விங் கமாண்டர் அபிநந்தன்! இன்னும் சில செய்திகள்!

விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப் படுவதாக ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது! ஒவ்வொரு இந்தியனுடைய பிரார்த்தனையிலும் இருந்த நம்முடைய விமானி நாடுதிரும்புகிறார் என்பதில் மிக்க மகிழ்ச்சியே!

பாகிஸ்தானுக்கும் கூட இப்படி  திடீரென்று நல்லெண்ணம் வந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறதே!  முகநூலில்  ஸ்டேன்லி ராஜன் முதலில் இப்படிக் கலாய்த்தார்!

இந்த இம்ரான்கானின் முன்னோர்கள் பற்றி விசாரிக்க வேண்டியிருக்கின்றது
அவர்கள் நீதிகட்சியில் இருந்து, ரெட்டைமலை சீனிவாசன், பெரியாரோடு பழகி அப்படியே அண்ணா, கலைஞர் என சுற்றி தேசபிரிவினையில் சமூக நீதி காக்க பாகிஸ்தான் சென்றிருக்கலாம்
அந்த தலித் குடும்பம் அங்கே இஸ்லாமினை தழுவியிருக்கலாம், அங்கே இம்ரான்கான் பிறந்து வளர்ந்திருக்கலாம்
இந்த திக, திமுக தலித் அரசியல் இம்சைகள் கதறுவதை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது  
*******
இன்றைய முப்படைத் தளபதிகளின் செய்தியாளர் சந்திப்பில் 🇮🇳
ஒரு பெண் செய்தியாளர் கேள்வி
"பாகிஸ்தான் பைலட்டை விடுவித்ததை நல்லெண்ண அடிப்படையில் பார்க்கிறீர்களா? இதில் நல்ல நம்பிக்கை ஏற்படுத்துகிறதா?"
மேஜர் ஜெனரல் : "ஜெனிவா தீர்மானம் பின்பற்றப் படுகிறது அவ்வளவு தான்."
முப்படை அதிகாரிகள் கூட்டாக அளித்த பேட்டியில் சில உண்மைகளை உடைத்துச் சொல்லியிருக்கிறார்கள்! முப்படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்! விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்புவதற்காகக் காத்திருப்போம்! 

விங் கமாண்டர் அபிநந்தன்! இருவேறு கோணங்கள், கேள்விகள்!

தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானிகளிடம் பிடிபட்டிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ஊடகங்கள், இரண்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், மூன்று விமானிகளை சிறை பிடித்திருப்பதாகவும் அடித்த தம்பட்டம்  கொஞ்ச நேரம் தான்!அப்புறம் பொய்யாகிப் போனது என்பதை நிறைய நண்பர்கள் இங்கே கவனிக்கத்  தவறுகிறார்கள்! வீண் பதட்டமும் #givepeaceachance என்ற உபதேசங்களும் நிறையக் கிளப்பிவிடப்படுகின்றன!


வேறெந்தத் தருணத்திலும் இங்கே தமிழேண்டா போராளிகளும் இணையதள திமு கழக போராளிகளும் இத்தனை வக்கிரமாக, இந்திய பாகிஸ்தான் உரசல்கள் விவகாரத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைக்கு மிக  நெருக்கமாகப் போய் நான் பார்த்ததில்லை!  கழக இணைய தளக் கூட்டமே அணு ஆயுதப்போர் மூளுமோ? போர்வேண்டாமென்று சொல்லுங்கள் என்று தேவையே இல்லாத அச்சத்தை, விஷத்தை விதைத்துக் கொண்டு வருகிறது என்பது தற்செயலானதுதானா?

அதேநேரம், முன்னெப்போதுமில்லாத அளவுக்கு உலக நாடுகள் ஆதரவை இந்தியா பெற்று வருவதை இவர்கள் வேண்டுமென்றே கவனிக்கத் தவறுகிறார்கள்!  மசூத் ஆசார் விவகாரம், பாகிஸ்தான் சொந்தமண்ணில் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதை அம்பலப் படுத்தி வருகிறது.

ஐ.நா பாதுகாப்புசபையில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் முதலான நாடுகள் மசூத் ஆசார் மற்றும் அவன் நடத்தும் ஜெயிஷ் ஏ மொகமது இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளன. வழக்கம் போல சீனா தனது வீட்டோ உரிமையைப் பயன்படுத்தி, இதற்கு முட்டுக்கட்டை போடலாம்! ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து தனிமைப்படுத்தப் படுவதை சீனாவால் தடுத்து நிறுத்திவிட முடியுமா? கவிழ்ந்துபோன பாகிஸ்தான் பொருளாதாரத்தை நிமிர்த்தி விடத்தான் முடியுமா? எல்லோருக்கும் தெரிகிற விடைதான்! நம்மூர் திருகல் டேனியல்களுக்கோ, கழகக் கண்மணிகளுக்கோ கண் தெரியாமல் செலெக்டிவ் blindness வந்துவிடும்! 1971 இல் தைவானுக்குப் பதிலாக ஐநா பாதுகாப்புசபையில் இடம்பிடித்த  சீனா முதன்முதலாக தன்னுடைய veto power ஐப் பயன்படுத்தியதே 1972 இல் வங்காளதேசத்தை ஐ.நா  உறுப்புநாடாக ஏற்கக்  கூடாது  என்பதில்தான்! 1965 இந்தோ பாகிஸ்தான் போர் சமயத்திலிருந்தே  சீனாவின்உள்நோக்கம் பாகிஸ்தானைப் பாதுகாப்பது அல்ல! குறி இந்தியா மீது தான் என்பது புரிந்தால் சரி ! 

நான்கு வருடங்களுக்கு முந்தைய வீடியோ இது! எப்படி பாகிஸ்தான் உருவான நாட்களிலிருந்தே மதத்தின் பெயரால் தீவீரவாதிகள், தாலிபான்களை  உருவாக்குகிற பயிற்சிக்கூடங்களை நடத்திவருகிறது என்பதை ஒரு 12 நிமிடக் காணொளியில் சொல்கிறார்கள். தேடினால், பாகிஸ்தான் என்பதே இந்தியவெறுப்பு என்ற ஒற்றைக் கனவில் உதித்த தேசம் என்பதற்கு ஏராளமான சான்று, தரவுகள் இணையத்திலேயே குவிந்து கிடக்கின்றன.

பாகிஸ்தானுடன் சமாதானம் உண்மையிலேயே சாத்தியமா? பயங்கரவாதத்தின் விஷப்பல்லை பிடுங்க நம்மால் முடியுமா?

இந்தக்கேள்விகளை இருவேறுகோணங்களில் இருந்து பார்க்கிற பார்வைகளாக! ஒன்று ப்ரம்ம செலானி சொல்வது போல Unless India is willing to take the battle to Pakistan’s terror masters, the latter will continue employing their terrorist proxies against it

இன்னொன்று TOI செய்தி ‘Non-military’ raid: How India and Pakistan differ இது செய்தியின் தலைப்பு. 

இரண்டையும் பார்த்துவிட்டு ஒரு கருத்து அல்லது கேள்வி இயல்பாகவே வரும் அல்லவா? இங்கே வந்து சொல்லலாம் அல்லவா!  

         



புதன்கிழமை! படத்தில் ஹீரோ! நிஜத்தில்....?

யாத்ரா! மம்மூட்டி படமா? YS ஜெகன் தேர்தல் பிரசாரமா?  இப்படி ஒரு திரைப்படத்தின் அரசியலை இரண்டுவாரங்களுக்கு முன்னால் ஒரு பதிவில் அலசி இருந்தது நினைவிருக்கிறதா? படத்தயாரிப்பாளர்கள் YS ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள்! பாக்ஸ் ஆபீசில் சொதப்பல் என்றாலும், சொந்த ரிலீஸ் என்பதால் தயாரிப்பாளர்களே நஷ்டத்தைத் தாங்கிக் கொண்டார்கள் என்கிறது Mirchi9 தெலுகு சினிமா தளம்!

தெலுகு சினிமாவின் கடவுளாகவே இருந்த NT ராமராவ் அரசியலுக்கு வந்தார். தெலுகு ஆத்ம கௌரவம் கோசம் என்று தெலுகுதேசம் கட்சியை ஆரம்பித்தார். ஹீரோ அவர் என்றால் வில்லன் யார்? இந்தியாவின் வில்லன் கட்சியான காங்கிரசைத் தவிர, யாராக இருக்க முடியும்? காங்கிரசை எதிர்த்தே அவருடைய அரசியல் இருந்தது. இப்போது அதற்கென்ன என்கிறீர்களா?

NT ராமாராவின் மகன் பாலகிருஷ்ணா, தெலுகு சினிமா ரசிகர்களால் பாலையா என்று கொண்டாடப் படுகிறவர், தனது சொந்தத்தயாரிப்பில், தந்தையின் கதையை இரண்டு பகுதிகளாக NTR கதாநாயகுடு என்று தெலுகு சினிமாவின் தேவுடா ஆனதையும், அடுத்து NTR மகாநாயகுடு என்று இந்திரா, ராஜீவை எதிர்த்து அரசியல்நாயகன் ஆனதையும் படமாக்கி  ஜனவரியில் முதல்பாகமும் இந்தமாதம்  14 இல் அடுத்த பாகமுமாக வெளியானதில் பாக்ஸ் ஆபீசில் முதல் பாகம் டீசண்ட் வசூலும், இரண்டாம் பாகம் பரிதாபமாக அடிவாங்கியதுமாக ஆனதில் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் எதிரிகளுக்கு ஏக மகிழ்ச்சியாம்!  The movie has stirred a lot of interest in the trade before its release and registered Record Pre-Release Business. The losses now are like never before in the past.


Prasanth Facts என்ற யூட்யூப் சேனலில் NTR கதையை திரைப்படம் சொல்லாத விஷயங்களோடும் கொஞ்சம் சொல்வதை மேலே பார்த்தீர்கள், இல்லையா? NTR Mahanayakudu received decent reviews, but the audience seems to have rejected the film. Now, Balakrishna, who is clueless about the shockingly-underwhelming response to the film, has decided to set up a meet with his fans என்கிறது இந்தியா டுடே! ரசிகர்களிடம் கேட்டென்ன பயன்? NTR இமேஜை சந்திரபாபு நாயுடுவுக்காகப் பயன்படுத்த முடியாதபடி, மாமனாரைக் கவிழ்த்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிக் கொண்ட கதை மட்டுமல்லாமல், NTR அரசியல் பிம்பமே காங்கிரசுக்கு எதிராக இருந்ததில்தான் என்பதும், நாயுடு தன்னுடைய சௌகரியத்துக்கேற்றபடி காங்கிரசுடனும்  கூட்டுக்காகத்  தொங்கியவர் என்பதும் சேர்ந்து கொண்டு இடிக்கிறதே!


YSR காங்கிரஸ்காரர்களுக்குக் கொண்டாட்டமாக இருப்பதில் ஆச்சரியமில்லை! கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதையாக இங்கே அரசியலில் நடந்துகொண்டிருப்பது புரிகிறதா?  

    

இரண்டு படங்ளையும் பார்த்தபிறகு, இனிமேல் சினிமா கவர்ச்சி ஒன்றை வைத்து மட்டும் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது, முதல்வர் ஆசையெல்லாம் நடக்காது என்ற நல்லசேதிதான் என்கண்களுக்குத் தெரிகிறது! 

அதுவும் தமிழர்களைவிட சினிமாப பைத்தியங்களான ஆந்திர, தெலங்கானா ஜனங்களே அசட்டை செய்து, நிராகரித்திருக்கிறார்கள் என்பது நிச்சயமாக நல்ல செய்திதான்! இல்லையா, பின்னே!!
  

                         

இனியும் மோடி வெறுப்பு, மோடி எதிர்ப்பு எடுபடுமா?

இங்கே மதுரை வட்டார மொழியில் சொல்வதானால் இத்துப்போன திராவிட முகநூல் போராளிகள், தமிழேண்டா திருகல் டேனியல்கள் முழங்குவதை எல்லாம் அப்படியே புறந்தள்ளிவிட்டுப் போய்விடலாம்!

Make no mistake - as the Indian Air Force jets returned after destroying the biggest terror training camp of terror group Jaish-e-Mohammed (JeM) in Balakot inside Pakistan, a new strategic security doctrine has been unveiled by the Modi government. India and its security establishment have redrawn our red lines and thrown away so-called strategic restraint. The new assertion is this: Pakistan has been stripped of the sham of "non-state actors". இப்படி சுவாதி சதுர்வேதி எழுதியிருப்பது அச்சு அசலாக காங்கிரசுக்கு விலைபோய்விட்ட NDTV தளத்தில்! 

bt5mjjc8  Indian Air Force fighter jets struck the biggest camp of the Jaish-e-Mohammed, killing over 300 terrorists including Jaish chief Masood Azhar's brother-in-law
இப்படிப் படத்தின்கீழ் குறிப்போடு வெளியாகியிருக்கிற செய்திக்குத் தலைப்பு இது! 

Modi Administration Changes India Handling Of Pak Decisively!

சுவாதி சதுர்வேதி, வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே பேசியதை (இதன் வீடியோ, முழு டெக்ஸ்ட்டுக்கான சுட்டி முந்தைய பதிவில் இருக்கிறது) After using the air strike to escalate and deliver the message, Foreign Secretary Vijay Gokhale's statement was a master class in crisp and clear speak while also portraying India as a mature and responsible country determined to protect its own. Gokhale cogently said that India was careful in ensuring no civilian and military casualties. Hence the "non-military strike".என்று சிலாகித்திருப்பதில், காங்கிரசோ அல்லது இதர உதிரி கட்சிகளோ இனி  மோடி வெறுப்பு மோடிஎதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் இனி அரசியல் செய்வது மெத்தக்கடினம் என்பது புலப்படுகிறதோ? வேறு வழியே இல்லாமல், ராவுல் பாபா, அரவிந்த் கேசரிவாலு, மம்தா பானெர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு எல்லாம் விமானப்படையின் இன்றைய சாகசத்தை வரவேற்றுப் பேசவேண்டியதாகி விட்டது.

     
தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இன்று முற்பகல் பாதுகாப்புக்கான காபினெட் கமிட்டிக்கு (மந்திரிசபைக்குழு) இன்று நடத்தப்பட்ட ஆபரேஷனில் ஜெய்ஷ் ஏ மொகமது தீவீரவாதக்குழுவின் 25 தளபதிகள் கதை முடிக்கப்பட்டதாகத் தகவல் சொல்லியிருக்கிறார்.  

பாகிஸ்தான் ராணுவத்தின் சவடால் இதை போட்ட சிறிது நேரத்திலேயே சாயம் வெளுத்துப்போனது ஒரு பரிதாபம் என்றால், சிலகாலமாக மோடியைக் கிண்டல் செய்தே கார்டூன் வரைந்துகொண்டிருந்த சதீஷ் ஆசார்யா கூடத் தன் கோட்டோவியங்களில் இப்படி!
   
payback என்றவுடன் இன்னொரு கார்டூன்!
அணுகுண்டுப் பூச்சாண்டி! பாகிஸ்தான் 1965 போரிலேயே மிகநவீன சாபர் ஜெட்டுகளை வைத்துக் கொண்டு வயல்வெளிகளில் குண்டு வீசிவிட்டுப்போனதும், பேட்டன் டாங்குகளை சகதியில் சிக்கவைத்து இந்திய ராணுவம் தண்ணிகாட்டியதும் இந்தப் பக்கங்களில் லால் பகதூர் சாஸ்திரி என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து வாசிக்கலாம்! பழைய கதைதான்! என்றாலும் பாகிஸ்தான் போட்ட தப்புக்கணக்குகள் என்னென்னவென்று பார்க்கலாமே! அபுதாபியில் சுகமாக வசிக்கும் முன்னாள் ராணுவத் தளபதியும் அதிபருமான பர்வேஸ் முஷாரஃப், நியூக்ளியர் ஆப்ஷனெல்லாம் கதைக்கு ஆகாதென்று பகிரங்கமாகப் போட்டுடைத்திருக்கிறார்! 
சுவனத்தில் 72 கன்னிகைகள் எல்லாம் கிடைப்பார்களா? சதீஷ் ஆசார்யாவின் இன்னொரு கார்டூன் நக்கலடிக்கிறது! தத்கல் புக்கிங்காம்!

Heavy firing by Pakistan along LoC, Army strongly retaliates

என்கிறது தற்போதைய நிலவரச் செய்தி!
 
         

சாந்தியும் சமாதானமும் ஒருவழிப் பாதையல்ல!

இந்தியர்களாகிய நாம் அண்டை நாடுகளோடு சமாதானமாகவே வாழ விரும்புகிறோம்! ஆனால், சாந்தியும் சமாதானமும் ஓருவழிப்பாதையல்ல என்று அவ்வப்போது நம்மைச் சீண்டுகிறவர்களுக்குப் புரிகிற மாதிரி பாடம் கற்பிக்கவும்  வேண்டியிருக்கிறது!

புல்வாமா பயங்கரவாதத்தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கப் போகிறது என்ற கேள்வியும், போர் வருமா என்ற ஊகங்களும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததற்கு இந்திய விமானப்படை இன்று அதிகாலை தெளிவான விடை அளித்திருக்கிறது. பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்கள் எல்லாம் செல்லுபடியாகாது என்று முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பே ஒப்புதல் வாக்குமூலமாகச் சொல்லிவிட்டார் என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

நம்முடைய முப்படைகளுக்கும் குறிப்பாக விமானப் படைக்கு இந்தத்தருணத்தில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியக்குடிமகனுடைய கடமையும் கூட!

 
The Indian Air Force on Tuesday "struck the biggest training camp of Jaish-e-Mohammed (JeM) in Balakot" in Pakistan's Khyber Pakhtunkhwa province, and in this intelligence-led operation, "a very large number of JeM terrorists, trainers, senior commanders and jihadis were eliminated", said Foreign Secretary Vijay Gokhale என்கிறது FirstPost. விஜய் கோகலே பேசியது மேலே காணொளியாகவும்!  

வழக்கம்போல பாகிஸ்தான் கொஞ்சம் மழுப்பலான மறுப்பைத் தெரிவித்தாலும், தாக்குதல் நடத்தப்பட்ட இடம் Balakot, LOC தாண்டி பாகிஸ்தானில் உள்ள கைபர் பஃடூன்க்வா பிரதேசமா அல்லது Bala Kote என்று அதே பெயரில் ஜம்முகாஷ்மீர் பூஞ்ச் பிரதேசத்தில் LOC அருகாமையில் உள்ள இடமா என்பதைத்  தெளிவு படுத்தவில்லை.

விஜய் கோகலே அதையும் மிகத்தெளிவாகச் சொல்லி இருக்கிறார் Gokhale, in his briefing, has confirmed that the IAF targeted JeM camps in Khyber Pakhtunkhwa. Now, the exact location of the main strike has been pinpointed as the Jaba Top (also known as the Jabba Top), located in the province's Mansehra district. Jaba is believed to have housed a JeM stronghold, with as many as 200 fidayeens at the time of the IAF operation. It is a 40-minute drive from both Mansehra and Balakot towns in the Mansehra district.According to defence sources, IAF fighter jets not only targeted the JeM camp, but also Lashkar-e-Taiba and Hizbul Mujahideen camps near Muzaffarabad, which lies between the LoC and Jaba Top. என்கிறது அதே தளத்தின் இன்னொரு செய்தி. 

இது இந்திய ராணுவத்தின் ட்வீட்டர் பக்க முகப்பு!

தேசமே முதலில்! என்பது ராணுவத்துக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கவேண்டிய உணர்வு!  


மண்டேன்னா ஒண்ணு! அரசியல்!

முதலில் ஒரு பாசிட்டிவ் செய்தி! இந்த வீடியோவைப் பார்த்த பிறகு மூளை வளர்ச்சி 2% தான், கருவைக் கலைத்துவிடுங்கள் என்று டாக்டர்கள் பரிந்துரைத்ததையும் மீறி, மூளைவளர்ச்சி இல்லாத பார்க்கும் கேட்கும் திறனில்லாத குழந்தையைப்  பெற்றெடுத்ததுடன் நம்பிக்கை, மருத்துவர்கள் துணையுடன்  ஆளாக்கி வளர்த்திருப்பதில் தாய்மையின் கருணை எப்படிப்பட்டது என்று வெளிப்பட்டதில் உருகி மெய் சிலிர்த்தேன்!பொய்யில்லை!

நல்ல செய்தியாக ஒன்றைப் பார்த்துவிட்டு, அடுத்து அரசியல் நாராசங்களையும் பார்க்க வேண்டிவருவதில் வெட்கம் தான்! என்ன செய்வது? அரசியல்வியாதிகள் அவரவர் சௌகரியத்துக்கும் சுயநலத்துக்கும் விஷக்கருத்தை விதைத்துக் கொண்டே போவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட முடிகிறதா? 

ஒரு மரத்தின் தன்மை இன்னதென்று அது கொடுக்கும் கனிகளால் அறியப்படும் என்கிறது விவிலியம்! நேரு, இந்திரா, சஞ்சய், ராஜீவ் அடுத்து சோனியா, ராகுல், பிரியங்கா அப்புறம் ராபர்ட் வாத்ரா என்று விரியும் அரசியலின் வேர் எது? உண்மையில் நேரு பாரம்பரியம் எப்படிப்பட்டது? முகநூலில் ஸ்ரீதர் சுப்பிரமணியம் என்பவர் ஆகஸ்ட் 6, 2014 இல் எழுதிய இந்தப் பகிர்வு கொஞ்சம் விவரங்களை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளச் சொல்கிறது. 


over to ஸ்ரீதர் சுப்பிரமணியம்
இந்திரா காந்தியை சிலாகித்து நண்பர் ஒருவர் பதிவிட அவர் பதிவுக்கு நிறையப் பேர் 'Iron Lady' என்றெல்லாம் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். யோசித்ததில் நம்மில் நிறையப் பேர் இந்திராவை அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றியது. ஒரு தீரமான, வீரமான, 'தேசப் பெருமையை' காப்பாற்றிய பெண்மணி என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் உண்மையில் எப்படிப்பட்ட பிரதமர்?
இந்திரா காந்தி
=============
இந்திரா காந்திக்கு இப்போதுதான் இரும்புப் பெண்மணி பட்டம் கிடைத்திருக்கிறது. அறுபதுகளில் அவருக்கு இருந்த பட்டப் பெயர் ‘கூங்கி குடியா’, அதாவது ‘ஊமைப் பொம்மை’ என்பதுதான். படிப்புக்கும் அறிவுக்கும் பெயர் போன நேரு குடும்பத்திலே பிறந்த ஒரே மக்குப் பெண். நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்-டால் ரொம்பவும் கிண்டல் செய்யப்பட்டு மனம் நொந்தவர். அந்தக் குடும்பத்திலேயே பட்டப் படிப்பை முடிக்காமல் திரும்பி வந்த முதல் ஆள் (அவரைப் பின்பற்றி அவருக்குப் பின் யாருமே பட்டம் வாங்கவில்லை என்பது வேறு விஷயம்.) இந்தியாவில் எந்த நம்பிக்கையும் இல்லாமல் அறுபதுகளில் குழந்தைகளோடு லண்டனில் போய் செட்டில் ஆகி விடலாமா என்று தன் ஆங்கிலேய நண்பி ஒருத்திக்கு கடிதம் எழுதி பதிலுக்குக் காத்திருந்தவர். சாஸ்திரி அகாலமாக இறந்ததும் ஆளாளுக்கு பிரதமர் நீயா நானா என்று போட்டி போட அதை சமாளிக்க முடியாமல் காமராஜால் பிரதமருக்கு முன் மொழியப்பட்டவர். ஒரே காரணம் அவர் ஒரு கூங்கி குடியா, ஆகையால் சொன்ன பேச்சை கேட்பார் என்பதுதான். என்ன, பதவிக்குப் பின் இந்திரா அப்படி ஒரு அவதாரம் எடுப்பார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அவர் செய்த மறைமுக வேலைகளால் காங்கிரஸ் பிளவுற்றது. ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்றானது. சுதந்திரத்துக்குப் போராடிய ‘உண்மையான காங்கிரஸ்காரர்கள் எல்லோருமே, காமராஜர் உள்பட, ஸ்தாபன காங்கிரசுக்குப் போனார்கள். அந்தக் கோபத்தில் திமுக உடன் கூட்டு சேர்ந்து காமராஜரை தோற்கடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஆம், இன்று காமாராஜர் ஆட்சி கொண்டு வருவோம் என்று நொடிக்கு நூறு தடவை முழங்கும் காங்கிரசார் அன்று திமுக-வோடு கை கோர்த்து கர்ம-வீரரை தோற்கடித்தனர்.
இன்று தமிழ்நாடு உள்பட நிறைய மாநிலங்களில் காங்கிரசுக்கு சரியான தலைவர் இல்லை என்று நாம் வருந்துகிறோம். அதற்குக் காரணம் இந்திரா காந்தி. இங்கு காமராஜர், கர்நாடகாவில் நிஜலிங்கப்பா, வீரேந்திர படில் ஆந்திராவில் சஞ்சீவ ரெட்டி, குஜராத்தில் சிமன்பாய் படேல் என்று பெரும் தலைவர்கள் மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை ஒவ்வொருவராக பின்னுக்குத் தள்ளி ஜால்ரா கோஷ்டிகளை மட்டுமே தலைவர்களாக ‘நியமித்து’ பிரதேச காங்கிரசை பலவீனப்படுத்தியவர். வாரிசு அரசியலை முதல் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி எதற்கும் பிரயோசனப்படாத தன் மகன் சஞ்சய் காந்தியை இந்தியாவின் மேல் திணித்தவர். சஞ்சயின் அகால மறைவுக்குப் பின் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த ராஜீவ் காந்தியை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துக் கொண்டுவந்தவர். Kitchen Cabinet என்று புகழ் பெற்ற ஒரு சிறிய ‘ஆமாம் சாமி’ கூட்டத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தியவர்.
சோஷலிசம் என்றால் நாம் நிறைய நேரம் நேருவைத்தான் குற்றம் சொல்கிறோம். நேரு காலத்தில் உண்மையில் தனியார் தொழில் முனைவோருக்கு நிறைய சுதந்திரங்கள் இருந்ததன. அதை எல்லாம் நீக்கி அவர்களை எவ்வளவு படுத்த முடியுமோ படுத்தி entrepreneurship என்கிற தொழில் முனைப்பையே நாசம் பண்ணியவர் இந்திரா! . ஏற்றுமதி-இறக்குமதி கட்டுப்பாடுகள் கொண்டு வந்து ‘கள்ள மார்க்கெட்’-டை இந்தியாவில் பரவச் செய்தவர். எழுபதுகளில் இந்தி, தமிழ், தெலுங்கு என்று எல்லாப் படங்களிலும் கோட்டு போட்டுக் கொண்டு வந்த ‘கடத்தல்கார’ வில்லன்கள் எல்லாருமே இந்திரா காந்திக்கு கடமைப் பட்டவர்கள். Pricing-control, production-control அதாவது தனியார் தயாரிக்கும் ஒரு பொருளுக்குக் கூட அரசுதான் விலை நிர்ணயம் செய்தது. அவர்களுக்கு ஒரு வருடத்துக்கு தயாரிப்பு எண்ணிக்கை உச்ச வரம்பையும் அரசே நிர்ணயம் செய்தது. பஜாஜ் ஸ்கூட்டருக்கு புக் செய்து விட்டு மக்கள் வருடக் கணக்கில் காத்திருந்தது நினைவிருக்கிறதா? தொழில் வருமான வரி நிறைய நேரம் 80% வரை கூடப் போய் நியாயமான தொழில் செய்பவர்கள் கூட கறுப்புப் பணம் பதுக்க வேண்டிய நிலையை கொண்டு வந்தவர். பிர்லா மேல் கோபம் கொண்டு அவருக்கு இல்லாத தொல்லைகள் கொடுத்து அவர் பாதிக்கு மேல் தொழிலை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லக் காரணமாக இருந்தவர்.
தனக்கு எதிராக எழுந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷலிச இயக்கத்தை முறியடிக்க ‘உன்னை விட நான் பெரிய சோஷலிசவாதி’ என்று காட்ட வரைமுறை இல்லாமல் தேசியமயமாக்கியவர். அதன் மூலம் இந்தியா எண்பதுகளின் இறுதியில் கையிருப்பே இல்லாமல் ரிசர்வ் வங்கி தங்கத்தை இங்கிலாந்தில் அடகு வைத்ததற்கு அவரின் இந்த indiscriminate தேசியமயமாக்கல் ஒரு முக்கிய காரணம்.
இன்று இந்தியாவைப் பற்றி நமக்கிருக்கும் பெருமைகளில் ஒன்று அதன் ஜனநாயகம். அந்த ஜனநாயக வரலாற்றில் இருக்கும் ஒரே கரும்புள்ளி எமெர்ஜென்சி. நீதிமன்றத்தில் கூண்டில் நின்ற முதல் (மற்றும் கடைசி) பிரதமர் இந்திராதான். அவரின் எம்பி தேர்தலில் கட்சி செய்த முறைகேடுகளை விசாரிக்க அவர் கூண்டில் ஏற்றப்பட்டார். செய்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டு, அவரின் எம்பி தேர்தலை செல்லாததாக நீதிமன்றம் அறிவித்ததும் அதைத் தாங்க முடியாமல் இந்திய ஜனநாயகத்தையே சஸ்பெண்ட் செய்து எமெர்ஜென்சி கொண்டு வந்தவர். அந்த இரண்டு வருடங்கள் இந்தியாவின் இருட்டு ஆண்டுகள். பத்திரிகை சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது. தலைவர்கள், எடிட்டர்கள், மாணவர்கள் என்று கண்ட மேனிக்கு கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி போன்ற தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர். அந்த இரண்டு வருடங்களில் சஞ்சய் காந்தி செய்த அட்டகாசங்கள் பற்றி ஒரு தனி புத்தகமே போடலாம். (வந்திருக்கிறது Sanjay Gandhi - A Life by Vinod Mehta). தவிர 356 என்கிற மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் சட்டத்தை அவர் போல கண்டமேனிக்கு பிரயோகம் பண்ணிய பிரதமர் வேறு யாருமே கிடையாது. அது போதாதென்று எம்எல்ஏ-க்களை கட்சித் தாவல் செய்வது, குதிரை பேரம் நடத்துவது, (உதாரணம் ஆந்திராவில் என்டிஆர் ஆட்சி கவிழ்ந்து பாஸ்கர் ராவ் வந்தது) எம்எல்ஏ-க்களை ஸ்டார் ஹோட்டல்களில் ஒளித்து வைத்து காப்பாற்றுவது போன்ற ‘ஜனநாயக’ வழிமுறைகளுக்கு முன்னோடியே அவர்தான்.
காஷ்மீர் பிரச்சனை இன்று இந்தியாவின் தலையாயப் பிரச்சனை. நம் ஜிடிபி-யில் கணிசமான பகுதி காஷ்மீரைப் ‘பாதுகாப்பதற்கே’ போகிறது. இந்தப் பிரச்சனை இப்போதிருந்தது போல அப்போது அவ்வளவு மோசமாக இல்லை. இந்தியில் ‘கஷ்மீர் கி கலி’, தமிழில் ‘தேனிலவு’ என்று படங்கள் ஷூட்டிங் நடத்தும் அளவுக்கு அமைதியாகத்தான் இருந்தது. அங்கு கன்னா-பின்னாவென்று தேர்தல் மோசடிகள், ஆட்சியை இஷ்டத்துக்கு டிஸ்மிஸ் செய்தது என்று அந்த அமைதியை நாசம் செய்தவர். பஞ்சாபில் காங்கிரசுக்கு எதிராக அகாலி தள் கட்சி வளர்வதை பொறுக்காமல் பிந்தரன்வாலே என்கிற பிரிவினைவாதியை ஊக்குவித்து அதனால் ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் சாக காரணமாக இருந்து கடைசியில் பத்மாசுரன் வரம் கொடுத்த சிவன் தலை மேலேயே கை வைக்கப் போனது போல தான் உருவாக்கிய அசுரனாலேயே தன் உயிரை இழந்தவர்.
பொருளாதார நாசம், தீவிரவாதம், ஜனநாயக சீரழிவு, ஊழல், வாரிசு அரசியல், சர்வாதிகாரம், காமராஜர் மாதிரி சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அவமரியாதை செய்தது, என்று எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் இந்திரா காந்தியின் கைவரிசை இல்லாமல் இருக்காது என்ற அளவுக்கு சர்வகாரணியாய் வியாபித்த தலைவர் அவர்.
Patriots And Partisans என்கிற புத்தகத்தில் ராமச்சந்திர குஹா என்கிற வரலாற்று ஆய்வாளர் ‘இந்திரா காந்தி மட்டும் அறுபதுகளில் இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று கற்பனை பண்ணி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ஹூம்!
======================================================
ஆதாரங்கள்:
* India After Gandhi - Ramachandra Guha
* India - Unbound - Gurcharan Das
* Patriots and Partisans - Ramachandra Guha
* India - A Portrait - Patrick French
* Indira - A Life - Katherine Frank
* Sanjay - A Life - Vinod Mehta
* Kashmir - A Tragedy of Errors - Tavleen Singh  
2019 நாடாளுமன்றத் தேர்தல்கள் நரேந்திரமோடி வெர்சஸ் மற்றவர்கள் என்ற மட்டத்தில் தான் நடக்கப் போகிறதா? வேறு அஜெண்டா எதுவுமில்லையா?
இப்படி நாட்டின் பிற பகுதிகள் கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், 

தமிழ்நாட்டில் மட்டும் ..................


அராஜகம், தடித்த வார்த்தைகளால் மட்டுமே பெயர் எடுத்த ஒரு மாஜி சினிமா இயக்குனர்(என்ன படம் இயக்கியிருக்கிறார்?)  தனிக்கட்சி ஒன்றைத்துவக்கி இருக்கிறார்! சட்டசபைத் தேர்தல்களில் 25 சீ ட்டாவது ஜெயிப்போம் என்று காமெடி செய்கிறார் பாருங்கள்! தமிழேண்டா என்று தலையில் அடித்துக் கொள்வதா? அல்லது தலையில் தட்டி உட்கார வைப்பதா?  

வரவிருக்கிற தேர்தல் மக்களவைத்தேர்தல் தான்! ஆனாலும் உதிரிகள், சில்லறைகள் சத்தம் ஓங்கி ஒலிப்பதைத் தலையில் தட்டி அடக்கி வைக்க வேண்டிய நேரமும் கூட!  

என்ன சொல்கிறீர்கள்?   


அரசியலில் ராபர்ட் வாத்ரா! அப்புறம் பானாசீனா!

காங்கிரஸ் ஏன் ஒழிந்துபோகவேண்டும்? பதிபக்தி மிகுந்த பிரியங்காவின் காதல் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு அரசியலில் இறங்கும் ஆசை வந்துவிட்ட ஒரே காரணம் போதாதா? எட்டு முறை அமலாக்கத் துறை முன்னால் ஆஜரான பிறகு முகநூலில் தன்னுடைய ஆசையை இப்படிச் சொல்லி இருக்கிறாராம்!

 
சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே மாதிரி ஆசை மாப்பிள்ளை வாத்ராவுக்கு வந்தபோது ப்ரியங்கா அதை மண்டையில் தட்டி அடக்கி வைத்துவிட்டார். ஆனாலும் கூட  வாத்ராவுக்கு அரசியல் ஆசை வந்து கொண்டே இருக்கிறது போல! 

2014 இலிருந்தே  ராபர்ட் வாத்ரா எப்படி வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொண்டே வருகிறார்? யார் அவரைப் பாதுகாக்கிறார்கள்?

சாரதா குழும மோசடி உட்பட ஏராளமான நிதிநிறுவன மோசடிகளைப் பற்றிய புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு 2007 முதலே வந்துகொண்டிருந்தாலும், 2013 இல் தான் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 2014 இல் உச்சநீதி மன்றம் CBI விசாரணைக்கு மாற்றிய பிறகும் கூட, குற்றத்தில் கூட்டாளிகளாக இருந்த அன்றைய ஆளும் கட்சியும், அதிகாரிகளும் பெரும் தடையாக இன்றும் இருப்பதை இந்தப்பக்கங்களில் பார்த்திருக்கிறோம். 


பானாசீனா வில்லனா விக்டிமா? கொஞ்சம் சுவாரசியமான அலசல் கொஞ்சம் பழசுதான்! ஆனாலும் தோண்டத்தோண்ட நிறைய விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரே வரியில் சொல்வதானால் காங்கிரஸ் என்றாலே ஊழல்தான்!    

இந்த வீடியோக்களைவரிசையாகப் பார்த்துக் கொண்டே வந்ததில்  R Com அனில் அம்பானியின் சாம்ராஜ்யத்தை ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அடியோடு சரித்திருக்கிற செய்தி விவரமும் வீடியோவாக!  . பணத்தைச் சொன்னபடி செலுத்தவில்லை என்பதால் மட்டும் அல்ல! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அனில் அம்பானியின் கடன்களுக்குப் பொறுப்பேற்க மறுத்திருப்பது ஒரு முக்கிய காரணம். 

வங்கிகளுக்கு அனில் அம்பானி பட்டிருக்கிற 35000 கோடி ரூபாய் கடன் வசூலாவது குதிரைக்கொம்புதான்! என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்! 
      

சண்டேன்னா மூணு! பானாசீனா! தமிழிசை! திருமாவளவன்!

ப.சிதம்பரம் மாதிரியான அரசியல்வியாதி அரசியலில் தலைதூக்கிவிடக் கூடாதென்பது என் உறுதியான கருத்து. இந்த செட்டிநாட்டு ஜாமீன் ஆசாமி இதுவரை, என்ன சாதித்தார்? மிகக் குறுகிய காலத்திலேயே காங்கிரஸ் முதல் குடும்பம், கருணாநிதி வகையறா தேடிக் கொண்ட சம்பாத்தியத்தை விட சற்று அதிகமாகவே சம்பாதித்துவிட்டார் என்றொரு தகவல் பொதுவெளியில் உண்டு என்பதைத் தவிர சாதித்தது என்ன?  மூப்பனாரோடு ஒட்டிக் கொண்டு ரஜனி வாய்ஸில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பானாசீனா, எப்படிப் பட்டவர் என்பதை வேறு எவரையும் விட திமுகவினர் நன்கு அறிவார்கள். அவர்களால் உள்ளுக்குள் முனகுவதைத் தவிர வேறென்ன செய்து விடமுடியும்?

நிகழ்ச்சியின் பெயர் அக்னிப்பரீட்சை! உண்மையில்  அக்னிப்பரீட்சை யாருக்கு? யோசித்துப் பார்த்தால் அது  வாக்களிக்கப்போகும் ஜனங்களுக்குத் தான் என்பதைப் புரிந்துகொண்டால், அதுவே மாற்றத்துக்கான முதல் படி! இங்கே யாரை எதற்காக நிராகரிக்க வேண்டும் என்பதில் ஒரு தெளிவு வந்தால் அதுவே பானாசீனா மாதிரியானவர்கள் களையப்படுவதற்கு உந்துதலாக இருக்கும்!  வாய்ப்பந்தல் போடுகிறவர்களை இனம் கண்டு நிராகரிக்காவிட்டால், அடுத்த தலைமுறைக்குப் பெரும் தீங்கு செய்தவர்களாகிவிடுவோம் 
  
******* 

டாக்டர் யக்கோவ் தமிழிசை பற்றி என்னத்த சொல்ல?

வார்த்தை விளையாட்டு விளையாடுகிற இந்த வாய் மட்டும் இல்லாவிட்டால் ....?   

சமரசம், சமாதானம் பற்றிப் பேசுகிற தருணங்களில் மட்டுமல்ல கேள்விக்கு பதில் சொல்கிற எல்லாத் தருணங்களிலும்  குமரி அனந்தன் மகளாக மட்டுமே தெரிகிறாரே தவிர, பிஜேபி மாநிலத் தலைவராக வெளிப்படவில்லை என்பது தமிழக பிஜேபியின் தலைவிதி! அஞ்சு சீட்டுக்கே வாயெல்லாம் பல்லா?   

*******
திருமாவளவன் மட்டும் குறைந்தவரா என்ன?

பாமகவைத் தொடர்ந்து சீண்டுவதால் மட்டுமே சிதம்பரம் தொகுதியில் ஜெயித்துவிடலாம் என்ற நினைப்பா? பாஜக பாரம் பாமக பலவீனம் என்று அதிமுக கூட்டணி பற்றி ஏற்கெனெவே சொல்லி விட்டார்! விசிக மதிமுக வுடன் திமுக கூட்டணி எப்படியென்பதை ஜனங்கள் சொல்லத்தானே போகிறார்கள்?!  நிச்சயம் நிராகரித்துச் சொல்ல வேண்டும்! 

உண்மையில் கவனிக்கப்படவேண்டிய செய்தியாக! 

இன்றைக்கு  தேதிமுக சார்பில் செய்தியாளர்களிடம் திருமதி பிரேமலதா பேசியதுதான்! அரை சதவீதமா அதற்கும் குறைவா என்றுகூடத் தெரியாத விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகளே வீராப்புடன் பேசும்போது, எதிரிகளே குறைத்து மதிப்பிடும் போது கூட இரண்டரை சதவீத வாக்குவங்கி வைத்திருக்கும் தேதிமுக கொஞ்சம் தெனாவட்டாகப் பேசுவதில் என்ன குற்றம் சொல்லிவிடமுடியும்? 


   

இட்லி வடை பொங்கல்! #14 சனிக்கிழமை ஸ்பெஷல்


முப்பது கோடி முகமுடையாள் , உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் –இவள் செப்பு மொழி பதினெட்டு உடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்! 
இது பாரதி வாக்கு! பாரத தேசத்தின் பன்முகத் தன்மையை இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியுமா?
பானாசீனா மாதிரி பெரிய ஜமீன் நினைப்பில் இருக்கிற சிக்குலர் வியாதியிடமிருந்து இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்!  ஆனால் விதி, இந்தமாதிரி போலிகளிடமிருந்தெல்லாம், இந்த தேசத்தின் பன்முகத் தன்மை பற்றிக் கேட்டுக் கொள்ளவேண்டியிருக்கிறது!
1996 இல் நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜினாமா செய்வதற்கு முன்னால், பிரதமராக இருந்த வாஜ்பாய் பேசியதையும் கொஞ்சம் கேளுங்கள்! பன்முகத்தன்மை என்பது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி விடுவதல்ல, செட்டியார் சொல்வது போல ஐக்கிய ஊழல் கூட்டணியாக அவர்கள் ஆண்டதுபோல அல்ல என்பதை அந்தக் கூட்டணிக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டிய நேரம் விரைவிலேயே தேர்தலாக வருகிறது!  
காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி சிறுவர்கள் கல்லெறிகிறவர்களாக , அப்படியே படிப்படியாக ஆயுதம் ஏந்திப் போராளிகளாக மாறுகிறார்கள் என்பதை சொல்கிற கார்ட்டூன் இது.  
   
காஷ்மீர் விவகாரம் இவ்வளவு சிக்கலானதற்கு நேரு தான் முழுமுதற் காரணம் என்பதை மறந்துவிட முடியுமா? அடுத்துவந்த வாரிசுகளும் கூட பிரச்சினை தீர எதுவும் செய்யவில்லை. இன்று என்ன நிலை?
காஷ்மீர் முதல்வராக இருந்த மெஹபூபா, பிரிவினை வாதிகளுக்கு வெளிப்படையாகவே வக்காலத்து வாங்குகிறார். இங்கே தமிழகத்தில் காஷ்மீர் சிக்கல் என்னவென்று எந்த அரசியல்வாதியாவது விவரம் தெரிந்து பேசியது உண்டா?
கமல் காசர் மக்கள் நீதி மய்யம் என்றொரு கட்சி நடத்துவதும், சமீபகாலமாக  திமுகவுடன் உரசுவதும் தெரிந்த விஷயம்! கூட இருப்பவர்கள் யார் யார் என்று தெரியாதில்லையா?  
இது ஒருவருடத்துப் பழசு! ஒன்றுமே தெரியாமல் இருப்பதை விட இது கொஞ்சம் பரவாயில்லை தானே!  
         

ஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

லிபரலிசம் என்பது ஒரு மனநலப் பிறழ்வு! The Wire தளத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து சமீபத்தில் எழுதியிருப்பதே அதன் நிரூபணம் என்று இங்கே எழுதி இருப்பதை  இப்போதுதான் வாசித்து முடித்தேன்.


இந்த இடதுசாரிச் சார்புள்ள அறிவுக்கொழுந்து தன்னுடைய தளத்தில் எழுதியிருப்பது இப்படி!காஷ்மீர் விவகாரம் குறித்து அவருடைய அறியாமை வெளிப்படுகிற மாதிரி!
The fact is that the post-Pulwama situation is too tempting for the Bharatiya Janata Party not to exploit it for political ends. It would clearly make sense for Modi to completely divert attention from the lack of jobs and agrarian crises to the question of who is best suited to preserve national security. The BJP will be further tempted to mix with national security the right quantity of majoritarian angst over Kashmir. This could be a potent cocktail and the opposition parties must be ready to counter this in their election campaign two months from now என்று எம்கே வேணு எழுதியிருப்பது முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில்! வெற்று ஊகங்களுக்கு என்ன மரியாதை கொடுக்க முடியும்? நேரெதிர் கருத்துக்கள் இரண்டையும் உங்கள்முன் சுட்டி கொடுத்து வாசிக்கும்படி பரிந்துரை செய்கிறேன்! உண்மைபோல சித்தரிக்கப்படும் செய்திகளில் ஒரு உள்நோக்கம், திரித்தல் இருப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வதாம்? ட்வீட்டரிலும் முகநூலிலும் புல்வாமா தாக்குதல் நடந்ததருணம் நரேந்திர மோடி வேறு ஒரு (விளம்பர) ஷூட்டிங்கில் இருந்தாரென்ற கட்டுக்கதை அவிழ்த்து விடப்பட்டதும், பதிலடி நிறைய ஆரம்பிக்கவே  காணாமல்போனதும் சற்றுமுன் நடந்த கதை!       
#TheWire எம்கேவேணு என்ற ஹேஷ்டாகுகளில் சிலவிஷயங்களை கூகிள் பிளஸ்சில் எழுதிய பகிர்வுகளிலிருந்து இரண்டு மட்டும் இங்கே!

2014 இல் நரேந்திரமோடி பிரதமரான பிறகு #மோடிஎதிர்ப்பு ஒன்றை மட்டுமே மையப் புள்ளியாக வைத்து #இணையப்பத்திரிகைகள் இங்கே கல்லாக்கட்ட ஆரம்பித்ததில் #thewire #scrolldotin #quint போன்றவை சில #உதாரணஊடகங்கள் ஒரு செய்தியில் உண்மையிருக்கிறதா என்பதைவிட பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கிற #பப்பரப்பேஊடகங்கள் என்பதில் தான் இவற்றின் #விஷம் #விஷமம் #வியாபாரம் எல்லாமே அடக்கம்! யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் எங்கேயிருந்து வருமானம் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அத்தனை கடினமானதொன்றும் இல்லை.
#CBIvsCBI என்று பரபரப்பாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அலோக்வர்மா confidentialityயை மதிக்காததன் மீது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறது. அஜித் டோவல் மற்றும் RAW அதிகாரி ஒருவர் மீது சேறு பூசும் செய்திகளை இரண்டொருநாட்களாகவே ஊடகங்கள் வெளியிட்டது அலோக் வர்மாதான் என்பதும் வெளியே வந்திருக்கிறது Disinformation is intentionally false or inaccurate information that is spread deliberately. It is an act of deception and false statements to convince someone of untruth. Disinformation should not be confused with misinformation, information that is unintentionally false
நீங்கள் வாசிக்கிற செய்திகளில் எது எதெல்லாம் #disinformation திட்டமிட்டே பரப்பப்படும் பொய்கள் என்பதை எப்போதாவது யோசனை செய்து பார்த்திருக்கிறீர்களா? எழுதியது நவம்பர் 20, 2018


#காங்கிரஸ்கட்சி யின் மணிசங்கர் ஐயருடைய பிறந்தவீடு பாகிஸ்தான் என்பதோ வாழ்கிற இந்தியாவை விட பாகிஸ்தான் மீதுதான் மணிசங்கர அய்யருக்குப் பாசமும் பிணைப்பும் அதிகம் என்பதோ இங்கே பலருக்கும் தெரியாத விஷயம். #TheWireதளத்தில்விஷமும் விஷமமும் கலந்து எழுதியிருக்கிற கட்டுரை

Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has been at the root of the Modi Diplomatic Disaster in South Asia என்று ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை காங்கிரஸ் ஆண்ட அறுபது சொச்சம் வருடங்களில் எப்படியிருந்தது? விடுதலை அடைந்த நாட்களில் நேருவும் கிருஷ்ணமேனனும் மணிசங்கர் அய்யர் சொல்கிறபடிதான் வெளியுறவுக் கொள்கையை ஸ்தாபனப் படுத்தப்பட்ட மெக்கானிசத்தில் தான் வகுத்தார்களாமா? 1962 இல் நேருவின் ராஜதந்திரமும் அணிசேராக்கொள்கையும் பல்லிளித்து நின்றது அய்யருக்குத் தெரியாமல் நடந்துவிட்டதோ? #நேருமகள்ஆட்சிக்கு வந்த பிறகாவது அண்டைநாடுகளுடனான உறவுகள் மேம்பட்டதா என்றால் அதுவுமில்லை.தாத்தன், அம்மா வகுத்த பாதையிலிருந்து விலகிக் கொஞ்சம் pragmatic ஆகச் சிந்தித்த ஒரேகாங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்திதான்! ஆனாலும் கூட அவராலும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. #பாகிஸ்தான் #இலங்கை இரண்டுமே இன்னமும் அதிகமாக விலகிப்போனதுதான் மிச்சம். 

#நேருபாரம்பரியம் மோசமானதுதான்! ஆனால் அண்டை நாடுகளுடனான உறவுகளில் விரிசல்,பின்னடைவு ஏற்பட்டு இருப்பதற்கு அவர்களை மட்டுமே குறைசொல்வது இந்தப் பகிர்வின் நோக்கமல்ல. முழுக்க முழுக்க விரோதமனப்பான்மை கொண்ட நாடுகளால் சூழப்பட்டிருக்கிற நாடு இந்தியா. நேபாளம் மட்டும் விதிவிலக்காக இருந்தது. மாவோயிஸ்டுகள் அங்கே தலையெடுத்து ஆட்சியையும் பிடித்தபிறகு நிலைமை முற்றிலும் விரோதமானதாக மாறிப்போனது.

#தாராளமயமாக்கல் #உலகமயமாக்கல் இரண்டும் சேர்ந்து ராஜீய உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சீனா மாதிரி #கந்துவட்டிஏகாதிபத்தியம் கூட தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறது. மணிசங்கர அய்யர் குறிப்பிட்டிருக்கிற சின்னஞ்சிறு நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டிருக்கிற தேக்கம், தொய்வுக்கு பின்னணியில் சீனா ஒரு வலுவான காரணம் என்பதை மறந்து விட்டுத் தனியாகப் பார்க்க முடியாது. #தேக்கம் தற்காலிகமானது அங்கேயே தேங்கி நின்றுவிடுவது அல்ல என்பதை புரிந்து கொண்டால் மணிசங்கர் அய்யர் சித்தரிக்க முற்படுகிற #விஷமவலை அறுந்துபோகும். எழுதியது 26 மே, 2018 
Modi's Neighbourhood Policy: Chronicling Four Wasted Years: Mani Shankar Aiyar
A general with no foot soldiers, Modi has been unable to see foreign policy beyond the photo-op Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has b...


அரசியல் களம் இன்று! செய்தியும் விமரிசனமுமாக!

கமல் காசர் களத்தில் இறங்கி அடித்து விளையாட ஆரம்பித்திருக்கிறார்! அதுவும் திருவாரூரில்! இறங்கி அல்ல, மேடையேறி அடிக்கிறேன் என்று சொல்கிறார்!
திமுகவை விளாசுவதோடு அதிமுகவையும் சேர்த்தே விளாசுகிறார்!  திமுகவினர் BP எக்குத்தப்பாக எகிறப் போவதும், 200 ரூபாய் திமுகவுக்கு அதிகவேலையும் இப்போதே தெரிகிறது!      

மூக்கு மாத்திரம் இளைக்கிற எக்சர்சைஸ் கிடையாது என்று இன்னொரு நடிகருடைய குழப்பமான அரசியல் பற்றியும் பேசுகிறார்! சுவாரசியம்! விசில் அடித்ததா மய்யம்       என்று இங்கே கேட்பதையும் நேரம் இருந்தால் பாருங்கள்!


நேற்று திருநாவுக்கரசர்! இன்று ரஜனி! மாறிமாறி விஜயகாந்தை வீடுதேடி வந்து சந்தித்ததில் அரசியல் துளிக்கூட இல்லையாம்! நம்பமுடிந்தால் நம்புங்கள்! 
விஜயகாந்த் பழைய நினைப்பிலேயே இருந்தால், அதைவிட தற்கொலை அரசியல் வேறு இருக்க முடியாது!
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறிய ராஜேஸ்வரி ப்ரியா, எத்தனைநாளைக்கு ஊடக வெளிச்சத்தில் இருப்பாரென்று தெரியாது! அதனால் இப்போதே பார்த்துவிடுங்கள்! இவரைப் போலவே பிஜேபியிலிருந்து சிலகாலம் முன்பு விலகி இப்போது TTV தினகரன் கட்சியில் சேர்ந்திருக்கும் ஜெமிலா, இதே மாதிரியான இன்னொரு நபர்! 

இவைகளை விடப் பெரிய காமெடி இங்கே!

இதே விஜயகாந்துக்காக பழம் நழுவிப்  பாலில் விழும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார் கருணாநிதி என்கிற பழைய நிகழ்வு கலீஞர் இடத்தை ஸ்டாலினால் நிரப்ப முடியுமா என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகிறது! 
        

கூட்டணிகள் வலிமைக்கான அடையாளமா? பலவீனமா?

இங்கே தேர்தல் களத்தில் வலிமையான கூட்டணி எது என்று தேடிக்கொண்டிருக்கிற அதேநேரம் கூட்டணிகள் வலிமையின் அடையாளமா? அல்லது பலவீனமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுவதுதான்!
இது நேற்றைய அலசல். நாளைய தினம் செல்லுபடி ஆகுமா என்பது யாருக்கும் தெரியாது! வானிலை அறிக்கை மாதிரி சட்டென்று மாறக்கூடியதுதான்!  
ட்வீட்டர், முகநூல் அலப்பறைகளுக்கெல்லாம் அந்த நேரத்தைய ஆகா ஓகோ லைக், பின்னூட்டங்களோடு முடிந்து விடுகிற, கோப்பைக்குள் சுனாமி வருகிற கதைதான்! வலைப்பதிவுகள் வேறு ரகம்! யார்வந்து பார்த்தார்கள் என்ன நினைத்தார்கள் என்பது பெரிய மனதுவைத்து அவர்களே சொன்னால் தான் உண்டு!  
கொதிக்கும் சூரியன், கூர்மையிழந்த பம்பரம், துண்டிக்கப்பட்ட கை என்று திமுக கூட்டணியை நன்றாகக் கலாய்க்கிறார்! வறட்சியான அரசியலில் அவ்வப்போது இந்தமாதிரி நகைச்சுவை உணர்வு அவசியம்தான்!  

உள்ளூர் அரசியலோடு உத்தர பிரதேச அரசியல் காமெடியையும் கொஞ்சம் பார்க்கலாமா? காங்கிரசை ஒதுக்கிவைத்துவிட்டு சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டன. மூன்று இடங்களில் அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக் தளத்துக்கு ஒதுக்கி இருக்கிறார்களாம்! தமிழ்நாடு தவிர அநேகமாக எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டிருக்கிறது!     

 
இன்றைக்கு இது போதுமா?

ஒவ்வொரு தடைக்கல்லும் தாண்டிச் செல்வதற்காகவே!



சில நேரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள்நம்மை உன்மத்தம் பிடித்தவர்கள் மாதிரி ஆக்கிஒன்றுமே செய்ய இயலாதவர்களாகக் கட்டிப் போட்டு விடுகிற மாதிரித் தான் தோன்றும்.சந்தர்ப்பச் சூழ்நிலைகள்  நாம் என்னசொன்னாலும்எது செய்தாலும் நமக்கெதிராகவே திரும்பி,ஒருவிதமான மனச்சோர்வையும்சலிப்பையும் உண்டு பண்ணுவதாகவே இருக்கும். 

ஆனால் இது உண்மையானதுதானாமீள்வதற்கு வழியே இல்லையாஎத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?ஜோசியனிடம் போய்ப் பரிகாரம் கேட்டு மஞ்சள்துண்டு அல்லது வெள்ளைகருப்புத்துண்டு,வேட்டிவிரதம்ராசிக்கல் மோதிரம்,வசதி இருந்தால் கோவில் கோவிலாகப் படியேறி யாகங்கள் தானங்கள் என்று செய்தால் சரியாகிவிடுமா?அல்லது  இதுதான் விதிஇதிலிருந்து மீளவே முடியாது என்று முடங்கிக் கிடந்து விடவேண்டுமாஇல்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.நாம் சந்திக்கும் ஒவ்வொரு தடையும்,பிரச்சினையும்நம்மைப் பக்குவப் படுத்துவதற்காகவேநாம்எதை சாதிப்பதற்காக இங்கே பிறந்திருக்கிறோமோஅதை செய்து முடிப்பதற்கு உதவியாகவே  நமக்கு அளிக்கப்படுவதாக ஸ்ரீ அன்னை சொல்கிறார். 

உள்முகமாகப் பார்க்கப்பழகினால்நமக்குள்ளேயே இருளும்,ஒளியும் சமமாக இருப்பதைப் பார்க்க முடியும். இருட்டை மட்டுமே பார்க்கும் போது,அதன்பின்னால் பெரும் ஒளி இருப்பதைப் பார்க்க முடிவதில்லை. ஒரு பெரிய பலவீனமாக,பெரிய தடைக்கல்லாகசோதனையாக ஒன்றைப் பார்க்கும்போது கவலைப்படவேண்டாம்விரக்தியடையவும் வேண்டாம் அப்படி மேலோட்டமாகத் தெரிவதே மிகப்பெரிய தெய்வீக அருளாகவும் இருக்கக் கூடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.



இது இன்றைய தரிசன நாள் செய்தி!
ஸ்ரீஅரவிந்த அன்னை அவதார தினம் இன்று!

அன்னையிடத்தில் ஒருவர் திருவுருமாற்றம் [Transformation] பற்றி அறிய விரும்பினார். ஸ்ரீ அரவிந்த அன்னை அவருக்குச் சொன்னார்: "அது மிகவும் சுலபம். நீ இப்போது அப்படி இருக்கிறாயோ அதற்கு நேர் எதிராக ஆவது தான்."
அன்னையின் பதில் கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களாகொஞ்சம் ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வதைக் கவனமாகக் யோசித்துப்பாருங்கள். அரைகுறையாக மொழி பெயர்ப்பதற்குப் பதிலாகஸ்ரீ அன்னை சொல்வதென்ன என்பதை  நேரடியாகவே கொஞ்சம் பார்த்து விடலாமே! 

"If you look at yourself carefully, you will see that one always carries in oneself the opposite of the virtue one has to realise (I use "virtue" in its widest and highest sense). You have a special aim, a special mission, a special realisation which is your very own, each one individually, and you carry in yourself all the obstacles necessary to make your realisation perfect. Always you will see that within you the shadow and the light are equal: you have an ability, you have also the negation of this ability. But if you discover a very black hole, a thick shadow, be sure there is somewhere in you a great light. It is up to you to know how to use the one to realise the other.

This is a fact very little spoken about, but one of capital importance. And if you observe carefully you will see that it is always thus with everyone. This leads us to statements which are paradoxical but absolutely true; for instance, that the greatest thief can be the most honest man (this is not to encourage you to steal, of course!) and the greatest liar can be the most truthful person. So, do not despair if you find in yourself the greatest weakness, for perhaps it is the sign of the greatest divine strength.

Do not say, "I am like that, I can't be otherwise." It is not true. You are "like that" because, precisely, you ought to be the opposite. And all your difficulties are there just so that you may learn to transform them into the truth they are hiding.

Once you have understood this, many worries come to an end and you are very happy, very happy. If one finds one has very black holes, one says, "This shows I can rise very high", if the abyss is very deep, "I can climb very high."


- The Mother 
Col. Works Vol. 4: pp 117

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.
உன்னுடைய பெயர்சொல்லிக் காத்திருப்பதைத் தவிர வேறு புகல் இல்லாத இவனையும் நயந்து உனது பிரியத்துக்குகந்த குழந்தை என்றாகிற தகுதியை அருள்வாய்!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே!