Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! விவஸ்தையே இல்லாத இடம் #அரசியல்

பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மனசாட்சியோ விவஸ்தையோ இருப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். சற்றுமுன் பேசியதைக்கூட அப்படியே மாற்றிப்பேசுவதும் கூடத் தேர்ந்த அரசியல்வாதிகளுக்கு ரொம்பவுமே  கைவந்த கலைதான்! அதற்காக இப்படியா? பிஜேபியின் தேவேந்திர ஃபட்னவிசும் சிவசேனாவின் சஞ்சய் ரவத்தும் சந்தித்துக் கொண்ட போது கண்கள் பனித்தன வசனம் மறுபடி உயிர் பெற்றதாம்! இதயம் இனித்ததா என்பது இன்னமும் தெரியாத நிலையில் சிவசேனா எங்கள் எதிரி அல்ல; நண்பர்கள்தான் என்று தேவேந்திர ஃபட்னவிஸ் சொல்லி இருப்பதை வைத்து கூட்டணிக்கணக்குகள் மாறுகிறதா என்று இந்து தமிழ்திசை கூட செய்தி கதைக்கிறது.


அன்புமணி ராமதாசுடைய இந்தக்கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இந்தப்படத்தைப் போட்டு பிபிசி தளம் கேள்வி கேட்டிருக்கிறது.லாபம் இல்லாத எந்தவொரு அசைவு , முடிவும் எடுக்காதவர்கள் அவர்கள் என்று தெரிந்ததனால் பாமகவை, அதன் தலைவர்களை அறிந்த எவருமே இதுபோல சிறுபிள்ளைத் தனமான கேள்வியெல்லாம் கேட்கமாட்டார்கள். 


ஸ்டேன்லி ராஜன் எதிர்பார்ப்பதை எல்லாம் எங்கூரு நிதியமைச்சர் செய்துவிடுவாரா என்ன? நிதிநிலை அறிக்கை தயாரிப்பதைவிட அவரை விமரிசித்த நபர்களைக் காவல்துறையினரை விட்டுக் கைது செய்வதில் தான் அதிகம் முனைப்பு காட்டுகிறார் என்று செய்திகள் வருகின்றன. தரமற்ற விமரிசனம் என்றால் அதற்குத்தீர்வு காண சட்டபூர்வமாக நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால் பழைய ஜமீன்தார்கள் மாதிரியே செயல்பட மந்திரி விரும்புகிற மாதிரி இருக்கிறது என்பது பெரும் சோகம். மதுரைக்கு வந்த சோதனையும் கூட!

 

பதிவின் தலைப்பில் சொன்னமாதிரி எல்லா அரசியல் வாதிகளும் விவஸ்தை இல்லாதவர்கள் இல்லை. ஒரு சில அரசியல்வாதிகள் மிகத்தெளிவான பார்வையுடன் தங்கள் கருத்துக்களை முன்னுக்குப்பின் முரண் இன்றி வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம் ::திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !

திரைப்படப் படைப்பாளிகளே ! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை !! சாதி, மத பேதத்தை உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் வெளிவர 2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்  உந்துதலாக இருக்கும்!!

நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டுவரப்படவுள்ள 1952-ம் ஆண்டு திரைப்படத்துறைத் திருத்தச்சட்டத்திற்கு சிலர் தேவையில்லாமல் தங்களுடைய எதிர்க் கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவே கருதுகிறேன். 'கலை கலைக்காக' என்பதும், கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதும் பலரது விருப்பமாக இருக்கலாம். ஆனால்,அரசு கட்டுப்பாடுகள் இருக்காது அல்லது இருக்கக்கூடாது என்பது எதார்த்தமாகுமா?

ஒரு தெளிவான அரசியல் சாசன கட்டமைப்பு உள்ள  எந்த ஒரு தேசத்திலும் சட்டங்களும், விதிகளும் இல்லாமல் அரசு செயல்பட இயலுமா? ஒரு தேசத்தின் எல்லைக்குள் வாழும் அறிவுஜீவிகள் அவர்களின் அடிப்படை உரிமைகள் என்ன? அதன் எல்லைகள் என்ன? என்பதைத் தெரிந்திருக்க வேண்டாமா? 

உரிமை பற்றி மட்டும் பேசுகிறவர்கள், கடமை மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேச மறுப்பது ஏன்?

ஒவ்வொரு தனி மனிதனும் அல்லது சமூக குழுக்களும் தங்களது கடமைகளையும், பொறுப்புகளையும் தாங்களாகவே உணர்ந்து  செயலாற்றக் கூடிய ஒரு காலகட்டம் உருவாகும் பட்சத்தில் திருட்டு இருக்காது; திருட்டைப் பிடிக்க போலீசும் தேவைப்படாது. கொலை; கொள்ளை இருக்காது, சாதிய; மத வன்மங்கள் இருக்காது. சுரண்டுவோர்; சுரண்டப்படுவோர் என்ற பேதமைகள் இருக்காது.  அப்போது சட்டங்களும் தேவைப்படாது; சட்டங்களை அமலாக்கக் கோடிக் கணக்கில் செலவழித்து அரசின் நிர்வாகத் துறையையும் உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது. அக்கால கட்டங்களில் "அரசு என்ற நிறுவனம் உதிர்ந்துபோகும்" என்று பொதுவுடைமை தளகர்த்தர்களான காரல் மார்க்ஸும், ஏங்கல்ஸும் தங்களது கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இதுவே "இராம ராஜ்ஜியம்"  என்று கூறுகிறோம். இப்போது என்ன அப்படிப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார பேதமற்ற சமூகத்திலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?  

கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களும்; தொழிற்நுட்ப பிரிவினரும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் அல்லும் பகலும் அயராது உழைத்து உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை, சிலர் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, ஒரு சில மணித்துளிகளில் நவீன விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த திரைப்படத்தையும்  பதிவுசெய்து அத்திரைப்படங்கள் திரையில் திரையிடப்படுவதற்கு முன்பாகவே இணையத்திலும், திருட்டு 'வி சி டி'க்களாகவும் வெளியிட்டு அத்திரைப்படக் குழுவினரின் அனைத்து முயற்சிகளையும், உழைப்பையும், பொருளாதாரத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்களே, இதைத்தடுக்க ஒரு வலுவான திரைத்துறை திருத்தச் சட்டம் கொண்டு வருகின்ற போது, அதை ஏன் திரைப்படத்துறையினர் எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை.?

இன்றைய நவ நாகரீக கால கட்டங்களில் திரைப் படங்களால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிந்து போய்விடக் கூடாது என்பதற்காக எந்தெந்த திரைப்படங்களை எந்தெந்த வயதினர் பார்க்க வேண்டும் என வரையறை செய்யப்படுவதைக் கண்டு ஏன் திரைப்படத்துறையினர் அஞ்ச வேண்டும்? 'பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது' என்ற பொறுப்புணர்வு திரைப்படத் துறையினருக்கு ஏன் வர மறுக்கிறது?

இப்போது, தணிக்கை சான்றிதழை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்பதை ஒரே ஒருமுறை சான்றிதழ் பெற்றாலே போதுமானது என திருத்தம் கொண்டு வருவதில் இவர்களுக்கு என்ன சங்கடம்? மத்திய திரைப்பட சான்றிதழ் ஆணையத்தால் (Central Board Of Film Certification) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பு, ஒரு திரைப்படத்திற்கு பல்வேறு முகாம்களிலிருந்து ஆட்சேபனை எழும் பட்சத்தில், மறு தணிக்கைக்கு உத்தரவிட  மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 2021 திரைப்படத்துறை திருத்தச் சரத்தை  எதிர்த்து "கலை சார்ந்த விஷயங்களில் அரசு தலையிடுவது படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்தைச் சிதைத்துவிடும்" என்று எதிர்ப்புக்குரல் எழுப்புகிறார்கள். 1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்டம் அமலுக்கு வந்த பிறகு, ஆயிரக்கணக்கான  திரைப்படங்கள் அச்சட்டத்தின்படியே தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வெளிவந்துள்ளன.

தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட எல்லா படங்களுக்கும் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப் போனால் கடந்த காலங்களில் தான் Censor Board மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அண்மை காலத்தில் Censor Board என்பதை Central Board Of Film Certification என்று பல படிகள் குறைத்து சான்றிதழ் வழங்கும் ஆணையமாக மாற்றப் பட்ட பின்னரே, பொறுப்பற்ற முறையில் புற்றீசல் போல பல திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஒரு திரைப்படத்திற்கு Censor Board அல்லது Central Board Of Film Certification அனுமதி அளித்த பிறகு அரசால் கூட தலையிட முடியாத சூழல் இருக்கின்ற காரணத்தினால் தான் ஆட்சேபனைக்குரிய திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்னால் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தேறுகின்றன.  தவறான திரைப்படங்களால் பாதிக்கப்படுவோருக்கு இன்று வரையிலும் நீதிமன்றம் செல்வது மட்டுமே தீர்வாக இருக்கிறது. 

'சண்டியர்' படப்பெயர் மாற்றத்திற்கு நாம் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது; 'கொம்பன்'  பட வன்முறை காட்சிகளை நீக்க நீதிமன்ற போராட்டம் நடத்தினோம். அண்மைக்காலமாக திரைப்படங்களால் இந்தியா முழுமைக்கும் சமூகத்தில் பல்வேறு சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே,அதை எதிர் கொள்ளவே இப்பொழுது மறு தணிக்கைக்கு உத்தரவிடும் அதிகாரத்தைச் சட்டமாக்கத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.இது போன்ற ஒரு மறுதணிக்கை செய்ய சட்டத்தில் இடமிருக்க வேண்டும் என்பதைத்தான் 'புதிய தமிழகம் கட்சி' தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாம் மட்டுமல்ல; திரைப்படப் பெயர், கதை, வசனங்கள், காட்சிகளால் பாதிக்கப்பட்டு நீதிமன்றமே தீர்வு என்று இருந்த பலரும் இந்த மறுதணிக்கை சட்டம் திரைப்படத் துறையினரை திருத்துவதற்கான ஒரு திருத்தச் சட்டமாகவே நிச்சயம் வரவேற்பார்கள்.

கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்போம்; அதைத் தணிக்கைக்கு உட்படுத்த மாட்டோம் என்று கூற முடியுமா?  Censor Board-க்கு கட்டுப்பட்டுத் தானே திரைத்துறை தனது 75 ஆண்டுகால பயணத்தைக் கடந்து வந்துள்ளது. திரைப்படத் துறையினர் கூறுவதைப்போல கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த திருத்தச்  சட்டமும் இப்போது கொண்டு வரப்படவில்லை. மத்திய திரைப்பட தணிக்கை துறை ஒரு திரைப்படத்திற்குச் சான்றிதழ் வழங்கிய பின்னர் இந்த நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒற்றுமை, பொது அமைதி ஆகியன கருதி மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும் என்பது இப்போது புதிதாகச் சேர்க்கப்பட உள்ள சட்டத்திருத்தம். இதைக் கண்டு ஏன் திரைத்துறையினர் பயப்பட வேண்டும்.? 

"மடியில் கனம் இருந்தால்தானே, வழியில் பயப்பட வேண்டும்"  என்பதற்கிணங்க நேர்மை, தூய்மை அடிப்படையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் இச்சட்டம் குறித்து அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையே?

'பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை' இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளாக இருப்பினும் - ‘With Reasonable Restrictions’ அதாவது தேவையான கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே.  அதேபோல, 'There Is No Such thing as Absolute Freedom for Cinema and OTT Platform'.

1952-ம் ஆண்டு திரைப்படத்துறை சட்ட விதிகளின்படி இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியதாகவும், நமது நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவு,  பொது அமைதி மற்றும் தனிப்பட்ட அல்லது சமூக அல்லது நாட்டின் மதிப்பிற்கு பங்கம் விளைவிக்கக் கூடியதாகவும், குற்றச் செயல்களைத் தூண்டக் கூடியதாகவும் உள்ள திரைப்படங்கள் பொதுவெளியில் வெளியிடத் தகுதியற்றவை என நிராகரிக்கச் சட்டம் ஏற்கனவே 70 ஆண்டுகளாக அமலில் தான் இருக்கிறது என்பதை படைப்பாளிகள் என்பவர்கள் ஏன்  படித்து புரிந்து கொள்ளவில்லை? என்பதே கேள்வி. 

ஆங்கிலேயர் காலத்திலேயே தெருக்கூத்து நடத்துவதற்கும், கிராமங்களில் நாடகங்கள் நடத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதே நடைமுறையும், சட்டமும் ஆகும். தெருக்கூத்து நாடகமாகி, ஊமை படங்களாகி, பின்பு கருப்பு-வெள்ளை பேசும் படங்களாகி, தற்போது பலவண்ண டிஜிட்டல் திரைப்படங்களாகவும் நவீன வடிவம் பெற்று விட்டன.திரைப்படங்கள் மகிழ்ச்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் எடுக்கப்பட்ட வரையில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை.ஆனால், அந்தத் துறை தன்னுடைய சுய ஒழுக்கம், கட்டுப்பாடுகளிலிருந்து வெகு தூரம் விலகி, மக்களிடத்தில் ஒற்றுமையை உண்டாக்குவதற்குப் பதிலாக சாதி, மத, இன, மொழி ரீதியான வேற்றுமைகளையும்; அமைதியை உண்டாக்குவதற்குப் பதிலாக அருவாள், வன்முறைக் கலாச்சாரத்தையும்; நாட்டின் பண்பாடு, கலாச்சார உணர்வுகளைப் பேணி காப்பதற்குப் பதிலாக பாலிய உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையிலும் முழுக்க முழுக்க எப்பொழுது திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டதோ, அதன் பின்புதான் சமூகத்தின் கோபத்திற்கு ஆளாகி நாடெங்கும் திரைப்படங்களுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டு போராடும் சூழல்கள் ஏற்பட்டன.

ஒரே மண்ணில் வாழும் மக்களிடத்தில் ஒரு பகுதியினரை உயர்ந்தவராகவும்;  மற்றொருவரை தாழ்ந்தவராகவும், ஒரு குழுவைப் பெருமை உடையவராகவும், இன்னொரு குழுவை பெருமை குறைவானவராகவும், ஒரு குழுவை வீரம் செறிந்தவராகவும், ஆளத் தகுதியானவராகவும், 'ஆண்ட பரம்பரை' என்றும் திரைப்படங்கள் கொடுத்த முத்திரை பல்வேறு சமூகங்களுக்கிடையே பிணக்குகளை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தது. இதனால் ஏறக்குறைய 30 ஆண்டுக்காலத்திற்கு மேலாகத் தமிழகம் கலவர பூமியாகவே இருந்ததை எவரும் மறந்து விட முடியாது.

திரைப்படங்கள் மூலம் ஜனநாயகம்; சமத்துவம்; சகோதரத்துவ உணர்வுகள், தேசப்பற்றுகள் வளர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அதற்கு நேர்மாறாக இந்தியத் தேசத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குகளைப் போற்றி வளர்க்கக் கூடியதாகவும், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, திருட்டு ஆகியவற்றிற்குப் புத்தம் புதிய உத்திகளை கற்றுக் கொடுப்பதற்கான தளங்களாகவும் அண்மைக்கால திரைப்படங்கள் மாறிவிட்டன. தனி மனித பிம்பங்களைக் கட்டியமைத்து அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது, குறுகிய காலத்தில் கோடிகளைக் குவிப்பது, குறிப்பிட்ட சில சாதி, மதங்களைப் போற்றுவது என்பது மட்டுமே திரைத்துறையில் பெரும்பாலானோரின் குறுகிய சிந்தனைகளாக மாறி உள்ளன.மேலும்,தமிழகத்தில் நிலவக்கூடிய பல்வேறு விதமான அரசியல், பொருளாதார, சமூக சிக்கல்களுக்கும் திரைப்படங்களே முதற்காரணமாக விளங்குகின்றன.

.ஜனவரி 26, 1950  அன்று  இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த போதே இந்தியாவில் சட்டரீதியாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால், 'அரிச்சந்திரா'  என்ற திரைப்படத்தில் ”நான் ஆதியிலும் ……….. அல்ல, சாதியிலும் ……….. அல்ல, நீதியிலும் ……….. அல்லவே – நானே பாதியில் …………. ஆனேனே” என்று ஒரு சாதியைக் குறிப்பிட்டு டைட்டில் சாங் போடப்பட்டது.'அலிபாபாவும் 40 திருடர்களும்' என்ற திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயர் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்படங்களில் அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட போது சமூகங்கள் விழிப்பு பெறவில்லை.

 திரைக்கதைகளின் நீரோட்டத்தாலும், அதில் நடித்த பெரும் திரை ஆளுமைகளாலும் அவைகள் பெரிதாகவும் வெளியே தெரியவில்லை. அந்த திரைப்படங்கள் எல்லாம் வெளிவந்த காலகட்டத்தில் நாம் பிறக்கவே இல்லை. ஆனால், அக்காலகட்டங்களில் தான் தமிழகத்தின் மேடைகளில் பெரிய அளவிற்கு 'சாதி ஒழிப்பு' பிரச்சாரங்கள் நடைபெற்ற போதும், திரைப்படங்கள் மூலமாக அதிக அளவில் சாதி தீ வளர்க்கப்பட்டதை சாதி மறுப்பாளர்கள் ஏன் எதிர்க்கவில்லை என தெரியவில்லை.

ஆனால்,1990களுக்குப் பிறகு, திரைப்படங்களின் பெயர்களிலும், பாடல்களிலும், வசனங்களிலும், காட்சிகளிலும் சாதிய அம்சங்கள் வலிந்து புகுத்தப்பட்டன. "போற்றி பாடடி பெண்ணே, …………. காலடி மண்ணே" - "எசமான் காலடி மண்ணெடுத்து"– " திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா" போன்ற பாடல்கள் தமிழகமெங்கும் தமிழ் சாதிகளுக்குள் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று ஒருவருக்கொருவர் முட்டி மோதி இரத்தம் சிந்தும் நிலைக்குத் தள்ளியது.'மதயானை கூட்டம்' என்ற திரைப்படம் சாதி மாறி திருமணம் செய்த எண்ணற்ற இளைஞர்களையும், பெண்களையும் கௌரவக் கொலை செய்யக் காரணமாக அமைந்தது.'பாய்ஸ்' என்ற ஒரு திரைப்படத்தில் இளைஞர்கள் இடையே அபரிவிதமான பாலியல் உணர்வுகளைத் துண்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.நமது எதிர்ப்பிற்கு பின் சில காட்சிகள் நீக்கப்பட்டு திரையிடப்பட்டது. 


'சண்டியர்' என்று பெயரிடப்பட்ட படம் அரிவாள் கலாச்சாரத்திற்கும், கலவரங்களுக்கும் வித்திடும் என்பதால் நாம் கொடுத்த எதிர்ப்பின் காரணமாக அத்திரைப்பட பெயர் மாற்றப்பட்டது.நாம் நீதிமன்றம் வரை சென்றதால் 'கொம்பன்'  திரைப்படத்தில் 72 வன்முறை காட்சிகள் நீக்கப்பட்டன. 'பாகுபலி' என்ற திரைப்படத்திலிருந்து நீதிமன்றம் மூலம் ஒரு சாதிய வார்த்தை நீக்கப்பட்டது.  'மண்டேலா' திரைப்படத்தில் ஒரு காட்சியை நீக்க ஒரு குறிப்பிட்ட பிரிவினர் போராடி வருகிறார்கள். 'தசாவதாரம்' படம் ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் எதிர்ப்பை சந்தித்தது. 'மருதநாயகம்' இன்னும் வெளியே வரவில்லை. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வரலாற்றுத் திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க அனுமதிக்கப் படவில்லை. இந்திய அளவில் 'பத்மாவதி' என்ற திரைப்படம் பல எதிர்ப்புகளுக்குப் பிறகு 'பத்மாவத்' என்று பெயர் மாற்றி வெளியிடப்பட்டது. 

நடிகை சர்மிளா தாகூர் விளிம்பு நிலை மக்களைத் தவறாகச் சித்தரித்ததால் இந்தியப் பட்டியலின துறையால் அழைத்து விசாரிக்கப்பட்டார். புகழேந்தி தங்கராஜின் 'காற்றுக்கென்ன வேலி' படம் நீதிமன்றம் சென்ற பிறகே வெளியானது. 'பரியேறும் பெருமாள் – அசுரன்' போன்ற திரைப்படங்களில் 'ஆண்ட பரம்பரை' என்ற சொல் சிலரின் எதிர்ப்புக்குப் பின் நீக்கப்பட்டது. 'தெய்வத்திரு மகன்' என்ற திரைப்படம் 'தெய்வத்திரு மகள்' ஆனது.'ஃபேமிலி மேன் 2' என்ற இணையத்தொடர் ஈழப்போராளிகளை இழிவு படுத்துவதாகவும்; கொச்சைப்படுத்துவதாகவும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இது போன்று மக்கள் சென்சார்களை சந்தித்த படங்கள் இன்னும் எவ்வளவோ உண்டு.

சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சிறிதும் கணக்கிலே கொள்ளாமல் நாங்கள் பெரிய முதலீடு போட்டு விட்டோம் அதைப் பன்மடங்கு ஆக்குவதற்கு நாங்கள் எப்படிப்பட்ட திரைப்படத்தை வேண்டுமானாலும் எடுப்போம் என படைப்பாளிகள் மனம் போன போக்கில் செயல்படக்கூடாது  என்பதற்கு மேற்குறிப்பிட்ட ஒரு சில நிகழ்வுகளே சாட்சிகள்.  ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது என்பது எளிதான காரியம் அல்ல எனவே,அந்த திரைப்படம் தயாரிக்கும் போதே அது ஏற்படுத்தும் தீய விளைவுகளைப் பற்றி கவனத்தில் கொண்டு கதைகள், காட்சிகள், வசனங்கள், பாடல்கள் இடம் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தின்  எதிர்பார்ப்பு ஆகும்.

எனவே,சாதி, மத, பாலியல்; வன்முறைகள், தேசிய நீரோட்டத்திற்கு எதிரான சிந்தனைகளைத் தூண்டும் திரைப்படங்களை மறு தணிக்கை என்ற சட்டத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஒரு படம் திரைக்கு வந்த பிறகு அதைத் தடுப்பது கடினம்.இப்போது உள்ள சட்டத்தைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால்,ஒரு திரைப்படத்தை மறு தணிக்கைக்கு மத்திய அரசு உத்தரவிடக் கூடிய இந்த அதிகார சட்டத் திருத்தம் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமானதாகும்.

.தரமான திரைப்படங்களை எடுக்கவும், அது குழந்தைகளைப் பாதிக்காத; ஆபாசம் இல்லாத; அருவருப்பில்லாத; கலாச்சார சீரழிவையும், சாதி, மத பேதத்தையும் உண்டாக்காத; தேசப்பற்றை வளர்க்கும் படங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வெளிவர இந்த 2021 திரைத்துறை திருத்தச் சட்டம் உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.2021 திரைத்துறைத் திருத்தச் சட்டம்,திரைப்படத் துறையினரைத் திருத்தும் சட்டமாகவே இருக்கும் !

திரைப்படப் படைப்பாளிகளே! திரைக்கருவில் பிழை இல்லையேல், மறுதணிக்கைக்கு அஞ்ச தேவையில்லை! 

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர்,புதிய தமிழகம் கட்சி.05.07.2021

மீண்டும் சந்திப்போம். 

#தலைமைப்பண்பு ஊடகங்களில் வாசகர் கடிதம்! P V நரசிம்மராவ்!

பள்ளி மாணவனாக செய்தித்தாட்களை வாசிக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே செய்திகளோடு  தலையங்கம், ஆசிரியருக்கு வாசகர் கடிதம் பகுதிகளை ஒரு எழுத்து விடாமல் படிக்கிற பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. இன்றும் செய்திகளுக்கு வாசகர்கள் எழுதும் பின்னூட்டம் ஒன்று விடாமல் வாசிப்பதுண்டு தான்! இவையில்லாமல் செய்தியை முழுதாய் வாசித்த திருப்தி கிடைப்பதில்லை என்பது என்னுடைய அனுபவம்.


தினமலர் நாளிதழுக்கு ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி, 57 ஆண்டுகளாய் செய்யாததை, அவரது மகனான முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை, 'ஒன்றிய அரசு' என்றாக்கி புளகாங்கிதம் அடைந்துள்ளார்! என்ன தான் அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி 'சப்பைக்கட்டு' கட்டினாலும், அதில் தி.மு.க.,வினரின் தீராத பிரிவினை மோகம் அப்பட்டமாய் தெரிகிறது. அதன் வெளிப்பாடு தான், சுதந்திரத்திற்கு துாண்டு கோலாய் இருந்த 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை மட்டம் தட்டும் முயற்சி. சட்டசபையிலேயே, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவரை அப்படி பேச செய்து, முதல்வர் ஸ்டாலின் ரசித்துள்ளார்.

கடந்த நுாற்றாண்டில் நடந்த போர், பிரிவினை ஆகியவற்றால், உலகம் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள், நம் கண் எதிரே உள்ளன. பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத நாடுகள் பட்டியலிலிருந்து வெளிவர முடியாமல் திணறுகிறது. வங்கதேசத்தில் பழமைவாதிகளின் சேட்டைகளை ஒடுக்க முடியவில்லை. சீனாவின் பிடியில் சிக்கி, ஜனநாயகத்தை தொலைத்து விட்டது, நேபாளம். இலங்கை பற்றி சொல்லவே வேண்டாம்.

பிரிவினை தேடும் எந்த நாடும் முன்னேறியதில்லை. அங்கு சர்வாதிகாரமும், பயங்கரவாதமும் தான் இருக்கும். நம் மாநிலங்களிடையே பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அதை தீர்ப்பதற்கே, மத்திய அரசுக்கு நேரம் போதவில்லை. இதனிடையே, ஜல்லிக்கட்டு, இடஒதுக்கீடு, நெடுஞ்சாலை அமைத்தல், 'நீட்' என, அனைத்து விஷயத்திலும் தமிழகம், தேசிய நீரோட்டத்திலிருந்து விலகியே நிற்கிறது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் பயங்கரவாதம், மாநில சுயாட்சி, மத வெறுப்பு, பிரிவினை எண்ணம் முதலியவற்றை ஊக்குவிக்காமல் இருப்பதே, தமிழகத்திற்கு நல்லது.என முடித்திருக்கிறார் 


முன்னாள் பிரதமர் P V நரசிம்மராவ் பிறந்த நூற்றாண்டு இது. இந்தியப்பிரதமர்களில் தகுதிக்கும் மீறி மிகவும் வியந்தோதப்பட்டவர் நேரு என்றால் தகுதிகள் நிறைய இருந்தும் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவர் நரசிம்ம ராவ் என்பது சுதந்திர இந்தியாவின் சீரழிந்த அரசியலின் சாபக்கேடுதான் இல்லையா?

தொங்கு நாடாளுமன்றம், ராஜீவ் காந்தி படுகொலை, பாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் போன்ற சிக்கல்களுக்கிடையில் பிரதமரானவர் பி.வி.நரசிம்ம ராவ். ஆயினும் அவர் பிரதமராக இருந்தபோது செய்த சாதனைகள் பல. அவற்றுள் முக்கியமானது, கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசமைப்புச் சட்டத்தில் இடம்தரும் வகையில் முறையே 73-வது, 74-வது அரசமைப்புச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்ததாகும். நரசிம்ம ராவ் பிரதமரானபோது கிராம வளர்ச்சித் துறையின் கேபினட் அமைச்சர் பொறுப்பையும் அவர் வகித்தார். அவருக்கு முன்னரும் பின்னரும் பிரதமர் ஒருவர் கிராம வளர்ச்சித் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்ததில்லை.

விடுதலை பெற்ற இந்தியாவினுடைய அரசமைப்பின் அடித்தளமாக, தன்னாட்சி பெற்ற வலுவான கிராமப் பஞ்சாயத்துகள் உருவாக்கப்பட வேண்டும் என காந்தி வலியுறுத்திவந்தார். அரசமைப்பு நிர்ணய சபையில் இது குறித்த ஒருங்கிணைந்த கருத்தை உருவாக்க முடியாததால், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் உரிய இடம் இல்லாமலே போயிற்று. ராஜீவ் காந்தி கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம் தரும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். மக்களவையில் நிறைவேறிய மசோதாவானது மாநிலங்களவையில் தோல்வியுற்றது. நரசிம்ம ராவ் பிரதமரானவுடன் கிராம வளர்ச்சித் துறையின் அதிகாரிகளை அழைத்து, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசமைப்பு அந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா ஒன்றைத் தயாரிக்கும்படி பணித்தார். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். மேலும், மாநிலச் சட்டமன்றங்களில் பெரும்பான்மையான சட்டமன்றங்கள் இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்துத் தீர்மானங்களை இயற்ற வேண்டும். நரசிம்ம ராவின் சிறுபான்மை அரசால் இதை எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்தது. அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் ஒருமித்த கருத்தை உருவாக்குவது ஒன்றே இதைச் செய்து முடிக்கும் ஒரே வழி என்பதில் பிரதமர் தெளிவாக இருந்தார் என்று ஆரம்பிக்கும் இந்தக்கட்டுரையை இந்து தமிழ்திசை தளத்தில் முழுமையாக வாசித்துப் பாருங்களேன்! தமிழ்நாட்டைச் சார்ந்த திமுக - அதிமுக பிரதிநிதிகள் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரங்கள் தருவதைத் தாங்கள் வரவேற்றபோதும் வலுவான மாவட்டப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதைக் கொள்கைரீதியாக எதிர்ப்பதாகக் கூறினார்கள் என்பது போகிறபோக்கில் சொல்லப் பட்டது தானா?   

தலைமைப்பண்புக்கு உதாரணமாக நரசிம்ம ராவ் என்கிற ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிற விதமாக  இந்தக் கட்டுரையை எழுதிய காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வ.ரகுபதி அவர்களுக்கு நன்றியுடன்! பிரசுரம் செய்த இந்து குழுமத்துக்கும் நன்றி.   

மீண்டும் சந்திப்போம். 

ஒரு புதன்கிழமை! நண்பர் ராஜசங்கர்! தோழர் வரதராஜன்!

ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதன் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை என்பதைப் பல இடங்களிலும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவுக்கு அவர் பேச்சின் தாக்கம் நீடிக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.


குனா மூனா அப்போது அதை செய்தார் பெரும் சாதனைகளை செய்தார் என சொல்லிக் கொண்டிருப்பர்களுக்கு சில பல கேள்விகள்.
சச்சின் டெண்டுல்கர் பெரும் ஆட்டக்காரர். கிரிக்கெட் உலகின் கடவுள் என்றே மதிக்கப்படுகிறார். அவரை இன்றைக்கு அழைத்து ஒரு போட்டிக்கு கேப்டனாகவ இருக்க சொன்னால் என்னாகும்?
இசைஞானி இளையராஜா ஆகச்சிறந்த இசை மேதை. இசையின் நெளிவு சுளிவுகளிலே பாட்டிசைத்து பாமரனுக்கு காட்டியவர். அவரை அழைத்து இன்றைக்கு ஒரு படத்தை இயக்க சொன்னால் எப்படியிருக்கும்?
இதே தான் குனா முனாவுக்கும்.
அவர் ஒரு காலத்திலே பெரும் அரசியல் விமர்சகராக இருந்திருக்கலாம் தான். ஒரு ஆட்சியை கவிழ்க்க தோற்கடிக்க வேலை செஞ்சிருக்கலாம் தான். அதையெல்லாம் யாரும் இல்லை என மறுக்கவில்லை.
ஆனால் அவர் ஏதேனும் தேர்தலிலெ நின்றாரா?
ஏதேனும் வேட்பாளரையோ அல்லது கட்சியையோ தேர்தலிலே நிற்கவைத்து ஜெயிக்க வைத்தாரா?
ஒரு எம் எல் ஏ பதவி அல்லது எம் பி பதவிக்கு யாரேனும் பொதுத்தேர்தலிலே நிக்கவைத்து ஜெயிக்கவைத்து காட்டினாரா?
தேர்தல் பணி செய்த குழுவையோ அல்லது ஒரு கட்சியையோ நடத்தினாரா?
பொதுமக்களிடம் இயங்கும் இயக்கம் ஏதேனும் ஒன்றை நடத்தினாரா? அதற்கு திட்டங்கள் வகுத்தாரா? அவை வென்றதா?
தமிழகத்திலே கட்சிகள் தேர்தல் பணி எப்படி செய்கிறது என தெரியுமா?
பணப்பட்டுவாடா எப்படி நடக்கிறது என புரியுமா?
இதுக்கு எல்லாம் பதில் இல்லை, செய்யவில்லை, நடக்கவில்லை என்பது தான்.
பெரும்பாலான பெண்கள் வீட்டிலே சமைப்பார்கள் தான். நன்றாக ருசியாகவே சமைப்பார்கள் தான். பல ஆண்களூம் வீட்டிலே சமைக்கலாம் தான்.
ஆனால் அவர்களால் ஒரு ஹோட்டல் நடத்தமுடியுமா? அல்லது ஒரு நூறு பேருக்கு சமைத்து போடமுடியுமா?
ஹோட்டலிலே பரோட்டா மாஸ்டர், வடை மாஸ்டர் போன்றோருக்கு நன்றாக வடை சுட தெரியும் பரோட்டா போட தெரியும் என்பதற்காக அவர்கள் ஹோட்டல் நடத்திவிட முடியுமா?
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் என வள்ளுவர் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
இது மகான் கவுண்டர் ஒரு அழகான உரை சொல்லியிருக்கிறார். அவனவனுக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்யுங்கடா என .
எனவே குனா மூனாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே என்ன வருமோ அதை மட்டும் செய்வது நல்லது.
சில முறை பலமுறை செய்து பார்த்தும் செய்ய முடியவில்லையா? விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்ப்பதும் நல்லது.

சில கூகிள் வலைக்குழுமங்களில் இயங்கிக் கொண்டு இருந்த நாட்களிலிருந்தே ராஜசங்கர் என்கிற இந்த இளைஞர் எனக்குப் பரிச்சயம் கொஞ்சம் விஷயம் தெரிந்து எழுதுகிறவர் என்று எனக்குப்படுவதால் இவர் பகிர்வுகள் சில இந்தப்பக்கங்களில் இடம்பெற்றதும் உண்டு ஆனால் மேலே சொன்ன விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை நமக்குப் பிடிக்கவில்லையா, ஒதுங்கிக் கொள்வதுஉத்தமம் தனக்குச் சரியெனப் படுவதை எழுத ராஜசிங்கருக்கு எப்படித் தடை விதிக்க முடியாதோ, அதுபோலவே குருமூர்த்தி என்ன செய்ய வேண்டும் என்பதையும் பிறர் அவருக்குச் சொல்லித் தரவும் முடியாது. திமுக தான் பிரதான எதிரி என்று உறுதியாக எதிர்க்கிறவர்கள் இப்படித் திசைமாறிப் பேசுவது, எழுதுவது நன்றாகவா இருக்கிறது?


நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் நடத்திவரும் தினசரி தளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி மீதான கீச்சு இது.


ஸ்ரீராம் நல்ல எண்ணத்தோடுதான் இதை எழுதியிருக்கிறார் என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமில்லை. சுத்தானந்த பாரதியார் படைத்த நூல்கள் மீண்டும் தமிழகத்தில் பவனிவர வேண்டும் என்ற எண்ணத்தோடு நானும் சில முயற்சிகளைச் செய்ததுண்டு கிடைத்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை சுத்தானந்த பாரதியார் என்ற குறியீட்டுச் சொல்லில் அதைக் கொஞ்சம் இந்தப் பக்கங்களிலேயே வெகுநாட்களுக்கு முன்பே எழுதி இருக்கிறேன். நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டு மீதேறியே நரகத்துக்கும் போகலாம் என்று தயிர் வடையைச் சாப்பிட்டுக்கொண்டே அந்தநாட்களில் தோழர் வரதராஜன் சொன்னது இப்போது சொல்வது போல காதில் கேட்கிறது

ஒரு புதன்கிழமை! A Wednesday

அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியின் நெருங்கிய நண்பர் அவர், ஆப்கன் எல்லை பக்கம் பிறந்து வளர்ந்தவர், அவரின் தேசாபிமானம் மிக சிலாகிப்பானது (எல்லை காந்தி என்றே அன்புடன் அழைக்கப்பட்டவர்)
யாருக்கும் குறையாத சுதந்திர போரட்ட வரலாறு அவருக்கும் உண்டு. பட்டேல் நேரு காந்தி காமராஜர் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு
காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது அது முடியாது என மல்லுகட்டியவர். தேசம் பிரிய கூடாது இஸ்லாமியர்கள் இந்தியர்களாக தங்களை முதலில் உணரவேண்டும் என உறுதியாக சொன்னவர்
அது முடியாத பொழுது "காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்."
எங்களை இந்தியாவோடு சேர்ந்த மேற்கு இந்தியா அமைத்து கொடுங்கள் என கதறினார், ஆம் அவர் இஸ்லாமியர் ஆனால் ஜின்னாவின் பாகிஸ்தானின் உள்நோக்கமும் அதில் இஸ்லாமியர் அமைதியாக வாழமுடியாது என்ற தீர்க்கதரிசன கவலையும் அவருக்கு இருந்தது
மூன்று துண்டாக உடைந்த இந்தியா 4 துண்டுகளாக உடையும் நிலை வந்தது.
நாங்கள் தனிநாடாக இயங்கமாட்டோம் மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா என இயங்குவோம் என கபார்கான் சொன்னதெல்லாம் யார் காதிலும் விழவில்லை
இவ்வளவிற்கும் அவர் கோரிக்கைக்கு பலுசிஸ்தான் பக்கம் பெரும் வரவேற்பு இருந்தது
ஜின்னா கோஷ்டி தவிர யாருக்கும் பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாவது பிடிக்க்கவே இல்லை என்பதுதான் அன்றைய நிலை
அந்த கபார்கானின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்திருந்தால் நிச்சயம் இப்பொழுது பாகிஸ்தானுக்கு அடுத்து ஆப்கனுக்கும் அதற்கும் இடையில் ஒரு குட்டி இந்தியா இருந்திருக்கும்
பாகிஸ்தான் இன்னும் சுருங்கி இருக்கும், யுத்தம் என வந்தால் பாக்குவெட்டிக்குள் சிக்கிய எலிபோல் பாகிஸ்தான் மாட்டியிருக்க்கும்
அவர் குரலை யாரும் கேட்கவில்லை
"இந்த ஓநாய்களிடம் எங்களை ஒப்படைக்காதீர்கள், இவர்கள் ஒருநாளும் உருப்படாத கொடூரமான கூட்டம்" என அவர் கதறியது பிரிட்டன் காதிலும் விழவில்லை
காந்தி அதுபற்றி கவலைகொண்டாலும் அத்தோடு அவர்காலமும் முடிந்தது, காந்தி நினைத்திருந்தால் இரு பாகிஸ்தான் உருவானது போல் இரு இந்தியாவினை உருவாக்கியிருக்கலாம்
நேரு அந்த நேரம் காத்த கள்ளமவுனமும் சந்தேகமே, படேலின் குரலும் எடுபடவில்லை
ஆனால் கபார்கான் தொடர்ந்து கேட்டுகொண்டேதான் இருந்தார், பிடிக்காத மருகளுடன் வாழ்வது போல அவர் முதிர்ந்த வயதுவரை அழுது கொண்டேதான் இருந்தார்
வங்கதேசத்தை உடைத்தபின் இந்திராவின் பார்வை பலுசிஸ்தான் மேல் விழுந்தது, தன் கடைசி நம்பிக்கையாக இந்திராவினை கண்டார் கான்
வங்கவெற்றிக்கு பின் இந்திராவின் கவனம் பாகிஸ்தானை இன்னும் உடைப்பதில் இருந்தபொழுதுதான் அரசியல் நெருக்கடி அவருக்கு ஆரம்பித்தது
இந்திரா எமர்ஜென்ஸி கொண்டுவந்ததில் இந்த உள்நோக்கமும் இருந்தது, பாகிஸ்தானை மேற்கொண்டு உடைத்து போட அவர் கடும் நோக்கம்கொண்டிருந்தார்
ஆனால் அது சர்வாதிகாரம் என சொல்லி உள்நாட்டு குழப்பம் இன்னும் பல குழப்பங்களுக்கு பின் அவர் ஆட்சிக்கு வர சில ஆண்டுகள் ஆனது
அவர் மறுபடி வந்தபொழுது பஞ்சாப் பற்றி எரிய அதிலே கவனம் செலுத்தி உயிரையும் விட்டார் இந்திரா
இதனால்தான் இந்திரா மறையும் பொழுது ஜியா உல்கக் எனும் ராணுவ பாகிஸ்தானிய ஆட்சியாளர் சொன்னான்
"அல்லா இருக்கின்றார், இந்திரா மறைந்தார்"
ஆம் இந்திரா ஆட்சிகாலத்தில் அஞ்சிய பாகிஸ்தான் கபார்கானை படாதபாடு படுத்தியது, அவர் இந்திய உளவாளி என 85 வயதிலும் சிறையில் வைத்து கொடுமைபடுத்தியது
இந்திரா கொஞ்சம் காலம் இருந்தால் நிச்சயம் கபார்கானின் நினைவு நிறைவேறியிருக்கும்
அவர் மறைந்த‌ பின் பலுசிஸ்தான் பக்கம் இந்திய பார்வை குறைந்ததென்றாலும் ரகசிய ஆதரவு உண்டு
1988ல் தன் 98ம் வயதுவரை வாழ்ந்த கபார்கான் தான் விரும்பிய இந்தியாவுடன் இணையாமலே மறைந்தார்
அவர் தன் உடலை பாகிஸ்தானில் புதைக்க விரும்பாமல் ஆப்கனில் தன் முன்னோர்கள் ஊரிலே புதைக்க சொன்னார்
ஆம் இந்தியா தங்களை கைவிட்ட சோகம் அவரை வெகுவாக பாதித்தது, அதனால் அவர் கல்லறை ஆப்கானிலே இன்றும் உண்டு
அந்த மனிதரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் செவிசாய்த்திருந்தால் இன்று இந்தியா பாகிஸ்தான் என்றொரு மிரட்டலை சந்தித்திருக்காது
மிக சிறிய நாடாக பாகிஸ்தான் சுருங்கி இந்தியா இடையே சிக்கியிருக்கும்
தியாகிகளின் கண்ணீரை உதாசீனபடுத்தினால் என்னாகும் என்பதற்கு கபார் கானின் கண்ணீரே சாட்சி
எனினும் இந்தியா 1988ல் அவர் இறந்தபின் அவருக்கு பாரத ரத்னா எனும் உயரிய விருது வழங்கபட்டது. இந்தியனாக பிறந்து அந்நியராக அந்த விருதை வாங்கியர் அவர்தான்
காஷ்மீர் பாகிஸ்தான் சிக்கல்கள் வரும்பொழுதெல்லாம் அம்மனிதரின் நினைவு வந்துவிட்டே செல்லும்
அந்த எல்லைகாந்தியின் கோரிக்கை நிறைவேறியிருந்தால் இந்த அளவு மோசமான நிலை வந்திருக்காது
வேண்டாத பிள்ளைகளிடம் சிக்கிவிட்ட பாசமிக்க தந்தையாக அவர் அழுது ஏங்கி செத்திருக்கவும் மாட்டார்
பாவம் அந்த மனிதன்.
அவனுக்கு செய்த துரோகமோ என்னமோ இந்தியா இன்னும் எல்லையில் ரத்தம் சிந்தி கொண்டேதான் இருக்கின்றது
காங்கிரசாலும் காந்தியாலும் நேருவாலும் கைவிடபட்ட அந்த தேசபற்றாளனுக்கு இன்று நினைவுநாள்
முஜிபுர் ரகுமானுக்கு உதவியது போல இந்தியா பலுசிஸ்தானியருக்கும் தனக்கும் உதவுவார் என எண்ணி ஏமாந்துபோன அந்த அப்பாவி மனிதனுக்கு நினைவு நாள்
நல்ல இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கலாமுக்கு முன்பே வாழ்ந்த இஸ்லாமியன் அந்த பெருமகன்
நேதாஜி போலவே வெள்ளையனுக்கு அஞ்சி காங்கிரஸ் தலைவர்களால் கைவிடபட்டு வதைத்து கொல்லபட்ட அந்த பெருமகனுக்கு வீரவணக்கம்
உங்களை காக்க முடியாத எங்களை, இந்நாட்டின் தேசபற்றாளனை கைவிட்ட எங்களை மன்னித்துவிடுங்கள், நாட்டுபற்றில்லா காங்கிரஸ் இந்நாட்டுக்கு எவ்வளவு ஆபத்தாக இருந்தது என்பதை நீங்களும் நேதாஜியும் எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்
கட்டினோர் விலக்கிய கல்லே மூலகல்லாய் அடையளமாய் நிற்கும் என்றார் இயேசுநாதார், அப்படி நீங்களும் நேதாஜியும் விலக்கி வைக்கபட்டு காங்கிரசின் துரோகத்தை, காந்தியின் உள்நோக்கத்தை, ஜின்னாவுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது எனும் நேருவின் சதிகளை எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்
ஒருநாள் கபார்கானின் நினைவுநாள் இந்தியாவில் பிரிவினைக்கு எதிரான ஒருமைபாட்டு நாளாக அறிவிக்கபடும், அது நடக்கும்
ஒருகாலமும் உம் புகழ் ஓயாது, ஒரு நன்னாளில் உங்கள் சிலையும் இத்தேசத்தில் நிறுவி உங்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தபடும், இது சத்தியம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
495
28 கருத்துக்கள்
168 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்