Showing posts with label பாரதி. Show all posts
Showing posts with label பாரதி. Show all posts

பாட்டுக்கொரு புலவன் பாரதி!




பொய்யான பேர்வழிகளுக்குத் தான் மின்மினிப் பூச்சிகளின் சாட்சியம் வேண்டும்!
பொய் மொழியாய்  நீதான் எங்கள் உதய சூரியன் என்று பாட்டுப் பாடவேண்டும்!
பொய் மொழியைத் தானே நம்புதற்குத் தினந்தோறும் விழா நடத்த வேண்டும்!
சூரியனென்று தன்னைச் சொல்லும் மின்மினி சூரியனாய் எப்போதும் ஆவதில்லை!

சூரியனாய் என்றும் ஒளிவீசும் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!




பாரதியும் நினைவுகளும்...! நினைத்துப் பார்க்க ஆயிரம்!




"தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான துர்ப்பாக்கியம், கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுதுமையே ஆக்கிரமித்துக் கொண்டு அதைத்  தம் தரங்கெட்ட செல்வாக்கினால் கெடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளும் சினிமாக்காரர்களும் தான். இந்த இரண்டு சக்திகளும் விளைவித்திருக்கும் கலாச்சார, அறிவார்த்த சீரழிவை தமிழ் மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்று வருகிறார்கள். வருடங்கள் கழிகின்றன. சீரழிவும் நாளுக்கு நாள் பெருக, அதற்கேற்ப மக்கள் இன்னும் அதிக உற்சாகத்தோடு அதை வரவேற்று மகிழ்கின்றனர்.

இந்த இரண்டு சக்திகளும் நாட்டைக் கெடுக்கின்றன. தம் சுய நலத்தைப் பேணுவதும் தம் பிம்பத்தைப் பூதாகாரமாக வளர்த்துக் கொள்வதுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கம் கலப்படமற்றது.  

இவர்கள் நாட்டைச் சுரண்டுகிறார்களே தவிர சமூகத்திற்கு இவர்கள் ஏதும் கொடுப்பதில்லை. பாமரத்தனமும் இரைச்சலிடும் பாசமும் நிறைந்த இந்த சமயத்தில், தன் அறிவார்த்த தைரியத்திற்கும், எந்த அபத்தத்தையும் எக்காரணம் தொட்டும் சகித்துக்கொள்ளாத புரட்சியாளனுமான, 1889-ல் பிறந்த வ.ரா. என்னும் எழுத்தாளனின் நூறாண்டு நினைவு தினம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், யாராலும் கொண்டாடப்படாமலும் வந்த சுவடு தெரியாமல் கழிந்து விடும். இன்றைய தமிழ் சமூகத்தின் குணத்தை நாம் நன்கு அறிந்திருப்போமானால், வ.ரா. வை தமிழ் சமூகம் நினைவு கொண்டிருந்தால் மட்டுமே நாம் ஆச்சரியப்படவேண்டியிருக்கும்.

சுப்பிரமணிய பாரதியை ஒரு கவிஞராக மட்டுமே அவரது நெருங்கிய நண்பர்கள் அறிந்திருந்த காலத்தில், வ.ரா. பாரதியை வியந்து போற்றியவர். பாரதி இந்த நூற்றாண்டின் ஆரம்பப் பத்துக்களில் (1910 களில் )  புதுச்சேரியில் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி வாழ்ந்து கொண்டிருந்த போது, பாரதிக்கு உதவியாயிருந்த இளைஞர் அப்போதைய வ.ரா. பாரதியையின் வாழ்க்கையை எழுதிய முதல் புத்தகமே வ.ரா.வினது தான். அது வெற்று வரலாறோ விமர்சனமோ அல்ல. பாரதி என்ற ஆதர்சத்தின் மதுவுண்ட பரவசம் அது. பாரதியின் தேச பக்திப் பாடல்களுக்காகவே கவி என்ற இடத்தை அவருக்குக் கொஞ்சம் யோசனையோடு பாரதியை சிலர் அங்கீகரித்த காலம் அது. அந்தச் சூழலில் வ.ரா. பாரதி என்னும் கவிஞருக்காகப் போராடியதும் விவாதித்ததும் தேவையான ஒன்றாகத் தான் இருந்தது. எனவே அது உணர்ச்சிவசப்பட்டது! சண்டைத் தொனி மேலோங்கியது!

வ.ரா. பேசக் கிடைத்த மேடைகளில் எல்லாம், இருபதாம் நூற்றாண்டின் மகா கவி பாரதி என ஸ்தாபிப்பதில் தீவிரமாக இருந்தார். இன்று அந்த விவாதங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இந்த விஷயத்திற்கு இவ்வளவு போரும் புழுதி கிளப்பலும் தேவையாயிருந்ததா என்று ஆச்சரியப் படத் தோன்றும். தேவையாகத்தான் இருந்தது அந்தச் சூழலில்.

வ.ரா. பிறந்தது ஒரு பிராமணக் குடும்பத்தில். அதிலும் மற்ற பிராமணர்களை விட தாம் தான் உயர்ந்தவர் என்று தீவிரமாக நம்பும் வைஷ்ணவ குலத்தில் பிறந்தார் அவர். ஆனால் அவர் ஆஸ்திகரும் அல்ல. நாஸ்திகரும் அல்ல. அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத மனப்போக்கு உள்ளவர். சாதி, மத வித்தியாசங்கள் பற்றிய பேச்சு எழுந்தாலே முள்ளம் பன்றி சிலிர்த்தெழுவது போல சீற்றம் கொள்பவர்".

இப்படி தமிழின் மிகச் சிறந்த விமரிசகரான திரு வெங்கட் சாமிநாதன். வ.ரா என்கிற வ.ராமஸ்வாமியைப் பற்றி எழுதியிருந்த இந்தப் பகுதியை வ.ரா அவர்கள் பிறந்த  நூற்றாண்டுத் தருணத்தில்(1989),  அதாவது இருபத்தோரு வருடங்களுக்கு முன்னால் மறக்கப் பட்ட ஒரு எழுத்தாளனை நினைவு கூர்ந்த கட்டுரையைப் படிக்கும் வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்தது. அதற்கு  சிறிது நேரத்திற்கு முன்னர் தான், மின்தமிழ் கூகிள் குழுமத்தில் தமிழக முதல்வரைப் பாராட்டுவது ஏன் என்ற இழையைப் படித்துவிட்டு எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையில் இருந்த சமயம், தற்செயலாக இந்த விக்கிக் கட்டுரையைப் பார்க்க நேர்ந்தது.


வ.ரா வைப்பற்றிய இன்னொரு செய்தியைப் படிக்க இங்கே


oooOooo 

 

பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம்

( 'மகாகவி பாரதி வரலாறு ' நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்

சீனி. விசுவநாதன்



பாரதிக்குப் பற்பலரும் வரலாறுகள் எழுதியுள்ளனர்.

பாரதி வாழ்ந்த காலத்தில், அவருக்கு உற்றுழி உதவி, உறுபொருள் கொடுத்த உத்தமர்களில் பலரும் தங்கள் சொந்தப் பாங்கான அனுபவங்களைப் பின்னொரு காலப்பகுதியில் கட்டுரைகளாக வடித்தனர்; நேர் உரைகளாகப் பேட்டி கண்டவர்களிடம் சிலவற்றைப் பதிவும் செய்தனர்.

வேறு சிலர், பாரதியின் கவிதா சக்தியைப் பற்றியும், கவிதையின் அழகு, இனிமை, எளிமை ஆகியவற்றைப் பற்றி மட்டுமே வியந்து போற்றி எழுதினர்.

பாரதிக்கு மிக அணுக்கமானவர்கள் எல்லோருமே வரலாற்று நூல்கள் எழுதாமல், துண்டு துணுக்குகளாகவோ, கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ வரலாற்றுத் தொடர்பான செய்திகள் சிலவற்றை வழங்கினர்.

பாரதியை நன்கு புரிந்துகொண்டவர்களும், தெரிந்து வைத்திருந்தவர்களுங்கூட ஓரளவே வரலாற்றுக் குறிப்புக்களை வரைந்தனர்.

பாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய புலமைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உரிய - உயரிய புகழும், பாராட்டுதல்களும் கிடைக்கவே செய்திருக்கின்றன.

அவர் காலத்தில் மூன்று கட்டுரைகள் அவரைப் பற்றிப் பிரசுமாகி இருப்பதாக நான் அறிகிறேன். கர்மயோகி (1910), தேசபக்தன் வருஷ மலர் (சித்தார்த்தி - தை மாதம் 30 ஆம் தேதி - 1919) ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், New India (1919) என்னும் ஆங்கில நாளிதழிலும் பாரதி பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

பாரதியின் கர்மயோகி மாதப் பத்திரிகையில் திரு.லக்ஷ்மண சங்கரன் என்பவர் தமிழ் ஸாஹித்யத்தில் நவமார்க்கம் என்கிற கட்டுரையில் பாரதியின் பாவன்மையை வியந்து பாராட்டியும், கதை நூலைப் புகழ்ந்து பேசியும் எழுதி உள்ளார்.

தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த தேசபக்தன் வருஷ மலரில் திரு. எ.எஸ். நாகரத்தினம் என்பவர் தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் - ஓர் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் ஓர் அரிய கட்டுரையே எழுதி இருக்கின்றார்.

நியூ இண்டியா (New India) என்னும் ஆங்கில நாளிதழில் திரு. ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் Subramania Bharati and his genius என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

இப்படி இன்னும் பல கட்டுரைகள் அக்காலத்தில் வெளிவந்திருக்கலாம்.

நானறிந்தவரை, அக்கட்டுரைகள் பாரதியின் கவித்திறத்தையும், மேதைமையையும், அவர் கையாண்ட புதிய உத்திகளையும் சிறப்பித்துப் பேசும் தன்மையனவாகவே அமைந்துவிட்டன என்பேன்.

ஆம்; அவை வாழ்க்கைச் சரிதக் குறிப்புகளாகவோ வாழ்க்கைச் செய்திகளை இனங்காட்டுவனவாகவோ அமையவில்லை.

பாரதி தன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தனியே எழுதா விட்டாலுங்கூட கனவு என்ற காதற்கவிதையிலும், பாரதி அறுபத்தாறு என்னும் முற்றுப் பெறாத பாடல் தொகுதியிலும், சின்னச் சங்கரன் கதை என்னும் முற்றுப் பெறாத கதைப்பகுதியிலும், சித்தக் கடல் என்ற வசனப் பகுதியிலும், கவிதா தேவி அருள் வேண்டல் போன்ற சில பாக்களிலும் தம் வாழ்வுத் தொடர்பான சில பயனுள்ள செய்திகளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார் என்பதும் நம் கவனத்துக்குரியது.

பாரதி 1921 செப்டம்பர் 12 இல் (செப்டம்பர் 12, 1921 அதிகாலை 1 மணிக்கு பாரதி உயிர் நீத்தார். - பி.கே. சிவகுமார்) மரணம் அடைந்த பின்னரே சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புக்களும், வரலாற்று நூல்களும் வெளிவரலாயின.

பாரதி 'விண்ணவருக்கு விருந்தானார் ' என்ற செய்தியை 13-9-1921ஆம் தேதிய இதழில் வெளியிட்ட சுதேச மித்திரன் பத்திரிகையானது பாரதியைப் பற்றிய விவரங்களைத் தந்ததுடன் 'அவரது சரித்திரச் சுருக்கம் வேறிடத்தில் பிரசுரம் செய்யப்படுகிறது ' என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அப்படியொரு சரித்திரச் சுருக்கம் சுதேச மித்திரன் இதழில் நான் பரிசோதித்துப் பார்த்த அளவில் கண்ணில் படவில்லை.
சுதேச மித்திரனில் தனியே பாரதியின் சரித்திரச் சுருக்கம் பிரசுரமானதை அறிந்துகொள்ள முடியாத காரணத்தால், அவரது சரித்திரம் எந்தமாதிரியான செய்திகளைக் கொண்டு இருந்தது என்பதை அறிய முடியாமலே போய்விட்டது.

பாரதி அமரரானவுடனேயே முதன்முதலாகத் திரு.எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள் என்ற தலைப்பில் சுதேச மித்திரன் 17-9-1921ஆம் தேதியிட்ட இதழின் வழியாக அரிய கருத்துச் செல்வங்களை வழங்கினார்.

இப்பெருமகனாரைத் தொடர்ந்து பாரதி பற்றிய வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
 
1922 ஜனவரியில் பாரதி ஆச்ரமத்தார் பாரதியின் கவிதைச் செல்வங்களைத் தொகுத்து, சுதேச கீதங்கள் என்னும் தலைப்பெயருடன் இரு பகுதிகளாக வெளியிட்டனர். முதல் பகுதியில், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் - சரித்திரச் சுருக்கம் என்றும், இரண்டாம் பகுதியில் திரு.சக்கரை செட்டியார் The Political Life of Sri Subramania Bharathi என்றும் தம் நினைவுக் குறிப்புக்களை ஒழுங்குபடுத்திக் கோவையாக எழுத்தில் வடித்துக் கொடுத்தனர்.

நாவலர் சோமசுந்தர பாரதியார் தம் கட்டுரையில் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களையும் நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தந்ததுடன், பாரதியின் புலமை, ஒருசில கவிகள் எழுந்த சூழல், குணநலன்கள், தமக்கிருந்த நட்புமுறை ஆகியவை பற்றியும் விரித்துரைத்தார்.

திரு. சக்கரை செட்டியாரோ மிக விரிவாகப் பாரதியின் அரசியல் பிரவேசம், அரசியல் ஈடுபாடு ஆகியன குறித்து எழுதியதோடும் நில்லாமல், தமிழ்மக்கள் அமர கவி பாரதிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஆக, நமக்கு 1921 செப்டம்பரிலிருந்து 1922 ஜனவரிக்கும் உள்ளாகப் பாரதி வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், சரித்திரச் சுருக்கங்களும், அரசியல் ஈடுபாடு பற்றிய செய்திகளும் ஓரளவு கிடைக்கத் தொடங்கி விட்டன.

இந்த வகையில் திருவாளர்கள் ராமாநுஜலு நாயுடு, சோமசுந்தர பாரதியார், சக்கரை செட்டியார் ஆகியோரை முன்னோடிகள் என்றே கொள்ளல் வேண்டும்.


இச் சான்றோர்களுக்குப் பின்னர்தான் மண்டயம் சீனிவாஸாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சுந்தரேச ஐயர், சாம்பசிவ ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, நாராயண ஐயங்கார், நாகசாமி, பாவேந்தர் பாரதிதாசன், பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரும் இன்ன பிறரும் பாரதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எழுதினர்; தம் நண்பர்களிடமும் பாரதி பற்றிய பசுமை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மேற்குறித்த பெருமக்களின் கருத்துரைகள் எல்லாம் பாரதி வரலாற்றுக்குப் பேருதவியாய் அமைந்தன என்று சொல்லும் போழ்தில், அவை தனி நபர்களின் இளமைக்காலப் பசுமை நினைவுகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

துரதிருஷ்டவசமாகப் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பாரதியைப் பற்றிய செய்திகளைப் பின்னிட்டுத் தான் பதிவு செய்திருக்கிறார்; அதே போல, பாரதியின் முதற் பதிப்பாளராகிய பரலி நெல்லையப்பரும் தம் நினைவுக் குறிப்புக்களைப் பிற்காலத்தில்தான் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார்.

பாரதியிடம் நெருங்கிய உறவு கொண்டு பாரதிக்குத் தாசனாக வாய்த்தவரும், பாரதியாலே மிக்க அன்புடன் 'தம்பி ' என்று அழைக்கப்பட்ட பேறு பெற்றவரும் சுருங்கிய முறையில்கூட வரலாற்று நூல் வரையாமல் போனது நம்முடைய பாக்கியக் குறைவே.
 
1928ஆம் ஆண்டில் பாரதி பாடல்களில் ராஜத் துரோகக் கருத்துக்கள் இருப்பதாகச் சொல்லி, பிரிட்டிஷ் அரசு சுதேச கீதங்கள் என்னும் கவிதை நூல் தொகுதிகளைப் பறிமுதல் செய்தது. இதனால் நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன.

அச்சமயம் மீண்டும் திரு. எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் தாம் அப்போது ஆசிரியர் பொறுப்பு வகித்த அமிர்த குண போதினி மாத இதழில் சென்றுபோன நாட்கள் என்ற பொதுத் தலைப்பில் ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி என்று குறுந்தலைப்பு அமைத்துத் தொடர் கட்டுரைகள் எழுதி வெளியிடலானார்.

இத்தொடர் கட்டுரைகளில் முன்னர் - அதாவது, பாரதி மரணமடைந்த போது, தாம் எழுதிய குறிப்புக்களுடன், அந்த நாள் வரை எவரும் சொல்லாத - எழுத்துருவில் வடிக்காத பற்பல புதிய செய்திகளை எழுதி, பாரதி வாழ்க்கை வரலாற்று ஆய்வுப் பரப்பை ராமானுஜலு நாயுடு விரிவாக்கினார்.

திரு.நாயுடு அவர்கள் எழுதியளித்த அரிய செய்திக் குறிப்புகளில் பலவும் 1928 தொடக்கம் 1947 வரையிலான கால எல்லையில் பிரசுரமான பாரதி வரலாற்று நூல்களில் போதிய அளவு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதியின் மூத்த மகள் தங்கம்மாளும், இளைய மகள் சகுந்தலாவும் மற்றும் பலரும் அவ்வப்போது பத்திரிகைகளில் பாரதி பற்றி எழுதவே செய்தனர். என்றாலும், இவையெல்லாம் சற்று காலங்கடந்த நிலையில் வெளிப்பட்டனவாகும். தமிழ்ப் பத்திரிகைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்புடைய செய்திகளை வெளியிடவே செய்தன.

காலப்போக்கில், கட்டுரை வடிவில் வெளிவந்த செய்திகளையும், நினைவுக் குறிப்புக்களையும், சொந்தப்பாங்கான அனுபவங்களையும் கொண்டு பற்பலர் நூல்களை எழுத முனைந்தனர்.
 
1928இல் பாரதி பிரசுராலயத்தார் பாரதியார் சரித்திரம் என்ற பெயரால் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டனர். இது புதிய நூல் அன்று; என்றாலும் பாரதியார் சரித்திரம் என்ற தலைப்பில் வெளியான முதல் தொகுப்பு நூல் இதுவேயாகும்.
 
1922இல் பாரதி ஆச்ரமத்தார் பிரசுரித்திருந்த சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய பாரதியாரின் சரித்திரச் சுருக்கமும், சக்கரை செட்டியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமான 'ராஜீய வாழ்வும் ', பரலி நெல்லையப்பர் எழுதிய 'பாரதியாரின் தமிழ்ப் புலமை ' என்னும் கட்டுரை ஒன்று சேர்க்கப்பட்டு இந்தப் பிரசுரம் வெளியானது.
 
1929ஆம் ஆண்டிலே பாரதியின் இளைய சகோதரர் திரு. சி. விசுவநாதன் ஆங்கிலத்தில் Bharati and his works என்றொரு நூலைப் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களும், பாரதி நூல்களின் மதிப்பீடும் சேர்ந்திருந்த முறையில் எழுதி வெளியிட்டார். இந்த நூலானது, பெரும்பகுதி பாரதி படைப்பு இலக்கியங்களுக்கான கருவி நூலாகவே அமைந்துவிட்டது.
 
1936இல் ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற தேசபக்தர் கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் என்ற நூலை வெளிப்படுத்தினார்.

இதனிடையில் வ.ரா. என்று சுருக்கப் பெயரால் அழைக்கப்பெறும் வ. ராமஸ்வாமி அவர்கள் காந்தி இதழில் 1935-1936 இல் பாரதி வாழ்க்கைத் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளே 1944இல் மகாகவி பாரதியார் என்ற பெயருடன் நூலாக உருப்பெற்றன.
 
1937இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பாரதி விளக்கம் என்ற நூலை ஆக்கி அளித்தார்.

இந்த நூலின் முற்பகுதியில் பாரதி வாழ்வும், பிற்பகுதியில் பாரதி பாடல்களின் அருமை பெருமைகளும் விளக்கப்பட்டன.
 
1938இல் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்கள் பாரதி லீலை என்றவொரு நூலை எழுதி வெளியிட்டார். (இந்த நூல் 1950இல் மறு அச்சாக வெளியானபோது, பாரதியார் என்று தலைப்புப் பெயர் மாற்றங் கண்டது.) இந்த நூலில் பாரதி சரித்திரச் சுருக்கத்துடன், அவருடைய வாழ்வில் நிகழ்ந்தனவாகக் கருதப்பட்ட நிகழ்ச்சிகளும் சொல்லப் பட்டன.
 
1940இல் தி.ஜ.ர. அவர்களின் புதுமைக்கவி பாரதியார் என்னும் நூல் வெளிவந்தது. (இந்த நூல் 1946இல் மறுபதிப்பான நிலையில், அதில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டன.)
 
1941இல் பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் அவர்கள் பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்கள் கூறுகிற மாதிரியில் தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்னும் பெயரில் அமரகவியின் வரலாற்றைச் சமைத்தளித்தார். (இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1945இல் வெளி வந்த சமயத்தில் பாரதியார் சரித்திரம் என்றே நூல் தலைப்பு மாற்றங் கண்டது; சில புதிய செய்திகளும் கொண்டமைந்தது.)

1942இல் நாரண துரைக்கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுத் தேசிய கவிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் என்ற சிறுநூல் வெளி  வந்தது.

1946இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய கவிக்குயில் பாரதியார் என்ற நூல் வெளிவந்தது.

இதே 1946இல் கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் வ.உ. சிதம்பரனார் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு வி.ஓ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை திரு. வ.உ.சி. சுப்பிரமணியம் பதிப்பித்து வெளியிட்டார்.

தங்கம்மாள் எழுதிய அமரன் கதை (1946), பாரதியும் கவிதையும் (1947), பிள்ளைப் பிராயத்திலே (1947) ஆகிய நூல்களும், திரு. ரா. கனகலிங்கம்என் குருநாதர் பாரதியார் (1947) என்ற நூலும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக அமைக்கத் துணை புரிவனவாகும். இந்த நூல்கள் யாவும் பாரதியின் குணச் சித்திரத்தையும், கவிதை பிறந்த கதையையும் தெரிவிக்கின்றன.

ஆக, உண்மையில் 1928-1947க்கும் உட்பட்ட காலப்பகுதியில் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய நூல்களே வெளிவந்தன.

இது பாரதிக்கு வரலாறு எழுந்த பின்னணிச் சரித்திரமாகும்.

பாரதி அமரரான 1921ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு முடிய வெளியிடப்பட்ட பாரதி வரலாற்று நூல்களிலும், வரலாற்றுத் தொடர்பான நூல்களிலும் காணப்பெறும் செய்திகள், குறிப்புக்கள் ஆகியன சற்றே குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய அளவில் சிக்கல்கள் நிறைந்தனவாக உள்ளன; முன்னுக்குப் பின் முரண் பட்டனவாகவும் உள்ளன. நூலுக்கு நூல் மாறுபாடு கொண்டன- வாகவும் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், காலப்பிழைகளும், கருத்துக் குழப்பங்களும் மேற்குறித்த நூல்களிலே இடம் பெற்றுள்ளன.
பாரதிக்கு வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலோர், தெரிந்த செய்திகளுடன் சில நண்பர்கள் வழியாக அறிந்து கொண்டவற்றையும், பாரதி குடும்பத்தவர் தெரிவித்த சம்பவங்களையும், நினைவுக் குறிப்புக்களை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், சொந்தப்பாங்கான அனுபவங்களைக் கொண்டும், சிற்சில நூல்களில் இடம் பெற்றிருந்த செய்திக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் நூல்களை எழுதினர்.

வெளிவந்த நூல்களில் சந்தேக நிவர்த்தி செய்து கொள்ள நினைத்தும், சந்தேகத்துக்கான விளக்கம் கிடைக்காத நிலையில், வருடக் கணக்கைத் தெரிவிக்கும் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிட்டன. 

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ, நிகழ்ச்சி ஆண்டுகளையோ உறுதி செய்து தெரிவிக்கக்கூடிய நிலையில் பலரும் அந்த நாளில் இல்லை என்பதும் வேதனை தரக்கூடிய செய்தியாகும்.

இத்துணைக்கும் மேலாக அந்தக் காலத்திலேயே - பாரதிக்கு மிக நெருக்கமானவர்களும், உள்ளன்புடன் பழகியவர்களும், உறவினர்களும் வாழ்ந்த காலத்திலேயே - பாரதியைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் பற்பல கற்பனைக் கதைகள், கட்டுக்கதைகள், தவறான செய்திகள், வருஷப் புள்ளிகளில் தவறுகள் ஆகியன எல்லாம் பத்திரிகைகளிலும், நூல்களிலும் இழைய முற்பட்டுவிட்டன என்கிற பேருண்மையையும் முன்கூறிய நூல்களின் முகவுரை - பதிப்புரைகளால் அறிந்து கொள்கிறோம்.

பாரதியையே அறியாதவர்கள், அவரைப் பார்ப்பதற்கே பயந்தவர்கள் உட்படப் பற்பலரும் 'புரளிக் கதை 'களைக் கடைவிரிக்க ஆரம்பித்து விட்ட கொடுமையையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.

ஆக, ஆரம்ப நாளில் பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணைகொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த - தொடர்பு கொண்டிருந்த - நடத்திய பத்திரிகைகளின் துணைக்கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் தன்மையை உறுதி செய்துகொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை.

ஒவ்வொரு நூலாசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் பாரதியைக் கண்டு, தெளிந்து, தத்தம் படைப்புகளைப் படைத்தளித்தனர். இதன் காரணமாக, அந்நூல்களில் வரலாற்றுச் செய்திக் குழப்பங்களும், காலக்குறிப்புப் பிழைகளும் நேர்ந்தன.


மற்றும், காலந்தாழ்ந்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுவதில் ஏற்படும் தவறுகளும் வரலாற்று நூல்களில் இடம்பெற்று விட்டன.
பாரதிக்கு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களோ, வரலாற்றுச் சுருக்க நூல்களோ இல்லாத நிலையிலும், இன்றுள்ள நவீன வசதிகள் எவையும் வாய்க்கப் பெறாத சூழ்நிலையிலும், தத்தமக்குக் கிடைத்த செய்திகளையும், குறிப்புக்களையும் திரட்டி, நினைவுகூர்ந்து பாரதிக்கு வரலாறு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஈடுபட்ட பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்; மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டுவது நமது நன்றிக் கடன் ஆகும். 'நன்றி மறப்பது நன்றன்று '.

ஆகவே, பாரதிக்கு வரலாறு கண்ட முன்னோர்களின் பணிகளுக்கு நாம் தலைவணங்குவோமாக!


முன்னாளில் உருவான நூல்களில் கண்டுள்ள மாறுபட்டனவும், முரண்பட்டனவுமான செய்திகளைக் களைந்தும், காலக்கணக்கீட்டுப் பிழைகளை நீக்கியும், 'புரளிக்கதை 'களைப் புகவிடாமலும், கற்பனை வளத்திற்கு இடங்கொடாமலும் இயன்றவரை ஆதாரபூர்வமான நூலைப் பாரதிக்கு ஆக்கி அளிக்க வேண்டும் என்று சி.விசுவநாத ஐயர் துடியாய்த் துடித்தார்.


அவ்வப்போது பாரதி வரலாற்று நூலுக்குத் துணைசெய்யும் வகையில் ஆதாரபூர்வமான - நம்பகமான - பல பயனுள்ள செய்திகளைத் தாங்கி ஒருசில நூல்கள் வெளிவரத்தான் செய்தன.

'உலகம் சுற்றிய தமிழர் ' என்ற பெயரால் அழைக்கப்படும் திரு.ஏ.கே. செட்டியார் தமது குமரிமலர் இதழ் வழியாகச் செய்த பாரதி சேவையை யாரும் மறக்க முடியாது.

குறிப்பாகவும், சிறப்பாகவும், பாரதி வாழ்க்கை வரலாற்றுக்குத் துணை செய்யும் நூல்கள் எழுதிய திருவாளர்கள் ரா.அ. பத்மநாபன், பெ. தூரன், தொ.மு.சி. ரகுநாதன், பெ.சு. மணி, கோ. கேசவன் ஆகியோர் பாரதீய உலகின் நன்றிக்குரியவர்கள் ஆவர்.

ஆனாலுங்கூட, திருத்தமான வரலாறு என்று கூறும்படி நூல் ஒன்று வரவில்லை என்ற குறை இருந்து வந்தது.

என் அளவில் நான் பாரதிக்கு முழுமையான ஆதாரங்களோடு கூடிய வரலாற்றை எழுதி முடிக்கும் பணியைப் புனிதமான தேசியத் திருப்பணி என்பதாக உணர்ந்தேன்.


பாரதியின் வரலாற்றை எழுதி முடிக்கும் பணியை நான் தேசியத் திருப்பணியாக எண்ணிய காலத்தில், நானே வரலாற்றை எழுதி முடிப்பேன் என்று கனவிலும் கருதவில்லை.
சீனி விசுவநாதன் 

நன்றி: மகாகவி பாரதி வரலாறு - சீனி. விசுவநாதன் - 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035.

தொலைபேசி:  044-24315757 


பின்குறிப்பு: சீனி. விசுவநாதனை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.




பாரதி இயலை கற்பனைகளின் மைதானமாக ஆக்கிவிடும் நிலையிலிருந்து மீட்டு, ஆரோக்கியமான ஆய்வுகள் மிகுவதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியதில் பெரும் பங்கு திரு சீனி. விசுவ நாதனுடையது.என்றுசீனி விசுவநாதனுடைய நூல் தொகுப்பு ஒன்றைப் படித்தான் பரிந்துரையாக ஸ்ரீ ரங்கம் வி மோகன ரங்கன் எழுதிய கட்டுரையை வாசிக்க இங்கே




என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

.
பிரிட்டிஷ்காரர்களுக்கும் சரி, அதன் கூட்டு நாடுகளான ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கும் சரி, இந்தியா என்றால் கொஞ்சம் இளப்பம் தான்!
 


ந்திய அரசின் இன்டலிஜென்ஸ் பீரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு அதிகாரி. கனாடாவில் வாழும் தன்னுடைய மகனுடன் சேர்ந்து இருப்பதற்காகத்  தற்காலிகக் குடியேற்றத்திற்கான விசாவிற்கு விண்ணப்பித்தார். கனடிய தூதரகம் ஒருமுறை அல்ல, இரண்டு முறை அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தது. சொன்ன காரணம். "அவர் பணிபுரிந்த நிறுவனம், வன்முறையில் ஈடுபடுகிற ஒன்றாம்! கனடிய மக்களுடைய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதாம்."

து ஏதோ ஒரு முறை நடந்த தற்செயலான தவறு மாதிரித் தெரியவில்லை. 


மூன்று ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கும் விசா மறுக்கப் பட்டிருக்கிறது.  ஏ எஸ் பாஹியா என்பவருக்கும் அவரது மனைவிக்கும் விசா மறுக்கப் பட்டதற்குச் சொன்ன காரணம், அவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றியவராம்! இவருக்கும் இன்னும் இரண்டு பஞ்சாபி அதிகாரிகளுக்கு விசா மறுக்கப் பட்டதற்கு  சொல்லப் பட்ட காரணம், வேலையில் இருந்த தருணங்களில் மனித உரிமைகளை  மீறிச் செயல்பட்டிருப்பார்களாம்!

தைவிட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை குறித்தான விமரிசனம்: 'ரொம்பவும் பேர்போன வன்முறை ஸ்தாபனமாம்!'  


செய்தியை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்க இங்கே!  

னடிய ஹைகமிஷனுக்குக் கடும் கண்டனங்களை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். கனடாவின் இந்தப் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற சொல்லிவிட்டு, பத்திரிகைகளில் இந்த விவகாரத்தைப் பெரிதாக ஊதிவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அமைச்சர் இப்படி ஊடகங்களை வேண்டிக் கொள்வது இது முதல் முறை அல்ல.

னடிய அரசோ, இந்தியாவில் கிளம்பியிருக்கும் இந்தப் பிரச்சினையை பற்றி எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது.


ந்திய அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகள் விடுவார்கள், பத்திரிகைகளில் ஓரிரு  நாள் செய்தி வரும்!அப்புறம் இப்படி ஒரு விஷயம் நடந்தது என்பதையே மறந்து போய் விடுவார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அல்லது இவர்களால் இதற்கு மேல் என்ன செய்து விட முடியும் என்ற திமிரோ எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், கனடிய அரசு கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருப்பது, இந்திய அரசை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை என்பதைத் தெளிவாகவே சொல்கிறது!

ள்ளூரில் ரொம்பவே  சவடால் பேசும் ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டு சர்வதேச அரங்கில் எவ்வளவு பலவீனமானதாகப் பார்க்கப் படுகிறது என்பதற்கு இது ஒரு சாம்பிள்.
 

இந்த விஷயம் அம்பலமானதில் இருந்தே மக்களுடைய கோபம் அதிகரித்து வருவதைப் பார்த்த பிறகுதான், உள்துறை, வெளித்துறை எல்லாம் சேர்ந்து கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. பதிலடி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று உள்துறை செயலர் ஜி கே பிள்ளை வீரமாகப் பேசியிருக்கிறார். பானா சீனாவுக்குத் தோதான செயலாளர் தான்!

முறையான, தெளிவான வெளியுறவுக் கொள்கை ஒன்றை நம்மால் விடுதலை அடைந்து அறுபத்து மூன்று ஆண்டுகளாகியும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்பது  காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு ஏற்படுத்தி வைத்திருக்கிற சாபக் கேடு.

ந்திய அரசு கொஞ்சம் ரியாக்ட் செய்திருக்கிறது. ஆனால், தேசத்தின் தன்மானத்தைக் காப்பாற்றும் விதத்தில் இவை போதாது. 

ந்தியாவுடனான ராஜரீக உறவுகளில், எவ்வளவு அடாவடியாக மேற்கத்திய நாடுகள் நடந்துகொள்ளும் என்பது ஒரு புறம். வெளியுறவுத் துறை அமைச்சர், அல்லது அமைச்சகம் கையாலாகாத் தனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருப்பதையே இது மாதிரி, இந்தியா தொடர்ந்து அவமானப் படுத்தப் படுகிற நிகழ்வுகள் எடுத்துச் சொல்கிறது. 


துவே சீனாவாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்! சீனப் பூச்சாண்டி ஒருபக்கம் இருந்தாலும், சீனாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்பதையும் இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!

சுதந்திரம் பெற்ற பிறகும் வெள்ளைத்துரைமாரிடம்  கை கட்டிப் பவ்யமாக நிற்கிற அசிங்கம், இந்தியாவின் முதல் பிரதமரிடமிருந்தே ஆரம்பித்தது.


ல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டுக்களின் மீது ஏறியே நரகத்துக்கும் போகலாம் என்று தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக் கொண்டே தோழர் வரதராஜன் சொல்கிற ஒரு ஆங்கில மேற்கோளை இந்தப் பதிவுகளின் பலபக்கங்களில் பார்த்திருக்கிறோம். 

ல்லது என்று நினைத்துக் கொண்டு நேரு ஆரம்பித்து வைத்த நிறைய விஷயங்கள், குறிப்பாக வெளியுறவுக் கொள்கை, இந்த நாட்டைத் தொடர்ந்து நரகத்துக்கே கொண்டுபோனதை, காங்கிரஸ் வாரிசு அரசியல் அந்தத் திருப்பணியை இன்னமும் அதிதீவீரமாகச் செய்து கொண்டிருப்பதை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!



  இந்த மிதப்புத் தானே ஆளைக் கவிழ்த்தது! 
இந்த நாட்டையும் கெடுத்தது!

நேருவின் நல்ல எண்ணங்களின் மீதோ, அவர் இந்த நாட்டை நேசித்ததிலோ எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இருந்ததில்லை. அப்படி ஒரு குற்றச்சாட்டு, விமரிசனத்தை வைத்து இந்தப் பதிவு எழுதப் படவில்லை.

னால் மனிதன் செய்த எதுவுமே இந்த நாட்டுக்கு உபயோகமாக இருந்ததில்லை என்பது ஒருபுறம். இந்தத் தனிமனிதரின் பலவீனம், புகழின் மீதான ஆசை, இந்த நாடு இன்றைக்குச் சந்தித்துக் கொண்டிருக்கும் உபத்திரவங்கள் அத்தனைக்கும் காரணமாக இருந்ததை மறந்துவிட முடியுமா?



"இந்தியா தான் இந்திரா! இந்திரா தான் இந்தியா!

ப்படிக் கூவியே அப்புறம் காணாமல் போன ஒரு கிறுக்கு மாய்க்கானைப் பற்றி இங்கே பார்த்திருக்கிறோம், நினைவிருக்கிறதா?

ன்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

பாரதியின் ஆதங்கம் இப்படிக் கவிதை வரிகளில்  வெடித்தது நினைவு வருகிறதா?


பதிவை வலையேற்றம் செய்தபிறகு தான் நினைவு வந்தது. இன்று நேரு மறைந்த நாற்பத்தாறாவது ஆண்டு!

இந்த விஷயம் தொடர்பாக திரு டோண்டு ராகவனும் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அங்கே பின்னூட்டங்களில், இந்தியா அசிங்கப்பட்டதற்காக சந்தோஷப்பட்டு  சிலர் எழுதியிருந்ததையும் பார்த்தேன்.

தமிழன் என்றொரு இனமுண்டு - தனியே
அவர்க்கொரு குணமுண்டு

என்ற நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளை வேறு விதமாக நிரூபணம் செய்கிற போக்கை என்னவென்று சொல்வது?





மண் பயனுற வேண்டும்! அதற்கு மனதில் உறுதி வேண்டும்!


வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.  (வந்தே)

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? – பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? – ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? 


குரங்கு கையில் பூமாலை என்பது போல நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றிப் பிறர் மேல் வஞ்சனை சொல்லித் திரிவதையே அரசியலாகக் கொண்ட பேடிகள் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு, நல்லதோர் வீணை செய்தே அதைநலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ
எனப் புலம்பித் தவித்திருப்போமோ? இனியேனும் விழிப்புடன் இருப்போமோ?


பாட்டுக்கொரு புலவன் பாரதி! உன் பிறந்த நாள் இன்று! உன்னுடைய கவிதை வரிகளே உண்மையான விடுதலைக்குத் தயார் செய்யும் உன்னதத் துணையுமாகட்டும்! வாழி நீ எம்மான்!

நெஞ்சில் உரமும்! நேர்மைத் திறமும்!



வெட்கம் கெட்டவர்கள்! சூடு, சுரணை, பொறுப்பு எதுவுமில்லாதவர்கள்!

முதலில்.......... 

மும்பை நகரில் சென்ற வருடம் நடந்த தாக்குதல்களில் மட்டுமேயில்லை, எதிலுமே கூட நம்முடைய அரசியல் வாதிகள் பாடம் கற்றுக் கொள்வதுமில்லை, இவர்களை நம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஒவ்வொரு செயலிலுமே நிரூபித்துக் கொண்டிருந்தும் கூட....

இந்த ஊழல்மயமான, பொறுப்பில்லாத அரசியல் வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டிருக்கும் வாக்காளப் பெருமக்கள் என்றுதேர்தல் நேரங்களில் மட்டுமே அழைக்கப் படுகிற இளிச்சவாயர்கள்!

மும்பை நகரில்  குடிநீர் விநியோகம் 15 சதவீதம் குறைக்கப்பட்ட அறிவிப்பைக் கண்டு மும்பைகர்கள் பொங்கி எழுந்தார்களாம்!  அதுவும் நிதிஷ் ரானே என்ற காங்கிரஸ் காரர் தலைமையில்! காங்கிரஸ் என்னவோ மற்ற எல்லா இடங்களிலுமே தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட்டமாதிரி! போலீஸ் தடியடி! ஒருவர் உயிரிழந்திருக்கிறார்!


விடுதலை அடைந்து அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட, நாட்டின் எந்த ஒரு பகுதியிலுமே கூட, பாதுகாக்கப் பட்ட குடிநீரை வழங்குவதற்கு துப்பில்லை! தடியடி நடத்த மட்டும் தெரிகிறது! 

மாநிலங்களுக்கு இடையில் நீராதாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்! சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவோ, நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றவோ மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தவறிக் கொண்டிருப்பதோடு,  கலவரம்,  பிரச்சினைகள் நீடிப்பதிலேயே கொண்டிருப்பதிலேயே அரசியல்வாதிகள் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் போக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற வருடம் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர்கள் உயிரிழந்தார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கலவரம் நடந்தபோது கையாலாகத்தனத்தை வெளிப் படுத்திய R R படேல் தான் மீண்டும் அதே உள்துறையில்! ஏ ஆர் அந்துலே மாதிரி ஊழல் பெருச்சாளிகள், பிரச்சினையைத் திசைதிருப்புகிற மாதிரிப் பேசினபோதும், நடவடிக்கை எடுக்கத் தயங்கின, காங்கிரஸ்கட்சித்தலைமை!

ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தைப் பிரமாதமாக நடத்தி, அணிவகுப்பு மரியாதை, கலர்பலூன்களைப் பறக்கவிடுவது இந்த மாதிரி, ஜிகினா வேலைகளை மட்டும் தான் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியும் என்று தெரிந்த பின்னாலும் கூட, காங்கிரசை நம்புகிறவர்கள்..இவர்களை என்னவென்று சொல்வது!

நிவாரணம், இழப்பீடு தலா மூன்று லட்சம் என்று அறிவித்துமே கூட, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது வெறும் ஐந்து கோடி! காயமடைந்தவர்களுக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டும் இதையும் சேர்த்தால் எவ்வளவு வந்து விடும்?  ஜனங்களை முட்டாளடித்து மறுபடி வென்றார்கள். ஆனால், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில்   துப்பாக்கியோடு நிறையப் பேரைச் சுட்டுக் கொன்ற தீவீரவாதி கசாபைப் பாதுகாக்க மட்டும் அரசு இதுவரை முப்பத்தோரு  கோடி ரூபாய் செலவழித்திருக்கிறதாம்!

A Wednesday, உன்னைப்போல் ஒருவன் திரைப்படங்கள் கேட்ட கேள்வி இந்த நகை முரணைப் பற்றித்தான்!

அடேங்கப்பா! உன்னைப்போல் ஒருவன் படம் வந்தபோது தமிழ் வலைப்பதிவுலகம் என்னமாகக் கொதித்தது! கொந்தளித்தது!

******
இந்தியாவில்,ஒவ்வொரு மூன்று  நிமிடங்களுக்கும்  காச நோயால்  பாதிக்கப்  பட்ட  இருவர் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள்.. தினசரி ஐயாயிரம் பேர்களுக்குக் காச நோய்த் தொற்று உண்டாவதாகவும், நாடு முழுவதும் முப்பதெட்டு லட்சம் பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், உலகத்திலேயே இங்கு தான் மிக அதிகமான நோய்த் தொற்று விகிதமாகவும் இருப்பதாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக  இருக்கிறது.


இப்போதெல்லாம் ஜனங்களை ஏமாளியாக்கும் வேலைகள், காப்பீட்டுத் திட்டங்கள் என்ற பெயரிலும் கிடைக்கிறது.

எதை எடுத்தாலும் அதில் சம்பாத்தியம் பண்ணத் தெரிந்த புற்றுநோய்க் கிருமிகள் மாதிரி, பெருகிக் கொண்டிருக்கும் அரசியல்வியாதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளக் காப்பீட்டுத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

******
வில்லங்கம், விவகாரங்களைக் கிளப்புவதில், இடதுசாரிகளுக்கு இணையாக வேறு எவரையும் சொல்லிவிட முடியாது என்பதைத் தோழர் பிருந்தா காரத் மறுபடி பாராளுமன்றத்தில் நிரூபித்திருக்கிறார்! பிரச்சினையை கிளப்பினால் மட்டும் போதும், அதற்குத்  தீர்வு சொல்ல வேண்டும் அல்லது ஒத்துழைப்பையாவது தரவேண்டும் என்ற முனைப்பும் அவசியமில்லை, தேவையுமில்லை என்றே இத்தனை நாள் இருந்ததால் தான், மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு மாட்டிக் கொண்டு முழிக்கிறது. இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்ட அந்தக் கொடுமையான தருணங்களுக்குப் பழி தீர்க்கிற மாதிரி, மன்மோகன் சிங்குமே கூடக் கொஞ்சம் தைரியமாக, முந்திய ஆட்சிக் காலத்தில் இடது சாரிகள் எவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அமெரிக்காவில் சமீபத்தில் கொட்டித் தீர்த்தார்.

ஆனாலும், வில்லங்கம் வீராசாமிகளாகவே  இருந்துவிடுவது என்ற பழக்கத்தில் இருந்து அவ்வளவு சுலபமாக நடந்துவிடுகிற அரசியல் அதிசயமா என்ன! இந்தத் தடவை இடதுசாரிகளிடம்   மாட்டிக் கொண்டது கூகிள்! கூகிள் விளம்பரங்கள் சிலவற்றைக் காட்டி, ஏன் கூகிள்   இந்தியா நிர்வாகியைக் கைது செய்யவில்லை என்று கேட்டிருக்கிறார்! நிறுத்தி நிதானமாக பள்ளிக் கூட வாத்தியார் மாதிரித் துண்டைப் போர்த்திக் கொண்டு கிளாஸ் எடுக்கிற மாதிரிப் பதில் சொல்கிற பானா சீனா கூட அம்மணி எழுப்பிய கேள்விக்குப் பொறுமை இழந்து கோபப்பட்டதும் இதற்கு முந்தையசெய்தி!

******
எதற்கெடுத்தாலும் வெள்ளிவிழா, பொன் விழா என்று காங்கிரஸ் மாதிரி சொரணை, பொறுப்பு எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுப்  பேச முடியாத விஷயங்கள்! ஒன்றல்ல, மூன்று துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து இருபத்தைந்தாண்டுகள் ஓடி முடிந்து விட்டன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது  முதலாவது!

அடுத்து,  இந்திரா காந்தி படுகொலைக்குப் பழிதீர்க்க, சீக்கியர்களை விரட்டி விரட்டிப் படுகொலை செய்த சம்பவமும் தொடர்ந்தது. சற்றேறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் டெல்லி வீதிகளில் வேட்டையாடப்பட்டார்கள். முன்னின்று நடத்திய டைட்லர், சஜ்ஜன் குமார் இருவருக்கும் மந்திரிப் பதவிகள் தொடர்ந்தன. அடுத்துப் பதவியேற்ற ராஜீவ் காந்தி, "ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்" என்று இந்தப் படுகொலைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசியதை, சீக்கிய சமூகம், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் சீக்கியக் குழுக்கள் இன்னமும் மறக்கவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். வெள்ளைக்காரனின் கொடுமையாகச் சித்தரிக்கப்படும் ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சில நூறுகள் தான்!

இதே டிசம்பர் மூன்றாம் தேதி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தும், இன்னும் பல துயரங்களுக்கு ஆளான துயரமும் நடந்து முடிந்த இருபத்தைந்து ஆண்டு நிறைவாகி இருக்கிறது. ஆண்டுகள் தான் ஓடி நிறைந்தனவே தவிர, இவற்றில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பது பெரும் குறையாகவேஇருக்கிறது.

நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் கூட, முறையான நிவாரணம், உறுதியான சட்ட நடவடிக்கைகள், எதுவுமில்லாமல், போபால் விஷவாயு சம்பவத்தால் மூவாயிரம் பேர்கள் மரணமடைந்தார்கள். இருபதாயிரம் பேருக்குமேல், மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார்கள். பாதரச நஞ்சு கலந்த தொழிற்சாலைப் பகுதி இன்னமும் சுத்தப் படுத்தப் படாமல், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கவில்லை. மன்மோகன் சிங் என்னவோ இந்த வருடம், பாதிக்கப் பட்ட மக்களுக்காக கொஞ்சம் அனுதாபமாகப் பேசியிருக்கிறார்.

பேச்சோடு நின்று விடுமா, இல்லை அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு உருப்படியான உதவிகள் கிடைக்குமா?





போதும் இங்கு மாந்தர் - வாழும் பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!



நவராத்ரியின் உச்சம், இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்று பலப்பல  பேர்களில்,பலவித முறைகளில் செய்யும் தொழிலே தெய்வமெனக் கொண்டாடும் நாள் இன்று. ஒன்பது இரவுகளை துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரை வணங்கி அகமும் புறமும் தூய்மையும், ஆன்மநேய ஒருமையும் வேண்டிப் பெறுகிற நாட்களாக, நவராத்ரி இருக்கிறது.

அறியாமையை, அகந்தையை, இது அது எனப் பிரித்துப் பார்க்கும் பேதத்தை விட்டொழித்த தருணமே விஜய தசமி! உண்மையான வெற்றித் திருநாள்!

வெற்றி என்பது, நமக்குள் இருக்கும் மிருகத்தன்மையை வெற்றி கொள்வதே!

பாரதி கவிதைகளில் ஒன்றியே எனது நவராத்ரி அனுபவங்கள் எளிதாக ஆகியிருக்கிறது.

அறியாமையோடு கூடிய அகங்கார இருளை அழித்துப் புதியதோர் பிறப்பும் வளர்ச்சியும் காண, அன்னை இங்கே மகா காளியாக, துர்கையாக வழிபடப் படுகிறாள். வெளியே இருக்கும் இருட்டை அகற்றுவதற்கு, நமக்குள்ளே இருக்கும் அழுக்கு, இருட்டு நீங்கியாக வேண்டும். இந்தியத் தத்துவ மரபு சொல்லும் மிக உன்னதமான ஆன்மீக தரிசனம் இது.

விடுதலை என்பது எவரோ கொடுத்துப் பெறுவது அல்ல. மீட்பரும் ரட்சிப்பவனுமாக எங்கோ  வெளியே தேடினால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

"அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளழிப்பாள்  
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை - இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை - அவள்
ஆதியா யநாதியா யகண்டறி வாவளுன்றன்
அறிவுமவள் மேனியிலோர் சைகை - அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பாள்
இ·தெலா மவள்புரியும் மாயை - அவள்
ஏதுமற்ற மெய்ப்பொருளின் சாயை - எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார் மெய்ஞ் ஞானமெனுந் தீயை - எரித்து
எற்றுவாரிந் நானெனும் பொய்ப்  பேயை. "


காளியாக, துர்கையாக, கோர வடிவினளாக அவளை வழிபடுவது ஒரு உருவகம் மட்டுமே! உள்ளார்ந்து வழிபடும்போது அங்கே மாகாளி எத்தனை கருணைத்திறம்  உடையவள்  என்பது இடரெல்லாம் நீங்கி ஒளி பொருந்திய பாதையை கண்ட பிறகு தான் விளங்கும்!


"வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட - வெறும்
வெளியி லிரத்தக் களியொடு பூதம் பாடப் - பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக் - களித்
தாடுங் காளீ, சாமுண் டீ! கங் காளீ!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை!

ஐந்துறு பூதம் சிந்திப் போயென் றாகப் - பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக - அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத் - தோடே
முடியா நடனம் புரிவாய் அடுதீ சொரிவாய்!
அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை! "


என்று பாரதி அவள் அருட் திறத்தில், தன்னை மறந்து கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையாகி நின்ற தருணம் இவனுக்கும் இங்கு வாய்த்திட  வேண்டும் அம்மா!

"யாது மாகி நின்றாய்  - காளி! எங்கும் நீநி றைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்ம்மை வாழ்க்கையெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல் - தாயே! இசைகள் பாடி வாழ்வேன்;
கந்தனைப்ப யந்தாய் - தாயே! கருணை வெள்ளமானாய்
மந்த மாரு தத்தில் - வானில் - மலையி னுச்சி மீதில்
சிந்தை யெங்கு செல்லும் - அங்குன் - செம்மை தோன்றும் அன்றே!

கர்ம யோகமென்றே - உலகில் - காக்கு மென்னும் வேதம்,
தர்ம நீதி சிறிதும் - இங்கே - தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம் - நின்றன் - மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும் - சேர்ந்தே - தேசு கூட வேண்டும்.

என்ற னுள்ள வெளியில் - ஞானத் - திரவி யேற வேண்டும்,
குன்ற மொத்த தோளும் - மேருக் - கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும் - நீயெந் - நாளு மீதல் வேண்டும்,
ஒன்றை விட்டு மற்றோர் - உழலும் நெஞ்சம் வேண்டா.

வான கத்தி னொளியைக் - கண்டே - மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன் - ஆகி - எந்த நாளும் வாழ்வேன்,
ஞான மொத்த தம்மா! - உவமை நானு ரைக்கொ  ணாதாம்.
வான கத்தி னொளியின் - அழகை வாழ்த்து மாறி யாதோ?

ஞாயி றென்ற கோளம் - தருமோர் - நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை - எவரே - தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா! - அழகாம் - மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத்தால் - அங்கே - நெஞ்சி ளக்க மெய்தும்.

காளி மீது நெஞ்சம் என்றும் - கலந்து நிற்க வேண்டும்,
வேளை யொத்த விறலும் - பாரில் -வேந்த  ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும் - என்றும் - இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும் அன்னாய் - வாழ்க நின்றன் அருளே! "


மொழி பல அறிந்தவன் இல்லை. சாத்திரம் கற்றவனில்லை. ஸ்தோத்திரம் செய்யவோர் புலமையும் இங்கு இல்லை.குருவெனக் கொள்வதற்கும், உட்பொருள், நுண்பொருள் விரிவாக அறியத் தருவாரும் இல்லை. அம்மா!  நீயே என்தாய் .என்பதல்லால் உரைக்கவொரு வார்த்தை இல்லை! பொய்களைத் தேடி நின்ற சிறுமையை மாற்றவல்ல மந்திரம் எல்லாம் அம்மாவெனஅழைப்பது ஒன்றே தான்! 




அம்மா என அழைக்கும் சவலையைக் காத்திட வேணும் நீயே!


"ஜயமுண்டு பயமில்லை மனமே !"



கபாலி சாஸ்திரியார், பிறந்தது சென்னையில், 1886 ஆம் வருடம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி. திருமயிலை கபாலீஸ்வரனுடைய பெயரையே, மகனுக்குச் சூட்டி மகிழ்கிறார் விஸ்வேஸ்வர சாஸ்திரிகள். கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஐந்து வயதிலேயே மகனுக்கு ஸ்ரீ வித்யா மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். சம்ஸ்க்ருதம்,பூஜை பாராயணம், ஜபம் எல்லாவற்றையும் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட கபாலி சாஸ்திரி, பன்னிரண்டு வயது நிறைவதற்கு உள்ளாகவே, வால்மீகி ராமாயணம் முழுவதையும் பன்னிரண்டு தடவை பாராயணம் செய்து முடித்து விட்டார்.

மயிலாப்பூர் ஹிந்து ஹை ஸ்கூலில் தான் கல்வி. ரைட் ஹானரபில் V S ஸ்ரீனிவாச சாஸ்திரியார் தலைமை ஆசிரியர். அந்த நாட்களில், ஸ்ரீனிவாச சாஸ்திரியாரது ஆங்கில மொழியின் ஆளுமை ரொம்ப பிரசித்தம். அப்படிப்பட்டவரது மாணவர், ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கியதில், வியப்பு ஒன்றுமில்லை தான்.

காவ்ய கண்ட கணபதி முனி என்றும், வாசிஷ்ட கணபதி முனி என்றும் "நாயனா" என்று அன்போடு ரமணர் அழைத்த மாதிரியே, அன்பர்களால் அழைக்கப் பட்ட மகா தபஸ்வி, இளம் கபாலி சாஸ்திரிக்கு, வேதம், உபநிஷத்துக்களின் உட்பொருளை விளங்கச் சொல்லிக் கொடுக்கிறார். ரமண மகரிஷியின் தரிசனமும், ஹஸ்த தீக்ஷயும் கிடைக்கிறது. ரமணரின் "நான் யார்" என்கிற விசார மார்கத்திலும் நல்ல பரிச்சயம் ஏற்படுகிறது.

ஆனாலும் கபாலி சாஸ்திரியாரின் தாகம் தீருவதாயில்லை. ரமண வழி முடிவானதாக அவருக்குத் தெரியவில்லை. அந்த நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் "ஆர்யா" என்ற பத்திரிகையில் The Secret of Veda, Life Divine என்ற தலைப்புகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். ஆர்யா பத்திரிகையில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வந்ததைப் படித்த கபாலி சாஸ்திரியாருக்குப் புதிய தரிசனம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அது வரை வேதத்தின் உட்பொருளாக, மரபு ரீதியாகக் காலம் காலமாகச் சொல்லப் பட்டதற்கும் அப்பால், புதிய சிந்தனை இழை ஸ்ரீ அரவிந்தரிடமிருந்து தொடங்குவதைத் தன்னை அறியாமலேயே, கபாலி சாஸ்திரியார் உணர்ந்த தருணங்கள் அவை.

ஸ்ரீ அரவிந்தர், பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் இருக்கிறார் என்பது தெரியும். அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக சாதனையில் தீவீரமாக இருக்கிறார் என்பதும் தெரியும். அவரைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம். எப்படி, எப்போது என்பது தான் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கும் ஒருசரியான தருணத்தை, இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்!

1917 ஆம் ஆண்டில் சங்கர ஜெயந்தியை ஒட்டிப் பாண்டிச்சேரிக்கு வருகிற வாய்ப்பு, கபாலி சாஸ்திரியாருக்குக் கிடைக்கிறது. மகாகவி சுப்ரமணிய பாரதியும் அந்த நேரத்தில் பாண்டிச்சேரியில் தான் இருந்தார். ஏற்கெனெவே, திருவல்லிக்கேணியிலும், நண்பர்கள் மூலமாகவும் நன்கு அறிமுகமானவரான, பாரதியைச் சந்திக்க முடியுமோ? பாரதிக்கும், ஸ்ரீ அரவிந்தருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறதென்று சொல்லக் கேள்வி. பாரதியார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க உதவக் கூடுமோ?

பாரதியார் புதுவையில் தங்கியிருந்த வீட்டைத் தேடி வருகிறார் கபாலி சாஸ்திரி. மாடிப் படிகளேறி வரும் போதே மகாகவி பெரும் குரலில் பாடிக் கொண்டிருந்தார்:

"ஜயமுண்டு பயமில்லை மனமே! - இந்த

ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு"

பரஸ்பர குசலம் விசாரித்துக் கொண்ட பிறகு, பாரதி சென்னை நண்பர்கள் சிலரைப் பற்றி விசாரித்து விட்டு மறுபடி பாட ஆரம்பித்தார்:

"குருவே! பரமன் மகனே

குஹையில் வளரும் கனலே!"

கபாலி சாஸ்திரிக்கு பெரிய ஆச்சரியம், குகன் என்ற சொல், தகராகாசமாகிய ஹ்ருதயமென்னும் குகையில் வளரும் கனல், குமரனான முருகனையும் குறிப்பது, வேதத்தின் மிக ஆழ்ந்த கருத்தாக இருப்பது, இதை எப்படிக் கண்டீர்கள் என்று பாரதியிடம் கேட்கிறார்.

"ஸ்ரீமான் அரவிந்த கோஷுடன் ரிக் வேத ஆராய்ச்சி சிலகாலம் பண்ணிக் கொண்டிருந்த போது கண்டது இது" என்கிறார் பாரதி.

ஸ்ரீ அரவிந்தரைப் பற்றிய பிரஸ்தாபம் எழுந்தவுடனேயே, கபாலி சாஸ்திரியார், தான் அவரைச் சந்திக்கும் ஆர்வத்திலேயே பாண்டிச்சேரிக்கு வந்திருப்பதையும் சொல்லி, பாரதி அதற்கு உதவ முடியுமா என்று கேட்கிறார். அந்த கால கட்டங்களில், ஸ்ரீ அரவிந்தர், சாதாரணமாக எவரையும் சந்திப்பதில்லை; என்றாலும், ஸ்ரீ அரவிந்தருடன் தங்கியிருக்கும் ஒரு அன்பருக்குச் சீட்டுக் கொடுக்கிறார் பாரதி, இன்னார், ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கிற மாதிரி.

அன்று மாலையே, ஆறு மணிக்கு ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க, அனுமதியும் அழைப்பும் கிடைக்கிறது!

கவிதையோடு படமும் இணையத்தில் கிடைத்தது நன்றி


இன்றைய த்யானத்திற்கான ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழி:
"Not to impose one's mind and vital will on the Divine but to receive the Divine's will and follow it, is the true attitude of sadhana. Not to say, "This is my right, want, claim, need, requirement, why do I not get it?" but to give oneself, to surrender and to receive with joy whatever the Divine gives, not grieving or revolting, is the better way. Then what you receive will be the right thing for you."

- Sri Aurobindo [SABCL, 23:597]

அவுட்லுக் வார இதழில் காங்கிரஸ் கட்சி மஹாத்மா காந்திக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் தாங்களே மொத்தக் குத்தகைதாரர் என்கிற மாதிரி, ஸ்ரீ அரவிந்தர் முதலான தலைவர்களை மறந்து போன அவலத்தைப் பற்றி ஒரு சிறு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இங்கே படிக்கலாம்

நாயனா, சின்ன நாயனாவை சந்தித்த கதை!


"நாயனா"வும் ஸ்ரீ ரமணரும்


"நாயனா"

"சின்ன நாயனா"


அது 1906 ஆம் ஆண்டு.

இருபதே வயதான இளைஞன் அவர். கபாலி சாஸ்திரி என்று பெயர். அப்பா கன்னிமாரா நூலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். மகனுக்கு, திருமயிலை இறைவனது பெயரை வைத்ததுடன், ஐந்து வயதிலேயே ஸ்ரீ வித்யா மந்திரமும் சொல்லிக் கொடுத்தாயிற்று. எட்டு வயதிலேயே வால்மீகி ராமாயண மூல பாராயணம் ஆரம்பித்தாயிற்று. தினசரி, திருவொற்றியூரில் அம்பிகை சன்னதியில் ஸ்ரீ வித்யா மந்திர ஜபம் செய்கிற பழக்கம். அப்படி, அம்பாள் முன் மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த நேரம், இரண்டு, மூன்று பேர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர், மெலிந்த தேகம், ஆனால் அவருடைய தோற்றப் பொலிவு இவர் சாதாரண ஆள் இல்லை,என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.

அம்பிகை சன்னதி முன் வந்து வணங்கி, கடகடவென வடமொழியில்துதிக்க ஆரம்பிக்கிறார். இதற்கு முன்னாள் கேட்ட ஸ்லோகம், ஸ்தோத்ரங்கள் மாதிரி இல்லை, அப்போது தான் அம்பாள் பெயரில் இயற்றி அவள் முன்னாலேயே அரங்கேற்றம் செய்தது மாதிரி இருக்கிறது. அவரும், கூட வந்தவர்களும், போய் விட்டார்கள். இளைஞராக இருந்த கபாலி சாஸ்திரியை, இந்த நிகழ்வு மிகவும் கவர்கிறது.

மறுநாள், அதே நேரம், திருவொற்றியூர் கோவிலில், கபாலி சாஸ்திரி, மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறார். முந்தைய நாள் போலவே, அந்த மனிதர் மறுபடி வருகிறார். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கபாலி சாஸ்திரியைக் கூப்பிட்டு, யார் எவர் என விசாரித்துத் தெரிந்து கொள்கிறார். தன்னை வாசிஷ்ட கணபதி முனி எனவும் அறிமுகம் செய்து கொள்கிறார். யார், எவர் என கணபதி முனி கேட்கும் போதே, முந்தைய நாள் தான் கேட்ட துதிகளை, ஒரு இழை பிசகாமல் திரும்பச் சொன்ன கபாலி சாஸ்திரியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

திருவண்ணாமலையில், அதுவரை பிராம்மண சாமி என்று மட்டுமே அறியப் பட்டிருந்த ஸ்ரீ ரமணரை, ஸ்ரீ ரமண மஹரிஷி எனவும், பகவான் ஸ்ரீ ரமணர் என்றும் உலகுக்கு அறிவித்த, காவ்ய கண்டர் என்றும் வாசிஷ்ட கணபதி முனி என்றறியப்பட்ட மஹான் அவர். மகா தபஸ்வி.

ரமணராலே, "நாயனா" என்று அன்புடன் அழைக்கப் பட்டவர்.

சாத்திரம் கற்றவர், கவிஞர், ஸ்ரீ வித்யா உபாசகர், அஷ்டாவதானி, ஜோதிடமும், மந்திர சித்தியும் பெற்றவர். அப்படிப் பட்டவரோடு, கபாலி சாஸ்திரிக்குத் திருவொற்றியூர் கோவிலில் ஏற்பட்ட உறவு, குரு-சிஷ்யன் உறவாக அப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களுக்குள், குரு, தானறிந்த வேதத்தின் நுட்பங்கள், உபநிஷத்துக்கள் சொல்கிற நுட்பங்கள், தந்திர சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவை இப்படி எல்லாவற்றையும், கபாலி சாஸ்திரிக்கு, வாத்சல்யத்துடன் சொல்லிக் கொடுத்தாயிற்று.

தன்னுடைய குருவான ரமண மகரிஷியிடம் கபாலி சாஸ்திரியை நாயனா அறிமுகம் செய்து வைக்கிறார். ஸ்ரீரமணருடனான சந்திப்பு, கபாலி சாஸ்திரிக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம், அவருடைய ஆன்மீக சாதனையில், அனாயாசமாக ஒரு பெரிய மலையைக் கடந்தது போல! சாதாரணமாக, எவரையும் தொட்டுப் பேசாத ஸ்ரீ ரமணர் கபாலி சாஸ்திரியின் நெஞ்சில் தன் அருட் கரத்தை வைத்து, யோகத்தில் சொல்லப் படுகிற ஹ்ருதய கமலம் இருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார். ரமணருடைய ஹஸ்த தீக்ஷை கிடைத்ததை சொன்ன போதிலும், அது அவருடைய ஆன்மீக வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதை கபாலி சாஸ்திரி வெளிப்படையாகச் சொல்லவில்லை.

வாசிஷ்ட கணபதி முனிவரை "நாயனா" என்று அன்போடு அழைத்த மாதிரியே, அவருடைய சீடப் பிள்ளை கபாலி சாஸ்திரியை "சின்ன நாயனா" என்று ஸ்ரீ ரமணர் தன் வாயாலேயே அழைத்தது ஒன்றே, ஸ்ரீ ரமணர் அவரிடத்தில் எவ்வளவு கருணையும், அன்பும் கொண்டிருந்தார் என்பதை சொல்லும். ஸ்ரீ .ரமணருடைய "நான் யார்" என்ற விசார மார்க்கத்தை, நன்றாக அறிந்து கொண்டு ரமண கீதை பிரகாசம், சத் தர்சன பாஷ்யம் என்ற நூல்களைப் பின்னால், படைக்கிறார்.

இன்றைக்குப் பங்குனி ஹஸ்தம். நாயனாவும் சின்ன நாயனாவும் சந்தித்ததை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தது, இன்றைக்குக் கை கூடியது.

"சின்ன நாயனா" கபாலி சாஸ்திரி, மகாகவி பாரதி யைச் சந்தித்ததை அடுத்துப் பார்க்கலாம்!

********

சாலமன் நீதிக் கதைகளைப் பற்றி கேள்விப் பட்டிருப்போமே, அதில் ஒன்று.

முடிச்சுக்கு மேல் படு முடிச்சாக ஆயிரமாயிரம் முடிச்சுக்களோடு கூடின கயிற்றால் ஒரு வழி மறிக்கப் பட்டிருந்தது. முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தவர்கள் மட்டுமே மேலே முன்னேறிச் செல்லலாம் என்ற எச்சரிக்கை வேறு. எவருக்கும் அந்த முடிச்சுக்களை எப்படி அவிழ்ப்பது என்று புரியவில்லை. அங்கேயே தயங்கி நின்று விட்டார்கள்.

அரசன் சாலொமோனுக்குத் தகவல் தெரிந்தது. வ்ந்து பார்த்தான். முடிச்சுக்களை அவிழ்த்துக் கொண்டிருப்பது வெட்டி வேலை என்பது புரிந்தது, தன்னுடைய வாளை எடுத்தான், வெட்டினான், முடிச்சுக்களால் மறிக்கப் பட்டிருந்தது இரண்டாகப் பிளக்கப் பட்டு, வழியும் தெரிந்ததாம்.

அது மாதிரித் தான், மாற்றம் என்பதும். ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகளை, இன்றைய த்யானத்திற்கு எடுத்துக் கொள்வோமா?


"In the old Chaldean tradition, very often the young novices were given an image when they were invested with the white robe; they were told:

"Do not try to remove the stains one by one, the whole robe must be purified."

Do not try to correct your faults one by one, to overcome your weaknesses one by one, it does not take you very far. The entire consciousness must be changed, a reversal of consciousness must be achieved, a springing up out of the state in which one is towards a higher state from which one dominates all the weaknesses one wants to heal, and from which one has a full vision of the work to be accomplished.

I believe Sri Aurobindo has said this: things are such that it may be said that nothing is done until everything is done. One step ahead is not enough, a total conversion is necessary."

- The Mother
[CWMCE, 8:402]