சண்டேன்னா மூணு! கலகலக்கும் #கூட்டணிஅரசியல் #தேர்தல்களம் #தமிழகஅரசியல்

தமிழக அரசியலை  நச்சுக்காடாக்கி நாசம் செய்த இரண்டு தி. கழகங்களும் தனித்தனியாக, தங்களுடைய அரசியல் பரப்புரையை ஒரு சுற்றுக்கும் மேலேயே நடத்தி முடித்து விட்டன என்பதில் கூட்டணிக்கட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பது இன்றைய தமிழக அரசியல் கள நிலவரம்! கூட்டணிக்கட்சிகளில் அந்தப்பக்கம் காங்கிரசும், இந்தப்பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியும் தங்களுடைய தனி ஆவர்த்தனத்தை நடத்திக் காண்பித்து விட்டன. தனி ஆவர்த்தனம் செய்து காட்டியதில் என்ன கிடைத்தது என்பது வெளியே வர இன்னும் சில நாட்கள் ஆகலாம்!


இந்த 54   நிமிட நேர்காணல் தமாஷாவைப் பார்க்க இங்கே  இசுடாலினுக்குப் பதில் சொல்கிற மாதிரியே எங்களுக்கும் கூட்டம் வருமில்ல என்பதாக ராகுல் காண்டியைக் காட்சிப்பொருளாக்கி மூன்றுநாட்கள் ரீல் ஓட்டிய மிதப்பில் கே எஸ் அழகிரி இருப்பதைக் காண மிகவும் தமாஷாக இருக்கிறது. ஒரு பொய்யான கனவுலகில் இருந்து கொண்டு சோனியா காங்கிரசின் தமிழ்நாடு பிரான்ச் தலைவர் ரங்கராஜ் பாண்டே எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியான பதிலைச் சொல்வதைத்  தவிர்க்கிறார். ஒரு அருமையான காமெடி என்பதால் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். 


பாமக ஒருபுறம், தேமுதிக ஒருபுறம்,இன்றைக்கு அவரவர் கட்சிக் கூட்டங்களை நடத்தி, அதிமுகவுடன் பேரம் பேச முனைந்திருக்கிறார்கள். கடுமையாகப் பேரம் பேசுகிற வலிமையோ தெம்போ இரு கட்சிகளுக்குமே இல்லை என்பதைக் கூர்ந்து கவனித்தால் புரியும். 1989 களில் வன்னியர் இட ஒதுக்கீடு என டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்தபோது கருணாநிதி பணிந்து கொடுத்து பாமகவை வளர்த்துவிட்டதுபோல,இன்றைக்கும் ராமதாசை அரசியல் ஆதாயம், புதுவாழ்வு பெறச்செய்ய வேண்டிய கட்டாயமோ அவசியமோ அதிமுகவுக்கு இல்லை! இதைப்பற்றிய ஒரு விரிவான செய்தி இங்கே! தவிர பாமகவுக்கு அதிக இடம் கொடுத்தால் பிஜேபிக்கும்  அதே அளவு இடம் கொடுக்க வேண்டி வரும். அதற்கடுத்து தேமுதிகவுக்கு எத்தனை கொடுக்க முடியும்? கருணாஸ் மாதிரி உதிரிகள் இப்போதே வேறுமாதிரி துண்டு போடுகிறார்கள். அதிமுகவும் கூட ஒரு தெளிவான முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 


இது தேமுதிக defacto தலைவி பிரேமலதா இன்றைக்கு அளித்திருக்கிற நேர்காணல். விஜயகாந்த் ஒருவர்தான் தேமுதிகவின் பலமாக ஜனங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். ஜெயலலிதாவையே நேரடியாக எதிர்க்கிறவராகவும் இருந்தார் என்பது நினைவுக்.கு வரும்போது உண்மையிலேயே மனவருத்தம் மட்டுமே மிச்சம்.

இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஆரம்பமாகி விட்டது என்பதைத்தாண்டி இன்றைக்கும் கூட தேர்தல் களம் முழுமையாகத் தயாராகவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மீண்டும் சந்திப்போம்.  

          



ட்ராக்டர் பேரணி என்ன நினைப்பில் என்ன சாதித்தது?

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே என்று மகாகவி பாரதி சொன்னது வெறும் வார்த்தைகளல்ல. இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணை நேசிக்கிற ஒவ்வொருவர் உயிரிலும் உணர்விலும் கலந்திருக்கிற அனுபவ சத்தியம். 


விவசாயிகள் போராட்டம் என இரண்டுமாதங்களாக நடந்து கொண்டிருந்த கூத்து, குடியரசு தினத்தன்று டில்லியில் ட்ராக்டர் பேரணி நடத்தியே தீருவோமென முனைந்து வன்முறை, அராஜகம், குழப்பத்தில் முடிந்ததில், சிங்கு எல்லைப் பகுதியில் இருக்கும் போராளிகளை இடத்தைக் காலிசெய்யுமாறு உள்ளூர் கிராம பஞ்சாயத்தார்கள் கெடுவிதித்திருப்பதாகத் தற்போது செய்திகள் சொல்கின்றன.


டெல்லி டிராக்டர் ராலி வன்முறையில்..ஒருவர் டிராக்டர்-ஐ வேகமாக ஓட்டி சென்று தடுப்பின் மீது மோதி வித்தை காட்ட முயன்றதில்...கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீதிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இந்த நிகழ்வை அப்படியே தலைகீழாக மாற்றி...
விவசாயியை டெல்லி போலீஸ் நெற்றிப் பொட்டில் சுட்டதில் உயிரிழந்தார் என்று மாற்றி கூறியதுமில்லாமல்....விவசாயின் இத் தியாகம் வீணாகாமல் பார்த்துக் கொள்வோம் என்று பிற விவசாயிகள் கூறியதாக வேறு தூண்டிவிட்டு ட்விட்டரில் பதிவிட்டார் ..இந்தியா டுடே -ன் ராஜ்தீப் சர்தேசாய்.
அதோடு நிற்காமல்...இந்தியா டுடே தொலைக்காட்சியிலும்....இதே பொய் செய்தியை கூறினார்.
இதற்கு முன்னர்...ஜனாதிபதி திறந்துவைத்த நேதாஜி யின் புகைப்படம் குறித்த பொய் செய்தியை பரப்பிய கோஷ்டியிலும் வழக்கம் போல சர் தேசாயும் உண்டு.
இதனையடுத்து ... மக்கள் வெகுண்டெழுந்து சுட்டிக்காட்டிய பின்.. ஒரு மாதம் சம்பளம் கிடையாது & இரண்டு வாரங்களுக்கு தொலைக்காட்சியில் செய்திகளை வாசிக்கவும், விவாதிக்கவும் தடை விதித்தது இந்தியா டுடே நிர்வாகம். [ இதனால் இந்தியா டுடே நிர்வாகம் நியாயமானது என்று எண்ணினால் அதை போன்ற அபத்தம் வேறில்லை ! இது...மக்களின் கோபம் காரணமாகவும், தொலைக்காட்சியை இழுத்து மூடிவிடக்கூடாது என்கிற நடவடிக்கை அச்சத்தினாலும் எடுக்கிற மேம்போக்கான நடவடிக்கை மட்டுமே. மற்றபடி...சர்தேசாய் கோஷ்டிகளுக்கு பொய்யும் புதிதில்லை. அவர்களை பணியிலமர்த்தி சோறு போடும் மீடியா நிறுவனங்களுக்கும் பொய் பரப்புதல் புதிதில்லை!
இப்போது...ராஜ் தீப் சர்தேசாய் ...இந்தியா டுடே -ல் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

அனைத்துமே...மக்களின் கோபத்தினை தவிர்க்க ... அரங்கேற்றப்படுகிற நாடகம் !

மோடி அரசு அமைந்த பின் ....கடந்த சில வருடங்களாக ...இந்தியாவில் எதிர் கட்சிகளின் கூட்டணி ...மோடி அரசின் ஒவ்வொரு நகர்வையும் எதிர்த்து ஒவ்வொரு பெயரில் போராட்டம் என்று முன்னெடுக்கிறார்கள்.
இவற்றில் ....அந்நிய சக்திகள், பிரிவினை சக்திகளின் கோஷங்கள் கேட்கின்றன. பதாகைகள் தென்படுகின்றன. வன்முறைகள் நடக்கின்றன. காவல்துறையினர் தாக்கப்படுகிறார்கள். பெரும் குழப்பங்களும், பாதுகாப்பின்மையும் உருவாக்கப்படுகிறது.
தாங்கள் ஆதரிக்கும்/ முன்னெடுக்கும் போராட்டங்களில் ... ஒரே மாதிரியான தொடர் நிகழ்வுகள் இத்தனை நடந்தும்...நாட்டை பிளவு படுத்தும் பிரிவினைவாத சக்திகள் குறித்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன ? என்கிற கேள்விக்கு பதிலும் இல்லை. மறுப்பும் இல்லை. பொறுப்பும் இல்லை.
நேற்றைய டிராக்டர் ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து .... போராட்டத்திற்கு ஆதரவளித்த எதிர் அரசியல் கூட்டணி கட்சிகள் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லாதது போல நழுவுகின்றன. இத்தனை நாள் நடந்த இக் குறிப்பிட்ட போராட்டத்தின் களத்திலேயே கூட ...காலிஸ்தான் பிரிவினைவாத பதாகைகள் தென்படுகின்றன.. அந்நிய சக்திகளின் குரல்கள் கேட்கின்றன என்று தொடர்ந்து எச்சரிக்கை குரல்களும், கவலை குரல்களும் கேட்ட போதெல்லாம்...அவற்றை முற்றிலுமாக மறுதலித்து...விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக....எதிர் கட்சிகளின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் பதிலளித்தது இத் தருணத்தில் கவனிக்க தக்கது.
அரசியலில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்...
எதிர்கட்சிகளின் கூட்டணி கட்சிகளில் ஒன்றில் கூட ...
வலிமையான தலைமை இல்லை. போராட்டங்களை முன்னெடுக்கும்போதும்,ஆதரவளிக்கும்போதும், அவற்றை வழிநடத்தும் அளவிற்கு பொறுப்பேற்கும் வலிமையான தலைமைகள் இல்லை.
மக்கள் ஆதரவு பெற்ற mass leader வகை தலைமை இல்லை.
மிக முக்கியமானதாக ....சொந்த நாட்டினை எந்த வகையிலும் அந்நிய சக்திகளுக்கு காவு கொடுத்துவிடாமல் 'எதிர் அரசியல்' செய்யத்தெரிந்த சாமர்த்தியமான அரசியல் தலைமை என்று ஒரு தலைமை கூட இல்லை !
ஒரு ஜனநாயக நாட்டில்... குறிப்பாக எதிர் நிலை அரசியல் தளத்தில்... அதாவது, எதிர்க்கட்சிகளில்... வலிமையற்ற தலைமைகள் , உள்கட்சி அதிகார போட்டிகள், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைமை கூட இக் கட்சிகளில் இல்லாமல் இருப்பது, குடும்ப அரசியல் and ஊழல் போன்ற ஆகப்பெரும் பலவீனங்கள் ... போன்ற அம்சங்கள் அனைத்தும்.....உலகளாவிய வலைப்பின்னலுடன் இயங்கும் அந்நிய சக்திகளுக்கு பெரும் வரப்பிரசாதம் ! எளிதில் ஊடுருவுவதற்கும் ,ஆக்கிரமிப்பதற்கும், தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் விரும்பியபடி உட்புகுந்து இந்திய அரசியலை ஆட்டுவிப்பதற்கும் மிக மிக எளிது.பங இந்த நிலையைத் தான் ...டிராக்டர் ஊர்வல வன்முறைகள்...மீண்டுமொருமுறை வெளிச்சமிடுகிறது. 

இப்படி இரண்டே பகிர்வுகளில் பானு கோம்ஸ் சொல்லியிருப்பதுடன் உடன்படுவதைத் தவிர வேறு சாய்ஸ் இருக்கிறதா?  

கொஞ்சம் சொல்லுங்களேன்! மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! #பாமகஅரசியல் #ராகுல்அரசியல் #திமுகஅரசியல்

தமிழக அரசியலில் உதிரிக்கட்சியாக மட்டுமே இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வேறென்ன சாமர்த்தியங்கள் இருக்கிறதோ தெரியாது! கூட்டணி பேரம் பேசுவதில் மிக சாமர்த்தியசாலிகள்! தேர்தலில் வெற்றிபெற்று ஆதாயம் பெறுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்! கூட்டணி பேரம் ஒன்றிலேயே அதிக ஆதாயம் பார்க்கிற சாமர்த்தியம் உள்ள கட்சி இங்கே பாமக மட்டும் தான்! எல்லாப்புகழும் ஆதாயமும் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே என்றால் நம்புவீர்களா?


நாளை முக்கியமான முடிவெடுக்கப்போவதாக அவசர நிர்வாகக்குழு கூடுவதாக அறிவித்திருந்ததை ஒரு வாரம் தள்ளிப் போட்டிருக்கிறார்களாம்! பேரம் படிந்து விட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! அதிமுகவுடன் பேரம் பேசிக்கொண்டே, திமுகவுடனும் பேசுகிறார்கள்! 2016 இல் இப்படித்தான் தேதிமுகவின் பிரேமலதாவை இரண்டுபக்கமும் ஊசலாடவிட்டு,  திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்தது போல, இப்போது பாமகவுக்கும் நடந்தால் மிக நன்றாகத்  தான் இருக்கும்! நடந்தேற வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொள்வோமே!


தேமுதிக இந்தமுறை முந்திக்கொள்ளப் பார்க்கிறது என்பதில் சென்ற முறை பாமக முந்திக்கொண்டு தேவையானதை வாங்கிக் கொண்டது, தேமுதிக பின்தங்கி கொடுத்ததை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில் ஒட்டிக் கொண்டது மாதிரி ஆகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை தெரிகிறது. ஆனால் தேவையே இல்லாமல் சசிகலாவைப் பற்றி ஏன் பேசினார்?    


ராகுல் காண்டி தமிழ்நாட்டுக்கு மூன்று நாள் விஜயமாக வந்திருக்கிறார். தமிழகத்துக்குப் புதிய ரட்சகனாகத் தன்னை அறிவித்துக்கொண்டு தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்திருப்பதில் மறந்துபோய்க்கூட இசுடாலின் பெயரையோ திமுக கூட்டணியைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை. என்ன சோகமோ என்ன உள்குத்தோ? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? கேவி தங்கபாலு மொழிபெயர்க்க வராதது பெருங்குறை! 


திமுகவின் நிரந்தரக் காமெடியன் துரை முருகன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்காமல் பதிவை முடித்து விடமுடியுமா? கையில் ஊசி, வேல் என்று எதுவும் இல்லாமலேயே குத்துகிற கலை தெரிந்தவர். இசுடாலின் கையில் வேலைக் கொடுத்துவிட்டால் மட்டும் ......? என்!று கேட்கிற மாதிரியே இல்லை! *இப்போதாவது, தனித்துப் பிரசாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு-என்றும் சேர்த்தே சொல்லியிருப்பது துரை முருகனுடைய பிரத்தியேகமான லந்து!

மீண்டும் சந்திப்போம்.

அருண் ஷூரி! ராம் ஜேத்மலானி! அப்புறம் ஆடிட்டர் குருமூர்த்தி!

தலைப்பில் வரிசைப்படுத்திய மாதிரியே  ஞாபகப் படுத்திக் கொள்ள முடியுமானால், நிச்சயம் அரசியலில் நீங்கள் கில்லிதான்! சந்தேகமே இல்லை! ஆனால் ஆசைப் படுகிற மாதிரியெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? இங்கே வரலாறு என்பது வெறும் புனைவுகளால் ஆனது என்று சில இடதுசாரி அறிவுசீவிகள் சொல்லக் கேட்டது உண்டு ஆனால் வரலாறு என்பது ஜனங்களுடைய மறதியின் மீது கட்டி எழுப்பப்படுவது என்பது மட்டும்தான் இங்கே இந்திய அனுபவமாக இருக்கிறது.


அருண் ஷூரி! யாரென்று நினைவுபடுத்திக் கொள்ளக் கஷ்டமாக இருந்தால் எட்டுநாட்களுக்கு முன் ஆடிட்டர் குருமூர்த்தி, துக்ளக் ஆண்டுவிழாவில், தீயை அணைக்க கங்காஜலத்துக்காகக் காத்திருக்க முடியுமா? சாக்கடை நீரானாலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னதாக அவருடைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நண்பர் ஒருவரைக் குறிப்பிட்டாரே, அவர்தான்! அவரே தான் மேலே ஹிந்து நாளிதழின் சித்தார்த் வரதராஜன் நடத்துகிற The Wire தளத்தில் கரண் தாப்பருடன் ஒரு நேர்காணலில் உரையாடுகிறார். வீடியோ 27 நிமிடம் தான்! கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு பார்த்து விடுங்களேன்! 

வாஜ்பாய் காலத்தில் அவரது அமைச்சரவையில் அருண் ஷூரி இருந்தார் என்பதில் வாஜ்பாயோ பிஜேபியோ பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லை! முரசொலி மாறனும் ராம்ஜேத்மலானியும் கூடத்தான் வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள்! பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவா அதை பார்க்க முடிகிறது? கோபுரத்தில் இருக்கும் பொம்மைகள் தாங்கள் தான் கோபுரத்தையே தாங்குவதாக  நினைத்துக் கொள்வதுபோல, அருண் ஷூரி போன்றவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதில் காணாமலும் போனார்கள்!!

ராம்ஜேத்மலானி மிகவும் பெயர் போன வக்கீல் தான்! இந்திராவை, ராஜீவ் காந்தியைக் கடுமையாக விமரிசனம் செய்தவர் தான்! அதெல்லாம் யாருக்காவது நினைவிருக்கிறதா? 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் கனிமொழி திஹார் சிறைக்குப்போனபோது, அவருடைய வழாக்கறிஞராக வாதாட கருணாநிதியால் அழைக்கப்பட்டவர் ராம்ஜேத்மலானி என்பதுதானே உடனடியாக நினைவுக்கு வருகிறது!

https://scroll.in/ தளத்தில் அருண் ஷூரியைப் பற்றி, சரியாக நான்கு வருடங்களுக்கு முன்னால், Why we must all be wary of Arun Shourie when he attacks Narendra Modi next என்று தலைப்பிட்டு வாருவாரென்று வாரியிருந்ததைப் படிக்க இங்கே. அருண் ஷூரியின் நாக்கு, பேனா எல்லாமே இரட்டை தான் என்கிற சலிப்பு இன்றைக்கும் பொருந்துவதாகத்தான் இருக்கிறது!!

அருண் ஷூரி  இந்த நேர்காணலில் ஒரு முக்கியமான விஷயத்தைத் தன்னையறியாமலேயே ஒப்புக் கொண்டு இருக்கிறார். விவசாயிகள் போராட்டம் என்று பஞ்சாப் விவசாயிகள் மட்டும் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடியோ அவரது அரசோ பஞ்சாபிகளைக் குறைத்து மதிப்பிடவோ, தேச விரோதிகள் என்றோ சொல்லவில்லை. பதினோரு சுற்று பேச்சுவார்த்தை நடத்திஇருக்கிறார்கள். எதற்கும் ஒத்து வராத நிலையில் இனிமேல் அரசே முன்வந்து பேச்சு வார்த்தைக்கு அழைக்காது என்று தான் சொல்லி இருக்கிறார்களே தவிர, பேச்சுவார்த்தையே கிடையாது என்று கதவை முழுதும் அடைக்கவில்லை. உண்மையில் இந்திரா காண்டி போல பிந்தரன்வாலாக்களை வளர்த்து விடாமல் மிகவும் கவனமாக சீக்கியர்களுடைய உணர்வு புண்பட்டுவிடாமல் கவனமாகக் கையாளுகிறார்கள் என்று தான் படுகிறது. 


இது அந்தநாட்களில் ராம் ஜேத்மலானி எழுதிய புத்தகம். 176 பக்கங்களில் அன்றைய தலைமை நீதிபதியையும், அட்டர்னி ஜெனெரல் சோப்ராஜியையும் கடுமையாக விமரிசித்து எழுதப்பட்டதாக நினைவு. எழுதியவருக்கும் அருண் ஷூரிக்கும் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று எனக்குப்படுகிறது..

அப்புறம் ஆடிட்டர் குருமூர்த்தி .....!  

சாக்கடையாக இருந்தாலும் பரவாயில்லை, திமுகவைத் தோற்கடிக்க சசிகலாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அருண் ஷூரி எந்தக்காலத்திலோ சொன்னதைத் தொட்டுச் சொன்னது நேரெதிராக முடிந்திருக்கிறது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற கதையாக, டில்லியில் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர், உள்துறை அமைச்சர் இருவரையும் சந்தித்தபிறகு சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வது 100% சாத்தியமே இல்லாதது என்று பேட்டியளித்திருக்கிறார். குருமூர்த்தியை இப்படி எல்லோருமாகச் சேர்ந்து தனியாகப் புலம்ப விட்டு விட்டார்களே என்று பரிதாபமாகத்தான் இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.                   

ஒரு புதன்கிழமை! நண்பர் ராஜசங்கர்! தோழர் வரதராஜன்!

ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதன் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை என்பதைப் பல இடங்களிலும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவுக்கு அவர் பேச்சின் தாக்கம் நீடிக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.


குனா மூனா அப்போது அதை செய்தார் பெரும் சாதனைகளை செய்தார் என சொல்லிக் கொண்டிருப்பர்களுக்கு சில பல கேள்விகள்.
சச்சின் டெண்டுல்கர் பெரும் ஆட்டக்காரர். கிரிக்கெட் உலகின் கடவுள் என்றே மதிக்கப்படுகிறார். அவரை இன்றைக்கு அழைத்து ஒரு போட்டிக்கு கேப்டனாகவ இருக்க சொன்னால் என்னாகும்?
இசைஞானி இளையராஜா ஆகச்சிறந்த இசை மேதை. இசையின் நெளிவு சுளிவுகளிலே பாட்டிசைத்து பாமரனுக்கு காட்டியவர். அவரை அழைத்து இன்றைக்கு ஒரு படத்தை இயக்க சொன்னால் எப்படியிருக்கும்?
இதே தான் குனா முனாவுக்கும்.
அவர் ஒரு காலத்திலே பெரும் அரசியல் விமர்சகராக இருந்திருக்கலாம் தான். ஒரு ஆட்சியை கவிழ்க்க தோற்கடிக்க வேலை செஞ்சிருக்கலாம் தான். அதையெல்லாம் யாரும் இல்லை என மறுக்கவில்லை.
ஆனால் அவர் ஏதேனும் தேர்தலிலெ நின்றாரா?
ஏதேனும் வேட்பாளரையோ அல்லது கட்சியையோ தேர்தலிலே நிற்கவைத்து ஜெயிக்க வைத்தாரா?
ஒரு எம் எல் ஏ பதவி அல்லது எம் பி பதவிக்கு யாரேனும் பொதுத்தேர்தலிலே நிக்கவைத்து ஜெயிக்கவைத்து காட்டினாரா?
தேர்தல் பணி செய்த குழுவையோ அல்லது ஒரு கட்சியையோ நடத்தினாரா?
பொதுமக்களிடம் இயங்கும் இயக்கம் ஏதேனும் ஒன்றை நடத்தினாரா? அதற்கு திட்டங்கள் வகுத்தாரா? அவை வென்றதா?
தமிழகத்திலே கட்சிகள் தேர்தல் பணி எப்படி செய்கிறது என தெரியுமா?
பணப்பட்டுவாடா எப்படி நடக்கிறது என புரியுமா?
இதுக்கு எல்லாம் பதில் இல்லை, செய்யவில்லை, நடக்கவில்லை என்பது தான்.
பெரும்பாலான பெண்கள் வீட்டிலே சமைப்பார்கள் தான். நன்றாக ருசியாகவே சமைப்பார்கள் தான். பல ஆண்களூம் வீட்டிலே சமைக்கலாம் தான்.
ஆனால் அவர்களால் ஒரு ஹோட்டல் நடத்தமுடியுமா? அல்லது ஒரு நூறு பேருக்கு சமைத்து போடமுடியுமா?
ஹோட்டலிலே பரோட்டா மாஸ்டர், வடை மாஸ்டர் போன்றோருக்கு நன்றாக வடை சுட தெரியும் பரோட்டா போட தெரியும் என்பதற்காக அவர்கள் ஹோட்டல் நடத்திவிட முடியுமா?
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் என வள்ளுவர் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
இது மகான் கவுண்டர் ஒரு அழகான உரை சொல்லியிருக்கிறார். அவனவனுக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்யுங்கடா என .
எனவே குனா மூனாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே என்ன வருமோ அதை மட்டும் செய்வது நல்லது.
சில முறை பலமுறை செய்து பார்த்தும் செய்ய முடியவில்லையா? விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்ப்பதும் நல்லது.

சில கூகிள் வலைக்குழுமங்களில் இயங்கிக் கொண்டு இருந்த நாட்களிலிருந்தே ராஜசங்கர் என்கிற இந்த இளைஞர் எனக்குப் பரிச்சயம் கொஞ்சம் விஷயம் தெரிந்து எழுதுகிறவர் என்று எனக்குப்படுவதால் இவர் பகிர்வுகள் சில இந்தப்பக்கங்களில் இடம்பெற்றதும் உண்டு ஆனால் மேலே சொன்ன விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை நமக்குப் பிடிக்கவில்லையா, ஒதுங்கிக் கொள்வதுஉத்தமம் தனக்குச் சரியெனப் படுவதை எழுத ராஜசிங்கருக்கு எப்படித் தடை விதிக்க முடியாதோ, அதுபோலவே குருமூர்த்தி என்ன செய்ய வேண்டும் என்பதையும் பிறர் அவருக்குச் சொல்லித் தரவும் முடியாது. திமுக தான் பிரதான எதிரி என்று உறுதியாக எதிர்க்கிறவர்கள் இப்படித் திசைமாறிப் பேசுவது, எழுதுவது நன்றாகவா இருக்கிறது?


நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் நடத்திவரும் தினசரி தளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி மீதான கீச்சு இது.


ஸ்ரீராம் நல்ல எண்ணத்தோடுதான் இதை எழுதியிருக்கிறார் என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமில்லை. சுத்தானந்த பாரதியார் படைத்த நூல்கள் மீண்டும் தமிழகத்தில் பவனிவர வேண்டும் என்ற எண்ணத்தோடு நானும் சில முயற்சிகளைச் செய்ததுண்டு கிடைத்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை சுத்தானந்த பாரதியார் என்ற குறியீட்டுச் சொல்லில் அதைக் கொஞ்சம் இந்தப் பக்கங்களிலேயே வெகுநாட்களுக்கு முன்பே எழுதி இருக்கிறேன். நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டு மீதேறியே நரகத்துக்கும் போகலாம் என்று தயிர் வடையைச் சாப்பிட்டுக்கொண்டே அந்தநாட்களில் தோழர் வரதராஜன் சொன்னது இப்போது சொல்வது போல காதில் கேட்கிறது

ஒரு புதன்கிழமை! A Wednesday

அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியின் நெருங்கிய நண்பர் அவர், ஆப்கன் எல்லை பக்கம் பிறந்து வளர்ந்தவர், அவரின் தேசாபிமானம் மிக சிலாகிப்பானது (எல்லை காந்தி என்றே அன்புடன் அழைக்கப்பட்டவர்)
யாருக்கும் குறையாத சுதந்திர போரட்ட வரலாறு அவருக்கும் உண்டு. பட்டேல் நேரு காந்தி காமராஜர் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு
காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது அது முடியாது என மல்லுகட்டியவர். தேசம் பிரிய கூடாது இஸ்லாமியர்கள் இந்தியர்களாக தங்களை முதலில் உணரவேண்டும் என உறுதியாக சொன்னவர்
அது முடியாத பொழுது "காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்."
எங்களை இந்தியாவோடு சேர்ந்த மேற்கு இந்தியா அமைத்து கொடுங்கள் என கதறினார், ஆம் அவர் இஸ்லாமியர் ஆனால் ஜின்னாவின் பாகிஸ்தானின் உள்நோக்கமும் அதில் இஸ்லாமியர் அமைதியாக வாழமுடியாது என்ற தீர்க்கதரிசன கவலையும் அவருக்கு இருந்தது
மூன்று துண்டாக உடைந்த இந்தியா 4 துண்டுகளாக உடையும் நிலை வந்தது.
நாங்கள் தனிநாடாக இயங்கமாட்டோம் மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா என இயங்குவோம் என கபார்கான் சொன்னதெல்லாம் யார் காதிலும் விழவில்லை
இவ்வளவிற்கும் அவர் கோரிக்கைக்கு பலுசிஸ்தான் பக்கம் பெரும் வரவேற்பு இருந்தது
ஜின்னா கோஷ்டி தவிர யாருக்கும் பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாவது பிடிக்க்கவே இல்லை என்பதுதான் அன்றைய நிலை
அந்த கபார்கானின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்திருந்தால் நிச்சயம் இப்பொழுது பாகிஸ்தானுக்கு அடுத்து ஆப்கனுக்கும் அதற்கும் இடையில் ஒரு குட்டி இந்தியா இருந்திருக்கும்
பாகிஸ்தான் இன்னும் சுருங்கி இருக்கும், யுத்தம் என வந்தால் பாக்குவெட்டிக்குள் சிக்கிய எலிபோல் பாகிஸ்தான் மாட்டியிருக்க்கும்
அவர் குரலை யாரும் கேட்கவில்லை
"இந்த ஓநாய்களிடம் எங்களை ஒப்படைக்காதீர்கள், இவர்கள் ஒருநாளும் உருப்படாத கொடூரமான கூட்டம்" என அவர் கதறியது பிரிட்டன் காதிலும் விழவில்லை
காந்தி அதுபற்றி கவலைகொண்டாலும் அத்தோடு அவர்காலமும் முடிந்தது, காந்தி நினைத்திருந்தால் இரு பாகிஸ்தான் உருவானது போல் இரு இந்தியாவினை உருவாக்கியிருக்கலாம்
நேரு அந்த நேரம் காத்த கள்ளமவுனமும் சந்தேகமே, படேலின் குரலும் எடுபடவில்லை
ஆனால் கபார்கான் தொடர்ந்து கேட்டுகொண்டேதான் இருந்தார், பிடிக்காத மருகளுடன் வாழ்வது போல அவர் முதிர்ந்த வயதுவரை அழுது கொண்டேதான் இருந்தார்
வங்கதேசத்தை உடைத்தபின் இந்திராவின் பார்வை பலுசிஸ்தான் மேல் விழுந்தது, தன் கடைசி நம்பிக்கையாக இந்திராவினை கண்டார் கான்
வங்கவெற்றிக்கு பின் இந்திராவின் கவனம் பாகிஸ்தானை இன்னும் உடைப்பதில் இருந்தபொழுதுதான் அரசியல் நெருக்கடி அவருக்கு ஆரம்பித்தது
இந்திரா எமர்ஜென்ஸி கொண்டுவந்ததில் இந்த உள்நோக்கமும் இருந்தது, பாகிஸ்தானை மேற்கொண்டு உடைத்து போட அவர் கடும் நோக்கம்கொண்டிருந்தார்
ஆனால் அது சர்வாதிகாரம் என சொல்லி உள்நாட்டு குழப்பம் இன்னும் பல குழப்பங்களுக்கு பின் அவர் ஆட்சிக்கு வர சில ஆண்டுகள் ஆனது
அவர் மறுபடி வந்தபொழுது பஞ்சாப் பற்றி எரிய அதிலே கவனம் செலுத்தி உயிரையும் விட்டார் இந்திரா
இதனால்தான் இந்திரா மறையும் பொழுது ஜியா உல்கக் எனும் ராணுவ பாகிஸ்தானிய ஆட்சியாளர் சொன்னான்
"அல்லா இருக்கின்றார், இந்திரா மறைந்தார்"
ஆம் இந்திரா ஆட்சிகாலத்தில் அஞ்சிய பாகிஸ்தான் கபார்கானை படாதபாடு படுத்தியது, அவர் இந்திய உளவாளி என 85 வயதிலும் சிறையில் வைத்து கொடுமைபடுத்தியது
இந்திரா கொஞ்சம் காலம் இருந்தால் நிச்சயம் கபார்கானின் நினைவு நிறைவேறியிருக்கும்
அவர் மறைந்த‌ பின் பலுசிஸ்தான் பக்கம் இந்திய பார்வை குறைந்ததென்றாலும் ரகசிய ஆதரவு உண்டு
1988ல் தன் 98ம் வயதுவரை வாழ்ந்த கபார்கான் தான் விரும்பிய இந்தியாவுடன் இணையாமலே மறைந்தார்
அவர் தன் உடலை பாகிஸ்தானில் புதைக்க விரும்பாமல் ஆப்கனில் தன் முன்னோர்கள் ஊரிலே புதைக்க சொன்னார்
ஆம் இந்தியா தங்களை கைவிட்ட சோகம் அவரை வெகுவாக பாதித்தது, அதனால் அவர் கல்லறை ஆப்கானிலே இன்றும் உண்டு
அந்த மனிதரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் செவிசாய்த்திருந்தால் இன்று இந்தியா பாகிஸ்தான் என்றொரு மிரட்டலை சந்தித்திருக்காது
மிக சிறிய நாடாக பாகிஸ்தான் சுருங்கி இந்தியா இடையே சிக்கியிருக்கும்
தியாகிகளின் கண்ணீரை உதாசீனபடுத்தினால் என்னாகும் என்பதற்கு கபார் கானின் கண்ணீரே சாட்சி
எனினும் இந்தியா 1988ல் அவர் இறந்தபின் அவருக்கு பாரத ரத்னா எனும் உயரிய விருது வழங்கபட்டது. இந்தியனாக பிறந்து அந்நியராக அந்த விருதை வாங்கியர் அவர்தான்
காஷ்மீர் பாகிஸ்தான் சிக்கல்கள் வரும்பொழுதெல்லாம் அம்மனிதரின் நினைவு வந்துவிட்டே செல்லும்
அந்த எல்லைகாந்தியின் கோரிக்கை நிறைவேறியிருந்தால் இந்த அளவு மோசமான நிலை வந்திருக்காது
வேண்டாத பிள்ளைகளிடம் சிக்கிவிட்ட பாசமிக்க தந்தையாக அவர் அழுது ஏங்கி செத்திருக்கவும் மாட்டார்
பாவம் அந்த மனிதன்.
அவனுக்கு செய்த துரோகமோ என்னமோ இந்தியா இன்னும் எல்லையில் ரத்தம் சிந்தி கொண்டேதான் இருக்கின்றது
காங்கிரசாலும் காந்தியாலும் நேருவாலும் கைவிடபட்ட அந்த தேசபற்றாளனுக்கு இன்று நினைவுநாள்
முஜிபுர் ரகுமானுக்கு உதவியது போல இந்தியா பலுசிஸ்தானியருக்கும் தனக்கும் உதவுவார் என எண்ணி ஏமாந்துபோன அந்த அப்பாவி மனிதனுக்கு நினைவு நாள்
நல்ல இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கலாமுக்கு முன்பே வாழ்ந்த இஸ்லாமியன் அந்த பெருமகன்
நேதாஜி போலவே வெள்ளையனுக்கு அஞ்சி காங்கிரஸ் தலைவர்களால் கைவிடபட்டு வதைத்து கொல்லபட்ட அந்த பெருமகனுக்கு வீரவணக்கம்
உங்களை காக்க முடியாத எங்களை, இந்நாட்டின் தேசபற்றாளனை கைவிட்ட எங்களை மன்னித்துவிடுங்கள், நாட்டுபற்றில்லா காங்கிரஸ் இந்நாட்டுக்கு எவ்வளவு ஆபத்தாக இருந்தது என்பதை நீங்களும் நேதாஜியும் எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்
கட்டினோர் விலக்கிய கல்லே மூலகல்லாய் அடையளமாய் நிற்கும் என்றார் இயேசுநாதார், அப்படி நீங்களும் நேதாஜியும் விலக்கி வைக்கபட்டு காங்கிரசின் துரோகத்தை, காந்தியின் உள்நோக்கத்தை, ஜின்னாவுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது எனும் நேருவின் சதிகளை எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்
ஒருநாள் கபார்கானின் நினைவுநாள் இந்தியாவில் பிரிவினைக்கு எதிரான ஒருமைபாட்டு நாளாக அறிவிக்கபடும், அது நடக்கும்
ஒருகாலமும் உம் புகழ் ஓயாது, ஒரு நன்னாளில் உங்கள் சிலையும் இத்தேசத்தில் நிறுவி உங்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தபடும், இது சத்தியம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
495
28 கருத்துக்கள்
168 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்