Showing posts with label ரூமி. Show all posts
Showing posts with label ரூமி. Show all posts

சண்டேன்னா மூணு! படங்கள் மூணு...! கவிதை ஒண்ணு!


சீரியஸா என்னத்தையோ யோசிக்கற மாதிரி எல்லாம் இல்லீங்க! ...ச்சும்மா ஒரு ஷோ காட்டத் தான்! செம்மொழி மாநாடு வேற வருது இல்லே?


எதுக்கு தலையை முட்டிட்டு நிக்கறோம்னு கேக்கறீங்களா? முட்டையில் இருந்து கோழியா, கோழியில் இருந்து முட்டையான்ற மாதிரி எங்க கிட்ட வந்து பரிணாமம் எனது புரிதல், படைப்புவாதம் இப்படீன்னெல்லாம் எழுதப்போறேன்னு பயமுறுத்தினாக்க நாங்க  வேற என்ன செய்யறதாம்...?


எங்களுக்கும் ஸ்டன்ட் அடிக்கத் தெரியும்! ஆனா இன்னாத்துக்கு ஸ்டன்ட்  அடிக்கறதுன்னு தெரியாமத் தான் ஒரே குழப்பமா இருந்தது. அதனால ஒரு ஸ்டன்ட் அடிச்சுப் பாப்போமேன்னு தான்......!

இந்தப் படம் எதுக்கு, அதுக்கு கமெண்டுன்னு கீழே கொஞ்சம் எழுதினது எதுக்குன்னு புரியலையா?

வால் பையனை விட்டே  இந்தத் தரம் உரை எழுதச் சொல்லிட்டாப் போச்சு!

அதுவரைக்கும், ரசிப்பதற்காக ரூமியின் கவிதை ஒன்று ! 

காதல் என் காதோடு வந்து சொன்னது:

"வேடனாக இராதே! எதிர்க்கச் சக்தியில்லாதவனாக இரு!
எனக்குப் பிரியமானவனாக ஒரு முட்டாளாகவே இருந்துவிடு!
செந்தழல் இரவியாக வேண்டாமே! ஒரு புள்ளியே கூடப் போதும்.
எனது இல்லத்தில் அண்டியிருந்து  வீடற்றவனாக இரு
எரியும் விளக்காக வேண்டாம், விட்டில் பூச்சியாக இரு! போதும்!
இருந்தால்  வாழ்க்கையை அனுபவித்து சுவைக்க முடியும்
அடங்கிப் பணி செய்வதன் பலம் என்னவென்று அப்போது தெரியும்!"

முகமதுஜலாலுதீன் ரூமி என்ற இந்த பெர்ஷிய  சூஃபி கவிஞருடைய கவிதைகளில் இருந்து அவ்வப்போது ஒரு சில கவிதைகளைப் பார்த்திருக்கிறோம்! அந்த வரிசையில் இன்னுமொன்று!


ரூமி  காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்மநேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதைவரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்! இங்கே இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா?


Lover whispers to my ear,
"Better to be a prey than a hunter.
Make yourself My fool.
Stop trying to be the sun and become a speck!
Dwell at My door and be homeless.
Don't pretend to be a candle, be a moth,
so you may taste the savor of Life
and know the power hidden in serving."




 

இப்படித் தான்! இப்படித்தான்! ரூமி!


ரூமி  காதலையும் தொட்டு கவிதைகள் எழுதியிருக்கிறார்! ஆன்மநேயம் வெளிப்படும் சூ ஃபி கவிதைவரிகள் அவை! வெறும் உடல்களின் மீதான இச்சை என்பதையும் தாண்டி, கொஞ்சம் பரவசமான நிலையில்! இங்கே இந்தியத் தத்துவ மரபில், பக்தி கனிந்து நாயக- நாயகி பாவம் என்பதாகவே அருளாளர்கள் தங்கள் ஆன்மீக அனுபவங்களை வெளிப்படுத்திய பாடல்கள் நிறைய உண்டு. அன்பே எல்லாமாகி நிற்கிற ஒரு அற்புதமான அனுபவம் தற்செயலாக, யூட்யூபில் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்தது


 

Ancient poet Rumi's love poem, "Like This", set to Anoushka Shankar's "Prayer In Passing", and accompanied by various paintings by Pre-Rapahaelite artists.


காதல், காமத்தின்  தேவைகள் பூர்த்தியான  பின்
எப்படியிருக்கும் என்று எவரேனும் கேட்டால்
முகத்தை நிமிர்த்திச் சொல்லுங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

இரவுநேரத்து வானத்தின் அற்புதம் எப்படியென்று
எவரேனும் கேட்டால் கூரைமீதேறி ஆனந்தமாக
ஆடிக் கொண்டே சொல்லுங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

ஆன்மாவைப் பற்றி எவரேனும் அறியவிரும்பினால்
அல்லது கடவுளின் அருள் மணத்தை அறிய விரும்பினால்
அவன் அல்லது அவள்பக்கம் தலையைத் திருப்புங்கள்!
உங்கள்  முகத்தை நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

இயேசு எப்படி இறந்தவரை உயிர்ப்பித்தாரென்று
எவரேனும் ஆச்சரியப்பட்டுக் கேட்கும்போது
அற்புதம் எதுவென்று விவரிக்க வேண்டாமே!
என் உதடுகள் மீது அழுத்தமான முத்தம்!

இப்படித் தான்! இப்படித்தான்!

காதலுக்காக உயிரையும் தியாகம் செய்வதன்
பொருள் என்னவென எவரேனும் கேட்டால்

இங்கே சுட்டிக் காட்டுங்கள்!

நான் எவ்வளவு உயரமென எவரேனும் கேட்டால்
உங்கள் உச்சந்தலைவரை விரலால் அளந்து

இத்தனை  உயரம் என்று சொல்லுங்கள்!



உடலை விட்டு உயிர்  பலமுறை  வெளியே போகும், திரும்பும்!
எவரேனும் நம்பமுடியவில்லை என்று சொன்னால்
என் இல்லத்திற்குத் திரும்ப வாருங்கள்!

இப்படித்தான்  என்பதை......!

காதல்வயப்பட்டவர்கள் பேசும்போது
நம் கதையைத் தான் சொல்கிறார்கள்!

இப்படித்தான்  என்பதை......!

ஆன்மாக்கள் வாழும் ஆகாய வெளியாக இருப்பது  நான்!
அடர்ந்த நீல நிறத்தை  உற்றுப்பாருங்கள்!
தென்றலாய் வருடிவந்தொரு  ரகசியம் சொல்வதைக் கேளுங்கள்!


என்ன செய்ய வேண்டியிருக்கிறதென்பதை எவரேனும் கேட்டால்
கைகளில் தீபத்தை ஏற்றிக் கொடுத்து விடு.

இப்படித்தான்  என்பதை......!

யூசூப்பின் மனம் யாகொபுவிடம் எப்படி வந்தது?

ஹூ ஊஉஇஊஊ ....

யாகொபுவின் பார்வை எப்படித் திரும்பியது?

ஹூ ஊஉஇஊஊ ....
.

சின்னக் காற்றசைவே கண்களைத் தூய்மைப் படுத்திவிடுகிறது!

இப்படித்தான்  என்பதை......!



ஷாம்ஸ் தாப்ரிசில் இருந்து திரும்பிவரும்போது
கதவோரத்தில்  தலையை  ஓரமாக மறைத்துக் கொண்டு
நம்மை  ஆச்சரியப்  படுத்த வருவதும்


இப்படித்தான்  என்பதை......!

ஜலாலுதீன் ரூமியின் இந்தக் கவிதைக்கு, சிதார்க் கலைஞர் ரவிசங்கரின் மகள் அனுஷ்கா இசைவடிவம் கொடுத்ததை, அரிய படங்களுடன் இங்கே வீடியோவில் பாருங்கள். கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே. மேலே தமிழில் மொழிபெயர்க்க எடுத்த முயற்சியில் ஏதேனும் குறை இருந்தால் அது என்னுடையதே!  

 If anyone asks you
how the perfect satisfaction
of all our sexual wanting
will look, lift your face
and say,

Like this.

When someone mentions the gracefulness
of the nightsky, climb up on the roof
and dance and say,

Like this.

If anyone wants to know what "spirit" is,
or what "God’s fragrance" means,
lean your head toward him or her.
Keep your face there close.

Like this.

When someone quotes the old poetic image
about clouds gradually uncovering the moon,
slowly loosen knot by knot the strings
of your robe.

Like this.

If anyone wonders how Jesus raised the dead,
don’t try to explain the miracle.
Kiss me on the lips.

Like this. Like this.

When someone asks what it means
to "die for love," point
here.

If someone asks how tall I am, frown
and measure with your fingers the space
between the creases on your forehead.

This tall.

The soul sometimes leaves the body, the returns.
When someone doesn’t believe that,
walk back into my house.

Like this.

When lovers moan,
they’re telling our story.

Like this.

I am a sky where spirits live.
Stare into this deepening blue,
while the breeze says a secret.

Like this.

When someone asks what there is to do,
light the candle in his hand.

Like this.

How did Joseph’s scent come to Jacob?

Huuuuu.

How did Jacob’s sight return?

Huuuu.

A little wind cleans the eyes.

Like this.

When Shams comes back from Tabriz,
he’ll put just his head around the edge
of the door to surprise us

Like this.
 

நான் பேச நினைப்பதெல்லாம்........!


வால்பையனோட படம்! கருத்து தளத்துல இருந்து சுட்டது!

தேடுபொறிகள், வாசகர்களைக் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டுவந்து உங்களுடைய பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டுமானால்,


காமம், காதல், கடவுள், நாத்திகம், பெரியார்,நம்புகிறவன் முட்டாள், கவிதை, கவுஜை, எதிர் கவுஜ, கானா பாட்டு, ஈழம், பொழுதுபோக்கு நாத்திகம், நமீதா, நயன்தாரா, பிரபுதேவா, ரஜினிகாந்த்,குஷ்பூ, சீமான், போலி டோண்டு, பிரபலப் பதிவர், நடேசன் பூங்கா, பதிவர் வட்டம்,மொக்கை, மொட்டைமாடி, மொட்டை மாடிக் கூட்டம், கிழக்கு, இம்சை, பா.ராகவன், சாரு நிவேதிதா, ஜெய மோகன், லக்கிலூக்,செக்ஸ் சாமியார், புதுசு கண்ணா புதுசு, குச்சிக்காரி..........................



மேலே குறிப்பிட்ட வார்த்தைகளில் எது ஒன்றை எடுத்துக் கொண்டு பதிவு எழுதினாலும், ஹிட்ஸ் குவிவது நிச்சயம்!நீங்கள் எழுதியதற்காக இல்லை! அப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளாதீர்கள்! பின்னூட்டத்தில் கும்முவதற்காகவே, இங்கே என்னை மாதிரி நிறையப்பேர் இருக்கிறோம்! ஒரு எல்லைக்கு மேல் படிப்பவர்கள் ரத்தக் கொதிப்பு அளவு எகிறுவதும் சர்வ நிச்சயம்!


இந்த வார்த்தைகள் பட்டியலில் இன்னும் ஒன்றைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்!

வால்பையன்!


நம்ம வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போன ஞாயிற்றுக்கிழமை சென்னைக்குப் போய்விட்டு வந்தார். யுத்தம் சரணம் கச்சாமி, சுகம் ப்ரம்மாஸ்மி இப்படி என்னவோ அந்த நேரத்தில் தோன்றுகிற வார்த்தைகளை வைத்துக் கொண்டே, பதிவுகள், புத்தகங்கள் எழுதிக் குவிக்கிற பா.ராகவன் கூட இவருடைய வம்புத்தனமான பின்னூட்டங்களைப் பார்த்துக் கொஞ்ச அதிகமாகவே மிரண்டு போனார் போல இருக்கிறது!

பால் வடியும் முகத்தோட படத்துல பச்சப்புள்ள மாதிரி இருக்கற இவரா வால்ஸ்?
நம்ப முடியலையே என்று நினைப்பவர்களுக்காக, மேலே ஆரம்பத்தில் கருத்து தளத்தில் இருந்து சுட்ட படம்.  

சிறுகதை எழுதுவது எப்படி என்பதை, அதைப் பத்திரிகைகளில் படித்துப்பார்க்கிற உதவி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் இருந்துபேசிவிட்டு வந்த அனுபவத்தைத் தன் பதிவில் எழுதும் போது, வம்புப்பின்னூட்டங்களில் மிரண்டு போய், இவரிடம் தான் எவ்வளவு விஷயம் இருக்கிறது அன்று ஆச்சரியப்பட்டுப்போய் [அல்லது அரண்டுபோய்?] எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!


சரி, வால்ஸ் சிறுகதைப் பட்டறைக்குப் போய் வந்தார், ஏதோ ஒரு சிறுகதை அல்லது வெறும் கதையாவது எழுவார் என்று நினைத்தீர்கள் என்றால், நீங்கள் வெறும் பச்சைப்புள்ளை, ரத்தம் கொப்பளிக்கிற யுத்த பூமியாக இருக்கும் சூடான தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் வந்தறியாதவர் என்றும், அப்படியே அபீட்டாயிக்கறது தான் நல்லதுன்னும் அர்த்தம்!


அதையும் மீறி வந்தவர்கள் என்றால், என்னை மாதிரி வால்பையன் ரசிகர் மன்றம், அல்லது வால்பையன் நற்பணி இயக்கத்து ஆளாகத் தான் இருக்க வேண்டும்! அட, மெய்யாலுமேங்க!

நற்பணி மன்றத்துக்காரங்க எல்லாரும் கூடி, சீக்கிரமே ஒரு நற்பணி ஆரம்பிக்கப் போறோங்க!




ஐம்பத்தைந்தே வரி, எட்டுப்பத்தியாகப் பிரித்து, நடுவில் சும்மா உள உளாக்காட்டிக்கு இரண்டு படம். தலைப்பு வைப்பதிலும் திறமையான தில்லாலங்கடி வேலையைக் காட்டி இருக்கிறார்! சென்ற பதினாறாம் தேதி போட்ட பதிவு. எப்பவும் போல, பட்டாசுச் சரத்தைக் கொளுத்திப் போட்டுவிட்டு, ஓரத்தில நின்னு வேடிக்கை பார்க்கிற வால்பையன், ஒன்னு ரெண்டு பின்னூட்டங்களில் கொஞ்சம் வீராவேசமாகப் பதில் எழுதியிருக்கிறார்.


பார்பனீயத்தின் புதிய தில்லாலங்கடி ! இது தான் தலைப்பு. இது வரைக்கும் நானூற்றுச் சொச்சம் பின்னூட்டங்கள்! ஏற்கெனெவே வால்பையனுடைய ஒரு பதிவில் டம்பி மேவீ ஏதோ பின்னூட்டமிடப்போக, ஈஸ்வரி ஆத்தா 'போடா லூசு' என்று அருள் வாக்குச் சொன்னதில், மனிதர் ரொம்பவுமே எச்சரிக்கையாக, "என் கருத்தை சொல்லி மீண்டும் ஒரு முறை "போடா லூசு" என்று பட்டம் வாங்க நான் தயாராக இல்லை........" என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டார்.


அவர் பதிவு போட்டார். பின்னூட்டக் கும்மிகள் குவிந்தன, சரி இங்கே என்ன சொல்ல வருகிறாய் என்று தானேகேட்கிறீர்கள்?


இங்கே தான், எந்த ஒரு விஷயத்துக்கும் நேரெதிரான இரட்டைத் தன்மை இருக்கிறது என்று, இந்தப்பக்கங்களின் அடிநாதமாக இருக்கும் கருத்தை, மறுபடி உண்மையென நிரூபிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.


"கடளையே நம்பளையாமாம், வேதத்தை என்னாத்துக்கு நம்புறோம்!,

ஏன் எல்லா கடவுளுக்கு ரூல்ஸ் & ரெகுலேஷன் இருக்கு?

அது இல்லாம இருந்தா அது கடவுள் இல்லையா?

என்ன கொடும சார் இது!? “



பின்னூட்டத்திலும் வந்து நம்ம வால்ஸ் கொளுத்திப்போட்ட சரவெடி இது!


கொஞ்சம் கூட அசராமல், அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் வார்த்தைகளை உருவி எடுத்து. பின்னூட்டச் சரவெடிகளாக வால்பையன்வெடிப்பதைப் பார்த்து நம்ம ஜெய் ஹிந்துபுரத்துக்காரர் பீர், தனியாகவே ஒரு பதிவு போட்டார் "யானைக்கு மதம் பிடிக்கும், வாலுக்கு?" ரொம்பப் பொறுமையாக, இஸ்லாம் மார்கத்தை வால்பையனுக்கு எப்படியாவது புரியும்படி சொல்லியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுதினமாதிரி இருந்தது. ஜெய்ஹிந்துபுரத்துக்காரருக்குச் சொன்னேன்:


'வாலுக்கு'பிரத்யேகமான பதிவு என்றாலும், சில விஷயங்கள் பொதுவாகச் சொல்லவேண்டித்தான் இருக்கிறது!


யானைக்கு மதம் பிடிக்கும்! ரொம்ப சரி, அதை விட மனிதனுக்கு 'மதம்' பிடித்துப்போய் விடும் நிலை இருக்கிறதே, அது அதைவிட மோசமானது!


அதைக் கண்டிக்கிறோம் என்று உண்மையிலேயே சீர்திருத்தங்களில் ஆர்வம் இருந்த சில பேர் வந்தார்கள்!அப்புறம் அது நிறையப் பேருக்குப் பொழுதுபோக்காகி விட்டது!


இங்கே பலரும் பேசுகிற நாத்திகம், பொழுதுபோக்கும் நாத்திகம் தான்!அவர்களுக்கு, விடைகளில், ஏன் எப்படி எதனால் என்று கேட்டுத் தெரிந்துக் கொள்ளும் பொறுமையும் இல்லை!


அதனால், யானைக்கு மதம் பிடிக்கும்! அப்புறம் வாலுக்கு என்ன பிடிக்கும் என்றால், 'லொள்ளு' தான்! அதுதான் சரியான விடையாகவும் இருக்கும்:-)).


ஒரு படத்தில் வடிவேலு, உளறிக் கொட்டி விட்டு,"அப்ப நானாத்தான் உளறி மாட்டிக்கிட்டனா?" என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொள்வது போல, பொழுதுபோக்கு நாத்திகம் பேசுகிறவர்களுக்கு, 'அவல்' எங்கிருந்து கிடைக்கிறதாம்?


மதங்களை உயர்த்திப் பிடிக்கிறேனென்று தாங்கிப்பிடிப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் வார்த்தையில் இருந்தே தான் கிடைக்கிறது!


ஆமாம், எனக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் இந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!



"The defenders of the truth are often worse than the enemies of the truth."



இந்தப்பதிவிலும் பின்னூட்டங்கள் ஒரு சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனாலு, விவாதம் முடிந்த பாடில்லை, யாரும் புதிதாக எதையும் தெரிந்துகொண்டதாகவும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், இப்படிப்பட்ட விவாதங்கள் ஒருபோதும் முடிவுக்கு வருவது இல்லை.


சீசன் ஒண்ணு, சீசன் ரெண்டு, சீசன் மூணுன்னு வளந்துகிட்டேபோகும்!


இது ஒருபக்கம் நடந்துட்டேயிருக்கும் அதே சமயம், இன்னொரு பக்கத்துல, மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்துல கொஞ்சம் சுவாரசியமான விவாதம், ஏற்கெனெவே ரெண்டு மூணு வாட்டி சொல்லியிருக்கேன், "எது பக்தி" இந்தக் கேள்விக்கு விடைதேடும் விதமாக, ஒரு இழையில் விவாதம் நடந்துட்டிருக்கு!



அங்கே எல்லாமே சைவம் தான்! ரத்தம் சிந்துற, குடிக்குற வேலையெல்லாம் கெடையாது!


ரெகா என்கிற திரு கார்த்திகேசு, ஒரு மலேசியத் தமிழ் எழுத்தாளர், போனமாசம் கலைமகள் மாத இதழில் கூட இவரோட நேர்காணல் வந்திருக்கு, அப்புறம் மோகனத் தமிழ் பேசும் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ரெண்டுபேரும் இழையில்  விவாதத்தை இப்படி நடத்துகிறார்கள்-வால்பையன் ரவுசு கட்டுற நாத்திகத்துலேயோ, நம்ம பீர், அவரோட நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கிறதுலேயோ காண முடியாத ஒரு விஷயம், கிட்டத்தட்ட, இதுதான் விஷயம்னு பிடிபடற அளவுக்கு இங்கே நடக்குது! படிச்சுப் பாருங்க!


"அரங்கனாரே!


நானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா?) பிடித்தவன்தான்!தெரிந்த விஷயம்தானே!


பக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப் பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்படுகிறது.


ஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. "பகவத்கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்"


அல்லது "ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்" என்று சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்றஅச்சம் எனக்கு இருக்கிறது.


ஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய் அடைக்கப் பட்டிருக்கிறேன்.


எனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்-உள்ளே, வெளியே) பற்றிய அலசல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.


நான் பயணி.பயணத்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.


என்னுடைய இரண்டு தம்பிடி ரவுசு இதோடு முடிகிறது.


ரெ.கா.


"வாருங்கள் திரு ரெ கா! இந்த அச்சமே உங்களுக்குத் தேவையில்லை.ஏனெனில் நான் எழுதுவது ஓர் இலக்கிய உத்தி என்ற முறையில் இல்லை. அதுவுமின்றி என்றுமே வெறும் நம்பிக்கையின் கட்சியை எள்ளளவும் மதிக்காதவன் நான்.


இனியும் மதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் எனக்குப் படவில்லை. எனக்கு உள்ளூற மயக்கம் என்பது அரிஸ்டாட்டிலின் கருத்துலகத்தில். பக்தி என்பதும், கடவுள் என்பதும் மிக ஆழமான கருத்து,அனுபவ உலகம் என்பது விடாமல் தோன்றிக் கொண்டிருக்கும் ஐயம்.



பக்தி என்பது எப்படிப் பெரும் அறிவுக்கான உழைப்பை உள்வாங்கத் தக்கதாய் இருக்கிறது எனப்படுகிறதோ அதைப்போலவேதான் அறிவின் பாற்பட்ட மூட நம்பிக்கைகளும் அறிவு போன்ற தோற்றம் கொண்டு சென்றவை வேஷம் கலைகின்றன.


எது எப்பொழுது நடக்கிறது என்பதுதான் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது.


மற்றபடி எப்படி முடிப்பது, அல்லது எங்கு கொண்டுபோவது, அல்லது முடிவு என்று ஒன்று இயலுமா, அல்லது இப்படி விசாரத்திலேயே இருப்பதுதான் என்தலைவிதியா? எதுவும் எனக்குப் புரிபடவில்லை. 'அறிதொறும் அறியாமை கண்டு, அற்று, ஆல்!' என்ற அர்த்தம் மட்டும் நன்கு புரிகிறது.



வர வர எழுத்தைக்கண்டே பயமாய் இருக்கிறது. மிகவும் தெரிந்துதான் ஒன்றை எழுதுகிறோம். ஜாக்கிரதையாக நன்கு கவனித்துத்தான் ஒரு கருத்தைக் கூறுகிறோம். ஆனால் எழுதி முடித்து அச்சாகி வந்து ஓர் உலா போனபின்பு அதே விஷயத்தில் புதிதாக ஒரு கதவு திறக்கிறது.


அப்பொழுது எழுதியது தவறா? இல்லை, பின் இந்தக் கதவு தெரியாமல் அதை எப்படி எழுதியது முழுமையாகும்? பின் தெரிந்து எழுதாமல், தெரியாமலேயே எழுதித் தொலைத்தோமா?



ஒரு நிலையில் நாம்தான் எழுதுகிறோமா அல்லது அவைதான் நம்மை வைத்து எழுதிக் கொள்கின்றனவா? இந்தப் புதிர் நிலத்தில் கால் வைத்தபடிதான் நான்
எதையுமே சிந்திக்கவோ எழுதவோ வேண்டியிருக்கிறது.


இதைவிட சுத்த அறியாமை நிலை சுகமாக இருந்தது."



--ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


இருக்கிறது என்று சொல்பவரும், ஒரு எல்லைக்கு உட்படுத்தித் தான் சொல்ல வருகிறார்.

இல்லை என்று மறுப்பவரும் அந்த எல்லையை மறுப்பதில் மட்டுமே தனிக்கவனம் செலுத்துகிறார். ஆக, கடவுள் உண்டா, இல்லையா என்ற கேள்வி இங்கே ஒருவருக்கு ஒருவர் செய்துகொள்ளும் வரையறைகளை நிராகரிப்பது, மாற்றியமைப்பது என்ற அளவில் மட்டுமே நடந்து கொண்டிருப்பது தெளிவாகப் புலனாகிறது, இல்லையா?


விஷயம் என்னதென்று விளங்கிக்கொள்ளாமலேயே விவாதம் மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறோம்!


அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் உள்ளது!



இது சித்தர்கள் ஞான மரபு. இதே மாதிரி, இன்னொருத்தரும் கிட்டத்தட்ட இதே மாதிரி உருவகத்தில் சொன்னது நினைவு வருகிறதா?



But do not think that the drop alone becomes the ocean.


The ocean, too, becomes the drop.

சிறுதுளி மட்டுமே கடலாக ஆகிவிடும் என்றெண்ணாதே!
பெருங்கடலும் சிறுதுளியாய் ஆவதைப் பார்!



-ரூமி



நான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு!



அழைப்பவர் குரலுக்கு வருவேனென்றான் கீதையிலே கண்ணன்!
பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்!


கண்ணதாசனுடைய இந்த வரிகள், சீர்காழி கோவிந்தராஜனின் கணீரென்ற குரலில் காதில் ரீங்கரித்துக் கொண்டே இருக்கிறது.


இறைவனை, எவர் எந்த நிலையிலும், எப்படி அழைத்தாலும், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர அவன் தயாராகவே இருக்கிறான்! அவன் வருகையை நாம் தான் உணருவதில்லை, அவன் சத்தமே இல்லாமல் தான் வந்த வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கிறான்.


இந்த அனுபவம், ஏதோ ஒரு மதம் அல்லது ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது கடவுள் என்று இல்லாமல், இறைவனது அருளைத் தேடும் மனிதர்கள் வாழ்க்கையில் பொதுவானதாகத்தான் இருக்கிறது. இந்த மாதிரி வெளிச்சக் கீற்றுக்களை, எந்த ஒரு ஆன்மீகப் பெரியவர்களுடைய வார்த்தைகள், அனுபவங்களிலுமே நம்மால், பார்க்க முடியும்!


பெர்ஷியாவில் பிறந்த ஜலாலுதீன் மொகமது ரூமி, இந்த ஸுஃபி ஞானியின், கவிதைகள், அவைகளில் கிடைத்த வெளிச்சக் கீற்றுக்கள், எப்படி சூரிய சந்திரர்களுடைய ஒளி, எந்த ஒரு பேதமும் இல்லாமல், எல்லோருக்கும் கிடைக்கிறதோ, அதே மாதிரி, தாகம் தாகம் என்று தவிக்கிறவனுக்குக் கிடைக்கிற அனுபவமாகக் கிடைப்பதை, முந்தைய பதிவு ஒன்றில் பார்த்தோம்
.

இறைவா, நீ எங்கே? என்று கேட்கும் ஒருவனுக்கு நான் இங்கிருக்கிறேன், நான் இங்கிருக்கிறேன் என்று பதில் சொல்கிறானாம் இறைவன். அதையும் எப்படிச் சொல்கிறான் என்பதை, ரூமியின் இந்தக் கவிதைவரிகளைப் படித்துப் பார்க்கும்போது,
அதை நமக்கும் சொன்னதாகவே ஒரு அனுபவச் சிலிர்ப்பு வருகிறதே!


கவிதை எப்படி ஒரு உண்மையைக் கதையாகச் சொல்கிறது என்பதைப் பாருங்கள்!


பகல் கடந்துபோய் இரவு முடிந்த பின்னும்
வாய் வலிக்க ரத்தம் கசிய அவன் அழைத்தான்
"அல்லா, என் ஆண்டவரே!"


சாத்தான் அவனுடன் விளையாட வந்தான்.
"ஏமாந்த சோணகிரி!இரவு முழுவதும் கூவினாயே
ஒரு முறையேனும் அல்லா நான் இங்கிருக்கிறேன்
என்றொரு பதில் சொல்லக் கேட்டாயா?
நம்பி நம்பிக் கூப்பிட்டதற்குப் பதில் என்ன?
நான் சொல்கிறேன், ஒன்றுமில்லை! ஒன்றுமேயில்லை!"


சாத்தான் சொன்ன வார்த்தைகளில் மனிதன்
சஞ்சலம், துயருடன் மண்ணில் விழுந்தானே
வெறுமையும் தனியனுமாய்த் துவண்டான்.
ஆழ்ந்த உறக்கம் அவனைத் தழுவியதே!


"இறைவனைத் தொழுவதில் வருத்தம் ஏன்?"
இப்ராகிம் கனவினில் கேட்கக் கண்டான்.


வருத்தம் தோய மனிதன் சொன்னான்
"அழைத்துப்பார்த்தேன், வரவில்லை!
இதோ இருக்கிறேன் எனவும் சொல்லவில்லை
ஆண்டவர் என்னை மறந்தாரோ?"


இப்ராகிம் கருணைததும்பச் சொன்னார்
"ஆண்டவர் சொன்னதை மறந்தாயோ?
என் பெயர் சொல்வதே பதிலாகும்
ஏங்கி அழைத்ததே செய்தியாகும்
என்னிடம் வர நீ செய்யும் முயற்சி
உண்மையில் நானுன்னை நெருங்கும் அறிகுறி
அன்பும் அச்சமும் எனக்கிடும் சுருக்கு
அல்லாவென்றழைக்கும் ஒவ்வொரு அழைப்பிலும்
சூழ்ந்திடும் மௌனம் ஆயிரம் பதில் சொல்லும்,
நான் இங்கே, நான் இங்கே, நான் இங்கே உன்னோடு!


Here I am!


All night, a man called “Allah”
Until his lips were bleeding.
Then the Devil said, “Hey! Mr Gullible!
How comes you’ve been calling all night
And never once heard Allah say, “Here, I am”?
You call out so earnestly and, in reply, what?
I’ll tell you what. Nothing!”
The man suddenly felt empty and abandoned.
Depressed, he threw himself on the ground
And fell into a deep sleep.
In a dream, he met Abraham, who asked,
“Why are you regretting praising Allah?”
The man said, “ I called and called
But Allah never replied, “Here I am.”
Abraham explained, “Allah has said,
“Your calling my name is My reply.
Your longing for Me is My message to you.
All your attempts to reach Me
Are in reality My attempts to reach you.
Your fear and love are a noose to catch Me.
In the silence surrounding every call of “Allah”
Waits a thousand replies of “Here I am.”
 
“Rumi Wisdom – Daily Teachings from the Great Sufi Master”
by Timothy Freke

ஆங்கிலத்தில்இருந்து தமிழுக்கு  மொழியாக்கம் செய்ததில் குறை இருந்தால் அது என்னுடையதே. ஆங்கில மூலமும், ஒப்புநோக்கிப் பார்ப்பதற்காகவே இங்கே தரப்பட்டிருக்கிறது!

கவிதை! இது கவிதை!

நீ!

உயிராய்ப்  பூமியில் தோன்றிய தருணமே

ஏறிச் செல்லவோர் ஏணியும் வந்தது!
ஏறிவருவாய் என!
மண்ணிலிருந்து தாவரமானாய்!
தாவர நிலையே மிருகமும் ஆனது.
அதன்பின் மனிதனுமானாய்.
அறிவும், அறிந்ததில் தெளிவும், நம்பிக்கையும்
கூடவே வந்தது உனக்காக.

மண்ணில் பிறந்த உடலைப்பார்!
எப்படி முழுமையாய் ஆனதென்று!
மரணம் குறித்தேன்  பயம் கொள்ள வேண்டும்?
மரணம்  உன்னைக் குறுக்கியதா?
உடல்நிலை கடந்தே போகும் போது
தேவதை  ஆவாய் ஐயமில்லை!
தேவர்கள் உலகுக்கு உயர்வதிலும் ஐயமில்லை

அங்கேயே தேங்கிவிடாதே தேவர்களுக்கும் மூப்புண்டு
தேவநிலையைக் கடந்து மறுபடியும் விழிப்பின்
பெருங்கடல் நிலைக்குள் மூழ்கி மூழ்கிப் பரந்திடுவாய்
சிறுதுளியாய் நீ! விரிந்து பரந்து நூறு கடல் ஆகிடுவாய்!
சிறுதுளி மட்டுமே கடலென்று எண்ணிவிடாதே!
பெருங்கடல் கூட, சிறுதுளியாய் ஆனதைப்பார்!

ஜலாலுதீன் முகமது ரூமி ! 

இந்த சூபிக் கவிஞனின் தாக்கம் எனக்கு நிறையவே உண்டு.

இங்கே ஒருபதிவில் மதங்களைப் பற்றிய விவாதம், கோவி கண்ணனுடைய பதிவு-மதங்கள்-கிழக்கும் மேற்கும்! பதிவிலும் தொடர்ந்த பின்னூட்டங்களிலும் கிளர்ந்தெழுந்த  சிந்தனையில் தேடிப்பிடித்து, மொழியாக்கம் செய்தது. மொழிபெயர்த்ததில் குறை இருந்தால் அது என்னுடையதே!

ஆங்கில மூலம் இதோ!

From   the  moment  you  came   into  this  world,
A  ladder  was  placed  in  front  of  you,
That  you  might  transcend  it.
From  earth,  you   became  plant,
From  plant   you  became   animal,
Afterwards  you  became  a  human  being,
Endowed  with  knowledge,  intellect  and  faith.
Behold  the  body,  born  of  dust,  how  perfect  it  has  become.
Why  should   you  fear  its  end?
When  were  you  ever  made   less  by  dying?
When  you  pass  beyond  this  human  form,
No  doubt  you  will  become  an  angel  and  soar  through  the  heavens,
But  don't  stop  there,  even  heavenly  bodies  grow  old.
Pass  again  from  the   heavenly  realm  and
Plunge,  plunge  into  the  vast  ocean  of  consciousness,
Let  the  drop  of  water   that  is  you  become  a  hundred  mighty  seas.
But   do  not  think  that  the  drop  alone  becomes  the  ocean.
The  ocean,  too,  becomes  the  drop.

(The  Way   of  Passion,   A  Celebration  of  Rumi,  Andrew   Harvey, 

Frog  Ltd.  Berkeley,  California)
ரூமியைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் புரிந்து கொள்ள, இந்த கவிதை உதவும்!

Come, come again, whoever you are, come!

Heathen, fire worshipper or idolatrous, come!

Come even if you broke your penitence a hundred times,
Ours is the portal of hope, come as you are .
I hold no religion or creed,
an neither Eastern nor Western,
Muslim or Infidel,
Zorastrian, Christian, Jew or Gentile.

I come from neither land nor sea,
am not related to those above or below,
was not born nearby or far away,
do not live either in Paradise or this Earth,
claim descent not from Adam and Eve or the Angels above.
I transcend body and soul,
My home is beyond place and name.
It is with the beloved, in a space beyond space.
I embrace all and am part of all.

ONCE a beloved asked her lover: “Friend,
You have seen many places in the world!
Now – which of all these cities was the best?
He said: “The city where my sweetheart lives!”
Seek knowledge which unravels mysteries
Before your life comes to close
Give up that non-existence which looks like existence,
Seek that Existence which looks like non-existence!