Showing posts with label அரசியல் தற்கொலை. Show all posts
Showing posts with label அரசியல் தற்கொலை. Show all posts

கார்ட்டூன்களில் தாக்கரே! வரைந்தே தாக்குறாங்களாம்!

ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராக இருந்து 1966 இல் சிவசேனா கட்சியைத் தொடங்கியவர் பால் தாக்கரே. அரசியல் ரீதியாக, சிவசேனா பொதுவுடைமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பையின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகர்களிடமிருந்து மாமூல் பணம் வசூல் செய்கிற கட்சியாகவே இருந்தது என்று தமிழ் விக்கி இவரது புகழ் பாடுகிறது. ஹிந்துத்வா கட்சியாகக்  காட்டிக் கொண்டதெல்லாம் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்த பிறகுதான்! 

 டெக்கான் ஹெரால்டு நாளிதழில் சஜித் குமார் வரைந்த இந்த ஒரு கார்டூன்தான் ஆளுனரை முழுதாய்க் குறை சொல்லி வந்திருப்பது என்றால் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை. ஏனென்றால்  ஆளுநர்கள் என்றால் அவ்வளவு இளப்பமாகப் பார்க்கப்படுவது நம்மூரில் புதிதல்லவே! 

ட்வீட்டரில் ஹேமந்த் மோர்பாரியா வரைந்திருக்கும்  இந்த கார்ட்டூன் தான் களநிலவரத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்று சொல்வதில் தவறே இல்லை!


சிவசேனா சொந்த ஆதாயங்களுக்காக காங்கிரஸ், NCP பக்கம் சாய்வது புதிதல்ல. இது முதல்முறையுமல்ல!

ஆனால் ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சர் ஆக்கியே  தீருவது என்பதில் எங்கே சறுக்கினோம் என்பது உத்தவ் தாக்கரேவுக்கு இன்னமும் பிடிபடவே இல்லை! FirstPost தளத்துக்காக மஞ்சுள் வரைந்த கார்டூனில் ஆதித்ய தாக்கரே கேட்பதாக இருப்பது வாசகரைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிற மாதிரி!

   
சதீஷ் ஆசார்யா என்னமோ காங்கிரசுக்கு ஓவராக பில்டப் கொடுத்துத்தான்  பார்க்கிறார். காங்கிரசால் NCP தாங்கப் படுவதாக நினைப்பே மிகமிகத்  தவறானது. முந்தைய பதிவில் தேபோப்ரத் கோஸ் FirstPost தளத்தில் எழுதியிருந்த செய்திக்கு கட்டுரையை வாசித்த்திருப்பீர்கள் இல்லையா? மேலிருந்து 2வதாக ஹேமந்த் மோர்பாரியா கார்ட்டூன் களநிலவரத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறதென்று சொன்னது ஏனென்று விளங்குகிறதா?


புலிவேஷக்காரனுக்கு எத்தனை நீளமாக  ஒட்டுப் போட்ட வால் இருந்தும் என்ன செய்ய? என்று  ஹிந்து நாளிதழில் சுரேந்திரா கேட்பதாக நாமாகப் புரிந்து கொள்ள வேண்டியதுதான்!


ஒட்டுவால் நீளமாக வளர்ந்து? சந்தீப் அத்வர்யு TOI நாளிதழுக்காக வரைந்திருக்கும் கார்டூனில் சொல்கிறபடி தானிருக்குமோ? 

மருத்துவ மனையிலிருந்து மூன்று மணிநேரத்துக்கு முன் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் சிவசேனாவின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவத் அடுத்த முதல்வர் சிவசேனாக் காரர்தான் என்று மறுபடி பெனாத்த ஆரம்பித்து விட்டார். கேலிச்சித்திரக்காரர் ஆரம்பித்த கட்சியை கேலிக்குரிய கட்சியாக ஆக்காமல் ஓய மாட்டார் போலிருக்கிறது!

மீண்டும் சந்திப்போம்.    

              

ஒரு புதன் கிழமை! மஹாராஷ்டிரா அரசியல் குழப்பங்கள்!

உண்மையை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள முடியாவிட்டாலும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எல்லாமே மஹாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்பட்டதில் நிம்மதியோடு இருக்கின்றன. உடனடியாக இன்னொரு தேர்தலை மாநிலத்தில் சந்திப்பதற்குத் தயாராக இல்லை என்பதுதான் முக்கிய காரணம் என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை, பணம் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், ரிசல்ட் எதிர்பார்க்கிறபடி இருக்குமா என்ற சந்தேகம்தான் பணத்தையும் விட மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.


காங்கிரஸ் சார்புள்ள சேகர் குப்தா இந்த 16 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாம். அரசியல் என்பது simple arithmetic மட்டுமே அல்ல என்பதை நண்பர்கள் இந்நேரம் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். அதேமாதிரி அரசியல் என்பது இங்கே திராவிடங்கள் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துகொண்டு வருகிற மாதிரி வெட்டி சவடால்கள், வீர வசனங்களால் மட்டுமே, செய்யப்படுவதல்ல என்ற பாடம் சிவசேனாவுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும்   கற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை என்பது நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் பேசியதில் வெளிப்பட்டிருக்கிறது. 

சிவசேனாவை விட காங்கிரஸ் நிலைமை இன்னும் பரிதாபம்! NCPக்கு அடுத்து எங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லையே என்று நிருபர்கள் கூட்டத்தில் நேற்று வெளிப்படையாகப் புலம்புகிற அளவுக்கு, இன்னொரு தேர்தலுக்குத் தயாராக இல்லை, ஆட்சியில் பங்குபெறுகிற வாய்ப்பைக் கோட்டை விட்டு விட்டால் காங்கிரஸ்கட்சி மாநிலத்தில் இனி மீளவே மீளாது என்று கட்சியின் சமஉக்கள் அழுத்தம் ஒருபுறம், இன்னமும் காங்கிரசுக்கு கொள்கை, கோட்பாடு எல்லாம் இருக்கிற மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிற AK அந்தோணி போன்றவர்கள் கொடுக்கிற அழுத்தம் ஒருபுறம், ஆக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத தலை(மை)யில் வெற்றிடமாக இருக்கிற கட்சி மேலிடம் காங்கிரசின் நிலையை இன்னும் பரிதாபமானதாக ஆக்கி வைத்திருக்கிறது. Maharashtra political crisis: Lending support to Shiv Sena will be a risky deal in the long run for Congress என்று    FirstPost  தளத்தில் தேபோப்ரத் கோஸ் எழுதியிருக்கிற செய்திக் கட்டுரையைவிட மிகச் சுருக்கமாக நச்சென்று வந்திருக்கிற பின்னூட்டம் இன்னும் கூர்மையாக நிலைமையைச் சொல்லிவிடுகிறது.
Rakesh Katyal
There will  be two winners and two losers if SS, NCP and Cong form government. SS is any case biggest loser, Cong will be the next having compromised without any major benefit. BJP will be biggest gainer, NCP being next having retrieved some ground. BJP will become the major national party in Maharashtra and NCP the major regional party.  

சிவசேனாவுக்கும் விஷயம் மெல்ல மெல்ல உறைக்க ஆரம்பித்திருக்கிறதென்பது Drawing back from its previous claim about filing new plea in Supreme Court, the Shiv Sena on Wednesday said it is not seeking an urgent hearing in the apex court, CNN-News18 reported.It was also reported that the party will file new petition only after letters of support from the NCP and Congress என்கிற தற்போதைய செய்திநிலவரத்தில் தெரிகிறது.


இந்தப்பிரச்சினையில் NCPயின் சரத் பவார் double game ஆடினாரா என்பது கவனிக்கப்படவேண்டிய சுவாரசியமான விஷயம். நேற்றிரவு   8.30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், முற்பகல் 11.30 மணிக்கே சரத்பவார் கூடுதல் அவகாசம் கேட்டுக் கடிதம் அனுப்பவேண்டிய அவசியம் என்ன? சிவசேனா காங்கிரஸ் இருகட்சிகளுக்கும் தெரியாமல் விஷயம் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தது ஏன்? நேற்று முந்திக்கொண்டு திங்கள் காலைமுதல் இரவு 7மணிவரை காங்கிரஸ் ஆதரவுக்கு கடிதத்துக்காகக் காத்திருந்தோம், வரவில்லை  என்று நிருபர்களிடம் போட்டுடைத்ததன் காரணம் என்ன?

கதை கட்டுரைகளை விட அரசியல் மிக சுவாரசியமானது! கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தான் சுவாரசியம் பிடிபடும்! 

மீண்டும் சந்திப்போம்.          

மனைவி சொல்லே மந்திரம்! அரசியலுக்காகுமா?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் கருதப்பட்டவர். தேசிய கட்சியின் அகில இந்திய தலைவர்களையே தனது போயஸ் கார்டன் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் ஜெயலலிதா, விஜயகாந்தையும் வீட்டுக்கு வரவழைத்து சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். எதிர்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்து பரிதாபமாய் தி.மு.க. தோற்க காரணமாய் இருந்தவர். இப்படி தமிழக அரசியலில் முக்கிய சக்தியாக பார்க்கப்பட்ட கட்சி தே.மு.தி.க.வின் நிலை இப்போது பரிதாபமாய் காட்சியளிக்கிறது என்கிறது ஆசியாநெட் நியூஸ் தமிழ். 

அங்கும் இங்கும் பேரம்பேசுவதிலேயே காலம் கடத்திக் கொண்டே இருக்கும் தேதிமுகவை துரைமுருகன் நன்றாக வைத்துச் செய்துவிட்டாரோ? ரெண்டு முருகனாக, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்! 



மகனுக்கு சீட் வாங்கி விட்ட சந்தோஷம் வேறு!  

அரசியலில் கிடைத்த வாய்ப்பைத் தொடர்ந்து கோட்டை விடுகிற கட்சியாக, தேர்தலுக்கு முன்னாலேயே தோல்வியைத் தழுவுகிற கட்சியாக விஜய்காந்தின் தேதிமுக ஆகி இருப்பது இன்றைய அரசியல் களத்தின் பரிதாபம்! இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட பீயுஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்! 
இதெல்லாம் அதிமுகவைக் காப்பாற்றப்போவதில்லை என்று தலையங்கம் எழுதி இங்கே டிவியிலும் வாசித்தாலும் பயனில்லை என்று உள்ளூர உதறல் எடுத்திருப்பதால் தானே தடைகோரி உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்? அய்யம்பேட்டை வேலை என்பது இதுதானே! 

The small political parties in TN have hit a jackpot .. parties that don’t deserve even a single seat and those who don’t deserve so many seats are enjoying the ‘VACUUM’ .. Vacuum is TN politics cannot be ‘FILLED’ at least for few more years ..
3:34 PM - 6 Mar 2019  இப்படி திமுக தொகுதிப் பங்கீட்டை  நக்கல் அடித்திருப்பது மு க அழகிரியின் மகன் துரை தயாநிதி தான்! 

இன்னும் என்னென்ன வருமோ?


2011 தேர்தல் களம்:மாற்றத்துக்குத் தயாராகுமா தமிழ்நாடு?


தினமணி தலையங்கம்:என்ன உறவோ, என்ன பிரிவோ!

First Published : 29 Mar 2011 04:19:48 AM IST



ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஆளும்கட்சியும் எதிர்க் கட்சியும் ஒத்த கருத்துடையவையாக இருப்பது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் இருப்பது நல்லதல்ல. பொருளாதாரக் கொள்கைகளில் நிரந்தரத்தன்மை இருப்பதுதான் தேசத்தின் சீரான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தரும் என்கிற வாதம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வேண்டுமானால் ஏற்புடையதாக இருக்குமே தவிர, சமுதாய ஏற்றத்தாழ்வைக் கட்டுக்குள் வைக்க உதவாது.

மக்கள்தொகையில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட இல்லாத நிலையில் வாழும் நாட்டில், பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் மட்டுமே பயனடையும் திட்டங்களையும் கொள்கைகளையும் அரசு கடைப்பிடிக்குமேயானால், ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துத் தீவிரவாதம் தலைதூக்கும் அபாயம் தவிர்க்க முடியாததாகிவிடும். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருவேறு பொருளாதாரக் கொள்கைகளை உடையவையாக இருந்தால் மட்டுமே தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்.
 

 இந்தியாவில் 1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் அன்றைய நரசிம்ம ராவ் அரசு பல்வேறு பொருளாதாரத் தடைகளை அகற்றி சுலபமாக அந்நிய முதலீட்டுக்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தவும் முனைந்தது. அன்றுமுதல் பல விபரீதங்கள் இங்கே அரங்கேறி வருகின்றன. முறைகேடுகளுக்கும், மெகா ஊழல்களுக்கும் பட்டுக்கம்பளம் விரிக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை சர்வசாதாரணமாக சில நிறுவனங்களும் தனி நபர்களும் கொள்ளையடித்துக் கொள்வதற்குத்தான் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உதவி இருக்கின்றன என்கிற அச்சமும் சந்தேகமும் ஏற்படுகின்றன.

 காங்கிரஸ், ஐக்கிய கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்று ஆட்சிகள் மாறினவே தவிர, காட்சிகள் மாறவில்லை. ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி சமீபத்திய "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வரை இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் சந்தித்திருக்கும் ஊழல்களின் மொத்த மதிப்பு, இந்தியாவின் ஓராண்டு நிதிநிலை அறிக்கையில் காணப்படும் வரவை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் இங்கே நடக்கக் கூடாததெல்லாம் நடக்கிறது. எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் மக்கள் வரிப்பணமும் தேசத்தின் வளங்களும் கொள்ளை போகின்றனவோ என்கின்ற அச்சம் எழுகிறது.

அவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான கடந்த வெள்ளிக்கிழமை, மக்களவையில் ஒரு கபட நாடகம், ஊடகங்களால் பெரிதுபடுத்தப் படாமல், மக்கள் மன்றத்தின் கவனத்தைக் கவராமல் காதும்காதும் வைத்ததுபோல அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆளும் மன்மோகன் சிங் அரசுக்கு எதிராக எல்லாத் தளங்களிலும் நெருக்குதல் கொடுக்கும் எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஒரு மிகப்பெரிய தர்ம சங்கடத்திலிருந்து அரசுக்குக் கைகொடுத்து உதவியிருக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது. ஆனால், நடந்திருப்பது அதுதான்.

சில ஆண்டுகளாகவே, குறிப்பாக, கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தே எப்படியாவது ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைப்பது தொடர்பான மசோதா பிரச்னைக்கு ரியதாகத் தொடர்ந்து வருகிறது. அதாவது, தன்னிடம் இருக்கும் ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விரும்புகிறது அரசு. அப்படிச் செய்தால் பல கோடி தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதிக்காகப் பங்களிப்பாக நல்கும் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து விளையாடிவிடக் கூடும் என்கிற நியாயமான அச்சம் எழத்தானே செய்யும்.

வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததும், அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கானவர்கள் தாங்கள் போட்ட முதலை இழந்த சரித்திரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் துணுக்குறுகிறது. ஓய்வூதியப் பங்களிப்புப் பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்கிற விபரீத யோசனை ஏற்கப்பட்டால், பல ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பினாமி நிறுவனங்களின் பங்குகளில் அது முதலீடு செய்யப்பட்டு கபளீகரம் செய்யப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் ஒன்றை ஏற்படுத்தி தவறுகள் எதுவும் ஏற்பட்டுவிடாமல் கண்காணிக்கிறோம் என்று இதற்கு அரசு பதில் அளிக்கிறது. தொலைத்தொடர்புத் துறையில் ""டிராய்'' ஒழுங்காற்று ஆணையம் இருந்தும் "ஸ்பெக்ட்ரம்' என்கிற பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடக்கவில்லையா என்று பதில் கேள்வி எழுப்பத் தோன்றுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைக்க அனுமதி கோரும் மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அவையில் அந்த மசோதாவை நிறைவேற்றப் போதுமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருக்கவில்லை. நிலைமையைச் சட்டெனப் புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் வாசுதேவ் பட்டாச்சார்யா, மசோதாவை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவைத்தலைவரின் அனுமதியும் பெற்றுவிட்டார்.

எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி என்ன செய்திருக்க வேண்டும்?

மசோதாவைத் தோற்கடிப்பதால் ஆட்சி கவிழ்ந்துவிடாதுதான். ஆனால், ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அமைவது தடுக்கப்படாவிட்டாலும் அந்த முயற்சி ஒத்திவைக்கப்படும். யார் யாரிடம் பேசினார்களோ, யார் யாருக்கு வழிகாட்டினார்களோ தெரியாது, அரசுக்கு ஆதரவாகப் பிரதான எதிர்க்கட்சி வாக்களித்து, மன்மோகன் சிங் அரசைத் தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிவிட்டது. உடனடியாக மசோதா சட்டமாக்கப்பட்டுவிடாது என்றாலும், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டதால், இனி சட்டமாக்குவது எளிதுதானே.

இதனால் சகலருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், பொருளாதாரக் கொள்கைகளில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருந்தால், மக்கள் வரிப்பணத்தைச் சூறையாடும் நிழல் மனிதர்களின் பாடு கொண்டாட்டமாகிவிடும்!

சென்ற பதிவில் ஒரு பட்டதாரிப் பள்ளி ஆசிரியர், ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார், "நீ எழுதியிருக்கிறது ஏதாவது உனக்கே புரியுதா?" இங்கே படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிற பகுதிக்கே, சாதாரணமான விஷயங்களைக் கடப் புரிய வைக்கப் படாத பாடுபடவேண்டியிருக்கிற அவலத்தை இந்த பள்ளி வாத்தியார் மேம்போக்காக பதிவை மேய்ந்து விட்டு எழுப்பியிருந்த இந்தக் கேள்வி காட்டுகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது இன்று இணையத்தில் காலையில் படித்த இன்றைய தினமணி நாளிதழ் தலையங்கமுமே கூட, மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கிற விதமாக இருந்ததில் அதிக ஆச்சரியம் ஏற்படவில்லை.

நம்மில் பெரும்பாலானோர் பலவிஷயங்களில் பலதருணங்களில் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் கொஞ்சம் சேர்த்துப் பாருங்கள்! இப்போது தினமணி தலையங்கத்தில் சொல்லியிருக்கிற விஷயம்.............!

ஆளும் கட்சியாக இருப்பவர்களும், எதிர்க்கட்சியாக இருப்பவர்களும் ஒரே மாதிரியான பொருளாதாரக் கொள்கைகள், கோட்பாடுகள், அரசீயல் நிலைபாடுகள் இருக்கக் கூடாது என்று ஆரம்பிக்கிற இந்தத்  தலையங்கம், அப்படி இருந்தால் மட்டுமே "தகுந்த கண்காணிப்பும் எச்சரிக்கையும் அரசின் செயல்பாடுகளில் காணப்படும்" என்று முத்தாய்ப்பாகச்சொல்கிறது பாருங்கள், அங்கேதான் ஒரு அடிப்படையான கோளாறு இருப்பது தெரிகிறதா?.இப்போது நாம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிற பல சீரழிவிற்குக் காரணமாகவும் இந்தக் கோளாறு இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

நேரு சோஷலிசம் பேசினார். ஆனால் அது அல்நாஷர் கதையில் வருகிற வெறும் பகற்கனவாக மட்டுமே இருந்தது.அவருக்குப் பின்னால்,சொற்பகாலமே பதவியில் இருந்தாலும்,ஒரு அடிப்படை மாற்றத்தை செயலில் காண்பித்த பிரதமராக லால்பஹதூர் சாஸ்திரி இருந்தார் என்பதையே நமக்கு நினைவு படுத்திக் கொண்டாக வேண்டிய தருணம் இது. சாஸ்திரியும் காங்கிரஸ் காரர்தான்! நேரு மாதிரியே, அவரும் சோஷலிசம் என்பதை ஏற்றுக் கொண்டவர்தான்! ஆனால், நேருவிடம் இல்லாத அசாத்தியத் துணிச்சல்,முதுகெலும்பு அவரிடம் இருந்தது. வெறும் வார்த்தைகளில் சோஷலிசம் பேசிக் கொண்டிருக்காமல், நடை முறைக்கு எது உதவும் என்பதில் ஒரு தெளிவு இருந்தது.

நேருவைச் சீனப் பூச்சாண்டி பயமுறுத்தியது போல சாஸ்திரியை பயமுறுத்தவில்லை! 1965 இந்திய பாகிஸ்தானியப் போரில் ஒரு  தெளிவான துணிச்சலான அரசியல் முடிவை சாஸ்திரி எடுத்தார், ஜெயித்தார்! சீனா, போரில் தலையிடுகிறவிதத்தில் பயமுறுத்திய போது அதற்கும் பதிலடி கொடுக்கிற விதத்தில் நிமிர்ந்து நின்றார்! சீனப் பூச்சாண்டி எடுபடவில்லை! சாஸ்திரி, நேரு, தலைமைப் பண்பு  என்ற குறியீட்டுச் சொற்களில் இந்தப் பக்கங்களில் தேடிப் பாருங்கள், நேற்றைய வரலாறு கொஞ்சம் பேசப் பட்டிருப்பதைப் படிக்கலாம்.

இந்த தேசத்தின் பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியிருந்தவர்கள். ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற சாஸ்திரியின் முழக்கம், பசுமைப் புரட்சிக்கு முன்னோட்டமாக இருந்தது என்பதையும் இன்றைக்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பதாலேயே எப்போதுமே அடித்துக் கொள்கிற கட்சிகளாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையையே தினமணி தலையங்கம் மறந்துவிட்டுப் பேசுகிற மாதிரித்தான் எனக்குப் படுகிறது. ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிக்கு ஒரு பொறுப்பான இடம், அங்கம் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் சீரழித்து ஊழல்மயமாக்கிய இந்திய அரசியலில், எதிர்க்கட்சி என்றால் எதிரிக் கட்சி, கொள்ளையில் மறைமுகக் கூட்டாளி என்ற மாதிரியாகிப் போனது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்தத்தலையங்கம் பேசுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

நேருவிடம் ஆயிரம் குறைகள் காண முடிந்தாலும், சில நல்ல அரசியல்ப
ண்
பாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். உதாரணமாக, வேண்டாத மருமகன் "பெரோஸ் காண்டி" (இந்திராவின் காதல் கணவர்!) நேருவை எரிச்சலூட்டுவதற்காகவே சில விஷயங்களைப் நாடாளுமன்றத்தில் பேசினாலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பிரசுரிப்பதில், விமரிசிப்பதில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும் என்று அவர் கொண்டுவந்த திருத்தம், பெரோஸ் காண்டி திருத்தம் என்றே அழைக்கப்பட்டது, ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஒரு உதாரணத்துக்கு சொல்ல முடியும்.ஆனால், அரசியல் நெறிகள், நாடாளுமன்ற நடைமுறைகள், மரபுகள், பத்திரிக்கை சுதந்திரம், நீதித்துறையில் குறுக்கீடு, ஜனாதிபதி பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மட்டுமே பயன்படுத்தியது என்று வரிசையாக அரசியல் சீரழிவுகள், ஊழல்கனின் ஊற்றுக்கண்ணாகவே இந்திராகாந்தி இருந்தார், அவரது வாரிசுகளும்அவரை மிஞ்சுகிற விதத்தில்தான் இருக்கிறார்கள் என்பது இந்தப்பக்கங்களில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற விஷயம்.

இந்த தேசத்தின் விடிவுகாலம், காங்கிரசைத்தூக்கி எறிவதில்தான் இருக்கிறது!அப்படியானால், அதற்கு  மாற்று, பாரதீய ஜனதா கட்சிதான் என்று சொல்வதாக அர்த்தமில்லை. காங்கிரஸ் கட்சி அறுபதாண்டுகளில் அடைந்த சீரழிவை, பிஜேபி ஒரே ஒருதரம் ஆளும் கட்சியாக இருந்தபோதே கெட்டுச் சீரழிந்துவிட்டது என்பதைத்தான், தினமணித் தலையங்கத்தில் எப்படி இவர்கள் மறைமுகமாகக் கூட்டாளிகளாகிக் கொள்வார்கள் என்று காட்டுவதாக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்!

இப்போதிருக்கும் தேர்தல் முறை அயோக்கியர்களுக்குமட்டுமே சாதகமானது. இதை சொல்வதில் எந்தத்தயக்கமும் எனக்கில்லை. இப்போது, உடனடித்தேவை தேர்தல் சீர்திருத்தங்கள் தான்!ஆனால், எல்லா அமைப்புக்களையும் ஊழல்மயப் படுத்தியிருக்கும் அரசியல் கட்சிகள் விடுவார்களா என்ன? எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று கேட்கக் கூட வழியில்லை, ஆனால், ஏதோ ஒரு கொள்ளியைவைத்துத் தலையைச் சொறிந்துகொள்கிற மாதிரியான சுதந்திரம் மட்டுமே இருக்கிறது.

அதனால் தான் கொழுந்துவிட்டு எரியும் கொள்ளியை விட்டு, கொஞ்சம் குறைந்துபோன கொள்ளியாக ஒருவித சாமர்த்தியம் லாவகத்தோடு நம்மைத் தொல்லைப்படுத்தவே அவதாரம் அரிதாரம் எடுத்திருப்பவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியிருக்கிறது.


காங்கிரசையும், அதன் கூட்டாளிகளையும் வருகிற தேர்தலில் புறக்கணிப்பது முதல் வேலை!

என்ன சொல்கிறீர்கள்?கொஞ்சம் உரக்கச்சொல்லுங்களேன்!

 

2G ஸ்பெக்ட்ரம்! சி பி ஐ குற்றப்பத்திரிகையும் கூட்டணி தர்மமும்!


டில்லிப் பாதுஷாக்கள்  என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்திருக்கிறோம்!எப்போது  பார்த்தாலும் எலெக்ஷன், கலெக்ஷன் என்றே தலையைப் பிய்த்துக் கொள்வதில் இருந்து ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக டில்லி பாதுஷா, டில்லி பாதுஷாவைக் கூட ஆட்டிப்படைக்கும் கூட்டணி தர்ம அல்வா கதையைக் கொஞ்சம் மீள்வாசிப்பாகப் பார்த்து விடலாமே!.

டில்லி பாதுஷாவாக இருப்பவர்களுக்கு சுயசிந்தனையே இருக்கக் கூடாது என்பதுதான் முதல் தகுதி என்பதைக் கூட்டணி தர்மம் வைத்துக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அப்போது உண்மை இன்னும் விளக்கமாகத் தெரியும்!


பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அது  நற்செய்தியே கிடையாது என்பது அனுபவிக்கிற ஜனங்களுக்குத்  தானே தெரிய வேண்டும்?ஜனங்களுக்கு அப்படித் தெரிந்து  விடாமல் இருப்பதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள்   என்று ஒரு பெரிய துதிபாடிக் கும்பலே இருக்கிறதே!  இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத்தயாராக இருக்கிற  மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற"  தர்பாரும் உண்டு! இது போதாதா?

ந்தேகப் பட்டு சந்தேகப்பட்டு மூளைக்கு வேலை  கொடுக்கிற மாதிரிக் காட்டிக் கொண்டதிலேயே அலுப்பு வந்து விட்டதோ என்னவோ! ஒரு நாளைக்கு, பாதுஷா அக்பருக்கு, அது கனவில் வந்தது! கனவில் வந்த சந்தேகம் கொஞ்சம் பயமுறுத்துகிற மாதிரியும் இருந்தது, இன்றைக்குத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பீதி அடிவயிற்றைக் கொஞ்சம் பிசைந்து கொண்டிருக்கிறதே அந்த மாதிரி!

புரியாத விஷயங்கள் எல்லாமே பயமுறுத்துபவைதானே!  பாதுஷா மட்டும் விதி விலக்கா?

னவில், தனக்கு ஒரே ஒரு பல்லைத் தவிர மற்ற எல்லாப் பல்லும் விழுந்து விடுகிற மாதிரிக் கனவு வந்தால், குழப்பம் வருமா வராதா? இங்கே ஏதடா சாக்கு என்று எது கிடைத்தாலும், அடிவருடிகளை வைத்துப் பாராட்டு விழா நடத்தி, தானே நம்ப முடியாத படிக்கு  இந்திரனே சந்திரனே மனு நீதி சமூகநீதி சமத்துவம் கண்ட நாயகனே என்னைப் பாடச் சொல்லாதே நான் கண்டபடி பாடிப் போடுவேன் என்ற அளவுக்குப் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருப்பதைப் போல, பாதுஷாவுக்குக் குழப்பம் வந்தால் என்ன செய்வார்கள்?

கூப்பிடு தர்பாரை! உத்தரவு பறந்தது! டில்லி குரல் கொடுப்பதை விட, டில்லிக்குக் குரல் கொடுத்தால் தர்பார் கிடு கிடுக்காதோ!?

னவுக்குப் பொருள் தெரிந்து கொண்டாக வேண்டுமே! நாடி, கைரேகை, ஜாதகம், கிளி, எலி ஜோசியம், முகத்தைப் பார்த்தே ஆரூடம் சொல்லும் ஆரூடக்காரர்கள், சோழியை உருட்டிப் போட்டுப் ப்ரச்னம் பார்த்து பலன் சொல்லிப் பல்லை இளிப்பவர்கள், இப்படி எல்லோரிடத்திலும்  பாதுஷாவுக்கு வந்த கனவுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டாயிற்று!

னேகமாக எல்லோருமே ஒன்று சேர்ந்தார்போல, ஒரே  விஷயத்தைத் தான் சொன்னார்கள். பாதுஷாவின் உறவினர்கள் அத்தனை பேரும், பாதுஷாவுக்கு முன்னாலேயே பரலோகம் போய்விடுவார்கள்!

ப்படிப் பலனைக் கேட்டதும் பாதுஷாவுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதிலேயே சற்றுக் குழப்பம் வந்து விட்டது! தனக்கு முன்னாலேயே, நெருங்கிய உறவினர்கள் அத்தனைபேரும் பரலோகம் போய்விடுவார்கள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதற்காக வருத்தப் படுவதா, இல்லை அது எப்படி இவர்கள் எல்லோரும் தன்னுடைய உத்தரவு இல்லாமலேயே முந்திப் போய்விடுவார்கள் என்பதற்காகக் கோபப் படுவதா? நவரசத்தில் எந்தரசம் இந்த சீனுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லையே!

பாதுஷாவுக்குக் கோபம் கோபமாக வந்தது! பின்னே, இவ்வளவு யோசிக்க விட்டால்....! குழப்பம் அதிகமாகுமா இல்லையா?

வராவது இதற்குப் பரிகாரம், மாற்று என்று எதையாவது சொல்லிக் குழப்பத்தைப் தணிவிக்கிறார்களா  என்று அக்பர் சபையின் இரு மருங்கும் ஏற இறங்கி  இப்படி அப்படியும், அப்படி இப்படியுமாகத் தலையைத் திருப்பிப் பார்த்தார்! ஒருத்தரும் பதில் சொல்வதாகக் காணோம்!

ன்ன தர்பார் இது! மொத்தமும் தண்டங்கள்! ஒரு குழப்பத்தைத் தீர்ப்பதற்கு யோசனை கேட்டால், இன்னொரு குழப்பத்தைக் கொண்டு வருகிறவனை எல்லாம்தர்பாரில் நிரப்பி....அம்ம்ம்மா!  இப்போதே கண்ணைக் கட்டுகிறதே!

ந்த பீர்பால் இருந்தாலாவது ஏதாவது சொல்லியிருப்பானே! பீர்பாலையும் காணோம்! பாதுஷா இப்படிக் குழம்பிக் கொண்டிருக்கும் போதே  பீர்பால் சபைக்குள் நுழைந்தார்! அக்பருக்கு, தன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் பிறந்தது! தான் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம் என்று சொல்ல முடியுமா என்று பீர்பாலிடமும் அந்தக் கேள்வியை அக்பர் கேட்டார்.

கொஞ்சம் யோசித்து விட்டு பீர்பால் சொன்னார்: "அந்த ஒரு பல் மட்டும் விழாமல் இருந்ததாகக் கனவு கண்டது,  மற்ற எல்லோரையும் விட நீங்கள் அதிக ஆயுளோடிருப்பீர்கள் என்பது தான் ஹூசூர்! "

பாதுஷாவுக்கு மிகவும் சந்தோஷம்! ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை இந்த பீர்பால் எவ்வளவு சரியாகச் சொல்லி விடுகிறான்! வழக்கம் போல பீர்பாலைப் பாராட்டி விட்டுப் பரிசுகளும் அளித்துவிட்டு, தண்டத்துக்குக் கூடிய தர்பார் கலையலாம் என்று பாதுஷா உத்தரவு போட்டார்! 


ப்படி உத்தரவு போடுவது மட்டும் எவ்வளவு சுகமாக இருக்கிறது!

ரண்மனைக்குத் திரும்புகிற சமயத்தில் பாதுஷாவுக்குத் திடீரென்று ஏதோ பொறி தட்டியது மாதிரித் தோன்றியது!

ப்படிப் பொறி தட்டுகிற சமயத்தில் எல்லாம், அடுத்த குழப்பம் தயாராக ஆரம்பித்துவிட்டது என்பது பாதுஷாவின் அனுபவம்!

ற்றவர்கள் சொன்னதைத் தானே, பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னான்! அதெப்படி, மற்றவர்கள் சொன்னபோது வருத்தமாக, கோபமாக வந்தது, அதையே பீர்பால் கொஞ்சம் மாற்றிச் சொன்னபோது எதனால் சந்தோஷமாக இருந்தது?

மாற்றி யோசிப்பதா? யோசித்து மாற்றுவதா ?

பாதுஷாவுக்கு டுத்த ந்தேகம்  ழக்கம் போயாராகி விட்டது!

கதை கேட்டாச்சா? நடப்பு  நிகழ்வுக்கும் கொஞ்சம் வருவோமா?

 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரா, ராசாவின் தனிச் செயலர் ஆர்.கே.சண்டோலியா ஆகியோர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் மார்ச் 31-ம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.

புலனாய்வின் நிலை தொடர்பான அறிக்கை மார்ச் 29-ம் தேதி தாக்கல் செய்யப் படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.  கைது செய்யப்பட்டிருக்கும் ஆ.ராசா உள்ளிட்ட நால்வரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையின் குற்றம் சாட்டப் பட்டவர்கள் வரிசையில் இடம்பெற்றிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய நிறுவனங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் இதில் பதிவு செய்யப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  ஸ்வான் நிறுவனத்தின் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்காட்சியின் சரத்குமார் ஆகியோருக்கு எதிரான குற்றச் சாட்டுகள் குறித்த விவரங்களும் சிபிஐ தயாரித்திருக்கும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு பெரும்பான்மை பங்குகள் இருந்தாலும் அவர் நிறுவனத்தின் செயல்படாத பங்கு தாரராகவே இருந்திருக்கிறார் என்பதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கான வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தில் கனிமொழியின் பங்கு பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. 

யூனிடெக் - டாடா நிறுவனம் இடையிலான நில ஒப்பந்தம், ரூ.1600 கோடி கடன் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் இந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.  இப்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் குற்றப்பத்திரிகை சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருக்கும் விவரங்களில் 10 சதவீத தகவல்களைக் கொண்டே தயாரிக்கப் பட்டிருப்பதாகவும் விரைவில் மேலும் சில நிறுவனங்கள், தனி நபர்கள் மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக மோரீஷஸ், சைப்ரஸ் நாடுகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 1-ம் தேதி புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படித் தினமணி செய்தி இங்கே 

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறிக் கைலாசத்தைப் பார்க்கப் புறப்பட்டானாம்! கைப்புண்ணே கண்ணுக்குத்  தெரியாத சி பி ஐ இந்த வழக்கை எப்படிக் கோட்டை விடும் என்பதற்கும் நிறைய முன்
தாரணங்கள் இருக்கின்றன. அத்தனை மோசமான முன் தாரணங்களுக்குப் பின்னாலும் காங்கிரஸ் கட்சியின் பெருந் தலைகள் இருந்திருக்கிறார்கள், இருந்துவருகிறார்கள் என்பது கண் முன்னால் நடக்கும் சரித்திரம்.

இந்த தேசத்துக்கு விடிவு காலம் காங்கிரஸ் கட்சியையும் ,அதன் கூட்டாளிகளையும் வருகிற தேர்தல்களில் எப்போதுமே தலையெடுக்கவிடாமல் பாடம் கற்றுக் கொடுப்பதில் தான் இருக்கிறது.


நேற்றிரவு முழுவதும், கனிமொழிமீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் படும் என்றே  டிவி செய்திகள் ஆங்கில சானல்களில் ஓடிக் கொண்டிருந்தன. டில்லிக்குக் குரல் கொடுத்தார்களோ இல்லையோ, செய்திகள் இப்போது மாற்றி, அடக்கி வாசித்துக் கொண்டிருப்பதில் என்ன பின்னணி என்பதை வாசகர்கள் ஊகத்துக்கே விட்டுவிடுவது உத்தமம்.

என்ன செய்யப்போகிறீர்கள்? அதைக் கொஞ்சம் உரக்கச்  சொல்லுங்களேன்!




 

கறுப்பு எம்ஜியார்! கூட்டணி தர்மம்! அரசியல் கூத்துக்கள்!

வருகிற சட்ட மன்றத் தேர்தல்களில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள்? தனி மெஜாரிட்டி எந்த அணிக்கும் கிடைக்காதாமே?

இந்த கேள்விகளுக்குப் போவதற்கு முன்னால்.பாமக நிறுவனர் மருத்துவர் ஐயா சிரிக்காமல், ஒரு ஜோக்கை உதிர்த்திருக்கிறார்! அதைப் பார்த்து விடுவோம் 
 

சென்னை, மார்ச் 21: தி.மு.க.வுடன் ஏற்பட்டிருப்பது தொகுதி உடன்பாடு மட்டுமே, கொள்கை அளவிலான கூட்டணி அல்ல என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்து கொண்டுள்ளோம். உங்கள் ஓட்டு எங்களுக்கு, எங்கள் ஓட்டு உங்களுக்கு என்ற அளவில்தான் உடன்பாடு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. நாங்கள் தி.மு.க.வுடன் கொள்கை அளவிலான கூட்டணி  அமைக்கவில்லை.
 

பா.ம.க. ஆட்சி அமைக்கப் போவதில்லை. அதனால் இலவசங்களை நாங்கள் அறிவிக்கவில்லை. செய்தி/ஜோக்கை  முழுவதும் படிக்க

இப்படி பலவிதமான ஹேஷ்யங்கள் உலவிக் கொண்டிருந்தாலும்,2011 தேர்தல் எல்லாவகையிலும் வித்தியாசமானதாகவே இருக்கப் போகிறது என்பது மட்டும் உறுதி!முதன் முதலாக, கூட்டணிகளுக்குள் குழப்பம் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று கூட முடிந்துவிடாது போலத்தான்  இருக்கிறது! அடுத்ததாக, கூட்டணிக்குள் இருந்தாலும், சீட்டுப் பேரங்களில் ஏற்பட்ட காயங்களின் வஞ்சங்களைத் தீர்த்துக் கொள்ள ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக இந்த ஒரு அம்சத்தில் மட்டும் ஒற்றுமையாக இருப்பதுபோலத் தெரிகிறது. டாக்டர் சுப்ரமணிய சாமி சொல்வதுபோல தேர்தலுக்கு முன் இருக்கிற எந்தக் கூட்டணியும், தேர்தலுக்குப் பின் இருக்காது என்ற சந்தேகத்தையும் இந்தத்தேர்தல் எழுப்பியிருக்கிறது.



கடந்த ஐந்தாறு நாட்களாக அதிமுக கூட்டணியில் இடப்பங்கீடு முடியாமல் இழுத்துக் கொண்டே போனதும், மதிமுக மட்டும் தனித்து விடப்பட்டு, தேர்தலில் பங்குகொள்ளப்போவதில்லை என்ற முடிவை வைகோ எடுத்ததும் பரபரப்பான செய்தியாக, ஜெயலலிதாவின் ஆணவம் இன்னும் அடங்கவில்லை, எவரையும் அவர் மதிப்பதில்லை, சுயமரியாதை உள்ளவர் எவரும் அவருடன் சேர்ந்து இருக்க முடியாது என்ற கண்டுபிடிப்புக்களை திமுகவை விட ஊடகங்களும், பதிவுலகமும் ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது பழங்கதையாய், ஆறி அவலாகிப் போன செய்தியாகிப் போனது.


""திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத், தங்கபாலு ஆகியோர் பரிந்துரைப் பட்டியலை ஆய்வுசெய்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. லண்டனில் இருந்து தில்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இந்தப் பட்டியலை அவர்கள் திங்கள்கிழமை இரவு வழங்கியதாகவும், அதனை நிராகரித்த அவர், இரண்டு முறைக்கு மேல் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் புதியவர்களுக்குதான் வாய்ப்பு என்று கூறியதாகவும் தெரிகிறது.

புதிய பட்டியல் தயாரித்துக் கொண்டுவருமாறு சோனியா கேட்டுக் கொண்டதாகவும், செவ்வாய்க்கிழமை காலை புதிய பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவைச் சந்திப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  சோனியாவின் நிபந்தனையின்படி பார்த்தால், இப்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் டி. யசோதா (ஸ்ரீபெரும்புதூர்), பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்), ஞானசேகரன் (வேலூர்), டி. அமரமூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), எஸ். சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால்பாறை), ஜெயக்குமார் (நாமக்கல்), ஆர். ராம்பிரபு (பரமக்குடி), கே.ஆர். ராமசாமி (திருவாடனை), சுந்தரம் (காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 

இவர்களில் நாமக்கல் ஜெயக்குமார், திமுகவுடனான பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். வாய்ப்பு பறிபோகும் என்ற தகவலால் இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.  இதுதவிர இரண்டு முறைக்கு மேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பி.வி. ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ராம்பிரபு உள்ளிட்டோரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது, இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள்.  சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது."
   இப்படி தினமணி செய்தி சொல்கிறது

(பரபரப்பு என்ற இடத்தில் கலவரம், பீதி என்று மாற்றிக் கொண்டால் இன்னமும் பொருத்தமாக இருக்குமோ!)


ஆக, தேர்தல் கூத்தில் மறுபடியும் சிக்கித் திண்டாடுவது, இப்போது திமுக கூட்டணியின் முறை!

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை சோனியாவும் ராகுல் காந்தியும் நிராகரித்து விட்டதாக வந்திருக்கும் செய்தி, இங்கே உள்ள காங்கிரஸ் காரர்கள் அடிவயிற்றில் அமிலத்தை லிட்டர் லிட்டராகச் சுரக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் தப்பித் தவறி ஜெயித்து விட்டால், இப்போதிருக்கிற மாதிரி, திமுக தலைமைக்கோ, அல்லது அதிமுக தலைமைக்கோ அடிபணிந்து ஆதாயங்களைத் தேடுகிற மாதிரி ஆகிவிடாமல் இருக்க, ஒரு புதிய பார்முலாவைக் காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டும்
உண்மையாக மட்டும் இருந்து விடுமானால், இந்தப் பக்கமோ அல்லது அந்தப்பக்கமோ சாய்ந்து, சொந்த ஆதாயங்களில் மட்டுமே குறியாக இருக்கும் பெருச்சாளிகள் பலதும் காணாமல் போய்விடுகிற நல்ல காலம் கூடப் பிறந்துவிடுமோ?!


*******

கூட்டணி தர்மம்!
 
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, வரும் மார்ச் 31ம் தேதி குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்யவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, பல்வா, சண்டோலியா பெகுரா மற்றும் கலைஞர் டி.வி சரத்குமார் ரெட்டி ஆகிய 5 பேர் மீது சி.பி.ஐ., குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளது.  

மேலும் இப்பட்டியலில் கனிமொழி பெயரும் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வெளியான செய்திகளைப் பார்க்கும்போது, அதிமுக-தேதிமுக கூட்டணி ஒரு பொருந்தாக் கூட்டணியாகவே கடைசி வரை இருந்துவிடும் போலத் தான் தெரிகிறது. ஒரு கூட்டணியில் சேர்ந்து செயல்படுகிற பக்குவம் தேதிமுகவுக்கு இல்லை என்பதும் அரவணைத்துப் போகும் தெளிவு அதிமுகவுக்கு இல்லை என்பதும் நன்றாகவே தெரிகிறது.  

இப்படிப் பொருந்தாக் கூட்டணி கூட ஒருவகையில் இருதரப்பும் செய்துகொள்கிற அரசியல் தற்கொலைதான்! கருப்பு எம்ஜியார் என்று அழைத்துக் கொள்வதனாலேயே முதலமைச்சராகி விடுகிற கனவு ஒருவருக்கு வந்துவிடுமானால், இதை என்ன சொல்வது? இந்த மாதிரி, விபரீதக் கனவுகளை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்துவிடுவது அரசியல் சாக்கடையை சுத்தம் செய்வதில் ஒரு பகுதிதான்! 
 

வலைப்பதிவர்களுடைய, குறிப்பாக சென்னை வலைப் பதிவர்களுடைய கணிப்புக்களைக் கவனித்துப் பார்க்கையில்,திமுக அணியே மறுபடி ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர்களில் பெரும் பாலானோர் நம்புவதாகத் தெரிகிறது! 

தேர்தல் முடிவுகள், சென்னை வலைப்பதிவர்களுடைய கணிப்புகளுக்கு எதிர் மாறாகத் தான் இருக்கும் என்பதை சென்ற தேர்தலிலேயே பார்த்து விட்டபடியால், இந்தத்தேர்தல் முடிவுகளும் அப்படித்தான் இருக்குமா இல்லையா என்பது கொஞ்சம் சுவாரசியமான ஆட்டமாகத்தான் இருக்கும்!

ஆமாமா? இல்லையா?