Showing posts with label புள்ளிராசா வங்கி. Show all posts
Showing posts with label புள்ளிராசா வங்கி. Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #வங்கித்துறைசீரழிவுகள் லட்சுமி விலாஸ் வங்கி

இன்றைக்குத் தற்செயலாக ட்வீட்டரில் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது நியூஸ் 18 சேனலில் இருந்து விரட்டப்பட்டு சன் செய்திகளுக்கு ஓடிப்போன மு.குணசேகரனுடைய மறுகீச்சொன்றைப் பார்த்தேன். குணசேகரனுடைய  சாய்ஸ் என்றாலே திரிக்கப்பட்ட அல்லது வடிகட்டின பொய்யாகத்தானிருக்கும் என்பது தமிழக ஊடகங்கள் எப்படியிருக்கின்றன என்பதற்கான ஒரு சோற்றுப்பதம்! அவர் அரண்செய் என்கிற யூட்யூப் தளம்  ட்வீட் செய்ததை ரீட்வீட் செய்திருக்கிறார். புரிந்து கொண்டு தான் செய்தாரா என்பது ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித்தான்!  

சமீபத்தில் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கி மீது 30 நாட்கள் மாரடோரியம் அறிவித்த கையோடு DBS Bank Indiaவுடன் இணைக்கப்படும் என்று அறிவித்ததை, வங்கிகளைப்பற்றி கொஞ்சமும் அறியாத ஒருவர், அவருக்கு சற்றும் குறையாத  முன்னாள் வங்கி மேனேஜர் ஒருவருடன் உரையாடுவதை மேலே 20 நிமிட வீடியோவில் பார்க்கலாம் ஏதேனும் புரிகிறதா?  இந்த முன்னாள் வங்கி மேனேஜர் நிறைய விஷயங்களைத் தப்பும் தவறுமாகவே, குணசேகரன்கள் சந்தோஷப் படுகிற அளவுக்கு, அள்ளித் தெளிக்கிறார். உதாரணமாக LVB கரூரில் ஆரம்பிக்கப்பட்டது 1926 இல், ஆனால் sophomore சோமசுந்தரம் 1958 இல் தொடங்கப்பட்டது என்கிறார். உண்மை என்னவென்றால் ஒரு ஷெட்யூல்டு வங்கியாக ரிசர்வ் வங்கியின் 2வது ஷெட்யூலில் LVB இடம்பெற்றது 1958 இல். இப்படி எல்லாவிஷயங்களையும் மிக மேம்போக்காகப் பார்த்துவிட்டு உளறிக் கொண்டிருக்கும் இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை, இதையும் ஒரு செய்தியாக ரீட்வீட் செய்கிற குணசேகரன்களையும் என்னவென்று சொல்வது?


இதையே வங்கித்துறையைப் பற்றித் தெரிந்தவர்கள் கூடி விவாதித்தால் எப்படியிருக்கும் என்பதைக் கேட்க வேண்டுமா? மேலே ஒரு 40 நிமிட வீடியோ. தொடர்ந்து மூன்று வருடங்களாக தலா 800 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்து வருகிற ஒரு நிறுவனம், அடுத்து 2020 செப்டெம்பர் அரையாண்டில் 397 கோடி  தொடர் நஷ்டம் அடைந்திருக்கிறது.அதே போல 4000 கோடி ரூபாய் அளவுக்கு மீட்க முடியாத வராக்கடன், மூலதனத் தேவையை எதிர் கொள்ளமுடியாத நிலையும் இருந்தால் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டது என்றுதான் அர்த்தம். திவாலாகிப்போன நிலையில் பங்குகளின் மதிப்பு ஜீரோவாகிவிடும் என்பது கம்பனிச் சட்டம் சொல்கிற மிக அடிப்படையான விஷயம். LVBயின் பங்குகள் எவர் எவரிடம் இருக்கின்றன?

As of September-end, 93.2% of Lakshmi Vilas Bank’s shares were held by public shareholders. The promoters own only 6.8% stake. Among public shareholders, foreign portfolio investors own 8.65%, insurance companies own 6.40% (LIC: 1.62%), retail shareholders own 23.98% and HNI shareholding is at 22.75%. Other entities hold 30.82%, including Indiabulls Housing Finance Ltd (4.99%), Srei Infrastructure Finance Ltd. (3.34%) and Prolific Finvest Pvt. Ltd. (3.36%) இப்படியிருக்க, எந்தத் தரவுகளின் மீது சோமசுந்தரம் பொதுஜனங்களுடைய பணமெல்லாம் போச்சு என்கிறார்? சம்பந்தமே இல்லாமல் 1.7 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப சொல்கிறாரே,  அது என்ன? அதை ஆ.ராசாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? கொஞ்சம் உறைக்கிற மாதிரி, விஷயத்தைப் புரிந்து கொள்ள இங்கே  

What had gone wrong?

This is perhaps a story that will be written after its demise. For example, there were loans given to the ex-promoters of Ranbaxy, which they thought were secured by deposits but those deposits were not legally collateralized. And employees were arrested for this issue. There were many other allegations, soaring NPAs and the bank lost nearly all its core capital. Luckily, no depositor has lost money in it. இது அதிலிருந்து ஒரு சிறு பகுதி. 

லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட்டர்கள் முழுதாய்க் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். டெபாசிட் பணம் 20300 கோடி ரூபாய்களில்  ஒரு சல்லிக்காசு சேதாரமில்லாமல் ரிசர்வ் வங்கி காப்பாற்றித் தந்திருக்கிறது. அதை மறந்து விட்டுப் பேசுவது குணசேகரன்கள் மாதிரித் தமிழக ஊடகங்களின், திராவிடங்களின் அபத்தம் மட்டுமல்ல, வடிகட்டின அயோக்கியத்தனமும் கூட.   

வங்கிச் சீர்திருத்தங்கள் இப்போது இந்தத் திசையில் போய்க் கொண்டிருக்கின்றன? இங்கே செய்தியாக 

வெள்ளிக்கிழமை கேள்விகள்! இந்திய அரசியல்!

சேகர் குப்தா மாதிரிக் காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவியே பழக்கப்பட்ட சீனியர் பத்திரிகையாளர்கள் கூட சமீப காலங்களில் உள்நாட்டு அரசியல் செய்திகளைப் பேசுவதற்கு தயங்குகிறார்கள். ஏனாம்? போட்டியே இல்லாமல் பிஜேபி அரசியல் செய்துவருவதை பற்றிப் பேச என்ன இருக்கிறது? இது அவர்கள் இன்னமும் ஆதரித்து வருகிற காங்கிரஸ் கட்சியின் நிலைமை வெளியே சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பதன் அடையாளமா? ஒரு குடும்பம், அதிலும் ஒரே நபரை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலையில்   இருக்கிற காங்கிரசின் பரிதாபத்துக்கு இன்னும் எத்தனைநாளைக்குத் தான் மோடி, பிஜேபி, இந்துத்வா என்றே சாக்குபோக்குச் சொல்லிக் கொண்டு காலந்தள்ள  முடியும்? அதற்குப் பேசாமலேயே இருந்து விடுவது சௌகரியம் இல்லையா?     

 
     
இந்த 19 நிமிட வீடியோவில் கூட சேகர் குப்தா இந்திய அரசியலில் நரேந்திர மோடி, பிஜேபியைத் தாண்டிய பார்வை என்று சொல்லிக் கொண்டாலும் நரேந்திர மோடி, இரு பெரும் சக்திகளையும் தாண்டி தாக்குப் பிடித்து வரும் சில மாநிலக் கட்சிகளைப் பற்றித்தான் பேசுகிறார். கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள்! 2024 நாடாளுமன்றத்தேர்தல்களிலும் கூட மோடியும் பிஜேபியும் தான் இப்போதிருப்பதைவிட வளர்ந்து மிகப்பெரும் சக்தியாக இருப்பார்கள் என்கிற தயக்கத்தில் சேகர் குப்தா தன்னுடைய ஊகம், ஆராய்ச்சியாக சில விஷயங்களைப் பேசுகிறார், ஆனால் உறுதியாக எதையாவது உருப்படியாகச் சொல்ல முடிந்ததா? நீங்கள்தான் பார்த்துச்  சொல்ல வேண்டும்!


பிஜேபி முதலில் காந்தி காட்டிய உண்மைவழியில் நடக்கட்டும் அதன்பின் மகாத்மா காந்தி குறித்துப்பேசட்டும் என்று பப்பி பிரியங்கா வாதரா விமரிசித்திருப்பது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழ் கருத்துக் கேட்டிருக்கிறது! ஓரினினல் காந்திக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் தங்கள் பெயருடன் காந்தி பெயரை ஒட்டுப்போட்டு அலைந்து கொண்டு இருக்கிற இந்தக்கூட்டம் எப்போது அதை நிறுத்திக் கொள்ளப் போகிறதாம்? #டூப்ளிகேட்காந்தி களுக்கு இப்படிச் சொல்ல என்ன உரிமை இருக்கிறது என்று கொஞ்சம்  கேட்க மாட்டீர்களோ?

அதே இந்து தமிழ்திசை வணிகவீதியில் வங்கித்துறையின் பிடியில் பொருளாதாரம் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார் ஒரு ஆடிட்டர் ஜி கார்த்திகேயன்! தலைகீழாகப் பார்த்து தவறாகவே எந்த ஒரு விஷயத்தையும் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள உதவுகிற ஒரு வினோதமான லாஜிக்!

மீண்டும் சந்திப்போம்.  

  

மீண்டும் BSNL! மீண்டு வருமா?

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான BSNL குறித்து சந்தோஷமான செய்தியொன்றை இன்று காலையில் பார்த்தேன். டெலிகாம் நிறுவனங்களுக்குள் விலை குறித்தான போட்டியில் வேகமாக ஜியோ முந்த, இதர நிறுவனங்கள் லாபத்தில் சரிவைச் சந்தித்தன என்றால் பொதுத்துறை நிறுவனமான BSNL, தொழிலின் அஸ்திவாரமாகிய கஸ்டமர்கள் எண்ணிக்கையிலேயே பெரும் சரிவைச் சந்தித்தது. தலைமையிலிருந்து அடிமட்ட ஊழியர் வரை இருந்த lethargic attitude இதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.


  

BSNL’s broadband and FTTH plans have been making all the buzz in the market lately thanks to the data, speeds and other benefits which they offer என்று டெலிகாம்டாக் தளத்தில் ஆர்பிட் ஷர்மா சொல்கிறார். பிப்ரவரி மாதத்தில் மட்டும் 9 லட்சம் வாடிக்கையாளர்களை BSNL நிறுவனம் சேர்க்க முடிந்திருக்கிறது. முக்கியமான காரணமாக அதிகரிக்கப்பட்ட இணையவேகம், அதிக dataவோடு கூடுதல் ஆதாயங்களும் இருப்பதுதான் என்று சொல்கிறார்கள். கடந்த நாட்களில் BSNL ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடப் பணம் இல்லை, இழுத்து மூடப்போகிறார்கள் என்றசெய்திகள் தான் பூதாகாரமாக ஊதிப் பெரிதாக்கப் பட்டுவந்த நிலையில்,  இந்தச் செய்தி கொஞ்சம் ஆறுதலாகக் கூட இருக்கலாம். ஆனால் பொதுத்துறையில் ஒரு புள்ளிராசா வங்கியின் அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் போது, BSNL ஒரு நிறுவனமாக எப்படித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப்போகிறது, இந்த நல்ல செய்தி one time wonder என்றாகிவிடாமல் எப்படிக்  காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்கிற சந்தேகமும் கேள்வியாக   எழுகிறது. 

புள்ளிராசா வங்கிக்கு சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராக ஒருவர் வந்தார். அதிக பிசினஸ் வேண்டும் என்பதற்காக வட்டிக்குறைப்பு, சர்வீஸ் கட்டணங்கள் குறைப்பு என்று அறிவித்துப் பார்த்தார். கஸ்டமர் எவரும் அந்த அறிவிப்பை சட்டை செய்யவில்லை. கூடுதல் பிசினெஸ், அதிக வருமானம் என்று அந்த நிர்வாகி கண்ட கனவு வெறும் கனவாக மட்டுமே இருந்ததில் வெறுப்போடு house magazine இல் தன்னுடைய கசப்பை CMD              இடமிருந்து ஒரு கடிதம் பகுதியில் மிகவும் வெளிப்படையாகவே எழுதினார். "நம்முடைய வங்கியில் இண்டஸ்ட்ரியிலேயே வட்டி குறைவு, கட்டணங்கள் குறைவு, ஆனாலும் புதியவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  கூடவில்லை, பிஸினஸும் கூடவில்லை, இதற்கு என்ன காரணமென்றும் புரியவில்லை"  

வேறுபெரியவங்கியிலிருந்து இறக்குமதியான அந்த CMD மேதாவிக்கு புள்ளிராசா வங்கியின் work culture எப்படிப் பட்டது, கூட இருந்த ஜெனெரல் மேனேஜர்கள்  உள்ளிட்ட நிர்வாகிகளுடைய நிர்வாக லட்சணம் எப்படிப்பட்டது என்பது கடைசிவரை புரியாமலேயே பதவிக்காலத்தை  ஓட்டினார் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமும் உண்டா?

நல்லதை நினைக்கவேண்டியதுதான்! நல்லதே நினைத்து நரகத்துக்கும் கூடப்போகலாம் என்று தயிர் வடையை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டே சொல்கிற தோழர் வரதராஜன் நினைவுக்கு வந்து எச்சரிக்கைமணி அடிக்கிறாரே! என்ன செய்ய?  

         தொடர்புடைய பதிவு ஒன்று 


கேள்விகளைக் கேள்வி கேட்பது!ஏன்?எப்படி?






ஒரு திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் தொடர்ந்து கேள்விகள் கேட்கிற மாதிரி ஒரு காட்சி அதற்கு  நடிகவேள் எம் ஆர் ராதா, தன்னுடைய கரகரத்த குரலில் கேள்வி கேக்குறான்...கேள்விப்பய மவனே என்று பதில் சொல்கிற வசனம் அந்த நாட்களில் கொஞ்சம் பிரபலம். ஆனால்  வெறும் காமெடியாக மட்டுமே பார்க்கப்பட்டது. இங்கே  எத்தனை பேருக்கு நினைவிருக்கப் போகிறது என்பது தெரியவில்லை ஆனால் நம்மில் பெரும் பாலோனோருக்குக் கேள்விகளே சுத்தமாகப் பிடிக்காது என்பது தான் உண்மை! 

ஒரு நிலையில் கேள்வி கேட்பவரையே பிடிக்காது என்று கூட ஆகி விடுவதுண்டு!

அப்புறம் எப்படிக் கேள்விகளைக் கேள்வி கேட்பது?

பொதுத்துறையில் ஒரு புள்ளி ராசா வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் ஸ்டாஃப் மீட்டிங் என்ற ஒரு சாங்கியம் மாதம் ஒருமுறையாவது நடத்தப்படவேண்டும் என்பது ஒரு விதி  

மாதம் ஒரு முறை நடந்ததாக ஏதோ ஒரு தேதியில் நடந்ததாக ஒரு ஸ்டேட் மெண்டில் வட்டார அலுவலகத்துக்கு அனுப்புவதில் ஒரு குறைச்சலுமில்லை! தப்பித்தவறி சிலசமயங்களில் ஸ்டாஃப் மீட்டிங் நடந்துவிடுவதுமுண்டு. கிளை மேலாளர் ஏதோ   கேட்க வேண்டுமே என்பதற்காக ஒரு டாபிக்-உதாரணமாக பிசினஸ் போதவில்லை அது இது என்று வட்டார அலுவலகத்தில் கேட்ட கேள்வியை பணியாற்றுகிறவர்களுடைய  கருத்துக்களுக்காக முன்வைப்பார் முன்வைக்கும் விதமே கருத்துக்களைக் கேட்பதற்காக அல்ல, இது ஒரு சாங்கியம் தான் என்ற ர்தியில் இருக்கும் அங்கே நடக்கும் கலந்துரையாடல் எப்படிப் போகும் என்ன ஆகும் என்பதை ஒரு சிறுகுழந்தை கூட ஊகித்துவிடும் என்பதால் அதிக விவரணைகள் தேவையில்லை.

முந்தின பதிவில் சேத் கோடின், கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று தலைப்பிட்டு சொல்லியிருந்த ஒரு இரண்டு வரிப்பதிவைப் பார்த்திருந்தோம் இல்லைனா?

The best creative solutions don't come from finding good answers to the questions that are presented.

They come from inventing new questions.

முதலில் கேள்விகள் எப்படி, எந்த மாதிரியான சூழலில் எழுகின்றன?



ஆர்வம் பயம்,பிரச்சினை என்று கேள்விகள் பெரிதாக எழுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உயிரினங்களின் மிக அடிப் படையான இயல்பே கேள்விகளைக் கேட்டு விடைகளைத் தேடுவதாகத்தான் இருக்கிறது.ஆனால் இந்தமாதிரிக் கேள்வி எழுப்பி விடைகளைத் தேடி அலைகிற நிகழ்வு ஒரே மாதிரி, ஒரே நேரத்தில் எல்லோரிடத்திலும் நிகழ்வதில்லை.

இதில் ஒரு தெளிவிருந்தாலேயே, கேள்விகளுக்கான விடையைக் கண்டு கொள்வது மிக எளிது. A problem (question) well stated, is a problem half-solved தெளிவாக வரையறுக்கப்படுகிற கேள்விக்கான பாதிப் பதில் அப்படிக் கேட்கப் படும் கேள்வியிலேயே இருக்கிறது என்று சொல்வது இதனால் தான்! சேத் கோடின் சொல்வதில் இர்ண்டாவது வரியைப் பார்ப்போம் (தீர்வுகள், கேள்விக்ளுக்கான சரியான பதிலைக் கண்டு சொல்வதில் இல்லை) அவை புதிதாகக் கேள்விகளை எழுப்புவதில்(கண்டுபிடிப்பதில்) இருந்து வருகின்றன என்று சொல்கிறாரே அது முழுக்க முழுக்க சரிதானா?

மேம்போக்காகப் பார்க்கையில் சரிதான் என்று உடன்பட்டாலும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கையில், கேள்விகளைப் புதிதாகக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல், ஒரு கேள்வியே அதைத் தொட்டு இன்னும் பல கேள்விகளுக்கு வித்தாக இருக்கிறது, மேலும் கேள்விகளுக்கு  இடம் கொடுக்கிறது என்று தான் படுகிறது ஒரு குளத்தில் கல்லை விட்டெரிகையில் அது தொடர்ந்து அதிர்வு அலைகளை உருவாக்குகிற மாதிரியே!  

சேத் கோடின் இந்தப் பதிவை வெளியிட்டிருந்தது டிசம்பர் 22. இதற்கும் மூன்று வாரங்களுக்கு முன்னமேயே வேறொருcontext இல் டாம் ஃபாஸ்டர் எழுதிய பதிவையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்
“So, to clarify, I don’t bring value by telling you what to do, but I bring value by asking questions?”

“You’re telling me,” Jeanine started slowly, “that I don’t bring value to my team by telling them what to do, but that, as a manager, I bring value by asking questions.”

கேள்விகள் கேட்பது தெளிவுபடுத்திக்கொள்வதற்காக மட்டுமே இல்லை! கேள்விக்குப் பதில் என்பது அத்துடன் திருப்தியடைந்து விடுகிற நிலை.. அப்படி ஆகுமேயானால், அதற்குப் பிறகு எதுவுமே வளர்ச்சி தேய்மானம் என்று ஒன்றுமே இருக்காது. 



கேள்விகளைக் கேள்வி கேட்பது என்பது, இன்னும் விரிந்து விரிந்து,புதிய வளர்ச்சி,புதிய இலக்குகளைத் தேடுவது, எட்டிப் பிடிப்பது! தொட்டுத்தொடர்ந்து வளர்ந்து உயர்கிற நிலை!

சரிதானா?கொஞ்சம் யோசித்து உங்களுக்கு எப்படிப் படுகிறது என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! தெரிந்து கொள்ள, தொடர்ந்து பேசக் காத்திருக்கிறேன்!

இன்றைக்குத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.........!



தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறி, இருபத்து நான்கு மணி நேரமும் சினிமா அல்லது சினிமாக்காரர்களை ஒற்றியே ஜனங்களை மூளைச்சலவை செய்வதற்கு முன்னமேயே, செய்தித்தாட்கள், தங்களுடைய நல்ல இலக்கணங்களை சுத்தமாகவே மறந்து விட்டன.அதில், முக்கியமான ஒன்று நாளிதழில் வெளிவரும் தலையங்கம்!

செய்திகளைப் படிப்பதோடு, வாசகருடைய கவனத்தை முக்கியமான பிரச்சினைகளில் ஈர்ப்பதற்கும், நடப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதென்ன என்ற சிந்தனையைத் தூண்டுவதற்கும் இந்தத்  தலையங்கங்கள் மிகவும் முக்கியமாகப் பயன் பட்டன.

1960 களில் தினத்தந்தி சகாப்தம் கொஞ்சம் உச்சத்துக்குப் போன போது, அக்கப்போர்களில் பிரதான கவனம் இருந்ததே தவிர உருப்படியான சிந்தனையைத் தூண்டுகிற விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தமிழ் நாளிதழ்களில் தலையங்கம் எழுதுவதே குறைந்து போனது! ஒன்றிரண்டு வந்தாலும் அது ஏதோ ஒரு அரசியல் சார்பு நிலை எடுத்துக் கொண்டு, சப்பைக் கட்டு கட்டுகிற மாதிரி இருந்தனவே ஒழிய, குடிமைப்பண்பு (citizenship) வளர்வதற்கு எந்தவிதத்திலும் உதவவில்லை! இன்றைய தினமலர் உள்பட, பெரும்பாலான பத்திரிகைகள், அப்படித்தான் வாலறுந்த நரிகளாக இருக்கின்றன.

அந்தவிதத்தில், ஒரு சமூகப்பொறுப்புடன்,நடப்பு விஷயங்களைத் தெளிவாக ஆராய்ந்து தலையங்கம் எழுதுகிற ஒரே நாளிதழ் தமிழில் தினமணி தான்! சர்குலேஷன் விழுந்து போனாலும் கூட, தன்னுடைய வீரியத்தைக் குறைத்துக் கொள்ளாத நாளிதழ் என்று தினமணியைப்  பார்க்க முடிகிறது. பதிவுகளைப் படிக்க வருகிறவர்கள் கொஞ்சம் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் பலமுறை தினமணி நாளிதழின் தலையங்கங்கள், செய்திக் கட்டுரைகளை இந்தப் பக்கங்களில் பார்த்திருப்பீர்கள்!

இன்றைய தினமணி தலையங்கம், உங்கள் சிந்தனைக்காக....!




ரெப்போ விகிதத்தை நமது ரிசர்வ் வங்கி இப்போது 13-வது முறையாகக் கூட்டியிருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு கடந்த 12 முறை அதிகரிப்பாலும் கட்டுக்குள் கொண்டுவர முடியாத விலைவாசி 13-வது முறையாக ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கட்டுக்குள் வந்து விடும் என்கிற நம்பிக்கையா இல்லை கஜினி முகம்மது, ராபர்ட் ப்ரூஸ் பாணியில் மீண்டும் மீண்டும் முயற்சித்தால் பயனளித்து விடாதா என்கிற நப்பாசையா என்று தெரியவில்லை.

விலைவாசி ஜுரவேகத்தில் ஏறிக்கொண்டிருப்பதை ரிசர்வ் வங்கியும் சரி, மத்திய நிதி அமைச்சகமும் சரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை. அதற்காக, பயனளிக்காத முடிவுகளை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பது அசட்டுத்தனம் என்பதைச் சுட்டிக்காட்டாமலும் இருக்க முடியவில்லை.

சமீபகாலமாக, சிறுசேமிப்பில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது. வங்கி டெபாசிட்டுகளில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஆர்வத்தை சிறு சேமிப்பில் காட்டுவதில்லை என்பது தெரிகிறது. சிறு சேமிப்பு தாரர்களுக்கு அதிக வட்டி விகிதம் தரும் அதேவேளையில், அவர்களுக்கு நியாயமாகத் தரப்பட வேண்டிய சேவைகள் அனைத்துக்குமே வங்கிகள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கி விட்டன. வங்கிகளில் சிறு சேமிப்பு வைத்துக் கொள்வது போன்று எரிச்சலூட்டும் செயல் வேறு எதுவுமே இருக்க முடியாது என்பதுதான் சாமானியனின் எதார்த்த அனுபவம். இந்த நிலையில் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தைப் பெயருக்கு உயர்த்துவதால் எதுவும் பெரிதாக நிகழ்ந்து விடாது.

பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி விலைவாசி உயர்வுக்கான காரணமாகக் கருதும் காரணிகள் நியாயமானவையாகத் தெரியவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரமும் வாங்கும் சக்தியும் உயர்ந்திருப்பதால், அவர்கள் சத்துள்ள உணவு முறைக்கு மாறியிருப்பதாகவும், அதற்குத் தகுந்தாற்போல உற்பத்திப் பெருக்கம் இல்லாமல் இருப்பதும்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்பது பிரதமரின் கருத்து. நிதியமைச்சரும் இதையேதான் வேறு வார்த்தைகளில் கூறி வருகிறார்.

உணவுப் பொருள்களானாலும், ஏனைய தொழிற்சாலைத் தயாரிப்புப் பொருள்களானாலும் தட்டுப்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. உணவு உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவுக்குச் சாதனை புரிந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அரசின் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. கிடங்குகளில் தேங்கி வீணாகிவிடாதபடி உணவுப் பண்டங்களை விநியோகிக்க உச்ச நீதிமன்றம் கூறும் அளவுக்கு உற்பத்தி இருக்கிறது. ஆனாலும், அரிசி, கோதுமை, பருப்பு விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறையக் காணோம்.

சரி, காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி என்று எடுத்துக் கொண்டாலும், தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மூலகாரணம் உற்பத்திக் குறைவும், மக்களின் அதிகரித்த தேவையும்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பதப்படுத்தி வைப்பதற்கான வசதி பரவலாக இல்லாத நிலையில், செயற்கையாக இந்தப் பொருள்களின் விலைகளை அதிகரித்துவிட முடியாது என்கிற நிலையிலும் தொடர்ந்து விலை ஏறிக் கொண்டே போகிறது என்று சொன்னால் இடையில் ஏதோ தவறு நடக்கிறது என்பதும் அதைக் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த அரசுக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தே தவறுக்கு நமது நிர்வாகம் துணை போகிறது என்பதும்தான் காரணங்களாக இருக்க முடியும்.


மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்பது உண்மை. இதற்கு இரண்டு காரணங்கள். நகர்ப்புறங்களில் கூலி அல்லது சம்பளம் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில், கிராமப்புறங்களில் உற்பத்தி அதிகரிப்பால் வாங்கும் சக்தி அதிகரிக்காமல், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் காரணமாகப் பணப் புழக்கம் அதிகரித்து வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது.

பொதுத்துறையில் தொழில் நிறுவனங்களை அமைப்பது, சாலைகள் அமைப்பது, அணைகள், மின் நிலையங்கள் ஏற்படுத்துவது, ஏன் வீடுகள் அலுவலகங்கள் கட்டுவது என்று அரசின் பணம் முதலீடு செய்யப்பட்டு, அதன் பயனாக வேலைவாய்ப்பு அளிக்கப்படும்போது, பணப்புழக்கமும் ஏற்படும், உருப்படியான முதலீடாகவும் அந்த வரிப்பணம் பயன்படுத்தப் படும்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்கிற பெயரில், ஆக்க பூர்வப் பயன் இல்லாமல் மக்கள் வரிப்பணம் விநியோகம் செய்யப் படுவதால் ஏற்பட்டிருக்கும் செயற்கையான வாங்கும் சக்தி, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணி என்பதைப் பிரதமரும், நிதியமைச்சகமும் சொல்லத் தயங்குகிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் அரசால் புழக்கத்தில் விடப்படும்போது பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி அதிகரிக்கும் என்கிற அரிச்சுவடிப் பொருளாதாரப் பாடத்தை பொருளாதார நிபுணர்களான பிரதமரும், நிதியமைச்சரும், ரிசர்வ் வங்கி கவர்னரும் படிக்கத் தவறி விட்டிருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையை ஊன்றிக் கவனித்தால் இன்னொரு உண்மையும் வெளிப்படுகிறது. அதாவது, விலைவாசி உயர்வு நகர்ப் புறங்களைவிட கிராமப்புறங்களில்தான் அதிகம் என்பதுதான் அது. ரெப்போ விகிதத்தை அதிகரிப்பதாலும், சிறுசேமிப்புக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாலும் விலைவாசி உயர்வு எப்படிக் கட்டுக்குள் வரும் என்பது நமக்குப் புரியவில்லை.

ஒருபுறம் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அரசின் வரவு செலவில் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. போதாக் குறைக்கு, முதலீடுகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த லட்சணத்தில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேசத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கோதுமைக்கும் கடுகுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைக் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாள் வேலை உறுதித் திட்டமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
 
இதையெல்லாம் செய்துவிட்டு விலைவாசி குறைந்துவிடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்!!ஒரு குருட்டு மல்யுத்த வீரன் மறைந்து கொண்டிருக்கும் எதிரியுடன் இருட்டில் குத்துச்சண்டை போட்டால் எப்படி இருக்கும்? நமது மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் விலை வாசியைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன.