
சண்டேன்னா மூணு! ரஜனி வாய்ஸ்! ரங்கராஜ் பாண்டே பார்வை! நச்சுன்னு ஒரு கமெண்ட்!

மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா அரசியல்! சீனத்துச்சண்டியர் முண்டா தட்டுகிறார்!
இட்லி வடை பொங்கல்! #68 கொரோனா களேபரங்கள்! மம்தா! சீனப்பூச்சாண்டி! பானாசீனா!
#FCC #FederalCommunicationsCommission #ChinaMobile #ChinaUnicomAmericas #ChinaTelecomAmericas #PacificNetworksCorp #ComNet
அமெரிக்காவின் FCC...அமெரிக்க தொலைத்தொடர்புக்கான நிர்வாக அமைப்பு. கடந்த வருடம் மே மாதம், சீன கம்யூனிச அரசுக்கு சொந்தமான China Mobile நிறுவனம் ...அமெரிக்காவில் இயங்குவதற்கு அனுமதி மறுத்தது FCC. காரணம்...அதன் மூலம், அமெரிக்காவிற்குள்... சீனா தன்னுடைய உளவு வேலையை நிகழ்த்தும் என்று கூறியது.கடந்த மாதம்...அமெரிக்க நீதித்துறை ...சீன தொலைத்தொடர்பு நிறுவனங்களை அமெரிக்காவுக்குள் இயங்க அனுமதிப்பதை தடை செய்யும்படி சிபாரிசு செய்தது.
இந்த நிலையில்...அமெரிக்காவில் இயங்கி கொண்டிருக்கும் China Telecom Americas , China Unicom Americas, Pacific Networks Corp, இதன் துணை நிறுவனமான ComNet [USA] LLC ஆகிய சீன அரசு நிறுவனங்களை ...தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்காவிட்டால்..தடை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது..FCC.
சீன அரசு நிறுவனத்திற்கு எப்படி சீன தொடர்பு இல்லாமல் இருக்கும் ? பின் ஏன் இப்படியான அறிவிப்பு ? என்று அபத்தம் போல தோன்றினாலும் தகுந்த காரணம் உண்டு.
உலகமயமாக்கலுக்கு பின்...உலக வியாபார ஒப்பந்தங்களின் படி ...அனுமதி அளிக்கப்பட்ட பிற நாட்டு நிறுவனத்தை வெளியற்றவோ..தடை செய்யவோ ..தகுந்த காரணங்களை கூற வேண்டும்.
அந்த சீன அரசு நிறுவனங்களால்..தங்களுக்கு சீன தொடர்பு இல்லை என்று நிரூபிக்க இயலாது என்பதால் தான் அப்படியொரு கேள்வி.
தாமதமாகவேனும் அமெரிக்காவும், இந்தியாவும், இதர உலக நாடுகளும் விழித்துக் கொண்டு காய்களை நகர்த்துகின்றன.இதற்கான எதிர்வினைகள் தான்...'உள்நாட்டு குழப்பங்கள்' உட்பட வேறு வகைகளில்...வேறு வடிவங்களில் ..வெளிப்படுகிறது.
அருண் ஜெயிட்லியையே குறைசொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர் மேலே போய்ச்சேர்ந்து விட்டார். பானாசீனா மீதான வழக்குகள், விசாரணையின் நிலையென்ன? யாருக்காவது தெரியுமா?
மீண்டும் சந்திப்போம்.
கொரோனா வைரஸ் காலத்திலும் கூட சிரிப்புக்குப் பஞ்சமில்லை!
கொரானா அரசியல்
நோய் பரவி பேரிழப்பு ஏற்பட்டால் உயிர் இழப்பு சார்ந்த வேதனை மட்டுமல்லாது நிவாரணப்பணி, பொருளாதார மீட்பு நடவடிக்கை சார்ந்தும் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி தேசத்தை மேலும் முடக்கலாம்.
பெரிதாக இழப்பு எதுவும் நடக்கவில்லையென்றால், ஊரடங்கு, தேசத்தின் ஒற்றுமை, மக்களின் பொறுப்புணர்வு, தற்காப்பு நடவடிக்கைகள், மருத்துவ – சுகாதார – காவல் பணியாளர்களின் கடின முயற்சி எல்லாம் ஒன்றுமில்லை. நோய் வீரியம் குறைவு என்று சொல்லிவிடலாம்.
தீமை நடந்தால் பழி மத்திய அரசின் மீது. நன்மை நடந்தால் புகழ் மத்திய அரசுக்குக் கிடைக்கக்கூடாது. தேச விரோத சக்திகளின் செயல் திட்டம் இதுவே.
ஏற்கெனவே தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக இந்தியா வந்து பல மசூதிகளில் கூட்டங்கள் கூட்டி நோயைப் பரப்பச் செய்த சதித்திட்டம் மெள்ள அம்பலமாகத் தொடங்கியிருக்கிறது. அதை திசை திருப்ப செயல் திறன் இன்மை, அலட்சியம் என்ற போர்வையில் திட்டமிட்டே மக்கள் ஊரடங்கை மீற ஒவ்வொரு மாநில அரசும் தன்னால் ஆன திருபு வேலைகளைச் செய்துவருகிறது.
கொல்ல முயற்சி செய்தவனின் கை ரேகை பதிந்த கத்தியை காட்சிப் பொருளாக வைத்து பலரையும் தொட வைத்துவிட்டால் கொலைகாரனைத் தப்புவித்துவிட முடியும் அல்லவா. அதுதான் இப்போது நடந்து வருகிறது.இப்போதைக்கு கொலைகாரன் பிடிபடாவிட்டாலும் பரவாயில்லை; குத்துப் பட்டவன் இறக்காமல் இருந்தாலே போதும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
கொலைத் தொழிலை ஒரு கலையாகக் கற்றிருக்கும் கூட்டத்திடமிருந்து இப்படித்தான் தப்பியாக வேண்டியிருக்கிறது.
*
இன்றைய நாட்டு நடப்புகளை வேறொரு கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது.இந்தியாவில் கொரானா நோய்ப் பரவல் இல்லை. சமூகத் தொற்றாக மாறவில்லை.அயல் நாட்டில் இருந்து வந்தவர்கள் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டிருக்கிறார்கள். அல்லது கனிகா கபூர் போன்ற பிரபலங்கள் விருந்துக் கூட்டம் நடத்தியும் இத்தாலியில் இருந்து கேரளா வந்த கிறிஸ்தவ குடும்பம் ஊரெல்லாம் சுற்றி வந்தும் அவர்களிடமிருந்து பிறருக்குப் பரவவில்லை.
அடுத்ததாக 21 நாள் ஊரடங்கு என்பது நிச்சயம் நோய்த்தொற்றுச் சங்கிலியை முடக்கித்தான் போட்டிருக்கிறது. சந்தைகளில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூடுவதை நாம் பெரிதும் நோய் சார்ந்த பயத்துடன் பார்க்கவேண்டாம் என்றே இதுவரையான நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
ஏனென்றால் கோயம்பேடு, கோவை என பேருந்து நிலையங்களில் மக்கள் கூடி நின்ற பின்னரும் பின் வந்த நாட்களில் அது நோயாக வெடித்திருக்கவில்லை. அதிகபட்சம் ஐம்பது மணிநேரத்துக்குள்ளான ஆயுள் கொண்ட கொரோனா கோயம்பேட்டில் கூடி நின்றவர்கள் மூலம் மாநிலம் முழுவதும் இத்தனை நாட்களுக்குள் பரவியிருக்கவேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதாவது, நோய்த் தொற்று இல்லாத ஆயிரம் பேர் ஒரு இடத்தில் கூடி நின்றாலும் பெரிய இழப்பு இல்லை என்பதுதான் மருத்துவ உண்மை. அதற்காக மக்கள் பெருந்திரளாகக் கூடுவதை அனுமதிக்க முடியாதுதான். அது நிச்சயம் தவறுதான். ஆனால், அது தொடர்பான அச்சம் தேவையில்லை என்றே தோன்றுகிறது (உயிரிழப்புகள் பெருகாததால்).
அது அரசியல்வாதிகளின் சதி அல்லது செயல்திறன் இன்மை மட்டுமே (முதலாவதே உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு). அதை வேறு வகையில்தான் கையாளவேண்டும்.
இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சீனர்களைக் கட்டிப் பிடித்து வெளிப்படுத்திய போலி நட்புணர்வு (ஆட்சியாளருக்கு எதிரான ஆட்டுமந்தைச் செயல் மட்டுமே), ஒரே நேரத்தில் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்து குவிவதால் ஏற்படும் சிக்கல் இவையே அங்கு இத்தனை உயிரிழப்புகள் ஏற்படக் காரணம்.
இந்தியாவிலும் பலர் நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் (மூன்றாம் கட்டத்துக்குச் சென்றால்) நிச்சயம் இழப்பு அதிகரிக்கும். ஆனால், ஊரடங்கு ஒப்பீட்டளவில் சரியான நேரத்தில், சரியான முறையில் அமலாகிவிட்டதால் கொஞ்சம் தைரியமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
கொரோனா வைரஸ் இந்தியாவுக்கு நோய் சார்ந்து அல்ல; பிற வழிகளில்தான் பிரச்னையைத் தரப்போகிறது. இந்தியப் பொருளாதாரமும் சமூக ஒழுங்கும்தான் பெரிதும் பாதிக்கப்படப் போகிறது.
தேசம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத புயல், வெள்ளம் வந்து போனதுபோல் ஒரு பெரும் சேதம் ஏற்படவாய்ப்பிருக்கிறது. ஆனால், உயிரிழப்பைவிட இது ஒப்பீட்டளவில் சமாளிக்க முடிந்த பிரச்னையே. கத்திக் குத்து அல்ல; சாட்டையடிதான்.
கொரானா வைரஸ் பற்றிய மருத்துவர்கள் சொல்லும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அது தன்னளவில் அபாயகரமானது அல்ல. ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட உடம்பைத்தான் அது மேலும் பாதிக்கும். அந்த நோய்களைத்தான் தீவிரப்படுத்தும்.
அதை அப்படியே சமூக அளவில் பொருத்திப் பார்த்தால், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம், பிரிவினைவாதம், எதிர் பொருளாதாரச் செயல்பாடுகள் போன்றவற்றைத்தான் அது மேலும் தீவிரப்படுத்தும்.
சண்டேன்னா மூணு! #வாழ்த்துவோம்! #கொரோனா #வரலாறு
இட்லி வடை பொங்கல்! #64 #கொரோனா #அரசியல் படுத்தும் பாடு!
மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா #அரசியல் இன்று!
சண்டேன்னா மூணு! #கொரோனாவைரஸ் #அரசியல் #ரஜனிகாந்த்
சண்டேன்னா மூணு! அதிசயம்! ஆச்சரியம்! அரசியல்!

ஆனையை கண்டா நிறுத்து நான் ஓட்டறேன்னு கோஷி சொல்வான். அதுக்கு ட்ரைவர் ஆனையையான்னு கேப்பார். சம்திங்..க்ளா!ஸ்