Showing posts with label மனித வளம். Show all posts
Showing posts with label மனித வளம். Show all posts

கேள்விகளில் புது வருடத் தீர்மானங்கள்!

படமே விடை சொல்லும்!கேள்விகளும் எழுப்பும்!


"கேள்விகளைக் கேளுங்கள், கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததே!" என்று கேட்டபடியே அண்ணாச்சி  உள்ளே நுழைந்தார் அண்ணாச்சி யாரென்று கேட்கிறீர்களாஅவரும்  புள்ளி ராசா வங்கியில் வேலை பார்த்தவர் தான்! புள்ளிராசா வங்கி என்று தேடிப் பார்த்தீர்களானால் அண்ணாச்சி எவ்வளவு புள்ளி விவரம் தெரிந்தவர் என்பதுதெரிய வரும்! புள்ளி, புள்ளி வைத்துக் கோலம் போடுவது, புள்ளி விவரம்   இதெல்லாம்  எனக்கு நிறையவே அலெர்ஜி என்பதையும் பழைய பகிர்வுகளில் பார்க்கலாம் . 

"
அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணாச்சி! இரண்டு பதிவர்கள் ஒரே விஷயத்தை இருவேறு கோணங்களில் இருந்து அலசியிருந்ததைக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமே என்று எழுதிக் கொண்டிருந்தேன்! அவ்வளவுதான்." என்றேன் அண்ணாச்சி நான் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்ட மாதிரித் தோன்றவில்லை. லேப்டாப்பில் எதையோ கொஞ்சம் சீரியசாகத் தேடிக் கொண்டிருந்தார். புது வருடத் தீர்மானங்கள் பற்றி ஒரு சங்கிலிப் பதிவாக மூன்று வருடங்களுக்கு முன்னால் எழுதியதை யாரோ ஒரு புண்ணியவான் வந்து படித்து விட்டுப் போனதைக் கொஞ்சம் பார்த்தார்.




"
புதுவருடத் தீர்மானங்கள் நிஜமாகவே இல்லையா?" அண்ணாச்சி கேட்டதில் நிறையவே ஆச்சரியம் இருந்தது

"
ஆமாம் அண்ணாச்சி" என்றேன்  "தீர்மானங்கள் நிறைய எடுத்துக் கொள்கிறோம், அவைகளை இன்னொருதரம் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னாலேயே மறந்தும் போய்விடுகிறோம்! அப்படியான தீர்மானங்கள் எதற்கு என்று தான் இப்போதெல்லாம் தீர்மானங்களே வேண்டாம் என்கிற ஒரே தீர்மானம்!"

"
தீர்மானமே வேண்டாங்கிறதுல இருக்குற தீர்மானம், ஏதோ தீர்மானம் எடுத்து அதை நடைமுறைப்படுத்துகிறதுல இல்ல! அப்படித்தானே!" அண்ணாச்சி கொஞ்சம் நக்கலாகக் கேட்ட மாதிரியும் இருந்தது, கொஞ்சம் அனுசரணையாக, ஒருவித அனுதாபத்தோடு கேட்ட மாதிரியும் இருந்தது. கொஞ்சம் யோசிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டேன். வாயைத் திறந்து பதில் சொன்னால் தானே வம்பு?!

"
அப்படியானால் இந்த வருஷம் செய்யறதுக்கு வேலை, திட்டம் எதுவுமே இல்லையாக்கும்?"  என்று ஆரம்பித்த அண்ணாச்சி, என்னைப் பதில் பேசாதே என்று பார்வையாலேயே அடக்கிவிட்டுத் தொடர்ந்தார் "வெளிப்படையாகச் சொன்னாலும் சொல்லா விட்டாலும் ஒரு தெளிவான தீர்மானம், இலக்கு இல்லாமல் யாருமே இருப்பதில்லை. ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் இந்த வருடத்தில் குறைந்த பட்சம் இன்னின்னதை செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.சில சமயங்களில் வெளிப் படையாக எழுதியும் வைத்துக் கொள்கிறோம்.எங்கே சறுக்குகிறோம்,தோற்கிறோம் என்றால் நாம் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களில் நாமே உறுதியாக இருப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள், தீர்மானங்களுக்கு நம்மைப் பொறுப்பாளியாக்கிக் கொள்வதில்லை என்றால் புறம் அது ஊமை கண்ட கனவு மாதிரித்தானே முடியும்?" .

அண்ணாச்சி சொன்னதைக் கொஞ்சம் கவனமாகக் கேட்டுக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன்.




புதுவருடத் தீர்மானங்களாக அல்லது இந்த வருடம் எட்டப்பட வேண்டிய இலக்குகளாக எதை எதை நினைக்கிறோம்? இதை முடிவு செய்வதற்கு முன்னால், சென்ற வருடம் இதே மாதிரி தீர்மானித்ததில் எவையெவை அரைகுறையாக அல்லது இந்த வருடமும் முக்கியமாக இருக்கின்றன என்பதைக் கவனிக்கிறோமா?

தீர்மானங்கள், இலக்குகளை முடிவு செய்யும்போது நம்மிடம் இருக்கும் பலம்-பலவீனங்களை மதிப்பிட்டு இலக்குகளை எட்டுவதற்கான செயல் திட்டத்தையும்  யோசித்துத் தெளிவான முடிவெடுத்திருக்கிறோமா? இந்த முடிவுகளைத் தொடர்ந்து கண்காணித்து, குறைநிறைகளைப்பார்த்து செயல் படுகிறோமா?

என் மனதில் ஓடிய கேள்விகளை அண்ணாச்சி படித்து விட்டார் என்றே தோன்றியது. "நீ யோசிப்பதும் கேள்விகளை வரிசைப் படுத்தியதும் சரியானது தான்! கேள்விகளைக் கேள்வி கேளுங்கள் என்று சொல்வது சுலபம்! கேள்விகளை சரியான வரிசைப் படுத்துவதில், கிடைக்கும் விடைகளில் இருக்கும் விஷயங்களை சரி செய்வதில் தான் அடுத்தகட்டம்,கேள்விக்கான வித்து இருக்கிறது என்பது புரிகிறதா?"

"
கொஞ்சம் புரியவில்லை என்கிற மாதிரித்தான் இருக்கிறது அண்ணாச்சி!" என்றேன்

இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் ஒருதரம் பார்த்து விட்டு எனக்கு என்ன புரியவில்லை என்பதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்  என்று கொஞ்சம் சொல்லுங்களேன்! அண்ணாச்சி, கொஞ்சம் நன்றாகவே போட்டுத் தீட்டிவிட்டார்!அவர் சொன்னதோடு நீங்கள்புரிந்து கொண்டதும் ஒத்துப் போகிறதா என்பதைக்


கொஞ்சம் பார்த்து விடலாம்!

ஜெயிப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை! ஜெயிக்கலாம் வாங்க!

சூடான தமிழ்ப் பதிவுலகமும் உண்மையைத் தெரிந்து கொள்ள ஐந்து படிகளும்...!


பிலாத்து மன்னனிடம் பரிசேயர்கள் உண்மையை விளம்பப் போனார்களாம்! அந்த உண்மை விளம்பிகளைப் பார்த்துப் பிலாத்து மன்னன் இப்படிக் கேட்டதாகப் புதிய ஏற்பாடு சொல்கிறது!

"
ண்மை! யாருடைய உண்மை? என்னுடையதா? அல்லது உங்களுடையதா?"
 
ர்சிம் எழுதிய ஒரு பதிவு, தமிழ் வலைப் பதிவுலகத்தை நிறையவே சூடாக்கி விட்டது! அவரை ஆளுக்கு ஆள் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வேடிக்கை என்னவென்றால், அவருடைய நண்பர்களாக அறியப் பட்டவர்களது முகத்திரைகள் கிழிந்து தோரணமாகத் தொங்கிக் கொண்டிருப்பதும், தூற்றி எழுதியவர்களுடைய உள்நோக்கங்கள் அம்பலமாகிப் போன பின்னாலும் கூட, தங்களுடைய முதுகில் இருக்கும் ஆயிரம் பொதி அழுக்கை அகற்ற எவருமே முன்வந்த மாதிரிக் காணோம்

ன்னிப்புக் கேட்க வேண்டும், துரத்தப் படவேண்டும் என்று கருத்துக் கொட்டப் படுவதற்குக் கூட சாதி, முற்போக்கு அமைப்புக்களிடம் லைசன்ஸ் பெற வேண்டும் போல இருக்கிறது! ஷோபா சக்தி  என்ற பதிவர், இப்படி லைசன்ஸ் கொடுக்கும் ஒரு முற்போக்கு அமைப்பைப் பற்றித் தன்னுடைய பதிவில் போட்டுத் துவைத்திருக்கிறார்.
 

முற்போக்கு எழுத்தாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரோ, இன்னும் திருந்திய பாடில்லை! முற்போக்கு உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானே! தங்களுக்கில்லையே! சென்றவருடம் துவங்கிய தனிப்பட்ட பகையை, இப்போது த்தூ, த்தூத்தூத்து என்று துப்பிக் கொண்டிருப்பதில், முற்போக்கு இலக்கியவாதிகள் என்றாலே கண்ட இடத்தில் எச்சில் துப்புகிறவர்கள் என்றாகிப் போன பரிதாபத்தையும் பார்க்க முடிகிறது!
 
ந்தப் பதிவர்களில் எவரையும் எனக்கு முகமும் தெரியாது, இவர்கள் எவரும் எனக்கு நண்பர்களும் இல்லை. அதே மாதிரி, இவர்களோடு விரோதம் பாராட்டுகிற மாதிரிக் கூட ஒன்றுமே இல்லை! இணையத்தில் நிலவும் போக்கை அறிந்துகொள்வதற்காக இவர்கள் எழுதுவதை அவ்வப்போது படித்திருப்பதைத் தவிர  வேறு விதமான அறிமுகம், பின்னூட்டம் எதுவும் இல்லை

னிப் பட்ட நபர்கள் மீது அல்லாமல், சொல்லப் படும் கருத்து, நிகழ்வுகள் பற்றி அதனதன் தராதரத்தில் என்னுடைய கண்ணோட்டமாக மட்டுமே. தமிழ் வலைப் பதிவர்கள்  விவகாரத்தைப் பற்றிய பதிவு இல்லை இது, ஆனால் இந்த விவகாரத்தைக் கூட எப்படிச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதைத் தொடர்ந்து எழுந்த சிந்தனையில் எழுதப்பட்டது என்பதைத் தெளிவாக முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  

சொன்ஃபில் - நல்ல எண்ணங்களை விதைத்தல் என்ற இயக்கத்தைப் பற்றி ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்
 
டுத்தடுத்துத் திருப்பங்களுடன் போய்க் கொண்டிருக்கும் இந்த துப்புதல்-கும்முதல் விவகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மார்க் சன்பார்ன் என்ற பதிவருடைய ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. சுயமாக சிந்திக்க வேண்டும், சுய சிந்தனை என்றெல்லாம் நிறையப் பேசுவோம்! ஆனால் அது அவ்வளவு எளிதானது இல்லை என்று இந்தப் பதிவில் சொல்கிறார். ஆனால், கொஞ்சம் பயிற்சி செய்தால் கைவரக் கூடிய ஒன்று தான் என்றும் இந்தப் பதிவில் ஒரு சுட்டியைக் கொடுத்துச் சொல்கிறார்.
 
டைமுறையில் என்ன நடக்கிறது? எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், சுயமாகச் சிந்திப்பதற்கு, அதன் தொடர்ச்சியாகச் செயல்களை வகுப்பதற்கு நமக்குத் தயக்கமாக இருக்கிறது. மாற்றங்களைக் கண்டு அஞ்சி, நான் இப்படியே இருந்து விட்டுப் போய் விடுகிறேனே என்று பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்து விட்டுப் போய்விடுகிற சோம்பேறித் தனமும் ஒட்டிக் கொள்கிறது!
 
விளைவு? நமக்காக எவரோ தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது! உண்மை என்னவென்று கண்டு சொல்ல வேண்டியிருக்கிறது! ஊமைச் சனங்களாகவே, அடுத்தவர் சொல்வதற்கு ஆமோதிக்க முடியாமலும், மறுப்புத் தெரிவிக்க முடியாமலும் இரண்டும் கெட்டான்களாகவே இருந்து பழகிப் போய்விட்டது.  

வறு செய்கிறவர்கள் மிகச் சிறு சதவீதம் தான்! ஆனால் பெரும் பான்மை, ஊமைச் சனங்களாகக் கையாலாகாத்தனத்தோடு வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் போதுஇணையப் பதிவுகளாக இருக்கட்டும், அரசியல் விவகாரங்களாக இருக்கட்டும்தங்களுடைய சுயலாபத்துக்காகச் சீரழிப்பவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டியதுதான்!
 
னமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டா என்கிறது சித்தர்பாடல் ஒன்று! மனமது செம்மையாகக் கொஞ்சம் பயிற்சி வேண்டியிருக்கிறது! பரீட்சைக்கு முன்னாள் பென்சிலைச் சீவிக் கூராக வைத்திருப்பது போல! கேப்பையில் கிலோக் கணக்காக நெய் வடிகிறது என்பது போலச் சொல்லப் படுபவற்றை நம்புவது மிக எளிது!சொல்கிறவர்கள், நாம் அதை நம்புகிற கேணையர்களாக இருக்க வேண்டும் என்று தானே மானாட விட்டு மயிலாட விட்டுச்  சொல்கிறார்கள்!
 
சொல்லப்படுவது எதுவானாலும் அதில் உண்மை இருக்கிறதா என்பதைக் கொஞ்சம் தீர விசாரித்துப் பார்த்துவிட்டு அப்புறம் நம்பினால் கூத்தாடுகிற கோமாளிகளிடம் ஏமாறுகிற ஏனவாயர்களாக  என்றைக்கும் இருக்க மாட்டோம்.

முதலில், ஒரு விஷயத்தை உண்மையை எப்படித் தெரிந்து கொள்வது? கொஞ்சம் எளிதான ஐந்து படிகளில் பார்க்கலாம்

முதலில், உண்மை என்பது ஆரம்ப நிலைகளில், உணர்ச்சிகளால் தேடப்படுவது.
ணர்ச்சிபூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்பொது, திரித்துச் சொல்வதும் ஆரம்பமாகிவிடுகிறது. திரித்துத் திரித்துக் கடைசியில் உண்மையை நேரெதிரான திசையில் பார்க்க முயல்கிறோம் என்பதைவிட உண்மையைத் தவறவிட்டு விடுகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.
ப்படிப்பட்ட சூழ்நிலையில், அடிக்கடி நமக்கு "தெரிந்த" விஷயங்களைக் கொஞ்சம் சிரமம் எடுத்துக் கொண்டு அதில் எந்த அளவு ஆதாரத்தோடு இருக்கிறது, உணர்ச்சிகள் எந்த அளவுக்கு புகை மூட்டம் போட்டு மூடி மறைத்திருக்கிறது  என்பதைப் பார்க்கப் பழக வேண்டும்.

ரண்டாவதாக, நாம் ஏன் சில விஷயங்களை உண்மையென்று அப்படியே நம்பிவிடுகிறோம்

முதல் பத்தியில் சொன்னது போல, நம்முடைய அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அப்படியே ஸ்வீகரிக்கப்படுவது, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படாதது.

னத்தைக் கூர்மையானதாக்க, நம்முடைய அபிப்பிராயங்களையும், இது இப்படித்தான் என்று ஆராயாமலேயே முடிவு கட்டிவிடுகிறோமே, அதையும் தொடர்ந்து கேள்விக்கு உள்ளாக்குங்கள்!

மூன்றாவதாக, எந்த ஒரு விஷயத்தையுமே, எவ்வளவு சாமர்த்தியமான வாதத் திறமையினால் சொல்லப் பட்டிருந்த போதிலுமே கூட,அப்படியே  உண்மை என்று எடுத்துக் கொண்டு நம்பி விட வேண்டாம்.

வாதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கிற காரணங்கள், உள்நோக்கம்  என்ன என்று தேட முயலுங்கள்உன்னதமான வாதத் திறமையினால், மட்டமான கருத்துக்களைக் கூட உண்மையாக்கிவிட முயற்சி நடக்கிறதா என்பதைப் பாருங்கள்

நான்காவதாக, எங்கே வித்தியாசம் நூலிழை மாதிரி ஆரம்பித்துப் பெரிதாகிறது, எப்படி உண்மையல்லாததும், பொய்களும்  உண்மை போலச் சித்தரிக்கப் படுகிறது என்பதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

வறானசெய்திகள், பிழையான செய்திகள், பொய்யான செய்திகள் என்பதில் இந்தப் பொய்யான செய்தி இருக்கிறதே, இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, திரித்துச் சொல்லப்படுபவை. ஆரம்பத்திலேயே இனம் கண்டு பிரித்து வைக்கத் தெரியா விட்டால், தடம் பிறழ்ந்து உண்மையை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.இந்த தேசத்தின் வரலாறு, இப்படித் தான் கொஞ்ச கொஞ்சமாகத் திரிக்கப்பட்டு, உண்மையல்லாததெல்லாம் உண்மைகள் போலச்  சொல்லப் பட்டு வருகிற பரிதாபம் போல ஆகி விடும்.

ந்தாவதாக, எந்த ஒரு கருத்தின் தாக்கத்தைப் பற்றியும் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது மிகவும் நல்லது.

கேப்பையில் நெய் வடிகிறது என்று ஒருவர் சொல்கிறார்! அது புனைவா, பகடியா, அல்லது அரசியலா என்று கொஞ்சம் ஆராய்ந்து தான் பார்க்கலாமே! சொல்கிறவர் என்ன உள்நோக்கத்தோடு  சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் போகும் தருணங்களில் கேணையர்களாக்கப் படுவது சர்வ நிச்சயம்!

சில விஷயங்கள் மேலோட்டமாக சுவாரசியமாக இருக்கும், சொறிந்து கொள்வது கூட ஆரம்பத்தில் சுகமாகத் தான் இருக்கும்! போகப் போக ரணமாகி விடும், தெரியும் இல்லையா! சுய சொறிதலானாலும், பிறரைச் சொறிந்து விடுவதானாலும் சரி!
 
வேறு சில விஷயங்களோ, மிகச் சாதாரணமாக இருக்கும், ஆனால் மிகப் பெரிய உயரத்துக்கு நம்மை இட்டுச் செல்வதாகக் கூட அமைந்துவிடும். பிறருக்குக் கெடுதல் நினையாமை, பிறரை நிந்தை செய்யாமை மேலோட்டமாகப் பார்க்கும்போது உப்புச் சப்பற்றதாகத் தான் தெரியும். சாத்வீகமான இது போன்ற விஷயங்கள் எல்லாம் பட்டுப் போன மரத்தையும் துளிர்க்கச் செய்பவை!
 
தனால் தான் எண்ணம் போல வாழ்வு என்று சித்தர்கள் சொன்னார்கள்.
 
தை நினைக்கிறாயோ, நீ அதுவாகவே ஆகிறாய் என்று இந்திய ஞான மரபும் சொல்கிறது.

ர்சிம் அல்லது அவரைக் கும்முகிறவர்கள் எப்படியோ போகட்டும்! இப்போது இப்படி அடித்துக் கொண்டு நாறுகிறவர்கள் அடுத்த பதிவர் சந்திப்பு வரும்போது அல்லது ஏதோ பட்டறையில் சந்தித்துக் கொள்ளும்போது  மாமா-மாப்பிள்ளே, சகா, தோழா என்று கூடிக் குலவிக் கொள்வார்கள்! அப்புறமாகக் காத்திருந்து இப்படி முதுகில் குத்திக் கொள்வார்கள்! வடை போச்சே என்று தவிப்பார்கள்!

ந்த ஐந்து படிகளைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பார்த்து விட்டு என்ன தோன்றுகிறது என்பதை எனக்கு எழுதுங்களேன்! உருப்படியாக, நமக்குப் பயன் படுகிற மாதிரி உள்ளதை மட்டும் பார்ப்போமே!

முன்பு எழுதிய பதிவு இங்கே! பொருத்தம் கருதி, சில மாற்றங்களுடன், இங்கே மீள்பதிவாக. 





மேற்கே ஒரு பொற்கைப் பாண்டியன்!



இணையத்தில் எத்தனையோ பதிவுகளை, செய்திகளைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்! பொற்கைப் பாண்டியன் என்று  ஒரு பாண்டிய மன்னனைப் பற்றி ஒரு கதையும் உண்டு, நாலாம் வகுப்புப் படிக்கும் போது, ஐயா பொற்கைப் பாண்டியனாக, பள்ளி நாடகத்தில் நடித்ததும் உண்டு..

 
ஆனால், இப்படித் தங்கக் கை படைத்த மனிதனைப் பற்றிய செய்தியை படித்தபோது, தங்கக் கை, தங்கக் கை என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்த போது, மிகவும் நெகிழ்ந்தேன்!  
திக்கை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டேன்!இப்படியும் மனிதர்கள் இருப்பதனால் தான், எத்தனையோ அரக்க முகம், குணம் கொண்ட மனிதர்கள் நடுவே வாழும்போது கூட, எப்படி இந்த பூமி இன்னமும் ஈரமாக இருக்கிறது என்பது புரிந்தது.


இந்தத் தங்கக் கை மனிதரின் பெயர் ஜேம்ஸ் ஹாரிசன். வயது 74. ஐம்பது வருடங்களாக ரத்த தானம் செய்து வருகிறார். இது வரை 984 முறை ரத்த தானம் செய்திருக்கிறார் என்ற செய்தியே மிகப் பெரிய சாதனை! அதை விட முக்கியமான விஷயம், இவருடைய ரத்த தானத்தினால் இது வரை சுமார் இருபத்திரண்டு  லட்சம் குழந்தைகள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது தான்!

இவருடைய ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்  மிக அபூர்வமான ஒரு விஷயம், நோய் எதிர்ப்புத் திறன் anti-body, என்று சொல்லப்படுவது இருக்கிறது. கடும் ரத்தச் சோகையால் பாதிக்கப் படும் குழந்தைகளுக்கு வரும் ரீசஸ் என்ற நோயைத்  தடுப்பதாக  இந்த ஆன்டி-பாடி இருக்கிறது, மரணத்தில் இருந்து காப்பாற்றுகிறது என்பது தெரிய வந்தவுடன்,  லட்சக்கணக்கான கருவுற்ற  பெண்களுக்கு இவர் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா கொடுக்கப் பட்டதில் இது வரை இருபத்திரண்டு லட்சம் குழந்தைகள் ரத்தச் சோகை நோயில் இருந்து, மரணத்தின் பிடியில் இருந்து காப்பற்றப் பட்டதாக ஒரு மதிப்பீடு சொல்கிறது.


தன்னுடைய பதினெட்டாம் வயதில் இருந்து ரத்த தானம் செய்து வரும் திரு ஹாரிசன், இது வரை 984 தரம்  ரத்தம் கொடுத்திருக்கிறார். தன்னுடைய பதினான்காம் வயதில் மார்பில் ஒரு ரண சிகிச்சைக்காக 1.3 லிட்டர் ரத்தத்தைத் தானமாகப் பெற்றபோது எடுத்துக் கொண்ட உறுதி, தானும் ரத்த தானம் செய்வது. ரத்த தானம் செய்வதை நிறுத்துவது என்பதை நினைத்தே பார்த்ததில்லை என்று சொல்கிறார் திரு ஜேம்ஸ் ஹாரிசன்.

தன் பிள்ளை வாழ ஊர்ப் பிள்ளைகளைப் பலி கொடுக்கும் நவீன மனு நீதிச் சோழர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் துர்பாக்கியமான நேரத்தில், இப்படி ஒரு தங்கக் கை மனிதரைப் பற்றிப் படிக்க முடிந்ததே, முகத்தைப் பார்க்க முடிந்ததே பெரும் புண்ணியம் தான்!


அங்கே வந்த ஒரு அனானி கமெண்டில், இது எப்படி சாத்தியம் என்பதை ஒருவர்  சொல்லியிருப்பதையும் பாருங்கள்! இங்கே தமிழ்ப் பதிவுலகில்  அனானிகள் என்றாலே  அபத்தம் என்ற அளவுக்கு இருப்பதைப் போல அல்லாமல், எப்படி இன்னும் கொஞ்சம் விவரம் கிடைக்கிறது என்பதையும் பாருங்கள்!

எடுப்பும், தொடுப்பும்! 

எடுப்பு !

முந்தைய பதிவில் பேசினோமே, கூகிள் விவகாரம்!

சீன மக்களுக்கு ஜனநாயக உரிமைக்காகப் போராடி, அதில் கரை சேர முடியாமல் கூகிளார் வெளியேறினாரா?
அல்லது, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று எம்பி எம்பிப் பார்த்துத் தோற்ற நரி, ஒதுங்கிப் போனதே அந்தக் கதையில் வருவதைப் போலவா? நான் சொல்லவில்லை, அமெரிக்கப் பத்திரிக்கை, Forbes  சொன்னது! போன ஜனவரி மாதம் விவகாரம், முத்திக் கடைத் தெருவுக்கு வந்த போதே! தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவர்கள் படியுங்கள்!

தொடுப்பு!

முந்தைய பதிவு ஒன்றில் திரு வால் பையன் அருண், ரீடரில் இன்னமும் 180 பதிவுகளைப் படிக்க வேண்டியிருப்பதாக, தான் என்ன  செய்வது என்ற ரீதியில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். மீண்டும் பொது புத்தியில் சேராமல், பதிவின் உள்ளடக்கத்தை விட்டு விலகாமல், ஜேம்ஸ் ஹாரிசனைப் பற்றிய பதிவில் உருப்படியான பின்னூட்டத்தை எழுதியிருக்கும் அந்த ஆங்கில அனானியின் பதில் வால் பையன் அருணுக்கு சமர்ப்பணம்! 
Anonymous said... 
 
I've worked in a transfusion service for over 30 years. Without having the entire picture, my guess is that this man is Rh negative and has anti-D (Rheusus factor) in his blood as a result of being transfused with Rh positive blood during his surgery. If he needed 13 units, it's possible there wasn't enough Rh negative blood in stock and he was given Rh positive blood. In response, his body started to produce anti-D. Anti-D isn't rare. What is rare is finding a selfless person willing to donate blood repeatedly. His blood isn't being used for transfusions. I believe they are using his antibody to produce Rh Immune Globulin. This prevents pregnant women from producing antibody against their unborn babies. Vickie is correct. Fifteen percent of the population is Rh negative. Even Rh positive people may be heterozygous for the gene, meaning their children may be Rh negative. Their are 57 comments posted already. Statistically speaking, about 8 or 9 of you geniuses have Rh negative mothers and might not be alive if your mothers didn't receive RhIG.