Showing posts with label பா.ரஞ்சித். Show all posts
Showing posts with label பா.ரஞ்சித். Show all posts

கிறுக்கர்கள் கையில் அரசியல்! எப்படி மீட்கப் போகிறோம்?

வெள்ளைத்துரைமாருக்குப் பின்னால் நாங்கள் தான் ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையோடு சோனியா G வாரிசுகள் உளறித் திரிவதை நிறுத்துகிற வரை சோனியாG காங்கிரசுக்கு மீட்சி இல்லை. இவர்கள் ஒரு பொறுப்புள்ள அரசியல்கட்சியாக நடந்துகொள்வார்கள் என்கிற அறிகுறியோ நம்பிக்கையும் கொஞ்சம் கூட இல்லை.

   
ரேபரேலி தொகுதியில் ஜெயித்தது சோனியாG வால் மட்டுமே என்கிறார் பப்பி. அப்படியானால் அமேதியில் ராகுல் காண்டி   தோற்றதற்கு ராகுல் காண்டி மட்டுமே தான் காரணமென்று ஒப்புக் கொள்கிறாராமா? டில்லி பாதுஷாக்களாகத் தங்களை இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிற இந்தக்கிறுக்குகள் ஜெயித்தால் அது பாதுஷா கணக்கு தோற்றால் அடிமைகள் கணக்கு என்று  நினைத்துக் கொண்டிருப்பது இந்திய அரசியலின் மிகப்பெரிய சோகம்! ஆகப்பெரிய காமெடியும் கூட!   கவனித்துக் கேட்க வேண்டிய 17 நிமிட விவாதம். 
    
*******
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்று ஒரு வழக்குச் சொல் உண்டு. முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உருட்டல்  மிரட்டல்களுக்கும் அதே கேவலமான கதிதான் என்று கொல்கத்தாவில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.  


ஒருதரம் ரெண்டுதரம் மூன்றுதரம் என்றிருந்தால் கூடப் பொறுத்துக்கொள்ளலாம்! உருட்டல் மிரட்டல்களையே வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தால் என்ன மரியாதை கிடைக்குமாம்? டாக்டர்கள் பின்வாங்குவதாக இல்லை. மிரட்டலுக்குப் பதிலாக ராஜினாமாக் கடிதங்கள் என்று மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மமதைக்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உண்மையில் இழப்பு என்று பார்த்தால் வாக்களித்துவிட்டு தீதி என்னமாச்சும் செய்வார் என்று நம்பிக்காத்திருக்கிற பாமர ஜனங்களுக்குத் தான்! அவர்களும் கொஞ்சம் பொறுத்துப்பார்த்துவிட்டு, தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்!  மமதை, ஆத்திரம் எல்லாம் சேர்ந்து மம்தாவின் கண்களை மறைக்கின்றன. சுத்தமாகக் கோட்டைவிட்டு நிராதரவாக நிற்கும் போதுதான் புரியும் போல!  
*******
ஆந்திராவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு தெலுகு தேசக் கட்சித் தொண்டர்களுக்கும் ஆளும் YSRCP தொண்டர்களுக்கும் அங்கங்கே மோதல்கள் நடந்து கொண்டே இருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன.


ஆந்திர அசெம்பிளியில் ஜெகன் மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவைக் கிழிகிழி என்று கிழிக்கிறார். புதிதாக ஏதும் இல்லை. ஜெயித்தவுடன் பேசிய அதே ஸ்க்ரிப்ட் தான். பதில் பேசவிடாமல் நாயுடுவை சபையில் கூச்சல்போட்டு அடக்க முயற்சிக்கிறார்கள். ஆந்திர ஜனங்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி பெருத்த ஏமாற்றத்தைத் தரப்போவதற்கான அறிகுறி இப்போதே தெரிகிறது. சந்தேகமிருந்தால் இங்கேயும்  பார்க்கலாம்             


இந்த வீடியோவில்  ஆவேசமாகப் பேசுகிற நபரைப்பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் மூச்சுக்கு மூச்சு அம்பேத்கர் அம்பேத்கர் என்று வாய் கிழியப் பேசுகிறாரே, அந்த அம்பேத்கர் வழித்தோன்றல்களே அம்பேத்கர் இன்றைய காலத்துக்குச் சரிப்பட்டுவரமாட்டார் என்று ஓரம் கட்டிவிட்டுப் புதுவழி தேடியலைய ஆரம்பித்து விட்டார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.  


மீண்டும் சந்திப்போம்.


கரண் தாப்பர்! சீதாராம் யெச்சூரி! பா.ரஞ்சித்!

செய்தி , விவாதங்களுக்காக ஆங்கில சேனல்களைத் தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கு கரண் தாப்பர் என்ற பெயர் மிகவும் பரிச்சயமானது. 63 வயதாகும் தாப்பர் டூன் ஸ்கூல் அப்புறம்  கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் படித்த  பிரபலமான பத்திரிகையாளர். 2007 அக்டோபரில்  அஹமதாபாத்துக்குப் போய் நரேந்திர மோடியைப் பேட்டி காணச் சென்றார். பிரிடிஷ் உச்சரிப்புடன் குற்றம் சாட்டுகிற தொனியில் தோண்டித்துருவுகிற கேள்விகளுடன் ஆரம்பித்தவரை, மூன்றே நிமிடங்களுக்குள் அந்தப் பேட்டி மோடியால் முடித்து வைக்கப்பட்டது என்பது சுவாரசியமான பழைய கதை. பாருங்கள்! என்று இன்னொரு வலைப்பக்கங்களில் எழுதியது  இங்கேயும் ஒரு அறிமுகமாக.


மேற்குவங்கத் தேர்தலில்  பலத்த அடி  வாங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் புண்கள் ஆறாதநிலையில் கொடுத்த நேர்காணல் என்று சொல்லிக் கொளகிறார்கள். திரிணாமுல் எம்பி சௌகாதா ராய் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதற்கான சப்பைக்கட்டு கட்டுகிறார். ஆனால் இதைவிட முக்கியமான நேர்காணலாக மே 29 அன்று ஒளிபரப்பான சீதாராம் யெச்சூரியின் மழுப்பலான பதில்கள் இருப்பதை  நண்பர்கள் கவனமாகப் பார்ப்பார்கள், பார்க்க வேணடும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


தேர்தலில் செம அடி வாங்கியபிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சரிந்த செல்வாக்கை மீட்கவும் மாநில ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், தேர்தல் உத்திகள் & மார்க்கெட்டிங் ஆசாமி பிரஷாந்த் கிஷோருடைய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்திருப்பதாக இன்றைய செய்திகள் சொல்கின்றன. West Bengal Chief Minister Mamata Banerjee, who is still smarting from losing ground to the BJP in last month's national election, today met with poll whiz kid Prashant Kishor, whose latest success is Jagan Mohan Reddy's victory in Andhra Pradesh. After a reported two-hour meeting in Kolkata, Mamata Banerjee has signed up for Prashant Kishor's election-winning package. Her Trinamool Congress has nosedived from 34 to 22 seats in 42-seat Bengal in the parliamentary election. The BJP, which had two, shot up to 18 seats, establishing its growing base in the state என்கிறது என்டிடிவி செய்திகள்.  

Left emerges as No. 1 among biggest losers in this election

ஆனால் மேற்குவங்கத்தில் சுத்தமாகத் துடைத்தெறியப் பட்டதற்கோ கேரளாவில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்ததற்கோ மார்க்சிஸ்டுகள் உண்மையான சுயபரிசோதனை செய்துகொள்ளத் தயாராக இல்லை என்பது ஒருபுறம்! மார்க்சிஸ்டுகளை விட மிக மோசமான சீரழிவில் இருக்கும் வலது கம்யூனிஸ்டுகள் CPI, சந்தடிசாக்கில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைத்துவிடலாமென்கிற அரதப்பழசான யோசனையை மறுபடியும் முன்வைத்திருப்பது மறுபுறமுமாக இடதுசாரிகள் சாரமிழந்துபோன இயக்கம்தான் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இங்கே தமிழகத்தில் மார்க்சிஸ்டு அருணன்களும்  சரி, CPI யின் தா பாண்டியன் போன்ற தலைவர்களும் சரி மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்று பேச ஆரம்பித்திருப்பது குழப்பத்தின்        உச்சகட்டம். மார்க்சீயத்தை தமிழகத்துக்கேற்றமாதிரி உருவகம் செய்ய முயன்ற மணலி கந்தசாமி. SA டாங்கே வழியில்போய், பிறகு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி  என்று ஆரம்பித்த எம் கல்யாண சுந்தரம் போன்றவர்களின் கதை கண்முன்னே நிழலாடுகிறது.  


  • நீட் தேர்வு கடினமானது இல்லை, 11,12ஆம் வகுப்பு பாடங்களை படித்தாலே தேர்வில் வெற்றி பெறலாம் நீட் தேர்வில் மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த கார்வண்ண பிரபு கரூரில் பேட்டி.. திரு அவர்களே கேட்டுக்கோங்க. வாழ்த்துக்கள் டாக்டர்
    💐
    #NEETResult2019 #NEET
    1:33 PM · Jun 6, 2019

  • Will u think about suicide when u fail a movie? Or u will try to do next movie better? Or will u protest to ban movies?
    Quote Tweet
    ·
    நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு #நீட் என்ற கொள்கையை சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதை தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள்!
    12:00 PM · Jun 6, 2019

    நீட் தேர்வின் மீதான பழைய சந்தேகங்கள், புரளிகள் எல்லாம் பொய்யென்று ஆகி,  மாணவர்களே ஏற்றுக் கொண்ட பிறகும் கூட, ஒப்பாரிவைக்கும் நபர்களுக்கு சரியான கேள்வியைத்தான் நடிகை/ நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் கேட்டிருக்கிறார். ஆனால் சொரணை இருக்கிறவர்களுக்குத்தானே உறைக்குமாம்!

    ஈவெரா 1938 இல் ஹிந்தியை எதிர்த்தார் என்று சொல்பவர்கள் 1965 இல் அதே ஈவெரா ஹிந்தியை எதிர்த்தாரா என்று சொல்ல மாட்டார்கள். அதே போல அம்பேத்கரை வழிகாட்டியாகச் சொல்கிற திருமாவோ பா. ரஞ்சித்தோ ஹிந்தியைக் குறித்து  அம்பேத்கர் என்ன சொன்னார் என்பதை சௌகரியமாக மறைத்து, மறந்து  விடுவார்கள்!



    மீண்டும் சந்திப்போம்.
      

    The R Document புதினமும்! பா.ரஞ்சித்! தொடரும் விவாதங்களும்

    இன்று இந்த வீடியோ விவாதத்தைப் பார்த்தபோது இந்திய அரசியலைப் பார்த்து அமெரிக்கர்களும் கெட்டுப் போனார்களோ என்றொரு சந்தேகம் வருகிறது! 


    இங்கே ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம் பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற விதமாகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள்!

    இந்திரா காந்தி மதம்பிடித்த யானைமாதிரி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அந்த நாட்களில் ஜிங்குச்சா போட்டுக் கொண்டிருந்தது வலதுகம்யூனிஸ்ட் என்று அடையாள படுத்தப்படுகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இந்திராவை எதிர்த்தவர்கள் மீது கொஞ்சம் கூட அடிப்படையில்லாத, CIA கைக்கூலி என்று முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள்  
      
    இந்தியாவில் இந்திரா கொண்டுவந்த எமெர்ஜென்சி களேபரங்களைப் பார்த்து   The R Document  என்று இர்விங் வாலஸ் எழுதியபுதினம் மாதிரி, இங்கே CIA கைக்கூலி என்று கூவினதுபோல அங்கேயும்!  அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கே ரஷ்யாவின்வேலையாள் என்று விசாரணை நடத்தப் பட்டதாக செய்திகளை பார்க்கும்போது ஆரம்பரிகளில் சொல்லியிருந்தது சரிதானே?!

    *******
    ஞாயிறு பகிர்வில் இந்தச் செய்தி டிஸ்கியாக சேர்க்கப் பட்டது ஆனால் நேற்றைக்கு துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் இல.கணேசன்சொன்னது போல #பப்பு இமேஜ் ராவுல் பாபா மீது அழுந்தப் படிந்திருப்பதை மாற்றுவதாக இல்லையே என்ன செய்ய?    
    +Md. Sultan Ad. Gulam தினகரனில் வெளிவந்த மறுப்புச் செய்தியை அனுப்பியிருக்கிறார்! நன்றி! இதில் சொல்லப் பட்டிருக்கிறபடி செய்தி பொய்யானதாக இருந்தால் இங்கேயும் என் வலைப் பதிவிலும் எழுதியது தவறாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் தான் என்று ஒப்புக்கொள்வது தான் நியாயமானதாக இருக்கும். அதன்படியே இந்தப்பகிர்வு.

    ஆனால் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன. சன் குடும்பத்தின் தினகரன் முதலில் வெளியிட்டிருந்த செய்தியின் கடைசி வரியில் யாரோ ஒரு பிஜேபி ஆதரவாளர் சொல்லிக் கொடுத்து பேசியதாக எழுதியிருந்தது ஏன்?

    காங்கிரசோடு தான் கூட்டணி என்று திமுக தலைமை உறுதியாக அறிவித்தபிறகும் தினகரனில் முதலில் வெளிவந்த செய்தி எதற்காக வெளியிடப்பட்டது? தனி ஆவர்த்தனமா? தங்கள் படத்தை விமரிசனம் செய்த ஒரு யூட்யூப் பதிவை காப்பிரைட் பிரச்சினை கிளப்பி முடக்கியவர்கள், , இந்தச் செய்தியில் கேள்வி கேட்டது பொய் செய்தி என்கிறார்களே தவிர தாங்கள் முன்னர் வெளியிட்டது தவறானது என்று வருத்தம் தெரிவிக்கவில்லையே!
    ஏன்?
    Photo
    BLUE SATTAI MARAN-க்கு ஆப்பு வைத்த SUN PICTURES ? Petta கணாமல் போன அதிரச்சி !

    இப்படி எழுதியபிறகு இன்னொரு செய்தியும் வருகிறது. Office of Congress overseas secretary Aarathi Krishnan confirmed to MyNation that the two questions were indeed asked. Krishnan confirmed on phone that she was present at Gandhi’s Dubai events. Her secretary then confirmed that Rahul's answer to the first question was that he treats all religions equally. "And he handled the girl’s second query with a counter question by asking her what would she do if she were the Prime Minister," he said, responding from Krishnan’s phone. இப்படி 
    Vasudevan Tirumurti's profile photo
    செய்தியை முதலில் போட்டது மைநேஷன்டாட் காம்.
    இன்றைக்கு அப்டேட் செய்து இருக்கிறார்கள். we stand by our news னு டிவிட்டரில் ...
    Office of Congress overseas secretary Aarathi Krishnan confirmed to MyNation that the two questions were indeed asked. Krishnan confirmed on phone that she was present at Gandhi’s Dubai events. Her secretary then confirmed that Rahul's answer to the first question was that he treats all religions equally. "And he handled the girl’s second query with a counter question by asking her what would she do if she were the Prime Minister," he said, responding from Krishnan’s phone.
    சுட்டி: https://www.mynation.com/news/rahul-gandhi-dumbfounded-dubai-little-girl-questions-pl8fjb

    பிபிசிக்குத் தகவல் சொன்ன பிலால் அலியார் அசப்பில் பதிவர் சென்ஷி சாயலில்! ஆனால் முகநூல் பகிர்வுகளில் முகஜாடை வேறுபடுகிறது. இந்தச் செய்தியை மறுக்கவேண்டும் என்று ஒரு கூட்டமாகவே வேலை செய்திருப்பதையும் பின்னூட்டங்கள், அடுத்தடுத்த பகிர்வுகளிலும் பார்க்க முடிகிறது.

    இங்கே இயக்குனர் பா.ரஞ்சித் அவர் விரும்புகிற படியே ஒரு தொடர் உரையாடலுக்கான மையமாகவும் தொடக்கப்புள்ளியாகவும் மாறிவருகிறார்! அவருடைய அம்பேத்கர் முன்னெடுப்பும் தலித்துகள் தனித்தே களம் காண வேண்டும் என்று சொல்வதும் திராவிடங்களுக்குப் பிடித்தமானதாக இல்லை.


    கார்த்திக் சுப்புராஜிடம் தோற்றுவிட்டாரா பா.ரஞ்சித்?

    என்றதலைப்பே கொஞ்சம் உசுப்பேற்றிவிடுகிற மாதிரித் தான்! ஆனால் இதற்கு பதில் சொல்ல வேண்டியது ரஞ்சித்தே தவிர, ஆளூர் ஷாநவாஸ் அல்ல!  

    என்ன அநியாயம் இது என்று கனிமொழி பொங்கிய பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜனும் தொடரும் விவாதங்களில் பிசி!


    கடைசியில் கனிமொழி பொங்கியது  மார்க்சிஸ்டுகளுக்கு இலவச விளம்பரமாகிவிட்டதோ?