Showing posts with label இட்லி வடை பொங்கல். Show all posts
Showing posts with label இட்லி வடை பொங்கல். Show all posts

இட்லி வடை பொங்கல்! #75 IPAC பிரசாந்த் கிஷோர்! சவுக்கு சங்கர்! கோட்டைவாய் #நாசா !

தமிழகத் தேர்தல்களம் ஏன் இப்படி டல்லடித்துக் கிடக்கிறது? "வேற லெவல்".. ஒரேடியாக எகிறிய இமேஜ்! ஃபார்முக்கு வந்த ராகுல்.. அண்ணனாக, மகனாக.. பொங்கும் பாசம்! என்று ஒன் இந்தியா தமிழில் உருகுகிறார்கள் என்றால் H ராஜாவும் கோலாகல ஸ்ரீனிவாசும் இந்த 44 நிமிட நேர்காணலில் காங். தலைமையில் 3வது அணி’: ஹெச். ராஜா பகீர்! என்று செம காமெடி செய்கிறார்கள்!  இதனால் மட்டும்  தமிழகத் தேர்தல் களம் சூடான பதத்துக்கு வந்து விட்டதாகச் சொல்ல முடியாதே! 


மேலே வீடியோ 33 நிமிடம் ரெட்பிக்ஸ் தளத்தின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் , சவுக்கு சங்கர் இருவரையும்  தரமான, நம்பகமான ஊடகக்காரர்களாக நான் எப்போதுமே நினைத்ததில்லை, ஆனாலும் தேர்தல் நேரம் எப்போதும்  காமெடி நேரமாகவே இருப்பதால் எல்லாக் கோமாளிகளையும் வேடிக்கை பார்த்துவிடுவது எனக்கு வாடிக்கை இந்த வீடியோவில் சவுக்கு சங்கர் பிரசாந்த் கிஷோர் பற்றியும் psephology, data schience என்ற பெயரில் இங்கே சில இந்திய நிறுவனங்கள் பற்றியும் மேலோட்டமாகப் பேசுவதை, வேறு எவரும் தொடாத சப்ஜெக்ட் என்பதால் இங்கே இந்தப்பதிவிலும்! திமுகவுக்கும் நடக்கும் அதிகாரப் போட்டி நிழல் யுத்தமாகத் தொடர்வதைப்பற்றி வேறு யாராவது பேசியிருக்கிறார்களா என்ன?         

திமுக நிர்வாகிகளுக்கும் IPAC நிறுவனத்துக்கும் மோதலா?  இப்படித் தலைப்பிட்டு BBC தமிழ் செய்தித் தளத்தில் ஜூனியர் விகடன் ரேஞ்சுக்கு நன்றாகக் கதைத்திருக்கிறார்கள்! மோதல் இருப்பதென்னவோ உண்மைதான்! ஆனால் 2021 இல் எப்படியாவது CM ஆகியே தீருவது என்று றெக்க கட்டிப்பறக்காத குறையாக இசுடாலின் பிரசாந்த் கிஷோரை முழுமையாக நம்பிக் களத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் போது கட்சிக் காரர்கள் பொருமலையெல்லாம் சட்டை செய்வாரா என்ன? ஆக, பிரசாந்த் கிஷோரை நம்பிக்கெட்டவர்கள் லிஸ்டில் இசுடாயினும், இலவுகாத்தகிளியாக சேரப் போகிறார் என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல? நண்பர் நெல்லைத்தமிழன் முரளி இந்த அனுமானத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்தான்! அதனால் சொல்லாமல் விட்டு விட முடியுமா?😃😄 


வருகிற திங்கட்கிழமை கோட்டைவாய் நாசாவுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகிறது! இந்த 5 நிமிட வீடியோவில் மத்திய அமைச்சராக இருந்த சமயம் அமைதியாக இருந்த நாராயணசாமி என்று சொல்கிறார்களே! இந்தக் கொடுமையை, தலை சுற்றலோடு  எந்த விதமான காமெடியில் சேர்ப்பது என்று புரியாமல் பதிவை முடிக்கிறேன்!  

மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா?

இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந்திய அரசியல் போய்க்கொண்டே இருப்பதால் இந்த 70வது பதிவை எழுத முயன்று நிறைய சனிக்கிழமைகளில் கைவிட்டிருக்கிறேன். இந்தப் பக்கம் எழுதி ஒருமாதத்துக்கும் மேலாகி விட்டதால், இன்றைக்குக் கொஞ்சம் எழுதலாமே என்ற எண்ணம் வலுத்ததால் இந்தப் பதிவு. தூண்டுதலாக இந்த ட்வீட்டர் செய்தி இருந்தது என்று தனியாகச் சொல்ல வேண்டுமா?    

ஒரு காங்கிரஸ் விசிலடிச்சான் குஞ்சு ஒரு கட்டுரையை காங்கிரஸ் தொண்டர்களுக்கு (அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?! ) புளகாங்கிதத்துடன் வாசிக்கச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறார்!
 
 
மேலே படத்தில் இருப்பது பரத் பூஷன். Sr.Journalist  இந்த மூத்த பத்திரிகையாளர் என்ற அடைமொழிக்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்? ஒருவர் எதைப்பற்றி எழுதுகிறாரோ அதைப்பற்றிய தெளிவுடன் அனுபவமும் கூடியவர் என்று தானே நினைக்கிறீர்கள்? இந்திய சூழ்நிலையில், அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது. இங்கே பெரும்பாலான பத்திரிகையாளர்கள் ஒருபக்கச் சார்பாகவே எழுதுகிறவர்கள், தங்களை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகவே  நினைத்துக் கொண்டு கருத்துக்கள், உபதேசங்களை அள்ளி வீசுகிறவர்கள் என்றொரு யதார்த்தமும் இருக்கிறதே! 25+ வருடங்கள் அனுபவமுள்ள பரத் பூஷன் மட்டும் விதிவிலக்கா என்ன?

  
இது The Quint தளத்தில் நேற்று பரத் பூஷன் எழுதிய விமரிசனக் கட்டுரையின் சாராம்சம்.  என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தால், மூத்த பத்திரிகையாளர், இருபத்தைந்து வருடங்களுக்கும் மேல் பல இதழ்களின் நிர்வாகப்பொறுப்பிலும் இருந்த ஒருவர் என்பதெல்லாம் காணோம்!  சோனியா காங்கிரசின் பழந்தலைகள் அல்லது பெருசுகளை மட்டுமே விமரிசிக்கிற மாதிரி காரணங்களை அடுக்கினால் அது எந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருக்கும்? கட்சி அமைப்பைத் தனது சௌகரியத்துக்காக பாட்டி இந்திரா உடைத்து நொறுக்கிய அதே பாணிதானே இன்றைக்கும் தொடர்கிறது? பானாசீனாவின் உபயோகமே வேறு! அவரையோ அவர் மகனையோ போய்க் களத்தில் இறங்கி. கட்சியைக் கீழே இருந்து கட்டு என்றால் நடக்கிற காரியமா? காங்கிரசுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி இருக்கிறது என்பதைத்தவிர கட்சி அமைப்போ. தொண்டர்களோ, அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்களோ கடந்த 55+ வருடங்களில் இருந்ததே இல்லை. 

கட்சியைக் கீழே இருந்து கட்டுவதில் அனுபவமுள்ள கம்யூனிஸ்டுகளே ஸ்தாபன அமைப்பு வலுவிழந்து சிதறிக் கிடக்கிறார்கள் என்கிறபோது, கட்சித் தலைமையே தனது சௌகரியங்களுக்காக கட்சியை உடைக்கிற பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சி, எப்படிக் கட்சி அமைப்பை வலுவாக்குமாம்? கட்சி அமைப்பைக் கட்டக்கூடிய திறமையுள்ள காங்கிரஸ் ஆசாமி யாரேனும் இருக்கிறாரா என்ன? 

The real issue that the Congress party must urgently address is to revive party institutions – from booth level to the All India Congress Committee. Unless these institutions are activated, made vibrant and meet regularly, there cannot even be an accountable discussion of the party’s performance. Where will Congressmen air their opinions when the AICC does not meet regularly—the party Constitution mandates six monthly meetings but there is often not even an annual meeting? என்று எழுதத் தெரிந்த பரத் பூஷனுக்கு இப்படியொரு கோளாறைத் தொடங்கி வைத்ததே இந்திரா காண்டி தான் என்பது தெரியாதா? மாமியாரை மிஞ்சிய மருமகள் சோனியா, கட்சியைத் தனது குடும்பக் கம்பெனியாகவே குறுக்கி விட்டார் என்பதும் தெரியாதா? 

தெரிந்தே தான் சோனியா, ராகுல், ப்ரியங்கா இவர்கள் மீது வைக்கப்படும் விமரிசனங்களை நிராகரிக்கிறார். நிராகரிக்கிற அளவுக்கு சோனியா அல்லது அவரது மக்குப்பிள்ளைகள் அப்படி என்ன உருப்படியான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களாம்? அதைப்பற்றி ஒன்றையும் சொல்லக்காணோம்! இருந்தால்தானே சொல்ல? 

ராகுல் காண்டி வழக்கம்போல ட்வீட்டரில் மட்டும் வந்து அக்கப்போர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பப்பி அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கட்சித்தலைமையை வேறு எவருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லாத சோனியா காண்டி தன் மக்குப்பிள்ளைகள் அரசியல் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்புறம் என்ன? சோனியா காங்கிரஸ் அப்படியே எழுந்து நின்றுவிடும் என்று நம்புகிறவர்கள் மிகவும் கம்மியான நபர்கள்தான்! பரத் பூஷன் கூட அப்படி நம்புகிற ஆள் மாதிரித் தெரியவில்லை, மோடி மீதான வெறுப்பு மட்டுமே பலரை ஒருபக்கச்சார்புடன் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #68 கொரோனா களேபரங்கள்! மம்தா! சீனப்பூச்சாண்டி! பானாசீனா!

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதில் மேற்கு வங்க அரசு இயந்திரம் முற்றிலுமாகச் செயலிழந்து போய்க் கிடப்பது அம்பலமாகியிருக்கிறது. இதுவரை கொரோனாவுக்காக சோதனை செய்யப்பட்டது ஏழாயிரத்துச் சொச்சம் நபர்களிடம் தான் என்பது இந்தியாவிலேயே ஆகக்குறைந்த எண்ணிக்கை என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. குழாயடிச் சண்டைக்காரியாக எதற்கெடுத்தாலும் கலகக் குரல்  எழுப்பும் மம்தா பானெர்ஜி நெருக்கடி, பிரச்சினை என்று வரும்போது தனது கையாலாகாத்தனத்தை மூடிமறைப்பதில் மட்டுமே குறியாக இருந்தார். டைம்ஸ்  நவ் டிவியின் 26 நிமிட விவாத வீடியோ இங்கே   யூட்யூப் தள வீடியோக்களை இணைக்க முடியவில்லை என்பது ப்ளாக்கர் தளம் விட்டுவிட்டு எனக்கு கொடுத்துவரும் குடைச்சல்.  


#FCC #FederalCommunicationsCommission  #ChinaMobile #ChinaUnicomAmericas #ChinaTelecomAmericas #PacificNetworksCorp #ComNet  


அமெரிக்காவின் FCC...அமெரிக்க தொலைத்தொடர்புக்கான நிர்வாக அமைப்பு.  கடந்த வருடம் மே மாதம், சீன கம்யூனிச அரசுக்கு சொந்தமான China Mobile நிறுவனம் ...அமெரிக்காவில் இயங்குவதற்கு அனுமதி மறுத்தது FCC. காரணம்...அதன் மூலம், அமெரிக்காவிற்குள்... சீனா தன்னுடைய உளவு வேலையை நிகழ்த்தும் என்று கூறியது.கடந்த மாதம்...அமெரிக்க நீதித்துறை ...சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமெரிக்காவுக்குள் இயங்க அனுமதிப்பதை தடை செய்யும்படி சிபாரிசு செய்தது.

இந்த நிலையில்...அமெரிக்காவில் இயங்கி கொண்டிருக்கும் China Telecom Americas , China Unicom Americas, Pacific Networks Corp, இதன் துணை நிறுவனமான ComNet [USA] LLC ஆகிய சீன அரசு நிறுவனங்களை ...தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்காவிட்டால்..தடை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது..FCC.

சீன அரசு நிறுவனத்திற்கு எப்படி சீன தொடர்பு இல்லாமல் இருக்கும் ? பின் ஏன் இப்படியான அறிவிப்பு ? என்று அபத்தம் போல தோன்றினாலும் தகுந்த காரணம் உண்டு.

உலகமயமாக்கலுக்கு பின்...உலக வியாபார ஒப்பந்தங்களின் படி ...அனுமதி அளிக்கப்பட்ட பிற நாட்டு நிறுவனத்தை வெளியற்றவோ..தடை செய்யவோ ..தகுந்த காரணங்களை கூற வேண்டும்.

அந்த சீன அரசு நிறுவனங்களால்..தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்க இயலாது என்பதால் தான் அப்படியொரு கேள்வி.



தாமதமாகவேனும் அமெரிக்காவும், இந்தியாவும், இதர உலக நாடுகளும் விழித்துக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன.இதற்கான எதிர்வினைகள் தான்...'உள்நாட்டு குழப்பங்கள்' உட்பட வேறு வகைகளில்...வேறு வடிவங்களில் ..வெளிப்படுகிறது.



அருண் ஜெயிட்லியையே குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர் மேலே போய்ச்சேர்ந்து விட்டார்.  பானாசீனா மீதான வழக்குகள், விசாரணையின் நிலையென்ன? யாருக்காவது தெரியுமா?  


மீண்டும் சந்திப்போம்.

இட்லி வடை பொங்கல்! #66 பாகிஸ்தானுக்கு பதிலடி! #அசுரன் இன்னொரு பார்வை! இப்போது வாசிப்பில்!

காஷ்மீரில் கடும்பனி நிலவுவதை பயன்படுத்தி பாகிஸ்தானில் சிறப்புப்பயிற்சி பெற்ற தீவீரவாதிகள் கேரன் செக்டாரில் குப்வாரா பகுதியில் ஊடுருவியதைக்  கண்டுபிடித்த நமது நாணுவத்தின் சிறப்புப்படை கமாண்டோக்கள் ஐந்து தீவீரவாதிகளைக் கொன்றனர். நமது வீரர்கள் ஐந்து பேர் வீரமரணமடைந்தனர் என்ற செய்தியை சென்ற ஞாயிற்றுக்கிழமை வாக்கில் படித்திருக்கலாம். மார்பளவுக்கு உறைபனியில் தீவீரவாதிகளோடு நேருக்குநேர் hand to hand combat வகையிலான மோதல் அது என்பதை இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் விவரித்த வீடியோ மற்றும் செய்தியை இரண்டுமூன்று நாட்களுக்கு முன் வாசித்தேன். நமது வீரர்கள் உயிரிழப்புக்குப் பதிலடி தருகிற விதத்தில் நேற்றைக்கு இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் துல்லியமான பீரங்கித் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தானிய ஆயுத கிடங்கு, தீவீரவாதிகளைப் பயிற்றுவிக்கிற நிலைகள் தகர்க்கப் பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. தாக்குதல்களை drone வழியாகப் படம்பிடித்து இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஊர் உலகம் முழுதும் கொரோனா தொற்றால் அலறிக்  கொண்டிருக்கிற நேரமாக, பாகிஸ்தானுக்கு பயங்கரவாதத்தை ஏவுகிற வேலைதான்  மிகவும் முக்கியமாக இருக்கிறது என்பது ஆகப் பெரிய பரிதாபம்! ஒரு 12 நிமிட வீடியோ செய்தித்தொகுப்பு இங்கே 


இங்கே இந்த ட்வீட்டர் செய்தியில் 53 வினாடி வீடியோவைப் பார்க்கலாம். 



 

பாகிஸ்தானிய ISIயின் செய்திப்பிரிவு வேறுவழியில்லாமல் பதிலடி வாங்கிக் கொண்டதை ஒப்புக் கொண்டு தொடர்ச்சியாக 3 ட்வீட்டர் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. திருந்த மாட்டார்கள்! 


உயிர்த்தியாகம்  செய்த  நமது வீரர்களுக்கு அஞ்சலி செய்வோம்! உங்கள் தியாகத்தை தேசம் என்றும் மறவாது.


வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் வெளியாகி வெற்றிப்படமானதுகூட மறந்துபோய்விட்ட நேரமாகப் பார்த்து இந்தப்படத்தைப்பற்றிய ஒரு வித்தியாசமான பார்வையை முகநூலில் பார்த்தேன்.

Saravana Kumar பெறுநர் 

அசுரன் படம் பார்த்த உடனே எழுதத் தோன்றியது...

நோட்ஸில் எழுதி வைத்தது. இன்று தான் கண்ணில் பட்டது.

"நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ ரூவா இருந்தா புடிங்கிக்குவானுவ ஆனா படிப்ப மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்"

- அசுரன் பட கிளைமாக்ஸ் வசனம்.

இன்றைய சமூகத்தில் யாரெல்லாம் அந்த சிதம்பரம்?

1. ஒடுக்கப்பட்ட சாதிகளில் இருந்து கல்வியைக் கொழுகொம்பாய்ப் பற்றி சாதி வெறுப்பைக் கடந்து, நீந்தி அவமானங்களை முதலை போல் ஜீரணம் செய்து, தான் அந்த சமூக சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் 'நானும் மனிதர்களில் ஒருவன், எனக்கான இடம் இங்கே உண்டு, எனக்கு அது வேண்டும், யார் தடுத்தாலும் முடியாது' என்று எதிர்நீச்சல் போட்டு நிலைநாட்டிய எண்ணற்ற ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சாதனையாளர்கள்

2. 'உப்பு விக்கப் போனா மழை பெய்யுது, மாவு விக்கப் போனா காத்தடிக்குது' என்ற நிலையில், சட்டப்பூர்வமாக எதைச் செய்தும் தொழிலின் மூலமும் அடுத்த நிலைக்கு மேம்பட முடியாத கையறு நிலையில் இருக்கும் பலப்பல இடைசாதி மக்களின் வீடுகளில் இருந்து வந்து அதே கல்வியைக் கொழுகொம்பாகப் பற்றி 'இங்கே எனக்கும் ஒரு பங்குண்டு, அதை நியாயமாக எடுத்துக் கொள்ள உரிமையுண்டு' என்று வாழ்க்கைக் களம் காணும் அவர்களின் பிள்ளைகள்

3. "நீ கலக்கலைன்னா உங்க தாத்தன் கலக்கியிருப்பான்" என்ற ஆடு - ஓநாய் கதை போல அரசியல் நோக்குடன் வார்த்தெடுக்கப்படும் சாதி பழிவாங்கல் வன்மத்தால் பாப்பான் பாப்பாத்தி என்று சில முன்னோரின் தவறுகளுக்காக வசை பாடப்பட்டு பல அக்ரஹாரங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நிலையில் கல்வி ஒன்றே கொழுகொம்பென்று பற்றி பிறந்த மண்ணில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று தமக்கான வாழ்க்கைப் பாதையை மாற்றியமத்துக்கொண்ட ஒவ்வொரு பாப்பானும் பாப்பாத்தியும் அம்பியும்

மேலே சொல்லப்பட்ட அசுரன் பட வசனத்தில் மூன்றாம் வரியை பிள்ளைகளைப் படிக்க வைக்கும் எல்லா பெற்றோரும் சொல்வது தான். முதல் இரண்டு வரிகள் எல்லோர் கண் முன்னே இருந்த, உணர்ந்த உண்மைதான்.

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதைகளில் கண் முன்னே இருந்தும் யாரும் பேசாத கவனிக்காத விஷயங்களை பகுத்து உண்மையை வெளிக்கொணர்வது போல வெற்றிமாறன் முதல் இரண்டு வரிகளையும் படத்தில் அழகாக வடித்துள்ளார்.

மேலே எழுதியதைப் படித்ததும் 'ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருப்பதாகவும் ஒடுக்குவோர் ஒடுக்கிக் கொண்டே இருப்பதாகவும்' நினைப்போருக்கு எட்டிக்காய் அல்லது பச்சைமிளகாய் கடித்தது போலிருக்கலாம். நான் பொறுப்பல்ல...

Paulo Freire — 'The oppressed , instead of striving for liberation, tend themselves to become oppressors.' - இதுதான் இன்றைய நிதர்சனம்.

தமிழாக்கம்: பாவ்லோ ஃப்ரெய்ரே - ஒடுக்கப்பட்டோர் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைவதற்கு முனையாமல் தாங்களே ஒடுக்குவோராய் மாற எத்தனிக்கிறார்கள்

இது உண்மையில்லை என்று ராமசாமியைத் தூக்கிக் கொண்டு வருவோருக்கு - முடிந்தால் இது தவறென்று சான்றுகளுடன் 'பகுத்தறிவு'க்கு எட்டும் வகையில் நிரூபிக்கவும். 

இந்த அடிப்படையான விஷயம் புரிவதற்கே இத்தனை நாட்களாயிற்றா? இதுதான்  என்னுடைய ஆச்சரியம், கேள்வி! கம்யூனிஸ்டுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன்! பொதுநலம் பேசுவார்கள், போராட வாருங்கள் என்றழைப்பார்கள், கலகத்தைத் தூண்டிவிடுவார்கள்! ஆட்சி கைக்கு வந்தால் என்னென்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் தன்னுடைய விலங்குப்பண்ணை நாவலில் (1945) இரண்டே வரிகளில் சொல்லிவிட்டாரே! "எல்லாப்பன்றிகளும் சமம்! ஆனால் சில பன்றிகள் மற்றவைகளைவிட அதிகசமம்!" இங்கே ஆண்டஜாதி குறித்த சர்ச்சைகளை கூகிளில் தேடினீர்களானால் நிறையவே காறித்துப்பும்.

 

கொரோனா ஊரடங்கு ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாய்ப் படுத்திக் கொண்டிருப்பதை மேலே போகன் சங்கர் பகடி செய்வதாக எழுதிக்கலக்கிக் கொண்டிருப்பதே சாட்சி. இந்த வாசிப்பு மட்டும் இல்லாவிட்டால் என்போன்றவர்கள் பாடு உண்மையிலேயே திண்டாட்டம் தான்! இன்று மீள்வாசிப்பாக எடுத்துக் கொண்டபுதினம் ORIGIN டான் ப்ரவுன் எழுதியது. மேவி என்கிற விஸ்வநாத் தியாகராஜன் இந்தப்புத்தகம் வெளிவந்த தருணத்தில் வாங்கியாச்சு என்று கூகிள் பிளஸ்சில் பகிர்ந்ததைப் பார்த்து விட்டுப் போட்டிக்காக புத்தகத்தைத் தேடிப்பிடித்து வாசித்துவிட்டு, வாசித்து முடித்தாகிவிட்டது என்று 
பதில் பிளஸ்சில் சொன்ன 2017 ஆம் வருட ஞாபகங்களுடன்!

   
  மீண்டும் சந்திப்போம். 

இட்லி வடை பொங்கல்! #58 ராமசந்திர குகா! ராகுல் காண்டி! ஒரு சுயவிளக்கம்!

கோழிக்கோட்டில் நடந்து வரும் கேரள இலக்கியத் திருவிழா 2020 இல் நேற்று ராமசந்திர குகா மறுபடியும் ஒரு கருத்தைச் சொல்லி, பரபரப்பான பேசுபொருளாக ஆகியிருக்கிறார். இலக்கியத் திருவிழாக்களில் அரசியல் என்பது ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவில் இருந்தே பார்த்துவருவதுதான்! ஆனால் நேற்று கேரள இலக்கியத்திருவிழாவில் ராமசந்திர குகா கொளுத்திப் போட்டிருப்பது நிறையவே வித்தியாசமானது, இன்னும் பலகாலத்துக்கு பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது நேரு இந்திரா பரம்பரைக்கு வாய்த்திருக்கும் புது சோகம்! என்னவென்று ஒரு சுருக்கமான வீடியோ செய்தியாகப் பார்த்துவிடலாம்.


ராமசந்திர குகா என்னவோ இப்போதுதான் ராகுல் காண்டிக்கு எதிராகப் பேசுகிறார் என்பதல்ல. முன்பே பலமுறை பேசி இருப்பது தான்! Makers of Modern India புத்தக வெளியீட்டின் போது ராகுல் காண்டிக்கு அரசியல் சரிப்பட்டு வராதென்றால் வேறு வேலையைப் பார்க்க போகட்டுமே என்று காட்டமாகச் சொன்னவர்தான்! இப்போது கேரளமக்கள் ராகுல் காண்டியைத் தேர்ந்தெடுத்ததன் விபரீதங்களை முகத்தில் அறைகிற மாதிரி சொல்லிவிட்டு  அதே தவறை 2024 தேர்தலில் செய்யக்கூடாதென்றும் சொல்லி இருப்பது கூடுதல் விசேஷம்! இபின் கால்தூன் என்கிற 14 ஆம் நூற்றாண்டு அரேபிய சிந்தனையாளர் சொன்னதை வைத்து வாரிசு அரசியல் குறித்து அவர் டெலிகிராப் நாளிதழில் எழுதிய கட்டுரையில் முன்பு சொன்னது தான்! இப்போதும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்   இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே அதைப் பார்த்திருக்கிறோம்.

A “fifth-generation dynast” Rahul Gandhi has no chance in Indian politics against a “hard-working and self-made” PM Narendra Modi, and Kerala did a disastrous thing by electing the Congress leader to Parliament, historian Ramachandra Guha said in Kozhikode on Friday. Guha said the reduction of the Congress from a “great party” during the freedom movement to a “pathetic family firm” now is one of the reasons for the ascendency of Hindutva and jingoism in India.   அதோடு நிறுத்திக்கொண்டாரா?

 “Kerala, you have done many wonderful things for India, but one of the disastrous thing you did was to elect Rahul Gandhi to the parliament.”  

“Narendra Modi’s great advantage is that he is not Rahul Gandhi. He is self-made. He has run a state for 15 years, he has an administrative experience, he is incredibly hard-working and he never takes holidays in Europe. Believe me I am saying all this in all seriousness,”  "But, even if Rahul Gandhi was “much more intelligent, more hard-working, never took a holiday in Europe, as a fifth-generation dynast he still will be at a disadvantage against a self-made person

சோனியாவையும் விட்டு வைக்கவில்லை. மக்களுடனான தொடர்பு விட்டுப்போன முகலாயர்கள் சாம்ராஜ்யம் சுருங்கிக்கொண்டே வந்த போதும் கூடத் தங்களை பாதுஷாக்களாக நினைத்துக் கொண்டு மிதப்பில் திரிந்த பழைய டில்லி சரித்திரத்தோடு  ஒப்பிட்டு எச்சரித்திருக்கிறார். ராகுல் காண்டியே ஒழிந்துபோ என்று மட்டும்தான் சொல்லவில்லை! ராகுல் காண்டி அரசியலில் இருப்பதால் தான் எதற்கெடுத்தாலும் நேருவையே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அவருடைய பொருமல். 

இந்தப் பேச்சில் ராமசந்திர குகா, தான் ஒரு நேரு விசுவாசி, ஆதரவாளன். அதேநேரம் நேரு பரம்பரைக்கு பல்லக்குத் தூக்குகிறவனில்லை என்கிற சுயவிளக்கம் தந்திருப்பதாக மட்டுமே எனக்குத் தோன்றுகிறது. முழு உரையும் எழுத்துவடிவில் இங்கே.  

இடதுசாரிகளையும் ஒருபிடி பிடித்திருக்கிறார். 

“Hypocrisy of the Indian Left — the fact that they loved other nations more than India”, “rise of aggressive nationalism worldwide” and “the rise of Islamic fundamentalism in neighbouring countries” are some other reasons behind the evident leap of Hindutva in India in the recent times."  

இட்லி வடை பொங்கல் இந்த அளவுக்குப்போதும் இல்லையா?! எனக்கே மிளகுக்  காரம் கொஞ்சம் அதிகமாகத் தான் தெரிகிறது. 

மீண்டும் சந்திப்போம்.   

இட்லி வடை பொங்கல்! #57 மம்தா, காங்கிரஸ் புராணம்! மக்களுக்காக!

இன்றைய அதிசயமாக பிரதமர் நரேந்திரமோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி சந்திப்பாரா மாட்டாரா என்ற சந்தேகங்களை ஊடகங்கள் கிளப்பிக் கொண்டிருந்ததற்கு, முற்றுப்புள்ளி வைக்கிறமாதிரி மம்தா பானெர்ஜி ராஜ் பவனில் பிரதமரைச் சந்தித்த காட்சிகளை சேனல்களில் பார்த்தேன். மரியாதை நிமித்தம் சந்திப்பு என்று சொல்லப்பட்டதில் மம்தா பானெர்ஜி வெளியே நிருபர்களிடம் CAA, NRC இரண்டையும் மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் சொன்னதாக பேட்டி அளித்தது பரிதாபகரமான காமெடி!

   
பிரதமர் நரேந்திரமோடி இருநாள் நிகழ்ச்சிகளுக்காக இன்று கொல்கத்தா வந்திருக்கிறார். கொல்கத்தா துறைமுகத்தின் 150வது ஆண்டு விழா நிகழ்ச்சி,  புனருத்தாரணம் செய்யப்பட்ட 4 பழைய கட்டடங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன்றிரவு பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் தங்குவார். நாளை ஸ்ரீ ராமகிருஷ்ணா  மடத்தில் சுவாமி விவேகானந்தருடைய அவதார தின நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்ற தகவல்கள் சொல்வதில் கொல்கத்தா துறைமுக நிகழ்ச்சியில் பிரதமருடன் ஒரேமேடையில் மம்தா பங்கேற்பாரா என்பது நிகழ்ச்சி நடந்து முடிகிற வரை சஸ்பென்ஸ்தான்! 


எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொல்வதைத் தவிர்த்துவிட்டு, பிரதமர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைக் குறித்து காங்கிரஸ் செம கடுப்பில் காய்காயென்று காய்ந்து புலம்பியிருக்கிறது. சமீப நாட்களாக மம்தா பானெர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டம் எதிலும் கலந்து கொள்ளாததை சந்தேகத்துடன் பார்க்கிறார்களாம்! சொந்தக்காலில் நிற்கமுடியாது ஒருகட்சி சந்தேகப்படுவதற்கெல்லாம் என்ன மரியாதை கிடைக்கும்? சொல்லுங்களேன்! 


ஜாமீனில் வெளிவந்த இஸ்லாமியத் தீவீரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு அனுதாபம் தெரிவிக்க திராவிடர்கள் இடதுசாரிகள் காங்கிரஸ் கட்சிகள் இன்னமும் வாய்பொத்திக் கொண்டிருக்கையில், பிஜேபி ஒன்றுதான் உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.  தமிழக முதல்வர் இறந்த காவலர் குடும்பத்துக்கு ஒருகோடி நிவாரணம் அறிவித்துவிட்டு அத்துடன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார் போல. இந்தப்பயங்கரத்தின் பின்னணி தகவல்கள் முழுமையாக விசாரிக்கப்படுகிறதா? இந்த பின்னணியில் மக்களுக்காக என்ற நிகழ்ச்சியில் மதன் ரவிச்சந்திரன் ஒரு விவாதத்தை நேற்றிரவு நடத்தி இருக்கிறார். வீடியோ 58 நிமிடம். கொல்லப்பட்டவர் கிறித்தவர் என்பதால் இதற்குமேலும் சும்மா இருந்தால் மரியாதை இருக்காதோ என எஸ்ரா சற்குணமும் ஜெகத் காஸ்பரும் ஒரு அனுதாபப் பேரணி,கூட்டம் எதையாவது நடத்தவிருப்பதாக சிலதகவல்கள் சொல்கின்றன. ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவு தான் என்று வெறுமனே இருந்துவிடுவது நமக்குப் புதிதா என்ன? 

மீண்டும் சந்திப்போம்.

இட்லி வடை பொங்கல்! #56 மோடி எதிர்ப்பு! இனிமேலும் கூட போணி ஆகுமா?

தமிழக அரசியல்கள நிலவரம், கூட்டணிகள் பற்றி இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை போல! அதனால் தமிழக மக்களின் நாடித்துடிப்பான, அல்லது பிரதான பொழுதுபோக்கான  மோடி எதிர்ப்பு எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது, 2019 தேர்தல்களில் போணியான மாதிரியே இனிமேலும் கூடப் போணியாகுமா  என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாமா?


சவுத் சீனா மார்னிங் போஸ்ட்! இது சீனாவின் அலிபாபா குழுமம் நடத்தும்  ஆங்கில நாளிதழ். இன்றைக்கு இப்படி ஒரு படம்போட்டு மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் போராட்டங்கள் இந்தியா சீனா அல்ல என்று காட்டுகின்றன  என்ற தலைப்பிட்டு ஒரு செய்திப்புரட்டை வெளியிட்டிருக்கிறது. எழுதியது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு வங்காளி தேபசிஷ்  ராய் சவுத்ரி! கொஞ்சம் வேடிக்கையான செய்திக்கட்டுரை.


1975 இல் வெளியான தீவார் (சுவர் The Wall) படத்தில் அமிதாப் பச்சன், சசிகபூர் பேசும் இந்தப்பகுதி, வசனத்தோடு இந்திய அரசியலை ஒப்பிட்டு ஆரம்பிக்கிற விதம் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. காரணம் இந்தப்படக்காட்சியில் மேஃபியா டான் ஆன அண்ணன் அமிதாப், போலீஸ் அதிகாரியான தம்பி சசியிடம் பேசுகிற வசனத்தின் இறுதிப்பகுதி. அண்ணன் தம்பியிடம் போலீஸ் வேளையில் என்ன இருக்கிறது 500 ரூபாய் சம்பளம் ஒரு குவார்ட்டர்ஸ், ஒரு ஜீப் இவ்வளவுதானே! என்னிடம் பங்களாக்கள் கார்கள் பேங்க் பாலன்ஸ் எல்லாம் இருக்கின்றன என்று சொல்வதற்கு பதிலாக, தம்பி என்னோடு அம்மா இருக்கிறாள் என்று சொல்கிற கட்டம். அம்மா என்கிற இடத்தில்  ஜனநாயகம் என்று வைத்துக் கொள்ள வேண்டுமாம்! அப்படியானால் சீனாவை மேஃபியா கூட்டமாகச் சொல்கிற மாதிரி அல்லவா ஆகிறது? (இப்படி யார் கேட்கப்போகிறார்கள் என்ற தெனாவட்டுடன் கட்டுரை தொடர்கிறது)  குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக அங்கங்கே கிளப்பி விடப்படும் போராட்டங்களை வைத்தே மோடி தன்னை ஷி ஜின்பிங் என்று நினைத்துக் கொள்ளலாம், ஆனால் உண்மை அப்படியல்ல என்று பலவிஷயங்களைத் தொட்டு தலையைச் சுற்றி சுற்றி மூக்கைத் தொடாமலே முடிகிற சுற்றல் கட்டுரை. Deputy Editor  Debasish is a Jefferson Fellow and winner of multiple Hong Kong News and SOPA awards. He has worked and lived in Calcutta, São Paulo, Hua Hin, Bangkok, Beijing, and Hong Kong. என்ற அறிமுகத்தோடு தற்சமயம் சிட்னி பல்கலைக்கழகத்தின் Sydney Democracy Network இல்    Sr. Research Fellow ஆக இருக்கிறார் என்பதே வேறு பல விஷயங்களையும் சொல்லிவிடுகிறது.  


வீடியோ 10 நிமிடம் 

அன்னிய மண்ணில் ஒரு படுகொலையைச் செய்து விட்டு, தெனாவட்டாகவும் பேசுவது அமெரிக்க அதிபர்களில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு மட்டுமே கைவந்த கலை. இதற்கு முன்னால்  பில் கிளிண்டன் தகுதி நீக்கம் (impeachment)  செய்யப்படுகிற நிலையில் இருந்த போது இதேமாதிரி ஒரு ராணுவத் தாக்குதலை நடத்தினார் என்பது ட்ரம்புக்கும் கூட  ஒரு முன்னோடி இருந்திருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வதே ஒரு வரலாற்று சோகம். இந்தப்படுகொலையைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகப் படிக்க இங்கே பார்க்கவும்      

அமெரிக்க ஊடகங்கள் மிகவும் விசித்திரமானவை. தங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு வேறொரு நியாயம் என்று வெட்கமே இல்லாமல் இரட்டை நிலை எடுப்பது வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் முதலான ஊடகங்களின் பொதுவான குணம். இவர்கள் நரேந்திர மோடிக்கு எதிரான செய்திகளை பிரசுரிப்பதில் ஒருவித உள்நோக்கத்துடனேயே செயல்படுவதை எத்தனைபேர் இங்கே அறிந்திருக்கிறீர்கள்? வெட்கமே இல்லாமல், இந்தச் செய்திகளை மிகப்பெரிய விஷயமாக இங்கே பரப்புகிறவர்களை என்னவென்று சொல்வது?

      விவாதம் 48 நிமிடம் 

TimesNow TV NewsHour  விவாதங்களைப் பார்ப்பதே சமீப நாட்களில் வெகுவாகக் குறைந்து விட்டது என்பதை இங்கே ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன். காரணம் நேரப்பற்றாக்குறை என்பது மட்டுமே அல்ல. ஆனாலும் நாவிகா குமார் நடத்திய நேற்றைய NewsHour விவாதத்தைப் பார்த்தபோது, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அப்பட்டமாகத் திரித்து, அதென்னவோ இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டே எதிர்க்கிறமாதிரி ஒரு இல்லாதபூச்சாண்டி, அச்சத்தைக் கிளப்பிவிட்டு, கலகம், வன்முறை, போராட்டங்கள் என்று ஆரம்பித்தது நெல்லை கண்ணன்கள் மாதிரிப் பிள்ளைப்பூச்சிகளுக்குக் கூடக் கொடுக்கு முளைத்துக் கொட்டுகிற மாதிரி ஆகிவிட்டதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்? கோலம்போட்டுப் போராடின காயத்ரியின் முகநூல்பக்கத்தில் பாகிஸ்தான் சார்புள்ள அமைப்பின் தொடர்பு இருந்ததைப் போலீஸ் கமிஷனர் ஆதாரங்களுடன் வெளியிட்டதையும் தானே பார்த்தோம்! இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கே இருக்கிற திராவிட கழகம் இன்னபிற உதிரி அமைப்புக்களின் போர்வையில் திமுகழகம் மோடி எதிர்ப்பு ஒன்றை மட்டுமே விதைத்து, தேர்தல் அறுவடையை செய்துவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம்?

      
இந்த உள்ளூர்க் கேள்விக்கு நெல்லை கண்ணனை ஏன் திமுக கைவிட்டது என்ற விவாதத்தை  மதன் ரவிச்சந்திரன் நடத்தி விடைதேட முயற்சித்திருக்கிறார். விவாதம் 59 நிமிடம். நாடாளுமன்றத் தேர்தல்களில் வீரியத்தோடு எழுப்பிய நரேந்திர மோடி எதிர்ப்பு உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் கோலம் போடுகிற போராட்டமாகக் குறுகிவிட்டது. இன்னும் இந்தவொரு விஷயத்தை மட்டுமே வைத்து திமுக தொடர்ந்து அரசியல் செய்யமுடியும் என்றா நினைக்கிறீர்கள்?

விடை திமுகவிடமோ காசுக்குக் கூவுகிற ஊடகங்களிடமோ இல்லை! அது   உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. அதுவாவது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.           
       

இட்லி வடை பொங்கல்! #54 ஜோதிமணி! ராகுல் காண்டி! மதன் ரவிச்சந்திரன்!

நாடாளுமன்ற விவாதங்களில் பலரும் ஆவேசமாகப் பேசி கவனத்தை ஈர்ப்பார்கள். மிகப்பலர் தூங்கியே நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் கெடுப்பார்கள்! அப்படித் தூங்கி, விவாதப்பொருளாக ஆகியிருப்பவர் கரூர் தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா மீது காங்கிரஸ் எம்பி மனீஷ் திவாரி ஆவேசமாகப் பேச ஆரம்பித்த 3வது நிமிடத்திலேயே பின்வரிசையில் ஜோதிமணி ஆனந்தமாகத் தூங்க  ஆரம்பித்து விட்டார்!  இப்போதாவது கவனியுங்களேன்! ஒரு 7நிமிடத்தூக்கம் கலைந்து முழித்துப்பார்த்துவிட்டு மறுபடி தூங்கப் போய்விடுகிறார்! பாவம் மணீஷ் திவாரி! முதுகுப் பக்கம் பார்க்கிற வசதி மட்டும் இருந்திருந்தால் நொந்தே போயிருப்பார்! 


நம்மூர் எம்பிக்களுடைய யோக்கியதை அவ்வளவு தானே! இது என்ன பிரமாதம் என்று போய்விட வேண்டியது தானே?


ஆனால் எழுத்தாளர் மாரிதாசுக்கு அப்படி ஒதுங்கிப்போக விருப்பமில்லையாம்! கரூர் எம்பி ஜோதிமணியின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் எப்படி என்பதை இந்த 18 நிமிட வீடியோவில் அலசிக் காயப் போடுகிறார். ஒரு சாதாரண அட்டெண்டர் வேலைக்குக் கூடக் குறைந்தபட்சக் கல்வித்தகுதி கேட்கிற தேசத்தில், சட்டம் இயற்றுகிற அதிகாரம் படைத்த நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினருக்கு, அரசியல் சட்டம், சட்டம் இயற்றுவதென்றால் என்ன என்பதைப் பற்றிக் கொஞ்சமும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை என்பது எத்தனை பெரிய நகைமுரண்? யோசித்துப் பாருங்களேன்!
     
     

நேருவுடைய வாரிசுகள் எவருமே படிப்பாளிகள் இல்லை! சுத்தமான தறுதலைகள், தற்குறிகள் என்பதை எழுதி எழுதி எனக்கே அலுத்து விட்டது. 


  
பன்றிகளுக்கு முத்தின் அருமை பெருமை எதுவும் புரியாது என்பதுதான் பிபிசிக்காரர்களுக்குச் சொல்ல வேண்டிய சரியான பதிலாக இருக்கும்! சரிதானே!!


இந்திரா வாரிசுகளுக்கு புத்தி அவ்வளவுதான்! இனிமேல் காங்கிரசை அந்த ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்பது மட்டும் தெளிவாகிக் கொண்டே வருகிறது. பிஜேபிக்கு சரியான அரசியல் மாற்று இடதுசாரிகளிடமிருந்து தான் வரமுடியும் என்ற நிலையில் இங்கே இடதுகள் திமுகவிடம் அண்டிப்பிழைக்கிற கும்பலாகக் குறுகிப் போய்க்கிடக்கிறதே! 


திமுகவின் தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதற்கு IPac என்ற ஏஜென்சியை நடத்திவரும் பிரசாந்த் கிஷோர் வந்திருப்பது நிறைய சர்ச்சைகளை கட்சிக்குள்ளேயே உருவாக்கி இருக்கிறது. பிரசாந்த் கிஷோரைப் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி, ஜெயிக்கும் என்று தெரிகிற பக்கம் வலுவில் வந்து ஒட்டிக் கொள்கிறவர், இவரிடம் தலையைக் கொடுப்பதில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது முதல் எந்தத் திக்கைப் பார்த்து என்ன பேச வேண்டும் என்பதுவரை பிரசாந்த் கிஷோருடைய தலையீடு நிறைய இருக்கும் என்பதாக. திமுகவுக்கு இது புதிதா என்ன? இசுடாலின் முன்னணிக்கு வர ஆரம்பித்த நாட்களில் இருந்தே மாப்பிள்ளை, கிச்சன் கேபினெட் என்று பலவிதமான ஆதிக்கங்கள் இருந்து வருவது தெரிந்ததுதானே! அந்தவகை லிஸ்டில் இன்னும் ஒன்று சேர்ந்து கொள்கிறது என்று விட்டுவிடாமல் மதன் ரவிச்சந்திரன் ஒரு விவாதம் நடத்துகிறார். வந்தவர்களும் நன்றாக சவுண்டு கிளப்புகிறார்கள்! வீடியோ 56 நிமிடம். பொழுதுபோக்க ஒரு  நல்ல விவாதம்! அதற்குமேலே என்ன சொல்வது?

மீண்டும் சந்திப்போம்.  
           

இட்லி வடை பொங்கல்! #53 ஒரு என்கவுன்டரும் பல எதிரொலிகளும்!

கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா ஹைதராபாத் என்கவுன்டர் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமான மனோநிலையில் கார்டூன் வரைந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். மற்றப்படி எங்கே பார்த்தாலும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சூடான விவாதங்களுமாக மட்டுமே இந்தவிஷயம் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.


இந்த வீடியோ 53 நிமிடம் எப்படி என்பதை  நீங்களே பார்த்து விட்டு முடிவு செய்துகொள்ளலாம்!

   
குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாலுபேருமே தப்பிக்க முயன்றார்கள், போலீசாரைத் தாக்கவும் முயன்றார்கள், தற்காப்புக்காக சுட்டதில் நாலுபேருமே செத்தும் போனார்கள் என்கிறது போலீஸ் தரப்பு. உயிர் போகாமல் சுட்டுப்பிடிக்க முடியவில்லையா என்கிற கேள்வியை ஏன் எவரும் எழுப்பவில்லை? இந்த விஷயத்தில் என்னென்ன மாதிரிக் குரல்கள் எழுகின்றன என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா?

எனக்கு செய்திகளின் உண்மைத்தன்மையில் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது.பல செய்திகள் எப்படி திரிக்கப்படுகின்றன மிகைப்படுத்தப்படுகின்றன அடக்கி வாசிக்கப்படுகின்றன என்று அருகேயிருந்து பார்த்திருக்கிறேன். உண்மையில் இங்கே செய்தியே இல்லை.ஒபினியன்கள் தான் இருக்கின்றன.இதை எல்லா தரப்பும் செய்கிறார்கள்.ஒருமுறை தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான நபர்களில் ஒருவர் போலிச் செய்திகளாகப் பகிர்ந்து கொண்டிருந்தார். அவரிடம் சுட்டிக்காட்டியும் அதை நீக்கவில்லை. 'அவர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.நாம் செய்தால் என்ன?இருக்கட்டும்'என்றார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
பிரியங்கா ரெட்டி விஷயத்தில் அவர் இறந்ததை மட்டுமே நான் நம்புகிறேன். அவருக்கு என் அஞ்சலிகள்.ஆண்,பெண்,மாற்றுப் பாலினத்தவர் என்றெல்லாம் பிளவுறாத ஒரு கிரகத்தில் அவர் பிறக்கட்டும்
இப்போது என்னைப் பொறுத்தவரை உண்மையான செய்தி என்பது நீங்கள் கேள்விப்படாத செய்திதான்.நீதி என்று உங்களுக்கு சொல்லப்படுவது மிகச் சாமர்த்தியமாக திரிக்கப்பட்ட ஒரு போலிச் செய்தி. அவ்வளவுதான். 


உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் என்ற இடத்தில் சிதைக்கப் பட்ட பெண் ஒருத்தி நீதிமன்றத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்ததும் செய்த முதல் காரியம் அவளை உயிரோடு கொளுத்தியது! 85% தீக்காயங்கள், பலமணிநேரமாக உயிருக்குப் போராடிய அந்தப்பெண் இன்றைக்கு இறந்துவிட்டாள். என்ன நீதி கிடைத்தது?

People love violence. So when you give a solution to rape like hang the rapists, lynch them, castrate them, murder them--people just love the idea. But when you say educate men about women's equality, fight patriarchy &misogyny, eradicate women's oppression--people won't like it.
9:58 AM · Dec 4, 2019Twitter for Android
'மக்களுக்கு வன்முறை ரொம்பவும் பிடித்த விஷயம். எனவே ரேப்பிஸ்ட்களை தூக்கில் போடுங்கள், வெட்டி தள்ளுங்கள், ஆண்மையை நீக்குங்கள், சுட்டு தள்ளுங்கள் - என்றெல்லாம் சொன்னால் அவர்களுக்கு மிகவும் இனிக்கிறது. ஆனால் பெண்களை சமமாக நடத்த ஆண்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தந்தைவழி குடும்ப முறையை எதிர்த்துப் போராடுங்கள், பெண் ஒடுக்குமுறையை ஒழியுங்கள் - என்றெல்லாம் சொன்னால் கசக்கிறது.'

தஸ்லிமா நஸ்ரின் சொல்லியிருப்பதில் உள்ள நியாயம் புரிகிறதா?  


 இது செம நக்கலு.

என்கவுன்டர்களைக் கொண்டாடுகிற சமூகமாக நாம்  தாழ்ந்துவருகிறோம் என்பதைத் தாண்டி, எப்படிப்பார்த்தாலும் என்கவுன்டர்களை எந்தவகையிலும் நியாயப்படுத்தவே முடியாது! 

மீண்டும் சந்திப்போம்.