சண்டே supplement! யெஸ் பேங்க் புராணம்!

பானாசீனா எகத்தாளம் கொஞ்சம் ஓவராகவே போய் விட்டதோ, ? பானாசீனா எகத்தாளம் தன்னுடைய பங்கு வெளிப்பட்டுவிடாமல் இருக்கச் செய்த தந்திரம்தான் என்றாலும் அது முன்னாள் கூட்டாளி ராணாகபூர் மற்றும் குடும்பத்தினர் சிக்கிக் கொள்ளக் காரணமாகவும் ஆகிவிட்டது போல! முந்தைய பதிவின் கடைசிப்பகுதியாக ஒரு முகநூல் பகிர்வை முழுதுமாகக் கொடுத்திருந்ததை எதற்கும் ஒருமுறை வாசித்து விடுங்களேன்!


இந்த 20 நிமிடத்தொகுப்பில் இன்று அதிகாலை ராணா கபூர் கைதுசெய்யப்பட்டதில் இருந்து தோண்டத் தோண்ட நடந்த மோசடிகளின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள், லண்டனுக்குத் தப்ப முயன்ற ராணாகபூர் மகள் மும்பை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப் பட்டது என்று ஏகக்கதைகள் வெளியே வந்திருக்கின்றன.

    
பானாசீனாவின் அதிமேதாவித்தனம் பிரியங்கா வாத்ராவையும் யெஸ் பேங்க் விவகாரத்துக்குள் இழுத்து விட்டிருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது! ஓவியர் பிரியங்கா வாத்ரா வரைந்த ஓவியத்தை ராணா கபூர் 2 கோடி கொடுத்து வாங்கியதாக ஒரு சந்தேகம்! இதே டெக்னிக்கை  முன்பு மம்தா பானெர்ஜியும் கையாண்டு காசுபார்த்தார் என்பதையும் அப்படியே ஒரு நினைவூட்டலாக!  

சேகர் குப்தா என்ன சொல்கிறார்?
வீடியோ 22 நிமிடம் 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுப்போன சுமை என்று சொன்னதில் எந்தத்தவறும் இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்து ஆறாண்டுகளாகிறதே என்று கேட்பதில் எந்த அர்த்தமுமில்லை. 2004 - 2014 வரையிலான ஐமுகூ அரசு ஊழல்களின் ஊற்றுக்கண்ணாக இருந்தது தெரிந்த விஷயம். அரசு, வங்கிகள் நிர்வாகத்திலும்  பெருச்சாளிகள்  இன்னமும் தொடர்வதை அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாதபடி தற்போதைய சட்டங்கள், நீதிமன்ற  முடிவுகள் இருப்பதை மறந்துவிட முடியுமா?

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!