இயக்குனர் பா.ரஞ்சித் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார்.அவருடைய வார்த்தைகளில் சொல்வது என்றால் தொடர்ந்து உரையாடல்களைத் தொடங்கி வைத்து! சிலநாட்களுக்கு முன்னால் தலித் இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று அவர் பேசியது பலப்பல விவாதங்களை இங்கே ஆரம்பித்து வைத்தது. இப்போது குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியை அழைத்துவந்து இன்னொரு தொடர் விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறார். முதலில் எங்கே, எதற்காக என்று பார்த்துவிடலாம். வானம் என்ற அமைப்பின் கீழ் மூன்று நாட்கள் கலை நிகழ்ச்சிக்கு ரஞ்சித் ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் தொடக்கமாகத் தான் இது!
Ganesha Moorthy பின்னூட்டத்தில் இப்படிக் கேட்கிறார். விவாதங்களை விட பார்த்துவிட்டு எழுதுகிற பின்னூட்டங்கள் நச்சென்று இருக்கும் என்பதனால் வீடியோ மட்டுமில்லை பின்னூட்டப் போக்கையும் சேர்த்தே கவனிக்கிற வழக்கம் எனக்கு!
"ஜாதிகள் ஒழிய வேண்டும்", "அதிகாரம் பரவலாக்கபடவேண்டும்" என்று வாய் கிழிய போலியாக பேசும் கம்யூனிஸ்டுகள்தான், ஒரே குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காங்கிரஸையும், திமுகவையம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த துடிக்கிறார்கள். காங்கிரஸ் தலைமை உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தாத்தாத்ரேய பிராமின் கட்டுப்பாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. திமுக - கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. இதை எதிர்த்து குரல் கொடுக்க திராணி உண்டா?
#திராவிடம் என்றால் தி மு கழகம் நினைவுக்கு வராமல் இருக்குமா? எப்படி இருக்கிறார்களாம்?
இப்படித் தொடர்ச்சியாக ஹிந்து தமிழ் நாளிதழிலேயே கலாய்க்கப்படுகிற அளவில் தான்
திமுக, அதன் தலைவர் செயல்பாடு இருக்கிறது.
உடன்பிறப்பே! #ரெண்டு துரைமுருகன் என்னமோ கதை சொல்கிறாராமே! ஹிந்துவில் இப்படிக் கலாய்ப்பதற்கும் ஒரு பதில் சொல்லேன்!!
*******
ரங்கராஜ் பாண்டே ஊடகங்களின், உரையாடுகிற கலையின் கதாநாயகன் என்றே சொல்லிவிடலாம். கால்மணி நேரத்துக்கும் குறைவான வீடியோவில் எத்தனை விஷயங்களைக் கேட்பவர் மனதில் பதிய வைத்துவிடுகிறார் என்பதைக் கவனித்தீர்களா?
கொஞ்சம் இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!
!
ரங்கராஜ்பாண்டே வெளியேறியபிறகுதந்திடிவிநிகழ்ச்சிகள் எப்படி இருக்கின்றன? ஒரு பரபரப்புச் செய்தியின் மீதான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி இது! கேள்விகள் பதில்கள் எப்படி?
தெரிந்துகொள்வதற்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தேன். உங்களுடைய கருத்தென்ன?
தந்தி டிவியை விட்டு ரங்கராஜ் பாண்டே வெளியே வந்து விட்டபிறகும் கூடத் தலைப்புச் செய்தியாகவே இருக்கிறார். திராவிடர் கழகத்தின் வீரமணி, சுப. வீரபாண்டியன் போன்றவர்களைத் தடுமாற வைத்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி இன்னமும் பசுமையாக நினைவில் வைத்துக் கொள்கிற மாதிரி!
வீரமணியைப் பேட்டி எடுத்ததில் எடிட் செய்து தில்லு முல்லு செய்து விட்டதாக அன்றைக்குப் புலம்பியதே இந்த பேட்டியிலும் ஒரு கேள்வியாக வைக்கப்பட்டதற்கு பாண்டே என்ன பதில் சொல்கிறார் என்றும் பாருங்கள்!வீரமணி என்னென்ன கேட்பார் செய்வார் என்பதை மறைந்த பதிவர் டோண்டு ராகவன் தன் அனுபவமாக கொஞ்சம் விரிவாகவே எழுதியிருக்கிறார். பாண்டே பேட்டியின் கீழே பார்த்தவர்கள் கமென்டுகள் சில இன்றைய கேள்விகளாக! கேள்வி கேட்டாலே இங்கு எவருக்கும் பிடிப்பதில்லை என்பதற்காகக் கேள்விகள் எழாமல் இருந்து விடுமா?
திருமா அவர்கள், என்றேனும் ஒருநாள் தமிழக முதல்வராக வந்தால், ஏன் துணை முதல்வராக வந்தால்கூட அது நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை. ஒரு முறை அவரின் இந்த உரையைக் கேட்டுவிடுங்கள்! என்று இந்தச்சுட்டியை பரிந்துரை செய்கிறார் பதிவர் +கல்வெட்டு Kalvetuஇது அவர் வரிவடிவாக்கி இருப்பதன் ஒலிவடிவம்.
அதன் மேல் என் கருத்தாக .....
இங்கே இருக்கிற திராவிடங்களை விட, காங்கிரசை விட, #திருமா தகுதியானவர்தான் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் #திருமா வுக்கு status quo என்கிற இப்போதிருக்கிற நிலையே போதும் என்றிருக்கிற மாதிரி #அரசியல்நிலைபாடு என்றால் கூட இருப்பவர்களே அதுமாதிரிக் கனவுகூடக் காண்பதில்லை என்பது நிகழ்காலச் சோகம்!
மைனாரிடியை வைத்து மெஜாரிடியைக் கட்டியாண்ட சாமர்த்தியம் கருணாநிதிக்கு இருந்தது #onetimewonder தான்! வேறெவர்க்கும் அமைவது கடினம்தான் என்கிற யதார்த்தம் சுள்ளென்று சுடுகிறதே! இப்படி ஒரு நான்கு நாட்களுக்கு முன்னால் கூகிள் ப்ளஸ்சில் சொல்லி இருந்தேன் அதற்கு அவர் திருமா மிகவும் கனிந்து வந்திருப்பதாக ஒரு பதிலும் சொல்லி இருந்தார்.
இந்த வீடியோ, நக்கீரனில் எவிடென்ஸ் கதிர் முதலானவர்கள் பேசியிருப்பது உணர்த்துவது திருமாவளவன் கனிந்திருக்கலாம், குட்டிகள் கனியவுமில்லை! அரசியல் முதிர்ச்சியைப் பெறவும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறதே! என்ன செய்ய?
முதலில் அமெரிக்கா என்ற முழக்கத்தோடு அமெரிக்க அதிபர் ஆனவர் டொனால்ட் ட்ரம்ப்! அதற்கேற்ற மாதிரிஅமெரிக்கா இனிமேல் உலகத்தின் போலீசாக (காவல் என்று மட்டுமே கொள்க) இருக்கப்போவதில்லை என இன்றைக்கு ஈராக்கில் பிரகடனம் செய்திருக்கிறார்.
Trump told troops, adding that the US wouldn't be helping to rebuild Syria. 'We’re no longer the suckers, folks. We’re respected again as a nation' என்கிறது தி கார்டியன் செய்தி!
உலகப்போலீஸ் என்று லட்சக் கணக்கான கோடிகளில் செலவு செய்து தோற்ற பிறகு வந்த ஞானோதயம் இது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! நம்பர் #1 இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கும் சீனாவுக்கு கதவைத் திறந்து விட்ட மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.
CivMilAir ✈🎅🎄🐈
CivMilAir
Now, I'm not saying Trump is currently heading to the Middle East to visit troops. BUT... There's been some interesting aircraft movements the last couple of days. Some I've already tweeted... And a VC-25A has been reported over the UK earlier today. Watch this space! 😌
Twitter
இப்படி அமெரிக்கா என்ன செய்தாலும் சந்தேகப் படுகிற மாதிரியும் இருக்கலாம்! ஆனால் அமெரிக்க அதிபர் சிரியாவிலிருந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதென்ற முடிவில் தீர்மானமாக இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. #ரட்சகர்கள் இலவசமாக எதையும் மீட்பது இல்லை, தசம பாகத்தை எதிர்பார்த்தே செய்கிறார்கள் என்பது டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிகிற விஷயம். அமெரிக்காவின் ஆசிய, ஐரோப்பியக் கூட்டாளிகள் உறைந்துபோய் நிற்பது, அடுத்து என்னாகப்போகிறதோ என்ற தவிப்பு பிடிபட இன்னும் சிறிது காலமாகலாம்!
,
American Tianxia: Chinese Money, American Power and the End of History என்று சால்வடோர் பாபோன்ஸ் என்கிற ஆஸ்திரேலிய பேராசிரியர் எண்பத்தெட்டே பக்கங்களில் சீனா ஒருபோதும் 21ஆம் நூற்றாண்டில் #நட்டநடுநாயகம் ஆகிவிட முடியாது; அமெரிக்கப் பொருளாதாரம் இன்றும் வலிமையாகத்தான் இருக்கிறது என்று புத்தகம் எழுதிப் பரபரப்பான ராசியோ என்னவோ இரண்டேஆண்டுகளில்
டொனால்ட் ட்ரம்ப் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்து காட்டியிருக்கிறார்.
இந்த #Tianxia என்கிற வார்த்தையை தொடர்ந்து இந்திய வெளியுறவுக்கொள்கை, CPEC, OBOR, BRI ராஜீய உறவுகளும் சிக்கல்களும், என்ற ஹேஷ்டாக்குகளில் கூகிள் பிளஸ்சில் எழுதி வந்ததை இந்தப்பக்கங்களில் தொடரலாம் என்று ஒரு எண்ணம்! எழுதலாமா? என்ன சொல்கிறீர்கள்?
*******
கீச்சுக்கு எதிர்க்கீச்சு!
மோடி என்ன செய்தார் என்று கேட்கும் ராகுல் காந்தி மைக் பிடித்து மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்!
இந்தக் கீச்சுக்கு சரியான பதிலாக வந்திருப்பதைப் படித்தார்களோ என்னவோ? கண்ணைக் கழுவிட்டுப் பார்க்கவும் என்று கீச்சியிருக்கிறார் @KTL
*******
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்த ராசியோ என்னவோ மீம்களில் ஏகத்துக்கு கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவை ஒருபக்கம் இருந்தாலும், கருணாநிதி 2014 மார்ச்சில் என்ன சொன்னார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!
ஸ்டாலின் மீண்டும் நமக்குநாமே நடைபயணத்தை தொடங்கவிருக்கிறாராம்! வரவேற்பு மீம்களில் களை கட்ட ஆரம்பித்து விட்டது. சாம்பிளுக்கு ஒன்று.
இங்கே மட்டும் திருடவில்லை என்று உறுதியாக எப்படிச் சொல்கிறார்கள்?
அரசியல் பேசுவதென்றால் எல்லாத்தரப்பையும் தான் கவனிக்க வேண்டும்! அதில் ஜான் பாண்டியனை மட்டும் ஒதுக்கி வைக்க முடியுமா?