மீண்டும் மதன் ரவிச்சந்திரன்! வங்கிகள் இணைப்பு! D K சிவகுமார்!

இட்லி வடை பொங்கல்! #41 இது! YG மகேந்திரன் நிறைய திரைப்படங்களில் அசட்டுத் தனமான வேடங்களில் நடித்திருந்தாலும் , நிஜத்தில் அசடு இல்லை. ஆனால் அவருடைய மகள் மதுவந்தி எப்படி? காவேரி நியூஸ் மதன் ரவிச்சந்திரன் ஒரு நேர்காணலில் அதை வெளியே கொண்டு வந்துவிட்டாரோ? இந்தப்பெண் தன் பாட்டியைப் போலவே ஒரு கல்வியாளர்! கல்வி நிறுவனம் நடத்துகிறவர் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?


மதுவந்தி இதற்கு முன்னும் ஊடகங்களில் கொஞ்சம் அபத்தமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.அங்கே பேசியது வேறு ரகம். இங்கே மதன் ரவிச்சந்திரனுடன் மிக அசட்டுத்தனமாக வாயாடுவது வேறு ரகம்! ஒரு 27 நிமிடக் காமெடி! அவ்வளவுதான்! இந்தப்பெண்ணுடன் 27 நிமிடம் தாக்குப் பிடித்ததே மதன் ரவிச்சந்திரனுடைய நல்லகாலம்தான்!

Prashanth Rajendran


பாண்டே எல்லாம் பிச்சை எடுக்கணும் மதன் கிட்ட... அப்புறம் இந்த திமுக சொம்பு சேவியர் நெல்சன் கொஞ்சம் வாங்கி குடி... பாமரனின் கேள்விகளை பிரதிபலிக்கும் மதன் இரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🤝🤝🤝🤝🤝👍👍👍👍🔥🔥🔥🔥🔥
Show less
21

எங்கே பிராமணன் என்று சோ ஒரு தொடராக துக்ளக்கில் எழுதியதை ஜெயாடிவியில் சீரியலாகவும் ஒளி பரப்பினார்கள்! மறைந்த பதிவர் டோண்டு ராகவன் தன்னுடைய வலைப்பதிவில் இந்த சீரியலுக்கு ஒவ்வொரு எபிசோடுக்கும் சுட்டி கொடுத்து, 106 பதிவுகளில்  குறிப்புகளும் எழுதிக் கொண்டிருந்த அந்தநாட்கள் நினைவுக்கு வந்து போகிறது. சுட்டியில் டெக் சதீஷ் நெட்டின் பழைய லிங்குகள் இப்போது கிடைப்பது இல்லை என்பது கூடுதல் தகவல். 


சரியும் பொருளாதாரம், வங்கிகள் இணைப்பு - மோடி மீட்பாரா? என்று வெட்டித்தனமான தலைப்பை வைத்து துறைசார்ந்த அல்லது விஷயம் புரிந்த நபர்களிடம் கருத்துக் கேட்காமல்,ஒரு 20 நிமிடங்கள் புதுப்புது அர்த்தம் கற்பிக்க முயல்வது புதியதறுதலை டிவியின் தனிப்பாணி! அப்படியானால் இங்கே இதைப் பகிர்வானேன்? முந்தைய பதிவில் சூட்டோடு சூடாக இந்தவிஷயம் குறித்து எழுதியதை நண்பர்கள்  தனி விண்டோவில் பார்த்துக்கொண்டே (பெரும்பாலும் படங்கள் infographics தான்)    இந்த 20 நிமிட விவாதத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்களேன்! விவாதத்தில் பேசுகிற ராதாகிருஷ்ணன் அச்சு அசலாக ஒரு கழக உபி மேடையில் பேசுகிற மாதிரியே தொடர்பில்லாத விஷயங்களைக் கோர்த்துப் பேசுகிறார்! 




நான் 1980-ல் கனரா வங்கியில் சேர்ந்தேன். அப்போது CBEU எனப்படும் கனரா வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமரர் - சி.எஸ் ( C S SUBRAMANIAN) அவர்கள்!
அவர் மதுரை வந்தால் 'காலேஜ் ஹவுசில்' தான் தங்குவார். கூடவே ஊழியர் கூட்டத்தில் சொற்பொழிவும் ஆற்றுவார். ஒரு மாநாட்டில் சி.எஸ், மற்றும் அமரர் N. சம்பத் இருவரும் ஆற்றிய உரையும் கேட்டுள்ளேன்.
அது போக கோவை கீதா ஹால் கூட்டத்தில் தோழர் சி.எஸ் அவர்கள் ஆற்றிய அருமையான உரையும் கேட்டுள்ளேன். (1980 - 1982 சி.எஸ். அவர்கள் அமரர் ஆகும் வரை).
அப்போதெல்லாம் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் - பங்குச் சந்தைக்கு வராத காலம். ஒவ்வொரு அரசு வங்கியின் பெயர்ப்பலகையிலும் "WHOLLY OWNED BY GOVT OF INDIA"- என்று போட்டிருக்கும்.
ஆனால் அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இடையே இருந்த போட்டி பலமானது. பெரிய பெரிய கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள், மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் ( TNEB, TWAD, CO-OPTEX, STATE TRANSPORT CORPIRATIONS LIKE ANNA, JEEVA, CHERAN etc) இவற்றினுடைய BUSINESS ஐ பிடிப்பதற்கு எல்லா அரசு வங்கிகளும் போட்டிபோட்டன.
அந்தப் போட்டி எல்லா நேரங்களிலும் 'ஆரோக்கியமாக' இருந்தது எனக் கூற முடியாது! சில பல நேரங்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளைக் 'குளிர்விக்க' சில பல வழிமுறைகள் கையாளப்பட்டதை அப்போது பணியில் இருந்த வங்கி உயர் அதிகாரிகள் அறிவர்!
'ஒரு பவுன் காயின் அன்பளிப்பு' முதல் வெளியில் கௌரவமாகச் சொல்லமுடியாத உபாயங்களும் கையாளப்பட்டதாக 'கிசு கிசு' ப்புகள் எழுந்தன!
போட்டி என்றால் அவ்வளவு போட்டி - பெட்டி, புட்டி... ட்டி... என்று பெரும் நிறுவனங்களின் கார்பரேட் எக்சிகியூட்டிவ்களை 'குளிர்விக்கவே' LIAISON போல சில வங்கி அதிகாரிகள் செயல்பட்டது உண்டு! பிசினஸ், டார்கெட், இவை இரண்டையும் விரிவுபடுத்தவும், அடையவும் அரசு வங்கிகளிடையே ஒரு CUT THROAT COMPETITION நிலவியது...
அப்போதுதான் வங்கி ஊழியர்கள் / அதிகாரிகளிடையே பரவலாக ஒரு எண்ணம் மேலோங்கியது - அது ஊழியர் சங்கக் கூட்டங்கள், மாநாடுகளிலும் எதிரொலித்தது!
தோழர் சி.எஸ், N சம்பத், இராம. வெள்ளையன் (மும்மூர்த்திகள் - தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம்) உரைகளிலும் இந்த எண்ணம் வெளிப்பட்டது - நானே கேட்டு இருக்கிறேன்.
'எல்லாமே அரசுக்குச் சொந்தமான வங்கி என்றால் எதற்கு இத்தனை பெயர்களில் தனித் தனி வங்கிகள்?' 'எல்லாமே அரசுக்குச் சொந்தமான வங்கி என்றால் எதற்கு இப்படி ஒரு CUT THROAT COMPETITION?'
'மேலும் ஒரு வங்கியில் கடனாளி - மற்றொரு வங்கியில் ஜாமீன்தார் - அல்லது ஒருவருக்கே MULTIPLE LENDING! அதிலும் IRDP போன்ற அரசாங்க SUBSIDY சார்ந்த திட்டங்களிலேயே ஒரு சில சமயங்களில் MULTIPLE LENDING!... (அப்போதெல்லாம் CIBIL, CBS, KYC, ஆதார் எதுவும் கிடையாது!) ஏன் இந்தப் போட்டி?'
'எனவே LIC என்று LIFE INSURANCE க்கு இருப்பது போல BANKING CORPORATION OF INDIA என்று ஒரு குடையின் கீழ் வர வேண்டும் - வேண்டுமானால் LIC போல EAST, WEST, NORTH, SOUTH, CENTRAL என்று நிர்வாக ZONE களை உருவாக்கலாம்"
இவை எல்லாம் வங்கி ஊழியர் சங்க மாநாடுகளில் - UNHEALTHY AND CUT THROAT COMPETITION AMONG GOVT BANKS என்பதைப் போக்க ஒலித்த குரல்கள்!
எனவே வங்கிகள் MERGER என்பது 1980 களில் நாம் விடுத்த கோரிக்கைதான் என்பதைப் போராடும் ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!
இப்படி ஒரு வங்கி ஊழியரின் குரலில் இருந்து எதையாவது புரிந்து கொள்ள முடிகிறதா? 



சீனாதானாவை அடுத்து கர்நாடக காங்கிரசின் ஊழல் முகமாக அறியப்படும் DK சிவகுமார் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். சிதம்பரம் மாதிரியே கைதுநடவடிக்கையிலிருந்து விலக்குகோரி நீதி மன்றத்தை அணுகியதில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம்!  மேலே வீடியோ 21நிமிடம். 

DK Shivakumar, Congress on being summoned by ED: There’s no illegal activities that I've done. BJP leaders have said it on record, they're going to harass me. Let them enjoy giving me trouble. But I'll participate&cooperate. I am busy till this afternoon, then I will go to Delhi.
Quote Tweet
ANI
@ANI
·
DK Shivakumar, Congress on being summoned by Enforcement Directorate: I've requested Court that it's a simple Income Tax matter. I've already filed ITR. There's no Prevention of Money Laundering(PMLA) Act. Last night, they summoned me to come to Delhi by 1 pm. I'll respect law.
9:18 AM · Aug 30, 2019

தாங்கள் செய்தது எல்லாம் சட்டசம்மதத்துடன் தான் என்று நம்புவதும் தொடர்ந்து சாதிப்பதும் இது பிஜேபியின் பழிவாங்குகிற நடவடிக்கை என்று புலம்புவதும்   ஊழல் புகார், மணி லாண்டரிங் வழக்குகளில் சிக்குகிற காங்கிரஸ் ஆசாமிகள் சமீபகாலத்தில் வாடிக்கையாகச் செய்கிற அரசியல் காமெடி தான்!  இது உப்பைத்தின்றவன், தண்ணி குடிக்கவேண்டிய  நேரம்!

மீண்டும் சந்திப்போம் 
       

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு! அடுத்த கட்ட நகர்வு!

நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று பொதுத் துறை வங்கிகளுக்குள் உத்தேசிக்கப்படும் இணைப்பைப் பற்றி அறிவித்திருக்கிறார். கொஞ்சம் முதிர்ச்சியோடு கூடிய முடிவாகப் பார்க்க முடிவதில் ஒரு முன்னாள் வங்கியாளனாக மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகத்தான் தெரிகிறது. ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒருதெளிவான அணுகுமுறை,  சரியான முன்தயாரிப்பு எதுவும் இல்லாமல் செய்யப்பட்ட வங்கிகள் இணைப்பு எப்படிப் பெரும் தலைவலியாக ஆயின என்பதைப் பணியில் இருந்த நாட்களில் பார்த்திருக்கிறேன். உதாரணமாக நெடுங்காடி வங்கி என்கிற மிகச்சிறிய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கியோடு இணைக்கப் பட்டதில் PNB நீண்டகாலம் அந்த இணைப்பை ஜீரணம் செய்ய முடியாமல் தவித்த கதையைச் சொல்லலாம்! 


இது உத்தேசிக்கப்படுகிற வங்கிகளுடைய இணைப்புக்கான இறுதிவடிவத்தில் எப்படியிருக்கும் என்பதற்கான விளக்கப் படம். பொதுவாக, இணைப்பில் உத்தேசிக்கப்படுகிற நிர்வாக சீர் திருத்தங்கள் மூன்று விளக்கப்படங்களில் முதலாவது 


இது இரண்டாவது 


இது மூன்றாவது 


எந்தெந்த வங்கிகள் இணைப்பு  இது முதல் மூன்று PNB,OBC, Utd Bk  பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த பெரிய வங்கியாக 


அடுத்தது கனரா, சிண்டிகேட் வங்கிகள் இணைப்பு. இந்த இரண்டும் இணைந்தபின் நாட்டின் 4வது பெரிய வங்கியாக 


1980 வாக்கிலேயே சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியோடு இணைக்கப் போவதாக பலத்த வதந்தி இருந்தது. இணைப்பைத் தவிர்க்க சிண்டிகேட் வங்கி நிர்வாகம் தவித்த தவிப்பு  வங்கி ஊழியர்கள் மத்தியில் ரொம்பவுமே பிரசித்தம். 


பொதுத்துறை வங்கிகளை எதற்காகத் தனித்தனிப் பாளையம் ஆக காங்கிரஸ் காலத்தில் வைத்திருந்தார்கள்? விடை என்னவோ சிதம்பர ரகசியம்தான்! (சீனாதானா ஆரம்ப நாட்களில் சம்பந்தப்படவில்லை!) 

கொங்கணி வங்கியான கார்பரேஷன் வங்கியை கனரா, சிண்டிகேட் வங்கிகளோடு இணைக்கவில்லையே, ஏன்? விடை மேலே கடைசி பாயிண்டில் இருக்கிறது. இணைப்புக்குப் பின் நாட்டின் 7 வது பெரிய வங்கியாகுமாம்!

 
பிரதேசங்களை வைத்து மட்டுமே இந்த இணைப்பு எதுவும் உத்தேசிக்கப்படவில்லை என்பதற்கு கீழே இந்தியன் வங்கி, அலஹாபாத் வங்கி இணைப்பே ஒரு உதாரணம்.


காரணம் CBS என்றழைக்கப்படும் கோர் பேங்கிங் மென்பொருள் என்பது கொஞ்சம் கவனித்தால் தெரிந்திருக்கும்.  
    


இதுபோக இன்னும் சிலவங்கிகள் இணைப்பு இல்லாமல் இப்போதிருக்கிற அந்தரத்தில் தொங்குவதான நிலையிலேயே தொடரும் என்பதை நிதியமைச்சர் வெளிப்படையாகச் சொல்ல மறந்துவிட்டார்!

 
மேலே ஒரு ஆறு வங்கிகள் தனித்து விடப் பட்டிருக்கின்றன! கொஞ்சம் அந்த ஆறுவங்கிகளுடைய கதையைத் தனித்  தனியாக விசாரித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒரு புது சித்திரம் கிடைக்கும்.  இந்த இணைப்புக்குப் பிறகு 27 பொதுத்துறைகள் 12 ஆகச் சுருங்கும்.  இது நிதியமைச்சருடைய முழு உரை, அறிவிப்பு, இன்னும் ஒன்றிரண்டு முறை கேட்டு, வேறு அம்சங்கள் விடுபட்டுவிட்டதா என்று செக் செய்து கொள்வதற்காக , இங்கேயும்! 75 நிமிடங்கள் 
    

வங்கிச் சீர்திருத்தங்களில் ஒரு முக்கியமான கட்டம் இது. info graphics எல்லாமே நிதியமைச்சருடைய ட்வீட்டரில் இருந்து, நன்றியுடன் இங்கே பகிரப்பட்டது.  

ஊழியர் சங்கங்களில் இருந்து ஊளைக்குரல்கள் எதையும் இதுவரை நான் கேட்கவில்லை. அப்படி   வரும்போது அடுத்தடுத்த பதிவுகளில் பார்த்துக் கொள்ளலாம்!

மீண்டும் சந்திப்போம்.
    

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! பதில் எங்கே?

ம்மூரில் ஊடகங்கள் பொய் சொல்வதையே முழுநேரப் பிழைப்பாக வைத்திருப்பது அடிக்கடி அம்பலப்பட்டுக் கொண்டே வந்தாலும் அதற்குமேல் ஒன்றுமே நடப்பது இல்லையே! ஏன்? என்று எப்போதாவது யோசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? நேற்று முன்தினம் எழுதிய இந்தப்பதிவில் முதல் வீடியோ உங்களுக்கு   யோசிக்கக் கொஞ்சம் உதவியாக இருக்கும்! கட்டுப்பாடற்ற, எல்லையற்ற சுதந்திரம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று இந்தப்பக்கங்களிலேயே பலமுறை AG Gardiner எழுதிய The Rule of the Road கட்டுரையை மேற்கோள் காட்டி மாதொரு பாகன் புத்தக சர்ச்சையின் போதும், அதற்கு முன்னாலும் எழுதியிருக்கிறேன்.

1 நிமிட வீடியோ 

மும்பை உயர்நீதி நீதிமன்றம் சமீபத்தில் கோரேகான் என்ற இடத்தில் வெடித்த கலவரம் குறித்தவழக்கில் குறிப்பிட்டுச் சொன்னது தோல்ஸ்தோய் எழுதிய போரும் அமைதியும்  நாவல் பற்றி அல்ல! உள்ளூர் ஆசாமி ஒருத்தர் எழுதிய War and Peace in Junglemahal என்ற தடைசெய்யப்பட்ட புத்தகத்தைப் பற்றித்தான்  என்று தெளிவாகச் சொன்ன பிறகும் கூட எந்த ஊடகமாவது பொய்ச் செய்தி பரப்பியதற்கு தவறுக்கு    வருந்துகிறோம் என்று திருத்தம் வெளியிட்டார்களா? பார்த்த நினைவாவது இருக்கிறதா? 


ந்த 32 நிமிட வீடியோ விவாதம் காஷ்மீரில் இருந்து கோரேகான் வரை பொய்ச்செய்திகளில் இந்தியா கேவலப் படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை முன்வைத்து! ஊடகம் தனக்கேற்ற சாயத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் என்பதை நினைவு வைத்துக் கொண்டு விவாதத்தைப் பாருங்கள்!   

மீண்டும் ரங்கராஜ் பாண்டே! வீடியோவில்  தன்னுடைய சிங்கப்பூர் அனுபவத்தைச் சொல்கிற பகுதியை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, உங்களுடைய கருத்தை மனம் திறந்து  பகிர முடியுமா? சுதந்திரம் உட்பட எதுவுமே இலவசமோ கட்டுப்பாடுகள் அற்றதோ இல்லை! 


திருமாவளவனும் கூட, நான் உண்மையைச் சொன்னாலும் ஊடகங்கள் வெளியிடுவதில்லையே என்று குறைப் பட்டுக் கொளகிறார்! இங்கே கிடைத்தது கிடைத்தபடி வெளியிட்டாயிற்று. திருமாவளவன் உண்மைதான் சொன்னாரா, கொஞ்சம் கூட்டிக்குறைத்துச் சொன்னாரா என்று நீங்கள்தான் இந்தச்  செய்தியின், சொல்பவரின், நம்பகத் தன்மை பற்றி முடிவு செய்துகொள்ளவேண்டும்! செய்தியின் வேரைப்பிடித்து, உண்மையைப் புரிந்து கொள்ள வேறெப்படி முயற்சி செய்வதாம்? வீடியோ 13 நிமிடம்.     
    

முன்பெல்லாம் காங்கிரசுக்குள் நடக்கிற வேட்டி கிழிப்பு முதலான விஷயங்களை ஊடகங்கள் பெருந்தன்மையாக வெளியிடாமல் இருந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறதோ? முன்னமிருந்த மறைமுகமான Carrot & Stick இப்போது இல்லை  என்பதாலா? அல்லது நிஜமாகவே திருந்தி வருகிறார்களா? உங்களுடைய ஊகம், பார்வை என்ன?  

  
ந்தச் செய்தி குறித்து நான் ஒன்றும் சொல்வதாயில்லை! நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல! XXXX படிதாண்டாப் பத்தினியுமல்ல என்று கம்பரசம் எழுதிய சி என் அண்ணாதுரை என்பவரை,  அவரை அடியொற்றி அரசியல் செய்பவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்! இவர் நேருவை இந்தவிஷயத்தில் மட்டும் பின்பற்றியிருக்கிறார் என்ற மாதிரி   சொல்கிறார்கள். திருப்பூர் ஜோதிஜி இதற்கென்ன சொல்வாரோ? இதற்குமேல் எழுதினால் எங்கள் Blog ஸ்ரீராம் வந்து ஒட்டுமொத்தப் பதிவையுமே மஞ்சப்பத்திரிகை ரகத்தில் சேர்த்துவிடுவார்!😀😂🙏🙏   

மீண்டும் சந்திப்போம்.  

    
     

திருப்பூர் ஜோதிஜிக்கு சில சுவாரசியமான செய்திகள்!

தேவியர் இல்லம் பதிவர் நண்பர் திருப்பூர் ஜோதிஜி எழுதுவதில் நிறைய ஆர்வம் உள்ளவர். எழுதுகிற எவருக்குமே விரிவாக வாசிக்கிற வழக்கம் இருந்தாக வேண்டுமில்லையா! அவருக்கும் அப்படி ஒரு வாசிப்பு இருக்கிறது. இந்திய அரசியல் விவகாரங்களில் என்னைப்போலவே அவருக்கும் ஒரு ஆழ்ந்த வாசிப்பு இருக்கிறது. என்னைப்போலவே அவரும் நரேந்திர மோடியின் பல அரசியல் நடவடிக்கைகளில் ஆதரவு நிலை எடுத்து, பதிவுகள் எழுதி வாசிக்க வருகிற பலரிடம் வாங்கியும் கட்டிக் கொள்கிறார்! இங்கே பின்னூட்டங்களில் அர்த்தமுள்ள உரையாடலை நடத்த முன்வருகிற ஒருசிலரில்  அவரும் ஒருவர் என்பதால்,இன்றைய பதிவில் அவருக்கும் சுவாரசியமான தகவல்களைச் சொல்கிற சாக்கில் ஒரு சில காணொளிகள், செய்திகள், அவற்றின் மேல் வழக்கம்போல என்னுடைய சிறு விமரிசனக் குறிப்புகளோடு வாசிக்கவரும் எல்லோருக்குமாக!


        
ந்த 12 நிமிட வீடியோவில் காங்கிரஸ் ஆதரவாளரான சேகர் குப்தா, ராகுல் காண்டிக்கு நரேந்திர மோடியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்களாக, முக்கியமாக, எந்த சந்தர்ப்பத்தில் என்ன பேசவேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும் என்று சொல்கிறார்! நேருவாவது அடுத்தவர் சொல்வதைக் காதுக்கொடுத்துக் கேட்பதாக பாவனை செய்தார்! இந்திரா முதற்கொண்டு வாரிசுகளில் எவரும் அந்த பாவனையைக் கூடப் பின்பற்றியதில்லை! நான் என்ன  உளறினாலும் அது கட்டளை அதுவே என் சாசனம் என்பது தான் அவர்கள் சொல்லிக் கொள்கிற நேரு பாரம்பரியம்.அந்த மாதிரி ஆசாமிகளுக்கு இவர் உபதேசம் செய்தால் எடுபடுமா?

  .       
டாக்டர் சுப்ரமணியன்  சுவாமி மீது எந்த நேரத்தில் எப்படி மாறுவாரோ என்று நண்பர் ஜோதிஜிக்கு சந்தேகம்! ஆனால் சுவாமி மாதிரி சிலருடைய தேவை இந்திய அரசியலில் எப்போதுமே  இருந்துவருகிறது என்பது என்னுடைய வாதம். இந்த செய்தியையே எடுத்துக் கொள்ளுங்கள்! பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நிரந்தரத்தடையாக மாற்றலாமா என்று பாகிஸ்தான் யோசிப்பதாக. ஏர் இந்தியாவுக்கு இதனால் 575 கோடி ரூபாய், எரிபொருள் செலவு கூடுதலாக சுமை! அதேபோல வான்வழியைப் பயன்படுத்த தடை விதித்ததனால் பாகிஸ்தானுக்கும் 360 கோடிரூபாய் வருவாய் இழப்பு! வறட்டு இழுப்பு ஆசாமிகளுக்கு எப்படிப் புரிய வைப்பீர்கள்? மேலே வீடியோ 7 நிமிடம்! பாருங்கள்!  



ராச்சி குஜராத்தின் கட்ச் பகுதிக்கு மிக நெருக்கம். இங்கே படத்தில் கராச்சி துறைமுகம் இந்தியாவின் முந்த்ரா துறைமுகத்துக்கு (ஒரு தனியார் துறைமுகம்) மிகப்பக்கத்தில்  என்பதை ஒரு குத்துமதிப்பாகப் புரிந்து கொள்ள உதவியாக 
  
ரேபியக்கடல் பிராந்தியம் நமது கரையில் இருந்து 200 கிமீ   நமது கட்டுப் பாட்டுக்குள் வருவதைப் பயன்படுத்தி கராச்சி துறைமுகத்துக்கு போய்வருகிற வழியை அடைத்து விடலாமே  என்ற யோசனையை முன்வைத்திருக்கிறார் சுவாமி!  ஏற்கெனெவே குற்றுயிரும் குலையுயிருமாகத் தவித்துக் கொண்டிருக்கிற பாகிஸ்தான் பொருளாதாரத்தை சுத்தமாக முடக்கி வைத்து விடுகிற யோசனை இது!             



சீதாராம் யெச்சூரி இன்னமும் பழைய நினைப்பிலேயே இருக்கிறார் போல! உடல்நலம்பாதிக்கப்பட்ட கட்சிக்காரர் ஒருவரை சந்திக்க ஜம்மு காஷ்மீர் போக அனுமதி வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்தார்! உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, அனுமதி எதற்காக வழங்கப் பட்டதோ அதற்குமட்டுமே பயன்படுத்த வேண்டும். போய்வந்த விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அரசியல் செய்யக்கூடாதென்றும் சேர்த்துச் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றத்துக்கெதிராக வலது கம்யூனிஸ்ட் கட்சி D ராஜா கொந்தளித்திருக்கிறார். இங்கே விவாதத்திலும் கொந்தளிக்கிறார்கள்! ராகுல் காண்டி மூக்குடைபட்டு நிற்பதைப் பார்த்தபிறகும் கூட இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதை ஏன் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்? உங்களுக்காவது புரிகிறதா?        

Post Script ஆக First Things First ::  

தினசரி அரசியலைத் தொட்டுப் பதிவுகள் எழுதிக் கொண்டு இருப்பதில் வாசிப்பவருக்கு அலுப்பு வந்துவிடுகிறதே! எழுதுகிற உங்களுக்கு அலுப்பு வராதா? இப்படி என்னை யாரும் கேள்விகேட்கவில்லைதான்! ஆனால் காங்கிரசையே தொடர்ந்து தாளித்துக் கொண்டிருக்கக் கூடாதென்று கமென்ட் கட்டளைகள் வந்ததுண்டு.அந்தமாதிரி பதிவுகளில் அலுப்பு அடைகிறவர்கள் இந்தப்பக்கம் வருவதை நிறுத்திக் கொள்கிறார்கள் அப்படி ஒரு சாய்ஸ் அவர்களுக்கு இருப்பதால்   இந்தக் கேள்விக்கு, குறிப்பிட்டு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.