பழசேதான் புதுசு! சும்மா ஒரு வெளம்பரந்தான்!

இதெல்லாம் லுலுளாயிக்குத்தான் 

இன்றைய நிலையில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு ஸ்தாபனத்தின், அப்புறம் அதைப் பயன் படுத்துகிறவரின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!
 
ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
 
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
 
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்றும் தயாரிப்பாளரின் உத்தரவாதம்!
 
ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது! என்று இந்தப் பக்கங்களில்  எழுதி நான்கு வருடங்களுக்கும் மேலாகிறது. தேடித் தேடி வாசிப்பதும் வலைப் பதிவுகள் எழுதுவதும் சுவாசிப்பது போல என்னுடைய இருப்பின் வெளிப்பாடாக இருந்த தருணங்கள் அவை.

ஆனால் கடந்த இரண்டுவருடங்களில் என்னுடைய செயல்பாடுகளை அதிக சர்க்கரை, டிஸ்க் ப்ரோலாப்ஸ் கோளாறுகள் அனேகமாக முடக்கி வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும். உடல் உபாதைகள் அப்படியே இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு என்னுடைய கவனத்தை மறுபடியும் வாசிப்பில், அதைத்தொட்டு எழுதுவதில் இப்போதுதான் செலுத்த முடிந்திருக்கிறது. இந்தப்பக்கங்களில் இந்த ஆண்டில் எழுதும் மூன்றாவது பதிவு இது. எழுதத்தூண்டுதலாகக இருந்தது #திஇந்து நாளிதழில் இன்று படித்த இந்தக் கட்டுரை  

சர்ஃப்  கொடுத்த பதிலடி  என்ற தலைப்பில் மகிக மேலோட்டமாக எழுதப் பட்ட கட்டுரையாகத் தோன்றினாலும் வாசித்ததைத்தாண்டி யோசிக்க வைக்கிற விஷயம் இது. கட்டுரையாளர் நிர்மா வாஷிங் பவுடர் கொடுத்த கடுமையான போட்டியை எப்படி சர்ஃப் சமாளித்தது என்று சொல்லிப் போவதில் மிகவும் முக்கியமானது brand positioning என்ற அம்சம். அதைக் கொஞ்சம் பார்ப்பதற்கு முன்னால் பதிலடி கொடுப்பது எப்படி  என்பதை கோல்கேட் - பெப்சொடெனட் இடையில் நடந்த விளம்பர யுத்தம் ஒன்றை விரிவாகவே பேசியிருப்பதை முடிந்தால் ஒருதரம் வாசித்து விடுங்கள். 

 

சுருக்கமாகச் சொன்னால் கூட்டத்தில் தனித்துத் தெரிகிற வித்தைக்குப் பெயர்தான் brand positioning. தனித்துத் தெரிய வேண்டியது விளம்பரப் படுத்தப்படுகிற பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. விளம்பரத்தைப் பார்க்கிற உங்களுடைய மனதில் போட்டியாளர் தரும் பொருளைப் பற்றி ஒரு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்த முடிவதில் கூட உங்களுடைய தயாரிப்பைக் குறித்து ஒரு உயர்வான பிம்பத்தை ஏற்படுத்துவது தான் brand positioning.

According to Jack Trout and Al Ries in their bestseller from 1981 “Positioning: The Battle for your mind”, brand positioning is a battle for “the minds of your customers”.
”Positioning starts with a product. A piece of merchandise, a service, a company an institution, or even a person. Perhaps yourself. But positioning is not what you do to a product. Positioning is what you do to the mind of the prospect. That is, you position the product in the mind of the prospect”.
In other words it’s not what you do to a product, it’s how ,you position that product in the mind of your customers.
பழைய திரைப்பட?ங்களைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொண்டு கொஞ்!சம் யோசித்துப் பாருங்கள். கதாநாயகனை மிகவும் உத்தமனாகக் காட்டிக் கொண்டே இருக்க  வேண்டிய அவசியமே இல்லை. மற்றக் கதா பாத்திரங்களை குறிப்பாக வில்லன் மற்றும் கோஷ்டியைகொஞ்சம் கெட்டவர்களாக, கேணையார்களாகச் சித்தரிக்க முடிந்தாலே போதுமானது.
ரொம்பவுமே பழைய  டெக்னிக்காக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

பழசுதான்! ஆனால் புதுசை எல்லாம் தூக்கிச்சாப்பிட்டு விடுகிற டெக்னிக். என்ன சொல்கிறீர்கள்? மேலும் பேசுவோம்!  
  

மனித்தப் பிறவியும் வேண்டுவதே! இப்படி வீணாக்கிக் கொள்ள அல்ல!



புதுச்சேரியில் இருக்கும்  ஸ்ரீஅரவிந்தாசிரமம் வம்பர்களால் மட்டுமல்ல அன்பர்களாலும்கூட   மீண்டும் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாக்கப் படுவது புதிதல்ல என்பதை இந்தப்பக்கங்களில்  ஏற்கெனெவே எழுதியிருக்கிறேன் 

ஆனந்தவிகடனில் வா.மணிகண்டன் என்பவர் எழுதியிருக்கும் இந்த வம்புச் செய்தியையும் படிக்க நேர்ந்தது,அரவிந்தரும் அன்னையும் திரும்ப வந்தாலும் கூட அழிக்கவே முடியாத கறை!.என்று முத்தாய்ப்பாக உச்சுக் கொட்டி இருப்பதைத் தவிர இந்த செய்தியை எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தளிவாக இல்லை. போகிற போக்கில் சேற்றை வாரி இறைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது மட்டும் எழுத்தில் வெளிப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம், அதுபோக சம்பந்தப்பட்ட சகோதரிகளே தங்களுடைய வலைப்பதிவுகளில் தொடர்ந்து ஆசிரமத்தைப் பற்றியும்  உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் கடுமையாகச் சாடி எழுதிக் கொண்டிருந்ததை எல்லாம் இங்கே படிக்கலாம்,  இவர்களுக்காக ஆதரவுக்குரலென்ற போர்வையில் இங்கேயும்.  உண்மையைக் கண்டறியக் கொஞ்சமும்  அலட்டிக் கொள்ளாத வா.மணிகண்டனைப்போல, புதுச்சேரியில் உள்ள பெரியாரிஸ்டுகளும் ஆசிரமத்தின் மீதுள்ள வெறுப்பைக் கல்லெறிதல் முதலான வக்கிரங்களாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்கப் பட்டிருக்கிறது.  



இதற்கு முந்தைய புத்தக சர்ச்சையைப் போலவே இந்த விவகாரமும் ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டுமென்றே! . 

In spite of all the ill-saying and ill-doing never have the five sisters been denied food and accommodation –  until the legal case came to a close with the verdict, not of the Trustees, but of the Supreme Court.  They chose the Legal Way. Why did they not accept the Legal Verdict?
We all know that life is not such an easy matter to deal with. One part of us wants something, while another wants just the opposite. One part sees mostly the dark side of life, while another marvels at the miracle the Earth is. Sadly, the Prasad sisters tended to see more and more the dark side of their life here, and they ended in the dark. But why drag into this obscurity those who wish to live in the light?
To those who feel so unhappy here, so bitter, so negative, the world has still many wonderful things to offer. Instead of harming the life of others, and in the end their own, instead of wasting their lives in destructive criticism, the sisters could have gathered their self-respect and courage and begin a new life, build something, whatever it may be : a farm, a school, why not the ideal ashram of their dreams! The earth is vast, and there are countless opportunities to serve the Future. And Mother India. And Mother Earth. என்று இந்தப் பக்கங்களில்  சொல்வதையும் பார்த்தேன்.ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் என்று இன்று பரவலாக அறியப் பட்டிருக்கும் அமைப்பு, உண்மையில் மனித குலத்தை, ஸ்ரீ அரவிந்தர் கண்ட பூரண யோக சாதனை வழியாக சத்திய ஜீவியத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு பரிசோதனைக் கூடமாகவே ஸ்ரீ அரவிந்த அன்னையால் உருவாக்கப் பட்டது. ஆசிரமத்தைத் தன்னுடைய சரீரமாகவே பாவித்து ஸ்ரீ அன்னை சொன்னதும் உண்டு. பரந்த இந்த பூமியில், நிலவும் ஒவ்வொரு குணமும் சூழலும் ஆசிரமத்தில் பரிசோதனைக்காகவும், திருவுரு மாற்றத்திற்காகவும் பிரதிநிதித்துவப்படுகிற சூக்ஷ்மத்தை ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் பலநேரங்களில் சொன்னதுண்டு.
ஸ்ரீ அரவிந்த அன்னையின் செயலாளராக இருந்து  நிறைய  நூல்களை எழுதியவரான திரு எம் பி பண்டிட் ஸ்ரீ அன்னையுடன் நடத்திய ஒரு உரையாடலை இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே சுட்டியிருக்கிறேன். மாற்றம் என்பது தானாகப் பழுத்து வெளிப்பட வேண்டியது. எவரும் எவர்மீதும் திணிக்க முடியாதது, இறைவனும் தன்னுடைய விருப்பத்தைத் தன்னுடைய சிருஷ்டி மீது திணிப்பதில்லை.  
தன்னை முதலில் மாற்றிக் கொள்ளத்தயாராக இல்லாதவர்களால் கொஞ்ச நேரப் பரபரப்புச் செய்தியாகமட்டுமே இந்த சகோதரிகளைப் போல யாருடைய கைப்பாவையாகவோ இருக்க  மட்டுமே முடியும் என்பதுதான் பரிதாபம். 
தமஸோ மா ஜ்யோதிர் கமய 

கண்ணன் பிறந்தான்! எங்கள் கண்ணன் பிறந்தான்!

எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்

என்று திராவிடங்கள் போலத் தனக்கென்று சுயசிந்தனை எதுவும் இல்லாமல் தலைவன் வழிநடப்பானென்று  குதித்ததில்லை தான்! ஆனால் மகன் பிறக்கவிருந்த அந்தத் தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரியம், சிலிர்ப்பு ஒருவிமான பரவசக்கலவையை  இப்போதும் வண்ணதாசன் எழுதிய இந்த வரிகளைப் படித்தபோது அனுபவிக்க முடிகிறது.

"உங்களுக்குத் தெரியும். சந்தியா பதிப்பகம் கலாப்ரியாவின் ‘மறைந்து திரியும் நீரோடை’ தொகுப்பைக் கொண்டு வந்திருப்பது.இதற்கு முந்திய நிமிடம்தான் அதைப் படித்துமுடித்தேன். அதனுடைய 192ம் பக்கத்தின் கடைசி வரி ஒட்டியிருக்கும் விரல்களால் தான் இதை எழுதுகிறேன்.

தொகுப்பில் எதை எதைப் பற்றி எல்லாமோ , மொழி, கவிதை, அரசியல், திரைப்படம், சுகுமாரன், தீபச் செல்வன், கனிமொழி, ரவி உதயன், போகன் சங்கர், ஜான் சுந்தர் கவிதைத் தொகுப்புகள் குறித்து, எல்லாம் அபாரமாக எழுதியிருக்கிறான். தானாக விழுந்த அந்தச் சொல் போல அவையெல்லாம் -அபாரம்- தான்.

பாரமானது ‘அப்பாவின் நிழல்’ என்கிற அந்தத் தொகுப்பின் இறுதிக் கட்டுரை. வாழ்வின் எடை எப்போதும் புனைவின் எடையை விட மிகக் கூடுதல் கனமானது. நிறுத்தல் அளவைகளுக்குள் ஒருபோதும் அடங்காதது. அதன் எதிர்த் தட்டில் வைக்க எடைக்கற்கள் கிடையாது. தராசு முள் முறிக்கும் துயருடையது அது. கலாப்ரியாவிடம் எதைப்பற்றிச் சொல்லவும் அழுத்தமும் ஆழமும் மிக்க துல்லிய நினைவுகள் உண்டு. எனில், அப்பாவைப் பற்றிச் சொல்ல அவனுக்கு எவ்வளவு இருக்கும்.

பூமியில் விழும் அவன் நிழல், அவனுக்கு அவன் அப்பாவுடையதைப் போலவே இருக்கிறது

அப்பா சாகும்போது
தன்னோடு எடுத்துப்
போகவில்லை
போலிருக்கிறது
தன் நிழலை
.


என்று முடிகிறது இந்தத் தொகுப்பு. இந்தப் புத்தகத்திற்கு, தலைப்பு ,மறைந்து திரியும் நீரோடை’ . இன்னொரு தலைப்பு, ‘எடுத்துப் போக முடியாத நிழல்’.

என்னுடைய நிழலையும் இப்படி என் மகன் என்றாவது  உணர்வானா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் என் தந்தையைப்பற்றி இதை விட மிக அழுத்தமாக அனுபவித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன்.பெரும்பாலான தந்தைகளுடைய சோகமென்னவென்றால் பிள்ளைகள் தகப்பனுடைய பாசத்தை, அக்கறையைப் புரிந்து கொள்வதே இல்லை.தகப்பன் என்றால் ஒரு கடுகடுப்பான, தன்னுடைய ஆசைகளுக்கு நந்திமாதிரிக் குறுக்கே நிற்கிற மாதிரியான சித்திரம்தான்!

1989 டிசம்பர் 7! வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம். காலையில் அலுவலகத்திற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மைத்துனன் எனக்கொரு மகன் பிறந்திருப்பதைச் சொன்னான். உடன் வேலை செய்பவர்களுடையவாழ்த்துக்கள்,,கேலிப்பேச்சு ஐஸ்க்ரீம் வாங்கி என் கையாலேயே எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்கிற கட்டளைக்குப் பணிந்து ஐஸ் கரீமுக்கு ஆர்டர் கொடுத்து விட்டுக் காத்திருந்த நேரத்தில் சக ஊழியர்களிருவர் வாய்க்கணக்கிலேயே  மகனுடைய ஜாதகத்தைக் கணித்துச் சொன்னவேகத்தைக் கண்டு பிரமித்து ஒருவழியாக மதுரைக்குக் கிளம்பி ஊர் வந்து சேர இரவு 7 மணியாகி விட்டது, ஊர்வந்து சேர்கிற வரை இன்னதென்று சொல்லிவிடமுடியாத ஒருவித உணர்ச்சியில் உறைந்துபோய்க்கிடந்த அந்த நாள்.

ஒரு தனியார் மருத்துவமனையில் என்மகனை முதல்முதலாகப் பார்த்த அந்தத் தருணம்! குழந்தை பசியில் தன்னிரு கால்களையும் பட்டாம்பூச்சி சிறகடிக்கிற வேகத்தைவிட வேகமாக அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கால் வலிக்குமே என்று கசிந்த அந்த நிமிடம், இன்றோடு 25 வருடங்கள் நிறைகிறது. 
டீலக்ஸ் போட்டோ ஸ்டூடியோ பாலு சொன்னபடி சேந்தமங்கலம் தத்தாச்ரமம் கிருஷ்ணானந்தரிடம் வேண்டிப்பெற்ற பெயர் வாசுதேவன். அவனுக்கு ஒரு அவதூத சன்யாசியின் திருவாக்கினால் பெயர்சூட்டப்படுகிற பாக்கியமும் இருந்தது.அவனும் என்னை மாதிரியே அம்மாபிள்ளை!அம்மாவிடம் அதிக ஒட்டுதல்!!

எல்லாவிதமான மங்களங்களையும் பெற்று நீடூழி வாழ்த்த தகப்பன் என்கிற வகையில் எனக்கும் ஏதோ ஒரு கொடுப்பினை இருக்கிறது, .உங்களுடைய வாழ்த்துக்களையும் பெறுகிற கொடுப்பினையும் இருக்கட்டுமே!

அன்னை என்றொரு அற்புதப் பேரொளி

                                                                      
                                                            

நவம்பர் 17! ஸ்ரீ அரவிந்த அன்னை மகா சமாதி அடைந்த தினம்.புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலும், அன்பர்கள் ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலும், அன்னை என்றொரு அற்புதப் பேரொளியை ஆத்மார்த்தமாக வணங்கி அவளுடைய அருள் திறத்திலும் தோய்ந்திருக்கும் நாளும் கூட!
                                                                               

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்திருவடிகளைச் சரணடைகிறேன்.எனது கரணங்கள், மனம், ஜீவன் அனைத்தையும் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.தூய்மையும் அமைதியும் அருள்வாய்!

உனது அருளுக்குப் பாத்திரமாகும் தகுதி உள்ளவனாக வரம் அருள்வாய்!ஒவ்வொரு அசைவிலும், எண்ணம் செயல் யாவற்றிலும் உனது சித்தப்படியே இயங்கும் கருவியாக என்னை ஏற்றுக் கொள்வாய்.

இந்த தேசம் தலைநிமிர்ந்து நிற்கவும்,அச்சமும் பேடிமையும் அடிமைச்சிறுமதியும் எங்களை  விட்டு விலகவும் வரம் தருவாய்.

ஓம் ஆனந்தமயி, சைதன்யமயி சத்யமயி பரமே!