Showing posts with label 2021 தேர்தல்களம். Show all posts
Showing posts with label 2021 தேர்தல்களம். Show all posts

2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வழி) கேரளா!

திமுக கூட்டணியுடன் இணைந்து மதச்சார்பற்ற போராட்டம் (??), தமிழக நலனுக்காக (??)போராடிய காங்கிரஸை தற்போது சில சீட்டுகளுக்காக நடத்தும் விதத்தை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என கே எஸ் அழகிரி கண்கலங்கியதாக இந்துதமிழ்திசை நாளேடும் சேர்ந்து கலங்குகிற காமெடியோடு இன்றைய பதிவை ஆரம்பித்து விடலாமா?


சிலநாட்களுக்கு முன் கமல் காசருக்குப் பகிரங்கமாக அழைப்பு விட்டுக்கொண்டிருந்த இதே கே எஸ் அழகிரி  நேற்றைக்கு மூன்றாவது அணியின் மீதே  நம்பிக்கையில்லை என்று சொல்லியிருந்தது ஞாபகம் இருக்கிறதா? இந்த லட்சணத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்கிறதா காங்கிரஸ் என்று இந்து நாளேடு செய்திக்குத் தலைப்பிட்டிருப்பது கூடுதல் வேடிக்கை! 

ஆயிரம் ஆனாலும் பாவம்தான் காங்கிரஸ் கட்சி ! பழ கருப்பையா சமீபத்தில் மக்கள் நீதி மையம் நிகழ்ச்சியில் புதுச்சேரியில் காங்கிரஸ் எம் எல் ஏ களும் திமுக எம் எல் ஏ ஒருவரும் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேஷ்டியை உருவி கோமணத்துடன் நிற்க வைத்து விட்டார்கள் என்றார் ! அங்குதான் அப்படி என்றால் இங்கு அந்த கட்சிக்கு ஆட்சியை பிடிக்கும் பேராசை எல்லாம் கிடையாது ! பாவம் எதோ 41 சீட் கேட்டு கடைசி கடைசியாக 27 சீட்டாவது கொடுங்கள் திமுகவுடன் கெஞ்சி பார்த்தார்கள் ! அவர்களோ அரக்க மனதுடன் 18 மேல் ஒன்றும் கிடையாது இல்லை நஹி லேது என்று எல்லா மொழிகளிலும் சொல்லி விட்டார்கள் ! புதுச்சேரியிலாவது கோமணத்தோடு விட்டார்கள் தமிழ்நாட்டில் அதையும் உருவி அம்மணமாக தெருவில் நிற்க வைத்து விட்டார்கள் ! மாநில தலைவர் கே எஸ் அழகிரி கண்ணீர் விட்டு மரியாதையை இல்லாமல் நடத்தினார்கள் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் வருந்தியதாக செய்திகள் வருகிறது ! காங்கிரஸ் இனியும் அங்கே கெஞ்சி நிற்பது சரியா ? நாட்டையே பல காலம் ஆண்ட கட்சி ! அதற்கே இப்படி ஒரு நிலையா ? இந்த நிலைக்கு இந்திரா காந்தி முதல் இப்போதுள்ள ராகுல் வரை எல்லோருமே காரணம்! என்று இதே செய்தியை முகநூலில் மிகவும் சோகமான தொனியில் நக்கல் செய்து எழுதியிருக்கிறார் விஜயன் கோதண்டராமன்! ஸ்டேன்லி ராஜன் வேறு அவர் பாணியில் செம பகடி செய்கிறார்


ராகுலைக் கூட்டிவந்து டான்சாட விட்டு, தண்டால், push ups எல்லாம் எடுக்கவிட்டு பாதிரிமார்கள் ராகுல் ராகுல் என்று அல்லேலூயா கூவுகிற மாதிரிக் கூவியதில் கிடைக்காத ஆதரவு, அனுதாபமெல்லாம் கே எஸ் அழகிரி கண்ணீர் சிந்திய செய்திக்கு மிகப்பரவலாக வருவதைப் பார்த்தால் எனக்கும் ......! 😅😂😂


மல்லுதேசத் தேர்தல் களத்தைப்பற்றியும் கூட விரிவாக இங்கே எழுத ஆசைதான்! உள்ளூரக்கதையில் ஆசை இருக்கிற அளவுக்கு அடுத்தவீட்டுக் கதையில் ஆர்வம் இருக்குமா என்கிற தயக்கமும் இருக்கிறது. என்ன செய்ய? கொஞ்சம் யோசனைகள் வரவேற்கப் படுகின்றன!


"நாங்கள்தான் மாநிலத்தில் முதன்முதலாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளோம். இந்த முறை 291 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் 50 பெண் வேட்பாளர்கள், பட்டியலினத்தவர்கள் 79 பேர், பழங்குடியினர் 17 பேர், 42 முஸ்லிம் வேட்பாளர்கள் என 291 பேர் போட்டி இடுகின்றனர்.எங்கள் கூட்டணிக் கட்சியான கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கியுள்ளோம். டார்ஜ்லிங், கிலம்பாங், குர்சியாங் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்று அறிவித்த மம்தா பானெர்ஜி எத்தனை சிட்டிங் MLAக்கள் இந்தமுறை கழற்றிவிடப்பட்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை சொல்ல மறந்துவிட்டார்.  வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவித்துவிட்டால் மட்டும்? ஜெயித்துவிடமுடியுமா என்ன? 

முன்பாக, பவானிபூர், நந்திகிராம் என இருதொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று சொன்ன மம்தா இப்போது செம தில்லுடன் நந்திகிராம் தொகுதியில் மட்டுமே போட்டியிடப் போகிறாராம்!   மேற்குவங்கத்தில் தேர்தல்களம் சூடாகியிருக்கிற அளவுக்குத் தமிழ்நாடு இன்னமும் சூடேறவில்லை என்கதைக் கவனிக்கிறீர்கள்தானே? மீண்டும் சந்திப்போம்.

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் புதுச்சேரி கச்சேரி பாட்டு ஒண்ணு படிச்சேன்!

புதுச்சேரி சட்டசபையில் வி, நாராயணசாமி புதிய சாதனை ஒன்றைப்படைத்திருக்கிறார்! நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஒன்றரை மணிநேரம் பேசியவர், தீர்மானத்தை அப்படியே அம்போவென விட்டுவிட்டு வெளிநடப்பு செய்ததோடு, துணைநிலை ஆளுநரைச் சந்தித்துத் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.இனி  ஆளுநர்தான் முடிவுசெய்ய வேண்டுமென்கிற அங்கலாய்ப்பு வேறு! புதுச்சேரி சபாநாயகர், ஆளும் தரப்பு மெஜாரிட்டியை நிரூபிக்காமல், தீர்மானம் தோற்று விட்டதாக மங்களம் பாடிவிட்டார் என்ற நிலையில் துணைநிலை ஆளுநர் என்னசெய்யப் போகிறார்? சாதாரணமாக, மாற்று ஏற்பாடு செய்கிற வரை, ஒரு காபந்து அரசாகச் செயல்பட முதல்வரை வேண்டிக்கொள்கிற வழக்கம் இங்கேயும் நடந்ததா? 



சபாநாயகரின் முடிவு தவறு என்று வெளியே வந்து பேட்டி அளித்த நாராயணசாமி, தனது எதிர்ப்பை அங்கேயே பதிவு செய்யாமல் வெளிநடப்பு செய்தது ஏன்? உடனே ஓடிப்போய் துணைநிலை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தது ஏன்? நாசா அதற்கெல்லாம் பதில் சொல்வதாக இல்லை. மாற்று அரசு அமைக்கிற எண்ணம் இல்லை என பிஜேபி அறிவித்திருக்கிற நிலையில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருக்கிறது


இத்தாலிய மாமியா அந்தோனியோ மைனோ பிரதமர் மோடிக்கு  பெட்ரோல் விலை உயர்வு குறித்துக் கடிதம் எழுதுகிற நாடகம் நடத்தினார். மச்சான் ராகுல் காண்டி வயநாடு தொகுதியில்  ட்ராக்டர் ஓட்டி ஷோ நடத்திக்  காட்டுகிறார். மாப்பிள்ளை வாத்ரா மட்டும் சும்மா இருப்பாரா? அவர் பங்குக்கு சைக்கிளில் ஆபீசுக்குப் போகிற டிராமாவை (தொர ஆபீசுக்கெல்லாம் போவுதா?) நடத்தினார் என்று ஹிந்து நாளிதழ் சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்கிறது. தொர சைக்கிள் ஓட்டிப்போன நாடகத்தில் முன்னும் பின்னும் எத்தனை கார்கள் அணிவகுத்துப் போயின என்பதையும் எண்ணிச் சொல்லி இருக்கலாம்!   
  

அக்னிப் பரீட்சை என்பது நிகழ்ச்சியின் பெயர். அது  யாருக்கு என்பதை இந்த 36 நிமிட வீடியோவில் பார்த்து ரசியுங்களேன்!

Stanley Rajan  9ம.  முகநூலில் பகிர்ந்தது 
 · 
தவளையும் ஓணானும் பிடித்து கொண்டு தன்னை மாவீரன் என கருதி கொண்டவன் சிங்கத்திடம் சிக்கினால் எப்படி இருக்கும்? அப்படித்தான்  மு.க ஸ்டாலினையோ சீமானையோ பேட்டி எடுப்பது போல் நிர்மலா சீதாராமனிடம் பேட்டி எடுக்க சென்று கதற கதற அடி வாங்குகின்றார் கார்த்திகை செல்வன்
நிதியமைச்சரின் செவிட்டில் அடிக்கும் பதிலுக்கு அவரிடம் பதில் இல்லை, அம்மையாரின் தீர்க்கமான பதிலில் இன்னொரு கன்னத்தையும் காட்டி கொண்டு அவர் நிற்பது பரிதாபமாக இருக்கின்றது
"ஊறுகாய் மாமி" என திராவிட கும்பலால் பட்டம் சூட்டபட்ட நிர்மலா கார்த்திகை செல்வனை ஊற போட்டு அடித்து துவைத்துவிட்டார் 

தமிழ்நாட்டில் இப்போதைக்கு நிர்மலாவிடம் பேட்டி எடுத்து தப்பிவிட ஒரு பத்திரிகையாளனும் இல்லை, ஆண்மை இருந்தால் எவனாவது முயற்சித்து பார்க்கட்டும்! மிக துல்லியமான தரவுகள், குழப்பமே இல்லாத பதில்கள், தன் நேர்மையினை மட்டுமல்ல தன் அமைச்சரவை நேர்மையினையே நிரூபித்து நிற்கும் ஆளுமை, பதற்றமே இல்லாத வாதம் என விஸ்வரூபமெடுத்து நின்றார் நிர்மலா

அவரிடம் கேட்க எந்த கேள்வியுமில்லை என்ற பரிதாப நிலைக்கு தள்ளபட்டார் கார்த்திகை செல்வனார்.
திராவிட பத்திரிகா தர்மம் இப்படித்தான் இருக்கின்றது, இவர்கள் வளர்த்த பத்திரிகை சுதந்திரம் இதுதான்
ராம்சாமி, திராவிடம், சமூகநீதி என குண்டு சட்டிக்குள் கழுதை ஓட்டி அதை தாண்டி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி பத்திரிகை சமூகத்தை உருவாக்கியதுதான் இவர்கள் சாதனை!

நல்ல வேளையாக மோடிக்கு தமிழ் தெரியவில்லை, தெரிந்திருந்தால் இந்நேரம் தமிழக மீடியா கோஷ்டியெல்லாம் இலங்கைக்கு தப்பி ஓடியிருக்கும்! நிர்மலா ஏன் மத்திய அமைச்சரானார், இப்பொழுது ஏன் களத்தில் இறக்கபடுகின்றார் என்பதற்கான விடைகள் ஒன்றும் கடினமானதல்ல‌. இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல என்பதுதான் விஷயம்  

ஆனாலும் நிர்மலா சீதாராமனை குறை சொல்ல வேண்டுமே என்பதற்காகவே குறை சொல்கிற போக்கு இங்கே தமிழ்ச்சாதியின் விதி போல 


மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #75 IPAC பிரசாந்த் கிஷோர்! சவுக்கு சங்கர்! கோட்டைவாய் #நாசா !

தமிழகத் தேர்தல்களம் ஏன் இப்படி டல்லடித்துக் கிடக்கிறது? "வேற லெவல்".. ஒரேடியாக எகிறிய இமேஜ்! ஃபார்முக்கு வந்த ராகுல்.. அண்ணனாக, மகனாக.. பொங்கும் பாசம்! என்று ஒன் இந்தியா தமிழில் உருகுகிறார்கள் என்றால் H ராஜாவும் கோலாகல ஸ்ரீனிவாசும் இந்த 44 நிமிட நேர்காணலில் காங். தலைமையில் 3வது அணி’: ஹெச். ராஜா பகீர்! என்று செம காமெடி செய்கிறார்கள்!  இதனால் மட்டும்  தமிழகத் தேர்தல் களம் சூடான பதத்துக்கு வந்து விட்டதாகச் சொல்ல முடியாதே! 


மேலே வீடியோ 33 நிமிடம் ரெட்பிக்ஸ் தளத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் , சவுக்கு சங்கர் இருவரையும்  தரமான, நம்பகமான ஊடகக்காரர்களாக நான் எப்போதுமே நினைத்ததில்லை, ஆனாலும் தேர்தல் நேரம் எப்போதும்  காமெடி நேரமாகவே இருப்பதால் எல்லாக் கோமாளிகளையும் வேடிக்கை பார்த்துவிடுவது எனக்கு வாடிக்கை இந்த வீடியோவில் சவுக்கு சங்கர் பிரசாந்த் கிஷோர் பற்றியும் psephology, data schience என்ற பெயரில் இங்கே சில இந்திய நிறுவனங்கள் பற்றியும் மேலோட்டமாகப் பேசுவதை, வேறு எவரும் தொடாத சப்ஜெக்ட் என்பதால் இங்கே இந்தப்பதிவிலும்! திமுகவுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டி நிழல் யுத்தமாகத் தொடர்வதைப்பற்றி வேறு யாராவது பேசியிருக்கிறார்களா என்ன?         

திமுக நிர்வாகிகளுக்கும் IPAC நிறுவனத்துக்கும் மோதலா?  இப்படித் தலைப்பிட்டு BBC தமிழ் செய்தித் தளத்தில் ஜூனியர் விகடன் ரேஞ்சுக்கு நன்றாகக் கதைத்திருக்கிறார்கள்! மோதல் இருப்பதென்னவோ உண்மைதான்! ஆனால் 2021 இல் எப்படியாவது CM ஆகியே தீருவது என்று றெக்க கட்டிப்பறக்காத குறையாக இசுடாலின் பிரசாந்த் கிஷோரை முழுமையாக நம்பிக் களத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் போது கட்சிக் காரர்கள் பொருமலையெல்லாம் சட்டை செய்வாரா என்ன? ஆக, பிரசாந்த் கிஷோரை நம்பிக்கெட்டவர்கள் லிஸ்டில் இசுடாயினும், இலவுகாத்தகிளியாக சேரப் போகிறார் என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல? நண்பர் நெல்லைத்தமிழன் முரளி இந்த அனுமானத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்தான்! அதனால் சொல்லாமல் விட்டு விட முடியுமா?😃😄 


வருகிற திங்கட்கிழமை கோட்டைவாய் நாசாவுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகிறது! இந்த 5 நிமிட வீடியோவில் மத்திய அமைச்சராக இருந்த சமயம் அமைதியாக இருந்த நாராயணசாமி என்று சொல்கிறார்களே! இந்தக் கொடுமையை, தலை சுற்றலோடு  எந்த விதமான காமெடியில் சேர்ப்பது என்று புரியாமல் பதிவை முடிக்கிறேன்!  

மீண்டும் சந்திப்போம். 

#பாண்டிச்சேரி தேர்தல் களம் தயாராகிறது! ஆனால் தமிழ்நாடு?

Dr.தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டவுடனேயே, தனது கடமையை செய்ய ஆரம்பித்திருக்கிறார் என்பது காங்கிரஸ் மற்றும்  திமுகவுக்கு கலக்கத்தை உண்டுபண்ணி இருக்கிறது


நாராயணசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதா இல்லையா என்பதை சட்டமன்றத்தில் தான்  நிரூபிக்க வேண்டும் என்பதை S.R. பொம்மை வழக்கு அதன் பின்னர் வேறு சில வழக்குகளிலும் நீதிமன்றம் தெளிவாக்கிய பிறகு, துணை நிலை ஆளுநர் உத்தரவு மீது குறை சொல்ல முடியாத ஒன்றாக இருக்கிறது. தமிழக அரசியல் களம் சூடாவதற்கு முன்னாலேயே புதுச்சேரி அரசியல் களம் சூடேறிவிட்டது. கோட்டைவாய் நாசாவுக்கு இப்போது இரண்டே வழிகள் தான் முன்னால் இருக்கின்றன ஒன்று  கள யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அவை கூடுவதற்கு முன்பே ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்திப்பது அல்லது திங்கட்கிழமை அவையைக் கூட்டி அங்கே பெரும்பான்மையை நிரூபிக்க கடைசி நிமிடம் வரை முயற்சி செய்வது. இந்த இரண்டில் எதைச் செய்தாலும் நாசாவுடைய அரசியலுக்கு அஸ்தமன காலம்தான் என்பது மட்டும் நிச்சயம்! 


புதுச்சேரி விவகாரத்தில் என்னநடக்கப்போகிறது? திமுக சார்பு ஊடகங்கள் இதைப்பற்றிப் பேசுவார்களா, என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் இனிமேல் தான் தேடிப்
பார்க்கவேண்டும்.கோலாகல  ஸ்ரீனிவாஸ் போன்ற சிலர் இந்த நேரத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருப்பது என்னவோ நிஜம்.

தேதிமுகவை அதிமுக கழற்றிவிடப்போகிறது என்கிற மாதிரி நிறைய ஆரூடங்கள் உலாவருவதை நான் நம்பவில்லை. அதேபோல காங்கிரசுக்கு ரோஷம் வந்து கமல் காசர், மற்றும் சில உதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்பதும் கூட அப்படித்தான்! எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை சீட் என்பதை இரண்டு கழகங்களும் வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே தமிழக அரசியல் களமும் தேர்தல் களமும் சூடேறும் என்பதை நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன!

மீண்டும் சந்திப்போம்  

#துக்ளக் ரமேஷ்! #ரஜனிகாந்த் மறுபடியும் முதல்லேருந்தா? #சினிமா என்றால் சீரழிவு!

அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து அதன்மீது நேர்மையாகத் தனது விமரிசனங்கள், கருத்தைப் பதிவு செய்வது தமிழக ஊடகச் சூழலில் அரிதிலும் அரிது ஆனால் ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பது உண்மை. துக்ளக் வார இதழின் தலைமைச் செய்தியாளராக இருக்கும் திரு.ரமேஷ், அப்படி ஒருசில விதிவிலக்குகளில் ஒருவர் என்பது என்னுடைய கருத்து சொல்லவந்ததைப் பூசி மெழுகாமல், பொய்க்கலப்பில்லாமல் ஆணித்தரமாக எடுத்து வைப்பது துக்ளக் ரமேஷுடைய பாணி! 


இந்த 26 நிமிட வீடியோவில் முதல் 3 நிமிடங்களை FF செய்துவிடலாம்! ஒரிஜினல் பேட்டி 23 நிமிடம் இதில் TTV தினகரனின் அமமுக (உண்மையில் VK சசிகலா) என்ன மாதிரியான தாக்கம், அதாவது அதிமுகவுக்கு எவ்வளவு சேதம் என்று இதர ஊடகங்கள் ஆவலோடு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைகிற சப்ஜெக்ட் மீது சிம்பிளாகச் சொல்லிவிடுகிறார் (சசிகலாவின் நோக்கம் என்னவாக இருந்தாலும் தீயசக்தி திமுகவை எதிர்ப்பது என்பதிலிருந்து விலகமுடியாது;விலகினால் அது  அரசியல் தற்கொலை என்பது புரிந்துகொள்ளமுடியாத ஒன்றா என்ன?) அப்படியே திமுகவின் வேல்பிடித்து போஸ் கொடுக்கிற அரசியலின் போலித்தனம், தேமுதிக கொஞ்சம் அதிக சீட் எதிர்பார்க்கிற விவகாரம், திமுக கூட்டணியில் இன்னும் தொடர்கிற குழப்பங்கள் என்று தமிழக அரசியல் களநிலவரங்களை, நேரடியாகவே சொல்லிவிடுகிறார் என்பது நான் இந்த நேர்காணலைப் பரிந்துரை செய்வதற்கான காரணம். பாருங்களேன்!


வீடியோ 3 நிமிடத்துக்கும் குறைவு, மறுபடியும் முதலில் இருந்தா? இப்படி அயர்ச்சி எல்லாம் எனக்கு இல்லவே இல்லை! நாயைஆட்டுவிக்கும் வாலாக இருப்பது யார்?சினிமா  KD brothers மட்டுமே தானா? அர்ஜுன மூர்த்தி, அப்புறம் லதா ரஜனிகாந்த், இப்போது இந்த RMM ராஜா. இன்னும் எத்தனைபேர் அந்த மனிதர்  பெயரைச் சொல்லிக்கொண்டு  யாரைக்குழப்ப அல்லது பயமுறுத்த நினைக்கிறார்கள்? ஏதாவது புரிகிறதா? 

தமிழக அரசியலில் சினிமா புகுந்து எப்படி இன்னும் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்! ஆனால் இதைக்குறித்து என்ன செய்வது என்று யாருக்குமே, (சினிமாத்துறையில் சிக்கிச் சீரழிந்தவர்களையும் சேர்த்துத்தான்) தெரியவில்லை! 


7th சேனல் மாணிக்கம் நாராயணனுடன் சித்ரா லட்சுமணன் உரையாடல் 27 நிமிடம். வெள்ளித்திரைக்கு பின்னால் இருக்கும் அவலங்கள், துயரங்களை, இந்த வீடியோவை வைத்து முகநூலில் சிவகாசிக்காரன் வலைப்பதிவர் ராம்குமார் அருமையான பகிர்வை நேற்றைக்கு எழுதியிருக்கிறார்

மீண்டும் சந்திப்போம்.

சண்டேன்னா மூணு! கலகலக்கும் #கூட்டணிஅரசியல் #தேர்தல்களம் #தமிழகஅரசியல்

தமிழக அரசியலை  நச்சுக்காடாக்கி நாசம் செய்த இரண்டு தி. கழகங்களும் தனித்தனியாக, தங்களுடைய அரசியல் பரப்புரையை ஒரு சுற்றுக்கும் மேலேயே நடத்தி முடித்து விட்டன என்பதில் கூட்டணிக்கட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லை என்பது இன்றைய தமிழக அரசியல் கள நிலவரம்! கூட்டணிக்கட்சிகளில் அந்தப்பக்கம் காங்கிரசும், இந்தப்பக்கம் பாட்டாளி மக்கள் கட்சியும் தங்களுடைய தனி ஆவர்த்தனத்தை நடத்திக் காண்பித்து விட்டன. தனி ஆவர்த்தனம் செய்து காட்டியதில் என்ன கிடைத்தது என்பது வெளியே வர இன்னும் சில நாட்கள் ஆகலாம்!


இந்த 54   நிமிட நேர்காணல் தமாஷாவைப் பார்க்க இங்கே  இசுடாலினுக்குப் பதில் சொல்கிற மாதிரியே எங்களுக்கும் கூட்டம் வருமில்ல என்பதாக ராகுல் காண்டியைக் காட்சிப்பொருளாக்கி மூன்றுநாட்கள் ரீல் ஓட்டிய மிதப்பில் கே எஸ் அழகிரி இருப்பதைக் காண மிகவும் தமாஷாக இருக்கிறது. ஒரு பொய்யான கனவுலகில் இருந்து கொண்டு சோனியா காங்கிரசின் தமிழ்நாடு பிரான்ச் தலைவர் ரங்கராஜ் பாண்டே எழுப்பும் கேள்விகளுக்கு நேரடியான பதிலைச் சொல்வதைத்  தவிர்க்கிறார். ஒரு அருமையான காமெடி என்பதால் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். 


பாமக ஒருபுறம், தேமுதிக ஒருபுறம்,இன்றைக்கு அவரவர் கட்சிக் கூட்டங்களை நடத்தி, அதிமுகவுடன் பேரம் பேச முனைந்திருக்கிறார்கள். கடுமையாகப் பேரம் பேசுகிற வலிமையோ தெம்போ இரு கட்சிகளுக்குமே இல்லை என்பதைக் கூர்ந்து கவனித்தால் புரியும். 1989 களில் வன்னியர் இட ஒதுக்கீடு என டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்தபோது கருணாநிதி பணிந்து கொடுத்து பாமகவை வளர்த்துவிட்டதுபோல,இன்றைக்கும் ராமதாசை அரசியல் ஆதாயம், புதுவாழ்வு பெறச்செய்ய வேண்டிய கட்டாயமோ அவசியமோ அதிமுகவுக்கு இல்லை! இதைப்பற்றிய ஒரு விரிவான செய்தி இங்கே! தவிர பாமகவுக்கு அதிக இடம் கொடுத்தால் பிஜேபிக்கும்  அதே அளவு இடம் கொடுக்க வேண்டி வரும். அதற்கடுத்து தேமுதிகவுக்கு எத்தனை கொடுக்க முடியும்? கருணாஸ் மாதிரி உதிரிகள் இப்போதே வேறுமாதிரி துண்டு போடுகிறார்கள். அதிமுகவும் கூட ஒரு தெளிவான முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 


இது தேமுதிக defacto தலைவி பிரேமலதா இன்றைக்கு அளித்திருக்கிற நேர்காணல். விஜயகாந்த் ஒருவர்தான் தேமுதிகவின் பலமாக ஜனங்களுடைய நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். ஜெயலலிதாவையே நேரடியாக எதிர்க்கிறவராகவும் இருந்தார் என்பது நினைவுக்.கு வரும்போது உண்மையிலேயே மனவருத்தம் மட்டுமே மிச்சம்.

இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஆரம்பமாகி விட்டது என்பதைத்தாண்டி இன்றைக்கும் கூட தேர்தல் களம் முழுமையாகத் தயாராகவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மீண்டும் சந்திப்போம்.  

          



மண்டேன்னா ஒண்ணு! #2021தேர்தல்களம் படுத்தும் பாடு!

2021 ஆம் ஆண்டு இந்திய அரசியல் களத்தில் பலவித விசித்திரங்கள், குழப்பத்தோடு ஆரம்பித்திருக்கிறது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி?த் தேர்தல், சில மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் என வருவதில் நிறைய அரசியல் காமெடிகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. என்னவென்று கொஞ்சம் பார்க்கலாமா?


முதலாவதாக'மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்துவிட வெறிபிடித்து அலைகிறார் இடதுசாரிகள், காங்கிரஸ் இரண்டையும் ப்பூவென உதறித்தள்ள முடிந்தவருக்கு பிஜேபி கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பெரும் குடைச்சலைக் கொடுத்தது. 2021 இல் மாநில சட்ட சபைக்கான தேர்தலில், பிஜேபியைத் தனித்து நின்று சமாளிக்க முடியாதென்று நினைத்தோ என்னவோ காங்கிரசும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் அணிவகுத்து பிஜேபியைத் தோற்கடிக்க முன்வரவேண்டுமென்று அழைப்பும் விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன்தான் லட்சியக்  கூட்டணி  இன்றைக்குத் அறிவித்ததோடு, அதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்.நாடாளுமன்றத் கட்சித் தலைவர்) அப்படி பிஜேபியை தோற்கடிக்க வேண்டுமானால் மம்தா காங்கிரசில் வந்து சேர்ந்து கொள்ளட்டும் என்று சொல்ல காமெடிப்பீசாகிப் போனார் மம்தா. 

தன்னிடமிருந்து விலகி பிஜேபிக்குப் போன சுவேந்து அதிகாரியின் கோட்டையான நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் இன்னும் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதாகவும் தகவல்! சவாலுக்கு எதிர்சவால் இல்லாவிட்டால் அது அரசியலா? சுவேந்து அதிகாரி மம்தாவை 50000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்போவதாக,அப்படி முடியாமல் தான் தோற்றுவிட்டால் அரசியலை விட்டே வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ஆக மேற்கு வாங்காத தேர்தல் களம் சூடு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்து விட்டது. கொல்கத்தாவில் சுவேந்து அதிகாரி ஆதரவாளர்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டது தொடர்கதையாகிக் கொண்டே வருவது ஒரு சாட்சி, அடையாளம்!                          

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித்தேர்தல்கள் நடை பெறும்  தருணம் இது! சிவசேனா தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்ள நினைப்பதில் முதல்பலி மாநிலங்களுக்கிடையிலான சுமுகமான உறவுகள் தான்! கருநாடக காங்கிரசுக்கு மிகவும் சிக்கலான நிலையை உருவாக்கியிருக்கிறது. மகாராஷ்டிரா - கருநாடகா இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லைப்பகுதிகளை மொழி ரீதியாகத் தங்களுக்கே சொந்தம், இது பழசு தான்! சிவசேனா இப்போது ஆரம்பித்துவைத்திருக்கும் புது அக்கப்போர், ஆக்கிரமிக்கப்பட்ட மராத்திய மண்ணை மீட்டே தீருவோம் என்பதாக! மகாராஷ்டிரா மாநிலக் காங்கிரஸ் குறட்டை விட்டுத் தூங்குகிறதோ என்னவோ, கருநாடகக் காங்கிரஸ் தனியாக நின்று எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் சிவசேனாவுக்கு இந்த மராத்தி மண்ணை மீட்பதான ஸ்டன்ட் சிலபல வெற்றிகளைத் தரலாம்! காங்கிரஸ் பாடுதான் திண்டாட்டம்! அது பெயரளவுக்குத் தான் தேசியக் கட்சி! உண்மையில் ஒரு மாநில, அது ஏன், ஒரு மாவட்டக் கட்சியாகக் கூட இருக்க லாயக்கில்லாத குப்பை என்பதை வருகிற ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்துக் கொண்டே வருகிறதே!  

மேலே வீடியோவில் சுருக்கமாக அரசியல் களம் என்ன மாதிரி மாறிக்கொண்டு வருகிறது என்பதைக் கோடி காட்டினாலும், பதிவின் நீளம் கருதி, இங்கே தமிழக நிலவரம் என்னவென்பதைப் பார்ப்பதோடு முடித்துக் கொள்ளலாம்.

 ஒட்டுமொத்த வாக்கு வீதத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் அமைத்துக்கொண்ட கூட்டணியால் சிறிய கட்சிகள் 37% பலனடைந்திருப்பதை நாம் அறிந்துகொள்ளலாம். எனினும், இந்தக் கூட்டணிகளால் திராவிடக் கட்சிகளுக்கு வெறும் 8% கூடுதல் அனுகூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.

எல்லாத் தொகுதிகளிலும் வெற்றிக்குக் காரணமான வாக்கு வீதத்துக்கு உரியவை இரண்டு திராவிடக் கட்சிகளும்தான். எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் சிறிய கட்சிகளுக்கோ மூன்றாவது அணிக்கோ தங்கள் வாக்குகளைச் செலுத்தி வீணாக்க விரும்பவில்லை. மூன்றாவது அணி என்பது எப்போது சாத்தியம் என்றால் இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியிலும் அவை பாதிப்பு ஏற்படுத்தும்போதுதான். அப்படி பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றால் சவாலாளிகள் இந்த இரண்டு கட்சிகளின் குட்டிக் கூட்டாளியாக எஞ்சுவதில் திருப்தியடைந்துகொள்ள வேண்டியதுதான்.

இப்படிச் சொல்கிற ஒரு தீர்மானமான கட்டுரையை முழுதாய் இங்கே வாசிக்கலாம்! 

வாசித்துவிட்டு துக்ளக் ஆண்டுவிழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி சொன்ன கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

தொடர்புடைய பதிவு:

#துக்ளக் ஆண்டுவிழா! குருமூர்த்தி பேசியதும் தொடரும் சர்ச்சைகளும்!

 

சண்டேன்னா மூணு! #அரசியல் #ரஜனி #தந்திடிவி

தமிழக அரசியல் களம் இன்னமும் சூடேறவில்லை என்பதை இங்கே பலமுறை சொல்லிவந்திருக்கிறேன். அதுவும் போக இங்கே அதிமுக அரசு'பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வருகிற போதிலும்  அரசுக்கெதிரான எந்த ஒரு அதிருப்தி அலையும் காணோம்! கோடிக்கணக்கில் செலவு செய்து இசுடாலினை முன்னிறுத்தி எல்லா இடங்களிலும் தேர்தல் விளம்பரம், பரப்புரை என்று திமுக மாதக்கணக்கில் தம்பட்டம் அடித்து வருவதிலும் கூட  இசுடாலினுக்கு ஆதரவு அலை ஜெயிக்கிற அளவுக்கு எங்கேயும் காணோம் என்பது இப்போதைய கள நிலவரம். இரண்டு அணிகளும் கூட்டணியை முடிவு செய்து போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்களை அறிவிக்கிற வரை அரசியல் களத்தில் எந்தவொரு பரபரப்பும் இருக்காதென்பதை, வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் ஊடகங்கள் கூடக் கொஞ்சம் அடக்கி வாசிப்பதற்கு அதிமுக தரும் விளம்பரங்கள் காரணமாக இருக்கலாம்!


இது இன்றைக்கு தந்திடிவியில் ஒளிபரப்பான ஆயுத நிகழ்ச்சி! அரசியலுக்கு வரமாட்டேன் மன்னித்து விடுங்கள் என்று வீட்டுக்குள் பதுங்கிவிட்ட ரஜனியை, #தலைவா_வா என்றழைத்து ரசிகர்கள் ஆங்காங்கே நடத்திய போராட்டம், அல்லது அழுவாச்சி காவியத்தை வைத்து நிகழ்ச்சி நடத்துகிற அளவுக்குத்தான், அரசியல் களம் சூடு பிடிக்காமலேயே இன்னும் இருக்கிறது.

இந்த 46 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், வராமல் ஓடிப்போன ரஜனிகாந்தைப் பற்றி தந்திடிவி ஒரு உள்நோக்கத்துடனேயே இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியிருக்கிறது. #தலைவா_வா என்று கூவுகிறவர்கள் ரஜனியின் அரசியல் வருகையில் ஆதாயத்தை எதிர்பார்த்துச் செலவு செய்தவர்கள் என்பதை நெறியாளர் ஹரிஹரன் வெளிப்ப்டையாகவே கேள்வி எழுப்புகிறார்.. அந்த வகையில் ரஜனியைப் பங்ச்சர் செய்த மாதிரியும் ஆயிற்று , திமுகவைத் திருப்தி செய்வது போலவும் ஆயிற்று.

ரஜனிகாந்த் தன்னுடைய தலைவிதியை நொந்து கொண்டு சும்மா இருக்கவேண்டியதுதான்! இனிமேல் வாய்ஸ் கொடுத்தாலும் இதற்கு மேலும் அவமானப் பட வேண்டியதுதான்! வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை  சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்!

இதனால் ரஜனியை மலைபோல பிஜேபி நம்பி இருந்த மாதிரி, மலை காணாமல் போனதால் அதிமுக பொதுக் குழுவில் கேபி முனுசாமி அதிமுகவோ திமுகவோ தேசியக் கட்சிகளை நம்பி இல்லை என்று மீண்டும் சீண்டிப் பார்க்கிற மாதிரிப்  பேசியதில், வாய்ச்சவடால் தெரிகிறது, அவ்வளவுதான்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிற வரை அதிமுகவால் பிஜேபிக்கு எந்தப் பிரயோசனமுமில்லை கழற்றி விடப் படுமேயானால் திமுக எளிதாக ஜெயித்து விடமுடியும் என்பது கூடப்புரியாமல் கேபி முனுசாமிகள் பேசலாம்! எடப்பாடி தரப்புக்கு அது புரிந்திருக்கிறதா இல்லையா என்பதில் பிஜேபி கூட்டணியில் அதிமுக நீடிக்குமா என்பதற்கான விடையும் இருக்கிறது.

இந்த விடுகதையையில்  முதலில் விடுபடப் போவது பாமக தானா என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய வேடிக்கை! 

மீணடும் சந்திப்போம் 

             

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா? #சேகர்குப்தா #அரசியல்களம்

அதிமுக--பிஜேபி கூட்டணி எந்த லட்சணத்தில் இருக்கிறது?   இப்படி இன்னொரு வலைப்பக்கத்தில் நேற்று எழுதிய பதிவுக்கு நண்பர் நெல்லைத்தமிழன் ஒரு காட்டமான பின்னூட்டத்தை எழுதியிருந்தார். அவருக்காக சேகர் குப்தா  பிஜேபியின் கூட்டணிக் கட்சிகள் எதற்காக பிஜேபியுடன் வந்து ஒட்டிக் கொண்டன, எதற்காகக் கழன்று கொண்டன என்பதை அவரது பார்வையில் இந்த 26 நிமிட வீடியோவில் சொல்வதைப் பரிந்துரைக்கிறேன்.


NDA கூட்டணியில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்திருந்த கட்சிகளில் 19வதாக ஒரு ராஜஸ்தான் கட்சி NDA வில் இருந்து கழன்று கொண்டதை விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ரஜனிகாந்த் அரசியலுக்கு முழுக்குப் போட்டதை வாய் நிறையச் சிரிப்புடன் சொல்லி ஆரம்பிக்கிறார் சேகர் குப்தா.நவம்பர் மாதத்திலேயே இங்கே சார்ட் போட்டுச் சொன்னதைத்தான் சேகர் குப்தாவும் கொஞ்சம் காரணங்களோடு சொல்கிறார். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக உமி, அதிமுக அரிசி. ஆனால் பாஜக தமிழகத் தலைவர், ஏதோ இது தேசியக் கூட்டணி போலவும், யார் முதலமைச்சர் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று சொல்வது டூ டூ மச் இல்லையோ? முருகன் அவர்களின் பேச்சு எனக்கே கடுப்பாகிறது எனும்போது, போனாப் போகுதுன்னு ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட அதிமுகவினருக்கு எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு பாஜக என்பது பெரும் சுமை, 8-10 சதவிகித ஓட்டிழப்பிற்குக் காரணமாக இருக்கும் கட்சி. பாஜக கூட்டணி இல்லாவிடில் குறைந்தது ஐந்து எம்பிக்களாவது அதிமுகவிற்கு இருந்திருக்கும்.

கேபி முனுசாமி பேசியது சரிதான். முருகன் அவர்கள் அதீதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாஜக, 2 சதவிகித வாக்குகளுக்கும் அதிகம் இருக்கும் கட்சி என நிரூபிக்கட்டும். நெல்லைத்தமிழன் எழுதியது இது . இதற்கான பதிலை இந்தப்பதிவின் முதல்வரியிலேயே இருக்கும் இணைப்பைக் க்ளிக் செய்து வாசிக்கலாம்.

NDA கூட்டணி பற்றிப் பேசுவதற்கு முன்னால், சோனியா இன்னமும் தலைமை தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிற UPA க்கிய முற்போக்குக் கூட்டணி யோக்கியதை என்னவாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே பார்த்து விடலாமா?


ஐமுகூ சேர்பெர்சனாக சரத் பவார் ஒன்றும் தவம் கிடைக்கவில்லை. அந்த வெற்று நாற்காலியால் அவருக்கு பைசா பிரயோசனமில்லை. ஆனால் சிவசேனா தரப்பிலிருந்து, எதிர்க்கட்சியாக இருப்பதற்கே தகுதியில்லாத நிலையில் சோனியா காங்கிரஸ் இருக்கும் நிலையில், பிஜேபிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக சரத் பவார் மட்டுமே இருக்க முடியும் என்று வலுவான வாதம் முன்னெடுக்கப்பட்டது கூட இருபது நாட்களுக்கு முன்னால் தான்! சோனியா தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி அனேகமாக நாசமாகப்போய்விட்டது.2004 இலிருந்து சோனியா அலங்கரித்த ஐமுகூ சேர்பெர்சன் பதவியும் கூட எவரும் சீந்த விரும்பாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

காங்கிரசோடு சேர்ந்து நின்றாலே பீடை ஒட்டிக் கொள்ளும் என்று சொல்லாமல் கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் ஒதுங்கி நிற்கிற அளவுக்குக் காங்கிரசின் இன்றைய நிலைமை இருக்கிறது.

NDA ஆரம்பமானது 1998 இல். காங்கிரசுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியாக அன்று தொடங்கப்பட்டது போன்ற நிலைமை இன்றிருக்கிறதா? பிஜேபியை மதவாதக்கட்சியாக, தீண்டத்தகாத ஒன்றாகப்  பூச்சாண்டி காண்பித்த செகுலர் போலிகளின் காலம் முடிந்தே போய்விட்டது. வடவர்கள் கட்சி என்று சொல்லப்பட்ட நிலையும் மாறிவிட்டது. இந்தியா முழுதும் பரந்து விரியும் ஆலமரமாக பிஜேபி இன்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து நிற்பதில், துண்டு துக்காணிக் கட்சிகள் ஒட்டிக் கொடிருந்தால் என்ன? உதிர்ந்து போனால் என்ன? பிஜேபியின் இன்றைய தலைமை இதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவுமில்லை, சேகர் குப்தா போல, என்னமோ பெரிய அரசியல் ரகசியத்தை உடைத்துவிட்டதுபோல பொதுவெளியில் விவாதிப்பதுமில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஏதோ ஒரு செயல் திட்டம், காலவரையறை என்று இருக்கக் கூடும் நான் அறிந்த வரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதுமாதிரி ஒரு strategy, tactics என்று ஏட்டளவிலாவது இருந்ததுண்டு ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவுமே இப்போது புரட்சி, சோஷலிசம், என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனால், பிஜேபியினர் மட்டும் ஒரு இலக்கு, அதை அடைவதற்கான செயல்திட்டம் என வகுப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வருடம் முழுவதும் கடுமையாக உழைத்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.

இங்கே தமிழகத்தில் காலூன்ற பிஜேபி என்னமோ ரஜனி ஒருவரைத்தான்  மலைபோல நம்பியிருந்தது போலவும், அவர் வீட்டுக்குள் சுருண்டு படுத்துக் கொண்டதும், அது கனவாகப் போனது போலவும் இங்கே நிறையப்பேர் நமட்டுச் சிரிப்புடன் அலைவது சரிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்           .  

   

யாராவது #மண்குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்குவார்களா? #ரஜனிஅரசியல்

ஒரு இரசிகனாக உங்கள் முடிவை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பால் உங்களுடைய 40 ஆண்டுகால குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. மகிழ்ச்சி! என்று ரஜனிகாந்த் ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிற மூன்றுபக்க அறிக்கை ட்வீட்டுக்கு முதல் கமென்ட்டாக போட்டிருப்பவர் ISR செல்வகுமார்.



அந்த 40 ஆண்டுகள் என்பதில் தான் கொஞ்சம் கணக்கு இடிக்கிறது பாட்ஷா படத்தின் 100வதுநாள் விழாவில் அவர் பேசியது ஜெயலலிதாவை உரசுகிற மாதிரி இருந்தது கொஞ்சம் பழைய கதையைச் சுருக்கமாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.


1996 இல் நேரடியாகவே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் பேசினார் ரஜனி அதன் பலனை மாநிலத்தில் திமுகவும், GK மூப்பனாரும் அடுத்து பானாசீனாவும் அறுவடை செய்து கொண்டார்கள். ஆக ரஜனிகாந்த் அரசியல் வாய்ஸ் கொடுத்தது அவருக்குப் பயன்படவே இல்லை . அதனால் தானோ என்னவோ அவர் அப்புறம் வாய்ஸ் கொடுக்கவே இல்லை. ஆனாலும் அரசியலுக்கு வரப்போவதாக, ஓவ்வொரு படரிலீஸுக்கு முன்னால் ஒரு பரபரப்பு கிளம்பும்! அப்புறம் அடங்கிவிடும். இப்போதும் கூட பெரிய வித்தியாசமில்லை.





ரஜனிகாந்த் அரசியல் ப்ரவேசத்தைப் பற்றி எனக்குப் பெரிதான அபிப்பிராயம் எப்போதுமே இருந்ததில்லை. 



சிவகங்கை சின்னத்துரும்புகள் கூட இளப்பம் செய்கிற மாதிரியாகி விட்டதே!

மீண்டும் சந்திப்போம்.  

சண்டேன்னா மூணு! மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு! #2021தேர்தல்களம்

2020ஆம் ஆண்டு ஒருவழியாக விடைபெறத்தயாராகிக் கொண்டிருக்கிற தருணம் இது! அடுத்த ஆண்டின் முதல் பாதிக்குள் சட்டசபைத் தேர்தல்களை சந்திக்கப்போகிற மாநிலங்களின் அரசியல் களநிலவரம் இப்படித் தான் என்று இன்னமும் உறுதியாகச் சொல்ல முடியாதபடி, ஒவ்வொன்றிலும் பிரத்தியேகமான குழப்பங்கள்! நேற்றும் இன்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாமேற்கு  வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திரிணாமுல் கட்சியின் தூணாக இருந்த, சுமார் 110 சட்ட சாபைத் தொகுதிகளில் வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்த சுவேந்து அதிகாரி ஒரு MP, 8 TMC + 2 காங்கிரஸ்  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்  60ற்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், ஜில்லா பரிஷத், பஞ்சாயத் சமிதி உறுப்பினர்களோடு, அமித் ஷா முன்பாக நேற்றைக்கு பிஜேபியில் சேர்ந்திருப்பதில்  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போய்த் தொலையட்டும் நல்லதுதான் என்று பொருமித் தீர்த்திருக்கிறது. 


சேகர் குப்தா, நிறைய அனுபவம் வாய்ந்த ஊடகக் காரர்தான்!  நடுநிலையானவர் அல்லவென்பதை இங்கே பலமுறை அழுத்தமாகச் சொல்லி வந்திருக்கிறேன். அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த 29 நிமிட வீடியோவில் மேற்குவங்க அரசியலின் நேற்று இன்று நாளையாக என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்! 


பிரசாந்த் கீழோர் வந்து தூக்கி நிறுத்த முடியாத அளவுக்கு மம்தா பானர்ஜியின் அரசியல் அஸ்திவாரம் ஆட்டம் காண ஆரம்பித்த்ருக்கிறதே! இந்த களயதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சொல்லப்படும் ஆரூடங்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

 

அசாமில் கூட அதே நிலைமைதான் போல! டிசம்பர் 26 அன்று அமித் ஷா அங்கே வரும்போது காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் முண்டியடித்துக் .கொண்டு பிஜேபியில் சேரக்காத்திருப்பதாகச் செய்திகள்! Election looming, Congress leaders look to join BJP in  Assam என்கிறது நேற்றைய எகனாமிக் டைம்ஸ் நாளிதழ்

தமிழ்நாட்டில் அரசியல் நிலவரம் எப்படிப் போகிறது?  


ஏகப்பட்ட பில்டப்புடன், ஒரு போர்க்குரலை எழுப்பப் போகிறார் இசுடாலின் என்று துரைமுருகனுடைய  முன்னோட்டத்துடன் நடந்து முடிந்த திமுகவின் கலந்துரையாடல் கூட்டம் ( மேடையிலிருந்தவர்கள் தவிர அப்படி யார் யாருடன் கலந்து என்னென்ன உரையாடினார்களாம்? கேட்கக் கூடாத கேள்வி இது! பதில்தான் எல்லோருக்கும் தெரியுமே!) நடந்தது முடிந்தது!      


அதிமுகவை நிராகரிப்போம்! இதுதான் திமுகவின் போர் முழக்கமா?  1600 பிரசார பேச்சாளர்கள் 14000 இடங்கள்! ஜெயலலிதா பாணியில் யாருடன் கூட்டணி எத்தனை சீட் என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! 200 சீட் இலக்கு! இதெல்லாம் வழக்கமான பல்லவிதானே! 

நாம் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளனர்  என்று  பேசியிருப்பதன் பொருள் என்ன? 

பேசிப்பேசியே தமிழகத்தைக் கெடுத்த இரண்டு கழகங்களுமே  குழப்பத்தில் இருப்பதையே காட்டுவதாகத் தான் எடுத்துக் கொள்ளண்டியிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம். 

#2021தேர்தல்களம் அரசியலில் காமெடி, சஸ்பென்ஸ், பன்ச் டயலாக், ஸ்டன்ட் காட்சிகள்!

கமல்காசர் கட்சிக்கு 2021 சட்டசபைத் தேர்தலில் டார்ச் லைட்  சின்னம் கிடையாது என்று தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டதாம்! எம்ஜியார் மக்கள் கட்சி என்ற வெளியே எவருக்குமே தெரியாத கட்சிக்.. கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாம்! TOI  செய்தி இதைச் சொல்லிவிட்டு, "டார்ச்லைட் சின்னம் கிடைக்கா விட்டால் லைட்ஹவுஸ் சின்னம்! அவர்கள் நம்மை விஸ்வரூபம் எடுக்கத் தூண்டுகிறார்கள். விஸ்வரூபம் எப்போது எடுக்கவேண்டுமென்று நீங்கள் சொல்லுங்கள்! உடனே எடுத்து விடுவோம்"  என்று கமல்காசர் காமெடி செய்து இருப்பதாகவும் சொல்கிறது தமிழகத்தில் டார்ச்லைட் சின்னம் மறுக்கப்பட்டாலும் பாண்டிச்சேரியில் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பது தேர்தல் ஆணையம் செய்திருக்கிற காமெடி! அதேநேரம்  விஸ்வரூபம் 2 தியேட்டரில் ஊத்திக் கொண்டதை கமல்காசர் மறந்துவிட்டார் போல!   


முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நினைவுகளைப் புத்தகமாக எழுதியிருப்பதன் 4வது பகுதி வருகிற ஜனவரியில் வெளிவருகிறது என்று பதிப்பாளர்கள் அறிவித்திருக்கிற நிலையில், அவரது மகனும் மகளும் புத்தகத்தை வெளியிட வேண்டாம் / வேண்டும் என்கிற இழுபறிப்போட்டியை இன்று ட்வீட்டரில் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.


மேலே அபிஜித் முகர்ஜி! பிரணாபின் மகன், முன்னாள் எம்பியும் கூட! நிறுத்துங்கள், என்னைக் கேட்காமல் வெளியிடக் கூடாது என்கிறார். அவரது சகோதரியும் சோனியா காங்கிரசின் செய்தித் தொடர்பாளருமான ஷர்மிஸ்தா முகர்ஜி என்ன சொல்கிறார் பாருங்கள்!
 

என்ன கண்ராவி இது? எப்படியிருந்தாலும் புத்தகத்தை நாங்கள் வாங்கவோ படிக்கவோ போவதில்லையே, அப்புறம் எதற்காக இது என்கிறீர்களா? புத்தகம் கூட வேண்டாம்! பொதுவாக முகர்ஜிகளைப் பற்றிய ஒரு நயம் நையாண்டிப் பகிர்வை முகநூலில் எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி எழுதியிருக்கிறார்! அதையாவது படித்து விடுங்கள்!  



இது கருநாடக  மேலவையில் காங்கிரஸ் சூரப்புளிகள்! துணைசபாநாயகரை இருக்கையிலிருந்து இழுத்துத் தள்ளுகிறார்கள்!  


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி நிறுத்த, 2021 தேர்தல்களில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மம்தா பானெர்ஜி பிரசாந்த் கிஷோருடைய பிரசார உத்திகளை நாடியது பலனளிக்கவில்லை போல! கட்சியின் முக்கிய தலைவர்களை வரிசையாக இழந்து வருவது தான் மிச்சம்! மார்க்சிஸ்டுகளைப் ஆட்சிக்கட்டிலில் இருந்து கீழிறக்கிய மம்தா பானெர்ஜி மார்க்சிஸ்ட் கட்சி செய்த அதே தவறுகளை,அதுவும் வன்முறை வெறியாட்டத்தை கையிலெடுத்திருப்பது, மார்க்சிஸ்டுகளின் இன்றைய பரிதாப நிலைக்கே கொண்டு போய்விட்டுவிடும் போல!

ஆனாலும் நீதி பன்ச் டயலாக் ஸ்டன்ட் காட்சிகளைத் தொடர்ந்து அரங்கேற்றுவது குறைந்தபாடில்லை!

மீண்டும் சந்திப்போம்.