Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts
Showing posts with label கருத்து சுதந்திரம். Show all posts

ராஜா காது கழுதைக் காதுதான்! சந்தேகமிருக்கிறதா என்ன?

சமீபத்தில் நெல்லை கண்ணன் என்கிற காங்கிரஸ் உளறுவாயன் நரேந்திர மோடியின் திருமண வாழ்க்கை குறித்தும், கூட்டத்தைச் சிரிக்கவைக்கிறேன் பேர்வழி என்று தமிழக முதல்வர், துணைமுதல்வர், அமித்ஷா என்று பலரையும் சகட்டுமேனிக்கு கீழ்த்தரமாகப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டதும். நெல்லை கண்ணன் பேசியது சரிதான் என்ற ரீதியில் இன்னும் இங்கே விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதையும் பார்த்துச் சலித்திருப்பீர்கள்! ஒரு மாறுதலுக்காக, நடிகை பாயல் ரோஹட்கி! என்ன பேசி விட்டார் என்று கைது,  9நாட்கள் சிறை அப்புறம் ஜாமீன் என்று?

      வீடியோ 13 நிமிடம் 

நேரு மற்றும் வாரிசுகளுடைய கதை பொதுவெளியில் இன்றைக்கும் சந்திசிரித்துக் கொண்டிருப்பதுதான்! பொதுவெளியில் எல்லோரும் தெரிந்துகொள்கிற மாதிரி இருக்கிற தகவல்களைச் சொன்னதனாலேயே நேரு மற்றும் வாரிசுகளைப்பற்றி அவதூறாகப் பேசி விட்டார் என்று முடிவு செய்துவிடுவதா? காங்கிரஸ் காரனைப் பொறுத்தவரை இந்திரா காந்தி என்று இருப்பதில் ஒரிஜினல் காந்திக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உண்மையைச் சொன்னால் மிகவும் அசௌகரியமாக இருக்கிறது. கருத்து சுதந்திரமாவது மண்ணாவது!

Arrest

Rohatgi claimed that Jawaharlal Nehru, first prime minister of India, was not legitimate child of Motilal Nehru but born out of an illicit relationship of Kamala Nehru with another man in Facebook video in October 2019.[8] She also alleged that Motilal Nehru had five wives.[55] Youth Congress leader lodged police complaint against her for insulting the Nehru family.[56][57][58][59] Later, she offered public apology to Priyanka Gandhi and Sonia Gandhi.[60] On 15 December, she was detained by Bundi Police in Ahmedabad due to her remarks on Nehru-Gandhi family.[61] She was later arrested. On 16 December 2019 Court sent her in Judicial custody for 9 days till 24 December 2019.[62]  என்று அம்மணியைப் பிரபலமாக்கிய அல்லது ராஜாகாது கழுதைக்காது என்பதை பல்லக்கு தூக்குகிறவர்களே  ஒப்புக்கொண்ட விதத்தை விக்கிபீடியா பக்கம் சொல்கிறது. அதென்ன ராஜாகாது கழுதைக்காது என்று அப்பாவியாகக் கேட்பவர்களுக்காக ஒரு பழைய தமிழ்ப்படக் காமெடி இங்கே வீடியோவாக!   விக்கி சொல்வதெல்லாம் உண்மை என்று நான் சர்டிபிகேட் கொடுக்கவில்லை, ஆனாலும் ஒரு குறைந்தபட்ச, ஆரம்பநிலைத் தகவல்களைத் தருகிற இடமாக விக்கிபீடியா இருக்கிறது என்பதை மறுக்க முடியாது! இந்த விஷயத்தோடு முந்தைய பதிவில் நம்மூர் அரசியல் பெரும் புள்ளிகளுடைய கதையை biopic ஆக எடுத்தால் என்ன ஆகும் என்ற கேள்வியையும் சேர்த்துப் பாருங்கள்! 


Queen வெப் சீரிசில் நடித்த அனுபவம் பற்றி ரம்யா கிருஷ்ணன் இந்த 11 நிமிட வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார். கதையமைப்பும் இயக்குனரும் தான் சொதப்பினார்களே தவிர ரம்யா கிருஷ்ணன் மாதிரி கலைஞர்கள் அல்ல. உண்மையான ஜெ. மிக மர்மமான பெண்மணியாகவே இந்த சீரீஸ் கொடுமைக்குப் பிறகும் இருக்கிறார்! அவ்வளவுதான்!


மொக்கையாக எடுப்பாராம்! ஆனால் rubbish ஆ குறை சொல்லாதீங்க என்றும் கௌதம் மேனன் சொல்வாராம்! முன்னோட்டம் சேர்த்து 19 நிமிடம். இரண்டாவது, மூன்றாவது சீசன்களும் இருக்கிறதாம்! இப்போதே பயமாக இருக்கிறதே! சொன்னால் உனக்கு வெப் சீரீஸ் பற்றி ஒண்ணுமே தெரியாதென்று கௌதம் மேனன் சண்டைக்கு வந்துவிடுவாரே! 

வெப் சீரீசை வைத்து  இங்கே சொல்வதும் கூட நிஜத்துக்கும் கிரியேட் செய்யப்பட்ட பிம்பத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இருக்காது! வெறும் கற்பிதங்கள் உண்மையாக இருக்காது என்பதை நேரு, வாரிசுகள் விஷயத்திலும்  ராஜா காது கழுதைக்காது தான் என்பதை மறுபடியும் வலியுறுத்திச் சொல்வதற்காக மட்டுமே!

மீண்டும் சந்திப்போம்.              

தொடர்புடைய பதிவு

ராஜா காது கழுதைக்காது தான்! அதுக்கென்னவாம் இப்போ?

           

சண்டேன்னா மூணு! #கருத்து #சுதந்திரம் #அரசியல்

பிஜேபியின் முந்தைய ஐந்தாண்டுகளில்  கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக, மாற்றுக்கருத்து சொன்னால் தேச துரோகி பட்டம் கட்டப்படுவதாக நிறைய கூக்குரல்கள் தொடர்ந்து ஒரு தம்பட்டமாகவே அடிக்கப்பட்டு வந்த கதை, தொடர் கூத்து  நினைவிருக்கிறதா? இப்போது அதன் 2வது சீசன் ஆரம்பமோ? ஆனால் முதல் சீசன் மாதிரி அல்லாமல் 2வது சீசன் ஆரம்பித்த அடுத்த கணமே புஸ்வாணமாகிப் போனதை இங்குள்ள ஊடகங்கள் சேனல் விவாதங்களில் சொல்ல மாட்டார்கள்!    


An FIR (First Information Report) was lodged in Bihar's Muzaffarpur on Thursday against nearly 50 celebrities, including Ramachandra Guha, Mani Ratnam and Aparna Sen, who had written an open letter to Prime Minister Narendra Modi raising concern over the growing incidents of mob killing, police said.
The case was lodged after an order was passed by Chief Judicial Magistrate Surya Kant Tiwari two months ago on a petition filed by local advocate Sudhir Kumar Ojha.
"The CJM had passed the order on August 20, accepting my petition upon the receipt of which an FIR was lodged today (Thursday) at the Sadar police station," Mr Ojha said. இது NDTV வெளியிட்ட செய்தி.  யார் இந்த சுதீர் குமார் ஓஜா? 

பிரபலங்கள் மீது பொதுநல வழக்கு  தொடர்வதையே அனேகமாக முழுநேரத் தொழிலாக வைத்திருக்கிற ஒரு பிஹார்-முசாபர்பூர் வழக்கறிஞர். சினிமாவில் முத்தக்காட்சி முதற்கொண்டு junk food விளம்பரங்கள் என்று ஆரம்பித்து 745 பொதுநல வழக்குகளை இதுவரை உள்ளூர் கோர்ட்டில் தொடர்ந்திருக்கிறார். இப்படி இவர் தொடர்ந்த ஒரு பொதுநல வழக்கின் மீது சென்ற புதன்கிழமை முசாபர்பூர் தலைமை  ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவின் பேரில்தான் பிரிவு 124 A கீழ் வழக்கும் முதல் தகவல் அறிக்கையும் பதியப்பட்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் ஆதரவு ஊடகமான The Print தளத்திலேயே விரிவான செய்தி சொல்கிறது.  இதற்கும் நரேந்திர மோடி, பிஜேபிக்கு என்ன சம்பந்தம்? ஒரு தகவலை அரைகுறையாகப் புரிந்து கொண்டு அதன் மீது இன்னமும் அரைவேக்காட்டுத் தனமாக விவாதம் நடத்துவது கண்டனக்குரல் எழுப்புவது #தமிழேண்டா இனத்துக்கே உண்டான தனிக்குணமா? கருத்து, சுதந்திரம் இவைகளுக்கு சில முன் நிபந்தனைகள், கடமைகள், பொறுப்பு இருக்கின்றன. அதை மறந்துவிட்டு கட்டற்ற அல்லது கட்டுப்பாடுகளே இல்லாததாக கருத்து, சுதந்திரம் என்பதெல்லாம்  அதீதக் கற்பனை மட்டும்தான் என்று இந்தப்பக்கங்களிலேயே பலமுறை சொல்லி இருப்பதுதான்! மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டியதாகவும்!  



வரும் 21-ம் தேதி மகாராஷ்டிரா,ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர பேச்சாளராக  ராகுல் காண்டியை விட்டால் வேறு ஆளே இல்லை என்று இருக்கும் நிலை! அதுவும் போக ஹரியானா மகாராஷ்டிரா  இரு மாநிலங்களிலும் தேர்தல் நேரத்தில் உட்கட்சி பூசல் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் நேற்று இரவு திடீரென ராகுல் காந்தி பாங்காக் நகரம் புறப்பட்டுப்போய் விட்டார் என்பது  கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று இந்து நாளிதழில் செய்தி போடுகிறார்களே! இது இந்துவின் கருத்து சுதந்திரமா அல்லது உல்லாசமாக ஓடிப்போவதற்கு ராகுல் காண்டிக்கு சுதந்திரம் இல்லையா என்று எப்போது விவாதம் நடத்தப்போகிறார்களாம்? 


கொஞ்சம் சுவாரசியமான விவாதம்! வீடியோ 45 நிமிடம்.

சண்டேன்னா கொஞ்சம் கலகலப்பு வேண்டாமோ?

மீண்டும் சந்திப்போம்.    
     

வந்தேனே! வலைப்பதிவெழுத மீண்டும் வந்தேனே!



ஓம் நமோ பகவதே ஸ்ரீஅரவிந்தாய 
*****

ஊடகங்களில் நல்ல செய்தி அல்லது கெட்ட செய்தி என்று பிரித்துப் பார்க்க முடியுமா? இது நேற்றைக்கு எழுந்த கேள்வி. முதலில் செய்தி என்ன, யார் பார்வையில் இருந்து, எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டது என்பதெல்லாம் அந்த நல்லது அல்லது கெட்டது என்கிற அடைமொழியைத் தீர்மானிக்கின்றன.

#WashingtonPost இதழுக்கு பாகிஸ்தானிய பிரதமர் #இம்ரான்கான் அளித்திருக்கிற இந்தப் பேட்டியைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்! அமெரிக்க அதிபர் #டொனால்ட்ட்ரம்ப் புடன் #இம்ரான்கான் நடத்திய ட்வீட்டர் அக்கப்போரை ஏற்கெனெவே படித்து இருப்பீர்கள்.. இந்தப் பேட்டி அமெரிக்காவுடனான பாகிஸ்தானிய உறவுகள் மிகவும் கீழேபோய்க் கொண்டிருக்கும் நேரத்தில் துல்லியமான கேள்விகள் அதிக மழுப்பல் இல்லாத பதில்கள் என்றிருப்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

Imran Khan, a onetime cricket star, led the life of a glamorous playboy before he turned to Pakistani politics. This summer, after years in the opposition and then as a member of the coalition government in Islamabad, he finally captured the premiership. He inherits it with a daunting list of challenges for his country, including poverty, terrorism and corruption. This past week, President Trump — who has traded Twitter barbs with Khan and cut military assistance to Pakistan — asked him to help bring the Afghan Taliban to peace talks


இப்படி இம்ரான் கானுடைய பூர்வோத்தரங்களை மிகச்சுருக்கமாக சொல்லிவிட்டு பேட்டியை ஆரம்பிக்கிறார் சீனியர் அசோசியேட் எடிட்டர் லாலி வேமௌத்  முழுப்பேட்டியும் இங்கே   #TheWashingtonPost என்ற தலைப்புக்கு கீழே Democracy dies in Darkness என்று இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? 

இந்தப் பேட்டியைப் படித்த பிறகு ஒரு நண்பருடன்  இந்தப் பக்கங்களிலேயே  உரையாடியது நினைவுக்கு வந்தது. நினைவுகள் இங்கே    அதில் எழுதிய ஒரு பின்னூட்டம் 

இது அறியாமை தான்! அலட்சியப்போக்கு இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்பது தெரியாமலேயே ஏமாந்துகொண்டிருப்பது ஒருவகையான அறிவின்மைதான்! அதே மாதிரி, நாம் எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றும் ஆகப் போவதில்லை,ஏதோ கிடைக்கிறதே அதையாவது வாங்கிக் கொள்வோம் என்ற அவலம், அதுவும் கூட ஒருவகையில்,அறியாமைதான். வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்துத் தட்டுக் காசு சம்பாதிக்கத் தெரிந்த சாமர்த்தியம், ஓட்டுக்கு எத்தனை தருவீர்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிற சாமர்த்தியம், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, ஏதோ ஒரு நாளைக்குத் தானே வருகிறது. அதுவும் கூட அனைவருக்கும் கிடைப்பது இல்லை! Winner takes all என்ற பிரிட்டிஷ் தேர்தல் முறைகூட ஊழல் செய்கிறவனுக்குத் தான் உபயோகமாக இருக்கிறது.

ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்பது தெரியும் தான், ஆனால் என்ன செய்வது என்பதில் தெளிவில்லாத, அறியாத ஜனங்கள் தான், இவர்கள் தான் இந்த தேசத்து இனமானத் தலைவர்களுக்கும், ராஜசேகர ரெட்டி மாதிரி தண்ணீரில் கூட சம்பாதிக்கத் தெரிந்த அரசியல் வாதிகளுக்கும், சிபுசோரென், மது கோடா போல எல்லாவிதமான பெருச்சாளிகளுக்கும் நாலாவது தூண்! சாய் நாத் மாதிரி ஒருவர் மட்டும் எழுதி என்ன பயன்? 

எப்போதெல்லாம் சர்குலேஷன் சரிந்து விழுகிறதோ அப்போதெல்லாம் அரசை எதிர்த்து பரபரப்புச் செய்திகளை வெளியிடுவார் என்று அந்த நாட்களில் எக்ஸ்பிரஸ் கோயன்காவைப் பற்றி ஒரு கிண்டலான விமரிசனம் உண்டு. ஹிந்து வேறுரகம்!

அரசுக்கு எதிரான செய்திகளை,ஹிந்து ராம்களும், தங்களுக்குவசதி படுகிற வரை பிரசுரிப்பார்கள்! விளம்பரவருமானம் குறைவில்லாமல் கொடுத்தால், அவர்களும் ஒரு கட்டத்தில், முன்பு எழுதியதையே மறக்கடிக்கும் விதமாக சாதனை மலர்கள் வெளியிடுவார்கள். வேறென்ன?

வாஷிங்டன் போஸ்டில் வந்த பேட்டிக்கும் 2009 இல் எழுதிய பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

ஒன்றுமே இல்லை என்பதுதான் விசனம் தருகிற உண்மை.  Democracy dies in Darkness என்று வாஷிங்டன் போஸ்ட் சொல்லிக் கொள்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. நிக்சன் காலத்தைய வாட்டர்கேட் சமாசாரத்தை அம்பலப்படுத்திய நாளிதழ் அது என்பதில் இருந்தே அந்த வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் இல்லை என்பது புரிந்திருக்கும்.

சுதந்திரம், உரிமைகள் அவைகளைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே என்பதாவது புரிகிறதா?

எப்போது விழித்துக் கொள்ளப் போகிறோம்?
         

கருத்துசுதந்திரம்! எதுவரை?

விகடன் தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கிற செய்தி இது   பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதியை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதை மறந்து #கருத்துசுதந்திரம் என்றெதை சொல்கிறார்கள் இவர்கள்?

On December 6, 1997, bombs had exploded on the Pandian Express at Tiruchy. On the same day, bombs also blew up the Cheran Express at Erode and Alapuzha Express at Thrissur, killing a total of 10 people and injuring over 72. 

12 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. 156 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடைசியில் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டது தனிக்கதை  ரயிலுக்கு குண்டு வைக்கலாம் அப்பாவிப்பயணிகளைக் கலவரப்படுத்தலாம். எத்தனைபேர் செத்தால் குண்டு வைக்கிறவனுக்கென்ன?
கேட்டால் #கருத்துசுதந்திரம்   

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வருகிறதென்றால் பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தங்கள் சொந்த ரிஸ்கில் பயணித்தது நினைவிருக்கிறதா? பழைய கசப்பை மறந்து இப்போதுதான் டிசம்பர் 6 வன்முறை உயிர்ப்பலி இல்லாத நாளாகிக் கொண்டிருக்கிறது. திரும்பவும் ஆரம்பிக்க வேண்டுமா?

#கருத்துசுதந்திரம் எது வரை என்பதை மாதொருபாகன் புத்தக விவகாரத்திலேயே இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம் இல்லையா?