A Wednesday! ஏன் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்?

இந்தப்பக்கங்களில் 2009 முதலே காங்கிரசைக் குறித்த விமரிசனங்களோடு , காங்கிரசைத் தோற்கடியுங்கள், Defeat Congress என்று மிக வெளிப்படையாகவே சொல்லி வந்திருக்கிறேன். ஐயோ, 134 வருடப் பாரம்பரியம் உள்ள கட்சியாயிற்றே, காந்தி நேரு போன்ற தலைவர்கள் இருந்த கட்சியாயிற்றே, அப்படிச் சொல்லி விடலாமா என்று சிலருக்கு சந்தேகம் எழலாம். அப்படி சந்தேகப்படுகிறவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கதை, வரலாறு தெரியாது என்று கொஞ்சம் சொல்லிக் கொடுக்கிற பதிவுகள் இங்கே நிறைய இருக்கின்றன. காங்கிரசின் கதை என்பது ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத பலகால கட்டங்களைக் கொண்டது. அல்லது காங்கிரஸ் என்ற பெயரில் வெவ்வேறுநபர்களின் ஆளுமையின் கீழ் இருந்த வெவ்வேறு குழப்பங்களைக்  குறிப்பிடுகிற ஒரு பெயர் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்! 

இப்படிக் கொள்கைகள் எல்லாம் காங்கிரசுக்கு இருந்ததா? இருக்கிறதா? என்பதில் ஆரம்பிக்கிற  குழப்பம், என்றைக்கும் தீருவதாயில்லை! 1885 இல் மாட்சிமைதாங்கிய ராணியின் சர்க்கார் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசா இன்றைக்கு இருப்பது? ஸ்ரீ அரவிந்தர், திலகர், கோகலே காலத்தைய காங்கிரசா இன்றைக்கிருப்பது? 1920 க்குப் பிறகு,மகாத்மா காந்தி வந்தபிறகு 1942 இல் வெள்ளையனே வெளியேறு என்று இயக்கம் நடத்திய காங்கிரசா இன்றைக்கு இருப்பது?

நேரு காலத்தில் இருந்த காங்கிரசா இது? கட்சியை உடைத்து இண்டிகேட் ஆக்கிய இந்திரா காலத்து காங்கிரசா இன்றைக்கிருப்பது?

இன்றைக்கிருக்கிற காங்கிரசின் சரித்திரம் சீதாராம் கேசரியை ஓரம் கட்டிவிட்டு, அன்டோனியோ மைனோ என்கிற சோனியா கட்சித்தலைவர் ஆனதிலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டீர்களானால், மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்வது எளிது!  ஏன் இவர்களை நிராகரிக்கவேண்டும் என்பதையும் சேர்த்துத்தான்!  

காங்கிரஸுக்கு இந்தியா ஒரு நாடு கிடையாது, ஒரு இராணுவ தளவாடங்கள் விற்கும் சந்தை! என்று முகநூலில் இதைப் பகிர்ந்திருக்கிறார் செல்வம் நாயகம் 
"இராணுவ தளவாடங்கள் விற்க ப்ளாக் ஆப்ஸ் என்ற இங்கிலாந்து நிறுவனத்தை ராகுல் காந்தி நிறுவியுள்ளார். அவர் இங்கிலாந்து பிரஜா உரிமையை (இந்தியாவுக்கு தெரியாமல் சட்ட விரோதமாக) பெற்றுள்ளார்" போன்ற விவரங்கள் கசிந்ததை அடுத்து, ராகுலிடம் அது பற்றி பேட்டி எடுக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார் நிருபர் விவேக்.
"உன்னையும், உனக்கு என் தொலைபேசி எண்ணை தந்தவனையும் முடித்து விடுவேன்" என்று ராகுல் மிரட்ட, அந்த நிருபர் பேட்டி டில்லியில் இருக்கும் ப்ளாக் ஆப்ஸ் நிறுவனத்தை நாடியிருக்கிறார். அங்கிருந்தும் துரத்தி விடப்பட்டிருக்கிறார் அவர். அதன் பின், பேட்டி எடுக்கும் முயற்சியை கை விட்டிருக்கிறார்.
இதை 2017இல் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நிருபர் விவேக்.
"ராகுல் மூளை சரியில்லாதவர் / ஆளுமை பிரச்சினை உள்ளவர் (personality problems)" என்ற ரீதியில் பத்திரிக்கையாளர் (காங்கிரஸ் ஆதரவாளர்) சயீது நாக்வி அமெரிக்கர் போலஃபிடம் (Poloff) 2005இல் தெரிவித்ததை விக்கி லீக்ஸ் வெளியிட்டிருந்தது. கொலை செய்யும் அளவுக்கு மூளை சரியில்லாதவர் போல....
(சயீது நாக்வி மகள் சபா நாக்வி தொலைக்காட்சி விவாதங்களில் வருபவர்)
அதே விக்கிலீக்ஸ், "ராஜீவ் காந்தி தான் ஸ்வீடனின் இராணுவ தளவாட நிறுவனம் சாப்-ஸ்கானியாவுக்கு (Saab-Scania) ஏஜண்ட். சாப்-ஸ்கானியா தளவாடங்களை இந்தியாவில் விற்க அவர் முயற்சித்தார்" என்ற 1975 விவரத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முதல் ஊழல், இராணுவங்களுக்கு ஜீப் வாங்கியது. அதை செய்தவர் நேரு. அந்த பாரம்பரியத்தை இந்திராவும் தொடர்ந்தார். இப்போது இந்தியாவில் விசாரணை கைதியாக இருக்கும் அகஸ்ட்டா வெஸ்ட்லாண்ட், யூரோஃபைட்டர் இராணுவ தளவாட ஏஜண்ட் கிறிஸ்ட்டியன் மிஷலின் தந்தை உல்ஃப்கங் மிஷல் ஒரு இராணுவ தளவாட ஏஜண்ட் இந்திராவின் நெருங்கிய நண்பர்.
நேரு, இந்திராவை அடுத்து ராஜீவ். போஃபர்ஸில் சிக்காமல் தப்பித்தார்.
பின் சோனியா, ராகூல், ராபர்ட் வாத்ரா, பிரியங்கா வாத்ரா...
காங்கிரஸுக்கு இந்தியா ஒரு நாடு கிடையாது, ஒரு இராணுவ தளவாடங்கள் விற்கும் சந்தை. இந்திய வளங்களை வெளிநாட்டுக்கு விற்று பணம் கொழிக்கும் பூமி. 1947இலிருந்து பாரதத்தை சூறையாடி வருகிறது இந்த குடும்பம். இந்த குடும்பத்தை சார்ந்தவர்களும் வாரிசு அரசியலை ஆதரிப்பதில் ஆச்சரியமில்லை.
11:12 PM - 10 Oct 2017 - Shri Rahul Gandhi's first words when I made a cold call to him apropos backops was 'I'll finish you and the person who gave my number off'
11:17 PM - 10 Oct 2017 - Let's be equally fair or unfair. I went to Backops registered office in deen dayal upadhay marg. I was kicked out literally for asking why
Apr 8, 2013 - Rajiv Gandhi 'worked as middleman' in aircraft deal: WikiLeaks
1975 October 21 - SWEDISH EMBOFF HAS INFORMED US THAT MAIN INDIAN NEGOTIATOR WITH SWEDES ON VIGGEN AT NEW DELHI END HAS BEEN MRS. GANDHI'S OLER SON, RAJIV GANDHI
2005 March 3 - Naqvi claimed that it is increasingly
common knowledge that Rahul suffers from "personality
problems" of an emotional or psychological nature that are
severe enough to prevent him from functioning as PM.


காங்கிரசை ஏன் முழுதாய் நிராகரிக்கவேண்டும் என்பதற்கு நிறையக்காரணங்கள் இருக்கின்றன.  

மாறாக, ஏன் இவர்களை இனியும் கூட ஆதரித்தே ஆக வேண்டுமென்பதற்கு வலுவான காரணம் இருக்கிறதா?

மாற்றுக கருத்துக்கள் நாகரீகமான உரையாடலாக வரவேற்கப்படுகின்றன. விருந்தினர் பதிவாக எழுத விரும்பினால்  அதையும் வரவேற்கிறேன்!

                       

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!