Showing posts with label சசி தரூர். Show all posts
Showing posts with label சசி தரூர். Show all posts

தலைப்புச் செய்திகள்! தடுமாறும் அரசியல்!


மக்களவைத் தேர்தலுக்காக உ.பி.யில் காங்கிரஸ் தீவிரம்: பிப்ரவரி முதல் ராகுலின் 13 மெகா பிரச்சாரக் கூட்டங்கள் என்று முனகுகிறது ஹிந்து நாளிதழின் செய்திஇது குறித்து துபாயில்  பேட்டி அளித்த ராகுல்,  ''நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸின் மதிப்பு குறித்து மாயாவதியும், அகிலேஷும் தவறாகக் கணித்து விட்டனர். இதற்காக நாம் சோர்ந்து விடாமல் போட்டியில் தீவிரம் காட்டுவோம்'' எனத் தெரிவித்ததாகவும் தொடர்ந்து சொல்வது எப்படி இருக்கிறதென்றால் .......

இசுடாலின், சோனியாவின் மகனே வருக என்று வீர வாள் கொடுத்து பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராசி! முதலில் தெலங்கானா தேர்தல் தோல்வி என்று ஆரம்பித்து, இப்படியாகத் தொடர்கிறது!
இங்கே தமிழ்நாட்டு நிலவரம் எப்படியாம்? படமே கதை என்னவென்று சொல்லிவிடுகிற மொமன்ட்.

கருணாநிதி அறிவிப்பு, சமாதி அலங்காரத்தோடு முடிந்து விட்டதோ?

இப்போது இந்த சர்ச்சைதான் ட்ரெண்டிங்காம்!


It seems that under the BJP even God must serve a political purpose & members of other parties must not be allowed to worship in the Prime ministerial presence!

செவ்வாய்க்கிழமைச் சுடுதல்கள் : எண்ணெய்! சுடுநீர்! சட்டி!


கத்தியில்லாமல் யுத்தம் செய்யாமல் எண்ணற்ற பேர்களின் ஈரக்குலையை அறுத்தெறிய முடியுமா? உலகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை  எண்ணெய்ப் பொருளாதாரமும் பெட்ரோடாலர்களும் சத்தமே இல்லாமல் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதில் நம்பர் ஒன்னாக இருக்கும் சவூதி அரேபியா இந்த முறை  தன்னுடைய அமெரிக்கக் கூட்டாளிகளையும் இதர எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபுநாடுகளையும் மீறி ஒரு சூதாட்டத்தை நடத்திக் கொண்டு வருவதில் சூடு தாங்க முடியாமல் பலநாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இந்தியப் பங்குச் சந்தை கச்சா எண்ணெய் பாரல் $ 54 இற்கும் கீழே இறங்கியதில் இன்று ஒருநாளில் மட்டும் 855 புள்ளிகள் இறங்கிச் சரிவை சந்தித்திருக்கிறது. முதலீட்டாளர்கள் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை இழந்திருக்கிறார்கள் என்று இன்றைய வணிகச்செய்திகள் சொல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரீஸ் விலகக் கூடும் என்ற செய்தி வேறு மேற்கத்தியப் பங்குச்சந்தைகளை பாதித்திருக்கிறது.    

 “The Saudis are putting the heat on everybody and you don’t need to parse it out and say they are really putting the heat on Iran or they are really putting the heat on shale or Russia,” says Gause. “They have decided that given the current market situation they are not going to cut until others cut and all sorts of players are going to feel the sting on that.” என்கிறது இந்தச்செய்தி 

சவூதி அரேபியாவின் இந்த 750 பில்லியன் டாலர் கையிருப்புச் சூதாட்டம் ரஷ்யாவைக் குறிவைத்தே நடத்தப் படுகிற மாதிரி, அமெரிக்காவும் சேர்ந்தே இதை நடத்துகிற மாதிரியும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மாதத்தில் நெறி கட்டின  மாதிரி என்று கேள்வி தானே பட்டிருக்கிறோம்,  கொஞ்சம் நிஜத்திலும் பாருங்கள் என்று காட்டுகிறார்கள் போல. மாற்று எரிபொருள், சிக்கனம், சுயதேவைப் பூர்த்திக்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சி இருக்கிறது. 
******

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசைத் தூக்கி எறிவதற்கான முக்கியமான காரணங்கள் கட்சியிலும் ஆட்சியிலும் லும்பன்களுடைய ஆதிக்கம் அதிகரித்தது, வங்க தேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை ஓட்டு வங்கியாகவும் தங்களுடைய செக்குலர் அடையாளமாகவும் ஆக்கினது தான்! மார்க்சிஸ்டுகள் கொட்டத்தை அடக்க மம்தா பானெர்ஜி மாதிரிப் பிடிவாதமுள்ள, சகிப்புத்தன்மையற்ற ஒருவரால் தான் முடிந்தது என்பதென்னவோ உண்மைதான்! ஆனால்  வெள்ளி மூக்கு முளைத்ததும்  கழுதையென்று தெரிந்த மாதிரி திரிணமுல் காங்கிரஸ், மம்தா பானெர்ஜி சாயமும் சீக்கிரமே வெளுத்துப் போய் ஜனங்கள் அடுத்த மாற்றத்துக்குத் தயாராக வேண்டிய நிலைமை உருவாக்கி வருகிறது.

மிதுனாப்பூர் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேச வந்த திரிணமுல் காங்கிரஸ் அமைச்சரும்  மம்தா பானெர்ஜியின் மருமகனுமான  அபிஷேக் பானெர்ஜியின் கன்னத்தில் அறை விட்ட ஒரு இளைஞன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அதே நேரம் அந்த இளைஞனை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நையப் புடைத்ததற்கு தொண்டர்கள் உணர்ச்சி  மேலிட்டு அடித்தார்கள், வேண்டுமென்றே செய்யாததால் தவறே இல்லை என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சி விளக்கமும் கொடுத்திருக்கிறது. செய்தி இங்கே 

அமித்ஷாவுக்கு அதிக வேலை வைக்காமல் பிஜேபி மேற்கு வங்கத்தில் காலூன்ற வாயிற்கதவைத் திறந்து வைத்திருக்கிறார்கள். ஜனங்கள் மாறுவதற்கு முன் லும்பன்கள் பிஜேபிக்கு ஏற்கெனெவே மாற ஆரம்பித்து 
விட்டார்களாம்!
 ******

இன்னும் பத்தே நாட்களில் ஓராண்டு நிறைகிற சுனந்தா புஷ்கரின் மரணம், தற்கொலையல்ல விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்டதாக டில்லிப் போலீஸ் அறிவித்திருக்கிறது. வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும் 
என்று காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் வருகிற மாதிரியே இந்தப் பெண்மணி வாழ்ந்தபோதும் சரி மரணமடைந்த பிறகும் சரி சசிதரூர் வாழ்க்கையில் தொட்டுத்தொடரும் மர்மமாகவே இருப்பதென்னவோ நிஜம்.

டாக்டர் சுப்ரமணியன்  சுவாமி ஆரம்ப முதலே இந்த விவகாரத்தில் இப்போது போலீசார் சொல்லியிருப்பதைப் பட்டவர்த்தனமாகவே சொல்லி வந்திருக்கிறார். 
*******




சண்டேன்னா மூணு! தரூர்! ட்விட்டர்! ஓட்டு இயந்திரம்!

ஒரு வழியாக சுனந்தா புஷ்கர்-சசி தரூர் திருமணம் இன்றைக்கு பாலக்காட்டுக்குப் பக்கத்தில் "மிக எளிமையாக" நடந்தேறிருக்கிறது. சுனந்தா தரப்பில் இருந்து இருபதுபேர் உட்பட மொத்தமே நூறு உறவினர்கள் மட்டும் தான் அழைக்கப் பட்டிருந்தார்களாம்! அதைவிட அதிசயமாக, ஒரு முன்னாள் மத்திய அமைச்சர், சிட்டிங்  எம் பி திருமணத்திற்கு வெறும் இருபத்தைந்தே போலீஸ்காரர்கள் தான் காவலுக்கு இருந்தார்களாம்! 

இதுவே தமிழ்நாட்டில், ஒரு சிட்டிங் அல்லது முன்னாள் ஒண்ணரை அணா வார்டு கவுன்சிலர் வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்..........!

இரண்டு பேருக்கும் இது மூன்றாவது திருமணம் என்பதும் எனக்கு 54 உனக்கு 48 என்பதும் நினைவுக்கு வந்தால் இந்தத் திருமணம் மிக மிகத் தனிப்பட்ட, அடக்கமாக, எளிமையாக நடந்ததில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை தான்!

டிவிட்டரில் உங்களுக்கிருக்கும் எட்டு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து நானூற்று ஐம்பத்தாறு பாலோயர்களில், கொஞ்சம் பேராவது உங்களுடைய நலம் விரும்பிகளாக, வாழ்த்துச் சொல்கிறவர்களாக இருப்பார்கள்! என்ன, துபாய்,  உங்கள் தோழியுடைய துபாய்த் தொடர்புகள் தான் கொஞ்சம் இடிக்கிறது! கொச்சி ஐபிஎல் அணி உரிமைப்பங்குகளை உங்களுடைய தோழி பெற்றதும், அப்புறம் விட்டுக் கொடுத்ததும், மந்திரிப் பதவி பறி போனதும்,  சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டு வந்ததும் கொஞ்சம் வேகமாகவே நடந்து முடிந்துவிட்ட சம்பவங்கள்!



Anyhow,   நல்வாழ்த்துக்கள் தரூர்!

ட்விட்டர் தான் அவரைப் பிரபலமாக்கியது, ட்விட்டர் தான் அவரை சர்ச்சைகளில் சிக்க வைத்தது என்றாலும் இன்றைக்குத் திருமண நாள்! அதனால்  தரூரை நல் வாழ்த்துக்களுடன் விட்டு விடலாம்!

அவர் இடத்தை நிரப்ப ஆட்களா இல்லை? 


oooOooo



டிவிட்டரில் சர்வ வல்லமை உடைய கடவுள் என்ற பெயரில் ஒருவர் டிவிட்டியிருக்கும் ஒரு சுவாரசியத்தை மேலே பாருங்கள்! பைபிளும், சாப்ட்வேர் லைசன்சும் ஒன்று தான் என்று சர்வ வல்லமை  உள்ள  கடவுளே  சொல்கிறாராம்! சாப்ட்வேர் லைசன்சையும், பைபிளையும் படிக்காமலேயே கடைசிப்பக்கம் வரை ஸ்க்ரோல் செய்து ஒப்புகை அளிக்கிறோம் இல்லையா, அதனாலேயே இரண்டும் ஒன்று என்பது இந்தக் கடவுளின் வாதம்!


oooOooo



சத்யமேவ ஜெயதே! சும்மா உளா உளா காட்டிக்கு நாங்க சொன்னா, அதை நம்பி உண்மை பேசுவீங்களா?பேசுவீங்களாங்கறேன்!


உண்மையைச் சொன்னால் உடம்பெரியும்!

"Mr. Prasad, managing director of a Hyderabad-based technology firm NetIndia, had taken the help of two other researchers – a Michigan University professor J. Alex Halderman and a Holland-based technology activist Rop Gonggrijp, to demonstrate that EVMs used in India could be tampered by altering small components of the machine.

The researchers had used a genuine EVM in their ‘vulnerability demonstration’ on April 28 and the Election Commission of India had then rejected the claim outright. After video footage of the demonstration showed the serial number of the EVM, authorities found that one of the EVMs in Mumbai collectorate was ‘stolen’ and a case registered in MRA Marg station on May 13."

எலெக்ட்ரானிக் ஒட்டு இயந்திரங்கள் சுத்த சுயம் பிரகாசமானவை! உஜாலா போடாமலேயே வெள்ளையாகத் தான் இருக்கும் என்று அரசும், ஆட்சியாளர்களும்,  தேர்தல் கமிஷனும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அப்படிச் சொல்வது உண்மை இல்லை, அதை டாம்பர் செய்ய முடியும், அதை இஷ்டப்படி செட் செய்து வேண்டிய ரிசல்டுகளைக் காட்ட வைக்க முடியும் என்று உண்மையைச் சொல்கிறேன் என்று கிறுக்குத் தனமாக ஆரம்பித்தால்....?

உண்மையைச் சொல்பவன் சதிகாரன்!

இப்படி ஒரு எம்ஜியார் படப் பாட்டு ஒன்று வருமே நினைவு வருகிறதா? ஆரம்ப வரிகூட, கடவுள் ஏன்
கல்லானான்? மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே என்று ஆரம்பிக்குமே!



 

ஆடின காலும், டிவிட்டிய கையும் சும்மா இருக்குமா என்ன..?!

Special: Five reasons why Tharoor had to resign

                           

மன்மோகன் சிங் பார்த்துத் தேர்வுசெய்து அரசியலுக்குத் தெரிவு செய்யப் பட்டவர் சசி தரூர்!

இவ்வளவு கூத்து நடந்து முடிந்தபிறகும் மனிதர் இந்திய அரசியலின் பால பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது! சசிதரூருக்கு ஆதரவு தெரிவிக்கும்  வலைத் தளம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது! இந்தப் பதிவை எழுதும் இந்தத் தருணம் வரை 13693 பேர் சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்து இந்தத் தளத்தில் எழுதியிருக்கிறார்கள்.


சசி தரூரை ஆதரிக்கும் இந்த வலைத்தளம், வருகிறவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கிளிப் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவது மாதிரி, இப்படி ஒரு முகவுரையைத்  தலைப்பாக்க, ஒரே அஜெண்டாவாக  வைத்துக் கொண்டிருப்பதைப் பாருங்கள்! ஓவர்டைம் வேலை செய்கிறார்கள் போல இருக்கிறது! ஒரே இரவில் ஆதரித்துச் சேர்ந்து எழுதியவர்கள் எண்ணிக்கை பதினையாயிரத்து நூற்று நாற்பதைத் தாண்டி  விட்டது!

We are here to say, "we support you Shashi Tharoor. Don't let them pull you down for you will take our hopes and dreams for a better and brighter India with you. You bring to India everything we had ever hoped would change, and we stand by you".


சசிதரூர் ! மத்திய அமைச்சரவையில், வெளியுறவுத்துறை ராஜாங்க அமைச்சர்! மிக மிக சுவாரசியமான, விவரம் தெரிந்த மனிதர்! எதைச் சொன்னாலும் அவரது கட்சிக்காரர்களே விவகாரமாக்கி விடுவார்கள்! டிவிட்டரில் சசி தரூர் என்ன சொன்னாலும் அதை ஊதிப் பெரிதாக்குவது சில காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு! முழுநேரத் தொழிலும் கூட !

சமீபத்தில் டிவிட்டரில் காந்தியைப் பற்றி ஜார்ஜ் ஆர்வெல் சொன்ன ஒரு அரிதான லிங்கை டிவிட்டியிருக்கிறார்! ஒரிஜினல் காந்தியை பற்றி நினைக்கக் கூட, ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே கொஞ்சம் ஆச்சரியம் தான்!அகில்ரானா என்பவருக்கு ரீட்வீட் செய்த ஒரு குறுஞ்செய்தியில் அரசியல்வாதிகள் மக்களுடைய நண்பர்களாக இருக்க முடியாது என்று  சொல்கிற அளவுக்கு மனிதர் தொடர்ந்து ஆச்சரியப் படுத்திக் கொண்டு இருக்கும் அதே நேரம் காங்கிரசின் காலை வாரும் கலாசாரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொண்டு, மனிதர் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை சொல்வதாக இன்னொரு டிவிட்டிய செய்தி இருந்தது!

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியாகி இருந்த செய்தியில் சசி தரூர்  சொன்னதாக இப்படி இருந்தது. "இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றவே விரும்பினேன். ஆனால் என்னைக் கீழே தள்ளி விட்டார்கள்!"

ஒன்று, ஏற்கெனெவே கிடைத்த அனுபவங்களில் இருந்து மனிதர் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்  அதே நேரம் "நான் அப்படிச் சொல்லவே இல்லை, பத்திரிகைகள்தான் திரித்துப் போட்டு விட்டன" என்கிற மாதிரி அரசியல்வாதிகள் அடிக்கடி அடிக்கிற பல்டி மாதிரியும் இல்லாமல், எவ்வளவு நாசூக்காக நழுவியிருக்கிறார் பாருங்கள்! டிவிட்டரில் பார்த்தது, ரசித்தது!

Times of India falsely claims I said I tried to change Ind's pol culture.Am not that foolish!
 
Despite TOI's misleading lead,I am not grandiose enough to claim I can change India's political culture. Just trying to be myself&do my work

மனிகண்ட்ரோல்டாட்காமில், சசி தரூர் கொடுத்த பேட்டியை  வைத்துத் தான் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திய வெளியிட்டது. அதை மூன்று பகுதிகளாக இங்கே பார்க்கலாம்!  


இப்படி எழுதிப் பதினெட்டு நாட்கள் தான் ஆகிறது! மனிதர் தன் தலையைத் தானே வெட்டி, அரசியல் காளிக்குப் பலி கொடுக்காமல் ஓய மாட்டார் போல இருக்கிறது!

இங்கே அரசியல், நேரு, தலைமைப் பண்பு, விமரிசனம் என்ற குறியீட்டுச் சொற்களை வைத்துப் பழைய பதிவுகளைப் படித்துப் பார்த்தால், காங்கிரஸ் பதவி வெறி பிடித்தவர்களின் கும்பலாக மாறி விட்டதையும், எல்லா ஜனநாயகஅமைப்புக்களையும், பண்பையும் சீரழித்து தனது குறுகிய அரசியல் லாபத்துக்காக மட்டும் பயன்படுத்துகிற போக்கு ஒன்றினாலேயே
ஒரு அரக்கத் தன்மை கொண்ட கட்சியாக மாறியிருப்பதைச் சொல்லி இருப்பது புரியும்.

தரூருக்குப் போதாத காலம் இன்னும் நிறைய இருக்கிறது போல! 


ஆதரவாளர்கள், இவரை மையமாக வைத்து, இந்திய அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை இவர்தான் கொண்டு வருகிறமாதிரி ஒரு தம்பட்டம்! 

இந்திய அரசியல்  டிவிட்டரில் பின்தொடர்பவர்கள்,  ரீட்வீட் செய்பவர்கள், பேஸ் புக்கில் ஆதரவாளர்களாக அறிவித்துக் கொள்பவர்களால் தீர்மானிக்கப் படுவதில்லை. ஒபாமா பாணியில், இணையத்தில் ஆதரவைத் திரட்டுவது கேரள வாக்காளர்கள், குறைந்தபட்சம் அவரது தொகுதி வாக்காளர்களுடைய மனதில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை!

டிவிட்டரில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள்! நிறையப் புத்தகங்களை எழுதியிருக்கிறார்! ஒரு புத்தக ஆசிரியராக ஜெயித்திருக்கிறார். ஐ நா சபையில் பணியாற்றிய தருணங்களில் அப்போதைய பொதுச் செயலாளர் கோஃபி அண்ணனுடைய நம்பிக்கை உரியவராக இருந்திருக்கிறார்!கோஃபி அண்ணனுடைய பதவிக் காலம் முடிகிற நேரம், அண்ணனுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாமல் போயிற்று! பொதுச் செயலாளர் வேட்பாளராகக் களமிறக்கப் பட்டவர் சசி தரூர். களத்தில் இறங்கினால் மட்டும் ஆதரவு கிடைத்து விடுமா
என்ன 
அமெரிக்கா, தனக்கு ஒத்து ஊதுகிறவராக, ஆளைத் தேடிக் கொண்டிருந்தது. ஒத்து ஊதினாலும் இந்தியா வேண்டாம் என்ற நிலையை அமெரிக்க அரசு நிறையத் தருணங்களில் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆக, சசி தரூர், தோற்றதில் பெரிய ஆச்சரியம் எதுவுமில்லை!

சர்வதேச அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மன்மோகன் சிங் தான் சசிதரூரைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார். மன்மோகன் சிங்கின் கதியே, இன்னொருவருக்கு முகமூடி, டம்மிப் பீஸ் தான் என்ற நிலையில், சசி தரூர் மாதிரி, உள்ளூர் அரசியலில் காலூன்ற முடியாதவர்களால் என்ன செய்து விட முடியும்? போதாக்குறைக்கு, ஐநா சபையில் ஒரு அதிகார வளையத்தில் சுற்றி வந்த அதே பழைய நினைப்பில் இங்கே இந்தியாவிலும் நடந்து கொண்டபோது, ட்விட்டர் மாதிரி அரட்டை அரங்கத்தில் வேடிக்கை பார்க்கிற கூட்டம் பின்தொடர்பவர்களாக நிறையக் குவிந்தது. 


கொஞ்சம் மனம் விட்டுப் பேசுகிற மாதிரி ட்விட்டர் செய்திகள் இருந்தாலும், ஆளை எப்போது காலை வாரலாம் என்று காத்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் கலாசாரம், சசி தரூருக்கு உடனடியாகப் பிடிபடவில்லை! போன வருடம், அரசியல் ஸ்டான்ட் என்று சொன்னாலும் சரி, நிஜமாகவே சிக்கனத்தைக் கடைப் பிடிக்கத் தான் அன்னை சோனியா சொன்னார் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக, இங்கே சில பொடிசுகள் வாலாட்டிக்  கொண்டிருந்த மாதிரியானாலும் சரி, அமைச்சர்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவேண்டும், விமானத்தில் எக்கானமி வகுப்பில் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற சோனியாவின் அறிவிப்பைக் கிண்டல் செய்கிற மாதிரி காட்டில் கிளாஸ், புனிதப் பசுக்களோடு ஒற்றுமை என்ற மாதிரி டிவிட்டியது பெரிய கூச்சலை கிளப்பியது! 

(காங்கிரஸ் காரர்களால் அது மட்டும் தான் முடியும்!)

கட்சித் தலைமை, எரிச்சல் இருந்தாலும், கண்டுகொள்ளாமல் விட்டது. அடுத்து விசா வழங்குவதில் உள்ள முரண்பாட்டைத் தொட்டு பேசினது, நேருவின் வெளியுறவுக் கொள்கையை விமரிசிக்கிற மாதிரிக் கொஞ்சம், உழைப்பே தெய்வம் என்று சொன்ன காந்தி பிறந்த நாளை விடுமுறையாக அறிவிப்பது சரிதானா என்று இப்படி மனிதர் வாயைத் திறந்து ட்விட்டினாலே வம்பும் கூடச் சேர்ந்து வருவது வாடிக்கையும் ஆகிப் போனது!

டிவிட்டி டிவிட்டியே  பிரபலமான சசிதரூருக்கு ஆப்பும் டிவிட்டரில் தான் வந்தது!

சுனந்தாவைப் பற்றி ரொம்பவும் கிண்டிக் கிளறி விவரம் எதுவும் கேட்கவேண்டாம் என்று அமைச்சர் சொன்னதாக லலித் மோடி அவர் தனது ட்விட்டர் செய்தியில் எதிர்ப்பாட்டு ஆரம்பிக்க, அப்புறம் நடந்தது, நாறிப்போனது எல்லாம் பழங்கதையாக ஆகிவிடாமல், மனிதர் மறுபடியும் தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாரோ  என்ற சந்தேகம்வருகிறது!

சசி தரூர் இப்போது ஒரு தனி மனிதர்! ஆப்பை அசைத்து, தனக்கே ஆப்படித்துக் கொள்வது அவருடைய சுதந்திரம்!

ஊழல் பெருச்சாளிகள் ஒன்றை ஒன்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கின்றன! வருமான வரித் துறை, திடீரென்று, காங்கிரஸ் கட்சி மாதிரியே சுறு சுறுப்பாகியிருக்கிறது!




தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை, உளவுத்துறை நிறுவனங்கள், இந்திய அரசுக்குப் பயன்படுத்தப் படுவதை விட கட்சிக்கு யார் யார் தலைவலியாக இருப்பார்கள் என்பதை உளவறிய மட்டுமே பயன்படுத்தப் பட்டது இப்படி எல்லா வகையிலும்  இந்திய அரசியல் அமைப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் பலவீனப்  படுத்திக் கொண்டே வருகிறது, தானும் பலவீனப் பட்டுக் கொண்டே வருகிறது.


நாலாவது தூண் கதையை இந்தப் பக்கங்களில் பேசி
ருக்கிறோம், நினைவிருக்கிறதா?

ஜனங்களுடைய முட்டாள்தனம், மறதி, என்ன செய்ய முடியும் என்ற கோழைத்தனத்தின் மீது எவருக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, நம்முடைய அரசியல்வியாதிகளுக்கு நிறையவே நம்பிக்கை இருக்கிறது!




 

வெறுங் காத்து மட்டுந்தாங்க வருது....! காமெடி டைம்!

போன புதன் கிழமை, ஐஸ்லாந்து நாட்டில் ஒரு எரிமலை குமுறியதில், இருபதாயிரம் அடி உயரத்துக்குப் புகையும் தூசியும் கிளம்பி இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல  ஐரோப்பிய நாடுகளில் எரிமலைச் சாம்பல் கொட்ட ஆரம்பித்ததாம்! சென்ற வெள்ளிக்கிழமை மட்டும் பதினேழாயிரம்  விமானங்கள் பயணத்தை ரத்து செய்தன. பனிமலை நிறைந்த ஐஸ்லாந்து நாட்டில் பன்னிரண்டு எரிமலைகள் ரொம்ப ஆக்டிவாக இருக்கின்றனவாம்!


இந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் எழுந்த சாம்பல், கரியமில வாயுவின் எடை வெறும் பதினையாயிரம் டன்கள் தான்! ஆனால், விமானங்கள் பறப்பதில் எழும் கரியமில வாயு அதைப் போல இருபத்துமூன்று மடங்கு அதிகம்! 344109 டன்கள்! சுற்றுச் சூழலில் கரியமில வாயுவின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே போவது தான், புவி வெப்பமயமாவதற்குக் காரணம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பீர்கள்!

அறுபது சதவீத விமானங்களின் பயணம் ரத்து செய்யப் பட்டதில், சுற்றுச் சூழலில் இன்னும் 206465 தன் கரியமில வாயு சேராமல், குறைந்ததாம்!



எரிமலைச் சீற்றத்தில் கார்பன் டை ஆக்சைட் அளவைக் கணக்கிட்ட விதத்தைத் தெரிந்து கொள்ள இங்கே 



சு'ரூர்! சு' சுனந்தா! ரூர், , சசி தரூர்!

சமாளிக்க முடியாமல், தனக்குக் கிடைத்த 'சொந்த சாமர்த்தியத்தில் கிடைத்த' பங்கை விட்டுக் கொடுத்தது வெறும் எழுபத்தைந்து கோடி தான்! 


மன்மோகன் சிங் தேர்ந்தெடுத்துச் சேர்த்துக் கொண்ட அமைச்சர், சசி தரூர், பதவியும் பறிபோனது! இது, நிஜமாகவே சிறியது தான்! காதலுக்காக மணிமகுடத்தைத் துறந்த எட்வர்ட் மன்னன் கதை போல, இதுவும் ஒரு கதைதானோ


மலை விழுங்கி மகாதேவர்கள், நமட்டுச் சிரிப்புடன் இன்னமும் தெம்போடு இருக்கத் தான் செய்கின்றார்!

தமிழகத்திலும் கூட்டாளி,  தாவூதும் சேக்காளி! வருமானவரி சோதனை நடத்தியதால்  மட்டும், கிரிக்கெட் சூதாட்டம் நின்றுவிடுமா?

காங்கிரஸ் எப்போதும் காமெடிப் பீஸ் மட்டும் தான்!  


 

தமிழ்ப் புத்தாண்டே வருக.. ! நல்ல மாற்றங்களைத் தருக..!

உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான  தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! விக்ருதி என்ற பெயரில் மாற்றத்தைக் குறிக்கும் இந்த ஆண்டு, நம்முடைய வாழ்வில் நல்லவிதமான மாற்றங்களைத் தருவதாக அமையட்டும் என எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுவோம்!


சித்திரை முதல் நாளே வருடத்தின் முதல்நாளாக வழிவழியாகக் கொண்டாடி வருவதை அரசு அறிவிப்பு ஒன்று மாற்றி விட முடியாது என்பதை, தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று தமிழ்ப் புத்தாண்டு  கொண்டாடப் பட்டு வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன.




 குட்டைப் பாவாடை இஸ்லாமுக்குக் கேவலம் என்றார்கள் உலேமாக்கள்!
பர்தா அணிந்தா ஆடமுடியும் என்று கேட்டவர்தான், இங்கே சவுதியில் அம்மாவுடன்!
மயில்ராவணன்,  இப்போது திருப்தியா..?
கடைசியாக நடந்து முடிந்தே விட்டது!  
சானியா மிர்சா திருமணத்தைத் தான் சொல்கிறேன்!


இந்தப் பெண், விளையாட்டில் தான் பின்தங்கி வந்தாரென்று பார்த்தால், திருமணம் பற்றிய பேச்சு வந்த போதெல்லாம் அதை விடசொதப்பலாகத் தான் இருந்தது! ஒருவழியாக, திங்கட்கிழமை திருமணம் முடிந்து, நேற்று செவ்வாய் மெஹந்தி இடும் சடங்கும் நடந்து முடிந்ததாம்! இன்றைக்கு சங்கீதம் பாடப் போறாங்களாம்! வழக்கம் போல, இதிலும் திடீர் திருப்பங்கள், அதிரடி மாற்றங்கள் ஏதாவது வருமா என்று மைக்ரோஸ்கோப் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான்!


ஹைதராபாத் உலேமாக்களுக்கு  ஃபாத்வா, கண்டன அறிக்கை கொடுப்பதற்குத் தோதாக, சானியா மட்டும் தான் இருந்தார். இப்போது திருமணம் முடிந்து, துபாய்க்குக் குடித்தனம் போன பிறகு என்ன செய்வார்கள்?

அதென்னமோ துபாய் என்றாலேயே டுபாக்கூர், வில்லங்கங்கள் என்பது தான் நினைவுக்கு வருகிறது!


டுபாக்கூர் என்ன என்பதை  முதலில் பார்ப்போம், அதன் பின்னால் உள்ள  வில்லங்கம் என்னஎன்று தற்போதைய செய்திகள் சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்!  இதில் துபாய் நேரடியாகவோ மறைமுகமாகவோ எங்கே வருகிறது என்பதைக் கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
செய்தியின் புதுப்பிக்கப் பட்ட நிலை @18.51 hrs IST

கிரிக்கெட், ஹிந்தி சினிமா, சூதாட்டம், என்றாலே  டி-கம்பனி என்று செல்லமாக அழைக்கப் படும் தாவூது இப்ராஹீம் கும்பல் பின்னால் இருக்கும் என்பது மிகப் பழைய செய்தி! புதிதாக உள்துறை அமைச்சகத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் பனா சீனா இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்!
டி கம்பனியிடமிருந்து, சசிதரூருக்கு ஐபிஎல் விவகாரத்தில் இருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டல் வந்திருக்கிறதாம்!டிவிட்டரில் மோடியை மிரட்டிய அமைச்சருடைய உதவியாளர் ஜேகப் ஜோசப்  மிரண்டுபோய், உள்துறை அமைச்சகத்திற்குத் தகவல் சொல்லியிருக்கிறார்! இந்த செய்தியில் இன்னொரு சுவாரசியமான விஷயம், டி கம்பனியிடமிருந்து, லலித் மோடிக்கும் மிரட்டல் வந்து, அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டிருக்கிறதாம்!

தரூருக்கு வேணுங்கப்பட்ட அம்மிணி, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கூட, அவரை கூட்டாளியாக சேர்ந்து கொள்ள அழைத்ததாகவும், காலம் வரட்டும் என்று காத்திருந்ததாகவும் சொன்னதை அந்த அணி மறுத்திருக்கிறது! 
 
இந்த செய்தியை, "என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக-அந்த மாயவரத்துல கேட்டாக" என்ற பாட்டைப் பின்னணியாக ஹம்மிங் செய்து கொண்டே வாசிக்கவும்! அம்மணி அங்கே அழகுநிலையம் மட்டுமே நடத்தவில்லையாம்! 
 
Incidentally, Sunanda Pushkar, the lady in Tharoor's life, is a property dealer in Dubai. என்றும்  மேலே உள்ள லிங்க் செய்தியில் இருக்கிறது!  
 
துபாய், டுபாக்கூர் எப்படி வந்து சேர்கிறது என்பது கொஞ்சம் உறைக்கிறதா?!

டி- கம்பனி என்றால் தாவூத் இப்ராஹீம் கம்பனி மட்டும் அல்ல, துபாயும் சேர்ந்தே வந்து விடுகிறது!


சசி தரூர் விவகாரத்தில் அவருக்குவேணுங்கப் பட்டவங்களாகச்   சொல்லப் படும் பெண்மணி கூட துபாய் வாசி தான்! ஸ்பா என்று சொல்லப் படும் பெரிய  அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அழகு நிலையங்கள் என்றாலே தமிழ் நாட்டில் மசாஜ் பார்லர்கள் தான் பிரபலமாக நினைவுக்கு வரும்! அதை  ஸ்பாவோடு ஒப்பிட்டால், மசாஜ் பார்லர் என்பது சில்லறை! ஸ்பா என்பது எல்லாவிதத்திலும் பெரிது தான் போல!

விக்கிபீடியாவில் ஸ்பா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள!

அம்மணிக்கு கி ஃப்டாக, கொச்சி ஐபிஎல் பிரான்சைசில் கிடைத்த பங்கு, மொத்தத்தில் நாலரை சதவீதம்! சுமார் எழுபத்தாறு--எண்பது கோடி ரூபாய்! அமைச்சருக்கு நெருக்கமாக இருந்ததற்காகத் தான் இந்த கிஃப்டா என்பது பாரபட்சமில்லாத விசாரணை நடந்தால் தானே தெரிய வரும்? நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று நேற்றைய பின்னணி என்னவாக இருந்தாலும், அவர்கள் இன்றைக்கு எப்படிப் பட்ட ஞானிகளாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க மட்டுமே சொல்லப் பட்டது!

நம்மூர் அரசியல் வியாதிகள், வாரிசுகளுடைய வருமானம் அதன் மூல வர்கம் எப்படிப்பட்டது என்பதை சாமானிய ஜனங்கள் ஒருபோது தெரிந்து கொள்ளப் போவதில்லை! அவர்களுக்கு இலவச டிவி, மானாட மயிலாட மாதிரி மங்கையர் ஆடும் நிகழ்ச்சிகள்,  நமீதா வந்து மச்சான்ஸ் என்று ஓங்கி ஒரு குரல் கொடுத்தால் போதாதா! 
தேர்தல் வரும்போது மட்டும் ஒரு க்வார்டர், பிரியாணி, அப்புறம் மேல் செலவுக்குக் கொஞ்சம் பணம் இதைக் கொடுத்தால் போதுமென்று அரசியல் வியாதிகள் நினைப்பதற்குத் தகுந்த மாதிரித்தான், ஜனங்களுடைய இயல்பும் இருக்கிறது.

புள்ளிராசா வங்கி என்ற குறியீட்டுச் சொல்லில்  வங்கிகள் எப்படிப்  பேராசை கொண்டு  அலைகின்றன என்பதை இந்தப் பக்கங்களில் முன்னமேயே பார்த்திருக்கிறோம்! 
சசிதரூர் விவகாரத்திலும் புள்ளிராசா ஒருத்தர், ஸ்டாண்டர்ட்  சார்டர்ட் வங்கியில்(Director, Public Affairs) தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் சுஷேன் ஜிங்கன் என்று பெயர், சூத்திர தாரியாகச் செயல் பட்டது இப்போது பரபரப்பான செய்தி! இந்த நபருடைய மனைவி பூஜா குலாடியும் ரெண்டேவூ  ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் நிறுவனத்தின் பங்குதாரர்! 
வங்கியாளராக  இருந்ததில், ஜிங்கனுக்கு ஏலத் தொகையை வெற்றிகரமாக நிர்ணயிப்பது முதற்கொண்டு பலதொழில்களும் தெரிந்த சாமர்த்தியத்தில் தான் கொச்சி ஐபிஎல் அணி பிரான்சிஸ் முடிவானது என்றும் சொல்கிறார்கள்!

வில்லங்கமாக ஒரு வங்கியாளரும் வந்தாயிற்று! அப்புறம் புள்ளி. புள்ளிராசா என்று தொடர்ச்சியாக வரத்தானே செய்யும்!

அப்புறம்..........?