Showing posts with label குற்றமும் தண்டனையும். Show all posts
Showing posts with label குற்றமும் தண்டனையும். Show all posts

2G ஸ்பெக்ட்ரம்! கனிமொழி கைதாவாரா? முன் ஜாமீனா? இதுக்கு ஒரு கணிப்பும் இல்லையே!



சென்னைப்பதிவர் ஒருவரிடம், (மரா தன்னைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம், இது வேறொருவர்) அரட்டையில் தேர்தல் நிலவரம் குறித்து நேற்றைக்கு விசாரித்துக் கொண்டிருந்தேன். நேற்றைக்கு பதில் எதையும் காணோம்! இன்றைக்கு, அரட்டையில் திமுக அணிக்கு 120-230 இடங்கள் வரை கிடைக்கும் என்று  "தன்னுடைய"  நம்பிக்கையை வந்து சொன்னார். கொஞ்சம் சிரித்துக் கொண்டேன்! வேறு என்ன சொல்ல!

ஹெட்லைன்ஸ்டுடே தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, திமுக முந்துகிற மாதிரி ஒரு கணிப்பை வெளியிட்டது. திமுகவுக்கு ஆதரவு மூன்று சதவேதமும் அதிமுகவுக்கு ஏழு சதவீதம் வரை கூடியிருப்பதாகச் சொன்ன இந்த கணிப்பு வெறும் ஆறாயிரம் வாக்காளர்களிடம் மட்டுமே எடுக்கப் பட்டதாக, அதன் மெதடாலஜியையும் சேர்த்து சொன்னதில் என்னுடையசந்தேகத்தை, அதன் நம்பகத்தன்மையைக்குறித்து இந்தப் பதிவில்,  எழுப்பி இருந்தேன்.

இதே ஹெட்லைன்ஸ்டுடே தன்னுடைய முந்தைய கணிப்பில் அதிமுக முந்துவதாக சொல்லியிருந்தது. இப்போது திமுக முறை! ஆனால் திமுக ஊடகங்கள் இந்த கணிப்பைப் பெரிதாக எடுத்து ஊதவில்லை என்பதிலேயே இன்னும் கொஞ்சம் சந்தேகம் எழுந்தது.விதிமுறைகளை மீறியதாக ஹெட்லைஸ்டுடேவுக்கு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பி இருக்கிறது. இன்றைக்கு உடன் பிறப்புகளுக்கு  தேறுதல் சொல்கிற பொறுப்பை தினமலர் நாளிதழ் எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த செய்தியைப் பாருங்கள்!

இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த தருணங்களில் disinformation என்று செய்திகளைத் திரித்து வெளியிடுவது, குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிற உத்தியாக இரண்டு தரப்புமே செய்து கொண்டிருந்தன மார்கெடிங் உத்தியாக, ஒரு தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய தயாரிப்பின் குணங்களை விரிவாக சொல்வதற்கு பதிலாக, போட்டியாளரின் தயாரிப்பைப் பற்றி கொஞ்சம் சந்தேகம் ஏற்படுத்துகிற மாதிரி நாசூக்காகச் செய்வதை,  இங்கே இந்திய அரசியலில் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், தங்களுடைய தவறுகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக, அவன் மட்டும் யோக்கியமோ என்று கவனத்தைத் திருப்புகிற மாதிரி, பொய்களைத்  திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் கோட்பாட்டை விட்டு விடாமல் பின்பற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. 
ஒரு அளவுக்கு மிஞ்சினால் என்ன ஆகும்?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக அணி பல குளறு படிகளைச் செய்திருக்கிறது. முதலாவதாக, நகர்ப்புறங்களில் எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியாதென்று கிராமப்புறத் தொகுதிகளாகப் பார்த்து வெறும் 119 தொகுதிகளில் மட்டும் திமுக போட்டியிட முடிவு செய்தது.  அடுத்ததாக, கொங்குப் பகுதியில் கொங்கு வேளாளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக முயற்சி செய்த திமுக, அதிலும் தோல்வி அடைந்துருப்பதாகத் தான் தெரிகிறது. இன்பைய தினமலர் நாளிதழிலேயே, நக்கீரன் வார இதழில் எழுத்தாளர் சோலை எழுதும் தொடரில் இருந்து டுத்துப் போட்ட செய்திக் கட்டுரையின் ஒரு பகுதி இது:

"
விரிந்த வலிமையான கூட்டணி அமைக்க, தி.மு.க., விரும்பியது. ஆனால், விரும்பத்தகாத முறையில், கட்சிகளின் பலத்தைவிட, கூடுதலாக இடங்களை ஒதுக்கித் தந்துவிட்டது. கொங்கு சீமையில் வேளாளர் சமுதாயம் தான், தி.மு.க., நினைவுக்கு வந்தது. ஆனால், நாயுடு சமுதாயத்தினரும், ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கணிசமாக இருக்கின்றனர் என்பது அதன் நினைவுக்கு வரவில்லை.

தொகுதி அமைப்பு, சமூக அமைப்பைக் கருத்தில் கொள்ளாது, வேட்பாளர்களை தி.மு.க., தேர்வு செய்தது. மாவட்டச் செயலர்களோ, மாவட்ட அமைச்சர்கள், தங்களுக்கு ஈடாக எவரும் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். அதனால், பல தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தள்ளி விட்டனர் அல்லது தங்கள் ஆட்களை நிறுத்தினர். வெற்றிக்காக வேட்பாளர் என்பது தான், தி.மு.க.,வின் முந்தைய தாரக மந்திரம். குறிப்பிட்ட நபருக்காக சீட்டு என்ற காங்கிரஸ் வியாதி, இந்தத் தேர்தலில், தி.மு.க.,வையும் லேசாக தொற்றிக் கொண்டதைக் காண முடிந்தது."

கடுமையான தொடர் மின்வெட்டு, விலைவாசி உயர்வு2G ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று மட்டுமல்லாமல்,எங்கும் எதிலும் ஊழல், அரசு இயந்திரத்தின் மெத்தனம் எல்லாவற்றையும் தேர்தல் நேரங்களில் அளிக்கிற வாக்குறுதிகள், இலவசங்களில் மறக்க வைத்து விட முடியும் என்பது ஒன்றே திமுகவின் நினைப்பாக இருந்தது. போதாக்குறைக்கு திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தல்களில் வெற்றிகரமாகப் பரீட்சித்துப் பார்க்கப் பட்ட அ"னா பார்முலா வேறு! நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்கும் என்பது திமுக விஷயத்தில் உண்மையாகிப் போனது.

ஆனால், திமுக ஒன்றை மறந்து விட்டது மட்டும் நிச்சயமாக இந்தத் தேர்தல்களில் பிரதிபலித்தது. முந்தைய தேர்தல்களில் எந்த அளவக்கு அரசு இயந்திரத்தை துஷ்ப்ரயோகம் செய்யப்பட்டதோ, பணத்தை வீசி இறைத்து தேர்தல்கள் கேலிக் கூத்தாக்கப்பட்டதோ அந்த அளவுக்கு, இந்தத் தேர்தல்களில்,அதுமாதிரி நடந்து விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் முனைப்பாக இருக்கும் என்பது தான் அது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த அளவுக்கு ஜனங்களுடைய ஆதரவைப் பெறும் என்பதோ, மதுரை இளவரசரே முடக்கி வைக்கப் படுவார் என்பதோ திமுக எதிர்பார்க்காத விஷயங்கள். திமுக தலைவரே அறிவிக்கப் படாத எமெர்ஜென்சி என்றெல்லாம் புலம்புகிற மாதிரியாகிப் போனது!

அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் மீதான தனது அதிருப்தியை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.அதே நியாயம் அரசியல் வாதிகளுக்கு  மட்டும் கிடையாது  போல!

2G ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் கைமாறியதில் தயாளு அம்மாள் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாததற்கு அவருக்குத்  தமிழ் தெரியாது, சரத்துக்கு பவர் ஆப் அட்டர்னி கொடுத்து விட்டார் என்று காரணம் கூறும் சிபிஐ, ஒரு தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனர் என்ற ஒரு பொறுப்பைத் தவிர அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முடிவெடுக்கும் எந்த அதிகாரத்திலோ இல்லாத சரத் பெயரைச் சேர்த்தது ஏன் என்றும் புரிய வில்லை.

இந்த மினிட்ஸே பின்னர் உருவாக்கப்பட்டது என்றும் தயாளு அம்மாளை வழக்கில் சேர்க்காமல் தப்புவிப்பதற்காக தயாரிக்கப்பட்டது என்றும் கருதப்படும் நிலையில், மே மாதம் 6 ஆம் தேதி சரத்குமாரும் கனிமொழியும் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்ததும் அதுபற்றி விவாதிப்பதற்காக கூடிய தி.மு.க உயர் நிலை கூட்டத்தில் கலைஞர் பேசும்போது, "நான் எப்போதும் கட்சியைக் காட்டிக்கொடுப்பவனல்ல. என்னைக் கைது செய்தபோதெல்லாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டு சிறை சென்றவன்" என்று கூறியுள்ளது, கனிமொழியின் கைது தவிர்க்கமுடியாதது என்று கலைஞரே நம்புவதாகத்தான் கருதமுடிகிறது. அவ்வாறு கைதுசெய்யப்பட்டால், கட்சிக்கு எதிராக காட்டிக்கொடுக்காதே என தன் மகளுக்குக் கலைஞர் தெரிவித்த செய்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நான் மனம் விட்டு பேச நிறைய இருக்கிறது" என கனிமொழி கூறிய பூடக கருத்தும் இதையே உறுதிபடுத்துவதாக உள்ளது.

இது போக, அமலாக்கத்  துறை விசாரணைக்கு நாளை (5/5/11)  ஆஜராகும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. நாளை மறுநாள் ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதி மன்றம் முன்னால் ஆஜராகும்படி சம்மன்! கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்றே செய்திகள்  கசிந்து கொண்டிருக்கின்றன. நேற்றிலிருந்து திமுக அமைச்சர்கள் டில்லியில் முகாமிட்டு, கைது நடவடிக்கையைத் தவிர்க்க அல்லது ஜாமீன் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதும், சி ஐ டி  நகர் வீட்டில் மகள், வீரமணி உட்படப்பலருடன் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தியதும், கருத்துக் கணிப்புக்களை விட, கனிமொழி கைது என்றாகிவிடக் கூடாது என்பதில் மட்டும் தான் திமுக அதிக கவனம் செலுத்திக் கொண்டிருப்பது வெளிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

திமுகவின் நினைப்பு சரியா ,கருத்துக் கணிப்புக்கள் இவைகளை எல்லாம் பிரதிபலிக்கிறதா இல்லையா என்பது இன்றைக்குப் பத்தாம் நாள் தெரிந்துவிடும்!

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்!

இத்தனை கூத்துக்களைப் பார்த்த பிறகும், இப்போதுள்ள தேர்தல் முறையில் ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்று நம்புகிறீர்களா?

தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதா? ஒவ்வொரு கட்சிக்கும் அது பெறுகிற அதரவு வாக்குகளின்  அடிப்படையில் மட்டும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்கிற முறைக்கு மாறவேண்டிய அவசியம் புரிகிறதா? ஊழல் குற்றச்சாட்டு, அல்லது சரிவர செயல்படாத மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை வேண்டுமே!

இதையெல்லாம் குறித்து உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

சொல்வதைக் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!



 

ஸ்பெக்ட்ரம் ஊழல்:பத்துக் கேள்விகளும், பின் தொடரும் நிழலும்!


2ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊழ‌ல் தொட‌ர்பாக ‌முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி‌க்கு 10 கே‌‌ள்‌விகளை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா கே‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

உச் நீதிமன்ற உத்தரவின்படி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று விசாரித்து வரும் சி.பி.ஐ.யின் இரண்டாவது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனது மகள் கனிமொழியை காக்கும் வகையில், தனக்கே உரிய பாணியில் குழப்பமூட்டும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் கருணாநிதி.

இந் ஊழலையே மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல், இந்த ஊழல் இந்திய கணக்கு, தணிக்கைத் துறைத் தலைவரின் கற்பனையில் உருவான கட்டுக் கதை என்றும் குறை கூறியிருக்கிறார் கருணாநிதி. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை நடவடிக்கைகளை, திராவிட அரசியலுக்கு எதிரான மேலாதிக்க சக்திகளின் சதி என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின மகள், குடும்ப உறுப்பினர்களின் மோசமான செயல் பாட்டினை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார் கருணாநிதி. தப்ப முடியாதபடி கடினமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் தருணத்தில், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மற்றவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது கருணாநிதியின் வாடிக்கை! குறிப்பிட்ட எந்தப் பெயரும் சுட்டிக் காட்டப்படவில்லை. தனி மனிதர், தனிப்பட்ட கட்சி அல்லது அமைப்பின் பெயர்கள் குறி வைக்கப் படவில்லை. வெறும் பொதுவான தூற்றுதல் தான்.

ஆனால, 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல். கருணாநிதி, அவரது குடும்பத்தினர் இந்த ஊழலில் முழுவதுமாக மூழ்கி இருப்பதால், இந்த ஊழலில் இருந்து ஒதுங்கி இருப்பது என்பது கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இயலாத காரியம் ஆகும்.

இந் ஊழலில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மைகளில் சிலவற்றை நாம் காண்போம்.

1)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முதல் செய்திகள், இந்த ஊழலில் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய தளபதி ஆ. ராசாவிற்கு உள்ள பங்கு பற்றிய தகவல்கள் ஆகியவை எந்த எதிர்தரப்பு ஊடகங்களிலும் முதன் முதலாக வரவில்லை. மாறாக, கருணாநிதியின் பேரன்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியான சன் டி.வி.யில் தான் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்டது. இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவென்றால், கருணாநிதியின் பேரன்களில் ஒருவர், 28.4.2011 அன்று நடைபெற்ற தி.மு.க.வின்உயர் மட்டக் குழுகூட்டத்தில் ஊடகங்களை பொதுவாக கருணாநிதி தாக்கிய சமயத்தில் உடனிருந்தார் என்பது தான்.

2) ராச, இதர நபர்களுக்கு எதிரான வழக்குகள் எதிர்க்கட்சியினர் கூறும் குற்றச்சா‌ற்றுகளின் அடிப்படையில் சி.பி.ஐ.யினால் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக, இந்திய கணக்கு, தணிக்கைத் துறை தலைவரால் இந்திய நாடாளுமன்றத்தில் தகுந்த ஆவணங்களுடனும், வலுவான வாதங்களுடனும் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

3) அரசியல ரீதியாக பழிவாங்கும் நோக்கத்துடன், தி.மு.க.விற்கு எதிரான கட்சி ஆட்சி புரியும் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மத்திய புலனாய்வு துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை தாக்கல் செய்யவில்லை. மாறாக, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. முக்கிய பங்காற்றுகின்ற, கருணாநிதியின் மகனும், பேரனும் மத்திய அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்ற மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தான் மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கினை தாக்கல் செய்திருக்கிறது.

4)
ஒர வருடத்திற்கும் மேலாக தூங்கிக் கொண்டிருந்த இந்த ஊழல் வழக்கு தீங்கிழைக்கும் கும்பல் கூரை மேல் ஏறி நின்று கூக்குரலிட்டதன் காரணமாக முக்கியத்துவம் பெறவில்லை; உலகின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய புலனாய்வுத் துறையால் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த விசாரணையை உச்ச நீதிமன்றமே முடுக்கி விட்டதன் காரணமாகத் தான் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.

5)
இந் வழக்கில், சி.பி.ஐ. இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இன்னும் நிறைய குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளது. இவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவோ, செவி வழிச் செய்தி அல்லது நாகரிகமற்ற குற்றச்சா‌ற்றுக்களின் அடிப்படையிலோ நடைபெறவில்லை. மாறாக, 80,000 பக்கங்கள் கொண்ட வலுவான ஆதாரங்களின், ஆவணங்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

6)
இந் வழக்கில் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டவர்கள் ஆ.ராசா, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டுமல்ல. இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் செல்வாக்கு படைத்த தொழில் குழுமத்தைச் சேர்ந்த மேலாண்மை இயக்குநர்களும், தலைமை செயல் இயக்குநர்களும் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்கையில், இந்த ஊழலை மூடி மறைக்கும் விதமாக, “செல்வாக்கு படைத்த ஒரு குழுவினரின் அரசியல் சதுரங்க விளையாட்டு இதுஎன்று அபத்தமாக குற்றம் சுமத்துகிறார் கருணாநிதி!

நான இப்பொழுது ஒரு சில கேள்விகளை கருணாநிதியிடம் கேட்க விரும்புகிறேன். கருணாநிதி அனுமதி அளித்திருந்தால், வாய்ப்பு கொடுத்திருந்தால், இந்தக் கேள்விகளை ஊடகங்களே அவரிடம் கேட்டிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

1)
கம்பெனிகள பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்களின்படி, கலைஞர் டி.வி. நிறுவனத்தில் தயாளு அம்மாளுக்கு 60 விழுக்காடு பங்குகள் உள்ளன என்பது தெரிகிறது. இந்த அளவு பங்கினை வைத்துக் கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த விவரங்கள் என்ன? இந்த டி.வி.யில் எவ்வளவு பணத்தை தயாளு அம்மாள் முதலீடு செய்தார்? இந்த டி.வி. சேனலில் இந்த அளவிற்கு முதலீடு செய்யும் அளவுக்கு தயாளு அம்மாளுக்கு நிதி எங்கிருந்து கிடைத்தது?

2) தனிப்பட் முறையில் தயாளு அம்மாள் இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் தன்னுடைய கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

3) 20
விழுக்காட பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி இந்த டி.வி.யில் எவ்வளவு முதலீடு செய்தார்? இந்த அளவுக்கு முதலீடு செய்வதற்கு கனிமொழிக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது? தனிப்பட்ட முறையில் கனிமொழி இதில் பங்குதாரராக இருக்கிறாரா? அல்லது கருணாநிதி குடும்பத்தின் இரண்டாவது கிளையின் பிரதிநிதியாக செயல்படுகிறாரா?

4)
கலைஞர டி.வி.யில் இயக்குநராக இருக்க மத்திய உள்துறை அமைச்சரகம் அனுமதி தராததையடுத்தே, கனிமொழியால் அதில் இயக்குநராக நீடிக்க முடியவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனியார் நிறுவனத்தில் இயக்குநராக இருப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் கனிமொழி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதற்கான காரணங்கள் என்ன?

5)
சர்ச்சைக்குரி2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் பயனாளியான டி.பி. ரியால்டி குழுமத்திடம் இருந்து கலைஞர் டி.வி. 214 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. இந்தப் பணப் பரிமாற்றம் ஒரு தடவை நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பல முறை நடை பெற்று இருக்கின்றது. இந்தப் பணம் ஏன் வாங்கப்பட்டது? ராசாவால் விதி முறைகளுக்கு முற்றிலும் முரணாக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதற்கு பிரதிபலனாகத் தான் இந்தப் பணம் கலைஞர் டி.வி-க்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இல்லையெனில், சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட கலைஞர் டி.வி.யில் இவ்வளவு பெரிய தொகையை மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஏன் முதலீடு செய்தது?

6) 2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன், ராசாவை ‌‌சி‌.பி.ஐ விசாரிக்க தொடங்கியவுடன், டி.பி. ரியால்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தைஉத்திரவாதமற்ற கடன்ஆக மாற்றி அதனை உடனடியாக ஒப்படைப்பு செய்ய கலைஞர் டி.வி. ஏன் திடீர் முடிவு எடுத்தது?

7)
திடீரென்ற இந்தக் "கடனை வட்டியுடன்" திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு கலைஞர் டி.வி.க்கு பணம் எங்கிருந்து கிடைத்தது?

8)
ஜெனிக்ஸ எக்சிம் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற போர்வையில்,  தன்னுடன் நெருங்கி பழகியவர்களின் நிறுவனமான துபாயைச் சேர்ந்த இடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம், டி.பி. ரியால்டி நிறுவனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஸ்வான் டெலிகாம் குழுமத்தில் இடம் பெற்றதற்கு கருணாநிதியின் விளக்கம் என்ன?

9)
கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கும், கருணாநிதிக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில், ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பரிமாணங்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன?

10) "
கனிமொழி என் மகள் என்பதற்காக நான் ஆதரவளிக்கவில்லை; கனிமொழி தி.மு.க.வின் விசுவாசமிக்க உண்மையான தொண்டர் என்ற முறையில்" ஆதரவளிப்பதாகத் தெரிவித்து, கட்சியை இழிவுபடுத்த தனக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கருணாநிதி! இறுதி மூச்சுவரை கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள், கட்சிக்காக தங்கள் உயிரைக்கூட கொடுக்கத் தயாராக இருக்கும் தொண்டர்கள் இது போன்ற பிதற்றலை நம்புவார்கள் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறாரா?

ஒர லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்பது உண்மையாக நடந்த ஒன்று. ராசாவுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. கலைஞர் டி.வி., கருணாநிதி உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்லாமல், வரி ஏய்ப்பின் புகலிடமாக விளங்கும் அய‌ல்நாட்டு வங்கிகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் பணத்தை குவித்து வைத்து இருக்கின்றனர்.

கனிமொழிய மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்ததன் மூலம் சி.பி.ஐ. தன்னுடைய பணியை சரிவர செய்யவில்லை என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்த ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் அனைவருக்கும் தொடர்பு உண்டு. அனைவரும் பயனடைந்துள்ளனர். நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால், 2ஜி ஊழலில் தொடர்புடைய கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் பெயர்களும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற வேண்டும்.

இது ஜெயலலிதா தொடுத்திருக்கும் பத்துக் கேள்வி கணைகள்!

இந்தக் கேள்விக்கணைகளுக்கு சிபிஐ தரப்பில் இருந்து கசியும் செய்தியாக, குட்டு அம்பலப்பட்ட பிறகுதான்,முதல் தகவல் அறிக்கை தாக்கலான பிறகு தான் அவசர அவசரமாக  கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், "கடனாக" மாற்றப்பட்டு, அப்புறம் வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும், கலைஞர் டிவியின் வரவு செலவுக் கணக்கில் அறுபத்துச்சொச்சம் கோடி வரவில், செலவு போக வெறும் ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம் தான் நிகர லாபமாகக் காட்டப் பட்டிருப்பதும், ஏற்கெனெவே செய்திகளில் கசிந்ததுதான்!

யார் இதையெல்லாம் நினைவு வைத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்ற நினைப்பிலேயே, தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நெஞ்சுரத்தை என்னவென்று சொல்வது?

இது தொடர்பாக நேற்றும் இன்றும் வெளியான இரண்டு செய்திகளைப் பாருங்களேன்! செய்திகளுக்கு தட்ஸ்தமிழ், தினமணி இரு நிறுவனங்களுக்கும் நன்றியுடன்!


டெல்லி: 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.


கனிமொழி, தமிழ் மையம் அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த மையம்தான், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் சென்னையில் நடத்தி வருகிறது.

2
ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தமிழ் மையம் அமைப்பின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், தமிழ் மையம் அமைப்பு, 2ஜி உரிமம் பெற்ற சில தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில், தமிழ் மையம் அமைப்புக்கு அந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நேரடியாகவே நன்கொடைகளை வழங்கியது தமிழ் மையம் அமைப்பின் ஆடிட் செய்யப்பட்ட பாலன்ஸ் ஷீட் மூலம் தெரிய வருவதாக அந்த செய்தி கூறுகிறது. அந்த காலகட்டத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராசா இருந்தார். அப்போதுதான் 2ஜி உரிமங்களும் அவரால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புதிய தகவலால் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சூடு கூடியுள்ளது.

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி ; 2ஜி வழக்குக்கு பிறகே ஒப்பந்தம்: சிபிஐ தகவல்


புது தில்லி, மே 1: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பின்னரே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி அளிக்கப்பட்டது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் இதைத் தெரிவித்துள்ளது.

ஸ்வான் டெலிகாம், டி.பி. ரியாலிட்டி நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது. டிசம்பர் 23,2008-ஆகஸ்ட் 7,2009-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணம் கைமாறியுள்ளது. இந்தத் தொகை கலைஞர் டி.வி.க்கு அளிக்கப்பட்டது குறித்து அப்போது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.

 இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அக்டோபர் 21,2009-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

 இதையடுத்துதான் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனவரி 27,2010-ல் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 இந்த வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து விசாரிக்கத் தொடங்கி, இந்த வழக்கில் தீவிரம் காட்டியதை அடுத்தே பணத்தை கலைஞர் டி.வி. திருப்பி அளித்துள்ளது என்று சிபிஐ குற்றம்சுமத்தியுள்ளது.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் கணக்காளர் சதீஷ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மொஹமத் மொரானி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

இவர்கள் அளித்த தகவல் மூலமே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.200 கோடிக்கான ஒப்பந்தத்தை கலைஞர் டி.வி. மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெறுவதற்கு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தரப்பினருக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மறைமுகமாக லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் உஸ்மான் பல்வா, கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன இயக்குநரான மறைந்த சாதிக் பாட்சா ஆகியோர் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியிருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்தப் பணத்தை கடனாகப் பெற்றதாகவும், அதை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கலைஞர் டி.வி. தரப்பில் கூறப் படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி எம்.பி. ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிபிஐ தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை "கூட்டுசதியாளர்' என்று குற்றம்சுமத்தியுள்ளது. மே 6-ல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கனிமொழிக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆறு மனமே ஆறு! அட! மே 6 ஆம் தேதி நெருங்கி வருகிறதே! அன்றைக்குக் கனிமொழி நீதிமன்றத்தின் முன் ஆஜராக வேண்டும் இல்லையோ?!

உச்சகட்ட காமெடி என்னவென்றால், இத்தனைக்குப் பிறகும், நேற்று முன்தினம் ஜெயந்தி நடராஜன், நேற்று ஜி கே வாசன் இன்று எவரோ இப்படிக் காங்கிரசின் சார்பில் ஒவ்வொருவராக திமுக தலைவரை சந்தித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருப்பதும், வெளியே வரும்போது திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்று சொல்லிக் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் அபசுரமாக கண்டனூர் பானா சீனா மட்டும், கொஞ்சம் உண்மை நிலவரத்தைப் பேசியிருப்பது இன்னொரு காமெடி! அனேகமாக, நாளை அல்லது நாளை மறுநாள் இவரும் கோபாலபுரத்துக்குப் போய் சந்தித்து தேறுதல் சொல்ல வேண்டி வரலாம்! 

மானாமதுரை, மே 1: மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

இவர்களுக்கு முன்னாலேயே, காமெடியன் வடிவேலு இந்த வேலையைத் தொடங்கி வைத்ததை இந்தப்பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்! நினைவுக்கு வருகிறதா!!