Showing posts with label டொனால்ட் ட்ரம்ப். Show all posts
Showing posts with label டொனால்ட் ட்ரம்ப். Show all posts

இட்லி வடை பொங்கல்! #74 #வாத்திமவன்மக்கு #மாரிதாஸ் #வூஹான்வைரஸ்

ஆனாலும் திமுகவின்  நிலைமை இந்த அளவுக்குப் பரிதாபமாகியிருக்க வேண்டாம்! (உ.நிதி மாதிரி ஒரு அறிவுக்கொழுந்தைப் பெற்றதைச் சொல்லவில்லை, அது வேறு கதை)  வாத்திமவன் மக்கு என்பது கிராமப் புறங்களில் பரவலாகத் தெரிந்த ஒரு சொலவடை! அதையே இங்கே பாட்டாகப்பாடி இசுடாலின் மகிமைக்கு தோத்திரம் சொல்கிறார்கள்! மூன்றரை நிமிடம் தான்! கொஞ்சம்  கேட்டுத்தான் பாருங்களேன்!


மாரிதாஸ் ஓரிரு நாள் ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தபின் மறுபடியும் அரசியலில் சுறுசுறுப்பாக எழுத, பேச ஆரம்பித்து விட்டார் போல முகநூலில் பார்த்த, நிறைய யோசிக்க வைத்த அவருடைய பகிர்வு, இன்றைக்குப் படித்ததில் பிடித்ததாக:

இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்..!
Trumpஐ இரண்டாவது முறையாக அமெரிக்க காங்கிரஸ் impeach செய்து இருக்கிறது. இம்முறை 10 ரிபப்ளிகன் கட்சியினர் Trumpக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். இனி அது செனட் சபைக்கு சென்று வெற்றி பெற்றால்தான் Trump வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். ஆனால், செனட் சபை வரும் ஜனவரி 19 வரை கூடப்போவதில்லை. ஜனவரி 20 மதியம் Trumpன் பதவிக்காலம் முடிகிறது. இது டெமாக்ரடிக் கட்சியினருக்குத் தெரியும், இருந்தாலும் ஒருவேளை செனட் சபையால் பதவி விலகலுக்குப் பின் Trump impeachment அங்கீகரிக்கப்பட்டால் (பதவி விலகிய பின், impeach செய்ய முடியாதே!) அடுத்த முறை அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடாமல் தடுக்க உதவும்.
நம் தமிழகத்தின் ஆளும்-எதிர்க் கட்சிகள் தங்களைப் பரம வைரிகளாக பாவித்து அடிக்கும் கூத்துக்கள், ஜெயலலிதா -கருணாநிதி ஒருவரை ஒருவர் பார்க்காமல் தவிர்த்தது போல, ஒருவரை ஒருவர் வசைபாடியதைப் போல, டெமாக்ரட்டிக் – ரிபப்ளிகன் கட்சிகள் அங்கே நடந்து கொள்கின்றன. அதிலும் அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் Nancy Pelosiயின் பேச்சுக்கள், நடவடிக்கைகள் அப்படியே ஜெயலலிதாவை நினைவு படுத்துகின்றன.
இந்த சிண்டு-முடியும் வேலையை செவ்வனே செய்தது சமூக வலைத்தளங்கள் நடத்தும் கம்பனிகள். இப்போது, இந்த கம்பனிகள் ரிபப்ளிகன் கட்சிக்கு ஏற்படுத்திய பாதிப்பு, குறைந்தது அடுத்த 10 – 15 ஆண்டுகளுக்கு ரிபப்ளிகன் கட்சி ஆட்சிக்கு வர முடியாத அளவிற்கு இருக்கலாம்.
இதை எப்படி போகிற போக்கில் சொல்ல முடியும் என்று கேள்வி எழலாம். கீழே சில கம்பனிகள் கட்சி / தேர்தல் நிதிக்காக கொடுத்த பணம் எவ்வளவு என்று பார்த்தால் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. (*1)
Facebook நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$40821, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$1570645.
Apple நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$97902, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$1766724.
Amazon நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$260140, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$2224487.
Microsoft நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$247998, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$2397102.
Google நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$106211, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$4332294.
இதில் இருந்து தெளிவாகத் தெரிவது, சமூக வலைத்தள நிறுவனங்கள் டெமாக்ரடிக் கட்சியை அதிகம் விரும்புகின்றன என்பதே.
Trump நாட்டிற்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டினார் என்று பேசும் மீடியா, அவர் அப்படிப் பேசிய வீடியோவை இதுவரை காட்டவே இல்லை.
“தயவு செய்து திரும்பிப் போங்க” என்று Trump சொன்னதை Facebook எப்படி interpret செய்தது? இவர் வன்முறையாளர்களை மன்னிக்கும் மனப்பாங்கு கொண்டு இருக்கிறார் – to condone rather than condemn – என்றது. “
"நான் Biden பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று Trump சொன்னதை, “நான் வரமாட்டேன், என்ன வன்முறை வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்” என்று குறியீட்டில் சொல்கிறார் Trump என்றது Twitter!
Trump கிளர்ச்சியைத் தூண்டிப் பேசி இருந்தால், மீடியா சும்மா விடுமா? நம் ஊர் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட அவர் அப்படிப் பேசிய வீடியோ 100 முறை WhatsAppல் வரும் அளவிற்கு மீடியா பரப்பி இருக்காதா? CNN முதல் NDTV வரை அதனை 10000 முறை போட்டுக் காட்டி இருக்காதா...
Trump எப்படியோ போகட்டும், அது நமக்கு முக்கியமல்ல, நம் இந்தியாவின் பிரச்சனைக்கு வருவோம்.
சமூக வலைத்தளங்களின் தான்தோன்றிதத்தனமான போக்கை இந்தியா கட்டுப்படுத்த முடியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் இப்படி நடந்தால் தங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று யோசனைகள் வருகிறதா?
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாக்ஷி லேகி கொண்டு வந்த Personal Data Protection Bill, 2019 பற்றி மேலும் பேச Facebook, Twitter ஆகிவற்றை summon செய்து அழைத்ததை அக்கம்பனிகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தன என்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் பாராளுமன்றம் அழைத்தால் உடனடியாக எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு சென்று ஆஜராகும் இந்தக் கம்பனிகள்,ஏன் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் கூப்பிட்டால் வர மறுக்கின்றன? இங்கிருக்கும் ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் மீதான அவர்களின் அபிப்பிராயம் என்னவாக இருந்தால் அவை இப்படி நடந்து கொள்ளும்?
நம் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் மட்டும் என்ன வாழ்கிறது? வெள்ளைக்காரன் நம்மை recognize செய்வானா என்று ஏங்கிக் கிடக்கும் சமூகமாக இருக்கிறது இந்தியா. யாராவது ஒரு வெளிநாட்டுக்கார அரசியல்வாதி நம்மைப் பற்றி ஏதாவது புகழ்ச்சியாக சொன்னால் போதும், இங்கே கோடிக்கணக்கான பேர் புளகாங்கிதம் அடைகிறோம். ஏன் அவ்வளவு தாழ்வு மனப்பான்மை நமக்கு?
Twitterல் தன் handle, blue-tick-mark உடன் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் எத்தனை பேர்? அந்த அங்கீகாரம் கிடைத்து என்னவாகப் போகிறது?
இதோ, Joe Biden ஒரு handle உருவாக்கி, ஒரே ஒரு tweet செய்கிறார், உடனடியாக அது verified நிலையை (blue-tick-mark) அடைகிறது, எப்படி? அப்படியானால், இது பலர் பின்-தொடர்வதைக் கருத்தில் கொண்டு, algorithm முடிவு செய்து, பின் Twitter அந்த blue-tick-mark கொடுக்கவில்லை, இது physical verification மட்டுமே. இந்த algorithm, அப்படி ஒன்று இருந்தால், Twitter வெளியிடத் தயாரா? (*3)
இவ்வாறான ஒரு grey-shaded நடைமுறையில் இயங்கும் கம்பனிகள் நாளை நம் நாட்டில் பிரச்சனைகள் செய்யாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
தாக்குனூண்டு ஊகாண்டா - அது சமூக வலைத்தளங்களை தேர்தல் முடியும் வரை தடை செய்து இருக்கிறது. (*2) Facebook, ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக அவ்வரசு சொல்கிறது. இந்த மனத் திண்மை இந்திய அரசியல் வாதிகளிடம் வரவேண்டும்.
உடனே, இங்கு பலர், சீன செயலிகளைத் தடை செய்ததை சுட்டிக் காட்டலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தடை செய்த செயலிகளில் மிகப் பெரியது TikTok. அதில் எந்த அரசியல்வாதியும் இல்லை, அதிகார வர்க்கத்தினரும் இல்லை, அதில் இருந்தவர்கள் அனைவரும் சாதாரணர்கள் என்பதால் அரசியல்வாதிகளால் அப்படி ஒரு முடிவை எளிதாக எடுக்க முடிந்தது.
நாளை இந்தியாவில், எந்தக் கட்சிக்கு வெல்லும் வாய்ப்பு இருக்கிறதோ, அதற்கு சாதகமாக நடப்பது போய், எந்தக் கட்சி வெல்ல வேண்டும் என்று சமூக வலைத்தள கம்பனிகள் தீர்மானிக்கும் நிலை வந்தால்?
Parler என்று ஒரு சமூக வலைத்தள சேவையை Amazon முடக்கியது, காரணம் ரிபப்ளிகன் கட்சியினர் அதிகம் பயன்படுத்தும் வலைத்தளம், அதனால் வன்முறை தூண்டப்படும் என்று காரணம் சொன்னது. Amazonனுடன் சேர்ந்து Google மற்றும் Apple, தன் App Storeல் உள்ள Parler செயலியை நீக்கியது. இது எந்த விதத்தில் நியாயம்? இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் காட்டப்படவில்லை – டெமாக்ரடிக் கட்சி முதல் தனியார் நிறுவனங்கள் வரை சொல்லும் காரணம் – Trump தேர்தல் முறைகேடுகள் பற்றி திரும்பத்-திரும்பப் பேசினார் என்பதனைத் தவிர வேறில்லை. (Trump தேவையில்லாமல் தேர்தல் தில்லுமுல்லு என்று அதிகமாகப் பேசி, அனைவரையுமே irritate செய்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை).
இந்தியாவில் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இது போன்ற பிரச்சனைகள் வராது என்பது என்ன நிச்சயம்?
அப்போதைய சூழலுக்கு ஏற்ப, பாஜகவிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ இந்நிறுவனங்கள் சாதகமாக நடந்தால் என்ன செய்வது? கடைசி நிமிடத்தில் Trump போல முழி பிதுங்கி நிற்பதை விட, இப்போதே அரசு தகுந்த முன்னேர்ப்பாடுகளை, சட்டங்களை கொண்டுவருவது நல்லது.
WhatsAppஐ எடுத்துக் கொண்டால், ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களுக்கு கொடுக்கும் தனியுரிமைகளை இந்தியர்களுக்குக் கொடுப்பதில்லை. (*4) இது பற்றி எந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவது ஒரு 5 நிமிடங்களுக்குப் பேசும் அளவிற்கு தகுதி உள்ளவரா என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளவும்.
கருத்துரிமை பற்றி பேசும் இடதுசாரி லிபரல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் Trump முடக்கப்பட்டதை ஆதரிக்கிறார்கள். இதே, இங்கே ராகுல் காந்தி அவர்களின் சமூக வலைத்தள கணக்கு முடக்கப்பட்டால் ஆதரிப்பார்களா?
Parlor செயலியை நீக்கியது போல, 2024 தேர்தலுக்கு முன் MyGovIndia செயலியை, பாஜக பிரச்சாரதிற்குப் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்லி, Google தனது play storeல் இருந்து நீக்கினால் ஏற்றுக் கொள்வோமா?
அவ்வளவு ஏன், நம் ஒவ்வொருவரின் சமூக வலைத்தள கருத்துக்களை வைத்து, நாம் பயன்படுத்தும் Jio அல்லது Airtel கம்பனிகள், தனது கொள்கைக்கு ஒவ்வாத முறையில் எழுதுகிறவன் என்று சொல்லி தனது internet அல்லது mobile சேவைகளை நிறுத்தினால் எப்படி இருக்கும்?
“நீ வலது சாரிச் சிந்தனையுடன் எழுதுகிறாய்”, என்று VISA நிறுவனம், எனது debit card சேவையை நிறுத்தினால் எப்படி இருக்கும்? வங்கி என் கணக்கினை முடக்கினால் என்ன ஆகும்?
இதே காரணத்தைச் சொல்லி, எனது internet service provider, இனி உனக்கு 56 kbps தான், இந்தக் கருத்து கொண்டவர்களுக்கு இந்தெந்த வேகத்தில் internet சேவை கொடுக்கப்படும் என சொன்னால் என்ன ஆகும்?
உடனடியாக இந்தியா செய்ய வேண்டியது.
1. இந்தியாவில் விற்கப்படும் கைபேசிகள் அனைத்தும், அது Android, iOS, KaiOS என எந்த இயக்க முறைமை கொண்டதாக இருந்தாலும் சரி, Indian App Store அதில் இருக்க வேண்டும். அதனை அந்த மென்பொருள் நிறுவனம் எந்த சூழநிலையிலும் நீக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும், நீக்கிகனால் இயக்க முறைமை / கைபேசி செயல்படக் கூடாது. Indian App Storeல் தான் இந்திய அரசுசார் செயலிகள் இருக்கவேண்டும், தரவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
2. எந்த சமூக வலைத்தள நிறுவனமும், இந்திய நாட்டின் IP addressல் வரும் தரவுகளை இந்திய serverகளில் மட்டுமே சேமிக்க வேண்டும்.
3. உடனடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் போல, தனியுரிமைச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
4. முடிந்தவரை open source மென்பொருட்களை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். முடிந்தால், சில incentives கூடக் கொடுக்கலாம்.
5. சமூக வலைத்தளங்களில் anonymous ஆக இருக்க முடியலாம், ஆனால், identity இல்லாமல் இருக்கக் கூடாது. அதற்கேற்றவாறு இந்தியாவில் சமூக வலைத்தள நிறுவனங்கள் செயல்படுமாறு கொள்கைகளை வகுக்க வேண்டும்.
6. பேச்சுக்கு, எழுத்துக்குத் தடை விதிப்பதை இந்த மண்ணின் சட்டங்கள் தான் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்கள் அல்ல. அப்படி செய்ய விழையும் தனியார் சமூக வலைத்தள நிறுவனங்கள், அதில் வரும் கருத்துக்களுக்கும் எழுதுபாவரோடு சேர்ந்து சம பொறுப்பினை ஏற்க வேண்டும்.
7. தனிநபர், தனியார் அல்லது அரசு கட்டுப்படில்லாத ஒரே ஒரு சமூக வலைத்தளமாவது இம்மண்ணில் செயல்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை அரசு செய்ய வேண்டும்.
Critical theories என்பது 1920களில் உருவானது. அதில் இருந்துதான் சில சமூக பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது, அதே சமயம் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் உருவானது. இதனைப் பற்றி பலர் படித்து இருப்போம் - ஈ.வெ.ரா கூட இதில் இருந்து தான் பல கருத்துக்களை எடுத்து, தனக்கு ஏற்றவாறு யோசித்து சொல்லி இருக்க வேண்டும். இதன் பரிணாம வளர்ச்சியாகத்தான் cynical theories வந்திருக்கும். இதன் பலனை இப்போது அமெரிக்கா அனுபவிக்கறது, இந்தியா சரியான நடவடிக்கைகளை எடுக்க சரியான நேரம் இதுவே, எடுக்காமல் போனால் கூடிய விரைவில் அதன் பலனை அனுபவிக்கும். (*5)
தனியுரிமை மற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசுகள் சரியாகக் கையாளாமல் போனால், பின்னாளில் பெரும் பிரச்சனைகளை மனித சமுதாயம் சந்திக்க நேரிடும். (*6).
------------------------------------
References:-
(*1) Open Secrets: Who are the Biggest Organization Donors?
(*2) The New York Post: Uganda bans all social media ahead of election, sparking outrage
(*3) Inspiration Search: Verified in one tweet: Joe Biden launches new Twitter handle to build following before taking command of White House
(*4) Wion: WhatsApp pushes new rules on Indian users, but Europeans are exempt
(*5) Book: Cynical Theories, by Helen Pluckrose & James Lindsay
(*6) Book: Artificial Intelligence and the Future of Power, by Rajiv Malhotra

Courtesy: Karthik Srinivasan         

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைப் பற்றி நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. வாக்குகளால் டொனால்ட் ட்ரம்ப் தோற்றார் என்பதை விட ஊடகங்களை ஒதுக்கி விட்டு 2016 இல் ட்ரம்ப் ஜெயித்ததில் அதிபருக்கும் ஊடகங்களுக்கும் நீயா நானா போட்டிநடந்து அதில்  , ஊடகங்கள் ஜெயித்திருக்கின்றன என்பது நன்றாகவே தெரிகிறது. ஜோ பைடன் அல்லது டெமாக்ரட்டுகள் ஜனங்களுடைய ஆதரவினால் வென்றார்கள் என்று சொல்ல முடியாதபடி நிறையாக குழப்பங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன உலகத்தின் பெரிய நாட்டாமை ஆவதற்கு சீனா முண்டா தட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜோ பைடன் மாதிரி ஒரு இரண்டுங்கெட்டான் அமெரிக்க அதிபராகி இருப்பது அமெரிக்காவுக்கோ உலகுக்கோ  நல்ல செய்தியே அல்ல.


அமெரிக்கர்களுடைய மெத்தனம் சீனாவின் எக்காளம், எகத்தாளமாகியிருப்பது எப்படி என்பதை மேலே நான்கு நிமிட வீடியோவில் பாருங்கள்! ஷி ஜின்பிங் என்கிற ஒரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியின் ஆதிக்கக் கனவுகளுக்கு 2020 ஆம் ஆண்டில் உலகம் கொடுத்த விலை என்ன? வூஹானிலிருந்து பரவிய கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து உலகம் இன்னமும் முழுதாய் விடுபடவில்லை.

மீண்டும் சந்திப்போம்        

மண்டேன்னா ஒண்ணு! #தேர்தல்அரசியல் ஓ அமெரிக்கா! ஓ இந்தியா!

ஒருவழியாக அமெரிக்க அதிபர் தேர்தலில் அழுகாச்சிகள் ஓய்ந்து,ஜோ பைடன் (ஜனநாயகக் கட்சி) தன்னுடைய ,  தேர்தல் வெற்றியை அறிவித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோ நாடுகளில் இருந்து ஜோ பைடனுக்கு சம்பிரதாயமான வாழ்த்துக்கள் எதுவும் சொல்லப் படவில்லை என்று அண்மைச் செய்திகள் சொல்கின்றன. 2016 இலும் சரி இப்போது 2020 இலும் சரி, ஒரு நல்ல வேட்பாளரைத் தெரிவு செய்ய முடியாமல் குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் மிக மோசமான வேட்பளர்களையே நிறுத்தியதில், இந்தத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்  தன்னைவிட மிக மோசமான வேட்பாளரான ஜோ பைடனிடம் தோல்வியடைந்திருக்கிறார்  என்றே எனக்குப் படுகிறது. 


டிரம்புக்கு எதிரான அமெரிக்க ஊடகங்களுடைய வன்மம் கலந்த தொடர் தம்பட்டம் புதிதல்லதான்! அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகளும், சீனா, ரஷ்யா முதலான டொனால்ட் ட்ரம்ப் தோற்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் என்பதும் கூட ஊரறிந்த ரகசியம் தான்! ஜோ பைடனுடைய வெற்றியைக் கொண்டாடிய ஒரே வெளிநாடு பாகிஸ்தான் தான்! டொனால்ட்  ட்ரம்ப் தோற்றிருக்கிறார் ஆனாலும் அவருடைய தாக்கம் அமெரிக்காவை இருகூறாகப் பிரித்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. ஆனால் தேர்தல் முறையிலான ஜனநாயக நாடுகளில் இதுமாதிரி நடப்பது ஒன்றும் புதிதல்ல கடந்த சிலநாட்களாகவே ஜனநாயகத்துக்கு ஆதரவாகப் பொங்கிக் கொண்டிருந்த அயல்நாட்டு ஊடகங்களைக் கவனித்துக் கொண்டிருந்ததில் சிரிப்பு மட்டுமே வந்தது. போதாக குறைக்கு உள்ளூர் ஊடகமான News 18, ராகுல் காண்டி ஜோ பைடன், தேஜஸ்வி யாதவ் இருவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் ஒரு அபத்தமான செய்தியைப் போட்டு தமாஷ் செய்து இருக்கிறது! 

பப்பு காண்டி கற்றுக் கொள்கிற ஆசாமி மாதிரித் தெரிகிறதா என்ன? அடக் கொடுமையே! 

நாளை பீஹார் தேர்தல் முடிவுகள் வரட்டும்! இந்தச் செய்திக்காகவே ஒரு தனிக்கச்சேரி வைத்துக் கொள்ளலாம்!  

மீண்டும் சந்திப்போம்    

இவ்வளவுதான்! #அரசியல் இவ்வளவுதான்!

வரலாற்றில் டில்லியை சமாதிகளுடைய நகரம் என்று சொல்வதுண்டு. முகலாய ஆட்சியின் எச்சமாக எங்கு பார்த்தாலும் சமாதிகள் என்று அதற்கு காரணம் வேறு சொல்வார்கள். CAA எதிர்ப்பாளர்கள் அதை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிற மாதிரி நேற்றும் இன்றும் டில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெடித்து இதுவரை 7 பேர் பலி என்ற செய்தி வேறு. நாட்டின் தலைநகருக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிற சமயம், இப்படி நடந்திருப்பதில், இதற்கு காரணமானவர்களை நினைத்து நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தியாகவும் இருக்கிறது. இது போதாது என்று  காங்கிரஸ் கட்சியும் மிக அற்பத்தனமாக நடந்துகொண்டிருக்கிற தகவலும் ஹிந்து நாளிதழில் கொஞ்சம் தம்பட்டமடிக்கப்பட்டிருக்கிறது. 


குடியரசுத்தலைவர்  இன்றிரவு அமெரிக்க அதிபர் வருகையை ஒட்டி அளிக்கவிருக்கும் விருந்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு முன்னாள் பிரதமர் என்றவகையில் மன்மோகன் சிங் மக்களவைக்கட்சித்தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மாநிலங்களவகட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் மூவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்கள். காரணம் சோனியாவுக்கு அழைப்பு இல்லை, டொனால்ட் ட்ரம்ப்புடன் சோனியா சந்திக்க அழைப்பில்லை என்ற மிக அற்பமான காரணம் தான்! அமெரிக்காவில் சென்ற வருடம் HOWDY MODI நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்துகொண்ட மாதிரியே டெமாக்ரட்டுகளும் கலந்து கொண்டமாதிரி, இங்கேயும் அகமதாபாத் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்கும் தங்களை அழைக்கவில்லை என்ற குறையும் இருக்கிறது Mr. Chowdhury said the Government of India should have insisted with the U.S. authorities to follow the ‘time-honoured principle’. He told The Hindu that the decision to skip the banquet was a ‘personal’ one. He objected to Congress leaders being left out of Monday’s ‘Namaste Trump’ event in Ahmedabad.  என்கிறது ஹிந்து. இடதுசாரிக் கோமாளிகளுக்கு வேறுவிதமான வருத்தம்!


இங்கே தான் இப்படிக் கோமாளித்தனங்கள் என்றால் அங்கே அமெரிக்காவிலும் அதே மாதிரித் தானாம்! டெமாக்ரட் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ள பெர்னி சாண்டர்ஸ் செய்திருக்கிற அரசியல் காமெடி இது:

   
இதற்குப் பதில் ட்வீட்டாக ஒருவர் கீழே உள்ள படத்தைப் போட்டு 30 வருடங்களில் பெர்னி சாண்டர்ஸ் என்ன செய்தார் என்று நக்கலாகக் கேட்டிருக்கிறார். 


அமெரிக்காவோ இந்தியாவோ தேர்தல் ஜனநாயகம் என்றால் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது! ஒரே வித்தியாசம் அமெரிக்காவில் இடதுசாரிக் கோமாளித தனங்கள் கொஞ்சமும் எடுபடாது என்பது தான்! 78 வயதான சான்டா்ஸை அவரது சோஷலிஸ கொள்கைகளுக்காக ‘கிரேஸி பொ்னி’ என்று புனைப் பெயரிட்டு, டிரம்ப் விமா்சித்தாா் என்கிறது தினமணி செய்தி.  

  
சேகர் குப்தா அமெரிக்க அதிபர் நேற்று அகமதாபாதில் பேசியத்தைக் கொஞ்சம் அனலைஸ் செய்கிறார். இது முழுக்க முழுக்க அவர்பார்வை  வீடியோ 15 நிமிடம் 

அரசியல் என்றால் இவ்வளவுதானா? நிச்சயமாக இல்லை! அரசியல், தெரியாதவர்கள், தகுதியில்லாதவர்கள் கைகளில் சிக்கிக்கொண்டு குறுகிப் போய்க்கிடக்கிறது! அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம்.       
  

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் நாகரிகம்!

டொனால்ட் ட்ரம்ப் என்கிற தனிநபர்,அரசியல்வாதி மீது எனக்கு கடுமையான விமரிசனங்கள் உண்டு. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக, அமெரிக்க மக்களுடைய பிரதிநிதியாக இன்றைக்கு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். மரியாதையுடன் உபசரிப்பதுதான் ஒரு தேசமாக நமக்கு அழகு. ஆனால் இங்கே NDTV முதலான சில சேனல்கள், சில அச்சு ஊடகங்கள் நரேந்திர மோடி மீதான காழ்ப்பு, பயத்தினால் இந்த வருகையைக் கொச்சைப் படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கையில், இவர்களை நினைத்துக் கோபப்படுவதா அல்லது பரிதாபப்படுவதா என்று புரியவில்லை.


நேற்று NDTV யில் ஒளிபரப்பான இந்த 21 நிமிட விவாதத்தை இன்று காலையில் தான் பார்த்தேன். கொஞ்சம் கூட சகித்துக் கொள்கிற மாதிரி இல்லை!  வர்த்தக ஒப்பந்தம் இப்போதைக்கு இல்லை என்ற ஒரு காரணத்தை வைத்தே அமெரிக்க அதிபர் வருகை பயனற்றது என்று எப்படி முடிவு செய்கிறார்கள்? வளரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடாக ட்ரம்ப் வந்து மாற்றிவிட்டார். வர்த்தகத்தில் நமக்கிருந்த சலுகை, சாதகம் போய்விட்டது என்று கூவுவது மிகக் கேவலமாக இருக்கிறதா இல்லையா?  இதே மாதிரி ஒரு அபத்தமான உரையாடலை ஆதன் தமிழ் யூட்யூப் சேனலில் ராமசுப்ரமணியம் என்கிற வலதுசாரி (RSS அபிமானி என்பதாக நினைவு) பேசிக் கேட்டேன். 

    
இந்தியா டுடே மட்டும் NDTVக்குச் சளைத்ததா என்ன? இன்று மதியம் இந்த  20 நிமிட விவாதத்தை நடத்தித் தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொண்டு விட்டார்கள்!  உருப்படியான தகவலேதும் இருந்ததா?  இன்னமும் யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த வருகையின் போது எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்பதில் இந்தியத்தரப்பின் மீது குறை சொல்ல முடியாது. அமெரிக்கத்தரப்பு விரும்புகிறபடி உடன்பாடு எட்டப்படாததால் அவர்களே வெளியேறிவிட்டார்கள். பாதுகாப்புத்துறைக்காக கொஞ்சம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதுபோக ஒருசில அணு உலைகள் வாங்க அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்பதெல்லாம் ஊகங்களே! அப்படியானால் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை ஆர்வத்தோடு இந்திய சினிமாக்களைத் தொட்டு ட்வீட் செய்து, ஒரு 36 மணிநேர வருகைக்குத் தயாராவானேன்? இது நேற்றைய பதிவிலேயே எழுதியது.


அகமதாபாத் மோடரா ஸ்டேடியத்தில் நமஸ்தே ட்ரம்ப் வரவேற்புக்கு பதிலளித்து டொனால்ட் ட்ரம்ப் பேசியதன் முழுக்க காணொளியும் இங்கே.

டொனால்ட் ட்ரம்ப் அனேகமாக இந்தமாத இறுதியில் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டக்கூடும். எட்டாமலும் போகலாம். அதன்பிறகு என்ன நடக்கிறது அல்லது நடக்காமல் போனது என்பதை வைத்துத்தான் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்திய வருகையைப் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும். 

அதுவரை காத்திருப்பது ஒன்றுதான் சரியானது. மீண்டும் சந்திப்போம்/           

#1200 சண்டேன்னா மூணு! டொனால்ட் ட்ரம்ப்! ஷாஹீன் பாக்! தா பாண்டியன்!

டொனால்ட் ட்ரம்ப் இந்திய வருகை Khangress கட்சியில் ஏகத்துக்கும் காண்டு கிளப்பியிருக்கிறது. அதே போல டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் இந்த வருகையால் இந்தியாவுக்கு ஒரு பயனுமில்லை என்று சொல்லி விட்டார். ஆனால் டொனால்ட் ட்ரம்ப்பையும் அவரது பரிவாரத்தையும் வரவேற்பதற்கு ஏற்பாடுகள் வெகு மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதில் ஒரு சராசரி இந்தியன் கண்ணுக்குப் படுகிற விஷயங்களையும் தாண்டி வேறுவிஷயங்களும் இருக்கின்றன. 

 வீடியோ 26 நிமிடம் 

இந்த வருகையின் போது எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்பதில் இந்தியத்தரப்பின் மீது குறை சொல்ல முடியாது. அமெரிக்கத்தரப்பு விரும்புகிறபடி உடன்பாடு எட்டப்படாததால் அவர்களே வெளியேறிவிட்டார்கள். பாதுகாப்புத்துறைக்காக கொஞ்சம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதுபோக ஒருசில அணு உலைகள் வாங்க அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்பதெல்லாம் ஊகங்களே! அப்படியானால் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை ஆர்வத்தோடு இந்திய சினிமாக்களைத் தொட்டு ட்வீட் செய்து, ஒரு 36 மணிநேர வருகைக்குத் தயாராவானேன்? இங்கே இந்தியர்கள் அமெரிக்காவை அமெரிக்க அதிபரை அண்ணாந்து பார்க்கிற மாதிரி. டொனால்ட் ட்ரம்பும் அமெரிக்க இந்தியர்களுடைய வாக்குகளை மனதில் வைத்துக்கொண்டே வருகிறார்! இத்தனைக்கும் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்புக்கான அப்ரூவல் ரேட்டிங் நாலில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாக செய்தி. ட்ரம்ப் தலைமுடியும் சும்மா ஆடாது என்றிருக்க Khangress ஓவராகப் பொருமுவானேன்? இதுதானய்யா காங்கிரசு! 


டில்லி ஷாஹீன் பாக் போராட்டத்தின் உண்மையான முகம் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது. ஷேக்ஸ்பியர் நாடகமான Merchant of Venice இல் வருகிற ஷைலக் தனக்குச் சேரவேண்டிய pound of flesh நெஞ்சுக்கறிக்காக கெடுபிடி செய்கிற மாதிரியே! AAPக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தோம் இல்லையா? CAA /NRC /NPR இவைகளுக்கு எதிராக டில்லி சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமாம்! வெறும் 500 இஸ்லாமியப்பெண்கள் கும்பலாகக் கூடி டில்லி ஜாபராபாத் மெட்ரோ ரயில் நிலையத்துக்குப் போகவிடாமல் ரகளை செய்ததில் மெட்ரோ ஸ்டேஷன் மூடப்பட்டதும் பயணிகள் அவதிக்கு உள்ளானதும்தான் மிச்சம்! 

  
தா பாண்டியன்! வலது கம்யூனிஸ்ட் கட்சி எப்படி எல்லாம் சீரழிந்தது சீரழித்தது என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்வது மிகவும் உத்தமம்!  வீடியோ 38 நிமிடம்.

டிஸ்கி 1: இட்லி வடை பொங்கல்! #63 நேற்றே வெளியாகியிருக்க வேண்டியது! எழுதியதை பாதியில் மூடி விட்டேன். இன்று காலை, தலைப்பை மட்டும் அப்படியே வைத்து, இன்றைய செய்திகளை வைத்தே புதிதாக எழுதி வெளியிட்டாயிற்று.

இது இந்தப்பக்கங்களில் 1200வது பதிவு.       
     

இட்லி வடை பொங்கல்! #63 கேலிக்கூத்தாகும் அரசியல்!

நாளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி, மகள், மாப்பிள்ளை இவர்களுடன் தனது நிர்வாகத்தின் முக்கியமானவர்கள் (துணை அதிபர் நீங்கலாக) அத்தனைபேருடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். அகமதாபாதில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இந்தச் செய்தியும் உலகத்தின் பார்வை முழுதும் இந்தியா, பிரதமர் நரேந்திர மோடி மீதே இருப்பதில் Khangress  கட்சிக்கு முழு காண்டு இருப்பதில் ஆச்சரியமில்லை தான்! காங்கிரசின் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா பிரதமருக்கு ஐந்து கேள்விகள் கேட்டிருக்கிறார். ட்வீட்டரில் அக்கப்போர் வேறு! அடுத்துவரும் 2 வீடியோவும் தலா 3 நிமிடம் தான்.


இப்படி ட்வீட்டரில் அக்கப்போர் செய்வதை விட்டு விட்டு சத்ருகன் சின்காவுடன் பாகிஸ்தான் போய் இருந்தால், இன்னும் அதிகமான பப்ளிசிட்டி அங்கேயாவது கிடைத்திருக்குமே! சத்ருகன் சின்கா எதற்காகப் பாகிஸ்தான் போனாராம்?

  
ஒரு திருமணத்துக்காக பாகிஸ்தான் போன சத்ருகன் சின்கா அப்படியே பாகிஸ்தான் ஜனாதிபதியையும் சந்தித்து காஷ்மீர் விவகாரத்தைப் பற்றியும் பேசினாராம்! காங்கிரஸ்காரன் உளறுவதையும் கூட பொறுமையாகக் கேட்பதற்கு பாகிஸ்தானில்தான் ஆளிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வரலாறு! வரலாற்றுச் சோகம்!!  ராமசந்திர குகா எங்கேப்பா? 


திமுக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் பற்றி யார்யாரோ பேசிவிட்டார்கள்! நானும் கூட இசுடாலினுக்கு என்ன மாதிரி image makeover செய்துவிடமுடியும் என்ற கோணத்தில் இந்தப்பக்கங்களில் பலமுறை எழுதியாகி விட்டது. அப்புறம் என்ன? எஸ் பி லட்சுமணன்!  இப்படி ஒரு பத்திரிகையாளர் இருப்பதாக இதுநாள்வரை இங்கு யாருக்குமே தெரியாது. சமீபகாலங்களில் டிவி விவாதம் என்று பார்க்கையில் ஒருசில சேனல்களில் ரெகுலராகப் பார்க்க முடிகிறது. இவர்பங்குக்கு என்ன சொல்கிறார் என்று பார்த்துவிடலாமே! வீடியோ 15 நிமிடம்.


நடிகர் விஜய்க்கு ஏழர அல்லது மிகப்பெரிய எதிரி அவர் தகப்பன் S A சந்திரசேகர் தவிர யாராக இருக்கமுடியும்? ஒவ்வொருமுறையும் அவர் ஊடகங்களிடம் வாயைத் திறக்கும் போதெல்லாம் ஏழரையைக் கூட்டியதைத் தவிர வேறொன்றும் செய்ததில்லை. அதையும் ஒரு கலையாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது News 18 தமிழ் செந்திலுக்கு அண்மையில் அளித்த நேர்காணல், அதை வைத்தே குணசேகரன் ஒரு காலத்தின் குரல் நிகழ்ச்சியை நடத்தியதில் புலனாகியது. இப்போது ரங்கராஜ் பாண்டேவுடன் சுமார் 62 நிமிடம் உரையாடுகிறார். இவரும் இவர் மகனும் தப்பித்தவறி அரசியலுக்கு வந்துவிட்டால், ஏற்கெனெவே திராவிடங்களிடம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழக அரசியல் என்னவாகும்? கற்பனை செய்வதற்கே முடியவில்லை!

மீண்டும் சந்திப்போம்.         
                                                    

இட்லி வடை பொங்கல்! #60 டொனால்ட் ட்ரம்ப்! பட்ஜெட்! ரெண்டு முருகன்!

டொனல்ட் ட்ரம்ப் மீதான தகுதி நீக்க (impeachment) விசாரணை அமெரிக்க செனெட்டில் வருகிற வார மத்தியிலேயே ஆன்டி க்ளைமேக்சாக தோற்று விடும் என்பது இப்போது நிச்சயமாகி விட்டது. கூடுதல் சாட்சிகளை விசாரிக்கவேண்டும் என்று டெமாக்ரட் கட்சியினர் தொடர்ந்து முயற்சித்தாலும், நடக்காது என்றே தெளிவாகிவருகிறதாம்! ட்ரம்ப் தரப்பில் ஏகப்பட்ட அழுகுணி ஆட்டங்கள் நடந்தன என்பதும் அமெரிக்க ஜனங்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது! முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனுடைய வெள்ளைமாளிகை நினைவுகள் புத்தகமாக வெளிவருவதற்கு வெள்ளைமாளிகை தடை போட்டிருக்கிறது. அவர் உட்படப் புதிய சாட்சிகளை விசாரிக்க  வேண்டும் என்று டெமாக்ரட்டுகள் தலை கீழாக நின்று பார்த்தும், கதைக்காகவில்லை!


100 உறுப்பினர்கள் கொண்ட செனெட்டில் தற்போது ரிபப்லிகன்  53 டெமாக்ரட்டுகள் 47 என்றிருப்பதில், தகுதி நீக்கம் செய்யப்பட மூன்றில் இரண்டுபங்கு ஆதரவு வேண்டும். இல்லை என்பது தெளிவு. புதிய சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஜெயிப்பதற்கு ஆளும்  ரிபப்லிகன் தரப்பில் இருந்து 4 பேர் ஆதரவு வேண்டும். அதுவும் இல்லை என்பதே இந்த தகுதிநீக்க விசாரணை போகிற திசைகாட்டும் கள யதார்த்தம். The Democrats’ push for more witnesses and documents failed 49-51, with only two Republicans joining Democrats in favor. A vote on the verdict is planned for Wednesday.சாட்சிகளை தடை செய்து டொனால்ட் ட்ரம்ப் தகுதிநீக்கக் குற்றச்ச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் படுகிறார் என்கிறது இந்தச் செய்தி.


நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். இதன் மீது முழுமையான விவாதங்கள், நிதியமைச்சரின் பதில் இதற்குப் பின்னால் இதை இங்கே பேசுவது தான் சரியாக இருக்கும். கொஞ்சம் காத்திருந்து, விவரங்களைத் தெரிந்து கொண்டு எழுத ஆசை. பார்க்கலாம்!  இருந்தாலும் சுவாரசியத்துக்காக , சென்ற ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது புறநானூற்றில் இருந்து யானை புக்க புலம் போல என்ற பிசிராந்தையார் பாடல் வரியை மேற்கோள் காட்டியது போல இன்று  அவ்வையின் ஆத்திசூடியில் இருந்து    பூமி திருத்தி உண் என்ற வரியைச் சொல்லி விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீட்டை இருமடங்காக உயர்த்தி அறிவித்திருக்கிறார். காளிதாசனுடைய ரகுவம்ச காவியத்தில் இருந்தும் மேற்கோள் காட்டி கடல் நீரைச் சிறுகச் சிறுக உறிஞ்சும் சூரியன், நிலப்பகுதிக்கு மழையாகப் பொழிவது போலச் சொல்லப்படும் உவமையைச் சொல்லி, தனிநபர் வருமான வரி விகிதங்களில் கணிசமான வரிக்குறைப்பை அறிவித்திருக்கிறார்.


துரைமுருகனுடைய நக்கல் என்னமாதிரி வெளிப்படும் என்பதை எவராலும் ஊகிக்க முடியாது. பொடி வைத்து பேசுகிறாரா வெடி வைத்துப் பேசுகிறாரா என்பதே புரியாமல் சமயங்களில் திமுகவினரே தடுமாறுவதும் தெரிந்த விஷயம்தான்! திருச்சியில் நேற்று நடந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மத்தியில் பேசவந்தவர் "கருணாநிதி கூட முதலமைச்சர் ஆகிய பின்பே அகில இந்திய தலைவர் ஆனார் என்றும், ஆனால் இன்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே ஸ்டாலின் தேசியத்தலைவராக உருவெடுத்துள்ளார்" "கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராத வகையில் வாக்குகளை சிதறவைத்த கட்சிகளை இன்று தனது ராஜதந்திரத்தால் ஸ்டாலின் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்" என்றெல்லாம் பேசியிருப்பதை  எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? 

இசுடாலின் முதலமைச்சராக ஆகாமலேயே தேசியத் தலைவராக ஆகிவிட்டார் என்பதை இன்றைய காமெடியாக எடுத்துக் கொள்ளலாமா? க்கள் லக் கூட்டணியில் இருந்து இப்போது திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற உதிரிக் கட்சிகளைச் சீண்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மீண்டும் சந்திப்போம். 

மண்டேன்னா ஒண்ணு! டொனால்ட் ட்ரம்ப்! அப்புறம் தான் மற்றவை!

நேற்றைக்கு ISIS இன் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப்படையினரால் வேட்டையாடப்பட்ட செய்திதான்  தீபாவளிக் கொண்டாட்டமாக, மிகவும் முக்கியமானதாக இருந்ததென்று கூட சொல்லலாம்! சதா செய்திகளிலேயே வாழ்கிற ஒருவனுக்கு வேறெது அத்தனை கொண்டாட்டமாக இருந்திருக்க முடியும்? கொஞ்சம் சொல்லுங்கள்!  நேற்றிரவே  டொனால்ட் ட்ரம்ப்  அபு பக்கர் அல் பக்தாதி, ஒரு நாயைப் போல பயத்துடனும் கோழைத்தனத்துடனும் மரணத்தைச் சந்தித்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டதை நேரலையில் பார்த்து விட்டாலும் கூட நண்பர்களுக்காக இங்கே ஒரு சுருக்கமான  8 நிமிட வீடியோ!
   
  
1. "He died after running into a dead-end tunnel, whimpering and crying and screaming all the way."
2. "The thug who tried so hard to intimidate others spent his last moments in utter fear, in total panic and dread, terrified of the American forces bearing down on him." இப்படி டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பேசியதில் இருந்து 41 வாக்கியங்களை மேற்கோள் காட்டி CNN விமரிசித்திருந்தது டொனால்ட் ட்ரம்ப் மீது அமெரிக்க ஊடகங்களுக்கு இருக்கிற வெறுப்பரசியல்!  ஆனால் கொஞ்சம் substance இருக்கிற வெறுப்பரசியல் என்பதையும் கொஞ்சம் கோடிட்டுக் காட்ட வேண்டும்!


அபு பக்கர் அல் பக்தாதியின் மரணம் மத்திய கிழக்கில் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த 4 நிமிட வீடியோவில் விவாதிக்கிறார்கள். டொனால்ட் ட்ரம்புக்கு இது அரசியல் ரீதியான ஒரு வெற்றியாக இருக்கலாம்! ஆனால் தகுதி நீக்கம் (impeachment) செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க எந்தவிதத்திலும் உதவாது என்று கறுவுகிறது இன்னொரு CNN analysis! அது ஒரு பக்கம் என்றால் பிரிட்டனின் The Independent நாளிதழில் As long as Trump is in power, Baghdadi's death will not necessarily make the world a safer place- Donald Trump took obscene personal credit for the death, yet has put Isis back in business by his withdrawal of American forces from Syria என்று தலைப்பிட்டு இந்த விஷயத்தை விமரிசிக்கிறது. 


சிவசேனா தன்னுடைய சீனியர் நாட்டாமையைக் காட்டுவதில் மிகவும் முனைப்பாக இருக்கிறது என்பதில் காங்கிரசுக்கு இன்னும் கொஞ்சம் நப்பாசை! பிஜேபியை உதறிவிட்டு வந்தால் சிவசேனா தலைமையில் ஆட்சியை ஆதரிக்கத் தயார் என்று நூல்விட்டுப் பார்க்கிறதாம்! 


ஹரியானாவில் இதே நூல் அறுந்துபோய், பிஜேபியின்  மனோகர்லால் கட்டார் நேற்றைக்குப் பதவிப் பிரமாணமும் செய்துகொண்டு விட்டார். ஆனால் மஹாராஷ்டிராவில் மந்திரிசபை பதவியேற்க  நவம்பர் 2, அல்லது 3 தேதி ஆகலாம் என்கிறது இன்றைய செய்தி. காங்கிரசின் சஞ்சய் நிருபம் ட்வீட்டரில் என்ன சொல்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள் 


Instead of doing futile exercise,we must introspect why the party has lost 2 percentage of votes as compared to 2014 assembly election.We are down from 17 % to 15 % this time as total polled votes are concerned. As party we have come down to the 4th number from 3rd in the state.

அனுபவசாலியான சரத் பவார், சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிற எண்ணமே இல்லை என்று உறுதியாகச் சொல்லி விட்டார். ஆனாலும் காங்கிரசுக்கு நப்பாசை இன்னமும் இருக்கிறது. சிவசேனாவை சமாளிக்க  பிஜேபி என்ன செய்யப்போகிறது என்பது இன்னமும் வெளிப்படையாகத் தெரியவில்லை. 

மீண்டும் சந்திப்போம்.