வெள்ளைத்துரைமாருக்குப் பின்னால் நாங்கள் தான் ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையோடு சோனியா G வாரிசுகள் உளறித் திரிவதை நிறுத்துகிற வரை சோனியாG காங்கிரசுக்கு மீட்சி இல்லை. இவர்கள் ஒரு பொறுப்புள்ள அரசியல்கட்சியாக நடந்துகொள்வார்கள் என்கிற அறிகுறியோ நம்பிக்கையும் கொஞ்சம் கூட இல்லை.
ரேபரேலி தொகுதியில் ஜெயித்தது சோனியாG வால் மட்டுமே என்கிறார் பப்பி. அப்படியானால் அமேதியில் ராகுல் காண்டி தோற்றதற்கு ராகுல் காண்டி மட்டுமே தான் காரணமென்று ஒப்புக் கொள்கிறாராமா? டில்லி பாதுஷாக்களாகத் தங்களை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிற இந்தக்கிறுக்குகள் ஜெயித்தால் அது பாதுஷா கணக்கு தோற்றால் அடிமைகள் கணக்கு என்று நினைத்துக் கொண்டிருப்பது இந்திய அரசியலின் மிகப்பெரிய சோகம்! ஆகப்பெரிய காமெடியும் கூட! கவனித்துக் கேட்க வேண்டிய 17 நிமிட விவாதம்.
*******
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்று ஒரு வழக்குச் சொல் உண்டு. முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உருட்டல் மிரட்டல்களுக்கும் அதே கேவலமான கதிதான் என்று கொல்கத்தாவில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
ஒருதரம் ரெண்டுதரம் மூன்றுதரம் என்றிருந்தால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம்! உருட்டல் மிரட்டல்களையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தால் என்ன மரியாதை கிடைக்குமாம்? டாக்டர்கள் பின்வாங்குவதாக இல்லை. மிரட்டலுக்குப் பதிலாக ராஜினாமாக் கடிதங்கள் என்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மமதைக்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் இழப்பு என்று பார்த்தால் வாக்களித்துவிட்டு தீதி என்னமாச்சும் செய்வார் என்று நம்பிக்காத்திருக்கிற பாமர ஜனங்களுக்குத் தான்! அவர்களும் கொஞ்சம் பொறுத்துப்பார்த்துவிட்டு, தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்! மமதை, ஆத்திரம் எல்லாம் சேர்ந்து மம்தாவின் கண்களை மறைக்கின்றன. சுத்தமாகக் கோட்டைவிட்டு நிராதரவாக நிற்கும் போதுதான் புரியும் போல!
*******
ஆந்திராவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு தெலுகு தேசக் கட்சித் தொண்டர்களுக்கும் ஆளும் YSRCP தொண்டர்களுக்கும் அங்கங்கே மோதல்கள் நடந்து கொண்டே இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.
ஆந்திர அசெம்பிளியில் ஜெகன் மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவைக் கிழிகிழி என்று கிழிக்கிறார். புதிதாக ஏதும் இல்லை. ஜெயித்தவுடன் பேசிய அதே ஸ்க்ரிப்ட் தான். பதில் பேசவிடாமல் நாயுடுவை சபையில் கூச்சல்போட்டு அடக்க முயற்சிக்கிறார்கள். ஆந்திர ஜனங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி பெருத்த ஏமாற்றத்தைத் தரப்போவதற்கான அறிகுறி இப்போதே தெரிகிறது. சந்தேகமிருந்தால் இங்கேயும் பார்க்கலாம்
இந்த வீடியோவில் ஆவேசமாகப் பேசுகிற நபரைப்பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் மூச்சுக்கு மூச்சு அம்பேத்கர் அம்பேத்கர் என்று வாய் கிழியப் பேசுகிறாரே, அந்த அம்பேத்கர் வழித்தோன்றல்களே அம்பேத்கர் இன்றைய காலத்துக்குச் சரிப்பட்டுவரமாட்டார் என்று ஓரம் கட்டிவிட்டுப் புதுவழி தேடியலைய ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.





