Showing posts with label அரசியல் களம். Show all posts
Showing posts with label அரசியல் களம். Show all posts

யாராவது #மண்குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்குவார்களா? #ரஜனிஅரசியல்

ஒரு இரசிகனாக உங்கள் முடிவை வரவேற்கிறேன். இந்த அறிவிப்பால் உங்களுடைய 40 ஆண்டுகால குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. மகிழ்ச்சி! என்று ரஜனிகாந்த் ட்வீட்டரில் வெளியிட்டிருக்கிற மூன்றுபக்க அறிக்கை ட்வீட்டுக்கு முதல் கமென்ட்டாக போட்டிருப்பவர் ISR செல்வகுமார்.



அந்த 40 ஆண்டுகள் என்பதில் தான் கொஞ்சம் கணக்கு இடிக்கிறது பாட்ஷா படத்தின் 100வதுநாள் விழாவில் அவர் பேசியது ஜெயலலிதாவை உரசுகிற மாதிரி இருந்தது கொஞ்சம் பழைய கதையைச் சுருக்கமாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.


1996 இல் நேரடியாகவே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் பேசினார் ரஜனி அதன் பலனை மாநிலத்தில் திமுகவும், GK மூப்பனாரும் அடுத்து பானாசீனாவும் அறுவடை செய்து கொண்டார்கள். ஆக ரஜனிகாந்த் அரசியல் வாய்ஸ் கொடுத்தது அவருக்குப் பயன்படவே இல்லை . அதனால் தானோ என்னவோ அவர் அப்புறம் வாய்ஸ் கொடுக்கவே இல்லை. ஆனாலும் அரசியலுக்கு வரப்போவதாக, ஓவ்வொரு படரிலீஸுக்கு முன்னால் ஒரு பரபரப்பு கிளம்பும்! அப்புறம் அடங்கிவிடும். இப்போதும் கூட பெரிய வித்தியாசமில்லை.





ரஜனிகாந்த் அரசியல் ப்ரவேசத்தைப் பற்றி எனக்குப் பெரிதான அபிப்பிராயம் எப்போதுமே இருந்ததில்லை. 



சிவகங்கை சின்னத்துரும்புகள் கூட இளப்பம் செய்கிற மாதிரியாகி விட்டதே!

மீண்டும் சந்திப்போம்.  

மண்டே ன்னா ஒண்ணு! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்வலைகள்!

மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலீவர் இசுடாலின் பொங்குகிற அளவுக்குப் போயிருப்பது தமிழக அரசியல் களத்துக்கு மிகவும் விசித்திரமானது! அந்த அளவுக்கு சமீப நாட்களில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவது, அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.


அக்னிப் பரீட்சை என்றால் கேள்விகளில் தீப்பொறி பறக்கவேண்டும் இல்லையா? இங்கே கார்த்திகேயன் அமைச்சர் பதில் சொல்வதில் மேற்கொண்டு என்ன கேட்பது எனத்தெரியாமல் பம்முகிறார் என்றால் இது யாருக்கு  அக்னிப் பரீட்சை? கார்த்திகேயனுக்கா? புதிய தறுதலை சேனலுக்கா? வழக்கமான குறுக்கீடுகள், விஷமத்தனமான கேள்விகள் எதுவும் எடுபடாமல் போனதொரு வேடிக்கையான விவாதம்! வீடியோ 37 நிமிடம். வேடிக்கையை ரசித்துத்தான் பாருங்களேன்!

நெஞ்சில் நஞ்சும்,வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியான நடவடிக்கை தேவை!
Quote Tweet
PuthiyathalaimuraiTV
@PTTVOnlineNews
·
’அக்னிப் பரீட்சை’ இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  
#AgniParitchai #RajendraBalaji #BJP #ADMK #Rajinikanth #DMK #MKStalin  

அமைச்சருடைய அக்னிப் பரீட்சை நேர்காணலுக்கு இசுடாலின் இத்தனை கோபமாக ட்வீட்டரில் பொங்குவானேன்? ஊடக எடுபிடிகளுடைய முயற்சி தோற்றுப்போனதால் வந்த ஏமாற்றமா? கோபமா?  

 வீடியோ 9 நிமிடம் 

இப்படி இசுடாலின் பொங்கியதற்கெல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொஞ்சம்கூட அசருவதாயில்லை! அவர்பாட்டுக்குத் தன் மனதிற்கு சரி என்று படுவதை வெளிப்படையாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். இது நேற்றைக்கு முகநூல் துக்ளக் வாசகர் குழு ஒரு ட்ரஸ்ட் ஆகத் தொடங்கப்பட்ட நிகழ்வில் பங்குகொண்டு பேசியதென்ன என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்!

  
வைகுண்டராஜன் சேனல் நியூஸ் 7 மட்டும் இந்த விவகாரத்தை விட்டு விடுமா? பத்திரிகையாளர் மணி முதலில் பொங்குகிறார், அடுத்து விசிகவின் ஆளூர் ஷாநவாஸ்! இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தையை அமைச்சர் சொல்லலாமா? திராவிட அரசியலின் வழக்கமான கதைத்தல்களில் இருந்து விலகி ஒரு புதிய பாதையில் பயணிக்கிறதா அதிமுக என்ற முக்கியமான கேள்விக்கு சரியான பதிலை எவராலும் சொல்ல முடியவில்லை என்பது இந்த 55 நிமிட விவாதத்தின் சாரம்.

ஆக, தமிழக அரசியல்களத்தில் புதிய அதிர்வலைகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்படுத்திவிட்டார்! செக்கு மாடுகள் மாதிரி அய்யா புகழ் அண்ணா புகழ் கருணாநிதி புகழ்  எம்ஜியார் புகழ் அம்மா புகழ் என்றே லாவணி பயாடிக் கொண்டிருந்த திராவிட அரசியல் வேறுபாதையில் பயணிக்குமா? உள்ளது உள்ளபடியே பிரச்சினைகள், இருப்பதைத் துணிச்சலுடன் ஒப்புக்கொள்வது முதல்படி. அதிலிருந்து தீர்வுகள் காண முயற்சிப்பது அடுத்தபடி    

மீண்டும் சந்திப்போம்.      

சண்டேன்னா மூணு! தமிழக பிஜேபி எங்கே போகிறது?

தமிழிசை இங்கே பிஜேபி மாநிலத்தலைவராக இருந்த வரை கஷ்டப்பட்டு எம்பி எம்பிக்குதித்து தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று வசனம் பேசிக் காமெடி செய்து எம்பியாகக் கூட முடியாமல், கிடைத்த ஆளுநர் பதவியில் செட்டிலாகிவிட்டார்! அப்போதும் சரி, அதற்கு பிறகும் சரி, அந்த காமெடி வசனத்தைக் கேட்க முடியவில்லை! ஆனாலும், இன்னமும் அந்தவசனம் பேச மாநிலத்தலைவர் ஒருவர் வந்தபாடில்லை! வின் நியூஸ் மதன் ரவிச்சந்திரன் வேறு முகநூல் பகிர்வு ஒன்றில் அதைப் பற்றி கிசுகிசு பாணியில் வம்புச் செய்தியாகப் பகிர்ந்திருக்கிறார்.

48 நாட்களில் பாஜக தலைவராவது எப்படி இதோ எளிய வழிமுறைகள்:

ஒரு நண்பர் 2மாதங்களுக்கு முன் அறிமுகமானார் பார்த்த முதல் சந்திப்பில் எனக்கு advice செய்தார் தல செம பெயர் உங்களுக்கு easy ah பாஜக தலைவர் ஆயிடலாம்னு சிரிப்பு தான் வந்தது சரி நீங்க என்ன பண்றீங்கனு கேட்டேன் விவாதத்துல கலந்துக்கணும் அப்படியே நெறியாளர் ஆகணும் அத use பண்ணி politicsல புகுந்து பாஜக தலைவராகணும்னு ஒரு மூன்று அம்ச கனவு திட்டத்தை பகிர்ந்தார் 2அம்சம் வெற்றிகரமாக முடித்துவிட்டார் விரைவில் உங்கள் பார்வைக்கு புரியும் பாஜக தலைவராக என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்😜
பிகு :பாஜக தலைவர் ஆக எளிய வழி தலையங்கமான ஒரு வளையொலியில் 3 முறை ஸ்டாலினை திட்டி மத்திய திட்டங்களை ஆதரித்து வீடியோ செய்வது பிறகு நெறியாளர் பிறகு கமலாலயம் உங்கள் வசம்.. 
உண்மையில் H.ராஜா A.P. முருகானந்தம் C.T. நிர்மல்குமார் K.T. ராகவன் நயினார் நாகேந்திரன்,வினோஜ், வானதி அக்கா போன்றோர் பிழைக்க தெரியாதவர்களே!
அவரா இவரா என்று பலவித ஊகங்கள் பின்னூட்டமாக வந்துகொண்டிருக்கிற காமெடியை ரசிக்க முடிந்தது. 


இன்னொரு காமெடியைச் சொல்லாமல் விட்டு  விடலாமா?  முகநூல் அதிசயங்களில் ஒன்றாக, துக்ளக் வாசகர் குழு முகநூல் அறக்கட்டளை என்ற குழுவின் துவக்கவிழாவை இப்போது    நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விசு, காத்தாடி ராமமூர்த்தி என்று சில தெரிந்த முகங்களோடு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். பிஜேபி ஆதரவு நெடி தூக்கலாகவே தெரிந்த காணொளி இது 

 
      
எனக்கென்று இப்படியான செய்திகள் தான் வாய்க்கும் என்று அலுத்துக் கொள்ளாதீர்கள்! சேட்டைக்காரன் பதிவர் வேறு முகநூலில் பீதியைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறார்!                                                         
                                                   
வேறொரு பகிர்வில்
Narayanan R Samayashree Kumar ஏர்போர்ட்டுல பொன்னரோ, சி பி ஆரோ அடி வாங்காம இருக்கனும்😜     என்று தன் கவலையைத் தெரிவித்துக் கொள்கிறார்! அவரால் முடிந்தது,  பாவம்  அவ்வளவுதான்!  

தமிழ்நாட்டில் பிஜேபி இன்னமும் தடுமாறிக் கொண்டு இருப்பது இத்தனை அப்பட்டமாகப் பகடி செய்யப் படுவதன் பின்னால் எங்கே போகிறது தமிழக பிஜேபி என்ற கேள்வியும் இருக்கிறதே! கவனிக்கிறீர்களா?  

மீண்டும் சந்திப்போம்.  

இட்லி வடை பொங்கல்! #60 டொனால்ட் ட்ரம்ப்! பட்ஜெட்! ரெண்டு முருகன்!

டொனல்ட் ட்ரம்ப் மீதான தகுதி நீக்க (impeachment) விசாரணை அமெரிக்க செனெட்டில் வருகிற வார மத்தியிலேயே ஆன்டி க்ளைமேக்சாக தோற்று விடும் என்பது இப்போது நிச்சயமாகி விட்டது. கூடுதல் சாட்சிகளை விசாரிக்கவேண்டும் என்று டெமாக்ரட் கட்சியினர் தொடர்ந்து முயற்சித்தாலும், நடக்காது என்றே தெளிவாகிவருகிறதாம்! ட்ரம்ப் தரப்பில் ஏகப்பட்ட அழுகுணி ஆட்டங்கள் நடந்தன என்பதும் அமெரிக்க ஜனங்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது! முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுடைய வெள்ளைமாளிகை நினைவுகள் புத்தகமாக வெளிவருவதற்கு வெள்ளைமாளிகை தடை போட்டிருக்கிறது. அவர் உட்படப் புதிய சாட்சிகளை விசாரிக்க  வேண்டும் என்று டெமாக்ரட்டுகள் தலை கீழாக நின்று பார்த்தும், கதைக்காகவில்லை!


100 உறுப்பினர்கள் கொண்ட செனெட்டில் தற்போது ரிபப்லிகன்  53 டெமாக்ரட்டுகள் 47 என்றிருப்பதில், தகுதி நீக்கம் செய்யப்பட மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு வேண்டும். இல்லை என்பது தெளிவு. புதிய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஜெயிப்பதற்கு ஆளும்  ரிபப்லிகன் தரப்பில் இருந்து 4 பேர் ஆதரவு வேண்டும். அதுவும் இல்லை என்பதே இந்த தகுதிநீக்க விசாரணை போகிற திசைகாட்டும் கள யதார்த்தம். The Democrats’ push for more witnesses and documents failed 49-51, with only two Republicans joining Democrats in favor. A vote on the verdict is planned for Wednesday.சாட்சிகளை தடை செய்து டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்கக் குற்றச்ச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் படுகிறார் என்கிறது இந்தச் செய்தி.


நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். இதன் மீது முழுமையான விவாதங்கள், நிதியமைச்சரின் பதில் இதற்குப் பின்னால் இதை இங்கே பேசுவது தான் சரியாக இருக்கும். கொஞ்சம் காத்திருந்து, விவரங்களைத் தெரிந்து கொண்டு எழுத ஆசை. பார்க்கலாம்!  இருந்தாலும் சுவாரசியத்துக்காக , சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது புறநானூற்றில் இருந்து யானை புக்க புலம் போல என்ற பிசிராந்தையார் பாடல் வரியை மேற்கோள் காட்டியது போல இன்று  அவ்வையின் ஆத்திசூடியில் இருந்து    பூமி திருத்தி உண் என்ற வரியைச் சொல்லி விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இருமடங்காக உயர்த்தி அறிவித்திருக்கிறார். காளிதாசனுடைய ரகுவம்ச காவியத்தில் இருந்தும் மேற்கோள் காட்டி கடல் நீரைச் சிறுகச் சிறுக உறிஞ்சும் சூரியன், நிலப்பகுதிக்கு மழையாகப் பொழிவது போலச் சொல்லப்படும் உவமையைச் சொல்லி, தனிநபர் வருமான வரி விகிதங்களில் கணிசமான வரிக்குறைப்பை அறிவித்திருக்கிறார்.


துரைமுருகனுடைய நக்கல் என்னமாதிரி வெளிப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியாது. பொடி வைத்து பேசுகிறாரா வெடி வைத்துப் பேசுகிறாரா என்பதே புரியாமல் சமயங்களில் திமுகவினரே தடுமாறுவதும் தெரிந்த விஷயம்தான்! திருச்சியில் நேற்று நடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மத்தியில் பேசவந்தவர் "கருணாநிதி கூட முதலமைச்சர் ஆகிய பின்பே அகில இந்திய தலைவர் ஆனார் என்றும், ஆனால் இன்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே ஸ்டாலின் தேசியத்தலைவராக உருவெடுத்துள்ளார்" "கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராத வகையில் வாக்குகளை சிதறவைத்த கட்சிகளை இன்று தனது ராஜதந்திரத்தால் ஸ்டாலின் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்" என்றெல்லாம் பேசியிருப்பதை  எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? 

இசுடாலின் முதலமைச்சராக ஆகாமலேயே தேசியத் தலைவராக ஆகிவிட்டார் என்பதை இன்றைய காமெடியாக எடுத்துக் கொள்ளலாமா? க்கள் லக் கூட்டணியில் இருந்து இப்போது திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற உதிரிக் கட்சிகளைச் சீண்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மீண்டும் சந்திப்போம். 

ஒரு புதன் கிழமை! தொடரும் கேள்விகள்! பதிலைத் தேடுகிறீர்களா என்ன?

2009 இல் கமல் காசர் உன்னைப்போல் ஒருவன் என்று A Wednesday ஹிந்திப்படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுத்தபோது இங்கே வலைப்பதிவுகளில் ஏகப்பட்ட நண்பர்கள் பொங்கினார்கள். சொல்லிவைத்துக் கொண்டு செய்த மாதிரி, தங்களுடைய சீற்றத்தை வெளிப்படுத்திய பதிவுகளை டெலிட் செய்த கதை ஒவ்வொரு புதன்கிழமையும் கேள்விகளாக இந்தப் பக்கங்களில் எழுதப்படும் பதிவுகளின் அடிநாதமாக இருக்கிறது. ஆதி காரணமாக இருந்த பத்ரி சேஷாத்திரியும், நேசமுடன் வெங்கடேஷும், அந்த சர்ச்சையைக் கடந்து வெகுதூரம் போய்விட்டார்கள்.

       
ஆனால் அந்தத் திரைப்படம் எழுப்பிய சில அடிப்ப்டைக் கேள்விகளோடு, விடைகளைத் தேடி ஒரு நேர்மையான சுயபரிசோதனை செய்துகொள்ள முடியாத சமூகமாக இன்னமும் நாமிருப்பதை அறிந்திருக்கிறோமா?

இந்திய வரலாற்றில் என்னால் இன்னமும் விளங்கிக் கொள்ள முடியாத விஷயமாக, ஹிந்து முஸ்லிம் divide தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருப்பதற்கு யார் காரணம்? முஸ்லிம் சமுதாயம் ஏன், சிறுபான்மைக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலரையே இன்னமும் தொடர்ந்து நம்பிக் கொண்டு இருக்கிறது? மதச்சார்பின்மை என்பது பெரும்பான்மை மக்களை வில்லன்களாகச் சித்தரித்து, நாங்கள் மட்டுமே ரட்சகர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ளும் சிகுலர் காங்கிரஸ், திமுக மாதிரியானவர்களுடைய 
உள்நோக்கங்களை, இத்தனை ஆண்டுகளாகியும் அவர்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
இப்படித் தொடர் கேள்விகளாக எழுந்து கொண்டே இருப்பதில் #புதன்கிழமைக்கேள்விகள் இன்னமும் அப்படியே இருக்கிறது.மேலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற அமைப்பு 73 வங்கிக் கணக்குகளில் 120 கோடி ரூபாய் வரை திரட்டி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்டு வேறு சில மாநிலங்களிலும் நிதியுதவி கொடுத்துப் போராட்டங்களைத் தூண்டுவது குறித்தான விவாதத்தைப் பார்த்தபோது கேள்விகள் அப்படியே இருப்பது புரிந்தது.

உன்னைப்போல் ஒருவன் படத்தின் மீதான பதிவர்கள் சர்ச்சைகளுக்கு முன்னால் தி சா ராஜு எழுதிய ஒரு சிறுகதையை எடுத்துக் கொண்டு பேசிய இந்தப் பதிவில் வந்த பின்னூட்டம், பதில் இது.
  1. இதை நீங்கள் தமிழகத்திலும் காணமுடியும். மெஜாரிட்டியாக இருப்பவர்கள் மைனாரிட்டியாக இருப்பவர்களை புறக்கனிப்பதென்பது பல இடங்களில் காண முடியும். இங்கு மெஜாரிட்டி/மைனாரிட்டி என குறிப்பிடுவது அவர்கள் வாழும் இடங்களில் யார் அதிகம் என்பதை குறிப்பிட. ஒரு சில ஊர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இந்த வேற்றுமை உணர்வை புறந்தள்ள ஆரம்பப் பள்ளிகளில் தான் அடித்தளம் அமைக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதற்கு ஆசிரியர்கள் முழு பொறுப்புடன் செயல்படவேண்டும். அப்பொழுதுதான் வரும் தலைமுறைகளில் மாற்றம் காண முடியும். ஒருவர் அடுத்த மதத்தின் கொள்கைகளை ஏற்காமல் இருக்கலாம் ஆனால் வெறுக்காமலும் இருக்கவேண்டும். இது மதத்தை பின்பற்றாதவர்களும் பின்பற்றவேண்டும்.
    ReplyDelete
  2. தமிழகத்திலேயே இதைப் பார்ப்பதினால் தானே, இந்தக் கதையை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது சொல்கிறேன்! தமிழகத்தில் என்று இல்லை, இங்கே என்னுடன் தாய் பிள்ளையாகப் பழகிய பல நண்பர்களே, இப்போது கொஞ்சம் ஒதுங்கித் தங்களுக்குள் ஒரு கூட்டமாகச் செயல்படுவதைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இப்போது, அவர்களுக்கு மதமும், நம்பிக்கைகளும் முக்கியமாக ஆகிவிட்டன.

    பேதப் படுத்திபார்ப்பது என்பது என்பது ஒரு பக்கத்தில் மட்டுமே இல்லை. இரண்டு பக்கங்களிலுமே இருக்கிறது என்பது தான் விஷயம். இப்போது கேள்வி, பேதங்களை அகற்றி, இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியும் அதேபோல் இரண்டுபக்கங்களில் இருந்தும் ஆரம்பிக்கவேண்டும்.
    ஆரம்பப் பள்ளியில் இருந்து, ஆசிரியர்களிடமிருந்து என்பதில் தான் எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கை எழுகிறது. காரணம், பேதங்களை வளர்ப்பதாகவே இன்றைய கல்விமுறையும், கையாலாகாதவர்களாக ஆசிரியர்களும் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
இங்கே நண்பர் நவாஸுதீன் மாதிரி ஒரு நேர்மையான உரையாடலைத் தொடர, ஒரு சமுதாயமாக அவர்கள் முன்வரும் நாட்களுக்காகக் காத்திருக்கிறோம்.


ஆனால் அப்படி உருப்படியாக எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவர்களில் ஒரு பகுதி துடிப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறதே!  

மீண்டும் சந்திப்போம். 

தம்பட்டம் :: அடிப்பதிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டாமா?

இந்தப்பக்கங்களில் Cambridge Analytica முதற்கொண்டு இங்கே பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம் வரை வெகுஜன அபிப்பிராயங்களை மாற்ற எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பல பகிர்வுகளில் பார்த்து  இருக்கிறோம். அது நினைவில் இருக்குமானால், First Post தளத்தில் இன்றைக்கு வெளியாகியிருக்கிற Massive tweet volumes, complex hierarchies, coordinated attacks: Hacker reveals how BJP, Congress IT cells wage war on social media  என்று நீரத் பந்தரிபாண்டே எழுதியிருக்கிற செய்திக் கட்டுரையை புரிந்து கொள்ளவும், அதிர்ச்சி இல்லாமல் கடந்துபோகவும் முடியும்! 

 
இப்படிப்படம் போட்டு இதுதான் காங்கிரசின் IT Cell இயங்குகிற விதம் என்று சொன்னால் என்னவென்று புரிந்து கொள்வீர்கள்? உதாரணமாக எனக்கு ட்வீட்டர் கணக்கு இருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி  புள்ளிகள் என்ன பகிர்கிறார்கள் என்பதை நான் அதிகம் பார்ப்பதும் இல்லை, அவைகளைப் பகிர்ந்து கொள்வதும் இல்லை என்றால் இவர்களுடைய பிரசார யுத்தம் என்ன மாதிரியான விளைவை என்னிடம் உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அபிப்பிராயங்களை நானாக யோசித்துத்தான் உருவாக்கிக் கொள்கிறேன் என்ற நிலையில், இவர்கள் என்னதான் தலைகீழாக நின்று முயற்சித்தாலும், என்ன ரிசல்ட்டை கொடுத்துவிடும்? முகநூல் கணக்கும் இருக்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பரவலாக கவனிக்கிறேன், ஆனால் அங்கே எதையும் எழுதுவது இல்லை. ஆனாலும் முகநூல் என்னை வேவு பார்க்கிறது. பிரவுசரில் எதையெல்லாம் தேடினேன், இங்கே பதிவுகள் உட்பட என்னென்ன எழுதினேன் என்பதையெல்லாம் கண்காணித்து, நல்லபிள்ளை மாதிரி suggested pages, suggested friends என்று பல செய்திகளை  முன்னிறுத்தி ஆழம்பார்ப்பதைத் தெரிந்தே வைத்திருக்கிறேன். அதனாலென்ன? நான் பார்க்க வேண்டிய செய்தி எது என்பதை வேண்டுமானால் அவர்கள் முதன்மைப்படுத்தலாம். ஆனால் அவர்கள் என்னுடைய அபிப்பிராயத்தை உருவாக்கவிட நான் அனுமதித்ததே இல்லை என்றால் என்ன செய்வார்கள்?

ஆனால், இப்படி உறுதியாகச் சொல்வதுமே, எந்தச்செய்தியானாலும், அதை   க்ராஸ் செக் செய்யாமல், நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல்,அப்படியே நம்புவதில்லை என்பது இன்று நேற்றல்ல, இளம் வயதிலேயே, கற்றுக்கொண்ட ஒரு விஷயம்! காரணம் நாங்கள் பலவிதமான ஜகஜாலப் புரட்டுகளில் திமுக ஆட்சிக்கு கட்டிலில் அமர்ந்த விதத்தை நேராகப் பார்த்த தலைமுறை! ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், மாணவர்களால் முன்னெடுக்கப் பட்டது, திமுகவின் மொழிப்போர் தியாகிகள் எல்லாம் அதில் பின்னல் வந்து சேர்ந்துகொண்டு, அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் என்பதை அந்தநாட்களிலேயே புரிந்துகொள்ளவும் முடிந்தவர்கள். ஆக கடந்த 55 ஆண்டு கால அரசியலைப் பார்த்து வளர்ந்ததில் கிடைத்திருக்கிற அனுபவ பாடம் அது!


ஜனவரி 30 என்றால் உங்களுக்கு உடனடியாக என்ன ஞாபகத்துக்கு வரும்? என்னது? காந்தியை சுட்டுட்டாய்ங்களா? என்று பழைய கதையெல்லாம் சொல்ல வராதீர்கள்! ஜனவரி 30 என்றால் மதுரைக் காரர்களுக்கு அஞ்சாநெஞ்சன் அழகிரி பிறந்த நாள்! பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக அழகிரி விசுவாசிகள் விதவிதமாய் வசனங்களுடன் போஸ்டர் ஒட்டிக் கலக்குவதில் இந்த ஆண்டு கலக்கல் என்ன என்று வேடிக்கைபார்ப்பதே மதுரைவாசிகளுக்கு ஒரு  தனித்துவமான எண்டெர்டெயின்மென்ட் என்றால் நம்புவீர்களா? இந்த ஆண்டு கலக்கல், கொஞ்சம்  கலக்கத்துடன் வந்திருக்கிற மாதிரித்தான் தெரிகிறது!
கலக்கத்திலும் கூட ரைமிங் விட்டுப்போகவில்லை!
                      

ஜம்மு காஷ்மீரில் சொகுசாய் அதிகாரத்தை அனுபவித்த முன்னாள்  முதல்வர்கள் மூவரும் இப்போது வீட்டுச் சிறையிலும் கூட எந்தக் குறையுமில்லாமல் தான் இருக்கிறார்கள்! எப்போதும் மீசைதாடி எதுவும் இல்லாமல் பளபளவென்று ஷேவ் செய்த முகத்துடன் இருக்கிற ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா இருவரில் ஒமர் அப்துல்லா மட்டும் நூறுநாட்களைத் தாண்டி ஷேவ் செய்துகொள்ளாமல் சிரித்த முகமாக தாடி மீசையுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியானது. பார்த்துவிட்டு மம்தா பானெர்ஜி, இங்கே இசுடாலின் எல்லோரும் கலங்கினார்களாம்? !!


தமிழக பிஜேபி சார்பில் ஷேவிங் செட்டை ஒமர் அப்துல்லாவுக்கு அனுப்பி ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி! சிகுலர் ஆசாமிகள் இதற்கு என்ன சொல்லிப் பொங்கினார்கள் என்பது தெரியவில்லை.  ஒமர் அப்துல்லா மீது தமிழக பிஜேபிக்கு திடீரென்று பாசம் வந்துவிட்டதா என்ன?!
ஓரிரு நாட்களுக்கு முன் காங்கிரஸ்காரர்கள், அரசியல் சாசனப்புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து பிரதமர் நரேந்திர மோடிக்கு  படித்துப்பாருங்கள் மோடி என்று அனுப்பியதாக செய்தி வந்ததே! நினைவு இருக்கிறதா?  அந்தச் செய்தி கொடுத்த உந்துதலில் தமிழக பிஜேபி இப்படிச் செய்ததோ என்னவோ!!

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து நிற்கிறதே பதிவு என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் ஒன்றுடன் ஒன்றை சேர்த்துப் பாருங்கள்! தங்கள் ஆட்சியின் சாதனைகளை அழுத்தமாக மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய பிஜேபியின் ஐடி செல், அதில் முழுகவனத்தை செலுத்தவிடாமல், காங்கிரஸ் உள்ளிட்ட உதிரிகள் கிளப்புகிற அக்கப்போர்களுக்கு பதில் சொல்வதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறது. காங்கிரசின் ஐடி செல்லுக்கு, அதன் தலைவர்களுடைய சாமர்த்தியம் என்னவென்று சொல்லமுடியாதே! அங்கே இங்கே என்று கிடைக்கிற இடங்களில் எல்லாம் கல்லெறிந்து விட்டு ஓடிவிடுவது எளிதல்லவா? அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்!

மு.க. அழகிரிக்கு ஐடி விங், செல் எல்லாம் கிடையாது! இப்படிப் போஸ்டர் அடித்து ஒட்டுகிற விசுவாசிகள் மட்டும்தான்! அவர்கள் போஸ்டர் அடித்துக் கலக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்!

நம்மூர் அரசியலின் தரம், வீச்சு இவ்வளவுதான்! The Great Hawk என்றெல்லாம் Netflx படமெடுக்கிற அளவுக்கு இன்னமும் போகவில்லை! நம்மூருக்கு பிரசாந்த் கிஷோர் மாதிரி தேர்தல் உத்தி வகுக்கிற உதார்களே கொஞ்சம் அதிகப்படி! காங்கிரசின் இமேஜை மீட்டு (முட்டுக்) கொடுக்க எண்பதுகளில் Rediffusion என்ற ப்ராண்ட் மேனேஜர்களையும் பார்த்த அனுபவம் வேறு இருக்கிறது. அதுவும் போக, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே  கட்டமைக்கப்பட்ட  ஈவெரா ப்ராண்ட், ரஜினிகாந்த் என்ற நடிகர் பேச்சிலேயே உடைந்து நொறுங்க ஆரம்பித்ததையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அப்புறமும் என்ன? !!

மீண்டும் சந்திப்போம்.
            

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் தேசம் என்ன நினைக்கிறதாம்?

இந்தியா டுடே இதழ் வருடத்துக்கொருமுறையோ என்னவோ Mood of The Nation தேசம் என்ன நினைக்கிறது என்ற மாதிரி ஒரு சர்வே எடுத்துப் போடுவதுண்டு! இந்த ஜனவரி 23 அன்று அப்படி ஒரு சர்வே நடத்தி முனகி இருப்பதன் சாரம் இங்கே.  சர்வே முடிவாக Economy and CAA protests hurt, but Narendra Modi's chest size almost intact: Mood of the Nation 2020 என்று இருந்தால் ராஜதீப் சர்தேசாய் முகத்தில் ஈயாடாதா பின்னே? !! 
  

சேகர் குப்தா கூட காங்கிரசுக்கு ஆதரவாகக் கூவும் ஊடகக்காரர் தான்! அவரையே இந்த தேசம் என்ன நினைக்கிறதாம் சர்வே முடிவுகளை விளக்குகிற மாதிரி ஒரு 12 நிமிட வீடியோவில் பார்த்து விடலாம்! என்ன சொல்கிறார் என்பதற்கு நான் விளக்கவுரை தனியாக எழுதப்போவதில்லை! காங்கிரசுக்கு நல்ல சேதி எதுவும் இந்த சர்வே முடிவுகளில் இல்லை! இன்றே தேர்தல் நடந்தால் பிஜேபி+ (NDA) வுக்கு 303 சீட்டுகள். சிவசேனா கழன்று கொண்டதால் மேற்குப்  பகுதியில் 50 இடங்கள் குறையலாம் என்றதற்குப் பின்னாலும் 303 சீட்டுகள்! காங்கிரசின் ஐமுகூ (UPA) வுக்கு அதிகபட்சம் 108 சீட் என்றால், சுவாரசியம் என்ன இருக்குமாம்? 



வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அஸ்ஸாமில் அமைதியை ஏற்படுத்துகிற விதத்தில் போடோ இனத் தீவீரவாதக்குழுக்களுடன் அசாம் அரசு, மத்திய அரசு சார்பில் அமித்ஷா என ஒரு முத்தரப்பு உடன்பாடு  கையெழுத்திடப் பட்டிருப்பதில்  ஜனவரி 30 ஆம் தேதி அன்று சுமார் 1550 போடோ தீவீரவாதிகள் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து சரணடைவார்கள் என்பது ஒரு நல்ல செய்தி. கொஞ்சம் விரிவாகப் படிக்க இங்கே   

Earlier this month, The Amit Shah led Home Ministry also inked an agreement to end the 22-year-old Bru refugee crisis by facilitating their resettlement in Tripura. The refugees numbering over 34,000 belong to 5,300 families. They were forced to migrate from Mizoram following tribal unrest, back in 1997. ஒரே இந்தியா நியூஸ் தளத்தில் நண்பர் LK என்று நண்பர்கள் வட்டாரத்தில் அழைக்கப்படும் கார்த்திக் லட்சுமிநரசிம்மன், 22 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ப்ரு அகதிகள் பிரச்சினை பற்றி எழுத ஆரம்பித்தார். அவர்களுக்கும் ஒரு விடிவுகாலம் ஜனவரி 16 ஒப்பந்தப் படி பிறந்திருக்கிறது. ஒப்பந்தம், பிரச்சினை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மேலே சிவப்பெழுத்தில் இருக்கும் சுட்டிகளில் க்ளிக் செய்து வாசிக்கலாம். ஒரு பக்கம் அரசுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை எனப் போய்க்கொண்டிருந்தாலும் மத்திய அரசு, நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைக் கண்ணிருப்போர் பார்க்கட்டும்!   


பானாசீனாவை வழிமொழியவில்லை என்கிற சோகம் சதிஷ் ஆசார்யாவுக்கு! அதற்காக The Wire தளம் மாதிரி, பிஜேபி பக்கம் சாய்கிற மாதிரி சொல்லப் பட்டதற்கே MNS தனிக்கடை நடத்தும் ராஜ் தாக்ரேவுக்கு பிடி சாபமா விட முடியும்? அசோக் சவான் வேறு இன்றைக்கு, உத்தவ் தாக்கரேவிடம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகுதான் அரசு அமைக்கவே சம்மதித்தார் என்று ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறார். சதீஷ் ஆசார்யா என்னதான் செய்வார்?


ஹிந்துவில் சுரேந்திரா டாம் அண்ட் ஜெரி கார்டூன் மாதிரி ஆம் ஆத்மி கட்சி கோட்டையாக டில்லி இருப்பதாக வரைந்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்.
டில்லியின் மிடில் கிளாஸ் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியைக் கைகழுவுகிற  அடையாளம் எதுவும் தென் படவில்லை என்பதென்னவோ நிஜம்!


இங்கே கழகங்களை பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று குறைப்பட்டுக் கொள்ளக் கூடாது இல்லையா? !!
     
   
அமேசான் எழுத்தார்களைப் பற்றிச் சொல்லாவிட்டாலும் கூட சாமிகுத்தம் ஆயிடுமோ? 😎😎 

மீண்டும் சந்திப்போம்.  

பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!

பாரத நாடு பழம்பெரும் நாடு! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்!  பாரதியின் கவிதை வரிகளோடு நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்! குடியரசு. ஒரு அரசியல் சாசனம் என்று வந்தபின்னால் தான் இந்தியா என்றொரு நாடே உருவான மாதிரியான கூவல்கள் அபசுரமாக அங்கங்கே ஒலிக்க ஆரம்பித்திருப்பதில், பாரத சுதந்திரம் வேண்டிநின்ற மகாகவி பாரதியின் வாக்கை மீண்டும் மீண்டும் ஒரு மந்திரம் போல, சொல்லிச் சொல்லி நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. 


பாரதம் அன்னியரிடமிருந்து விடுதலைபெற்ற 1947 - அதோடு சேர்ந்து விடுதலை பெற்ற, அதற்குப்பிறகு விடுதலை பெற்ற வேறெந்த நாடும், நம்மைப்போல இன்னும் மக்களாட்சி என்கிற குடியரசாக, கொஞ்ச காலத்துக்கு மேல் நீடிக்க முடியவில்லை என்பதைக் கொஞ்சம் கவனித்தீர்களானால், இந்தியா என்றொரு நாடே ஆங்கிலேயர்களால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு நாடுதான் என்பது எத்தனை பொய்யான பிதற்றல் என்பதும் கூடவே நினைவுக்கு வரும்.

முதல் முறையாக இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக, சென்ற ஆண்டு அதன் பக்கத்திலேயே அமைக்கப்பட்ட போரில் உயிர்த் தியாகம் செய்த முப்படை வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். எத்தனையோ தியாகிகள், படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து காப்பாற்றிய பாரதநாடு இது.


இந்திய முப்படைகளின் அணிவகுப்பு, நாட்டின் பாதுகாப்பில்  எப்போதும் தயார் நிலையில் இருப்பதை, மிக நன்றாகவே வெளிக்காட்டியிருக்கிறது. வெளியில் இருந்து வரும் எதிரிகளைச் சமாளிக்க நம்முடைய ராணுவம் இருக்கிறது.

ஆனால் உள்ளே இருக்கும் எதிரிகளாக, செல்லரிக்கும் கரையான்களாக இடதுகளோடு காங்கிரசின், கழகங்களின் சமீபகாலப் போக்குகள், போராட்டங்கள் இருப்பதை பொறுப்புள்ள குடிமக்களாகிய நாமல்லவா களையெடுத்து தேசம் காக்க வேண்டும்? நம்முடைய பொறுப்பை உணர்ந்து செயல்படத்  தயாராக இருக்கிறோமா?  

மீண்டும் சந்திப்போம்.