சண்டேன்னா மூணு! எல்லாமே அரசியல் தானையா!

ருவனுக்குக் கெட்ட நேரம் ஆரம்பித்தால் அது  என்னென்ன வகையில் எல்லாம் ஆட்டுவிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் ராகுல் காண்டியின் தலைமையில் இரண்டாம் முறையும் தேர்தல்களில் பரிதாபமாகத் தோற்று எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் காங்கிரஸ் கட்சியில் நடந்து கொண்டிருக்கிற தொடர் நிகழ்வுகளைப் பார்த்தாலே போதும். அந்தக் கொடுமையைக் காணச் சகிக்கவில்லையா? அசாதுதீன் ஒவைசி மாதிரிச் சில்லறைகள் கூடக் காங்கிரசை எப்படிக் குத்திக் கிழிக்கிறார்கள் என்று பார்த்தால் கூடப் போதும்!  


ராஜஸ்தான் முஸ்லிம்களை காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வரைக்  கண்டனம் செய்து சொல்கிறார். என்ன நடந்ததாம்?


பசுக்காவலர்களால் கொல்லப்பட்டார் என்று காங்கிரசும் கூட்டாளிகளும்  ஆட்சிக்கு வருமுன் தம்பட்டமடித்து, ஆட்சிக்கு வந்தபிறகு அந்த  பெஹ்லு கான் என்பவர் மாடுதிருடர் தான் என்று ராஜஸ்தான் காவல்துறை சார்ஜ்ஷீட் போட்டிருக்கிறது   அவர் மகன்களையும் மாடுதிருடிய குற்றத்திற்காக குற்றப் பத்திரிகையில் சேர்த்திருக்கிறார்கள் என்பதில் தான் ஒவைசி இப்படிக் கொந்தளித்திருக்கிறார். 


இறந்தவர் மீதும்கூட  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிற புத்திசாலித்தனம் காங்கிரஸ்காரனுக்கு மட்டும்தான் இருக்கும் போல! அசோக் கெலாட் இறந்தவர் மீது குற்றப்பத்திரிகையா, இல்லையே என்று சமாளித்தது எடுபடவில்லை என்பது இந்தக் கார்டூனை விடப் பெரிய சோகம்! ஒவைசி வேறு இடையே  புகுந்து குத்துகிறார்! 

நுஸ்ரத் ஜஹான் ஜெயின்! 29 வயதே ஆகும் இந்த இளம்பெண் மேற்கு வங்கத்தில் ஒரு சினிமா நட்சத்திரம். அதற்குமுன்னால் மாடலிங் செய்திருக்கிறார்.  இன்றைக்கு பஷீர்ஹாட் தொகுதியிலிருந்து  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல் முறை எம்பியும் கூட! நிகில் ஜெயின் என்கிற ஹிந்து இளைஞரைத்  திருமணம் செய்து கொண்டு சற்றுத்தாமதமாக எம்பியாகப் பதவியேற்றுக் கொண்டவர். அவரைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள்!      


இந்தப் பதினாறு நிமிட வீடியோவைப் பார்க்கப் பொறுமை இருக்கிறவர்கள் பார்த்துவிட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்! தனிப்பதிவாகவே விவாதிக்கலாம்!


து பொருளோ அதைப்பேசுவோம்! இந்தப்பக்கங்களில் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய செய்திகளாகக் கொஞ்சம் பார்த்துக் கொண்டுவருகிறோம் . அமெரிக்காவுடன் ஆன இந்திய உறவுகள் குறித்து கரண் தாப்பர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த நவ் தேஜ் சர்னா, ஹிந்து நாளிதழின் வர்கீஸ் ஜார்ஜ் இருவருடன் விவாதிக்கிறார். 27 நிமிடங்கள் தான்! பார்க்க நேரமிருப்பவர்கள் பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.
    

     

இட்லி வடை பொங்கல்! அரசியல் இன்று! #32

தெலுங்கு சினிமாப்படங்களைப் பார்த்திருந்தீர்களே ஆனால் ஒரே மாதிரியான டெம்பிளேட், வில்லனால் மிகவும் கொடுமைக்கு ஆளாகிற கதாநாயகன் தனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் போது வில்லனைப்  பலமடங்கு கொடுமைக்கு ஆளாக்கிப் பழிதீர்ப்பான், இப்படி நிறையப்படங்கள்!  ஜனங்களும் ஆரவாரித்துக் கை தட்டி ஆர்ப்பரிப்பார்கள். எதுசரி,என்ன நியாயம் என்றெல்லாம் யாரும் லாஜிக், ரீசனிங்  பார்ப்பதில்லை.இப்போது ஆந்திர அரசியலில் சந்திரபாபு நாயுடு தான் முன்னால் விதைத்தது எல்லாவற்றிற்கும் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார்! அப்படியானால் ஜெகன் கதாநாயகன், நாயுடு வில்லனா? இப்போதுள்ள அரசியல் வாதிகள் எவருமே நாயகன் இல்லை! எல்லோருமே ஜனங்களைப்பொறுத்த வரை வில்லன்கள் தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?

   
நேற்றைக்கு சதீஷ் ஆசார்யா வரைந்திருந்த இந்தக் கார்டூனைப் பகிர்ந்து கொண்டபோது கூட ஒருசில வார்த்தைகள் மட்டுமே என்னுடைய கருத்தாகச் சொல்லியிருந்தேன். 


ஆனால் இன்று காலை செய்திகளைப் பார்த்தபிறகுதான் ஜெகன் மோகன் ரெட்டி, எப்படிச் சொல்லிச் சொல்லி சந்திரபாபு நாயுடுவை வரிசைகட்டி அடித்து வருகிறார் என்பது இன்னும் தெளிவாகப் புரிந்தது. இங்கே நாயுடுவை வரிசைகட்டி அடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு 9 மணிநேர இலவச மின்சாரம் போன்ற அறிவிப்புக்களையும் வெளியிட்டு ஜனங்களுடைய கவனமோ ஆதரவோ நாயுடு பக்கம் திரும்பிவிடாமல் வெகு கவனமாக பழி தீர்த்துக் கொண்டு வருகிறார்  இப்போது கேள்வி இங்கே யார் சூப்பர் வில்லன்? சந்திரபாபு நாயுடுவா? ஜெகன் மோகன் ரெட்டியா? எது உங்கள் பதிலானாலும், மற்றவர் கதாநாயகன் மட்டும் இல்லை என்பதை  மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! 


  • More buildings to be demolished in Andhra? Govt Notice pasted outside Naidu’s residence to vacate his house. AP Govt says it violates environmental norms as it is built less than 100 metres from River Krishna. Following norms or Vindictive politics?
    10:13 AM · Jun 28, 2019 · Twitter for iPhone


    இங்கே தமிழ் சேனல்கள் ஊடகங்கள் தம்பட்டமடிக்கிற மாதிரி திமுக எம்பிக்கள் அல்ல,  இந்த நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் அனேகமாக எல்லாத் தரப்பினர் கவனத்தையும் ஈர்த்தது காங்கிரசோ அதன் கூட்டாளிகளோ கூட அல்ல!  முதல் முறை எம்பியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய மஹுவா மொய்த்ராவின் கன்னிப் பேச்சு மட்டுமே  கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத்தயக்கமும் இல்லை. அதேநேரம் அவர் பேசியது முழுக்கச் சரி என்று ஒப்புக்கொள்வதாகவும் அர்த்தமில்லை. பாசிசம் பாசிஸ்ட் என்று எதிரிகள் மீது முத்திரை குத்துவது இடதுசாரிகளின் பழைய பாணி! NDTVயில்     அவர் பேசியதன் மீதான ஒரு  சிறு விவாதம், கொஞ்சம் பாருங்களேன்! நாடாளுமன்றத்தில் அவர் பேசியதை முழுதும் கேட்க. 

    நம்மூர் சேனல்களில் த,தமிழ்ச்செல்வன் திமுகவில் ஐக்கியம் ஆனதைப் பற்றி மட்டும்தான்  கவலைப்படுவார்கள்! பன்னீர் தரப்பு அதிமுகவுக்குள் நுழைய தடைவிதித்ததால் தான் அரசியலில் போக்கத்தவர்கள் அடைக்கலமாகும் கட்சியான திமுகவில் வந்து சேர்ந்தார் என்பதை பற்றிப்பேசவே மாட்டார்கள். இங்கே வித்தியாசமாக கராத்தே தியாகராஜன் பேசுவதை ஒளிபரப்பு செய்வது செய்திப்பஞ்சத்தினால்தான் என்று அவர்கள் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!

      
    மீண்டும் சந்திப்போம்.

    கரண் தாப்பர்! சுமந்த் ராமன்! திமுக காங்கிரஸ் உரசல்!

    கரண் தாப்பர்! இந்த மனிதரை இங்கே பிரதான ஊடகங்கள் வேண்டாமென நிராகரித்திருக்கலாம். ஆனால் மாற்றுக் கருத்தைத் தேடியலைகிற வழக்கமுள்ள எனக்கு இவரை நிராகரிக்க வேண்டுமென்று தோன்றியதே இல்லை! ஏன் என்றால், தன்னுடைய நேர்காணல்களில் ஹோம் ஒர்க் சரியாகச் செய்து, சரியான கேள்விகளைக் கேட்பவர் என்பது தான்! இங்கே தமிழ் சேனல்களில் ஹோம் ஒர்க்கை சரியாக செய்துவிட்டு பேட்டி காண்கிறவர்கள் அனேகமாக இல்லை என்பது ஒரு தொடரும் அவலம்! 


    நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து புதிய அரசு அமைந்து ஒரு மாதகாலத்துக்கும் மேலாகியும் கூட  இங்கே எல்லா எதிர்க்கட்சிகளும் இன்னமும் அந்தத் தோல்வியில் இருந்து மீண்டெழ முடியவில்லை; குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி, தன் தோல்விக்கான காரணங்களை இன்னமும் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறது. ராகுல் காண்டி தோல்விக்குப் பொறுப்பு ஏற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதேபோல மூத்ததலைவர்கள் / பழம்பெருச்சாளிகளும்  செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.  கழுத்தைப் பிடித்துத் வெளியே தள்ளினாலொழிய வெளியேற்ற முடியாத ருசிகண்ட பெருச்சாளிகள் பொறுப்பேற்பார்களா? இங்கே கரண் தாப்பர், ராஜ்யசபா காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவர் ஆனந்த் ஷர்மாவிடம் தொடர்ந்து சில சங்கடமான கேள்விகளைக் கேட்கிறார். ஆனந்த் ஷர்மாவும் எல்லாக்கேள்விகளுக்கும் மழுப்பாமல், சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் சுற்றி வளைத்துப் பதில் சொல்கிறார். நடப்பு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா? கொஞ்சம் இந்த நேர்காணலைக் கவனமாகப் பாருங்கள்!    

    காங்கிரஸ்கரனுக்கு அரசியலில் நடப்புநிலவரம் புரியாமல் ஒன்றுமில்லை, வேண்டுமென்றே பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கிறார்கள். ஒருமுறை தங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டால் ஜனங்கள் தங்களுக்கு காலத்துக்கும் அடிமை என்று நினைக்கிற மிதப்பு, திமிர்தான் புரிந்ததைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிற அடுத்த தவறையும் செய்ய வைக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் கீழே 

       
    கர்நாடகாவில் குமாரசாமி மட்டுமல்ல, காங்கிரசின் சித்தராமையாவுமே கூட மோடிக்குத்தானே ஓட்டுப்போட்டீங்க, மோடிகிட்டே கேட்கவேண்டியதுதானே என்று ஜனங்களிடம் எரிந்து  விழுவதைக்கூட  நியாயப்படுத்தி, ஏதோ ஒரு வேதனையில் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லவும் ஒரு சுமந்த் சி ராமன் இருக்கிறார், பாருங்கள்!  

    கூடவே ஒரு உள்ளூர் அக்கப்போரைப் பார்க்காமல் இருந்து விட முடியுமா?


    இங்கே கூட காங்கிரஸ்தான் வில்லனாக!  கொஞ்சம் வேடிக்கை பாருங்கள்! ப. சிதம்பரம் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். விஜயதாரணி பேசினாங்களே அதுக்கு நடவடிக்கை இல்லை, நான் பேசினதுக்கு சஸ்பென்ஷனா என்று கேட்டிருக்கிறார் கராத்தே. தமிழக காங்கிரசுக்கு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட மட்டுமே தெரியும் என்பதற்குமேல் இவர்களை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை.      

    மீண்டும் சந்திப்போம்.
                      

    எது பொருளோ அதைப் பேசுவோம்! #அரசியல்

    கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? இப்படி வழக்குச் சொல் ஒன்றைக் கேட்டிருப்போம்! ஆனால் அரசியல்வாதிகளுக்கு அவையெல்லாம் கேட்காது  போல! நாடாளுமன்றத்தேர்தலில் பிஜேபி பயமுறுத்துகிற அளவுக்கு மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளில் வெற்றிபெற்ற பிறகு, 2021 சட்டசபைத் தேர்தல் பயம் மம்தா பானெர்ஜிக்கு வந்துவிட்டதையும், மே.வங்க  அசெம்பிளியிலேயே   பிஜேபியைத் தோற்கடிப்பதற்காக, இடதுசாரிகள், காங்கிரசுடன் சேர்ந்து செயல்படலாம் என்று சொன்னதையும் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்!  


    இங்கே  கொஞ்சம் மம்தா செய்தது, செய்யத்தவறியது எல்லாம் பேசுகிறார்கள். ஆனால் மம்தா பானெர்ஜியின் அன்பு, அழைப்பு, எப்படிப்பட்டது என்பதை அனுபவபூர்வமாக அறிந்து வைத்திருக்கும் காங்கிரசும் இடதுசாரிகளும் இதைப்பற்றி என்ன சொல்கிறார்களாம்? மம்தா பானெர்ஜியின் புனர்வாழ்வுக்காக உழைக்கப்போவதில்லை என்று இடதுசாரிகள் புறந்தள்ளிவிட்டார்கள். வழக்கம் போல பிஜேபி, TMC இரண்டையும் ஒரேதட்டில் கூட்டாளிகளாகப் பார்க்கிற தவறு வெளிப்பட்டிருக்கிறது. காங்கிரசும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை! அவர்களுக்கு ராகுல் காண்டி குடைச்சலே பெரிதாகத் தெரிவதில், yes boss  yes boss என்று தாங்களும் தோல்விக்கு காரணமே என்று பஜனை செய்ய ஆரம்பம் செய்து வைத்திருப்பவர் மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்! 


    இங்கே கரண் தாப்பர், ஹிந்துஸ்தான் டைம்சின் வினோத் ஷர்மா, ஹிந்துவின்  முன்னாள் ஆசிரியர் முகுந்த் பத்மநாபன், The Wire தளத்தின் சித்தார்த்  பாட்டியா, பத்தி எழுத்தாளர் நிலாஞ்சன்  முகோபாத்யாய், CSDS இயக்குனர் சஞ்சய் குமார் இந்த ஐவரோடு எதிர்க்கட்சிகள் சரிகிறதா என்ற கேள்வியை, பிஜேபியை எதிர்க்க ஆளே இல்லையா என்கிற ஆதங்கத்தோடு விவாதிக்கிறார். கவனித்துக் கேட்க வேண்டிய விவாதம்! 

        
    இந்தப்படம் என்ன பேசுகிறதாம்? ராஜ்யசபா எம்பியாகத் தொடர முடியுமா என்றே தெரியாத நிலையில் மன்மோகன் சிங்! 

    மீண்டும் சந்திப்போம்.
               

    திமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்! BJPயை நம்பாமல் கெடுவதும்!

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியவிதமும் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு அளித்த பதிலும் கவனித்துப் பார்க்கவேண்டிய விஷயமாக இன்றைய அரசியல் இருப்பதை நண்பர்கள் கவனித்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.


    இந்த 24 நிமிட விவாதத்தில் விசிகவின்  வன்னியரசு பேசியதில்  ஏற்றுக்கொள்கிற மாதிரி ஏதாவது இருந்ததா? மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத், மக்களவையில் அதிர் ரஞ்சன் சௌதுரி பேசியது இவைகளை எப்படி எடுத்துக் கொள்வது? இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிற மாதிரி அமெரிக்க அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நெறியாளர் கார்த்திகேயன் கேள்வி கேட்டது எந்தவகையில் பொருத்தமானது? இந்த மாதிரிக் குப்பையைப் பார்ப்பானேன்? கருத்து சொல்வானேன், என்கிறீர்களா?

    இங்கே விசிக மாதிரியான கட்சிகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருவது மாதிரி  தலித்துகள், சிறுபான்மையினர் ஒருவித அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? உண்மை நிலவரம் வேறுவிதமாக அல்லவா இருக்கிறது! 


    ஜூலை 18 அன்று தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதில் திமுக அதிமுக இரண்டுக்குமே தலா 3 இடங்கள் கிடைக்கலாம் என்ற நிலை. வைகோ, அன்புமணி இருவருக்கும் ராஜ்யசபா எம்பி சீட் கிடைத்துவிடலாம். நெட் ரிசல்ட் என்னவாக இருக்குமாம்?ராஜ்யசபாவில் திமுகவுக்கு 5 அதிமுகவுக்கு 10 என்ற அளவில் இருப்பார்கள் என்பது மட்டும்தான்! இது ஒரு புள்ளிவிவரமே தவிர, இவர்கள் என்னமோ தமிழ்நாட்டுக்காக வெட்டி முறித்து விடுவார்கள் என்பதெல்லாம் இல்லை!                                                                                                            
                                                                 
    திமுக என்ற கட்சியின் பட்டத்து இளவரசர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எங்கே எந்த நேரத்தில் விவாதம் மக்கள் முன் அழைத்தாலும் காத்திருக்கிறேன். 2006-2011 வரை மட்டும் திருவாளர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த அயோக்கியத்தனத்தினை மாத விவரங்களுடன் 100% அசைக்க முடியாத ஆதாரங்களுடன் பேச நான் தயார்.
    எனவே உதய நிதி அடிப்பொடிகள் , சுயமரியாதை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு குடும்பத்தின் அடிமை உடன் பிறப்புகள் எவருக்கும் நான் தனித் தனியே பதில் கொடுக்க விரும்பவில்லை. நான் இப்போதும் கூறுகிறேன் லாட்டரி மார்டீன் -விவகாரத்தை எடுத்துப் பேசினால் மொத்த சென்னையும் காறித் துப்பும் அளவிற்கு நான் ஆதாரங்களை மக்கள் முன் வைத்து விவாதம் செய்யத் தயார்.
    வேண்டும் என்றால் உங்கள் அடிமை ஊடகங்களையும் அழைத்து வாருங்கள் ஒரு பொது மேடையில் சந்திக்கலாம்.
    எனவே இந்த அவனே இவனே என்ற பேச்செல்லாம் வேண்டாம். உங்கள் கம்பெனி ஓனர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் சொல்லுங்கள் எங்கே எப்போது வேண்டுமானாலும் பொது மக்கள் மத்தியில் விவாதம் நடத்த மாரிதாஸ் தயார்.
    20 , 30 மீம்ஸ் தயாரிக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு - 10 , 20 பக்கங்களை மறைமுகமாக நடத்திக் கொண்டு - அவர்களை வைத்து அவதூறாகப் பதிவுகள் போடுவதெல்லாம் சரி உங்கள் சந்தோசத்திற்குச் செய்து கொள்ளுங்கள் அதற்கு முன் வாருங்கள் உதய நிதி ஸ்டாலின் அவர்களே. இல்லை திமுக அதிகாரப் பூர்வமாக எந்த நபரை விவாதம் செய்ய முன் வைத்தாலும் சரி நான் தயார். உதய நிதிக்குப் பதிலாக அவர் என்னோடு விவாதம் செய்ய வரவேண்டும்.
    நான் தமிழ் அது இது என்று எல்லாம் பேச விரும்பவில்லை நிர்வாகம் என்ன செய்தார்கள் என்ன கொள்ளை அடித்தார்கள் என்று பேச விரும்புகிறேன். சரியா? எனவே வரும்போது உங்கள் பினாமி விசயங்களையும் எடுத்து வைத்து கொண்டு விவாதம் வரவும்.
    விவாதத்தின் தலைப்பு இப்படி வைத்து கொள்ளலாம்
    1.காமராஜர் படிக்க வைத்தார் - கருணாநிதி குடிக்க வைத்தார்.
    தலைப்பு பிடிக்கவில்லை என்றால்
    2.ஏரி திருடன் எங்கே?
    இந்த தலைப்பு இலக்கியம் போல இருக்கா. வேண்டுமானால் உங்கள் உலக வியாக்கிதம் பேசும் கம்யுனிஸ்ட் கட்சியினரை வைத்து கொள்வோம் நடுவராக. வெக்கம் கெட்ட கம்யுனிஸ்ட் கட்டாயம் முட்டுகொடுக்க வருவர். குழப்பமாக இருந்தால் "நீதாண்டா லூசு" புகழ் அருணன் அவர்களை அழைத்து கொண்டு வரவும்.
    இல்லை என்றால் கடைசி வரை மீம்ஸ் போட்டுகிட்டே இருங்க.
    -மாரிதாஸ்                                                            

    என்ன இது!? வாரிசுக்கு வந்த சோதனை! முடிஞ்சா விவாதத்துக்கு வா! இல்லீன்னா கடேசி வரைக்கும் (200 ரூபாய் கொடுத்து) மீம்ஸ் போட்டுக்கினே இருங்கறாரே மாரிதாஸ்!  
                                                               
     
    இங்கே இன்னொரு வாரிசு! அவருக்கென்ன? பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்! நம்பிக்கெட்டது, இன்னும் கெடுவது சோனியாG காங்கிரஸ் தான்! அதனால் தானோ என்னவோ மறைமுகமாக குலாம் நபி ஆசாத் கூட எங்களுக்கு புது இந்தியாவெல்லாம் வேணாம் பழைய பெட்ரோமேக்ஸ் லைட்டே போதும்னு சொன்னாரோ?

    திமுக காங்கிரஸ் கட்சிகளை நம்பிக்கெட்டதும்! BJPயை நம்பாமல் கெடுவதும்! எது உங்கள் சாய்ஸ்? 

    மீண்டும் சந்திப்போம்.
            

    ஒரு புதன் கிழமை! அரசியல் இன்று எங்கே போகிறது?

    நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி காங்கிரசிலும் வெற்றி கொண்டான்கள் உண்டு என்பதை நிரூபித்தார். நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளித்து நரேந்திர மோடி பதிலடி கொடுத்துப் பேசியதில், மிகுந்த அரசியல் முதிர்ச்சியும், எதிர்ப்பைக் கையாளுவதில் உறுதியும் வெளிப்பட்டதென்று தான் சொல்ல வேண்டும்!   


    முன்னாள் இடதுசாரி, தொழிற்சங்கவாதி என்றும் சொல்லிக் கொண்டு மோடியையும் ஆதரிப்பதா? இப்படி நேரடியாக என்னிடம்  வந்து கேட்டவர் எவருமில்லை! ஆனாலும் அதைத் தெளிவு படுத்தவேண்டியது என்னுடைய கடமை தான்!

    எதிர்க்கட்சிகள் இன்னும் பழைய மிதப்பிலேயே பொறுப்பற்ற விதத்தில் அரசியல் செய்யும் போது, அதைத் திறமையாக சமாளித்து, அவர்களுடைய யோக்கியதை  என்னவென்பதை அம்பலப் படுத்துகிற மோடியின்  சாமர்த்தியத்தைப் பாராட்டாமல் எப்படி இருப்பது? பிரதமர் பதிலுரையைக் கேட்பதற்காக ராகுல் காண்டியே, மதியம் வரை  மக்களவைக்கு வராமலிருந்தவர் மாலை வந்து சேர்ந்தார் என்றால் என்ன சொல்ல? பிரதமர் பதிலுரை இங்கே    


    கெட்டபின்பு ஞானம் வருகிறதோ இல்லையோ, 2021 இல் வர இருக்கும் சட்டசபைத்தேர்தல் மம்தா பானெர்ஜியை ரொம்பவுமே யோசிக்க வைத்திருக்கிறது. பிரசார உத்தி வியாபாரி பிரசாந்த் கிஷோர் யோசனையா என்று தெரியவில்லை. சென்ற செவ்வாய்க்கிழமை மம்தா ஆவேசமாக கட்சிக்காரர்கள் யாராவது அரசுத்திட்ட உதவிகள் பெறுகிறவர்களிடம் cut money லவட்டியிருந்தால் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சொல்லியிருந்தார். ஜனங்களும் TMC ஆசாமிகளை கெரோ செய்து எங்கள் பணத்தைத் திருப்பிக்கொடு என்று போராட ஆரம்பித்ததில், ஒரே ஒரு ஆசாமி மட்டும் சுமார் 2.27 லட்சரூபாயை MGNREGA பயனாளிகளுக்கு தலா 1691 வீதம் தான் பெற்ற தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டாராம்! அதிசயம் தான்! ஆனால் சாரதா மோசடியில் ஏமாந்த ஜனங்களுக்கு சம்பந்தப்பட்ட TMC  பெரும்புள்ளிகள் எப்போது திருப்பிக் கொடுப்பார்களாம்? நடிகையும்  திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான சதாப்தி  ராய் வெளிப்படையாகவே தீதியின் இந்த அறிவிப்பு பெரும் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்று சொல்லிவிட்டார்.

    எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி மம்தா பானெர்ஜி இன்று புதன்கிழமை மார்க்சிஸ்டுகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஒன்று சேர்ந்து பிஜேபியைத் தோற்கடிக்க முன்வரவேண்டும் என்று பேசியிருப்பதுதான்! "The people of the state are witnessing in Bhatpara what happens if you vote for the BJP. I feel all of us [TMC, Congress and CPI(M)] should come together in the fight against the BJP. It doesn't mean we have to join hands politically, but on common issues at the national level, we can come together,"   என்று சட்டசபையிலேயே இன்று பேசியிருக்கிறார்.

    அர்ஜுன் சிங் என்பவர் TMC யிலிருந்து பிஜேபிக்குத் தாவி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரக்பூர் தொகுதியின் எம்பியாகவும் ஆகிவிட்டார். திரிணாமுல் கோட்டை பறிபோனதில் தேர்தலுக்குப் பிறகும் கூட பிஜேபி திரிணாமுல் இடையே வன்முறைத் தாக்குதல்கள் தொடருகின்றன என்பதை வைத்து மம்தா இடதுசாரிகள், காங்கிரசுக்கு அழைப்பு விடுத்திருப்பது செல்லுபடியாகுமா? இடதுசாரிகள் கணக்கும் காங்கிரஸ் கணக்கும் வேறு வேறு என்பது தெரிந்த விஷயம்தான்!  

          
    சிறுபான்மைக்காவலர்களாக வேஷம்போட காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தான் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருக்கிறது போல! செய்திக்கான லிங்க்         இதுவும் இன்றைய செய்திதான்!

    மீண்டும் சந்திப்போம்.

    எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா? யாரிடம் கேட்பது?


    எமெர்ஜென்சி! அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா? இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி தர்மம் என்ற பெயருடன் கூட்டணியாகச் சேர்ந்திருக்கிற திமுகவின் இசுடாலினிடமும் கேட்டுப் பாருங்களேன்! மம்தாவுக்கு 2019 நாடாளுமன்றத்தேர்தலில் வாங்கிய அடி, 2021 சட்டமன்றத் தேர்தலில் இன்னமும் பலமாக விழுமோ என்ற பயம், கவலையில் கடந்த 5 ஆண்டுகளில் சூப்பர் எமெர்ஜென்சி இருந்ததே என்று வாய் கூசாமல் உளறி இருக்கிறார்! 

    1974 இல் பீஹார் இயக்கம் என்று இந்திரா காண்டிக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய ஜனநாயகப் போராட்டத்திற்கு  ஜெயப்ரகாஷ் நாராயணனை தலைமை தாங்க அழைத்துவந்த லல்லு பிரசாத் யாதவ் ஊழல் செய்ததற்காக இன்றைக்குச் சிறையில் இருக்கிறார். அவரைக் கேட்டால்  மம்தா பானெர்ஜியை விட அதிகம் கூவுவார். ஆக, ஆக என்றே வாய்க்கு வாய் சொல்லி  ஆரம்பிக்கிற இசுடாலின் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறார்? 

    2011 இல் எமெர்ஜென்சி பிறப்பிக்கப்பட்ட அந்த இருண்ட நாட்களைப் பற்றி எழுதிய பதிவுக்கு ஒரே ஒரு பின்னூட்டம் கேள்வியாக வந்தது.

    1. நேரு பற்றிய ஒரு புத்தகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். ரஷ்ய எழுத்தாளர் எழுதிய புத்தகம் இது. நீங்க என்ன வேண்டுமானாலும் நேரு, இந்திரா காந்தியை குறை சொன்னாலும் இப்போதுள்ள காங்கிரஸ் மக்கள் ஒப்பிடும் போது இவரை குறை சொல்ல என்னால் முடியவில்லை.
      ReplyDelete
    2. *இதுக்கு அதுவே தேவலைங்கிறது மாதிரி* இப்போதுள்ள காங்கிரஸ்காரனுக்கு நேரு எவ்வளவோ தேவலை என்று சொல்கிறீர்களா ஜோதிஜி? நேருவை நேரு காலகட்டத்தோடு தான் ஒப்பிட வேண்டும்.தவிர ரஷ்ய எழுத்தாளர்கள் பார்வையைவைத்து, நேரு, இந்திரா பற்றி எந்த உண்மையையுமே அறிந்து கொள்ள முடியாது.

      ஒருவகையில் காங்கிரஸ் நேரு அபிமானிதான்! என்றாலும் ராமச்சந்திர குகாவின் இந்தியா: காந்திக்குப் பின் புத்தகத்தை, ஆங்கில மூலத்திலேயே படித்துப் பாருங்களேன்!

      



    இன்றைக்கு ஜெயலலிதாவைக் கேலி செய்கிறார்களே! அன்றைக்கு எந்தக் காங்கிரஸ்காரனுக்காவது, இந்திரா எதிரே உட்கார தைரியம் இருந்ததா? 
     
    INDIRA Gandhi suspended constitutional guarantees and imposed Emergency at midnight on June 25, 1975. This will be discussed yet again on Saturday in seminar halls across India. However, the equally important international context of the landmark event is not viewed as seriously.

    Seen from the perspective of India’s internal dynamics, the day marks the 36th year since she put many of her opponents in jail. To heighten the irony or to perhaps flaunt feigned even handedness, she also incarcerated members of smuggling and assorted underworld syndicates.

    Some newspapers held their ground for a while by leaving yawning white spaces instead of accepting censored news. But by large the media “crawled when they were asked to bend”. Mrs Gandhi’s political targets included ideologues of the Hindu, Sikh, Muslim right as well as Gandhian socialists. Some communists were jailed but several others supported her short-lived and miscalculated authoritarianism.

    2011 இல் இப்படி சொல்லியிருப்பது டான் என்ற பாகிஸ்தான் நாளிதழின் டில்லி நிருபர்! ஜாவேத் நக்வி என்று பெயர்.

    இந்திரா காண்டி 1975 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவு,நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தி,அரசியல் சாசனம் வழங்கியிருந்த அடிப்படை உரிமைகளை ரத்து செய்தார். அவரை எதிர்த்தவர்கள் மட்டுமல்ல,எதிர்ப்பவர்கள் என்று கைகாட்டப் பட்டவர்களும் சேர்ந்தே நள்ளிரவுக் கைது நடவடிக்கையில் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
      
    வேடிக்கை என்ன என்றால்இங்கே மதுரையில் தீப்பொறி ஆறுமுகம் என்று ஒரு ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர்! திமுகவில் இருந்து ஸ்தாபன காங்கிரசுக்கு வந்தகொச்சையாகஆபாசமாக அரசியல் மேடைகளில் பேசுகிறவர். திராவிட இயக்கங்களின் பரிணாம வளர்ச்சியே வெற்றி கொண்டான்தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆபாசப் பேச்சாளர்களைச் சார்ந்தே இன்றைக்கும் இருந்து வருகிறது.(நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலு என்று ஒருத்தர்இந்த மாதிரி வாயைக் கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கொண்ட கதையாகிப் போனாரேநினைவுக்கு வருகிறதா?)

    மதுரையைச் சேர்ந்த ஆர் வி சாமிநாதன் என்று ஒரு மத்திய இணை அமைச்சர்! அவரிடம் எவரோ போட்டுக் கொடுத்தார்கள்ஐயாஇந்த மாதிரி ஒருத்தர் அன்னை இந்திராவை ஆபாசமாகப் பேசுகிறார்....என்று! அவ்வளவுதான்! உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்டதாகச் சொல்லப்பட்ட  மிசாவின் (Maintenance of Internal Security Act)  கீழ் தீப்பொறி ஆறுமுகத்தைப் பிடித்து உள்ளே போட்டார்கள். தீப்பொறி ஆறுமுகத்தோடு கூடவேதிமுகவில் இன்னொருத்தர்! பாண்டியன் என்கிற தெருச் சண்டியர்!அவரையும் மிசாவில் பிடித்துப் போட்டார்கள்வெளியே வந்ததும் அவர் "மிசா" பாண்டியனாகிப் போனார்! 

    ஆகமிசாஎஸ்மாஅது  இது என்று ஏகதடபுடல்களுடன் தம்பட்டம்டிக்கப்பட்ட சட்டங்கள் கேணத்தனமாகத்தான் பயன் படுத்தப் பட்டன.கேவலம் தீப்பொறி ஆறுமுகம் மாதிரி ஆசாமிகளால் உள்நாட்டுப் பாதுகாப்பு குலைந்துவிடும் பிடித்துப் போடு உள்ளே என்று ஒரு அரசு செயல்படுமானால்,அது ஒன்று கோழையிலும் கேடுகெட்ட கோழைத்தனம் உள்ளதாக இருக்கவேண்டும்! 

    அல்லது கேணைகள்கிறுக்கு மாய்க்கான்களால் நடத்தப் படுவதாக இருக்க வேண்டும்! எமெர்ஜென்சியில் இரண்டு விதமாகவும் இருந்தது என்பதுதான் வரலாறு!

    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்! நேரு குடும்பம் பல்கலைக் கழகமல்ல! பலவிதக் குழப்பம்! கலப்படம்!
     
    திமுக என்னமோ மிசாவை எதிர்த்துப் பெரிதாகக் கிளர்ச்சி நடத்தியதாகக் கதை சொல்லுவார்கள். சென்னையில் முக ஸ்டாலின்சிட்டி பாபு இருவர் மீதும்அடக்குமுறை மிகக் கடுமையாக இருந்தது. மற்றப்படி எமெர்ஜென்சியின் முழுவீச்சையும்வெறித் தனமான ஆட்டத்தையும் தமிழ்நாடு முழுமையாகத்தெரிந்து கொள்கிற மாதிரி பெரிதாக இல்லை. பத்திரிகைகளின் வாய்க்குப் பெரிதாகப் பூட்டுப் போடப்பட்டது. தணிக்கை அதிகாரிகள்அரசையும் இந்திராவையும் எவராவது விமரிசிக்கத் துணிகிறார்களா என்று கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டுதணிக்கை செய்தார்கள். 

    அந்தத் தணிக்கையையும் தனக்கே உரித்தான துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரே பத்திரிக்கை சோ நடத்திய துக்ளக் ஒன்று தான். அடுத்துதிரு ராம்நாத் கோயங்காவின் வழிநடத்தலில் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் பத்திரிகைக் குழுமம் எமெர்ஜென்சியை எதிர்த்துக் குரல் கொடுத்தது. குல்தீப் நய்யார் சொல்கிறபடி,கொஞ்சம் வளைந்துகொடு என்று இந்திரா சொன்னவுடன்ஜனநாயகத்தின்நான்காவது தூண் என்று தங்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும்பத்திரிகைகள்,மண்டியிட்டுத் தவழ ஆரம்பித்த விநோதத்தை என்னவென்று சொல்வது?

    நீதித்துறைக்கு மட்டும் முதுகெலும்பு  இருந்ததாஇந்திராவின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள எந்த நீதிபதியுமே தயாராக இல்லை! எச் ஆர் கண்ணா ஒருவரைத் தவிரஅரசுக்கு எதிராக தீர்ப்பை எழுதுகிற தைரியம் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் எவருக்குமே இல்லை! அரசு அதிகாரிகள் கூழைக் கும்பிடுபோட்டுஜனங்களை இன்னமும் கசக்கிப் பிழிந்தார்கள். முதுகெலும்போ சுயசிந்தனையோ இல்லாத அரசியல்அதிகார வர்க்கம் இந்திராவின் துதிபாடிகளாக இருப்பது மட்டுமே பிழைக்கும் வழி என்பதைக்கண்டுகொண்டார்கள். காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் கட்சியாக மாறிக் கொண்டே வந்தது. 

    அன்றைக்கு தேவ காந்த பரூவா என்ற ஒருத்தர் மட்டுமே அறியப்பட்ட காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கானாக இருந்தார்! இன்றைக்குப் பரிணாமவளர்ச்சியில் திக் விஜய்சிங்அபிஷேக் மனு சிங்விகபில் சிபல் என்று ஒருபெரிய பட்டாளமே உருவாகிக் குழப்பிக் கொண்டிருக்கிறது!

    கேரளாவைப் பொறுத்தவரைஎமெர்ஜென்சி தருணத்தில் அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் தான்! அதையும் மீறி நடந்த ஒரே ஒரு  விஷயம் ராஜன் என்ற மாணவரை போலீசார் தீவீரவாதி என்று கைதுசெய்து சித்திரவதை செய்ததில் அந்த இளைஞன் இறந்தே போனான்.அவனுடைய தந்தைஈச்சரவாரியர் நடத்திய தனிமனிதப் போராட்டம்எமெர்ஜென்சி நேரத்து அத்துமீறலைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது;கேரளாவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தஇந்திரா காந்திக்கே சவால் விடக்கூடியவர் என்று  சொல்லப்பட்ட கருணாகரனுக்கு மட்டுமே ஏழரை பிடித்தது.

    எமெர்ஜென்சி கொடுமைகளை விசாரிக்க ஷா கமிஷன் என்று ஒரு விசாரணைக் கமிஷன்! தங்களுடைய குற்றங்களை அம்பலப்படுத்தும்ஷா கமிஷன் அறிக்கையைக் காணாமல் போகச் செய்த மாயம்காங்கிரசுடையது! கூட்டணி தர்மத்தை ஒட்டி, திமுக தலைவர் தன் மீது குற்றச்சாட்டுக்களை விசாரித்த சர்க்காரியா கமிஷன் அறிக்கையையும் காணாமல் போகச் செய்த மாயமும் இங்கே நடந்தது.

    எமெர்ஜென்சியின் கடுமை ஹிந்தி பெல்டில் மட்டுமே அதிகமாக பாதித்தது என்று சொன்னால் இன்றைக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் அதுதான் உண்மை. எமெர்ஜென்சி அடக்கு முறை அதிகமாக வெளிச்சம் போடப்படாத பகுதிகளில் காங்கிரஸ் 1977 தேர்தலில் அதிக சரிவை சந்திக்கவில்லை என்பதை சேர்த்துப் பார்த்தால் நிலவரம் புரிய வரும்.

    ஜாவேத் நக்வி இந்தியர்களாகிய நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்கிறார். எமெர்ஜென்சி ஆட்டங்களை நினைவு வைத்திருக்க வேண்டியவர்கள் மறந்தே போய் விட்டோம்!வழிநடத்த வேண்டியவர்கள் தடம் மாறிப் போய் விட்டார்கள்! 

    ஆகதெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்று இந்திரா காங்கிரஸ் என்று அறியப்பட்ட நாசகார பூதத்திடமே தலையைக் கொடுத்துவிட்டுஅதன் கருணைக்காகக் காத்திருக்கிறோம். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

    ஜார்ஜ் ஆர்வெல் என்பவர்  அனிமல் பார்ம் என்று ஒரு அரசியல் நையாண்டிக் கதையை எழுதினார்.  பல மிருகங்களும் கூடி வாழ்கிற ஒரு பண்ணையில்,பன்றிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விடுகின்றன. அதிகாரத்துக்கு வந்ததும்பன்றிகள் ஒரு பிரகடனம் செய்கின்றன. "எல்லாப் பன்றிகளும் சமம்! ஆனாலும்சில பன்றிகள் மற்றவற்றை விட அதிக சமம்!" கம்யூனிஸ்ட் கட்சி மீது அதிருப்தியில் எழுதப்பட்ட இந்தக் கதைகம்யூனிஸ்டுகளுக்குப் பொருந்தியதை விடஇந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகமாகப் பொருந்துகிறது என்பதை இந்திரா காண்டி ஆள ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே இன்று வரை தொடர்கிற அவலம்.

    ஜாவேத் நக்வி தன்னுடைய நக்கலை மறுபடிஅனிமல் பார்ம் நாவலில்,ஜார்ஜ் ஆர்வெல் சொல்கிற ஒரு வரியை வைத்தே முடிக்கிறார்.

    Reminds you of the famous lines from George Orwell’s Animal Farm? 

    “The creatures outside looked from pig to man, and from man to pig, and from pig to man again; but already it was impossible to say which was which.”

    வெளியே இருந்து பன்றிகளிடமிருந்து மனிதனைமனிதனிடமிருந்து பன்றிகளை,மறுபடியும் பன்றிகளிடமிருந்து மனிதன்-மனிதனிடமிருந்து பன்றிகள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதேஎது (பன்றி) எது (மனிதன்) என்று பிரித்துப் பார்க்க இயலாமலே போய் விட்டது! ஆம்! 

    ஜெயப்ரகாஷ் நாராயணன் என்ற பழுத்த காந்தீயவாதி நடத்திய சம்பூர்ண கிராந்தி என்ற ஊழலுக்கெதிரான போராட்டம்இரண்டாவது விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்ததில் கவரப் பட்டுஅதில் முன்னணி வகித்ததுடிப்பான இளைஞர்களாக உருவான ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ராம் விலாஸ் பாஸ்வான்நிதீஷ் குமார் இப்படி எவருமேஜெயப்ரகாஷ் நாராயணன் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. அது மட்டுமல்லஊழலுக்கெதிரான ஜேபியின் போராட்டக் களத்தில் உருவான இவர்களேபின்னாட்களில் பதவி சுகத்தைப் பார்த்ததும்ஊழல்வாதிகளாகவும் ஆனார்கள் என்பது கசப்பான படிப்பினை.

    ஒன்று சொல்ல மறந்துபோய் விட்டேனே! எமெர்ஜென்சி தருணங்களில் ஒழுங்காக ஆபீஸ் நேரத்துக்கு வந்தவர்கள் அரசு ஊழியர்கள்! வேலை செய்தார்களா என்று மட்டும் கேட்காதீர்கள்! 
    எமெர்ஜென்சி தருணங்களில் நெஞ்சம் நிறைய அச்சத்தோடு வேலைக்கு வந்த ஒரே பிரிவு அரசு ஊழியர்கள் தான்! 

    எமெர்ஜென்சிக்கு முன்னாலும் சரிஅதற்குப் பின்னாலும் சரி,அரசு ஊழியர்கள் அப்படி பன்க்சுவலாக அலுவலகம் வந்ததும் இல்லை! ஏதோ தேறினவரைக்கும் சரி என்று  லஞ்சத்தைஇப்போது கறாராகக் கசக்கி வாங்குவது போல அல்லாமல் கொஞ்சம் தணிந்தே வாங்கினார்கள் என்பது எமெர்ஜென்சியின் ஒரே நல்ல அம்சம்.

    அந்த கறுப்பு தினத்தின் முப்பத்தாறாவது நினைவு ஆண்டான இன்றைய தினத்தை மறக்க முடியுமாமறந்து இருந்து விட முடியுமா?

    எமெர்ஜென்சிஅதன் தழும்புகள்கற்றுக் கொள்ளத்தவறிய பாடங்கள் என்று தொடர்ந்து பேசுவோம்!

    தொடர்புடைய பதிவு ஒன்று இங்கே 

    *மீள்பதிவுதான்! முன்னுரையாக நடப்பு அரசியலோடு சேர்த்து எழுதப்பட்டது  சமீபத்தைய வரலாறு கூடத்  தெரியாமல் இருக்கிற தமிழ் சமூகத்துக்கு  சமர்ப்பணம்.