Showing posts with label பதிவுலகம். Show all posts
Showing posts with label பதிவுலகம். Show all posts

என்னத்த பதிவெழுதி ..என்னத்த அரசியல் பேசி......!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர் விரும்பியோ விரும்பாமலோ இங்கே இந்திய அரசியல்கட்சிகள், சில ஊடகங்களின் பேசுபொருளாக ஆகியிருக்கிறார். அவர் என்ன சொன்னார் என்பதைவிட்டுவிட்டு, தங்கள் மனம் போனபோக்கில் திரிப்பது காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பு ஊடகங்களுடைய வாடிக்கையாகவே ஆகிக் கொண்டிருக்கிறது. அதை பற்றிய சின்னக் குறிப்போ விவாதமோ கூட இங்கே நடப்பதில்லை என்ற சூழலில் காவேரி செய்திகள் சேனலில் ஒரு விவாதம்.


கொஞ்சம் பார்த்துவிட்டு, மனதில் என்ன தோன்றுகிறது என்பதைக் கொஞ்சம் மனம்திறந்து சொல்லுங்களேன்!


இந்த வீடியோவை யூட்யூப் தளத்தில் அதற்கு வந்திருக்கிற பின்னூட்டங்களோடு சேர்த்துப் பாருங்கள்! எவ்வளவு வக்கிரமான ஆபாசமான வார்த்தைகளில் ஒரு வித வன்மத்தோடு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று கவனியுங்கள். யார் இது மாதிரியான வெறுப்பரசியலை  வளர்த்துக் கொண்டிருப்பது என்பதைக் கண்டுகொள்வது கடினமானதில்லை. இதே கோஷ்டிகள்தான் கருத்துசுதந்திரம் பறிபோச்சு சகிப்புத் தன்மை அத்துப் போச்சு பாசிசம் ஒயிக என்றும் கூவியவர்கள் என்பதும் புரிகிறதா? காங்கிரஸ் திமுக கூட்டணியைத் தோற்கடித்தே ஆகவேண்டும் என்பதில் உள்ள நியாயம் புரிகிறதா? என்ன செய்யப் போகிறீர்கள்?  

      
கொஞ்சம் பழசுதான்! இசுடாலினுடைய கறுப்புப் பக்கங்கள் என்று ஆனந்தவிகடனே சொல்வது கொஞ்சம் அல்ல கொள்ளை கொள்ளையாக அதிசயம். இசுடாலினுடைய நிர்வாகத்திறமை கூட இதில் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறதே, கவனியுங்கள்!


கஸ்தூரி பேட்டியைப் பார்த்தீர்களா? இந்தப் பேட்டி மீதான அபிப்பிராயங்கள் எப்படியாம்?

மத்தியில் மாற்றம் வாய்ப்பு இல்லை- கஸ்தூரி BJP பேனாமி அரசுக்கு தோல்வி - DMK சொம்பு நாம் தமிழர் மட்டுமே பெண்களுக்கு 20 சீட் கொடுத்துள்ளது- கஸ் NTK ராஜ்சத்யன் நல்லவர் - ADMK பீரங்கி புதியர்களை தேர்தெடுங்கள்- MNM கொபசெ பேட்டி என்னவோ ஒண்ணுதான். பிரிச்சு மேயறீங்களே யப்பா !
11:04 AM - 9 Apr 2019   

இவ்வளவு நீட்டி முழக்கியும் கூட, பதிவை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே புரியாமல் இருப்பது, அப்போ  நான் மட்டும்தானா?        

மண்டேன்னா ரெண்டு! சொதப்பல்ஸ்!

மண்டேன்னா ஒண்ணுதான் எழுதணுமா என்ன?!



தான் சொதப்பறதுக்குன்னே நிறைய மேட்டர் இருக்கே!  

நேற்றைக்கு ஒரு வலை நண்பர் அரட்டையில் வந்து ஆணாதிக்கம், அது இது என்று கொஞ்சம் கதைத்து விட்டுப் போனார். இந்த ஆணாதிக்கம், பெண்ணீயம் என்பதற்கெல்லாம் உண்மையிலேயே ஒரு அளவீடு இருக்கிறதா என்ன? எனக்கென்னவோ, ஒவ்வொருவரும் தங்களுடைய சௌகரியங்களுக்கேற்றபடி இந்த வார்த்தைகளை உரக்கக் கூவிக் கொண்டிருப்பதனால் மட்டுமே நிறுவிவிட முயல்வது போலத் தோன்றுகிறது.

ணையத்தில் இன்று காலை இந்த யூட்யூப் வீடியோவைப் பார்க்க நேர்ந்தது! ஐயா தன்னுடைய காதலைச் சொல்லுகிறாராம்!




காதல் கனிரசமே என்று கர்நாடகமாக எம் கே தியாகராஜ பாகவதர் பாட்டுப் பாடிக் காதலைச் சொல்ல ஆரம்பித்த நாளில் இருந்து, மரத்தைச் சுற்றி வந்து  எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்று கண்ணை உருட்டிப் பாட்டுப் பாடிய காதல் மன்னர்கள், அப்புறம் இன்றைக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ம்யூசிக்கில் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாட்டுக்கு வாயசைத்துக் காதலைச் சொல்லுகிற ஜீரோக்கள் வரை, காதலைச் சொல்லுகிற தருணங்களில் எல்லாமே ஆண் இப்படிச் சொதப்புகிறவனாகவே  பார்த்துப் பார்த்துத் தானோ என்னவோ ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுப்பவர்கள் கூட, ஆணைப் பரிதாபத்துக்குரிய சொதப்பலாகத் தான் பார்க்கிறார்கள்!

னாலும் ஆணை ஒரு வக்கிரம் பிடித்தவனாக, ஆதிக்க மனோபாவம் உள்ளவனாக உரக்கக் கூவவும் செய்கிறார்கள்!
 




 
கேபிள் சங்கர் பதிவில் இந்தக் குறும்படத்தைப் போன வாரம் பார்த்தேன்! இயக்குனர் எம் பாலாஜி காதலில் சொதப்புவது எப்படி என்ற  இந்தக் குறும்படத்தில் நன்றாகவே சொல்லியிருக்கிறார்! ஒரு சொட்டுக் கொடுத்துப் பதிவு எழுதலாம் என்று நினைத்தபோது,இந்த ஆணீய, பெண் ஈயக்  கூக்குரல்கள் இடையில் வந்து கவனத்தை வேறுபக்கம் திருப்பி விட்டன!

தாமதமாகச் சொன்னாலும் சொன்னாலும், ஒரு பெரிய சபாஷ், பாலாஜி! சொதப்புவது எப்படி என்பதை சொதப்பாமல் சொன்னதற்கு!
 



நிராகரித்தலின் வலி! பரிசல்காரனின் இந்தப் பதிவை இன்றைக்குக் காலை படித்தபோது, மனசு கொஞ்சம் கனத்தது.

"நிராகரித்ததன் காரணம் என்னவாக இருந்தாலும், நிராகரிக்கப் பட்டதன் வலியை நன்றாகவே உணர முடிகிறது!

ஒரு எல்லை வரை கூடப் பயணம் வருகிறவர்கள், ஏதோ ஒரு தருணத்தில் வேறு வேறு பாதைகளில் பிரிந்து பயணத்தைத் தொடர்வது இயல்புதான்!

பாதையெல்லாம் மாறி வரும்! பயணம் முடிந்துவிடும்!
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்!

இது கண்ணதாசன் அனுபவித்துச் சொன்னது!"


இப்படிப் பின்னூட்டம் எழுதிவிட்டு  யோசித்தபோது தான், வாழ்க்கையில் ஏதோ ஒரு அல்லது பல தருணங்களில் நம்மில் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து  சொதப்பிக் கொண்டே  இருப்பதும், அதற்குக் காரணம் நம்மைத் தவிர மற்ற எல்லோரும் தான் என்று குற்றம் சொல்லி அழுதோ அல்லது ஆக்ரோஷமாகவோ எதையாவது செய்து முடித்த பிறகுதான், எல்லாவற்றையும் தொலைத்த பிறகு தான்  ஞானம் வருகிறது!

அதற்காக, மண்டே பொழுது விடிந்ததுமே நம்ம உண்மைத் தமிழன் மாதிரி அடேய்ய்ய்..! மசிருக் கோவணாண்டி என்று என்னப்பன் முருகனைக் கோபித்துக் கொண்டு எழுத ஆரம்பித்தால் நன்றாகவா இருக்கும்!

கண்ணியமான வார்த்தைகளில் சொல்லப்படும்  Trial and Error எனப்படும் முயற்சி, உடைத்துப் பச்சையாகச் சொல்வதானால், சொதப்பல்ஸ் ஆகி விடுகிறது! 

சொதப்புவது மனித இயற்கை! 

சொதப்பாமல் இங்கே எதுவுமே செய்யப் பட்டதே இல்லை என்பதை, அவரவர் மனசாட்சியைக் கொஞ்சம் பேசவிட்டுக் கேட்டால், தானே புரிந்து விடும்! 

அது புரிவதனால் தான் என்னவோ அடுத்தவர் சொதப்புவதை இவ்வளவு மூர்க்கத் தனமாகக் கடித்துக் குதறி விடுகிறோம்!

"
பொதுவாகப் பார்க்கப் போனால், அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை, பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டு இருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாக, மறைவாக, அல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான், நம்மிடம் இருக்கும் குறை பெரிதாக, தீமை இல்லாததாகத் தெரிவது, அடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

இப்படி இங்கே எழுதியதை நினைத்துப் பார்த்துக் கொண்டே.......! 


மண்டேன்னா ரெண்டு! சொதப்பல்ஸ்னு முதல்லேயே சொன்னேனா இல்லையா?!