கொம்பேறித் தாவும் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்! வால்பையன் பேசும் பரிணாமம்!

அதானே! நம்பிக்கையே இல்லைன்னு பிரசாரம் பண்ணும் பிரசுரம் கூட ஒண்ணுமே இல்லாமல் எம்ப்டியாத் தான் இருக்கோணும்!
 

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்!கொம்பேறித் தாவும்   
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்! 

தூக்குத் தூக்கி படத்தில் வரும் இந்தப் பழைய பாடலைக் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன்!

சென்னைப் பதிவர்கள் குழுமமா, தமிழ் இணைய எழுத்தாளர்கள்  சங்கமா என்ற கேள்வி ஒரு வழியாக அடங்கி, தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்ற வலைப் பதிவோடு, ஒரு வழியாக "இப்போதைக்கு பதிவு செய்யப்பட்ட சங்கமாய் இருப்பதை விட விர்சுவலாய் ஒரு குழுமத்தை அமைத்து அதிலிருந்து நாம் அடுத்த கட்டத்தை நோக்கி போவோம்"  என்ற முடிவோடு ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. 



 
ஆனால், சனிக்கிழமை நடந்த கூட்டத்தின் அதிர்வலைகள் அங்கங்கே பதிவுகளாக, பின்னூட்டக் கும்மிகளாக கன ஜோராக நடந்து கொண்டே இருக்கிறது.

பதிவுலகம் இப்படிப் போய்க் கொண்டிருந்தால் வால்பையன் என்னதான் செய்வார், பாவம்! சேக்காளி  ராஜன் வேறு உண்மைத் தமிழன்,
டோண்டு ராகவன் பதிவுகளில் தொடர் பின்னூட்டச் சரங்களை வெடிக்கப் போய்விட்டார்!

அதனால் வால்பையன் பழையபடி, பரிணாமம், கடவுளை நோண்டக் கிளம்பிவிட்டார்!ஏதாவது புதிதாகச் சொல்லியிருக்கிறாரா, அல்லது புதிதாக எதையாவது கற்றுக் கொண்டு வந்திருக்கிறாரா  என்று பார்த்தால், ஒன்றையும் காணோம்!வால்பையன் ஆரம்பிக்கிறார்-
"பரிணாம வாத கொள்கையில் நம்பிக்கையற்றவர்களின் முதல் கேள்வி “குரங்கு ஏன் குரங்காகவே இருக்கு” என்பது தான், ஆனாலும் நட்புக்கூட்டங்கள் அதே கேள்வியை மீண்டும் பின்னூட்டத்தில் கேட்டு அவர்கள் அறிவுமுதிர்ச்சியை உலகுக்கு காட்டி அசரடித்தார்கள்!"

வால்பையன் ஏன் வால்பையனாகவே இருக்கிறார் என்று நான் கேட்கப் போவதில்லை!காரணம், அவர் வால்பையனாக இருப்பதனால் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது! அதற்காக பரிணாமம் பற்றிக் கிளாஸ் எடுக்க வந்தால் சும்மா இருந்து விட முடியுமா என்ன?

யாரோ கடவுள் நம்பிக்கையாளர்  எப்போதோ கேட்டாராம்! (எப்போது? எங்கே? யாரிடம்?) குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்று  டார்வின் சொன்னது உண்மையானால், இன்னமும் குரங்குகள் இருக்கின்றனவே, அது எப்படி? அதனால் டார்வின் கொள்கையே தப்பு என்றாராம்! வால்பையன் மேலும்  சொல்கிறார், அது பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை திசை திருப்பும் பதிவல்ல, அனைத்தையுமே கேள்வி கேட்கும் பதிவு!

அனைத்தையுமே கேள்வி கேட்பது  எப்படி இருந்ததென்றால், கீழே உள்ள படத்தில்  கேள்வியும் பதிலுமாக  இருக்கிற மாதிரி!


மனிதக் குரங்கு, வெறும் குரங்கல்ல! இரண்டும்  பக்கத்தில் பக்கத்தில் தலைக்குக் கைகளை அண்டக் கொடுத்து, மல்லாக்கப்  படுத்துக் கொண்டிருந்தன. சின்ன மனிதக் குரங்கு,  பெரிய  மனிதக் குரங்கிடம்கேட்டது. "வாழ்க்கையின் நோக்கம் என்ன?"

பெரிசு பதில் சொன்னதாம்! "அதற்கு ஒரு விடை இருக்கிறது! ஒரு தக்காளியின் வர்க்க மூலம் என்ன? அதற்கான விடை தான் இதற்கும்!"

சிறிசு சொன்னது, "தக்காளியின் வர்கமூலம்! என்னவொரு முட்டாள்தனமான கேள்வி!"

பெரிசு சொன்னதாம், " அதே! அதே!"

அந்த மாதிரித் தான் இருக்கிறது வால்பையன் எடுத்துக் கொண்டிருக்கும் பரிணாம நிரூபண வாதம்!


குரங்குகள் அனைத்துமே மனிதனாக மாறிவிட்டனவா  என்று யாரும் கேட்கவில்லை. தவிர, டார்வின் சொல்வது, மனிதனுக்கும் மனிதக் குரங்கிற்கும் பொதுவான மூதாதையர் இருந்தார்கள் என்று தான்! மனிதக் குரங்கே மனிதனாக மாறிவிட்டதாக அவரும் சொல்லவில்லை, அப்படி அர்த்தப் படுத்திக் கொண்டு எவரும் கேள்வி கேட்கவும் இல்லை. உயிர்களின் தோற்றம் என்ற தனது ஆராய்ச்சிக் குறிப்பில் டார்வின், நதியின் மூலம் இன்னது என்பதைத் தான் ஆராய்ந்திருக்கிறார். நதி எங்கெங்கெல்லாம் ஓடிக் கடைசியில் இன்றிருக்கும் நிலைக்கு வந்திருக்கிறது என்பதைப் பேசவில்லை.

டார்வினை மறுக்க வேண்டிய அவசியம் அன்றைக்குக் கிறித்தவத்திற்கு மட்டுமே இருந்தது.  ஏனென்றால், அவர்கள் தான் பழைய ஏற்பாட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கடவுள் இந்த உலகை ஆறே நாட்களில் படைத்தார், படைத்த களைப்புத் தீர ஏழாம் நாள் ஓய்வெடுத்துக் கொண்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். டார்வின் சொல்லும் விஷயம் கடவுளை மறுத்ததோ இல்லையோ, இந்த பூமி, இதில் உள்ள உயிரினங்கள் எல்லாவற்றையும் தேவன் ஆறே நாட்களில் உருவாக்கினார் என்ற கோட் பாடு அடிபட்டு சிதைந்து போனது. மத குருமார்கள் கோவில்களைக் கொடியவர்களின் கூடாரமாக மாற்றிவிட்டார்கள் என்று இயேசு கலகம் செய்ததாகப் புதிய ஏற்பாடு சொன்னதோடு சரி! யூத  குருமார்களுக்குப் பதிலாக, சிலுவையை பிராண்டாக வைத்து அதே கூடாரத்தை நவீனமயமாக்கினது இயேசுவின் பெயரால் பிற்பாடுதான்  நடந்தது. ஏசுவுக்கும் திருச்சபைக்கும் எப்போதுமே சம்பந்தம்  இருந்ததில்லை!

அவர்களுடைய வேதாகமம் சொல்வதை விட இந்த சிருஷ்டி பழமையானது, பல்வேறு படித்தரங்களைக் கொண்டதாக இருந்தது என்றபோது, டார்வினை முரட்டுத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் நிராகரிக்கிற அவசியம் ஆப்ரஹாமைட் மதங்களுக்கு மட்டுமே இருந்தது. அதுவும் கூட ஆரம்ப நிலையில் தான்! நிலவுடைமைச் சமுதாயமாக இருந்தபோது தான்! 
நிலவுடைமைச் சமுதாயத்தின் மிக அடிப்படையான கூறே, அதன் மரபு சார்ந்த நம்பிக்கைகள், பழமை வாதம் தான் என்பது சமூக விஞ்ஞானத்தை அறிந்தவர்களுக்கு ஆச்சரியமூட்டும் செய்தி ஒன்றுமல்ல!  மாற்றத்திற்குத் தயாராக இல்லாத, மாற்றத்தை எதிர்க்கும் தன்மை நிலவுடைமைச் சமுதாயத்தின் அடிப்படை இயல்பு.

வளர்ந்து வந்த வணிகத்தின் தேவை, மதத்தை இரண்டாகப் பிளந்து, தொழிற்புரட்சிக்கு வழி வகுத்தது. , விஞ்ஞானத்தை எள்ளிநகையாடிய திருச்சபை, விஞ்ஞானத்தை ஒத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு மாறியது. திருச்சபையின் முக்கியமான விசுவாசிகளில் நிறையப்பேர்  பெரும் விஞ்ஞானிகளாகவும், கண்டுபிடிப்பாளர்களாக இருந்ததும் மிக இயல்பாகவே நடந்தது. அறிவியல் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தாலேயே இது தெரிய வரும்.

வால்ஸ், அல்லது அவருக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்கள், அல்லது இந்தக் கருத்தை இவர்களுக்கு இரவல் கொடுத்த ரிச்சர்ட் டாகின்ஸ்  மாதிரி இன்றைய நாத்திக வாதிகளாக இருந்தாலும் சரி, நான் ஏன் நாத்திகனானேன் என்று தன்னுடைய நாத்திகத் தன்மையைப் பிரகடனம் செய்த பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் போன்ற தத்துவ வாதிகளும் சரி, அவர்களுக்குத் தெரிந்த கிறித்தவப் போலித்தனத்தை மட்டுமே ஆதாரமாக எடுத்துக் கொண்டு இறை மறுப்பைச்  செய்து கொண்டிருக்கிறார்கள்.  

இதை எல்லாம் ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய கடவுள் என்றொரு மாயை புத்தகத்தின் மீதான விவாதங்களை இந்தப் பக்கங்களில் பேசிய தருணங்களில் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.

ஒளி என்றால் என்ன? இருள் இல்லாத நிலையே ஒளி இந்த நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால், இதிலேயே உண்டு, இல்லை என்ற ஒரு இரட்டைத் தன்மை இருப்பதைப் பார்க்க முடியும். இந்த இரட்டைத் தன்மை, ஒன்றுக்கொன்று நேரெதிரான முடிவுகளை உண்டு எனவும், இல்லை எனவும்  சொல்வதற்கு இடம் கொடுப்பதாக இருப்பதைப் பார்க்கிறோமல்லவா! எப்படி வேண்டுமானாலும் புரட்டிச் சொல்வதற்கு உலக விஷயங்களில் நாம் பார்க்கிற இந்த இரட்டைத் தன்மை இடம் கொடுக்கிறது. அது ஒன்றினாலேயே, கடவுள் கோட்பாடும் உண்டு எனவும் இல்லை எனவும் ஒரே விஷயத்தினால் தீர்மானிக்கப் படுவதாக ஆகிவிடுகிற தன்மையை முதலில் புரிந்து கொண்டால் ஒழிய, செக்கு மாடுகள் மாதிரித் திரும்பத் திரும்பச்சுற்றி வந்த இடத்திலேயே தான்  சுற்றிக் கொண்டிருப்போம்.  இந்த விஷயத்தையும் கூட, மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பின் கீழ் ஒரு சுற்று பார்த்திருக்கிறோம்!

இப்போது வால்பையன் பேசும் பரிணாமம், அதை கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்த்திருக்கிறார்கள் என்ற வாதத்திற்கு, சுருக்கமான பதிலாக....!


"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் 
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்!"


முழுதாகப் பொருளோடு, பதம் பிரித்துத் தெரிந்து கொள்ள,
படிக்க இங்கே!

மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்! அதில் சிவபுராணத்தில் வரும் வரிகள் இவை! பரிணாம வளர்ச்சியை, இங்கே இந்திய ஞான மரபு நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னாலேயே அறிந்திருந்தது, படைப்பின் பல்வேறு படிநிலைகள், படித்தரங்களை அறிந்திருந்தது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். தசாவதாரம் என்று சொல்லப் படுவதிலேயும் கூட, இந்தப் பரிணாமம் படிப்படியாக உயர்வதைப் பார்க்க முடியும். டார்வின் என்பவர் பிறந்தது, இருநூறு வருடங்களுக்கு முன்னால் தான், அவர் தன்னுடைய உயிர்களின் தோற்றம் என்ற ஆராய்ச்சிக் குறிப்பை எழுதி நூற்றைம்பதே வருடங்கள் தான் ஆகின்றன என்பதை மனதில் வைத்துக் கொண்டு யோசித்தால் , கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் கூட, டார்வினின் பரிணாம இயலை அடிப்படையாக வைத்து, கடவுள் மறுப்பு அல்லது கடவுள் இருப்பை தீர்மானித்து விட முடியாது என்று தெரிந்து வைத்திருப்பாரே!

கட + உள் என்று எல்லாவற்றையும் கடந்து  உள்ளே பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றை டார்வினைப் பற்றிப் பேசி, புரிந்து கொள்ளவோ, தெரிந்து கொண்டு விடவோ முடியாது! வெறுமனே கும்மியடித்துப் பொழுது போக்கும் விஷயமும் இல்லை இது!

அப்புறமாக, நீண்ட நாட்களுக்கு முன்னாலேயே, ரிச்சர்ட் டாகின்ஸ் மாதிரி இறக்குமதி செய்யப்பட்ட நாத்திகத்தை அரைகுறையாகப் புரிந்து கொண்டு பேசுவதற்குப் பதிலாக, தமிழிலேயே கிடைக்கும் எழுத்தாளர் சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா புத்தகத்தைப் படித்தாலேயே கொஞ்சம் அறிவியலோடு கூடிய  கேள்விகளைத் தெரிந்து கொள்ள முடியும் என்று எழுதியிருந்ததை மறுபடி நினைவு படுத்துகிறேன்!

அறிவியல் பேசுவதானாலும், ஆன்மிகம் பேசுவதானாலும், பொழுது போக்கு நாத்திகமாகப் பரிணாமத்தைத் தொட்டு, டார்வினைத் தொட்டுப் பேசினாலும், சுஜாதா எழுதிய புத்தகம் கொஞ்சம் சுவாரசியமான தொடக்கமாக இருக்கும்! வேறு நல்ல புத்தகம் உங்களுக்குத் தெரிந்து, நீங்கள் படித்துப் புரிந்துகொண்டதை சுருக்கமாகவோ, அல்லது புத்தகத்தைப் பற்றிய முழு விவரங்களோடு தெரிவித்தாலும் சரி, அதை வைத்துக் கொண்டே பேசலாம்!

என்ன வால்ஸ், தயாரா?!



டியர் மிஸ்டர் வாசகரே, அழைப்பு உங்களுக்கும் தான்!


உறித்து உறித்து ஒண்ணுமில்லாமல் போனதடி! வெங்காயம்!

 


 
"உன் நண்பன் யார் என்று சொல்! நீ எப்படிப்பட்டவன் என்று சொல்கிறேன்" என்பதாக ஒரு மன நலம் குறித்த விளக்கம், அல்லது ஆரூடம் இப்படி எதோ ஒன்று, கேள்விப் பட்டிருப்பீர்கள்!  
 
சேத் கோடின் பதிவொன்றைப் படித்தபோது கூட இது அவ்வளவாக உறைக்கவில்லை! இங்கே இரண்டு நாட்களுக்கு முன்னால் சென்னையில் பதிவர் குழுமம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சி, அதற்காக நடந்த கூட்டம், அதன் பின்விளைவுகளாகவும்  பக்க விளைவுகளாகவும் வெளிவந்த பதிவுகளைப் படித்த பிறகு சேத் கோடின் எழுதிய அந்தப் பதிவு  எவ்வளவு தெளிவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது!

சேத் கோடின் சொல்வது இது  தான்!

நிஜ உலகில் நல்ல நண்பர்களைக் கண்டுபிடிப்பது கடினம்!  அரிதும் கூட! ஆனால், இணையம் மாதிரி ஒரு மின்வெளிப் பரப்பில், அல்லது கனவுலகில்

ஒன்று-    உங்களுடைய நண்பர்கள் உங்களை ஒரு செயலைத் தீர்மானிக்கும் முடிவுக்குத் தள்ளாமல் இருந்தால்,

இரண்டு- உங்களுடைய இணைய வழி நண்பர்கள், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவலைப் பரவச் செய்யாமல் இருந்தால்,

மூன்று-   உங்களுடைய நண்பர்கள், நீங்கள் பத்திரமாகப் போற்றிக் காப்பாற்றிவரும் நம்பிக்கைகளைக் கண்ணியமாகக் கேள்வி கேட்காமல்           இருந்தால்,

நான்கு-    உங்களுடைய நண்பர்கள், உங்களிடமிருந்து மிகச் சிறந்ததை வலியுறுத்தாமல் இருந்தால்,

நீங்கள் இணையத்தில், அல்லது கற்பனை உலகத்தில், புதிய நண்பர்களைத் தேட வேண்டிய நேரம் வந்து விட்டது! புதிய நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்! 

பதிவர் வட்டம், சந்திப்புக்கள், குழுமங்களில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை! அதே நேரம், பதிவர் சந்திப்புக்களைப் பற்றி எழுதப் படுவதைப் படிக்கத் தவறுவதுமில்லை. படித்தவைகளில் எழுந்த அபிப்பிராயம், பதிவர் சந்திப்புக்களை ஒரு வெட்டி அரட்டை, வடை போச்சே என்று வராமல் இருந்தவர்கள் பின்னூட்டமிட உதவும் ஒரு கூட்டம் என்பது தான்!  மொட்டை மாடிக் கூட்டங்களில், Good touch, Bad touch மாதிரிக் கொஞ்சம் சமூக விழிப்புணர்வுக்கான கூட்டங்களாகவும் நடந்த தருணங்களை, டோண்டு ராகவன் மாதிரி, அதை கவனமாகக் குறிப்பெடுத்து, உடனடியாக பதிவாக எழுதி அவசியம்  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப் பகிர்ந்து கொண்டபோது, பதிவர் சந்திப்புக்கள் கொஞ்சம் உருப்படியானதாகவும் கூட இருக்க முடியும் என்பது தெரிந்தது.

தற்சமயம் மதுரை வாசியாக இருப்பதால், மதுரைக்காரப் பதிவர்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்கள் எழுதுவதைப் படித்ததோடு,  சிலரைத் தொடர்பு கொண்டு பேசியதுண்டு. அதற்குமேல் ஒருவரை மற்றவர் புரிந்துகொள்கிற மாதிரியோ, தெரிந்தவைகளைப் பகிர்ந்து கொள்கிற மாதிரியான சூழ்நிலை அமையாததால், வலுவில் போய் உறவு கொண்டாடி ஆதரவு தேட விரும்பாத ஒரு தனி நபராக மட்டுமே என்னைப் பொறுத்தவரை அமைந்துபோனது.
 

வால்பையன் அருணை நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காக, ஒரே ஒரு சந்திப்புக்குப் போனதோடு சரி! பொதுவான  ஒரு நோக்கமோ, புரிந்துகொள்வது, தனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்வது  என்பதற்கெல்லாம் இடமில்லாத வெறும்  சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்ற முடிவு இன்னமும் உறுதியானது. கூட்டமாக இருக்கவும், தனியாகவும் இருக்கவும் பழகிப்போனவன் என்பதால் என்னைப் பொறுத்தவரை இந்த பதிவர் குழுமம், கூட்டம், சந்திப்பு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமே!

அதற்கப்புறம், உரையாடல் சிறுகதை பட்டறையை  தனிப்பட்ட இரு பதிவர்கள் ஏற்பாடு செய்து, அதைப் பற்றிக் கொஞ்ச நாள் ஒரே பரபரப்பாக இருந்தபோது கூட, என்னுடைய இளமையில், வாசகர் வட்டம்,  சோலைக் குயில்கள், இலக்கியத் திறனாய்வு, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்த மாதிரி அமைப்புக்கள் நடத்திய கிட்டத்தட்ட இதே மாதிரியான பட்டறைகளை நிறையப் பார்த்து விட்ட படியால், பெரிதாக எடுத்துக் கொள்ளவும் தோன்றவில்லை. அதில் கலந்து கொண்ட சிலரிடம், அவர்களுடைய அனுபவம் எப்படி இருந்தது என்பதைக் கேட்டறிந்த போது, இந்த மாதிரியான முயற்சிகள் ஒரு எல்லைக்கு மேல் விரியாமல் குறுகி நின்று போய்விடுகிற பழைய அனுபவம், இவையும் அப்படித்தான், இன்னமும் அப்படித்தான் என்கிற என்னுடைய அனுமானம் சரியாகவே இருந்ததையும் கண்டேன்.

அதே மாதிரி, புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் இளங்கோவன், இணையத்தைப் பயிற்றுவிக்கிற விதமாக பல்வேறு இடங்களில் பயிற்சிக் களங்களை  நடத்தி வருவதை,   தமிழ் இணையப் பயிலரங்கம் என்ற கூகிள் வலைக் குழுமமாகவும் நடத்தி வருவதையும் அறிந்தே இருக்கிறேன். இந்த மாதிரியான பட்டறைகள், பயிலரங்கங்கள் என்ன சாதித்துவிட முடியும் என்பதில் எனக்கு ஒரு கருத்து உண்டு. என்னுடைய அனுபவங்களின் எல்லைக்கு வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். அதே நேரம் அதுவே முடிந்த முடிவாக ஆகிவிடாது என்பதும் எனக்குப் புரிந்திருப்பதால், இதுமாதிரியான முயற்சிகளைப் பார்க்கும் போது, என்னுடைய கருத்துக்களை அங்கே முந்திரிக் கொட்டை மாதிரி  முந்திக் கொண்டு
சொன்னதில்லை, சொல்லப் போவதில்லை.

தண்டோராப் போட்டு அழைப்பு இங்கே! ஒரு அஞ்சு அம்சத் திட்டம் போட்டுச் சொல்லியிருக்கிறார் பாருங்க, அதுக்காகவே போய்ப் பார்க்கணும்!

இப்போது, சென்னை வலைப் பதிவர்களை ஒருங்கிணைத்து, ஒரு சங்கமாக, அமைப்பு ரீதியாகத் திரட்ட வேண்டும் என்ற முயற்சி, சில பதிவர்களால் முன்கையெடுத்து, அதைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு கூட்டமும் மூன்று நாட்களுக்கு முன்னால் நடந்திருக்கிறது. சங்கமாக அமைப்பது என்று வெளிப்படையாகச் சொல்லி  அதற்கு ஆதரவும், கருத்துக்களையும் கேட்க முனைந்த கூட்டத்தில், சுருதிபேதம் இருப்பது மிக வலுவாகவே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. சுருதி பேதத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் அவ்விடத்தில் ஒரு பின்னூட்டம்!
  
அதிஷா said...
வெங்காயம்!
வெங்காயம்னு  சொன்னாத் தான் இங்கே சில பேருக்குப் பொழுதும் விடிகிறது! பிழைப்பும் நடக்கிறது போல!

ஒரு பிரபலமான, பிரபலமான என்று மட்டும் தான் சொன்னேன்! எப்படி எப்படியெல்லாம் பிரபலம் என்று சொல்லவில்லை, அரசியல் தலையைப் பற்றி சொல்லும்போது இப்படிக் கிண்டலாகச் சொல்வார்கள்!

தலைவருக்குக் கல்யாண வீட்டில் தான்தான் மாப்பிள்ளையாக இருக்கவேண்டும், இழவு வீட்டில் கூட அங்கே செத்த பிணமாகக் கிடக்கவேண்டும், எங்கே எது எப்படி இருந்தாலும், தானே முன்னிலைப் படுத்தப் படவேண்டும்!

எதிர்ப்பவர்கள் அந்த மாதிரி மனநிலையில் இருந்து தான் எதிர்க்கிறார்களா, என்றால் அதுவும் இல்லை.ஒரு விஷயம் வெளிப்படும்போதே மறுக்கத் துவங்குகிற, இங்கே தமிழ் வலைப் பதிவுகளில் இயல்பாகக் காணப் படுகிற போக்காக மட்டுமே எனக்குப் படுகிறது. 


சம்பந்தப் பட்ட பதிவர்கள் மறுபடி கூடிப் பேசினால், நிச்சயமாக ஒரு குறைந்தபட்சப் பொதுக் கருத்தை, செயல்பாட்டை வகுத்து, ஒரு புதிய துவக்கமாகச் செயல் பட முடியும்.

எந்த ஒரு விஷயமும் ஒரு அமைப்பு ரீதியாகத்  திரட்டப் படும்போது, அது தங்களுக்குச் சாதகமானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு தரப்பு எதிர்பார்ப்பதும் கூட இயல்பு தான்.  நிறுவனப்படுத்தப் படுகிற எதுவுமே, அது எத்தனை உயர்ந்த லட்சியங்களுக்காக ஆரம்பிக்கப் பட்டதாகச் சொல்லப் பட்ட போதும் கூட, அந்த நோக்கங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஆர்வத்துடன் செயல்களை ஊக்குவிக்கிறவர்கள் இருக்கும் வரை, அத்தகைய நல்ல நோக்கங்களோடு செயல் படும், ஆர்வம் குறையத் தொடங்கும் போது, அது  வெறும் சடங்கு மயமாக மட்டுமே குறுகிப் போய், எதற்காகத் தொடங்கப் பட்டதோ அந்த நோக்கங்களுக்கு எதிராகவே செயல் படுவதாக மாறிப் போவது மட்டுமே மிஞ்சும்.

இங்கே தமிழ் வலைப் பதிவுலகத்தில், சிலகாலத்துக்கு முன் நடந்த கூத்துக்களில் "பிரபல பதிவர்" என்றாலே கேலிக்குரியதாக, கேவலப் படுத்துகிறமாதிரி ஆகிப் போனது!பதிவுகள் பகிர்ந்து கொள்ளப் படுவதற்காக என்பதில் இருந்து விலகி, இணையத்திலுமே ஆரிய- திராவிட மாயைகளாகிச் சண்டை போட்டுக் கொண்டிருந்ததுமே அரங்கேறியதில் இருந்து
விடுபட்டு தமிழ்ப் பதிவுலகம் இப்போது தான் மெல்ல மெல்ல விலகி ஒரு முதிர்ச்சிக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒரு சங்கம் மாதிரி,  சிடிசன் ஜார்னலிஸ்ட் என்ற மாதிரியான அங்கீகாரத்தை அரசிடம் வேண்டிப் பெறுவதற்கான கூட்டு முயற்சியாக இருக்கிற மாதிரி, பதிவர்களுக்கு சில அடிப்படைத் தொழில்நுட்பங்களைச் சொல்லித் தருகிற அமைப்பு மாதிரி என்று இந்த முயற்சியை முன்கையெடுத்து நடத்தியவர்கள்  சில கருத்துக்களை முன்வைத்து, அதைச் செழுமைப் படுத்துகிற மாதிரியான கருத்துக்களை, விமரிசனங்களை வேண்டி இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான அமைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்வது ஒரு வழி.

அடுத்தது, இப்படி ஒரு அமைப்பு தேவைதான் என்று ஒப்புக் கொண்டால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சொன்னார்களே, அதை ஒரு முன்மாதிரியாக மட்டும் எடுத்துக் கொண்டு, அதில் இன்னும் எப்படி சிறப்பாக செயல் படலாம் என்ற கருத்துக்களை சொல்வதோ, அல்லது, அவர்கள் சொன்ன எதுவுமே உடன்பாடு இல்லையென்றால் கூட, மாற்று யோசனையாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதைச் சொல்லியிருந்தால். அது நாகரீகமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.

அதை விடுத்து, இப்படி வினைக்கு வினை, எதிர்வினை என்று போய்க் கொண்டே இருந்தால் பதிவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே கூட வெட்கப் படுகிற சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே!

 
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! இந்த ஞானம் வந்தால் பின்னர் நமக்கெது வேண்டும்!






 

கண்டதைச் சொல்லுகிறேன்! நடக்கும் கதையைச் சொல்லுகிறேன்!



கூகிள் விவகாரத்தில், நண்பர் ரவி எழுப்பிய ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பதை, இப்போது தான் கவனித்தேன்! கீழே அவர் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுப்பியிருந்த கேள்வி!

Do you think that there is US Government behind Google's action? It is losing around $4 billion because of pulling out of china immediately and much more in the times to come. Just because it is not able to become number one, there is absolutely no business sense for any one to throw away $4 billion. same way, I do not think US government can have such a big clout in Google's decision. If US government has such big clouts in many US companies, there will not be big US companies having their head quarters abroad to evade US tax laws. As for as action against Toyota is concerned, it is a revenge for the humiliation US automakers have been facing for more than 10 years. Last 10+ years, Toyota Camry has been the number 1 car. the number 2 has been Honda Accord. This is a big humiliation considering that the Car was invented in US! This is first time they are tasting the blood of Toyota and so they are going great guns behind them.

வருகிற செய்திகள், ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்ததில் உண்மை இன்னது தான் என்று போட்டு உடைத்து விட முடிவதில்லை. கூகிள், வெளியேறிவிடுவேன் என்று சென்ற ஜனவரி 12 ஆம்  தேதி அறிவித்த போதும் சரி, அதற்குப் பிறகு ஹிலாரி கிளிண்டன் இணைய சுதந்திரத்தைப் பற்றி உபதேசம் செய்த போது, அதைச் சீன அரசு முளையிலேயே கிள்ளிஎறிந்த செய்தியிலும் சரி அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க அரசோடு ஒருங்கிணைந்து செயல்படுகிற ஒரு சித்திரம் கிடைத்தது.அதில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் தேவைப் படுவதாக எனக்குத் தோன்றவில்லை. அமெரிக்க அரசை, அதன் முடிவுகளை, வங்கி, நிதித்துறைகளுக்கு அடுத்தபடியாக, அமெரிக்கத் தொழில் துறைதான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. 

அடுத்து, அமெரிக்க நிறுவனங்கள்  அமெரிக்க வரிச் சட்டங்களை ஏமாற்றுவதற்காகவே  வெளிநாடுகளில் தலைமையகங்களை வைத்திருப்பது! கேய்மன் தீவுகளில் இருந்து, துபாய் வரை வரி ஏமாற்றுகிறவர்களின் சொர்கங்கள் நிறைய உண்டு! முப்பதே ஆண்டுகளில் துபாய் கொழித்தது, எண்ணெய் விற்று அல்ல! தாவூத் இப்ராஹீம் மாதிரி நிழல் உலக தாதாக்கள்,  வரி ஏய்ப்புச் செய்கிறவர்கள், உல்லாசம் தேடி வருகிறவர்கள் இப்படிப் பலவிதமான நபர்களுக்கும் இடம் கொடுத்துத் தான், துபாய் காசு கொழிக்கும் பிரதேசமாக உருவானது,  பிழைப்புத் தேடி வந்தவர்களை அடிமைகளாக நடத்தி உருவாகி இருக்கும் நவீன அடிமை சாம்ராஜ்யம் என்பதும் இந்தப் பக்கங்களில் பொருளாதாரம் குறித்த பதிவுகளில் பேசியிருக்கிறோம்!

" we here highly resolve that these dead shall not have died in vain, that this nation under God shall have a new birth of freedom, and that government of the people, by the people, for the people shall not perish from the earth   கெட்டிஸ்பர்க் பிரகடனத்தில் ஆப்ரஹாம் லிங்கன் இப்படி முழங்கியதுபோல இப்போது  நடைமுறையில் இல்லை என்பது வரை சரிதானே ரவி! கூகிள் எடுத்த முடிவு, அதைத் தனிமைப் படுத்தியிருக்கிறது, மற்ற நிறுவனங்கள் அடக்கி வாசிக்கவே விரும்புகின்றன. அமெரிக்க அரசு சீனக் கரன்சியின் மதிப்பைக் கூட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தததற்குப் பலன் கிடைத்திருக்கிறது. உடனடியாகச் செய்தால், அமெரிக்காவுக்குப் பணிந்தது போல ஆகிவிடும் என்று சீனா, பரிவர்த்தனை விகிதத்தைப் படிப் படியாக உயர்த்தச் சம்மதித்திருப்பதாகவும் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. 

கார்டியன் நாளிதழில் இப்படி வந்திருக்கிறது: "This is pure dog-whistle politics. Western governments, especially in the US, engage in endless posturing about human rights, but rarely do anything to endanger their economic interests. But governments do care about restraints on trade and are minded to take action to deal with them. As General de Gaulle, paraphrasing Lord Palmerston, once observed: "Great nations do not have friends; they only have interests." By aligning their company's commercial interests with the wider economic interest of the US, the Google boys have begun to recruit powerful allies "

இப்போது நான் சொல்ல வருவது தெளிவாக இருக்கிறதா, திரு ரவி?


******
Christians in Britain are being treated with disrespect and apparent discrimination unacceptable in a civilised country, according to a group of senior bishops led by Lord Carey, former archbishop of Canterbury.
இப்படிப் புலம்புகிற அளவுக்குப் பாதிரிமார்களின் செய்கைகள், நடத்தை கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதாக மட்டும் காணோம்! எல்லா இடங்களிலும் ஏசு என்னோடு வாக்கிங் வருகிறார் என்று ஊழியம் நடத்திக் காணிக்கைகளில் கோடி குவித்துவிட முடியுமா என்ன! காருண்யமே இல்லாமல் ஒரு கல்லூரி,  ஜெப ஊழிய கோபுரங்கள், விசுவாசமாகக் காசைக் கலெக்ட் செய்து கொட்டும் அடிமைகள் என்று ஊர் ஊராக பிரான்ச் ஆரம்பிக்க முடியுமா என்ன?

இங்கிலாந்துப் பாதிரி ஒருவர் புலம்புவதை இங்கே படிக்க!  

The church has been tone deaf and dumb on the scandal for so long that it’s shocking, but not surprising, to learn from The Times’s Laurie Goodstein that a group of deaf former students spent 30 years trying to get church leaders to pay attention.

“Victims give similar accounts of Father Murphy’s pulling down their pants and touching them in his office, his car, his mother’s country house, on class excursions and fund-raising trips and in their dormitory beds at night,” Goodstein wrote. “Arthur Budzinski said he was first molested when he went to Father Murphy for confession when he was about 12, in 1960.” இப்படி நடந்த அசிங்கத்தை சொல்லிவிட்டு அப்படியே சந்தடி சாக்கில் போப்புக்குப் பதிலாக நோப் வர வேண்டும் என்று, மகளிர் இட ஒதுக்கீட்டைக் கேட்கிறார் இந்தப் பெண்மணி!


நான் அப்படித்தான் இருப்பேன்! எவன் எப்படிச் சொன்னால் எனக்கென்ன என்று அலட்சியம் காட்டும் போப்! வீடியோவில் பார்க்க!


 
******

நண்பர் அமர்ஹிதூர், முந்தைய பதிவில், பாதிரி சில்மிஷங்களைப் பற்றித் தொட்டு எழுதியிருந்ததற்கு, எல்லாமே அழுகிப் போனது தான், இதில் அது என்ன இது என்ன என்கிற மாதிரி ஒரு கேள்வியை  எழுப்பியிருந்தார். பொதுவாக, ஒருவருடைய தனிப்பட்ட நம்பிக்கை அது எப்படிப்பட்டதாகவே இருந்தாலும், அதை விமரிசிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால், ஒருவருடைய நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை, பொதுத் தளத்திற்கு வரும்போது அது விமரிசனத்திற்கு உட்பட்டது தான்! அது, இது, எதுவாக இருந்தாலுமே!

பதிவைக் கொஞ்சம் கவனித்துப் படித்தால், நித்தியானந்தாவாகட்டும், ஜெயேந்திரராகட்டும், அல்லது சில்மிஷங்கள், பாலியல் வக்கிரங்களில் ஈடுபடுகிற பாதிரிகள் எவரானாலும், தவறு செய்தவன் தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் எனக்குக் கருத்து மாறுபாடே இல்லை. அதே நேரம், இப்படி சில சில்லறைகள் செய்யும் சில்மிஷங்களை வைத்து, ஒட்டு மொத்தமாக ஒரு நம்பிக்கை, அல்லது மரபுகளை பொத்தாம் பொதுவாகக் கையை நீட்டி விமரிசித்து விட முடியாது என்பதிலும், நான் தெளிவாகவே இருக்கிறேன்.

ஸ்ரீ அரவிந்தர், அன்னையிடம் எனக்கிருக்கும் ஈடுபாட்டைக் குறித்துக் கூட சில கேள்விகள், அது மட்டும் ஒழுங்கோ என்ற மாதிரியான கேள்விகள் வந்திருக்கின்றன. அங்கேயே கூட, என்னுடைய அனுபவங்கள் மட்டுமே என்னுடைய நம்பிக்கையைத் தீர்மானிக்கின்றன என்பதைச் சொல்லி இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கைகளை எவர் மீதும் திணித்ததில்லை, ஏற்றுக் கொண்டாகவேண்டும் என்று எதிர் பார்த்ததுமில்லை. எதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்  கொண்டுவிடுகிற பழக்கம்  இல்லை. அதே நேரம், கேள்விகள் என்பது உண்மையைத் தேடுவதற்காகவே, புரிந்து கொள்வதற்காகவே!

இங்கே தமிழகத்தில் என்ன நடந்தது?


நித்தியானந்தா -ரஞ்சிதா விவகாரம், என்னவோ வெடிகுண்டு  வந்து விழுந்து விட்ட மாதிரி, பூமிப் பந்து சுழல்வது அப்படியே நின்று போன மாதிரி, இங்கே ஊடகங்களால், திரும்பத் திரும்ப பதிவர்களால் பேசப் பட்டுக் கொண்டே இருந்தது. அடுத்தவன் படுக்கையை எட்டிப் பார்க்க விரும்புகிற அற்பத்தனத்தைத் தவிர, அந்த செய்தியால் வேறு எந்தப் பயனுமே இல்லை! நித்தியானந்தாவோடு  வேறு வகையான பேரம் படியாமல் போனதால், இந்த விவகாரம் கிளப்பப் பட்டது என்று ஒரு வலுவான சந்தேகம் விவரம் தெரிந்தவர்களால் எழுப்பப் படுகிறது. இன்னொரு ஊடகம், இதை ஸ்பெஷல் எடிஷனாகப் போட்டு, காசு பார்த்தது! பர்மா பஜாரில் ஐநூறு   முதல் எண்ணூறு ரூபாய் வரை  சிடிக்கள் விற்பனையான வேடிக்கையும் கூட  நடந்தது என்றால்....!
தொழில் முறை நீலப் படங்கள் கூட இந்த அளவுக்கு விலை போவதில்லை என்று நண்பர்கள் சொல்லக் கேட்கும்போது  இதை என்னவென்று சொல்வது?பரபரப்புச் செய்திகளாக வருவதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிற போக்கை,  எங்கே போகிறோம் என்ற இதே  கேள்வியை முன்னால் புவனேஸ்வரி விவகாரம் இங்கே பற்றிக் கொண்டு எரிந்த தருணத்திலும் எழுப்பியிருக்கிறேன். அதை இங்கேயும் பார்க்கலாம்!

கிறித்தவ நிறுவனங்கள் தொண்டு என்ற பெயரில் நிறைய இடங்களில் சில்மிஷங்கள், பல சமயங்களில் சண்டியர்த்தனங்களோடு  கூடஇருந்ததுண்டு என்பதை நிறைய சம்பவங்களைத் தொகுத்து என்னால் தர முடியும். ஆனால், அதைத் தொட்டு எழுதுவது, மத நம்பிக்கைக்கு எதிரானது என்ற அளவில் மட்டுமே குறுகிப் போய்விடக் கூடியதாகிவிடுமே என்பதால், பொதுவாக எந்த ஒரு மத நம்பிக்கை, பழக்கங்களையும் தொட்டு எழுதுவதில்லை. சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் நாவலில் கூட இந்தக் கிறித்தவத் தொண்டு எப்படி இருந்தது  சட்டம் எப்படி இருந்தது என்பதை ஒரு இங்கே சாம்பிள் பார்க்க முடியும்.

 மத குருமார்கள் எப்படி ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள், அதையே வேத வாக்காக எடுத்துக் கொள்பவர்கள் பலர்   என்ன மாதிரிக் கொடும் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை இந்த பக்கங்களின் பல பதிவுகளில் பார்க்க முடியும்! இதில் எந்த ஒரு ப்ரான்டையும் விட்டு விடவில்லை! 

இந்த தேசம், மக்கள்  எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? இந்தக் கேள்வியைக் கேட்டு, சரி செய்துகொள்ளாமல் போனால் என்னவாகப் போகிறோம் என்பதை எந்த அருள் வாக்குச் சித்தர்களிடம்,  ஜெப ஊழியம்  செய்து அற்புதங்களை என்னவோ நாயர் கடை டீ போல வியாபாரம் செய்து கொண்டு இருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

எங்கே போகிறோம்? இந்தக் கேள்வி வாழ்க்கையில், ஒவ்வொரு தருணத்திலும் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியது, பயணம் செய்யும் பாதை சரிதானா என்பதில்  .கவனமாக இருக்க வேண்டியது என்பதைத் தவிர வேறு இதற்கு மேலும் என்ன சொல்ல முடியும்?



 

சண்டேன்னா மூணு! அதில் மூணு படம்! படம் சொல்லும் பாடம்!

பிரேமானந்தா, நித்யானந்தா விவகாரம்  மனித இயல்பாக ஆண் பெண் உறவு என்ற அளவில் தான் இருந்தது! ஏற்படுத்திவைத்திருந்த புனித பிம்பம், சிலருடைய சுயநலன்களுக்காக போட்டு உடைக்கப் பட்டது என்ற அளவில், அவனவன் செய்ததுக்கேற்ற பலனை அல்லது தண்டனையை அனுபவித்து விட்டுப் போகட்டும் என்று போக முடியும்! தப்பு செய்தவன், தண்டிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமே இல்லை!

அதே நேரம்,  ஒரு கொலை வழக்கில், அப்ரூவர் உட்பட வரிசையாக இது வரை, 57 சாட்சிகள் தாங்கள் முன்னால் சொன்னதற்கு மாறாகப் பிறழ் சாட்சியம் அளித்து, அந்த வழக்கை ஒன்றுமே இல்லாமல் பிசுபிசுத்துப் போக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்குப் பின்புலம் என்ன,  அரசியல், பணபலம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே, அதைப் பற்றி எந்த ஊடகமும், கழகமும் கண்டு கொள்ளவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?

இந்தப் பிறழ் கூத்து எல்லாம் இங்கே தான்!

அங்கே, வாடிகன் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் விவகாரங்களெல்லாம், இப்போது பொத்தல் பெரிதாகிப் போனதால்  வெளியே வந்து நாறிக் கொண்டே இருக்கிறது! பாதிரிகளுக்கு செக்ஸ் சில்மிஷம் செய்வதற்கு சிறுவயதுப் பையன்கள் தான் வேண்டுமாம்! அப்படி, போப்பின் சுற்றுப் பரிவாரங்களுக்கு சிறு பையன்களை ஏற்பாடு செய்து தந்த ஒரு உள்வட்டப் பாதிரி சிக்கியதில் இருந்தே, இப்போதுள்ள போப் பெனெடிக்ட் மீது, பாலியல் சில்மிஷம், பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப் பட்டவர்கள் தொடர்ந்து புகார்கள், வழக்குகள் என்று தினசரி மேற்கத்திய ஊடகங்களில் பரபரப்பாக இருக்கிறது. 

வாடிகன், பாதிரிகள் மீதான சூடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, அவர்கள் செய்த சில்மிஷங்களைப் போல!

செய்தியின் முழு வடிவமும் இங்கே!

டொனால்ட் மார்ஷல் என்கிற 46 வயது மெக்கானிக், போப் பெனெடிக்ட் பாதுகாக்கும் பாலியல் வக்கிரப்  பாதிரி மர்பியால் பாதிக்கப் பட்டவர் சொல்கிறார்: "போப் ஆவதற்கு முன்னால், மர்பி என்ன செய்தாரென்று நன்றாகத் தெரிந்தும், அதைக் குறித்து ஒன்றுமே செய்யாமல்  இருந்த ஒரு நபரைப் பற்றித் தான் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம்!"  இவர், 1977 ஆம் ஆண்டு, பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்தபோது, பாதிரி மர்பியால் பாலியல் வக்கிரத்துக்கு ஆளானவர். மேலும் சொல்வது, " இந்த போப் ஒரு மோசடிப் பேர்வழி, ஒரு வேஷதாரி!" 

தன்னுடைய மோசமான அந்தத் தருணங்களை டொனால்ட் இப்படி நினைவுபடுத்திச்  சொல்கிறார்! அவருடைய அறைக்குப் பாதிரி மர்பி வந்தார், பக்கத்தில் அமர்ந்தார். பைபிளை வாசிக்க ஆரம்பித்தார். "அப்புறம் என்னுடைய முழங்காலில் கையை வைத்தார், முத்தமிட ஆரம்பித்தார், அப்புறம் அவருடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அப்போது எனக்குப் பதின்மூன்று வயது தான்.".


பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றம் செய்வதற்கு, பைபிள் வாசிப்பது ஒரு வழி! என்ன ஒரு கொடுமை?

பாதிரியார்களால் கெடுக்கப் பட்டவர்களுக்கான நிவாரண அமைப்பு 
(Survivors Network of Those Abused by Priests) ஒன்றின் இயக்குனர்  பீடர் ஐஸ்லி,  "பெனெடிக்ட்  இது சம்பந்தமாக அனைத்துத் தகவல்களையும் தரவேண்டும், இங்கே சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறையை  மூடி மறைப்பதற்கு, மேலே இருப்பவர்கள் செய்த சதியை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்!" என்று சொல்கிறார்!

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி இங்கே

இதை எழுதிய பிரான்க் ப்ரூனி ஏனோதானோவென்று எழுதியவர் அல்ல! வாடிகனில் பல வருடங்களாக செய்தியாளராக இருந்திருக்கிறார்.1993 இல்  “A Gospel of Shame: Children, Sexual Abuse and the Catholic Church,” என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்..  2002 இல் இதன் திருத்தப்பட்ட பதிப்புக் கூட வந்திருக்கிறது. 


 

வீடியோவைப் பார்ப்போம். நமக்குத் தெரிந்ததெல்லாம், அது ஒன்று தானே!
oooOooo 
தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுவதில், பீற்றிக் கொள்வதில் அமெரிக்காவுக்கு நிகர் அமெரிக்கா மட்டும் தான்! 
ஸ்டாப், ஸ்டாப், நான் கூகிள் பிரச்சினையைப் பேச வரவில்லை! 

அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில்,  பிஸ்கடாவே என்ற நகரம்! போன வருடம் மட்டும், நானூறுக்கும் மேற்பட்ட புகார்கள், நாய்கள் அதிக சத்தம் போட்டுக் குரைப்பது தொந்தரவாக இருக்கிறதென்று! 

நம்மூராக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான்! 

ஆனால் அங்கே, நாய்கள் குரைப்பது ஒரு எல்லைக்கு மேல் அதிகமாக இருந்தால், நாயின் உரிமையாளருக்கு அறுநூறு டாலர்கள் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்கள்!



யூட்யூபில் இந்த செய்தியை  முதலில் பார்த்தது ஐடிஎன்  செய்திகளில் தான்! அங்கே பார்த்த சுவாரசியமான இரண்டு பின்னூட்டங்கள்.


--அடுத்தாற்போல அவர்கள் அழகாயில்லை என்பதற்காக அபராதம் விதிப்பார்களோ?


-- நாய் என்றால் குரைக்க வேண்டும், இல்லையா?
அமெரிக்கா! ஓ,  அமெரிக்கா!
 
oooOooo 


படம் பாத்தீங்க இல்லையா! நீங்களே பதவுரை, பொழிப்புரை எல்லாம் எழுதிக்குங்க! அப்படியே, இப்படிப்பட்ட ஆசாமிகளிடம்  நம்முடைய பிரதமர் எதுக்கு மண்டியிட்டு, ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்னு முடிஞ்சா பின்னூட்டத்தில் வந்து சொல்லுங்க!
oooOooo
 
நம்மூரில் கல்யாணம்,  கருமாதி, தேர்தல் இப்படி என்ன வந்தாலும் ஒருகாலத்தில் கூம்பு வடிவ ஸ்பீக்கர்கள் எட்டு மைல் சுற்றளவுக்குக் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கும். 

இப்போது நாகரீகமாக பத்தடி உயரத்திற்கு பாக்ஸ் ஸ்பீக்கர்களை வைத்து உயிரை வாங்குகிறார்கள்.  

பரீட்சை  நேரம், வானொலியின் ஒலி அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள், படிக்கிற மாணவர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் என்ற நளினமான அறிவிப்புக்கள், கேட்டுக் கொண்டிருந்ததெல்லாம் முன்னொரு காலம்! கனவில் தான் மறுபடி பார்க்க முடியும் போல இருக்கிறது!

என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இரண்டு பிள்ளைகள்! பெண் இப்போது தான் +2 பரீட்சை முடிந்தது! அடுத்து ஒரு பையன், பத்தாவது வகுப்பு பப்ளிக் எக்ஸாம் எழுதிக் கொண்டிருக்கிறான்! அம்மாக்காரி, வீட்டில் டீவீயைப் பெரிதாக அலற விட்டுக் கொண்டு, படம் பார்த்துக் கொண்டிருக்கிறாள்! அல்லது  பெரிதாக சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாள்! பிள்ளைகளிடம் வம்பு அல்லது செல் போனில் உறவுக்காரர்கள் எவரிடமாவது வம்பு, எல்லாம் எட்டுத் தெருவுக்கு கேட்கிற  மாதிரித் தான்! 

பிஸ்கடாவே சட்டம் இங்கும் வந்தால் எப்படி இருக்கும்?
 

தினமணி கேள்வி! இன்னும் தயங்குவது எதற்காக?

 
நம் ஒவ்வொருவரையும் பாதிக்கும் விஷயம் இது!

செய்தித் தாட்களில் ஒரு வாரகாலமாகவே பரவலாக செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அங்கே ஒருவர் கைது, இரண்டு பேரைத் தேடுகிறார்கள், ஒரு கடைக்கு சீல் வைத்து விட்டார்கள்....! இப்படி! 

நித்யானந்தா-ரஞ்சிதா விவகாரத்தை மாய்ந்து மாய்ந்து எழுதிய பதிவர்கள் எவரேனும் இதைத் தொட்டு எழுதினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை! நித்தியானந்தாவைக் கைது செய், சொத்துக்களைப் பறிமுதல் செய் என்று ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்கள் எவராவது, இதற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்களா என்பதும் தெரியவில்லை! மருத்துவப் பணியில் இருந்து கொண்டே, பதிவர்களாகவும் இருக்கும் சிலராவது, ஒரு சமூகப் பொறுப்புடன் இதைப் பற்றிய பதிவுகள் ஏதாவது எழுதினார்களா? வாசகர்கள் நீங்கள்தான், தகவல் தெரிந்தால் எனக்கு சொல்ல வேண்டும்!

ஐந்து நாட்களுக்கு முந்தைய தினமணி நாளிதழின் தலையங்கம்  இது! உள்ளது உள்ளபடி செய்தியைச் சொன்னதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுக்களையும் சொல்வதாக இருந்தது.  


"காலாவதியான மருந்துகளை மீண்டும் புதிய தேதி அச்சிட்டு, மருந்துக் கடைகள் மூலம் விற்பனை செய்ததாக அண்மையில் சென்னையில் 7 பேர் கைது  செய்யப்பட்டனர். இதில் காவல்துறை அறிவிப்பும், தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் நடவடிக்கையும் சரியானதாக இருந்தாலும்கூட, இதில் வெளிப்படாத அல்லது மறைக்கப்படும் ரகசியங்கள் பல இருக்கவே செய்கின்றன.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் வழக்க முறை பற்றிக் குறிப்பிடுகையில், கொடுங்கையூர் அருகே குப்பைமேட்டில் கொட்டப்படும் மருந்து மாத்திரைகளை  எடுத்துவந்து அதன் மீது புதிதாகத் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகளை அச்சிட்டு, புத்தம் புதிதாக (அதாவது, மருந்துக் கடைக்காரர்களே ஏமாறுகிறவிதத்தில்) மருந்துக் கடைகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் மாநிலங்களைக் கடந்து செயல்படும் கும்பல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதைப் போல மாத்திரைகள் தனியார் மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டிகளில்கூட கிடைப்பதில்லை என்கிறபோது, இந்த மோசடிப் பேர்வழிகளுக்காக மட்டும் தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது என்பது முதல் தகவல் அறிக்கைக்கு வேண்டுமானால் வலு சேர்க்குமே தவிர, வெறும் வாதத்திற்குக் கூட எடுபடாது.

இத்தகைய மாத்திரை, மருந்து, டானிக்குகளை குறிப்பிட்ட கும்பல் ஒவ்வொரு மருந்துக்கடைக்கும் சென்று, சேகரித்து வந்து, குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வைத்து, இவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதிகளை மாற்றி அச்சிடுதல் அல்லது புதிய லேபிள் ஒட்டுதல் ஆகிய பணிகளைச் செய்து, மீண்டும் மறுசுழற்சிக்காக மருந்துக்கடைகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் என்பதும்கூட, செலவுமிக்க நடைமுறைதான். மோசடி செய்பவர்களுக்கு இதில் அதிக லாபம் கிடைக்காது.

காலாவதியான மருந்துகளை மீண்டும் சந்தைக்கு அனுப்புவதை, மாத்திரைகளைத்  தயாரிக்கும் நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்துக்கான மாநில அளவில் அல்லது தென்னிந்திய விற்பனை உரிமை பெற்றுள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமே செய்ய முடியும்.

அவர்களை அடையாளம் காண்பதும் அரசுக்கு எளிது. அத்தகைய நபர்கள் யார் என்று கண்டறிவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும்தான் இந்தப்  பிரச்னைக்கு உடனடித் தீர்வாக அமையுமே தவிர, வெறுமனே எல்லா மருந்துக்கடைகள் மீதும் சந்தேகத்தின் பலனைத் திருப்பிவிடுவதால் பயனில்லை.

தமிழ்நாட்டில் 42,000 மருந்துக் கடைகள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் குறிப்பிடுகிறார். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் நகர்ப்புறங்களில் இருப்பவை.

நகர்ப்புறங்களில் இருக்கும் 90 விழுக்காடு கடைகள் கணினி மூலம் ரசீதுகள் வழங்குபவை. கணினி திரையில் மருந்துகளின் இருப்பு மட்டுமன்றி, அவற்றின் காலாவதி தேதிகளும் தெரியும் வகையில் மென்பொருள் உள்ளன.

காலாவதியான மாத்திரைகளை மருந்துக்கடைக்காரர்கள் தனியே பிரித்து வைப்பதும், அவற்றை தமக்கு விநியோகம் செய்த மொத்தக் கொள்முதல் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து அதற்கான தொகையைப் பெறுவதும் நடைமுறையில் உள்ளது.

மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக்  கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும்  மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.

மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்?

நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன? பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?

ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?

எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின்பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.

மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப்படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத்துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்? 42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே?  அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?"


மதுரை சோமசுந்தரம் காலனியில், ஸ்டேட் வங்கி எதிரே இருக்கும் மருந்துக் கடை ஒன்றில், எனக்குத் தெரிந்த பெண்மணி மருந்து வாங்கப் போனார். காலாவதியாகிப் போன தேதியுடன்  இருந்த ஒரு மருந்து அட்டையைக்  கடையில் இருந்த இளைஞர்  கொடுத்தார்.
தற்செயலாக, எக்ஸ்பைரி தேதியைக் கவனித்த அந்தப் பெண்மணி  கடைப் பையனிடம் கேட்ட
போது , சர்வ அலட்சியமாக "அதனால் என்ன?" என்று அலட்சியமாகக் கேட்ட படியே, அட்டையை மாற்றிக் கொடுத்த சம்பவம் மிக சமீபத்தில் தான் நடந்தது, என்னுடைய கவனத்திற்கும் வந்தது.

என்டிடிவி செய்தி இது! 

இப்போதைய நிலவரம், டாக்டர்களுக்கும் இதில் பங்குண்டு எனத் தெரிய வந்துள்ளதாக தினமணியின் இன்றைய செய்தி சொல்கிறது.

"மருந்து மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனம்,​​ அதிக பிரபலம் இல்லாத பல சிறிய மருந்து உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஸ்டாக்கிஸ்ட் உரிமையைப் பெற்றுள்ளது.இந்த நிறுவனம்,​​ காலாவதியான மருந்துகளை கடைகளுக்கு மட்டுமின்றி டாக்டர்கள் பலருக்கும் விநியோகித்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மருந்து மோசடியில் மருந்து விற்பனையாளர்களை மட்டும் குறி வைக்காமல்,​​ சிறிய அளவிலான மருத்துவமனைகளையும்,​​ டாக்டர்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று மருந்து விற்பனையாளர்கள் போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர். "


உயிர்காக்கும் மருந்துகள் என்று நம்பித் தான் வாங்குகிறோம்! எச்சரிக்கையோடு இல்லாவிட்டால், மருந்தே எமனாகிவிடுவதை, இங்கே உள்ள அரசோ, அதிகாரிகளோ பொறுப்பாகச் செயல் பட்டுத் தடுத்து விடுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?


புள்ளிராசா வங்கி தந்த புள்ளி விவரச் சிங்கம், அண்ணாச்சி இந்தப் பதிவை வலையேற்றும் போது பின்னால் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்துவிட்டுக் கேட்டார்!

"அதெல்லாம் சரி! காலாவதியாகிப் போன மருந்தைப் புடிக்கிறதெல்லாம் சரி! இங்கே இந்தியாவில் வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள், அங்கே தடை செய்யப் பட்ட பல மருந்துகளை, சர்வ சாதாரணமாக விற்பனை செய்ய இந்திய அரசு அனுமதித்திருக்கிறதே, அதைக் கேட்க வேண்டாமோ? 

உதாரணமாக, பெட்டி கடைகளில் கூட சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் விக்ஸ் ஆக்ஷன் 500 வெளிநாட்டில் தடைசெய்யப் பாட்ட மருந்து, இதயத்தை பாதிக்கும் என்பதால்! அதே மாதிரி nimusilide என்ற பெயரில் வரும் வலி நிவாரணி கூட நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் வெளிநாடுகளில் தடை செய்யப் பட்ட ஒன்று.தெரியுமோ?" 
Even countries such as Bangladesh have banned Nimesulide for both adults and children, but the Indian government has turned a blind eye to the entire issue

Dr C M Gulati
Editor, Monthly Index of Medical Specialities (MIMS) Read more here


Some of banned drugs available in India
 
DANGEROUS DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA . The most common ones are D cold, action 500 &
Nimulid.

ANALGIN:
This is a pain-killer. Reason for ban: Bone marrow depression.
Brand name : Novalgin
____________ _________ _________ _________ _________ _________

CISAPRIDE:
Acidity, constipation. Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
____________ _________ _________ _________ _________ _________

DROPERIDOL:
Anti-depressant. Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
____________ _________ _________ _________ _________ _________

FURAZOLIDONE:
Antidiarrhoeal. . Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen

___________ _________ _________ _________ _________ _________

NIMESULIDE:
Painkiller, fever. Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
____________ _________ _________ _________ _________ _________

NITROFURAZONE:
Antibacterial cream.

Reason for ban :

Cancer..
Brand name : Furacin
____________ _________ _________ _________ _________ _________

PHENOLPHTHALEIN:
Laxative. Reason for ban : Cancer.
Brand name : Agarol
____________ _________ _________ _________ _________ _________

PHENYLPROPANOLAMINE :
cold and cough. Reason for ban : stroke.
Brand name : D'cold, Vicks Action-500
____________ _________ _________ _________ _________ _________

OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug. Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
____________ _________ _________ _________ _________ _________

PIPERAZINE:
Anti-worms. Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
____________ _________ _________ _________ _________ _________

QUINIODOCHLOR:
Anti-diarrhoeal. Reason for ban : Damage to sight.
Brand name : Enteroquinol




வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! இந்த முறை, பதிலுடன் !

இந்த முறை, பதிலுடன் சேர்த்தே!

வெளி நாடுகளில் நடக்கும் கூத்துக்களை அப்படியே இங்கே ஈயடிச்சான் காப்பியாகக் கொண்டாடுவது இப்போது ஒரு ஃபாஷனாகவே ஆகிவிட்டது!


நாளை இரவு ஒரு மணிநேரம், இரவு எட்டரை மணியில் இருந்து ஒன்பதரை மணிவரை மின்விளக்குகளைப் பயன்படுத்தாமல், புவிவெப்பம் அதிகரிப்பதைக் குறைக்கும் ஆர்வலர்கள் கடந்த 2007 இலிருந்து பூமி நேரம் என்று மார்ச் 27 ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள். இந்த ஒரு மணி நேர இருட்டடிப்பால், பிரமாதமான மின்சேமிப்போ, வெப்பமடைவது குறைவதோ நடந்துவிடப் போவதில்லை என்பது இதை ஏற்பாடு செய்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும், இதை ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கமாக மட்டுமே மேலை நாடுகளில் நடத்தி வருகிறார்கள்.

பதிவெழுதுவது தவிர என்ன செய்யலாம்?  

தொடர்புடைய முந்தைய பதிவு இங்கே!

புவிவெப்பமடைவதில், நாம் சாதாரணமாக உபயோகிக்கும் குண்டு பல்ப் முக்கியமான பங்கு வகிக்கிறது! குண்டு பல்புகளை உபயோகிப்பதை சுத்தமாகவே நிறுத்தி விடுவது ஒரு நல்ல ஆரம்பம்!

பழைய நீளமான குழல் விளக்குகளுக்குப் பதிலாக, சிறிய கைக்கடக்கமான சி எப் எல் விளக்குகளைப் பயன்படுத்துவது இன்னமும் கொஞ்சம் மின்சாரத்தை சேமிக்க உதவும். இதிலும் கூட வெண்மை ஒளிர்விடுவதற்காகப் பாதரசம் பயன்படுத்தப் படுகிறது, ஆக இதுவுமே ஒருவிதத்தில் கெடுதல் தான். எல் ஈ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்திருக்கின்றன, ஆனால் விலை மிக மிக அதிகம்!

சுற்றுச் சூழலில் கார்பன் அதிகரிப்பது குறைய வேண்டும் என்றால் அசைவ உணவைத் தவிர்த்தாலேயே கணிசமாகக் குறைக்க முடியும். சூரிய ஒளியை பயன்படுத்துவது பரவலாக வேண்டும். வீட்டுக்கருகே மரங்களை வளர்ப்பது நல்ல பயனைத் தரும். இதெல்லாம் தனிமனிதர்களாக, நாமே வருடம் முழுக்கச் செய்ய முடிந்தவை! நாம் வாழும் பூமியை நம்முடைய சந்ததிகளுக்கு நல்ல முறையில் விட்டுச் செல்வது ஒவ்வொரு தனிமனிதனுடைய கடமையும் கூட!

அரசு செய்யக் கூடியதென்ன?

முதலில்,இருப்பதை இன்னமும் கெடுக்காமல் இருந்தாலே அதுவே, இன்றைய நிலைமையில் இங்குள்ள அரசுகள் செய்யக் கூடிய பெரும் சாதனை!

சாலை விளக்குகளை, சூரிய சக்தியால் ஒளிர்விடச் செய்வது, கணிசமான மின்சார சேமிப்பாக இருக்கும். மாற்று எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். இப்போது, அப்படி ஒன்று நடந்து கொண்டிருப்பதே தெரியாமல், மிக குறைந்த அளவில், இத்தகைய முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

முக்கியமாக, பதினைந்து-இருபது வருடங்களுக்கு மேலான லாரிகள், ஆட்டோக்களைத் தடை செய்ய வேண்டும். புகை வெளிவிடும் சோதனை தற்சமயம் வெறும் கண்துடைப்பாக மட்டுமே நடந்து வருவதை, கடுமையாக நடைமுறைக்குக் கொண்டு வந்தாக வேண்டும். எரிபொருள் சிக்கனம் என்பது, தரமான சாலைவசதி இருந்தால் தான் சாத்தியம் என்பது அரசுக்கும் சரி, ரோடு போடும் போதே பின்னாலேயே பள்ளம் தோண்டிக் கொண்டே வரும் அரசுத்துறைகளுக்கும் மண்டையில் ஏற வேண்டும்!

******
மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில், முனைவர் நா.கண்ணன் துவக்கி வைத்திருக்கும் சுவாரசியமான ஒரு இழை இது! நல்லவேளை, கேள்வியும் நானே பதிலும் நானே என்று முக பாணியில் இல்லாமல் சாய்ஸ் கொடுத்திருக்கிறார்!

கேள்வியும் பதிலும்:

1. ஒரு இந்தியனை (இந்திய வம்சாவளியினர் என்று வாசிக்கவும்) தாங்கள் பார்த்தவுடன் இவன் ஆரியனா? இல்லை திராவிடனா? என்று உங்கள் உள்ளம் இனம் பிரிக்கிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை.

2. ஒரு தமிழனைத் தாங்கள் கண்ணுறும் போது இவன் பிராமணனா? இல்லையா? என்று உங்கள் மனது எடை போடுகிறதா?

விடை: 1. ஆம், 2. இல்லை

3. பொது மன்றத்தில் என் குரல் எப்போதும் உரக்கக் கேட்க வேண்டுமென்று எப்போதும் தோன்றுகிறதா?

விடை: (ஆம்/இல்லை)

4. பொது மன்றத்தில் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் எப்படிச் சொல்லலாம்?

1. முன்கோபி, 2. பொறுமைசாலி, 3. எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் மெய்பொருள் மட்டுமே காண்பவன்,

4. நான் சொல்வதே எப்போதும் சரி, 5. மற்றவரெல்லாம் மாங்காய் மடையர்களே.
இப்படி.... .............

மதுரபாரதி என்பவரிடமிருந்து உடனே வந்த பதில்!

"ஐயா,கேள்விகளிலிருந்தே என்ன பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதும், பொலிடிகலி கரெக்ட் விடையைக் கொடுத்து உள்நுழைவதும் அவ்வளவொன்றும் கடினமல்ல என்பதும் என்போன்ற தேக்குமர மண்டைக்கே தெரிகிறதே. :-)

அன்புடன்
மதுரபாரதி

******
மானாட, மயிலாடான்னு கண்ட கண்ட கழுதையை எல்லாம் ஆட விட்டுப் பாத்தாச்சு!

யானை ஆடினா எப்படி இருக்கும்?

அதையும் தான் பார்த்துவிடுவோமே! எத்தனையோ பார்த்து விட்டோம், இதையும் பார்த்துவிட மாட்டோமா?




tohfa.gif/attach/416b3814321925a1/tohfa.gif?gda=mLvYjkUAAABRQWGg2OklM_pktvslg5vM9D1DvrqZu5frvTW7dvGrfbMoIC_QoJz3PQU1VVL6gB6O3f1cykW9hbJ1ju6H3kglGu1iLHeqhw4ZZRj3RjJ_-A&view=1&part=4&hl=en-GB
  ஆனையார் சாதாரணமாக ஆடமாட்டாராம்! மேலே உள்ள தொடுப்பைச் சொடுக்கினால் அப்போது தனி விண்டோவில் வந்து ஆடுவாராம்! GIF படங்களில் உள்ள பெரிய லொள்ளு இது தான்.

இந்த படம் பண்புடன் கூகிள் வலைக் குழுமத்தில் பார்த்தது! நன்றி!








மேற்கே ஒரு பொற்கைப் பாண்டியன்!



இணையத்தில் எத்தனையோ பதிவுகளை, செய்திகளைப் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்! பொற்கைப் பாண்டியன் என்று  ஒரு பாண்டிய மன்னனைப் பற்றி ஒரு கதையும் உண்டு, நாலாம் வகுப்புப் படிக்கும் போது, ஐயா பொற்கைப் பாண்டியனாக, பள்ளி நாடகத்தில் நடித்ததும் உண்டு..

 
ஆனால், இப்படித் தங்கக் கை படைத்த மனிதனைப் பற்றிய செய்தியை படித்தபோது, தங்கக் கை, தங்கக் கை என்று சொல்கிறார்களே அப்படியென்றால் என்ன என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்த போது, மிகவும் நெகிழ்ந்தேன்!  
திக்கை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டேன்!இப்படியும் மனிதர்கள் இருப்பதனால் தான், எத்தனையோ அரக்க முகம், குணம் கொண்ட மனிதர்கள் நடுவே வாழும்போது கூட, எப்படி இந்த பூமி இன்னமும் ஈரமாக இருக்கிறது என்பது புரிந்தது.


இந்தத் தங்கக் கை மனிதரின் பெயர் ஜேம்ஸ் ஹாரிசன். வயது 74. ஐம்பது வருடங்களாக ரத்த தானம் செய்து வருகிறார். இது வரை 984 முறை ரத்த தானம் செய்திருக்கிறார் என்ற செய்தியே மிகப் பெரிய சாதனை! அதை விட முக்கியமான விஷயம், இவருடைய ரத்த தானத்தினால் இது வரை சுமார் இருபத்திரண்டு  லட்சம் குழந்தைகள் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது தான்!

இவருடைய ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில்  மிக அபூர்வமான ஒரு விஷயம், நோய் எதிர்ப்புத் திறன் anti-body, என்று சொல்லப்படுவது இருக்கிறது. கடும் ரத்தச் சோகையால் பாதிக்கப் படும் குழந்தைகளுக்கு வரும் ரீசஸ் என்ற நோயைத்  தடுப்பதாக  இந்த ஆன்டி-பாடி இருக்கிறது, மரணத்தில் இருந்து காப்பாற்றுகிறது என்பது தெரிய வந்தவுடன்,  லட்சக்கணக்கான கருவுற்ற  பெண்களுக்கு இவர் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மா கொடுக்கப் பட்டதில் இது வரை இருபத்திரண்டு லட்சம் குழந்தைகள் ரத்தச் சோகை நோயில் இருந்து, மரணத்தின் பிடியில் இருந்து காப்பற்றப் பட்டதாக ஒரு மதிப்பீடு சொல்கிறது.


தன்னுடைய பதினெட்டாம் வயதில் இருந்து ரத்த தானம் செய்து வரும் திரு ஹாரிசன், இது வரை 984 தரம்  ரத்தம் கொடுத்திருக்கிறார். தன்னுடைய பதினான்காம் வயதில் மார்பில் ஒரு ரண சிகிச்சைக்காக 1.3 லிட்டர் ரத்தத்தைத் தானமாகப் பெற்றபோது எடுத்துக் கொண்ட உறுதி, தானும் ரத்த தானம் செய்வது. ரத்த தானம் செய்வதை நிறுத்துவது என்பதை நினைத்தே பார்த்ததில்லை என்று சொல்கிறார் திரு ஜேம்ஸ் ஹாரிசன்.

தன் பிள்ளை வாழ ஊர்ப் பிள்ளைகளைப் பலி கொடுக்கும் நவீன மனு நீதிச் சோழர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் துர்பாக்கியமான நேரத்தில், இப்படி ஒரு தங்கக் கை மனிதரைப் பற்றிப் படிக்க முடிந்ததே, முகத்தைப் பார்க்க முடிந்ததே பெரும் புண்ணியம் தான்!


அங்கே வந்த ஒரு அனானி கமெண்டில், இது எப்படி சாத்தியம் என்பதை ஒருவர்  சொல்லியிருப்பதையும் பாருங்கள்! இங்கே தமிழ்ப் பதிவுலகில்  அனானிகள் என்றாலே  அபத்தம் என்ற அளவுக்கு இருப்பதைப் போல அல்லாமல், எப்படி இன்னும் கொஞ்சம் விவரம் கிடைக்கிறது என்பதையும் பாருங்கள்!

எடுப்பும், தொடுப்பும்! 

எடுப்பு !

முந்தைய பதிவில் பேசினோமே, கூகிள் விவகாரம்!

சீன மக்களுக்கு ஜனநாயக உரிமைக்காகப் போராடி, அதில் கரை சேர முடியாமல் கூகிளார் வெளியேறினாரா?
அல்லது, சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று எம்பி எம்பிப் பார்த்துத் தோற்ற நரி, ஒதுங்கிப் போனதே அந்தக் கதையில் வருவதைப் போலவா? நான் சொல்லவில்லை, அமெரிக்கப் பத்திரிக்கை, Forbes  சொன்னது! போன ஜனவரி மாதம் விவகாரம், முத்திக் கடைத் தெருவுக்கு வந்த போதே! தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பவர்கள் படியுங்கள்!

தொடுப்பு!

முந்தைய பதிவு ஒன்றில் திரு வால் பையன் அருண், ரீடரில் இன்னமும் 180 பதிவுகளைப் படிக்க வேண்டியிருப்பதாக, தான் என்ன  செய்வது என்ற ரீதியில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். மீண்டும் பொது புத்தியில் சேராமல், பதிவின் உள்ளடக்கத்தை விட்டு விலகாமல், ஜேம்ஸ் ஹாரிசனைப் பற்றிய பதிவில் உருப்படியான பின்னூட்டத்தை எழுதியிருக்கும் அந்த ஆங்கில அனானியின் பதில் வால் பையன் அருணுக்கு சமர்ப்பணம்! 
Anonymous said... 
 
I've worked in a transfusion service for over 30 years. Without having the entire picture, my guess is that this man is Rh negative and has anti-D (Rheusus factor) in his blood as a result of being transfused with Rh positive blood during his surgery. If he needed 13 units, it's possible there wasn't enough Rh negative blood in stock and he was given Rh positive blood. In response, his body started to produce anti-D. Anti-D isn't rare. What is rare is finding a selfless person willing to donate blood repeatedly. His blood isn't being used for transfusions. I believe they are using his antibody to produce Rh Immune Globulin. This prevents pregnant women from producing antibody against their unborn babies. Vickie is correct. Fifteen percent of the population is Rh negative. Even Rh positive people may be heterozygous for the gene, meaning their children may be Rh negative. Their are 57 comments posted already. Statistically speaking, about 8 or 9 of you geniuses have Rh negative mothers and might not be alive if your mothers didn't receive RhIG.

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா?!


டைம் பத்திரிக்கை இப்படி ஒரு படமும் போடுகிறது. கீழேயே இப்படி ஒரு செய்தியையும் சேர்த்தே பரிதாபமாகச் சொல்கிறது:
Repercussions

"Although Google represents only about 30% of searches in China (Baidu, a Chinese-run company that is close to the government, is the leader), analysts say the country could become one of Google's most lucrative markets and that a withdrawal would have serious implications for Google's long-term bottom line."
 
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போய் விடுமா என்ன?! நிச்சயமாக ஆமாம், பூனைக்கு மட்டும்!

கூகிள் கதையும் கண்ணை மூடிக் கொண்ட பூனை, உலகமே இருட்டாகிவிட்டது என்று சொல்வது போலாகிவிடுமா என்பது 99 ரூபாய் நோட்டு மாதிரி, செலாவணி அல்லது ஆகாத நிலை நிரூபிக்கப் படும் வரை வெறும் பிரசாரமாக மட்டுமே இருக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருக்கிறது. போய்விடுவேன், போகப் போறேன், என்று உதார் விட்டுக் கொண்டே இருந்த கூகிள் ஒரு வழியாக, குப்புறக் கவிழ்ந்து குட்டிக் கர்ணம் அடித்து உருண்ட பிறகு மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இப்போது ஜகா வாங்க ஆரம்பித்திருக்கிறது!

நேற்று வரை  எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, தானே முன்வந்து சீன அரசுடன் ஒத்துழைக்கிற விதத்தில், சீன அரசுக்குப் பிடிக்காத அலெர்ஜியான செய்திகளை முந்தித் தணிக்கை செய்து கொண்டிருந்தார்கள். 


எதிர்பார்த்த அளவுக்கு, அங்கே மார்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அதனால் கூகுளுக்கு   இப்போது திடீரென்று மனித உரிமைகள் மீது அக்கறை பிறந்து விட்டதாம்! இனிமேல் சீனச் செய்திகளைத் தணிக்கை செய்து கொள்ளப் போவது இல்லையாம், கூகிள் ஹாங்காங் தளத்துக்குத் திருப்பி விடப் போகிறதாம்!

நிக்சன் காலத்தில் இருந்து சீனாவுடன் இழையோ இழை என்று இழைந்து கொண்டிருந்த இத்தனை நாளில் உதார் விடுவதையாவது ஒழுங்காகக் கற்றுக் கொண்டிருக்கலாம்! பாவம் அமெரிக்கா! உலகத்துக்கே தாங்கள் தான் கற்றுக் கொடுக்கப் பிறந்தவர்கள் என்ற நினைப்பு, மமதை, சீன உதார் முன்னால் எடுபடாமல் பிசுபிசுத்துப் போய்ப் பரிதாபமாக, அடுத்தது என்ன என்பது கூடத் தெரியாமல் முழியோ முழி என்று முழித்துக் கொண்டிருக்கிற பரிதாபம் ஆரம்பித்து விட்டது.


மேற்கத்திய ஊடகங்கள், சீன இணையப் பயனர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன. கூகிள் வெளியேறி விட்டால், சீன இணையத்தில் இருட்டு மட்டுமே மிஞ்சும் என்ற அளவுக்கு, நாற்பது கோடி இணையப் பயனாளர்கள்  கொண்ட சீனச் சந்தைக்கும், உலகத்திலேயே மிகப் பெரிய தேடு பொறியாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் கூகுளுக்கும் ஒரு மல்லுக்கட்டு யுத்தம் ஆரம்பித்திருக்கும் இந்தத் தருணத்தில், ஊடகங்கள் கிளி ஜோசியம், குறி சொல்வது போல கூகுளுக்குச் சாதகமாகவே பேசிக் கொண்டிருக்கின்றன.


ஆனால் நிலைமையை கவனித்துக் கொண்டிருப்பவர்கள் கூகிள், தனது மமதையை அளவுக்கு அதிகமாகவே இந்த விஷயத்தில் வெளிக் காட்டிவிட்டு, தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். ஏற்கெனெவே ஜனவரி மாதம் இந்தப் பதிவில் இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?

கூகிள் தேடல் சீனாவைப் பொறுத்தவரை சீன அரசு நினைத்து நினைத்து சென்சார் செய்யப் படவேண்டியவை எவை என்பதைப் பொறுத்து மட்டுமே  இருக்கவேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டதாக, பச்சையாகச் சொல்வதானால் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே தான் சீனாவுக்குள் நுழைந்தது.  


இன்னும் தோலுரித்துச் சொல்ல வேண்டுமானால், சீனாவுக்குள், மனித உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் எவர் தேடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை சீன அரசு அறிந்துகொள்ளத் தோதாகத் திறவு கோல்களைக்  கொடுத்ததே கூகிள் தான்!  

திறவுகோல்கள், கூகிளின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்து விடும் அளவுக்கு,  கூகிளின் செர்வர்களுக்குள் உளவறியும் நிரலிகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தது. எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்த கூகிள், சீன அரசு இதன் பின்னணியில் இருப்பதை உறுதி செய்த பிறகு, சீனாவுக்கென்று பிரத்தியேகமான தணிக்கை செய்து கொடுக்கும் தேடுபொறி வசதியை நிறுத்திக் கொள்வது என்ற முடிவையும், சீனாவில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாகவும் செய்தியை வெளியிட்டது.

இந்தச் செய்தியை பாருங்கள்!

/ Google has “evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists,” according to a posting by the company’s Chief Legal Officer David Drummond on Jan. 12. He said Google now plans to stop censoring results at its Chinese search engine, a move that may lead to the company shuttering its local Web site and offices, pending talks with the government. /


இன்னும் கொஞ்சம் விரிவாகவே இந்தப் பதிவில் சொல்லியிருந்தது:


கூகிள் -சீன த்வந்த யுத்தத்தில், வெளியே அதிகம் விவாதிக்கப் படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன!

உலகம் முழுக்க கூகிள் நான் தான் நம்பர் ஒன் என்று மார்தட்டிக் கொண்டாலும், சீனாவைப்  பொறுத்தவரை  கூகிள் இரண்டாவது இடத்தில் தான் இருந்துவருகிறது. உள்ளூர்த் தயாரிப்பான பைடூ டாட் காம் தான் அங்கே நம்பர் ஒன் தேடுபொறி!  தினசரி முப்பது கோடி வருகைகள், தேடுபொறி உபயோகத்தில், வருமானத்தில்  அறுபத்து மூன்று சதவீதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது! 

கூகிள் ஆண்டவர், அங்கே வெறும்  முப்பது  சதவீதம் தான் உபயோகத்தில் உள்ளார்! முதலிடத்தைப் பிடிக்க முடியாது , இனிமேலும் தாக்குப் பிடிக்க முடியாது என்ற ஒரு விஷயமே கூட, சீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற கூகுளின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் iResearch என்கிற சீன ஆராய்ச்சி நிறுவனம்  சொல்கிறது!

பீகிங் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டுப் பிறகு, நியூ யார்க் மாகாணப் பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த ராபின் லீ என்ற 41 வயது  இளைஞர் தாயகம் திரும்பியவுடன் இன்னொரு நண்பருடன் சேர்ந்து துவக்கிய பைடூ உள்ளூர் மக்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதில் தன்னுடைய தனித்தன்மையை நிலை நாட்டிக் கொண்டது. பாட்டு, பொழுதுபோக்கு என்று அலைந்த சீன இளைஞர்களுக்கு பைடூ நல்ல தளமாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை!

தகவல்களைத் தேடத் தேடு போறியா,அல்லது பொழுதுபோக்கத்
தேடு போறியா என்ற கேள்வியில், பொழுதுபோக்கு முதலிடம் பெற்றதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!

பைடு தளம் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது இது: 
"We know that a lot of interesting things are going on in the Internet space, but we don't want to lose focus. China's Internet search industry is only a newly discovered territory. We see vast untapped grounds in our home base and we believe there are still plenty of prizes to be claimed by the best players."

கூகிள் நினைத்துக் கொண்டிருப்பது போல சீன இணையப் பயனர்கள் கூகிளை மட்டுமே நம்பியிருக்கவில்லை. கூகிள் இருப்பதோ, வெளியேறுவதோ, அவர்களுடைய இணையப் பயன்பாட்டில் பிரமாதமான மாறுதல்களை உடனடியாகவோ, அல்லது சிறிது காலத்திற்குப் பிறகோ ஏற்படுத்திவிடப் போவதில்லை. அப்புறமும் எதற்காக இவ்வளவு பில்டப், பிரசாரங்கள், சீனாவே இருண்டு போய் விடும் என்ற அளவுக்கு பயம் அல்லது பிலிம் காட்டுகிற வேலையெல்லாம்?  

இன்றைய எகனாமிக் டைம்ஸ்  பத்திரிகையில் வெளியாகியிருக்கும் இந்த செய்தி, சீனா டைலி என்ற சீனப் பத்திரிகையை மேற்கோள் காட்டி,  கூகுளின் மமதையை எகத்தாளம் செய்திருக்கிறது. அதே செய்தியில் கொலம்பியா ப்ராட்காஸ்டிங் கார்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த எட் பர்னெட்  கூகுளின் இந்த முடிவு பரிதாபகரமானது தவிர்த்திருக்கப் பட வேண்டியது என்று சொல்கிறார். மேலும் அவர் சொல்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்!

He also believes that it is "arrogant thinking to assume that we know what's best for China, and our values can still work well in that very different culture; and it's an ignorant idea to believe threats and ultimatums can bring positive results, especially from such proud and sufficient people."

நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால், ஜனவரியில் இருந்தே போய்விடுவேன், போகப் போகிறேன் என்று உதார் விட்டுக் கொண்டிருந்த கூகிள், நேற்று திங்கள் கிழமையில் இருந்து, தன்னுடைய தேடுபொறியில் எந்தவிதமான தணிக்கையும் இருக்காது என்றும், தன்னுடைய செயல்பாடுகளை ஹாங்காங்கிற்கு மாற்றிக் கொள்வதாகவும்  திடீரென்று அறிவித்திருப்பதன் பின்னால், அமெரிக்க அரசின் கைவண்ணம் இருப்பது நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.

இரண்டு வாரங்களாகவே, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஒரு இழுபறி யுத்தம் வலுவாக நடந்துகொண்டிருக்கிறது. சீனக் கரன்சி ஈன ரென்மின்பி அல்லது யுவானின் மதிப்பை மார்கெட் நிலவரத்திற்குத் தகுந்த மாதிரி உயர்த்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருவதை சீனா நிராகரித்துக் கொண்டே வருகிறது. 


சீனக் கரன்சியின் மதிப்பு உயர்ந்தால், சீனாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி உயரும் என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறது. ஆனால், சீனாவோ, தன்னுடைய நாணய விகிதத்தைக் குறைந்த நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறது.  சீனா மறுத்தால், வரிவிதிப்புக்களை அதிகரிக்க வேண்டுமென்று அமெரிக்க காங்கிரஸ் (நம்மூர் ராஜ்ய சபா மாதிரி) பயமுறுத்திக் கொண்டிருப்பதற்கெல்லாம் சீனா அசருகிற மாதிரி இல்லை.

இது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள !


சென்ற ஞாயிற்றுக்கிழமை, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு சீன வர்த்தகத் துறை அமைச்சர் அளித்த பேட்டியில், அப்படி ஒரு வர்த்தகப் போர் மூளுமானால், அமெரிக்க மக்களும், அமெரிக்க நிறுவனங்களும் பெருத்த கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். சீன வர்த்தகத்தின் உபரி மதிப்பு, சீனாவின் முதலீடாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி டாலர்கள் அமெரிக்க முதலீடுகளாகச் செய்யப் பட்டிருக்கிறது. அதாவது, மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி, கடன்பட்டவன் கலங்குவது போல, அமெரிக்கா, சீனா விடுகிற உதார் வேற்று உதாரா, வெடி வைக்கும் உதாரா என்று தெரியாமல் கலங்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருக்கிறது.

சீனாவும், இந்தியாவும், ஏறத்தாழ ஒரே சமயத்தில் தான் விடுதலை அடைந்து, பல்வேறு இடைஞ்சல்களைச் சமாளித்து முன்னேறி வர வேண்டியிருந்தது. நம்மை விட, சீனர்களுக்கு இருந்த தடைகள், மிக அதிகம். நம்மை விட அதிகமான ஜனத்தொகை, விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள், நவீனக் கல்வியறிவோ, தொழில் நுட்பமோ, உதவிகளோ கிடைக்காமல் நம்மைவிடப் பின்தங்கியிருந்த நிலையில் இருந்து, குறிப்பாகக் கடந்த முப்பதே ஆண்டுகளில், உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசாக ஆகியிருப்பதோடு, தற்சமயம் இரண்டாமிடத்தில் இருக்கும் ஜப்பானை இந்த வருடக் கடைசிக்குள்ளாகவே முந்தி விடுவார்களென்றும் மதிப்பிடப் பட்டிருக்கிறது.

அங்கேயும் ஊழல் உண்டு.உள்ளூர் அரசியலில் ஏகப்பட்ட குளறுபடிகள், கோளாறுகள் உண்டு.ஆனாலும் சீன அரசியல் தலைவர்கள், தங்களுடைய நாட்டு நலனை மறந்து செயல் பட்டதில்லை. அந்நியனைத் தலைக்கு மேல் உட்கார்த்தி வைத்து, அவனுக்கு அடிமைகளாக இன்னமும் கைகட்டி ஒருபோதும் நின்றதில்லை. அமெரிக்காவோ, வேறு எந்த மேற்கத்திய நாகரிக கனவான்களும் வந்து நாகரீகத்தை உபதேசிக்கும் அளவுக்குத் தங்களைச் சிறுமைப் படுத்திக் கொண்டதில்லை. அமெரிக்கா உலகம் முழுவதும் சண்டியர்த்தனம் செய்து வரும் நேரத்தில், சண்டியர் பாச்சா சீனர்களிடம் பலிக்கவில்லை.

இன்னும் எத்தனை நாள்  அந்நியர்களிடம் தன்னை சிறுமைப் படுத்திக் கொள்ளும் காங்கிரஸ்காரர்களிடம் சிக்கி இந்த தேசம் முழுமைக்கும் சிறுமைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று  நினைக்கிறீர்கள்? முடிவு செய்ய நமக்கு இருக்கும் அவகாசம் மிகவும் குறைவு!


அடிமைத் தளையில் இருந்து இந்த தேசம் விடுதலை பெற வேண்டும் என்று போராடிய பகத் சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் பிரிட்டிஷ் அரசால் தூக்கிலிடப்பட்டு, உயிர்த் தியாகம்  செய்த எழுபத்தொன்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று!

படத்திற்கு மாலை அணிவித்து, வெறுமனே அஞ்சலி
செய்வதில்  ஒரு பயனும் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட ஒவ்வொரு தியாகியையும் நினைவு கூர்வது, அவர்கள் போராடிப் பெற்றுத் தந்த சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து, அதைப் பாதுகாத்துக் கொள்வதில்,மட்டுமே இருக்கிறது.