Showing posts with label வங்கித்துறை சீர்திருத்தங்கள். Show all posts
Showing posts with label வங்கித்துறை சீர்திருத்தங்கள். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #வங்கித்துறை அரசியல்!

கரூர் லட்சுமி விலாஸ் வங்கி மிகமோசமான செயல் பாட்டால் திவாலாகும் நிலைமைக்குத் தள்ளப்பட்ட போது ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டது தொழிற்சங்கங்கள் அதை ஏதாவது பொதுத்துறை வங்கி தலையில் கட்டவேண்டுமென்ற ரீதியில் கூக்குரல் எழுப்பின. கடந்த மூன்றாண்டுகளில் வங்கியை takeover செய்து நடத்தத் தகுதியான எதுவும் முன்வராத நிலையில் DBS Bank Indiaவுடன் இணைக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்து மத்திய அமைச்சரவையும் ஒப்புதலளித்து விட்டது இங்கே நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.


ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வங்கியில் பணம் போட்டிருந்தவர்களுடைய நலன் (ரூ.20300 கோடி) மற்றும் 4000 ஊழியர்களுடைய வேலை, ஆக இரண்டு முக்கியமான விஷயங்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளாமலேயே விமரிசனங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன   

டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் கூட இந்த இணைப்பை எதிர்த்திருக்கிறார். சிங்கப்பூர் வங்கியான DBS Bank உடனான இணைப்பு 2G spectrum ஊழலைப் போன்றது என்பது அவரது வாதம்!  வழக்கம் போல மத்திய அரசு டாக்டர் சுவாமியைத் தனியாகப் புலம்பவிட்டுவிட்டது என்பதைத் தாண்டி வேறொன்றும் நடக்கவில்லை.

இன்றைய இந்து தமிழ் திசையில் வணிகவீதி பகுதியில் எம் ரமேஷ் என்பவர் வங்கிகளின் வீழ்ச்சியை ஏன் தடுக்க முடியயின் வில்லை   என்ற தலைப்பில் அபத்தமானதொரு செய்திக்கட்டுரையை எழுதி இருக்கிறார். LVBயின் பிரச்சினைகள் என்ன, கடந்த மூன்றாண்டுகளில் நிலைமையைச் சரிசெய்யவோ, கூடுதல் மூலதனத்தைத் திரட்டவோ, தகுதியான உள்ளூர் நிறுவனத்துடன் இணைக்கவோ இப்படி எதுவும் ஏன் நடக்கவில்லை என்பதைப்பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் எனக்கு கேட்கத்தான் தெரியும் என்கிற திருவிளையாடல் நாகேஷ் காமெடி மாதிரி கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.

வங்கித்துறை எப்படி இயங்குகிறது? ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் எழுதிய பதிவு கொஞ்சம் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்பதற்காக.  

பேராசையின் எல்லை எது ? The Moneychangers!


ஆர்தர் ஹைலி எழுதிய நாவல்! இரண்டு நேர் எதிரான குணாதிசயங்கள் கொண்ட வங்கி நிர்வாகிகளை வைத்து, வங்கித் துறை எப்படி பேராசையால் இயங்குகிறது, தான் சேதப்படுவதுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையுமே நாசம் செய்கிறது என்பதை அழகாகச் சொன்ன புதினம்!
 
அவசியம் படிக்கவேண்டும் என்று நான் பரிந்துரைக்கும் புதினம் இது. வெறும் கதை என்ற அளவோடு நின்று விடாமல், நிறைய வங்கித் துறை சார்ந்த தகவல்களை, கிரெடிட் கார்ட் உள்ளிட்டு, மேற்கத்திய வங்கிகள் இயங்கும் விதத்தை மிகத் தெளிவாகச் சொல்கிறார் ஆசிரியர். டாலர் முதலீட்டை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகப் பாதுகாப்பானது என்பதை, கதையினூடே, மிகுந்த கவனத்துடன், ஆதாரங்களை வைத்துச் சொல்கிறார்.

45 வருடங்களுக்கு முன் வெளிவந்த புத்தகம், என்றாலும், இன்றைக்கும் வங்கித் துறையைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும் புதினம். இங்கே புத்தகக் கடைகளில் 130 ரூபாய்க்குக்கிடைக்கிறது.         

மண்டேன்னா ஒண்ணு! #வங்கித்துறைசீரழிவுகள் லட்சுமி விலாஸ் வங்கி

இன்றைக்குத் தற்செயலாக ட்வீட்டரில் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது நியூஸ் 18 சேனலில் இருந்து விரட்டப்பட்டு சன் செய்திகளுக்கு ஓடிப்போன மு.குணசேகரனுடைய மறுகீச்சொன்றைப் பார்த்தேன். குணசேகரனுடைய  சாய்ஸ் என்றாலே திரிக்கப்பட்ட அல்லது வடிகட்டின பொய்யாகத்தானிருக்கும் என்பது தமிழக ஊடகங்கள் எப்படியிருக்கின்றன என்பதற்கான ஒரு சோற்றுப்பதம்! அவர் அரண்செய் என்கிற யூட்யூப் தளம்  ட்வீட் செய்ததை ரீட்வீட் செய்திருக்கிறார். புரிந்து கொண்டு தான் செய்தாரா என்பது ஒன்பது ரூபாய் நோட்டு மாதிரித்தான்!  

சமீபத்தில் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கி மீது 30 நாட்கள் மாரடோரியம் அறிவித்த கையோடு DBS Bank Indiaவுடன் இணைக்கப்படும் என்று அறிவித்ததை, வங்கிகளைப்பற்றி கொஞ்சமும் அறியாத ஒருவர், அவருக்கு சற்றும் குறையாத  முன்னாள் வங்கி மேனேஜர் ஒருவருடன் உரையாடுவதை மேலே 20 நிமிட வீடியோவில் பார்க்கலாம் ஏதேனும் புரிகிறதா?  இந்த முன்னாள் வங்கி மேனேஜர் நிறைய விஷயங்களைத் தப்பும் தவறுமாகவே, குணசேகரன்கள் சந்தோஷப் படுகிற அளவுக்கு, அள்ளித் தெளிக்கிறார். உதாரணமாக LVB கரூரில் ஆரம்பிக்கப்பட்டது 1926 இல், ஆனால் sophomore சோமசுந்தரம் 1958 இல் தொடங்கப்பட்டது என்கிறார். உண்மை என்னவென்றால் ஒரு ஷெட்யூல்டு வங்கியாக ரிசர்வ் வங்கியின் 2வது ஷெட்யூலில் LVB இடம்பெற்றது 1958 இல். இப்படி எல்லாவிஷயங்களையும் மிக மேம்போக்காகப் பார்த்துவிட்டு உளறிக் கொண்டிருக்கும் இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தை, இதையும் ஒரு செய்தியாக ரீட்வீட் செய்கிற குணசேகரன்களையும் என்னவென்று சொல்வது?


இதையே வங்கித்துறையைப் பற்றித் தெரிந்தவர்கள் கூடி விவாதித்தால் எப்படியிருக்கும் என்பதைக் கேட்க வேண்டுமா? மேலே ஒரு 40 நிமிட வீடியோ. தொடர்ந்து மூன்று வருடங்களாக தலா 800 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்து வருகிற ஒரு நிறுவனம், அடுத்து 2020 செப்டெம்பர் அரையாண்டில் 397 கோடி  தொடர் நஷ்டம் அடைந்திருக்கிறது.அதே போல 4000 கோடி ரூபாய் அளவுக்கு மீட்க முடியாத வராக்கடன், மூலதனத் தேவையை எதிர் கொள்ளமுடியாத நிலையும் இருந்தால் அந்த நிறுவனம் திவாலாகிவிட்டது என்றுதான் அர்த்தம். திவாலாகிப்போன நிலையில் பங்குகளின் மதிப்பு ஜீரோவாகிவிடும் என்பது கம்பனிச் சட்டம் சொல்கிற மிக அடிப்படையான விஷயம். LVBயின் பங்குகள் எவர் எவரிடம் இருக்கின்றன?

As of September-end, 93.2% of Lakshmi Vilas Bank’s shares were held by public shareholders. The promoters own only 6.8% stake. Among public shareholders, foreign portfolio investors own 8.65%, insurance companies own 6.40% (LIC: 1.62%), retail shareholders own 23.98% and HNI shareholding is at 22.75%. Other entities hold 30.82%, including Indiabulls Housing Finance Ltd (4.99%), Srei Infrastructure Finance Ltd. (3.34%) and Prolific Finvest Pvt. Ltd. (3.36%) இப்படியிருக்க, எந்தத் தரவுகளின் மீது சோமசுந்தரம் பொதுஜனங்களுடைய பணமெல்லாம் போச்சு என்கிறார்? சம்பந்தமே இல்லாமல் 1.7 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப சொல்கிறாரே,  அது என்ன? அதை ஆ.ராசாவிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? கொஞ்சம் உறைக்கிற மாதிரி, விஷயத்தைப் புரிந்து கொள்ள இங்கே  

What had gone wrong?

This is perhaps a story that will be written after its demise. For example, there were loans given to the ex-promoters of Ranbaxy, which they thought were secured by deposits but those deposits were not legally collateralized. And employees were arrested for this issue. There were many other allegations, soaring NPAs and the bank lost nearly all its core capital. Luckily, no depositor has lost money in it. இது அதிலிருந்து ஒரு சிறு பகுதி. 

லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட்டர்கள் முழுதாய்க் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். டெபாசிட் பணம் 20300 கோடி ரூபாய்களில்  ஒரு சல்லிக்காசு சேதாரமில்லாமல் ரிசர்வ் வங்கி காப்பாற்றித் தந்திருக்கிறது. அதை மறந்து விட்டுப் பேசுவது குணசேகரன்கள் மாதிரித் தமிழக ஊடகங்களின், திராவிடங்களின் அபத்தம் மட்டுமல்ல, வடிகட்டின அயோக்கியத்தனமும் கூட.   

வங்கிச் சீர்திருத்தங்கள் இப்போது இந்தத் திசையில் போய்க் கொண்டிருக்கின்றன? இங்கே செய்தியாக