இருக்கிறது.

நாம் யார், இங்கு எதற்காக வந்திருக்கிறோம் [அல்லது எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம்], இங்கு நாம் செய்ய வேண்டியதென்ன, செய்து கொண்டிருப்பதென்ன, இதெல்லாம் தான் நாம் அறிய வேண்டியது. அதை விட்டுவிட்டு என்னென்ன எல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பார்த்தால், நமக்கே பாதையை விட்டு எவ்வளவு விலகிப் போயிருக்கிறோம் என்ற மலைப்புத் தான் மிஞ்சும்.

உலகத்தின் குழப்பங்களுக்கு, இந்த ஒத்திசைவு இல்லாத தன்மையே காரணம் என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

ஸ்ரீ அன்னை சொல்வதை, இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோமே!

"Essentially there is but one single true reason for living: it is to know oneself. We are here to learn - to learn what we are, why we are here, and what we have to do. And if we don't know that, our life is altogether empty - for ourselves and for others.

And so, generally, it is better to begin early, for there is much to learn. If one wants to learn about life as it is, the world as it is, and then really know the why and the how of life, one can begin when very young, from the time one is very, very tiny-before the age of five. And then, when one is a hundred, he will still be able to learn. So it is interesting. And all the time one can have surprises, always learn something one didn't know, meet with an experience one did not have before, find something one was ignorant of. It is surely very interesting. And the more one knows, the more aware does one become that one has everything to learn."

-The Mother,
Col.Works Vol.6 pp16

ஒரு கதை! ஒரு பாடம்!

ஆரோவில் மாத்ரி மந்திர் உள் அறை


ஒரு முனிவருக்கு சாபம். பன்றியாகப் பிறக்க வேண்டுமென்று.

முனிவருக்குத் தாள முடியாத துக்கம், எவ்வளவு ஜபம், எவ்வளவு நியமத்தோடு காரியங்கள் ......கடைசியில் பன்றியாகப் பிறப்பதற்குத் தானா? மகனைக் கூப்பிட்டார்.

"மகனே, சாபத்தினால் பன்றியாகப் பிறக்க வேண்டியுள்ளது.அப்படிப் பிறந்தவுடன், தயவு தாட்சண்யம் பார்க்காமல் கொன்று விடு."

மகனும் தந்தைக்கு அப்படியே செய்வதாக வாக்களித்தான்.முனிவரும் பன்றியாகப் பிறந்தார். மகன், வாளை எடுத்துக் கொண்டு கொல்லப் போனான். புதிதாகப் பிறந்த குட்டிப் பன்றி சொன்னது, "மகனே, இப்போது தான் பிறந்திருக்கிறேன். ஆறு மாதம் கழித்து வா." மகனும் வாளை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனான்.

ஆறு மாதம் முடிந்தது. மகனும் வாளை எடுத்துக் கொண்டு பன்றியை வெட்டுவதற்காக வந்தான். பன்றி வளர்ந்து, பெண்பன்றி, குட்டிகள்எனப் பெருகி, குடும்பமாய் வாழ்வதைக் கண்டான். "நில்லடா, இப்போது தான் பன்றியாய் வாழ்வதிலும் ஒரு சுகம் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டிருக்கிறேன், சிறிது காலம் கழித்து வா."

மகனுக்குத் தாள முடியாத துக்கம். வேதம் படித்தவர். கல்வி, கேள்விகளில் சிறந்தவர்.ஏதோ, முன் வினை, இப்படி இழிபிறப்பாய்ப் பிறந்து, உழன்று கொண்டிருக்கிறாரே என்று வாளை ஓங்கி வெட்ட முனைந்தான்.

அவ்வளவுதான், முற்பிறப்பில் அவனுக்குத் தந்தையாய் இருந்த அப்பன்றி வெகுண்டெழுந்தது. கோபத்தோடு சொன்னது, "முட்டாளே, என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? பன்றி வாழ்க்கை என்றால் கேவலமா? இதில் எத்தனை சுகம் இருக்கிறது தெரியுமா உனக்கு? உனக்குத் தெரியவில்லை என்றால் ஒதுங்கிப்போய் விடு. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா, அதைக் கெடுக்காதே, போய்விடு.வேண்டுமானால், வாளை உன் நெஞ்சில் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போ "

ஆக்ரோஷமாய் உறுமிவிட்டு, பன்றி தன் பெண்டு பிள்ளை குட்டிகளோடு ஓடி மறைந்தது. மகன் இந்த விநோதத்தைக் கண்டு விக்கித்து நின்றான்.

"செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்பமுடைத் தேயாம்;
நினைக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக"
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தோடும் ஓடி இன்னுயிர் காத்தது.

பாரதி கவிதை வரிகளில் இந்தக் கதையைக் கேட்டதுண்டு. கேட்ட பொழுதில், ஒரு வினோதமான கதை என்ற அளவிற்கு மேல் யோசிக்கத் தெரிந்ததில்லை.

நம்முடைய எண்ணங்கள் செயல்கள் எல்லாவற்றிற்கும் நாமே எஜமானர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விருப்பமாக, ஆசையாக எழுபவை எல்லாம் நம்முடையவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், எதுவெல்லாம் நம்முடையது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அத்தனையும் வெளியில் இருந்து வருவது, புலன்கள் வழி மனம் போகும் போது, ஏற்படுகிற மயக்கம், ஒரு விகாரம் அவ்வளவு தான்.

பழக்கம் எப்படி ஆரம்பிக்கிறது? முதலில், கொஞ்சம் சுகமாக, சௌகரியமாக இருப்பதாக நம்ப வைத்து, சமையல் அறைச் சுவற்றில், எண்ணைப் புகை அழுத்தமாகப் படிந்து போவது போல, நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றன. ஆரம்பத்தில், நாம் அதற்கு எஜமானர்களாக இருக்கிறோம். அல்லது அப்படி நம்மை நம்ப வைத்து, நம்மை அதனதன் போக்கில் அலைக்கழித்து, ஆட்டிவைக்கும் எதிரிகளாக ஆகி விடுகின்றன
.

காலையில் எழுந்தவுடன் சிலருக்கு காபி அல்லது டீ உடனே குடித்தாக வேண்டும். அப்புறம் செய்தித்தாள் படிக்கிற வேலை, வெண்குழல் வத்தியைப் பற்ற வைத்துக் கொண்டு சிந்தனை வருகிறதோ இல்லையோ, புகையை விட்டுக்கொண்டு, பெரிய சிந்தனாவாதி போல, ஒரு லுக்கு விட வேண்டியது. இப்படி ஒவ்வொருவரும், நம்மையே கூர்ந்து கவனித்துப் பார்த்தோமேயானால், நம்முடைய வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பழக்கங்களின் அடிமையாகவே இருந்து கழிப்பதை, உணர முடியும்.

நமக்குக் கற்பிக்கப் பட்டிருக்கிற பழக்கங்கள், நம்முடைய ஒவ்வொரு சிந்தனை இழையையும், செயலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில்வைத்திருப்பதைக் கூட நம்மால் உணர முடிவது இல்லை. நம்முடைய எண்ணங்களுக்கு, செயல்களுக்கு, நாம் எஜமானனாக இருப்பதற்குப் பதிலாக, பழக்கங்கள், மிக சாமர்த்தியமாக நம்மை அடிமையாக வைத்திருக்கின்றன.

ஸ்ரீ அரவிந்தர், தாயகத்திற்குத்திரும்பிய புதிதில் மும்பையில் சந்தித்த ஒரு யோகி, விஷ்ணு பாஸ்கர லீலே சொன்னபடி, எண்ணங்கள் ஆசைகள் எல்லாம் எங்கிருந்து வருக்கின்றன என்று ஆராய்ந்து, வெளியிலிருந்து என்றால், அவற்றைத் திருப்பி அனுப்பிவிடும் பயிற்சியில். மூன்றே நாட்களில், சித்தி பெற்றதை முந்தைய பதிவொன்றில் பார்த்திருக்கிறோம்.

ஸ்ரீ ரமண மஹரிஷி காட்டிய "நான் யார்" என்ற விசார மார்க்கமும் இதுவே.

Emptying the cup என்பதாக ஜென் கதைகளில் படிக்கும் போது, வடிவேலு மாதிரி 'அட, ஆமா இல்லே' என்று நம்மைப் பற்றிய ஞானம் கிடைத்து விட்டதாகத் தோன்றும்.ஆனால் அது அவ்வளவு எளியது இல்லை.


Karikal, April 13, 1914

" EVERYTHING works together to prevent me from remaining a creature of habits, and in this new state, in the midst of these circumstances, so complex and unstable, I have never before so completely lived Thy immutable peace or rather the “I” has never before disappeared so completely that Thy divine peace alone is alive there.

All is beautiful, harmonious and calm, all is full of Thee. Thou shinest in the dazzling sun, Thou art felt in the gentle passing breeze, Thou dost manifest Thyself in all hearts and live in all beings.

There is not an animal, a plant that does not speak to me of Thee and Thy name is written upon everything I see.

O my sweet Lord, hast Thou at last granted that I may belong entirely to Thee and that my consciousness may be definitively united with Thine?

What have I done to be worthy of so glorious a happiness? Nothing except to desire it, to want it with constancy — that is very little.

But, O Lord, since now it is Thy will and not mine that lives in me, Thou wilt be able to make this happiness profitable to all; and its very purpose will be to enable the greatest possible number of beings to perceive Thee.

Oh, may all know Thee, love Thee, serve Thee; may all receive the supreme consecration!

O Love, divine Love, spread abroad in the world, regenerate life, enlighten the intelligence, break the barriers of egoism, scatter the obstacles of ignorance, shine resplendent as sovereign Master of the earth."

The Mother,

Prayers and Meditations

April 13, 1914

ஸ்ரீ அரவிந்த அன்னையின் இந்த பிரார்த்தனை மலர், பலமுறை படித்தபோதும், விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. பழக்கங்கள் தீயவை என்று தெரிகிறது, ஆனாலும் அவற்றை விட முடியவில்லை என்று மட்டுமே நினைக்கிறோம். ஆனால், பழக்கங்கள், நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை, பின்வழியாக நம்முடைய எஜமானர்களாகவே ஆகி விட்டன என்பது காலம் கடந்து தான் தெரிகிறது.

பழக்கங்களின் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதையும் ஸ்ரீ அரவிந்த அன்னை இந்த பிரார்த்தனை மலரிலே சொல்லியிருக்கிறார் என்பதும் இப்போது தான் புரிகிறது. இரண்டு பகுதிகளாகப் பாருங்கள்-

1. Nothing except to desire it, to want it with constancy — that is very little.

2. It is Thy will and not mine that lives in me.

ஸ்ரீ அன்னை சொல்கிறார்:

The true path is surrender, complete, absolute, unconditioned surrender to the Divine.


. . .If you give yourself entirely to the Divine without asking for anything in exchange, if you merge your consciousness in the Divine, it will put an end to your sufferings - but the surrender must be total, unconditional, unbargaining and absolute, including all desires, your needs, your likings, your dislikings, your wishes, your wants, your wills, everything, everything that constitutes your small person and then you will find peace and your torments will come to an end.”

The Mother,

White Roses, Sixth Edition, 1999, pp.7

பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிடாமல், என்னை மீட்பாய் தாயே!

ஸ்ரீ அரவிந்த அன்னையே உனது திருவடிகளைச் சரண் அடைகிறேன்.

Ides of March - வரலாற்றில் இன்று !


வரலாற்றில் இன்று மார்ச் 15 - கி.மு.44

ரோமாபுரி சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசரை, அவனதுநண்பனும் நம்பிக்கைக்குரியவனுமாக இருந்த ப்ரூட்டஸ் படுகொலை செய்த நாள்.

"நீயுமா ப்ரூட்டஸ்?"

என்று நண்பனது துரோகத்தை நம்பமுடியாமல், கேட்டுக் கொண்டே இருக்கையில், செனேட் உறுப்பினர்கள் பலரும் சீசரைக் கத்தியால் குத்துவதை கவித்துவத்துடன் ஷேக்ஸ்பியர் வர்ணித்திருப்பதை, நம்மில் பலர் படித்திருக்கக் கூடும். ஷேக்ஸ்பியருடைய கவிதையில், ஒரு சர்வாதிகாரி கதாநாயகன் ஆனான். கல்லூரி நாட்களில்ஆங்கில விரிவுரையாளர்கள் உருகி உருகி ஷேக்ஸ்பியர் நாடகப் பாத்திரங்களின் வசனங்களைப் பாடம் நடத்தியது வாழ்க்கைக்கு எந்த விதத்தில் உதவியது என்று கேட்டால் ஒருவருக்கும் சொல்லத் தெரியாது.

போகட்டும்.

கண் போன போக்கிலே மனமும், மனம் போன போக்கில் கால்களும் போகும் போது, இப்படித்தான், நம்முடையது, நாம் மிகவும் நம்புவது என்றிருக்கிற புலன்கள் எல்லாம் ப்ரூடசாக மாறி நம்மைக் குத்திக் குதறுவதை, அதன் வலியை அனுபவிக்கும் போது கூட, நமக்கு புலன்வழி நுகர்வில் இருக்கிற சுகத்தை மறக்க முடிவதில்லை.

அடுத்தவன் வயலில் பச்சைப்புல்லை மேயப்போகிறமாடு--வயலுக்குச் சொந்தக்காரன் நீண்ட கழியால் மாட்டின் முகத்தில் ஓங்கி அடிக்கிறான். அடிவிழும் வேகத்திற்கு மாடு கொஞ்சம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். பச்சைப்புல்லின் வாசனை ஈர்க்க, அடிவிழுந்து வாய்க்கடையில் ரத்தம் வழிவதையும் மறந்து, மறுபடியும் புல்லை மேயப் போகும். பார்த்திருப்பீர்கள்தானே?

இது தான், நாம் நம்முடையது, நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிற புலன்கள், நம்மைப் பழக்கத்தின் அடிமையாகவே வைத்திருக்கச் செய்யும் துரோகம். ஆனால், நமக்கு அது தெரிவதே இல்லை.

தெரிந்தால் தானே, "நீயுமா ப்ரூட்டஸ்?" என்று அதிர்ச்சியோடு கேட்பதற்கு?!

சோதனைகள், கஷ்டங்கள், நோய்களென்று பல விதத்திலும் அடி விழுந்து கொண்டே தான் இருக்கிறது. மாட்டைத் துன்புறுத்தும் நோக்கத்தோடு, வயல்காரன் அதை அடிப்பதில்லை. அதுபோல, வரம்புமீறக் கூடாது என்பதைப் படிப்பிப்பதற்காகவே அந்த அனுபவம் நேரிடுகிறது.

தங்கத்தோடு சேருகிற அசுத்தத்தை, கலந்திருக்கிற அழுக்கை, மிகச் சிறிய அளவிலான நெருப்பிலேயே புடம் போட்டு எடுத்து விட முடியும். மிகக் குறைந்த சூட்டிலேயே அதை விரும்புகிறபடி ஆபரணமாகவோ, அழகுப் பொருளாகவோ மாற்றிவிட முடியும். அதுவே இரும்பாக இருந்தால், அதைத் தனியாகப் பிரித்தெடுப்பதற்கு எவ்வளவு கடுமையான வழிமுறைகள்? அதை ஒரு பொருளாக, தகடாகவோ, கம்பியாகவோ மாற்றுவதற்குப் பழுக்கக் காய்ச்சி, சம்மட்டியால் அடித்து நெளித்து, தண்ணீரில் முக்கி, மறுபடி காய்ச்சி, அடித்து....? எத்தனை வேலை?

தங்கமோ, இரும்போ, தனியாக அதன் இயல்பு நிலையில் இருக்கும் போது எந்த உபயோகமும் இல்லை. அதையே, உருக்கிச் செதுக்கி ஒரு பொருளாக மாற்றும் போது, அந்த வடிவத்திற்குமே ஒரு பயன் இருக்கிறது அல்லவா?

உயிரும் உணர்வுமற்ற ஜடப்பொருளே, ஒரு பயன் தரும் பொருளாக மாற முடியும் என்றால், பரிணாம வளர்ச்சியில், மனிதனாகப் பிறந்த நாமும் அப்படி மாற முடியும் அல்லவா?

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் அமுத வாக்கைக் கொஞ்சம் கவனிப்போமா?

The way is long and difficult for everybody; and to change the physical nature is a big job - but it has to be done. The only way to make it quicker is to keep an unshaken faith in the Divine and a great intensity in aspiration - the rest is done for you.”

  • The Mother

  • [p-167, White Roses, Sixth Edition, 1999]

Physical troubles always come as lessons to teach equality and to reveal what in us is pure and luminous enough to remain unaffected. It is in equality that one finds the remedy. An important point: equality does not mean indifference.”

  • The Mother

  • [CWMCE, 15:149]

எந்த நிலையில் இருந்தாலும்,

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிவகளைச் சரண் அடைகிறேன்.ஒவ்வொரு அனுபவத்திற்குள்ளும், நீயே என்னை வழிநடத்திச் செல்கிறாய்.நான், எனது என்று அறியாமையால், அகந்தையால் சொல்லப் பட்டாலும், நீயே இவனது உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்.

"எனது கேவலமான ஆசைகளின் படியல்ல- உனது தெய்வீகச் சித்தத்தின்படியே ஆகட்டும் "

இதுவே இவனுள் முழுமையாக வேண்டுகிற வரம். இன்றைய பிரார்த்தனையும் கூட.