Showing posts with label ஒரு இந்தியக் கனவு. Show all posts
Showing posts with label ஒரு இந்தியக் கனவு. Show all posts

ஒரு இந்தியக்கனவு! American Dream! சீனர்களுடைய கனவு!

ஒரு இந்தியக் கனவு!


.
முண்டாசுக்கவிஞன் பாரதி கொஞ்சம் அவசரப்பட்டு இப்படி ஆனந்தப்பள்ளு பாடிவிட்டானோ? விடுதலை வேட்கையில், அது நிகழ்வதற்கு முன்னாலேயே ஒரு இந்தியக்கனவாக என்னென்னவெல்லாம் பாரதிக்கு தோன்றியது என்பதை இந்தப் பாட்டிலேயே தெரிந்து கொள்ளமுடியும். பூ வனம் பக்கங்களில் எழுத்தாளர் ஜீவி பாரதி வாழ்க்கையைக் குறித்து நெடுந்தொடராக எழுதி வருவதை, மீண்டும் ஒரு பார்வை எட்டிப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விடத்தான் முடிகிறது. வெள்ளைத்துரைகளைக் கப்பலேற்றிவிட்டு, சுதந்திர இந்தியாவை ஆளக்கிளம்பிய  புண்ணியவான் நேரு இந்தியக் கனவுகளை என்ன செய்தார் என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிற ரகசியம்.

1948 இல் ஹைதராபாத் நிஜாம் மீது எடுக்கப்பட்ட Police Action இந்திய கம்யூனிஸ்டுகளை, இந்த இந்திய  அரசு யாருடையது என்று வெகுவாகக் குழப்பி, கட்சி வலதுCPI இடது CPIM என்று இரண்டாக உடைந்து, கொஞ்ச நாட்களிலேயே இடதுகளும்  உடைந்து இடது, அதிஇடது CPI ML  என்று பல குறுங்குழுக்களாக மாறினது தான் மிச்சம். இன்னமும் கூட இந்திய அரசின் வர்க்கத்தன்மை என்னவென்று தீர்மானிக்க முடியாத நிலையில் தான் ஒட்டுமொத்த இந்திய கமூனிஸ்டுகளும் இருக்கிறார்கள். திராவிடங்கள், பெரியார் அம்பேத்கர் ஈயங்கள் இந்த அளவுக்குக் குழம்புவதில்லை. எல்லாம் சாதிமயம் சனாதனம் பாசிசம் என்று முத்திரை குத்தி தத்துவ பிரச்சினைகளை முடித்துக் கொள்வார்கள்!

இப்படி இதுசாரிக் குழப்பத்தில் சிக்கிக் கொண்டவர் எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான கோமல் சுவாமிநாதன்! அவருடைய நாடகம் ஒன்றிற்குப் பெயர் ஒரு இந்தியக் கனவு! இன்னொன்று அனல்காற்று! திருச்சி ஆர் ஆர் சபாவில் இரண்டையும் நாடகமாகப் பார்த்து, கோமல் சுவாமிநாதனுடைய நவீன நாடக உத்திகளை இப்போது கூட வியந்தாலும், நாடகம் சொல்ல வந்த விஷயம் வெறும்கனவுதான் என்பது, இடதுசாரி, தொழிற்சங்க மயக்கங்களில் இருந்து விடுபட்டு வெளியே வந்து பார்க்கும்போதுதான் தெளிவாகப் புரிகிறது. ஒரு இந்தியக்கனவு முழுப்படம் யூட்யூபிலேயே காணக் கிடைக்கிறது. இரண்டேகால் மணிநேரம் பொறுமையாக, ஒரு  பிரசார டாக்குமென்டரியை பார்க்க முடிந்தால் , பாருங்களேன்! இங்கே சாம்பிளுக்கு ஒரு பாட்டு மட்டும்!      

இவ்வளவுதானா நம்முடைய இந்தியக்கனவு என்று நாமே அலுத்துக்கொள்கிற அளவுக்குத்தான் நாடு   விடுதலையடைந்த 72 ஆண்டுகளில் நம்மூர் அரசியல் அவ்வளவு தரம் தாழ்ந்து கிடக்கிறது.  

அப்படியே சோர்ந்து கிடக்கவிடாமல் அக்கம் பக்கம்! என்ன சேதி!   என்று பார்த்துக் கொண்டிருப்பதில் நம்மைச் சுற்றி நிகழ்கிற சில விஷயங்கள் தூண்டுகோலாக இருக்கின்றன.

The American Dream!

எழுதியதில் பேராசையே அமெரிக்கர்களுடைய கனவாகவும் இருந்தது சொல்லப்பட்ட்டது!அதை American Tianxia என்ற வார்த்தைப் பிரயோகத்தில் 1950 முதலான நூறாண்டு அமெரிக்காவுடையதாகவும், அடுத்து இந்த நூற்றாண்டு சீனாவுடையதாக இருக்கும் என்பது வெறும் பிரசாரமாகவோ வார்த்தை ஜாலமாகவோ இல்லாமல் தொடர்ந்து உருவாகிவரும் சீனாவின் ஆதிக்கக் கனவு, நம்மையே சுற்றி சுற்றிப் பின்னப்படும் வலையாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை ஒரு சிறு காணொளியாக 

  
அக்கம் பக்கம்! என்ன சேதி!  பக்கங்களை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வீர்கள் தானே!!

       

இந்திய அரசியல்-எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்?



"ஒவ்வொரு துறையிலும் இந்தியா சீர்படுத்த முடியாத அளவு பழுதடைந்து வருகிறது. இந்த மாபெரும் தேசத்தை வழி நடத்தக் கூடிய எந்தவொரு தலைவரோ, கட்சியோ கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை"

என்ற ஆதங்கத்தோடு வெளிவந்த வார்த்தைகள் திரு தேவனுடையது! ப்ளஸ்ஸில் நடந்த ஒரு விவாதத்தின் பின்னூட்டமாக அவர் எழுதிய வார்த்தைகளின் பின்னால் இருந்த ஏமாற்றம் இப்படியும் வெளிப்படுகிறது.

"அதனால்தான் மூழ்கும் ஓட்டைக் கப்பலில் இருந்து கொண்டு அதனை சரிசெய்ய முயற்சி செய்து சக்தியெல்லாம் விரயம் செய்வதைக் காட்டிலும் நமக்கென ஒரு ஒழுங்கான சிறு படகை தயார் செய்ய முடியும் என்ற நோக்கத்தில்தான் தனித் தமிழ்நாடு பற்றி பேசி வருகிறேன்"

இந்தக் கண்ணோட்டம், வலி, வேதனை எந்த அளவுக்கு சரி?ஒரு விஷயத்தை எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் தான் தீர்வு கிடைக்குமா இல்லையா என்பதே இருக்கிறது.

ஒரு வழக்கம், அல்லது அமைப்பு எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! அதை மாற்றுவதென்பது அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போடுவதில் மட்டும் தான் இருக்கிறது என்று நினைத்தோம் என்றால், அப்போது வருவது சலிப்பும், சோர்வும் தோல்வி மனப்பான்மையும் தான்!

மாறாக, மாற்றம் என்பது எப்போதும் ஒரு சிறுபுள்ளியாக ஆரம்பித்து, மொத்தத்துக்கும் பரவும் என்பதைப் புரிந்து கொண்டோமானால், நாம் விரும்புகிற மாற்றத்துக்கு நாம் தான் முதலில் விதை நெல்லாக, களமாக இருக்க வேண்டும், மாற்றம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும், 
இதுவரை பழகிப்போனதை, உதவாததை உதறுவோம் என்ற முடிவுக்கு வருவதிலும் தான் இருக்கிறது என்பதும் புரியும்

தினமணி  தலையங்கம்: ஏமாற்றம்!


எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் திருத்தங்களைச் செய்யாவிட்டால் - ஒவ்வொரு கட்சியும் இருபது, முப்பது திருத்தங்களை கூறியுள்ளன - மாநிலங்களவையில் லோக்பால் மசோதா நிறைவேறுவது சாத்தியமே இல்லை என்கின்ற புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாநிலங்களவையில் நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. ஆகவே மாநிலங்களவை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

ஐந்து மாநிலஙகளின் தேர்தல் 2012 மார்ச் 4-ம் தேதிதான் முடிவடையும் என்பதால் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக லோக்பால் மசோதா விவாதிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.இதைப் பார்க்கும்போது, ஏதோ திட்டமிட்டு, மிகவும் புத்திசாலித்தனமாக, ஆனால் மக்கள் மத்தியில் யாருமே எந்தக் கட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடத்தப்படும் நாடகம்தானோ இது என்று ஒரு குடிமகனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. மாநிலங்களவையில் தற்போது 243 பேர் இருக்கின்றனர். 122 பேர் ஆதரித்தால்தான் லோக்பால் மசோதா நிறைவேறும். 

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலங்களவையில் 92 பேர் உள்ளனர். மீதமுள்ள 30 பேர் ஆதரவைப் பெறுவது, ஆட்சிப் பொறுப்பில் உள்ளதும், அனுபவங்கள் நிறைந்ததுமான காங்கிரஸ் கட்சிக்குக் கடினமொன்றும் அல்ல.தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே ஒருவரையொருவர் காரசாரமாகத் திட்டிவிட்டு, மாநிலங்களவையில் ஆளும் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக நின்றால், உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களைச் சந்தித்து வாக்கு திரட்டுவது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஆகவே, இந்த விவகாரத்தைத் தேர்தலுக்கு பின்பு- வெற்றியோ தோல்வியோ எதுவான போதிலும் பார்த்துக்கொள்வோம் என்கின்ற ராஜதந்திரமான முடிவால்தான் இப்போதைக்கு லோக்பால் மசோதா வாக்குவாதத்துடன், தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள முடிகிறது.

லோக்பால் மசோதாவைத் தயாரித்த நிலைக்குழுத் தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லோக்பால் மசோதாவில் எதற்கு அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை கூறியிருக்கிறார். 

"இரண்டரை மாதங்களாக இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விவாதத்துக்குரியவையாக 23 விஷயங்கள் எடுத்துக் கொள்ளப் பட்டன. அதில் இரண்டு விஷயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடு சற்று அதிகம் எனலாம். அவை, மத்தியப் புலனாய்வுத் துறையை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது (ஆதரவு 20, எதிர்ப்பு 10) அரசு ஊழியர்களில் சி, டி பிரிவை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது இரண்டும்தான்'' என்கிறார் அவர். 

இதை வைத்துப் பார்க்கும்போது, இப்போது மாநிலங்களவையில் பெரும் பிரச்னையாக விவாதிக்கப்படுகின்ற லோக்ஆயுக்தா அமைப்பதைக் கட்டாயமாக்குவது மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும் என்கின்ற விவகாரமே நிலைக்குழுவில் ஒரு பிரச்னையாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்று கூச்சல்போடும் அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகளும் நிலைக்குழுவில் இடம் பெற்று இருக்கிறார்கள். நிலைக்குழுவில் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் 10 பேருக்கும் குறைவு. அப்படியிருக்கையில் நிலைக்குழுவில் அதிகபட்சமாக எதிர்க்கப்பட்ட (13 பேர்) விவகாரம் அரசு ஊழியர்கள் சி, டி பிரிவு குறித்தது தான். மாநிலங்களின் உரிமை, அது இது என்று குரல் கொடுக்கும் உதிரி - எதிர்க்கட்சிகள் அனைத்தும் அறைக்குள் பேசும் போது அனுசரிப்பாக இருக்கிறார்கள். அவையில் மக்கள் அறியப் பேசும்போது, கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்து மீண்டும் கூடும்போது, ஆதரிப்பார்கள் அல்லது வெளியே சென்றுவிடுவார்கள். அவைக்குள் இருக்க மாட்டார்கள்.

தேர்தல்முடியும் வரை தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது லோக்பாலை கொண்டு வந்து விட்டதாகப் பேச வேண்டும். ஆனால், கொண்டு வந்து விட்டதாகவும் இருக்கக்கூடாது. இதை எதிர்க்கட்சிகள் மட்டுமே எதிர்த்தால் எப்படி? எதிர்க்கட்சியைக் காட்டிலும் ரொம்ப எதிரிபோல, தோழமைக் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் ரொம்ப ஆவேசமாக எதிர்க்கிறது. ஆளும் காங்கிரசும் நிஜமாகவே பயப்படுவதைப்போல நடுநடுங்குகிறது.  

1968 முதல் லோக்பால் மசோதா விவாதிக்கப்படுகிறதே தவிர, நாடாளு மன்றத்தில் விவாதத்துக்குக்கூட எடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளிப் போகிறது. இந்த முறை நிலைக்குழு வரை சென்று மக்களவையிலும் நிறைவேறி, மாநிலங்கள் அவையில் விவாதம்வரை சென்று முடக்கப் பட்டிருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எந்தவொரு அரசியல் கட்சியும் வலுவான லோக்பால் அமைப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்பதுதான் அது.

நமக்குக் கோபம் அரசியல்வாதிகளிடம் வரவில்லை. அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், மக்களின் பேராதரவுடன் எழுச்சியை ஏற்படுத்திய "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பும் அதன் வேகமும் தடம்புரண்டுவிட்டதே என்பது தான்! 

நமது ஆதங்கம், ஆத்திரம் எல்லாமே. அண்ணா ஹசாரே குழுவினர் ஊழலுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டத்தைக் காங்கிரசுக்கு எதிரான போராட்டம் ஆக்கியதன் விளைவாகத் தங்களது நம்பகத்தன்மையை இழந்து விட்டதால் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான் 

இது.லோக்பாலுக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் இன்னொரு எழுச்சியை ஏற்படுத்தப் போவது யார்? அது நிச்சயமாக அண்ணா ஹசாரேயாக இருக்க முடியாது. நமது அரசியல்கட்சிகளாகவும் இருக்க வழியில்லை. இந்த நிலையில், இந்திய மக்கள் இலவுகாத்த கிளிகளாகக் காத்திருக்க வேண்டியது தானா


மந்திரி......கொஞ்சம் எந்திரி! மாற்றம் வந்தாச்சாம்!



ஒருவழியாக, மன்மோகன் சிங் வரும் வரும் என்று சொல்லிக் கொண்டிருந்த மந்திரிசபை மாற்றத்தைக் கொண்டே வந்துவிட்டார்!
ஏழு வெளியேபோக எட்டு உள்ளே வருவதாகக் கணக்கு! அந்த எட்டில் ஒன்று புட்டுக் கொண்டுபோக. ஏழுக்கு ஏழு சரியாகப்போயிற்று!திமுக காலி செய்த இடத்தை நிரப்பவில்லை, காலியாக வைத்திருப்பதாகப் பிரதமர் சொல்கிறார். 



மிழ்நாட்டில் இருந்து ஜெயந்தி நடராஜனுக்கு ராஜாங்க மந்திரி பதவி கிடைத்திருக்கிறது. ஏற்கெனெவே அம்மா அலட்டல் அதிகம்! இப்போது ராஜாங்கமும் சேர்ந்து கொண்டு என்ன பாடுபடுத்தப் போகிறதோ தெரியவில்லை!

அடுத்த வருஷம் வரப்போகிற சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு சல்மான் குர்ஷீத் உள்ளே வந்திருக்கிறார். சட்ட அமைச்சராக! சட்ட அமைச்சராக இதுவரை இருந்த வீரப்ப மொய்லி கார்பரேட் விவகார அமைச்சராகியிருக்கிறார். வேண்டாதவர்கள் சேர்ந்து
என்னை சட்ட அமைச்சகத்தில் இருந்து கழற்றி விட்டு விட்டார்கள் என்று மனிதர் வருத்தப்பட்டுக் கொள்கிறார். 

மும்பையைச் சேர்ந்த குருதாஸ் காமத், தனக்குக் காபினெட் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்று குறைப் பட்டுக் கொண்டார். பதவியேற்புக்குக் கூட இரண்டு அமைச்சர்கள் வரவில்லை! அதில் இந்தக் காமத்தும் ஒருவர். கொடுத்த பதவியை வாங்கிக் கொண்டால் ஆயிற்று, இல்லையென்றால் அதுவும் கிடைக்காது என்று மேலிடம் சொன்னதாம்! மனிதர் எனக்குக் கட்சிப் பொறுப்பே போதும் என்று ராஜினாமா செய்துவிட்டார்.

ஆக, மன்மோகன் சிங்கும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, இப்போதெல்லாம் என்ன செய்தாலும் ஏறுக்குமாறாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது!

கூட்டணிதர்மத்தைப்பற்றிப் பேசி இன்றைக்கும் மன்மோகன் சிங் தமாஷ் செய்திருக்கிறார்! கூட்டணிக் கட்சி எதுவும் இவரை மதிப்பதில்லை, கூட்டணி தர்மத்தையும் மதிப்பதில்லை என்பது தெரிந்தே மனிதர் காமெடி செய்துகொண்டிருப்பது, அசிங்கமாக இருக்கிறது.திமுகவின் டி ஆர் பாலு நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு அலைந்து பார்த்தார்! கதைக்கு ஆகவில்லை!

வேணாம் ..விட்று! வலிக்குது...அழுதுடுவேன் என்று வடிவேலு ரேஞ்சில் அஞ்சா நெஞ்சன் என்று மார்தட்டிக் கொண்ட அழகிரியை முகத்தை மூடிக் கொண்டு அழக்கூட விடாமல் செய்தியாளர்களும், டிவி காமெராக்களும் துரத்தித் துரத்தி மதுரை, உத்தங்குடிக்கருகில் பதினேழு ஏக்கர் கோவில் சொத்தை  மனைவி பெயரில் வாங்கிய விவகாரத்தைக் கேட்க, மனிதர் வேகமாக நடந்துகொண்டே டிவி மைக்குகளைக் கையால் தள்ளிக் கொண்டு ................'ஐயா டாகுமெண்டேல்லாம் இருக்குன்னு சொல்றாங்களே' என்று செய்தியாளர் கேட்க, 'இருந்தா வந்து எடுத்துக்குங்க.. என்ன விலை தர்றீங்க..  ஸ்டுபிட்' என்று விறைத்துக் கொண்டு போனதைத் திரும்பத் திரும்ப  ஹெட்லைன்ஸ் டுடே தொலைக் காட்சியில் பார்க்க பரிதாபமாக இருந்தது.

In his annual declaration to the Prime Minister's Office on March 31, 2010 Alagiri did not declare his assets to the PMO office. These documents have also been accessed by Headlines Today. But when confronted by Headlines Today with this proof, the minister replied: "Show me papers. Don't ask stupid question."

சீச்சீ, நாயும் பிழைக்குமோ இந்தப் பிழைப்பு என்று மன்மோகன் சிங், தியாக சிகரம் சோனியா காந்தி, ஐமு கூட்டணிக் குழப்பத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியைப் பார்த்தும் காறித் துப்புவதோடு விட்டுவிடாமல், தேர்தல்களிலும் சரியான பாடம் புகட்ட வேண்டிய கடமை இந்திய மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.








 
பதிவு பிடித்திருக்கிறதா? அருகில் இருக்கும் ப்ளஸ் ஒன் பட்டனை அழுத்திப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

விழித்தெழு என் தேசமே.............!


ரவீந்திரநாத் தாகூர் - 150 வது பிறந்த நாள் இன்று மே 7! பாரதத்தின் கவிஞனுக்கு அஞ்சலி செய்குவோம்! 

Where The Mind is Without Fear...!

WHERE the mind is without fear and the head is held high

Where knowledge is free

Where the world has not been broken up into fragments

By narrow domestic walls

Where words come out from the depth of truth

Where tireless striving stretches its arms towards perfection

Where the clear stream of reason has not lost its way

Into the dreary desert sand of dead habit

Where the mind is led forward by thee

Into ever-widening thought and action

Into that heaven of freedom, my Father, let my country awake.

-Rabindranath Tagore

விழித்தெழுக என் தேசம்!

கீதாஞ்சலி 35

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
விழித்தெழுக என் தேசம்!
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

- ஜெயபாரதன்
(jayabarat@tnt21.com) அவர்களுக்கு நன்றியுடன்!



 

வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! ஒரு இந்தியக் கனவு....!

தேசத் துரோகிகள்! சீறும் தினமணி  தலையங்கம்!

"இயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்துக்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக  புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ  70,000 கோடி விரயமாக்கப் பட்டிருக்கிறது.

இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப் போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா?

தில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.

முதலில்  655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள்  11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார்  17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும் பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ  70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம்  961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம்  669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம்  262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம்  149 கோடி என்று ஏறத்தாழ  44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு  85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு  80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.

961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், "அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.

விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்?

விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாட்கள் தான் இருக்கின்றன.

இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக் குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.

வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே   வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.  70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று?

இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.


எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப் படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின் கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்?    இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலை
ழுத்தாகி விட்டது!"


தினமணி தலையங்கத்தில் சீறியிருப்பதில் தவறேதும் இல்லை!

நெஞ்சு பொறுக்குதிலையே-நெஞ்சு
பொறுக்குதிலையே-இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்

என்று பாரதி குமுறியதைப் போல நாமும் ஏன் குமுறவில்லை என்பது தான் இன்றைக்கு  வெள்ளிக் கிழமைக் கேள்விகளில், முதலாவது! முக்கியமானது!

ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் இரண்டின், இந்த இரண்டாவது இன்னிங்ஸில், இரண்டாவது வருடத்தில் நாட்டை எந்த நிலைமைக்குக்  கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


ஜம்மு காஷ்மீரில் நூறு நாட்களையும் தாண்டி சட்டத்தை மதிக்காமல் கல்லெறிவது, வன்முறையைத் தூண்டுவது, ராணுவத்தை வம்புக்கு இழுப்பது, பிரச்சினையைப் பெரிதாக்கிக் கொண்டே போவது என்று போய்க் கொண்டே இருக்கிறது. அறுபத்து இரண்டு ஆண்டுகளாக  அணைக்கப் படாமல் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை, சர்வ கட்சிக் குழுவைக் கொண்டு, அதுவும் யார் தலைமையில் என்று நினைக்கிறீர்கள், சால்வை அழகர் பானா சீனா தலைமையிலாம்! 

என்ன முடிவு, என்ன தீர்வு கிடைத்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

ராஜசேகர ரெட்டி விபத்தில் போய் விட்டார்! மிகவும் தாமதமாக, இந்திரா காண்டி ஃ பார்முலாவைக் கையாள ஆரம்பித்த நேரமும் சரியில்லை! உள்ளூர்த் தலைவர்கள் எவரும் வேர் கொண்டுவிடாமல், மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு, செல்வாக்கைக் கரைப்பது, தன்னைக் காப்பற்றிக் கொள்ள
இந்திரா காண்டி கையாண்ட அந்த நாளைய தந்திரம்! சென்னா ரெட்டி முதல் எஸ் எம் கிருஷ்ணா என்று இந்தப் பட்டியலில் கரைந்து போனவர்கள் எண்ணிக்கை ஏராளம்! ரோசையாவை கொண்டு வந்து ஆந்திர முதல் அமைச்சர் க்கினார்கள்! ராசையா நல்லவர், வல்லவர் என்பதற்காக இல்லை! ராஜ சேகர ரெட்டியின் வாரிசுகள், அசைக்க முடியாத சக்தியாக ஆந்திரத்தில் வளர்ந்து விடக் கூடாது என்ற பயத்தில் மட்டுமே என்பது வெளிப்படை.

தெலங்கானா பிரச்சினையில் பானா சீனா தனி மாநில அறிவிப்பை முதலில் செய்து விட்டு, கலாட்டா வந்ததும் ஓடி ஒளிந்து கொண்ட  விளையாட்டில் அது வரை ஆஸ்தானத்தின் அசைக்க முடியாத ஆலோசகராக இருந்த எம் கே நாராயணன்  மேற்கு வங்க கவர்னராகத் தூக்கியடிக்கப் பட்டார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்தத் தலைமைக்கு யார், தெலங்கானா உண்டா இல்லையா என்ற பிரச்சினையில் காங்கிரஸ் செய்த குழப்பத்தில் வீணானது.எம் கே நாராயணன் என்ற பெயராவது எவருக்காவது இப்போது நினைவிருக்கிறதா?


பெயருக்குத் தான் மன்மோகன் சிங் பிரதமர்! பிரதமர் பதவி
வலிய வந்தும் அதை மறுத்த நேரு குடும்பத்துத் தியாக சிகரமான, மேல் நாட்டு மருமகளின் கண்ணசைவுக்கு  ஆடும் வெறும் டம்மிப் பீஸ் தான் என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த சிதம்பர ரகசியமாவது இந்த நாட்டின் பிரதமருக்குத் தெரிந்திருக்கிறதா?

காங்கிரஸ் தொட்ட ஏதாவது ஒரு விஷயமாவது உருப்பட்டிருக்கிறதா? தேர்தல் கமிஷனில் இருந்து, எந்த ஒரு அமைப்பையும் உருப்படியாகச் செயல்
பட விடாத ஒரு கட்சி, தனக்காகவும் புரிந்து கொண்டு பொறுப்பாகச் செயல்படத் தெரியாத ஒரு கட்சி, அதற்கு ஒரு ஆட்சி, இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த தேசத்தின் ஜனங்கள், கைப்புள்ள வடிவேலு மாதிரியே அடிமேல் அடி விழுந்து கொண்டே இருந்தும் வலிக்காத மாதிரி இருக்கப் போகிறார்கள்?

ஊழல் மட்டுமே இங்கே பேசப்பட வேண்டிய விஷயமில்லை! செயல் திறனற்ற, செயல்படாத ஒரு டம்மி ஆட்சி தேவைதானா என்பது தான் இப்போது முக்கியமான கேள்வி!







தொடர்புடைய இன்னொரு பதிவாக ........

கக்கு மாணிக்கம் நேற்றைக்கு இது தொடர்பாக ஒரு பதிவை இங்கே எழுதியிருக்கிறார்!


உங்கள் கருத்தைத் தான் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்களேன்!