வாசிப்பது என்பது மேலோட்டமாக மேய்ந்துவிட்டுப் போவதா?

ஐந்துநாட்களுக்கு முன்னால் நா.பார்த்தசாரதி எழுதிய மணிபல்லவம் புத்தகத்துக்கு ஒரு அறிமுகக் குறிப்பாக அவரே எழுதிய எழுதியவன் கதை முன்னோட்டத்தைக் மட்டும் கொடுத்திருந்தது நினைவிருக்கிறதா? அந்தப் புத்தகத்தை வாசித்த ஒருவர் என்ன இது, தத்துவ மூட்டையாக இருக்கிறதே! வரலாற்றுத் தரவுகளே இல்லாமல் ஒரு வரலாற்றுக் கதையா என்று புலம்பி இருந்ததை ஒரு குழுமத்தில் பார்த்தேன். கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. சுவாசிக்கப்போறேங்க தளத்தில் இதுமாதிரி வேடிக்கைக்காகவே சாண்டில்யன் எழுதிய கோழைச்சோழன், மூங்கில் கோட்டை இரண்டு கதைகளுக்கான வரலாற்றுத்தரவு ஒன்றிரண்டு பழந்தமிழ் இலக்கியப்பாடல்களே என்பதையும், அப்படிக் குறைவான தரவுகளையும் வைத்துக்  கதை பின்னத் தெரிந்தவனே ஒரு திறமையான எழுத்தாளன் என்பதான என்னுடைய கருத்தையும் பதிவு செய்து இருக்கிறேன். இப்படியாகத் தமிழில் சரித்திரக்கதை எழுதி வாசகனையும் திருப்தி செய்வது மெத்தக்கடினம் என்பதாலோ என்னவோ பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் வரலாற்றின் பக்கமே எட்டிப் பார்ப்பது இல்லை!


நா.பா. என்கிற தீபம் நா.பார்த்தசாரதியின் அழகான தமிழ் எழுத்துநடைக்காகவே பள்ளிநாட்களில் அவரது தீவீர வாசகனானவன் நான்! களப்பிரர் காலத்து தமிழகத்தைப் பற்றி சாண்டில்யன் எழுதிய நீலரதியைப் பற்றி இந்தப்பக்கங்களில் எழுதிய பிறகு. நா.பா.வின் நித்திலவல்லி கூட களப்பிரர் காலத்து தமிழகத்தைத் தொட்டு எழுதப்பட்டதுதானே என்று மறுவாசிப்புக்காக எடுத்துக் கொண்டு ஒரேமூச்சில் படித்து முடித்தேன். 504 பக்கங்கள் என்பது ஒரு பெரிய விஷயமாகவே தோன்றவில்லை என்னும் படியான ஒரு எழுத்து நடை. ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த சூட்டிலேயே புத்தகமாகவும் வந்துவிட்டது.

நீலரதிக்கு அறிமுகக்குறிப்பாக எழுதியிருந்ததைப் போலவே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் என்பது இருண்டகாலம் என்றே அழைக்கப்படுகிறது. யாரிந்தக் களப்பிரர் என்ற கேள்விக்கு தெளிவான வரலாற்றுத் தரவுகள் இல்லை. வடுக கருநாடகர் என்றே பழைய பாடல்களில் காணக்கிடைக்கிறது. நீலரதி கிபி முதல் நூற்றாண்டில் மூவேந்தர்களையும் வென்று தமிழகத்தை ஆட்சிசெய்த அச்சுத விக்கண்டன் எனும் வரலாற்றுப்பாத்திரத்தை வைத்து எழுதப்பட்ட கதை என்றால், நித்திலவல்லி களப்பிரர் காலம் முடிகிற தருணத்தில் புனையப்பட்ட கதை. கிபி ஆறாம் நூற்றாண்டு வரை களப்பிரர் காலம் என்பதாக வரையறை செய்து இருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். களப்பிரர்கள் என்றால் எங்கிருந்தோ வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் அல்லர். பாலி மொழி பேசிய பவுத்தர்களை ஆதரித்தார்கள், நாத்திக மதமான சமயத்தையும் ஆதரித்தார்கள் என்பது ஒரு புறம். அவர்கள் வெளியிட்ட காசுகளில் ப்ராக்ருதமும் தமிழும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் தமிழை வெறுக்கவோ ஆதரிக்கவோ முயலவே இல்லை. ஒருசில களப்பிரர் நாணயங்களில் தமிழும் முருகனும் இடம்பெற்றிருந்தார்கள் என்பதும் தற்சமயம் ஆய்வுகளில் கிடைத்திருக்கும் முடிவுகள்.        

இந்தப் புதினம் உட்பட நா.பார்த்தசாரதியின் படைப்புக்கள்  முழுவதுமே தமிழ் இணைய நூலகத்திலேயே இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளக் கிடைக்கிறது என்பதால் கதையை விவரித்துச் சொல்லவோ, முழுநீள விமரிசனமாகவோ எழுதப்போவதில்லை. ஆனாலும் புத்தகத்துக்கு முன்னுரையாக நா.பார்த்தசாரதி எழுதியிருக்கிற சில விஷயங்கள் இதுவரை இந்தப்புதினத்தை வாசிக்காமல் இருப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும். முன்னமே வாசித்தவர்களுக்கும் கூட புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளத் தூண்டுதலாகவும் இருக்கும் என்றே நம்புவதால் அந்த முன்னுரையை இங்கே சற்றே சுருக்கித் தந்திருக்கிறேன்.

முன்னுரை   
தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன்.

சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பது கூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற் போல் மாறி விடுகிறது. நீண்ட நாட்களுக்கு முன்பு களப்பிரர் காலத்தைப் பற்றி எழுத எண்ணித் திட்டமிட்டு அதன் பின் வரலாற்று நாவல்கள் எழுதுவதை நான் நிறுத்தியிருந்த சமயத்தில் விகடன் காரியலத்தார் 1970 ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினமலரிலிருந்து விகடனில் வெளியிட ஒரு சரித்திர நாவல் எழுதுமாறு வேண்டினார்கள். என் பழைய எண்ணமும் இந்த அவசியமும் இணைந்த வேளையில்தான் நான் 'நித்திலவல்லி' நாவலை மேற்கொண்டு எழுத நேர்ந்தது. ஒரு மங்கலான காலப் பகுதியைப் பற்றி அதிக ஆராய்ச்சிகளையும், சான்றுகளையும் தேடித் தேடி இதை எழுத வேண்டியிருந்தது. இந்த ஆராய்ச்சிக்குப் பல பழைய, புதிய நூல்களை ஆழ்ந்து கருத்தூன்றிக் குறிப்புகளைச் சேகரிக்க நேர்ந்தது.

 கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க முதல் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் சிக்கியிருந்ததாகத் தெரிகிறது. (டி.வி. சதாசிவ பண்டாரத்தாரின் பாண்டிய வரலாறு - பக்கங்கள் - 33, 34, 35, 36, 37) இது தொடர்பான வேள்விக் குடிச் செப்பேட்டுப் பகுதி வருமாறு:-

     "களபரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடல் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிர் அவிரொளி விலகவீற்றிருந்து

     வேலை சூழ்ந்த வியலிடத்துக்
     கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
     செங்கோல் ஓச்சி வெண்குடை நிழற்
     றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப்
     பிறர்பால் உரிமை திறவிதின் நீக்கித்
     தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
     மானம் போர்த்த தானை வேந்தன்
     ஓடுங்கா மன்னர் ஒளிநகர் அழித்த
     கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னவன்."
..........

.............ஆதாரங்கள் கிடைத்தன. இந்த ஆதாரங்களே முழுமையான கதையாகிவிட முடியாது என்றாலும், முழுமையான கதைக்கு இந்த ஆதாரங்களும் இருக்க வேண்டியதாகிய அவசியம் உண்டு. கதை நிகழ்ந்த காலத்து மதுரை அடிமைப்பட்டுக் கிடந்த மதுரை. ஆகவே கதையின் பெரும் பகுதியில் மதுரையின் கோலாகலங்களை அதிகமாகச் சித்தரிக்க முடியாமல் போயிற்று. பாண்டியன் கடுங்கோனின் பெயர்க் காரணம் பற்றி இக்கதையில் வரும் நயமான கற்பனை இணைப்பைப் பல தமிழாசிரியர் நண்பர்கள் பாராட்டினார்கள். இந்தக் கதையில் வரும் மதுராபதி வித்தகர் பாத்திரப் படைப்பை வாசகர்கள் பலர் அவ்வப்போது வியந்து எழுதினார்கள். வேறு சில வாசகர்கள் செல்வப் பூங்கோதை தான் மறக்க முடியாத கதாபாத்திரம் என்றார்கள். இன்னும் சிலர் இரத்தினமாலை தான் நினைத்து நினைத்து மகிழ ஏற்ற பாத்திரம் என்றார்கள். இளையநம்பிதான் கதாபாத்திரங்களில் முதன்மையானவன் என்கிறார்கள் மற்றும் பலர். அழகன் பெருமாள், மல்லன், கொல்லன், யானைப்பாகன் அந்துவன், காராளர் போன்ற துணைக் கதாபாத்திரங்களே சிறந்தவர்கள் என்பதும் சிலருடைய கருத்தாகும். ஆனால் எழுதியவனுடைய நோக்கத்தில் எல்லார் மேலும் சமமான அக்கறையுமே காட்டப்பட்டுள்ளன என்பதை மட்டும் இங்கு அடக்கமாகத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். இந்த வரலாற்று நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை: சமீப காலத்து நூற்றாண்டுகளில் நாட்டைப் பிறரிடமிருந்து மீட்கும் பல சுதந்திர போராட்ட வரலாறுகளைப் பல நாடுகளில் பார்த்திருக்கிறீர்கள். அதுபோல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வரலாற்று நாவல் என்ற எண்ணத்தோடு இதை அணுக வேண்டுகிறேன். இதற்கு மேல் இந்த முன்னுரையில் நான் சொல்வதற்குச் சிறப்பாக எதுவும் இல்லை.

இந்த நாவலைத் தொடர் கதையாக வேண்டி வெளியிட்ட விகடன் காரியாலயத்தாருக்கும், புத்தகத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் என் மனங்கனிந்த அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
நா. பார்த்தசாரதி

இன்னும் ஐந்துமாதங்களில் நித்திலவல்லி தொடராக வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவுபெறப் போகிறது என்பது ஒரு கூடுதல் தகவல். 
ப்போது பதிவின் தலைப்புக்கும்,  இங்கே குறிப்பிடப் பட்ட  மூன்று புத்தகங்களுக்கும் என்ன சம்பந்தம்.? வாசிப்பு என்பதை என்னவாக நாம் புரிந்து கொண்டு இருக்கிறோம்? மேம்போக்காக, சும்மா பொழுதுபோக்க வாசிக்கிறோமா? வாசித்ததில் உள்வாங்கிக் கொள்ளக் கூடிய விஷயம் ஏதேனும் இருந்ததா இல்லையா என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்கிறோமா?

பனுவல் வாசிப்பு என்கிறார்களே, அதைப்பற்றி நமக்கு ஏதாவது பரிச்சயம் இருக்கிறதா?  தேர்ந்தெடுத்து வாசிப்பது நமக்குக் கைவந்திருக்கிறதா?

வாசிப்பதென்பது லேசான விஷயம் இல்லை. வாசிப்பு அனுபவம் என்பது ரசனை சார்ந்த விஷயம். வாசிப்பது, வாசிப்பு அனுபவம் குறித்த உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.         

                    
       

சண்டேன்னா மூணு! #வாழ்த்துவோம்! #கொரோனா #வரலாறு

கொரோனா வைரஸ் தொற்று களேபரங்களில் மனதை நெகிழச் செய்யும் சில நல்ல செய்திகளும் உண்டே! கொரோனா வைரஸ் தொற்றைப் பரிசோதனை செய்யும் கிட் தயாரிப்பதில் MyLabs என்ற இந்திய நிறுவனம் அரசின் பரிசோதனைக்குப் பிறகு அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்பதில் இதைத் தயாரிப்பதை ஆறே வாரங்களில் சாதித்த வைராலஜிஸ்ட் புனே நகரைச் சேர்ந்த மினால் டகவே போசலே என்கிற மராத்தியப் பெண்மணி! நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் 10 பேர் கொண்ட தனது குழுவுடன் டெஸ்ட் கிட் தயாரித்ததுடன் தீவீரப் பரிசோதனைக்குப்பிறகு அரசின் அனுமதி பெறுவதற்காக அனுப்பியபிறகே, மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்ந்து, ஒரு பெண் குழந்தையையும் ஈன்றெடுத்திருக்கிறார். தாயையும் சேயையும் மனம் கனிந்து வாழ்த்துவோம்!

  
We started the development process for Covid-19 six weeks ago on an emergency basis looking at the national crisis and need for an indigenous accurate solution for improved management. We have developed a unique formulation for test reagents that increases the catalytic activities of the enzymes, reducing the enzyme unit requirement, resulting in reduced cost”, said Minal, who has a decade long experience in the diagnostic field, and also worked on the swine flu disease at NIV, Pune, during the 2009 outbreak. On March 18 evening, within an hour of submitting the proposal for FDA approval, she got admitted to a hospital for a c-section and the very next day, Minal delivered her baby girl என்கிறது செய்தி. MyLabs தயாரிப்பைப் பற்றி ஒருவாரத்துக்கு முன்பே செய்தி வந்துவிட்டாலும், கண்டுபிடிப்பின் பின்னால் இருந்த மினால் பற்றிய செய்தி இப்போது தான் ஓரிரு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.


ராகுல் காண்டி! முன்னெல்லாம் ட்வீட்டரில் மட்டும் தான் உளறிக்கொண்டிருந்தார். இப்போது கலீஞர், இசுடாலின் வழியில் கடிதமும் எழுத ஆரம்பித்து விட்டாராம்! #வாரிசுத்தொற்றுநோய்   காங்கிரசுக்கு சோதனைமேல் சோதனை கொடுத்துக் கொண்டே இருக்கிறது  என்பதில் சந்தேகம் யாருக்காவது இருக்கிறதா? உங்களுக்காகவே கீழே உள்ள செய்தி. 
   
”It is my choice," என்று சைனா வைரஸ் பாதிப்பை மறைத்து ஊர்சுற்றியதோடு நில்லாமல், மருத்துவ மனையில் ஏர்கண்டிஷன் வேலை செய்யவில்லை, டாக்டர் மூஞ்சி சரியில்லையென்றெல்லாம் கூப்பாடு போட்டவர் கனிகா கபூர்! தற்போது நான்காவது முறையாக சைனா வைரஸ் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. சிகிச்சை பலனளிக்கவில்லையோ என்று உறவினர்கள் கவலைப்படுகிறார்கள்.
இந்த நேரத்தில் இதைச் சொல்வது கொடூரம்தான்! இருந்தாலும் கொழுப்பெடுத்து ஊர்சுற்றுகிறவர்கள் பாலிவுட் பிரபலமாக இருந்தாலும் சரி, பல்லாவரம் குப்புசாமியாக இருந்தாலும் சரி, சைனா வைரஸ் பலிவாங்கியே தீரும்!
ஒழுங்கு மரியாதையா அரசாங்கம் சொல்றதைக் கேளுங்கடா! 21 நாள் உசிரோட இருந்தா அப்புறம் ஊர்சுத்துறதைப் பத்தி யோசிக்கலாம்.


TOI செய்தியை மேற்கோள் காட்டி கனிகா கபூர் பெயர் சொல்லி எழுதியிருந்தாலும் கடைசி இரண்டு லைனில் யாருக்குச் சொல்கிறார்? #புரிந்தவர்பிஸ்தா 
இங்கே ராமச்சந்திர குகா மட்டும்தான் வரலாறு எழுதுவாராமா? 
ஐரோப்பிய நாடுகளிலெ வத வத என முன்னாள் அரச குடும்பங்கள் உண்டு. எல்லாருமே இளவரசர் இளவரசி தான். சவூதியிலே கிட்டத்தட்ட முப்பதாயிரம் இளவரசர்கள் இருப்பது போல.
அப்படி ஒரு அரச குடும்பத்தின் இளவரசி தான் இப்போது மர்க்யா ஆனது. வயது 86. அவர் முன்னூறு வருடங்களுக்கு முன்பு ஆண்ட ஸ்பெயின் அரசரின் ஆண் வழிபேத்தி. அவருடைய தாத்தாவுக்கு தாத்தா இத்தாலியிலே ஒரு குட்டி கிராமத்துக்கு சிற்றரசர் போல இருந்தவர்.
ஐரோப்பிய அரச குடும்பங்கள் அவர்களுக்குள்ளே தான் மணம் முடித்துக்கொள்வார்கள் என்பதால் இருக்கும் ஏழெட்டு அரச குடும்பங்களும் மாமன் மச்சான் உறவு தான் இந்த இளவரசியின் சகோதர் நெதர்லாண்டு நாட்டு இளவரசியை மணமுடித்தார். இங்கிலாந்து அரசிக்கு ஸ்பெயின் நெதர்லாட்டு நாட்டு அரசர்கள் எல்லாம் தூரத்து மச்சினன்கள் முறை வரும்.
இறந்த இளவரசியின் விக்கி பீடியா பக்கம் https://en.wikipedia.org/…/Princess_Maria_Teresa_of_Bourbon…
இதிலே என்ன போர்பன் என பிஸ்கட் பேரு இருக்குன்னு சிலரும் அதென்னா விஸ்கி பேரா இருக்குன்னு பலரும் கேட்கலாம். பிரெஞ்சு அரச குடும்பத்தின் பெயர் அது. ஊரின் பெயரும் கூட.
எல்லா ஐரோப்பிய அரச குடும்பமும் சார்ல்மெலே எனும் ஆளிடம் இருந்து தான் தொடங்குகிறது. அதெப்படி என்றெல்லாம் கேட்ககூடாது. வெள்ளைத்தோல் வெள்ளைக்காரன் எழுதுவது தான் வர்லார். அதை அப்படியே அடிமை இந்துக்கள் படிச்சிக்கிடனும் இல்லாட்டி ஏ பார்ப்பானீய என பாயாசம் காய்ச்ச ஆரம்பிச்சுடுவாங்க.

வரலாறு புரிகிறதா? மீண்டும் சந்திப்போம்.

இட்லி வடை பொங்கல்! #64 #கொரோனா #அரசியல் படுத்தும் பாடு!

இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுதி ஐந்து வாரங்களாகி விட்டது! ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்தத் தலைப்பில் நடப்பு அரசியல் நிலவரங்களை எழுதிக் கொண்டிருந்ததில் ஏற்பட்ட தடங்கலுக்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சதீஷ் ஆசார்யா! முன்னொரு காலத்தில் என்னுடைய அபிமான கார்டூனிஸ்டாக இருந்தவர்! காரணமில்லாத வெறுப்புடன் கார்டூன்களை வரைகிற மாதிரி எனக்குத் தோன்றியதால் அபிமான லிஸ்டில் இல்லை என்றாலும் அவர் வரைகிற கார்டூன்கள் என்னுடைய பார்வைக்கு வந்து கொண்டுதானிருக்கின்றன.

   
இன்றுமுதல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமானந்த சாகர் எடுத்த ராமாயணம் தொடர் காலை, இரவு இருநேரமும் எட்டு மணிக்கு மறு ஒளிபரப்புச் செய்யப் படுவதையும், பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களில் பலர்  தற்போது வேலைவாய்ப்பில்லாமல் தவிப்பதால் சொந்த ஊருக்கு  கால்நடையாகவே திரும்பிக் கொண்டிருக்கிற அவலத்தையும் முடிச்சுப்போட்டு விஷமத்தனமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். ஆனால் இணையத்தேடலில் ராமாயணம் சீரியல் பற்றிய தேடல் எண்ணிக்கை மிக அதிகமாகவே தூர்தர்ஷன் வெப்சைட் திணறியதாகச் செய்திகள் சொல்கின்றன.

சதீஷ் ஆசார்யா   கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்க வைக்கிறமாதிரி, இந்தியாவைக்குறித்து மிகவும் கேவலமாக எழுதிக் கொண்டிருக்கிற ஊடகக்காரர் ஒருவரைப் பற்றி முகநூலில் நண்பர் ராஜசங்கர் கொஞ்சம் ஆவேசத்துடன் எழுதியிருப்பதை வாசித்தேன். The Callousness of India’s COVID-19 Response என்ற தலைப்பில் நேற்றைக்கு வித்யா கிருஷ்ணன் என்கிற முன்னாள் ஹிந்து நாளிதழ் ஜர்னலிஸ்ட் எழுதிய விஷமத்தனமான கட்டுரையையும் வாசித்தேன். நடிப்புச் சுதேசிகள் என்று மகாகவி பாரதி அன்றைக்கே இவர்களைப் போல்வாரைப் பற்றி நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத்திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே --வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாடிவைத்தது நினைவுக்கு வருகிறது 

3 நிமிடம் 

இக்கட்டான இந்த நேரத்தில்...தங்கள் மாநிலங்களில் பணி நிமித்தம் வந்து தங்கி இருக்கும் பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும்.. அரிசி,பருப்பு, சமையல் எண்ணெய் , இன்ன பிற உதவிகள் அனைத்தும் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - மத்திய அரசு
இந்த விஷயத்தில்....பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழக அரசு செயல்படுகிறது என்று தான் சொல்லவேண்டும்.
பிற மாநில தொழிலாளர்களுக்கும் உதவி பொருட்கள் கிடைக்கும் என்பதை.. தமிழக முதல்வர்..நேரடியாகவே அறிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த ...நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் பலனை ...இது போன்ற பேரிடர் காலங்கள் முழுமையாக உணர்த்துகிறது.
இது ஒருபக்கம் இருக்கட்டும்! இன்னொரு முக்கியமான கேள்வியை இங்கே கேட்டிருக்கிறார்:  
உலகத்துல எந்த நாட்டுலேயும் ஒரு விசாவுல உள்ளே போயி அந்த விசாவுக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ய முடியாது. அப்படி இருக்க,
1. எப்படி இத்தனை வேற்று நாட்டு இஸ்லாமியர்கள் (தாய்லாந்து, துருக்கி மலேஷியா, யூகிர், சைனா, கில்கிஸ்தான்) இந்தியாவுக்குள் வருகை புரிந்தனர்?
2. எந்த விசா கேட்டகிரியில வந்தாங்க?
டூரிஸ்ட் விசாவா இருந்தாலும் பிஸினஸ் விசாவா இருந்தாலும், அப்படியே உண்மையை சொல்லி ரிலீஜியஸ் விசா வாங்கி வந்தாலும் இங்கே தங்குமிடத்தில் அதாவது இந்தியாவில் இரண்டு லோக்கல் கார்டியன் அல்லது கிளையென்ட் அல்லது லோக்கல் ரிலீஜியஸ் இன்ஸ்டிடியூஷன் ஏதாவது ஒன்றின் தகவல்கள் நமது குடியுரிமை அதிகாரியிடம் தரப்படவேண்டும்.
தந்தார்களா? அப்படி தரப்பட்டது நுண்ணறிவு துறை போலீஸிடம் பகிரப்பட்டதா??
அப்படி பகிரப்பட்ட தகவல்கள் சரிப்பார்க்கப்பட்டு மீண்டும் குடியுரிமை அதிகாரி வசம் வந்ததா??
அப்படி வந்திருந்தால், இரண்டு வாரங்களாக இவர்கள் சென்ற இடங்களை வெகு சுலபமாக கண்டறியலாமே??
தரப்பட்ட விசாவிற்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்ததாக, விசா ரூல்ஸை மீறியதாக இதுவரை இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டதா??
எனக்கு தெரிந்து இல்லை.
ஒரு பத்து பேரை குடியுரிமை வழக்கில் போட்டு காய்ச்சி எடுத்தா தான் அடுத்தவனுக்கு பயம் வரும், இல்லேனா வேறொரு வழியில் அவனுங்க உள்ளே நுழைவானுங்க.
மார்க் மை வேர்ட்ஸ்...
எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 
பிஜேபியின் H ராஜா கம்யூனிஸ்டுகளின் ஏழைப் பங்காளர்கள் வேடத்தைத் தோலுரிக்கிறாரா? அல்லது மத்தியில் ஆளும் கட்சியில் தேசியச் செயலாளராக இருந்தும் தனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று பொருமுகிறாரா?
விடைதெரிந்தவர்கள் வந்து பதில் சொல்லலாம்! மீண்டும் சந்திப்போம்.    

கொஞ்சம் சிரிக்க! கொஞ்சம் கொறிக்க! கொஞ்சம் படிக்க!

விஜய் டிவி அந்தநாட்களில் இருந்தே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சினிமா சார்ந்ததாகவே நடத்தி வந்தாலும் லொள்ளுசபா மாதிரி ஒரு நிகழ்ச்சியைப் போல பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! அதே போல சேனலை  எவ்வளவு லந்தடித்தாலும் அதையும் வெட்கமில்லாமல் ஒளிபரப்புகிற விசாலமான மனசு படைத்த வெட்கம் கெட்ட சேனல் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை!

14 நிமிட நான் ஸ்டாப் காமெடி 
யாரை லந்தடிக்கிறார்கள் என்பது 
புரிகிறதா இல்லையா? 

மருத்துவ வசதிகளில் மிகச்சிறப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் இத்தாலியில் வைரஸ் இறப்புகள் 9% என்பதாக இருக்கும் நிலையில்...
மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சீனாவில் ...இத்தனை மாதங்களில்... 3720 பேர் மட்டுமே என்று அந்நாடு கூறுவது..உலக நாடுகளிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பி இருந்தது.
சீனா ...அனைத்து செயல்பாடுகளையும் digitize செய்துவிட்ட நிலையில்...மிக அதிக மக்கள்.. மொபைல் மூலமே தங்கள் தேவைகள், கல்வி, இன்ன பிற செயல்பாடுகள் அனைத்தையும் செய்து கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான்..
சீனாவின் மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும், லேண்ட்லைன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும் பெரும் வீழ்ச்சியை ...China Mobile, China Telecom உட்பட சீனாவின் 3 மொபைல் service providers நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகளும் & சீன லேண்ட்லைன் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையும் வெளிப்படுத்துவது... உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இதன் படி...பயன்பாட்டில் இருந்த 2 கோடியே 10 லட்சம் மொபைல் எண்கள் .. ஜனவரி,பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்களுக்குள்ளாக ..திடீரென்று...பயன்பாட்டில் இல்லாத எண்களாக மாறி இருக்கிறது.
சீனாவில்...ஒவ்வொருவரும்... 5 மொபைல் எண்கள் வரை பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்பது உட்பட அனைத்தையும் கருத்தில் கொண்டு..2 கோடியே 10 லட்சம் பயன்பாட்டிலிருந்து விலகிய எண்களில்... உரிய காரணம் உள்ளவற்றை தவிர்த்துவிட்ட பின்னரும் கூட .. பயன்பாட்டிலிருந்து விலகிய அல்லது காணாமல் போன 6 லட்சம் எண்களுக்கு உரிய விளக்கம் இல்லை.
சீனாவில் சீன வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் இருக்கலாம் என்பது உறுதியாகி இருக்கிறது...என்கிறார்கள்.
இது குறித்து ..இந்தியா உட்பட ...உலக நாடுகளின் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

நா. பார்த்தசாரதி எழுதிய சரித்திரக்கதைகளில் மணிபல்லவம் மிகவும் பெரியது. 2014 இல் திருமகள் நிலையம் வெளியிட்ட இரண்டாவது பதிப்பு 768 பக்கங்கள். 2000ஆம் ஆண்டுவரை தமிழ் புத்தகாலயம் ஏழு பதிப்புக்களை வெளியிட்டிருக்கிறது 956 பக்கங்களில் என்பது கூடுதல் தகவல். மீள்வாசிப்புக்காக இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்திருக்கிறேன். புத்தகத்துக்கு முன்னோட்டமாக எழுதியவன் கதை என்ற தலைப்பில் சில அடிப்படை விஷயங்களை நா. பார்த்தசாரதி கறாராகச் சொல்லி விடுகிறார். வரலாற்று ஆதாரங்கள் என்று நாம் நினைப்பதற்கும் மேலான வரலாற்று விழுமியங்கள் தான் கதைக்கு அடிப்படை என்பதைச் சொல்லியே ஆரம்பிக்கிறார். கொஞ்சம் பார்க்கலாமா?


மணிபல்லவம்

எழுதியவன் கதை

இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது.  

நமது இலக்கியங்களில் வரலாற்றுக் காலத்துப் பூம்புகார் நகரம் கம்பீரமான வருணனைகளால் போற்றிப் புகழப்பட்டிருப்பதைப் பலமுறை படித்திருக்கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக் காட்டிலும் நகர்ப் பரப்பினாலும் பிற பெருமைகளாலும் பூம்புகார் நகரம் சிறப்புற்றிருந்ததாகச் சொல்லுகிறார்கள். இலக்கியங்களிலும் காவியங்களிலும் படித்துப் படித்து மனக்கண்ணால் கண்டிருந்த பூம்புகார் நகரம் என்னை ஏற்கெனவே மயக்கியிருந்ததென்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை எழுதியதனால் அந்த மயக்கம் இன்னும் வளர்ந்ததே ஒழியக் குறையவில்லை.

போர்க்களங்களில் வில்லும் வேலும் வாளும் கேடயமும் ஏந்திச் செய்கிற போரைப் போலவே வரலாற்றுக் காலத்துப் பூம்புகாரின் சந்திகளிலும் சதுக்கங்களிலும் பல்வேறு சமயவாதிகள் அறிவுப் போர் நடத்திக் கொண்டிருந்ததாக நூல்களில் படித்திருக்கிறோம். புகழும் பெருமையும் மிக்க அந்த அறிவுப் போரில் இந்தக் கதாநாயகனும் ஈடுபடுகிறான். வெற்றி பெறுகிறான்.

இந்தக் கதாநாயகனின் வாழ்க்கை ஓர் அழகிய தத்துவம். சுரமஞ்சரியிலிருந்து முகுந்தபட்டர் வரை எல்லாரும் கதாநாயகனாகிய இளங்குமரனுக்குத் தோற்றுப் போவதாக அவனிடமே சொல்கிறார்கள். அவனோ யாரையுமே வென்றதாக ஒப்புக் கொள்ள மாட்டேனென்கிறான். இறுதிவரை பிடிவாதமாக அன்பு செய்து அவனை வென்றவளாகிய சுரமஞ்சரியும் கூட தான் வெற்றி பெற்றதை மறந்து அவனுக்குத் தோற்றதாகவே அவனிடம் சொல்கிறாள். உடம்பினாலும் தோற்றத்தாலும் மட்டுமல்லாமல் குணங்களாலும் மிக அழகியவன் இந்தக் கதாநாயகன். குணங்களாலும் அழகுடையவர்கள் காதலிக்கத் தகுந்தவர்கள். இந்தக் கதையில் எல்லாக் கதாபத்திரங்களுமே இளங்குமரனுடைய குண அழகை ஏதோ ஒரு வகையில் ரசிக்கிறார்கள். வீரத்தையே ஒரு தவமாகச் செய்யும் நீலநாகர், பிடிவாதமாக அன்பு செய்து தளரும் முல்லை, தீமைகளின் எல்லையில் போய் நிற்கும் பெருநிதிச் செல்வர் நகைவேழம்பர், இளங்குமரனுடைய முழு வாழ்க்கையையுமே தன்னையறியாமல் தற்செயலாக வரைந்து முடித்து விடுகிற ஓவியன் மணிமார்பன், நல்லவற்றுக்குப் பாதுகாப்பு அளிப்பதே ஒரு தவம் என்று எண்ணும் அருட்செல்வர் எல்லாரும் இதில் உயிர்க்களையோடு நன்கு உரம்பெற்று நடமாடுகிறார்கள்.

ஆனாலும் இந்தக் கதையில் படிப்பவர்கள் எல்லாரையும் ஒருங்கே கவர்கிற கதாபாத்திரம் சுரமஞ்சரியாகத்தான் இருப்பாள். இளங்குமரனுக்காக ஏங்கி ஏங்கி உருகி அவள் எல்லாவற்றையும் இழந்து விட்டுக் கடைசியாக அவனைப் பற்றிய விருப்பத்தை மட்டும் இழக்க இயலாமல் அவன் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக்கி - "இந்தப் பாதங்களைத் தொழுவதைத் தவிர எனக்கு வேறு செல்வங்கள் வேண்டியதில்லை" - என்று அவனோடு கீழிறங்கி நடக்கும் இடம் மெய்சிலிர்க்கச் செய்வது இந்தக் கதைக்கும் கதாநாயகனுக்கும் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரம் இத்தனை முழுமையாகக் கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. "பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறு பெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.

இதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர். திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசியாக ஒரு வார்த்தை. இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.

அன்புடன்
நா. பார்த்தசாரதி
சென்னை
1-6-1970

நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்வரிசையில் இந்தப் புத்தகமும் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ளக் கிடைக்கிறது. கணினியில் படிப்பதற்கு சிரமமே இல்லாத PDF வடிவம் என்பதால் தரவிறக்கம் செய்யவோ படிப்பதோ தயக்கம் வேண்டியதே இல்லை.

நீண்டவருடங்களுக்குப் பிறகு மீள்வாசிப்புக்காக இதை எடுத்துக் கொண்டிருப்பதில், புதிதாக வாசிக்க எடுத்துக் கொண்டது போலவே உணர்கிறேன். 

மீண்டும் சந்திப்போம்.   

மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா #அரசியல் இன்று!

கொரோனா வைரஸ் தொற்றை வைத்து இந்தியப் பங்குச் சந்தை இன்றைக்கு மறுபடியும் ஆட்டம் கண்டிருக்கிறது. நாமறிந்த பதிவர்களில் எங்கள் Blog #KGG ஒருவர்தான் பங்குச்சந்தையைப் பற்றிப் பேசக் கூடியவர். ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று பார்த்ததில் இது வரை எதுவும் கண்ணில் படவில்லை. பங்குச்சந்தை அரசியல் எனக்குப் பிடிபடாதது. அதனால் தெரிந்த இந்திய அரசியல்களத்தைப் பற்றியே பேசலாமா?

       
மத்திய பிரதேசத்தில் பிஜேபியின் சிவராஜ் சவுகான் இன்றிரவு முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் சொல்கின்றன. ஏற்கெனெவே  3 முறை  ம,பி. முதல்வராக இருந்தவருக்கே இன்னும் வாய்ப்பளிப்பதில் கட்சிக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ். போதாக் குறைக்கு காங்கிரசின் பிரஜாபதி சபாநாயகராக நீடிக்கக் கூடாது என்று பிஜேபி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்போவதாக, சட்டசபை கூடியவுடனேயே நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை முதலில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று ஆளுநர் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஆக, மத்தியப்பிரதேசத்தில் இன்னமும் அரசியல் நிலவரம் தெளிவற்றதாகத்தான் நீடிக்கிறது. காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிகிற வரை குழப்பத்துக்குப் பஞ்சமில்லை.

கம்முனா கம்மு கம்முனாட்டி கோ 
     
கோதாவரி!  கதாபாத்திரத்துக்கு இந்தப் பெயரை வைத்த தமிழ்த்திரைப்பட இயக்குனர், கதாசிரியர் எவரையாவது அறிவீர்களா? இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்பது தவிர #அரட்டைஅரங்கம் என்ற டிவி டாக் ஷோ, என்று பலவிதமாகவும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த விசு என்கிற எம் ஆர் விசுவநாதன் நேற்று காலமானார். துக்ளக் வாசகர்கள் குழுவை ஒரு அறக்கட்டளையாகப் பதிவு செய்த நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பில் விசுவைக் கடைசியாகப் பார்த்தது. இந்தப்பக்கங்களிலும் பகிர்ந்திருந்தது நினைவிருக்கிறதா? ஆழ்ந்த இரங்கல்கள் என்று எழுதும் போது, அவருடைய மூன்று மகள்களும் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வருவதில். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் அவர்கள் எவரும் இந்தியாவுக்கு வந்து இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ற செய்தி நெஞ்சைப் பிசைகிறது. பதிவர் உண்மைத்தமிழன் அவரது தளத்தில் ஒரு விரிவான அஞ்சலிக்கட்டுரையை எழுதியிருக்கிறார். 

                                                 
இந்த 20 நிமிட வீடியோவில் இருக்கும் காமெடி வால்யூ ஒன்றுக்காக மட்டுமே இங்கே பகிர்கிறேன். மற்றபடி ரவீந்திரன் துரைசாமியின் அரசியல் மேதாவித்தனம் எப்படிப்பட்டது என்பதற்காக இல்லை. இசுடாலின், ரஜனி இருவரில் யார் உயர்ந்தவர் என்ற  லூசுத்தனமான கேள்வியை எழுப்பிக்கொண்டு  இசுடாலின் வெர்சஸ் மற்றவர்கள் என்பதுதான் சரியென்று சொல்வதுமே மிகவும் தவறான வாதம்!

மீண்டும் சந்திப்போம்.   

சண்டேன்னா மூணு! #கொரோனாவைரஸ் #அரசியல் #ரஜனிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடி வேண்டிக் கொண்டபடி இன்று நாடெங்கும் மக்களே முன்வந்து ஊரடங்கை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒழுங்கு, சுயகட்டுப்பாடு மிகவும் அவசர அவசியமாகத் தேவைப் படுகிற நேரம் இது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவருவதில், வளர்ந்த நாடுகளே தடுமாறிக் கொண்டிருக்கின்றன. வர்த்தகப்போரில் மட்டுமல்ல, இந்த நோய்த்தொற்று பரவலைக் கையாளுவதிலும் கூட அமெரிக்கா தோற்று வருவதாக கடுமையான விமரிசனங்கள் வருகின்றன. நோய்த் தொற்று சீனாவிலிருந்துதான் ஆரம்பித்தது என்ற சர்ச்சையைத் தாண்டி, மருத்துவ உபகரணங்கள் சீனாவிடமிருந்துதான் வந்தாக வேண்டும் என்கிற கள யதார்த்தம் மிகவும் உறுத்தலாகத் தெரிகிறது. கொரோனா வைரசை சோதனை செய்வதற்கான கிட்  தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்திய அரசு பேசி வருவதாகத் தெரிகிறது.

        
இது ஊரடங்கு உத்தரவல்ல! ஊரையும் மக்களையும் காப்பாற்றிக் கொள்ளச் செய்யப்படும் அக்கறை என்ற வாசகங்கள் சரிதான்! ஆனால் இது வெறும் டீசர் மட்டும் தான்! மெயின் பிக்சருக்கும் தயாராக இருக்கவேண்டும் என்று பிரதமர் சூசகமாகச் சொன்னதையும் புரிந்து கொள்ள வேண்டுமே! 

வீடியோ 35 நிமிடம் 

குவாரன்டைனுக்கு அனுப்பப் பட்ட பிறகும் கூட தான் ஒரு சினிமா பிரபலம் என்று காட்டிக் கொள்ளும் கனிகா கபூர் மாதிரியான பந்தா பேர்வழிகள் நிறைய உள்ள நாடு இது! இவர்போல சினிமா பந்தா பேர்வழிகளை  நிரந்தரமாக விலக்கி வைப்பது உத்தமம்! வீண் வதந்தி பரப்புகிறவர்களையும் சேர்த்துத் தான்! 


கொரோனா வைரஸ் உலக அரசியல், பொருளாதாரம், எல்லாவற்றிலும் அதிரடி மாற்றங்களை உருவாக்கி விட்டதா? வளர்ந்த மேற்கத்திய நாடுகள் தடுமாறுவதில், வளரும் நாடுகள் எதுவும் தயாராக இல்லாத சூழ்நிலையில், அடுத்தது என்ன என்பதை எவராலும் கணிக்க முடியாது என்று சொல்ல நினைத்தாலும் இங்கே இந்தச் செய்தி வேறுவிதமான சூழ்நிலையை சொல்கிறது.  சீனா உலகத்தின் நட்ட நடுநாயகமாய் ஆவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. American Tianxia பற்றி சால்வடோர் பாபோன்ஸ் இப்போது என்ன எழுதுவார் என்று யாருக்காவது கவலை இருக்கிறதா? ஒபாமா மாதிரியே டொனால்ட் ட்ரம்பும் கிடைத்த வாய்ப்புக்களை அலட்சியப் படுத்தி Making America Great Again என்பதை  வெறும் கோஷமாகக் குறுக்கிவிட்டார் என்று சொல்லி விடலாமா?

    
முதலிலேயே தமிழருவி மணியனை நான் ஒரு காமெடி வால்யூவுக்காக மட்டுமே  பொருட்டாக எடுத்துக் கொள்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். ரஜனிகாந்த் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்: எந்த நம்பிக்கையில் மனிதர் இத்தனை bold ஆகச் சொல்கிறார்? ரஜனிக்கே அதுபற்றிய தெளிவான பார்வை இருக்குமா? வீடியோ 42 நிமிடம்

மீண்டும் சந்திப்போம்.     

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! #அரசியல்தமாஷா

நேற்று வரை நான் எதற்காக மெஜாரிடியை நிரூபிக்க வேண்டும் என்று மிதப்பாகக் கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்த மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அப்புறம் சுருதி குறைந்து, இன்று நடுப்பகல் 12 மணிக்கு நிருபர்களைச் சந்திக்கிறாராம்! நிருபர்களிடம் கொஞ்சம் கொட்டித்தீர்த்த கையோடு தன்னுடைய ராஜினாமாவையும் சமர்ப்பிப்பார் என்பது இன்றைய அரசியல் தமாஷாக்களில் முதலாவது! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறவரை காங்கிரஸ்காரன் நாற்காலியை விடவே மாட்டான் என்று இந்தப் பக்கங்களில் நான் பலமுறை சொல்லிவருவது ஏன் என்று இப்போதாவது விளங்கிக்கொள்ள முடிகிறதா?


வேண்டுமானால் பிஜேபி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரட்டுமே என்று காங்கிரஸ் விரித்த வலையில் பிஜேபி சிக்கிக் கொள்ளவில்லை என்பது முதலாவது அடி! 16 MLAக்கள் ராஜினாமா மீது வீடியோ conference இல் சபாநாயகர் அவர்களுடன் பேசிப் பார்க்கட்டுமே என்ற உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை சபாநாயகர் ஏற்கவில்லை. இன்னும் இருவார அவகாசம் வேண்டுமென்று சபாநாயகர் வேண்டியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்கு சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்யவும் உத்தரவிட்டபிறகு, சபாநாயகர் 16 MLAக்கள் ராஜினாமாவை ஏற்பதாக நேற்று  அறிவித்த போதே கமல்நாத் ஆட்சியின் கதையும் முடிந்து போனது. தங்கள் MLAக்களை அவர்களது விருப்பத்துக்கு எதிராக யாரோ பிடித்து வைத்திருப்பதாகவும் மீட்டுத்தரவேண்டும் என்றும் காங்கிரஸ் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதையை, அந்த 16 MLAக்களும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து தாங்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே பெங்களூருவில் தங்கி இருப்பதாகச் சொல்லி முறியடித்தனர் என்பது கூட சபாநாயகர் நேற்று ராஜினாமாவை ஏற்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்! காங்கிரஸ் வக்கீல்கள் கடினமாக முயற்சித்தும் கூடக் கரியைப் பூசிக் கொண்டதுதான் மிச்சம்! 

         
கொரோனா வைரசை தீனத்து வைரஸ் என்று அமெரிக்க அதிபர் தொடர்ந்து சொல்லிவருவதில் சீனா நிதானமிழந்திருக்கிறது. சில அமெரிக்க ஊடகங்களின் நிருபர்களை நாட்டைவிட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பித்திருக்கிறது. வர்த்தகப்போரில் கூட சீனா நிதானமிழக்காமல் அமைதியாக இருந்தது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவில் வைத்துக் கொண்டு இந்த 18 நிமிட வீடியோவில் சில கான்ஸ்பிரசி தியரிகளை பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்! நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னாலேயே இங்கே ஆல் இன் ஆல் அழகுராஜா ப. சிதம்பரம் பிரதமருக்கு யோசனை சொல்லவும் கிளம்பிய வேடிக்கையைக் கவனித்தீர்களா? பிரதமர் உரைக்குப் பின்னால் பம்மிப் பம்மி நாலைந்து ட்வீட் போட்டதோடு சரி!


மனோபாலா வேஸ்ட்பேப்பர் என்றொரு யூட்யூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கிறார் போல.தமிழ் சினிமாவைப் பிடித்திருக்கிற வியாதி என்னவென்று பேசுகிறார்கள். தமிழகத்தைப் பிடித்திருக்கிற பெரும் வியாதியே சினிமா தானே! 22 நிமிடட் காமெடிக் கொடுமை!  

மீண்டும் சந்திப்போம் 


சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் செய்திகள்!

காங்கிரஸ் கட்சி இன்னமும் பிழைத்திருப்பதற்குக் கொஞ்சமும் தகுதியில்லாதது என்பதை இந்தப் பக்கங்களில் அரசியல் பற்றி எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்தே சொல்லிவருகிறேன். இன்றைக்கு ராஜ்ய சபாவில் நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகொய் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்துக் கோஷம் போட்டதும் வெளிநடப்புச் செய்ததுமான மட்டரகமான அரசியல் கூத்தை அரங்கேற்றி இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத ஒரு கும்பல் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகவே பார்க்க முடிகிறது.


மத்தியப்பிரதேச அரசியலில் காங்கிரஸ்கட்சி தன்னுடைய ஆட்சியை, இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தோற்றுவிட்டது. நாளை மாலை 5 மணிக்கு சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றம் இன்று மாலை உத்தரவிட்டிருக்கிறது. 16 MLA க்கள் ராஜினாமா விவகாரம் அப்படியே அந்தரத்தில் தொங்குகிறது. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த 16 பேரும் வாக்களிக்க விரும்பினால் போதுமான பாதுகாப்பை அளிக்கவேண்டும் என்று மட்டும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது. வேண்டுமானால் பிஜேபி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டியதுதானே என்பது காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சொல்லிக் கொடுத்த யோசனை! உள்வயணம் என்ன என்று பிஜேபி தரப்புக்குத் தெரியாதா? ஆக நாளை அந்தி மயங்கும் நேரத்தில் கமல்நாத்துடைய ஆட்சி கவிழ்கிறது என்று தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. #வழக்கறிஞர்அணி யை நம்பிக் கெட்டதிலும் காங்கிரசுக்குத் தான் முதலிடம்! கபில் சிபலும் அபிஷேக் மனு சிங்வியும் இருந்த இருப்பென்ன? இப்படி அடுத்தடுத்து காங்கிரசைத் தொடர்சரிவுக்குக் கொண்டு போனதும் என்ன?  அடுத்த இடத்தைப் பிடிக்க தமிழகத்தில் திமுக தயாராக வேண்டுமோ? காங்கிரஸ், கழகம் இந்த இரண்டு கட்சிகளைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் வழக்கறிஞர் அணியை  இத்தனை அதிகமாக நம்பி இருந்ததில்லை!


கடந்த திங்களன்று மாநிலங்களவையில் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பேசிய இந்த 15 நிமிட வீடியோவின் சுருக்கப்பட்ட வெர்ஷனை இரண்டுமூன்று நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! சம்ஸ்க்ருத எதிர்ப்பு, ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் திராவிடங்கள் செய்துவருகிற வெறுப்பு அரசியலை, அதிலுள்ள போலித்தனத்தை சாடுகிறார். வைகோ பற்றி டாக்டர் சுப்ரமணியன் சுவாமி நக்கல் அடித்ததை கோபால்சாமியே குலுங்கிக்குலுங்கிச் சிரித்து ரசித்தது இந்த வீடியோவின் சிறப்பு. சபையும்  சேர்ந்து சிரிப்பதில்  வியப்பென்ன! 

மீண்டும் சந்திப்போம்.    
        

கற்பனைக் கதை தான்! #உண்மை கற்பனையை விடக் கொடூரமானது!

கொரோனா வைரஸ் தொற்று என்பது தற்செயலாக உருவானதா அல்லது செயற்கையாக உருவாக்கப் பட்டுப் பரவ விடப்பட்டதா என்பதைக் குறித்து ஏகப்பட்ட செய்திகள், கான்ஸ்பிரசி தியரிகள் நிறையவே உலவுகின்றன. Truth is stranger than fiction என்பதை நீங்கள் எப்படிப் புரிந்துகொள்கிறீர்களோ அறியேன்! நான் எப்போதோ படித்த ஒரு கதைப் புத்தகம், இப்போது என் நினைவுக்கு வந்து Truth is stranger than fiction என்று சொல்லப்படுவது சத்தியம் தான் என்று உறுதி சொல்லிக் கொண்டிருக்கிறது.

 
கொரோனா ...
சீனா .. ' Thousand Talents Plan 'என்கிற திட்டத்தை உருவாக்கி 2008 முதல் அமல் படுத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள துறை சார் விஞ்ஞானிகளை & திறமையாளர்களை... பெரும் பணத்தை சம்பளமாகவும், ஆராய்ச்சிக்கான உதவித்தொகையாகவும் கொடுத்து ...இத் திட்டத்தின் கீழ் பணியமர்த்திக் கொள்வது சீனாவின் நோக்கம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பொருட்செலவுடன் நடந்து கொண்டிருக்கும் பல்துறை ஆராய்ச்சிகளுக்குள் புகுந்து குழப்பம் ஏற்படுத்துவதற்கும், விஞ்ஞானிகளை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் பெரும் அறிவுத்திருட்டுக்கும் திட்டமிடுகிறது சீனா என்று எச்சரித்தது அமெரிக்கா.
எச்சரித்தது போலவே சீன ஊடுருவல் நடக்கத்துவங்கியது. பல அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவின் TTP ன் கீழ் இணைந்து பெரும் பணத்தை பெற்றுக் கொண்டு பணிபுரிந்தாலும், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து அதை மறைத்தனர்.
கடந்த ஜனவரி மாதம்.. New Mexico ல் உள்ள Las Alomas National Laboratory ல் பணிபுரிந்த விஞ்ஞானி ஒருவர் விசாரணையின் போது ...தான்...சீனாவின் Thousands Talents Plan ன் கீழ் ரகசியமாக பணிபுரிவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதே போல...ஃப்ளோரிடாவில் உள்ள Moffitt Cancer Centre ல் அதன் தலைமை நிர்வாகி உட்பட்ட 6 விஞ்ஞானிகள் & பணியாளர்கள் சீனாவின் TTP ன் கீழ் பணிபுரிவதாக அறியப்பட்டு ...வெளியேற்றப்பட்டனர்.
இவையெல்லாம் பெரிய அளவில் உலக கவனம் பெறாத நிலையில் தான்...ஜனவரியில் ஹார்வர்ட் பல்கலையின் வேதியியல் துறை பேராசிரியர், விஞ்ஞானி, மருத்துவம் மற்றும் உயிரியல் துறை nanotechnology யில் முன்னோடியானவர், அமெரிக்க பாதுகாப்புத்துறை உட்பட பல்வேறு அதிமுக்கிய துறைகளில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், உலகப்புகழ் பெற்ற உயிரியல், வேதியியல் துறை விஞ்ஞானி ...Charles Lieber ஐ கைது செய்தது FBI .
சீனாவின் TTP 'ன் கீழ் பணியமர்த்தப்பட்டு ...சீனாவின் Wuhan மாகாணத்தில் உள்ள Wuhan University of Technology -ல் ஒரு பரிசோதனைக்கூடம் ஏற்படுத்தவும், வருடத்தில் 9 மாதங்கள் WUT க்காக பணி செய்வதற்கும், சீனாவில் இருந்து ஆராய்ச்சி மாணவர்கள் / விஞ்ஞானிகளை ஹார்வர்டில் உள்ள தன்னுடைய ஆராய்ச்சி கூடத்தில் வருடத்தில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை கவனிப்பதற்கு ..தன்னுடைய பொறுப்பில் அழைப்பதற்கும்...Charles Lieber -க்கு வருடத்திற்கு $ 150,000 தனிப்பட்ட செலவுக்கும், மாதம் $50,000 சம்பளமும் பெற்றதாகவும், இத் தகவல்களை அமெரிக்க அரசிடமிருந்து மறைத்ததாகவும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அடுத்த இரண்டு நாட்களிலேயே..அவர் ஜாமீனில் வெளிவந்துவிட்டார் என்பது வேறு விஷயம்.
இப்போது..ஹார்வர்ட் பல்கலை இவரை கட்டாய விடுப்பில் வைத்துள்ளது. பல்கலையில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவருடைய ஆராய்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவரின் கீழ் பணிபுரிந்த 12 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.
பல விருதுகளை பெற்ற புகழ் பெற்ற வேதியியல் விஞ்ஞானியின் Wuhan ஆராய்ச்சி கூட தொடர்பு ..உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
இதையடுத்து உலக நாடுகளின் சந்தேகப்பார்வை சீனா மீது அழுத்தமாக பதிந்திருக்கிறது.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்..கடந்த 2019 அக்டோபர் ல் WHO தலைவர் உட்பட கலந்து கொண்ட..John Hopkins Health Security, Melinda Gates Foundation, World Economic Forum இணைந்து நடத்திய நிகழ்வில் உலகை அச்சுறுத்தும் வைரஸாக global pandemic ஆக கொரோனா மாறக்கூடிய வாய்ப்புகள் , அதை எதிர்கொள்ள தேவையான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் Charles Lieber ம் கலந்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
என மூன்று இணைப்புகளையும் இதற்கு ஆதாரமாகக் கொடுத்திருக்கிறார். நண்பர் திருப்பூர் ஜோதிஜி, சில நாட்களுக்கு முன்னால், இந்த கொரோனா வைரஸ் சீன ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதுதானா என்பதைப் பற்றிக் கொஞ்சம் எழுதலாமே என்று கேட்டிருந்தார். அந்த ஊகம் ஏற்கெனெவே பல ஊடகங்களிலும் செய்தியாக வந்து, அது மறந்தும் போய்விட்டபடியால் புதிதாக என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டு இருந்த சமயத்தில் தான் ராபர்ட் லட்லம் இன்னொரு எழுத்தாளருடன் சேர்ந்து எழுதிய The Hades Factor கதை கான்ஸ்பிரசி தியரிகளில் மிகவும் நம்பகத்தன்மை உள்ள ஒரு விஷயத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது.
ராபர்ட் லட்லமின் The Hades Factor கதை, மூன்று ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத, வெவ்வேறு இடங்களில் நடந்த மரணங்கள், அதைத் தொடர்ந்து எழும் கேள்விகளில் இருந்து தொடங்குகிறது.

சவப் பரிசோதனையில், அதுவரை அடையாளம் காணப் படாத ஒரு வைரசின் தாக்குதல் இருப்பதாகத் தெரிய வரவும், பிரச்சினை என்ன என்பதை ஆராய்வதற்காக  The U.S. Medical Research  Institute for Infectious Diseases(USAMRIID) மற்றும் Center for Disease Control(CDC)  என்ற இரண்டு அமைப்புக்களுக்கும் இறந்தவர்களுடைய உடலில் இருந்து எடுக்கப் பட்ட சாம்பிள் அனுப்பிவைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் தொற்று நோய் ஆராய்ச்சிப் பிரிவில் (USAMRIID) பணியாற்றும் லெப்டினன்ட் கர்னல்  டாக்டர் ஜோனாதன் ஸ்மித் லண்டனில் ஒரு மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, நாடு திரும்பி தன்னுடன் பணிபுரியும், தன்னுடன் காதலி சோபியா ரஸ்ஸலைச் சந்திப்பதை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில், ஜோனாதன் ஸ்மித்தின் பால்ய  நண்பன் பில்லிடமிருந்து. லண்டனின்  ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் சந்திக்க வருமாறு சங்கேதச் செய்தி வருகிறது. சந்திக்கும்போது, ஸ்மித், மற்றும் சோபியாவின் உயிருக்குப் பெரும்  ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அமெரிக்கா திரும்பி, சோபியாவையும் காப்பாற்றிக் கொள்ளுமாறு அந்த நண்பன் சொல்லிவிட்டு ஸ்மித் என்ன ஏது என்று கேட்கும் முன்னரே, தன்னுடன் அழைத்து வந்திருந்த நாயுடன் மறைந்து விடுகிறார்.
என்ன ஏது என்று புரியாமல் ஸ்மித் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்புகிற வழியில் அவரைத் தீர்த்துக் கட்ட ஒரு முயற்சி நடக்கிறது.  அவரைக் கொல்ல முயற்சி செய்தவர்களில் ஒருவனைக் கொன்றுவிட்டு ஸ்மித் தப்பித்துவிடுகிறார், ஃபோர்ட் டெட்ரிக்கில் இருக்கும் USAMRIID ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றும் தனது காதலியைக் காப்பாற்ற ஸ்மித் விரைகிறார்.

இங்கே லண்டனில் ஸ்மித்தைக் கொலை செய்ய ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், அங்கே ஆராய்ச்சி மையத்தில் டாக்டர் சோபியா ரஸ்ஸல், அந்த இனம் தெரியாத வைரசை அடையாளம் காணும் முயற்சியில் தீவீரமாக இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னால், சோபியாவும் இன்னும் சில மருத்துவர்களும் பெரு நாட்டுக்குச் சென்றிருந்த தருணத்தில், அதே மாதிரி சிம்ப்டங்களுடன் பாதிக்கப் பட்ட உள்ளூர் மக்கள், ஒரு வகைக் குரங்கின் ரத்தத்தை மருந்தாக எடுத்துக் கொண்ட போது நோயில் இருந்து விடுபட்டதாகக் கேள்விப்பட்டது திடீரென நினைவுக்கு வருகிறது. அப்போது, அதைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்  என்ற விஞ்ஞானியைச் சந்தித்ததும், குரங்கு ரத்தத்தில் இருந்த ஒருவகை ஆண்டி பாடீஸ் தான் அதற்கு மருந்தாக இருக்க வேண்டுமென்றும் பேசியது நினைவு வரவே,அவரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள். அந்த முயற்சியே, அவளது உயிரைக் கொள்ளை கொண்டுபோகும் என்பதையோ, காதலன் ஜோனாதன் ஸ்மித்துடைய உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதை அறியாதவளாக!

ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற புகழ் பெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உபதலைவராக  இருக்கும் விக்டர்  ட்ரேமான்ட், சோபியாவுடன் பேசுகையில் தனக்கு எதுவும் நினைவு இல்லை என்று மறுத்தாலும், டாக்டர் சோபியாவின் ஞாபக சக்தியைக் கண்டு கலக்கமுறுகிறார். தீர்த்துக் கட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை! நாடல் ஹசன் என்ற தேர்ந்த கொலையாளியிடம் சோபியாவையும், ஸ்மித்தையும் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஃபோர்ட் டெட்ரிக்கின் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி, சோபியாவுக்கு ஆராய்ச்சிக் கூடத்திலேயே, அந்த கொடும் வைரஸ் ஊசி வழியாகச் செலுத்தப் பட்டு ஒரு விபத்து மாதிரி செட்டப் செய்யப் படுகிறது. சோபியாவின் தொலைபேசி உரையாடல்கள், ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எல்லாமே சுத்தமாக அழிக்கப் படுகிறது.

நோயின் தாக்கத்தோடு வீடு திரும்பும் ஜோனாதன் ஸ்மித் மருத்துவ மனையில் சேர்த்தும், அந்த இனம் தெரியாத வைரஸ் அவளது உயிரைக் கொள்ளை கொள்கிறது. காதலியை  இழந்த சோகத்தில், திசை தெரியாமல் தடுமாறும் ஸ்மித்துக்கு, சவப்பரிசோதனையில், சோபியாவின் உடலில் ஊசி போடப்பட்ட இடம் அது கொலை தான் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. தன்னுடைய மேலதிகாரி ஜெனரல் கீல்பர்கரிடம், தனக்குத் தெரிந்த அத்தனை விவரங்களையும் சொல்லி, ஸ்மித் சோபியாவின் மரணத்துக்குப் பழிவாங்கியே தீரவேண்டும் என்று அனுமதி கோருகிறார். ஆனால், அனுமதி கொடுப்பதற்கு முன்னாலேயே கீல்பர்கரும், அந்த வைரசுக்குப் பலியாகிறார். அது கொலை தானென்றும், அதை செய்தது ஸ்மித் தானென்றும் வேட்டையாடப் படுகிற நிலைக்கு ஸ்மித் தள்ளப் படுகிறார்.   

பீட்டர் ஹோவெல், மார்டிஜெல்லர் பாக் என்ற இரண்டு நண்பர்களுடைய உதவியோடு ஜோனாதன் ஸ்மித், இந்த வைரஸ் கோளாறு ஈராக்கில் பரிசோதிக்கப் பட்டதென்பதை அறிகிறார். ரகசியமாக ஈராக்கிற்குப் பயணமாகிறார். சி ஐ ஏ அதிகாரியாக பணியாற்றும் சோபியாவின் சகோதரி ராண்டி ரஸ்ஸலை எதிர்பாராத விதமாக அங்கே சந்திக்க நேரிடுகிறது. சோபியாவின் மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ராண்டி கோபப்படுகிறாள். பிறகு சேர்ந்து செயல்படுகிறாள். தேவையான விவரங்களைத் தெரிந்து கொண்டு ஸ்மித் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்குள், உலகின் பல பகுதிகளிலும் ஒரு இனம் தெரியாத வைரஸ் தாக்குதலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகிறார்கள்.

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் ஆரம்பிக்கலாம் என்ற நிலையில், இதற்கான மருந்தை ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் வேறு ஒரு ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த வைரஸ் தாக்குதலுக்கும்நிவாரணமாக  இருப்பதைக் கண்டறிந்ததாகவும், அமெரிக்க அரசு ஆர்டர் கொடுத்தால் லட்சக் கணக்கான தடுப்பு ஊசி  மருந்தைத் தயாரிக்கும் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்தி வருகிறது. அமெரிக்க மக்களைக் காப்பதற்காக, கோடிக்கணக்கான டாலர்களைக் கொடுத்து அமெரிக்க அரசு இந்த மருந்துகளை வாங்க ஆர்டர் கொடுக்கிறது. அத்தோடு விடாமல், இந்த மருந்தைக் கண்டுபிடித்ததற்காக, டாக்டர் விக்டர் ட்ரேமான்ட்டிற்கு, அமெரிக்க அதிபரே நேரடியாக சுதந்திரத்திற்கான பதக்கம் என்ற உயர்ந்த விருதை வழங்கி கௌரவப் படுத்துவதற்கும்  ஏற்பாடாகிறது.

கதையின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழும் தருணங்கள் மிக சுவாரசியமாகக் கையாளப் பட்டிருக்கின்றன.

பெருவில் ஏற்படும் ஒருவிதமான காய்ச்சலுக்கு, மருந்தாக ஒருவகைக் குரங்கின் ரத்தத்தில் இருக்கும் ஆண்டிபாடீஸ் பயன்படுவதைக் கண்டறியும் டாக்டர் ட்ரேமான்ட், நோயை உண்டாக்கும் காரணியையும், நோயைக் குணப்படுத்து
ம் ஆண்டி பாடீசையும் தயாரித்து, நோயை பரப்பி அதற்குப் பிறகு அதற்கு மருந்தையும் கண்டுபிடித்துக் கோடிக்கணக்கில் காசாக்குகிற சதியை ஹேட்ஸ் ப்ராஜக்ட் என்ற பெயரில், அமெரிக்க அரசின் மிகப் பெரிய பதவியில் இருப்பவர்களுடைய கூட்டணியோடு உருவாக்குகிறார். ப்ளாஞ்சார்ட் கெமிகல்ஸ் என்ற பழமையான நிறுவனத்தின் உரிமையாளருக்குத் தெரியாமலேயே, மிக நவீனமான ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு எல்லாம் நடக்கின்றன.

நோயை உருவாக்கும் வைரஸ்,  குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவ உதவி என்ற பெயரில் செலுத்தப் படுகிறது. மாற்று மருந்து ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப் பட்டு, மருந்து சரியாக வேலை செய்கிறது என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. மற்றவர்கள், பெரும் அவஸ்தையுடன், இன்னதென்று நிர்ணயிக்கமுடியாத காரணத்தால் சாக விடப் படுகிறார்கள். நோயை உருவாக்குவதற்காக  ஆண்டிபயாடிக்ஸ் மருந்து என்ற போர்வையில், நோயைப் பரப்பும் மருந்துகள் ஏராளமாக சந்தையில் விடப் படுவதும், சரியான விலை கிடைத்ததும் மாற்று மருந்தும் கிடைக்கச் செய்வதுமான மருந்துத் தயாரிப்பு  நிறுவனத்தின் சதி மோசடி இப்படியாக அம்பலமேறுகிறது.

கதாநாயகன் ஜோனாதன் ஸ்மித், ஈராக்கில் இருந்து திரும்புகிற சமயம், அவரது நண்பர்களில் ஒருவரான மார்டி எதிரிகளிடம் சிக்கிவிடுகிறார். ஆரம்பத்தில் அவரை எச்சரித்த பால்ய நண்பர் பில், இந்த சதிகாரர்களுடைய கூட்டத்தில் ஒருவர் என்பதும், தன்னுடைய நண்பனைக் காப்பாற்ற முயற்சிப்பது தெரிந்த நிலையில் அவரை வைத்தே ஸ்மித்தை வலையில் சிக்க வைக்கிற முயற்சியும் நடக்கிறது. நண்பனைக் காப்பாற்றுகிற முயற்சியில் பில் தன்னுடைய உயிரைக் கொடுக்கிறார். அதற்குப் பிறகு, ஜோனாதன் ஸ்மித் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார் என்பது விறுவிறுப்பான க்ளைமாக்சில் வந்து முடிகிறது.

ராபர்ட் லட்லம் 

இங்கே நிஜத்தில் வல்லரசுகளை விட வலிமையான அமைப்புக்களாக  மருந்து தயாரிக்கும் பெரு நிறுவனங்கள், உயிர்காக்கும் மருந்துகளை எப்படிக் கொள்ளை விலைக்கு விற்று ஆதாயம் தேடுபவையாக இருப்பதை மறந்துவிட்டு, காரணங்களை வேறெங்கோ தேடுகிறோமோ? சீனா இன்றைக்கு மிகவும் மலிவாக மருந்துகள், மருத்துவ சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கிறது, சர்வதேச சந்தையில் சீனத்தயாரிப்பு மருந்துகள் முழு ஆதிக்கம் செலுத்துவதை அறிந்திருக்கிறோமா? 

சீனாவுக்கு இருக்கிற மிகப்பெரிய சௌகரியம், ஆராய்ச்சிக்கு பைசா செலவு செய்யாமல் அடுத்த நாடுகளின் கண்டுபிடிப்புக்களைக் காப்பியடித்து, மிகக்குறைந்த கூலியில் கிடைக்கும் உள்ளூர் மனித உழைப்பை வைத்து மிகமலிவாக மருந்துகள் உட்பட எதைவேண்டுமானாலும் தயாரிக்க முடிவது! Reverse Engineering இல் சீனர்கள் மிகவும் திறமைசாலிகள்! 

The Hades Factor தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப் பட்ட படமாகவும் 2006 இல் வெளிவந்தது. DVDயாகவும் கிடைக்கிறது. முடிந்தால் நாவலை வாசித்துப் பார்த்து நடப்பு  நிலவரங்களோடு ஒப்பிட்டும் பாருங்களேன்! சீனாவோடு நாம் போட்டிபோட முடியாத துறைகளில் மருந்து உற்பத்தித்துறையும் ஒன்று என்பதை நினைவு வைத்துக்கொள்ளலாம் தான்! நினைவு வைத்து ........?

மீண்டும் சந்திப்போம்.